tag:blogger.com,1999:blog-1474608369333206681.post6160138601771924956..comments2023-10-29T13:02:52.613+05:30Comments on தமிழ் ஓவியா: பெண்கள் எப்படி இருக்க வேண்டும்? - பெரியார்தமிழ் ஓவியாhttp://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comBlogger36125tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-41847653144548940892014-03-10T06:26:25.359+05:302014-03-10T06:26:25.359+05:30
வெளிநடப்புச் செய்தார் ஜோஷி கட்சிக்குள் வீசுகிறது ...<br />வெளிநடப்புச் செய்தார் ஜோஷி கட்சிக்குள் வீசுகிறது மோடி மீதான எதிர்ப்பு அலை!<br /><br /><br />புதுடில்லி, மார்ச்.9-தனது தொகுதியான வாரணா சியை நரேந்திரமோடிக்கு விட்டுக்கொடுக்க பா.ஜனதா மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி மறுப்பு தெரிவித்துள்ளார். கட்சி தலைவர் ராஜ்நாத்சிங்குடன் வாக்குவாதம் செய்து விட்டு அவர் வெளிநடப்பு செய்தார்.<br /><br />வாரணாசி<br /><br />நாடாளுமன்ற தேர்த லுக்கு பா.ஜனதாவின் பிரத மர் பதவி வேட்பாளராக குஜராத் மாநில முதல்-அமைச்சர் நரேந்திரமோடி அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் இதுவரை நாடாளு மன்றத்தில் இடம்பெற்றது இல்லை.<br /><br />டில்லி மாநிலங்களவை எம்.பி.யாக பிரதமர் பதவி வகிக்காமல், மக்களவை எம்.பி.யாக பிரதமர் பதவி வகிப்பதையே நரேந்திர மோடி விரும்புவதாக தெரி கிறது. அதற்காக அவருக்கு சாதகமான தொகுதியை தேடும் படலம் நடந்தது.<br /><br />விளம்பர பலகை<br /><br />மோடிக்கு நெருக்க மானவரான குஜராத் மாநில முன்னாள் உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜனதாவின் உத்தரபிரதேச மாநில பொறுப்பாளராக உள்ளார். அவர், உத்தரபிரதேசத்தின் வாரணாசி தொகுதியில் மோடி போட்டியிடுவது நல்லது என்று சமீபத்தில் கூறினார். அதையடுத்து, மோடிதான் வேட்பாளர் என்று வாரணாசியில் விளம் பரப் பலகைகள் வைக்கப் பட்டன.<br /><br />இதுதொடர்பாக, பத்திரிகைகளிலும் செய்தி வெளியானது. வாரணாசி தொகுதியின் தற்போதைய எம்.பி.யாக இருப்பவர், பா.ஜனதா மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி. அவரை கான்பூர் தொகுதி யில் போட்டியிடுமாறு கட் சித்தலைமை கேட்டுக் கொள்ளும் என்றும் செய்தி வெளியானது.<br /><br />இந்நிலையில், இந்த விவகாரம், பா.ஜனதாவில் விரிசலை உண்டாக்கியுள் ளது. கட்சியின் வேட் பாளர்களை தேர்வு செய்ய, கட்சியின் மத்திய தேர்தல் குழுக் கூட்டம், கட்சித் தலைவர் ராஜ்நாத்சிங் தலை மையில் நடைபெற்றது. அதில், தேர்தல் குழு உறுப்பினர்கள் என்ற முறை யில், நரேந்திர மோடி, நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ், முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.<br /><br />ஜோஷி வெளி நடப்பு<br /><br />அப்போது, மோடி முன்னிலையிலேயே, ராஜ்நாத்சிங்குடன், முரளி மனோகர் ஜோஷி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட் டார். வாரணாசியை மோடிக்கு ஒதுக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளதே. இது பற்றி கட்சித்தலைமை ஏன் மறுப்பு தெரிவிக்கவில்லை? இதுபற்றி முன்கூட்டியே ஏன் என்னிடம் கலந்து ஆலோசனை நடத்தவில்லை? கட்சித்தலைமையின் இத் தகைய செயல், கட்சியில் எதுவுமே சரியாக இல்லை என்று தவறான குறிப்பை வெளியுலகுக்கு தெரி விக்கும் என்ற ஜோஷி ஆவேசமாகக் கூறினார்.<br /><br />பின்னர், அவர் தேர்தல் குழுக் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தார்.<br /><br />சுஷ்மா சுவராஜ் போர்க்கொடி<br /><br />நாடாளுமன்ற எதிர்க் கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜும், முரளி மனோ கர் ஜோஷிக்கு ஆதரவாக பேசினார். கட்சித்தலைமை யின் செயல்பாடு பற்றிய தவறான செய்திகள், வெளியே பரவுவது நல்லது அல்ல என்று அவர் கூறினார்.<br /><br />இந்த விவாதத்தின் போது, நரேந்திரமோடி அமைதியாக அமர்ந்து இருந்தார். மேலும், சுஷ்மா சுவராஜ், நரேந்திரமோ டிக்கு எதிராக டுவிட்டர் வலைத்தளத்திலும் கருத்து தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் மோடி அலை வீசுகிறது என்றால், அவர் பாதுகாப்பான தொகுதியை (வாரணாசி) தேடுவது ஏன்? என்று சுஷ்மா சுவராஜ் அதில் குறிப்பிட்டுள்ளார். இதுவும், பாரதிய ஜனதா வுக்குள் அதிர்வலைகளை எழுப்பியுள்ளது.<br /><br />Read more: http://viduthalai.in/e-paper/76696.html#ixzz2vW73AFIe<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-35389750473176626712014-03-09T06:47:56.828+05:302014-03-09T06:47:56.828+05:30மதத்தின் பெயரால்...
கோவை சட்டக்கல்லூரி மாணவி அனிஸ...மதத்தின் பெயரால்...<br /><br />கோவை சட்டக்கல்லூரி மாணவி அனிஸ் பாத்திமா, சொந்த ஊரிலிருந்து மீமிசலில்(புதுக்கோட்டை மாவட்டம்) பேருந்து ஏற தனது அண்ணன் வரமுடியாததால் அவரது நண்பர் முத்துக்கிருஷ்ணனுடன் சென்று டிராவல்ஸ் அலுவலகத்தில் அமர்ந்துள்ளார். முத்துக்கிருஷ்ணன் வெளியில் இருந்துள்ளார். அப்போது அனிஸ் பாத்திமாவிடம் வந்த மூன்று இளைஞர்கள், யார், எங்க போற என்று கேட்டதும், இதைக் கேட்க நீங்க யார் என கேட்டுள்ளார் பாத்திமா.<br /><br />உடனே அவர்கள், இந்துப் பையன்கூட ஓடப் போறியா? உன்னை விடமாட்டோம் என்றதும் தேவையில்லாம பேசாதீங்க என்று சொல்லியுள்ளார் பாத்திமா. முத்துக்கிருஷ்ணன் உண்மையை எடுத்துக் கூறியும் அவர்கள் கேட்கத் தயாராக இல்லை.<br /><br />பேருந்து கிளம்பி 5 நிமிடத்தில் 10, 15 இருசக்கர வாகனங்களில் வந்தோர் பேருந்தை மறித்து உள்ளே ஏறி, இஸ்லாம் மார்க்கத்தைக் கெடுக்குறயா? விபச்சாரம் செய்யப் போறயா என்று மிகவும் கேவலமாகப் பேசி அவரது உடைமைகளைத் தூக்கி வெளியே போட்டுள்ளனர்.<br /><br />தன் அண்ணனுக்குத் தகவல் சொன்ன பாத்திமா, பேருந்தை விட்டு இறங்காதே என ஓட்டுநர் சொல்லியதைப் பொருட்படுத்தாமல், மற்ற பயணிகள் தன்னால் பாதிக்கப்படக் கூடாது என நினைத்து கீழே இறங்கிவிட்டார்.<br /><br />சுற்றி நின்று தகாதபடி பேசிய 50 பேரைச் சமாளித்து, காவல் துறையினர் வரும்வரை எங்கேயும் போகாதே என்று செல்பேசியில் தனது அண்ணன் சொல்லியபடி அங்கேயே இருந்து சமாளித்துள்ளார்.<br /><br />காவல்துறையினர் வந்ததும், கொஞ்சம் தள்ளியிருந்த மருந்துக் கடைக்குச் சென்று புகார் எழுத ஆரம்பித்தபோது முஸ்லிம் பிரமுகர்கள் சிலர் வந்து மருந்துக் கடைக்காரரை மிரட்ட, காவல் நிலையத்திற்கே சென்று புகார் எழுதிக் கொடுத்துள்ளார். அப்போது வந்த ஜமாத் தலைவர், ஒரு முஸ்லிம் பொண்ணு காவல் நிலையத்திற்கெல்லாம் வரக்கூடாது என்றதும் ஒரு முஸ்லிம் பெண்ணை விபச்சாரினு சொல்லலாமா? கைநீட்டி அடிக்க வரலாமா என்றதும், அவங்களை மன்னிப்புக் கேட்கச் சொல்றோம், புகார் வேண்டாம் என்று மிரட்டியுள்ளனர். அடுத்த நாள் தனது அண்ணனுடன் காவல் நிலையம் சென்றவரிடம் செருப்பால வேனும்னாலும் அடி, வழக்கு வேண்டாம் என்று கூறியுள்ளனர்.<br /><br />எதற்கும் பிடி கொடுக்காத அனிஸ் பாத்திமா, அவர் சார்ந்துள்ள புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியும் அதன் சார்பு இயக்கங்களும் தனக்கு ஆதரவாக இருந்ததாகவும், இந்து அமைப்புகள்அணி திரண்டதால், மதக்கலவரம் தன்னால் வந்துவிடக் கூடாது என்று நினைத்து, மன்னிப்புக் கடிதம் எழுதி வாங்கினாலும், நடந்த நிகழ்வினைத் தன்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்றும் கூறியுள்ளார். மதத்தின் பெயரால் கொடுமை செய்தவர்களைத் தட்டிக்கேட்ட பாத்திமாவைப் போல் துணிந்து அனைவரும் வீறுகொண்டு எழவேண்டும்.<br /><br />நன்றி: நக்கீரன், பிப்.19-21, 2014தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-24555944671214990802014-03-09T06:42:31.709+05:302014-03-09T06:42:31.709+05:30 மண்ணில் வீசுங்கள் எங்கள் மணவிழா அழைப்பிதழை!
*ப... மண்ணில் வீசுங்கள் எங்கள் மணவிழா அழைப்பிதழை!<br /> <br /><br />*புதுமையான மணமக்கள்<br /><br />திருமணம் அல்லது மகிழ்வான நிகழ்வு என்ற தகவலைச் சொல்வதற்கானதாக மட்டுமன்றி, தங்களின் பணக்காரத்தன்மையை, ஆடம்பரத்தை, படாடோபத்தைக் காட்டுவதற்காகவும் சர்வ சாதாரணமாக ஓர் அழைப்பிதழ் ரூ.50 முதல் 500, 1000 வரைக்கும் செலவு செய்கிறார்கள். சிலர் திறந்தால் பேசும் அழைப்பிதழ் தருகிறார்கள். அதன் மூலமே குரலால் அழைக்கிறார்கள். இன்னும் சிலர் சி.டி. தந்து பார்க்கச் சொல்கிறார்கள். ஆனால், அழைப்பிதழ் வாங்கும்போதே எங்கு, என்று, யாருக்கு என்ற விவரத்தைத் தெரிந்துகொண்ட பிறகு அதைப் போட்டுப் பார்க்கப் போவதில்லை. (அவனவன் கல்யாண வீடியோவையே திரும்பப் பார்க்கிறதில்லை.)<br />அதையும் தாண்டி, யாரும் அந்த அழைப்பிதழை எடுத்து கண்ணாடிக்குள் அடைத்து வைத்துப் பாதுகாக்கப் போவதில்லை. திருமணம் முடிந்த பின்னோ, முடியும் முன்னோ குப்பைக் கூடைக்குப் போகப் போகிறது. ஆனாலும், அப்படிச் செலவு செய்வதற்கும் அழகுப்படுத்துவதற்கும் பின்னால், இதை யாராவது வைத்திருக்க மாட்டார்களா என்ற நப்பாசையும் சிலருக்கு இருக்கும். அப்படி ஏதாவது பயன்உள்ள அழைப்பிதழைத் தருவார்களா என்றால் அதுவும் இல்லை.<br /><br />இந்த வரிசையிலிருந்து வேறுபட்டவர் புதுக்கோட்டை நண்பா அறக்கட்டளையின் பிரகாஷ் செல்வராசு. கடந்த ஆண்டு நடைபெற்ற அவரது தங்கை திருமணத்திற்கு ஓர் ஆண்டின் நாள்காட்டியை வடிவமைத்து அதையே அழைப்பிதழாக்கி பயன்படுத்த வைத்தார். இவ்வாண்டு நடைபெற்ற அவரது திருமணத்திற்கான அழைப்பிதழை, பயன் முடிந்ததும் தூக்கி மண்ணில் போடுங்கள் என்கிறார். அது உரமாவதற்கு அல்ல - விதையாவதற்கு! ஆம். அவர் தந்த அழைப்பிதழுக்குள்ளேயே விதைகள் உறங்கிக் கொண்டிருக்கின்றன. அவை விதைகளையும் இணைத்து உருவாக்கப்பட்ட கைத் தயாரிப்புக் காகித அட்டைகள். நீங்கள் மண்ணில் தூக்கிவீசுவதோடு மட்டுமல்லாமல், அதை நீரூற்றி வளர்த்தால், அடுத்த தலைமுறைக்கு நம் பரிசாகவும் அல்லவா இருக்கும்! என்கிறார் பிரகாஷ்.<br /><br />இத்தகைய பயனுடைய முயற்சிக்கு அவர் மட்டுமல்லாது, நண்பா அறக்கட்டளையில் அவருடன் இருக்கும் ராதாகிருஷ்ணன், சாரதா, கார்த்திகேயன் மற்றும் தோழர்கள் அனைவரும் பாராட்டுக்குரியவர்கள்.<br /><br />- ச.பிரின்சு<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-3543887163942031092014-03-09T06:37:43.895+05:302014-03-09T06:37:43.895+05:30திரும்பத் திரும்ப பேசுற நீ...
அண்மைக் காலமாக நரே...திரும்பத் திரும்ப பேசுற நீ...<br /><br /><br />அண்மைக் காலமாக நரேந்திர மோடி பேசும் பொதுக் கூட்டங்களில் எல்லாம் தான் டீ விற்று வந்தவன் என்பதை அடிக்கடி சொல்லி, அவ்வாறு சொல்வதன் மூலம், சாமான்ய மக்களின் பிரதிநிதி போல காட்டிக் கொள்ள முயல்கிறார்.<br /><br />ஆனால் நடைமுறையில், குஜராத்தின் முதல்வராக மோடியின் செயல்பாடுகள், சாமான்ய மக்களின் வளர்ச்சிக்காக இல்லை; மாறாக, இந்த நாட்டின் பெரு முதலாளிகள், பெரும் கொள்ளையடிப்பதற்கான திட்டங்கள்தான் மோடி தலைமையிலான குஜராத்தில் முன்னுரிமை பெறுகின்றன.<br /><br />இந்த பெரும் தொழில் நிறுவனங்களால், பெரிய அளவில் வேலைவாய்ப்பு நடைபெறவில்லை. வேலை வாய்ப்பை அதிக அளவில் உருவாக்கும் சிறு, குறு தொழில் செய்யும் தொழில் துறையினருக்கு எந்த உதவியும் செய்யப்படவில்லை.<br /><br />குஜராத்தின் வரவு செலவுக் கணக்கில் 40 விழுக்காடு, பெரு முதலாளிகளுக்கான மானிய நிதியாகவும், சிறுதொழில் செய்வோருக்கு 2.3 விழுக்காடு மானிய நிதியாகவும்தான் அளிக்கப்படுகிறது. ரிலையன்ஸ் நிறுவனத்திற்கும், அதானி குழுமத்திற்கும்தான் குஜராத்தில் அதிக அளவில் சலுகைகள் தரப்பட்டுள்ளன. இந்நிறுவனங்களால் பெரிய அளவில் வேலைவாய்ப்பு தரப்படவில்லை.<br /><br />மோடியைப் பிரதமராக்கிடுவதில் பெரு முதலாளிகள்தான் அதிக அளவில் பணம் செலவழித்து வருகிறார்கள். ஆனால், அதனை மறைப்பதற்கு, தன்னுடைய தொடக்க கால நிலையைக் கூறி, மக்களிடம் அனுதாபம் பெற முயலுகிறார் மோடி. குஜராத்தில் 2003 முதல் 2011 வரை சுமார் 673 பில்லியன் டாலர்கள் அன்னிய முதலீடுகளுக்கான ஒப்பந்தங்கள் செய்யப்பட்டதாகவும், அதில் 84 விழுக்காடு அளவில் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டதாகவும் மோடியின் அரசு செய்தி வெளியிட்டது. இது உண்மையாக இருந்திருக்குமானால், குஜராத், சீனாவின் அன்னிய முதலீட்டு அளவைவிட கூடுதல் நிதியைப் பெற்றுள்ளதாக அர்த்தம். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை; மாறாக 2012-13க்கான அன்னிய நேரடி முதலீடு, குஜராத்திற்கு ரூ.2,473 கோடிதான். அதாவது, நாட்டின் மொத்த அன்னிய முதலீட்டில் 2.38 விழுக்காடு பெற்று, ஆறாவது இடத்தில் உள்ளது. மராட்டிய மாநிலம் 40 விழுக்காடு. அதாவது, ரூ.49,000 கோடி நேரடி அன்னிய முதலீட்டைப் பெற்று முதல் இடத்தில் உள்ளது. அடுத்த நிலையில், தில்லி, தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்கள் உள்ளன. ரிசர்வ் வங்கி அறிக்கையின்படி, அன்னிய நேரடி முதலீடு, மராட்டிய மாநிலத்திற்கு 45.8 பில்லியன் டாலர்கள்.<br /><br />தில்லிக்கு 26 பில்லியன் டாலர்கள். கர்நாடகா 8.3 பில்லியன் டாலர்கள், தமிழ்நாடு 7.3 பில்லியன் டாலர்கள் என்ற அளவில் கிடைத்தது. மோடியின் குஜராத் அரசுக்கு 7.2 பில்லியன் டாலர்கள்தான் கிடைத்தது. (தி ஹிந்து 13.4.2013) ரிசர்வ் வங்கி அமைத்த குழு அளித்த தகவலின்படி, குறைந்த அளவு முன்னேற்றம் அடைந்த மாநிலமாக குஜராத்தை அறிவித்துள்ளது. கல்வி, வீட்டு வசதி, வறுமைக் கோட்டின் அளவு, மருத்துவம், கல்லாதவர் விகிதம் ஆகிய காரணிகளைக் கொண்டு நிர்ணயிக்கப்படும் மனித வளக் குறியீட்டில், 12ஆவது இடத்தைத்தான் குஜராத் மாநிலம் பெற்றுள்ளது. கேரளா, கோவா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் முன்னேறிய மாநிலங்களாகக் கருதப்படுகின்றன. (டெலிகிராப் செப். 27, 2013). கார்ப்பரேட் முதலாளிகளின் காவலனாக இருக்கும் மோடி, இந்த உண்மை நிலையை மறைத்து, தான் ஏதோ சாமான்ய மக்களுக்குக் காவலன் போலவும், குஜராத் மாநிலம் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களைக் காட்டிலும் முன்னேறிவிட்டதைப் போலவும், தொடர்ந்து புளுகு மூட்டைகளை அவிழ்த்து விடுகிறார். முன்னேற்றம், முன்னேற்றம் என்றுதான் மோடி சொல்கிறாரே தவிர, ஒரு இடத்தில் கூட, அனைத்து மக்களையும் உள்ளடக்கிய முன்னேற்றம் என்பதை மறந்தும் சொல்லவில்லை; அவரது பேச்சிலும், செயலிலும் சமூக நீதியைப் பற்றிய எந்தக் கருத்தும் இல்லை. அண்டப் புளுகு, ஆகாசப் புளுகு, கோயபல்ஸ் புளுகு என்பதையெல்லாம் மிஞ்சி, இனி மோடி புளுகு என்று வரலாற்றில் பதிவு செய்யும் அளவுக்கு, திரும்பத் திரும்ப பொய்களைச் சொல்லிக் கொண்டே வருகிறார். தமிழக மக்கள் மோடி புளுகை நம்பும் ஏமாளிகள் அல்ல என்பதை வரும் தேர்தல் மூலம், மோடிக்கும், அவருக்குக் கைலாகு கொடுக்கும் கூட்டத்திற்கும் உணர்த்த வேண்டும்.<br /><br />- முகநூலில் கோ.கருணாநிதிதமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-85201701449085954532014-03-09T06:37:07.149+05:302014-03-09T06:37:07.149+05:30ஜாதியிம் பெயரால் . . .
வட மாநில கிராமங்களில் ஆண...ஜாதியிம் பெயரால் . . .<br /> <br /><br />வட மாநில கிராமங்களில் ஆண் தலைவர்களைக் கொண்டு நடத்தப்படும் காப் பஞ்சாயத்து அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் உத்தரவை குறிப்பிட்ட ஜாதியின் அனைத்துத் தரப்பினரும் மதித்து நடக்க வேண்டும். மதிக்காதவர் தாக்கப்படுவர்.<br /><br />உத்தர பிரதேசத்தில் காப் பஞ்சாயத்துக்குப் பிரபலமானவர் மகேந்திர சிங் தியாகத். இவரது சிலை முசாபர் மாவட்டத்தில் உள்ள முண்ட்பார் என்ற இடத்தில் அவரது மகன் நரேஷ் தியாகத்தால் திறக்கப்பட்டுள்ளது. சிலையினைத் திறந்து வைத்த நரேஷ்,<br /><br />காப் பஞ்சாயத்துகளின் முடிவுகளில் உச்ச நீதிமன்றம் தலையிடக் கூடாது. எங்களுக்கு எதிராக உத்தரவு பிறப்பிக்கும்போது மிகவும் கவனமாக நீதிமன்றம் இருக்க வேண்டும். இருக்கின்ற பிரச்சினையை அதிகப்படுத்தக் கூடாது. ஒரே கோத்திர திருமணத்தை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். காதல், கத்திரிக்காய் எல்லாம் கூடாது. பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்ய நினைக்கும் ஜோடிகள் எங்களின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்றும் எச்சரிக்கிறோம் என்று பேசியுள்ளார்.<br /><br />வடமாநில அரசாங்கங்கள் காப் பஞ்சாயத்துகளை ஆதரிக்கின்றன. அண்மையில், காப் பஞ்சாயத்துகளைத் தடை செய்ய வேண்டும் என்ற உச்ச நீதிமன்றம் வெளியிட்ட கருத்துக்கு, அரியானா மாநில முதல் அமைச்சர் பூபிந்தர் சிங், காப் பஞ்சாயத்துகள் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் என்றும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், காப் பஞ்சாயத்துகளைத் தடை செய்யக் கூடாது. அவை சமூக சேவையாற்றி வருகின்றன என்றும் கூறியது நினைவுகூரத்தக்கது.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-28501691429944730012014-03-09T06:36:26.451+05:302014-03-09T06:36:26.451+05:30 செய்தியும் சிந்தனையும்
பெரியாரின் தொலைநோக்கு
ச... செய்தியும் சிந்தனையும்<br /><br /><br />பெரியாரின் தொலைநோக்கு<br /><br />சீனாவில் 40 ஆண்டுகளாகக் கடைப்பிடிக்கப்பட்ட ஒரு குடும்பம் ஒரு குழந்தைத் திட்டத்தை அந்த நாட்டு அரசு தளர்த்தியுள்ளது. இதனால் கடந்த 42 ஆண்டுகளில் 40 கோடி பிறப்புகள் தடுக்கப்பட்டுள்ளன என்று ஒரு செய்தி. உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடு சீனா என்பது நாம் அறிந்ததுதான்.<br /><br />மக்கள்தொகையைக் கட்டுப்படுத்த அந்நாட்டு கம்யூனிஸ்ட் அரசு ஒரு குடும்பத்திற்கு ஒரு குழந்தைதான் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று சட்டம் இயற்றித்தான் நாட்டைக் காக்க வேண்டியிருந்தது. ஆனால், தமிழ்நாட்டில் ஒரு குடும்பக் கட்டுப்பாடுத் திட்டம் கொண்டு வந்து இது சாத்தியமாகி இருக்கிறதே, அது எப்படி? 1970களில் அரசு குடும்பக் கட்டுப்பாடுத் திட்டத்தைக் கொண்டு வந்தது. நாம் இருவர் நமக்கு இருவர் என்று பரப்புரை செய்தார்கள். ஆனால், சமூக விஞ்ஞானி தந்தை பெரியார் அவர்கள் 1930களிலேயே குடும்பக் கட்டுபாடு குறித்துப் பேசிவிட்டார்.<br /><br />மக்கள்தொகையைக் கட்டுப்படுத்த வில்லை என்றால் நாடு சிக்கலில் உழலும்; வறுமை தாண்டவமாடும் என்பது பெரியாரின் தொலைநோக்கு. அதனால் அவர் திருமண வீடுகளில் பேசும்போது, மணமக்கள் உடனே பிள்ளைப் பெற்றுக் கொள்ளாதீர்கள்; 5 ஆண்டுகள் மகிழ்ச்சியோடு வாழுங்கள்; பின்னர் ஒன்றோ, இரண்டோ பெற்றுக் கொள்ளுங்கள் என்றார். ஆனால், அப்போது எல்லா மதவாதிகளும், பிள்ளைப் பேறு என்பது கடவுள் அளிப்பது. அதனைத் தடுப்பதா எனக் குதித்தனர். ஆனால், கடவுளையே கடாசி எறிந்த பெரியார், பிள்ளை கொடுக்கும் கடவுள், கூடவே அதனைக் காப்பாற்ற ரெண்டு மாட்டையும் கன்றையும் அல்லவா தந்திருக்க வேண்டும்? வசதி வாய்ப்பைத் தரவில்லையே, ஏன்? அப்படித்தராதவன் பொறுப்பானவனா? என்று கேள்வி எழுப்பினார். தன் தோழர்களுக்கு அவர் வழங்கும் முக்கியமான அறிவுரையும் இரு குழந்தைகள் போதும் என்பதுதான்.<br /><br />பல்லாண்டுகள் தமிழ் மண்ணில் பெரியார் செய்த பிரச்சாரத்தால் அரசின் திட்டம் வெற்றிகரமாக நடந்தது. இரு குழந்தைகள் திட்டம் இப்போது ஒரு குழந்தைத் திட்டம் என்றாகி, நாமே குழந்தைகள்; நமக்கேன் குழந்தைகள்? என்கிற அளவுக்கு வளர்ந்துவிட்டது.<br /><br />சீனாவில் கணக்கெடுத்தது போல இங்கும் கணக்கெடுத்தால் பலகோடி பிறப்புகள் தடுக்கப்பட்டது தெரியவரும்.<br /><br />குடும்பக்கட்டுப்பாட்டைக் கடைப்பிடித்த பின்னும்கூட பசியும் பட்டினியும் வறுமையும் இருக்கும் நிலையை நாம் காண்கிறோம். இன்னும் இலவச அரிசி கொடுக்க வேண்டிய நிலை. இத்திட்டம் இல்லாமல் இருந்திருந்தால்...? எல்லாம் கடவுள் செயல் என்ற நிலை தொடர்ந்திருந்தால் என்னவாகியிருக்கும்?<br /><br />நினைத்துப் பார்க்கவே முடியவில்லையே...!<br /><br />- அன்பன்தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-72052508129182381912014-03-09T06:35:46.408+05:302014-03-09T06:35:46.408+05:30கொடுமை ...
வீட்டு வேலை செய்பவர்களைக் கொடுமைப்படு...கொடுமை ...<br /><br /><br />வீட்டு வேலை செய்பவர்களைக் கொடுமைப்படுத்துவதில் இந்திய அளவில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிய வந்துள்ளது.<br /><br />வசதி படைத்தவர்களின் வீடுகளில் வேலை செய்பவர்கள் தங்களது முதலாளிகளால் பல்வேறு கொடுமைகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர். இது தொடர்பாக 2012ஆம் ஆண்டு 528 வழக்குகளுடன் தமிழகம் முதலிடத்திலும் 506 வழக்குகளுடன் ஆந்திரா இரண்டாம் இடத்திலும் 412 வழக்குகளுடன் கர்நாடகாவும் கேரளாவும் அடுத்த இடங்களிலும் உள்ளதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தெரிவித்துள்ளது.<br /><br />2011ஆம் ஆண்டு இரண்டாவது இடத்தில் இருந்த தமிழகம் 2012ஆம் ஆண்டு முதலிடத்திலிருந்த ஆந்திராவைப் பின்னுக்குத் தள்ளி முதலிடத்திலிருப்பது குறிப்பிடத்தக்கது.<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-52906218260661478472014-03-09T06:33:30.827+05:302014-03-09T06:33:30.827+05:30இலங்கைத் தமிழர்கள் மீதான இன அழிப்புக் குற்றம், மனி...இலங்கைத் தமிழர்கள் மீதான இன அழிப்புக் குற்றம், மனித உரிமை மீறல்கள், போர்க் குற்றங்கள் ஆகியவற்றை விசாரணை செய்வதற்காக பன்னாட்டு விசாரணைக் குழுவை நிறுவ வேண்டும். அதற்கான கருத்துகளை அய்.நா. மனித உரிமைக் கூட்டத்தில் இந்திய அரசு தனியாகவோ அல்லது கூட்டமாகவோ முன்மொழிய வேண்டும். இலங்கையில் தமிழர்கள் தங்கள் அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிப்பது குறித்து சர்வதேச நாடுகளின் மேற்பார்வையில் பொது வாக்கெடுப்பு நடத்துவதற்கான முயற்சியை இந்திய அரசு தீவிரமாக மேற்கொள்ள வேண்டும். இந்த 2 தீர்மானங்களை இந்திய அரசியல் கட்சிகள் தங்கள் மக்களவைத் தேர்தல் அறிக்கையில் சேர்க்க வேண்டும்.<br /><br />- விஸ்வநாதன் ருத்ரகுமாரன்,<br />நாடுகடந்த தமிழீழ அரசின் தலைமை அமைச்சர்<br /><br /> <br /><br />காதலிப்பவர்களைத் தாலி கட்டித் திருமணம் செய்துகொள்ள வற்புறுத்துகிறவர்கள் திருமணம் என்பதைத் தாலி கட்டிக்கொள்ளும் சடங்காக மட்டுமே பார்க்கிறார்கள்.<br /><br />கலாச்சாரத்தைக் காக்க வேண்டும் என்று பேசுகிறவர்களுக்கு தாலி என்பது தமிழ்க் கலாச்சாரம் கிடையாது என்பது தெரிவதில்லை. - சந்தியா, எழுத்தாளர்தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-42803885471236041632014-03-09T06:33:02.170+05:302014-03-09T06:33:02.170+05:30ஜாதி, மத, மொழி, பாலினப் பாகுபாடுகளைக் களைந்து புதி...ஜாதி, மத, மொழி, பாலினப் பாகுபாடுகளைக் களைந்து புதிய பார்வை கொண்டு வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பதே பகுத்தறிவாகும். மனித வாழ்க்கையின் சுழற்சியை முழுமையாகப் புரிந்துகொண்டு முடிவெடுக்க வேண்டும். காதல் என்பது ஒரு குழந்தையின் தந்தையையும் தாயையும் பிணைத்து வைத்திருக்கும் பசை என்பதைப் புரிந்துகொண்டால் அற்ப மாயைகளை நம்பி ஒரு ஆணோ பெண்ணோ தவறான வழியில் செல்ல மாட்டார்கள்.<br /><br />இந்திர விழா போன்ற பெயர்களில் காதலர் தினம் தமிழ்க் கலாச்சாரத்தின் அங்கமாக எப்போதும் இருந்திருக்கிறது. காதலைக் கொச்சையாகப் பார்ப்பதும் அழகாக _ கம்பீர மாகப் பார்ப்பதும் நமது பார்வையில்தான் உள்ளது.<br /><br />- ஷாலினி, மனநல மருத்துவர்தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-88472579938633124572014-03-09T06:32:37.520+05:302014-03-09T06:32:37.520+05:30கருத்து
மரண தண்டனைக் கைதிகளுக்கு தண்டனை குறைக்க...கருத்து<br /> <br /><br />மரண தண்டனைக் கைதிகளுக்கு தண்டனை குறைக்கப்பட்ட தீர்ப்பு, கொடூரமான குற்றங்களைப் புரிந்தவர்களுக்கு நீதிமன்றம் கருணை காட்டுவதாக அர்த்தம் அல்ல. கருணை மனுக்களின் மீது முடிவு எடுப்பதில் விளக்கிக் கூற முடியாத தேவையற்ற காலதாமதம் ஏற்படும் பட்சத்தில் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கலாம். மரண தண்டனைக் கைதிக்கும் கருணை காட்டும்படி கோருவதற்கு உரிமை உண்டு. அதைப் பரிசீலித்து முடிவு எடுக்க வேண்டியது நீதிமன்றத்தின் அரசியல் சட்டக் கடமையாகும்.<br /><br />- பி.சதாசிவம். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிதமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-76721627806588563192014-03-09T06:31:59.610+05:302014-03-09T06:31:59.610+05:30
எல்லாமே அந்த அம்மாதானே...!
என் உடல் நலத்தைப் ப...<br />எல்லாமே அந்த அம்மாதானே...!<br /> <br /><br />என் உடல் நலத்தைப் பேணவும் எனக்குப் பின் கழகத்தை நடத்திச் செல்லவும் சொத்துக்களைக் காக்கவும் நம்பிக்கையான வாரிசு மணியம்மை. (25.9.1949)<br /><br />மணியம்மையார் இயக்கத் தொண்டுக்கென்றே என்னிடம் வந்த இந்த 20 ஆண்டில் எனது வீட்டு வசதிக்கான பல காரியங்களுக்கு, தேவைக்கு உதவிசெய்து வந்ததன் காரணமாக என் உடல்நிலை எப்படியோ என் தொண்டுக்குத் தடையில்லாமல் நல்ல அளவிற்கு உதவி வந்ததால், என் உடல் பாதுகாப்பு, வீட்டு நிர்வாகம் ஆகியவற்றில் எனக்குத் தொல்லை இல்லாமல் இருக்கும் வாய்ப்பை அடைந்தேன். - விடுதலை 15.10.1962<br /><br /> <br /><br />இயற்கையை வெல்வது கடினம்தான்! உனக்கு ஏதாவது இன்று நேர்ந்திருந்தால் அதை என்னால் தாங்கிக் கொள்ள முடியும். ஆனால், என் எண்ணம் வீணாயிற்றே. வீண் பழிக்கும் பொல்லாப்புக்கும் ஆளானேனே. எந்தக் காரணத்திற்காக _ என்ன நோக்கத்திற்காக இந்த ஏற்பாடுகள் (பல பேரின் அதிருப்திக்கும் _ வெறுப்புக்கும் ஆளாகி) செய்தேனோ அது நிறைவு பெறாமல் நீ போய்விடுவாயோ என்றுதான் கலங்கினேன்.<br /><br />இந்த உயிர் இந்த வயதிலும் சாகாமல் இருக்கின்றது என்றால், இந்த அம்மாவால்தான் என்பது யாருக்குத் தெரியாது? எனது உடம்புக்கு ஏற்ற உணவு பக்குவப்படி கொடுப்பது, உடை மாற்றுவது, எல்லாம் அந்த அம்மாதானே! என்னை நேரிடையாக எதிர்க்கத் துணிவில்லாத இவர்கள் அந்த அம்மா மீது குறை கூறுகிறார்கள். - விடுதலை 13.2.1963<br /><br />(அன்னை மணியம்மையார் பற்றி தந்தை பெரியார் கூறியவை)தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-21564750609241954952014-03-09T06:22:40.825+05:302014-03-09T06:22:40.825+05:30மந்திரம் என்றால் என்ன?
மந்திரம் மகிமைமிக்கது; தெய...மந்திரம் என்றால் என்ன?<br /><br />மந்திரம் மகிமைமிக்கது; தெய்வீக சக்தி வாய்ந்தது; தெய்வங்களை வசீகரிப்பது ; அவர்தம் அருளை வாங்கித் தருவது; மோட்சத்துக்கு அனுப்புவது ; மக்களை மயக்குவது ; ஆக்கலும் அழித்தலும் வல்லது என்றெல் லாம் சொல்லுகிறார்களே, இவை உண்மையா? பொய்மை என்கிறார் பார்ப்பனரான தொல்காப்பியரே!<br /><br /> <br /><br />மந்திரம் என்றால் பொருளற்ற சொல்லடுக்கு, அச்சுறுத்தல் ஒலி என்கிறார். இவர் தமது இலக்கணமான தொல்காப்பியத்தில்,<br /><br />நிறைமொழி மாந்தர் ஆணையிற்கிளந்த<br />மறைமொழிதானே மந்திரம் என்ப<br /><br />(தொல்-பொருளியல் 174)<br /><br />பேச்சில் வல்லவர்கள், கட்டளையிடும் (அச்சுறுத்தும் ஒலியில்), சொல் விளைக்கும் மறைவான பொருள் கொண்ட - பொருள் விளக்கமற்ற அடுக்குச் சொற்களே மந்திரம் என்பர் என்கிறார். விளக்கவுரையாளர் இதற்கு ஒரு எடுத்துக்காட்டும் குறிப்பிடுகிறார்.<br /><br />திரிதிர சுவாகா கன்றுகொண்டு கறவையும் வந்திக்க சுவாகா இதனை மேலளவில் நோக்கும் போது பொருள் விளக்கமில்லை.<br /><br />கன்றுகொண்டு என்பதற்குப் பதில், கன்று கொன்று எனக் கொள்ள வேண்டுமா? இப்படிக் கொண்டால் இது ஒரு சாவு, இழப்பு, சாபமந்திரமாகிறது. எதிரியின் கால்நடைகளை ஒழிக்கவும் என்பதே இதன் கருப் பொருள். அதாவது, தேவதையே! கன்றைக் கொன்று பசுவும் பால் கறக்காதுவற்ற அடித்து விடு என்பதே இதன் தெளிபொருள்.<br /><br />இப்படி சொன்னதால் கன்று செத்ததா, பசு வறண்டதா என்ற விளக்கம் தரப்படவில்லை. எனவே, இது வெறும் அச்சுறுத்தல் சொல்லடுக்கே. பெண்கள் சூத்திரத்தால் நாசமாகப் போக என்பது போன்று வெற்றுக் குரல் ஒலியே.<br /><br />பாழான என் மனம் குவிய ஒரு தந்திரம் பண்ணுவது உனக்கு அருமையோ<br /><br />என்றுதான் முறையிட்டார் பக்தப் புலவரும். தந்திரம் செய் என்றாரேயன்றி, மந்திரம் போடு என்று கேட்க வில்லை. இதிலிருந்தே மந்திரத்தின் பயனின்மை வெள்ளி டைமலை.<br /><br />Read more: http://viduthalai.in/page1/76561.html#ixzz2vQFcRhIt<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-54104010017609212992014-03-09T06:22:11.564+05:302014-03-09T06:22:11.564+05:30தந்தை பெரியார் பொன்மொழிகள்
தாழ்த்தப்பட்ட மக்களை அ...தந்தை பெரியார் பொன்மொழிகள்<br /><br />தாழ்த்தப்பட்ட மக்களை அவர்களுக்கு மற்றவர்கள் இழைத்து வரும் கொடுமையில் இருந்து விடுதலை செய்யவேண்டும் என்பதை உண்மையான கருத்துடன் பார்த்தால் அது ஒரு புரட்சி வேலையேயாகும். ஏனெனில், தாழ்த்தப்பட்ட மக்களின் நிலை ஒரு பெரிய அஸ்தி வாரத்தின் மீதே கட்டப்பட்டிருக்கின்றது.<br /><br /> <br /><br />திராவிடர் என்போர் யார்? திராவிடர் என்றால் பிறவியிலேயே பிறக்கும் போதே ஏற்படும் இனப்பெயர்தான். திராவிடர் என்பது ஜாதியல்ல; பிறவி ஆகும்.<br /><br />Read more: http://viduthalai.in/page1/76561.html#ixzz2vQFUn2Ya<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-49637945052068201512014-03-09T06:21:45.637+05:302014-03-09T06:21:45.637+05:30ரோஷமற்ற சூத்திரச்சிகள்
சாணியை சந்தனம் என்றால் ஒத்...ரோஷமற்ற சூத்திரச்சிகள்<br /><br />சாணியை சந்தனம் என்றால் ஒத்துக் கொள்ளாமல், எப்படி சந்தனம் ஆகும் என்று சிந்திக்கும் மனிதன் கல்லைக் கடவுள் என்று கூறுவதை எப்படி கல் கடவுளாகும் என்று சிந்திக்க மறுக்கின்றானே!<br /><br /> <br /><br />ஒரு பெண்ணைப்பார்த்து தேவடியாள் மகளே என்று ஒருவன் கூறினால் விளக்குமாற்றைத் தூக்கிக் கொண்டு அடிக்க முற்படுவாள் பெண்.<br /><br />அப்படிப்பட்ட பெண்ணை சூத்திரச்சி என்று கூறினால், பார்ப்பானுக்கு வைப்பாட்டி மகள் என்று அழைக் கின்றானே என்று எந்தப் பெண்ணும் ஆத்திரப்பட மாட்டேன் என்கிறார்களே!<br /><br />(7.7.1972 அன்று பெரம்பலூர் வட்டம், பூலாம்பாடி பொதுக்கூட்டத்தில் தந்தை பெரியார்<br /><br />Read more: http://viduthalai.in/page1/76561.html#ixzz2vQFOGeyJ<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-91564984421645429182014-03-09T06:21:16.520+05:302014-03-09T06:21:16.520+05:30
நமது நோக்கம்
ஏழையாயிருப்பதும், செல்வனாயிருப்பது...<br />நமது நோக்கம்<br /><br /><br />ஏழையாயிருப்பதும், செல்வனாயிருப்பதும் கடவுள் செயல் என்கின்ற எண்ணத்தை மக்களிடமிருந்து அடியோடு போக்கி செல்வத்தன்மையின் கொடுமை களையும், புரட்டு களையும் தெளிவுப்படுத்தி விடுவதும், அதுபோலவே அரசாங்கமும், கடவுளுடைய கட்டளை என்பதை மாற்றி,<br /><br />ஜனங்கள் எல்லாரையும் சமமாய் நடத்தும் சமதர்ம ஆட்சி தான் நிலை பெற வேண்டிய ஆட்சி என்பதை நிரூபிப்பது. இதற்கு இடையூறாக வரும் சமயக்காரனையோ, பண்டிதனை யோ, பணக் காரனையோ, அரசாங்கத்தையோ, ஆட்சியை யோ முடிவு வரையில் எதிர்த்து நிற்பதே நமது நோக்கமாகும்.<br /><br />- தந்தை பெரியார் (குடிஅரசு, 25.5.1930)<br /><br />Read more: http://viduthalai.in/page1/76561.html#ixzz2vQFFNdI3<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-5971790547349511442014-03-09T06:20:45.170+05:302014-03-09T06:20:45.170+05:30
இடைவிடாத போர் நடக்க வேண்டும்!
நமது கல்விப் புரட்...<br />இடைவிடாத போர் நடக்க வேண்டும்!<br /><br />நமது கல்விப் புரட்சி வேலைகளில், மக்களை மயக்கும் மதத்தோடு போர் புரிவது ஒரு முக்கிய வேலையாகும். இந்தப் போர் இடைவிடாமல், அமைப்புத் திட்டத்தோடும் உறுதியாய் நடத்தப்பட வேண்டும். தொழிலாளருடைய ஆதிக்கத்தில் கோயிலுக்கு அரசாங்கம் எவ்வித ஆதரவும் அளிக்கக் கூடாது.<br /><br />பாதிரிக் கூட்டங்கள் புரட்சிக்கு விரோதமாகச் செய்து வரும் வேலைகளைக் கண்டிப்பதுடன் அடக்க வேண்டும்.<br /><br />ஆனால், அதே சமயத்தில் மதத்திற்கு விரோதமான பிரச்சாரம் நடத்துவதற்கு சாத்தியமான முயற்சிகள் எல்லாம் செய்யப்படும். கோயிலுக்கு ஏற்பட்டிருக்கும் பெருமையும் செல்வாக் கும் ஒழிக்கப்படும்.<br /><br />- 1908ஆம் ஆண்டு சர்வதேச பொதுவுடைமைக் கட்சியின் 6ஆவது உலக காங்கிரசில் லெனின் பேச்சு.<br /><br />Read more: http://viduthalai.in/page1/76560.html#ixzz2vQF5YRZd<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-66663838217281455342014-03-09T06:20:05.992+05:302014-03-09T06:20:05.992+05:30பவுத்தரின் மேன்மை
பவுத்த நெறியை உருவாக்கியவர் பவு...பவுத்தரின் மேன்மை<br /><br />பவுத்த நெறியை உருவாக்கியவர் பவுத்தரேயானாலும் அவர் தனது போதனைகளுக்கோ, அல்லது தனக்கோ, தெய்வத்தன்மையைக் கற்பிக்கவே இல்லை.<br /><br />மோஸஸ் தன்னை தேவ தூதனென்று கூறிக் கொள்ளவில்லை யென்றாலும், தன்னுடைய போதனை தெய்வீகத் தன்மை வாய்ந்ததாகும் என்றும், ஆண்டவனாகிய ஜெகோவாவின் போதனைகளைத் தான் பரப்புவதாகவும்தான் கூறினார்.<br /><br />இயேசு தனக்கு தெய்வீகத் தன்மை இருப்பதாகவும், தானே கடவுளின் மைந்தரென்றும் மார்தட்டிக் கூறிக் கொண்டார் ஆனால் கிருஷ்ணனோ. இதற்கு மேல் ஒருபடிச் சென்று தானே கடவுளென்று கூறினான்; கீதைதான் கடவுளின் உபதேசம் என்றும் கூறினான்.<br /><br />புத்தர் இதுபோன்ற தெய்வீகத்தன்மையைக் கற்பிக்க முயன்றதே இல்லை. மாறாக, தன்னை சாதாரண மனிதன் என்றும், தன்னுடைய செய்தி மனிதனுக்கு மனிதன் வழங்கும் செய்தி தான் என்றும் கூறினார்.<br /><br />உலக வரலாற்றிலேயே இதுபோன்ற குறிப்பிட்ட நெறிகளை உருவாக்கியவர் தன் நெறிகளை இத்தகைய சவாலுக்கு உட்படுத்திக் கொண்டது இதுவே முதல் தடவையாகும் எனலாம்.<br /><br />Read more: http://viduthalai.in/page1/76560.html#ixzz2vQEyipD5<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-8452027168932757932014-03-09T06:19:45.030+05:302014-03-09T06:19:45.030+05:30பூசாரிகளின் யோக்கியதை
இந்துமத அறக்கட்டளைகள் பற்றி...பூசாரிகளின் யோக்கியதை<br /><br />இந்துமத அறக்கட்டளைகள் பற்றி விசாரிக்க மத்திய அரசு 1960ஆம் வருடம் நியமித்த சி.பி.இராமசாமி அய்யர் கமிட்டி தனது அறிக்கையை 1962ஆம் ஆண்டு தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில் காணப்படும் பூசாரிகள் பற்றி விவரங்கள் (அத்தியாயம் 5) இங்கே திரட்டித் தரப்படு கின்றன.<br /><br />நாங்கள் தேசத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுப் பயணம் செய்தபோது ஏராளமான கோயில்களுக்கு நேரடியாக நாங்களே போய்ப் பார்க்க எங்களுக்கு நிரம்ப வாய்ப்புக் கிடைத்தது. அர்ச்சகர்களும், பூசாரிகளும் ஒன்று கல்வி அறி வற்ற தற்குறிகளாக இருக்கின்றனர். அல்லது அரைகுறையாக படித்தவர்களாக இருக்கின்றனர்;<br /><br />இவர்கள் வழக்கமாகவே பணம் பறிப்பவர்களாகவும் இருக்கின்றனர். இதில் ஏதோ சிற் சில சிறப்பான விதிவிலக்குகள் உள்ளன. இந்த விதி விலக்குகள் வடக்கைவிட தெற்கேதான் அதிகம் - இவ்வாறுதான் தோன்றுகிறது.<br /><br />பொருளறியாத புலம்பலே மந்திரம்!<br /><br />அவர்கள் ஓதும் மந்திரங்களில் அவர்களின் உச்சரிப்பும் உச்சாடனமும் பதியத்தக்கதாக இல்லை; தப்புந்தவறுமாக இருக்கின்றன. தாங்கள் முழங்கும் இந்த மந்திரங்களின் சிறப் பையோ அல்லது பொருளையோ அவர்கள் அறிந்திருக்க வில்லை என்பது வருந்துதற்குரியது.<br /><br />தெய்வத்தின் கருணை யைப் பெறுவதற்காக கோயில்களுக்கு வரும் பக்தர்களிடத் திலும் வழிபடுவோரிடத்திலும் பக்தியும் மரியாதையும் அடங்கிய ஒரு உணர்ச்சியை ஊட்டக் கூடிய நிலையில் அர்ச்சகர்கள் இருப்பதில்லை என்பது வெளிப்படை..<br /><br />சின்னஞ்சிறு பயலுக்கு என்ன தெரியும்?<br /><br />ஆந்திரப் பிரதேசத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு கோயில் இருக்கிறது; இந்தக் கோயில்களில் நடத்தப்பட்டு வரும் வழிபாடு கொஞ்சம் கூட போதாது என்று கூறப்படு கிறது, தாங்கள் பணிபுரியும் கோயிலில் எந்த ஆகமம் கடைப் பிடிக்கப்பட வேண்டும் என்பதுகூட பூசாரிகளில் பலருக்குத் தெரிந்திருக்கவில்லை என்றுதான் தோன்றுகிறது.<br /><br />தெய்வத் துக்கு எந்த நேரத்தில் அபிசேகம் செய்யப்பட வேண்டும் என்றும் எந்த மந்திரத்தை ஓதி அர்ச்சனை செய்ய வேண்டும் என்பதுகூட அவர்களுக்குத் தெரியவில்லை. மகாநந்தி என்ற இடத்தில் உள்ள கோயிலுக்கு தாம் போயிருந்தபோது அங்கே 15 வயதாகிய ஒரு சிறுவன் பூசாரியாக இருந்ததைக் கண்டதாக திரு.ரமேசன் என்பவர் சாட்சியம் கூறியுள்ளார்.<br /><br />தெய்வங்கள் பெயர்கள்கூட அந்தச் சிறுவனுக்குத் தெரிய வில்லை, எந்த வகையான வழிபாடு நடத்தப்பட வேண்டும் - என்னென்ன மந்திரங்கள் ஓதப்பட வேண்டும் என்பதும் அச்சிறுவனுக்கு தெரியவில்லை.<br /><br />Read more: http://viduthalai.in/page1/76560.html#ixzz2vQEsvUwq<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-61736357320173638042014-03-09T06:11:45.955+05:302014-03-09T06:11:45.955+05:30
கூட்டணியில் இடதுசாரிகள் கலைஞர் பேட்டி
செய்தியாள...<br />கூட்டணியில் இடதுசாரிகள் கலைஞர் பேட்டி<br /><br /><br />செய்தியாளர்: இடதுசாரி கட்சிகளுக்கு கூட்டணியில் சேருவது சம்பந்தமாக தி.மு.க. சார்பில் அழைப்பு விடப்படுமா?<br /><br />கலைஞர்: அழைப்பு விடுக்கக் கூடாது என்று நான் எண்ண வில்லை. அவர்கள் வந்தால் ஏற்றுக் கொள்வோம். (முரசொலி- 7.3.2014)<br /><br />Read more: http://viduthalai.in/page1/76540.html#ixzz2vQCpptFL<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-83123692565603809942014-03-09T06:11:12.453+05:302014-03-09T06:11:12.453+05:30
செய்திக் கொத்துகள்
பக்தீ!
விழுப்புரம் மாவட்டம் ...<br />செய்திக் கொத்துகள்<br /><br />பக்தீ!<br /><br />விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் மேல் மலை யனூர் அங்காளம்மன் கோயில் மாசித் திருவிழா நடைபெற்றது. 3 லட்சம் பேர் பங்கேற்பு என்று வண்ணப் படத்தோடு வெளியிட்ட தினமணி ஒன்றைத் திட்ட மிட்டு மறைத்தது ஏனோ?<br /><br />நடைபெற்ற தீ மிதியில் பக்தர்கள் விழுந்து காயப்பட் டனர் என்பதுதான் தின மணியில் மறைக்கப்பட்ட செய்தி; தொலைக்காட்சிகள் பக்தர்கள் காயம் பட்ட சேதியை ஒளிபரப்பினவே! பக்தி காயப்பட்டால் பார்ப் பான் வீட்டு அடுப்பு எரியாதே!<br /><br />மூடநம்பிக்கை!<br /><br />மூடநம்பிக்கைக்கு ஓர் அளவேயில்லையா? திண்டிவனம் பகுதிக்கு வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டால் அந்த அர சியல்வாதி பிறகு சோபிக்க மாட்டார் என்கிற ஒரு மூட நம்பிக்கை இருக்கிறதாம். திண்டிவனத்தில் மேம்பா லத்தை உருவாக்கிய, மத்திய அமைச்சர் வெங்கட்ராமனும் செஞ்சி ராமச்சந்திரனும் அவ்வாறு ஜொலிக்கா மல் போய் விட்டார்களாம்.<br /><br />புற்று நோயைவிட மூட நம்பிக்கை மிக மிக மோச மானது என்பதில் அய்யமில்லை. திண்டிவனத்தில் வளர்ச்சிப் பணியேசெய்யப்படக் கூடாதா? திண்டிவனத்தின் மீது தனிப்பட்ட முறையில் அதிருப்தி கொண்ட ஆசாமி யாரோ கிளம்பி விட்டிருக்க லாம்.<br /><br />தேவைதான்!<br /><br />பொது மக்களிடம் நடந்து கொள்வது எப்படி என்ற பயிற்சி ஆட்டோ ஓட்டு நர்களுக்கு அளிக்கப்படும் என்ற தகவல் - வர வேற்கத்தக்கது - தேவை யானது! பேரம் பேசுவது - ஒருமையில் பேசுவது - இன் னோரன்ன நிகழ்வுகள் அன் றாடம் நடைபெறும் காட்சி கள். மக்களின் தோழர்கள் ஓட்டுநர்கள் என்ற நிலை உருவானால் நாட்டுக்கே பெருமை சேர்க்கக் கூடிய தாக இருக்குமே!<br /><br />மோடிக்கு மொத்து!<br /><br />அம்பானி போன்ற தொழில் அதிபர்களுக்குத் தான் குஜ ராத் முதல் அமைச்சர் நரேந் திரமோடி வளர்ச்சியின் நாய கனாக இருக்கிறார் என்கி றார் ஆம் ஆத்மியின் ஒருங் கிணைப்பாளர் கேஜ்ரிவால்.<br /><br />இடதுசாரிகளுக்கு திருமா. அழைப்பு<br /><br />மதவாத சக்திகள் ஆட் சிப் பீடம் வருவதைத் தடுக்க மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டுக் கட்சி, இந்தியக் கம்யூனிஸ் டுக் கட்சிகள் திமுக கூட் டணிக்கு வர வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார். - விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச் சித் தமிழர் தொல் திருமா வளவன் நேற்றைய செய்தி யாளர்கள் கூட்டத்தில்...<br /><br />Read more: http://viduthalai.in/page1/76538.html#ixzz2vQChQtIp<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-24165689367410596892014-03-09T06:10:37.612+05:302014-03-09T06:10:37.612+05:30
முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீட்டில் ஜெயலலிதாவின் உண்ம...<br />முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீட்டில் ஜெயலலிதாவின் உண்மை நிலை என்ன?<br /><br /><br />கேள்வி :- முஸ்லீம்களுக்கு இட ஒதுக் கீட்டினை அதிகப்படுத்துவது குறித்து அவர் களின் கோரிக்கை மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத் திற்கு அனுப்பி வைத்திருப்பதாக முதல மைச்சர் ஜெயலலிதா தேர்தல் பிரச்சா ரக் கூட்டத்தில் சொல்லியிருக்கிறாரே?<br /><br />கலைஞர் :- வழக்கம் போல முஸ்லீம்களை ஏமாற்றப் பார்க்கிறார். முஸ்லீம்களுக்கு ஏற்கெனவே இட ஒதுக்கீடு அளித்ததே தி.மு. கழக ஆட்சிதான்.அந்த சதவிகிதத்தை அதிகப் படுத்த வேண்டுமென்று முஸ்லீம்கள் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். அதைப் பற்றி உண்மையிலேயே அக்கறை இருந்தால், அந்தக் கோப்பினை உட னடியாக வரவழைத்து ஆணை பிறப் பித்திருக்கலாம். தற்போது அவர்களை ஏமாற்றுவதற்காக கோரிக்கையை மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணை யத்திற்கு அனுப்பி வைத்திருப்பதாகக் கூறி சமாளிக்கப் பார்க்கிறார். முஸ்லீம் களுக்கான இட ஒதுக்கீடு பற்றி ஜெய லலிதா 2004ஆம் ஆண்டு என்ன சொன் னார் தெரியுமா? முஸ்லீம்களுக்கு ஆந்திராவில் 5 சதவிகித இட ஒதுக்கீடு கொடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் தேர் தலின்போது இவ்வாறு வாக்குறுதி கொடுத்தீர்களா என்ற கேள்விக்கு ஜெய லலிதா அளித்த பதில் - இல்லையே, அது தொடர்பாக எந்த வாக்குறுதியும் கொடுக்கவில்லையே? என்பது தான்.அதுமாத்திரமல்ல; செய்தியாளர் ஜெயலலிதாவிடம் தொடர்ந்து, சிறு பான்மை சமுதாயமான முஸ்லீம் சமு தாயத்திற்கு இடஒதுக்கீடு கொடுப்பது பற்றி உங்கள் கருத்தென்ன? என்று கேட்டதற்கு, முஸ்லீம்கள் மட்டும் சிறுபான்மையினர் அல்ல.<br /><br />கிறிஸ்த வர்கள் இருக்கிறார்கள், பார்சிகள் இருக்கிறார்கள், ஜெயின்கள் இருக் கிறார்கள், புத்த மதத்தினர் இருக் கிறார்கள், தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில் முஸ்லீம்களும், கிறிஸ்தவர் களும் சமமான எண்ணிக்கையில் இருக்கிறார்கள். முஸ்லீம் களுக்கு தனி ஒதுக்கீடு அளித்தால், நாளை கிறித்தவர் களும் இடஒதுக்கீடு கேட்பார்கள். அப்புறம் மற்ற சிறு பான்மையினரும் கேட்பார்கள்.<br /><br />எனவே இவ்வாறு செய்வது இய லாத ஒன்றாகும். அரசியல் சட்டத்தின் அடிப்படையில் அவர்கள் ஏற்கெ னவே பல சலுகைகளை அனுப வித்து வருகிறார்கள். பெரும்பான்மை சமூ கத்தினர் அந்தச் சலுகைகளை எல்லாம் அனுபவிக்க வில்லை என்று கூறினார். இந்தச் செய்தி அப்போதே ஏடுகளில் வெளி வந்தது. குறிப்பாக அம்மை யாரின் நம்பிக்கைக் குரிய தினத்தந்தி நாளேட்டில் 23-7-2004 அன்று பக்கம் 3இல் வெளி வந் திருக்கிறது.<br /><br />- கலைஞர் பதில்கள்<br />(முரசொலி 7.3.2014 முதல் பக்கம்)<br /><br />Read more: http://viduthalai.in/page1/76543.html#ixzz2vQCYl0EB<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-13161597487505399902014-03-09T06:07:07.949+05:302014-03-09T06:07:07.949+05:30பெரியார் பொன்மொழி!
தமிழனுக்கு மற்றவர்கள் போல இனஉண...பெரியார் பொன்மொழி!<br /><br />தமிழனுக்கு மற்றவர்கள் போல இனஉணர்ச்சி இல்லா விட்டாலும் மான உணர்ச்சி இருக்க வேண்டாமா? நம் முட்டாள்கள் உரிமையைக் கண்டவனுக்கு - எதிரிக்கு விட்டுக் கொடுத்துவிட்டு அவன் அனுபவிக்கப் பார்த்துக் கொண்டு உயிர் வாழ்கின்றானே. உரிமையை விட்டுக் கொடுத்த பின் சுதந்திரமென்ன? சுயராஜ்ஜியமென்ன?<br /><br />Read more: http://viduthalai.in/page-7/76632.html#ixzz2vQBhvF7p<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-51283660878992601442014-03-09T05:54:06.617+05:302014-03-09T05:54:06.617+05:30திரு.சௌந்திர பாண்டிய நாடாருக்கு வாழ்த்தும் நன்றியு...திரு.சௌந்திர பாண்டிய நாடாருக்கு வாழ்த்தும் நன்றியுரையும்<br /><br />கனவான்களே, சில உபச்சாரப் பத்திரங்களிலும் திரு. சௌந்திரபாண்டிய நாடார் அவர்கள் வாக்கியங்களிலும் இப்பதவி இவருக்குக் கிடைத்ததற்கு திரு. பி.டி. ராஜனும் நானும் பொறுப்பாளிகள் என்று கண்டிருக்கின்றது. அதை நான் ஒருவாறு வணக்கத்துடன் மறுக்கின்றேன். திரு. ராசன் அவர்கள் பொறுப்பாளி என்பதில் கொஞ்சமும் சந்தேக மில்லை.<br /><br />உங்களோடு சேர்ந்து நானும் அவருக்கு நன்றி செலுத்துகின்றேன். ஒரு விதத்தில் நான் எப்படி பொறுப்பு டையவன் என்றால் திரு. சௌந்திர பாண்டிய நாடார் அவர்கள் தம்முடைய மற்ற காரியங்களையும் தொண்டு களையும் கெடுத்துவிடும் எனக் கருதி தமக்கு இப்பதவி வேண்டாம் என்று சொல்லி மறுத்துவிட்டபோது, நான் கண்டிப்பாய் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டுமென்று உற்ற நண்பர் என்கின்ற முறையில் அவருக்கு கட்டளை இட்டு கட்டாயப்படுத்தினேன்.<br /><br />அதைத்தவிர எனக்கு வேறு சம்பந்தம் கிடையாது. ஆகையால் அப்புகழுரைகள் திரு. ராஜன் அவர்களுக்கே உரியது. இந்த சந்தர்ப்பத்தில் திரு. நாடார் அவர்களுக்கு நான் சொல்லுவதெல்லாம் இந்த ஜில்லா போர்டு பதவியை நிர்வகிப்பதில் எல்லோரையும் திருப்தி பண்ண வேண்டும் என்றாவது எல்லோருக்கும் நல்ல பிள்ளையாக வேண்டு மென்றாவது கருதிக்கொண்டு ஒரு காரியமும் செய்ய வேண்டாமென்றே சொல்லுகிறேன்.<br /><br />ஏனெனில், அது முடியாத காரியம், ஒரு சமயம் முடியாத தாயிருந்தாலும் அது யோக்கியமான மனிதனின் காரிய மாகாது ஒரு சமயம் யோக்கியமான மனிதனுக்கும் சாத்தியப் படுமானாலும் அதனால் நன்மையை விட கெடுதியே அதிகமாகும். மக்களில் பலதிறமுண்டு யோக்கியனும் அயோக்கியனும் உண்டு.<br /><br />இருவரையும் திருப்தி செய்யக் கருதுவது நாணயமாகாது. ஆதலால் அடியோடு கஷ்டப் படுகின்றவர்களுக்கு நன்மை செய்வதின் மூலம் சுகப்படு பவர்களுடைய ஆசையும் அனுபவமும் சற்று குறைந்தாலும் குற்றமில்லை.<br /><br />நான் பொதுவாக இம்மாதிரி பதவி பெறு பவர்களை பாராட்டுகிற பழக்கமில்லை - ஆனால் திரு. நாடாரைப் பாராட்டுகின்ற காரணம் எல்லாம் அவர் கொடுமைப்படுத்தப்பட்ட கூட்டத்தைச் சேர்ந்தவர் என்றும் அவரிலும் அதிகமாய்க் கொடுமைப்படுத்தப்பட்ட மக்கள் ஏராளமாய் நமது நாட்டில் வதைக்கப்படுகின்றார்கள் என்றும் அவர்களுக்கு விடுதலையும் சாந்தியும் ஏற்பட கொடுமை யை அனுபவித்த ஒருவருக்கு பதவி கிடைப்பது அனு கூலமானதென்றும் அந்த வழியில் நாடார் மன உறுதியோடு உழைப்பார் என்றும் நம்பி அவர் அடைந்த பதவியில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஏற்படப் போகும் நன்மையை உத் தேசித்து அவர்களைப் பாராட்டும் முறையில் இவர்களைப் பாராட்டுகின்றேன்.<br /><br />என்றும் திரு. நாடார் அந்தத் துறையில் உறுதியுடன் நின்று இந்தக் காரியத்தை நடத்தத் தாட்சண் யமோ பயமோ சுயநலமோ பொது ஜனங்களிடம் கீர்த்தி பெற முடியாதே என்கின்ற சந்தேகமோ தோன்றுமானால் தயவு செய்து அந்த கணமே அந்த வேலையை இராஜினாமாக் கொடுத்து விட்டு வெளியில் வந்து இப்போது செய்கின்ற தொண்டே செய்ய வேண்டுமென்றும் சொல்லுகின்றேன்.<br /><br />- குடிஅரசு - சொற்பொழிவு - 25.11.1928<br /><br />Read more: http://viduthalai.in/page-7/76629.html#ixzz2vQ8PF9vk<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-27667038850773455282014-03-09T05:53:23.022+05:302014-03-09T05:53:23.022+05:30சங்கராச்சாரி மடத்து ஸ்ரீமுகம்
பொட்டுக் கட்டுவதை ஒ...சங்கராச்சாரி மடத்து ஸ்ரீமுகம்<br /><br />பொட்டுக் கட்டுவதை ஒழிக்க வேண்டும் என்று ஸ்ரீமதி முத்துலட்சுமி அம்மாள் அவர்களால் கொண்டுவரப்பட்ட மசோதாவானது இந்து மதத்திற்கு விரோத மென்றும் அதை இந்துக்கள் நிறைவேற்ற விடக் கூடாது என்றும் ஸ்ரீ சங்கராச் சாரியார் மடத்தில் தீர்மானம் செய்து சிஷ்ய கோடிகளுக்கு வினியோகிக்கப்பட்டு இருக்கின்றதாம். இந்த மாதிரியான இந்து மதத்தின் பெருமையைக் கமிஷனுக்குத் தெரிவிக்க வேண்டாமா?<br /><br />- குடிஅரசு - 12.02.1928<br /><br />Read more: http://viduthalai.in/page-7/76629.html#ixzz2vQ8Evp6z<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-87096759167689237032014-03-09T05:45:42.596+05:302014-03-09T05:45:42.596+05:30
அங்கும் - இங்கும் - எங்கும் பெண்ணுரிமைக் குரல்
...<br />அங்கும் - இங்கும் - எங்கும் பெண்ணுரிமைக் குரல்<br /><br /><br />ஆண் சாமியார்களை எதிர்த்து<br />பெண் சாமியார்கள் புதிய அமைப்பு!<br /><br /><br />அலகாபாத்.மார்ச்.8- துறவு பூண்ட பின்னரும்கூட பெண்களை ஆண்கள் ஆதிக்கம் செலுத்துவதைக் கண்டு கொதித்தெழுந்த பெண்சாமியார்கள் பெண்களுக்காக அகாடா என்கிற புதிய அமைப்பை உருவாக்கி உள்ளார்கள்.<br /><br />இந்துமதம் என்றாலே ஆணுக்கு பெண் அடங்கித்தான் இருக்க வேண் டும் என்கிற நடைமுறை இயல்பாகவே பின்பற்றப்பட்டு வருகிறது. பெண்கள் கோயில்களுக்கு உள்ளே வருவது என்பதெல்லாம் கட்டுப்படுத்தப்பட்ட ஒன்றுதான்.<br /><br />துறவு பூண்ட பெண்களுக்கும் இதே நிலைதான். ஆனாலும், பொறுத்தது போதும் என்கிற மனநிலைக்கு பெண் களில் துறவுபூண்ட சாமியாரிணிகள் வந்து விட்டனர் போலும்.<br /><br />அலகாபாத் கங்கைக் கரையில் கூடும் ஆண் சாமியார்கள் போலவே, பெண் சாமியாரிணிகள் பூஜைகள் மற்றும் இந்து மதச் சடங்குகள் செய்து வருகின்றனர்.<br />பெண் சாது மகந்த் திரிகல் பவந்தா என்பவர் பெண்களுக்கான அகாடா என்கிற புதிய அமைப்பு குறித்து கூறும் போது:<br /><br />இதுவரை சாதுக்களுக்கான குழுக்கள் பன்னிரண்டுக்கும் மேல் உள்ளன. அவை அனைத்துமே ஆண்களின் ஆதிக்கத்தில் தான் உள்ளன. ஆகவே, பெண்களுக்கான அமைப்பாக அகாடா தொடங்கப் படுகிறது.<br /><br />இந்துத்துவ வரலாற்றில் அனைத்துப் பெண்களையும் இணைக்கின்ற முதல் அமைப்பு அகாடா என்று நம்புகிறேன். இந்து மதத்தில் முதல் அகாடா ஆதி சங்கரரால் நிறுவப்பட்டது. சமயப் பாதுகாப்புக்காக எட்டாம் நூற்றாண்டில் ஏற்படுத்தினார். தற்போது பெண் களுக்காக அகாடா தொடங்கப்படுகிறது.<br /><br />ஆண் சாமியார்களால் பெண் சாமி யார்களும் விமர்சனத்தை எதிர்நோக்க வேண்டி உள்ளது. காலத்திற்கு பொருந் தாத பழக்கங்களை பெண்கள்மீது திணிக்கிறார்கள்.<br />இந்து சாத்திரங்களில் பெண்கள் அகாடா ஏற்படுத்தக்கூடாது என்று எங் கும் இல்லை. இப்படி ஒரு அமைப்பை தொடங்குவதன்முலம் நாங்கள் ஆண் களிடமிருந்து விமரிசனத்தை எதிர் நோக்க வேண்டி வரும். பெண் சாமி யார்கள் மடங்களின் தலைமைப் பொறுப்பை எட்டும்வகையில் எழுந்து விட்டோம். ஆதிக்கத்திலிருந்து விடு படும்வரை அகாடா தொடர்ந்து தன் பணிகளை பெண்களுக்காக செய்யும்.<br /><br />ஆண்கள் மட்டுமே மடங்கள் போன்ற அமைப்புகளின் தலைமைப் பொறுப்புகளில் இருக்கும்வரை பெண்கள் மதிப்புக்குரிய பொறுப்புக்கு வரமுடியாது. பெண்களில் சாதுவாக, குறிப்பாக விதவைப் பெண்கள் சாது வாக வரமுடியுமா என்பதே கேள்விக் குரியதுதான்.<br /><br />பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை அலகாபாத்தில் நடைபெறும் கும்பமேளாவில் பங்கேற்க ஏராளமான ஆண், பெண் சாதுக்கள் வருவார்கள். நாசிக்கில் அடுத்த ஆண்டு நடைபெறும் கும்பமேளாவில் அகாடா பங்கேற் கிறது என்று அகாடா அமைப்பைச் சேர்ந்த மகந்த் திரிகல் பவந்தா குறிப் பிட்டார்.<br /><br />Read more: http://viduthalai.in/page-2/76646.html#ixzz2vQ6HAubg<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.com