tag:blogger.com,1999:blog-1474608369333206681.post646434092346614221..comments2023-10-29T13:02:52.613+05:30Comments on தமிழ் ஓவியா: மீண்டும் இராவண லீலா நடக்க வேண்டுமா? தமிழ் ஓவியாhttp://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comBlogger55125tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-90467405592942670002014-08-24T07:56:42.459+05:302014-08-24T07:56:42.459+05:30கடவுள் இருந்தால்....!
கடவுள் நம்பிக்கையாளர்கள் ...கடவுள் இருந்தால்....!<br /> <br /><br />கடவுள் நம்பிக்கையாளர்கள் பலரும் நம்பும் கடவுளின் முக்குணங்கள், முத்தன்மைகள் - மனித சக்திக்கு மேற்பட்டதாக கூறப்படுவன.<br /><br />(1) சர்வ சக்தி - எல்லாம் வல்லவன்.<br /><br />(2) சர்வ வியாபி - எங்கும் நிறைந்த பரம்பொருள்.<br /><br />(3) சர்வ தயாபரன் - கருணையே வடிவானவன்.<br /><br />உள்ளபடியே அப்படிப்பட்ட தன்மைகள் அக்கடவுளர் - கடவுளச்சிகளுக்கு உள்ளனவா என்று எந்த பக்தராவது புத்திகொண்டு சிந்திக்கின்றனரா? ஆராய்கின்றனரா? இல்லையா?<br /><br />வெறும் நம்பிக்கை அதுவும் குருட்டு நம்பிக்கைதானே.<br /><br />அதனால்தான் பக்தி வந்தால் புத்தி போகும், புத்தி வந்தால் பக்தி போகும் என்றார் அனுபவரீதியான வகையில் அறிவு ஆசான் தந்தை பெரியார்!<br /><br />அன்றாடம் அத்துணை மதநம்பிக்கையாளரும் கடவுளை வணங்கி, பிராத்தனை என்ற கையூட்டும் - லஞ்சமும் தரத் தவறுவதே இல்லை.<br /><br />அப்படி இருந்தும் அன்றாட நிகழ்வுகள் பெரும்பாலான மக்களுக்குத் துன்பமும், இழப்பும், தொல்லையும் ஆகத்தானே உள்ளதே தவிர, மகிழத்தக்கதாக உள்ளதா?<br /><br />கடவுளை நம்பாத, நாத்திகர்கள், பகுத்தறிவாளர்கள் மட்டும்தான் தொல்லைகளை, துன்பத்தை அனுபவிக்கின்றார்களா? இல்லையே. நம்பிக்கையாளர்களில் பெரும்பாலோர் இப்படி துன்பத் தீயில் வெந்து கருகுகின்றனரே.<br /><br />உத்தரகாண்டில் யாத்திரைக்குப் போனவர்கள் அளவுக்கு அதிகமான மழை, வெள்ளம் மூலம் அடித்துச் செல்லப்பட்டவர்கள்,<br /><br />மராத்திய மாநிலம் புனேயில் மலின் என்ற ஊரில் பழங்குடிமக்கள் வீடுகளோடு, நிலச்சரிகளில் புதையுண்டு பிணக்குவியல்களைத் தோண்டி எடுக்கும் அவலம் கண்றாவிக் காட்சி அல்லவா?<br /><br />பீகாரில் நதி வெள்ளப் பெருக்கெடுத்ததோடு, பல்லாயிரவர் வீடிழந்து, வாழ்விழந்து நிற்கின்றனர்!<br /><br />இஸ்ரேலில் - பாலஸ்தீனப் பச்சிளங் குழந்தைகள்மீதும் ஈவிரக்கமில்லா இஸ்ரேலின் குண்டுமழை,<br /><br />சீனாவில் 3.8.2014இல் 6.8 ரிக்டர் அளவுக்கு கடும் பூகம்பம் - பல நூற்றுக்கணக்கில் மக்கள் பலி,<br /><br />கோவில் தரிசனம் மற்றும் பல மத விழாக்களுக்குச் சென்று, நேர்த்திக்கடன், காணிக்கை தந்துவிட்டுத் திரும்புவோர் சாலை விபத்துகளில் குடும்பம் குடும்பமாகப் பலியாகும் கொடுமை!<br /><br />பச்சிளம் சிறுமிகள் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகி பிணமாகும், வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத சோகச் செய்திகள் நாள்தோறும் வருகின்றனவே.<br /><br />கடவுள் சர்வசக்தி படைத்தவராக இருப்பின் தடுத்திருக்க வேண்டாமா?<br /><br />கடவுள் சர்வ வியாபி - எங்கும் நிறைந்தவர் _ இப்படி நடப்பதை வேடிக்கை பார்த்து வாய்மூடியாக இருப்பாரா?<br /><br />எல்லாவற்றையும்விட மேலாக கருணையே வடிவானவராக இருந்தால், தனது பிள்ளைகள், தன்னால் சிருஷ்டிக்கப்பட்டவர்கள் இப்படிக் கொத்துக் கொத்தாக கொள்ளைச்சாவு சாவுவதைக் கண்டு வாளா இருப்பாரா?<br /><br />எண்ணிப் பாருங்கள்!<br /><br />நாத்திகம் நன்னெறி என்பது அப்போது புரியும்.<br /><br />கி.வீரமணி,<br />ஆசிரியர்.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-39627936151413930382014-08-24T07:56:01.149+05:302014-08-24T07:56:01.149+05:30கல்கியின் பூணூல் வித்தை
என்னடா.. இது! கல்கிக்கு ...கல்கியின் பூணூல் வித்தை<br /><br /><br />என்னடா.. இது! கல்கிக்கு வந்த தமிழ்ப் பற்று! சமஸ்கிருத வாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துவிட்டாராம் ஜெயலலிதா. அந்தத் தியாகத்தை, போர்க்குணத்தைப் படம் போட்டுப் பெருமைப்படுகிறது கல்கி (3.8.2014). உங்க சோலையில இந்த மயிலையும் கொஞ்சம் ஆடவிடுங்க என்று மென்மையாக சமஸ்கிருத வாரத்தை நுழைத்து, வான்கோழியாகிய இந்தியைத் திணிக்கிறாராம்.<br /><br />அதனால் தமிழ்ப்பூங்காவில் மோடி நுழைக்க வந்த இந்தியையும், சமஸ்கிருதத்தையும் அம்மையார் தடுக்கிறார்.<br /><br />அதெல்லாஞ் சரி! அனை வருக்கும் தெரியும் என்பதால் ஆதரிக்க முடியாது என்ற நிலையில், இந்தியைத் திணிப்பு என்றும் வான்கோழி என்றும் பொதுவாக எதிர்ப்பது போல் காட்டிவிட்டு, அதனினும் விஷமான சமஸ்கிருதத்தை மயில் என்று சாங்கோபாங்கமாக உயர்த்திக் காட்டுகிற வித்தை அட..அட... இதுதாங் காணும் பூணூல் வித்தை!<br /><br />- அன்பன்தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-45668236311943761172014-08-24T07:54:47.096+05:302014-08-24T07:54:47.096+05:30 உங்களுக்குத் தெரியுமா?
இராசாராம் மோகன்ராய் வேதங... உங்களுக்குத் தெரியுமா?<br /><br /><br />இராசாராம் மோகன்ராய் வேதங்களின் கருத்துகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தபோது, தங்களைத் தவிர வேறுயாரும் அதைப் படிக்கக் கூடாது என்று காரணம் காட்டி, பார்ப்பனர்கள் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-40793816990623594402014-08-24T07:54:04.300+05:302014-08-24T07:54:04.300+05:30 அண்ணன் மோடியின் அடுத்த ஜீ பூம்பா...
ஆப்.கி.பார... அண்ணன் மோடியின் அடுத்த ஜீ பூம்பா...<br /> <br /><br />ஆப்.கி.பார் டிராமா சர்க்கார்<br /><br />அண்ணன் மோடியின் அடுத்த ஜீ பூம்பா...<br /><br /><br />ஒலகத் தலவரா அவதாரம் எடுக்கற அடுத்த முயற்சியில நம்ம அண்ணன் நேபாளம் போனது எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும்... அங்க கோவிலுக்குப் போனாரு, ரோட்ல நடந்தாரு, அல்லாரையும் பாத்தாரு. இதெல்லாம் தாண்டி இன்னொரு சூப்பர் வேல செஞ்சாரு. அது என்னா? செண்டிமெண்டா அடிச்சாரு.<br /><br />எம்.ஜி.ஆர் நடிச்ச நாளை நமதே படத்த ரீரிலிஸ் பண்ணாரு. பல வருசம் முன்னாடி ஜீத்பகதூர்னு ஒரு பையன் அப்பா, அம்மாவ பிரிஞ்சி இந்தியா வந்துட்டான்.<br /><br />அவன அண்ணன் குஜராத்ல கண்டெடுத்து வளத்தாரு. அவனும் வளந்தான், அண்ணனும் வளந்தாரு. அவன் பெரிய பையன் ஆனான், அண்ணன் பிரைம் மினிஸ்டர் ஆனாரு.<br /><br />அவன அவங்க குடும்பத்தோட சேத்து வைக்கனும்னே நேபாள் டூர் போட சொன்னாரு. நேபாளுக்கு ஜீத்பகதூரையும் கையோட கூப்பிட்டுக்கிட்டுப் போனாரு. பிரியா படத்து ரஜினி மாதிரி ரோடு ரோடா பாடிக்கிட்டே போனாரு. அவங்க குடும்பத்தக் கண்டு பிடிச்சாரு.<br /><br />அவங்ககூட சேத்து வச்சி, கண்கலங்குனாரு. நாளை நமதே இந்த நாளும் நமதே பாட்டு ஓடுச்சு. கூடி நின்ன இந்தியப் பத்திரிக்க கண்ணெல்லாம் ஆறா ஓடுச்சு. ஆனா ஜீத்பகதூரு கலங்கவேயில்ல... ஏன்? அங்கதான் ஒரு டிவிஸ்ட். ஜீத்து, மோடி அண்ணனுக்கே தெரியாம திருட்டு லாரில போயி அவங்க குடுமபத்த 2012 ஆகஸ்ட் 23_லயே பாத்துட்டான். இத அவன் தன் மூஞ்சிபுத்தகத்ல (Facebookல) படமா போட்டுட்டான். இது அண்ணனுக்குத் தெரியாமலே இருந்துடுச்சி.<br /><br />அதுக்கு முன்னாடி 2012 ஜூன் 17ஆம் தேதி ஜீத் போட்ட ஸ்டேடஸ்:<br /><br />Hey Fri Gm<br />Bye bye India.<br /><br />2012 ஜூன் 19ஆம் தேதி போட்ட ஸ்டேடஸ்:<br /><br />Hey Fri Today is I m v happy <br />Bcos I m my home (Nepal)<br /><br />இதுவும் வளமான குஜராத் கதயான்னு யாரும் கேக்கக் கூடாது. அது அல்லாம் அண்ணன் தூங்கும் போது நடந்தது. ஆனாலும் அண்ணன் கடம ஒணர்ச்சியோட ஜீத்பகதூர அவங்க குடும்பத்தோட சேத்து வச்சிட்டு ட்வீட்டும் போட்டுட்டாரு.<br /><br />அப்ப நம்ம வேல... ம், பாடுங்க...<br /><br /># நாளை நமதே, இந்த நாளும் நமத<br /><br />- எஸ்.எஸ்.சிவசங்கர்தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-2134107758744579192014-08-23T20:50:39.829+05:302014-08-23T20:50:39.829+05:30
விடை என்ன?
தமிழ்நாட்டுக் கல்விக் கடவுள் சரசுவதி...<br />விடை என்ன?<br /><br /><br />தமிழ்நாட்டுக் கல்விக் கடவுள் சரசுவதி என்றால், ஆங்கில நாட்டுக் கல்விக் கடவுள் யார்?<br /><br />ஆத்திகக் கம்பனுக்கும், காளிதாசனுக்கும் நாவிலே அருள் பாலித்தது சரசுவதி என்றால், அகில உலகப் புகழ் பெற்ற நாத்திகத் தந்தை பெரியாருக்கும், புரட்சிக் கவிஞர் பாரதிதாசனுக்கும், அறிஞர் அண்ணாவுக்கும், நாவிலே அருள்பாலித்தது யார்?<br /><br />சரசுவதி பூசை கொண்டாடாத மேலை நாடுகளில் - கடவுளையே குப்பை குழிக்கு தள்ளிய ரஷ்யாவில் நூற்றுக்கு நூறு பேரும் படித்திருக்க காரணம் என்ன? சரசுவதியை வணங்கியே கல்வி, அறிவு பெறலாம் என்றால் பள்ளிகளும், கல்லூரிகளும், பல்கலைக் கழகங்களும், ஆசிரியர்களும் தேவை இல்லை அல்லவா?<br /><br />பெற்ற தந்தை பிரம்மனாலேயே பெண்டாளப்பட்ட சரசுவதியா நமக்குக் கல்விக் கடவுள்? அவள்தான் கடவுள் என்றால், அந்தக் கல்வி ஒழுக்கத்தைப் போதிக்குமா?<br /><br />பெற்ற தந்தை பிரம்மனாலே பெண்டாளப்பட்ட சரசுவதி கல்விக் கடவுளா? அல்லது கலவிக் கடவுளா? சகலகலாவல்லி சரசுவதி என்றால், அவள் ரஷிய, சீன, கல்விக் கலையையும், கல்வி முறைகளை அறிந்தவளா?<br /><br />நவராத்திரி! தமிழர் விழா என்பதற்கு ஆதாரமான இலக்கிச் சான்று உண்டா? தமிழர் மறை என்று பெருமையாக சொல்லப்படுகின்றன திருக்குறளிலாவது நவராத்திரிக்கு ஆதாரமுன்டா?<br /><br />இந்துமதப் பண்டிகை நவராத்திரி என்றால், அது ஏன் வைணவ ஆலயங்களில் சிறப்பாக கொண்டாடப்பட வில்லை?<br /><br />ஆயுத பூஜை கொண்டாடும் இந்து மதப் சைவ பக்த தமிழா! நீ இன்றுவரை கண்டுபிடித்து உலகிற்கும் அறிமுகப்படுத்திய ஆயுதம்தான் என்ன?<br /><br />அணுக்குண்டையும், அய்ட்ரஜன் குண்டையும், ஆகாய விமானத்தையும் கண்டுபிடித்தவன் கொண்டாடாத ஆயுத பூஜை - அரசமரத்தையும், ஆலமரத்தையும் சுற்றுப வனுக்கு ஒரு கேடா? ஆயுதங்களைக் கண்டுபிடிப்பது மேல் நாட்டான்; பூசை மட்டும் நடத்துவது நாமா?<br /><br />வி.எம்.கே.லிங்கன், குடந்தை<br />(15.8.1979-உண்மை)<br /><br />Read more: http://viduthalai.in/page1/86311.html#ixzz3BEFs0oI7<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-73485744477477359382014-08-23T20:50:02.799+05:302014-08-23T20:50:02.799+05:30 தாய்மார்களுக்கு தந்தை பெரியார் அறிவுரை
எந்தப் பா... தாய்மார்களுக்கு தந்தை பெரியார் அறிவுரை<br /><br />எந்தப் பார்ப்பனத்தியாவது திருப்பதிக்குப் போய் மொட்டையடித்துக் கொண்டு வருகிறாளா? இப்போது தாலியறுத்தால் கூட அவர்கள் மொட்டையடித்துக் கொள்வதில்லையே! மொட்டை அடிக்கப்படும் என்று தெரிந்தால் அதற்கு முன்பே வீட்டை விட்டு யாருட னாவது ஓடிவிடுகிறார்களே! அப்படியிருக்க உங்கள் தலை மயிரைத்தானா சாமி கேட்கும்?<br /><br />உங்கள் கணவன்மாரை காவடி தூக்கிச் செல்ல அனுமதிக்கிறீர்களே! எந்த பார்ப்பானாவது பழனியாண்டவனுக்குக் காவடி தூக்கிச் செல்வதைப் பார்த்திருக்கிறீர்களா? அய்ந்து புருஷன் போதாதென்று ஆறாவது புருஷனையும் விரும்பிய துரோபதியம் மாளைப்போய் கும்பிடுகிறீர்களே!<br /><br />அவளுக்கு மாவிளக்கு வைக்கிறீர்களே! உங்களுக்கு இன்னும் அதிகப்படியான புருஷன் வேண்டும் என்று வரம் கேட்கவா அந்தப்படி செய்கிறீர்கள்?<br /><br />திராவிடத் தாய்மார்களாகிய உங்களுக்கு அடுக்குமா இது?<br /><br />விடுதலை (3.6.1976)<br />(பத்திரிகை சென்சார் காலத்தில் சர்வாதிகார ஆட்சியில் கத்தரித்து எறியப்பட்ட அய்யாவின் அறிவுரை. )<br /><br />Read more: http://viduthalai.in/page1/86309.html#ixzz3BEFjWBIv<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-57466184083838830532014-08-23T20:49:29.098+05:302014-08-23T20:49:29.098+05:30
மருத்துவம் வென்றது
எனது நண்பர் குப்புசாமி என்பவர...<br />மருத்துவம் வென்றது<br /><br />எனது நண்பர் குப்புசாமி என்பவர் ஒருநாள் காலைக் கடன் முடித்து, பக்கத்திலுள்ள சிற்றோடைக்குச் சென்று கால் கழுவ அமர்ந்திருக்கிறார். அப்போது அவரது மர்ம ஸ்தானத்தின் பக்கவாட்டில் ஏதோ சுருக்கென வலி எடுத்ததாம்.<br /><br />அதைப் பொறுத்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தார். ஆனால், சிறிது நேரத்தில் அவரது மர்ம ஸ்தானம் பெரிதாக வீங்க ஆரம்பித்து விட்டது. அதோடு காய்ச்சலும் அடித் திருக்கிறது. இதனை அறிந்த பெற்றோர், மந்திரவாதியிடம் அழைத்துச் சென்றனர். ஆனால், பயனில்லை.<br /><br />அதன் பிறகு, எனது நண்பரின் உறவினர் ஒருவர் மீது சாமி வந்து, நீ வரும்போது முனீஸ்வரன் எதிர்ப்பட்டு விட்டது. அதனால்தான் இந்தத் தொல்லை. ஆகவே, பால் அபிஷேகமும், கோழியும், துணிமணியும் முனீஸ்வர வனுக்குக் கொடுத்தால் உனது நோய் நீங்கும் என்று கூறிற்றாம். பெற்றோர்களும் இதற்குச் சம்மதித்தனராம்.<br /><br />இந்நிலையில் குப்புசாமி என்னை அழைத்து வரும்படி தனது மனைவியிடம் சொல்லிய னுப்பியிருந்தார். நானும் சென்று நண்பரைச் பார்த்து விவரம் கேட்டேன். நடந்ததை யெல்லாம் அவர் கூறினார். நான் அவரிடம், ஏனப்பா, இதெல்லாம் பொய் யென்று உனக்கு தெரியாதா? இனியுமா மந்திரத்தையும், மாயத் தையும் நம்பிக் கொண்டிருக் கிறாய்! உடனே மருத்துவ மனைக்கு போய் உடம்பைக் கவனி என்று அறிவுரை கூறினேன்.<br /><br />அவரும், தனது பெற்றோர்கள் வேலை இதெல்லாம் என்று கூறி, மருத்துமவனைக்குச் செல்வதாக உறுதி கூறினார். அதன் பிறகு அவர் எழுதச் சொன்ன கடிதத்தை எழுதிக் கொடுத்து விட்டு வந்தேன். இரண்டு நாட்கள் கழித்து நண்பரை காணச் சென்றேன். அவர் உடல் நலம் தேறி நன்றாக இருந்தார்.<br /><br />அவரிடம், இனியும் இப்படி நடக்காதே! மூடக் கருத்துக் களை விட்டொழி! தந்தை பெரியாரின் அறிவுரைகளை நீயும் உன் குடும்பத்தாரும் கடைப்பிடித்தால் இது போன்ற செயல்களைத் தடுக்கலாம் என்று கூறினேன். அவரும் புன்னகையோடு ஏற்றுக் கொண்டார்.<br /><br />பெ. இராதாகிருஷ்ணன் (தி.க.), சென்னை -7<br /><br />Read more: http://viduthalai.in/page1/86309.html#ixzz3BEFa4GNy<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-23593124683138325782014-08-23T20:48:55.073+05:302014-08-23T20:48:55.073+05:30ஆள் இல்லை!
...... முன்பு புராண இதிகாசங்களைத் தேடி...ஆள் இல்லை!<br /><br />...... முன்பு புராண இதிகாசங்களைத் தேடிக் கண்டு பிடித்தார்கள். பின்பு படித்தவர்கள் கூறினால் விளங்கிக் கொள்வார்கள்.<br /><br />.... போகிற போக்கைப் பார்த்தால் வீடு தேடிப் போய் சொன்னாலும் கேட்க ஆள் அகப்படாது எனத் தோன்றுகிறது.<br /><br />- கிருபானந்தவாரியார்<br />(10.6.1979 ஆனந்த விகடன், பக்கம் 55)<br /><br />Read more: http://viduthalai.in/page1/86308.html#ixzz3BEFRp6BP<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-58894512100514455912014-08-23T20:48:24.611+05:302014-08-23T20:48:24.611+05:30
புத்தர் அறிவுரைகள்
இரக்கத்தோடும் உபகார சிந்தையோ...<br />புத்தர் அறிவுரைகள்<br /><br /><br />இரக்கத்தோடும் உபகார சிந்தையோடும் இருப்பது மகிழ்ச்சியோடு இருப்பதாகும்.<br /><br />------------------------<br /><br />உலகத்தில் உள்ளும் புறமும் அறிவற்ற வஸ்து எதுவும் கிடையாது. உலகத்தின் பொருள்கள் யாவும் நிமிடத்திற்கு நிமிடம் மாறிக்கொண் டேயிருக்கின்றன. தோன்றியது அழியும்.<br /><br />------------------------<br /><br />கோவணாண்டி கோலமோ ஜடை முடியோ, அழுக்கேறிய உடம்போ, பட்டினி கிடத்தலோ, மண்மீது புரளுவதோ, மூச்சை அடக்கி உட்கார்ந்திருத்தலோ, ஆசை வெல்லாத ஒருவனை பரிசுத்தவானாக்கி விடாது.<br /><br />------------------------<br /><br />முட்டாள்களுடன் கூடி வாழ்வதை விட தனியாக வாழ்வதே மேல்.<br /><br />------------------------<br /><br />பேசாமல் சும்மா உட்கார்ந்திருப்பவனையும் திட்டுகிறார்கள். அதிகம் பேசுபவனையும் திட்டு கிறார்கள். திட்டப்படாத மனிதனே உலகத்தில் இல்லை. எப்பொழுதுமே திட்டப்படுபவனாக அல்லது எப்பொழுதுமே போற்றப்படுபவனாக ஒரு மனிதன் இருந்ததும் இல்லை; இருக்கவும் இல்லை; இருக்கப் போவதும் இல்லை.<br /><br />Read more: http://viduthalai.in/page1/86308.html#ixzz3BEFJpIiy<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-40917354280842392922014-08-23T20:44:07.107+05:302014-08-23T20:44:07.107+05:30
அடிமைப்படக்கூடாது...
உழைத்தவன் உழைப்பின் பயனை ...<br />அடிமைப்படக்கூடாது...<br /><br /><br /><br />உழைத்தவன் உழைப்பின் பயனை அடையவேண்டுமானால் - இப்படி யாகம், சாத்திரம், வேதம், மோட்சம், கர்மம், முன்ஜென்மம், கடவுள் செயல் என்கின்ற பித்தலாட்டங்களுக்கு அடிமைப்படக்கூடாது. - விடுதலை, 26.2.1968<br /><br />Read more: http://viduthalai.in/page1/86303.html#ixzz3BEEECZd9<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-89088482446396442542014-08-23T20:43:02.448+05:302014-08-23T20:43:02.448+05:30
கைவல்யம் நாள் (22.8.1877)
இன்று சாமி கைவல்யம் ப...<br />கைவல்யம் நாள் (22.8.1877)<br /><br /><br />இன்று சாமி கைவல்யம் பிறந்த நாள் (1877. யார் இந்த கைவல்யம்? 1877இல் கேரளத்தைச் சேர்ந்த கள்ளிக்கோட்டையில் பிறந்தவர் இயற்பெயர் பொன்னுசாமி. இவர்களின் முன்னோர்கள் பட்டாளத்தைச் சேர்ந்தவர்கள்.<br /><br />ஒரு முறை இவர் கரூருக்கு வந்தார். அங்குள்ள மவுனசாமி மடத்துக்குச் சென்றார். அங்கு சில சாமியார்கள் உண்டு. வேதாந்த விசாரணைகள் நடைபெற்றன. கைவல்யம் என்ற வேதாந்த விசாரணை நூல் பற்றிப் பேசப்பட்டது. கைவல்யம் தொடுத்த வினாக்கள், விசாரணைகள் பலரையும் அதிரச் செய்தன. இதன் காரணமாக அவர் கைவல்யம் என்றே அழைக்கப்படுபவர் ஆனார்.<br /><br />அவரது தர்க்க ஞானம் முதலில் பார்ப்பன மதக் கொள்கை எதிர்ப்பிலிருந்து கிளர்ந்து எழுந்ததாகும். நாடு பூராவும் சுற்றித் திரிவார். வேதாந்த விசாரணைகளில் ஈடுபடுவார். பார்ப்பனீயத்தை நிலை குலையச் செய்யும் கூர்மையான அம்புகள் அவை!<br /><br />தந்தை பெரியார் அவர்களின் நண்பர் ஆனது இயல்புதானே! தொடக்கத்தில் தர்க்கத்தில் ஆரம்பித்துப் பின்னர் இணை பிரியாக் கொள்கைக் கயிற்றால் இணைந்து நண்பர்கள் ஆனார்கள்.<br /><br />குடிஅரசில் கைவல்யம் எழுதி வந்த கட்டுரைகள் ஆணித்தரமானவை. எழுத்து நடையோ புத்தம் புதிய பாணி! இசைபாடும் அருவி நீரோட்டம் போன்றது.<br /><br />அடுக்கடுக்கான ஆதாரக் கருவூலங்கள் வந்து விழுந்து கொண்டே இருக்கும். பராசரஸ்மிருதியும், மனுதர்மமும் அவருக்கு அத்துப்படி!<br /><br />கைவல்யம் வருகிறார் என்றால், சாமி யார்கள் ஆட்டம் கண்டு போய் விடுவார் களாம். எதிரிகள் வயிற்றைக் கலக்குமாம். கழிந்து விடுவார்களாம்; வாய் வறண்டு போகுமாம்; தொண்டை வற்றிப் போகுமாம்! அப்படியொரு அசைக்க முடியாத ஆற் றலுக்குச் சொந்தக்காரர்.<br /><br />ஒருமுறை தந்தை பெரியாரும், சாமி கைவல்யமும் ஏனாளம்பள்ளி ஜமீன்தாரின் திருமணத்திற்குச் சென்றி ருந்தனர். விருந்தில் பக்கம் பக்கமாக அமர்ந்திருந்தனர். பந்தி பரிமாறிய பார்ப்பானிடம் தண்ணீர் கேட்டார் கைவல்யம். அவர் இலைக்கு முன்னிருந்த டம்ளரை சர்வர் பார்ப்பான் எடுத்தான். உடனே பக்கத்தில் இருந்த சமையல்காரப் பார்ப்பான். என்னடா மடையா? சூத்திரன் குடித்த டம்ளரைத் தொட்டு எடுத்து விட்டாயே? என்றா னாம். அவ்வளவுதான்! வந்ததே கோபம் கைவல் யத்துக்கு, அந்தப் பார்ப்பான் கன்னத்தில் எச்சில் கையாலேயே ஒரு ப்ளார்! யாரடா சூத்திரன்? ன்ற தன்மானக் கேள்வி. சிறு கலகமாகி அதன்பின் அடங்கியத. சூத்திரன் என்றால், ஆத்திரம் கொண்டு அடி! என்பது இதுதான்.<br /><br />Read more: http://viduthalai.in/page1/86312.html#ixzz3BEDxxin8<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-25287827403000435192014-08-23T20:40:31.392+05:302014-08-23T20:40:31.392+05:30இன்றைய ஆன்மிகம்?
ராகு காலம்
ராகு காலத்தில் வீட்ட...இன்றைய ஆன்மிகம்?<br /><br />ராகு காலம்<br /><br />ராகு காலத்தில் வீட்டில் இருந்து கிளம்ப நேரிட்டால் என்ன பரிகாரம் செய்யலாம்?<br />- ராம. முத்துக்குமரன், கடலூர்<br /><br />துர்க்கையம்மனுக்கு விளக்கேற்றி சிவப்பு புஷ்பம் சாத்தி வழிபட்டு மனத் தெளிவுடன் கிளம்புங்கள். உங்களுக்கு வெற்றிதான்.<br />ஓர் ஆன்மிக இதழ்<br /><br />சரி, ராகு காலத்தில் விமானமோ ரயிலோ புறப்பட்டால் என்ன செய்ய வேண்டுமாம்?<br /><br />Read more: http://viduthalai.in/page1/86300.html#ixzz3BEDKzGOV<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-54232337161046334532014-08-23T20:38:52.639+05:302014-08-23T20:38:52.639+05:30
மதவாதங்களுக்கு மரண அடி!
மதவாதங்களுக்கு மரண அடி!...<br />மதவாதங்களுக்கு மரண அடி!<br /><br /><br />மதவாதங்களுக்கு மரண அடி!<br />பாலினத்தை நிர்ணயிக்கும் புதிய மரபணு கண்டுபிடிப்பு<br /><br />குழந்தை உருவாகும் போது அக் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை எக்ஸ், ஒய் என்கிற குரோமோ சோம்கள் மட்டுமே நிர்ணயிப்பதில்லை. துணை மரபியல் கூறாக உள்ள மிகச் சிறிய மரபணுக்களே முக்கி யப் பங்கை வகிக்கின்றன.<br /><br />அமெரிக்காவில் உள்ள கோல்ட் ஸ்பிரிங் ஹார்பர் ஆய்வகத்தின் (சிஷீறீபீ ஷிஜீக்ஷீவீஸீரீ பிணீக்ஷீதீஷீக்ஷீ லிணீதீஷீக்ஷீணீஷீக்ஷீஹ்-சிஷிபிலி) அறிவியலாளர்கள் சிறிய மரபணுக்களின் துணைக் குழுக்கள் ஆர்.என்.ஏ மூலக்கூறுகளின் குறியீடுகளாக உள்ளதைக் கண்டறிந்தார்கள். அவற்றை மைக்ரோ ஆர்.என்.ஏ.க்கள் (னீவீஸிழிகி) என்று அழைக்கின்றனர். அதன் செயல்பாடுகளை உன்னிப்பாக கவனித்தபோது, அவை ஆண், பெண் திசுக்களை வேறுபடுத்துவதில் முக்கியப்பங்கினை ஆற்றுவதையும் கண்டு வியந் தார்கள்.<br /><br />மைக்ரோ ஆர்.என்.ஏக்கள் சிறிய தொகுதிகளாக ஆர்.என்.ஏ.வில் உள்ளன. அவை செயலாற்றும்போது, மரபணுக்களில் ஒன்று அல்லது பல புரோட்டீன் குறியீடுகளை உருவாக்குகின்றன. அவற்றின்மூலம் எந்த ஒரு மரபணுவையும் குறிப்பிட்டு செயலிழக்கச் செய்ய முடியும். பல கூறுகளுடன் கூட்டு மரபணுக் களை திட்டமிட்டவகையில் வளர்ச்சியடையவும் செய்ய முடியும்.<br /><br />Read more: http://viduthalai.in/page1/86294.html#ixzz3BECw8GEA<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-55427803344226661942014-08-23T20:35:27.498+05:302014-08-23T20:35:27.498+05:30
சபாஷ், சரியான நடவடிக்கை!
சென்னை அரும்பாக்கம் செ...<br />சபாஷ், சரியான நடவடிக்கை!<br /><br /><br />சென்னை அரும்பாக்கம் செல்வ விநாயகம் கோயில் தெருவில் அதே பகுதியைச் சேர்ந்த செயராமன் என்பவர் கோயில் ஒன்றைக் கட்டினார். அந்தக் கோயிலை அவர் ஒன்றும் தன் சொந்த நிலத்தில் கட்டவில்லை; மாநகராட்சிக்குச் சொந்தமான இடத்தில்தான் கட்டினார். அந்தப் பகுதியில் வசிக்கும் தியாகராசன் என்பவர் இதுபற்றி அறநிலையத் துறைக்கும், மாநகராட்சிக்கும் புகார் கொடுத்தார் - ஆனால் நியாயம் கிடைக்கவில்லை என்றவுடன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கொன்றைத் தொடர்ந்தார்.<br /><br />அய்ந்தாண்டுகள் வழக்கு நடந்தது. கோயிலை இடித்து நிலத்தை மாநகராட்சிக்கு ஒப்படைக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது.<br /><br />அதன்படி கோயிலை இடிக்க மாநகராட்சி ஊழியர்கள் சென்றபோது, பொது மக்களைக் கிளப்பி விட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால் மாநகராட்சி ஊழியர்கள் திரும்பி செல்லும் நிலை ஏற்பட்டது.<br /><br />கோயிலைக் கட்டிய செயராமன் என்பவர் உச்சநீதிமன்றம் சென்றார் - மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடிசெய்து விட்டது.<br /><br />நேற்று காலை காவல்துறையின் உதவியுடன் மாநகராட்சி பணியாளர்கள் ஜே.சி.பி. எந்திரம் மூலம் கோயிலை இடித்துத் தரை மட்டமாக்கினர். நேற்றும் தடுத்துப் பார்த்தனர். ஒரு பெண் மாடியில் ஏறிக் கொண்டு கீழே குதித்துத் தற்கொலை செய்து கொள்வதாகவும் மிரட்டினார்; எல்லாவற்றையும் சமாளித்துக் கோயிலை இடித்து முடித்தனர்.<br /><br />இது ஒன்று மட்டுமல்ல தமிழ்நாட்டில் பல்லாயிரக் கணக்கான கோயில்களை அனுமதியின்றி, அரசுக்குச் சொந்தமான இடங்களில் மிகப் பெரிய அளவில் எழுப்பியுள்ளனர்.<br /><br />சென்னையை எடுத்துக் கொண்டாலும் எண்ணிறந் தவை; சைதாப்பேட்டை, மாடல் பள்ளி எதிரில் ஒரு கோயில் (அர்ச்சகருக்கான குடில் உட்பட) திருவான்மி யூரில் மருந்தீசுவரர் கோயில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில் என்று அப்பட்டமான முறையில் பொது இடங்களில் ஏராளமான கோயில்கள் கட்டப்பட்டுள்ளன.<br /><br />இப்படிப் பொது இடங்களில் கட்டப்பட்டுள்ள கோயில்கள் தமிழ்நாட்டில் 77,450. பொது இடங்களில் கோயில்கள் கட்டப்படுவது குறித்து உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் நீதிபதிகள் தல்வீர் பண்டாரி, எம்.கே. சர்மா ஆகியோர் அடங்கிய அமர்வு தெளிவாகத் தீர்ப்பினை வழங்கி இருக்கிறது.<br /><br />குஜராத் மாநிலத்தில் தொடரப்பட்ட பொது நல வழக்கில்தான் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது. பொது இடங்களில் அனுமதியில்லாமல் கட்டப்பட்டிருக்கும் வழிபாட்டுத் தலங்களை அகற்றாமலோ, வேறு இடங்களில் மாற்றாமலோ இருக்கும் மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் நேரில் வந்து பதில் கூற வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஆணை பிறப்பித்தனர் (14.9.2010).<br /><br />இந்தியாவிலேயே தமிழ் நாட்டில் மட்டும்தான் இப்படிப்பட்ட கோயில்கள் அதிகம். தமிழ்நாட்டில் 77450, ராஜஸ்தானில் 58233, குஜராத்தில் 15,000 - கோயில்கள் அனுமதியின்றிக் கட்டப்பட்டவை.<br /><br />அருணாசலப் பிரதேசத்தில் மட்டுமே ஒரு இடத்தில் கூடப் பொது இடத்தில் கோயில் கட்டப்படவில்லை என்பதை அறிந்து நீதிபதிகள் நாகரிகமான மாநிலம்! என்று பாராட்டவும் செய்தனர்.<br /><br />அனுமதி பெறாத கோயில்கள், மசூதிகள், சர்ச்சுகள், குருத்து வாரங்கள் மற்றும் பிற வழிபாட்டு இடங்களை பொது இடங்களிலிருந்தும் பாதைகளில் இருந்தும், அகற்றுமாறும் அவை போக்குவரத்துக்கு இடைஞ்சலாக இருக்கின்றன என்றும், நெரிசலை உண்டாக்குகின்றன என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கண்டிப்பாகத் தெரிவித்தனர்.<br /><br />நான்கு ஆண்டுகள் கடந்து விட்ட நிலையிலும் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை நடை பாதைக் கோயில்கள் பொது இடங்களில் கட்டப்பட்ட கோயில்கள் அகற்றப் படவில்லை என்பது -அப்பட்டமான நீதிமன்ற அவமதிப்புதான்.<br /><br />உச்சநீதிமன்றத்தில் இந்தத் தீர்ப்பின்மீது தமிழ்நாடு அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன? தமிழக அரசின் தலைமைச் செயலாளர் உச்சநீதிமன்றம் சென்று விளக்கம் அளித்தாரா என்பதைத் தமிழ்நாடு அரசு தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.<br /><br />இதில் ஆத்திகம் நாத்திகம் என்ற பிரச்சினைக்கு இடம் இல்லை; அரசாங்கத்துக்குச் சொந்தமான சொத்தை யார் கைப்பற்றினாலும், எந்த நோக்கத்துக் காகக் கைப்பற்றினாலும் குற்றம் குற்றமே! பொது ஒழுக்கச் சிதைவும் ஆகும்!<br /><br />சென்னை அரும்பாக்கத்தில் மேற்கொள்ளப்பட்ட நடைமுறைகளை மற்ற மற்ற மாநகராட்சிகளும், நகராட்சிகள் ஊராட்சிகளும் தொடர வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.<br /><br />நெடுஞ்சாலைக்குச் சொந்தமான இடங்களில் சாலைகளின் இரு மருங்கிலும் மிக அதிக உயரத்தில் அனுமான் சிலைகள் திடீர் திடீரென்று தோற்றுவிக்கப் பட்டு வருகின்றன.<br /><br />இவற்றை நெடுஞ்சாலைத் துறை கண்டும் காணாமல் இருப்பது எந்த வகையில் சரி? எந்த வகையில் நியாயம்? சட்டத்திற்குமுன் அனைவரும், அனைத்தும் சமம் என்ற கோட்பாடு என்னாயிற்று?<br /><br />அரசு செயல்படுமா? எங்கே பார்ப்போம்!<br /><br />Read more: http://viduthalai.in/page1/86234.html#ixzz3BEC2tDJj<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-15861749673948365372014-08-23T20:34:07.986+05:302014-08-23T20:34:07.986+05:30இந்து முன்னணியின் பொய்ச் செய்திக்கு மறுப்பு
நாகர...இந்து முன்னணியின் பொய்ச் செய்திக்கு மறுப்பு<br /><br /><br />நாகர்கோயிலில் நடக்கும் புத்தகக் கண்காட்சியில் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் சார்பில் நூல்கள் விற்பனைக்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. பொது மக்கள் ஏராளம் இயக்க நூல்களை வாங்குகின்றனர். இதனைப் பொறுக்காத அவ்வூர் இந்து முன்னணியினர் மாவட்ட ஆட்சியருக்குப் புகார் கொடுத்துள்ளனர்.<br /><br />இந்து மத விரோத நூல்கள் விற்பனைக்கு தடை செய்ய வேண்டும் என்று புகாரில் குறிப்பிட்டுள்ளனர் - வட்டாட்சியர் புத்தகக் கண்காட்சிக்கு வந்து சில இயக்க நூல்களைப் பெற்றுச் சென்றுள்ளார். இது மிகவும் கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டில் அனைத்துப் புத்தகக் கண்காட்சியிலும் கழக அரங்குகள் சிறப்பாக இடம் பெற்று வருகின்றன. நாகர்கோயிலில் மட்டும் ஏன் இந்த நிலைப்பாடு?<br /><br />இதில் இன்னொரு விஷமத்தனம்: குறிப்பிட்ட நூல்களை விற்க மாட்டோம் என்று விற்பனைப் பகுதியில் உள்ளவர் சொன்னார் என்று இந்து முன்னணிப் பிரமுகர், சொன்னதாக தினகரன் செய்தி வெளியிட்டுள்ளது. இது உண்மை தானா என்று உறுதிப்படுத்தாமல் தினகரன் இந்த வேலையில் ஈடுபட்டு இருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.<br /><br />- தினகரன் மறுப்புச் செய்தியை வெளியிட வேண்டும்.<br /><br />Read more: http://viduthalai.in/page1/86245.html#ixzz3BEBhckCZ<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-82323201706259804272014-08-23T20:33:30.272+05:302014-08-23T20:33:30.272+05:30மத்திய மோடி அரசு நீதித்துறையில் தலையிடும் மற்றொரு ...மத்திய மோடி அரசு நீதித்துறையில் தலையிடும் மற்றொரு மறைமுக முயற்சியா?<br /><br /><br /><br />சங்கராச்சாரியார்மீது கொலை வழக்கு புதுவை அரசினர் அப்பீல் முடிவைக் கைவிட ஏற்பாடா?<br /><br />மொத்தம் 117 சாட்சிகளில் 77 பிறழ்சாட்சியங்களை வைத்து, காஞ்சி சங்கரராமன் கொலை வழக்கினை புதுவை அரசின் மேல் முறையீடு செய்யும் முயற்சிக்கு முட்டுக்கட்டை போட்டு, சு.சாமிகள் குடிஅரசுத் தலைவருக்கு மனு கொடுத்துள்ளதைக் கண்டித்து ஏராளமானவர்கள், நீதித்துறையின் சுதந்திரம் காப்பாற்றப்பட வேண்டும், உண்மையான கொலைக் குற்றவாளிகள் தண்டனையிலிருந்து தப்பித்து விடக் கூடாது என்று பல்லாயிரக்கணக்கில் குடியரசுத் தலைவருக்கு மின் அஞ்சல்கள் சென்ற பிறகும்கூட, இன்று (21.8.2014) வந்துள்ள ஒரு ஆங்கிலச் செய்தித்தாளில் புதுவை மாநில ஆளுநர் ஆணை - அனுமதிபற்றி - அட்டர்னி ஜெனரலின் கருத்துக் கேட்க அம்முடிவு அனுப்பப்பட்டிருப்பதாக ஒரு செய்தி வெளியாகி உள்ளது.<br /><br />இது உண்மையானால், அம்முடிவினை - மேல் முறையீடு செய்வதைக் கைவிட வைக்க (அதாவது சங்கராச்சாரியார்களைக் காப்பாற்ற) இப்படி ஒரு குறுக்கு வழி - தந்திர முயற்சிகளை மோடி அரசோ அல்லது மத்திய அரசின் வேறு அங்கமோ செய்வதாகத் தான் உலகத்தினர் புரிந்து கொள்ளக் கூடும்!<br /><br />இந்த அவப் பெயர் தேவையா? இது அப்பட்டமான, நீதித்துறையில் தலையிடும் கொடூரமான முயற்சியாகும் என்பது நீதித்துறை - சட்டத்துறை வல்லுநர்கள் கருத்தாகும். இம்முயற்சி மூலம் கொலைக் குற்றத்தில்கூட, உண்மைக் குற்றவாளிகள் தப்பித்து விடலாம் என்ற நிலை ஏற்படலாமா?<br /><br />நீதிக்குத் தலைவணங்க வேண்டாமா? நீதித்துறையின் சுதந்திரத்தில் நிர்வாகத் துறை குறுக்கிடலாமா?<br /><br />மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதை மறவாதீர்! மறவாதீர்!!<br /><br />குறிப்பு: இது குறித்து திராவிடர் கழகத் தலைவர் அறிவிப்பு வெளி வந்துள்ளது (விடுதலை 8.8.2014). தோழர்களே குடியரசுத் தலைவருக்கு மின்னஞ்சல் அனுப்பி விட்டீர்களா? குடியரசு தலைவருக்குக் கொடுக்கப்பட வேண்டிய வாசகம் இதோ:<br /><br />குடியரசு தலைவருக்கு மின்னஞ்சல் அனுப்புக<br /><br />கழகத் தோழர்களும் நீதியின்மீது கவலையுள்ள பெரு மக்களும் கீழ்க்கண்ட முகவரிக்கு மின் அஞ்சல் மூலம் கீழ்க்கண்ட வாசகத்தை அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.<br /><br /> <br /><br />The President of India<br />Rashtrapati Bhawan<br />New Delhi<br />Honourable Sir,<br /><br />The decision by Puducherry Government to go in for appeal against the acquittal of 24 persons including Kanchi Jeyendra Saraswathi and Vijayendra Saraswathi, two Sankaracharyas, in the Sankararaman murder case should be allowed to proceed without any delay. Any effort to stall the appeal process would give wrong impression in the minds of people of Tamilnadu and Puducherry that Chief Executive of this country viz. President is intervening in the judicial process.<br /><br />The family of the slain Sankararaman through this appeal, are eagerly expecting justice as also the people of Tamilnadu. The murder was committed in the Varadarajasamy Temple premise.<br />We once again request your goodself to kindly resist any effort by vested interests in stopping this appeal process.<br /><br />Email address: secy.president@rb.nic.in and usgrievance@rb.nic.in<br /><br />Read more: http://viduthalai.in/page1/86249.html#ixzz3BEBUwjjM<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-28484813727143861352014-08-23T20:28:05.383+05:302014-08-23T20:28:05.383+05:30இன்றைய ஆன்மிகம்?
உலகில் ஒருவன்தான் ஆண் பிள்ளை. சி...இன்றைய ஆன்மிகம்?<br /><br />உலகில் ஒருவன்தான் ஆண் பிள்ளை. சிவபெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து பிறந்த முருகனே அந்த ஆண் பிள்ளை. உலகத்தில் பிறக்கும் மற்ற அத்தனைப் பேரும் தாயின் கருவில் வளர்ந்து பிறப்பதால், நாம் அனைவரும் பெண் பிள்ளைகளே!<br /><br />- கிருபானந்தவாரியார்<br /><br />(வெளியீடு: அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ ஏடான டாக்டர் நமது எம்.ஜி.ஆர்.)<br /><br />ஒரு சந்தேகம், அந்த சிவபெருமான் ஆணா - பெண்ணா?<br /><br />Read more: http://viduthalai.in/page1/86176.html#ixzz3BEAEjxZE<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-41349706429904813302014-08-23T20:27:43.628+05:302014-08-23T20:27:43.628+05:30
மக்கள் நலப் பணியாளர்கள்: நீதிமன்றத் தீர்ப்பை மதித...<br />மக்கள் நலப் பணியாளர்கள்: நீதிமன்றத் தீர்ப்பை மதித்து தமிழ்நாடு அரசு செயல்படவேண்டும்! - கி.வீரமணி<br /><br /><br />மக்கள் நலப் பணியாளர்கள்:<br /><br />நீதிமன்றத் தீர்ப்பை மதித்து தமிழ்நாடு அரசு செயல்படவேண்டும்!<br /><br />தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை!<br /><br />21ஆம் நூற்றாண்டிலும் மனிதக் கழிவுகளை மனிதனே சுமப்பதா? நவீன தொழில் நுட்ப முறைகளைக் கையாள வேண்டும்!<br /><br />மக்கள் நலப் பணியாளர்களை அரசுப் பணிகளில் அமர்த்திடவேண்டும் என்ற உயர்நீதிமன்ற ஆணையை மதித்து, வேலை நீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப் பணியாளர்களைப் பணியில் அமர்த்த தமிழ்நாடு அரசு முன்வரவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார். அறிக்கை வருமாறு:<br /><br />எதிலும் அரசியல் பார்வை கூடாது<br /><br />1989 ஆம் ஆண்டில் தி.மு.க. அரசில் 25234 பேர்கள் மக்கள் நலப் பணியாளர்களாக நியமிக்கப்பட்டனர். கிராம அளவில் அடிப்படைப் பணிகளை செய்யும் பொறுப்பு அவர்களிடம் அளிக்கப்பட்டது.<br /><br />தி.மு.க. ஆட்சிக்குப் பிறகு ஆட்சிப் பொறுப்புக்கு வந்த அ.இ.அ.தி.மு.க. அரசு அவர்களைப் பணி நீக்கம் செய்தது.<br /><br />இப்படி மூன்று முறை தி.மு.க. ஆட்சியில் இருக்கும் போது அவர்களைப் பணி நியமனம் செய்வதும், ஜெய லலிதா தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சிக்கு வரும் பொழுதெல்லாம் அவர்களைப் பணி நீக்கம் செய்வதுமான நிலை இருந்து வருகிறது.<br /><br />ஓர் ஆட்சி போகும் - இன்னொரு ஆட்சி வரும் - இந்த மாற்றங்களால் அரசியல் நோக்கோடு அரசுப் பணியாளர் களைக் கால் பந்தாகக் கருதி உதைப்பது என்பது வருத்தப்படவேண்டிய ஒன்றாகும். ஆட்சி அமைப்பு முறைக்கு இது அழகும் அல்ல - உகந்ததும் அல்ல!<br /><br />2011 இல் ஆட்சிக்கு வந்த அ.இ.அ.தி.மு.க. அரசு வழக்கம்போல மக்கள் நலப் பணியாளர்கள் 12618 பேர் களைப் பணிநீக்கம் செய்தது (8.11.2011).<br /><br />நீதிமன்ற தீர்ப்புகள்<br /><br />இதனை எதிர்த்து உயர்நீதிமன்றம் சென்றனர் - வேலை நீக்கம் செய்யப்பட்டவர்கள். வழக்கை விசாரித்த நீதிபதி கே.சுகுணா அவர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டவர் களுக்கு மீண்டும் பணி அளிக்கப்படவேண்டும் என்று தீர்ப்புக் கூறினார்.<br /><br />தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்தது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எலிப்பி தர்மராவ் - தலைமையி லான அமர்வு, தனி நீதிபதியின் ஆணையை ரத்து செய்தது.<br /><br />இந்தத் தீர்ப்பினை எதிர்த்து மக்கள் நலப் பணி யாளர்கள் சங்கம் உச்சநீதிமன்றம் சென்றது.<br /><br />வழக்கினை விசாரித்த உச்சநீதிமன்றம்; சென்னை உயர்நீதிமன்ற அமர்வு பிறப்பித்த ஆணையை ரத்து செய்து வழக்கை மீண்டும் புதிதாக விசாரிக்கும்படி சென்னை உயர்நீதிமன்றத்திற்கு ஆணை பிறப்பித்தது.<br /><br />காலி இடங்களில் பணி நியமனம் செய்க!<br /><br />நீதிபதிகள் என்.பால்வசந்தகுமார், எம்.சத்தியநாரா யணன் அடங்கிய அமர்வு, வேலை நீக்கம் செய்யப்பட்ட, மக்கள் நலப் பணியாளர்களை மீண்டும் பணியில் அமர்த்துமாறு ஆணை பிறப்பித்துள்ளது.<br /><br />தமிழ்நாட்டில் 95 லட்சம் பட்டதாரிகள் வேலையில் லாமல் இருப்பதாக சட்டமன்றத்தில் அமைச்சர் கூறியதை எடுத்துக்காட்டியும், தமிழ்நாட்டில் கல்வித் துறை கிராமப் பஞ்சாயத்து, வட்டாட்சியர் அலுவலகம், மாவட்ட ஆட்சி யர் அலுவலகங்களில் 3 லட்சம் இடங்கள் காலியாக உள்ளதைக் குறிப்பிட்டும், அந்த இடங்களில் மக்கள் நலப் பணியாளர்களைப் பணியில் அமர்த்தலாம் என்று சென்னை உயர்நீதிமன்ற அமர்வு தீர்ப்பு அறுதியிட்டுக் கூறிவிட்டது.<br /><br />மேல்முறையீடு வேண்டாம்!<br /><br />நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை மதித்து வேலை நீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப் பணியாளர்களைப் பணியில் அமர்த்துமாறு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களைக் கேட்டுக்கொள்கிறோம். மேல்முறையீடு என்னும் ஆயுதத் தைப் பயன்படுத்துவதால், நேரக்கேடும், அரசுப் பண விரயமும், பாதிக்கப்பட்ட பணியாளர்களுக்கு மன உளைச் சலும்தான் மிச்சமாகும்.<br /><br />ஏற்கெனவே சாலைப் பணியாளர்கள் பிரச்சினையில் என்ன நடந்தது என்ற கசப்பான நடப்புகளைச் சுட்டிக் காட்டவேண்டிய அவசியம் இல்லை. பணிநீக்கம் காரண மாக அதிர்ச்சிக்கு ஆளான மக்கள் நலப் பணியாளர்கள் பலரும் மரணமடைந்த நிலையும் உண்டு.<br /><br />இதுகுறித்து இதற்கு முன்பேகூட சுட்டிக்காட்டி அறிக்கைகளை வெளியிட்டிருக்கிறோம். (எடுத்துக்காட்டு விடுதலை 23.1.2012).<br /><br />சமூகநீதி காத்திடுக!<br /><br />பெரும்பாலும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகத் தைச் சேர்ந்தவர்கள் அதிலும் குறிப்பாக கிராமப் பகுதிகளில் இருந்து முதல் தலைமுறையாக அரசுப் பணியின் படிக் கட்டுகளை மிதித்தவர்கள் என்பதையும் சமூகநீதிக் கண் ணோட்டத்தில் அணுகி, அவர்களை மீண்டும் பணியில் அமர்த்தி ஆட்சிக்கு நல்ல பெயரைச் சம்பாதிக்குமாறு வலியுறுத்துகிறோம்.<br /><br /><br />கி.வீரமணி<br />தலைவர், திராவிடர் கழகம்.<br /><br /> <br /><br />சென்னை <br />19.8.2014<br /><br />Read more: http://viduthalai.in/page1/86174.html#ixzz3BEA4kEXJ<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-53835604995827798212014-08-23T20:25:55.858+05:302014-08-23T20:25:55.858+05:30இன்று (ஆக.19) உலக புகைப்பட நாள்
திராவிட இனத்திற்...<br />இன்று (ஆக.19) உலக புகைப்பட நாள்<br /><br /><br />திராவிட இனத்திற்காக தன் வாழ்நாள் முழுவதும் உழைத்த தந்தை பெரியாரை புகைப்படம் எடுத்த புகைப்பட கலைஞர், ஓவியர் மா.குருசாமி கூறிய கருத்து:<br /><br />தந்தை பெரியாரை எந்த நோக்கில் (Angle) இருந்து புகைப்படம் எடுத்தாலும் மிகச்சிறப்பாக இருக்கும் போட்டோ ஜினிக் உருவம் தந்தை பெரியார். எத்தனை முறை புகைப்படம் எடுத்தாலும் நமக்கு உற்சாகம் ஏற்படும். இன்று உலகப் புகைப்பட நாள்.<br /><br /> <br /><br />1839 ஆக., 19இல் உலகில் முதன் முதலாக புகைப் படம் அங்கீகரிக்கப்பட்டது. இதையடுத்து இந்தாண்டு புகைப்படத்துக்கு 175ஆவது ஆண்டு. புகைப்படம் என்பது ஒரு "படம்' அல்ல. அது ஒரு "கலை'. புகைப்படத்துக்கு பெரிய வலிமை உள்ளது. உலகளவில் புகைப்படம், பல வரலாற்று மாற்றங்களை ஏற்படுத்தி யுள்ளது. புகைப்படம் நாம் வாழ்க்கையோடு ஒன்றி ணைந்தது. அனைத்து இடங்களிலும் புகைப்படத்தின் பயன் உள்ளது. வரலாற்று நிகழ்வுகள், சமூக பிரச்சினைகள், சுப, துக்க நிகழ்ச்சிகள், மாநாடு, பொதுக் கூட்டம் என வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வுகளையும் நம் கண் முன் கொண்டு வருவது புகைப்படம். ஒரு சந்ததியினரின் வாழ்க்கை முறையை, வரும் தலை முறையினர் அறிந்து கொள்ள உதவுவதும் புகைப்படம் தான். 19ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் லூகிஸ் டாகுரே என்பவர் "டாகுரியோடைப்' எனப்படும் புகைப் படத்தின் செயல்பாட்டு முறையை வடிவமைத்தார். 1839ஆம் ஆண்டு ஜன., 9ஆம் தேதி பிரான்ஸ் அகாடமி ஆப் சயின்ஸ், இம்முறைக்கு ஒப்புதல் அளித்தது. ஆக., 19இல் பிரான்ஸ் அரசு "டாகுரியோடைப்' செயல் பாடுகளை "ப்ரீ டூ தி வேர்ல்டு' என உலகம் முழுவதும் அறிவித்தது. இதை எடுத்துரைக்கும் வகையில், ஆக., 19 உலக புகைப்பட நாளாக கடைபிடிக்கப்படுகிறது.<br /><br />Read more: http://viduthalai.in/page1/86134.html#ixzz3BE9f5lZ6<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-72278208013543140662014-08-23T20:23:44.541+05:302014-08-23T20:23:44.541+05:30
பக்குவமடையாதவன்
அறிவுக்கும், அனுபவத்திற்கும் ஒத்...<br />பக்குவமடையாதவன்<br /><br />அறிவுக்கும், அனுபவத்திற்கும் ஒத்து வராததைப் பயத்தால் நம்புகிறவன் பக்குவமடைந்த மனிதனாகான்.<br />_ (விடுதலை, 3.4.1950)<br /><br />Read more: http://viduthalai.in/page1/86116.html#ixzz3BE973TgQ<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-5724674263621547172014-08-23T20:22:17.250+05:302014-08-23T20:22:17.250+05:30
21ஆம் நூற்றாண்டிலும் மனிதக் கழிவுகளை மனிதனே சும...<br /><br /><br />21ஆம் நூற்றாண்டிலும் மனிதக் கழிவுகளை மனிதனே சுமப்பதா?<br />நவீன தொழில் நுட்ப முறைகளைக் கையாள வேண்டும்!<br /><br />மாற்றுப் பணி கொடுத்து அத்தொழிலாளர்களை முன்னேற்ற வேண்டும்<br /><br />தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை<br /><br />கி.வீரமணி<br /><br />21ஆம் நூற்றாண்டிலும் மனிதக் கழிவினை மனிதனே சுமக்கும் அவலம் ஒழிக்கப்பட வேண்டும்; நவீன தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி மலம் அகற்றப்பட வேண்டும் அத்தொழிலாளர்களை அத்தொழிலி லிருந்து விடுவித்து, மாற்றுப் பணிகள் தந்து அவர்களை முன்னேற்ற வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:<br /><br />இந்த 21ஆம் நூற்றாண்டின் மிகப் பெரிய அவலங்களில் ஒன்று மனிதக் கழிவுகளை மனிதர்களே சுமந்து செல்லும் மிகக் கேவலமாகும். இது அநாகரிகத்தின் உச்சம்! இது -மனிதர்களை மிருகங்களைவிடக் கேடான நிலையில் நடத்துவது அல்லவா?<br /><br />இயந்திரமயமாகி தொழில் நுட்பம் உச்சத்தில் - ஓங்கி வளர்ந்து வரும் யுகத்திலா இப்படி நடப்பது?<br /><br />துப்புரவுத் தொழிலாளர்களையெல்லாம் மாற்றுத் தொழிலாளர்களாக்கிட போதிய பயிற்சி தந்து, அவர்களது பொருளாதார வசதி குறையாமல், வாழ்வாதாரத்திற்கும் போதிய உத்தரவாதத்தினை அளிப்பது அவசர அவசிய மாகும்!<br /><br />68 ஆண்டு சுதந்திரத்துக்குப் பிறகும் இந்நிலையா?<br /><br />68 ஆண்டு சுதந்தரத்திற்குப் பிறகும் மனிதக் கழிவுகளை மனிதர்களே சுமப்பது - இதற்கென ஒரு தனி ஜாதி - கீழ்ஜாதி வேறு எந்த சுதந்திர நாட்டிலாவது - உலகில் உண்டா? இதைவிட பெருத்த தேசீய அவமானம் வேறு உண்டா?<br /><br />இதனை இந்திய நாட்டின் எந்த மூலை முடுக்கிலும் இல்லாது ஒழிக்க மத்திய, மாநில அரசுகள் உடனடியாகத் திட்டம் தீட்ட வேண்டும்.<br /><br />தொழில் நுணுக்க முறைகளைப் பயன்படுத்தி - இந்தக் கழிவுகளிலிருந்து பயனுறு பயன் (Recycling Process) முறையில் கோப்பர்காஸ் பல நிறுவனங்கள் செய்கின் றனவே! ஙிவீஷீ நிணீ முறைகளையெல்லாம் செய்யலாமே!<br /><br />அந்தப் பணிகளில் ஈடுபடும் துப்புரவுத் தொழிலாளர் களைக்கூட, அவர்கள் எழுதப்படிக்கத் தெரியாதவர்கள் என்ற நிலை இருந்தால்கூட, பயிற்றுவித்து, பயன்படுத்திக் கொள்ளத் திட்டமிட வேண்டும்.<br /><br />இன்று வெளிவந்த ஒரு தகவல்!<br /><br />இன்று வெளிவந்துள்ள ஒரு செய்தியில் சென்னை மாநகராட்சியில் கடந்த 15ஆம் தேதி முதல் மனிதக் கழிவு களை அகற்றும் பணியாளர்கள் குறித்த கணக்கெடுப்பு துவங்கி, நேற்று வரை நடந்துள்ளது.<br /><br />அதில் 200 வார்டுகளிலும் சேர்த்து மொத்தம் 100 பேர் மட்டுமே அந்தப் பணி செய்வோராகக் கண்டறியப் பட்டுள்ளனராம்.<br /><br />ஆனால் 2011ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக் கெடுப்பின் அடிப்படையில் சென்னையில் மனித கழிவுகளை அகற்றும் பணியாளர்கள் 1,500 பேர்கள் இருந்ததாக குறிப்பிட்டுள்ளது வெளியாகி உள்ளதே!<br /><br />மாற்றுப் பணிகள் தருக!<br /><br />அந்த 1500 பேர்களில் தற்போது 100 பேர் என்று முரணான தகவல்; இதைச் செம்மைப்படுத்தி அவர்கள் அப்பணியை மனிதக் கழிவினை சுமக்கும் பணிக்கு பதிலாக இயந்திரங்களைப் பயன்படுத்தி, அவர்களை மாற்றுப் பணியாளர்களாக்கிட மாநகராட்சியும் தமிழக அரசும் முன்வர வேண்டும்.<br /><br />திராவிடர் கழகம் ஒத்துழைக்கும்<br /><br />இதனை ஒழிக்க நமது இயக்கம் தேவைப்பட்டால் அறப் போராட்டத்திலும், விழிப்புணர்வுப் பிரச்சாரத்திலும் ஈடுபடும் என்பதை அறிவித்துக் கொள்ளுகிறோம்.<br /><br />கி.வீரமணி <br />தலைவர்<br />திராவிடர் கழகம்<br /><br />சென்னை<br />19.8.2014<br /><br />Read more: http://viduthalai.in/page1/86128.html#ixzz3BE8j9Kvv<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-13762447981785412382014-08-23T20:21:41.383+05:302014-08-23T20:21:41.383+05:30
காந்தீய பல்டி வீரர் பற்றி...!
- ஊசி மிளகாய்
மணி...<br />காந்தீய பல்டி வீரர் பற்றி...!<br /><br />- ஊசி மிளகாய்<br /><br />மணியனின் பல்டி-யும் ஒரு நாடகமே...<br /><br />தமிழருவி மணியன் அவர்களின் நேர் காணலை அண்மையில் பார்த்தேன்... ரொம்ப பரிதாபகரமாக இருந்தது; எப்படி இருந்த அவர், இன்றைக்கு இப்படி தரமிழந்து நிற்கிறாரே... என்றுதான் மனத்தில் தோன்றியது.ஈழத் தமிழர்களுக்குத் துரோகம் இழைப்பதில், காங்கிரசை பிஜேபி விஞ்சிவிட்டது; அவர்களின் வஞ்சகத்தை உணர்ந்து கொள் வதற்கு 60 நாள் ஆட்சி போதும்; இனிமேல் அவர்கள் தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கோ அல்லது ஈழத் தமிழர்களுக்கோ நன்மை செய்வார்கள் என்ற நம்பிக்கை தனக்குத் துளியும் இல்லை என்று அந்த நேர்காணலில் அடுக்கித் தள்ளிவிட்டார். இப்போதுதான் பிஜேபியின் சுயரூபத்தை அறிந்து கொண் டேன் என்பதுபோல ஒப்பாரி வைத்தார். உண்மையில், தமிழருவியின் இந்த வாக்கு மூலம் ரொம்ப சாமர்த்தியமானது.<br /><br />விமர்சனங்களிலிருந்து தப்பித்துக் கொள் ளும் தந்திரம் கொண்டது. குஜராத்தில், இஸ்லாமியர்கள் நரவேட்டை ஆடப்பட்ட தற்குக் காரணமான மோடி- அதற்காக குறைந்தபட்சம் மன்னிப்பைக் கூட கேட்காத மோடி, தமிழர்களைக் கொன்றழித்த ராஜ பக்சேவைக் கண்டிப்பதற்கு என்ன தார்மிக உரிமை இருக்கிறது? என்று தேர்தல் நேரத்தில் கேட்கப்பட்டது. அவர் தட்டிக் கேட்பார் என்று நம்புவது எவ்வளவு முட்டாள்தனமானது என்று விவாதங்கள் அனல் பறந்தன. பிஜேபி ஆளும் ம.பி. மாநிலத்தில் ராஜபக்சேவுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டதும்; அதை எதிர்த்து வைகோ ராஞ்சிக்குச் சென்று சாலையை மறித்ததும் அப்போதுதான் நடந்தி ருந்தன. ஆனால், இவை எதுவுமே தெரியாத அப்பாவி போல, தமிழருவி தற்போது கதை விடுகிறார். 45 ஆண்டுகால அரசியல் அனு பவம் கொண்டஅவருக்கா, எதுவும் தெரியாது? சொல்லப் போனால் தெரிந்தேதான் பிஜேபிக் கும், மோடிக்கும் அவர் வக்காலத்து வாங்கினார். தனது சுய அரசியல் லாபத்திற்காக, தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றினார். ஆனால், தற்போது திடீர் ஞானம் வந்தவர்போல பேசுகிறார். நிஜமாகவே, வருந்தி திருந்தி விட்டாரோ என்று பார்த்தால், 2016 தமிழக சட்டமன்றத் தேர்த லுக்கும் பாஜக தலைமையிலான கூட்டணி தொடர வேண்டும் என்றும், ஆனால், கூட்ட ணியில் உள்ள கட்சிகள் அதற்கான வேலை களைத் துவக்காமல் அலட்சியம் காட்டி வருவதாக தமிழருவி ரொம்பவே சலிப்பு காட்டுகிறார். தனது அடுத்த அசைன் மெண்ட் டுக்கும் துண்டை விரித்து இடம் பிடிக்கிறார். தமிழருவியின் நாடகத்தை, இனியுமா தமிழக மக்கள் நம்பப் போகிறார்கள்?<br /><br />- கூ.போர்விஜயன், கடலூர்<br /><br />தீக்கதிர் நாளேட்டில் வாசகர் ஒருவரால் எழுதப்பட்ட இக்கடிதம் இன்று (19.8.2014) வெளி வந்துள்ளது.<br /><br />தமிழ்நாட்டில் பா.ஜ.க., கூட்டணி அமைய அரசியல் புரோக்கர் சு.சாமி அய்யரைவிட, சோ சாமி அய்யரைவிட, மிக அதிவேகமான ஈடுபாட்டில் இறங்கி, மோடி வந்தால் ஏதோ ஈழப் பிரச்சினை முதல் இங்குள்ள காவிரிப் பிரச்சினை வரை எல்லாம் நொடிப் பொழுதில் முடிந்து விடும் என்று ஆரூடம் கணித்த நவீன காந்தியான தமிழருவியார் பாவம் இப்படியா ஆக வேண்டும்?<br /><br />தொலைக்காட்சி ஊடகத்தவர் குறுக்குக் கேள்வி போட்டு கேட்டால், நம்பினேன் அதற்காக நான் என்ன (தற்கொலையா) தூக்கு மாட்டிக் கொண்டா சாக முடியும்? என்று பதில் அளிக்கிறார்! அருவியார் அவர்களே நீங்கள் வாழ வேண்டும்; சாக வேண்டும் என்று எவரும் விரும்ப மாட்டார்கள். திருந்தி வாழுங்கள் அதுபோதும்! சரியான எடை போடக் கற்றுக் கொண்டு பிறகு அரசியல் நடத்துங்கள்.<br /><br />Read more: http://viduthalai.in/page1/86131.html#ixzz3BE8b8Ogv<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-96294981400606112014-08-23T20:21:07.523+05:302014-08-23T20:21:07.523+05:30முருகன் என்ன செய்கிறானாம்?
பழனியில் மழை இல் லாததா...முருகன் என்ன செய்கிறானாம்?<br /><br />பழனியில் மழை இல் லாததால் தண்ணீர் பற்றாக் குறை ஏற்பட்டுள்ளது. பழனி முருகனுக்கு மொட்டை போடும் பக்தர்கள் நீராட வேண்டும் என்பது அய்தீகமாம். தொட்டிகளில் கொண்டு வந்து ஊற்றப்படும் நீரில் காக்கைக் குளியல் போடு கின்றனராம். பக்தர்களின் தண்ணீர்ப் பஞ்சத்தைக்கூட போக்க முடியாத மொட்டை யாண்டி முருகனா பக்தர் களின் குறையைப் போக்கப் போகிறான்?<br /><br />Read more: http://viduthalai.in/page1/86132.html#ixzz3BE8Smely<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-13073581831671939722014-08-23T20:20:36.352+05:302014-08-23T20:20:36.352+05:30இன்றைய ஆன்மிகம்?
சுவாமி மலை
ஒவ்வொரு மனிதனுக் கும...இன்றைய ஆன்மிகம்?<br /><br />சுவாமி மலை<br /><br />ஒவ்வொரு மனிதனுக் கும் கோபம் வருவதற்கு ஏதாவது ஒரு பிரச்சினை குடும்பத்தில் இருக்கிறது. அந்தப் பிரச்சினைகள் தீர கீழ்க்கண்ட கோவில் வழி பாடுகளை மேற்கொள் வது நல்லது.<br /><br />நந்தனாருக்கு நந்தி விலகிய இடம் திருப்புன் கூர். இது வைத்தீஸ்வரன் கோவில் அருகில் உள்ளது.<br /><br />பிரம்மா, விஷ்ணு, சிவன் மூம்மூர்த்திகளும் ஒன்றாக காட்சிதரும் தலம் சுசீந்திரம்.<br /><br />சூரபத்மனை வென்ற பிறகு சுப்பிரமணியர் சினம் தணிந்து வள்ளியை மணம் புரிந்து அமர்ந்த இடம் திருத்தணி, சினம் கொண் டவர்கள் குணம் மாறவும், சிநேகம் கொள் ளவும் செல்ல வேண்டிய இடம் திருத்தணியாகும்.<br /><br />தமிழ் வருடங்கள் அறுபதையும் படிகளாகக் கொண்ட படை வீடு சுவாமி மலை. தந்தை மகன் பிரச்சினைக்கு தீர்வு காணத் தரிசிக்க வேண்டிய தலம் இது.<br /><br />சுவாமிமலை முருக னுக்கு இப்படி ஒரு விளம் பரம் தேவைப்படுகிறது; ஊருக்கு ஊர் கோயில் கள்தான் மண்டிக் கிடக் கின்றனவே போனியாக வேண்டுமானால் விளம்பர யுக்திகளைக் கையாள வேண்டாமா? கோயில் தல புராணங் கள் என்பவை இந்த வகையைச் சேர்ந்ததே.<br /><br />ஒரு கேள்வி: கடவு ளுக்குக் கோபம் வர லாமா? கடவுள் சண்டை போட லாமா? இவை இருந்தால் இந்தக் கடவுள் கள் எப்படி மனிதர்களை விட உயர்ந் தவை.<br />மனிதன் தன் ஆசாபா சத்திற்கு ஏற்ப, அவனால் கற்பிக்கபபட்டவைதான் இந்தக் கடவுள்கள் என்பது இப்பொழுதாவது புரிகிறதா?<br /><br />Read more: http://viduthalai.in/page1/86127.html#ixzz3BE8LaTvT<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-40987316820667375022014-08-23T20:13:59.714+05:302014-08-23T20:13:59.714+05:30இன்றைய ஆன்மிகம்?
ரமண ரிஷி
கடவுள் பக்தன்மீது கருண...இன்றைய ஆன்மிகம்?<br /><br />ரமண ரிஷி<br /><br />கடவுள் பக்தன்மீது கருணை கொண்டு அவ னது முன்னேற்றத்திற்குத் தக்கபடி வெளிப்படு கிறார். பக்தன் கடவுளை மனிதனென்று நினைத்து எதிர்பார்த்து நிற்கிறான். ஆனால், கடவுள், பக்த னுக்குள் இருந்து அவன் தவறுகளை உணர்த்தி நல்வழியில் செல்ல உதவுகிறார். - ரமணரிஷி<br /><br />கொலைகாரனுக்கு எப்படி உதவுகிறார்? பக்தர்கள் தந்த கொள்ளைப் பணத்தை தனது உறவின ருக்கு எழுதி வைத்த இந்த ரமண ரிஷியையும் இப்படித்தான் வழி நடத்தினாரோ!<br /><br />Read more: http://viduthalai.in/page1/85948.html#ixzz3BE6gZOO6<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.com