tag:blogger.com,1999:blog-1474608369333206681.post5375537007076895906..comments2023-10-29T13:02:52.613+05:30Comments on தமிழ் ஓவியா: தந்தை பெரியாரின் மதமற்ற உலகம்!தமிழ் ஓவியாhttp://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-11480671628443968142011-09-17T16:02:08.757+05:302011-09-17T16:02:08.757+05:30பெரியாரே நம் ஒளி - விழி - வழி!
இன்று (செப்.17-201...பெரியாரே நம் ஒளி - விழி - வழி!<br /><br />இன்று (செப்.17-2011) நமக்கு விழி திறந்த வித்தகர் - மான உணர்வை மறந்து, துறந்து அடிமைகளாகி காலங்காலமாய் கால்நடைகளைவிட கேவலமான வாழ்வு வாழ்ந்த திராவிட மக்களாகிய நமக்கு, மானமும் அறிவும் போதித்த நம் அறிவுப் பேராசான், தலைவர் தந்தை பெரியார்தம் 133ஆவது ஆண்டு பிறந்தநாள் பெருவிழா!<br /><br />திக்கெட்டும் திருவிழா - தெவிட்டாத அறிவுப் புதுவிழா!<br /><br />பெரியார் என்ற தொண்டு பழத்தின் மண்டைச் சுரப்பை உலகு தொழும் வகையில்,<br /><br />பற்பல நாடுகளிலும் - மலேசியா, சிங்கப்பூர், மியான்மா என்ற பர்மா, குவைத், துபாய், அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, இலங்கை, தென்னாப்பிரிக்கா, செஷல்ஸ் இப்படி - திசையெட்டும் தமிழர்களால் - திராவிடர்களால் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்ற விழா - ஆண்டுக்கு ஆண்டு வளர்ந்து பெருகி வரும் கொள்கை பரப்பும் விழாவாக, குவலயம் குதூகலத்துடனும், கோலாகலத்துடனும் கொண்டாடும் நிலை கண்டு, பெரியார் தொண்டர்களின் உள்ளங்கள் குளிர்ந்துள்ளன உவகையால் கூத்தாடுகின்றன.<br /><br />கோடையிலே இளைப்பாறும் குளிர் தருகின்ற தருவாக, தருநிழலாக, நிழல் கனிந்த கனியாக வந்த கொள்கைக் கோமானின் தொண்டால் தலை நிமிர்ந்த மக்கள், நன்றித் திருவிழாவாக ஒவ்வொரு ஆண்டும் செப்.17 தொடங்கி அடுத்த செப்டம்பர் 16-ஆம் தேதி வரை ஆண்டு முழுவதும் கொண்டாடி மகிழ்கின்றனர்.<br /><br />பெரியார் என்ற தத்துவ ஜீவ நதி என்றும் வறளாது,<br /><br />வற்றாது ஓடிக் கொண்டே இருக்கும் வெள்ளப் பெருக்கு அல்லவா!<br /><br />அய்யாவின் லட்சியங்களுக்கு அவ்வப்போது அறை கூவல்களும் வந்து கொண்டேதான் இருக்கின்றன!<br /><br />எதிர்நீச்சல்தான் அந்தத் தலைவர் தொண்டர்களுக்குக் கொடுத்த மகத்தான பயிற்சி என்பதால், தடைக் கற்கள் ஆயிரம் என்றாலும் அதனை சுக்கு நூறாக்கி, பயணம் தடைப்படாமல் இலக்கு நோக்கியே ஈரோட்டுச் சிங்கக்குட்டிகள் சென்று வெற்றி வாகை சூடிடுவது உறுதியிலும் உறுதி!<br /><br />பெரியாரே நம் ஒளி!<br /><br />பெரியாரே நம் விழி!!<br /><br />பெரியார்தம் இயக்கமே நம் வழி!!!<br /><br />அவர் வைத்த இலக்கே எம் போக்கும் - நோக்கும்!<br /><br />என்ற பயணங்கள் தொடரட்டும், தொய்வின்றித் தொடரட்டும்!<br /><br />21ஆம் நூற்றாண்டு மட்டுமல்ல; இனிவரும் நூற்றாண்டுகளும், பெரியார் என்ற சமூக விஞ்ஞானியின் சகாப்தமாகவே மலரும் என்பது உறுதி!<br /><br />வாழ்க பெரியார்!<br /><br />வளர்க பகுத்தறிவு!!<br /><br />- கி. வீரமணி தலைவர், திராவிடர் கழகம் 17-9-2011தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.com