tag:blogger.com,1999:blog-1474608369333206681.post6354004663509663310..comments2023-10-29T13:02:52.613+05:30Comments on தமிழ் ஓவியா: சம்பளத்தைப்பற்றி கவலைப்படும் தொழிலாளி பிறவி இழிவுபற்றி ஏன் கவலைப்படுவதில்லை? தமிழ் ஓவியாhttp://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comBlogger84125tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-25127107106122869152014-02-20T07:11:32.509+05:302014-02-20T07:11:32.509+05:30
மதம் தேவையா?
மதத்தைக் காப்பாற்றவே கோவில்களும், ...<br />மதம் தேவையா?<br /><br /><br />மதத்தைக் காப்பாற்றவே கோவில்களும், சொத்துக்களும், அவற்றைக் காக்க மடங்களும், மடாதிபதிகளும் ஏற்பட்டனர். இவை மக்கள் வாழ்க்கைக்கு அவசியமா?அதனால் மக்கள் கஷ்டம் நீங்குமா? நீங்காதா? என்பதைத்தான் கவனிக்கவேண்டும். - (விடுதலை, 3.12.1962)<br /><br />Read more: http://viduthalai.in/page-2/75562.html#ixzz2tp2xh2L1<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-87549551970198175632014-02-20T07:07:20.447+05:302014-02-20T07:07:20.447+05:30
மோடி ஸ்வாமிகளின் தனிமை உபதேசம்
- குடந்தை கருணா
...<br />மோடி ஸ்வாமிகளின் தனிமை உபதேசம்<br /><br /><br />- குடந்தை கருணா<br /><br />இமாச்சல பிரதேசத்தில் பேசிய மோடி, தனக்கு குடும்ப வாழ்க்கை இல்லாததால், தான் ஊழல் செய்து பணம் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை என்றும், குடும்ப சூழல் இல்லாதவர் மட்டுமே,ஊழலை ஒழிக்க முடியும் என ஊழல் ஒழிப் புக்கு புதிய இலக்கணத்தை உதிர்த் துள்ளார் மோடி ஸ்வாமிகள்.<br /><br />மோடி ஸ்வாமிகளிடம் சில கேள் விகளை கேட்கும் விரும்புகிறோம்.<br /><br />1. ஊழலை ஒழிக்க குடும்ப ஸ்தர்களால் முடியாது என்பதால் தான், அத்வானியை பிரதமர் வேட் பாளராக பாஜக அறிவிக்கவில்லையா?<br /><br />2. பிரதமர் மட்டுமே முடிவு செய்து, ஊழலை ஒழிக்க முடியுமா?<br /><br />3. ஏனைய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், என அனைவரும் குடும்ப சூழல் இல் லாதவர்களாக இருக்க வேண்டுமா?<br /><br />4.மோடி ஸ்வாமிகளின் கருத்தை, பாஜக ஏற்றுக் கொள்கிறதா?<br /><br />5. இல்லற வாழ்க்கை இல்லாத வர்களுக்குத்தான் இம்முறை பாஜக சார்பில் வேட்பாளராக வாய்ப்பு தரப்படுமா?<br /><br />6. அத்வானி, சுஸ்மா சுவராஜ், முரளி மனோகர் ஜோஷி போன்றோர் இம்முறை வேட்பாளர்களாக போட் டியிடுவார்களா?<br /><br />7. எந்த ஆய்வின் அடிப்படையில் மோடி ஸ்வாமிகள் இந்தக் கருத்தை உபதேசிக்கிறார்?<br /><br />8. எனக்கு குடும்ப வாழ்க்கை கிடையாது, முதல்வர் பதவியில் மாத ஊதியமாக ஒரு ரூபாய் தான் பெறு கிறேன் எனக் கூறியவர் தான்,கடந்த பதினேழு ஆண்டுகளாக சொத்து குவிப்பு வழக்கில் நீதிமன்றப் படிகளில் ஏறி வருகிறார். அதற்கு மோடி ஸ்வாமிகளின் விளக்கம் என்ன?<br /><br />9. யோகேந்திர யாதவ் மோடி ஸ்வாமிகளிடம் கேட்ட கேள்வியான, அதானி குழுமத்திற்கு அதிகப்படி யான சலுகைகள் அளிக்கப்பட்டதன் பின்னணி என்ன என்பதற்கு மோடி ஸ்வாமிகளின் பதில் என்ன?<br /><br />அண்மையில் ஒரு திரைப் படத்தில் ஒரு வசனம் வரும். வெள் ளையாக இருப்பவன் பொய் சொல்ல மாட்டான் என்று வசனம் வரும். அது போலத்தான் இருக்கிறது மோடி ஸ்வாமிகளின் பேச்சு.<br /><br />Read more: http://viduthalai.in/page-2/75567.html#ixzz2tp1ss9mW<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-44367378050982033032014-02-20T07:04:39.667+05:302014-02-20T07:04:39.667+05:30
உலகளந்த பெருமாள் தேர் உடைந்து போனதே!
வாலாஜாபாத்...<br />உலகளந்த பெருமாள் தேர் உடைந்து போனதே!<br /><br /><br />வாலாஜாபாத், பிப்.19- காஞ்சீபுரம் உலகளந்த பெரு மாள் கோவிலில் நடந்த தேரோட்டத்தில் தேர் சக்கரத் தில் விரிசல் ஏற்பட்டதால் பக்தர்கள் அதிர்ச்சியடைந் தனர். காஞ்சீபுரத்தில் உலக ளந்த பெருமாள் கோவில் மாசி மாத பிரம்மோற்சவம் கடந்த 6 நாட்களாக நடை பெற்று வந்தது.<br /><br />7-ஆம் திருநாளான நேற்று காலை திருத்தேர் உற்சவம் நடந்தது. முன்ன தாக பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகமும், ஆராதனை யும் நடந்ததாம். பின்னர் திருத்தேரில் எழுந்தருளினா ராம். திருத்தேரை பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர். காஞ்சீபுரத்தில் உள்ள ராஜ வீதிகளில் தேர் வலம் வந்தது.<br /><br />செங்கழுநீரோடை வீதி யில் வந்தபோது திடீரென தேரின் முன்சக்கரத்தில் லேசான சத்தம் வந்தது. உடனே தேரை நிறுத்தி பார்த்தனர். அப்போது சக்கரத்தில் லேசான விரிசல் ஏற்பட்டு இருந்தது. இத னால் தேர் நிறுத்தப்பட்டு முன்பக்க சக்கரத்தை கழற்றி பின்பக்கமும், பின்பக்க சக் கரத்தை கழற்றி முன்பக்கத் திற்கும் மாற்றி தேரை வடம் பிடித்து இழுத்தனர்.<br /><br />பூக்கடை சத்திரம் என்ற இடம் அருகே வந்தபோது சக்கரத்தில் திடீரென விரிசல் அதிகம் ஆனது. பின்னர் தேரை உடனடியாக நிறுத்தி சக்கரத்தை சீரமைக்கும் பணியை கோவில் நிர்வாகத் தினர் மேற்கொண்டனர். இதனால் அங்கு 3 மணி நேரத்திற்கு மேலாக போக் குவரத்து பாதிக்கப்பட்டு ஏராளமான பக்தர்கள் கூடி விட்டனர். பின்னர் சக் கரத்தை தற்காலிகமாக சரி செய்து தேரை கோவில் நிலைக்கு பாதுகாப்பாக கொண்டு வந்து சேர்த்தனர்.<br /><br />திருத்தேர் உற்சவம் நடத் துவதற்கு அறநிலையத் துறை சார்பில் நேற்று முன் தினம் தான் திருத்தேர் நல்ல நிலையில் உள்ளது என்ற சான்றிதழ் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.<br /><br />Read more: http://viduthalai.in/e-paper/75559.html#ixzz2tp1Ce2Z9<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-70947261430930957642014-02-20T07:04:06.035+05:302014-02-20T07:04:06.035+05:30செய்தியும் சிந்தனையும்
கவனச் சிதைவோ!
செய்தி: கா...செய்தியும் சிந்தனையும்<br /><br />கவனச் சிதைவோ!<br /><br />செய்தி: காஞ்சிபுரம் உலக ளந்த பெருமாள் கோயில் தேர் சக்கரம் உடைந்தது! சிந்தனை: உலகை அளந்த வருக்கே இந்தக் கதியா? ஒருக்கால் உலகை அளந்து கொண்டிருந்தபோது கவ னச் சிதைவால் இது நடந்து விட்டதோ!<br /><br />Read more: http://viduthalai.in/e-paper/75555.html#ixzz2tp15lop7<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-69425277548998317622014-02-20T07:03:36.766+05:302014-02-20T07:03:36.766+05:30திடீர்க் காதல்!
பொதுவுடைமைச் சிற்பி ம. சிங்காரவேல...திடீர்க் காதல்!<br /><br />பொதுவுடைமைச் சிற்பி ம. சிங்காரவேலரின் பிறந்த நாளில் அவரது சிலைக்கு பி.ஜே.பி.யினர் மாலை அணிவித்தனர் என்பது சேதி. திடீரென்று பாபு ஜெக ஜீவன்ராம் - கான்சிராம், ம. சிங்காரவேலர்கள் மீதெல்லாம் பி.ஜே.பிக்குக் காதல் பீறிட்டுக் கிளம்பியுள்ளது பார்த்தீர்களா? எல்லாம் தேர்தல் ஜுரம்தான்.<br /><br />Read more: http://viduthalai.in/e-paper/75555.html#ixzz2tp0zKdlI<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-74635836320621211512014-02-20T07:02:27.956+05:302014-02-20T07:02:27.956+05:30
கல்கிகளின் ஆசை
கல்கிகளின் ஆசை
கேள்வி: மோடி அலை ...<br />கல்கிகளின் ஆசை<br /><br />கல்கிகளின் ஆசை<br /><br />கேள்வி: மோடி அலை வெறும் மாயை என்கிறாரே திருமாவளவன்?<br /><br />பதில்: வண்டலூர் மாநாட் டுக்குத் திரண்டவர்களின் எண்ணிக்கையை தினமலர் பத்து ல,ட்சம் என்றது; தின மணி ஒரு லட்சம் என்றது; எண்ணிக்கை எதுவானலும் கூட்டம் பிரியாணி பொட் டலத்துக்கும், குவார்ட்டர் பாட்டிலுக்கும், ரூபாய்க்கும் திரண்ட கூட்டமல்ல; மோடி மீது நம்பிக்கை கொண் டோரின் கூட்டம். யதார்த்தம் எடுத்துரைக்கும் உண் மையைக் கண்டறிந்தும் மாயாஜாலமாகப் பேசுவது எதிர் அணி அரசியல்வாதிக்கு அவசியமாகி விடுகிறது.<br /><br />இப்படி எழுதுவது ஆர். எஸ்.எஸின் விஜயபாரதம் அல்ல கல்கி தான் (23.2.2014 பக்கம் 43).<br />வண்டலூரில் மோடி கூட்டம் பேசிய அன்று (8.2.2014) அங்கு டாஸ்மாக் விற்பனை புதிய சாதனை படைத்ததாம் - ரூ.4.9 கோடி விற்பனையாம் - இந்தக் குவார்ட்டர்களை சொந்த மாகப் பணம் கொடுத்து வாங்கியதுதான் என்று கல்கி கூறுகிறதோ?<br /><br />கோயம்பேட்டில் தனி யார்ப் பேருந்துகளை நிறுத்தி, கூவிக் கூவி மக்களை அழைத்த கதை ஊர் சிரிக்க வில்லையா? ஆகா! கல்கி களுக்குத்தான் மோடியைச் சிம்மாசனத்தில் உட்கார வைக்க எவ்வளவுப் பெரிய ஆசை!<br /><br />நற்குடி மக்களா?<br /><br />ஏடுகளில் அன்றாடம் ஒரு செய்தி வந்து கொண்டே இருக்கிறது. டாஸ்மாக் கடையை இங்கே வைக் காதே! பெண்கள் நடமாட முடியவில்லை! என்று பொது மக்கள் குறிப்பாகப் பெண்கள் வீதிக்கு வந்து போராடுவதை அறிய முடிகிறது. இதில் உள்ள நியா யத்தைப் புரிந்து கொள்ள வேண்டமா? குடிகுடியைக் கெடுக்கும் என்ற விளம்பரப் பலகையையும் ஒரு பக்கத் தில் மாட்டிக் கொண்டு - இன்னொரு பக்கத்தில் - மக்கள் அதிகமாகப் புழங் கும் இடங்களில் டாஸ்மாக் கடைகளை வைப்பது சரி தானா? இந்த மதுபானக் கடைகளை இழுத்து மூடி விட்டு, கள்ளுக் கடைகளைத் திறப்பது பற்றி அரசு யோசிக் கலாமே! திராவிடப் பெருங் குடி மக்கள் நற்குடி மக்க ளாக வாழ ஒரு வழி செய்யக் கூடாதா? மதுவை ஒழிக்க வேண்டும் என்று போடப் படுகின்ற மாநாட்டுத் திடலில், பொழுது விடிந்து பார்க்கும் பொழுது தான் உண்மை புரி கிறது - எங்குப் பார்த்தாலும் காலி மதுப்பாட்டில்களின் அணி வகுப்பு!<br /><br />பேஷ், பேஷ்!<br /><br />தாம்பரத்தையடுத்த ஊரப்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவர் பட்டப் பகலில் படுகொலை செய் யப்பட்டுள்ளார். இதற்கு முன்புகூட அவ்வூர் ஊராட்சி மன்றத் தலைவர்கள் இப் படியே படுகொலை செய் யப்பட்டுள்ளனர். பேஷ், பேஷ்! சட்டம் ஒழுங்கு மிக நன்னாயிருக்கு...<br /><br />வாராக்கடன்<br /><br />வங்கிகளின் மொத்த வாராக் கடன் நடப்பு நிதி யாண்டின் முதல் ஒன்பது மாதங்களில் 35.2 சதவீதம் அதிகரித்துள்ளதாம்.<br /><br />Read more: http://viduthalai.in/e-paper/75561.html#ixzz2tp0fsfAc<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-34346653542535386312014-02-20T07:01:59.196+05:302014-02-20T07:01:59.196+05:30
சட்டமன்றத்தில் இன்று:
சாந்தன், முருகன், பேரறிவா...<br />சட்டமன்றத்தில் இன்று:<br /><br /><br />சாந்தன், முருகன், பேரறிவாளன் உள்பட ஏழு பேர் விடுதலை செய்யப்படுவர்<br />முதலமைச்சரின் அறிவிப்புக்கு அனைத்துக் கட்சி உறுப்பினர்கள் வரவேற்பு<br /><br /><br />சென்னை, பிப்.19- ராஜீவ்காந்தி கொலை வழக்கு என்ற பெயரில் குற்றவாளி களாக ஆக்கப்பட்ட பேரறி வாளன், முருகன், சாந்தன் உள்பட 7 பேர் விடுதலை செய்யப்படுவதாக சட்ட மன்றத்தில் இன்று முதல மைச்சர் அறிவித்தார். இந்த அறிவிப்பை சட்டமன்றத் தில் அனைத்து கட்சிகளும் வரவேற்றன. காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டும் முதலமைச்சரின் இந்த அறிவிப்பை கண்டித்து வெளி நடப்பு செய்தனர்.<br /><br />சட்டமன்றத்தில் இன்று (19.2.2014) காலை 10 மணி யளவில் அவை கூடியதும் கேள்வி - பதில் நிகழ்வு நடைபெற்று முடிந்ததும், சிறப்புக் கவன ஈர்ப்பு தீர் மான அடிப்படையில் முத லமைச்சர் விதி 110- இன் கீழ் ஒரு அறிவிப்பை வாசிப் பார் என பேரவைத் தலை வர் ப. தனபால் அறிவித்தார்.<br /><br />இதைத் தொடர்ந்து முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் கீழ்க்கண்ட அறி விப்பை வாசித்தார்:<br /><br />இந்த வழக்கு மத்திய புலனாய்வு அமைப்பினால் புலனாய்வு செய்யப்பட்டு, அதன் அடிப்படையில் தடா நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு தண் டனை வழங்கப்பட்டதால், குற்ற விசாரணை முறைச் சட்டம் 435-இன்படி தமிழ் நாடு அமைச்சர வையின் முடிவு குறித்து மத்திய அர சுடன் கலந்தாலோசிக்கப் பட வேண்டும். எனவே, மத்திய அரசின் கருத்தி னைப் பெறும் வகையில், திருவாளர்கள் சுதேந்திர ராஜா என்கிற சாந்தன், சிறீஹரன் என்கிற முருகன், பேரறிவாளன் என்கிற அறிவு, திருமதி நளினி, ராபர்ட் பயஸ், ஜெயகுமார் மற்றும் ரவிச்சந்திரன் ஆகிய ஏழு பேரையும் விடுதலை செய்யலாம் என்ற தமிழ் நாடு அமைச்சரவையின் முடிவு மத்திய அரசுக்கு உடனடி யாக அனுப்பி வைக்கப்படும்.<br /><br />மத்திய அரசு 3 நாள் களுக்குள் தனது கருத்தினைத் தெரிவிக்காமல் காலம் தாழ்த்தினால், இந்திய அரசமைப்புச் சட்டம் 432-இல் மாநில அரசுக்கு அளிக் கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில் அமைச் சரவைக் கூட்டத்தில் எடுக் கப்பட்ட முடிவின்படி, திருவாளர்கள் சுதேந்திர ராஜா என்கிற சாந்தன், சிறீஹரன் என்கிற முருகன், பேரறிவாளன் என்கிற அறிவு, திருமதி நளினி, ராபர்ட் பயஸ், ஜெயகுமார் மற்றும் ரவிச்சந்திரன் ஆகி யோர் விடுவிக்கப்படுவார் கள் என்பதை இந்த மாமன் றத்திற்குத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று சட்ட மன்றத்தில் இன்று முதல மைச்சர் தெரிவித்தார்.<br /><br />Read more: http://viduthalai.in/e-paper/75554.html#ixzz2tp0Y8xpJ<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-45109913348685912152014-02-19T06:37:11.623+05:302014-02-19T06:37:11.623+05:30
கலைஞர் சட்டசபைக்கு வந்தார்
சென்னை, பிப்.18- தமிழ...<br />கலைஞர் சட்டசபைக்கு வந்தார்<br /><br />சென்னை, பிப்.18- தமிழக சட்டமன்ற வளாகத்திற்கு தி.மு.க. தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான கலைஞர் அவர்கள் இன்று வருகை தந்து கையெழுத்திட்டு சென்றார்.<br /><br />தி.மு.க. தலைவர் கலைஞர் சட்டசபைக்குள் வருவதற்கு வசதி ஏற்படுத்தி தரவில்லை என்று கூறி சட்டசபைக்குள் செல்லாமல் அங்குள்ள லாபியில் கையெழுத்திட்டு வருகிறார். இதேபோல் இன்று (18.2.2014) காலை 10.20 மணிக்கு கேள்வி நேரம் நடந்து கொண்டிருந்தபோது, சட்டசபை வருகை பதிவேட்டில் கையொப்பமிட காலை 10.40 மணிக்கு சட்டசபைக்கு வந்தார். அவரை வாசலில் தி.மு.க. சட்டமன்ற உறுப் பினர்கள் ஜெ.அன்பழகன், செங்குட்டுவன், சக்கரபாணி, பெரியகருப்பன், சாக்கோட்டை அன்பழகன் உள்பட எம்.எல்.ஏக்கள் வரவேற்று சட்டசபை வளாகத்துக்கு அழைத்து சென்றனர். அங்கிருந்த வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டார்.<br /><br />திமுக உறுப்பினர்கள் வெளியேற்றம்<br /><br />தமிழக சட்டப்பேரவையில் இருந்து திமுக உறுப்பினர்களை வெளியேற்றம் செய்தனர். அவையில் துரைமுருகன் சஸ்பெண்ட் குறித்து விளக்கம் கேட்க திமுக உறுப்பினர்கள் முயற்சித்தனர். திமுகவினர் பேச அனுமதி மறுக்கபட்டதால் பேரவைத் தலைவர் இருக்கை அருகில் சென்று ஒலி முழக்கமிட்டனர். ஒலி முழக்கமிட்ட தி.மு.க உறுப் பினர்கள் அனைவரும் உடனடியாக வெளி யேற்றப்பட்டனர். கூட்டத் தொடர் முழுவதும் புறக்கணிப்பு<br /><br />சட்டசபையில் இருந்து வெளியேற்றப்பட்ட பிறகு சபைக்கு வெளியே தி.மு.க. கொறடா சக்கரபாணி செய்தியாளர்களிடம் கூறியதாவது: எதிர்க்கட்சிகளே கூடாது என்ற முறையில் செயல்படுவது ஜனநாயக விரோத செயல். எங்கள் கருத்துக்களை சொல்ல அனு மதிக்காததால் இந்த கூட்டத் தொடர் முழுவதையும் தி.மு.க. உறுப் பினர்கள் புறக்கணிப்பது என்று முடிவு செய்துள்ளோம். - இவ்வாறு அவர் கூறினார்.<br /><br />புதிய தமிழகம்- ம.ம.க வெளிநடப்பு<br /><br />தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களை சட்ட மன்றத்தில் இருந்து பேரவைத் தலைவர் வெளியேற்றி யதை கண்டித்து புதிய தமிழக கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் கிருஷ்ணசாமி மற்றும் மனிதநேய மக்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் அஸ்லாம்பாஷா உள்ளிட்டோர் வெளிநடப்பு செய்தனர்.<br /><br />கலைஞர் பேட்டி<br /><br />சட்டமன்ற வளாகத்தில் வெளியேயும்- அண்ணா அறிவாலயத்திலும் செய்தியாளர்களுக்கு கலைஞர் அளித்த பேட்டி வருமாறு:-<br /><br />செய்தியாளர் :- கச்சத் தீவு இந்தியாவுக்கு சொந்தம் இல்லை என்று மத்திய அரசு மீண்டும் உச்ச நீதி மன்றத்தில் சொல்லியிருக்கிறதே?<br /><br />கலைஞர் :- அது தவறான வாதம். அதை ஏற்றுக் கொள்வதற்கு இல்லை.<br /><br />செய்தியாளர் :- தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் துரைமுருகனை பேரவையிலிருந்து அய்ந்து நாட்கள் இடை நீக்கம் செய்திருப்பது பற்றி?<br /><br />கலைஞர்:- இந்த அரசின் அவை நடவடிக்கை களில் அது ஒன்று. இந்த ஆட்சியில் இப்படித் தான் தொடர்ந்து சில முடிவுகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதிலே ஒன்று தான் இது. செய்தியாளர் :-பொதுவாக இந்த ஆட்சியில் எதிர்க் கட்சிகள் பேரவையில் பேசுவதற்கு அனுமதி தரப் படுகிறதா?<br /><br />கலைஞர்:- நீங்களே இந்தக் கேள்வியைக் கேட்டால், அதற்கு என்ன அர்த்தம்?<br /><br />செய்தியாளர் :- இன்னொரு கேள்வி?<br /><br />கலைஞர் :- கேள்வி நேரம் இங்கே இல்லை. அது அவைக்கு உள்ளே தான் நடைபெற்றுக் கொண்டி ருக்கின்றது. (கலைஞரைச் செய்தியாளர்கள் அவைக்கு வெளியே சந்தித்த போது, பேரவைக்குள் கேள்வி நேரம் நடைபெற்றுக் கொண்டிருந்தது) செய்தியாளர் :- பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரை உச்சநீதி மன்றம் விடுவித்திருப்பது பற்றி?<br /><br />கலைஞர் :- இது பற்றி என்னுடைய அறிக்கையை நான் ஏற்கெனவே வெளி யிட்டிருக்கிறேனே? செய்தியாளர் :- இவர்கள் மூவரையும் மத்திய, மாநில அரசுகள் விடுதலை செய்வதற்கான சாத்தியக் கூறுகள் இருக்கிறதா?<br /><br />கலைஞர் :- சாத்தியக் கூறுகள்என்ன, வழி வகைகள் என்ன என்பதைப் பற்றியெல்லாம் நான் ஏற்கனவே விரிவாக எழுதியிருக்கிறேன். கழக ஆட்சியின் போதும் நடத்திக் காட்டியிருக்கிறோம்.<br /><br />Read more: http://viduthalai.in/page-3/75523.html#ixzz2tj3nhlPE<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-82304591838300005302014-02-19T06:35:27.472+05:302014-02-19T06:35:27.472+05:30
காரணம்
வட நாட்டு மக்களையும், தென்னாட்டு மக்களையு...<br />காரணம்<br /><br />வட நாட்டு மக்களையும், தென்னாட்டு மக்களையும், அவர்களின் திறமை, அபிலா ஷைகளையும் புரிந்து கொள்ள முடியாத வாறு பார்ப்பனர்கள் சூழ்ச்சி செய்து கொண்டே வந்திருக்கிறார்கள். பத்திரிகை கள் என்ற ஒரே ஆயுதம் அவர்களிடம் சிக்கிவிட்டிருப்பதே அதற்குக் காரணம். - (விடுதலை, 28.8.1963)<br /><br />Read more: http://viduthalai.in/page-2/75495.html#ixzz2tj3MeHR5<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-67189386715022350522014-02-19T06:33:46.579+05:302014-02-19T06:33:46.579+05:30
ஹாட்ரிக்
சென்னை - சேத்துப்பட் டில் உள்ள விநாயகர...<br /><br />ஹாட்ரிக்<br /><br />சென்னை - சேத்துப்பட் டில் உள்ள விநாயகர் கோயி லில் உண்டியல் மூன்றாவது முறையாக உடைக்கப்பட்டு, பணம் கொள்ளையடிக்கப் பட்டு உண்டியல் முட் புதரில் வீசி எறியப்பட்டது.<br /><br />நம்பித் தொலையுங்கள்!<br /><br />நடக்கவிருக்கும் நாடா ளுமன்றத் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்று இதுவரை இந்துமுன்னணி முடிவு செய் யவில்லையாம் - சொல்லு கிறார் அதன் மாநில அமைப் பாளர் ராம. கோபாலன்.<br /><br />யாத்திரை<br /><br />யாத்திரை என்று சொன் னாலே அத்வானியின் ர(த்)த யாத்திரைதான் நினைவிற்கு வந்து தொலைகிறது (சோம நாதபுரத்திலிருந்து அந்த யாத்திரையைத் தொடங்கிய போதே அதன் உள்நோக்கம் புரிந்தது. யாத்திரை சென்ற இடங்களில் எல்லாம் மதக் கலவரங்கள்! இப்பொழுது தமிழ்நாட்டிலே காந்தியாரை படுகொலை செய்த கூட்டத் தின் வாரிசுகள் ஒரு யாத் திரையைத் தொடங்கி உள் ளனர். வீடுதோறும் மோடி, உள்ளம் தோறும் தாமரை என்று அதற்குப் பெயராம்.<br /><br />இதன் பொருள் இல்லம் தோறும் மதவெறியூட்டல் - உள்ளம்தோறும் மனுதர்மச் சிந்தனைக்குப் புத்துயிர் ஊட்டல்! தந்தை பெரியார் மண்ணில் இவுர்களின் சித்து விளையாட்டுகள் பலிக்கப் போவதில்லை பலிக்கவும் விடமாட்டோம்!<br /><br />தப்புத்தாளம்<br /><br />சென்னை அண்ணா சதுக்கம் - பூவிருந்தவல்லி செல்லும் வழித்தடம் எண் 25ஜி பேருந்து நேற்று பிற்பகல் 2.30 மணிக்கு வந்து கொண்டிருந்தபோது தனி யார்க் கல்லூரி மாணவர்கள் பேருந்தில் ஏறி, தாளம் போட்டு, பாட்டுப்பாடி ஆபாச வார்த்தைகளை அள்ளிக் கொட்டினார்கள் நடத்துநர் பாண்டியன் அவ் வாறு செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொண்ட போது நடத்துநரை மாண வர்கள் தாக்கியுள்ளனர்.<br /><br />மாணவர்களே, நீங்கள் எல்லாம் படித்துப் பட்டம் பெற்று வேலைக்குச் சென்று சம்பாதித்து நம்மைக் காப் பாற்றுவார்கள் என்று ஒவ் வொரு நொடியும் கனவு கண்டு கொண்டிருக்கும் பெற்றோர்களின் தலையில் மண்ணை அள்ளிப் போட்டு விடாதீர்கள்.<br /><br />நம் இனத்து மக்கள் எல்லாம் கல்வி உரிமை பெற்று, உத்தியோகப் படிக்ககட்டுகளில் மதிப்புப் பெற வேண்டும் என்பதற்காக அயராது பாடுபட்டாரே தந்தை பெரியார். பாடுபட்டுக் கொண்டிருக் கிறதே திராவிடர் கழகம் அவர்களின் எதிர்ப்பார்ப்பு களைப் பொய்த்துப் போகச் செய்ய வேண்டாமே! நீங்கள் போடுவது தாளமா? அல்ல அல்ல - தப்புத் தாளம்!<br /><br />கா(ம)ள கஸ்தி!<br /><br />காளகஸ்தி கோயிலில் சாமி கும்பிடச் சென்ற பக்தையை பக்தர்கள் பாலியல் தொல்லை கொடுத்ததால் அவர்கள் கைது செய்யப்பட் டுள்ளனராம். கோயில்களை விபச்சாரக்கூடம் என்று காந் தியார் சொன்னது தவறாகி விடக் கூடாதல்லவா! காஞ் சிபுரம் தேவநாதன்கள் நாட் டில் இன்னும் நடமாடிக் கொண்டுதான் இருக்கிறார் கள். என்பதற்கு மேலும் இது ஓர் எடுத்துக்காட்டே!<br /><br />Read more: http://viduthalai.in/e-paper/75492.html#ixzz2tj2v6Ocw<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-33172039026423170822014-02-19T06:33:00.977+05:302014-02-19T06:33:00.977+05:30
கோயில் வழிபடுவதற்காகவா? கொலை செய்யப்படுவதற்காகவா?...<br />கோயில் வழிபடுவதற்காகவா? கொலை செய்யப்படுவதற்காகவா?<br /><br /><br />உதகை, பிப்.18- உதகை அருகேயுள்ள நஞ்ச நாடு கிராமத்தில் அமைந் துள்ள கோவிலில் முதலில் யார் வழிபாடு நடத்துவது என்ற பிரச்னையில், இரு வர் வெட்டிக் கொல்லப் பட்டனர். இதுதொடர்பாக அந்தக் கிராமத்தைச் சேர்ந்த 21 பேர் கைது செய்யப்பட் டுள்ளனர். உதகை அருகே உள்ளது நஞ்சநாடு கிராமம். இக் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அங்கு பூர்வீகமாக வசித்து வருவோர் எனவும், இக் கிராமத்திற்கு வெளிப் பகுதி களிலிருந்து வந்து குடி யேறியவர்கள் எனவும் இரு பிரிவினராக அழைக்கப் பட்டு வந்தனர். இந் நிலையில், நஞ்ச நாடு கிராமத்திலுள்ள சிவன் கோவில் யாருக்கு என்பதிலும் பல ஆண்டு களுக்கு முன்பிருந்தே பிரச் சினை இருந்து வருகிறது.<br /><br />இந் நிலையில், நஞ்சநாடு கிராமத்திலுள்ள கோவி லில் வழிபாடு நடத்துவது தொடர்பாக ஒரு பிரிவினர் சென்னை உயர் நீதிமன்றத் தில் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் இரு பிரி வினருக்கும் பூஜை செய்வ தற்காக காலை மற்றும் மாலை நேரங்களில் தனித் தனியாக நேரம் ஒதுக்கப் பட்டிருந்தது. ஆனால், இதை அந்தக் கிராமத்தில் வசித்துவரும் பிரதான மக்கள் ஏற்றுக்கொள்ள மறுத் துள்ளனர். இச்சூழலில் நஞ்சநாடு கிராமக் கோவிலில் வழி பாடு நடத்துவதற்காக ஒரு பிரிவினர் பெற்றிருந்த உத் தரவின் அடிப்படையில், மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்டக் காவல் கண் காணிப்பாளரிடம் உத்தரவு கேட்டும், நஞ்சநாடு கிராமத்திலுள்ள கோவி லின் பொறுப்பாளராக உள்ள செயல் அலுவல ரிடம் அனுமதி பெற்றும் திங்கள்கிழமை காலையில் ஒரு பிரிவினர் பூஜை நடத் தவுள்ளதாக அறிவிக்கப் பட்டிருந்தது. இந் நிலையில், இப் பூஜைக்கு எதிர்ப்புத் தெரி வித்த ஒரு பிரிவினர் ஞாயிற் றுக்கிழமை இரவு பேச்சு வார்த்தைக்கு அழைப்ப தாகக் கூறி, ஒரு சிலரை தாங்கள் கூடியிருந்த இடத் திற்கு வரவழைத்து தாக் கினார்களாம்.<br /><br />இதில், ஆனந்த் (34) மற்றும் ராஜன் (44) ஆகியோர் உயிரிழந் தனர். இதையடுத்து அப்பகு தியில் பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட் டது. இதுகுறித்து அறிந்த மாவட்ட ஆட்சியர் பி.சங் கர் மற்றும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டோரிடம் பேச்சு நடத்தினர். அப்போது, இப் பிரச்சினை தொடர்பாக இருவர் வெட்டிக் கொல் லப்பட்டதாகவும், 10-க்கும் மேற்பட்ட வீடுகள் தீவைத் துக் கொளுத்தப்பட்டதாக வும் புகார்கள் தெரிவிக்கப் பட்டன. இது தொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் தெரிவித்தார். கோவை சரக காவல் துணைத் தலைவர் கணேச மூர்த்தி உத்தரவின்படி நீலகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செந்தில் குமார் தலைமையிலான நீலகிரி, கோவை, ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட் டங்களைச் சேர்ந்த காவல் துறையினர் பாதுகாப்பு பணி களில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.<br /><br />Read more: http://viduthalai.in/e-paper/75494.html#ixzz2tj2kjBQ2<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-17113339926680685672014-02-19T06:32:32.044+05:302014-02-19T06:32:32.044+05:30
சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் வாழ்க!
தந்தை பெரி...<br />சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் வாழ்க!<br /><br /><br />தந்தை பெரியாரின் உற்ற தோழராகவும், கொள்கைப் பயணத்தில் சக பயணாளி களில் ஒருவருமான சிந் தனைச் சிற்பி. ம. சிங்கார வேலர் அவர்கள், சுயமரி யாதை சமதர்மத்தைச் செதுக் கிய அரும்பெரும் சிந்தனை யாளர் ஆவார்!<br /><br />பச்சை அட்டைக் குடி அரசு ஏட்டில் தகத்தகாய பொன்னாக ஒளி வீசும் - கைவல்யம் அவர்களின் சிந்தனைப் பொறியைத் தீட்டும் கட்டுரை ஒருபுறம்.<br /><br />சிங்காரவேலரின் பொதுவுடைமை, சமதர்ம, மூடநம்பிக்கைகளை எதிர்த்த, அறிவியல் ஆய்வு வெளிச்சத்தைப் பாய்ச்சிடும், காலத்தை வென்ற கருத் துக்கள் மறுபுறம் என்பது சுயமரியாதை இயக்க வரலாறு, பிரபல கம்யூனிஸ்ட் பேராசிரியரும் சிறந்த நாடாளுமன்றவாதியுமான பேராசிரியர் ஹிரேன் முக்கர்ஜி அவர்கள் எழுதிய ஒரு நூலில், இன்னும் 500 ஆண்டுகளுக்குப் பிறகும் கூட இந்திய வரலாற்றில் பேசப்படும் இருபெரும் இந்தியத் தலைவர்கள் தந்தை பெரியாரும், ம. சிங்காரவேலரும் தான் என்று சரியாகக் கணித்து எழுதியுள்ளார்கள். அவரது 155ஆவது பிறந்த நாளான இன்று அவரது சிந்தனைகளை செயலாக்கிட, ஒத்தக் கருத்துள்ளவர்கள் ஓரணியில் திரண்டு ஜாதி, மத, கடவுள் மூடநம்பிக் கைகளை முறியடித்து, புதிய உலகம் காண்போமாக!<br /><br /><br />கி.வீரமணி<br />தலைவர்,<br />திராவிடர் கழகம்<br /><br />18.2.2014<br /><br />சென்னை<br /><br />Read more: http://viduthalai.in/e-paper/75493.html#ixzz2tj2d5kEn<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-82213007682749459042014-02-18T07:00:04.560+05:302014-02-18T07:00:04.560+05:30ஊரைக்காலி செய்த கொடூரம்
12 நவம்பர் 1998-ஆம் ஆண்டு...ஊரைக்காலி செய்த கொடூரம்<br /><br />12 நவம்பர் 1998-ஆம் ஆண்டு நடந்த ஒரு கொடூரத்திற்கு பார்வையற்ற சகோதரர் இருவர் இன்றும் சாட்சியாக உள்ளனர். அயோத்தியா நகரத்திற்கு 8 கி. மீட்டர் தொலைவில் அமைந்துள்ள குப்தார் காட் என்ற மீனவர் கிராமத்தில் இரவு 10 மணி அளவில் சுமார் பத்திற்கும் மேற்பட்ட சாதுக்கள் நுழைந்தனர். மீனவர் கிராமத்தில் கட்டப்பட்டு இருந்த ஆடுமாடுகளை அடித்து விரட்ட ஆரம்பித்தனர். சத்தம் கேட்டு தூக்கத்தில் இருந்து எழுந்த மக்கள் பார்த்த காட்சி, சாதுக்கள் கையில் துப்பாக்கி மற்றும் வாள்களுடன் அனைவரையும் மிரட்டிக்கொண்டு இருந்தனர். கூட்டத்தில் நின்று கொண்டு இருந்த லாலாஜி நிஷாத் மற்றும் ராம் ஜி நிசாத் இருவரையும் கூட்டத்திற்குள் புகுந்து இழுத்து வந்தனர். அவர்களை விட்டுவிடச் சொல்லி அவர்களின் 13 வயது தங்கை சாமியார்களின் காலில் விழுந்து கதறியது. உடனே சில சாமியார்கள் அந்தக் கூட்டத்தின் முன்பே அச்சிறுமியின் ஆடைகளைக் களைந்தனர். இதனிடையே என்ன நினைத்தார்களோ என்னவோ, ஒரு சாமியார் சிறுமியின் கைகளைக் கத்தியால் வெட்டியபிறகு தலையில் துப்பாக்கியால் சுட்டுவிட்டார். இதில் சம்பவ இடத்திலேயே அந்தச் சிறுமி மரணமடைந்தார்.<br /><br />இந்தக் கொடூரங்களைக் கண்டு சிறிதும் கலங்காத சாமியார்கள் இரண்டு சகோதரர்களின் ஒவ்வொரு கண்ணைத் தோண்டி எடுத்து தரையில் வீசிவிட்டுச்சென்றனர். இதில் ராம்ஜி நிசாத்தின் பார்வை பறிபோனது. லாலாஜியின் ஒரு கண் பார்வை மட்டும் இருந்தது. ஏன் நடந்தது? யஞ்யசாலா பஞ்சமுகி கோவிலின் தலைமைச் சாமியாரான மணிபாபா தலைமையில் சம்பவம் நடந்த சில நாட்களுக்கு முன்பு எங்கள் கிராமத்திற்கு வந்த சாமியார்கள் இது எங்கள் மடத்திற்குச் சொந்தமான பூமி ஆகையால் நீங்கள் விரைவில் இந்த இடத்தைக் காலிசெய்து விட்டுச் செல்லுங்கள் என்று கூறினார்கள். இந்தச் சம்பவத்தை அடுத்து நாங்கள் அனைவரும் மாஜிஸ்ட்ரேட்டிடம் புகார் செய்தோம். பாதிக்கப்பட்ட சகோதரர்கள் சாமியாரின் மீது காவல்துறையில் புகார் செய்தனர். இதனடிப்படையில் காவலர்கள் பஞ்சமுகி கோவிலுக்குச் சென்று அங்கிருந்த சில சாமியார்களைக் கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். இந்தச் சம்பவத்தினால் கோபமடைந்த சாமியார்கள், சகோதரர்கள் இருவரின் கண்களையும் நோண்டி எடுத்தனர். அவரது சகோதரியையும் கொலை செய்தனர். இது குறித்து காவல்துறை வழக்குப் பதிவு செய்து 6 சாமியார்களைக் கைது செய்தது. அவர்களும் சிறிது காலம் சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்தனர். தொடர்ந்து நடந்த வழக்கில் அந்த 6 சாமியார்களுக்கும் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. தீர்ப்பை அறிந்துகொண்ட சாமியார்கள் மடத்திலிருந்து தலைமறைவாகிவிட்டனர். அவர்கள் இன்றுவரை காவல்துறையினரிடம் சிக்கவில்லை என்பதே அங்கிருப்போரின் பதில். ராமஜென்ம பூமி இவ்வளவு வன்முறை நிறைந்ததா? அப்படி என்றால் அங்கு சட்டம் ஒழுங்கு என்று ஒன்றும் கிடையாதா? அது இந்தியா சட்டவிதிகளுக்கு உட்பட்ட நகரமில்லையா என்ற கேள்வி எழலாம். என்ன செய்ய, அது ராமர் ராஜ்யம் செய்த ஊராமே! காவல்துறை அங்கு உண்டு.<br /><br />ஆனால் அவர்களின் கரங்கள் அரசியல்வாதிகளால் கட்டுப்போடப்பட்டுள்ளன. ஊடகங்கள் அயோத்தி சாமியார்கள் பற்றி எழுதுவதில் மிகவும் கண்ணியமானவை. இவ்வளவு நடந்தும் எந்தச் செய்தியும் அயோத்தியை விட்டு வெளியில் தெரியாதவாறு செய்துவிடுவார்கள் அப்படியே ஒன்றிரண்டு செய்தி வெளியேறினாலும் இருக்கவே இருக்கிறது பாகிஸ்தான், இங்கு நடந்த பல சம்பவங்கள் ஊடகங்களால் வெளிஉலகிற்குத் தெரிந்தவுடன், உடனடியாக பாகிஸ்தானின் அய்.எஸ்.அய்.-யின் கரம் இதில் உள்ளதென்று செய்தி பரப்பி விசயத்தை மூடிவிடுவார்கள். அரசியல் தலையீடு மற்றும் அதிகாரமையம் முழுவதும் சாதுக்கள் மீது எந்த ஒரு களங்கமும் வராமல் அவர்கள் எந்தத் தவறுகள் செய்தாலும் அதை மூடி மறைத்துக் கொண்டு வருகிறது. இது அசிங்கத்திற்கு அத்தர் பூசி ஊர்வலம் கொண்டு வருவது போல் ஆகும். அயோத்தியில் காவி உடையில் திரியும் குண்டர்களின் செயல்களில் நாங்கள் அறிந்தது சிறு பகுதியே. முக்கியமாக எவரும் அவ்வளவு சமானியத்தில் செய்திகளைத் தர முன்வரவில்லை. இறுதியாக சராயு நதிக்கரையில் ஒரு சாமியாரிடம் இது பற்றிக் கேட்ட போது அவர் ரவிதாஸ் கவிதையில் இருந்து சில வரிகளை மாத்திரம் கூறி விலகினார். பாவம் அவர் பாதிக்கப்பட்ட சாமியார் போலும். பொய்யர்கள் மாத்திரம்தான் வேடமிடுவார்கள், சாமியார்கள் வேடம் என்றும் பாதுகாப்பானது. ஆனால் உண்மை முகம் மறைக்கப்படுவதுமில்லை _ மறைவதுமில்லை. நாளை என்று ஒன்று வரும். அப்போது உண்மை வெளிவரும். ஆனால், மூடர்கள் வாழும் ஊரில் உண்மை வெட்கப்பட்டு ஓடிவிடும்.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-37815693246816419042014-02-18T06:59:59.481+05:302014-02-18T06:59:59.481+05:30சாமியார்களும் ஜாதியும்
அயோத்தியில் பார்ப்பனர்கள்,...சாமியார்களும் ஜாதியும்<br /><br />அயோத்தியில் பார்ப்பனர்கள், தாக்கூர் மற்றும் யாதவ் ஜாதிகளைச் சேர்ந்த பூசாரிகள் அதிகம் உள்ளனர். இதில் பல்வேறு மடத்தில் உள்ள சீடர்கள் தங்கள் ஜாதி சாமியார்களுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பார்கள். -ஜாதிப் பிரச்சினைகள் எழுந்தால் மொத்தமாகப் போய் தாக்குதல் நடத்தவும் தங்கள் ஜாதிச் சாமியார்களை ஒன்று கூட்டி கலகம் செய்யவும் ஆரம்பிப்பார்கள். நமது ஊரில் ஜாதிச் சங்கங்கள் போல் அங்கு ஜாதிமடங்களும் உண்டு. அதில் சில பெயர் நாவூ கோவில், பதாயி கோவில், விஷ்வகர்மா கோவில், சந்த ரவிதாஸ் கோவில், ஹல்வாயி கோவில், தோபி கோவில், திரிகுப்த கோவில் என தங்கள் ஜாதிக்களுக்கு என கோவில்களை உருவாக்கி அதற்கு மடங்களையும் உருவாக்கி விடுகின்றனர். இவர்களுக்கு அந்த அந்த ஜாதியைச் சேர்ந்த மக்களும் அங்கே சென்று தங்களுடைய காணிக்கைகளைச் செலுத்துகின்றனர். வேறு ஜாதிக்காரர் கோவிலுக்குச் சென்று காணிக்கையோ வழிபாடோ நடத்தினால் தண்டனையுடன் அபராதமும் விதிக்கும் பழக்கமும் அயோத்தியில் உண்டு. ஒரு ஜாதிக்குள் உள்ள பிரிவினருக்குள்ளும் வெட்டுகுத்துக்கள் வந்ததுண்டு. இது குறித்து தெகல்ஹா இதழுக்கு சாதுக்கள் அளித்த பேட்டியில், ஒருவர் வங்காள பூம்ஹாரராக (பிற்படுத்தப்பட்ட ஜாதிப்பிரிவு) இருந்தால் எங்களுக்கு அவர் சமமாக மாட்டார், நாங்கள் பிகார் மாநிலத்தைச் சேர்ந்த தூய பூம்ஹார், அவர்களோ பஹோரா பூம்ஹார்(கலப்பில் பிறந்தவகளாம்). ஆகையால் ஒரே ஜாதியாக இருந்தாலும் அவர்களை நாங்கள் சேர்த்துக்கொள்வதில்லை. எங்களிடம் வரும் பக்தர்களை போலியான ஜாதிப்பெயர் கூறி அவர்கள் பக்கம் இழுத்தால் நாங்கள் அவர்களைக் கொலை செய்யக்கூடத் தயங்கமாட்டோம் என்று தங்கள் ஜாதிப் பற்றைப் பறைசாற்றியுள்ளனர்.<br /><br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-64612525959185858322014-02-18T06:59:44.451+05:302014-02-18T06:59:44.451+05:30மனநிலை சரியில்லாமல் காணாமல் போன சுதர்ஷணாச்சார்யாவி...மனநிலை சரியில்லாமல் காணாமல் போன சுதர்ஷணாச்சார்யாவின் சகோதரர் தலைமைப் பொறுப்பேற்க ஹரித்துவாரில் இருந்து திரும்பி மடத்தைக் கவனித்து வந்தார். மடத்தைப் புதுப்பிக்கும் பணியைத் தொடங்கினார். வேலைக்காரர்கள் கழிப்பறைத் தொட்டியைச் சுத்தம் செய்தபோது, அது மண் கொண்டு நிரப்பப்பட்டிருப்பது கண்டு திகைத்தனர். மணலைச் சிறிது அகற்றிய போது சில எலும்புகள் மணலுடன் வெளியே வந்தன. இதனை அடுத்து காவல்துறைக்குத் தகவல் கொடுக்க, காவல்துறையினர் முன்னிலையில் மணலை அகற்ற இரண்டு நபர்களின் எலும்புக்கூடுகள் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் தோண்டி எடுக்கப்பட்டது. அதில் ஒன்று சுதர்ஷணாச்சார்யா, மற்றொன்று ஒரு இளம்பெண்ணின் எலும்புக்கூடு. இந்தச் சம்பவம் நடந்த சில நாட்களில் மத்தியபிரதேசம் சம்பல் மாவட்டத்தில் உள்ள ஒரு கோவிலில் தங்கி இருந்த ஜித்தேந்திர தாஸை காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஜித்தேந்திரதாஸ் விசாரணையில், முக்ஷி பவனில் உள்ள தங்கம் மற்றும் ரொக்கப்பணத்தின் மீது நீண்ட நாட்களாக ஒரு கண் இருந்தது. இதற்காகத் திட்டமிட்டு, பனாரசில் இருந்து கூலிக்கு ஆட்களை வரவழைத்து தக்க சமயத்திற்காகக் காத்திருந்தேன். சுதர்ஷணாச்சார்யா தனது சிஷ்யையுடன் தனிமையில் இருந்த போது இரகசியமாக அவரைக் கொலை செய்தேன். சாட்சியாக இருந்த சிஷ்யையையும் கொலை செய்தேன். செப்டிக்டாங்கில் இருவரின் பிணங்களையும் வெட்டிப்போட்டு அதில் மணலை நிரப்பி மூடிவிட்டேன். மறுநாள் மனநிலை சரியில்லாததால் காணாமல் போனதாக கதைவிட்டேன் என வாக்குமூலம் கொடுத்தான்.<br /><br />அயோத்தியில் உள்ள சாதுக்கள் பற்றி பைசாபாத் வழக்குரைஞர் ரஞ்சீவ் வர்மா, பைசாபாத் நகர நீதிமன்றத்தில் 90 விழுக்காடு வழக்குகள் சாமியார்கள் பற்றியே உள்ளன. இங்குள்ள அனைத்து மடங்களும் ஏதாவது ஒரு வழக்கில் தொடர்புடையதாகவே உள்ளன. சீடர்கள் மீது கொலைவழக்கு மற்றும் பாலியல் தொடர்பான வழக்குகள் என்றால் மடத்தலைவர்கள் மீது நில அபகரிப்பு, அடியாட்களை வைத்து மிரட்டுதல் போன்ற வழக்குகள் உள்ளன என்று கூறியுள்ளார்.<br /><br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-12190078639267337882014-02-18T06:59:28.312+05:302014-02-18T06:59:28.312+05:30அம்மண சாமியார்கள்
அயோத்தியில் நடக்கும் குற்றங்களி...அம்மண சாமியார்கள்<br /><br />அயோத்தியில் நடக்கும் குற்றங்களில் அம்மண சாமியார்களின் பங்கு அதிகம். சுமார் எழுநூற்றுக்கும் அதிகமான நாகா சாதுக்கள் இங்கு தங்கி இருக்கின்றனர். பொதுவாக இந்த மடாலயத்தில் உள்ள சாதுக்கள் அனைவருமே தங்களை மடாலயத்தின் தலைவராகவே கருதிக்கொண்டு இருக்கின்றனர். அப்படியென்றால் அந்த மடாலயத்தின் நிலை எப்படி இருக்கும் என்று கற்பனை செய்துகொள்ளுங்கள். இந்த மடாலயத்தின் தலைவராக இருந்த ஹரிபஜன் தாஸ் சாமி, 1984-ஆம் ஆண்டு சக சாமியார்களால் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். அவரது கொலைக்குப் பிறகு தற்காலிகமாக மஹந்த் தீன் பந்து தாஸ் என்பவரை நியமித்தார்கள். அதன் பிறகு இரண்டு குழுவாகப் பிரிந்து நாகா சாதுக்கள் தங்களுக்குள் தாக்கிக்கொள்ள ஆரம்பித்தனர். பல முறை இந்தத் தாக்குதல்கள் தொடர்ந்து நடக்க தற்காலிக மடாலயத் தலைவர் உயிர் பயத்தில் மடத்தைவிட்டு வெளியேறி தலைமறைவு வாழ்க்கை வாழ்கிறார். 1995-ஆம் ஆண்டு நாகா சாது நவீன் தாஸ் என்பவன் தன்னுடைய 4 கூட்டாளிகளுடன் சேர்ந்து கோவில் வளாகத்திலேயே ராமஜா தாஸ் என்ற நாகா சாதுவைக் கொலை செய்துவிட்டான். 2005-ஆம் ஆண்டு நாகா சாதுக்கள் தங்களுக்குள் பயங்கர ஆயுதங்களுடன் மோதிக் கொண்டனர். இதில் பல நாகா சாதுக்கள் படுகாயமடைந்தனர். 2010-ஆம் ஆண்டு ஹர்பஜன் தாஸ் மற்றும் பஜ்ரங் தாஸ் என்ற இரண்டு நாகா சாதுக்கள் கோவில் வளாகத்தில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.<br /><br />ரவுடி பாபா<br /><br />ஹனுமான் காடியில் பிரஹலதாஸ் என்பவன் அங்குள்ள மக்களால் ரவுடிபாபா என்று செல்லமாக அழைக்கப்படுகிறான். இவன் மீது பல கொலைவழக்குகள் உள்ளன. இதன் காரணமாக இரண்டு முறை இவன் மீது நகர மாஜிஸ்ட்ரேட் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய ஆணையிட்டார். ஆகையால் இவர் மக்களிடையே ரவுடி சாமியார்(குண்டாபாபா) என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்பட்டார். இவரும் 2011-ஆம் ஆண்டு எதிர்க் குழுவினரால் கழுத்தை அறுத்துக் கொலை செய்யப்பட்டார். காவல்துறையால் சுட்டுக்கொல்லப்பட்ட சாமியார்களின் பெயர்கள்<br />சாது ஹரி நாராயந்தாஸ், சாது ராம் சங்கர் தாஸ், சாது ராம் பிரகாஷ் தாஸ் போன்ற பிரபல ரவுடி சாமியார்கள் காவல்துறையின் துப்பாக்கி ரவைக்குப் பலியானார்கள். இவர்கள் அனைவரும் பல கொலை கொள்ளை வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. பைசாபாத் நகர காவல்துறையின் கணக்கின்படி 2001-லிருந்து 2012 வரை சுமார் 200-க்கும் மேற்பட்ட சாமியார்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் காவல்துறையுடனான நேரடி மோதலில் ஈடுபட்டு சுட்டுக் கொல்லப்பட்டனர். சாமியார்களின் துப்பாக்கி ரவைக்குப் பலியான காவலர்களும் இந்தப் பட்டியலில் உண்டு.<br />பதவி ஆசை+பொருளாசை=கொலை<br /><br />2007-ஆம் ஆண்டு அயோத்தியாவையே அதிர வைத்த ஒரு சம்பவம் இருக்கிறது. மோக்ஷமுக்தி(முக்ஷி)பவன் என்ற மடத்தின் மடாதிபதி சுதர்ஷணாச்சார்யா என்பவர் திடீரென காணாமல் போய்விட்டார். பல மாதங்கள் தேடியும் அவர் கிடைக்கவில்லை. அவர் மனநிலை சரியில்லாதவர், ஆகையால் எங்காவது ரயிலேறிச் சென்றுவிடுவார். இம்முறையும் அப்படி ஆகிவிட்டது என்று கூறி மடத்தின் தலைமைப் பொறுப்பை ஜித்தேந்திர தாஸ் என்பவர் ஏற்றுக் கொண்டார். தலைமைப் பொறுப்பை ஏற்ற சில வாரங்களில் கோவிலின் தங்க நகை மற்றும் சுமார் 8 லட்சம் ரொக்கத்துடன் காணாமல் போய்விட்டார்.<br /><br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-87603009453736560292014-02-18T06:59:09.815+05:302014-02-18T06:59:09.815+05:30
வல்லவனுக்கு வல்லவன் வையத்தில் உண்டு என்ற முதுமொழி...<br />வல்லவனுக்கு வல்லவன் வையத்தில் உண்டு என்ற முதுமொழிக்கேற்ப நிருத்திய தாஸ் மீது அவருடைய பகைவர்கள் தாக்குதல் நடத்தினர். 2001 மே 12ஆம் தேதி பிரபல அரசியல் தலைவரின் சந்திப்பிற்கு முதல் நாள் அதிகாலை அய்ந்து மணியளவில் தனது பாதுகாவலர்களுடன் நதிக்கரையில் குளித்துக்கொண்டு இருந்த நிருத்திய கோபால் தாஸ் மீது நாட்டுவெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் பலத்த காயமடைந்த நிருத்திய கோபால் தாஸ் மற்றும் அவரது சீடர்களில் இரண்டு பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். மறுநாள் பிரபல அரசியல்வாதி மருத்துவமனையில் சந்தித்துவிட்டு வெளியில் வந்ததும் பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதிகள் நிருத்திய கோபால் தாஸ்மீது தாக்குதல் நடத்தியதாக பொய்யான செய்தியை பத்திரிகையாளர்களிடம் கூறி சம்பவத்தைத் திசை திருப்பிவிட்டார். இந்தத் தாக்குதல், அர்த்தாத் சாது சமாஸத்தில் இருந்து விரட்டப்பட்ட தேவ்ராம் தாஸ் வேதாந்திரி என்ற சாமியாரின் சதித்திட்டம் என்று கூறப்படுகிறது. இந்த வேதாந்திரி சாதுவை சமாஸத்தில் இருந்து துரத்திவிட்டவர் நிருத்திய கோபால் தாஸ் தான். இந்தச் சம்பவத்திற்குப் பழிக்குப் பழிவாங்கும் விதமாக இந்த வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. வேதாந்திரி தாஸ் என்ற சாமியாரை போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக தேடிவந்த போலீசார் 1995-ஆம் ஆண்டு 13 வயது பெண்ணுடன் தனிமையில் பாகல்ப்பூர்(பிகார்) நகரில் உள்ள ஓட்டல் ஒன்றில் வைத்து கைது செய்தனர்.<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-56215251853416960932014-02-18T06:58:53.949+05:302014-02-18T06:58:53.949+05:30சுமார் 5 தலைமுறைகளாக வாழ்ந்த பங்களாவை அபகரித்த மகா...சுமார் 5 தலைமுறைகளாக வாழ்ந்த பங்களாவை அபகரித்த மகான் குறித்து மற்றொரு திடுக்கிடும் செய்தியும் உண்டு. மணிராம்தாஸ் என்ற புகழ்பெற்ற மடாதிபதியின் பிந்து சரோவர் கோவில் தொடர்பானது. மணிராம் தாஸின் முக்கிய சீடர்களில் ஒருவரான திரிவேணி தாஸ் என்பவருக்கும் நிருத்திய கோபால் தாஸுக்கும் பிந்து சரோவர் கோவில் நிலம் தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டு கைகலப்பில் முடிந்தது. இந்தச் சம்பவம் காவல்துறை தலையீடு வரை சென்றுவிட்டது. காவல்துறை இருவருக்கும் சமரசம் செய்துவைத்தது. சில நாட்கள் கழித்து திரிவேணி, சராயு நதிக்கரை ஓரத்தில் தலை முற்றிலும் நசுங்கிய நிலையில் பிணமாக கிடந்துள்ளார். காவல்துறையும் அதிகாலையில் குளிக்க வரும் போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்துவிட்டார் என்று கூறி வழக்கை முடித்துவிட்டது. ஆனால் அந்தச்சாலையில் டிராக்டர் கூட மிகவும் மெதுவாகத்தான் செல்ல முடியும். இது திட்டமிட்ட கொலை என்று பலரும் கூறுகின்றனர். இந்தக் கொலைக்குப் பின்னால் நிருத்திய கோபால் தாஸின் சதித்திட்டம் உள்ளது என அனைவருக்கும் தெரியும். ஆனால் யாரும் அவருக்கு எதிராக புகார் கொடுக்கத் துணிவதில்லை. என்ன செய்ய சாமியார்களுக்கும் உயிராசை!? கத்தி எடுத்தவன் கத்தியால்....<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-12370448758838673302014-02-18T06:58:30.725+05:302014-02-18T06:58:30.725+05:30நிருத்திய கோபால் தாஸ்
ராம ஜென்மபூமி சமிதி தலைவர் ...நிருத்திய கோபால் தாஸ்<br /><br />ராம ஜென்மபூமி சமிதி தலைவர் ராமச்சந்திர பரமஹம்சரின் ஆலோசகரும் துணைத்தலைவருமான நிருத்திய கோபால் தாஸ் என்ற சாமியார் பெயரிலும் பல குற்றவழக்குகள் உள்ளன. தன்னுடைய பெயரைக் குறிப்பிட விரும்பாத ஒரு மடத்தின் தலைவர் கூறியபோது, நிருத்திய கோபால் தாஸ், சாமியார் அல்ல; ஒரு காலத்தில் கல்கத்தாவில் பல குற்றச்செயல்களைப் புரிந்த பயங்கரமான குற்றவாளி. குற்றவாளிகளை போலீசாரின் பிடியில் இருந்து விடுவிப்பது, மடத்தின் சொத்துக்களை போலிப் பத்திரங்கள் மூலம் விற்பது மற்றும் சாதுக்களுக்குப் பெண்களை அனுப்புவது போன்ற காரியங்களைச் செய்து வருகின்றான். இவன் கண்ணில் ஒரு இடம் தென்பட்டுவிட்டால் அதை வாங்கியே தீருவான். அதைக் கொடுக்க மறுத்தால் இறுதியாக அந்த இடத்தின் உரிமையாளர்களைக் கொலை செய்யும் அளவிற்குச் சென்றுவிடுவான். இப்படியே பல இடங்கள் மடங்களாக மாற்றப்பட்டு அவனுடைய சொத்துக்களாக மாறிவிட்டன என்றார்.<br />எழுத்தாளர் சாரதா துபே தன்னுடைய புத்தகமான போட்டரஸ் ஆப் அயோத்தியாவில், அயோத்தியா நகரில் உள்ள பிரமோத் வனம் பகுதியில் பழைய கால ஆடம்பர பங்களா ஒன்று இருந்தது. அங்கு இருந்தவர்கள் சுமார் 5 தலைமுறைகளாக அங்கு வசித்து வந்தார்கள். ஒரு முறை தற்செயலாக அந்தப் பகுதிக்குச் சென்ற நிருத்திய கோபால் தாஸ் பார்வையில் அந்த பங்களா பட்டது. அந்த நிமிடமே காரில் இருந்து இறங்கி அந்த பங்களாவை வாங்குவது குறித்து வீட்டு உரிமையாளரிடம் பேசினார். ஆனால், தலைமுறை தலைமுறையாக இங்கு வசித்து வருகிறோம். இதை விற்க முடியாது என்று உரிமையாளர் கூறிவிட்டார். பலமுறை தானே நேரடியாக வந்து கேட்டுவிட்டார். இறுதியாக, 2008ஆம் ஆண்டு அந்த வீட்டின் உரிமையாளர் அடையாளம் தெரியாத 8 நபர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டார். நீண்ட நாட்களாக மருத்துவமனையில் இருந்த பிறகு இறுதியில் அவர்கள் குடும்பத்துடன் எங்கு சென்றார்கள் என்றே தெரியவில்லை, தற்போது அந்த பழங்கால மாளிகை நிருத்திய கோபால் தாஸின் உல்லாச மாளிகையாக மாறிவிட்டது என்று தனது நூலில் எழுதியுள்ளார்.<br /><br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-61363922430148091562014-02-18T06:58:14.462+05:302014-02-18T06:58:14.462+05:30அகில பாரதிய வினர்ய மற்றும் சாமியார்கள் சங்கம் என்ற...அகில பாரதிய வினர்ய மற்றும் சாமியார்கள் சங்கம் என்ற அமைப்பின் தலைவர் கவுரி சங்கர் தாஸ் என்பவர் பைசாபாத் நகர காவல்துறையில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், சாமியார் ஹரி சங்கர் தாஸை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த சாமியார் திரிபுவன் தாஸ் என்ற தலைமைச் சீடன் தன்னையும் கொலை செய்யும் நோக்கத்தில் திட்டமிட்டு வருவதாகவும், மற்றும் அவனது ஆயுதக்கிடங்கு பற்றியும் குறிப்பிட்டிருந்தார். 2012ஆம் ஆண்டு திரிபுவன் தாஸின் வலதுகரமான சாமியார் ஹரிநாராயண் தாஸ் அயோத்தியா நகருக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில் பதுங்கி இருந்த போது போலீஸாருக்கும் சாமியார் குழுவிற்கும் இடையில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டான். இந்தச் சண்டையில் இரண்டு போலீசார் காயமடைந்தனர். போலீசாரால் கொல்லப்பட்ட ஹரிசங்கர் தாஸ் மீது 17 குற்ற வழக்குகள் உள்ளன. இதில் குழந்தைகள் மீதான பாலியல் வழக்கு மூன்று உள்ளது. இது போன்ற சம்பவங்களைத் தொகுத்தால் பல தொடர் புத்தகங்களே எழுதலாம்.<br />குற்றச்செயல்களுக்கான பயிற்சிப் பள்ளிக்கூடம்<br /><br />சிறையில் இருக்கும் ராம்சரண் ராமானந்த சாமியார் கொடுத்த பேட்டியில், அயோத்தியில் குற்றங்கள் பெருக உஜ்ஜைன் மடத்தைச் சேர்ந்த திரிபுவன் தாஸ்தான் காரணமாக இருந்தார். இவர் பிறருடைய சொத்தை அபகரிக்க வேறு வேறு மடத்தின் சீடர்களை போதை மருந்து மற்றும் பெண்கள் மூலம் அவர்களின் மனதை மாற்றி கொலை வரை செய்ய பயிற்சியளித்தார். மேலும் அவர் கூறியபோது, ``தன்னுடைய கமண்டலத்தில் துப்பாக்கியையும் தூக்கிக்கொண்டு திரியும் திரிபுவன் தாஸின் குற்ற நடவடிக்கை காரணமாக அவனை ஹனுமான் காடி மடத்தில் இருந்து வெளியேற்றினார்கள். ஆனால் அவன் வெளியேறி வெளியிடங்களில் இருந்து சாமியார்களை அழைத்துக்கொண்டு புதிய மடத்தை ஆரம்பித்தான். அவன் அழைத்து வந்த சாமியார்கள் அனைவருமே பெரும் குற்றப்பின்னணி உடையவர்களாக இருந்தனர். அயோத்தியில் நடந்த அனைத்துக் குற்றச் சம்பவங்களுக்கும் மூல காரணம் திரிபுவன் தாஸ் என்ற திரிதாஸானந்த். இவனே நேரடியாக 70க்கும் மேற்பட்ட கொலைகளைச் செய்துள்ளான். மேலும் தனது சீடர்கள் மூலம் 200க்கும் மேற்பட்ட கொலைகளைச் செய்துள்ளான். இவன்தான் அயோத்தியாவில் குற்றச்செயல்களுக்கான பயிற்சிப் பள்ளிக்கூடமே தொடங்கியவன் என்றார். கவுரி சங்கர் என்ற சாமியார் கூறுகையில், திரிபுவன் தாஸ் நேரடியாக எந்தக் குற்றச்செயலும் செய்யமாட்டான், அவன் தன்னுடைய சீடர்கள் மூலம் தன்னுடைய காரியத்தை அரங்கேற்றிவிடுவான். இவனுடைய சீடர்கள் அனைவருமே சிறையில் இருந்தவர்கள், சிறையில் இருக்கும் வேறு குற்றவாளிகளும் வெளியில் வந்த பிறகு இவரிடம் தீட்சைபெற்று சாமியாராகி குற்றச்செயல்களில் இறங்கிவிடுகின்றனர். திரிபுவன் தாஸ் இன்றும் தன்னுடைய மடத்தில் இருந்துகொண்டு குற்றச்செயல்களில் ஈடுபட்டுக்கொண்டு வருகிறான் என்றார்.<br /><br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-42695828410329691192014-02-18T06:58:02.618+05:302014-02-18T06:58:02.618+05:30காவிகளிடம் கண்ணை பறிகொடுத்த சகோதரர்கள்
அயோத்தியாவ...காவிகளிடம் கண்ணை பறிகொடுத்த சகோதரர்கள்<br /><br />அயோத்தியாவின் மாஜிஸ்ரேட் தரக்கேஷ்வர் பாண்டே மற்றுமொரு திடுக்கிடும் தகவலைக் கூறியுள்ளார். இராவணன் சீதையைக் கவர எத்தனையோ வேடங்கள் எடுத்திருக்கலாம். ஆனால் அவர் தேர்ந்தெடுத்தது சாமியார் வேடம்தான். காரணம், சாமியார் வேடத்தில்தான் மக்களை எளிதில் ஏமாற்ற முடியும். அயோத்தியாவில் உள்ள அனைத்து சாதுக்கள் மீதும் பெண்கள் மீதான பாலியல் கொடுமைக்குற்றம் அல்லது போதை உட்கொண்டு ரகளை செய்தல் மற்றும் கொலைக்குற்றம் போன்றவை உண்டு. சராயு நதிக்கரையில் உள்ள ராம்ஜானகி கோவில் மடத்தின் தலைமை குருவான கிஷோர் சரண் சாஸ்திரி, பக்தர்களின் உள்ளத்தில் சாமியைவிட சாமியார்கள்தான் உயர்ந்தவர்கள். சாமியார்களுக்குத் தலைவர் குரு. அவரே எல்லா அதிகாரங்களையும் கையில் கொண்டவர். ஆகையால் குருவின் காலைப் பிடித்து சீடனாகவேண்டும். பிறகு அவரின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு தான் குருவாகிவிடவேண்டும். இதுதான் தற்போதைய சாமியார்களின் நடவடிக்கை என்கிறார். சாமியார் பாரம்பரியம் ஒழுக்கம் எல்லாம் எப்போதோ முடிந்துவிட்டது, எல்லா மடங்களிலும் தலைமை குரு தனக்கு எந்த நேரத்திலும் ஏதாவது ஒரு சீடர் வழியில் மரணம் நேரலாம் என்று பயத்துடன் தினசரி நாட்களைக் கழிக்கின்றனர். சுமார் 200க்கும் மேற்பட்ட மத குருமார்களின் மரணம் சந்தேகத்திற்கிடமாகவே உள்ளது. 2012ஆம் ஆண்டு நகரின் முக்கிய கோவிலான ஹனுமான் கோவில் மடத்தின் தலைமை குருவான ஹரிசங்கர் தாஸ் மீது நவீன ரக கைத்துப்பாக்கியால் தாக்குதல் நடத்தப்பட்டது. சுமார் 8 குண்டுகள் கழுத்து வயிறு மற்றும் தொடையில் பாய்ந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருடைய நீண்ட நாளைய சீடன் ஒருவனே அவர் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்திய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டான். அதே மடத்தின் புதிய தலைமை குரு ரமேஷ் சரண் தாஸ் மடத்தில் உள்ள 4 சீடர்கள் மீது கொலைமுயற்சியில் ஈடுபட்டனர் என்று குற்றம் சாட்டினார். இதற்குக் காரணம் ஹனுமான் கோவிலுக்குப் பாத்தியப்பட்ட ஏராளமான சொத்துக்களையும் பெருமளவில் குவிந்து இருக்கும் தங்க நகைகளையும் அபகரிக்கும் நோக்கமே ஆகும். அடியாட்களை வைத்து கொலை மற்றும் நிலங்களை அபகரிக்கும் அயோ(க்கிய)த்தி சாமியார் டான் சாமியார் எனப்படும் திரிபுவன் தாஸ்.<br /><br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-80457548353455140422014-02-18T06:57:30.824+05:302014-02-18T06:57:30.824+05:30பைசாபாத்(அயோத்தியா) நகரில் இருக்கும் சாதுக்களில் ப...பைசாபாத்(அயோத்தியா) நகரில் இருக்கும் சாதுக்களில் பொரும்பாலானோர் மிகவும் கடுமையான குற்றங்களைச் செய்தவர்களாக உள்ளனர். அவர்களில் பலரது குற்றப் பின்னணியைப் பார்க்கும் போது, பெரிய பெரிய கொலை மற்றும் வழிப்பறிக் குற்றவாளிகள் அனைவரும் சாதாரணமானவர்கள்தான். நீண்டகாலமாக பைசாபாத் காவல்துறையில் பணி புரிந்து ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி தர்மேந்திர சிங் கூறுகையில், ஏதாவது ஒரு சாமியாரின் மீது புகார் வராத நாளே கிடையாது. குழுக்களுக்குள் சண்டை, சிறுமிகள் மற்றும் பெண்களைச் சீண்டியது, போதைப்பொருள் உட்கொண்டு பொது இடத்தில் அநாகரிகமாக நடந்தது என தினசரி புகார்கள் வந்துகொண்டு தான் இருந்தன. சில நேரங்களில் நான் மிகவும் வேதனைப்பட்டதுண்டு, இது போன்ற காரியங்கள் செய்வதற்கு சாமியாராக ஏன் இருக்கவேண்டும் பேசாமல் ரவுடிகளாக மாறிவிடலாமே? என நினைப்பதுண்டு.<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-20132489058019405512014-02-18T06:57:13.971+05:302014-02-18T06:57:13.971+05:30நவீன ரக துப்பாக்கிகளுடன் சாமியார்கள்
சாமியார்களின...நவீன ரக துப்பாக்கிகளுடன் சாமியார்கள்<br /><br />சாமியார்களின் கரங்களில் ஜெபமாலையும், கமண்டலமும்தான் இருக்கும் என்பார்கள். ஆனால் அங்கே சாராய பாட்டில்கள், குடிலின் இரகசிய அறையில் விபச்சாரிகள் மற்றும் இடுப்பின் முன்பு கத்தி மற்றும் வாள் போன்றவை இருந்தன. தற்போது உக்ரேன் தயாரிப்பு துப்பாக்கிகளும், நவீன ரக கையடக்க பிஸ்டல்களும் இருக்கின்றன. அயோத்தியாவில் பல சாமியார்களின் மீது வயதுக்கு வராத குழந்தைகளைக் கற்பழித்த குற்றச்சாட்டுகள் உள்ளன. ஆனால், சாமியார் வேடம் மற்றும் மக்களின் மூடத்தனத்தால் அவர்கள் தப்பித்துவிடுகிறார்கள்.<br /><br />குருவைக் கொலை செய்து அந்த இடத்தைப் பிடி<br /><br />முன்பு அயோத்தியா(பைசாபாத்) நகரின் காவல்துறை இணை ஆணையராக இருந்தவரும் தற்போது ரேபரேலி மாவட்டத்தின் ஆணையராக இருக்கும் ஆர்.கே.எஸ் ராதோட் கூறும்போது, தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-23066487558066698612014-02-18T06:56:41.872+05:302014-02-18T06:56:41.872+05:30ராம வன்ம பூமியில் கொலைகாரக் காவிகள்!
- சரவணா ராஜே...ராம வன்ம பூமியில் கொலைகாரக் காவிகள்!<br /><br />- சரவணா ராஜேந்திரன்<br /><br />1992-ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிப்பின் காரணமாக ஒரே நாளில் `ராம ஜென்ம பூமி உலகம் முழுவதும் தலைப்புச் செய்தியானது. ராமர் பிறந்த புனித பூமி வன்முறைக்களமானதே என உலகம் முழுவதிலுமுள்ள இந்து மதத்தினர் வேதனைப்பட்டதாக ஓர் ஆங்கில மாத இதழ் தலைப்பிட்டிருந்தது. 2006-ஆம் ஆண்டு இரண்டு சாமியார்கள் குழு நில அபகரிப்பு தொடர்பாக மோதிக்கொண்டதும் அதில் சிலர் கொல்லப்பட்டதும், செய்தியாக வந்தவுடன் பத்திரிகைகளின் பார்வை மீண்டும் அயோத்தியின் மீது திரும்பியது.<br /><br /> <br /><br />அதற்கு அடுத்த ஆண்டு கழிவறைத் தொட்டியில் ஒரு சாமியார் மற்றும் இளம்பெண்ணின் உடல் துண்டு துண்டாக வெட்டிப் புதைக்கப்பட்ட விவகாரம் ஜன்மோர்ச்சா என்ற பத்திரிகையில் வெளிவந்தவுடன் விவகாரம் சூடு பிடிக்கத் தொடங்கியது. ஆனால் இந்தியா போன்ற நாடுகளில் பெரும்பாலான ஊடகங்கள் ஒரு சிலரின் கைப்பாவையாக மாறி இருப்பதால், உண்மைகள் அனைத்தும் மறைக்கப்பட்டு பொய்யான தகவல்களே கிடைக்கின்றன. இந்த நிலையில் அயோத்தியின் உண்மை நிலையை அறிய `ஓபன் என்ற ஆங்கில இதழ் கடந்த ஆண்டு (2013) ஆகஸ்ட் மாதம் களமிறங்கியது. களமிறங்கிய உடனேயே சாதுக்களின் நில ஆக்ரமிப்பு விவகாரத்தைப் பூதாகரமாக வெளிக்கொண்டு வந்தது. இதனை அடுத்து தெகல்காவும் களமிறங்க, நூறாண்டு காலமாக நடந்து வரும் ஒரு பயங்கரம் வெளியானது. ராம ஜென்ம பூமி என்பது ராம வன்ம பூமியே என்ற இத்தனை ஆண்டுகளாக மறைக்கப்பட்டிருந்த பயங்கர உண்மை வெளிவந்தது. 21 ஜூலை 2013-_இல் சராயு நதிக்கரையில் உள்ள ஒரு சிறிய நிலத்திற்காக இரண்டு சாமியார் குழுக்கள் இடையே பெரிய கலவரம் நிகழ்ந்தது. பகவான் தாஸ் என்ற சமாஜ்வாதி கட்சி ஆதரவு பெற்ற சாமியாரின் குழுவும் ஹரி சங்கர் தாஸ் என்ற பாரதிய ஜனதா கட்சி ஆதரவு பெற்ற சாமியாரின் குழுவும் அயோத்தியின் புறநகரில் மோதிக்கொண்டன. எப்போதும் போல கல், கம்பு கத்தியுடனான கலவரமல்ல; வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கி சகிதம் மோதிக் கொண்டனர். இதில் 12க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். ஒருவர் கொலை செய்யப்பட்டார். சுமார் 200 ஆண்டுகாலமாக நடந்துவரும் இது போன்ற வன்முறைகள் நாகரிக வளர்ச்சிக்கு ஏற்ப புதிய பரிணாமத்தில் ஆயுதங்களுடன் சேர்ந்து வளர்ந்து வருகிறது. ராமரின் ஜென்ம பூமி என்று இவர்களால் கதைக்கப்படும் நிலம் ராம வன்ம பூமியாக மாறி நீண்ட காலமாகிவிட்டது.<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-84074730565215835122014-02-18T06:56:01.419+05:302014-02-18T06:56:01.419+05:30
மேலும், மதங்களால் மனித இனம் இடைவெளியே இல்லாமல் அ...<br />மேலும், மதங்களால் மனித இனம் இடைவெளியே இல்லாமல் அடையும் பெரும் துன்பங்கள், பெரும் கேடுகள், பேரழிவுகள் பற்றி மதவாதிகளுக்கு நம்மால் சவால்விட முடியும். கடவுள் பல விசித்திரமான வழிகளில் செயல்படுகிறார் என்றும், இத்தகைய துன்பங்கள் ஏற்படுவதற்கு ஏதோ ஒரு பொருத்தமான காரணம் மனிதரைவிட உயர்ந்த கடவுளிடம் இருக்கக் கூடும் என்றும், அதனை நம்மால் எப்போதுமே அறிந்து கொள்ள முடியாது என்றும் மதவாதிகள் கூறும் புரட்டு வாதங்களை எதிர்த்து முறியடிப்பதற்கு நாம் சிறிதும் அச்சப்படவோ, பின்வாங்கவோ, தயங்கவோ கூடாது. தான் இருப்பதை மக்கள் நம்பவேண்டும் என்று கடவுள் விரும்பினாலும், நம்மிடம் இருந்து, நாம் காணாதவாறு ஒளிந்து கொண்டு இருப்பதால், இயற்கையை விஞ்சிய ஆற்றல் கொண்ட கடவுள் இருப்பதற்கான ஆதாரங்கள் இல்லாதநிலையில், நடந்தேறும் பேரழிவு போன்ற சோக நிகழ்ச்சிகள், மக்களுடன் உறவு கொண்டிருக்கவேண்டும் என்று விரும்பும், எல்லாம் வல்ல இறைவன் ஒருவர் இருக்கிறார் என்ற கருத்துடன் முரண்பட்டு நிற்கின்றன. நாத்திகம்தான் உண்மையானது என்னும்போது இந்த தெய்வம் ஒளிந்து விளையாடும் விளையாட்டு அதிகமாகவும், ஆத்திகம் உண்மையானது என்னும்போது குறைவாகவும் இருக்கும். முதலாவதாக, அத்தகைய ஒரு கடவுள் இருக்கிறார் என்ற நம்பிக்கையே இல்லாமல் நாம் இருப்பதை இவ்வாறு ஆதாரப்பூர்வமாக நியாயப்படுத்தியிருக்கிறோம்.<br /><br />மேலும், கடவுள் என்று ஒருவர் இருந்து, அவர் எல்லாம் வல்லவராக இருந்திருந்தால், தனக்கு எல்லையில்லாத ஆற்றல் இருந்தும், பெரும் பேரழிவு ஏற்படுவதைத் தன்னால் தடுக்க முடியவில்லை என்பதை அவர் ஒப்புக் கொண்டிருக்க வேண்டும். அல்லது அத்தகைய பேரழிவு, பெருந்துன்பத்தினை நியாயப்படுத்தும் அளவு என்ன பெரும் நன்மையைத் தன்னால் செய்ய இயன்றது என்பதைக் கடவுள் கூறியிருக்க வேண்டும். எப்படிப் பார்த்தாலும், இத்தகைய பேரழிவு, பெருந்துன்பத்தினைத் தடுக்க எதுவுமே செய்ய முடியாத கடவுள் எப்படி எல்லாம் வல்ல, கருணை நிறைந்த கடவுளாக இருக்க முடியும்? தெளிவான நாத்திக வாதங்களின் நியாயத்தன்மை உறுதிப்படுத்தப்பட்டது.<br /><br />வேறுவகையிலான நடைமுறை கொண்ட நம்பிக்கையைப் பின்பற்றுபவர்களுக்குக் காட்டப்படாத சலுகை, மென்மை, தனிக் கவனம் ஆகியவற்றைப் பெறுவதற்கு மதநம்பிக்கையாளர்கள் தகுதி பெற்றவர்கள் என்று வலியுறுத்துவது அரசியல் சந்தர்ப்பவாதத்தின் காரணமாக மேற்கொள்ளப்படும் முடிவே அன்றி, உண்மைகளை அடிப்படையாகக் கொண்டது அல்ல. கடவுள் என்று ஒருவர் இருக்கிறார் என்பதற்கு எதிரான வாதங்களின் முழு ஆற்றலையும், பாதிப்பையும் அடக்கி ஒடுக்குவதற்கு எந்த ஒரு நியாயமான காரணமும் இல்லை; இருக்க முடியாது. தங்களைப் போல் கடவுளை நம்பாதவர்கள் எல்லாம் நரகத்துக்குப் போவார்கள் என்று வெளிப்படையாக மதவாதிகள் கூறும்போது, எவ்வாறு சொர்க்கம் என்ற ஒன்றோ அல்லது நரகம் என்ற ஒன்றோ இல்லை என்று காரண காரியங்களுடன் நாம் வெளிப்படையாக விளக்கி நியாயப்படுத்தி வருகிறோம். நம்பிக்கையாளர்கள் பெற்றிருப்பது போன்ற அதே உரிமையுடன் நாமும் நமது வாதங்களை முன் வைக்கிறோம் என்பதால் கோபம்கொண்ட நாத்திகர்கள் என்று நம் மீது குற்றம் சுமத்தப்பட்டால், அவர்களைப் பார்த்து கோபம் கொண்ட ஆத்திகர்கள் என்று நம்மாலும் குற்றம் சுமத்தமுடியும். மூடநம்பிக்கைகளில் இருந்து விடுதலை பெற்று, நல்ல சுதந்திரமான வாழ்க்கை முறையை அனுபவித்து வாழ்ந்து வரும் மற்றவர்களைப் போன்ற மகிழ்வான வாழ்வை வாழமுடியாதவர்கள் இந்த நம்பிக்கையாளர்கள்.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.com