tag:blogger.com,1999:blog-1474608369333206681.post6151797570469188828..comments2023-10-29T13:02:52.613+05:30Comments on தமிழ் ஓவியா: பெரியார் பிறந்த தமிழ் மண்ணின் இயல்பு- பகுஜன்னா - சர்வ ஜன்னா? தமிழ் ஓவியாhttp://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comBlogger42125tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-86396605360754854272014-05-22T07:33:05.613+05:302014-05-22T07:33:05.613+05:30
ஊடகங்கள், தங்கள் நேர்மையை நிரூபிக்கட்டும்?
புதி...<br />ஊடகங்கள், தங்கள் நேர்மையை நிரூபிக்கட்டும்?<br /><br /><br />புதிய தலைமுறை நேர்பட பேசு நிகழ்ச்சியில் ஊடகவியலாளர் ஊட கம் நேர்மையாக செய்தி வெளியிடு கிறது என சொல்லுகிறார். உண்மையா? மோடி வளர்ச்சி நாயகன் என மோடியின் பிரச்சார கோஷ்டி தொடர்ந்து சொன்னதை ஊடகம் என்றைக்காவது கேள்விக்கு உட் படுத்தியுதுண்டா?<br /><br />அடுக்கடுக்காக, குஜராத் மாடல் உண்மையல்ல என அரசியல் கட்சி கள் மட்டுமல்ல, அமர்த்தியா சென் போன்ற பல அறிஞர்கள் சொன்னதை, ஊடகங்கள் நேர்மையாக வெளிப் படுத்தினவா?<br /><br />நான் ஆட்சிக்கு வந்தால், குற்றப் பின்னணி உள்ளவர்களை சிறையில் அடைப்பேன் என மோடி பேசினார்; அமீத் ஷா, முசாபர் நகர் கலவரக் குற்றவாளிகள், எடியூரப்பா போன்றோரை பக்கத்தில் வைத்துக் கொண்டு, இப்படி பேசுகிறீர்களே என எந்த ஊடகம் கேள்வி கேட்டது?<br /><br />பெங்களூரு சொத்துக்குவிப்பு வழக்கில் அரசு வழக்கறிஞர் பவானி சிங், ஜெயலலிதா சேர்த்த சொத்து விவரத்தை பட்டியலிட்டாரே; அதனை எந்த ஊடகமும் வெளியிடா மல் இருக்கிறீர்களே என கலைஞர் வெளிப்படையாகக் கேட்டாரே, அப்போதாவது, அந்த செய்தியை ஊடகம் வெளியிட்டதா?<br /><br />ஆக, இங்கே ஊடக நிறுவனத்தின் முதலாளிகளுக்கு ஒரு அரசியல் இருக் கிறது. அதற்கு ஏற்ப செய்திகளை சொல்ல வேண்டிய கட்டாயம் இருக் கிறது. அதை மீறி நான் சொல்வேன் என்றால், அவர் வெளியே தள்ளப் படுவார்.<br /><br />மோடிக்கு எதிராக செய்திகள் வெளியிட்ட சில பத்திரிகையாளர்கள். முதலாளிகளால் நீக்கப்பட்டுள்ளனர். திமுக தலைவர் தும்மினால் கூட, அது ஒரு செய்தி; உடனே, மைக்கைத் தூக்கிக் கொண்டு, மு.க. அழகிரியிடம் பேட்டி. அவரைத் தான், கட்சியி லிருந்து நீக்கிட்டாங்களே; அப்புறம் அவரிடம் பேட்டி எதற்கு?<br /><br />இன்றைக்கு, அதிமுக அமைச்சர் கள் மூன்று பேர் நீக்கப்பட்டுள்ளனர். ஏற்கெனவே அமைச்சர்களாக இருந்து நீக்கப்பட்டவர்களுக்கு, மீண்டும் அமைச்சர் பதவி என ஜெயலலிதா அறிவித்துள்ளார்.<br /><br />இன்றைக்கு மீண்டும் அமைச்சராக நியமிக்கப்பட்ட, அக்ரி.எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தியும், எஸ்.பி.வேலு மணியும், 26.1..2012 அன்று, முதல்வர் ஜெயலலிதாவால், அமைச்சர் பதவி யிலிருந்து நீக்கப்பட்டவர்கள்.<br /><br />கோகுல இந்திரா, சென்ற ஆண்டு பிப்ரவரி 27, 2013, அவர் வகித்து வந்த சுற்றுலாத் துறையை ஒழுங்காக கவனிக்கத் தவறியதால், இதே முதல்வர் ஜெயலலிதாவால் நீக்கப்பட்டவர்.<br /><br />இந்தச் செய்தியை, மூன்று அமைச் சர்கள் நீக்கம்; புதிய அமைச்சர்கள் நியமனம் என தொலைக்காட்சி ஊடகங்கள் செய்தி கூறுகின்றன.<br /><br />ஒரு ஊடகம்கூட, இப்போது அமைச்சர்களாக நியமிக்கப்பட்ட வர்கள், ஏற்கெனவே, அமைச்சர் களாக இருந்து பதவி நீக்கம் செய்யப் பட்டவர்கள் என கூறவில்லை.<br /><br />ஏற் கெனவே, அமைச்சர்களாக இருந்து நீக்கப்பட்டவர்களுக்கு, மீண்டும் அமைச்சர் பதவி எந்த அடிப்படையில் தரப்படுகிறது என ஜெயலலி தாவிடம், இந்த ஊடகங்கள், கேள்வி கேட்டுவிட்டு, தங்கள் நேர்மையை நிரூபிக்கட்டும்.<br /><br />இந்த லட்சணத்தில் இருக்கும் ஊடகங்கள்தான், பத்திரிக்கா தர்மம், நடு நிலை என்றெல்லாம் வாந்தி எடுக்கின்றன.<br /><br />நம்மைப் பிடித்த அய்ந்து நோய்களுள் ஒன்று பத்திரிகைகள் என பெரியார் சும்மாவா சொன்னார்? அவர் காலத்தில், தொலைக்காட்சி ஊடகம் இல்லை; இருந்திருந்தால், இதையும் சேர்த்து இருப்பார்.<br /><br /> <br /><br />- குடந்தை கருணா<br /><br />Read more: http://viduthalai.in/page-2/80691.html#ixzz32PED9Wm2<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-33447823092208604862014-05-22T07:30:15.643+05:302014-05-22T07:30:15.643+05:30
இசைப்பிரியாவுடன் இருப்பது எனது மகளே! - தந்தை
இலண...<br />இசைப்பிரியாவுடன் இருப்பது எனது மகளே! - தந்தை<br /><br />இலண்டன் மே 21- விடு தலைப்புலிகளின் தொலைக் காட்சி அறிவிப்பாளராக இருந்த இசைப்பிரியா இராணுவ காப்பரண் ஒன் றிற்குள் இருப்பது போன்று ஊடகங்களில் வெளியாகி யுள்ள புகைப்படத்தில் அவ ருடன் இருப்பவர் மல்லாவி யோகபுரம் கிழக்கைச் சேர்ந்த குணலிங்கம் உஷாளினி என அவருடைய குடும்பத்தி னர் கூறியிருக்கின்றனர். இந்த தக வலை இலண்டன் பிபிசி தமிழோசை வெளியிட்டுள்ளது.<br /><br />இணைய தளங்களிலும் பின்னர் உள்ளூர் பத்திரிகை களிலும் வெளியாகியுள்ள இந்தப் படத்தைப் பார்த் ததும், இசைப்பிரியாவுடன் இருப்பவர் தனது மகள் என்று அடையாளம் கண் டுள்ளதாக அவருடைய தந் தையார் தெரிவித்துள்ளார்.<br /><br />கடந்த 2008 ஆம் ஆண்டு வீட்டுக்கு ஒருவர் போராட்டத்தில் இணைய வேண்டும் என்று தமது மூத்த மகளாகிய உஷாளினி சென்றதாகவும், யுத்தம் தீவிரமடைந்து தாங்கள் இடம் பெயர்ந்து, முள்ளி வாய்க்காலுக்குச் சென்றி ருந்த போது ஒருநாள் தமது மகளைக் கண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.<br /><br />அப்போது அவரைத் தம்முடன் வருமாறு கேட் டதற்கு அவர் வரவில்லை என்றும் அதன்பின்னர் யுத் தம் முடிவடைந்து தாங்கள் இடம்பெயர்ந்து செட்டி குளம் மனிக்பாம் இடைத் தங்கல் முகாமுக்கு வந்தி ருந்தபோது தமது மகளைத் தேடியபோதிலும் அவர் கிடைக்காத காரணத்தினால் சர்வதேச செஞ்சிலுவைக் குழுவிடமும், மற்றும் மனித உரிமைகள் ஆணைக் குழுவிடமும் அவரைத் தேடிக் கண்டுபிடித்துத் தரு மாறு கோரி முறையிட்டி ருந்ததாகவும் அவர் தெரி வித்துள்ளார்.<br /><br />அண்மையில் கிளி நொச்சி மாவட்டத்தில் காணாமல் போயுள்ளவர் கள் தொடர்பில் விசாரணை நடத்திய அதிபர் ஆணைக் குழுவிலும் காணாமல் போயுள்ள தனது மகளைத் தேடித்தருமாறு தாங்கள் கோரியிருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.<br /><br />ஆயினும் தமது மகள் பற்றிய தகவல்கள் எதுவும் தெரியாத நிலையில் சில தினங்களுக்கு முன்னர் உள் ளூர் பத்திரிகையொன்றில் இசைப்பிரியாவுடன் காப் பரண் ஒன்றினுள் தனது மகள் இருப்பதைக் கண்ட தாகவும் அவர் தெரிவித்தார்.<br /><br />இது தொடர்பில் அதிபர் ஆணைக்குழுவில் சாட்சிய மளிப்பதற்கான ஏற்பாடு களைச் செய்து உதவிய மன்னார் பிரஜைகள் குழு வினரிடம் முறையிடவுள்ள தாகவும் உஷாளினியின் தந்தையார் குணலிங்கம் தெரிவித்துள்ளார்.<br /><br />இசைப்பிரியா இராணு வத்தின் பிடியில் இருந்தார் என்றும் பின்னர் அவர் இறந்து கிடந்தார் என்றும் காணொ ளிகள் வெளிவந்து பர பரப்பை ஏற்படுத்தியிருந்தன.<br /><br />இந்த நிலையில் இப் போது அவர் இராணுவ பங் கர் ஒன்றுக்குள் உயிருடன் இருப்பது போன்ற புகைப் படம் வெளியாகி மேலும் பரபரப்பை அதிகரித்துள்ளது.<br /><br />இந்தத் தகவல்கள் குறித்து இலங்கை இராணு வத்தின் சார்பில் பேசவல்ல ருவான் வணிகசூரிய அவர் களிடம் கேட்டபோது, இப் படியான படங்கள் குறித்து உறுதியாக எதுவும் கூற முடியாது என்றும், அவை குறித்து ஆராயும் குழு அவற்றை முழுமையாக ஆராய்ந்தபின்னரே அவை குறித்து கூறமுடியும் என் றும் தெரிவித்துள்ளார்.<br /><br />Read more: http://viduthalai.in/e-paper/80682.html#ixzz32PDMmtT1<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-82497974430436708172014-05-22T07:28:00.603+05:302014-05-22T07:28:00.603+05:30
டாக்டர் தருமாம்பாள்
எப்பக்கம் வந்து புகுந்துவிட...<br />டாக்டர் தருமாம்பாள்<br /><br /><br />எப்பக்கம் வந்து புகுந்துவிடும் இந்தி? எத்தனைப் பட்டாளம் கூட்டி வரும்? என்ற புரட்சிக்கவிஞர் பாரதி தாசனின் வீரம் கொழுந்து விட்டு எரியும் எரிமலைப் பாடல் வரிகளைப் பாடிக் கொண்டு சென்னைப் பெத்துநாயக்கன்பேட்டை யிலிருந்து பெண்கள் படை ஒன்று புறப்பட்டது.<br /><br />அந்தப் படை வந்து சேர்ந்த இடம் - இந்து தியாலாஜிகல் உயர் நிலைப்பள்ளி (14.11.1938) தலைமை தாங்கிய வீராங் கனை டாக்டர் தருமாம் பாள்!<br /><br />அதற்கு முதல்நாள் (13.11.1938) சென்னையில் கூடிய பெண்கள் மாநாட் டில்தான் மதிப்புக்குரிய தலைவர் ஈ.வெ.ரா.வுக் குப் பெரியார் என்ற பட்டம் பெருமையுடன் சூட்டப்பட்டது. அந்த மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப் படையில்தான் மறுநாள் இந்த ஊர்வலம்.<br /><br />டாக்டர் தருமாம்பாள் தலைமையில், மூதாட்டி மூவலூர் இராமாமிர்தம் அம்மையார், மயிலை சிவமுத்துவின் தமக்கை யார் மலர் முகத்தம்மை யார், திருவாரூர் பாவலர் பாலசுந்தரம் அவர்களின் வாழ்விணையர் பட்டம் மாள், டாக்டர் தருமாம் பாள் அவர்களின் மரு மகள் சீதம்மாள், (மங்கை என்ற 3 வயது மகள், நச்சினார்க்கினியன் என்ற ஒரு வயது மகன் ஆகிய இரு குழந்தைகளுடன்) ஆகியோர் முதல் நாள் மறியலில் பங்கேற்றுக் கைது செய்யப்பட்டனர். அய்வருக்கும் ஆறு வார கடுங்காவல் தண்டனை - வேலூர் சிறைக்கு அனுப் பப்பட்டனர்.<br /><br />அந்த மறியல் போராட்டம் 4.9.1938 வரை தொடர்ந்தது. மொழிப் போரில் பெண் கள் பங்குகொண்டனர் என்ற வரலாற்றில் முதல் அத்தியாயத்தைப் பூக்கச் செய்தனர்.<br /><br />மொழிப் போருக்குத் தலைமையேற்ற டாக்டர் தருமாம்பாள் அவர்களின் நினைவு நாள் இந்நாள் (1959).<br /><br />மொழிப்பற்று, தமிழ் இசை இயக்கம், தமிழ் வளர்ச்சி, தமிழ் ஆசிரியர் களின் உயர்வு, விதவை கள் மறுமணம், ஜாதி மறுப்பு மணம், பெண் கல்வி, சித்த மருத்துவம் என்று பல துறைகளிலும் முத்திரை பதித்த மூதாட் டியாக விளங்கினார்.<br /><br />அவர் மறைந்தபோது, அறிஞர் அண்ணா எழுதி னார்:<br /><br />மேலும் ஏதும் எழுத அன்னையாரைப் பிரிந்த தால் ஏற்பட்ட இதயக் குமுறல் இடம் தரவில்லை என்று எழுதினார் என் றால் அம்மையாரின் அருமை விளங்குமே! - மயிலாடன்<br /><br />Read more: http://viduthalai.in/e-paper/80680.html#ixzz32PCuRAzo<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-32907793991849134442014-05-21T06:41:52.279+05:302014-05-21T06:41:52.279+05:30புதுப்பா : யாராலே?....
மான மிழந்தோம் ஆரியத்தால்...புதுப்பா : யாராலே?....<br /> <br /><br />மான மிழந்தோம் ஆரியத்தால்<br />மதி யிழந்தோம் ஆரியத்தால்<br />உரிமை யிழந்தோம் ஆரியத்தால்<br />உணர்வை இழந்தோம் ஆரியத்தால்<br /><br />சாத்திரத்திற்கும் அடிமை யானோம்<br />கோத்திரத்திற்கும் அடிமை யானோம்<br />மந்திரத்திற்கும் அடிமை யானோம்<br />மதத்திற்கும் அடிமை யானோம்<br /><br />அண்டிப் பிழைத்தது ஆரியக் கூட்டம்<br />மண்டிக் கிடந்தது மக்கள் கூட்டம்<br />தன்மானம் இன மானம்<br />காத்தது எம் திராவிடமே<br /><br />குலக் கல்வித் திட்டத்தைக்<br />கொண்டு வந்தது ஆரியமே<br />ஆரிய நஞ்சின் ஆணவத்தை<br />அழித் தொழித்தது திராவிடமே<br /><br />இடுப்புத் துண்டு தோளுக்கு<br />இடம் மாறியது திராவிடத்தால்<br />இட ஒதுக்கீடும் இன்றளவும்<br />இத மானது திராவிடத்தால்<br /><br />சூத்திரன் என்றுனைச் சொன்னாலே<br />ஆத்திரம் கொண்டு அடிப்பாயே<br />சொன்னது சொன்னது யாரது?<br />எம் தந்தை பெரியாரே!<br /><br />பெண் குலத்தைக் கோவிலுக்கு<br />நேர்ந்து விட்டது கொடுமையடா!<br />பொட்டுக் கட்டும் தேவதாசிமுறை<br />ஒழிந்தது திராவிடத்தால்<br /><br />கோவில் நுழைவு திராவிடத்தால்<br />காலுக்கு செருப்பு திராவிடத்தால்<br />பெண்ணுக்கு உரிமை திராவிடத்தால்<br />பெண் கல்வியும் திராவிடத்தால்<br /><br />ஆணும் பெண்ணும் சமம்<br />திராவிடத் தாலே திராவிடத்தால்<br />அச்ச மென்பது இனியில்லை<br />திராவிடத் தாலே திராவிடத்தால்<br /><br />அம்மி மிதிக்கல அக்னியில்லை<br />அடிமைச் சின்னமும் பெண்ணுக்கில்லை<br />மணி விழா மணவிழா<br />யாராலே திராவிடத் தாலே<br /><br />திராவிடத்தால் உயிர் பெற்றோம்!<br />திராவிடத்தால் எழுந் திட்டோம்!<br />திராவிடத்தால் வாழ்ந் திடுவோம்!<br />திராவிடத்தால் வீழ்ச்சி இனியில்லை!<br /><br />- குடியாத்தம் ந.தேன்மொழிதமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-30878426906345717642014-05-21T06:36:50.683+05:302014-05-21T06:36:50.683+05:30கைமேல் பலன்?
காசிக்குச் சென்று
கங்கையில் நீராடி
...கைமேல் பலன்?<br /><br /><br />காசிக்குச் சென்று<br />கங்கையில் நீராடி<br />கங்கை நீர் கொண்டு<br />ராமநாதருக்கு<br />அபிஷேகம் செய்ய<br />ராமேஸ்வரம் சென்றவர்<br />குடும்பத்தோடு மாண்டார்<br />சாலை விபத்தில்!<br /><br />தெய்வத்தின் திருவருள்<br />முன்னோர்களின் நல்லாசி<br />உடனே கிட்டியது<br />கைமேல் பலன் என்பது<br />இதுதானோ?<br /><br />_நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர்தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-47856674410220742772014-05-21T06:36:22.085+05:302014-05-21T06:36:22.085+05:30குறுங்கதை : சுயமரியாதை
- க.அருள்மொழி
காஞ்சனாவின...குறுங்கதை : சுயமரியாதை<br /><br /><br />- க.அருள்மொழி<br /><br />காஞ்சனாவின் வீட்டிலிருந்து கையைத் துடைத்தபடி வெளியே வந்த சரசுவை ஏய் சரசு இங்க கொஞ்சம் வாடி என்று கூப்பிட்டாள் பார்வதி. என்னக்கா என்று கேட்டபடியே பார்வதியின் அருகில் போனாள் சரசு.<br /><br />என்னடி, நானும் கேட்டுக்கிட்டே இருக்கேன் நீயும் முடியாதுன்னே சொல்லிக்கிட்டிருக்கே? இவ்வளவு தூரம் காஞ்சனா வீட்டு வரைக்கும் வர்றே... அப்படியே என் வீட்டிலும் வேலை செய்து கொடுத்திட்டுப் போன்னா முடியாதுன்னு சொல்றியே? அவள் மட்டும் என்ன அதிகமான சம்பளமா கொடுத்திடுறா? என்றாள் பார்வதி.<br /><br />இல்லைக்கா என்னால முடியாது என்று சொல்லிவிட்டு விருட்டெனக் கிளம்பிவிட்டாள் சரசு.<br /><br />பார்வதிக்கு முகத்தில் அடித்ததுபோல் இருந்தது. அப்படி என்னதான் சொக்குப் பொடி போடுகிறாள் இந்தக் காஞ்சனா? நாலைந்து வருஷமாக காஞ்சனா வீட்டில் தொடர்ந்து வேலை செய்கிறாள் சரசு. பார்வதிக்கோ இரண்டு மாதம் கூட தொடர்ந்தாற்போல் யாரும் வேலை செய்வதில்லை.<br /><br />காஞ்சனா வீட்டில் வேலை செய்துவிட்டு எங்கோ தூரத்தில் இருக்கும் ஒரு வீட்டிற்கு வேலைக்குப் போகும் சரசு, பார்வதியின் வீட்டுக்குப் போகமாட்டேன்கிறாள் என்பது புதிராகவே இருந்தது.<br /><br />அடுத்தநாள் சரசு, காஞ்சனாவின் வீட்டுக்குள் போனதும் பார்வதியும் போனாள்.<br /><br />பார்வதியை வரவேற்று உட்காரச் சொன்ன காஞ்சனா, சரசுவிற்கு வேலைகளைச் சொன்னாள். சரசு, இங்க பாருங்க, இதையெல்லாம் சுத்தம் செய்து விட்டு, இதையெல்லாம் வெளியே போட்டுடுங்க.<br /><br />அந்தப் பாத்திரங்களையெல்லாம் அங்கே அடுக்கிடுங்க. காபி போட்டு உங்களுக்கு எடுத்துக்கிட்டு எங்களுக்கும் கொடுங்க என்றதும், சரிங்கம்மா சரிங்கம்மா என்று சொல்லிவிட்டு, சொன்னதையெல்லாம் வேகமாகச் செய்துவிட்டு வெளியேறினாள்.<br /><br />பார்வதிக்குப் புரிந்துவிட்டது. காஞ்சனா போட்டது மரியாதைச் சொக்குப் பொடி என்று. சுயமரியாதை என்பது, தான் எதிர்பார்ப்பதையே மற்றவர்களுக்கும் தருவது.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-43412815330322867172014-05-21T06:34:13.886+05:302014-05-21T06:34:13.886+05:30உங்களுக்குத் தெரியுமா?
கோயில்களில் - மடங்களில் இ...உங்களுக்குத் தெரியுமா?<br /><br /><br />கோயில்களில் - மடங்களில் இருந்த நகைகள் எல்லாம் ஓமந்தூரார் ஆட்சியில்தான் மாற்றுப் பார்த்து விலை மதிப்பீடு செய்யப்பட்டு பதிவேடுகளில் பதியப்பட்டது என்பதும் அதற்கு முன் கொள்ளை அடித்துவந்த பார்ப்பனர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்தார்கள் என்பதும் உங்களுக்குத் தெரியுமா?தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-82006834904255222352014-05-21T06:32:49.638+05:302014-05-21T06:32:49.638+05:30அணிய வேண்டிய ஆடை!
ஜாதி, சமயமற்ற
சமுதாயம் படைப்பத...அணிய வேண்டிய ஆடை!<br /><br /><br />ஜாதி, சமயமற்ற<br />சமுதாயம் படைப்பது<br />திராவிடம்!<br /><br />ஜாதி, மதவெறிக்கு<br />மகுடம் சூட்டுவது<br />தமிழ்த் தேசியம்!<br /><br />அம்மணமாயிருக்கும்<br />என்னுயிர்த் தமிழா!<br />ஆடையாய் நீ<br />அணிய வேண்டியது -<br />திராவிடமா?<br />தமிழ்த் தேசியமா?<br /><br />- சீர்காழி கு.நா.இராமண்ணாதமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-66073242708044718262014-05-21T06:32:01.793+05:302014-05-21T06:32:01.793+05:30அஞ்சல் பெட்டித் தமிழர்கள்
அஞ்சல் பெட்டியே!
உன் ...அஞ்சல் பெட்டித் தமிழர்கள்<br /> <br /><br />அஞ்சல் பெட்டியே!<br />உன் திறந்த வாயில்<br />திணித்த எதையும்...<br />நீ செரித்துக் கொண்டதில்லை.<br /><br />உன் வயிற்றைத் துடைக்க<br />மீண்டும் மீண்டும்<br />வெற்றுப் பெட்டியாய்<br />நிற்கிறாய்<br />எம் தமிழர்களைப் போல.<br /><br />தாய்மொழிப் பற்று<br />பகுத்தறிவு<br />இனமானம்<br />தன்மானம் என<br />எல்லாம்தான் போட்டோம்<br />தமிழன் மண்டையில் பாரேன்<br />உன்னைப் போலவே<br />வெற்றுப் பெட்டியாய் நிற்கிறான்<br />எதையும் செரித்துக் கொள்ளாமல்.<br /><br />நீ திறந்தவாய் மூடமாட்டாய்<br />கடிதங்களுக்காக.<br />எம் தமிழர்களும்<br />பொருளுக்காக<br />பதவிக்காக<br />வீணரைப் புகழ்வதற்காக<br />வாய் திறந்தே இருக்கிறார்கள்.<br /><br />உனக்குக் கண் இல்லை<br />காதும் மூக்குமில்லை<br />வாயும்<br />நேரம் காட்டும்<br />வெளியும்தான்.<br /><br />தமிழனுக்கோ<br />அய்ம்பொறியும் உண்டு<br />ஆறறிவும் உண்டு<br />ஆனாலும்<br />உன்னைப் போலவே<br />வாயும்<br />வெளியும்<br />உள்ள பெட்டியாய் நிற்கிறான்.<br /><br />அஞ்சல் பெட்டியா நீ?<br />வெடிகுண்டை உன் வாயில் இட்டாலும்<br />அஞ்சாமல்<br />வாய் திறந்தே நிற்கும்<br />நீயா அஞ்சல் பெட்டி<br /><br />கல்லுக்கும்<br />உலோக, மரபொம்மைக்கும்<br />மாட்டுச் சாணிக்கும் அஞ்சி கும்பிட்டுக் கூத்தாடும் மனிதர்களே<br />முழுமூட அஞ்சல் பட்டிகள்<br /><br /> <br /><br />- பொன்.இராமசந்திரன், பம்மல்தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-57271314329579301622014-05-21T06:22:47.320+05:302014-05-21T06:22:47.320+05:30
நடத்தப்படக்கூடாது
அறிவுக்கும், ஆராய்ச்சிக்கும்,...<br />நடத்தப்படக்கூடாது<br /><br /><br />அறிவுக்கும், ஆராய்ச்சிக்கும், தேவைக்கும் பொருத்தமில்லாத காரி யங்கள் பழக்கத்தின் பேராலோ, வழக்கத்தின் பேராலோ, தெய்வத்தின் பேராலோ, மதத்தின் பேராலோ, சாதி வகுப்பின் பேராலோ, மற்றெதன் பேராலோ நடத்தப்படக்கூடாது.<br /><br />- (குடிஅரசு, 29.9.1940)<br /><br />Read more: http://viduthalai.in/page-2/80628.html#ixzz32J5y3Hbg<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-39585564366441111372014-05-21T06:19:43.622+05:302014-05-21T06:19:43.622+05:30
அயோத்திதாசப் பண்டிதர்
ஒடுக்கப்பட்ட மக்களால் என...<br />அயோத்திதாசப் பண்டிதர்<br /> <br /><br />ஒடுக்கப்பட்ட மக்களால் என்றென்றைக்கும் மறக்கப்பட முடியாத பெயர்.<br /><br />பவுத்த நெறிக்குப் புதுக் குருதியைப் பாய்ச்சியவர் பூர்வ காலத்தில் பவுத்தர்களாய் இருந்தவர்கள் ஆதி திராவிடர்கள் என்று நிறுவியவர்.<br /><br />அவர் கள் இந்துக்கள் அல்லர் என்றும் உறுதியாகக் கூறியவர்.<br /><br />அண்ணல் அம்பேத்கர் பவுத்த மார்க்கத்தைத் தழுவியதற்கு ஒரு வகையில் முன்னோடியாக இருந்த வர் என்று கூடச் சொல் லலாம்.<br /><br />திராவிடக் கழகம் என்ற பெயரில் ஓர் அமைப்பை நிறுவி நடத்தி வந்த ஜான்ரத்தினம் அவர் களுடன் இணைந்து திரா விடப் பாண்டியன் என்னும் இதழைத் தொடங்கிவர் (1882).<br /><br />1907 ஜூன் முதல் தேதியன்று அவர் தொடங் கிய மற்றொரு இதழ் ஒரு பைசா தமிழன் அவருக்குப் பிறகு அவரின் மகன் பட்டாபிராமன் 14 மாதங்கள் இவ்விதழை நடத்தினார்; அதற்குப்பிறகு ஒரு பைசா தமிழன் இதழை கோலார் தங்க வயல் பண்டிதமணி ஜி. அப்பாதுரையார் நடத் தினார்.<br /><br />ஒடுக்கப்பட்ட மக்களுக்காக அந்தக் கால கட்டத் தில் இதழ்நடத்துவதற்கு மரண தைரியம் இருந் திருக்க வேண்டும்.<br /><br />1881இல் இந்தியக் குடிமக்கள் கணக்கெடுப்பு முதன் முதலாக நடந்த போது, சாதியற்ற திராவிடர்கள், அல்லது ஆதித் தமிழர்கள் என்று பதிவு செய்யுமாறு தாழ்த் தப்பட்ட மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.<br /><br />திராவிடர் என்ற சொல்லாக்கத்தை பெரியார் தான் கண்டுபிடித்தது போலவும், அந்தப் பெயரால் தமிழ் உணர்வு குன்றி விட்டது போலவும் குறுக்குச் சால் ஓட்டும் குறுக்குப் புத்திக்காரர்களின் காதுகளைத் திருகும் வகையில், சாதியற்ற திராவிடர்கள் அல்லது ஆதித் தமிழர்கள் என்று மக்கள் தொகைக் கணக் கெடுப்பில் குறிப்பிட்ட தன் மூலம் இரண்டும் வேறுபாடுடையதல்ல என்று ஆணி அடித்தது போலவே அறைய வில்லையா?<br /><br />திராவிட மகாசபை என்று ஏன் இந்தப் பெயரில் அமைப்பைத் தொடங்கினார் என்பதையும் தமிழ்த் தேசிய தீரர்கள் தெரிந்து கொள்வார்களாக!<br /><br />காத்தவராயன் என்ற இயற்பெயர் கொண்டவர் அயோத்திதாச பண்டித ரிடம் கல்வி கற்றதால் இப்பெயரை ஏற்றார்.<br /><br />இன்று அவர் பிறந்த நாள் (1845) மறைவு 1914 மே 5.<br /><br />வாழ்க அயோத்திதாசர்!<br /><br />- மயிலாடன்<br /><br />Read more: http://viduthalai.in/e-paper/80613.html#ixzz32J5C3HWf<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-12616795104257381882014-05-20T06:41:26.744+05:302014-05-20T06:41:26.744+05:30
16ஆம் மக்களவைத் தேர்தலின் அதிர்ச்சி தரும் தகவல் 1...<br />16ஆம் மக்களவைத் தேர்தலின் அதிர்ச்சி தரும் தகவல் 13 சதவீதம் உள்ள முஸ்லிம்களுக்குக் கிடைத்த இடம் 4 சதவீதமே! பி.ஜே.பி.யில் நிறுத்தப்பட்ட 5 முஸ்லிம்களும் தோல்வியே!<br /><br />புதுடில்லி, மே 18- 16ஆம் மக்களவைத் தேர் தலில் சிறுபான்மை மக் களான இஸ்லாமியர்களுக்கு 22 இடங்களே கிடைத் துள்ளன. 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இது வீழ்ச்சியாகக் கருதப்படு கிறது. மத்தியில் பி.ஜே.பி. ஆட்சி என்ற நிலையில் சிறுபான்மை மக்களைப் பல வகைகளிலும் சிந்திக்க வைத்துள்ளது.<br /><br />16ஆம் மக்களவையில் முஸ்லிம் உறுப்பினர்கள் எண்ணிக்கை கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது. 2001 மக்கள் தொகை கணக்கீட்டின்படி, நாட்டில் முஸ்லிம்கள் சுமார் 13 சதவீதம் பேர் உள்ளனர். இந்நிலையில் புதிய மக் களவைக்கு சுமார் 4 சதவீத முஸ்லிம்களே (22 உறுப் பினர்கள்) தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர்.<br /><br />கடந்த 15 ஆண்டுகளாக 30-க்கும் மேற்பட்ட முஸ் லிம் உறுப்பினர்கள் மக்க ளவையில் இடம் பெற்றி ருந்தனர். கடந்த 20 ஆண் டுகள் என்று கணக்கிட்டால் 25க்கும் மேற்பட்டவர் களும், 1980-89க்கு இடைப் பட்ட காலத்தில் 40-க்கும் மேற்பட்டவர்களும் மக்க ளவையில் இடம் பெற் றிருந்தனர்.<br /><br />தற்போதைய தேர்தலில் வெற்றி பெற்றுள்ள பாரதிய ஜனதா கட்சி நாடு முழு வதும் 5 முஸ்லிம் வேட்பா ளர்களை மட்டுமே களத் தில் நிறுத்தியது. இந்த 5 பேரும் தோல்வி அடைந்து விட்டனர். பா.ஜ.க.வின் கூட்டணிக் கட்சியான லோக் ஜனசக்தி சார்பில் மட்டும், பீகாரின் காகரியா தொகுதியில் இருந்து ஒரு முஸ்லீம் உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.<br /><br />அய்க்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் 16ஆம் மக்களவைக்கு 8 முஸ்லிம் உறுப்பினர்கள் தேர்ந்தெ டுக்கப்பட்டுள்ளனர். இவர் களில் 4 பேர் காங்கிரஸ் சார்பிலும், 2 பேர் தேசிய வாத காங்கிரஸ் சார்பிலும் ஒருவர் ராஷ்ட்ரீய ஜனதா தளம் சார்பிலும் தேர்ந் தெடுக்கப்பட்டுள்ளனர்.<br /><br />மக்களவையில் முஸ் லிம் உறுப்பினர் எண் ணிக்கை குறைந்துள்ளதற்கு முஸ்லிம் சமூகத் தலை வர்கள் கவலை தெரிவித் துள்ளனர்.<br /><br />அகில இந்திய முஸ்லிம் மஜ்லிஸ் இமுஷாவரத் அமைப்பின் தலைவர் ஜபருல் இஸ்லாம் கான் கூறுகையில்: தேசிய அரசி யலில் பா.ஜ.க. மிகப் பெரிய சக்தியாக உருவெ டுத்துள்ள நிலையில் மிக விரைவில் முஸ்லிம் இப் பதவிக்கு பொருத்தமற்ற வர்களாக ஆக்கப்படுவார் கள் என்றார்.<br /><br />பெண் உறுப்பினர்கள் உயர்வு<br /><br />மக்களவையில் பெண் உறுப்பினர்கள் எண் ணிக்கை தொடர்ந்து போதிய அளவில் இல்லாமல் இருந்தாலும், 16ஆம் மக்களவையில் இவர்களின் எண்ணிக்கை 62 ஆக (சுமார் 11 சதவீதம்) உயர்ந்துள்ளது. இது இதுவரை இல்லாத அளவாகும். இதற்கு முன் 2009 மக்களவையில் 61 பெண் உறுப்பினர் தேர்ந் தெடுக்கப்பட்டதே அதிக பட்ச அளவாக இருந்தது.<br /><br />தற்போதைய மக்கள வைக்கு பா.ஜ.க. சார்பில் அதிகபட்சமாக 28 பெண் உறுப்பினர்கள் தேர்ந் தெடுக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் 11 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். காங்கிரஸ் கட்சி மக்கள வைக்கு 3 பெண் உறுப் பினர்களை மட்டுமே அனுப்புகிறது. ஆம் ஆத்மி சார்பில் 4 பேர் போட்டி யிட்டாலும் யாரும் வெற்றி பெறவில்லை. நாடு முழுவதும் போட்டியிட்ட 8,163 வேட்பாளர்களில் 636 பேர் பெண்கள்.<br /><br />Read more: http://viduthalai.in/page1/80544.html#ixzz32DK9L8Hw<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-363725937543628982014-05-20T06:39:02.244+05:302014-05-20T06:39:02.244+05:30
உங்களுக்குச் சொத்துப் பிரச்சினையா?
உங்களுக்குச்...<br />உங்களுக்குச் சொத்துப் பிரச்சினையா?<br /><br /><br />உங்களுக்குச் சொத்துப் பிரச்சினையா? வயல் எஸ்டேட் தொழிலில் சிக்கலா? போர்வெல் அமைக்க வேண்டுமா?<br /><br />கவலைப்படாதீர்கள். காவல் நிலையம் போகா தீர்கள் - நீதிமன்றம் போகாதீர்கள்! மண்ணச்சநல்லூரில் இருக்கும் பூமிநாத சாமியைச் சென்று தரிசியுங்கள் - காரியம் கைக் கூடும்! என்று தினமணி வெள்ளி மணி கூறுகிறது! வெட்கக் கேடு!<br /><br />சக்தி கொடு!<br /><br />பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் பிஜேபி சார்பில் போட்டியிட்டார் அருண்ஜெட்லி. அவர் பங்கேற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் சீக்கியர்களின் 10ஆம் மதக் குருவான குருகோவிந்தசிங் எழுதிய நூலிலி ருந்து ஒரு பாடலைப் பாடினார்.<br /><br />கூட்டத்தில் உள்ளவர் களையும் திருப்பிப் பாடச் சொன்னார். கடவுளே எனக்குச் சக்தி கொடு நல்ல விஷயங்களைச் செய்வதற்குப் பலம் கொடு. எனது எதிரியை எதிர் கொள்ள அச்சப்படாமல் இருக்கச் செய்!<br /><br />நியாயமான வெற்றி என் பக்கம் இருக்கட்டும் என்ற வரியில் நிச்சயமான வெற்றி அருண்ஜெட்லி பக்கமாகவே இருக்கட்டும் என்று மாற்றிப் பாடச் சொன்னார் - பாடினார்கள். ஆனால் முடிவு தேர்தலில் தோற்று விட்டாரே! கடவுள் கதை கந்தையாகி விட்டதே!<br /><br />Read more: http://viduthalai.in/page1/80540.html#ixzz32DJZTyM4<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-81914701395710266562014-05-20T06:35:41.657+05:302014-05-20T06:35:41.657+05:30தோல் நோய்களை நீக்கும் தகரை
அழகை விரும்பாத மனிதனே ...தோல் நோய்களை நீக்கும் தகரை<br /><br />அழகை விரும்பாத மனிதனே கிடையாது என்று கூறலாம். பெண்கள் மட்டுமல்லாது ஆண்களும் தங்களை அழகு படுத்தி கொள்ளும் காலம் இது. கரிய நிறமாகட்டும் சிவந்த நிறமாகட்டும் பார்த்தவுடன் அழகை வெளிப் படுத்துவது தோல் தான். அது பளபளப்பாகவும் நோய் இல்லாமல் இருந்தால்தான் சிறப்பு. தோலில் பாதிப்பு ஏற்பட்டால் வேதனை படாதவர்கள் மிகவும் குறைவு. அத்தகைய தோலில் ஏற்படும் பல்வேறு பாதிப்புகளை நீக்கும் மூலிகை தகரை.<br /><br />தகரை, கருந்தகரை வெண் தகரை, ஊசித் தகரை என பல்வேறு வகை தகரைகள் உள்ளன. அனைத்தும் ஒரே வகையான பண்புகளை கொண்டிருந்தாலும் கை வைத் தியம் என்ற மருத்துவ முறை தெரிந்தவர்களால் தகரையும் ஊசித்தகரையும் மட்டுமே அதிகம் பயன்படுத்தப்படுகிறது. தகரையானது நீண்ட கூரிய வடிவத்தில் கரும்பச்சை நிறத்தில் எதிரெடுக்கில் அமைந்த இலைகள் கொண்டது.<br /><br />வெருட்டல் மணமும், மஞ்சள் நிற பூக்களையும் உடைய குறுஞ்செடி. இதன் காய் உருண்டை வடிவத்தில் பயிறு போல நீண்டிருக்கும். தமிழகத்தின் எல்லா இடங்களிலும் பரவி இருக்கும். பெண்கள் அணியும் பாவாடையை இறுக்கமாக கட்டினால் இடுப்பு பகுதியில் வியர்வையும், அழுக்கும் சேர்ந்து படை உண்டாகும். அரிப்புடன் கூடிய இந்த படையை வெளியில் சொல்ல வெட்கப்பட்டு சிகிச்சை பார்க்காமல் அதிகரிக்க செய்து விடுவார்கள்.<br /><br />படர் தாமரை எனப்படும் இந்த நோய், ஆண்களிலும் சிலருக்கு வருவதுண்டு. தகரை இலையை பறித்து சிறிது எலுமிச்சை சாறு விட்டு மென்மையாக அரைத்து வைத்துக் கொண்டு குளிப்பதற்கு சில மணிநேரம் முன் படர்தாமரை உள்ள இடத்தில் பூசி விட்டு பிறகு குளித்தால் சில நாட்களில் இது தீரும். தடவும் போது சிறிது எரிச்சல் கொடுத்தாலும், நோய் நீங்கி மகிழ்ச்சி கொடுக்கும்.<br /><br />மண், அழுக்கு, புழுதியில் விளையாடும் சிறுவர்களுக்கு தொற்றாலும், உடல் சூட்டாலும் சிரங்கு வரும். அரிப்புடன் கூடிய சிறிய கொப்பளமாக தோன்றி ஆறாத சிரங்காக மாறுவதும் உண்டு. பெரும்பாலும் கோடை தொடங்கும் காலத்தில் வரும் இந்த பிரச்சினைக்கு தகரையின் இலையை பறித்து கொதிக்க வைத்து அந்த நீரைக் கொண்டு சொறி மற்றும் சிரங்கை கழுவி விட்டு இலையுடன் மஞ்சள் அரைத்து பற்றிட்டால் பறந்து போகும்.<br /><br /><br /><br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-28014859254887652762014-05-20T06:34:41.185+05:302014-05-20T06:34:41.185+05:30கருவுற்ற பெண்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்
கருவுற...<br />கருவுற்ற பெண்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்<br /><br /><br />கருவுற்றவர்கள் உண்ணும் சில உணவுகளில் கருச் சிதைவையோ அல்லது கரு வளர்ச்சியில் பாதிப்பையோ ஏற்படுத்தும் கிருமிகளும் பாக்டீரியாக்களும் அதிகளவில் காணப்படுகின்றன. ஆகையால், கருவுற்றவர்கள் எந்தெந்த உணவுகளை உண்ணக் கூடாது என்று ஒரு பட்டியலை குழந்தை நல மருத்துவர்கள் கூறுகின்றனர்.<br /><br />மீன்கள்: ஆற்று மீன்களையோ, குளத்து மீன்களையோ அல்லது அய்ஸ் வைத்த பதப்படுத்தப்பட்ட மீன்களையோ சாப்பிடக்கூடாது. கர்ப்பிணிகள் இந்த மாதிரியான மீன்களை உண்பதால் உடலில் இரத்த அழுத்தம் அதிகரித்து கருவுற்ற நேரத்தில் அவர்களது உடலில் இருக்கவேண்டிய தண்ணீரின் அளவும் குறைந்துவிடும்.<br /><br />அசைவ உணவுகள்: ஆட்டுக்கறி, கோழிக்கறி, மற்றும் இதர அசைவ உணவுகள், முட்டை & பால் பொருட்கள் ஆகிய உணவுகளை பாதி வேக்காட்டில் சமைத்து சாப்பிடக் கூடாது. பாதிவேக்காட்டில் சமைக்கப்பட்ட உணவுகளில் சால்மோனெல்லா என்னும் பாக்டீரியா இருப்பதால், அது, கருவின் வளர்ச்சியை பாதிப்படைச்செய்கிறது. மேலும் லிஸ்டீரியா என்னும் பாக்டீரியா வகையும் அதில் காணப் படுவதால், கருச்சிதைவும் ஏற்படும் அபாயம் உண்டு.<br /><br />துரித உணவு மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள்: துரித உணவகங்களில் தயாரிக்கப்படும் உணவு வகைகளையும் பதப்படுத்தப்பட்டு டப்பாக்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள பால் பொருட்களை சாப்பிடக்கூடாது. கருவில் இருக்கும் சிசுவிற்கு பெரும் பாதி ப்பை ஏற்படுத்தும்.<br /><br />பழங்கள்: அன்னாசிப்பழம் மற்றும் பப்பாளிப்பழம் ஆகிய இரண்டு பழ வகைகளை சாப்பிடக்கூடாது. இந்த பழங்களை கர்ப்பிணிகள் சாப்பிடுவதால், அவர்கள் உடலில் உள்ள வெப்பத்தின் அளவு அதிகமாகி கருச்சிதைவிற்கு காரணமாகி விடும்.<br /><br />காய்கறிகள்: சுத்தம் செய்யப்பட்ட காய்கறிகளை (முட்டை கோஸ், காலி ஃபிளவர் போன்றவற்றை வெந்நீரில் கழுவிய பின் சமையலுக்கு பயன்படுத்தலாம்) சமைத்து உண்ண வேண்டும். கருவில் இருக்கும் சிசுவை பாதிக்கும். பதப்படுத்தப்பட்டு பாட்டிலில் அடைத்து விற்கப்படும் குளிர் பானங்கள் காலாவதியாகியிருந்தால் அவற்றை குடிக்கக் கூடாது. கருவில் இருக்கும் சிசுவிற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.<br /><br />Read more: http://viduthalai.in/page-7/80559.html#ixzz32DIT735g<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-5097145728687181432014-05-20T06:34:00.191+05:302014-05-20T06:34:00.191+05:30நீரிழிவு நோயை தடுக்கும் உணவுகள்
இன்று உலக மக்களை ...நீரிழிவு நோயை தடுக்கும் உணவுகள்<br /><br />இன்று உலக மக்களை ஆட்டிப்படைக்கும் கொடிய நோய்களுள் சர்க்கரை வியாதியும் ஒன்று. எய்ட்ஸ், கேன்சர் போன்றவற்றை விட பாடாய்படுத்திக் கொண்டிருக்கும் கொடிய நோய் இந்த சர்க்கரை நோயே. அதிகம் பசி உண்டாகும். நாவறட்சி அடிக்கடி ஏற்படும். உடல் சோர் வாகவே இருக்கும். அடிக்கடி சிறுநீர் பிரியும்.<br /><br />கை, கால் மரத்துப் போகும். சில நேரங்களில் தடித்துப் போகும். கண் பார்வை மங்கல் உண்டாகும். பாதங்கள் உணர்வற்ற தன்மை உண்டாகும். திடீரென உடல் எடை குறைதல், கூடுதல் போன்றவை உண்டாகும். அதிக கோபம், மன எரிச்சல், மன உளைச்சல் ஏற்படும். உடலில் சிறு காயங்கள் ஏற்பட்டால் அது வெகு நாட்களுக்கு ஆறாமல் இருக்கும்<br /><br />நீரிழிவு உள்ளவர்கள் சாப்பிடவேண்டிய சில காய்கறிகள்<br /><br />வாழைப்பூ, வாழைத்தண்டு, முட்டைக்கோஸ், கத்திரிப் பிஞ்சு, வெண்டைக்காய், முருங்கைக்காய், புடலங்காய், பாகற்காய், சுண்டைக்காய், கோவைக்காய், பீர்க்கம் பிஞ்சு, அவரைப் பிஞ்சு. இந்த காய்கறிகள் அனைத்தும் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் தன்மை கொண்டவை. இவற்றை பச்சடியாகவோ, கூட்டாகவோ செய்து சாப்பிடலாம்.<br /><br />பொன்னாங்கண்ணிக் கீரை, சிறுகீரை, அரைக்கீரை, வெந்தயக் கீரை, முசுமுசுக்கை கீரை, வல்லாரைக் கீரை, மணத்தக்காளிக் கீரை, கொத்தமல்லிக் கீரை, கறிவேப்பிலை. நீரிழிவு நோய் உள்ளவர்கள் தினமும் ஒரு கீரையேனும் சாப்பிட வேண்டும். நீரிழிவைக் கட்டுப்படுத்தும் கீரைகள் அனைத்தும் சூப்பாக வும் செய்து அருந்தலாம்.<br /><br />காம்பு நீக்கி, சுத்தம் செய்து அரிந்த கீரையுடன் சிறிது சீரகம், மிளகு, பூண்டு, சாம்பார் வெங்காயம், சிறிது மஞ்சள் தூள் சேர்த்து 2 டம்ளர் தண்ணீர் விட்டு நன்கு கொதிக்க வைத்து 1 டம்ளர் அளவு வந்தவுடன் அருந்தலாம்.<br /><br />நீரிழிவு நோய் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டியவை<br /><br />சர்க்கரை, குளுக்கோஸ், இனிப்பு பலகாரங்கள், கேக், சாக்லேட், அய்ஸ்கிரீம், வெல்லம், உருளைக் கிழங்கு, சேனைக்கிழங்கு, மாம்பழம், வாழைப்பழம், சப்போட்டா, குளிர்பானங்கள். கேரட், பீட்ரூட் குறைந்த அளவு மாதம் இருமுறை சாப்பிடலாம். சர்க்கரை நோயின் அறிகுறிகள் இருந்தாலே நடைப் பயிற்சி மேற்கொள்வது அவசியம். ஆரம்பத்தில் 20 நிமிடம் நடந்தால் போதும். பின்னாளில் நேரத்தை சற்று அதிகப்படுத்திக் கொள்ளலாம்.<br /><br />Read more: http://viduthalai.in/page-7/80558.html#ixzz32DICgRKU<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-58428486417487949022014-05-20T06:32:43.554+05:302014-05-20T06:32:43.554+05:30சாறுகளில் உடல்நலம்
இளநீர் சாறு - இளமையை கொடுக்கும...சாறுகளில் உடல்நலம்<br /><br />இளநீர் சாறு - இளமையை கொடுக்கும்.<br /><br />வாழைத்தண்டு சாறு - வயிற்றுக்கல் போக்கும்.<br /><br />வல்லாரை சாறு - நரம்பு வலிகளை போக்கும்.<br /><br />புதினா சாறு - விக்கல் போன்ற நோய்களை நீக்கும்.<br /><br />நெல்லிக்கனி சாறு - நல்ல அழகை கொடுக்கும்.<br /><br />துளசி சாறு - தொண்டைச்சளி, சோர்வு நீக்கும்.<br /><br />முசுமுசுக்கை சாறு - மூக்கு நீர் வற்றும்.<br /><br />அகத்தி இலை சாறு - அடிவயிற்று மலத்தை நீக்கும்.<br /><br />Read more: http://viduthalai.in/page-7/80558.html#ixzz32DHzQHcI<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-77062657997182025632014-05-20T06:32:13.324+05:302014-05-20T06:32:13.324+05:30
நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த முந்திரி பழம்
முந்த...<br />நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த முந்திரி பழம்<br /><br />முந்திரி வெப்பமண்டல பகுதிகளில் அதிகளவில் சாகுபடியாகிறது. தமிழகத்தில் அரியலூர், கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் அதிகளவு பயிர் செய்யப் படுகிறது. ஒரு எக்டேரில் முந்திரி கொட்டையின் விளைச்சல் 500 கிலோவாகும். நம்மிடையே முந்திரி கொட்டைகளை போல முந்திரி பழங்களை பயன்படுத்துவது குறைவு. நாட்டில் உற்பத்தியாகும் 500 டன் முந்திரி பழங்களில் 10 சதவிகிதம் கூட பயன்படுத்துவதில்லை.<br /><br />ஏனெனில் பழத்தில் உள்ள டானின் எனும் வேதிப் பொருளே காரணம். இதனால் பழம் சாப்பிடும்போது தொண்டையில் கரகரப்பு தன்மை ஏற்படுகிறது. இதனை போக்க பழத்தை நீராவியில் பத்து நிமிடம் வேகவைத்து அல்லது உப்புநீரில் ஊறவைத்து சாப்பிடலாம். மா, பலா, ஆரஞ்சு போன்று அதிக சத்துகள் நிறைந்தது முந்திரிபழம். முக்கியமாக வைட்டமின் சி ஆரஞ்சு பழத்தை விட, முந்திரிபழத்தில் அய்ந்து மடங்கு அதிகமுள்ளது.<br /><br />வைட்டமின் சி மனித உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகின்றது. ஈறுகளில் ஏற்படும் ரத்தக்கசிவு நோயை குணமாக்குகின்றது. பற்கள், நகங்களை உறுதிப்படுத்துகின் றது. ஸ்கர்வி என்ற வைட்டமின் சி குறைபாடு நோயை குண மாக்குகின்றது. மேலும், கிருமி நாசினியாக செயல்பட்டு தொற்று வியாதிகளை குணமாக்க பயன்படுகின்றது. இவற்றில் புரதம், பீட்டோ கரோட்டின், நார்ச்சத்துகள் நிறைந்துள்ளன.<br /><br />மேலும், பழத்தில் டானின் உள்ளதால் ஆன்டி ஆக்ஸி டன்ட் ஆக செயல்படுகின்றது. இச்சிறப்புமிக்க பழத்தில் இருந்து ஜூஸ், சிரப், ஜாம், மிட்டாய் போன்ற மதிப்பு கூட்டிய பொருட்களை தயாரித்து பயன்படுத்தலாம்.<br /><br />Read more: http://viduthalai.in/page-7/80558.html#ixzz32DHqHz3B<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-40084486581480544602014-05-20T06:29:26.241+05:302014-05-20T06:29:26.241+05:30
திருவாய் மலரும் திருவாளர்!
மக்களாகப் பார்த்துத்...<br /><br />திருவாய் மலரும் திருவாளர்!<br /><br />மக்களாகப் பார்த்துத் திருந்தாவிட்டால் தேர்லின் போது பணப்பட்டுவா டாவை தடுத்து நிறுத்த முடி யாது என்கிறார் தமிழ் நாட்டின் தலைமைத் தேர் தல் அதிகாரி பிரவீன்குமார் (மக்கள் வரிப் பணத்தில் வாழும் அதிகாரிகள் மக்கள் மீதே பழி போடும் விசித் திரம்) மக்கள் திருந்த வில்லை என்பதற்காகத் தானே அதிகாரம் ஆட்சி என்பதெல்லாம்?<br /><br /><br />இவர்கள் படித்தவர்கள்?<br /><br />சேலம் மக்களவைத் தேர்தலில் அரசுப் பணியா ளர்களின் தபால் வாக்களிப் பில் செல்லாதவை 466.<br /><br />பி.ஜே.பி.யும் முஸ்லீம்களும்<br /><br />பி.ஜே.பி. சார்பாக 7 தொகுதிகளில் முஸ்லீம்கள் நிற்க வைக்கப்பட்டும் ஒருவர்கூட வெற்றி பெறவில்லை. மூன்று முறை வெற்றி பெற்ற ஷானவாஸ் ஹுசேன் பீகார் மாநிலம் பாகல்பூரில் 9485 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுப் போனார்.<br /><br />ஜம்மு காஷ்மீர் பாமுல்லா தொகுதியில் பிஜேபி சார்பில் நிறுத்தப்பட்ட குலாம் முகமதுபீர் - ஆறாம் இடத்திற்கும், சிறீநகர் தொகுதியில் முஷ்டாக் அகமது மாலிக் 4ஆம் இடத்துக்கும் தள்ளப்பட்டனர். மே. வங்கத்தில் தம்லுக் தொகுதியில் பாதுஷா சலாம் நான்காம் இடம் பிடித்தார். லட்சத் தீவிலோ சையது முகம்மது கோயாவுக்கு 5ஆம் இடம்,6 இடங்களில் 3 தொகுதிகள் ஜம்மு காஷ்மீரில் என்பதுகூட வேறு வழியில்லாத காரணமே!<br /><br /> <br /><br />அட பைத்தியசாமிகளே!<br /><br />புதுச்சேரி மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணப்பட்ட போது தொடக்கத்தில் காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமி முன்னணியில் இருந்தார். செய்தி கேள்விபட்டு முதல் அமைச்சர் என். ரெங்கசாமி அப்பா பைத்தியசாமி படத்தை வைத்து - அதற்கு முன்னால் உட்கார்ந்து உற்றுப் பார்த்தபடி இருந்தாராம். சிறிது நேரத்தில் என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் முன்னிலை பெற்றார். இவர் வெற்றி பெற்றவுடன் கோரிமேட்டில் உள்ள அப்பா பைத்தியசாமி கோயிலுக்கு சென்று கும்பிடு போட்டாராம். (வாக்குப் பதிவு இயந்திரத் தில் அப்பா பைத்தியசாமி தில்லுமுல்லு செய்திருப்பாரோ!) அட பைத்தியங்களே!<br /><br />Read more: http://viduthalai.in/e-paper/80575.html#ixzz32DH8GtOi<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-7545337893303643712014-05-20T06:28:38.390+05:302014-05-20T06:28:38.390+05:30
தோல்வியும் சுவைக்கத்தக்க அனுபவமே!
வாழ்க்கையாக இ...<br />தோல்வியும் சுவைக்கத்தக்க அனுபவமே!<br /><br /><br />வாழ்க்கையாக இருந்தாலும், தேர்வாக இருந்தாலும், தேர்தலாக இருந்தாலும், விளையாட்டுத் துறையாக இருந்தாலும், வெற்றியைச் சுவைக்கவே விரும்புவதைவிட, தோல்வியை ஏற்கக் கற்றுக் கொள்ளுவதும், அதன்பாடங் களால் பயன் பெறுவதும் அனைவரும் பெற வேண்டும்.<br /><br />எப்போதும் நிழலில் இருப்பவருக்கு வெயில் அனுபவமே தெரியாது என்பது ஒருபுறம் இருந்தாலும், நிழலின் பெருமை, அருமையை அவரால் உணர்ந்து, சுவைக்க முடியாது.<br /><br />பசியே தெரியாதவன் வாழ்க்கை, பலனற்ற ஒன்றாகும்; ருசியும் அவனுக்கு அதிகமாகத் தெரியாது. உணவின் பெருமை பசியினால் தான் பெரும் அளவுக்கு உணர்த்தப்படும்.<br /><br />எங்களுக்கே ஏற்பட்ட அனுபவம், மிசா கைதியாக சிறை உணவு என்ற தண்டனை உணவை (அதிலும் எங் களுக்குத் திட்டமிட்டே தரப்பட்ட அருவருக்கத்தக்க உணவை வேறு வழியின்றி உண்ட நேரத்தில்,) நம் வீட்டுச் சமையலின் அருமை, பெருமை களையும், சிறிது உப்புக் குறைவாக இருந்தபோதும்கூட அதற்காக கோபத் தின் உச்சிக்குச் சென்று வீட்டு அம்மை யாரிடம் சண்டை பிடித்த காட்சிகள் எல்லாம் எங்கள் அகக்கண் முன் தோன்றியது; சுயபரிசோதனை செய்து பிறகு பக்குவமாகும் பாடத்தையும் போதித்தது! வெற்றியே பெற்று வந்த நான் (அதிலும் முதல் தகுதி, பரிசுகள் பெறு கின்றவன் என்ற எங்கோ ஒரு மூலையில் பதிந்த தன் முனைப்பு - என்னை அறியாமலேயே - இருந்த நிலையில்,) சட்டப்படிப்பு முதலாண்டில் தோல்வி யுற்றபோது அதை எளிதில் ஏற்றுக் கொண்டு செரிமானம் செய்து கொள்ள முடியவில்லை.<br /><br />நான் தோல்வியுற்றது தான் நியாயம், அதிசயமானதோ, அக்கிரமம் ஆனதோ அல்ல; காரணம் நான் சட்டக் கல்லூரி வகுப்புக்கே செல்லாமல், அன்னையாருடன் சென்று, தேர்வுக்கு 15 நாள்கள்தான் படித்தேன் - நானே பாடங்களை! அய்யத்துடன் தேர்வு எழுதினேன்; மிகக் குறைந்த மதிப்பெண் வித்தியாசத்தில் தான் தோற்றேன் தேர்வில்!<br /><br />எனது தோழர் கோ. சாமிதுரை அவரும் என்னைப் போலவே தோல் வியைத் தழுவியவர். இருவரும் அதி லேயும் கூட்டாளிகளாக அமைந்தோம். அவர் அதை வெகு சாதாரணமாக எடுத்துக் கொண்டு வழமைபோல் சினிமா, பொழுதுபோக்கு - இவைகளை விடவில்லை. நானோ இயல்பாகவே அவற்றில் நாட்டம் இல்லாத இயக்கப் பணி - கூட்டங்கள், பிரச்சாரத்தில் திளைப்பவன்; அவற்றையும் ஒதுக்கி மும்முரமாகப் படித்து நல்ல மதிப் பெண்கள் பெற்றுத் தேர்ந்தேன். அந்த அனுபவம் ஒரு வடுப்போல என்னை எப்போதும் பக்குவப்படுத்திய வாழ்க்கை அனுபவத்தைத் தந்தது!<br /><br />கசப்புக்குப் பிறகு கிடைக்கும் இனிப்பின் சுவைதான் என்னே!<br /><br />தோல்விக்குப்பின்னர் கிடைக்கும் வெற்றியின் மதிப்புதான் எவ்வளவு!<br /><br />அது மட்டுமா? ஓர் அமைப்பில் வெற்றி கிட்டும்போது, அதனைக் கொண்டாட பலரும் உரிமை பாராட் டுவர்.<br /><br />தோல்வி என்றால், எவரும் திரும்பும் முன் நம்மை தனியாக விட்டு ஓடவே முயற்சிப்பார்கள்.<br /><br />இது உலக இயற்கைதான்! பழி தூற்றும் பகைவர்கள் பலரும் இச்சந்தர்ப்பம்தான் நமக்கு அரிய வாய்ப்புச் சேற்றை வாரி இறைத்து, நமக்கு வேண்டாதவர்களை அழிக்க, ஒழிக்க அரிய சந்தர்ப்பம் என்றும் மகிழ்வர். லட்சிய வீரர் - வீராங் கனைகளுக்கு இந்த பழியும் - குற்றச் சாற்றுகளும் பொறாமைப் புழுக்களின் புலம்பல்கள் என்று தூசி தட்டி விட்டு இலக்கு நோக்கியே பயணிப்பர் - கார ணம் வாழ்வில் என்றும் பயணங்கள் முடிவதில்லை; பாதைகள் மூடப் படுவதில்லை.<br /><br />- கி. வீரமணி<br /><br />Read more: http://viduthalai.in/page-2/80582.html#ixzz32DGhArJh<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-71431672390455135832014-05-20T06:27:08.273+05:302014-05-20T06:27:08.273+05:30
மரியாதை இல்லை!
பிறர் உழைப்பில் படாடோப வாழ்க்கை ந...<br />மரியாதை இல்லை!<br /><br />பிறர் உழைப்பில் படாடோப வாழ்க்கை நடத்துவதும், அதிகப்படியான பொருள்களுக்கு அதிபதியாய் இருப்பதும் கண்ணியமான பெருமை யான வாழ்க்கை என்று கருதப்படுகின்ற மூடநம்பிக்கை ஒழியவேண்டும். இதில் எத்தகைய ஒரு கவுரவமும், மரியாதையும் இல்லை. - (விடுதலை, 22.6.191973)<br /><br />Read more: http://viduthalai.in/page-2/80577.html#ixzz32DGYKpXg<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-52430319720300997422014-05-18T06:37:46.658+05:302014-05-18T06:37:46.658+05:30
இது அல்லவோ மனிதநேயம்!
மும்பையைச் சேர்ந்தவர் ஃபார...<br />இது அல்லவோ மனிதநேயம்!<br /><br />மும்பையைச் சேர்ந்தவர் ஃபாரூக் மாப்கர். இவர் சிப்லூன் கிராமத்துக்கு சென்று கொண்டிருந்தபோது இவர் பயணம் செய்த தொடர் வண்டி விபத்துக்குள்ளானது. விபத்தில் காயங்களுடன் உயிர் தப்பிய இவர் மற்றவர் களைக் காப்பாற்றும் நோக் கில் தன் காயங்களைப் பொருட்படுத்தாமல் வேக மாக செயல்பட்டுள்ளார். அவரைச்சுற்றி இருந்த பயணிகள் விபத்தில் உடைந்து நொறுங்கிய தொடர்வண்டிக்குள் சிக்கிக் கொண்டு பரிதவித்தனர். அவர் தன்னை மட்டும் காத்துக்கொண்டு சென்றிருக்க லாம்.<br /><br />ஆனால், அவரால் செய்யக்கூடிய உதவிகள்குறித்து நினைத்து செயல்பட் டார். மூன்று வயது சம்ருதி நக்தி என்கிற சிறுமி தொடர்வண்டிக்குள் சிக்கிக் கொண்டு உயிருக்கு போராடிக் கொண்டி ருந்தபோது, அவ்ளின் தந்தை என் மகளைக் காப்பாற்றுங்கள் என்று கதறிக் கொண் டிருந்தார். சிறுமியின் தந்தைமீது வேறு ஒருவர் விழுந்து கிடந்தார். இந்நிலையில் தான், உடனடியாக அச்சிறுமியை மாப்கர் மீட்டு, ஆட்டோமூலமாக தாமாகவே அவள் கால் துண்டான நிலையில் மருத் துவமனைக்குக் கொண்டு சென்றார்.<br /><br />நகோத்தானேவுக்கும் ரோகாவுக்கும் இடையே சென்றுகொண்டிருந்த தொடர் வண்டி விபத்துக்குள்ளானது. விபத்தின் போது தன்னுடைய பணப்பை உள்ளிட்ட தன்பொருட்கள் அனைத்தையும் இழந்து விட்டபோதிலும், விடாமுயற்சியாக சிறு மியை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்கு சேர்ப்பித்தார். ஆட்டோ ஓட்டுநர் இவர்நிலைகண்டு தொகை பெறாமலே இவர்தம் சேவையில் தன்னையும் இணைத்துக்கொண்டார். விபத்துப்பகுதியிலிருந்து பேருந்து நிலையம் வரையிலும், தொடர்ந்து ஒரு தனியார் மருத்துவமனைக்கும் இலவச மாக ஆட்டோ ஓட்டுநர் அழைத்துச் சென்றுள்ளார். அந்த மருத்துவமனையில் முதலுதவி மட்டுமே வழங்கப்படும் வசதி இருந்தது. அச்சிறுமியுடன் மேலும் இருவரை அரசு பொது மருத்துவ மனைக்கு சிவசேனா அறக்கட்டளையின் ஆம்புலன்ஸ்மூலம் கொண்டு சென்று சேர்க்குமாறு மாப்கரிடம் மருத்துவர் கூறிவிட்டார். அதுமட்டுமின்றி மருத்துவர் இரண்டாயிரம் ரூபாய் தொகை கட்டுமாறு கேட்டபோது, மாப்கர் தன்னிடம் பணம் இல்லை என்று மறுத்துவிட்டார். அச்சிறுமியுடன், இளம்பெண் மற்றும் சவான் என்பவரையும் மாப்கர் அலிபாக் மருத்துவமனையில் கொண்டுசென்று சேர்த்தார். சவானிடமும் பணம் ஏதும் இல்லை. சிறுமியின் மன உறுதி குறித்து மாப்கர் வியந்து கூறுகிறார். மிகுந்த வலி இருக்கும்போதும் ஒருவார்த்தைக்கூட பேசாமல், மாப்கர்மீது சாய்ந்தவாறு மிக அமைதியாக இருந்தாள். தன்னுடைய உறவினருக்கு இறுதி மரியாதை செலுத்து வதற்காகச் சென்ற மாப்கர் முற்றிலும் அச்சிறுமி உட்பட மற்றவர்களையும் காக்கும் செயலில் இருந்துவிட்டதால் உறவினரின் இறுதி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சிக்கு செல்ல முடியவில்லை.<br /><br />சம்ருதி என்கிற அச்சிறுமி பிற்பாடு சயான் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு, அவள் கால்களை அறுவை மூலம் அகற்றி தொடர்சிகிச்சை பெற்று வருகிறாள். சிறுமியின் அக்காள் வாஷி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறாள். சிறுமியின் தாய் இந்த விபத்தில் உயிர் இழந்து விட்டார். எதுவுமே தெரியாமல் அவள் தந்தையும் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.<br /><br />மாப்கர் இவ்விபத்து குறித்து கூறும் போது, திவா-சவந்த்வாடி பாசஞ்சர் தொடர்வண்டி தாமதாக இயக்கப் பட்டதால், இழந்த நேரத்தை சரிகட்ட அதிவேகமாக இயக்கப்பட்டுள்ளது. பின்னால் வரக்கூடிய விரைவு தொடர் வண்டிக்கு வழிவிடுவதற்காக வேகமாக சென்று விபத்துக்குள்ளாகி உள்ளது. ரயில்வே நிர்வாகம் பாசஞ்சர் தொடர் வண்டியை குறித்த நேரத்தில் இயக்குவதை உறுதிப்படுத்தினால், இதுபோன்ற விபத் துகள் நடைபெறாது. விபத்துக்குள்ளாகி எல்லாவற்றையும் இழந்திருப்பவர் களிடம், இழப்பீடு வழங்குவதற்கு ரயில்வே நிர்வாகம் பயணச்சீட்டை கேட்டு வலியுறுத்தக்கூடாது என்று கூறினார்.<br /><br />மாப்கர் ஏற்கெனவே பாபர் மஸ்ஜித் இடிப்புக்குப் பிறகு ஏற்பட்ட 1992-93 கலவரங்களின்போது வடாலா பகுதியில் 1993 சனவரி 10ஆம்தேதி அன்று குண்டடிப் பட்டார். அதேநாளில் காவல்துறையின் துப்பாச்சூட்டில் ஆறு பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் நால்வர் மசூதிக்குள் இருந்தபோது சுடப்பட்டு உயிரிழந்தனர்.<br /><br />நீதிபதி பி.என்.சிறீகிருஷ்ணா குழு அறிக் கையில் காவல்துறையின் உதவி ஆய் வாளர் நிக்கில் காப்சே என்பவர்மீது கடும் நடவடிக்கை எடுக்க சிபாரிசு செய்திருந் தார். ஆனால், அரசு அவர்மீது நடவடிக்கை எடுக்க மறுத்துவிட்டது. மத்தியப் புலனாய்வுக்குழுவின் விசாரணையைக் கோரி மாப்கர் நீதிமன்றத்தில் அணுகி ஆதரவாக தீர்ப்பு பெற்றார். ஆனாலும், மத்தியப்புலனாய்வுக்குப்பின் விசாரணை முடிவு காவல் உதவி ஆய்வாளர் காப்சேவுக்கு சாதகமாகவே இருந்தது. இதுபோன்ற சவால்களை சந்தித்த மாப்கர்தான் மிகுந்த மனிதநேயத்துடன் சிறுமி உள்ளிட்டவர்களின் உயிரைக் காப்பாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.<br /><br />-மும்பை மிர்ரர், 11-5-2014<br /><br />Read more: http://viduthalai.in/page8/80479.html#ixzz321cDQvRe<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-59099976646752796582014-05-18T06:36:28.334+05:302014-05-18T06:36:28.334+05:30
அன்று காந்தியார் சொன்னது
கரூர் மாவட்டம் நெருரி ...<br />அன்று காந்தியார் சொன்னது<br /><br /><br />கரூர் மாவட்டம் நெருரி வடபாகம் காவேரி ஆறு அருகே தமிழக அரசுக்கு சொந்தமான சுற்றுலா விளையாட்டு பூங்கா அருகே அரச மரம் உள்ளது. அந்த அரச மரத்தடியில் விநாயகர் சிலை சிவன் முருகன் போட்டோக்களும் உள்ளன. காவேரி ஆற்றுக்கு குளிக்க வரும் பக்தர்கள் அரச மரத்தடியில் அமர்ந்து மது பானம் சாப்பிட்டு அங்கேயே போட்டு விட்டு செல்கின்றனர்<br /><br />காந்தியார் சொன்ன மாதிரி கோயில்கள் விபச்சார விடுதி என்பதற்கு இது ஒரு சான்று! அரச மரத்தடியில் மதுபானம், சிகரெட் பீடி துண்டுகள் ஆணுறைகள் போன்றவை அங்கேயே கிடக்கின்றன. ஆற்றில் குளித்து வரும் பக்தர்கள் சாமி கும்பிட்டு இவற்றையும் செய்கின்றனர்.<br />மதமாற்றம்: விவேகானந்தர்<br /><br />Read more: http://viduthalai.in/page6/80474.html#ixzz321btV9st<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-51699305396801180452014-05-18T06:36:05.191+05:302014-05-18T06:36:05.191+05:30எருக்கம் இலை - சிறு குழந்தை
சேலம் மக்கள் அறக்கட்ட...எருக்கம் இலை - சிறு குழந்தை<br /><br />சேலம் மக்கள் அறக்கட்டளையின் அலுவலகத்தில் மேலும் பல செய்தி களைச் சொல்லி அதிர வைக்கிறார் ஜெயம். இங்க மொத்தம் 243 ஸ்கேன் சென்டர் இருக்கு. இதுல 107-தான் அதிகார பூர்வமா செயல்படுது. கடந்த ரெண்டு வருஷத் துல எங்க பகுதியில மட்டும் 340 கருக் கலைப்பு நடந்திருக்கு. இதெல்லாம் ஆர்.டி.ஐ, கள ஆய்வுகள்னு பல வகையில நாங்க திரட்டின தகவல்கள் என்கிறார். அறக்கட்டளையில் புதிதாக இருந்த மாரி யம்மாவுக்கு நம்மை அறிமுகப்படுத்தி வைக்கிறார் அவர். சுமார் 70 வயது இருக்கும் மாரியம்மாவுக்கு. முன்ன மாதிரி இல்லம்மா. இப்போ எல்லாம் நிறுத்திட் டேன். இவங்க பயமுறுத்தினாங்க. இப்போ கட்டிட வேலைக்குப் போறேன் என்று பேசிக்கொண்டே போக, அவர் பேசிக்கொண்டிருப்பது கருக்கலைப்பு களைப் பற்றி என்று புரியவே கொஞ்ச நேரம் ஆகிறது. 50 வருஷமா மருத்துவச் சியா இருந்தேன். நிறைய குழந்தை களுக்குப் பிரசவம் பார்த்திருக்கிறேன். சும்மா ஆயிரத்துக்கும் மேல இருக்கும். கருக்கலைப்பு யாராவது வற்புறுத்திக் கேட்டாதான் செய்வேன். அப்படி சும்மா 50 செஞ்சிருப்பேன் என்று சொல்லும் மாரியம்மாவுக்கு மூன்று மகன்கள், இரண்டு மகள்கள். எல்லோரையும் நல்லா கட்டிக்கொடுத்துட்டேன் என்கிறார்.<br /><br /><br />அஞ்சு நாள், ஆறு நாள் தள்ளிப் போச்சுன்னா சர்க்கரைப் பாகு வெச்சுச் சாப்பிடச் சொல்லிடுவேன். அதுலேயே கலைஞ்சிடும். மூணு மாசம் வரைக் கும்னா அவங்களுக்கு வேற வைத்தியம் என்று சொல்லிக்கொண்டே கையளவு அகலமாக இருக்கும் எருக்க இலையை அருகிலிருந்து பறிக்கிறார். இதை ரெண்டா ஒடிச்சி வழியிற பாலைக் காம்போட துணியில சுத்தி உள்ள விட்டு டணும். ஒரே நாள்ல குழந்தையோட வெளியே வந்துடும் என்கிறார். மூணு மாசத்துக்கு மேலேனா அவங்க ஹாஸ் பிடலுக்குத்தான் போகணும். எவ்வளவு வற்புறுத்திக் கேட்டாலும் நான் செய்ய மாட்டேன் என்கிறார். எருக்கம் காம்பு உயிர்வலியைத் தரும். ஆனாலும் இப்பவும் பண்ணிக்கிற பொண்ணுங்க இருக்காங்க என்கிறார் ஜெயம். மூணு மாசத்துல எப்படி குழந்தை ஆணா, பெண்ணான்னு தெரியும்? என்று கேட்டபோது, அதான் ஜாதகத்தைப் பார்த்துட்டு வருவாங்க இல்ல என்கிறார் மேகலா.<br /><br />வயிற்றில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்று அறிய 14 -15 வாரங்களாகும். மூன்று மாதங்களிலேயே கருக் கலைப்பு செய்வதெல்லாம் அறி யாமையின் உச்சம். இந்தப் பகுதியில், குறிப்பாக, பெண் குழந்தைகள் கல்விக் கென்று பல சலுகைகள் ஏற்படுத்தியி ருக்கிறது அரசு. ஆனால், அவை இன்னும் போய்ச்சேர வேண்டிய இடத்தைச் சேரவில்லை. அரசு இந்தப் பிரச்சினையில் இன்னமும் தீவிரமாகக் கவனம் செலுத்த வேண்டும் என்கிறார் சேலம் பகுதியைச் சேர்ந்த மருத்துவர் அசோக். சேலம் பகுதியில் உள்ள பல ஸ்கேன் மய்யங் களில் பல ஏமாற்று வேலைகள் நடப்ப தாகச் சொல்கிறார். வருகிறவர்கள் கருக்கலைப்பு செய்யும் எண்ணத்தில் வந்தால் ஆறு வாரங்களில்கூட குழந்தை யின் பாலினம் தெரியும் என்று சொல்லி ஏமாற்றி, கருக்கலைப்பு செய்யும் ஸ்கேன் சென்டர்கள் எல்லாம் இங்கு உண்டு என்று அதிர வைக்கிறார். புதுப் புடவ கட்டியிருக்கேன், போட்டோ புடிக்கலையா? என்று கேள்வி கேட்டு வேணாம், நீ பத்திரிகையில போட்டா, யாராவது சாபம் வுடுவாங்க என்று தானே பதிலும் தந்து வெள்ளந் தியாக வழியனுப்பி வைக்கிறார் மாரியம்மா. எருக்க இலையின் நிறத்தில் இருக்கிறது அவரது புடவை.<br /><br />- கவிதா முரளிதரன்.<br /><br />தொடர்புக்கு: .kavitha.m@kslmedia.in (பெரும்பாலான பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன)<br /><br />Read more: http://viduthalai.in/page6/80473.html#ixzz321bbQrFRதமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-65988294662330845632014-05-18T06:36:00.762+05:302014-05-18T06:36:00.762+05:30
அடுத்து சங்கீதாவும் பாரதியும் நம்மை அழைத்துச்சென்...<br />அடுத்து சங்கீதாவும் பாரதியும் நம்மை அழைத்துச்சென்ற இடம் வாழப்பாடி.<br /><br />கருக்கலைப்பா தானமா?<br /><br />உயர்ந்த கட்டிடம் ஒன்றின் முன்பு நிறுத்தப்படுகிறது நமது கார். அது ஒரு ஸ்கேன் மய்யம். என்ன குழந்தைன்னு தெரிஞ்சிக்கணும் என்று அடிக்குரலில் கெஞ்சும் சங்கீதாவிடம் இன்னிக்கு டாக்டர் இல்ல, நாளைக்கு வா என்று கறாராகச் சொல்லி அனுப்புகிறார் அங்கிருக்கும் நர்ஸ். இந்த சென்டர்ல நிச்சயம் சொல்லிடுவாங்கன்னு தெரியும். இன்னிக்கு டாக்டர் இல்லை என்று புலம்பியபடி இன்னொரு மருத்துவ மனையில் வண்டியை நிறுத்தச் சொல் கிறார் பாரதி. அங்கே காத்திருப்பவர்கள் முழுவதும் கர்ப்பிணிகள். விதவிதமான கவலைகளின் ரேகைகளைச் சுமந்த முகங்கள். வரவேற்புப் பிரிவில் இருந்த வரிடம் பேச்சுக்கொடுத்த பாரதி வந்து சொல்கிறார், கேட்டேன், இங்கேயும் சொல்லுவாங்க.குழந்தை எப்படி இருக்குன்னு சொல்ல 600 ரூபாய். என்ன குழந்தைன்னு சொல்ல 1,500 ரூபாயாம் என்கிறார். பெண் டாக்டர் நுழைந்தவுடன் அந்த இளம்சிவப்பு நிறக் கட்டிடமே கொஞ்சம் பரபரப்பாகிறது. சிறிது நேரக் காத்திருத்தலுக்குப் பிறகு சங்கீதா அழைக் கப்படுகிறார். என்னம்மா தெரியணும்? கையில காசு வெச்சிருக்கியா? என்று கேட்டுக்கொண்டே வயிற்றுப் பகுதியில் ஜெல் தடவி ஸ்கேன் கருவியைப் பொருத்துகிறார். பொண்ணுதாம்மா. பேசாம இப்பவே அட்மிட் ஆயிடு. ஏழு மாசம் ஆகுது. அதனால டெலிவரி பண்ற மாதிரியே குழந்தையை வெளியே எடுத்துடுவோம். 9,000 ரூபா ஆகும் என்கிறார். அவ்வளவு காசு இல்ல என்று சங்கீதா தயங்க, சரி, டெலிவரிக்கு அட்மிட் ஆயிடு. காசு எதுவும் செலவுசெய்ய வேணாம். குழந்தையைக் கொடுத்திட லாம் என்று சொல்லி அனுப்பி வைக்கிறார்.<br /><br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.com