tag:blogger.com,1999:blog-1474608369333206681.post5794391805686335088..comments2023-10-29T13:02:52.613+05:30Comments on தமிழ் ஓவியா: துடிக்கும் இளமையைப் பெரியார்க்கு ஒப்படைத்த ஒரு பொடிப் பெண்ணை,அன்னை என்று புகழாமல் நாம்வேறு என்ன என்று புகழவல்லோம்?தமிழ் ஓவியாhttp://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-89414572874750067462011-03-16T18:42:11.749+05:302011-03-16T18:42:11.749+05:30அம்மா பற்றி அய்யா
மணியம்மையார் இயக்கத் தொண்டுக்க...அம்மா பற்றி அய்யா <br /><br />மணியம்மையார் இயக்கத் தொண்டுக்கென்றே என்னிடம் வந்த இந்த 20 ஆண்டில் எனது வீட்டு வசதிக்கான பல காரியங்களுக்கு, தேவைக்கு உதவி செய்த வந்ததன் காரணமாக என் உடல் நிலை எப்படியோ என்தொண்டுக்குத் தடையாய் இல்லாமல் நல்ல அளவுக்கு உதவி வந்ததால் என் உடல், பாதுகாப்பு, வீட்டு நிருவாகம் ஆகியவற்றில் எனக்குத் தொல்லை இல்லாமல் இருக்கும் வாய்ப்பை அடைந்தேன்.<br />விடுதலை 15.10.1962<br /><br />எனது காயலா சற்று கடுமையாகத்தான் எளிதில் குணமாகாது. மூத்திர வழியிலே கற்கள் இருக்கின்றன. அவை கரைய மாதக்கணக்கில் காலமாகும். ஒரு சமயம் ஆப்பரேசன் - அறுவை சிகிச்சை தேவை இருந்தாலும் இருக்கலாம். ஆனாலும் நான் பயப்படவில்லை; எதற்கும் தயாராக இருக்கிறேன் மணியம்மையார் கவனிப்பும், கண்காணிப்பும், உதவியும் அளவிடற்கரியது.<br /><br />ஆகஸ்டு முடிந்தால் 93 வயது முடிந்து விட்டது. செப்டம்பர் பிறந்தால் 94 ஆவது ஆண்டு பிறக்கின்றது. தயவு தாட்சண்யம் காட்டாமல் சுதந்திரமாய் இருந்து பார்க்கலாம் என்று கருதுகிறேன். நான் சென்னைக்கு வந்தால் உண்மை மாத இதழையும் சென்னைக்குக் கொண்டு வந்து விடலாம் என்று கருதுகிறேன்.<br /><br />சென்னைக்கு வருவதில் வேறு பல சங்கடங்களும் இருக்கின்றன. திருச்சியில் பயிற்சிப் பள்ளிகள் இரண்டு இருக்கின்றன. பிரைமரி பள்ளி ஒன்றும் இருக்கிறது. அநாதைப் பிள்ளைகள் விடுதி ஒன்று இருக்கின்றது. <br /><br />வரும் ஆண்டு முதல் உயர்நிலைப்பள்ளி ஒன்று ஏற்படுத்த அனுமதி பெற்று நடத்தப்போகின்றது. ஈரோட்டில் ஒன்று ஏற்படுத்த உத்தேசம். இவையெல்லாம் திருமதி மணியம்மையார் முயற்சியில் தான் நடைபெறுகின்றன. <br /><br />10,12 ஏக்கர் தோட்டப்பண்னை ஒன்றும் நடைபெறுகின்றது. பல ஆயிரக்கணக்கில் வாடகை வரும் கட்டடங்களும் திருச்சியில் இருக்கின்றன. ஆகவே மணியம்மை அவர்கள் திருச்சியில் இருக்க வேண்டியிருக்கிறது.<br /><br />நான் சென்னைக்கு வந்தால் மணியம்மையார் என்னைத் தனியாய் இருக்கச் சம்மதிக்க மாட்டார்கள். திருச்சி நடப்புகள் பாதிக்கப்படும். இது ஒரு சங்கடமான நிலைமை என்றாலும் ஏதாவது செய்தாக வேண்டியிருக்கிறது.<br /><br />விடுதலை தலையங்கம் 19.7.1972<br />தொகுப்பு: மாடாகுடி இரா.சம்பந்தன்.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.com