tag:blogger.com,1999:blog-1474608369333206681.post5913197358340170416..comments2023-10-29T13:02:52.613+05:30Comments on தமிழ் ஓவியா: இங்கு எங்கே இருக்கிறது ஹிந்துத்துவா?தமிழ் ஓவியாhttp://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comBlogger39125tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-72227546143009674792014-02-12T05:57:06.541+05:302014-02-12T05:57:06.541+05:30ஆசிரியருக்குக் கடிதம் >>>
சரியான நேரத்த...<br />ஆசிரியருக்குக் கடிதம் >>><br /><br /><br />சரியான நேரத்தில் சரியான அறிக்கை<br /><br />நமது தலைவர் கி.வீரமணி அவர்களின் அறிக்கை, விடுதலை 5.2.2014 (புதன்) பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு என்பது சட்டத்திற்கும், சமூகநீதிக்கும், எதிரானது! நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சியைச் சேர்ந்த ஜனார்த்தன திவேதி களை அடக்கி வைக்க வேண்டும் காங்கிரசு தலைமை; பொருளாதார அடிப்படையில் - இடஒதுக்கீடு கொண்டு வரப்பட வேண்டும் என்று கூறியுள்ளதை, தக்க தருணத்தில் கண்டித்திருப்பது மிகவும் உணர வேண்டிய அறிவுரையாகும்.<br /><br />சமூக நீதிக்கு எதிரானவர்கள்; உயர் ஜாதியினர் பலர், இன்னமும் உள்ளனர் என்பது இவரது அபத்தமானதும், ஆபத் தானதும், அரசியல் சட்ட அடிப்படை உரிமைக்கும்கூட முற்றிலும் எதிரானதாகும் என்பது உண்மையே; காங்கிரசுத் தலைவர் சோனியா காந்தி அவர்களும் ஜாதி அடிப் படையிலான இடஒதுக்கீடு தொடர்ந்து நீடிக்கும் என்றும் உறுதியளித்தும் இப்போது இடஒதுக்கீடு வழங்குவதில் தீவிரமாக காங் கிரசு செயல்படுகின்றது. திவேதியை காங் கிரசுத் தலைவர் சோனியா காந்தி கண்டித் துள்ளார் எதிர்க்கட்சி உறுப்பினர்களும் நாடாளுமன்றத்தில் கடும் எதிர்ப்புத் தெரி வித்து அமளிகளில் ஈடுபட்டனர். அவர் களை சமாதானப்படுத்திய மத்திய ராஜாங்க அமைச்சர் ராஜீவ் சுக்லா அவர்கள் ஜாதி அடிப்படையிலான இடஒதுக்கீடு தொடரும் என்றும் பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கும் திட்டம் எதுவும் அரசின் பரிசீலனையில் இல்லை என்றும் அறிவித் தார். இருப்பினும் அமளி தொடர்ந்ததால் சபை நாள் முழுதும் ஒத்தி வைக்கப்பட்டது.<br /><br />- ஆ. இனியன் பத்மநாதன், ஈரோடு -11<br /><br />Read more: http://viduthalai.in/page-2/75092.html#ixzz2t3yklHKH<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-44234232081288060802014-02-12T05:55:17.980+05:302014-02-12T05:55:17.980+05:30
பொறுப்பற்றவர் மோடி! அசாம் முதல்வர் தாக்கு
கவுகா...<br />பொறுப்பற்றவர் மோடி! அசாம் முதல்வர் தாக்கு<br /><br /><br />கவுகாத்தி, பிப். 11-அசாமில் இரண்டு நாட் களுக்கு முந்தைய தனது தேர்தல் பிரச்சாரத்தில் தவறான கருத்துக்களை தெரிவித்துள்ள பா.ஜ.க. பிர தமர் வேட்பாளர் நரேந்திர மோடி பொறுப்பற்றவர் என்று அசாம் முதல்-அமைச்சர் தருண் கோகாய் கூறியுள்ளார்.<br /><br />கவுகாத்தியில் இன்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் மோடி குறித்து தருண் கோகாய் மேலும் பேசியதாவது:-<br /><br />இன்று மோடியை பற்றி அம்பலப்படுத்தும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. மோடியை போன்ற பொறுப் பற்ற தலைவரை நான் இதுவரை பார்த்ததில்லை. அசாம் மாநிலம் பின்தங்கி யுள்ளதாக மோடி முதலைக் கண்ணீர் வடிக்கிறார். தேர் தல் வரும்போதும், கவு காத்தி விமானநிலையத்தில் கால் வைக்கும் போதும் மட்டுமே மோடி அசாம் குறித்து கவலைப்படுகிறார். அசாமை விட்டு சென்ற தும் மறந்து விடுகிறார். வாஜ்பாய் பிரதமராக இருந்த போது அவர் அசாமிற்கு எதுவும் செய்யவில்லை. காந்தியாரின் மரணத்திற்கு காரணமான ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் ஈடுபாடுமிக்க தொண்டராக மோடி இருக் கிறார்.<br /><br />என்னுடைய தொலை நோக்கு பார்வையும் மோடி யின் தொலைநோக்குப் பார் வையும் வேறு. மோடியின் பார்வை எப்படி ஆடைகள் அணிவது? எப்படி பெரிய அமெரிக்க நிறுவனங்களி டம் பேசுவது என்பதை பற்றியது. ஆனால் கிரா மத்து மக்களுக்காகவும், சாதாரண மனிதனுக்காவும் உழைப்பதே என்னுடைய பணியாகும்.<br /><br />குஜராத்துடன் ஒப்பி டுகையில் அசாமின் மொத் தக் கடன் ரூ.29,200 கோடி, ஆனால் குஜராத்தின் கடன் ரூ.1,76,500 கோடி. 2013இல் அசாமின் தனி நபர் கடன் ரூ.9,368, ஆனால் மோடி யின் மாநிலத்தில் ரூ.29,228. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் மோடி முற்றி லும் தவறான புள்ளி விவ ரங்களை தெரிவித்துள்ளார். இருந்தாலும் அசாமைவிட குஜராத் நகர்புற வளர்ச்சித் திட்டங்களுக்கு அதிகம் செலவிடுகிறது.<br />ஆரோக்கியம் குறித்த குறியீட்டில் இந்தியா விலேயே அசாம் 3ஆம் இடத்தில் உள்ளது. ஆனால் குஜராத் 13ஆவது இடத்தில் பின்தங்கியுள்ளது. கல்வி யில் அசாம் 13ஆவது இடத் தில் உள்ளது. ஆனால் குஜ ராத் 20ஆவது இடத்தில் தான் உள்ளது. குஜராத்தை விட அசாம் மாநிலத்தில் குற்றங்கள் நடைபெறுவது குறைவு. அசாம் மாநிலம் சட்டவிரோதமாக இடம் பெயர்தல், வெள்ளம், பொரு ளாதார வளர்ச்சியின்மை, கிளர்ச்சிகள் போன்ற பிரச் சினைகளை சந்தித்து வருகிறது. ஆனால் குஜராத்தில் இது போன்ற பிரச்சினைகள் கிடையாது.<br /><br />குஜராத் ஒருபோதும் நிதிச்சிக்கலில் இருந்தது கிடையாது. சுதந்திரம் பெற் றது முதல் வசதியாகவே இருந்துள்ளது. ஆனால் அசாமின் பொருளாதாரம் கடனில் உள்ளது. இங்கு ஊதியம் மிக்குறைவு. சட் டம் ஒழுங்கு மோசமாக உள்ளது. இதற்கு மத்தி யிலும் நாங்கள் நன்மை களை செய்து வருகின்றோம். குஜராத்தைக் காட்டிலும் அசாமில் குற்றங்களின் எண்ணிக்கை குறைவு.<br /><br />உடல்நலம் பாதிக்கப் பட்ட பூபென் ஹசரிகா, பா.ஜ.க நாடாளுமன்ற உறுப் பினராக இருந்தாலும் அவருடைய மருத்துவச் செலவுகளை அசாம் அரசு ஏற்றுக்கொண்டது.<br />இவ்வாறு அவர் கூறினார்.<br /><br />Read more: http://viduthalai.in/e-paper/75075.html#ixzz2t3yIxNdk<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-36201869507890545482014-02-12T05:51:40.226+05:302014-02-12T05:51:40.226+05:30
மோடி அலை என்பதாக ஒன்றுமில்லை; ஊடகங்களின் உருவாக்க...<br />மோடி அலை என்பதாக ஒன்றுமில்லை; ஊடகங்களின் உருவாக்கமே அது! அஜித்சிங் படப்பிடிப்பு<br /><br /><br />புதுடில்லி, பிப்.11- ராஷ்ட்ரிய லோக்தள கட்சி யின் தலைவரான அஜித்சிங், பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டு சேருவதற்கு வாய்ப்பே இல்லை; வர இருக்கின்ற மக்களைத் தேர்தலுக்கு முன்பும், பின்பும் காங்கிரசுக் கட்சியுடன் கூட்டாக இருந் திடவே விருப்பம் எனத் தெரிவித்தார். அண்மையில் ராஷ்ட்ரிய லோக்தள கட்சி யின் தலைவர் செய்தியாளர் களுக்கு பேட்டி அளித்தார். அவைகளில் ஒரு சில:<br /><br />கேள்வி: பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பா ளர் நரேந்திர மோடி செல் லுமிடங்கலெல்லாம் மக்கள் கூட்டம் திரளாக வருகிறதே. மோடி அலை என்பதாக அதனைப் பார்க்கின்றீர்களா?<br /><br />பதில்: அலை என்ப தாக ஒன்றுமில்லை; ஊட கங்களின் அலங்காரச் சொல் லாக இடக்கர் அடக்கல் (Euphemism) மொழியாகச் சொல்லப்படுகிறது. உண் மையில் பிரச்சினை வேறு விதமானது. தொலைத் தொடர்புத் துறையில் நிகழ்ந்த முன்னேற்றங்கள் காரணமாக வாக்களிக்கும் மக்களின் ஆவல்கள் (குறிப் பாக உத்திரபிரதேசத்தில்) அதிகரித்துள்ளன. ஆனால் அவைகளை நடைமுறைப் படுத்தும் வாய்ப்புகளோ குறைந்து வருகின்றன. இந்த நிலையினால் மக்களிடம் ஒரு வித மனமுடக்கம் ஏற் பட்டுள்ளது. ஆட்சியில் உள் ளோரிடம் கோபமாக அவை வெளிக்கிளம்புகின்றன.<br /><br />மக்களிடம் நிலவும் இந்த மன முடக்கம் மற்றும் வெறுப்பினை, கொம்பு சீவிவிடும் செயலில் நரேந் திரமோடி இறங்கியுள்ளார். ஒன்றை மோடி புரிந்து கொள்ள வேண்டும். கூடு கின்ற மக்கள் கூட்டமெல் லாம் தேர்தல் போட்டியின் ஒரு அங்கமே. தேர்தல் முடி வுகளை பிரதிபலிப்பவை அல்ல அவை. ஒவ்வொரு வரது கொள்கையும் கூட்ட ணியுமே வெற்றியினை நிர் ணயிக்கிறது.<br /><br />கேள்வி: உங்களது நிலைப்பாடு மக்களவைத் தேர்தலுக்கு பின்னர் மாறுமா?<br /><br />பதில்: நிச்சயமாகக் கிடையாது. இந்தக் கருத்தில் மறு பரிசீலனைக்கு இடமே இல்லை. மேலும் தேசிய முன்னணி அதிகார மய்யத்திற்கு அருகில் வரும் வாய்பே இல்லை. கேரளா, தமிழ் நாடு, ஒடிசா, மேற்கு வங்கம், அஸ்ஸாம், போன்ற மாநி லங்களில் - 200 மக்க ளவைத் தொகுதிகளை உள் ளடக்கிய அந்த மாநிலங்களில் பார திய ஜனதா கட்சியின் தடமே கிடையாது.<br /><br />- (நன்றி: தி எக்னாமிக் டைம்ஸ் 10.2.2014)<br /><br />Read more: http://viduthalai.in/e-paper/75074.html#ixzz2t3xNxPmx<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-44938983781253851332014-02-12T05:50:48.818+05:302014-02-12T05:50:48.818+05:30
மூன்றாவது அணிபற்றி நரேந்திர மோடி
பி.ஜே.பி.யின் ...<br />மூன்றாவது அணிபற்றி நரேந்திர மோடி<br /><br /><br />பி.ஜே.பி.யின் பிரதமருக்கான வேட்பாளரான நரேந்திர மோடிக்கு இப்பொழுது மேலும் சில சிக்கல்கள் சிரங்காக உருவெடுத்துள்ளன.<br /><br />ஆம் ஆத்மி கட்சி ஒருபுறம்; டில்லி தேர்தல் முடிவுகள் மோடியையும் அவரது பரிவாரங்களையும் பாடாகப்படுத்தியுள்ளன. அந்த ஆத்திரம் அவர்களின் அலுவலகத் தைத் தாக்குவது வரை கொண்டு வந்து விட்டுள்ளது.<br /><br />கடுமையான வார்த்தைகளால் அர்ச்சிக்கவும் ஆரம்பித்து விட்டனர்; இன்னொரு புறம் - மூன்றாவது அணி, அது குறித்தும் திருவாளர் மோடி மூன்றாந்தர அணி என்று மூர்க்கமாகத் தாக்க ஆரம்பித்து விட்டார்.<br /><br />தொடக்க முதலே அய்க்கிய ஜனதாதளம் - அதன் தலைவர்களும், குறிப்பாக பீகார் மாநில முதல்வர் நிதீஷ்குமார் பி.ஜே.பி.மீது கடுமையான விமர்சனத்தை வைத்து வருகின்றார். பிகார் மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் பி.ஜே.பி.யோடு கூட்டணி வைத்துக் கொண்டி ருந்தாலும், தேர்தல் பிரச்சாரத்துக்கு பீகாருக்கு குஜராத் முதல் அமைச்சர் நரேந்திரமோடி வந்துவிடக் கூடாது என்பதிலே தெளிவாகவும், உறுதியாகவும் இருந்தார். கூட்டணியிலிருந்து பிஜேபி விலகியது குறித்து சிறிதும் அவர் அலட்டிக் கொள்ளவும் இல்லை. பிஜேபி என்பது மதவாதக் கோட்பாடுள்ள ஒரு நோய் என்கிற அளவுக்கு படம் பிடித்தும் காட்டி விட்டார்.<br /><br />சமாஜ்வாடி கட்சியின் தலைவர் முலாயம் சிங்கும் பி.ஜே.பி.யின் முகத்திரையைக் கிழிக்க ஆரம்பித்துள்ளார். ராமன் கோவில் பிரச்சினையைத் தேர்தல் ஆதாயத்துக்காக பிஜேபி பயன்படுத்துவதாகக் குற்றம் சுமத்துகிறார்.<br /><br />இடதுசாரிகள் எப்பொழுதுமே பிஜேபியை விமர்சனம் செய்யக் கூடியவர்கள் தான்.<br /><br />இந்த மூன்றாவது அணியின் முக்கிய பங்குதாரர் யார் என்றால் தமிழ்நாட்டில் அ.இ.அ.தி.மு.க. அதன் பொதுச் செயலாளர், செல்வி ஜெயலலிதா தான்; மூன்றாவது அணி வெற்றி பெற்றால், தான்தான் பிரதமர் என்ற கனவில் மிதக்கக் கூடியவர்; தேவேகவுடாவுக்கு அடித்ததுபோல லாட்டரி அடிக்காதா என்று கருதிக் கொண்டிருக்கக் கூடியவர்.<br /><br />நியாயமாக பிஜேபியையும், அதன் பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடியையும் அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் தானே கடுமையாகச் சாட வேண்டும்! தோலுரித்துக்காட்டிட வேண்டும். அதுவும் மூன்றாவது அணி என்பது மூன்றாந்தர அணி என்று மோடி விமர்சித்த நிலையில், கடுமையாகச் சாடிய நிலையில், ஜெயலலிதா தரப்பிலிருந்து உக்கிரமான பதிலடிச் சம்மட்டி ஏன் புறப்படவில்லை?<br /><br />தன்மீது ஒரு துரும்பு அளவு மற்றவர்கள் கிள்ளிப் போட்டால்கூட விட்டேனா பார்! என்று விடுபட்ட அம்புபோல அக்னி அம்புகளால் சரம் தொடுக்கும் பாணியைக் கொண்ட செல்வி ஜெயலலிதா மவுன சாமியாராக இருப்பது - ஏன்?<br /><br />ஜெயலலிதா பதவியேற்றால் தனி விமானத்தில் மோடி சென்னைக்கு வருவார்; மோடி பதவியேற்றால் தனி விமானத்தில் அகமதாபாத் போய் சேர்வார் ஜெயலலிதா. சென்னைக்கு வந்தால் நாற்பது வகை சிறப்பு விருந்து வைத்து, உபசரித்து திக்கு முக்காடச் செய்யக் கூடியவர்.<br /><br />ஆனாலும் தனக்குப் போட்டி என்று வந்த நிலையில் நரேந்திர மோடி, ஜெயலலிதாவையும் சேர்த்துத்தான் மூன்றாவது அணியின் மீது மோதிடத் தயாராகி விட்டார்; மோசமான வார்த்தைக் கற்களால் கவண் வீசுகிறார். என்றாலும் தமிழ்நாடு முதல் அமைச்சர் 16ஆவது மக்களவைத் தேர்தலில் பெரு வெற்றி பெற்று டில்லிக் கோட்டையில் அமரத் துடிதுடித்துக் கொண்டு இருப்பவர், மோடிக்குப் பதிலடி கொடுக்க மறுப்பது ஏன்?<br /><br />திருவாளர் சோ ராமசாமியின் அறிவுரையா - வழிகாட்டுதலா? மோடியைத் தாக்க ஆரம்பித்தால் ஊடகங்கள் திசை மாறிப் போய் விடும் என்ற அச்சமா?<br /><br />தேர்தலுக்குப் பிறகு உருவாகும் - அரசியல் சூழல் (கற்பனையாகத்தான்) கெட்டுப் போய் விடக் கூடாது என்ற கெட்டிக்காரத்தனமான தொலை நோக்கா?<br /><br />மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் தத்தளிக்கும் பரிதாப நிலையை எண்ணிப் பரிதாபப்படத் தான் வேண்டியுள்ளது. ஆனாலும், தேர்தலுக்கான நாள்கள் நெருங்க நெருங்க மூன்றாவது அணி - தேசிய ஜனநாயகக் கூட்டணி (மோடி)களுக்கிடையே கத்திகளை இறக்கை களில் கட்டிக் கொண்டு ஆவேசமாக போரிடும் சேவல் சண்டைகளை நாடு காணத்தான் போகிறது.<br /><br />Read more: http://viduthalai.in/page-2/75087.html#ixzz2t3xA9i5e<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-77732444812774809292014-02-11T06:19:13.463+05:302014-02-11T06:19:13.463+05:30
தேங்காய் நல்லதா? கெட்டதா?
தேங்காய் ஆபத்தானது என...<br />தேங்காய் நல்லதா? கெட்டதா?<br /><br /><br />தேங்காய் ஆபத்தானது என்று அதைத் தவிர்ப்பவர்கள் ஒரு பக்கம்... கேரளாவிலும் இலங்கையிலும் தேங்காய் சாப்பிடறவங்க எல்லாம் வியாதிக் காரங்களாகவா இருக்காங்க? அதெல்லாம் ஒண்ணும் செய்யாது என்று அதைச் சேர்த்துக் கொள்கிறவர்கள் இன்னொரு பக்கம்... உண்மையில் தேங்காய் நல்லதா? கெட்டதா?<br /><br />தேங்காயை சமையலில் உபயோகிப்பதில் தவறே இல்லை. அதை எப்படி உபயோகிக்கிறோம் என்பதில்தான் விஷயமே இருக்கிறது. தினசரி 30 முதல் 40 கிராம் தேங் காயை உபயோகிக்கலாம். அதை அப்படியே பச்சையாக சேர்த்துக் கொள்கிற வரை பிரச்சினையில்லை. துருவி, பால் எடுத்துக் கொதிக்க வைக்கிற போதுதான் அதில் கொழுப்பு அதிகரிக் கிறது. அதே மாதிரிதான் கொப்பரையும். சில வகை உணவுகள் கொப்பரை சேர்ப்பதால் கூடுதலாக ருசிப்பதுண்டு.<br /><br />அந்தக் கொப் பரைதான் கெடுதலே. தேங்காய் முற்றி கொப்பரையாகும் போது, அதிலுள்ள நல்ல தன்மைகள் மாறி, கொழுப்பு கூடுகிறது. கூடிய வரை கொப்பரையை சமையலில் சேர்க்காம லிருப்பதே நலம். மற்றபடி சமைக்காத தேங்காயானது எல் லோருக்குமே நல்லதுதான். கொலஸ்ட்ரால் அதிகமுள்ளவர்கள் மட்டும் தேங்காயைத் தவிர்ப்பது பாதுகாப்பானது. தேங்காயை பால் எடுத்து உபயோகிக்கிற போது, அதிலுள்ள நார்ச்சத்தை எடுத்து விடுகிறோம்.<br /><br />வெறும் கொழுப்பு மட்டுமே மிஞ்சி யிருக்கும். தேங்காய்க்கு வயிற்றுப்புண்களை ஆற்றும் சக்தி உண்டு. அதனால்தான் வாயில் புண் வந்தால்கூட, தேங்காயை பச்சையாக மென்று சாப்பிடச் சொல்வார்கள். அதன் பால் புண்ணில் பட்டால், சீக்கிரமே ஆறும். அல்சர் நோயாளி களுக்கும் தேங்காய் பால் சேர்த்த உணவுகளை அதிகம் பரிந்துரைப்பதன் பின்னணியும் இதுதான்.<br /><br />சாச்சுரேட்டட் ஃபேட்டி ஆசிட் எனப்படுகிற கெட்ட கொழுப்பு அதில் அதிகம் என்பதே காரணம். கொப்பரை மற்றும் சமைத்த தேங்காயில் இது அதிகம். மற்றபடி குழந்தைகளுக்கு புரதம் மற்றும் கொழுப்பின் அளவை அதிகரிக்க வேண்டும் என்கிற நிலையில், தேங்காய் சேர்த்த பர்பி, தேங்காயும் வெல்லமும் சேர்த்த இனிப்புகளும் அதிகம் தரலாம்.<br /><br />எடை குறைவான குழந்தைகளுக்கு கொப்பரையில் உள்ள புரதம், கொழுப்பு மற்றும் கலோரி உதவும். அவர்களுக்கு கொப் பரையில் செய்த பொடி, கொப்பரை மிக்சர் போன்றவற்றை அடிக்கடி கொடுக்கலாம்.<br /><br />Read more: http://viduthalai.in/page-7/75025.html#ixzz2syDnOI3F<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-2502463394707542372014-02-11T06:18:39.042+05:302014-02-11T06:18:39.042+05:30
ஆரோக்கியம் தரும் கருப்பட்டி
கிராமங்களில் எப்போது...<br />ஆரோக்கியம் தரும் கருப்பட்டி<br /><br />கிராமங்களில் எப்போதுமே கருப்பட்டி காபி என்றால் எக்ஸ்டிரா ஸ்பெஷல்தான். பதநீரை காய்ச்சி அதிலிருந்து பெறப்படும் கருப்பட்டிக்கு சுவை, மணம் இருப்பதோடு மட்டுமல்லாமல், மருத்துவ குணமும் அதிகம் இருக்கிறது. கருப்பட்டியை இனிப்புக்காக மட்டும் பயன்படுத்த வில்லை. ஏனெனில் இதில் இருக்கும் கூடுதலான மருத்துவத் தன்மை யின் காரணமாக இதை இன்றும் கிராமங்களில் பயன்படுத்து கின்றனர்.<br /><br />இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் கருப்பட்டி யானது நமது உடலை சுத்தப்படுத்தி செரிமானத்திற்கும் பணிபுரிகிறது. பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும், உளுந்தையும் சேர்த்து உளுந்தங்களி செய்து கொடுத்தால் இடுப்பு எலும்புகள் வலுப்பெறுவதுடன், கருப்பையும் ஆரோக்கியமாக இருக்கும்.<br /><br />மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்றுவலியை போக்க கருப்பட்டி சாப்பிடலாம். சீரகத்தை வறுத்து சுக்கு மற்றும் கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டால், நன்கு பசி எடுக்கும்.<br /><br />ஓமத்தை கருப் பட்டியுடன் சேர்த்துச் சாப்பிட்டால் வாயுத் தொல்லை நீங்கும். குப்பைமேனிக் கீரையுடன் கருப்பட்டியைச் சேர்த்து வதக்கிச் சாப்பிட்டால் வறட்டு இருமல், நாள்பட்ட சளித் தொல்லை நீங்கும்.<br /><br />ஆண்மையை வீரியப்படுத்துவதிலும் கருப்பட்டிக்கு தனிப்பங்கு உண்டு. காபியில் சீனிக்கு பதிலாக கருப்பட்டிப் போட்டுக் குடித்தால் உடலில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாடாக இருக்கும். சர்க்கரை நோயாளிகளும் கூட கருப்பட்டி காபி குடிக்கலாம். இதில் சுண்ணாம்புச் சத்தும், நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகமாக இருக்கிறது.<br /><br />சர்க்கரை நோயாளிகள், கைக்குத்தல் அரிசி சாதத்துடன் கருப்பட்டியைக் கலந்து சாப்பிட்டு வந்தால்.<br /><br />சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருப்பதுடன், அடிக்கடி சிறுநீர் போவதும் குறையும். உடலுக்கு தேவையான ஆற்றலை தரக்கூடிய உணவாக கருப்பட்டி கருதப்படுகிறது.<br /><br />இதை சர்க்கரை நோயாளிகளும் சாப்பிடலாம். கருப்பட்டியை நாள்தோறும் சர்க்கரைக்கு பதிலாக அனைவரும் பயன்படுத்தினால் உடலின் ஆரோக்கியம் மேம்படும்.<br /><br />Read more: http://viduthalai.in/page-7/75023.html#ixzz2syDf4K8z<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-56254320973456756662014-02-11T06:18:06.903+05:302014-02-11T06:18:06.903+05:30
எடையை குறைக்கும் பேரிக்காய்
ஆசியா மற்றும் அய்ரோ...<br />எடையை குறைக்கும் பேரிக்காய்<br /><br /><br />ஆசியா மற்றும் அய்ரோப்பா பகுதிகளை தாயகமாகக் கொண்டவை பேரிக்காய்கள். ரோசாசியே தாவர குடும் பத்தை சேர்ந்த பேரிக்காயின் அறிவியல் பெயர் பைரஸ் கமியூனிஸ். பச்சை, சிகப்பு, மஞ்சள், ஆரஞ்சு போன்ற நிறங் களிலும், உருண்டை, மணி வடிவங்களிலும் பேரிக்காய்கள் விளை கின்றன. ஆசிய பகுதிகளில் ஆகஸ்ட் மாதத்தில் பேரிக்காய் பழங்கள் அறுவடை செய்யப்படுகின்றன.<br /><br />உடலிற்கு வலிமையளிக்கக் கூடிய நார்சத்துப் பொருட்கள், நோய் எதிர்ப்பு பொருட்கள் உள்ளிட்ட சத்துக்கள் அடங்கி உள்ளன. 100 கிராம் பழத்தில் 3.1 கிராம் நார்ப் பொருட்கள் காணப்படுகின்றன.<br /><br />பேரிக்காயில் உள்ள நார்ப் பொருட்கள் குடல் புற்று நோய்க்கு சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியாக பயன்படுகின்றன. இதில் காணப்படும் எளிதில் கரையாத பாலிசாக்ரைடு மூலக்கூறுகள் குடலில் சேரும் புற்று நோய் நச்சுகளை அகற்றவல்லது.<br /><br />குறைந்த ஆற்றல் அளிக்கக் கூடியவை பேரிக்காய்கள். 100 கிராம் பழத்துண்டில் 58 கலோரி ஆற்றல் உடலுக்கு கிடைக்கிறது. இவற்றை தொடர்ந்து சாப்பிட்டால் உடல் எடை, கொழுப்பின் அளவு கட்டுக்குள் இருக்கும்.<br /><br />அதிக அளவிலான வைட்டமின் சி சத்துப்பொருட்கள் பேரிக்காயில் நிறைந்து உள்ளன. புதிதாக பறித்த 100 கிராம் பழத்தில் 7 சதவீதத்திற்கு வைட்டமின் சி காணப்படுகிறது.<br /><br />பேரிக்காயில் பீட்டா கரோட்டீன், லுட்டின் மற்றும் ஸிசான்தின் போன்ற சத்துப் பொருட்களும் காணப்படு கின்றன. இவை உடலுக்கு வலிமை அளிப்பதுடன், சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியாகவும் செயல்படுகின்றன.<br /><br />தாமிரம், பொட்டாசியம், மாங்கனீசு, மக்னீசியம் போன்ற தாது உப்புகள் பேரிக்காயில் கணிசமாக உள்ளன. இவை தவிர பி குழும வைட்டமின்களான பைரிடாக்சின், ரிபோபிளேவின் மற்றும் போலேட் போன்றவையும் மிகுதியாக காணப்படு கின்றன.<br /><br />பேரிக்காய் பழங்கள் உடலுக்கு ஒவ்வாமை (அலர்ஜி) போன்ற உபாதைகளை ஏற்படுத்துவதில்லை.<br /><br />பேரிக்காய்களை தொடர்ந்து உட்கொள்வதால் உடலில் உள்ள கொழுப்பின் அளவை கட்டுப்படுத்தியும், உடல் எடையை குறைக்கும் ஆற்றல் கொண்டது. இந்த மருத்துவ குணம் படைத்த பேரிக்காய்களை நாள்தோறும் உண்போம்.<br /><br />Read more: http://viduthalai.in/page-7/75022.html#ixzz2syDWiHY1<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-60663153640621020672014-02-11T06:17:21.788+05:302014-02-11T06:17:21.788+05:30
நோய்களை தகர்க்கும் முருங்கை
இன்றைய சூழ்நிலையில் ...<br />நோய்களை தகர்க்கும் முருங்கை<br /><br />இன்றைய சூழ்நிலையில் நோய் பாதிக்கப்படாதவர்களே இல்லை என்கிற நிலை உள்ளது. உணவு, தண்ணீர், காற்று போன்றவைகளால் ஏராளமான நோய்கள் உருவாகி மக்களை தாக்குகின்றன. பாதுகாப்பற்ற தண்ணீர், மாசு படிந்த காற்று ஆகியவற்றாலும் நோய் வேகமாக பரவுகிறது. இவற்றை தடுக்க மனிதர்கள் அனைவரும் முயன்றால் மட்டுமே முடியும்.<br /><br />இது சாத்தியமா என்ற கேள்வி எழுகிறது. என்றாலும் நோயின் தாக்கத்தை தாங்கிக் கொள்ளும் வகையில் கீரை, பழங்கள் போன்றவற்றை அதிகளவில் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பது மருத்துவர்களின் அறிவுரை ஆகும். அந்த வகையில் முருங்கை கீரையை சாப்பிடலாம். இது ரசாயன உரம் இன்றி வீடுகளில் கூட தண்ணீர் இருந்தால் மிக வேகமாக வளர்ந்து நமக்கு பயன் தரக்கூடியதாகும். இதன் பயன்கள் அளவிட முடியாத வகையில் உள்ளது.<br /><br />முருங்கை கீரை, காய், பூ என அனைத்தும் பெரும் பாலானோர் விரும்பி சாப்பிடக்கூடியவை. அதிக சத்து நிறைந்தவை. திருமண விருந்தை மணமாக்க கூடியவை முருங்கைக்காய். முருங்கை கீரை, பூ, காய், விதை, வேர், பட்டை என எல்லாமே மருத்துவ குணம் கொண்டவை ஆகும். இவற்றில் கால்சியம், வைட்டமின் சத்துக்கள் நிறைய உள்ளன. இருமல், தொண்டைக் கம்மல் ஏற்பட்டால் மக்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.<br /><br />இவற்றை போக்க முருங்கை இலையை சாறு பிழிந்து எடுத்து அதில் சிறிது சுண்ணாம்பு, தேன் ஆகியவற்றை நன்றாக குழைத்து தொண்டைக் குழியின் மேல் தடவினால் இருமல், தொண்டைக்கம்மல் நீங்கும்.<br /><br />கெட்டநீர் வெளியேற முருங்கை இலையின் காம்புகளை எடுத்து அதனை நன்றாக இடித்து ஒரு மட்பாண்டத்தில் போட்டு ஒரு லிட்டர் சுத்தமான தண்ணீர் விட்டு கால் லிட்டராக சுண்டக் காய்ச்சி வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். இந்த கஷாயத்தை காலை மாலை என 2 வேளையும் 3 அவுன்ஸ் குடித்து வந்தால் உடலில் சேர்ந்துள்ள கெட்ட நீர் வெளியேறி உடல் நலமாகும்.<br /><br />உடம்பில் வாயுத்தொல்லை அதிகமாகிவிட்டால் தொந்தரவுகள் உண்டாகும். முருங்கை பிஞ்சை கறியாக சமைத்து உட்கொண்டால் வாயு தொல்லை அகலும். வாயுவினால் பிடிப்பு ஏற்பட்டிருந்தாலும் அகன்று விடும். மனிதர்களுக்கு மிக எளிதாகும் நோய்களில் தலைவலி முதலிடத்தில் உள்ளது.<br /><br />இந்த தலைவலி தீர, முருங்கைப் பட்டையை இடித்து சாறு எடுத்து சாறின் அளவுக்கு பசும்பால் சேர்த்து நெற்றியில் பற்று போட வேண்டும். இவ்வாறு செய்தால் தலை வலி விரைவில் குணமாகும்.<br /><br />Read more: http://viduthalai.in/page-7/75020.html#ixzz2syDK5TJu<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-54440908324422770702014-02-11T06:16:32.339+05:302014-02-11T06:16:32.339+05:30
ஆர்.எஸ்.எஸ்.காரரான மோடியை மக்கள் ஏற்கமாட்டார்கள் ...<br />ஆர்.எஸ்.எஸ்.காரரான மோடியை மக்கள் ஏற்கமாட்டார்கள் கருநாடக முதல் அமைச்சர்<br /><br /><br />பெங்களூரு, பிப். 10- நரேந் திரமோடி ஒரு ஆர்.எஸ்.எஸ். தொண்டர் என்று கர்நாடக முதல் அமைச்சர் சித்தரா மையா கூறினார்.<br /><br />நாடாளுமன்ற தேர்த லையொட்டி பாரதீய ஜனதா வின் பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி நாடு முழுவ தும் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்து வருகிறார். மேலும், நாட்டில் நரேந்திர மோடி அலை வீசுவதாக பார தீய ஜனதாவினர் சொல் கிறார்கள்.<br /><br />ஆனால் நரேந்திரமோடி யின் திட்டம் கர்நாடகத்தில் எடுபடாது என்று முதல் அமைச்சர் சித்தராமையா கூறினார். 2010-2011ஆம் ஆண்டுக்கான சினிமா விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்வதற்காக நேற்று தார்வார் செல்லும் வழியில் ஊப்ளி வந்த சித்தரா மையா அங்கு செய்தியாளர் களுக்குப் பேட்டி அளித்தார்.<br /><br />அப்போது செய்தியாளர் களின் கேள்விக்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:<br /><br />நாடாளுமன்ற தேர்த லில் பாரதீய ஜனதா வெற்றி பெறாது. மத்தியில் அய்க்கிய முற்போக்கு கூட்டணி மீண் டும் வெற்றி பெற்று ஆட் சியை பிடிக்கும் என்ற நம் பிக்கை எனக்கு உள்ளது. பார தீய ஜனதா பிரதமர் வேட்பா ளர் நரேந்திரமோடியின் திட் டம் கர்நாடகத்தில் எடு படாது. இது கடந்த சட்ட மன்ற தேர்தலிலேயே நிரூ பிக்கப்பட்டு விட்டது.<br /><br />இங்கு உள்ள வாக்கா ளர்கள் அறிவாளிகள். மத சார்பற்ற கட்சியை அடையா ளம் கண்டு ஆதரிப்பார்கள். கர்நாடகத்தைப் பொறுத்த வரையில் மதசார்பற்ற கொள்கையில் உறுதியாக இருப்பது காங்கிரஸ் மட் டுமே! நரேந்திரமோடி ஒரு ஆர்.எஸ்.எஸ். தொண்டர். அதனால் பா.ஜனதாவுக்கு வாக்காளர்கள் ஓட்டுப் போட மாட்டார்கள். இவ் வாறு சித்தரா மயா கூறினார்.<br /><br />Read more: http://viduthalai.in/page-8/75032.html#ixzz2syD7ZQ5P<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-15438381877139885852014-02-11T06:12:56.292+05:302014-02-11T06:12:56.292+05:30கிராம அதிகாரப் பகிர்வு நடைமுறையில் யாருக்குப் பயன்...கிராம அதிகாரப் பகிர்வு நடைமுறையில் யாருக்குப் பயன்படுகிறது?<br /><br /><br />ஜனவரி 30, 2014 அன்று காந்தியாரின் நினைவுநாள் நிகழ்ச்சிகளில் நாட்டின் அர சியல் அதிகாரத்தில் இருப் போரின் நடவடிக்கைகள் நாட்டின் தந்தை மகாத்மா காந்தி என்பதை மறந்து வருகின்ற நிலைமைகளை தெரிவிப்பதாக அமைந்து விட்டன. மேற்கு வங்கத்தில் நடைபெற்ற ஆளுநர் கலந்துகொண்ட நினைவு நாள் நிகழ்ச்சியில் அந்த மாநில அரசின் ஒரு அமைச்சர் கூட கலந்து கொள்ளவில்லை. மும்பாய் மாநகர மேயர் சுனில் பிரபு தேசத் தந்தையின் நினைவுநாள் நிகழ்ச்சியி னையே மறந்துவிட்டார். தமக்கு நினைவூட்டவில்லை என அதிகாரிகள் மீது பழி போட்டுவிட்டார். இந்த நிலை வியப்பினை அளிக்கத் தக்கதாக இல்லை என்பதை அண்மையில் ஒரு செய்தி ஊடகம் பொதுமக்களிடம் நடத்திய வாக்கெடுப்புப் பணியின் முடிவுகள் முன் னமே தெரிவித்துவிட்டன. நாட்டில் உள்ள மூன்றில் இரண்டு பங்கு வாக்காளர் கள் சோனியா காந்தியை மகாத்மா காந்தியின் உறவி னர் எனக் கருதுவதாக அந்த ஆய்வின் முடிவு கூறுகிறது.<br /><br />காந்தியாரின் போதனை கள் பலரை ஊக்குவிப்ப தாகத் தோன்றுகிறது! ஆம் ஆத்மி கட்சியினர் மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் காந்தி குல்லாவை அணிவதன் மூலம் காந்தியாரின் தத்து வத்திற்கு தம்மை சொந்த மானவர்களாகக் காட்டிக் கொள்கிறார்கள். அதிகாரப் பங்கீட்டை வலியுறுத்துவ தன் மூலம் காந்தியாரின் கிராம சுயராஜ்யத்தை நிறை வேற்ற முயல்வதாகக் கூறு கின்றனர்.<br /><br />ஆனால் அவர்கள் காந்தி யாரின் நிழல் ஆதிக்கத்தில் வாழ்ந்த மற்றொரு பேரு ருவாகத் திகந்த தலைவர், காந்தியாரின் தத்துவப் போதாமையை தம் மறை விற்கு பின்னர் வெளிப்படுத் திக் காட்டிய வலிமையினை அக்கட்சியினர் கருத்தில் கொள்ள வேண்டும். ஆம் தலித் மக்களின் தலைவராகக் கருதப்பட்ட டாக்டர் பீம ராவ் அம்பேத்கர் ஆவார் அவர்.<br /><br />காந்தியாரின் கொள்கை<br /><br />கிராம நிர்வாகத்தைப் பொறுத்த வரையில் காந்தி யாரின் கொள்கைகளும், அம் பேத்கரின் கொள்கைகளும் எதிரானவை. மய்ய அரசு தம்மிடம் குறைந்த அதிகா ரத்தை வைத்துக் கொண்டு, பெரும்பான்மை அதிகாரங் களை கிராம சபையிடம் அளித்துவிட வேண்டும்; கிராமத் தலைவர் ஆட்சி செலுத்தும் பழைமைவாத அடிப்படை நிலவிட வேண் டும் என்று காந்தியார் விரும் பினார். ஆனால் அம்பேத் கரோ கிராமங்கள் மற்றும் அதன் நிர்வாகத் தலைமை யினர், கொடுங்கோன்மை, ஜாதி பாகுபாடு, வகுப்பு பேதம் ஆகியவற்றின் ஊற் றுக் கண்ணாய் திகழ்ந்து வரு கிறார்கள் எனக் கருதினார். மனித நேயத்திற்குப் புறம் பாக நடந்து கொள்ளும் ஆதிக்க மனப்பான்மையி னரிடம், மனித உரிமைகள் எப்படி பாதுகாப்பாக இருக்க முடியும் எனக் கேள்வி கேட் டார். ஒரு முறை பம்பாய் மாநில சட்ட மேலவையில், கிராமத் தலைவர்களுக்கு கூடுதல் அதிகாரம் அளித்திட வல்ல. மசோதா விவாதத் திற்கு வந்த பொழுது அம் பேத்கார் கூறியது நினைவூட் டத்தக்கது:<br /><br />ஜாதியக் கட்டுப்பாட் டுக்குள் உள்ள மக்கள் பகுதி யினர் - பழைமைவாத ஆதிக்க மனப்பான்மை கொண்ட மக்கட் பிரிவு - சமத்துவக் கோட்பாட்டிற்கு எதிரான ஒரு பிரிவினர் - சமூக தளத்தில் பிறப்பின் அடிப்படையி லான வேறுபாட்டை வலி யுறுத்தும் வகையினர் - மக்களில் ஒரு பகுதியினர் உயர்ந்தவர்கள், பிறர் தாழ்ந் தவர்கள் எனும் கருத்தைக் கடைப்பிடிப்போர் - இவர் களிடம் நியாயமான வகை யில் நீதியை எதிர்பார்க்க இயலுமா? கிராமத் தலை மைக்கு ஆட்சி அதிகாரப் பகிர்வை நான் வன்மையா கக் கண்டிருக்கிறேன். அப் படிப்பட்டவர்களிடம் எமது வாழ்வு, விடுதலை, எங்கள் உடமைகளை அடகு வைத் திட நாங்கள் தயாராக இல்லை.<br /><br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-24974554352228261442014-02-11T06:09:43.589+05:302014-02-11T06:09:43.589+05:30
திரும்பத் திரும்ப பேசற நீ
-குடந்தையான்
அண்மைக்...<br />திரும்பத் திரும்ப பேசற நீ<br /><br /><br />-குடந்தையான்<br /><br />அண்மைக் காலமாக நரேந்திர மோடி, பேசும் பொதுக் கூட்டங்களில் எல்லாம் தான் டீ விற்று வந்தவன் என்பதை அடிக்கடி சொல்லி, அவ் வாறு சொல்வதன் மூலம், தான் சாமானிய மக்களின் பிரதிநிதி போல காட்டிக் கொள்ள முயல்கிறார். ஆனால், நடைமுறையில், குஜராத்தின் முதல்வராக மோடியின் செயல்பாடு கள், சாமானிய மக்களின் வளர்ச்சிக் காக இல்லை; மாறாக, இந்த நாட்டின் பெரு முதலாளிகள், பெரும் கொள் ளையடிப்பதற்கான திட்டங்கள் தான், மோடி தலைமையிலான குஜராத்தில் முன்னுரிமை பெறுகின்றன. இந்த பெரும் தொழில் நிறுவனங் களால், பெரிய அளவில் வேலை வாய்ப்பு நடைபெறவில்லை. வேலை வாய்ப்பை அதிக அளவில் உருவாக் கும் குறு, சிறு, தொழில் செய்யும் தொழில் துறையினருக்கு எந்த உதவியும் செய்யப்படவில்லை. குஜராத்தின் வரவு செலவு கணக்கில் 40 விழுக்காடு, பெரு முதலாளி களுக்கான மானிய நிதியாகவும், சிறு, தொழில் செய்வோருக்கு 2.3 விழுக் காடு மானிய நிதியாகவும் தான் அளிக் கப்படுகிறது. ரிலையன்ஸ் நிறுவனத் திற்கும், அதானி குழுமத்திற்கும் தான் குஜராத்தில் அதிக அளவில் சலுகை கள் தரப்பட்டுள்ளன. இந்நிறுவனங் களால் பெரிய அளவில் வேலை வாய்ப்பு தரப்பட வில்லை. மோடியை பிரதமராக்கிடுவதில் பெரு முத லாளிகள் தான் அதிக அளவில் பணம் செலவழித்து வருகிறார்கள்.<br /><br />ஆனால், அதனை மறைப்பதற்கு, தன்னுடைய தொடக்க கால நிலையைக் கூறி, மக்களிடம் அனுதாபம் பெற முயலுகிறார் மோடி. குஜராத்தில் 2003 முதல் 2011 வரை சுமார் 673 பில்லியன் டாலர்கள் அன்னிய முதலீடுகளுக் கான ஒப்பந்தங்கள் செய்யப்பட்ட தாகவும், அதில் 84 விழுக்காடு அளவில் திட்டங்கள் நிறைவேற்றப் பட்டதாக மோடியின் அரசு செய்தி வெளியிட்டது. இது உண்மையாக இருந்திருக்குமானால், குஜராத், சீனாவின் அன்னிய முதலீட்டு அளவை விட கூடுதல் நிதியை பெற்றுள்ளதாக அர்த்தம். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை; மாறாக 2012-13 க்கான அன்னிய நேரடி முதலீடு, குஜராத்திற்கு ரூ.2473 கோடிதான், அதாவது நாட்டின் மொத்த அன்னிய முதலீட்டில் 2.38 விழுக்காடு பெற்று, ஆறாவது இடத் தில் உள்ளது. மராட்டிய மாநிலம் 40 விழுக்காடு அதாவது, ரூ.49000 கோடி நேரடி அன்னிய முதலீட்டை பெற்று முதல் இடத்தில் உள்ளது. அடுத்த நிலையில், தில்லி, தமிழ் நாடு, ஆந் திரா, கர்நாடகா மாநிலங்கள் உள்ளன. ரிசர்வ் வங்கி அறிக்கையின் படி, அன்னிய நேரடி முதலீடு, மராட்டிய மாநிலத்திற்கு 45.8 பில்லியன் டாலர்கள், தில்லிக்கு 26 பில்லியன் டாலர்கள், கர்நாடகா 8.3 பில்லியன் டாலர்கள், தமிழ் நாடு 7.3 பில்லியன் டாலர்கள் என்ற அளவில் கிடைத்தது. மோடியின் குஜராத் அரசுக்கு 7.2 பில்லியன் டாலர்கள் தான் கிடைத் தது. (தி ஹிந்து 13.4.2013) ரிசர்வ் வங்கி அமைத்த குழு அளித்த தகவலின்படி, குறைந்த அளவு முன்னேற்றம் அடைந்த மாநிலமாக குஜராத்தை அறிவித்துள்ளது. கல்வி, வீட்டு வசதி, வறுமைக் கோட்டின் அளவு, மருத் துவம், கல்லாதவர் விகிதம் ஆகிய காரணிகளைக் கொண்டு நிர்ணயிக்கப் படும் மனித வள குறியீட்டில், 12-வது இடத்தைத் தான் குஜராத் மாநிலம் பெற்றுள்ளது. கேரளா, கோவா, தமிழ் நாடு ஆகிய மாநிலங்கள் முன்னேறிய மாநிலங்களாக கருதப்படுகின்றன. (டெலிகிராப் செப் 27, 2013). கார்ப் பரேட் முதலாளிகளின் காவலனாக இருக்கும் மோடி, இந்த உண்மை நிலையை மறைத்து, தான் ஏதோ சாமான்ய மக்களுக்கு காவலன் போலவும், குஜராத் மாநிலம் தமிழ் நாடு உள்ளிட்ட மாநிலங்களைக் காட்டிலும் முன்னேறிவிட்டதைப் போலவும், தொடர்ந்து புளுகு மூட் டைகளை அவிழ்த்து விடுகிறார். முன்னேற்றம், முன்னேற்றம் என்று தான் மோடி சொல்கிறாரே தவிர, ஒரு இடத்தில் கூட, அனைத்து மக்களையும் உள்ளடக்கிய முன்னேற் றம் என்பதை மறந்தும் சொல்ல வில்லை; அவரது பேச்சிலும், செய லிலும் சமூக நீதியைப் பற்றி எந்த கருத்தும் இல்லை. அண்டப் புளுகு, ஆகாசப் புளுகு, கோயபல்ஸ் புளுகு என்பதையெல்லாம் மிஞ்சி, இனி மோடி புளுகு என்று வரலாற்றில் பதிவு செய்யும் அளவுக்கு, திரும்பத் திரும்ப பொய்களை சொல்லிக் கொண்டே வருகிறார். தமிழக மக்கள் மோடி புளுகை நம்பும் ஏமாளிகள் அல்ல என்பதை வரும் தேர்தல் மூலம், மோடிக்கும், அவருக்கு கைலாகு கொடுக்கும் கூட்டத்திற்கு உணர்த்த வேண்டும்.<br /><br />Read more: http://viduthalai.in/page-2/75034.html#ixzz2syBN6Fic<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-61946205114735880442014-02-11T06:07:31.053+05:302014-02-11T06:07:31.053+05:30
திருக்குறள்
நம் நாட்டினருக்கு என்ன கலை, என்ன கு...<br />திருக்குறள்<br /><br /><br />நம் நாட்டினருக்கு என்ன கலை, என்ன குறிக்கோள், என்ன நாகரிகம் என்று கேட்டால் அதற்கு ஆதாரமாகத் திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள் ஒன்றைத்தான் எடுத்துக்காட்ட முடியும். - (விடுதலை,3.10.1958)<br /><br />Read more: http://viduthalai.in/page-2/75021.html#ixzz2syAr7S9z<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-80688192612314456122014-02-11T06:06:51.176+05:302014-02-11T06:06:51.176+05:30
விபீஷணத்தனத்துக்குப் பாடம் கற்பிப்போம்!
சென்னை...<br />விபீஷணத்தனத்துக்குப் பாடம் கற்பிப்போம்!<br /><br /><br /><br />சென்னையில் பிப்ரவரி 15,16 ஆகிய நாட்களில் அகில இந்திய வித்யார்தி பரிஷத் (ஏபிவிபி) என்னும் தேசிய மாணவர் அமைப்பின் இரண்டு நாள் மாநாடு நடை பெறுகிறதாம்.<br /><br />மாநாடு நடைபெறும் இடம், சென்னை - கொரட்டூர் விவேகானந்தா வித்யாலயா பள்ளி வளாகம்; விவேகானந்தர் பெயரிலும், ஜெயகோபால் கரோடியா என்னும் பெயர்களிலும் நடத்தப்படும் கல்வி நிறுவனங்கள் எல்லாம் (இதில் தேசிய என்பதையும் சேர்த்துக் கொள்ளலாம்) இந்த சங்பரிவார்களுக்கான கேந்திரமான இடங்கள் என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். இது போன்ற கல்விக் கூடங்களில் காவி சமாச்சாரங்கள் தான் முக்கியமாக திணிக்கப்படும் என்பதற்குப் பெரிய ஆய்வுகள் தேவைப்படாது.<br /><br />நடக்கவிருக்கும் மாநாட்டில் யார் யார் எல்லாம் கலந்து கொள்கிறார்களாம்?<br /><br />பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த எஸ்.ஆர்.எம்.பல்கலைக் கழக வேந்தர் பச்சமுத்து மாநாட்டை தொடங்கி வைக்கிறார். காந்தீய மக்கள் இயக்க நிறுவனர் தமிழருவி மணியன் அமைப்பின் மாணவர் பிரதிநிதிகளும் கலந்து கொள்கின்றனராம்.<br /><br />இதன் மூலம், இவர்களைத் தமிழ்நாட்டு மக்கள் அடையாளம் காண வேண்டும் என்பதுதான் நமது அன்பான வேண்டுகோள்.<br /><br />கடந்த ஒரு நூற்றாண்டாக, தமிழ் மண்ணிலே பகுத்தறிவு, சுயமரியாதை, மனித சமத்துவம், சமூகநீதிக்காக ஒரு மாபெரும் தலைவர் தந்தை பெரியார் சிந்தனைகளை விதைத்து, ஓய்வறியாப் பிரச்சாரங்களை மேற்கொண்டு, களங்கள் பல கண்டு, தியாக நெருப்பில் குளித்தெழுந்து மிகப் பெரிய எழுச்சி, மாற்றம் தமிழ் மண்ணில் உருவாக்கப் பட்டுள்ளது. அதன் காரணமாக, ஆண்டாண்டுக் காலமாக ஒடுக்கப்பட்ட, உரிமைகள் மறுக்கப்பட்ட மக்களிடையே தன்மான உணர்வு - விழிப்புணர்வு ஏற்பட்டது. கல்வி வாய்ப்புக் கதவுகள் திறந்து விடப்பட்டன; வேலை வாய்ப்புக்குப் பாட்டைகள் கிடைத்தன.<br /><br />தூர போ - கிட்டே வராதே என்ற உயர் ஜாதி ஆதிக்கக் குரல்களின் குரல் வளைகள் நெரிக்கப்பட்டன. பொதுச் சாலைகளும், வீதிகளும், குளங்களும் எல்லோருக்கும் பொதுவானவை; அனைவரும் புழங்கிட உரிமை உண்டு என்ற உத்தரவாதம் உண்டாக்கப்பட்டது. பேருந்துகளின் தாழ்த்தப்பட்டோருக்கு அனுமதியில்லையென்றால், பேருந்துகளின் உரிமங்கள் ரத்து செய்யப்படும்; பள்ளிகளில் தாழ்த்தப்பட்டோருக்கு இடம் இல்லையென்றால் உதவித் தொகை நிறுத்தப்படும் என்று - இந்தியத் துணைக் கண்டத்தில் யாரும் கனவு காணாத கால கட்டத்தில் தமிழ்நாட்டில் இதற்கான மாற்றங்களுக்கான விதைகள் ஊன்றப்பட்டு, மாச்சரியங்கள் மருண்டோடச் செய்யப்பட்டு மனிதம் இங்கு தழைத்தோங்கும் நிலை ஏற்படுத்தப்பட்டது.<br /><br />தந்தை பெரியார் அவர்களால் 1925இல் சுயமரியாதை இயக்கம் தொடங்கப்பட்ட அதே காலத்தில்தான், இந்து மகா சபையும் இங்கு உண்டாக்கப்பட்டது. ஆனால் பெரியார் பிறந்த மண்ணில் அந்த நச்சுச் செடியால் முளைவிட முடியவில்லை.<br /><br />இன்றைக்கும்கூட இந்தியாவின் வேறு சில பகுதியில் இந்தக் காவிக் கூட்டம் கால் பதித்திருந்தாலும், தமிழ் மண் ணில் எவர்கைகளாவது கிடைக்காதா? யார் கால்களாவது தட்டுப்படாதா என்று பரிதவிக்கும் பரிதாப நிலைதான்.<br /><br />நமக்குள்ள வேதனையெல்லாம் பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் பிறந்தவர்கள்கூட, இன்றைக்குப் பணம் தங்கள் கையில் சிக்கி இருக்கிறது என்பதற்காக ஏதோ ஒரு கணக்குப் போட்டு, நமது நீண்ட கால அடிமைத்தனத்துக் குக் காரணமாக இருந்த சக்திகளுக்கு நடைபாவாடை விரிக்கத் துடிக்கிறார்கள் என்றால் இந்தக் கேவலத்தை என்னவென்று சொல்ல!<br /><br />காந்தியின் பெயரால் கட்சி வைத்துக் கொண்டு இருக்கிற - அறிவு ஜீவி என்று தனக்குத்தானே முதுகைத் தட்டிக் கொள்கின்றவர்கள் எல்லாம் வருண வெறி- மதவெறிப் பிடித்த பாசிசக் கும்பலுக்குக் கைலாகு கொடுக்கிறார்கள்; காந்தியைக் கொன்ற கும்பலுக்குப் பூர்ண கும்ப வரவேற்பு அளிக்கிறார்கள். என்றால் - எத்தகைய கேவலம், அவமானம்!<br /><br />எனக்குள்ள கவலையெல்லாம் தமிழர்களுள் விபீஷணர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறதே என்று சொன்னாரே தந்தை பெரியார் - அது தான் நினைவிற்கு வருகிறது. தந்தை பெரியார் அவர்களின் தொலைநோக்கை எண்ணிப் பார்க்க வேண்டும்.<br /><br />தமிழ்நாட்டு மக்கள் ஏமாந்துவிட மாட்டார்கள். நடக்க இருக்கும் 16ஆவது மக்களவைத் தேர்தலில் காவிக் கூட்டத்தை மண்மூடிப் போகச் செய்வதோடு - அந்தக் கூட்டத்துக்குத் தமிழ் மண்ணில் நடை பாவாடை விரிக்கும் வீடணர்களுக்கும் சரியான பாடத்தையும் கற்பிக்க வேண்டும்; தந்தை பெரியார் அவர்களால் பயன் பெற்ற - பக்குவம் பெற்ற நம் தமிழ்நாட்டு மக்கள் அதனைச் செம்மையாக செய்வார்கள் என்பதில் அய்யமில்லை வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!<br /><br />Read more: http://viduthalai.in/page-2/75024.html#ixzz2syARcQyn<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-14378832511605258582014-02-11T06:05:17.582+05:302014-02-11T06:05:17.582+05:30
சிக்கன எளிய திருமணம் - கலைஞர் மன நிறைவு -
சென்...<br />சிக்கன எளிய திருமணம் - கலைஞர் மன நிறைவு -<br /><br /><br /><br />சென்னை, பிப்.10- தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்களின் இல்லத்தில் எளிமையான முறையில் கலைஞர் தொலைக்காட்சி ஊழியர் தம்பிதுரை இல்லத் திருமண விழா நடைபெற்றது. கலைஞர் நடத்தி வைத்தார். சுயமரியாதை முறையி லான எளிய திருமண நிகழ்ச்சிகளை ஆடம்பரமாக நடத்துவதைத் தவிர்த்து நம்முடைய வீட்டிலேயே நடத்திக் கொள்கிற இந்தச் சிக்கனம் போற் றத்தக்கது - பாராட்டத்தக்கது. தந்தை பெரியார் பலமுறை இந்த முறையைப் பாராட்டியிருக்கிறார் - நானும் மகிழ்ச்சி அடைகிறேன் என்றார் கலைஞர் (9.2.2014).<br /><br />Read more: http://viduthalai.in/e-paper/75038.html#ixzz2syACdAj1<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-58980746423667983552014-02-11T06:04:22.005+05:302014-02-11T06:04:22.005+05:30
செய்திச் சிதறல்கள்.....
சரஸ்வதி யாகமாம்
திருப்...<br />செய்திச் சிதறல்கள்.....<br /><br /><br />சரஸ்வதி யாகமாம்<br /><br />திருப்பதியில் சரஸ்வதி யாகம் நடத்தப்பட்டுள்ளது. ஏராள மாணவர்கள் கலந்து கொண்டார்களாம். தேர்வு நன்றாக எழுத கங்கணக் கயிறுகளும் கட்டப்பட்ட தாம்.<br /><br />(மாணவர்களைக் கெடுப்பதற்கு அவர்களின் தன்னம்பிக்கையையும் விடா முயற்சியையும் குலைப் பதற்கு இது போன்ற மூடத் தனங்கள் அரங்கேற்றப்படு கின்றன - இவை தடுக்கப்பட வேண்டும்).<br /><br />நல்ல நேரம்<br /><br />தமிழ்நாடு சட்டப் பேரவைக் கூட்டம் நிதி நிலை தாக்கலுக்காக 13ஆம் தேதி காலை 10 மணிக்குத் தொடங்கும் என்று அறிவிக் கப்பட்டு இருந்தது. இப் பொழுது திடீரென்று காலை 11 மணிக்கென்று மாற்றப்பட் டுள்ளது. காரணம் இதுதான் நல்ல நேரமாம். வாழ்க அண்ணா நாமம்!<br /><br />(விஞ்ஞான மனப்பான் மையை வளர்க்க வேண்டும் - ஒவ்வொரு குடிமகனின் கடமை என்று இந்திய அரச மைப்புச் சட்டம் கூறுகிறது. முதலில் முதல் அமைச்சர் களைக் கூட்டிப் பகுத்தறி வுப் பாடம் நடத்துவது அவசியம்).<br /><br />தீராவினை!<br /><br />திருப்பதி ஏழுமலை யானை தரிசிக்க இலங்கை அதிபர் ராஜபக்சேயின் மனைவி சிராந்தியா ராஜ பக்சே சனியன்று திரு மலைக்கு வந்தா ராம்.<br /><br />தீராத வினையெல்லாம் தீர்த்து வைக்கும் திருவாளர் ஏழுமலையான், இலட்சக் கணக்கான தமிழர்களைக் கொன்ற பாவத்தைத் தீர்த்து வைக்க மாட்டாரா என்ற நம் பிக்கையாக இருக்குமோ!<br /><br />(இன்னொரு கூடுதல் தகவல்: புத்தர் விகாரமான இருந்ததுதான் ஏழுமலை யான் கோயிலாக மாற்றப் பட்டது என்பது வரலாறு.)<br /><br />சர்வதேச அவமானம்!<br /><br />அருணாச்சலப் பிரதேச காங்கிரஸ் எம்.எல்.ஏ.வின் மகன் டில்லியில் நிடோ தனியம் கொல்லப்பட்டது தேசிய அவமானம் என்று பிஜேபியின் பிரதமருக்கான வேட்பாளர் நரேந்திரமோடி கூறியுள்ளார்.<br /><br />(ஒருவர் கொல்லப்பட் டதே தேசிய அவமானம் என்றால் குஜராத்தில் 2000 பேர் கொல்லப்பட்டது சர்வ தேச அவமானம் அல்லவா!)<br /><br />நாணயம்?<br /><br />கழிப்பறையில் கட்டணம் வசூலித்தால் 1913 என்ற எண்ணுக்குத் தொலைபேசி செய்யுங்கள் என்று மாநக ராட்சி அறிவித்துள்ளது<br /><br />(நம் நாட்டின் நாணயம், பொது ஒழுக்கம் எந்த யோக்கி யதையில் உள்ளது என்ப தற்கு இது ஒன்று போதாதா? முன்பெல்லாம் ரயில் நிலை யங்களில் குடிதண்ணீர் பானையில் குவளையை சங்கிலியால் கட்டி பூட்டுப் போட்டுத் தொங்க விடுவார் கள். அதுபற்றி அப்பொழுது விடுதலை கிண்டல் செய் ததுண்டு - இந்த 2014-லும் இப்படியொரு நிலையா? இதுதான் பாரத புண்ணிய பூமியாம்.<br /><br />(வெட்கக்கேடு சர்வசக்தி கடவுள் கோயிலுக்கும், உண்டியலுக்கும்கூட இங்கு பூட்டுத் தேவைப்படுகிறதே!)<br /><br />Read more: http://viduthalai.in/e-paper/75041.html#ixzz2syA3RfGr<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-87235741806387857382014-02-11T06:03:10.814+05:302014-02-11T06:03:10.814+05:30
மணமகனுக்குத் தாலி
இன்றைய நாளேடு களில் ஒரு செய்...<br />மணமகனுக்குத் தாலி<br /><br /><br /><br />இன்றைய நாளேடு களில் ஒரு செய்தி பர பரப்பாக வெளியிடப் பட்டுள்ளது. நீடாமங் கலம் காட்டு நாயக்கன் தெருவைச் சேர்ந்த சோமு. கல்யாணி இணையரின் மகள் கல்யாணி; சிறீரங் கம் பழனி நாயக்கன் - திலகவதி ஆகியோரின் மகன் சதீஷ் ஆகியோரின் திருமணம் நீடாமங்கலத் தில் நடைபெற்றுள்ளது.<br /><br />வழக்கம்போல மாலை அணிவிக்கப்பட்டது. மணமகன் மணமகளுக் குத் தாலி கட்டினார்; இது வரை ஒன்றும் இல்லை - எங்கும் நடக்கக் கூடியது தான்; மணமகள் மணமக னுக்கும் தாலி கட்டினாரே பார்க்கலாம்; ஒரே பரப்பு சலசலப்பு! கிசு கிசு!<br /><br />ஆணும், பெண்ணும் சமம் என்பதற்கு அடை யாளமே இது என்று பெற்றோர் அறிவித்தனர்.<br /><br />இது வரவேற்கத்தக்க ஒன்றே! திராவிடர் கழகத் தைப் பொறுத்தவரை இது ஒன்றும் புதுமையல்ல; ஏற் கெனவே நடைபெற்றது தான். புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களின் மகள் சரஸ்வதி - புலவர் கண்ணப்பர் திருமணம் நடந்தது. மஞ்சுளா பாய் அம்மையார்தான் முன் னின்று ஏற்பாடு செய்தார்.<br /><br />மணமகளிடம் மண மகன் கண்ணப்பனைப் பற்றி எடுத்துக் கூறினார். நல்ல பகுத்தறிவுவாதி - நம் கொள்கை வழிப்பட் டவர் என்று எல்லாம் எடுத்துக் கூறினார்.<br />தாலி உண்டா என்று புரட்சிக்கவிஞரின் மகள் கேட்டார். தாலி எல்லாம் உண்டு என்று மஞ்சுளா பாய் அம்மையார் கூறி னார். அப்படியென்றால் மணமகனுக்கு நானும் தாலி கட்டுவேன் - சம் மதமா என்று எதிர்க் கேள்வி போட்டார் மண மகள் சரஸ்வதி. (புரட்சிக் கவிஞர் மகள் அல்லவா!) அதன்பின் தாலியில்லா மல் அந்தத் திருமணமும் நடைபெற்றது. (23.1.1944).<br /><br />கையொப்பமிட்டு அழைப்புக் கொடுத்தவர் கள் ஈ.வெ. ராமசாமி மஞ்சுமளாபாய்வைசு.<br /><br />1964ஆம் ஆண்டில் மன்னார்குடி வட்டம் எடமேலையூர் பெரியார் பெருந்தொண்டர் சாம்பசிவம் அவர்களின் மகள் பானுமதி - சகோதரி யின் மகன் சவுந்தரராச னுக்கும் வாழ்க்கைத் துணை நல ஒப்பந்த விழா தந்தை பெரியார் தலை மையில் நடைபெற்றது.<br /><br />அந்த விழாவிலும் மணமகள் மணமகனுக் குத் தாலி கட்டினார். செய்யாறையடுத்த வாழ்குடை என்ற ஊரில், வி.எஸ். கிருஷ்ணசாமி என்பவருக்கு (கான்ஸ்ட புள்) திருமணம் தந்தை பெரியார் தலைமையில் நடைபெற்றது. மணமகன் தாலியும் கட்டி விட்டார்; தாலி பெண் அடிமை என்பதற்கு அடையாளம் என்று தந்தை பெரியார் பேசினார்; தன் கழுத்தில் கட்டப்பட்ட தாலியை திடீரென்று மணமகள் கழற்றி மேசையின்மீது போட்டாரே பார்க்கலாம்.<br /><br />உலகில் நடக்கும் எந்த கலாச்சாரப் புரட்சிக் கும் மேலானது - தந்தை பெரியார் தம் கருஞ் சட்டைக்காரர்களின் அன்றாடப் புரட்சிகள்!<br /><br />- மயிலாடன்<br /><br />Read more: http://viduthalai.in/e-paper/75035.html#ixzz2sy9Sz0a2<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-18012165969248023042014-02-10T04:21:45.149+05:302014-02-10T04:21:45.149+05:30
சிதம்பரம் நடராஜர் கோவிலில் பால்ய விவாகம் - சூதாட்...<br />சிதம்பரம் நடராஜர் கோவிலில் பால்ய விவாகம் - சூதாட்டம்!<br /><br /><br />தமிழ்நாடு அரசு விழிக்குமா? செயல்படுமா?<br />சிதம்பரம் நடராஜர் கோவிலில் பால்ய விவாகம் - சூதாட்டம்!<br />முன்னாள் எம்.பி. வி.வி.சுவாமிநாதன் கேள்வி<br /><br />சிதம்பரம், பிப்.9- சிதம் பரம் நடராஜர் கோவிலில் நடக்கும் சட்டமீறல்கள், ஒழுக்கக்கேடுகள்பற்றி முன்னாள் மாநில அமைச் சரும், நாடாளுமன்ற முன் னாள் உறுப்பினருமான வி.வி.சுவாமிநாதன் முதல மைச்சருக்குத் தகவல் அனுப்பினார்.<br />6.1.2014 அன்று உச்சநீதி மன்றம் எந்தவித நிபந் தனையுமின்றி, தமிழ்நாடு அரசு அறநிலையத் துறை மதச்சார்பற்ற நிர்வாகத் தின்கீழ் 2.2.2009-லிருந்து இருந்து வந்ததை, தில்லை தீட்சதர்களிடம் ஒப்படைத் ததின் விளைவு, தீட்சதர்கள் சட்டத்தையும், அவர்கள் கடைப்பிடித்த பழைய மரபு களையும் மீறி பக்தர்களை, வழிபடுவோர்களை ஆத் திரம் மூட்டும்படி நடப்ப தாகும்.<br /><br />எடுத்துக்காட்டாக இந் தியக் குடியரசுத் தலைவர், பிரதமர், மாநில முதல்வர் கார்கள்கூட நுழைய அனு மதிக்காத நடராசர் கோவி லுக்குள், கொலைக்குற்றம், பாலியல் வன்முறைக் குற் றங்கள் சாட்டப்பட்டு, விடு தலையான காஞ்சி சங்கராச் சாரியாரின் காரை கோவிலுக் குள் அனுமதித்ததைக் கண் டித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் சுவரொட்டிகள் ஒட்டப் பட்டிருந்தன. அதுமாத்திர மல்ல,<br />குழந்தைத் திருமணம் இந்தியா முழுவதும் தடை செய்யப்பட்டது தெரிந் தும், நிர்வாகம் தங்கள் கையில் இருக்கிறது; கோவி லின் நான்கு கோபுர வாசல் கதவுகளின் பூட்டு சாவிகள் தங்கள் கைகளில் இருப்ப தால், 18 இளம் ஆணுக்கும், பெண்ணுக்கும், பூட்டப் பட்ட கோவிலுக்குள் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் 10.2.2014 அன்று அதிகாலை 4 மணிமுதல் 5 மணிக்குள் திருமணங்கள் நடத்த ஏற் பாடாகி இருக்கிறது.<br /><br />எனக்கு நம்பகமான தகவல் கிடைத்தவுடன், 3.2.2014 அன்று மதியமே தமிழ்நாடு முதலமைச்சருக் கும், அன்றே விழுப்புரம் டி.அய்.ஜி.க்கும் தந்தி மூல மும், கடிதம்மூலமும் தக வல் கொடுத்திருக்கிறேன்.<br /><br />7.2.2014 உள்ளூர் சிதம் பரம் துணை ஆட்சியரிட மும் 18 குழந்தைத் திரு மணங்களைத் தடுப்பது டன், நடத்துபவர்கள்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கக் கடிதம் எழுதியிருக் கிறேன். கோவிலுக்குள் வரு கிற பக்தர்களுக்குப் பாது காக்கப்பட்ட குடிநீர் வழங் கப்படவில்லை; வழிபட வருகிறவர்களுக்கு அவசரத் திற்கு சிறுநீர் கழிக்கக்கூட கழிப்பறை இல்லை.<br /><br />பழையபடி கோவிலுக் குள் இரவில் சீட்டாட்ட மும், மது அருந்துதலும் தொடர்வதாகத் தகவல்.<br /><br />நடராசர் கோவில் பொதுக் கோவில் என்பதால், அதற் குள் குழந்தைத் திருமணம் போன்ற குற்றங்கள் நடப்ப தைத் தடுக்க அரசு நட வடிக்கை எடுக்க காவல் துறைக்கு உத்தரவிடவேண் டும். மனித உரிமை ஆர்வ லர்கள் குழந்தைத் திரு மணங்களைத் தடுக்க முயன் றால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும்.<br /><br />தமிழக அரசு குழந்தைத் திருமணங்களைத் தடுக்க, திருமண ஏற்பாடுகளை செய்தவர்கள்மீது தக்க நடவடிக்கை எடுக்குமா? என்று முன்னாள் மாநில அமைச்சரும், நாடாளு மன்ற உறுப்பினருமான வி.வி.சுவாமிநாதன், தமிழ் நாடு அரசுக்கு வேண்டு கோள் விடுத்துள்ளார்.<br /><br /><br />முதலமைச்சருக்கு அனுப்பப்பட்ட தந்தி (3.2.2014)<br /><br />Hon., J.Jayalalitha Amma<br />Chief Minister<br />Government of Tamil Nadu<br />Secretariat, Chennai-9<br />Request to prevent 28 Children both bride and bridegroom Marriages between 4 am to 5 am on 10.2.2014 in Ayirankkal Mandapam by Thillai Deekshadars inside Lord Natarajar Koil in Chidambaram Town Cuddalore District Proposed to be conducted by Printed invitations.<br /><br />- V.V.Swaminathan, Ex. M.P.,<br />Former HRCEA Minister, Chidambaram<br /><br />Read more: http://viduthalai.in/page-8/74957.html#ixzz2srsx1KmT<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-77519724927928198252014-02-10T04:21:07.186+05:302014-02-10T04:21:07.186+05:30
பிஸ்கெட் சாப்பிடுவது உடல் நலத்துக்கு கேடு
சென்ன...<br />பிஸ்கெட் சாப்பிடுவது உடல் நலத்துக்கு கேடு<br /><br /><br />சென்னை, பிப். 9-குழந் தைகள் சாப்பிடும் முக்கிய உணவு வகைகளில் பாலுக்கு அடுத்தபடியாக பிஸ்கெட் முக்கிய இடத்தை பிடிக் கிறது. மேலும் பெரியவர் களும் சாப்பாட்டுக்கு மாற்று உணவாக பிஸ்கெட்டுகளை அதிகம் விரும்பி சாப்பிடு கின்றனர். பிஸ்கெட் சாப் பிட்டால் உடல் நலத்துக்கு நல்லது. குழந்தைகள் உயர மாக வளருவார்கள் என விளம்பரப்படுத்தப்படுகிறது.<br /><br />அது உண்மை இல்லை. பிஸ்கெட்டில் உடல் நலத் துக்கான கேடுகள் மறைந்து இருப்பதாக புதிய ஆய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன.<br /><br />கான்சர்ட் என்ற நிறுவனம் சமீபத்தில் 34 பிரபல நிறு வனங்களின் பிஸ்கெட்டு கள் மற்றும் 25 நிறுவனங் கள் தயாரிக்கும் ஊறுகாய் போன்றவற்றை சேகரித்து ஆய்வு நடத்தியது. அவற் றில் உணவு பாதுகாப்பு மற் றும் தர நிர்ணய அமைப் பின் விதிகளின்படி பிஸ் கெட்டுகள் தயாரிக்கப்பட் டுள்ளதா? இந்திய தர நிர் ணய அமைப்பு தெரிவித் துள்ள கொழுப்பு, புரோட் டீன், சர்க்கரை மற்றும் அமில அளவு சரியான அளவில் உள்ளதா? என ஆய்வு நடத்தப்பட்டது.<br /><br />தமிழ்நாடு, ஆந்திரபிர தேசம், கேரளா, கருநாடகம் மற்றும் புதுச்சேரி மாநிலங் களில் கடந்த ஏழு மாதங் களாக பிஸ்கெட்டுகள் பரி சோதனை செய்யப்பட்டன.<br /><br />இந்த ஆய்வு குறித்து கான்சர்ட் நிறுவனத்தின் இயக்குநர் சந்தனராஜன் கூறியதாவது:<br /><br />ரசாயன கலவைகள்<br /><br />கிழங்குமாவு, கிரீம், உப்பு, பால் மற்றும் பேக் கரியில் இருந்து தயாரிக்கப் படும் பிஸ்கெட்டுகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. இவற்றில் பெரும்பாலான அளவு சர்க்கரை உள்ளது. மேலும் அவை பல மாதங் கள் கெட்டுப் போகாமல் இருக்க உடலுக்கு தீமை விளைவிக்கும் ரசாயன கலவைகள் அதிகம் சேர்க் கப்பட்டுள்ளன.<br />ஆனால் பேக்கரிகளில் தயாரிக்கப்படும் பிஸ்கெட் டுகளில் ரசாயனக் கலவை குறைவாக உள்ளது. எனவே, பிஸ்கெட்டுகள் சாப்பிடுவ தன் மூலம் உடலில் சக்தி, தெம்பு ஏற்படலாம்.<br /><br />கவர்ச்சியான விளம்பரங்கள்<br /><br />மாறாக உடலில் சத்து கள் உருவாகாது. பெரும்பா லான பிஸ்கெட்டுகளில் நார்ச்சத்து, தேன், கால்சியம் போன்றவை இல்லை. ஆனால், பிஸ்கெட் உண வுக்கு மாற்றானது. சுறுசுறுப்பு கொடுக்க கூடியது. பால், தேன் கலந்துள்ளது. சர்க் கரை நோயாளிகள் சாப்பிட லாம் என நிறுவனங்கள் கவர்ச்சிகரமான விளம் பரங்களைச் செய்கின்றன.<br /><br />இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிடுகின்றனர். புகை யிலைப் பொருட்களை பயன் படுத்துவதால் மட்டும் புற்று நோய் வராது. நாம் சாப்பிடும் உணவு பொருட் களாலும் 30 விழுக்காடு புற்று நோய் வர வாய்ப் புள்ளது என்றார். எலுமிச்சை, மாங்காய், காய்கறி கலவை மற்றும் மீன் ஊறுகாய் வகைகள் பரிசோதனை செய்யப்பட்டன. பெரும் பாலான ஊறுகாய்களில் சோடியம் அதிக அளவில் உள்ளது. பென்ஷோயிக் அமிலமும் அதிக அளவில் சேர்க்கப்பட்டுள்ளது.<br /><br />நீரிழிவு, ரத்த அழுத்தம்<br /><br />இனிப்பு வகை ஊறு காய்களில் அதிக அளவில் சர்க்கரை உள்ளது. இது நுகர்வோருக்கு இருதய நோய்களையும், நீரிழிவை யும் ஏற்படுத்தும். அதிக உப்பு சத்து சேர்ப்பதால் ரத்த அழுத்தம் அதிகரிக் கும். இந்தத் தகவலை இந் திய நுகர்வோர் சங்க தலை வர் ராஜன் தெரிவித்துள்ளார்.<br /><br />Read more: http://viduthalai.in/page-5/74949.html#ixzz2srslzQSz<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-16765642274816179342014-02-10T04:21:00.925+05:302014-02-10T04:21:00.925+05:30
செருப்பினை செய்திடவும் தெரியும் பயன்படுத்தவும் தெ...<br />செருப்பினை செய்திடவும் தெரியும் பயன்படுத்தவும் தெரியும்<br /><br /><br />- குடந்தையான்<br /><br />1970-ல் சேலம் மாநாட்டு ஊர்வலத்தில் இரா மனை பெரியார் செருப்பால் அடித்தாராம். அதற்காக புரட்சியாளர் பெரியாரை அப்போதே தாக்கியிருக்க வேண்டும் என, பார்ப்பனன் ஹெச்.ராஜா அண்மை யில் பேசியதற்கு, பலரும் கோபப்படுகிறார்கள்; சிலர் கூட்டம் போட்டு கண்டனம் செய்துள்ளார்கள். நியாயம் தானே;<br /><br />சாதாரண வார்டு உறுப்பினர் மீது அவதூறு பேசினாலே, அந்த பக்கத்தில் பேருந்து ஓட முடியாத நிலை ஏற்படும் காலத்தில், இரண்டாயிரம் ஆண்டு அடிமைத்தனத்தை புரட்டிப்போட்ட பெரியாரை அவமதிக்க நினைத்தால், கோபப்படாமல் இருந்தால் தான் ஆச்சரியம்.<br /><br />ஆனால், பார்ப்பனன் ஹெச்.ராஜாவுக்கு, அவரது தலைவன் மோடியைப் போல வரலாறு தெரியாது.<br /><br />காந்தியாரை, ஹெச்.ராஜாவின் ஜாதிக்காரன் சுட்டுக் கொன்ற நிலையில், நாடெங்கும் பதற்றமும், சில இடங்களில் பார்ப்பனர்களைத் தாக்கும் வன் முறையும் ஏற்பட்ட நிலையில், தமிழ் நாட்டில் எந்தக் கலவரமும் ஏற்படக்கூடாது என்ற நோக் கத்தில், அன்றைய அரசு, யாரை அழைத்தது தெரி யுமா? ஹெச்.ராஜாவின் பாட்டன் இராசகோபாலாச் சாரியை அழைக்கவில்லை; ஹெச்.ராஜாவின் (உ)லோக குரு சீனியர் சங்கராச்சாரியை அழைக்க வில்லை;<br /><br />மனித நேயர் பெரியாரைத் தான் வானொலி மூலம் அமைதிப் படுத்திட அழைத்தார்கள். அன்றைக்கு பெரியார், காந்தியாரைக் கொன்றவன் கோட்சே என்ற பார்ப் பனன் தான் என்று சொல் லியிருந்தால், இன்றைக்கு ஹெச்.ராஜாவின் சமுதாயமே தமிழ் நாட்டில் இருந்திருக்காது.<br /><br />கடலூரில் பொதுக்கூட்டம் முடிந்து வரும் வழியில், பெரியார் மீது செருப்பு ஒன்று வீசினான் ஹெச்.ராஜாவை ஒத்த ஒருவன். ஆனால் பெரியார் மிரண்டு விட வில்லை; மாறாக, இன்னொரு செருப்பு வீசினால், பயன்படுமே என்று வண்டியை அந்த பக்கமே திருப்பச் சொன்னவர் பெரியார். இன்று அந்த இடத்தில் பெரியாரின் சிலை கம்பீரமாக நிற்கிறது இந்த செய்திகளுடன். செருப்பு ஒன்று விழுந்தால், சிலை ஒன்று முளைக்கும் என்றான் ஒரு கவிஞன்.<br /><br />ஹெச்.ராஜாவின் ஜாதிக்காரன், இப்போது பிஜேபியில் சேர்ந்துள்ள சுப்ரமணியன் சாமி, (உ)லோக குரு சீனியர் சங்கராச்சாரியை சந்தித்து, தான் பொது வாழ்வில் செல்வதற்கு ஆசி வழங்கிட கோரினார். அப்போது, சீனியர் சங்கராச்சாரி என்ன சொன்னார் தெரியுமா? என்றார். காரணம் கேட்ட போது, சீனியர் சொன்னார், மக்களை அன்றாடம் சந்தித்து வந்தவர் பெரியார்; அதன் காரணமாக, அவர் களிடத்தில் அறிமுகமும், அவர்களின் பிரச்சினை களை அறிந்து கொள்ளவும் முடியும் என்றார்.<br /><br />பெரியாரின் ஈடுபாட்டால் வைக்கம் போராட்டம் தீவிரம் அடைந்ததால், அங்கே உள்ள பார்ப்பனர்கள், சத்ரு சங்கார யாகம் நடத்தினர். அவ்வாறு செய்தால், அவர்களால் எதிரியாகக் கருதப்படும் பெரியார் இறந்து விடுவார் என்ற எண்ணம். ஆனால் நடந்தது என்ன தெரியுமா? திருவாங்கூர் சமஸ்தானத்தின் ராஜாதான் இறந்து போனார். ஓர் சமஸ்தானத்தின் ராஜாவுக்கே இந்த கதி என்றால், வெறும் பெயரில் மட்டும் ராஜாவாக உள்ள ஹெச்.ராஜா கொஞ்சம் கவனமாக இருப்பது நல்லது.<br /><br />பெரியாரின் அறிவுரையை ஏற்று, பெயருக்குப் பின்னால் இருந்த ஜாதிப் பெயரை, மெத்த படித்த பண்டிதர் முதல், சாமான்ய மக்கள் வரை நீக்கிய மண் இந்த தமிழ் மண்.<br /><br />பெரியாரின் கட்டளையை ஏற்று, இந்திய அரசியல் சட்டம், ஜாதியை பாதுகாக்கிறது; அதற்கான பிரிவுகளை நீக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, அரசியல் சட்டத்தை கொளுத்தி, அதன் காரணமாக, மூன்றாண்டுகள் வரை கடும் தண்டனையை பெற்ற பெரியார் தொண்டர்கள் வாழும் நாடு இந்த தமிழ் நாடு. ஹெச்.ராஜாவுக்கு, செருப்பினை காலில் மாட்ட மட்டும் தான் தெரியும். ஆனால், திராவிடர் சமுதாயத் திற்கு, செருப்பினை செய்திடவும் தெரியும்; அதற் கான ஆயுதமும் கையில் இருக்கிறது.<br /><br />Read more: http://viduthalai.in/page-2/74973.html#ixzz2srrVMDIx<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-76640765993015176922014-02-10T04:13:40.972+05:302014-02-10T04:13:40.972+05:30
தீட்சதர் வால்
சாதாரணமாகவே குரங்கு அது கள்ளுக் ...<br />தீட்சதர் வால்<br /><br /><br />சாதாரணமாகவே குரங்கு அது கள்ளுக் குடித்த போது தேளும் கொட்டி னால் என்னாகும்? என்று தந்தை பெரியார் கூறுவதுண்டு.<br /><br />இது சிதம்பரம் தீட்சதர் களுக்கு நூற்றுக்கு நூறு பொருந்தும். சிதம்பரம் நட ராஜர் கோயில் தீட்சதர் களின் சிண்டுக்குள் சிக்கி விட்டது என்றவுடன் பூணூல் விரைக்கத் தானே செய்யும்?<br /><br />சிதம்பரம் நடராஜர் கோயிலில் சிற்சபை அரு கில் ஓதுவார் ஆறுமுகசாமி தேவாரம், திருவாசகம் பாடச் சென்றபோது கோயில் தீட்சதர்கள் தடுப்பு வேலையில் இறங்கியுள்ள னர். ஆறுமுகசாமி வழக் கமாக உட்கார்ந்து தேவா ரம், திருவாசகம் பாடும் இடத்தில் எண்ணெயை ஊற்றி அவரை அமர விடாமல் தடுத்துள்ளனர்.<br /><br />இதுகுறித்து ஆறுமுக சாமி காவல்துறையில் புகார் செய்துள்ளார். சிதம்பரம் கோயில், தீட்சதர் கையிலி ருந்து இந்து அறநிலையத் துறைக்குச் சென்ற நிலை யில், கோயிலுக்குள் உண்டி யல் வைக்கப்பட்டு இருந் தது. அப்பொழுது இந்தத் தீட்சதப் பார்ப்பனர்கள் என்ன செய்தார்கள் தெரி யுமா? உண்டியலுக்குள் நெய்யை ஊற்றினார்கள்.<br /><br />ஏன் தெரியுமா? ரூபாய் நோட்டுகள் ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொண்டு நாசமாகப் போய் விட வேண்டும் என்ற பரந்த மனப்பான்மைதான்; தனக் குப் பயன்படாத ஒன்று நாச மாகப் போய்விட வேண் டும் என்பதுதானே பார்ப் பனப் புத்தி!<br /><br />Read more: http://viduthalai.in/e-paper/74963.html#ixzz2srquW5hk<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-29181105896893413652014-02-10T04:13:03.947+05:302014-02-10T04:13:03.947+05:30
காந்தியைக் கொன்ற ஆர்.எஸ்.எஸ். கொள்கையைப் பின்பற்ற...<br />காந்தியைக் கொன்ற ஆர்.எஸ்.எஸ். கொள்கையைப் பின்பற்றுபவர்தான் மோடி! ராகுல் காந்தி தாக்கு!<br /><br />பர்டோலி, பிப்.9- காந்தியின் படுகொலைக்கு பின்னணியில் ஆர்.எஸ். எஸ்.இன் கொள்கைதான் உள்ளது. அதைதான் மோடி யும் பிரதிபலித்து கொண்டி ருக்கிறார் என மோடியை ராகுல்காந்தி தாக்கி பேசி னார். குஜராத் மாநிலம் பர் டோலியில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி நேற்று (8.2.2014) தேர்தல் பிரசாரம் செய்தார்.<br /><br />இதை முன்னிட்டு ஹசாரி பக் என்ற இடத்தில் பேர ணியும் நடந்தது. அதில், இதற்கு முன்பு எப்போதும் இல்லாத வகையில் மிகப் பெரிய அளவில் மக்கள் கலந்து கொண்டனர். பின் னர் நடந்த கூட்டத்தில் பேசிய ராகுல், இம்மாநில முதல்வரும் பாஜ.வின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடியை நேரடி யாக தாக்கி பேசினார். அவ ருடைய பேச்சு விவரம் வருமாறு:<br /><br />சர்தார் வல்லபாய் படே லின் சிலையை அமைப்ப தாக இங்குள்ள தலைவர் கூறி வருகிறார். ஆனால், படேலின் வரலாற்றை அவர் சரியாக படிக்கவில்லை. அவருடைய கொள்கைகள் பற்றி சரியாக தெரியவில்லை.<br /><br />ஆனால், அவருக்கு சிலை அமைப்பதாக மட்டும் கூறி கொள்கின்றனர். ஆர்எஸ்எஸ் ஒரு விஷ அமைப்பு என்று படேல் கூறினார். மகாத்மா காந் தியின் படுகொலைக்கு பின் னணியில் ஆர்எஸ்எஸ்.இன் கொள்கைதான் உள்ளது. அதைதான் மோடியும் பிர திபலித்து கொண்டிருக் கிறார். உண்மையில்லை என்று தெரிந்தாலும் கூட, தனது மனதில் தோன்றுவதை எல்லாம் அவர் பேசுகிறார்.<br /><br />நாடு முழுவதும் தகவல் அறியும் உரிமை சட்டத்தை காங்கிரஸ் அரசு கொண்டு வந்தது. ஆனால், ஊழ லுக்கு எதிராக போராடுவ தாக கூறிக் கொள்ளும்படி மோடி, குஜராத் மாநிலத் தில் லோக் அயுக்தா அமைப்பை உருவாக்குவதற்கான தீர்மா னத்தை 9 ஆண்டுகள் நிறை வேற்றாமல் இருந்தார். தகவல் அறியும் உரிமை சட்டத்தின்படி, ஒவ்வொரு மாநிலத்திலும் 10 தகவல் ஆணையர்கள் இருக்க வேண்டும்.<br /><br />ஆனால், குஜ ராத்தில் ஒரே ஒரு தகவல் ஆணையர்தான் இருக் கிறார். அதுவும், நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகுதான் இவரும் நியமிக்கப்பட் டார். ஊழலை ஒழிப்பதில் பாஜ.வுக்கு உண்மையிலேயே அக்கறை இருந்தால், அது சம்பந்தப்பட்ட 6 மசோ தாக்களை நாடாளுமன்றத் தில் நிறைவேற்ற காங்கிர சுக்கு ஏன் உதவக் கூடாது? விவசாயிகளின் நலனுக்காக பாடுபடும் ஒரே கட்சி காங்கிரஸ்தான். குஜராத்தில் 13 ஆயிரம் அரசுப் பள்ளி கள் மூடப்பட்டு கிடக்கின்றன. ஏழை மக்களையும், ஆதிவாசிகளையும் புறக் கணித்து விட்டு, மாநிலம் வளர்ச்சி பெறுவதில் எந்த பலனும் இல்லை.<br /><br />மக்களின் கையில் அதிகாரத்தை வழங்கவே காங்கிரஸ் விரும்புகிறது. வறுமையை ஒழிப்பது பற்றி காங்கிரஸ் பேசுகிறது. பாஜ.வோ ஏழைகளை ஒழிப்பது பற்றி பேசுகிறது. நாடு முழுவதும் மக்கள் ஏதாவது ஒரு வேலையை செய்து கொண்டு இருக் கின்றனர். சிலர் டீ விற்கின் றனர். சிலர் டாக்சி ஓட்டு கின்றனர். சிலர் விவசாயம் செய்கின்றனர்.<br /><br />யார் எந்த தொழில் செய்தாலும் அதை மதிக்க வேண்டும். ஆனால், ஒரு மனிதர் நம்மை எல் லாம் முட்டாளாக்கி கொண் டிருக்கிறார். அது போன்ற வர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டிய அவ சியமில்லை. இவ்வாறு ராகுல் பேசினார்.<br /><br />Read more: http://viduthalai.in/e-paper/74968.html#ixzz2srqlNoyk<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-23571290122374265402014-02-10T04:12:27.489+05:302014-02-10T04:12:27.489+05:30
வா(வீ)ழ்க சோஷலிசம்!
இந்தியாவில் கார்ப்ப ரேட் நி...<br />வா(வீ)ழ்க சோஷலிசம்!<br /><br /><br />இந்தியாவில் கார்ப்ப ரேட் நிறுவனங்கள் வைத் துள்ள வரி பாக்கி ரூ.2.46 லட்சம் கோடி இதில் 45 நிறுவனங்கள் ரூ.500 கோடிக்கு மேல் வரி பாக்கி வைத்துள்ளன என்று நிதித்துறை இணை அமைச்சர் ஜே.டி. சீலம் மக்களவையில் தெரிவித் துள்ளார் (6.2.2014).<br /><br />இந்தியாவில் நாள் வருமானம் 20 ரூபாய் என்ற நிலையில் உள்ள வர்கள் 70 சதவீதம் என்று சென்குப்தா அறிக்கை கூறுகிறது. உலகில் 120 கோடி மக்கள் வறுமை யின் வன்பிடியில் சிக்கி விழிபிதுங்குகிறார்கள் என்றால் அதில் மூன்றில் ஒரு பகுதி (40 கோடி) மக்கள் பாரத புண்ணிய பூமியாம் இந்தியாவில் இருக்கிறார்கள். இந்தச் சூழலில் பெரும் பணத் திமிங்கலங்கள் இலாபம் கொழிக்கும் எஜமானர்கள், அரசுக்குச் செலுத்த வேண்டிய வரி யைச் செலுத்தவில்லை என்றால் இதற்குக் கார ணம் என்ன?<br /><br />பண முதலைகள், ஏமாற்றுக்காரர்கள் என் பது ஒருபுறம் இருக்கட் டும்; அந்த முதலைகளை அடக்க ஒரு அங்குசம் இந்திய அரசிடம் இல்லை என்பது பரிதாபமே!<br /><br />கேதன் தேசாய் என்ற பார்ப்பனர் இந்திய மருத் துவக் கவுன்சிலின் தலை வராக இருந்தார். வரு மான வரித்துறையினர் அவர் வீட்டில் புகுந்து சோதனை நடத்திய போது 1500 கிலோ தங்கக் கட்டிகளையும், ரூ.1800 கோடி ரொக்கத்தையும் கைப்பற்றினார்களே - அதற்குப் பிறகு ஒரே ஒரு வரி செய்தி வெளியில் கசிந்ததுண்டா?<br /><br />சுவிஸ் வங்கியில் மட் டும் முடங்கிக் கிடக்கும், இந்தியர்களின் பணம் ரூ.80 லட்சம் கோடி; இதனை இலகுவாகச் சொல்ல வேண்டுமானால் இந்தியாவுக்கு வெளிநாடு களில் இருக்கும் கடன் தொகையைவிட 13 மடங்கு அதிகம் - இதன் மதிப்பு. இந்தத் தொகையைப் பறிமுதல் செய்தால் ஒவ் வொரு இந்தியக் குடி மகனுக்கும் ரூ.50 ஆயி ரம் இலவசமாக சுண்டல் போலக் கொடுக்கலாமாம்.<br /><br />பிஜேபி. ஆனாலும் சரி, காங்கிரசானாலும் சரி, சுவிஸ் வங்கியில் உள்ள இந்தியர்களின் பணத் தைக் கொண்டு வந்தே தீருவோம் என்று முண்டாதட்டினார்களே தவிர சல்லிக்காசுகூட வந்து சேரவில்லை.<br /><br />பணத் திமிங்கலங் களை மேலும் வளர்ப்பது தான் இந்திய அரசின் கொள்கை போலும்! சொகுசு கார் வாங்க நினைத்தால் அதற்கு இந் திய வங்கிகளில் வட்டி 7 சதவீதம், குளிர்ப்பதனக் கிடங்கு கட்டுவதற்கு முகேஷ் அம்பானிக்கு அளிக்கப்பட்ட கடனுக்கு வட்டி வெறும் 4 சதவீதம்.<br /><br />அதே நேரத்தில் ஓர் விவசாயி ஒரு டிராக்டர் வாங்க வேண்டுமானால் வங்கி விதிக்கும் வட் டியோ 14 சதவீதம்.<br /><br />ஹரிபீ கட்டாவோ! (வறுமையே வெளியேறு!) - மயிலாடன்<br /><br />Read more: http://viduthalai.in/e-paper/74962.html#ixzz2srqbBCwS<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-79978978133313341172014-02-09T07:48:31.151+05:302014-02-09T07:48:31.151+05:30
தெரிநது கொளளுஙகள
தமழனை அசுரன, அரககன, ராடசசன, தஸய...<br />தெரிநது கொளளுஙகள<br /><br />தமழனை அசுரன, அரககன, ராடசசன, தஸயு, குரஙகு, கரடி எனறும தேவடியாள மககள எனறும எழுத வைததுளளான, ராமாயணம, மகாபாரதம மறறும பல கதை களலும கதாபாததரஙகளை சனமாவலும காடடி வருகனறான. அதை பாததும படிததும ரசககனறோம.<br /><br />இநதக காடடுமராணடிப புராணஙகளை படிதது அதலுளள கயவாளததனஙகளை அபபோதே பொயா, அணணா, கலைஞா போனற அறஞாகளும மலவு வலை புததகஙகளல எழுதயும சல நாடக சனமாவலும சுடடிககாடடி உளளனா.<br /><br />காணாத கடவுளகளுககு மனைவகள, கூததகள, குடடிகள இருபபதையும அறகறோம. மனதனுககுத தேவையான எநத அறவயல பொருடகளை எநத கடவுளாவது கொடுததது உணடா? சடடி பானை முதல மனசாரப பொருடகளும கணன, ஆகாயததையும, பூமயையும அதல உளள அனைததையும கணடபடிததது மனதன தானே? ஆணும பெணணும கலவ செயயாமலே குழநதையைப பறகக செயததும மனதனதானே?<br /><br />சவனுககும பாவதககும நடநத தருமணததலே புரோகதம செயத பரமமா பாவதயன தொடையை பாததுப பீசசியடிதத வநதல ஷகள, மருகஙகளும பிறநதுளளன. ஆனால முருகககடவுளுககு ஒனறுககு இரணடு மனைவகள இருநதும குழநதைகள இலலாதது ஏன? இதை எழுதயவன மனதன தான. கடவுளன லீலைகள இவனுககு எபபடி தொயும? இதல இருநதே கடவுள எனபது கடடுககதையே எனபது தொகறதே.<br /><br />கடவுளாகக காடடபபடுபவாகள அரசா களே. அவாகள தான ஒனறுககு மேறபடட மனைவகள கூததகள வைததருநததை பனனா வநத மனதாகள அவாகளுககு ஏற றபடி புராணக கதைகளைககடடி வேதங் களாக ஆகக வைததனா.<br />கடவுளகளதான ஜாதயை உண டாககயதாக சொலலுகனறனா. அபபடி இழவான மககளை படைதத கடவுள தேவையா? பேருநதுகளல, நாடகஙகளல டிககட வாஙகனாலும உடகார அனுமதககாத காலம உணடு. உணவு விடுதயல உடகாநது சாபபிட முடியாது. பளளககூடம படிககச செனறாலும தனமை. வீதயல செனறாலும தடை.மனுதாமததன படிதான அனைதது ஜாதயனரும அசசகாகளாக ஆக முடியவலலை எனபது தொயுமா? இதை எலலாம போராடிப பெறறு எலலோரும மனதாகளதான எனகற நலையை உணடாககயவாகளதான அமபேதகா, பொயா, அணணா, கலைஞா இவாகளுககு முனனோடிகளாக இருநத (1916) பிடடி தயாகராயா, டாகடா நடேசனா, டி.எம.நாயா, பனகல அரசா, பனனீசெலவம, இரடடை மலை சீனவாசன, அயோதததாசா போனற நீதககடசத தலைவாகளைபபறற அற வீகளா? இரணடு லடசம ஆணடுகளுககு முனனா ஆபபகக கணடததலதான முதல பெண பறநததாகவும, ஆபபிககாவிலதான முதல மனிதன பிறநதான எனறும அறயப படுவதால இநத ஜாத எஙகே பிறநதது?<br /><br />எலலா தலைவாகளும நகரஙகளல சுறற இதுபோனற கருததுககளைச சொலலவடடுப போகனறாகள. ஆனால குடடித தலை வாகள தலைவாகளன கருததைக கராமங களல பரபப முனவருவதலலை. இன அதை செயலபடுதத தலைவாகள அறவுரைகள வழஙகுவாகளா?<br /><br />- வணஙகாமுடி<br /><br />Read more: http://viduthalai.in/page6/74933.html#ixzz2smsWZ1Xo<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-8078227349772757682014-02-09T07:47:50.700+05:302014-02-09T07:47:50.700+05:30
மாமேதை ரஸ்ஸல் மணிமொழிகள்!
நான் யார்?
நான் முரண்...<br />மாமேதை ரஸ்ஸல் மணிமொழிகள்!<br /><br />நான் யார்?<br /><br />நான் முரண்பாடு களின் சின்னமாக விளங்கி வருவதாகப் பலர் மதிப்பிடுகிறார்கள். இது ஓரளவு உண்மை தான். என்னை நானே, பல்வேறு சந்தர்ப்பங் களில் ஒரு மிதவாதி யாகவும் சோஷலிஸ் டாகவும் சமாதானவாதி யாகவும் கருதியிருக்கிறேன். என்றாலும், இவை அனைத்துக்கும் மேலாக நான் ஒரு தனி மனித வாதி என்பதையே நான் கூற விரும்புகிறேன்.<br /><br />பெண்களின் கற்பு<br /><br />பெண்களின் உரிமைகள் அவர்களது ஒழுக்கம், அல்லது ஆண்களைவிட அவர்கள் மேலான வர்கள் என்பதைச் சார்ந்திருக்கவில்லை. அவர்கள் மனித இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதின் பேரில் உள்ளது. ஆனால், அடக்கி வைக்கப்பட்டிருக்கும் இனம் தனது உரிமைகளைக் கோரும் போது பெண்களுக்கு சில தனிப்பட்ட தன்மைகள் உண்டு என்றும், இவை ஒழுக்கம் சம்பந்தப்பட்டவை என்றும் சிலர் வாதாடுகிறார்கள்.<br /><br />முன்காலத்தில் பெண்களின் கற்பு என்பது நரகத்துக்குப்போக நேரிடும் என்ற பயம், கர்ப்பம் ஏற்பட்டு விடும் என்ற பயம் ஆகியவற்றை கருதியே இருந்தது.<br /><br />ஆனால் பழமைவாதம் அழிந்துவிட்டதாலும், கருத்தடை சாதனங்கள் கண்டுபிடிக்கப்பட்டு விட்டதாலும் இந்த பயம் நீங்கி விட்டது. தற்போதைய பெண்கள் ஆண்களுக்கு என்ன உரிமைகளோ அவை தங்களுக்கும் வேண்டும் என்று கோருகிறார்கள்.<br /><br />பால் உணர்வும் கடை அடைப்பும்!<br /><br />ஞாயிற்றுக்கிழமை ஓய்வு நாள் என்ற மத சம்பிரதாயம் காரணமாக கடைகள் மூடப்பட்டு வந்தன. அதுஇப்போது பொருளாதார வாழ்க்கை முறையாகி விட்டது. இதைப் போலவே பால் உணர்வுக்கான பெரும்பாலான சட்டங்களும், சம்பிரதாயங்களும் இருந்துவருகின்றன.<br /><br />குழந்தை பிறக்கும் ரகசியம்<br /><br />ஆண் - பெண் உறவுபற்றிய பால் உணர்வு விவகாரங்களை குழந்தைகள் தெரிந்து கொள்ள விடாமல் மறைத்து வைப்பது சரியல்ல.<br /><br />பாப்பாக்களை பறவை கொண்டுவந்து போட்டது என்றோ, புதரிலிருந்து தோண்டி எடுத்தோம் என்றோ குழந்தைகளுக்கு சொல்லப் படுகிறது. ஆனால் உண்மைகளை மற்ற குழந் தைகளிடம் இருந்து அவை தெரிந்து கொள் கின்றன. இதை ரகசியம்போல் அவை கருதுகின் றன. அசிங்கமானது என்று நினைக்கின்றன.<br /><br />பெற்றோர்கள் தங்களிடம் பொய் சொல்லு வதாக ஒரு முடிவுக்கு குழந்தைகள் வந்துவிடு கின்றன. பெற்றோர்கள் ஒரு விவகாரத்தில் பொய் சொன்னால் அவை இன்னொரு பிரச்சினையில் பொய் சொல்கின்றன.<br /><br />பால் உணர்வு விவகாரங்களில் தாங்களும் பொய்சொல்ல வேண்டும் என்ற முடிவுக்கு அவை வந்துவிடுகின்றன.<br /><br />இதனால் குழந்தைகளின் ஒழுக்கம் சிதைந்து விடுகிறது.<br /><br />Read more: http://viduthalai.in/page5/74932.html#ixzz2smsLmrkA<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-35393475621137592582014-02-09T07:47:17.750+05:302014-02-09T07:47:17.750+05:30
சீதா பிராடடியின குளியல
- மு.வி.சோமசுந்தரம்
சயாம...<br />சீதா பிராடடியின குளியல<br /><br />- மு.வி.சோமசுந்தரம்<br /><br />சயாமாசாஸத சனனதத தெரு வல பாரதககதை உபனயாசம செயகறா.<br />சடகோப அயயஙகா வடககு மாட வதயல ராமா படடாபஷேக கதாகாலடசேபம செயகறா.<br /><br />அமபுஜம மாம, அகரகார அயநதாம தெருவல அசுவததாமன கதை கசசோ நகழததுகறா.<br /><br />இநத கூடடஙகளுககு வெததலைப பெடடியுடனும, சவல பொடடலஙகளுடனும, சஙகம மூககுபபொடி டபபயுடனும குவநது இருககும அககரகார அவாள கூடடததுககு வணடி வணடியாக அபதத கதைகளையும, மூடடை மூட டையாக பகவான தருவளையாடல களையும கொடடிக் குவததாலும, தலையை ஆடடி ஆடடி, பயபகத யுடன பகவான கதைகளைக கேடடு ஆதமசாநத அடைவாகள.<br /><br />இததகைய கூடடததனா, சந தனை, அறவயல, பகுததறவு பககம தலை வைததுபபடுககத தயாராக இருபபதலலை. ஜடஙகளாக ஜவதது வருபவாகள.<br /><br />கதா காலடசேபம, உபனயாசம செயபவாகளைப பறற அதக கவனம செலுததத தேவையலலை எனறா லும, சமுதாயததல பொறுபபான வகையல மககளை நலவழபபடுததும கடமை ஊடகஙகளுககு குறிப்பாக, முதன்மை நாளிதழ்களுக்கு இருகக வேணடும. மூடநமபககைத தனமை, அறவயலுககு அபபாறபட்ட தனமை கொணட நகழசசகள செயதயாக வநதால ஓரளவல தவறலலை. மாறாக, பகுததறவுககு ஒவவாத கதைகளை, நகைபபுககடம அளக் கும வகையல வலய எடுதது கடடு ரைகளாக வழஙகுவது இருடடுக் காடடுககுள சமூகததை அழைததுச செலவதறகு ஒபபாகும.<br /><br />அததகைய ஒரு வேடிககைச செயதக கடடுரை, அறவுககு வெடி குணடு வைககும கடடுரை 15-.11.-2013 அனறு இநது இணைபபு இதழல வநதுளளதைக காணபோம.<br /><br />தமழகததல, கடடடககலையன மேனமையைப் பறைசாறறும கடட டஙகள, சறபககலையன நுடபத தனமையை உணாததும சறபஙகள மகுநது காணபபடுவது பெருமை சோபபதாக உளளது. இவறறன சறபபுகள பகத, மதம அடிப படையல எழுபபபபடட கோயல களல குவநதுளளன எனபதும உணமையே. இஙகுளள கடடடம, சறபம பறற வயநது பேசுவதல குறறம ஏதுமலலை. ஆனால இதனை வைதது அறவைச் சூறையாடுவது தான சகததுககொளள முடியாத ஒனறு.<br /><br />காநாடகததல, மைசூ நகருககு 57 க.ம. அபபால, கருஷணராஜநகா தாலுககாவல கோதணடராமா கோயல ஒனறுளளது. இது காவ ஆறறன கரையல அமைநதுளளது, அருகல நவழசசகள உளளதும இநத இடததுககு இயறகை நலல சூழலை அமைததுளளது. இன இநத இடததை வைதது பகத முகமூடியல கூறபபடும புழுதத புழுகு வெடகப படுவதாக உளளது. (அதத சாஸ தரம, காடடியுளள வழமுறை இதுதான)<br /><br />இநத கோயல ராமனுககு அப பணககபபடட கோயல. நாடு கடத தபபடட ராமபரான இநத காடடுப பகுதககு வநதபோது ஓயவு முகா மடடா. அஙகருநத மலைவாழ மககளன வருநதோமபலல இருநது வநதா. உடன மனைவயும, தமபயும இருநதனா. இநத காடடில தான, ராமன அகநததர ஷயை சநதத தா. ஷககு ஒரு ஆவல வநதது. அதை ராமனடம கூறனா. சதை ராமனன வலது பககததல இருநது பாகக வேணடும எனறு ஆசையைக கூறனா. (இது எனன ஒரு ஆசையோ?) அதனபடி சதை வலது பககததல இருகக காடசயளததா. (இதல எனன சறபபை ஷ கண டாரோ?) அதுவே இநத கோயலன வசேஷம.<br /><br />இஙகு இரணடு குரஙகுகள (ஹனு மன) கோயலகள உளளன. ஒனறு கோயலன வாசலல, அடுத்தது கோயலுககு அடுதது காவக் கரையல. இஙகு சறபபாக ஒனறு கூற வேணடும எனறு கடடுரை ஆசயா எழுதுகறா. அதாவது, குரஙகு களன எணணககை அதகம. இவை ராமபகதரான ஹனுமான அவ தாரஙகளாகும எஙகும குரஙகு களாம. கோயலன உளளே புகுந தவை கர்ப்பகரகததனுள புகுநது, தடை ஏதுமலலாமல பரசாதங களை எடுததுச செலகனறன. (ராம பகதாகள தருடடு, ரௌடித தனம). இதை தடுகக எவருககும வழ தொய வலலை (ராமபரான, ஷககுக கூடவா?)<br /><br />சீதைககுப பயணக் களைபபால குளிகக வேணடும எனறு தோனறியது. உடனே இராமன, தமப லடசு மணனை நோகக, ஒரு அமபை எடுதது எதல உளள பாறையன மது எயயுமபடி கூறனான (ஏன அதை அவன செயயககூடாதா?). லடசுமணன அமபு பாறையல படடதும, பாறையலருநது மூனறு வகைத தணண வெளவநதது. ஒனறு மஞசள பொடி கலநதது. இரணடாவதல எணணெய் கலந தது. மூனறாவது சயககாய கலநதது. (எனனே அபததம, அபததம எனறு வாயல அடிததுககொளளாதகள. இநது இதழ இநத செயதயை வெளயடுகறது). சதை இநத தணணல குளதததால, இஙகுளள தணண, மஞசள ருச, வாசனை கொணடுளளது (வேறு எஙகெஙகு குளததாகள எனறு தொநதால அநத ஆறறு நரையும பாககலாம. ஒரு கலலல இரணடு மாஙகாய எனபது போல ஒரு அமபல, மஞசள, எணணெய, சயககாய, பாறைய லருநது வநதுளளது. முதலமைசசா சததராமையா, நபுணாகுழுவைக கொணடு Three in one கடைககும இடததைக கணடறய சொலலலாம).<br /><br />Read more: http://viduthalai.in/page5/74931.html#ixzz2smsDHfg1<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.com