tag:blogger.com,1999:blog-1474608369333206681.post4936365031785829457..comments2023-10-29T13:02:52.613+05:30Comments on தமிழ் ஓவியா: பொருளாதாரம் பற்றி பெரியார்தமிழ் ஓவியாhttp://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-89980270417832598242013-04-20T07:06:16.605+05:302013-04-20T07:06:16.605+05:30மாற்றம்
வேதனை தரும் அந்தச் செய்தியைக் கேட்டதில் ...மாற்றம்<br /><br /><br />வேதனை தரும் அந்தச் செய்தியைக் கேட்டதில் இருந்து நல்லசிவத்தின் இதயத்துடிப்பு வேகம் அதிகரித்துக் கொண்டே போனது. சில நேரங்களில் நெஞ்சை இடது கையால் பிடித்துக் கொண்டார்.<br /><br />பரம்பரையா வாழ்ந்த இடம்... மன்னார்குடிக்கும் பட்டுக்கோட்டைக்கும் போடப்போற ரயில்வே பாதை குறுக்கே வர்றதால அரண்மனை மாதிரி இருக்கிற வீட்டை இடிக்கப் போறாங்களே... அது நடந்தா நான் செத்துடுவேன் கருப்பையா.<br /><br />வேலைக்காரன் கருப்பையனிடம் தன் மன பாரத்தை இறக்கி வைத்தார் நல்லசிவம்.<br /><br />அய்யா மனசத் தளர விடாதீங்க. எல்லாத்தயும் அந்த வீதியோர அய்யனார் பாத்துக்குவார்.<br /><br />கருப்பையனின் பேச்சு நல்லசிவத்தின் மன உளைச்சலுக்கு மருந்து போட்டது போல் இருந்தது.<br /><br />கருப்பையா நாளைக்கு எந்த வேலை எப்படியிருந்தாலும் பரவாயில்லை. எல்லாம் நல்லபடியா நடக்கணும்னு அந்த அய்யனார் காதில போட்டு வச்சிட்டு வரணும்.<br /><br />பூஜை சாமான்களுடன் வீதியோர அய்யனாரைத் தரிசிக்க வந்த நல்லசிவம் அதிர்ச்சியில் நிலைகுலைந்து போனார். அய்யனார் கோவில் தரைமட்டமாகிக் கொண்டிருந்தது.<br /><br />அய்யனார்க்கே இந்த நிலைமையா?<br /><br />இந்தக் கோவில் போக்குவரத்துக்கு இடையூறா இருக்குன்னு இடிக்கிறதுக்கு கலெக்டரிடமிருந்து உத்தரவு வந்துருக்கு.<br /><br />அய்யனாரே என் குறையை உன்கிட்ட சொல்ல வந்தேன். ஆனா, உன் குறையைப் புரிஞ்சிக்கிட்டேன். அதிகாரம் ஆண்டவன் கையில இல்ல. ஆள்றவன் கையில.<br /><br />பக்தியோடு வந்த நல்லசிவம் நல்ல புத்தியோடு திரும்பிக் கொண்டிருந்தார்.<br /><br />_ வீரன்வயல் வீ.உதயக்குமாரன்தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-56875889115120171022013-04-20T07:04:02.962+05:302013-04-20T07:04:02.962+05:30மனைமாட்சியருக்கு விழா!
ஆண்கள் தங்கள் குறிப்பிட்...மனைமாட்சியருக்கு விழா!<br /> <br /><br />ஆண்கள் தங்கள் குறிப்பிட்ட வயது தொடங்கும்போது வெள்ளி விழா, அறுபதாம் ஆண்டு விழா, மணி விழா, பவள விழா என்று சிறப்பித்துக் கொண்டாடி குழந்தைகள், உறவினர்கள், நண்பர்கள் சூழ மகிழ்வர்.<br /><br />அப்போது, பெண்ணுக்கு விருப்பம் இருக்கிறதோ இல்லையோ, தங்கள் இணையருடன் இணைந்து விழாவினைச் சிறப்பிக்க வேண்டும். இப்படியொரு சூழலில், தங்கள் இணையருக்கு -_ மனைமாட்சியருக்கு விழா எடுத்து மாண்பு செய்து பெருமைப்படுத்தியுள்ளனர் சென்னை, எம்.ஜி.ஆர். நகரில் வசிக்கும் வெள்ளையாம்பட்டு சுந்தரம், எஸ்.நடராஜன் குடும்பத்தினர்.<br /><br />மனைவிக்கு மணிவிழா! இல்லத்தரசிக்கு இனிய விழா!.... எனத் தொடங்கும் கவிதை பொன் விழா, வைர விழா, முத்து விழா கொண்டாட வேண்டும் என்ற விருப்பத்தைத் தெரிவிக்கிறது. பாராட்டுக்குரியவர்கள் இந்த இரண்டு பதிப்பாளர்களும்!<br /><br />இந்த நேரத்தில் இத்தகைய விழாக்களுக்கான தொடக்கத்தை பல ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கி வைத்தது திராவிடர் கழகம் என்ற வரலாற்றினையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.<br /><br />கவிஞர் முகவை ராஜமாணிக்கம் அவர்களது இணையரின் 60ஆம் ஆண்டு விழாவை திராவிடர் கழகம் தனது சொந்தச் செலவிலேயே (அழைப்பிதழ் முதல் நிறைவு வரை) நடத்திக் காட்டியது.<br /><br />அன்றைய திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கி.வீரமணி அவர்களே முன்னின்று நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்ற (பழைய) கட்டிடத்தில் இந்நிகழ்ச்சியை நடத்தினார்கள்.<br /><br />அதனைத் தொடர்ந்து, பெரியார் பேருரையாளர் இறையனார் தனது இணையர் திருமகள் அவர்களின் 60ஆம் பிறந்தநாளை பூட்கைப் பெருவிழா என்று கொண்டாடினார். பெரியார் தொண்டர்கள் பல இடங்களிலும் இத்தகைய விழாக்களை நடத்தி வருகிறார்கள். நாமும் தொடரலாமே!தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-43093758770295033272013-04-20T06:48:07.843+05:302013-04-20T06:48:07.843+05:30இந்தக் கொடுமைக்கு என்று விடுதலை?
மனிதனை வைத்து ...இந்தக் கொடுமைக்கு என்று விடுதலை?<br /> <br /><br />மனிதனை வைத்து மனிதனே இழுக்கும் கை ரிக்ஷா முறையை தமிழகம் ஒழித்து 40 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால், இரண்டு தடித்த மனிதர்களை அமரவைத்து தூக்கிச் சுமக்கும் அவலம் இன்னும் நீடிக்கிறது மதத்தின் பெயரில்- கடவுளின் பெயரில்.<br /><br />குழந்தைத் தொழிலாளர்கள், பிச்சைக்காரர்கள், கூலித் தொழிலாளர்களின் படங்களையெல்லாம் அவ்வப்போது போட்டு அவர்களுக்காக அனுதாபப்படும் தினமலர் தான் இந்தப் படத்தையும் வெளியிட்டுள்ளது.<br /><br />காஞ்சிபுரம் யதோக்தகாரி கோவில் பங்குனி உற்சவத்தில் வேணுகோபாலன் திருக்கோலத்தில் சப்பரம் வாகனத்தில் எழுந்தருளினார்-என்று தனது இணையதளத்தில் பவ்யமாகச் செய்தி சொல்லியிருக்கிறது.<br /><br />வேணுகோபாலன் மட்டுமா சுமக்கப்படுகிறார்? இரண்டு தடியர்களும் அல்லவா அமர்ந்து கொண்டு உலா வருகிறார்கள்! இந்த மனித உரிமை மீறல்களை இன்னும் அனுமதிக்கலாமா? தமிழக அரசு என்ன செய்கிறது?<br /><br />இப்பெல்லாம் பார்ப்பனீயம் எங்கெங்க இருக்கு எனக் கேள்வி கேட்கும் அதிமேதாவிகளே, இந்தப் படம் சொல்வதென்ன? வருணதர்மத்தின் அடுக்கில் நான் மேலேதான், நீங்கள் கீழேதான்- எம்மைச் சுமப்பவர்கள் நீங்கள்தான் என்று சொல்கிறார்களே... அதுவும் சங்கர மடம் உள்ள காஞ்சிபுரத்தில்! என்ன செய்யப் போகிறீர்கள்?தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-45781000822160491672013-04-20T06:41:58.504+05:302013-04-20T06:41:58.504+05:30
செய்தியும் சிந்தனையும்
சாஸ்திரம்
செய்தி: இன்று ...<br />செய்தியும் சிந்தனையும்<br /><br />சாஸ்திரம்<br /><br />செய்தி: இன்று ராமநவமி. சிந்தனை: ராமன் பிறந்த நவமியும், கிருஷ் ணன் பிறந்த அஷ்டமியும் கெட்ட நாளாம் - சொல்லு கிறது சாஸ்திரம்.<br /><br />கேட்டீர்களா சேதியை?<br /><br />அட்சய திருதியையில் நகை வாங்கினால் அதிர்ஷ் டம் குவியும், செல்வ தேவதை வந்து குடியிருப் பாள் என்று கிளப்பிவிட் டார்கள் அல்லவா?<br />இப்பொழுது புதாஷ்டமி யில் வீடு, நிலம் வாங் குங்கள் - விளங்குவீர்கள் என்று கிளப்பி விட்டுள்ளனர்.<br />முன்னது நகைக்கடைக் காரர்களின் சரடு - பின் னது ரியல் எஸ்டேட்கா ரர்கள் கட்டிவிட்டது.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-57288047666591306052013-04-20T06:39:48.668+05:302013-04-20T06:39:48.668+05:30
நெய்வேலியும் திருவெறும்பூரும்
நெய்வேலி பழுப்பு...<br />நெய்வேலியும் திருவெறும்பூரும்<br /><br /><br /><br />நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் 13 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்கள் 20 ஆண்டு களுக்கு மேல் பணியாற்றி வருகின்றனர். தங்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கோரித் தொடர்ந்து போராடி வருகிறார்கள்.<br /><br />நீதிமன்றத்திற்கும் சென்றார்கள். தொழிலாளர் களுக்கு சாதகமாக உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட தால் உடனே உச்சநீதிமன்றம் தாவுகிறது நிருவாகம்.<br /><br />இப்பொழுது உச்சநீதிமன்றமும் தெளிவாக - திட்டவட்டமாக தீர்ப்பு அளித்து விட்டது.<br /><br />என்.எல்.சி.யில் பணிபுரியும் 13 ஆயிரம் ஒப்பந்தத் தொழிலாளர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கறாராக உத்தரவிட்டு விட்டது.<br /><br />இதே நிலைதான் திருவெறும்பூர் பெல் நிறுவனக் கதையும்; தொழிலாளர்கள் போராடிப் பார்த்து நீதிமன்றம் சென்றால் அதற்கு இடைக்காலத் தடை வாங்குவது, தொழிலாளர்களுக்குச் சாதகமாக நீதிமன்றம் ஆணை பிறப்பித்தால் அதனை எதிர்த்து நிர்வாகம் மேல் முறையீடு செய்வது என்கின்ற வஞ்சனையான வேலைகளில் ஈடுபட்டு வருகின்றது.<br /><br />தொழிலாளர்கள் நீதிமன்றம் சென்றால் சொந்தமாகச் செலவு செய்ய வேண்டும்; நிறுவனம் நீதிமன்றம் சென்றால் அதன் செலவு நிறுவனத்தைச் சேர்ந்தது. சோசலிசம் பேசும் நாட்டில் (?) இப்படித் தொழிலாளர்கள் பழி வாங்கப்பட்டு வருகின்றனர்.<br /><br />நெய்வேலியில் பணியாற்றும் 13 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தின் ஆணை திருவெறும்பூர் பெல் நிறுவனத்தில் 30 ஆண்டு களுக்கு மேலாக பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர் களுக்கு நூற்றுக்கு நூறு பொருந்தமே செய்யும்.<br /><br />பெல் நிறுவனத்தின் ஒப்பந்த தொழிலாளர் நீதிமன்றம் செல்ல வேண்டிய அவசியத்தை பெல் நிருவாகம் ஏற்படுத்தாது என்று நினைக்கிறோம்.<br /><br />பெல் நிருவாகம் ஒரு கண்ணில் சுண்ணாம் பையும் இன்னொரு கண்ணில் வெண்ணெய்யையும் வைக்கும் வஞ்சனை நிறைந்ததாகும்.<br /><br />பெல் நிறுவனத்தைச் சேர்ந்த அரித்துவாரில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் 557 பேர் நிரந்தரம் செய்யப்பட்டனர். ஆனால் அந்த நியாயம் அதே நிறுவனமான திருவெறும்பூர் பெல் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு மட்டும் கிடையாதாம்.<br /><br />நாம் என்ன ஒரு ஜனநாயக நாட்டில் தான் வாழுகிறோமா என்ற கேள்வி தான் எழுகிறது? ஊருக்கு ஒரு சட்டம் இருக்கிறதா என்றும் தெரியவில்லை.<br /><br />ராம்விலாஸ் பஸ்வான் அவர்கள் இரயில்வே துறையின் அமைச்சராக இருந்தபோது ஏழரை லட்சம் ஒப்பந்த தொழிலாளர்களை இரயில்வேயில் நிரந்தரப் படுத்தினார். அதனையெல்லாம் எடுத்துக்காட்டி பெல் நிறுவனத்தில் இயங்கும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கான திராவிடர் தொழிலாளர் கழகம் பல வடிவங்களிலும் போராட்டத்தை நடத்தி வந்திருக்கிறது.<br /><br />எந்த நியாயத்துக்கும், சட்டத்துக்கும் கட்டுப் படாமல் தானடித்த மூப்பாக திருவெறும்பூர் பெல் நிர்வாகம் செயல்பட்டு வருவது கண்டிக்கத்தக்கது.<br /><br />240 நாட்களுக்கு மேல் ஒருவர் தொடர்ந்து பணியாற்றினால், அவர் பணி நிரந்தரம் பெறத் தகுதி உடையவர் என்ற விதி முறைகள் இருந்தும், அவற்றை எல்லாம் வெற்று காகிதச் சுரைக்காயாகத் தான் இருக்கின்றன.<br /><br />1978ஆம் ஆண்டு பெல் வளாகக் கூட்டுறவு ஒப்பந்த தொழிலாளர்கள் (Y1 No II) என்ற பெயரில் பெல் நிர்வாகமே ஒரு கூட்டுறவுச் சங்கத்தைத் துவக்கி நிர்வாகமே அதனை நடத்தியும் வருகிறது.<br /><br />1300 பேர்கள் பணியாற்றினார்கள் என்றால் பெரும்பாலும் தாழ்த்தப்பட்டோர் பிற்படுத்தப் பட்டோரே! இவர்களில் பட்டதாரிகளும் உண்டு. பெல் நிறுவனத்தில் இவர்கள் செய்யாத பணிகளே கிடையாது. 30 ஆண்டுகளுக்குமேல் பணியாற்றியும் கடைசி வரை நிரந்தரப்படுத்தப் படாமலேயே ஓய்வு பெற்றும் சென்று விட்டனர்.<br /><br />உண்மையைச் சொல்ல வேண்டுமானால் இது ஒரு மனித உரிமை மீறல் என்றே கூற வேண்டும். மனித உரிமை ஆணையம்கூடத் தலையிடலாம். அவ்வளவு நியாயம் இருக்கிறது. தொழிலாளர் நலத்துறை எல்லாம் நிறுவனத்துக்குத் தான் (முதலாளிக்குத் தான்) சேவை செய்யத் துடிக்கிறதே தவிர, உழைப்பாளிகளின் உரிமைகளுக்காக பச்சை மையால் கையொப்பமிட மனம் மறுக்கிறது.<br /><br />நெய்வேலி பிரச்சினையில் உச்சநீதிமன்றம் மிகத் தெளிவாகவே ஆணை பிறப்பித்து விட்டது. திருவெறும்பூர் பெல் நிருவாகம் இறங்கி வருமா? இல்லை தொழிலாளர்கள் வீதிக்கு வந்து போராட வேண்டுமா? 19-4-2013தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-32036233887437139002013-04-20T06:37:02.722+05:302013-04-20T06:37:02.722+05:30உங்களுக்கு மற்ற கணவர் எங்கே?
இந்தியாவிலிருந்து ஒ...உங்களுக்கு மற்ற கணவர் எங்கே?<br /><br /><br />இந்தியாவிலிருந்து ஒரு பெண்மணி அமெரிக் காவைச் சுற்றிப் பார்க்கப் போனாராம். இறங்கியதுமே அமெரிக்கப் பெண் கேட்ட முதல்கேள்வி, நான் மகாபாரதம் படித்திருக்கிறேன், உங்களுடைய மற்ற கணவர்கள் எங்கே? அங்கேயே விட்டு வந்து விட்டீர்களா? என்பதுதானாம். இப்படி இந்தியாவைப் புரிந்து கொண்டிருக்கிறார்கள் அமெரிக்கர்கள் என்று ராணி பத்திரிகையாசிரியர் சொன்னதும், அனுராதா ரமணன் எழுந்து... என்னை அப்படி கேட்டிருந்தால் சொல்லியிருப்பேன். அய்ந்தாவது நபர் தான் தாலி கட்டிய கணவனென்று... இவ்வாறாக 21.8.1983 நாளிட்ட தாய் இதழில் ஒரு பெட்டிச் செய்தி வந் துள்ளது.<br /><br />உங்களுக்கு மற்ற கணவர் எங்கே?<br /><br />திருமதி அனுராதா ரமணன் கூற்றுப்படி ஒரு பெண்ணானவள் தாலி கட்டிய ஒரு கணவனையும், தாலி கட்டாத நான்கு ஆண்களையும் வைத்துக் கொள்ளலாம் என்று சொல்லுகிறாரா? மகாபாரதத்தைக் காப்பாற்ற போய் தன் மானத்தைப் பறக்க விட்டு விட்டாரே!<br />(உண்மை, 1.8.1983)தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-12817028306458583402013-04-18T19:53:40.426+05:302013-04-18T19:53:40.426+05:30
பயன்படவேண்டும்
சுக போகத்தினால் இன்பம் காணுவதில்...<br />பயன்படவேண்டும்<br /><br /><br />சுக போகத்தினால் இன்பம் காணுவதில் பெருமை இல்லை. தொண்டு காரணமாக இன்பம் காணுவதே சிறந்த இன்பமாகும். வாழ்வு என்பது தங்களுக்கு மட்டும் என்று கருதக் கூடாது. மக்களுக்கு ஆகவும், தொண்டுக்கு ஆகவும் நம் வாழ்வு இருக்கவேண்டும் என்று கருதவேண்டும்.<br />(விடுதலை, 2.7.1962)தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-50114643578321892592013-04-18T19:52:37.441+05:302013-04-18T19:52:37.441+05:30பெண்ணென்றால்...
பெண் என்றாலே கேலி தானா? மக்களால் ...பெண்ணென்றால்...<br /><br />பெண் என்றாலே கேலி தானா? மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதி நிதிகள் அதையும் தாண்டி அமைச் சர்கள் எனும் நிலையில் உள்ளவர் கள்கூட இதற்கு விதி விலக்கு இல்லை.<br /><br />அண்மையில் மகாராட்டிர மாநில அமைச்சர் ஒருவர் மின் வெட்டையும், குழந்தைப் பேற்றையும் ஒப்பிட்டுக் கிண்டலடித்தார்.<br /><br />இப்பொழுது மத்திய பிரதே சத்தைச் சேர்ந்த பிஜேபி அமைச்சர் விஜய்ஷா என்பவர் பழங்குடி மாணவர்களுக்கான பயிற்சி முகாம் ஒன்றின் பெண்களைப் பற்றி ஆபாச மான நகைச்சுவைத் துணுக்கை சொல்லப் போய் வீண் வம்பில் சிக்கிக் கொண்டார். அந்த நிகழ்ச்சியில் முதல் அமைச்சரின் மனைவியும் இருந் திருக்கிறார். அதன் காரணமாக பிரச் சினையின் பலூன் உப்பி, கடைசியில் அமைச்சர் பதவி விலக நேரிட்டது.<br /><br />சட்டப் பேரவையில் உட்கார்ந்து கொண்டு கைப்பேசியில் ஆபாசப் படங்களைப் பார்ப்பது போன்ற வேலை களிலும் சிக்குகின்றனர் அமைச்சர் களும், சட்டப் பேரவை உறுப்பினர் களும். 2002இல் கோத்ரா பிரச்சினை யையொட்டி மோடி அரசால் திட்ட மிட்டு மேற்கொள்ளப்பட்ட சிறு பான்மையினருக்கான வன்முறையில் முசுலிம்கள் முகாம்களில் தங்கும்படி நேரிட்டது.<br /><br />அப்பொழுது முதல் அமைச்சரான நரேந்திரமோடி முகாம்கள் இனப் பெருக்கத்துக்கும் பயன்படுகின்றன என்று சொன்னாரே - அதே நேரத் தில் அவரை யாரும் பதவி விலகச் சொல்லவில்லை என்பது கவனிக்கத் தக்கது.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-31728653190865374762013-04-18T19:51:55.943+05:302013-04-18T19:51:55.943+05:30மழை பொழிய....
பொள்ளாச்சி அருகே மழை வேண்டி மனிதப் ...மழை பொழிய....<br /><br />பொள்ளாச்சி அருகே மழை வேண்டி மனிதப் பொம்மையைப் பாடையில் வைத்து, ஊர்வலமாக இழுத்துச் சென்று தீயிட்டுக் கொளுத்தினர் - கிராமப் பெண்கள் கடந்த சனியன்று, விளக்கில் எண்ணெய் ஊற்றி, பாடையைச் சுற்றி வந்து ஒப்பாரி வைத்து அழுதனர்.<br />மழை பொழிவதற்கும், இந்தச் சடங்குக்கும் என்ன சம்பந்தம்?<br /><br />கழுதைக்கும், கழுதைக்கும் திருமணம் செய்து வைத்தார்களே மழை கொட்டி தீர்த்ததா?<br /><br />மழை பொழிய இவ்வளவு எளிதான வழி இருந்தாலும் நாட்டில் பஞ்சம் ஏன்? ஏன்? பெண்கள் முதலில் திருந்த வேண்டும்.<br /><br />திருச்செந்தூர் முருகனுக்கு சிங் கப்பூர் தொழிலதிபர் ஒரு கிலோ 400 கிராம் கொண்ட 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கக் கிரீடத்தை காணிக்கையாக அளித்தார். தமிழ்ப் புத்தாண்டு முன்னிட்டு, நாமக்கல் ஆஞ்சநேயர் சாமி தங்கக் கவசத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார் என்பவை இன்றைய செய்திகள்.<br />இந்தியாவில் 70 விழுக்காடு மக் களின் நாள் வருமானம் ரூ.20-க்குள் என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன.<br /><br />கடவுள்தான் எல்லாவற்றையும் படைத்தார் என்று ஒரு பக்கத்தில் சொல்லிக் கொண்டு, அந்தக் கடவு ளுக்கே நகைகளை செய்து அணி விப்பது அசல் முரண்பாடு அல்லவா?<br /><br />வெல்லப் பிள்ளையாரைக் கிள்ளி எடுத்து வைத்து அந்த வெல்லப்பிள்ளை யாருக்கே படைப்பதா என்று கிராமத் தில் பழமொழி ஒன்றைச் சொல்லு வார்கள்.<br />மனிதனால் படைக்கப்பட்ட கடவுள் அந்த மனிதனைப் போலவே ஏமாளி போலும்!<br /><br />@@@@@@தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-81049648096104212122013-04-18T19:51:31.799+05:302013-04-18T19:51:31.799+05:30பதில் சொல்லுமா அதிமுக ஏடு?
மறுபடியும், மறுபடியும்...பதில் சொல்லுமா அதிமுக ஏடு?<br /><br />மறுபடியும், மறுபடியும் அ.இ.அ.தி. மு.க.வின் அதிகார பூர்வ அக்கிரகார ஏடாகவே மாறிவிட்ட நமது எம்.ஜி.ஆர். வீண் வம்புக்கு வந்து வாங்கிக் கட்டிக் கொள்வதையே வாடிக்கையாக்கிக் கொண்டு விட்டது.<br /><br />அதுவும் ஈழத் தமிழர் பிரச்சினை பற்றி எல்லாம்கூட எழுதுகிறது என்றால், அதற்கொரு அசட்டுத் துணிச்சல் தேவைதான் என்பதை வேண்டுமானால் ஒத்துக் கொள்ள லாம்.<br /><br />ஈழத் தமிழர் பிரச்சினையை மய்யப்படுத்திக் கருத்துக் கூறினார் திராவிடர் கழகத் தலைவர்.<br /><br />நட்பு நாடு நட்பு நாடு என்று இலங்கையைச் சொல்லிக் கொண்டு வருகிறதே - இந்தியா - நட்பு நாடு என்றால் என்ன பொருள்?<br /><br />இந்தி யாவின் வெளிநாட்டின்கொள்கை மாற வேண் டும் என்று திராவிடர் கழகத் தலைவர் சொல்லி விட்டாராம். அத்திரிபாட்சா கொழுக்கட்டை என்று ஒருதாவு தாவுகிறது (அக்ரகார) அதிமுக ஏடு.<br /><br />திமுக காங்கிரசோடு கூட்டு சேர்ந்தது - இல்லை என்று மறுக்க வில்லை. அதிமுக காங்கிரசோடு கூட்டுச் சேர்ந்து மத்திய ஆட்சியில் பங்கு ஏற்கவில்லையா?<br /><br />பா.ஜ.க. வோடு கூட்டு சேர்ந்து மத்திய ஆட்சியில் பங்கு ஏற்கவில்லையா? அப்பொழுதெல்லாம் ஈழத் தமிழர் பிரச்சினை என்பது இல்லவே இல்லையா?<br /><br />அப்பொழுது எந்த நேரத்திலாவது இந்தியாவின் வெளிநாட்டுக் கொள் கையை அதிமுக விமர்சித்ததுண்டா?<br /><br />திராவிடர் கழகம் திமுக ஆதரிக் கிறது; அதிமுக ஆட்சிக்கு ஆதரவு தெரிவித்ததும் உண்டு.<br /><br />அதற்காக அதிமுக ஆட்சியின் அத்தனை செயல் பாடுகளையும் ஆதரித்ததா என்ன?<br /><br />மத மாற்றத் தடுப்புச் சட்டம் கொண்டு வந்தபோது திராவிடர் கழகத் தலைவர் கண்டிக்கவில்லையா?<br /><br />வேதாகமக் கல்லூரி திறக்கப்பட இருப்பதாகச் சொன்னபோது எதிர்க்க வில்லையா?<br /><br />மதமாற்றத் தடுப்புச் சட்டம் கொண்டு வந்ததினால் (அதிமுக ஆட்சியை ஆதரித்த காரணத்தால்) அதற்கு திராவிடர் கழகத்தைப் பொறுப்பாக்க முடியுமா?<br /><br />ஈழத் தமிழர்கள் மீது போர் தொடுக் கப்பட்ட போது அதனைப் பச்சையாக ஆதரித்தாரா இல்லையா அதிமுக பொதுச் செயலாளர்?<br /><br />போர் நிறுத்தப்பட வேண்டும் என்று சொல்லுவது விடுதலைப்புலிகளைக் காப்பாற்றத் தான் என்று கூறினாரா இல்லையா?<br /><br />மரியாதையாக, நாணயமாக இவற் றிற்குப் பதில் சொல்லி விட்டு, மறுபடியும் பேனா பிடிக்கட்டும் பார்க்கலாம்.<br /><br />கடைசியாக ஒரு கேள்வி இந்தி யாவின் வெளியுறவுக் கொள்கையில் மாற்றம் வேண்டுமா? கூடாதா? பதில் சொல்லட்டும்.<br /><br />@@@@@@தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.com