tag:blogger.com,1999:blog-1474608369333206681.post6426029122068427203..comments2023-10-29T13:02:52.613+05:30Comments on தமிழ் ஓவியா: பறையன் பட்டம் போகாமல் சூத்திரப்பட்டம் போகாது என்றவர் பெரியார்-5தமிழ் ஓவியாhttp://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-59932338305239784132012-05-28T20:13:34.093+05:302012-05-28T20:13:34.093+05:30மலாக்கா - ஜாசீன் நகர் நிகழ்ச்சி
அங்கே முதுபெரும் ...மலாக்கா - ஜாசீன் நகர் நிகழ்ச்சி<br /><br />அங்கே முதுபெரும் பெரியார் பெருந்தொண் டர் நடராசனாரைப் பாராட்டி வாழ்த்தி தமிழர் தலைவர் உரையாற்றி, மாணவர்களுக்குக் கல்வி பற்றியும், கழக வளர்ச்சி பற்றியும் உரையாற்றி விட்டு மாலை 6.45 மணிக்கு தேநீர் விருந்து முடித்து, சிரம்பான் வழியாக 200 கிலோ மீட்டர் தூரம் உள்ள மலாக்கா - ஜாசீன் நகர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மழையிலும் வேகமாகப்பயணம் செய்து, இரவு 7.30 மணி நிகழ்ச்சிக்கு, இரண்டு மணி நேர கால தாமதம் ஆனதால், இரவு 9.30 மணிக்கு ஜாசீன் ஓட்டல் அரங்கிற்குள் ஏற்பாடாகி இருந்த நிகழ்வில் கலந்து கொண் டனர்.<br /><br />தமிழ்நாடு போல வர வேற்பு தாரைத் தப்பட்டை கொம்பு முழக்கம், கொட்டு மேள முழக்கம் - பட்டாசு வெடிச் சத்தம்.<br /><br />ஓட்டலுக்குள் அழைத்து நிகழ்ச்சியினைத் துவக்கி னார் தேசிய துணைத் தலை வர் காந்தராஜ் அவர்கள்.<br /><br />அப்பகுதி சட்ட மன்ற உறுப்பினர்(மலேசிய காங்கிரஸ்) டத்தோ பெரு மாள் அவர்களும், முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் முனுசாமி அவர்களும், ஏராள மான தோட்டப் பகுதி தொழி லாளர்களும், பல கட்சி பிரமுகர்களும் அவ்வளவு நேரம் தாழ்ந்தும் காத்தி ருந்தது, தாமதமாகச் சென்ற எங்களை அதிரச் செய்தது!<br /><br />கழகக் கொள்கையாளர்கள்<br /><br />ஜாசீனைச் சுற்றி ஏராளமான தோட்டப் புறங்கள் - அதில் உள்ள பலரும் கழக கொள்கையினர் என்பது கூடியிருந்த மக்களின் கரைபுரண்டு ஓடிய உற்சாகத்தின் மூலம் தெரிய வந்தது!<br /><br />துணைத் தலைவர் காந்த்ராஜ் அவர்கள் அப் பகுதியில் கழகத்தின் அரண்போல் பாதுகாத்து வளர்த்துள்ளார். முதுபெரும் பெரியார் பெருந் தொண்டர் முனுசாமி அவர்கள் பாராட்டப் பெற்றார்.<br /><br />தமிழர் தலைவரை வரவேற்ற கழகத் துணைத் தலைவர் காந்த்ராஜ், 1982 ஆம் ஆண்டு இதற்கு முன் வருகை தந்தார் தமிழர் தலைவர். அதற்கடுத்து 30 ஆண்டுகள் கழித்து இப்போது வருகை தருவது எங்களுக்கு மிகுந்த ஊக்கத்தினையும் உற்சாகத்தி னையும் தருகிறது என்று குறிப்பிட்டார்.<br /><br />காலதாமதத்திற்கு மன்னிப்புக் கேட்டு உரையை இரவு 9.45 க்கு தொடங்கி இரவு 10.30 மணிக்கு முடித்தார் தமிழர் தலைவர்.<br /><br />விசித்திர அனுபவம்<br /><br />அதன் பிறகு அனைவரிடமும் விடை பெற்று, மலாக்கா வந்தடைந்தார். மலாக்காவில் கழகப் புரவலர்களில் ஒருவரான ஜோகூர்பாரு டத்தோ பாலகிருஷ்ணன் அவர்கள் வரவேற்று, இரவு உணவுக்கு ஒரு ஓட்டலுக்கு அழைத்துச் சென்று இரவு 11.30 மணி அளவில் விருந்தளித்தார். (இவர் மலேசிய திராவிடர் கழகக் கட்டட மீட்பு நிதியாக தேசியத் தலைவர், பொதுச் செயலாளரிடம் 5 ஆயிரம் மலேசிய வெள்ளிகளை அளித்தார் என்பது குறிப்பிடப்பட்டது மேடையிலே பிறகு இரவு 12.15 மணிக்கு கார்மூலம் - சிங்கப்பூருக்கு ( 200 கி.மீ.தூரம்) பயணமாகி, சிங்கப்பூர் இல்லத்திற்கு விடியற்காலை 3 மணி அளவில் வந்து சேர்ந்தார்.<br /><br />தமிழ்நாட்டை விடக் கடுமையான சுற்றுப் பயணம் இது என்பது அவருடன் சென்றவர்களுக்கும் ஒரு விசித்திர அனுபவமாகும்!<br />மலேசியாவின் சிலாங்கூர், மலாக்கா, ஜோகூர்பாரு - முதலிய பல மாநிலங்களில் ஒரே நாளில் அமைந்து பின் மறுநாடான சிங்கப்பூரில் முடிந்தது!28-5-2012தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-79727644602809067942012-05-28T20:13:23.496+05:302012-05-28T20:13:23.496+05:30விருந்து (ஊடிரசளந னுநேச) பல்வேறு வகைகளைக் கொண்டு ...விருந்து (ஊடிரசளந னுநேச) பல்வேறு வகைகளைக் கொண்டு அடுக்கடுக்காக பரிமாறப்பட்ட நிலை ஒரு புறம், இசை நிகழ்ச்சி, கலை நிகழ்ச்சிகள், முக்கியப் பொறுப்பாளர்களின் உரைகள் மறுபுறம் மேடையில் என்று இடைவிடாது நடந்த வண்ணமே இருந்தன.<br /><br />பாசமும், பரிவும் போட்டி போட்டன!<br /><br />பல மாநிலங்கள், முக்கிய நகரங்களிலிருந்து வந்த கழகப் பொறுப்பாளர்கள் மிகவும் பாசத்துடனும், பரிவுடனும் ஆசிரியரிடம் நலம் விசாரித்து, சிறிது நேரம் மேசைக்கே வந்து நின்று ஒளிப் படங்களையும் எடுத்துக் கொண்டே இருந்தனர்! தேசியத் தலைவர் குறுக்கிட்டு அண்ணனை சாப்பிடவிடமாட்டீர்களா? என்று அன்புடன் கேட்டார்!<br /><br />இரவு 11.30 மணி வரை இவர்களது அன்பு நீண்ட வண்ணம் இருந்தது. பிறகே அனைவரிடமும் விடை பெற்று அறைக்குச் சென்று நள்ளிரவு 12 மணி அளவில்தான் உறங்கி னார்கள்!<br /><br />மறுநாள் காலை 10 மணி அளவில் கோலாலம்பூரில் உள்ள ஆசிரியரின் பழைய நண்பர்களில் ஒருவரான இளையான்குடி முக்குமின் புத்தகக் கடை உரிமை யாளர் அவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்து, சில புத்தகங்களைப் பெற்று திரும்பி மதிய உணவுக்குப் பின் சிறிது நேரம் ஓய்வுக்குப் பின் மாலை 4 மணி அளவில் தேசியத் தலைவர் திரு.பி.எஸ்.மணியம் இல்லம் சென்று, குடும்பத்தாருடன் தேநீர் அருந்திவிட்டு, முதல் மாநில நிகழ்ச்சியான மந்திங் திராவிடர் கழகக் கிளையில் 65 ஆம் ஆண்டு விழா. சுயமரியாதை வீரர் 83 வயது நடராசனாருக்குப் பாராட்டு விழா, மாணவர் களுக்கு பரிசளிப்பு விழாவில் கலந்து கொள்ளப் புறப்பட்டனர்!<br /><br />வழிநெடுக கடும் மழை. காரோட்டினார்கள் ம.தி.க. தலைவரும், பொதுச் செயலாளர் அன்பழகன் அவர்கள்.<br /><br />சீனப் பிரமுகர்களும் பங்கேற்பு<br /><br />காஜாஸ் வழியாக பல்வேறு கிராமங்கள், நகரங்களைக் கடந்து மந்திங் நகருக்குள் சுமார் மாலை 5.30 மணி அளவில் அடைந்தனர். நிகழ்ச்சி கெய்ரோ தமிழ் பள்ளி கட்டடத்தில் மிகச் சிறப்புடன் நடை பெற்றது.<br /><br />அப்பகுதி நகராண் மைக் கழக உறுப்பினர் கான் என்ற சீனப் பிரமு கரும், கழகத் தலைவர் களை வரவேற்று உரை யாற்றினார்.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-20277598869789772082012-05-28T20:12:52.540+05:302012-05-28T20:12:52.540+05:30குடும்பம் குடும்பமாகப் பங்கேற்பு
மலேசியாவின் ஒரு...குடும்பம் குடும்பமாகப் பங்கேற்பு<br /><br />மலேசியாவின் ஒரு முனையின் கடாரம் (கெடா) பகுதி, பினாங்கு தொடங்கி ஜோகூர்பாரு மறுமுனை வரை உள்ள பற்பல மாநிலக் கிளைக் கழகப் (பிரதிநிதிகள்) பேராளர்கள், பொறுப்பாளர்கள் குடும்பம் குடும்பமாக நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.<br /><br />ஒரு வட்ட மேசைக்கு 10 பேர் என 50 மேசைகளில் அனைவரும் அமர்ந்த நிலையில் விழாவின் மேடை அருகில் இருந்த வட்ட மேசைகளில் தமிழர் தலைவர், துணை அமைச்சர் டத்தோ கோகிலன்பிள்ளை, டத்தோ சரவணன், பல்வேறு ம.இந்தியன் காங்கிரஸ், இந்திய சுதந்திரக்கட்சி, கிரேகன் கட்சி தலைவர்கள் பலரும் அமர வைக்கப்பட்டு நிகழ்ச்சிகள் துவங்கின. வேறு ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள துணை அமைச்சர் கோகிலன் அவர்கள் விடைபெற்றுச் சென்றார்!<br /><br />அனைவரையும் பொதுச் செயலாளர் கே.ஆர்.அன் பழகன் வரவேற்று உரையாற்றிய பின் தலைமை உரையைத் ம.தி.க.தேசியத் தலைவர் பி.எஸ். மணியம் அவர்கள் சுருக்கமாக நிகழ்த்தி, துணை அமைச்சர் டத்தோ சரவணன் அவர்களைத் தொடங்கி வைக்குமாறு கேட்டுக் கொண்டார்.<br /><br /><br /><br />உடனடியாக 20 ஆயிரம் மலேசிய வெள்ளி நன்கொடை!<br /><br />கட்டட மீட்புக்குத் தேவைப்படும ஒரு லட்சத்து 20 ஆயிரம் மலேசியா டாலர் வெள்ளி (சு.ஆ.) என்று தேசியத் தலைவர் கூறினார். டத்தோ சரவணன் அவர்கள் தனது நன்கொடையாக 20 ஆயிரம் மலேசிய வெள்ளிக்கான காசோலையை உடனே அளித்து, மிகச் சிறப்பான எழுச்சி உரையாற்றித் துவக்கி வைத்தார்கள்.<br /><br />அதற்கடுத்து, வாழ்த்துரை சிறப்புரை நிகழ்த்தினார் தமிழர் தலைவர். சுமார் 35-40 நிமிட உரையை வந்த அத்துணைப் பேரும் உற் சாகம் கரை புரள வரவேற்றுக் கைதட்டி மகிழ்ந்தனர்.<br /><br />தொய்வு நீங்கியது<br /><br />கடந்த 23 ஆண்டுகளாக மலேசிய திராவிடர் கழகத் தின் தொய்வு நீக்கப்பட்டு, முன்பு போல வீறு நடை போட்டு, பெரியார் தம் கொள் கைகள் மலேசிய மண்ணுக்கு மட்டுமின்றி உலகத்திற்கே எப்படி தேவைப் படும் மனித நேயக் கொள்கை என்பதை விளக்கினார்.<br /><br /><br /><br />ஊக்கமூட்டும் புத்தாக்க உரை<br /><br />புத்தாக்கமும், புத்துணர்ச்சியும் கழகம் பெற அது பெரும் ஊக்க உரையாக அமைந்தது என்று கூறி, கலந்து கொண்ட மூத்த கழகத் தொண்டறச் செம்மல்கள் மிகவும் மகிழ்ந்தனர்.<br /><br />விழுவது முக்கியமல்ல, உடனடியாக எழுவதே முக்கியம். எதிர்நீச்சலில் வெற்றி பெறுவதுதான் ஈரோட்டு ஏந்தலின் இயக்கத்தின் வாடிக்கை என்று விளக்கினார் தமிழர் தலைவர்.<br /><br />மூத்த கழகப் பொறுப்பாளர்களுக்குச் சிறப்பு!<br /><br />மூத்த கழகப் பொறுப்பாளர்கள் பலரும் பாராட்டப் பெற்றனர் - மூவர் பெருமைப்படுத்தப்பட்டனர்.<br /><br />தமிழர் தலைவர் அம்மூவரையும் வாழ்த்தி - பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்தார்.<br /><br />(1) 83 வயது நிரம்பிய மந்திங் நடராசனார்,<br /><br />(2) 77 வயதுள்ள ஜோகூர் மாநில கூலாய் பகுதி குணமணி,<br /><br />(3) 75 வயதான தொண்டர் திலகம் கழக ஆலோசகர் எஸ். சுப்பிரமணியம்<br /><br />ஆகியோருக்கு சிறப்புச் செய்யப்பட்டது மகுடம் போன்ற வரலாற்று பெருமை மிக்க நிகழ்ச்சியாகும்.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-76260125845541263232012-05-28T20:12:37.656+05:302012-05-28T20:12:37.656+05:30உலக மயமாகும் பெரியார் கொள்கை - லட்சியங்கள்!
மலேச...உலக மயமாகும் பெரியார் கொள்கை - லட்சியங்கள்!<br /> <br />மலேசிய திராவிடர் கழகத்தின் புத்தெழுச்சி தமிழர் தலைவர் இரண்டு நாள் சூறாவளி சுற்றுப் பயணம்!<br /><br />(நமது சிறப்புச் செய்தியாளர்)<br /><br /><br />சிங்கப்பூர், மே 27-சிங்கப்பூரில் கடந்த 18 ஆம் தேதி மாலை ஜோரோங் வட்டார நூலகத்தின் அரங்கில் மலேசியா-சிங்கப்பூரில் பெரியார் சுற்றுப் பயணம் 1929 -1954 நூல் வெளியீட்டு விழாவை முடித்துக் கொண்ட பிறகு, 19-5-2012 சனிக்கிழமை காலை சிங்கப்பூரிலிருந்து விமானம் மூலம். மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் மாலை நடைபெற்ற மலேசிய திராவிடர் கழக 65 ஆம் ஆண்டு விழா, கழகக் கட்டட மீட்புக்கான நிதி நன்கொடை நிகழ்வுகளை உள்ளடக்கிய ம.தி.க.வின் விழாக்களில் கலந்து கொள்ள தமிழக திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் அன்று காலை 11.30 மணி அளவில் அடைந்தார்.<br /><br />விமான நிலையத்தில் வரவேற்பு<br /><br /><br /><br />கோலாலம்பூர் விமான நிலையத்தில் மலேசிய திராவிடர் கழக தேசியத் தலைவர் பி.எஸ்.மணியம், துணைத் தலைவர் மு.சு.மணியம், பொதுச் செயலாளர் கே.ஆர்.அன்பழகன், துணைப் பொதுச் செயலளார் பிரகாஷ் ஆகியோர் வரவேற்று அழைத்துச் சென்று, நிகழ்ச்சி நடைபெற விருக்கும் ஓட்டலில் தங்க வைத்தனர்.<br /><br />நலம் விசாரிப்பு<br /><br />தமிழர் தலைவருடன் சிங்கப்பூர் பெரியார் சேவை மன்றத் தலைவர் வி.கலைச் செல்வம், அதன் நிர்வாக உறுப்பினர் ராஜராஜன் ஆகியோரும் சென்றனர்!. மாலை 6 மணி அளவில், உடல் நலம் தேறி வரும் டத்தோ சுப்ரா என்று அனைவராலும் அழைக்கப்படும் டத்தோ எஸ்.சுப்பிரமணியம் அவர்களது இல்லத்திற்கு தேசியத் தலைவர் மற்றும் தோழர்களுடன் சென்று, கண்டு, அவரது உடல் நலத்தை அவரது வாழ்விணையரிடம் விசாரித்து, உரையாடி தேநீர் அருந்திவிட்டுத் திரும்பினர்.<br />சுமார் இரவு 7 மணி அளவில், மலேசிய வெளி உறவுத் துணை அமைச்சர் திரு. கோகிலன் பிள்ளை அவர்கள் தமிழர் தலைவர் தங்கியிருந்த அறைக்கே வருகை தந்து, நலம் விசாரித்து நீண்ட நேரம் உரையாடிக் கொண்டிருந்து, சுமார் இரவு 8 மணி அளவில் நிகழ்ச்சி அரங்கிற்கு ஒன்றாகவே சென்றனர்!தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-28052130079518620232012-05-28T20:07:19.007+05:302012-05-28T20:07:19.007+05:30வேலூர் அழைக்கிறது!
அருமைத் தோழர்களே! நாளை வேலூர் ...வேலூர் அழைக்கிறது!<br /><br />அருமைத் தோழர்களே! நாளை வேலூர் மாநகரிலே திராவிடர் கழக மகளிரணி மற்றும் மகளிர் பாசறை சார்பில் புத்துலகப் பெண்கள் மாநில மாநாடு முழு நாள் நிகழ்ச்சியாக நடைபெற உள்ளது.<br /><br />தோழர்கள் என்ற சொல்லை இருபாலருக்கும் பயன்படுத்தினார் தந்தை பெரியார் என்பதும், உலகிலேயே புதுமைதான் - புரட்சிதான்!<br /><br />புரோகிதத்தைத் தவிர்த்த சுயமரியாதைத் திருமணத்தைத் அறிமுகப்படுத்தியதோடு அல்லாமல் பெண்களையே தலைமை வகித்து அத்தகைய திருமணங்களையும் நடத்தும் ஒரு புரட்சியையும் செய்து வைத்தார் அந்த உண்மை யான புரட்சித் தலைவர்.<br /><br />1930-இல் ஈரோட்டில் நடைபெற்ற இரண்டாவது சுயமரியாதை மாகாண மாநாட்டுப் பந்தலிலேயே சிவகாமி - சிதம்பரனார் திருமணத்தை தோழர் நாகம்மையார் நடத்தி வைப்பார் என்று முன்மொழிய அன்னை நாகம்மையார் அதனை நடத்தியும் வைத்துள்ளார்.<br /><br />அது ஒரு புரட்சித் திருமணமாகும். சிவகாமி அம்மையார் கணவனை சிறு வயதிலேயே இழந்த வர். அந்தக் கால கட்டத்தில் விதவைப் பெண் ணுக்குத் திருமணம் என்பது நினைத்தே பார்க்க முடியாத அசாதாரண நிகழ்வாகும்.<br /><br />பெண்கள் உரிமைபற்றி தந்தை பெரியார் சிந்தித்ததுபோல - கருத்துக்கள் கூறியதுபோல உலக வரலாற்றில் வேறு யாரும் சிந்தித்து இருக்கவும் முடியாது; பெண்களுக்காகப் போராடிய வர்களும் கிடையாது.<br /><br />சுயமரியாதைத் திருமண மேடையைக்கூட தந்தை பெரியார் அவர்கள் பெரும்பாலும் பெண்களின் உரிமைகளுக்கான குரல் கொடுக்கும் ஒரு களமாகவே பயன்படுத்தினார் என்றே சொல்ல வேண்டும்.<br /><br />இந்த மேடையில் தந்தை பெரியார் அவர்களால் வலியுறுத்தப்பட்ட பல கொள்கைகள், திட்டங்கள் பிற்காலத்தில் சட்டங்களாக மலர்ந்து மணம் வீசிக் கொண்டிருக்கின்றன.<br /><br />பெண்களுக்குக் கல்வி உரிமை, உத்தியோக வாய்ப்பு, சொத்துரிமை, விவாகரத்து உரிமை, விதவைத் திருமணம், திருமண வயது, கர்ப்ப ஆட்சி என்று பெண்கள் பற்றித் தொடாத துறையில்லை என்று சொல்லும் அளவுக்குப் பல மணி நேரங்கள் திருமண மேடையில் பேசிய சாதனையாளர் தந்தை பெரியார்.<br /><br />அதனால்தான் பெண்களே மாநாடு கூட்டி அவருக்குப் பெரியார் என்ற பட்டத்தை அளித்துப் பெருமை பெற்றார்கள்.<br /><br />தமிழின மக்களின் நலம் சார்ந்த உரிமை வாழ்வுக்காகத் தம்மை ஒப்படைத்துக் கொண்ட தந்தை பெரியார் அவர்களை நீண்ட காலம் வாழ வைப்பதற்காகத் தம் வாழ்வை முற்றிலும் அர்ப் பணித்தவர் அன்னை மணியம்மையார் அவர்கள்.<br /><br />அவர்கள் பிறந்த வேலூர் மண்ணில் நாளைய தினம் பெண்கள் புத்துலக மாநில மாநாடு பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் நடைபெற உள்ளது. கருத்தரங்கம், பட்டிமன்றம், பேரணி, கலை நிகழ்ச்சி, பொது மாநாடு என்று முற்றும் பெண்களே கலந்து கொள்ளும் புரட்சி மாநாடு இது!<br /><br />கழகத் தலைவர் என்ற முறையில் தமிழர் தலைவர் மட்டும்தான் விதிவிலக்காக இம்மா நாட்டில் பங்கு ஏற்கிறார்.<br /><br />புரட்சிகரமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. பெண்கள் சந்திக்கும் அத்துணைப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணும் உண்மையான புரட்சி மாநாடு இது.<br /><br />கழகத் தோழர்களே, ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் நீங்கள் வர வாய்ப்பு இல்லை என்றாலும் வீட்டுப் பெண்களைக் கண்டிப்பாக மாநாட்டுக்கு அனுப்பி வையுங்கள்.<br /><br />கோடை விடுமுறை நாள் என்பதால் மாணவி களையும் கண்டிப்பாக அனுப்பி வையுங்கள்.<br /><br />திராவிடர் கழகத்தைத் தவிர வேறு எந்த அமைப்பாலும் இத்தகைய மாநாட்டை நடத்திட முடியாது. ஏன்? அப்படிச் சிந்திக்கக் கூட முடியாது.<br /><br />நமது இயக்க வரலாற்றில் மிகவும் வித்தியாசமாக நடக்க இருக்கும் இந்த மாநாட்டை நோக்கி கட்சி களுக்கு அப்பாற்பட்டு அனைத்துப் பெண்களும் குவியட்டும்! குவியட்டும்!!<br /><br />கழக மகளிர் மற்றும் பாசறைப் பொறுப்பாளர்கள் மட்டுமல்ல; அனைத்துப் பெண்களும் ஒன்று திரளட்டும். நாடெல்லாம் பேசப்படும் இந்த மாநாட் டுக்கு வரத் தவறாதீர்!28-5-2012தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-8360843199132120852012-05-28T20:03:43.191+05:302012-05-28T20:03:43.191+05:30கருத்துச் சுதந்திரம், நடமாடும் சுதந்திரம் பறிப்பு,...கருத்துச் சுதந்திரம், நடமாடும் சுதந்திரம் பறிப்பு, சிறுவர்கள் கடத்தல், பெண்களுக்கு எதிரான பாகுபாடு இதுவே இன்றைய இலங்கையில் நிலவும் சூழல்! விரைவில் டெசோ மாநாடு கலைஞர் அறிவிப்பு<br /><br /><br /><br /><br /><br />சென்னை, மே 28- இலங்கைத் தீவில் நடைபெறும் உரிமைப் பறிப்புகளை எடுத்துக்காட்டி தனியீழமே தீர்வு - விரைவில் டெசோ மாநாடு என்று அறிவித்துள்ளார் தி.மு.க. தலைவர் கலைஞர். இதுபற்றி இன்றைய முர சொலியில் கலைஞர் அவர்கள் எழுதியிருப்பதாவது:<br /><br />கேள்வி:- இலங்கைத் தமிழர்களுக்கு தனித் தமிழ் ஈழம் அமைந்தால்தான் விடிவு ஏற்படும் என்று நீங்கள் சொல்வதை நிரூபிப் பதைப் போல தொடர்ந்து அங்கே தமிழர்கள் சித்ரவதை செய்யப் படுவதாக இன்று கூட ஏடுகளில் செய்தி வந்திருக்கிறதே?<br /><br />கலைஞர்:- அமெரிக்க வெளி யுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் 200 நாடுகளில் மனித உரிமை நிலை குறித்த 2011ஆம் ஆண்டுக்கான அறிக்கையை வாஷிங்டன் நகரில் வெளியிட்டி ருக்கிறார். அந்த அறிக்கையில், 44 பக்கங்களுக்கு இலங்கை அரசு மீது கடுமையான குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளதாம். குறிப்பாக, தமிழர்கள் பெரும் பாலும் வசிக்கும் பகுதிகளில் சிங்கள ராணுவம் மற்றும் அரசு ஆதரவு குழுக்கள் சட்டத்திற்குப் புறம்பாகச் செயல்பட்டு கொலை களை நிகழ்த்தி வருகின்றன. இதன் மூலம் மனித உரிமை மீறல்கள் நடைபெற்றுள்ளன. அரசியல் நோக்கம் கருதி இந்தக் குழுக்கள் இயங்குகின்றன. விடுதலைப் புலிகளின் அனுதாபிகள் என கருதப்படுவோர் துன்புறுத்தப் படுகிறார்கள். ஏராளமானவர்கள் காணாமல் போவது இங்கு முக்கிய பிரச்சினையாக உள்ளது. முந் தைய ஆண்டுகளில் ஆயிரக்கணக் கில் காணாமல் போயுள்ளனர். இதற்கு அரசு தரப்பில் எந்தப் பொறுப்பும் ஏற்கப்படவில்லை. சிங்கள ராணுவக் கண்காணிப்பில் தடுப்பு முகாம்களில் வைக்கப் பட்டுள்ள தமிழர்கள் துன்பப் படுத்தப்படுகின்றனர். அரசு அதிகாரிகளால் பொது மக்கள் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்படு கிறார்கள். இவ்வாறு கைது செய்யப்படுவோரில் பலர் விசாரணையின் போது மரணம் அடைந்துள்ளனர். நீதி விசார ணையின்றி ஏராளமான தமிழர் கள் சிறை வைக்கப்பட்டுள்ளனர். உண்மையான நீதி மறுக்கப் படுவது பெரும் பிரச்சினையாக உள்ளது. தமிழர்களின் தனிப்பட்ட உரிமைகளில் அரசு தலையிடு கிறது. பத்திரிகை சுதந்திரம் நசுக்கப்படு கிறது. கருத்து சுதந் திரம், ஒன்று கூடும் உரிமை, நட மாடும் சுதந்திரம் போன்றவற்றிற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு எதிரான பாகுபாடு உள்ளது. சிறுவர்களைக் கடத்துதல், தவறாகப் பயன்படுத்துதல் போன்ற சம்பவங்கள் இங்கு மிகப் பெரிய பிரச்சினையாக உள்ளது. மனித உரிமை மீறல்களால் எண்ணில டங்காத தமிழர்கள் பாதிக்கப் பட்டுள்ளனர் என்று ஹிலாரி கிளிண்டன் வெளியிட்ட அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக இன்று ஏடுகளில் வெளி வந்துள் ளது. மேலும் இலங்கைக்கான பிரிட்டிஷ் துதர் ஜான் ரான்கின், இலங்கையில் தமிழர் அதிகம் வசிக்கும் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் இலங்கை ராணுவம் அதிகம் குவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருக் கிறார். இதுபற்றி இன்று தினமணி வெளியிட்ட செய்தியில், ஈழத் தமிழர்களுக்கு எதிராக கொடூரங்களை நிகழ்த்து வதாக இலங்கை அரசின் மீது ஏற்கெனவே பல்வேறு குற்றச் சாட்டுகள் உள்ள நிலையில், பிரிட்டிஷ் தூதர் வெளியிட்டுள்ள தகவல் மேலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது என்று குறிப் பிட்டுள்ளது. அமெரிக்காவும், பிரிட்டனும் தெரிவித்துள்ள இப்படிப்பட்ட கருத்துக்களுக்கிடையே இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்ஷே, வெளிநாடுகளின் நெருக்குதல் களை ஏற்று இலங்கையில் ராணு வத்தை குறிப்பிட்ட இடங்களில் இருந்து வாபஸ் பெற முடியாது என்று சொல்லியிருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சு வதைப் போல உள்ளது. இதையெல்லாம் பற்றி விவாதித்து முடிவெடுக்கத் தான் டெசோ மாநாட்டினை விரைவிலே கூட்டுவதாக அறிவித் திருக்கிறோம்.28-5-2012தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.com