tag:blogger.com,1999:blog-1474608369333206681.post6186962589307249807..comments2023-10-29T13:02:52.613+05:30Comments on தமிழ் ஓவியா: பெரியார் மண்ணின் உளவியல் குணம்தமிழ் ஓவியாhttp://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comBlogger40125tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-32536347042437284062014-03-04T06:07:49.902+05:302014-03-04T06:07:49.902+05:30
வடலூரில் அறிவு இல்லத்தை தமிழர் தலைவர் திறந்து வைத...<br />வடலூரில் அறிவு இல்லத்தை தமிழர் தலைவர் திறந்து வைத்தார்<br /><br />வடலூர் ஜோதி நகரில் 2.3.2014 அன்று காலை 11.15 மணிக்கு திராவிடர் கழக மகளிரணி மண்டலச் செய லாளர் இரமாபிரபா ஜோசப் பின் புதிய இல்லமான அறிவு இல்லத் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.<br /><br />பெரியார் சிலை<br /><br />அறிவு இல்லத்தின் வளா கத்தில் அமைக்கப்பட்ட தந்தை பெரியார் எழுதுவது போல் உள்ள சிலையினை பலத்த ஒலி முழக்கங்களுக் கிடையே இல்லத்தினர் ரமா பிரபா ஜோசப், செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு, கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேக ரன் ஆகியோரின் முன்னி லையில் தமிழர் தலைவர் திறந்து வைத்தார்.<br /><br />இல்லத்திறப்பு<br /><br />ரமாபிரபா - ஜோசப் அவர்களின் புதிய இல்ல மான அறிவு இல்லத்தினை க.பார்வதி, மோகனா வீர மணி, திருமகள், வெற்றி செல்வி, கு.தங்கமணி ஆகி யோரின் முன்னிலையில் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் திறந்து வைத்தார். பின்னர் கழகக் கொடியினை கழகச் செயலவைத் தலை வர் சு.அறிவுக்கரசு ஏற்றி வைத்தார்.<br /><br />இல்லத்திறப்பு விழா நிகழ்ச்சிக்கு கழகப் பொதுச் செயலாளர் துரை.சந்திர சேகரன் தலைமை வகித்து ரமா பிரபா ஜோசப் ஆகி யோரின் வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழா நிகழ் வினையும், கடுமையான உழைப்பால் வாழ்வில் சிறிது சிறிதாக உயர்ந்து பெரி யார் கொள்கையால் வெற்றி பெற்றதையும் எடுத்து கூறி னார். அனைவரையும் வர வேற்று தலைமை செயற் குழு உறுப்பினர் க.பார்வதி உரையாற்றினார்.<br /><br />தலைமைச் செயற்குழு உறுப்பினர் திருமகள், நெய் வேலி செயராமன், வடலூர் பேரூராட்சி தலைவர் சந் துரு, நகர திமுக செயலாளர் ராமலிங்கம், தாய் தொண்டு நிறுவன மய்ய நிறுவனர் ராசி.ஜெகதீஸ்வரன், மனித உரிமைகள் கழக தலைவர் காமராஜ், கடலூர் தண்ட பாணி, மாவட்ட செயலாளர் தாமோதரன், கவுன்சிலர் தமிழ்செல்வன், கழக பேச் சாளர் இராவணன், மண்டல செயலாளர் இரா.பன்னீர் செல்வம், மண்டல தலைவர் சிவ.வீரமணி, திருச்சி மண் டல செயலாளர் காமராஜ், வடமாவட்டங்களின் அமைப்பு செயலாளர் நெய் வேலி ஞானசேகரன், தே. எடிசன் ராசா, கழகப் பொதுச் செயலாளர் இரா.செயக் குமார், கழக செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு, ஏபிஜே மனோரஞ்சிதம் ஆகி யோரது வாழ்த்துரைக்குப் பின்னர் இரமாபிரபா - ஜோசப் இணையருக்கு தமி ழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் பயனாடை அணி வித்தார். திருமதி மோகனா வீரமணி அவர்கள், கழக நூல்களை வழங்கினார். நிறைவாக தமிழர் தலைவர் உரையாற்றினார்.<br /><br />ஜோசப் நன்றி கூறினார். சி.மணி வேல், கருணாமூர்த்தி, இந் திரஜித், தருமலிங்கம், சிதம் பரம் செல்வரத்தினம், செல் சேகர், இரா.முத்தையன், ஏ.திருநாவுக்கரசு, க.சேகர், ச.பாஸ்கர், கடலூர் செயக் குமார் (ப.க.)<br /><br />தமிழர் தலைவர் உரை<br /><br />தமிழர் தலைவர் தமது உரையில் குறிப்பிட்டதாவது:-<br /><br />மக்களிடம் எளிதாக பழ கக் கூடியவர்கள், அன்புடன், பண்புடன், நடந்து கொள் ளக் கூடியவர்ள் திரா விடர் கழகத்தினர் - இரமா பிரபா அனைவரிடம் பழ கிய காரணத்தால் இங்கே ஏராளமானோர் கட்சியை கடந்து பங்கேற்றுள்ளனர். மகளிரணியில் தீவிர செயல் பாடு மிக்கவர். சீரிய கொள் கையாளர் - ரமாபிரபா ஜோசப்பை பல ஆண்டு களாக தெரியும். ரமாவைக் காட்டிலும் அவர் கணவர் ஜோசப் மிகுந்த பாராட்டுக் குரியவர். இவரின் உழைப் பின் வளர்ச்சியை இந்த இல்லம் காட்டுகிறது. அறிவு இல்லம் கழக தோழர்க ளுக்கு வரவேற்பு இல்ல மாக இருக்கும். அழகு கலை நிலையம் நடத்தினாலும் எல்லோரையும் ஈர்க்கக் கூடிய வகையிலே தொழிலை சிறப்பாக செய்து வருபவர், பெரியார் காண விரும்பிய புரட்சி பெண் வரிசையில் கழக மகளிர் உள்ளனர் என மேலும் பல்வேறு கருத்து களை எடுத்துக் கூறினார்.<br /><br />வடலூர் முழுவதும் ஏராளமான கழகக் கொடி கள் கட்டப்பட்டு, விளம்பர பதாகைகளும், தமிழர் தலைவர் உருவம் பொறித்த பிளக்ஸ் பேனர்கள் சாலை யில் வைக்கப்பட்டிருந்தது அனைவரையும் கவர்ந்தது.<br /><br />Read more: http://viduthalai.in/page-4/76326.html#ixzz2uwyAef8A<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-85789453325271206282014-03-04T06:05:31.433+05:302014-03-04T06:05:31.433+05:30
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழக துணைவேந்தரிடம் கொட...<br />தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழக துணைவேந்தரிடம் கொடுக்கப்பட்ட கடிதம்<br /><br />பெறுநர்:<br />துணைவேந்தர்<br />தமிழ்ப்பல்கலைக்கழகம்<br />தஞ்சாவூர்<br /><br />அன்புடையீர், வணக்கம்.<br /><br />தஞ்சாவூர் - தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் சார்பில் தி.இந்து (தமிழ்) நாளேட்டில் (24.2.2014). ஒரு விளம்பரம் வெளியிடப்பட்டு இருந்தது.<br /><br />அதில் பட்டயம் (ஓராண்டு) Diploma எனும் தலைப்பின் கீழ் சோதிடவியல் கற்பிக்கப்படுவது பற்றிய தகவல் இடம் பெற்றிருந்தது.<br /><br />அறிவியலுக்கு எதிரான பாடத்திட்டம் ஒரு பல்கலைக்கழக விளம்பரத்தில் இடம் பெற்றிருந்தது பெரும் வியப்பை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கிறது.<br /><br />சோதிடம் என்பது அறிவியல் அல்ல; அது ஒரு போலி (Pseodo Science) விஞ்ஞானமாகும்.<br /><br />முன்னாள் குடியரசுத் தலைவர் மாண்பமை ஏ.பி.ஜே.அப்துல்கலாம் போன்றவர்களே இவ்வாறு தெளிவாகவே கூறியுள்ளனர்.<br /><br />1975 ஆம் ஆண்டில் 18 நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகள் உட்பட 186 அறிஞர்கள் கீழ்க்கண்ட கூட்டறிக்கையினை கையொப்பம் இட்டு வெளியிட்டனர்.<br /><br />அதில் கூறப்பட்டுள்ள கருத்து வருமாறு:<br /><br />மக்களின் வாழ்க்கைக்கும் கிரகங்களுக்கும் தொடர்பு உண்டு என்றும், கிரகங்கள் மூலம் எதிர்காலத்தைக் கணிக்க முடியும் என்றும் கூறப்படுவதற்கு எந்த விதமான அறிவுப் பூர்வமான ஆதாரமே கிடையாது.<br /><br />சோதிடம் பொதுமக்களிடையே மூடத்தனத்தை வளர்த்து பகுத்தறிவைப் பாழாக்குகிறது. இந்தச் சோதிடத்தின் ஏமாற்றுக்கு எதிர்காலம் நல்ல பாடம் கற்பிக்கப்போகிறது என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். விஞ்ஞான அறிவு இல்லாத காலத்தில் ஏற்படுத்தப்பட்ட கற்பனைகளே இவை என்று அந்த அறிக்கையி<br /><br />ல் 186 விஞ்ஞானிகள் கையொப்பமிட்டிருந்தனர். (ஆதாரம்: தினமணி 4.9.1975)<br /><br />மேலும் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் 51A(h) எனும்பிரிவில் இந்திய குடிமக்கள் ஒவ்வொருவரின் அடிப்படைக் கடமைகள் என்று கீழ்க்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.<br /><br />விஞ்ஞான ரீதியான அணுகுமுறை, மனிதாபிமானம், மற்றும், ஆராய்வு, ஊக்கம், சீர்திருத்தம் ஆகியவற்றை வளர்ப்பது காப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமை என்று தெளிவாக திட்டவட்டமாகக் கூறப்பட்டுள்ளது. அரசு உதவியோடு அங்கீகாரத்தோடு நடத்தப்படும் தமிழ்ப்பல்கலைக் கழகம் (தஞ்சாவூர்) இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக சோதிடம் என்ற விஞ்ஞானத்திற்கு எதிரான பாடத்தைப் பயிற்றுவிப்பது சரியல்ல என்று நீங்களும் ஒப்புக்கொள்வீர்கள் என்று கருதுகிறோம். அரசமைப்பு சட்டத்தின் ஷரத்தை கட்டிக்காக்க வேண்டும் என்ற முறையிலும், மக்கள் மத்தியிலே மூட நம்பிக்கை எந்த விதத்தில் இடம் பெற்றாலும் அவற்றை அறிவியல் பகுத்தறிவு கண்ணோட்டத்தோடு எடுத்துச் சொல்லி, மக்களை அறிவார்ந்த பாதையில் வழி நடத்திச் செல்ல வேண்டும் என்ற தந்தை பெரியார் அவர்களின் கொள்கையை மூச்சாகக் கொண்டு செயல்படும் திராவிடர் கழகமும், அதன் அணியான திராவிடர் மாணவர் கழகமும் - இன்று தஞ்சாவூரில், ரயில் நிலையம் அருகில் - தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பயிற்றுவிக்கப்படவுள்ள சோதிடத்தைக் கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி, அறவழி முறையில் ஆர்ப்பாட்டத்தை நடத்தி, அதன் முடிவில் இந்த மனுவை தங்களின் பார்வைக்கும், பரிசீலனைக்கும், அறிவார்ந்த முடிவுக்குமாக தங்களிடம் அளித்துள்ளோம். சோதிடப் பாடத் திட்டத்தை தமிழ்ப் பல்கலைக் கழகப் (தஞ்சாவூர்) பாடத்திட்டத்திலிருந்து அறவே நீக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.<br /><br />(கலி.பூங்குன்றன்) (பிரின்ஸ் என்.ஆர்.எஸ். பெரியார்) (சி.அமர்சிங்)<br />துணைத் தலைவர் மாநில மாணவரணி செயலாளர் திராவிடர்கழக தலைவர்<br />திராவிடர் கழகம் திராவிடர் கழகம் தஞ்சாவூர் மாவட்டம்<br /><br />இணைப்பு:<br /><br />1) திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களின் அறிக்கை<br />(விடுதலை27.2.2014)<br /><br />2) விடுதலை ஏட்டின் இரண்டு நாள் தலையங்கங்கள் (26.2.2014, 27.2.2014)<br /><br />3) விடுதலை ஏட்டின் முதல் பக்கக் கட்டுரை (விடுதலை 2.3.2014)<br /><br />Read more: http://viduthalai.in/page-4/76332.html#ixzz2uwxYtVQ3<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-87490490484178220222014-03-04T06:03:58.484+05:302014-03-04T06:03:58.484+05:30
மோடி புளுகு - 5
- குடந்தை கருணா
நேற்று உ.பி. தல...<br />மோடி புளுகு - 5<br /><br />- குடந்தை கருணா<br /><br />நேற்று உ.பி. தலை நகர் லக்னோவில் பேசிய நரேந்திர மோடி, உத்தரபிரதேசத்தில் இந்த ஒரு ஆண்டில் மட்டும் 150 கலவரங்கள் நடைபெற்றுள்ளன. ஆனால், குஜ ராத்தில் கடந்த பத்து ஆண்டுகளில், குஜராத்தில் ஒரு கலவரம் கூட நடைபெறவில்லை என பேசினார்.<br /><br />இது உண்மையா? 2012 மற்றும் 2013 ஆகிய ஆண்டுகளில் நாட்டில் நடைபெற்ற வகுப்புக் கலவரங்கள் பற்றிய விவ ரத்தை, நாடாளுமன்றத்தில், மத்திய உள் துறை இணை அமைச்சர் ஆர்.பி.என்.சிங் வெளியிட்டார். குஜராத் மாநிலம், மிக அமைதி மாநிலமாக உள்ளது என மோடியும் பிஜேபியும் கூறி வந்தாலும், மத்திய அமைச்சர் வெளியிட்ட அறிக் கையில், வகுப்பு கலவரத்தில், பீகார் மாநிலத்தையும் மிஞ்சிய நிலையில், குஜராத் அய்ந்தாவது இடத்தில் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. குஜராத்தில் 2012 ஆம் ஆண்டில் 57 வகுப்பு கலவரங்கள் நடை பெற்று, அய்ந்து பேர் இறந்துள்ளனர்; 2013 ஆம் ஆண்டில் 61 வகுப்பு கலவரங்கள் நடைபெற்று ஏழு பேர் இறந்துள்ளனர்.<br /><br />2002-ல் குஜராத்தில் நடைபெற்ற மதக் கலவரம் இந்த நூற்றாண்டில் நடைபெற்ற மிகப் பெரிய இன அழிப்பு என்பதை மறைத்து, மோடி யும் பிஜேபியும் பேசுவது, எத்தகைய பாசிச மனம் கொண்டவர்கள் என்பதைக் காட்டுகிறது.<br /><br />இந்த கலவரங்களில் பாதிக்கப் பட்டோருக்கு, இதுவரை உரிய நீதி கிடைக்கவில்லை; ஏறத்தாழ 20000 சிறு தொழில் செய்யும் மக்கள் கல வரம் காரணமாக இழப்பு ஏற்பட்ட நிலையில், குஜராத் அரசு அந்த மக்களுக்கு எந்தவித இழப்பீடும் இன்றுவரை தர வில்லை.<br />இந்த லட்சணத்தில், மற்ற மாநிலங்களில் பேசும் மோடி, ஏதோ தனது ஆட்சியில் குஜராத்தில் தேனா றும், பாலாறும் ஓடுவது போலவும், மக்கள் அனைவரும் மகிழ்வோடு வாழ்வது போலவும் பொய் மூட் டைகளை தினமும் அவிழ்த்து விடு கிறார்.<br /><br />. இதனை கேள்வி கேட்க வேண்டிய ஊடகங்கள், மக்களை தெளிவுபடுத்தக் கடமைப்பட்ட ஊடகங்கள், அதற்கு மாறாக, மோடி யின் பேச்சை நேரடி ஒளிபரப்பு செய்வதையும், கருத்துக் கணிப்பு என்கிற பெயரில், திட்டமிட்டு, மோடியை உயர்த்திப் பிடிப்பதை யும், மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். நமது உரிமையின் விலை, விழிப்புணர்வே.<br /><br />Read more: http://viduthalai.in/page-2/76308.html#ixzz2uwxCQftP<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-32115829471400590462014-03-04T06:03:20.023+05:302014-03-04T06:03:20.023+05:30
வி.கே. சிங் ஓர் எச்சரிக்கை!
வயது மோசடியில் சிக...<br />வி.கே. சிங் ஓர் எச்சரிக்கை!<br /><br /><br /><br />வயது மோசடியில் சிக்கிய இந்திய இராணுவத்தின் தளபதியாக இருந்த வி.கே. சிங் பி.ஜே.பி.யில் தன்னை இணைத்துக் கொண்டார் என்பது ஆரோக்கியமான ஒன்றல்ல.<br /><br />மிக உயர்ந்த பதவியில் இருந்த ஒருவர் ஓய்வுக்குப் பின் குறிப்பிட்ட அரசியல் கட்சியில் சேர்ந்தார் என்றால் கடந்த காலத்தில் பெரிய பொறுப்பில் இருந்தபோது அறிவு நாணயமாக எப்படி நடந்து கொண்டு இருப்பார் என்ற கேள்வி எழத்தான் செய்யும்.<br /><br />ஜனதா ஆட்சிக் காலத்தில் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த அடல்பிஹாரி வாஜ்பேயி அவர்கள் வெளிநாட்டுத் தூதர் அலுவலகங்களில்கூட ஆர்.எஸ்.எஸ். காரர்களைத் தட்டிப் பார்த்து நியமித்ததுண்டு.<br /><br />பி.ஜே.பி. ஆட்சிக் காலத்தில் ஆளுநர்கள், பல்கலைக் கழகத் துணைவேந்தர்கள் எல்லாம் ஆர்.எஸ்.எஸ். காரர்களாகப் பார்த்து நியமிக்கப்பட்டனர். ஆளுநர் மாளிகைகளில் ஆர்.எஸ்.எஸ். பயிற்சி முகாம்களும் நடத்தப்பட்டதுண்டு.<br /><br />இந்திய வரலாற்றுக் கழகம் (Indian Council for Historical Research) முற்றிலும் காவிமயமாக்கப்பட்டது. ஆர்.எஸ்.எஸ். மனப்பான்மை கொண்ட 18 பேர் புதிதாக நியமிக்கப்பட்டனர். அவர்களுள் கே.எஸ். லால், பி.பி. லால், பி.பி. சின்ஹா ஆகியோர் பாபர் மசூதி இருந்த இடத்தில் அதற்கு முன் ராமன் கோயில் இருந்தது என்று எழுதியவர்கள்.<br /><br />பேராசிரியர் சுமித் சர்க்கார் பேராசிரியர் கே.எம். பணிக்கர் உறுப்பினர் செயலாளர் டி.கே.வி. சுப்பிரமணியம் முதலிய புகழ் பெற்ற 12 வரலாற்றுப் பேராசிரியர்கள், ஆய் வாளர்கள் இந்திய வரலாற்று ஆய்வுக் கழகத்திலிருந்து (I.C.H.R.) வெளியேற்றப்பட்டனர். இந்திய சமூக விஞ்ஞான ஆய்வுக் கழகத்தின் தலைவராக (I.C.S.S.R.) பி.ஜே.பி.யின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் (டெல்லி) எம். சோந்தி நியமிக்கப்பட்டார். இப்படியாக ஒருநீண்ட பட்டியலே உண்டு.<br /><br />இந்தியாவின் கப்பற்படைத் தளபதியாக இருந்த விஷ்ணு பகவத் அவர்களே இராணுவத்தில் நடைபெற் றுள்ள ஊடுருவலை அம்பலப்படுத்தவில்லையா?<br /><br />பி.ஜே.பி.யின் தேசிய செயற்குழுக் கூட்டத்தில் உயர் மட்ட இராணுவ தளபதிகள், அதிகாரிகள் கலந்து கொண்டு விளக்கம் அளித்த - மிக மோசமான ஆபத்தான நடை முறைகளை உருவாக்கியது வாஜ்பேயி தலைமையிலிருந்த பி.ஜே.பி. ஆட்சி. ஓய்வு பெற்ற 96 இராணுவ அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் பி.ஜே.பி.யில் சேர்க்கப்பட்டனர். அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது அப்போது அந்த மாவட்டத்தின் காவல்துறைக் கண்காணிப்பாளராக விருந்த (SSP) டி.பி. ராய் என்பவர் பிறகு பிஜேபியில் சேர்ந்தது மட்டுமல்ல, மக்களவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டு, நாடாளுமன்ற உறுப்பினராகவும் ஆனார். 80 ஆயிரம் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் நிர்வாகப் பதவிகளில் (Executive Posts) அமர்த்தப்பட்டனர்.<br /><br />குஜராத் மாநிலத்தில் கேசுபாய் முதல் அமைச்சராக இருந்தபோது பி.ஜே.பி. ஆட்சியில் அரசு ஊழியர்கள் ஆர்.எஸ்.எஸில் இருக்கலாம் (2000 ஆண்டு பிப்ரவரியில்) என்று அறிவித்தார். அதற்கு பிரதமர் வாஜ்பேயியும் சரிதான் என்று வக்காலத்தும் வாங்கினாரே!<br />மாலேகான் குண்டுவெடிப்பில்கூட இராணுவத்தில் மட்டும் பயன்படுத்தப்படும் வெடி மருந்து பயன்பட்டதாக செய்தி வரவில்லையா?<br /><br />அந்தக் குண்டுவெடிப்பில் முக்கிய குற்றவாளிகளுள் ஒருவரான சிறீகாந்த் புரோகித் என்பவர் யார்? இராணு வத்தில் புலனாய்வுத் துறையில் பணிபுரிந்தவராயிற்றே. மகாராட்டிர மாநிலம் நாசிக் அருகில் போன்ஸ்லா என்ற இடத்தில் இராணுவக் கல்லூரி ஒன்றை நடத்தி வருகிறார் என்றால், இந்திய இராணுவத்தில் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் ஊடுருவி நிற்கும் ஆபத்தின் எல்லை என்ன என்பது விளங்காமற் போகாது.<br />முன்னாள் இராணுவத் தளபதியே (வி.கே. சிங்) பி.ஜே.பி.யில் இணைந்தார் என்பதை வைத்து இந்திய இராணுவத்தில் ஊடுருவியுள்ள இந்துத்துவாவாதிகளை வெளியேற்றும் அவசியமான வேலையில் மத்திய அரசு கவனம் செலுத்தட்டும்!<br /><br />Read more: http://viduthalai.in/page-2/76303.html#ixzz2uwx1ayF7<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-27409763254865420522014-03-04T06:02:36.097+05:302014-03-04T06:02:36.097+05:30
ஆரியப் பண்டிகைகள்
ஆரியப் பண்டிகைகளின் அடிப்படைக்...<br />ஆரியப் பண்டிகைகள்<br /><br />ஆரியப் பண்டிகைகளின் அடிப்படைக் காரணமெல்லாம் திராவிடர்களை ஆரியர்கள் அடக்கினது; கொன்றது; இழிவுபடுத்தியதுதான். அதுவும் சாதாரண மக்களைக் கடவுள் அவதாரம் என அழைத்து நமது அரசர்களை அசுரர்_ சூத்திரர் என்று இழிவுபடுத்தி ஏற்படுத்தப் பட்ட பண்டிகைகள்.<br /><br />- (விடுதலை,18.1.1951<br /><br />Read more: http://viduthalai.in/page-2/76302.html#ixzz2uwwqi9EB<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-15960325317378230492014-03-04T06:01:15.561+05:302014-03-04T06:01:15.561+05:30
தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் சோதிடத்தைப் பாடம...<br />தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் சோதிடத்தைப் பாடமாக துவக்குவதா?<br /><br /><br />திராவிடர் மாணவர் கழகத்தினர் தஞ்சையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்<br /><br />ஆர்ப்பாட்ட முடிவில் தமிழ் பல்கலைக் கழக துணைவேந்தர் முனைவர் திருமலை அவர்களை கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் இராசகிரி கோ. தங்கராசு, பொதுச் செயலாளர்கள் தஞ்சை இரா. செயக்குமார், உரத்தநாடு குணசேகரன், தஞ்சை மாவட்ட தலைவர் சி. அமர்சிங், மாநில மாணவரணி செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார், தஞ்சை மாவட்ட செயலாளர் அருணகிரி, தஞ்சை மண்டல தலைவர் வெ. ஜெயராமன், மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் தளபதிராஜ், தமிழ்ப் பல்கலைக் கழக தமிழ் துறைத் தலைவர் (ஓய்வு) பெரியார் அறக்கட்டளை நிறுவனர் முனைவர் இராமலிங்கம், ஒன்றிய அமைப்பாளர் மூர்த்தி, மாநில பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர்அழகிரிசாமி, உரத்தநாடு நகர செயலாளர் சாமி. அரசு இளங்கோ ஆகியோர் சந்தித்து தஞ்சை பல்கலைக் கழகத்தில் அறிவிக்கப்பட்டு இருக்கும் சோதிட பட்டயப் படிப்பை ரத்து செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. இது முக்கிய பிரச்சினையாக ஆக்கப்பட்டு இருக்கிறது. தங்களின் கோரிக்கை மனுவை ஆட்சி மன்றக் குழுவில் வைக்கப்பட்டு பரிசீலிக்கப்பட்டு அவர்களது முடிவுப்படி முடிவு செய்யப்படும் என்று துணைவேந்தர் தெரிவித்தார். (மனு விவரம் 4ஆம் பக்கம் காண்க).<br /><br />தஞ்சை, மார்ச் 3- தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் சோதிடத்தைப் பாடமாக வைப்பதைக் கண்டித்து இன்று (3.3.2014) காலை திராவிடர் மாணவர் கழகத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பட்டம் தஞ்சையில் நடைபெற்றது. கழகத்தின் துணைத் தலை வர் கவிஞர் கலி. பூங் குன்றன் அவர்கள் கண்டன ஆர்ப்பாட்ட உரையை நிகழ்த்தினார்.<br /><br />தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் சோதிடத்தைச் சொல்லிக் கொடுக்கும் பட்டய வகுப்பை நடத்தவிருப்பதாக ஏடு களில் விளம்பரம் வெளி வந்துள்ளது. அறிவியலுக்கு விரோதமான - மூடநம் பிக்கையின் மறுவடிவ மான சோதிடத்தை ஒரு பல்கலைக் கழகத்தில் சொல்லிக் கொடுக்க முடி வெடுப்பது - அபத்தமா னது - கண்டிக்கத்தது.<br /><br />இந்திய அரசமைப்புச் சட்டத்தில் (51ஏ (எச்) விஞ் ஞான மனப்பான்மை யைப் பரப்ப வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படைக் கடமை என்று வலியுறுத்தப்பட் டுள்ளது. இந்திய அரச மைப்புச் சட்டத்திற்கே விரோதமாக ஒரு பல் கலைக் கழகம் சோதிடத் தைக் கற்பிக்க முயற்சிக் கலாமா? என கேட்டு இச் செயலை கண்டித்து தமிழர் தலைவர் கடந்த 27.2.2014 அன்று அறிக்கை விடுத்தார்.<br /><br />மேலும் இதைக் கண் டித்து 3.3.2014 அன்று திராவிடர் மாணவர் கழகத் தின் சார்பில் தஞ்சையில் மாபெரும் கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெறும் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் தெரிவித்திருந்தார். அதன்படி இன்று (3.3.2014) காலை 11 மணி யளவில் தஞ்சையில் தலைமை தபால் நிலையம் முன்பாக கழகத் தோழர் - தோழியர்கள் மாணவர் அணியினர், இளைஞர் அணியினர் திரளாக பங் கேற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. இந்த ஆர்ப்பாட்டத் துக்கு திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்கள் பங்கேற்று, தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் சோதிடத்தைப் பாடமாக துவக்குவதைக் கண்டித்து ஆர்ப்பாட்ட விளக்கவுரை யாற்றினார்.<br /><br />முன்னதாக இந்த ஆர்ப் பாட்டத்தில் திராவிடர் மாணவர் கழக மாநில செயலாளர் பிரின்ஸ் என்னாரெசு பெரியார் தலை மையில் கீழ்க்கண்ட ஒலி முழக்கங்கள் எழுப் பப்பட் டன.<br /><br />ஆர்ப்பாட்டம் ஆர்ப்பாட்டம்<br /><br />கண்டன ஆர்ப்பாட்டம் சோதிடப் பாடமா?<br /><br />அறிவியல் வளர்ந்த<br /><br />காலத்திலே பல்கலைக்கழகத்தில்<br /><br />சோதிடப் பாடமா?<br /><br />வெட்கம், வெட்கம்<br /><br />மகா வெட்கம்! சோதிடத்தில் சொல்லப்படும் ராகுவும் கேதுவும் கிரகங்களா?<br /><br />சோதிடத்தில் சொல்லப்படும் சூரியன் நட்சத்திரமா, கிரகமா?<br /><br />சொல்லட்டும், சொல்லட்டும்<br /><br />துணை வேந்தர் சொல்லட்டும்!<br /><br />சோதிடப் பாடத்தில் கிரகமான பூமிக்கு<br /><br />இடம் உண்டா? சொல்லட்டும், தமிழ்ப் பல்கலைக்கழகம் சொல்லட்டும்!<br /><br />விஞ்ஞான மனப்பான்மையை வளர்ப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமையென்று,<br /><br />இந்திய அரசின் சட்டம் சொல்லுகிறது தஞ்சைப் பல்கலைக்கழகமே அரசியல் சட்டத்தை<br /><br />அவமதிக்காதே!<br /><br />தஞ்சைப் பல்கலைக் கழகமே வளர்க்காதே, வளர்க்காதே மூடநம்பிக்கைகளை<br /><br />வளர்க்காதே - வளர்க்காதே!<br /><br />ரத்து செய், ரத்து செய்<br /><br />தமிழ்ப் பல்கலைக் கழகமே! ரத்துச் செய், ரத்துச் செய்!<br /><br />மூடநம்பிக்கையை வளர்க்கும் சோதிடப் பாடத்தை ரத்து செய், ரத்து செய்!<br /><br />போராடுவோம் போராடுவோம்<br /><br />வெற்றி கிட்டும்வரை போராடுவோம்! போகாதே - போகாதே!<br /><br />தமிழ்ப் பல்கலைக் கழகமே கற்காலத்துக்கு, போகாதே!<br /><br />தற்காலத்துக்கு வந்து விடு, வந்து விடு!<br /><br />Read more: http://viduthalai.in/e-paper/76301.html#ixzz2uwwWPEMd<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-47989355698627841802014-03-03T06:36:26.254+05:302014-03-03T06:36:26.254+05:30தமிழர் தலைவர் உரை
கரூர் 01-03-2014 சனிக் கிழமை அன...தமிழர் தலைவர் உரை<br /><br />கரூர் 01-03-2014 சனிக் கிழமை அன்று உலகத்தி லேயே அதிக உயரமான தந்தை பெரியார் பேருருவ வெண்கல சிலை திருச்சி சிறுகனூரில் வைக்க திருச்சி மண்டல திராவிடர் கழகம் சார்பில் கரூர் சுபாஜ் திடலில் தமிழர் தலைவரிடம் நிதிய ளிப்பு விழா நடைபெற்றது. அவ்விழாவில் நிதியைப் பெற்றுக்கொண்டு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலை வர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரை ஆற்றினார் அவ ரது உரையில்:-<br /><br />ஒப்பாரும் மிக்காரும் இல்லாத உயர் தனிச் சிந்த னையாளர் தந்தை பெரி யார், அவரது ஒப்புயர்வற்ற தொண்டு எந்த நாட்டிலும் இல்லாத கொடுமை மனி தனை மனிதன் தொடக் கூடாது, பார்க்கக்கூடது என் றிருந்த ஜாதிக்கொடுமையை எதிர்த்து அதனை ஒழித்தார். சரசுவதி என்ற கடவுள் இருந்த இந்த நாட்டில் யாரும் படிக்கவில்லை, சூத்திரன் படித்தால் நாக்கை அறுத் தெறி என்ற நிலையை மாற்றி அனைவரையும் படிக்க வைத்தது திராவிடர் இயக்கம் ஜாதி வெறியை, மதவெறியை ஊட்டி மக்களை ஏமாற்றி வாக்குப்பெற மதவாத, ஜாதிய சக்திகள் முயல்கின் றன, மக்கள் ஏமாறக்கூடாது,<br /><br />வருகின்ற தேர்தலைப் பற்றி நினைப்பதைவிட, வரு கின்ற தலைமுறையினரைப் பற்றி கவலைப்படுகின்ற இயக்கம், நம்பிக்கை என்ற மத அடிப்படையை வைத்து வளர்ச்சித் திட்டங்களுக்குத் தடைபோட்டு சேது சமுத் திரம் கூடாது அது ராமன் கட் டிய பாலம் என்று வளர்ச் சிக்கு முட்டுக்கட்டை போடு கிறவர்கள் யார்? 2001-ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் எம்.ஜி.ஆரால் பாராட்டப்பட்ட சேது சமுத் திரத் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று சொன்னவர்கள், எம்.ஜி. ஆருக்கு எதிராக, அவரது கொள்கைக்கு எதிராக செயல் படுகிறவர்கள் யார்? என் பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். மயக்க பிஸ்கட்டு களுக்கு மக்கள் ஏமாறக் கூடாது என்று தமது உரையில் தமிழர் தலைவர் கி.வீரமணி குறிப்பிட்டார்.<br /><br />Read more: http://viduthalai.in/page-8/76269.html#ixzz2urDuwi5A<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-76277130902092664912014-03-03T06:35:22.829+05:302014-03-03T06:35:22.829+05:30செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர்
கேள்வி: நாடாளுமன...செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர்<br /><br />கேள்வி: நாடாளுமன்றத் தேர்தலில் தி.க. நிலைப்பாடு?<br /><br />பதில்: நாடாளுமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை பல கட்சிகள் கூட்டணி பற்றிய தெளிவே இல்லாமல் இருக்கிறார்கள். திமுக கலைஞர் அவர்களுடைய ஆற்றல்மிகு தலைமையிலே மத சார்பற்றக் கூட்டணியை முற்போக்கு சிந்தனையோடு ஒத்த கருத்து உள்ளவர்களை அழைத்து திருச்சியில் திமுக மாநாடு நடத்தினார்கள். திருச்சியிலே கூடிய மாநாடு வரலாறு படைத்தது. தலைவர்கள் கொள்கைரீதியாக இந்த கூட்டணிக்கு வந்திருக்கிறார்கள்.<br /><br />இன்றைக்குத் தேவை ஜாதியவாதமோ, மதவாதமோ அல்ல. மாறாக ஒரு புதிய நாட்டை உருவாக்க வேண்டும் என்று சொன்னால் ஜாதியற்ற, மதவெறியற்ற, மனித நேயம் இருக்கக்கூடிய கூட்டணியை உருவாக்கவேண்டும் என்பதுதான். மத்தியிலே தேர்தலுக்குப்பிறகு அமையக்கூடிய ஒரு ஆட்சி என்பது உண்மையாக அனைவருக்கும் அனைத்தும் தரக்கூடிய சமூகநீதியை மய்யமாகக் கொண்ட,<br /><br />மனித நேய ஆட்சியாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையிலே திமுக தலைமையிலே கூட்டணி நிச்சயமாகக் கொள்கைக் கூட்டணி, தெளிவான இலட்சியத்தோடு, நல்ல அணுகுமுறையோடு அவர்கள் சென்றுகொண்டிருக்கும் நிலையிலே தாய்க்கழகமாய் இருக்கும் திராவிடர் கழகம் அவர்களை ஆதரிப்பது வெறும் ஆட்சிக்காக அல்ல, ஒரு சமுதாயத்தின் மீட்சிக்காக என்ற எண்ணத்தோடு நாங்கள் உறுதுணையாக இருக்கிறோம்.<br /><br />- கரூர் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர்<br /><br />Read more: http://viduthalai.in/page-8/76269.html#ixzz2urDdmjA6<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-15718812266086086912014-03-03T06:32:05.693+05:302014-03-03T06:32:05.693+05:30
மோடி சதிகாரர் சொல்வது நீதியரசர்
- குடந்தை கருணா...<br />மோடி சதிகாரர் சொல்வது நீதியரசர்<br /><br /><br />- குடந்தை கருணா<br /><br />பேராசிரியர் ஹேமண்ட்குமார் ஷா எழுதிய சச்சாய் குஜராத் கி எனும் நூலில், குஜராத் வளர்ச்சி என்பது வெறும் கற்பனை என ஆதாரத்துடன் எழுதி உள்ளார். இந்த நூலை அண்மையில், அகமதாபாத் நகரில், வெளியிட்டு பேசிய மும்பை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஹாஸ்பட் சுரேஷ், நரேந்திர மோடி, 2002 குஜராத் கலவரத்தின் முதன்மை சதிகாரர்;<br /><br />அவர் பிரதமர் பதவிக்கு தகுதியானவர் அல்ல என கூறி உள்ளார். (இந்தியன் எக்ஸ்பிரஸ் 18.2.2014). குடிமக்கள் தீர்ப்பாயம் என்கிற அமைப்பின் சார்பில், உச்ச நீதி மன்ற முன்னாள் நீதிபதிகள் வி.ஆர்.கிருஷ்ணய்யர், பி.பி.சாவண்ட் ஆகியோருடன் இணைந்து 2002 குஜராத் கலவரம் பற்றிய அறிக்கையை அளித்தவர் மும்பை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஹாஸ்பட் சுரேஷ். குஜராத் மாஜிஸ்திரேட் கோர்ட், மோடி குற்றம் எதுவும் செய்யவில்லை என்பதை நிராகரித்த நீதிபதி சுரேஷ், இன்னும் உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் வழக்கை விசாரிக்க உள்ளது.<br /><br />மோடி குற்றமற்றவர் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்க வில்லை; பெஸ்ட் பேக்கரி வழக்கில், கீழ் கோர்ட், விடுதலை செய்தாலும், வழக்கு மகாராஷ்டிரா மாநிலத்திற்கு மாற்றப்பட்டு, குற்றம் சாட்டப்பட்ட அத்தனை பேருக்கும் தண்டனை வழங்கப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டி உள்ளார், நீதிபதி சுரேஷ். மோடி, ஹிட்லரைப் போன்றவர். ஹிட்லர் பதவிக்கு வந்ததும் என்ன நடந்தது? இரண்டாம் உலக யுத்தம் வெடித்தது.<br /><br />அதே போன்று, மோடி பிரதம ரானால், நடப்பதற்கும் வாய்ப்பு உள்ளது என்றார் நீதிபதி சுரேஷ். 2002-ல் குஜராத் கலவரத்தில் நடைபெற்ற நரோடியா பாட்டியா படுகொலையில் தண்டனை பெற்றுள்ள மாயா கோட்னானி யார்?, மோடியின் அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர் தானே? எனக் கேள்வி கேட்டுள்ளார், நீதிபதி சுரேஷ். மோடி சதிகாரர் என்று நீதியரசர்கள் சொல்கிறார்கள்.<br /><br />மோடி பிரதமராவது இந்திய நாட்டிற்கு நல்லது அல்ல என்று நோபல் பரிசு பெற்ற அமர்தியா சென் சொல் கிறார், ஆனால், மறுமலர்ச்சி பேசிய வைகோவும், அம்பேத்கர் வழிவந்ததாக சொல்லும் ராம் விலாஸ் பஸ்வானும் சொல்கிறார்கள் மோடியை பிரதம ராக்கியே தீருவோம் என்று.<br /><br />எதிரியை விட, சமுதாய துரோகிகள் ஆபத்தானவர்கள்.<br /><br />Read more: http://viduthalai.in/page-2/76245.html#ixzz2urCm35OJ<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-68687417712226459522014-03-03T06:30:59.608+05:302014-03-03T06:30:59.608+05:30பா.ம.க.வின் பரிதாபம்
மருத்துவர் அன்புமணி ராமதாசு ...பா.ம.க.வின் பரிதாபம்<br /><br />மருத்துவர் அன்புமணி ராமதாசு அவர்கள் மத்தியில் 5 ஆண்டுக் காலம் ஆட்சியில் அமைச்சராக இருந்தபோது சாதித்தவை பற்றி (சாதனை மனிதன் அன்புமணி ராமதாஸ் - பக்கம் 28) ஒரு பிரசுரம் வெளியிடப்படுகிறதாம் - வெளி யிடுபவர் யார் தெரியுமா?<br /><br />கோயங்கா வீட்டுக் கணக்கப்பிள்ளை என்று பொதுவாக அடையாளங் காட்டப்படுபவரும், ஆர்.எஸ்.எஸ். ஆலோசகருமான திருவாளர் எஸ். குருமூர்த்திதான் அவர்! பெரியாரை யும் ஒரு பக்கத்தில் உச்சரித்துக் கொண்டே ஜாதி வாதத்தையும், மதவாத ஆர். எஸ்.எசையும் இணைத்தும் இரட் டைக் குதிரையின்மீது ஒரே நேரத்தில் வேறு யாரால்தான் சவாரி செய்ய முடியும்?<br /><br />Read more: http://viduthalai.in/e-paper/76241.html#ixzz2urCWYRIV<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-32874073741687501682014-03-03T06:29:30.303+05:302014-03-03T06:29:30.303+05:30
அய்ரோப்பிய நாடுகளில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான...<br />அய்ரோப்பிய நாடுகளில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடை நீங்குகிறது!<br /><br />ஜெனிவா, மார்ச் 2- அய்ரோப்பிய நாடுகளில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடை விரைவில் நீங்குகிறது. இலங்கையில் தமிழர்களுக்கு அரசியல், பொருளாதார, மொழி, மத ரீதியாக சம உரிமை வழங் கப்படவில்லை. ஆகவே தமிழர்கள் தனி நாடு கேட்டு போராடத் தொடங்கினார் கள். இதில், முன்னணியில் இருந்தவர்கள் விடுதலைப் புலிகள். இவர்கள் தமிழர் களுக்காக தனியாக ஒரு அர சாங்கத்தையே நடத்தி வந்தார் கள். ஆனால், இவர்களை பயங்கரவாதிகள் என இலங்கை அரசு முத்திரை குத்தியது.<br /><br />பிற நாடுகளிலும் இதைப் பரப்பியது. அதன் விளைவாக, அமெரிக்கா மற்றும் அய்ரோப்பிய கண் டத்து நாடுகள் விடுதலைப் புலிகளுக்கு தடை விதித்தன.<br /><br />2001-ஆம் ஆண்டு அமெரிக்காவின் நியூயார்க் இரட்டைக் கோபுரங்களை அல்கொய்தா தீவிரவாதிகள் விமானங்களைக் கடத்தி, தகர்த்தனர். இந்த சம்பவத் திற்கு பிறகு அரசாங்கத் திற்கு எதிராக போராட்டம் நடத்திய பெரும்பாலான இயக்கங்களை அமெரிக் காவும், பிற மேலை நாடு களும் தீவிரவாத இயக்கங் களாக பார்க்கத் தொடங்கின. அதன் விளைவாகத்தான் விடுதலைப்புலிகளுக்கு எதிராகவும் தடை விதிக்கப் பட்டது.<br /><br />நிதி திரட்டவும் தடை விதிக்கப்பட்டது. இந்த தடையை நீக்க வேண் டும் என அய்ரோப்பிய நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இதை நீதிமன்றமும் ஏற்றுக் கொண் டுள்ளது. புலிகளுக்கு எதி ரான தடையை நீக்கவும் நடவடிக்கை எடுத்து வரு கின்றது. இதுபற்றி விரை வில் உத்தரவு பிறப்பிக்கப் பட உள்ளது.<br /><br />இத்தாலி நீதிமன்றமும்...<br /><br />இதே போல் இத்தாலி நீதிமன்றமும் விடுதலைப் புலிகளை, ஒருவிடுதலை இயக்கத்தினராக அறிவித் துள்ளது. இத்தாலி நாட்டில் விடுதலைப்புலிகளுக்கு நிதி சேகரித்ததாக தமிழ் தேசிய செயல்பாட்டாளர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக நேப் போலி என்ற நகரில் உள்ள நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அந்த நீதிமன்றம், கடந்த 2011ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது.<br /><br />விடுதலைப்புலிகள் 25 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் மக்களின் விடுதலைக் காகப் போராடி வந்துள் ளார்கள். அவர்கள் தனி ஒரு நிழல் அரசாங்கத்தை நடத்தி ஆட்சியை நடத்தி வந்துள் ளார்கள்.<br /><br />கல்வி, நிதி, நீதி, காவல் உள்ளிட்ட அனைத்துத் துறை களையும் நடத்தி வந்துள் ளனர். ஆகவே, விடுதலைப் புலிகள் இயக்கத்தை நாம் ஜெனிவா சாசனப்படி, ஒரு விடுதலை இயக்கமாகவே கருத வேண்டும்.<br /><br />பயங்கரவாதிகளாக பார்க்க முடியாது. ஆகவே இத்தாலி தமிழ் தேசிய செயல்பாட்டாளர்கள்மீது சாட்டப்பட்ட குற்றம் அர்த்தமற்றது என்று நீதிபதி கருத்து தெரிவித்தார்.<br /><br />இந்த தீர்ப்பை எதிர்த்து அரசாங்கத்தினர் சார்பில் மேல் முறையீடு செய்யப் பட்டது. மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் 9 நீதிபதிகள் விசாரித்தார்கள்.<br /><br />இவர்கள் நேப்போலி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ஏற்றுக் கொண்டார்கள். ஆகவே, இத்தாலி நாட்டி லும் விடுதலைப்புலிகளுக் கான தடை நீங்கவுள்ளது.<br /><br />Read more: http://viduthalai.in/e-paper/76234.html#ixzz2urC8INbF<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-43252209778794915362014-03-03T06:28:48.861+05:302014-03-03T06:28:48.861+05:30
அமெரிக்காவில் நாத்திகர் என்பதால் மறுப்பா!
சாண்டி...<br />அமெரிக்காவில் நாத்திகர் என்பதால் மறுப்பா!<br /><br />சாண்டியாகோ, மார்ச்.2- கலிபோர்னியாவில் வசிக் கும் பெண்மணி ஒருவ ருக்கு அமெரிக்கக் குடி உரிமை மற்றும் இடப் பெயர்வு சேவை அலுவல கத்தில் சான்றளிக்கும் அலு வலர்கள் அப்பெண்மணி நாத்திகர் என்பதால் குடி உரிமைச் சான்று அளிக்க மறுத்துள்ளனர். இச்சம் பவம் மனித உரிமை அமைப்பினரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.<br /><br />ஆட்ரியானா ரேமிரேஸ் என்பவர் தன்னை ஒரு மத மறுப்பாளராக குடிஉரிமை கோரும் படிவத்தில் குறிப் பிட்டுள்ளார். இதனால், மதமறுப்பாளரான அவர் அமெரிக்காவின் பாதுகாப் புக்காக சட்டப்படி ஆயுதம் ஏந்த மறுத்துள்ளார் என்று கூறி, அவர் குடி உரிமை மறுக்கப்பட்டுள்ளது.<br /><br />நீதிமன்றத்தில் இதனை எதிர்த்து வழக்கு தொடுக் கப்பட்டுள்ளது. அமெரிக்க மனித நேய அமைப்பு தன்னை இவ்வழக்கில் இணைத்துக்கொண்டு அப் பெண்மணிக்கு ஆதரவாக களத்தில் இறங்கி உள்ளது.<br /><br />அமெரிக்க குடி உரிமை சான்று கோரும் படிவத்தில் நாட்டுக்காக ஆயுதம் ஏந்த வேண்டி இருந்தால் அதற் கான உறுதியை அளிக்க வேண்டும் என்று உள்ளதாம். ஒரு பெண்ணாக வயது 30களின் மத்தியில்தான் ஆயுதம் ஏந்தி ஒருவரைக் கொல்வதை எதிர்த்து வந் துள்ளதாகவும், க்யூ 36-38 வரையில் படிவத்தில் வெறுமனே ஆம் என்று சொல்லி இருக்கலாம்.<br /><br />ஆனால், நீதியை, மனி தரைக் கொல்வதை மிகக் கடுமையாக எதிர்த்து வந் துள்ளேன். அப்படி இருக் கும்போது அதுபோன்ற உறுதியை தன்னால் அளிக்க முடியாது என்று நீதிமன்றத் தில் விளக்கமாகத் தெரிவித் துள்ளார். இந்நிலையில் அமெ ரிக்க மனித நேய அமைப்பு இவ்வழக்கில் அமெரிக்க நீதிமன்றத்தில் மேல் முறை யீடு செய்துள்ளது.<br /><br />அப் பெண்மணி மதமறுப் பாளர், மத நம்பிக்கைக்கு அப்பாற்பட்டவர் என்ப தால் குடி உரிமை மறுப்பது அரசமைப்புக்கு எதி ரானது என்றும் அமெரிக்கக் குடி உரிமை மற்றும் இடப் பெயர்வு சேவை அலுவல கத்திற்கு ஏ.எச்.ஏ. அமைப்பு கடிதம் எழுதியுள்ளது.<br /><br />Read more: http://viduthalai.in/e-paper/76235.html#ixzz2urByKjMM<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-42719323616583218212014-03-03T06:27:02.487+05:302014-03-03T06:27:02.487+05:30
சாக்லெட் சாப்பிடுவீர்!
லண்டன், மார்ச் 2- டார்க் ...<br />சாக்லெட் சாப்பிடுவீர்!<br /><br />லண்டன், மார்ச் 2- டார்க் சாக்லெட்டுகள் சாப் பிடுவது இதயத்தின் ஆரோக் கியத்துக்கு மிக உகந்தது என ஆய்வில் தெரியவந் துள்ளது.<br /><br />நெதர்லாந்தில் உள்ள உணவு மற்றம் நுண்ணூட் டக் கழகம் மற்றும் வாகெ னிங்கன் பல்கலைக்கழக ஆய்வுக்குழுவினர் இது தொடர்பான ஆய்வில் ஈடு பட்டனர். அதில், டார்க் சாக்லெட் சாப்பிடுவதால் இதயம் ஆரோக்கியமாக இருக்கிறது எனத் தெரிய வந்தது.<br /><br />டார்க் சாக்லெட்டு களைச் சாப்பிடுவது, தமனி களின் நெகிழ்வுத் தன்மையைத் தக்க வைக்க உதவுகிறது. மேலும் ரத் தத்தின் வெள்ளை அணுக் கள் ரத்த நாளச்சுவர்களில் ஒட்டும் தன்மையை வெகுவாகக் குறைக்கிறது,<br /><br />தமனிகளின் விரைப்புத் தன்மையும், வெள்ளை அணுக்களின் ஒட்டும் தன் மையும் தமனி வீக்கத்துக் குக் காரணமாக அமை கின்றன. இச்செயல்கள் தடுக்கப்படுவதால் இதயம் ஆரோக்கியமாக இருப்பது உறுதி செய்யப்படுகிறது.<br /><br />ஆய்வில் ஈடுபட்ட டைடெரிக் எஸ்ஸெர் கூறி யதாவது: டார்க் சாக்லெட் டுகளில் உள்ள பிளாவனல் கள் உணவு அருந்தும் தூண் டலை நிறுத்துகின்றன. இந்த சாக்லெட்டுகள் ஆரோக்கிய மானவைதான் என்றார்.<br /><br />நடுத்தர வயதுடைய அதிக எடைகொண்ட 44 பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. நான்கு வாரங்களுக்கு தினமும் 70 கிராம் அளவுக்கு அவர்கள் சாக்லெட் எடுத்துக் கொண் டனர். அவர்களைத் தொடர்ந்து ஆய்வு செய்ததில் மேற் கண்ட முடிவுகள் அறிவிக் கப்பட்டுள்ளன.<br /><br />Read more: http://viduthalai.in/e-paper/76238.html#ixzz2urBWgwIi<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-11975960799512292292014-03-03T06:26:12.929+05:302014-03-03T06:26:12.929+05:30
அலைப்பேசியைப் பயன்படுத்துபவரா நீங்கள்?
சென்னை.ம...<br />அலைப்பேசியைப் பயன்படுத்துபவரா நீங்கள்?<br /><br /><br />சென்னை.மார்ச்.2- அலைப்பேசி பயன்படுத்து வோருக்கு வரும் அழைப்பு யாரிடமிருந்து வருகின்றது என்பதை அறிய வேண்டும் என்றால் ஏற்கெனவே அலைப்பேசியின் தொடர் புகள் பட்டியலில் பெயர் பதிவு செய்திருந்தால் அழைப் பவர் பெயர் திரையில் தெரியும். பதிவு இல்லாமல் இருந்தால் வெறுமனே அழைப்பவரின் எண் மட்டுமே தெரியும்.<br /><br />அலைபேசியைப் பயன் படுத்துவோர் ட்ரூ காலர் (True Caller) என்கிற அழைப் பவர்களின் பெயரைக் காட் டும் நவீன வசதியை தர விறக்கம் செய்துகொண் டால் வரும் அழைப்பாளர் களின் பெயர், அவர் அலைப் பேசியில் இல்லாவிட்டா லும் திரையில் அழைப்ப வர் பெயர் தெரியும்.<br /><br />இது தான் ட்ரூ காலர் வசதி ஆகும். ஒவ்வொருவரும் அவரவர் பழக்கங்களுக்கு ஏற்ப மாற்றுப்பெயர் கொடுத்து பதிவு செய் திருப்பார்கள். அப்படி தனிப்பட்ட விஷய மாக உள்ள அனைத்தும் பொதுப் படை ஆகிவிடும் நிலை ட்ரூ காலர் மூலம் ஏற்பட்டு விடும். ஒருவர் தம்முடைய அலைப்பேசி யில் பெயர் பதிவு இல்லாத வர் அழைக் கும்போது புரிந்து கொள்ள முடியாமலும் திண் டாடும் நிலையும் ஏற்படுகிறது.<br /><br />இதில், தனிப்பட்ட முறையில் உள்ளவை பொது வாகும்போது செல்லப் பெயர், புனைப்பெயர் என்று இருப்பவை பொது வாகி விடுவதால் தனிப்பட் டவர்களின் தனிமை, சுதந் திரம் அபகரித்துப் பறிபோ கும் நிலை ஏற்பட்டுள்ளது.<br /><br />Read more: http://viduthalai.in/e-paper/76237.html#ixzz2urBJrr6n<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-49866454433393691242014-03-02T06:46:16.827+05:302014-03-02T06:46:16.827+05:30
சிவனே! உனக்கு ரோஷமுண்டா?
ஏ! சிவனே! நீ அருளிய தமி...<br />சிவனே! உனக்கு ரோஷமுண்டா?<br /><br />ஏ! சிவனே! நீ அருளிய தமிழ் என்கிறார்கள் பண் டிதர் முதல் பாமரர் ஈறாக. இன்று உன் தமிழுக்கு உலை வைக்கப் பார்க்கிறார்கள். ஊரை ஏய்க்கும் பார்ப்பனர் கள். நீ என்ன செய்கிறாய்? எங்கோ ஓர் உலகத்தில் இருப் பதாகச் சொல் லுகிறார்கள். உன் பக்தர்கள், விலாசம் தெரிந்தாலும் இங்கு நடை பெறும் அக்கிரமத்தைக் குறித்து உனக்கு அடிக்கடிக் கடிதமாவது எழுதுவேன். பரவாயில்லை, நீ திரிகால ஞானி என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அதனால்தான் இதையும் நீ அறிந்து கொள்வாய் என்ற நம்பிக்கையோடு இந்தப் பத்திரிகை மூலமாகவே எழுதத் தொடங்குகிறேன்.<br /><br />இந்தத் தமிழ்நாட்டு மக்களிடம் எப் படியோ அக்காலத்தில் மதிப்புப் பெற்று விட்டாய்! ஆனால் பார்ப்பனர் மட்டும் உனக்குச் சிறிது மதிப்புக் கொடுத்தார்கள். வேறொரு காரணத்தை உத்தேசித்து! அப்பார்ப்பனரும், அவர் வால் பிடிக்கும் தமிழரும் இன்று உன் வார்த்தையை ஒரு செல்லாக் காசுக்குக்கூட மதிக்கவில்லை. நீ அருளிய மொழி இரண்டாம் ஒன்று ஆரியமாம்; மற்றொன்று தமிழாம். அந்தத் தமிழுக்கு வாய்த்த கதியை அறிந்தாயா? உன் ஒரு கண்ணை அடியோடு நோண்டி எடுப்பதுபோல் அத்தமிழை அடியோடு கல்லி ஏறிய முயற்சித்து விட்டார்கள். உன்னிடம் கொஞ்சமாவது மதிப்பிருந் தால் - பயபக்தி இருந்தால் அந்தத் திமிர் கொண்ட பார்ப்பனர் உன் ஒரு கண்ணை நொள்ளையாக்க முயல்வார்களா?<br /><br />அவர்கள்தாம் அப்படிச் செய்தாலும் நீதான் காட்டிக் கொண்டிருக்கலாமா? எல்லாம் நீ என்கிறார்கள். ஒரு சமயம் நீ இப்பொழுது சூடு சொர் ணையற்ற எருமை மாடாக இருக்கிறாயா? அகத்தியன் தான் நீ சொனன தமிழை வளர்த்தானாம், அவனை யும் மண்ணோடு மண்ணாக மாளச் செய்து விட்டாயாம்! பிறகு சங்கங் கண்டு புல வர்கள் வளர்த்தார்களாம். அக்காலத்தில் நீயும் இடை யிடையே மாற்றுருக் கொண்டு வந்து தமிழை வளர்த்தாயாம் தமிழுக்கு ஆபத்து வந்த இச்சமயத்தில் நீ என்ன செய்து கொண்டி ருக்கிறாய்? ஒரு சமயம் கங்காதேவியின் காதலில் கட்டுண்டு கிடக் கிறாயா? அல் லது பார்வதிதேவியோடு களியாட்டம் ஆடுகின்றாயா?<br /><br />எனக்கு ஒரு சந்தேகம் உனது பிரதி பிம்பம் என்று சொல்லுகிறார்களே இங் குள்ள விக்கிரகங்களை, அவை முன் னெல்லாம் பேசினவாம். இப்போது என்ன செய்தாலும் சொரணையற்றுக் கிடக் கின்றன. அதனால் நீயும் ஒரு சமயம் மாண்டு போய் விட்டாயோ? இல்லை இல்லை. நீ என்றும் அழியாதவன் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அப்படியா னால் நீ என்னதான் பண்ணிக் கொண்டி ருக்கிறாய்? பார்ப்பனர் செய்யும் படுமோ சத்தைக் கண்டும் நீ வாளா விருப்பதேன்? மானம், ஈனம், ரோஷம் என்கிறார்களே அவை உன்னைவிட்டு அகன்றுவிட் டனவா? அப்படிக்கின்றி உனக்கு ரோஷ மிருக்கிறதென்றால் உன் தமிழைக் காப் பாற்ற ஓடிவா! அல்லாவிட்டால் உன் எதிரில் ஆடிக் கொண்டிருக்கிறாளாமே அவளை அனுப்பி உன் தமிழை அழிக்கும் கூட்டத்தாருக்கும் ஆளுக்கு ஒரு கரண்டி எண்ணெய் கொடுத்து விட்டுப் போகச் சொல்!<br /><br />- சிவப்பிழம்பு<br /><br />Read more: http://viduthalai.in/page8/76227.html#ixzz2ulPs8BAq<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-29367225730485964652014-03-02T06:44:43.759+05:302014-03-02T06:44:43.759+05:30
மூக்கின் வழி மூடநம்பிக்கை
அது ஒரு வைதீகத் திரும...<br />மூக்கின் வழி மூடநம்பிக்கை<br /><br /><br />அது ஒரு வைதீகத் திருமணம், நட்புக் காக தோழர் ஒருவருடன் சென்றிருந்தோம். நிகழ்ச்சியுடன் ஒன்றிய புகை மூட்டமும் எழுந்தது. கெட்டி மேளம் கொட்டும் வேளை வந்தது. உடன் வந்த தோழர் விர் என்று எழுந்து வெளியே சென்றார். மாங்கல்யம் கட்டி முடித்த பிறகு வந்தார். என்ன அப்படி அவசரம்? என்றேன், தும்மல் வந்தது, தாலி கட்டும் நேரத்தில் தும்மல் எற்பட்டு திருமண வீட்டார் என்னை முகம் திரிந்து நோக் குவரே என்ற அச்சத்தினால் வெளியே சென்றேன் என்றார். புகைச்சல் நெடி, என்ன செய்வது! என்றார். மூட நம்பிக்கை முகாமிட்டிருக்கும் இடத்தில் பண்போடு நடந்து கொண்ட நண்பரைப் பாராட்டினேன். இந்த தும்மலைப்பற்றி சில கருத்தோட்டம், உடலில் ஏற்படும் சளி, தூசு, காற்று போன்ற பல காரணங்களி னால் தும்மல் ஏற்படுவது இயற்கை. எங்கள் வீட்டில் எவரேனும் தும்மினால், என் பாட்டி நூறுவயது என்று உடனே சொல்வார். காரணம் பற்றி சிந்தித்த தில்லை, இந்த அனுபவம் பலருக்கும் ஏற்பட்டிருக்கும்.<br /><br />மேலை நாட்டு மக்களிடையேகூட இதைப் போன்ற பழக்கம் இருந்து வருகிறது. அனைத்தும் பழக்கத்திலிருந்து வரும் மூட நம்பிக்கையே. மேலை நாட் டில் ஒருவர் தும்மினால் ஆசிர்வதிக் கிறேன் ஙிறீமீ சீஷீ என்று பக்கத்தில் இருப்பவர் கூறுவதுண்டு, காரணம்? ஒருவர் தும்மும் போது மூச்சின் வழியாக அவரின் ஆவி - உயிர் வெளிவந்து இறப்பை ஏற்படுத்தும். இந்த இறப்பைத் தடுக்க கடவுளின் ஆசிர்வாதத்தை வேண்டி, மூக்கின் வழி உயிர் வெளியேறுவதைத் தடை செய்வதே நோக்கம், ஒரு மூடநம்பிக்கை.<br /><br />பாட்டியின், நூறு வயது என்பது பெயரனுக்கு வாழ்த்து கூறும் வகையில் அமைவதாக உள்ளது என்பதாக எடுத்துக் கொள்வோம்.<br />- மு.வி. சோமசுந்தரம்<br /><br />Read more: http://viduthalai.in/page7/76225.html#ixzz2ulPTx4Oy<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-22091696120132713482014-03-02T06:44:03.947+05:302014-03-02T06:44:03.947+05:30
குடிஅரசு இதழிலிருந்து
சமஸ்கிருதம் உயிருள்ளதா?
இ...<br />குடிஅரசு இதழிலிருந்து<br /><br />சமஸ்கிருதம் உயிருள்ளதா?<br /><br />இந்தி மொழி கட்டாயப் பாடமாக திராவிட நாட்டில், காங்கிரஸ் (ஆரிய) மந்திரிகளால் புகுத்தப்பட்ட காலையில், இந்தி ஆரிய வர்க்க மொழியென்றும், அம்மொழி கட்டாயப் பாடமாக சிறுவர்களுக்குக் கற்பிக்கப்படுமேயாகில், திராவிடச் சிறுவர்கள், எதிர்காலத்தில், திராவிடக் கலை, நாகரிகம், பழக்கம் வழக்கம் ஆகியவைகளை மறந்து ஆரியத் திற்கே அடிமையாய் விடுவார்கள் என்றும், மக்களின் வாழ்க்கையைத் திருத்துவதற்கு ஒரு ஒழுங்குபடுத்துவதற்கு கல்வியைத் திருத்தியமைத்தால் போதும் என்றும், அதை இன்று ரஷ்யா, ஜெர்மனி, இத்தாலி ஆகிய நாடுகளில் கண்கூடாகப் பார்க்க லாம் என்றும் எனவே, இந்தி மொழி கட் டாயப்பாடமாக புகுத்தக்கூடாதென்று கூறி மறுத்து வந்தது எவ்வளவு உண்மை யானது என்பதை சமீப காலமாக இந் (திராவிட) நாட்டிலுள்ள ஆரிய வர்க்கத் தினர் சாஸ்திரிகளும், ஆச்சாரிகளும் பேசி வருவதும், அறிக்கைகள் விடுவதும் நன்கு விளங்கும்.<br /><br />ஆரிய ஆதிக்கத்தை ஆரிய செல் வாக்கை இந்நாட்டை விட்டு விரட்டி யடிக்க, குழி தோண்டிப் புதைக்க திராவி டர்கள் விழிப்படைந்து விட்டார்கள், தூங்கினவன் தொடையில் கயிறு திரிப்பது இனி செல்லாது என்பதை உணர்ந்து தான் ஆரிய வர்க்கத்தார், அதை நிலைநிறுத்த வேறுவழி செய்தால் பலிக்காது என்று கருதி மொழியின் மூலமாக இஞ்சக்ஷன் செய்ய முனைந்திருக்கின்றனர்.<br /><br />நாம் ஒன்று மிகைப்படுத்தியோ அல் லது அவர்களைப் போல் கற்பனை செய்தோ கூறுவதாக யாரும் கருத வேண்டிய தில்லை. நாம் சொல்வது எவ்வளவு ஆதார முடையதென்பது இந்நாட்டில் பத்திரி கைகள் படிப்போர்களுக்கு நன்கு தெரிய வரும்.<br />அவர்கள் ஒரு நாளும் நாம் சொல்வதை மறுக்க முன் வரார் என்றே கருதுகிறேன்.<br />(குடிஅரசு தொகுதி 29 - பக்கம் 68)<br /><br />பார்ப்பனீயம் சுலபத்தில் சாகாது<br />தஞ்சை ஜில்லா திருவையாறு வட மொழிக் கல்லூரியில் மாணவர்களுக்கு அளிக்கும் இலவசச் சாப்பாட்டு விடுதியில் பார்ப்பனர்களுக்கு வேறு உண்ணல் இடமும், பார்ப்பனர் அல்லாதாருக்கு வேறு உண்ணல் இடமும் இருந்து வந்தது.<br /><br />தென் இந்திய ரயில்வே உண்டி நிலை யங்களில் இருந்து வந்த மேற் கண்டது போன்ற இடப்பிரிவு பெரியார் முயற்சியின் பயனாய் அகற்றப்பட்ட பின் தஞ்சை ஜில்லா போர்டாரும் திருவை யாற்றில் நீக்கி இரு பிரிவினரும் ஒன்றாய் இருந்து உணவருந்த வேண்டுமென்று கட்டளை இட்டனர். அதன்பின் பார்ப்பனர் கூப் பாடு போட்டனர்.<br /><br />போர்டார் அதை சட்டை செய்யவே இல்லை. அதன்பின் பார்ப்பனர் மகாகனம் சாஸ்திரியார் உள்பட சர்க்காரிடமும் தூது சென்றனர்.<br /><br />(குடிஅரசு தொகுதி 30 - பக்கம் 64)<br /><br />தமிழர்களின் புத்தாண்டு<br /><br />தமிழர்களின் புத்தாண்டு நல்ல அறி குறிகளோடு காணப்படுகிறது.<br /><br />ஒவ்வொரு ஆண்டிலும் தை பிறப் பதும், பொங்கல் வைப்பதும் வழக்கமாக நடைபெற்று வரக்கூடியனதாம் என்றா லும், ஆயிரமாயிரம் ஆண்டுகளாக ஆரிய இருளில் சிக்கித் தவித்துத் தன்னிலை மறந்து தாசி மக்களாய் - வேசி மக்களாய் வாழ்ந்த தமிழினம், அவ்விழிவைத் துடைத் துத் தம் மானிடத் தன்மையைப் பேணி, நல் வாழ்வு வாழ்வதற்கான ஊன்று கோலைப் பெறுவதற்கு வழி பிறக்க வில்லை.<br /><br />இந்தப் புத்தாண்டைக் கருவியாகக் கொண்டு தந்தை பெரியாரவர்களால் தமிழ் மக்களுக்கு ஊன்று கோல் கொடுக்கப்பட் டிருக்கிறது என்பதைத்தான் நாம் நல்ல அறிகுறி என்கிறோம்.<br />ஏய்க்கப் பிறந்தவன் பார்ப்பான் -<br /><br />ஏமாறப் பிறந்தவன் தமிழன்<br />என்று பார்ப்பனர்கள் எழுதி வைத்துக் கொண்டிருப்பதை நடைமுறையில் வற் புறுத்திக் கொண்டிருந்தன சங்கராந்தி அதுபோன்ற மற்றவை<br />அதாவது தமிழனுக்கு உரியது,<br />பெருமைதரக்கூடியது<br />எதெது உண்டோ,<br />அதெல்லாவற்றையும் உருவை மாற்றி பெயரை மாற்றிச்<br />சமஸ்கிருதக் கலப்பை -<br /><br />ஆரியக் கலப்பையுடையது போல ஆக்கி விட்டார்கள் பார்ப்பனர்கள். ஏமாந்த இனம் அதை ஏற்றுக் கொண்டது.<br /><br />பொங்கல் சங்கராந்தியாக ஆனது. சங்கராந்தியன்று பொங்கல்தான்!<br /><br />தமிழன் பெருமை கொள்ளக்கூடிய ஒரே ஒரு பெருநாள், உழைப்பை உயர்வுபடுத்தும் நாள் பொங்கல் நாள்! (குடிஅரசு தொகுதி 41 - பக்கம் 21)<br /><br />- க.பழனிசாமி, தெ.புதுப்பட்டி<br /><br />Read more: http://viduthalai.in/page7/76222.html#ixzz2ulPJeIQP<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-37175007562398759972014-03-02T06:42:03.418+05:302014-03-02T06:42:03.418+05:30
சிந்துவெளி நாகரிகம்
உலகின் பண்டைய நாகரிகங்களுள...<br />சிந்துவெளி நாகரிகம்<br /><br /><br /><br />உலகின் பண்டைய நாகரிகங்களுள் சிறந்து விளங்கிய நாகரிகம் சிந்துவெளி நாகரிகம். இந்நாகரிகத்தின் சிறப்பு, அம்மக்கள் பிறரிடம் கொண்டிருந்த வணிகத் தொடர்பு, கட்டடக் கலையில் அவர்களின் நுண்கலையறிவு, உற்பத் தித்திறன் மற்றும் அந்நாகரிகத்தின் பரப்பு போன்ற பலவும் வியக்கத்தக்க வகையில் இருந்தன. இவற்றை அப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட அகழ் வாய்வுச் சான்றுகள் மூலம் விளங்கிக் கொள்ள முடியும். இச்சிறப்பின் காரண மாக வரலாறு, தொல்லியல், மானுடவி யல், மொழியியல், கணிதவியல், புள்ளி யியல் வானவியல், கணினி அறிவியல், கட்டடக் கலை என பல்துறைசார்ந்த அறிஞர்களும் இத்துறையில் ஈடுபட் டுள்ளனர்.<br /><br />இப்பெரும் நாகரிகத்தின் வீழ்ச்சிக் கான காரணம் இன்னும் முழுமையாக ஆராயப்படாத நிலையில் உள்ளன. அதே போன்று சிந்துவெளி எழுத்துக் களும் முழுமையாகப் படிக்கப்படாத நிலையிலேயே உள்ளது. இவ்விரு கார ணங்களும் ஆய்வாளர்களின் கவனத்தை அதன் பக்கம் ஈர்த்துள்ளது. ஆகையால் அவ்வெழுத்துகளைப் படிப்பதற்கான முயற்சிகள் உலகின் பல்வேறு இடங் களில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.<br /><br />சிந்துவெளி நாகரிகம் அழியாமல் இன்றுவரை நம்மிடையே நீடித்திருக் கிறது என்பதற்குப் பல சான்றுகள் உள் ளன. உதாரணமாக அவை நடை முறை யில் தொன்மக் கதைகளாகக் குறியீட்டு வடிவில் காணப்படுகின்றன. சிந்துவெளி மக்கள் பேசிய மொழி, பண்டைய திராவிட மொழி என்பதற்கான நம்பத் தகுந்த சான்றுகள் உள்ளன. சிந்து வெளிக்கும் தமிழ் மொழிக்கும் உள்ள தொடர்பு குறித்து அய்ராவதம் மகா தேவன், அஸ்கோ பர்போலா போன்ற ஆய்வறிஞர்கள் தங்களின் ஆய்வுகள் மூலம் நிறுவியுள்ளனர். மேலும் இவ் விரண்டு நிலப் பரப்பிற்குமான பண் பாட்டுத் தொடர்புகளையும் சுட்டிக் காட்டியுள்ளனர். மாண்புமிகு தமிழக முதலமைச்சரும் இத்தொடர்புகளை அடையாளம் கண்டு உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டிற்கான சின்னத் தில் சிந்து வெளிக் கூறுகளை இணைத் துள்ளார். உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு, சிந்துவெளி நாகரிகத்தின் சிறப்பையும் பண்டைய நாகரிகங்களான திராவிட நாகரிகத்திற்கும் சிந்துவெளி நாகரிகத்திற்கும் இடையே உள்ள பண்பாடு மற்றும் மொழியியல் தொடர் பையும் இக்கண்காட்சி மூலம் காட்டுவ தற்கான வாய்ப்பை நல்கியுள்ளது.<br /><br />Read more: http://viduthalai.in/page5/76214.html#ixzz2ulOormdp<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-46490553363223661962014-03-02T06:41:07.290+05:302014-03-02T06:41:07.290+05:30
சோதிடம்பற்றி கிருபளானி
இங்கு ஜனநாயகமும் இல்லை. ச...<br />சோதிடம்பற்றி கிருபளானி<br /><br />இங்கு ஜனநாயகமும் இல்லை. சோஷலிசமும் இல்லை. எனக்குத் தெரியும், ஒவ்வொரு மந்திரியும் ஜோதிடரிடம் சென்று ஆலோசிக்கத் தவறுவதே இல்லை. அவர்கள் (அமைச்சர்கள்) உடுத்தும் துணியின் நிறங்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதைக்கூட ஜோஸ்யர்கள் தீர்மானிக்கிறார்கள்! இத்தகையவர்கள் சோஷலிசம் என்றும், ஜன நாயகம் என்றும் பேசிக் கொண்டே இருக்கிறார்கள். சிறிய உள்ளங்கள், பெரிய வார்த்தைகள் என்ற ரகத்தில்தான் இவர்கள் சேர்க்கப்பட வேண்டியவர் களாவார்கள். - ஜே.பி. கிருபளானி<br /><br />Read more: http://viduthalai.in/page4/76213.html#ixzz2ulOaLXJp<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-22449655968382896952014-03-02T06:40:24.275+05:302014-03-02T06:40:24.275+05:30
மனிதன் செத்தால்... பிறகு? - தந்தை பெரியார்
மனித...<br />மனிதன் செத்தால்... பிறகு? - தந்தை பெரியார்<br /><br /><br />மனிதன் செத்துப் போனான் என்பதற் குப் பொருள் மனிதன் இயங்குவதற்கு ஆதாரமாகவுள்ள சுவாசம் அதாவது மனி தன் மூக்கால், வாயால் உள்ளே இழுத்து வெளியே விடும் காற்றுப் போக்குவரத்து நின்று விட்டால், அதாவது அந்தக் காற்றை இழுக்கும் சக்தி அந்த உடலுக்கு இல் லாமல் போனால் செத்துப் போனான் என்பது பொருள். உடனே மனிதன் பிண மாகி விடுகிறான். இந்தக் காற்றுப் போக்கு வரத்திற்குக் காரணமான உடலிலிருக்கும் சக்தி வேலை செய்யச் சக்தியற்றுப் போய் விட்டால் சுவாசம் நின்று விடுகிறது.<br /><br />இந்த நிலையைத் தான் மதவாதிகள் மூடநம்பிக்கைக்காரர்கள் ஆத்மா உடலை விட்டுப் பிரிந்து போய் விட்டது என்று சொல்லுகிறார்கள். ஆத்மா என் றாலே சுவாசம் (காற்று) என்றுதான் பொருள் அது பிரிவதும் இல்லை. பிரிந்து எங்கும் போவதுமில்லை.<br /><br />உதாரணமாக, ஒரு மனிதனின் மூக்கை யும், வாயையும் காற்றுப் போகாமல் வரா மல் மூடி அழுத்திப் பிடித்துக் கொண்டோ மானால் அந்த மனிதன் துள்ளிக் குதித்து ஆடி அமர்ந்து செத்தே போகிறான். இப்படி ஆகி விடுவதில் ஆத்மா பிரிகிறது? எங்கே இருக்கிறது? ஆத்மாவைச் சொன்ன வன் ஆத்மாவிற்கு உருவமில்லை. அரூ பம் கண்ணுக்குத் தெரியாதது. சூட்சமம், கண்டுபிடிக்க முடியாதது என்றுதான் சொன்னானேயொழிய அதை ஒரு வஸ்து வாக்கவில்லை.<br /><br />இந்தப்படி முடித்து விட்டுப் பிறகு அது மேல் லோகத்திற்குப் போய் உரு வெடுத்து அதே மனிதனாகிக் காமத்தை அனுபவிக்கிறது என்று புளுகி இருக் கிறான். கிறிஸ்தவர்களும், முஸ்லீம்களும் இதில் கொஞ்சம் மாற்றம் செய்து சரீரத்தை விட்டு ஆத்மா பிரிந்தாலும் விசாரணை - தீர்ப்புக்காலம் வந்தவுடன் பிரிந்த ஆத்மா மறுபடியும் சரீரத்திற்குள் வந்து, புகுந்து தீர்ப்பை ஏற்கிறது (ஜட்ஜ் மென்ட் டே) என்பதாகக் கருதுகிறார்கள்.<br /><br />இப்படி எல்லாம் மதக்காரர்கள் ஏன் சொல்கிறார்கள் என்றால் கடவுளுக்கு மனிதன்மீது ஒரு அதிகாரம் (வேலை வேண்டுமென்பதற்காகவேயாகும்.<br /><br />மனிதன் செத்த பிறகு கடவுள் அவனை ஒன்றும் செய்ய முடியாது என்றாகி விட் டால் கடவுளை எவன்தான் சட்டை செய் வான்? ஏன் எதற்காக? சட்டை செய்வான்?<br /><br />ஆனதினாலேயே கடவுள் பெயரால் முட்டாள்களும் பிழைக்க வேண்டிய அயோக்கியர்களும் இந்த ஏற்பாடு செய்து விட்டார்கள். சரீரத்தை விட்டு ஆத்மா பிரித்தால் அது மோட்சத்திற்குப் போவதா? நரகத்திற்குப் போவதா? மறு ஜன்மம் எடுப்பதா? பிதிர் லோகத்தில் வாழ்வதா? பேயாய் அலை வதா? செத்தவனுக்காகச் செய்யப்படும் காரியங்களை அனுபவிப் பதா? இவற்றில் எந்தக் காரியத்திற்குச் செத்தவன் ஆளாவது?<br /><br />செத்தவனைப் புதைத்தால் உடல் முழுவதும் நிராகர மண்ணாக ஆகி விடு கிறது. நெருப்பில் கொளுத்தினால் சரீரம் முழுவதும் சாம்பலாக ஆகிக் காற்றில் பறந்து மறைந்து விடுகிறது. இரண்டு மில்லாமல் பூமியில் கிடந்தால் கழுகு, காக்கை, நரி, நாய், மற்றும் மாமிச பட்சிணி ஜீவன்கள் தின்று தீர்த்து விடுகின்றன.<br /><br />ஆகவே செத்த மனிதன் எப்படி இருப் பான் எதை அனுபவிப்பான் எங்கே இருப் பான் என்பவற்றையும் இந்த அனுபவம் எல்லாம் மனிதனுக்கு மாத்திரம்தானா மற்ற ஜீவன்களுக்கும் மற்றும் செத்துப் போன பட்டுப் போன மரம், செடி, கொடி புல், பூண்டுகளுக்கும் உண்டா என்பதை யும் ஆறறிவுள்ள மனிதன் சிந்தித்துப் பார்ப்பானாக.<br /><br />Read more: http://viduthalai.in/page4/76212.html#ixzz2ulOMQrGH<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-88231349396056325242014-03-02T06:39:36.659+05:302014-03-02T06:39:36.659+05:30
இராமாயண கால மது வகைகள்
டில்லியிலிருந்து வெளியாக...<br />இராமாயண கால மது வகைகள்<br /><br /><br />டில்லியிலிருந்து வெளியாகும் என்ற ஆங்கிலப் பத்திரிகையின் 15.8.1954-ஆம் தேதிய இதழில் இராமாயணத்தில் மதுக்குடி என்ற தலைப்பில் டாக்டர் எஸ்.என். வியாஸ் என்பவர் எழுதியுள்ள கட் டுரையில் காணப்படுவதாவது:<br /><br />1. கிதைசுரா: இது காய்ச்சி இறக் கப் படும் சாராயத்துக்குப் பெயர்.<br /><br />2. மைரேயா: வாசனையூட்டப் பட்ட பானம்: சர்க்கார் மதுவென் றும் கூறுவர்.<br /><br />3. மத்யா: போதை தரும் பானகம்.<br /><br />4. மந்தா: இது சாதாரண சாராயத் திலுள்ள அமித போதை தணிக்கப்பட்டது. இதற்குப் பிதாமந்தா என்றும் பெயர். போதை இருக்காது; எனவே இதனை யாரும் குடிக்க விரும்பார்.<br /><br />5. சுராபானம்: கிதை சுராவுக்கு மாறானது. கிதை சுராபானம் செயற் கையால் செய்யப்படுவது. சுரா என்பது இயற்கைச் சாராயம் இயற்கை முறையில் வடித்தெடுக் கப்படுவது. இது சாதாரண மக் களின் பானம். இதைப் பற்றித் தான் புராணங்களில் அதிகமாகக் குறிப் பிடப்பட்டுள்ளது.<br /><br />6. சிந்து: கழிவு வெல்லப் பாகி லிருந்து வடித்தெடுக்கும் பானம்.<br /><br />7. சௌவீரகா: மட்டரகப் பானம்.<br />bv8. வாருணி: அக்காலத்தில் உப யோகிக்கப்பட்ட மது வகைகளில் மிகவும் காட்டமானது (போதை அதிகமானது) இந்த பானம், இதனைக் குடித்த அதே நொடியில் போதையுண்டாகித் தள்ளாடி விழச் செய்து விடுமாம்.<br /><br />Read more: http://viduthalai.in/page4/76211.html#ixzz2ulOCogl8<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-80798118428553413142014-03-02T06:38:57.807+05:302014-03-02T06:38:57.807+05:30
இங்கர்சால் பொன்மொழிகள்
உண்மையே உலகத்தின் ஞானச்செ...<br />இங்கர்சால் பொன்மொழிகள்<br /><br />உண்மையே உலகத்தின் ஞானச்செல்வம்<br /><br /> உண்மையராய்ச்சியே யாவற்றிலும் மேலான தொழில்.<br /><br /> ஜோதிமயமான முன்னேற்ற மாளிகைக்கு அடிப்படையாகவும் ஸ்தூபியாகவும் இருப்பது உண்மையே.<br /><br /> உண்மை ஆனந்தத்தின் தாய். உண்மை மக்களை நாகரிகப் படுத்துகிறது; உண்மை மக்கள் உள்ளத் திலே உன்னத லட்சியத்தைத் தோற்று விக்கிறது; மக்கள் உள்ளத்தைப் புனிதப்படுத்துகிறது.<br /><br /> உண்மையை அறிவதைவிட உயர்வான லட்சியம் மக்களுக்கு இல்லவே இல்லை.<br /><br /> நன்மை செய்வதற்கான அபார சக்தியை உண்மை மனிதனுக்குக் கொடுக்கிறது.<br /><br /> உண்மையே கட்கமும் (வாள்) கவசமும்.<br /><br /> உண்மையே ஜீவியத்தின் புனித ஒளி.<br /><br /> உண்மையைக் கண்டுபிடிக்கும் மனிதன் வாடா விளக்கு ஏற்று கிறான்.<br /><br /> பகுத்தறிவின் உதவியால் ஆராய்ச்சி செய்து, சோதனை நடத்தி, உண்மையைக் கண்டுபிடிக்க வேண் டும்.<br /><br /> அவரவர் ஆற்றலுக்கும், விருப் பத்துக்கும் தக்கபடி உண்மையைக் கண்டுபிடிக்க ஒவ்வொருவருக்கும் வசதி அளிக்க வேண்டும்.<br /><br /> உலக இலக்கியங்களெல் லாம் மக்களுக்குப் பொது. அவற்றை எல்லோரும் படிக்க வசதியிருக்க வேண்டும்; எத்தகைய தடையும் இருத்தல் கூடாது.<br /><br /> சாமானிய மக்களால் அறிய முடியாதபடியான எந்த விஷயமும் அவ்வளவு உயர்வானதல்ல - புனித மானதல்ல.<br /><br /> நூல்களைச் சுயமாக வாசித்து அவரவருக்கு விருப்பமான முடிவுக்கு வர ஒவ்வொருவருக்கும் வசதியும் சுதந்தரமும் அளிக்க வேண்டும்.<br /><br /> அவனவனுக்குத் தோன்றும் உண்மையான அபிப்பிராயங்களை வெளியிடவும் தடையேற்படுத்தக் கூடாது.<br /><br /><br />Read more: http://viduthalai.in/page4/76210.html#ixzz2ulO2RNVD<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-76553607151467282792014-03-02T06:38:04.375+05:302014-03-02T06:38:04.375+05:30
ஜிமெயிலை தமிழ் மொழியில் பயன்படுத்துவது எப்படி?
ம...<br />ஜிமெயிலை தமிழ் மொழியில் பயன்படுத்துவது எப்படி?<br /><br />மின்னஞ்சல் கணக்கு என்பது இணையத்தில் உலவும் அனைவருக்கும் மிக மிக அவசியமான ஒன்று.அதற்கு ஜிமெயில் நமக்கு பெரிதும் உதவுகிறது. இதில் சில நேரங்களில் மொழிப் பிரச்சினை காரணமாக நாம் பலவற்றின் அர்த்தம் தெரியாமல் இருப்போம். அதே ஜிமெயில் முழுவதையும் தமிழில் மாற்ற முடிந்தால்?<br />இது கொஞ்சம் பழைய வசதி தான் என்றாலும் இதன் பதிவின் இரண்டாம் பகுதி உங்களுக்கு உதவக் கூடும்.<br />1. முதலில் உங்கள் ஜிமெயில் கணக்கில் நுழைந்து கொள்ளுங்கள். Settings பகுதிக்கு வரவும்.<br />2. இப்போது “General” Tab இல் இருப்பீர்கள். இதன் முதல் வசதியாக “Language” என்பது இருக்கும்.<br />3. இப்போது அதில் “Gmail display language” என்பதில் தமிழ் மொழியை தெரிவு செய்யுங்கள். அடுத்து “Would you also like to make Tamil you language for other google sites “ என்பதற்கு Yes or No கொடுத்து விட்டு Scroll செய்து கீழே வந்து Save Changes என்பதை கொடுத்து விடுங்கள்.<br />இனி ஜிமெயில் முழுக்க முழுக்க தமிழ் மொழிக்கு மாறிவிடும். ஆங்காங்கே மிகச் சில ஆங்கில சொற்கள் இருந்தால் அடிக்கடி பயன்படுத்தும் அனைத்துமே தமிழ் அல்லது ஆங்கில உச்சரிப்பின் தமிழ் வார்த்தையில் இருக்கும். என்னுடைய ஜிமெயில் பக்கம் கீழே படத்தில் உள்ளது.<br />இனி உங்களுக்கு எளிதாக ஜிமெயிலை நீங்கள் உபயோகிக்க முடியும்.<br />4. இல்லை நான் ஜிமெயிலை ஆங்கிலத்தில் பயன்படுத்த விரும்புகிறேன், ஆனால் எனக்கு அதில் தமிழ் தட்டச்சு செய்யும் வசதி வேண்டும் என்று கேட்பவர்களுக்கும் அதற்கான வசதி உள்ளது.<br />5. மேலே Step – 2 இல் உள்ள படத்தில் “Show All Language Options” என்று உள்ளதல்லவா அதை கிளிக் செய்து, “Enable input tools” என்பதை கிளிக் செய்து செய்யுங்கள். இப்போது ஒரு சிறிய விண்டோ வந்து input tools என்ன இருக்கிறது என்று காட்டும். தமிழுக்கு மூன்று வகையான Tools உள்ளன.<br />இதில் Unicode முறை வேண்டும் என்பவர்கள் முதலாவதாக உள்ள “தமிழ்” என்பதை பயன்படுத்தவும். Inscript Keyboard பயன்படுத்த விருப்பம் உள்ளவர்கள் இரண்டாவதையும், போனெடிக் முறைக்கு மூன்றாவதையும் பயன்படுத்தலாம். முன்பு Unicode முறை மட்டுமே கொடுத்து இருந்தார்கள். இப்போது மற்ற இரண்டையும் பயன்படுத்துபவர்களுக்கும் இது உதவும்.<br />இப்போது OK கொடுத்து பின்னர் Save Changes என்பதை கொடுத்து விடுங்கள்.<br />இப்போது உங்கள் புதிய மின்னஞ்சலில் தமிழில் தட்டச்சு செய்ய வலது மேல் புறம் Settings Icon க்கு அருகில் கீழே படத்தில் உள்ளது போல உள்ளத்தில் “த” என்பதை கிளிக் செய்து விட்டு தட்டச்சு செய்யலாம்.<br /><br />அவ்வளவே. இதில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் கீழே கேளுங்கள்.<br />பேஸ்புக்கை தமிழில் பயன்படுத்த இதை பதிவை படிக்கவும் - Facebook- இதெல்லாம் கூட இருக்கா?<br />- பிரபு கிருஷ்ணா<br /><br />Read more: http://viduthalai.in/page3/76207.html#ixzz2ulNoUSmy<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-35110622322671594502014-03-02T06:37:27.741+05:302014-03-02T06:37:27.741+05:30
பார்ப்பனர்கள் பற்றி பர்னட்
திரு. L.D பர்னட் M.A...<br />பார்ப்பனர்கள் பற்றி பர்னட்<br /><br /><br />திரு. L.D பர்னட் M.A., Litt. (D. Borned) என்பவரால் எழுதப்பட்ட இந்தியா வின் இதயம்(“The Heart of Inida”) கபிலரும் பார்ப்பன எதிர்ப்பாளர் களும் என்று மகுடமிட்டு தீட்டியுள்ள பகுதி இங்கு தரப்படுகிறது. - ஆ-ர்<br /><br />உலகின் கவர்ச்சியான பல பகுதிகளில் ஒன்று இந்தியாவின் தென் பகுதி. அதி லுள்ள வினோதமான பல அம்சங்களில் ஒன்று, அங்கு கலப்புப் பண்பாடு (Mixed Culture) நிலவுவது. கிறிஸ்துவுக்கு முன்னால் வட மேற்கு இந்தியாவில் நுழைந்த ஆரிய இனத்தவர்களின் இரத்தத்திற்கும், பேச்சிற் கும் முற்றிலும் வேறான திராவிடர்கள் அங்கு வாழ்கிறார்கள். அவர்களுடைய (ஆரியர்களுடைய) பண்பாடும் மொழி யும் அய்ரோப்பியர்களுடையதை ஒத்தி ருந்தது. நாளா வட்டத்தில் பார்ப்பன மதத்தின் கொள்கைகள் அந்த நாட்டிலுள்ள பழமைவாய்ந்த இறைவழிபாடுகளுடன் கலந்து அவைகளை ஒன்றாகச் சேர்த்து விட்டன. அந்தக் காலத்திலேயே திராவிடர் கள் ஆரிய நாகரிகத்திற்கு எவ்வகையிலும் குறையாத தங்கட்கென ஒரு சிறந்த நாகரி கத்தைப் பெற்றிருந்தனர். ஆரியப் படை யெடுப்பு, பார்ப்பன மதம், சமஸ்கிருத இலக்கியம் - ஆகிய இவைகளின் ஆதிக்க விளைவுகள் பழைமை வாய்ந்த திராவிடப் பண்பு, மதம் ஆகியவற்றின் அறிகுறிகளை பெரும்பாலும் இருட்டடித்த தோடல்லா மல், பல இடங்களில் முழுவதையும் அழித்தே விட்டன! அதனால் அந்தப் பழைய காலத்தின் உணர்ச்சி இன்னும் பல இடங்களில் காணப்படுகிறது. பெரிதும் இது தென் நாட்டின் புகழ் வாய்ந்த செய்யுள் இலக்கியங்களில் நன்றாகக் காணப்படுகிறது!<br /><br />அந்தக் காலத்தில் இங்கிலாந்தில் ஆதிக்க காரர்களாக வாழ்ந்த, நார்மானியர்களைப் போலவே (Normans) தென் இந்தியாவின் பல பகுதிகளில் பார்ப்பனர்கள் இன்று செல்வாக்குப் பெற்றுள்ளனர். அரசியல், மத, படையெடுப்புகள் என்ற உரிமைகள் மூலம் அங்கே வாழ்கிறார்கள்! ஆனால் பொதுவாக இவர்கள் அங்குள்ள சூழ் நிலைகட்குத் தகுந்தாற்போல் தங்களைச் சரிப்படுத்திக் கொண்டு அவர்களுடைய மத, சமூக முறைகளை தென் இந்தியாவின் சொந்த குடிகட்கேற்ப பெருக்கிக் கொண்டு ஒன்றியுள்ளார்கள். அவர்களில் சிலர் இன்னுங்கூட அறிவாளிகளாகவும் உயர்ந்த பண்பாடு உடையவர்களாகவும் இருக்கிறார்கள். எனினும், இன்னும் அவர்கள் (பார்ப்பனர்கள்) ஓர் விதத்தில் அன்னியர்களே! சமூகம் பல சாதிகளாகப் பகுக்கப்பட்டு பார்ப்பனர்களுடைய அரை தெய்வாம்சத் தலைமையில் (!) இருக்க வேண்டும் என்ற அவர்க ளுடைய இலட்சியத்தின் முதற்கொள்கை களை திராவிடர்கள் ஒருபோதும் முழுதும் ஏற்றுக் கொண்டதேயில்லை.<br /><br />எதிர்ப்புக்கு ஆதாரம்<br /><br />இரண்டு புகழ் வாய்ந்த இலக்கியங் கள் அந்த (ஆரிய) எதிர்ப்புணர்ச்சியை தெளிவாக விளக்குகின்றன. ஒன்று தமிழி லுள்ள கபிலர் அகவல்: மற்றொன்று தெலுங்கிலுள்ள வேமண்ணாவின் படைப்பு முறை ஆகும்.<br /><br />வைணவ சீர்திருத்தக்காரரான ராமா னந்தரும் அவரைப் பின்பற்றிய மற்றவர் களும் மதத்துறையில் சகோதரத்துவம் வாய்ந்தது என்பதை வேகமாகப் பிர சாரம் செய்தார்கள் என்று நாம் முன்பே கண்டோம். ஆனால், சாதி முறையை எதிர்த்த திராவிடர்கள் பல நூற்றாண் டுகட்கு முன்பிருந்தே இந்தத் துறையில் பணியாற்றி வந்துள்ளனர். பவுத்தர் களையும், சமணர்களையும் போலவே அவர்களும் அஞ்சாமல் பார்ப்பனர் களுடைய சாதி முறையின் அமைப்பை மிக வன்மையாகக் கண்டித்தார்கள்.<br /><br />தனிப்பட்ட முறையில் (வாதத்தில்) பதில் சொல்லும் முகத்தான் அவர்கள் மிக உயர்ந்த நிலையில் உள்ளதைப்போல் பாசாங்கு செய்யும் பார்ப்பனர்களையும் அதே நேரத்தில் தாழ்ந்த நிலையில் வாழ்ந்த அவர்களினத்தின் பெரும் பாலான பார்ப்பனர்களையும் ஒப் பிட்டுக் காட்டி நையாண்டி செய்து தங்களுடைய பல மான எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள். இவர்களுடைய சொற்கள் மக்களுடைய இதயங்களில் எதிரொலித்து வேமண்ணா வின் பெயரில் தற்போதுள்ள தெலுங்கு நாடோடிப் பாடல்கள் பெரிதும் மதிப்பு வாய்ந்தவை களாகத் திகழ்கின்றன. அக வல் முதல் தர தமிழ் நூலாகி இருக்கின்றது.<br /><br />Read more: http://viduthalai.in/page3/76208.html#ixzz2ulNeiNap<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-13862121011008482892014-03-02T06:36:31.011+05:302014-03-02T06:36:31.011+05:30
செயற்கை இதயம்
பிரான்சில் மருத்துவர்கள், இதயம் ச...<br />செயற்கை இதயம்<br /><br /><br />பிரான்சில் மருத்துவர்கள், இதயம் செயலிழந்த முதியவர் ஒருவருக்கு ஒரு கிலோ எடையுள்ள செயற்கை இதயத்தை பொருத்தியுள் ளனர். இந்த இதயம் லித்தியம் அயனிகளைக் கொண்ட மின்கலன்கள் மூலம் இயங்குகிறது. இதைப் பொருத் தியதன் மூலம் அம்முதியவர் ஐந்து ஆண்டுகள் வாழ்நாள் பாதுகாப்புடன் வாழலாம். செயற்கை இழைகள் இன்றி மாட்டின் திசுக்களைக் கொண்டு உருவாக்கப்பட்டு இருப்பதால் இதனை உடல் ஏற்றுக்கொள்ளாமல் நிராகரிக்க வாய்ப்புகள் குறைவு. பல உணரிகள் (ஷிமீஸீஷீக்ஷீ), நுண்செயலிகள் (Micro Processors) கொண்ட இதன் எடை ஒரு கிலோ. மருத்துவத்துறையில் இது மிகப்பெரிய சாதனையாகக் கருதப்படுகிறது.<br /><br />பிரான்சில் உள்ள கார்மட் என்ற நிறுவனத்தால் இது உருவாக்கப்பட்டுள்ளது. பாரிசில் உள்ள ஜார்ஜ் பொம்பிடௌ ஐரோப்பிய மருத்துவமனையில் இந்த இதயத்தை அந்த முதியவருக்குப் பொருத்த சுமார் 10 மணி நேரம் செயல்பட்டனர். இது முதல் முயற்சி என்பதால் இதயம் பொருத்தப்பட்ட முதியவர் ஒரு மாதம் தொடர்ந்த கண்காணிப்பில் வைக்கப்பட்டு பிறகு ஏதேனும் மாற்றங்கள் செய்யப்பட இயலும் என்றும் அந்த நிறுவனம் கூறுகிறது.<br />- அறிவியல் ஒளி - ஜனவரி 2014 - பக்கம் 29<br /><br />Read more: http://viduthalai.in/page2/76206.html#ixzz2ulNQBCMp<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.com