tag:blogger.com,1999:blog-1474608369333206681.post4920767046729988242..comments2023-10-29T13:02:52.613+05:30Comments on தமிழ் ஓவியா: ஆயுள்தண்டனைக் கைதிகளை விடுதலை செய்ய மாநிலஅரசுக்கு உரிமையுண்டு! -கி.வீரமணிதமிழ் ஓவியாhttp://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-77032765013422865852014-05-10T06:56:58.894+05:302014-05-10T06:56:58.894+05:30விஞ்ஞானியும் - பார்ப்பானும்
ஒரு விஞ்ஞானி தன் ஆராய...விஞ்ஞானியும் - பார்ப்பானும்<br /><br />ஒரு விஞ்ஞானி தன் ஆராய்ச்சி சாலையில் கண்டறிந்த உண்மையானது, மறுநாளே, விளையாட்டு சாமான் செய்யும் தொழிலாளியையும் கூட 8 அணா சம்பாதிக்க வைக்கும்படி மேல்நாட்டில் வசதி ஏற்பட்டிருக்கிறது.<br /><br />நமது நாட்டிலோ கோவில் பார்ப்பனன் ஏற்பாடு செய்த புஷ்பப்பல்லக்குக்கு மறுநாளே ஆயிரக்கணக்கான மைல் தூரமுள்ள ஏழைகளின் பணத்தையும் இழக்க வசதி உண்டு.<br /><br />அரிது! அரிது!!<br /><br />ஒன்றை ஆக்குதல் அரிது; அழித்தல் எளிது என்பது பழமொழி. இது எல்லா விஷயத்திலும் சரியில்லை. கடவுள் பெயரால் வெகு எளிதாகப் புளுகி வைத்துள்ளார்கள். அவைகளை அழிப்பது மிக அரிதாகவே முடிகிறது தல்லவா?<br /><br />- புரட்சிக்கவிஞர்<br /><br />Read more: http://viduthalai.in/page-7/79979.html#ixzz31Gupy5B5<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-47968122834710757392014-05-10T06:56:35.984+05:302014-05-10T06:56:35.984+05:30
பார்ப்பனம் மதம்- தர்மம்
பார்ப்பனர்கள் எந்த காரி...<br />பார்ப்பனம் மதம்- தர்மம்<br /><br /><br />பார்ப்பனர்கள் எந்த காரியத்தி லானாலும் எந்தத் துறையிலானாலும் தங்கள் சொந்த ஜாதி (உயர்வு) நலனை அடிப்படையாகக் கொண்டுதான் பார்ப்பார்களே தவிர, மக்களின் பொது நலனைப் பற்றிய கவலையே அவர் களுக்கு ஏற்படுவதில்லை.<br /><br />பார்ப்பனர்களுக்கு மதம், தர்மம் என்பதே அவர்களது ஜாதி பாதுகாப்பாகத்தான் ஆகி விட்டது<br /><br />- தந்தை பெரியார் 22.5.1967 விடுதலை தலையங்கத்தில் ஒரு பகுதி<br /><br />Read more: http://viduthalai.in/page-7/79979.html#ixzz31Gui7vE0<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-46489634506615398832014-05-10T06:56:03.577+05:302014-05-10T06:56:03.577+05:30விதியைப் பற்றி...
மனித சக்தி விதி என்ற சங்கிலியால...விதியைப் பற்றி...<br /><br />மனித சக்தி விதி என்ற சங்கிலியால் கட்டுண்டு கிடப்பது, பெரும் பரிதாபமே.<br /><br />மனிதன் சிந்திக்கச் சிந்திக்க, விதியினின்று விடுதலை அடைகிறான். மனித மூளை சிந்தனையால் விதியை எதிர்த்து, அதை அழித்து, வெறும் பிரமை என்று நிரூ பிக்கவும் ஆற்றல் பெற்றுவிடுகிறது.<br /><br />பலமற்றவர்கள், பாதகர்கள் - இவர்களே உழைக்காமல் சோம்பலில் மடிந்து, விதியைக் குறை கூறுகிறார்கள்.<br /><br />- எமர்சன்<br /><br />Read more: http://viduthalai.in/page-7/79978.html#ixzz31Guc2YkR<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-39045279341036879042014-05-10T06:55:16.754+05:302014-05-10T06:55:16.754+05:30
பார்வதி -பரமசிவன் முத்தக் காட்சி!
திருவாக்குஞ் ...<br />பார்வதி -பரமசிவன் முத்தக் காட்சி!<br /><br /><br />திருவாக்குஞ் செய்கருமங் கை கூட்டுஞ் செஞ்சொற்<br />பெருவாக்கும் பீடும் பெருக்கும் - உருவாக்கும்<br />ஆதலால் வானோரும் ஆனை முகத்தானைக்<br />காதலாற் கூப்புவர்தங் கை<br /><br />விநாயகக் கடவுளை வணங்கிக் காரியங்களைத் தொடங்கினால் நல்லது என்று கூறும் பண்டாரச் சன்னதிகளே! வேழ முகத்தானின் வாழ்க்கை வரலாற் றினைப் பாரீர்.<br /><br />கசமுகாசுரன் என்பவன் தவம் செய்து, தான் மனிதராலும், விலங்குகளாலும், பிறவற்றாலும் காலமெல் லாம் இறவாதிருக்க வேண்டும் என்று வரம் பெற்றான். அந்த வரம் பெற்றமையால் அவன் தேவர்களைத் துன்புறுத்தினான்.<br /><br />தேவர்கள் சிவபெருமானை வேண்ட சிவன் விநாயகனை உண்டாக்க வேண்டும் என்று எண்ணினான். அதனால் தன் துணைவி சக்தி யோடு தோட்டத்திலே வீற்றிருந்தார். அப்பொழுது அங்கே ஓர் ஆண் யானை, பெண் யானையைப் புணர்தல் கண்டு, சக்தி பெண் யானை வடிவங்கொள்ள, சிவன் ஆண் யானை வடிவங் கொண்டு புணர்ந்தார்.<br /><br />அவர்கட்கு யானை முகமும் மனித உடலுமாக ஒரு குழந்தை தோன்றியது. இதுதான் இன்று ஆற்றின் கரையில் அமர்ந்திருக்கும் கரியின் முகவன் கதை, இதற்கு ஆதாரமாக, திருஞான சம்பந்தர் தனது தேவாரத்தில்-<br /><br />பிடியத னுருவுமை கொளமிகு கரியது<br />வடிகொடு தனதடி வழிபடு மவரிடர்<br />கடிகண பதிவர வருளினன் மிகு கொடை<br />வடிவினர் பயில்வலி வலமுறை யிறையே<br /><br />என்று பாடியுள்ளார். இப்படிக் காமத்தின் விளைச்சலால் மக்கள் பிறவியிலிருந்து, விலங்குப் பிறவியெடுத்து இணைந்த பிண்டங்களின் சதைக்கலப்பில் விளைந்த விநாயகன் வணங்க வேண்டிய கடவுளா? இதோடு மட்டுமல்ல, தன்னை ஈன்ற தாயும் தந்தையும் காமக் காய்ச்சல் மிகுதி யினால் உதட்டுச்சுவை பருகும் காட்சியைக் கண்டு மகிழ்ந்தாராம், நெற்றிக் கண்ணனார் பெற்ற மகன்.<br /><br />மும்மைப் புவனம் முழுதீன்ற முதல்வி<br />யோடும் விடைப்பாகன் அம்மை தருக<br />முத்தமென அழைப்ப வாங்கே சிறிதகன்று<br />தம்மின் முத்தங்கொள நோக்கிச் சற்றே<br />நகைக்கும் வேழமுகன் செம்மை முளரி<br />மலர்த்தா ளெஞ்சென்னி மிசையிற் புனைவாமே<br /><br />மூன்று உலகங்களையும் பெற்ற சக்தியிடத்து, எருதுவை ஊர்தியாக உடைய சிவபெருமான், அம்மையே முத்தம் தருக எனச் சொல்லி அழைக்க அவர்களுக்கு இடையே இருந்த விநாயகன் சிறிது நீங்கிட, சிவனும், பார்வதியும் ஒருவரை யொருவர் முத்தமிட்டு கொள்ள அதனைக் கண்டு புன்னகை செய்யும் யானை முகனது சிவந்த தாமரை மலர் போன்ற திருவடிகளை எமது தலையின் மேல் அணிந்து கொள்வோம் என்று கூறுகிறது நந்திக் கலம்பகம் எனும் நூல்.<br /><br />பெற்றவர்கள் முயங்கும் போது உற்றுப்பார்த்து மகிழ்ந் திடும் காமவல்லி பெற்ற திருக்குமரன் விநாயகக் கடவுளை வீரமரபில் வந்த தமிழினம் வணங்க வேண்டியது தானா? புராணப் புரட்டர்களின் மூளைச் சுரப்பிலிருந்து உதயமான ஆபாசக் கடவுளுக்கு ஆற்றங்கரையில் சிலை ஏன்? இந்த வெட்கங் கெட்ட உறவில் விளைந்த யானை முகத்தானுக்கு தேங்காய் உடைப்பும், நைவேத்தியமும் ஒரு கேடா? தமிழினமே! சிந்தித்துச் செயல்படு!<br /><br />- பெரியகுளம் அருளாளன்<br /><br />Read more: http://viduthalai.in/page-7/79978.html#ixzz31GuO1DIm<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-81353178571877134012014-05-10T06:51:01.668+05:302014-05-10T06:51:01.668+05:30
மனிதன்
பலவிதக் கருத்துகளையும், நிகழ்ச்சி களையு...<br />மனிதன்<br /><br /><br /><br />பலவிதக் கருத்துகளையும், நிகழ்ச்சி களையும்பற்றிச் சிந்தித்து இது நல்லது, இது தீயது என்று உணரக்கூடிய சக்தி பெற்று, நல்லனவற்றைக் கடைப்பிடிக்கக் கூடியவன் எவனோ அவனைத்தான் மனிதன் என்று கூற முடியும்.<br />(விடுதலை, 9.6.1962)<br /><br />Read more: http://viduthalai.in/page-2/79958.html#ixzz31GtKHLwc<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-67994972755510742612014-05-10T06:50:23.601+05:302014-05-10T06:50:23.601+05:30
தஞ்சையில் செய்தியாளர்களிடம் தமிழர் தலைவர் ஆசிரியர...<br />தஞ்சையில் செய்தியாளர்களிடம் தமிழர் தலைவர் ஆசிரியர் பேட்டி<br /><br /><br />முல்லைப் பெரியாறு:<br /><br />கேரளம் - தமிழக உறவுகள் பேணிக் காக்கப்பட கேரளா ஒத்துழைக்க வேண்டும்<br /><br />தஞ்சையில் செய்தியாளர்களிடம் தமிழர் தலைவர் ஆசிரியர் பேட்டி<br /><br /><br />கேள்வி: முல்லைப் பெரியாறு பற்றி உச்சநீதிமன்றத் தீர்ப்பை கேரளா எதிர்க்கிறதே?<br /><br />திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்களின் பதில்: முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக 5 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமர்வு ஒரு முக்கிய தீர்ப்பினை வழங்கி யுள்ளது. ஜனநாயகத்தின் நான்கு தூண்களுள் மூன்றாம் தூண் என்று கருதப்படுகிற நீதிமன்றம் அதுவும் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப் புக்கு கேரள அரசு கட்டுப்பட வேண் டும். ஏற்கெனவே உச்சநீதிமன்றத் தால் நியமனம் செய்யப்பட்ட மூன்று நீதிபதிகள் கொண்ட குழு தெளிவான அறிக் கையைக் கொடுத்துள்ளது. உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஆனந்த் தலைமையில் நியமிக்கப்பட்ட குழுவில் தமிழ்நாட்டின் சார்பாக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.ஆர். லட்சுமணன், கேரளாவைச் சேர்ந்த உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.டி. தாமஸ் ஆகியோர் அடங்கிய குழு முல்லைப் பெரியாறு அணைக் கட்டு மானம் உறுதியாக உள்ளது. 142 அடி தண் ணீரைத் தேக்கலாம் என்று கூறி விட்டதே.<br /><br />கேரளா மாநில அரசின் அடாவடிப் போக்கால் நீதிபதி கே.டி. தாமஸ் இடையில் விலகிக் கொண்டார். இந்தத் தீர்ப்பினால் கேரள மாநிலத்திற்கு எந்தவிதப் பாதிப்பும் கிடையாது. தமிழ்நாடும் கேரளமும் அமர்ந்து பேசி உச்சநீதிமன்றத்தின் ஆணைப்படி நடந்து கொள்ள முன் வர வேண்டும். இதில் உரசலுக்கு இடம் தரக் கூடாது. இரு மாநில மக்களின் நல்லுறவு பேணிக் காக்கப்பட வேண்டும்.<br /><br />கேள்வி: கேரளாவில் உள்ள கம்யூனிஸ்டுக் கட்சியும்கூட நீதிமன்ற தீர்ப்பை எதிர்க் கின்றதே?<br /><br />பதில்: தேசிய கட்சிகள் என்று சொல்லிக் கொண்டாலும் மாநில உணர்வுடன்தான் அத்துமீறி நடந்து கொள்கின்றன. கம்யூனிஸ்டுகள் மட்டுமல்ல; பி.ஜே.பி. காங்கிரஸ் எல்லாமே இப்படித்தான் நடந்து கொள்கின்றன. வாக்கு வங்கி அரசி யலைத்தான் எல்லாக் கட்சிகளும் நடத்துகின்றன.<br /><br />கேள்வி: தமிழ்நாட்டில் மின் வெட்டுப் பற்றி?<br /><br />பதில்: மின்சாரம் இருந்தால் தானே மின் வெட்டு என்ற கேள்வி எழும்.<br /><br />கேள்வி: நாட்டில் எங்குப் பார்த்தாலும் கொலை, கொள்ளைகள் நடந்து கொண்டுள்ளனவே?<br /><br />பதில்: சட்டம் ஒழுங்கு பிரச்சினையே இல்லை; நாடு அமைதியாகவே இருக்கிறது என்று முதல் அமைச்சர் சொல்லுவதை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.<br /><br />ஒரு முதல் அமைச்சர் என்றால் எதிர்க் கட்சிகள் கூறுவதை நிதானத்துடன் கேட்க வேண்டும்; கோபப்படக் கூடாது.<br /><br />தஞ்சையில் செய்தியாளர்களிடம் திரா விடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் மேற்கண்ட வாறு கூறினார். (8.5.2014).<br /><br />Read more: http://viduthalai.in/e-paper/79955.html#ixzz31Gt9jMhN<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-25055220154477536112014-05-09T06:56:34.713+05:302014-05-09T06:56:34.713+05:30
மே 8: உலக தாலசீமியா நோய் தினம் சொந்த உறவுகளில் தி...<br />மே 8: உலக தாலசீமியா நோய் தினம் சொந்த உறவுகளில் திருமணம் செய்வதால் தாலசீமியா நோய் பாதிப்புடன் குழந்தை பிறக்கும்<br /><br /><br />சொந்த உறவுகளில் திரு மணம் செய்தால், பிறக்கும் குழந்தை தாலசீமியா நோய் பாதிப்புடன் பிறக்கும் என ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை ரத்த நோய் நிபுணர் டி.உஷா தெரிவித் தார்.<br /><br />உலக தாலசீமியா நோய் தினம் மே 8ஆம் தேதி அனு சரிக்கப்படுகிறது. இந்த நோய் குழந்தைகளுக்கு பிறவியி லேயே வருகிறது. தாலசீமியா பாதித்த குழந்தைகளின் ரத் தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருக்கும்.<br /><br />இது தொடர்பாக ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவ மனை ரத்த நோய் நிபுணர் மருத்துவர் டி.உஷா கூறிய தாவது:<br /><br />தாலசீமியா நோய் என் பது குழந்தைகளுக்கு பிற வியிலேயே ஏற்படும் ஒரு விதமான ரத்த சோகையா கும். தாலசீமியா பாதித்த குழந்தைக்கு ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருக்கும். இத னால், சுவாசிக்கும் ஆக்சிஜன் நுரையீரலில் இருந்து மற்ற பகுதிகளுக்கு செல்வதில் தடை ஏற்படுகிறது.<br /><br />அதற் காக, குழந்தைக்கு ஹீமோ குளோபின் அளவை அதிக ரிக்க 6ஆவது மாதத்தில் இருந்து ஒவ்வொரு மாதமும் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து ரத்தம் ஏற்றிக் கொண்டே இருக்க வேண் டும்.<br /><br />குழந்தைக்கு மாதம் மாதம் ரத்தம் ஏற்றுவதால், உடலில் பல விதமான பிரச் சினைகள் வருகின்றன. மேலும் இரும்பு சத்து அதிகரிப்பதால் மஞ்சள் காமாலை உள்ளிட்ட பல தீவிர நோய்களும் வருவ தற்கு வாய்ப்புள்ளது.<br /><br />அம்மா, அப்பா வம்சா வழியில் யாருக்காவது தால சீமியா நோய் இருந்தால் குழந்தைக்கும் இந்நோய் வருகிறது. முக்கியமாக சொந்த உறவுகளில் திருமணம் செய் வதால் குழந்தைகள் தாலசீ மியா நோயினால் பாதிக்கப் படுகின்றனர்.<br /><br />அதனால், பெண்கள் கர்ப்பக் காலத்தில் பரிசோதனை செய்து கருவில் இருக்கும் குழந்தை தால சீமியா நோயினால் பாதிக்கப் பட்டுள்ளதா என்பதை கண்டு பிடிக்கலாம். தாலசீமியா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டால், குழந்தை வேண்டாம் என நினைப்ப வர்கள் கருக்கலைப்பு செய்து விடலாம்.<br /><br />குறைபாட்டுடன் குழந்தையை பெற்றுக் கொண்டு வாழ்நாள் முழுவ தும் கஷ்டப்படுவதைவிட, கருக்கலைப்பு செய்துவிடு வது நல்லது. தாலசீமியா நோய்க்கு எலும்பு மஜ்ஜை மாற்று அறுவைச் சிகிச்சையே சிறந்த தீர்வாகும். - இவ்வாறு அவர் தெரி வித்தார்.<br /><br />Read more: http://viduthalai.in/page-8/79911.html#ixzz31B43Uee9<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-11118206487159933792014-05-09T06:54:23.841+05:302014-05-09T06:54:23.841+05:30சென்னை, கொழும்பு புதையுறும் நகரங்களா?
நிலத்தடி நீ...சென்னை, கொழும்பு புதையுறும் நகரங்களா?<br /><br />நிலத்தடி நீர் வகைதொகையின்றி உறிஞ்சப்படுவதால் கடலோர நகரங்களின் பூமிமட்டம் வேகமாக உள்ளிறங்குவதாக நிலவியல் விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள். சென்னை, கொழும்பு போன்ற கடலோர நகரங்கள் இதனால் கூடுதலாக பாதிக்கப் படுவதாக அவர்கள் கூறுகிறார்கள்.<br /><br />ஏற்கெனவே, சுற்றுச்சூழலில் ஏற்பட்டுவரும் கடுமை யான பாதிப்புக்கள் காரணமாக புவியானது வேகமாக வெப்பமடைந்து வருகிறது. இதன் விளைவாக கடலின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்துவருவதால் சென்னை, கொழும்பு போன்ற கடலோர நகரங்களின் கடற்கரையோர பகுதிகள் படிப்படியாக கடலில் மூழ்கும் ஆபத்து அதி கரிக்கும் என்று விஞ்ஞானிகள் ஏற்கெனவே எச்சரிக்கை விடுத்திருக்கிறாரகள்.<br /><br />இத்தகைய எச்சரிக்கைகளுக்கு மத்தியில், இது போன்ற பெரு நகரங்களில் நிலத்தடி நீரை வேக வேகமாக உறிஞ்சி எடுப்பதால் இந்த நகரங்களின் நிலமே கூட படிப்படியாக உள்ளிறங்கி வருவதாக விஞ் ஞானிகள் தற்போது கண்டறிந்து எச்சரித்திருக்கிறார்கள்.<br /><br />அதாவது, உலகின் சில பகுதிகளில் கடல்நீர் மட்டம் அதிகரிப்பதைவிட, நிலம் உள்ளிறங்குவது என்பது மோசமான பிரச்சினையாக மாறிவருவதாக, அய்ரோப்பிய ஒன்றியத்தின் நிலவியல் விஞ்ஞான ஒன்றிய அவையின் கூட்டத்தில் பேசிய விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கிறார்கள்.<br /><br />சில கடலோர நகரங்களில் கடலின் நீர்மட்டம் அதிகரிக்கும் வேகத் தைவிட, நிலப்பகுதியானது பத்து மடங்கு அதிக வேகமாக உள்ளிறங்கிக்கொண்டிருப்பதாக இந்த விஞ் ஞானிகள் எச்சரித்திருக்கிறார்கள்.<br /><br />Read more: http://viduthalai.in/page-7/79908.html#ixzz31B3gTMEx<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-80275532955716860772014-05-09T06:53:59.533+05:302014-05-09T06:53:59.533+05:30
பெரிய விலங்குகள் குறைவதால் மனிதர்களிடையே நோய்கள்
...<br />பெரிய விலங்குகள் குறைவதால் மனிதர்களிடையே நோய்கள்<br /><br /><br />விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு தொற்று நோய்கள் வருவதென்பது உலகெங்கிலுமே அதிகரித்து வருகிறது.<br /><br />யானைகள், ஒட்டகச் சிவிங்கிகள் போன்ற பெரிய விலங்கினங்களின் எண்ணிக்கை குறைவதால் உயிரினக் கட்டமைப்பில் ஏற்படும் மாற்றங்கள் இந்த போக்குக்கு காரணமாக இருக்கலாம் என புதிய ஆய்வு ஒன்று குறிப்புணர்த்துகிறது.<br /><br />கென்யாவில் வேலி போட்டு பெரிய விலங்குகள் வருவது தடுக்கப்பட்டுள்ள வனப்பகுதிகளுக்கு சென்று ஸ்மித்ஸோனியன் மய்யத்தின் ஆராய்ச்சியாளர் குழு ஒன்று ஆராய்ந்தபோது, அங்கே பெரிய விலங்குகள் இல்லாத இடங்களில், எலிகள், ஈக்கள் போன்ற நோய்ப் பரப்பும் உயிரினங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கண்டறிந்துள்ளனர்.<br /><br />பெரிய வனவிலங்குகள் இல்லாதிருப்பதற்கும், பார்டொ னெல்லா போன்ற தொற்று நோய்க்கிருமிகள் பரவுவதற்கு காரணமான காட்டு எலிகளின் எண்ணிக்கை பெருக்கத் துக்கும் இடையே தொடர்பு இருப்பதாக தற்போது நடத்தப்பட்டுள்ள ஆய்வு காட்டுகிறது.<br /><br />பார்டொனெல்லா ஈக்களின் மூலமாக மனிதர்களிடத்தே பரவும்போது, உடலுறுப்பு செயலிழப்பு, ஞாபக சக்தி இழப்பு ஏன் உயிரிழப்பே கூட ஏற்படுகிறது.<br /><br />பெரிய விலங்குகளால் சுற்றாடலில் பெரிய தாக்கம் இருக்கும் என்பதால்தான் அவை இல்லாதபோது எலி களும் ஈக்களும் பெருகிவிடுகின்றன என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.<br /><br />அவ்விலங்குகள் பெருமளவான செடிகொடிகளை உண்கின்றன, பூமியில் தமது பெரும் பாதங்களை பதித்து நடக்கின்றன. இவற்றால் நிறைய பூச்சிகள் அழிவதுண்டு.<br /><br />ஆனால் பெரிய விலங்குகள் இல்லாமல்போனால், அது நோய்ப்பரப்பும் எலிகள் மற்றும் பூச்சிகளின் பெருக் கத்துக்கு வசதியாகப் போய்விடுகிறது.<br /><br />வன விலங்குகளைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைப்பதாக இந்த ஆய்வின் முடிவு அமைந்துள்ளது என ஸ்மித் ஸோனியன் ஆய்வறிக்கையை உருவாக்கிய குழுவின் தலைவரான டாக்டர் ஹில்லரி யங் கூறினார்.<br /><br />Read more: http://viduthalai.in/page-7/79908.html#ixzz31B3YnoG4<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-45919416032249837482014-05-09T06:53:23.669+05:302014-05-09T06:53:23.669+05:30நார்ச்சத்து மிகுந்த உணவு மாரடைப்பை தடுக்கும் - ஆய்...நார்ச்சத்து மிகுந்த உணவு மாரடைப்பை தடுக்கும் - ஆய்வு<br /><br />மாரடைப்பிலிருந்து மீண்டு வந்தவர்கள் அதிக நார்ச்சத்து மிகுந்த உணவுகளை உட்கொண்டால் அவர்கள் நீண்ட காலம் வாழலாம் என்று அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.<br /><br />மாரடைப்பிலிருந்து மீண்டு வந்த நான்காயிரத்திற்கும் அதிகமான மக்களிடம் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் பொதுச் சுகாதார பிரிவு ஆய்வு நடத்தியது.<br /><br />அதில் மாரடைப்பிலிருந்து மீண்டு வந்தவர்கள் அதிக நார்ச்சத்து மிகுந்த உணவுகளை உடகொண்டால் அவர்கள் நோயால் பாதிக்கப்பட்டு 9 ஆண்டுகளுக்கு பிறகும் ஆரோக்கிய மாக உயிர் வாழ்கிறார்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது.<br /><br />Read more: http://viduthalai.in/page-7/79907.html#ixzz31B3Qz9Mp<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-6923924120567432352014-05-09T06:52:37.070+05:302014-05-09T06:52:37.070+05:30
நல்ல நினைவுகள் விரைவாக மங்குவதில்லை
நாம் வாழ்க்...<br />நல்ல நினைவுகள் விரைவாக மங்குவதில்லை<br /><br /><br />நாம் வாழ்க்கையில் சில விஷயங்களை நீண்ட நாட்களுக்கு நினைவு கொள்கிறோம். அதே நேரம் சிலவற்றை குறுகிய காலத்தில் மறந்து விடுகிறோம்.<br /><br />இது எப்படி நடைபெறுகிறது என்பதை விஞ்ஞானிகள் இப்போது கண்டறிந்துள்ளார்கள்.<br /><br />மனித குலத்தை மகிழ்ச்சியாக வைத்திருக்கவும், எதையும் தாங்கும் வல்லமை கொண்டவர்களாக மனிதர் கள் வாழ்வதற்காகவும் நல்ல நினைவுகள் நீண்டகாலம் நீடித்திருக்கின்றன என்று உளவியல் அறிஞர்கள் கண்டுபிடித்துள்ளனர்.<br /><br />தீய நினைவுகளை விட்டொழித்து நல்ல நினைவுகளை தக்க வைத்துக் கொள்வது, வாழ்க்கையில் கசப்பான உணர்வுகள் மற்றும் நிலைமைகளை சமாளித்து சாதகமான அம்சங்களை முன்னெடுக்க உதவுகிறது என்று உளவியல் வல்லுநர்கள் கூறுகிறார்கள்.<br /><br />தீய நினைவுகள் விரைவாக மங்குகின்றன எனும் ஒரு கோட்பாடு 80 ஆண்டுகளுக்கு முன்னர் முதல் முறையாக முன்வைக்கப்பட்டது.<br /><br />பின்னர் 1970 ஆம் ஆண்டுகள் தொடக்கம் இதுகுறித்து பல்லின மக்களிடம் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக சுற்றுலாப் பயணம் தொடர்பான நினைவுகள் குறித்து ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. அதில் தாங்கள் அதில் கழித்த உல்லாசமான நாள்கள், சந்தித்த மக்கள் ஆகியவை குறித்து உடனடியாக நினைவு கூர்ந்தனர்.<br /><br />அதே நேரம் தாமதமான விமானப் பயணம் போன்றவற்றை அவர்கள் நினைவு கூரவில்லை.<br /><br />இதையடுத்து இந்த ஆய்வுக் கட்டுரையை எழுதியுள்ள உளவியல் விஞ்ஞானிகள், மனிதர்களிடையே விரும்பத் தகாத நினைவுகள் மற்றும் கசப்புணர்வுகள் வேகமாக மங்கி வருகின்றன என்று தெரிவித்துள்ளனர்.<br /><br />ஆகவே இயற்கையாகவே தீய நினைவுகள் விரைவாக மங்கத் தொடங்குகின்றன என்பது நாடுகளையும் கலாச்சாரங்களையும் கடந்த ஒன்றாக உள்ளது என்று ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன என்று விஞ்ஞானிகள் தமது கட்டுரையில் தெரிவித்துள்ளனர்.<br /><br />Read more: http://viduthalai.in/page-7/79907.html#ixzz31B3CkGXu<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-74986069713794485682014-05-09T06:46:46.599+05:302014-05-09T06:46:46.599+05:30
நிரந்தர விரோதி
நாட்டின் முன்னேற்றத்திற்கு மக்கள...<br />நிரந்தர விரோதி<br /><br /><br />நாட்டின் முன்னேற்றத்திற்கு மக்கள் ஒழுக்கமே முக்கியமானது. ஆனால், நமது நாட்டில் மதமும், மூடநம்பிக்கை யும் ஒழுக்கத்திற்கு நிரந்தர விரோதியாய் இருக்கின்றன.<br />(குடிஅரசு, 13.4.1930)<br /><br />Read more: http://viduthalai.in/page-2/79895.html#ixzz31B1kDrvJ<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-74294021731331838682014-05-09T06:46:22.246+05:302014-05-09T06:46:22.246+05:30
தமிழ்நாட்டின் ஒரு நாள் நிலவரம்
ஏடுகளைப் படித்த...<br />தமிழ்நாட்டின் ஒரு நாள் நிலவரம்<br /> <br /><br />ஏடுகளைப் படித்தால் எங்குப் பார்த்தாலும் கொலை, கொள்ளை, திருட்டு மோசடி முதலிய செய்திகள்தான் முக்கிய இடம் பெறுகின்றன.<br /><br />எடுத்துக்காட்டாக மே 7ஆம் தேதி ஒரு நாளில் மட்டும் ஏடுகளில் வெளிவந்த செய்திகள் வருமாறு:<br /><br />1) சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், மீனம்பாக்கம் விமான நிலையம், கோடம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை ஆகிய மூன்று இடங்களில் ஒரே நேரத்தில் வெடிகுண்டு மிரட்டல்கள்.<br /><br />2) பெல் தொழிற்சாலையில் செல்போன் குண்டு வெடிப்பு.<br /><br />3) சென்னையில் வாக்கு எண்ணும் மய்யத்தில் போதையில் இருந்த 3 காவல்துறையினர் இடை நீக்கம்!<br /><br />4) காகித ஆலையில் பணி பெற்றுத் தருவதாக ரூ.37.88 லட்சம் மோசடி.<br /><br />5) தாய், மகள், கொலை செய்யப்பட்ட வழக்கில் மூன்று பேர் கைது (புதுக்கோட்டை - திருமயம் - வி. லட்சுமிபுரம்)<br /><br />6) அறந்தாங்கி எல்.என். புரத்தில் இரு வீடுகளில் திருட்டு.<br /><br />7) மயிலாடுதுறை லாகடம் காசி விசுவநாதர் கோயிலில் உண்டியல் உடைக்கப்பட்டு, காணிக்கைகள் திருட்டு.<br /><br />8) தஞ்சாவூர் அருகே நல்லிச்சேரி கிராமத்தில் 4 வயது சிறுமி பாலியல் வன்முறை.<br /><br />9) சேலம் மத்திய சிறையில் வார்டன்களுக்குக் கைதி மது விருந்து.<br /><br />10) திருச்சிராப்பள்ளியில் நடைப்பயிற்சி சென்ற வழக்குரைஞர் மதியழகன் வெட்டிக் கொலை.<br /><br />11) பழனி அருகே ஏழு பேர் கொண்ட முகமூடிக் கும்பல் நிதி நிறுவன அதிபர், அவரது மனைவியைக் கத்தியைக் காட்டி, மிரட்டி, இரு நூறு பவுன் நகைகள் ரூ.35,000 ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டன.<br /><br />12) செம்பனார் கோயில் அருகே பெண்ணைத் தற்கொலைக்குத் தூண்டிய இருவர்மீது வழக்கு.<br /><br />13) சிறீரங்கம் தேரோட்டத்தின்போது நகை திருடிய பெண் கைது.<br /><br />14) பெண்ணைக் காதலிக்க வற்புறுத்தி மிரட்டிய கால்நடை உதவி மருத்துவர் கைது (குடவாசல்).<br /><br />இவை எல்லாம் ஒரே நாளில் தமிழ்நாட்டில் நடைபெற்ற நிகழ்வுகள்.<br /><br />ஒரு நாளில் இந்தளவு சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்ட நிகழ்வுகள் ஆண்டு ஒன்றுக்கு எத்தனை? அஇஅதிமுக ஆட்சிக்கு வந்த கடந்தமூன்று ஆண்டுகளில் எத்தனை இலட்சம் சம்பவங்கள் என்பதை நினைத்துப் பார்க்கவே அச்சமாக உள்ளது.<br /><br />ஆனால், முதல் அமைச்சர் துணிந்து தவறான தகவல்களை வீதிகளில் நடைபெறும் பொதுக் கூட்ட மேடைகளில் மட்டுமல்ல; சட்டப் பேரவையில் கூட சொல்லுகிறார் என்றால் என்ன சொல்ல?<br /><br />தாம் ஆட்சிக்கு வந்தவுடன் தமிழ்நாட்டில் உள்ள பிக்பாக்கெட்காரர்கள் எல்லாம் ஆந்திராவுக்கு ஓடி விட்டனர் என்று சொன்னவர்தான் தமிழ்நாடு முதல் அமைச்சர். இப்படியெல்லாம் ஒரு முதல் அமைச்சரால் மனதறிந்து உண்மைக்கு மாறாக எப்படி சொல்ல முடிகிறதுஎன்பதுதான் ஆச்சரியமானது.<br /><br />தமிழ்நாட்டில் உள்ள ஏடுகளும், ஊடகங்களும்கூட பெரும் அளவு மறைத்து விடுவதுண்டு. அவற்றையும் மீறி வெளிவந்த தகவல்கள்தான் மேலே எடுத்துக்காட்டப்பட்டுள்ளவை.<br /><br />திமுக பொருளாளர் - தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள்கூட சுட்டிக் காட்டியுள்ளார் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற முதல் அமைச்சர் போதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியிருக்கிறார்.<br /><br />வெறும் அரசியல் உணர்வோடு இவற்றையெல்லாம் மறுக்காமல், ஆரோக்கியமான முறையில் சிந்தித்து சட்டம் ஒழுங்கை நிலை நிறுத்த ஒல்லும் வகையில் உரிய முறையில் தக்க நடவடிக்கைகளை மேற் கொள்வதுதான் மக்கள் நல அரசு என்பதற்கான அடையாளமாக இருக்க முடியும்.<br /><br />கடந்த ஆட்சியில் நடக்கவில்லையா என்றெல்லாம் பதில் சொல்ல ஆரம்பிப்பது சமாதானமாக ஆகி விட முடியாது.<br /><br />காவிரியில் தண்ணீர் வராததால் விவசாயம் பாதிக்கப்பட்டது என்பது போன்ற காரணங்களை இந்தப் பிரச்சினையில் கூறிட முடியாது.<br /><br />அது வேறு பிரச்சினை; இது வேறு பிரச்சினை. காவல் துறையை, தன் பொறுப்பில் வைத்திருக்கிற முதல் அமைச்சருக்கு இதில் கூடுதல் பொறுப்பும், கடமையும் உள்ளது.<br /><br />பெண்கள் சாலைகளில் நடமாட முடியவில்லை; வீட்டு வாசலில் கோலம் போடும் பெண்களின் சங்கிலிகள் அறுத்து எடுக்கப்படுகின்றன. பட்டப் பகலிலேயே கொலைகள்; மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இடங்களில்கூட வீடு புகுந்து கழுத்தை அறுத்துக் கொலை என்பதெல்லாம் எந்தவகையில் நியாயப்படுத்தப்படக் கூடியவை?<br /><br />மக்கள் உயிர் வாழப் பாதுகாப்பு இல்லையென்றால் அதைவிட அவலம் வேறு எதுவாக இருக்க முடியும்?<br /><br />மற்றவர்கள்மீது குற்றச்சாற்றுகளைப் படித்துக் கொண்டே காலத்தை ஓட்டி விடலாம் என்று நினைத்தால், அதில் ஏமாற்றம்தான் மிஞ்சும்!<br /><br />Read more: http://viduthalai.in/page-2/79897.html#ixzz31B1c7Jmc<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-4580120370004953942014-05-09T06:44:34.866+05:302014-05-09T06:44:34.866+05:30
பிரிவு 370அய் விலக்குவது: காஷ்மீருக்கும் - இந்திய...<br />பிரிவு 370அய் விலக்குவது: காஷ்மீருக்கும் - இந்தியாவுக்கும் இடையே உள்ள பாலத்தை எரிப்பதாகும்<br /><br /><br />பிரிவு 370அய் விலக்குவது:<br />காஷ்மீருக்கும் - இந்தியாவுக்கும் இடையே உள்ள பாலத்தை எரிப்பதாகும்<br /><br />காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லாஹ் கொந்தளிப்பு<br /><br />சிறீநகர்.மே8- ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லாஹ் செய்தியா ளர்களுக்கு அளித்த பேட் டியில் 370ஆவது பிரிவுக் குரிய முக்கியத்துவம் குறித்து விரிவாக குறிப் பிட்டுள்ளார். இது குறித்து விவாதிப்பதற்கு சட்ட நிபுணர்களாக ஈடுபட்டு ஜனநாயகத்தைப் புறக்க ணிப்பதன்மூலம் மாநில மக்களை புண்படுத்திவிட் டார்கள் என்று கூறினார்.<br /><br />செய்தியாளரின் பேட் டியில் காஷ்மீர் முதல்வர் பிரிவு 370அய் விலக்குவது என்பது காஷ்மீருக்கும் இந்தியாவுக்கும் இடையே உள்ள பாலத்தை எரிப்பது என்று பொருளாகும் என்று கூறியுள்ளார்.<br /><br />கேள்வி: பாஜக மோடி யின் அண்மைக்காலப் பேச்சால், இது உங்கள் தொகுதியில் அரசியல் விளம்பரத்துக்காகப் பேசியதால், நீங்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாக்கப் பட்டுள்ளீர்கள். இந்த மாநில மக்களுக்கு அறிமுக மில்லாதவருடன் நீங்கள் போராடவேண்டி உள்ளதே?<br /><br />உமர் பதில்: ஆம். மோடியின் போக்கு, தேர் தல் வாக்குறுதிகள் ஆகிய வைமூலம் நாட்டில் ஜம்மு, காஷ்மீர் மாநிலத்தில் அமைதியைக்குலைக்கும் முடிவில் உள்ளார். ஆனால், அதில் மோடியால் என்ன செய்ய முடியும்? அரசிய லமைப்பிலிருந்து 370ஆவது பிரிவை நீக்குவதாகக் கூறி உள்ளார். இதன்மூலம், ஜம்மு காஷ்மீருக்கும், இந்திய யூனியனுக்கும் இடையே உள்ள அரசியலமைப்பு பாலம் அழிக்கப்பட்டு விடும். இந்திய யூனியனிலி ருந்து அடிப்படையி லேயே ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கட்ட மைப்பை புதைகுழிக்குள் தள்ளுவதுதான் இதன் பொருளாக உள்ளது.<br /><br />இரண் டாவதாக, அவர் கட்சி அதிகாரத்துக்கு வந்தால் லடாக் பகுதியை யூனியன் பிரதேசமாக ஆக்கிவிடும் என்று உறுதி அளித்துள் ளது. இச்செயல் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை மிகுந்த மோசமான நிலைக்கு உள்ளாக்குவதாகும். ஜம்மு, காஷ்மீரைப் பிரிப்பது என்பது ஏற்கெனவே உள்ள மோசமான பிரிவினை வாதங்களுக்குத் துணை யாகிவிடும். இந்தியாவு டனான மாநிலத்தின் பரந்த உறவும், வகுப்புவாதத்தி லிருந்து அமைதியும் ஆகிய<br /><br />இவ்விரண்டுமே பாதிக்கப்படும். இந்தியர்களில் எத்தனை பேர் இந்த பயங்கர மான சூழ்நிலையைப் புரிந்து கொள்கின்றனர் என்று எனக்குத் தெரிய வில்லை. கேள்வி: இந்தியாவில் உள்ள பலருடைய கருத் தாக இருப்பதை குறிப் பிட்டாக வேண்டும். 370ஆவது பிரிவின் மூலம் வெளி மாநிலத்தவர் ஜம்மு காஷ்மீர் பகுதியில் சொத் துக்களை வாங்குவதற்கான உரிமை மறுக்கப்படு வதாக தவறாக எண்ணுகிறார்கள்.<br /><br />குடிமக்களிடையே சம உரி மைக்கான பிரச்சினையாக இது உள்ளதுகுறித்து?<br /><br />உமர் பதில்: ஆம். இப் படியான புறக்கணிப்புக்கு அரசியல் கட்சிகள்தான் முழுப்பொறுப்பு. இது எனக்கு வருத் தத்தையே அளிக்கிறது. உண்மை என்னவென்றால், 370ஆவது பிரிவுமூலம் எதுவும் செய்ய முடியாது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சட்டங்கள்தான் வெளியிலிருந்து எவரும் சொத்துக்களை வாங்குவதிலிருந்து அனுமதி மறுக் கிறது. இதுவும் சுதந்திரத்துக்கு முன் உள்ள சட்டங்களாகும். இதுபோன்ற சட்டங்கள் மற்ற பல மாநிலங்களிலும் உள்ளது. எண்ணிக்கையில் சிறிய அளவில் மக்கள்தொகை இருக்கும் மாநிலங்களில் இதுபோன்ற சட்டங்கள் உள்ளன. 370ஆவது பிரிவு முற்றிலும் மாறுபட்டது. மாநிலத்தின் சட்டம் இயற்றுதலில் உள்ள நாடாளுமன்றத் தின் அதி காரம்குறித்தது. ஜம்மு காஷ்மீர் இந்தியாவில் தொடர்ச்சியாக இருப்பது குறித்து விவரிப்பது. நாகாலாந்து போன்ற பிற மாநிலங்களிலும் இதே போன்று அதிகாரம் வழங்கப்பட் டுள்ளது. நீங்கள் 370ஆவது பிரிவை நீக்குவதன்மூலம் அடிப்படையில் இந்தி யாவிலிருந்து ஜம்மு காஷ்மீரை வெளி யேற்றுகிறீர்கள் என்றார் அவர்.<br /><br />நன்றி : தி இந்து ஆங்கில நாளிதழ் 8.5.2014<br /><br />Read more: http://viduthalai.in/e-paper/79893.html#ixzz31B1BNrQi<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-24816044447605866262014-05-09T06:44:04.277+05:302014-05-09T06:44:04.277+05:30
பக்தி வந்தால் புத்தி போகும்
சிவபெருமானுக்கு நா...<br />பக்தி வந்தால் புத்தி போகும்<br /><br /><br /><br />சிவபெருமானுக்கு நாக்கை அறுத்து காணிக்கையாம்!<br /><br />ராஞ்சி, மே 8- நாக்கை பிளேடால் அறுத்து சிவ பெருமானுக்கு காணிக்கை செலுத்திய அதிர்ச்சியான நிகழ்வு ஜார்கண்ட் மாநிலத் தில் நடந்துள்ளது. ஜார் கண்ட் மாநிலம், தூகடா வில் உள்ள மகாதேவ் கர்ஹா என்ற சிவபெரு மான் கோவிலிலுக்கு லால் மோகன் சோரன் (வயது 17) வந்தார். பின்னர் திடீர் என அந்த கோவிலில் உள்ள சிவபெருமான் சந்நிதியில் முன்னால் பிளேடு ஒன்றை எடுத்து திடீரென தனது நாக்கை அறுத்து ஒரு பாத்திரத்தில் பிடித்து காணிக்கை செலுத்தினார்.<br /><br />அவர் எழுதி வைத்து இருந்த ஒரு குறிப்பில் நான் எனது நாக்கை அறுத்து சிவ பெருமானுக்கு காணிக்கை செலுத்துகிறேன்.தயவு செய்து என்னை கோவிலை விட்டு வெளியே அனுப்பி விடாதீர்கள். நான் சிவபெரு மானின் காலடியில் இருக்க வேண்டும் என கூறி இருந் தார்.<br /><br />உடனடியாக கோவில் நிர்வாகி லால்மோகன் சோரனை மருத்துவம னைக்கு அழைத்து சென் றார். மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். ஆனால், மருத் துவர்கள் எவ்வளவோ முயன்றும் மீண்டும் அந்த இளைஞனுக்கு நாக்கை ஒட்ட வைக்க முடியவில்லை.<br /><br />தற்போது வெறும் திரவ உணவு மட்டும் சாப் பிட்டு வரும் லால்மோகன் சோரன் வாய்பேச முடியாத நிலைக்கு ஆளானார். லால் மோகன் சோரன் குடும்பத்தினர் இந்த சம்பவம் குறித்து அதிர்ச்சி அடைந்தாலும், தன்னு டைய மகன் கடவுளுக்கு கொடுத்த காணிக்கையை எண்ணி பெருமைப்படுவ தாக கூறினர்.<br /><br />Read more: http://viduthalai.in/e-paper/79891.html#ixzz31B132qxV<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-23058942929461194942014-05-08T05:04:46.937+05:302014-05-08T05:04:46.937+05:30
மூடத் தனத்தில் கிராம மக்கள்
மூடத் தனத்தில் கிராம...<br />மூடத் தனத்தில் கிராம மக்கள்<br /><br />மூடத் தனத்தில் கிராம மக்கள்<br />மணப்பாறையில் மழை வேண்டி<br />கழுதைக்கும் கழுதைக்கும் திருமணமாம்!<br /><br />திருச்சி, மே 7- திருச்சி மாவட்டம் மணப்பாறை யை அடுத்துள்ள வையம் பட்டி ஒன்றியத்திற்குட்பட்ட வத்தமணியாரம்பட்டி கிராமம் உள்ளது. இக்கிராமத் தில் கடந்த 4 ஆண்டுகளாக சரியாக மழை பெய்யவில் லையாம். இதனால் அக் கிராமத்தில் வறட்சி ஏற்பட்டு விவசாயம் பாதிக்கப்பட்டுள் ளதாம். இதனால் தண்ணீர் பற்றாக்குறையை தீர்ப்பதற் காக கழுதைக்கும், கழுதைக் கும் திருமணம் செய்து வைத்தால் மழை பெய்யும் இப்படி ஒரு நம்பிக்கையை மூடத்தனமாக நம்பி, அக்கிராம மக்கள் வெகு சிறப்பாக பத்திரிகை அடித்து, விருந்து வைத்து தடபுலாக இத்திருமணத்தை நேற்று முன்தினம் நடத்தியுள்ளனர்.<br /><br />மனிதர்களுக்கு நடத்தப் படும் திருமணத்தை போன்று கழுதைக்கும், கழுதைக்கும் இத் திருமணத்தை நடத்தியுள் ளனர். சாதாரணமாகவே பருவ மழை பொய்த்து போய் விட்டது என்பது அனை வரும் அறிந்ததே. உலக மயமாக்கலுக்கு பிறகு ஒரு குறிப்பிட்ட சமூகம் முன் னேற வாய்ப்பாக வெளி நாட்டு மூலதனங்களை முன்னிறுத்தி ஆண்டாண்டு காலமாக விவசாயத்தையே நம்பி வாழ்ந்த மக்களின் வாழ்வாதாரமான விவசாய நிலங்கள் எல்லாம் வானு யர்ந்த கட்டடங்களாக மாறி விட்டன. இந்த சூழ்நிலை யில் விவசாயத்தைப் பாது காக்க அறிவியலை நம்பி, ஆக்கப்பூர்வமான பணிகளில் ஈடுபடாமல் மக்கள் தண்ணீர் பஞ்சத்தைத் தீர்க்க இது போன்ற மூடநம்பிக்கை காரி யங்களில் ஈடுபட்டு வருவது, வெட்கப்பட வேண்டிய விசயம்.<br /><br />சாதாரண மக்களே அறியாமையின் காரணமாக இதுபோன்ற காரியங்களில் ஈடுபடுகின்றார்கள் என்பது ஒரு பக்கம் இருந்தாலும், அரசே மூடத்தனத்தின் சாக்க டையில் மூழ்கியுள்ளது என் பதுதான் உண்மை. அண் மையில் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் அறநிலையத்துறை கோவில் களில் வருணஜபம் நடத்தும் படி உத்தரவே பிறக்கப் பட்டு, அதன்படி அனைத்துக் கோவில்களிலும் யாகம் நடத்தினார்கள். மழை வந்ததா? என்றால் இல்லை!<br /><br />தண்ணீர் பஞ்சத்தைத் தீர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மாறாக இதுபோன்ற மூட நம்பிக்கை காரியங்களில் ஈடுபடும் மக்களை தடுக்கவேண்டும்.<br /><br />Read more: http://viduthalai.in/page-3/79848.html#ixzz314lYimYV<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-40393368857998920362014-05-08T05:03:00.602+05:302014-05-08T05:03:00.602+05:30
மதம் பயன்படாது
மதம் என்பது ஒரு கட்டுப்பாடு, மதத...<br />மதம் பயன்படாது<br /><br /><br />மதம் என்பது ஒரு கட்டுப்பாடு, மதத்தில் ஈடுபட்ட ஒரு மனிதன் அவன் எவ்வளவு அறிவாளியாய் இருந்தாலும், அந்தக் கட்டுப்பாட்டுக்கு அடங்கி நடக்கவேண்டும் என்பதைத் தவிர, மற்றபடி அந்த மனிதனுக்கு எந்தவிதமான பயனும் ஏற்படப் போவதில்லை. - (குடிஅரசு, 7.5.1949)<br /><br />Read more: http://viduthalai.in/page-2/79866.html#ixzz314l7lShV<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-24495351309760934412014-05-08T04:58:12.248+05:302014-05-08T04:58:12.248+05:30
முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த...<br />முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திக்கொள்ளலாம்: உச்சநீதிமன்றம் தீர்ப்பு தமிழர் தலைவர் ஆசிரியர் கருத்து<br /><br />முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை<br />142 அடியாக உயர்த்திக்கொள்ளலாம்:<br /><br />உச்சநீதிமன்றம் தீர்ப்பு<br />தமிழர் தலைவர் ஆசிரியர் கருத்து<br /><br />முல்லைப் பெரியாறு அணை விவகார வழக்கில், இன்று (7.5.2014) உச்சநீதிமன்றத்தின் அய்ந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தந்துள்ள தீர்ப்பு - 142 அடி நீர் தேக்கிக் கொள்ளும் அளவுக்கு அணை பலமாக உள்ளது;<br /><br />தனி அணை தேவையில்லை. கேரள அரசு கொண்டு வந்த புதிய அணை கட்டுவது குறித்த சட்டம் செல்லாது என்றும் கூறியுள்ளது தமிழக விவசாயிகளின் நெஞ்சில் பால் வார்த்த தீர்ப்பாகும். அய்ந்து மாவட்ட விவசாயிகள் இதனால் பலனடைவர், வரவேற்கிறோம்!<br /><br />இந்தத் தீர்ப்பினை கேரள அரசு மதித்து செயல்பட்டு, தமிழ்நாட்டுடன் நல்லுறவை வளர்க்கவேண்டும். இரு மாநில உறவுகள் வலுப்பட, உச்சநீதிமன்றத் தீர்ப்பு உதவட்டும்!<br /><br />- கி.வீரமணி,<br />சென்னை, தலைவர்,<br /><br />7.5.2014 திராவிடர் கழகம்.<br /><br />Read more: http://viduthalai.in/e-paper/79861.html#ixzz314jtSg6I<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-78733682058772681142014-05-08T04:56:48.765+05:302014-05-08T04:56:48.765+05:30
மனித நேயத்தைப் பரப்பி எல்லோருக்கும் கல்வியைத் தந்...<br />மனித நேயத்தைப் பரப்பி எல்லோருக்கும் கல்வியைத் தந்த பெருமையைப் படைத்தவர் தமிழறிஞர் கால்டுவெல் - தமிழர் தலைவர் புகழாரம் -<br /><br /><br />சென்னை, மே 7-தமிழறிஞர் கால்டுவெல் சிலைக்கு மாலை அணிவித்து பின்னர் செய்தியாளர்களிடம் தமிழர் தலைவர் கூறியதா வது:-<br /><br />தமிழுக்குத் தொண்டு செய்த தமிழறிஞர்கள், தமிழ்ப் புலவர்கள், தமிழ்ப் படைப்பாளிகள், தமிழ் இலக் கியக் கர்த்தாக்கள், தமிழ்க் கவிஞர்கள் இப்படிப்பட்ட வர்கள் போலவே வெளி நாட்டு அறிஞர்கள் அதிலும் குறிப்பாக கிறித்துவ மதத் தொண்டு செய்வதற்காக வந்த பலரும் தமிழை ஆய்வு செய்து தமிழுக்கு உரிய இடத்தை உலகளாவிய நிலையிலே அவர்களுடைய மொழிகளிலே கொண்டு சென்ற பெருமை உடையவர் களாக என்றென்றைக்கும் வரலாற்றில் வாழ்கிறார்கள்.<br /><br />அப்படிப்பட்டவர்களிலே முன்னோடியாகத் திகழக்கூடியவர் பாதிரியார் இராபர்ட் கால்டுவெல் அவர்கள் ஆவார்கள். திராவிடமொழிக்குடும்பம் என்கிற மிகப்பெரிய அள விற்கு ஒப்பியல் மொழி இலக் கணத்தை அவர்கள் சிறப்பாக அமைத்து அதன்மூலம் திரா விடர் மொழிகள் என்பது ஒரு குடும்பம். அதிலே தமிழ் அதற்குத் தலைமை தாங்கக் கூடிய தகுதி உள்ள மூத்த முதன்மையான மொழி என்ற உணர்வினை அவர்கள் அடித்தளம் இட்டவர்கள்.<br /><br />திராவிட நாகரிகம், திராவிட பண்பாடு என்பது மொழி அடிப்படையில் உருவான ஒரு சிறப்பான தனித்தன்மை யானது என் பதை அவர்கள் காட்டி இருக் கிறார்கள். அப் படிப்பட்ட பாதிரியார் இராபர்ட் கால்டு வெல் அவர்களை ஒரு மத வாதியாக பார்க்காமல் மனித நேயத்தைப் பரப்பி இங்கே எல்லோருக்கும் கல்வியைத் தந்த பெருமையைப் படைத்த பண்பும், தொண்டும் அவர் களுடைய நிலைக்கு உண்டு.<br /><br />அந்த வகையிலே இரு நூற்றாண்டுவிழா என்பது சிறப்பாக திராவிடர் இயக்கங் களாலே கொண்டாடப்படு வது மகிழ்ச்சிக்கும் பெரு மைக்கும் உரியது.<br /><br />திராவிடர் கழகத்தின் சார்பிலே வருகிற 12ஆம் தேதி அன்று பெரியார் திடலில் புதுமை இலக்கியத் தென்றல் அமைப்பின் சார்பில் கார்டு வெல்லின் இருநூறாவது நூற்றாண்டும், நம்முடைய காலத்திலே வாழ்ந்த பெரிய இலக்கிய மேதை, தமிழ் இலக்கியத்துக்கு ஒரு புத் தாக்கம் தந்து பலரை உரு வாக்குவதற்கு காரணமான பிரசன்ட விகடன் ஆசிரியர் நாரண. துரைக்கண்ணன் அவர்களின் நூற்றாண்டு விழா வும் நடைபெற இருக்கின் றது, அவர்கள் என்றைக்கும் மறைவ தில்லை, அவர்கள் சிறப்பாக வாழுகின்றவர் கள்.<br /><br />புரட்சிக்கவிஞர் அவர்கள் சொன்னதைப்போல தமிழ்த் தொண்டன் சாவதில்லை. தமி ழுக்குத் தொண்டு செய்பவர் கள் என்றைக்கும் வாழுகி றார்கள். கால்டுவெல் போன்ற அறிஞர்கள் என்றைக்கும், இன்றைக்கும் நம்மிடையே வாழுகிறார்கள்.<br /><br />- இவ்வாறு தமிழர் தலைவர் அவர்கள் செய்தி யாளர்களிடையே கூறினார்.<br /><br />Read more: http://viduthalai.in/page-8/79857.html#ixzz314jY6b00<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.com