tag:blogger.com,1999:blog-1474608369333206681.post4627626424794554327..comments2023-10-29T13:02:52.613+05:30Comments on தமிழ் ஓவியா: ஜெயேந்திரரும் - சு.சாமியும் தமிழ் ஓவியாhttp://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comBlogger49125tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-88353345425749347452015-03-23T17:42:06.604+05:302015-03-23T17:42:06.604+05:30பலே பலே - பிழைக்கத் தெரிந்த பார்ப்பனர்கள்!
பார்ப்ப...பலே பலே - பிழைக்கத் தெரிந்த பார்ப்பனர்கள்!<br />பார்ப்பனப் புரோகிதனை இணையத்தின் மூலம் வீட்டிற்கு வரவழைக்கும் புதுவித பித்தலாட்டம்<br /><br />திருமணம், கிரகப்பிரவேஷம் மற்றும் திதி போன்ற பல்வேறு காரியங் களுக்கு இனிமேல் இணையத்தின் மூலமே பார்ப்பனப் புரோகிதனைப் பதிவு செய்து விட்டிற்கு வரவழைக்க லாம். அறிவியல் உபகரணங்களை எந்த அளவிற்கு ஏளனம் செய்யவேண்டு மென்பதற்கு இந்திய பார்ப்பனர்களைப் போல் வேறு யாரும் கிடையாது.<br /><br />அயல்நாடுகளில் வாழும் பார்ப்பனர்கள் தங்களின் திருமணத்திற்கு இந்தியாவில் இருந்து பார்ப்பனப் புரோகிதர்களை வரவழைத்து மந்திரம் ஓதுவதற்கு செலவு அதிகமாவதால் காணொளி இணையதளம் மூலம் இந்தியாவில் உள்ள ஏதாவது ஒரு மூலையில் கணினி முன்பு அமர்ந்து புரியாத மொழியில் மந்திரம் ஓத அங்கே பார்ப்பனர்கள் மட்டுமல்லாது படித்து அயல்நாடு சென்று வேலைபார்க்கும் பார்ப்பன அடிமைகளும் திருமணம் செய்து கொள்ளும் வழக்கம் கடந்த 2012ஆம் ஆண்டு துவங்கியது.<br /><br />இதற்கு ஆங்காங்கே வரவேற்பு கிடைத்தாலும் பார்ப்பனர்களின் பேராசை யாரைவிட்டது? கடந்த ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் நடந்த பார்ப்பன புரோகிதர் மாநாட்டில் ஆன்லைனில் மந்திரம் ஓதுவதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர்.<br /><br />மேலும் சாஸ்திரப்படி பார்ப்பனப் புரோகிதர்கள் நேரடியாக இருந்து மந்திரம் ஓதினால் தான் எந்த ஒரு காரியமும் முழுமைபெறும் என்று யாரோ ஒரு பேராசைப் பார்ப்பான் கிளப்பிவிட்டான்.<br /><br />இந்த அய்டியாவில் உதித்தது தான் பார்ப்பனப் புரோகிதர் டாட் காம்.<br /><br />எதிலும் காசுபார்க்கும் பிரபல பலசரக்கு இணையதளம் ஒன்று இந்த பார்ப்பனபுரோகிதர் இணையதளத்தை வாங்கிவிட்டது.<br /><br />இப்போது பூசைக்குரிய சாமான்கள் வாங்கும் போதே பார்ப்பனப் புரோகிதரையும் பதிவு செய்யலாம். ஒவ்வோரு பார்ப்பனப் புரோகிதர் புகைப்படத்துடன் அவரது கல்வி மற்றும் அவர் செய்து வைத்த பல்வேறு திருமணங்கள் கிரகப்பிரவேஷ நிகழ்ச்சிகள் இணைத்திருக்கும் இதைப் பார்ப்பவர்கள் தங்களுக்குத் தேவை யான பார்ப்பனரைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாமாம்.<br /><br />சமீபத்தில் ஆன்லைனில் பூசைப் பொருள் விற்கும் இணையதளம் ஒன்றின் மீது பழனிக் கோவில், திருப்பதி மற்றும் மதுரை மீனாட்சி கோவில் நிர்வாகம் பிரசாதம் மற்றும் பூசை சாமான்கள் என்ற பெயரில் போலியான பொருட்களைத் தயாரித்து இந்தியாவில் மட்டுமல்லாது அயல் நாட்டிலுள்ள இந்துபக்தர்களையும் ஏமாற்றுகிறார்கள் என்று கூறி வழக்கு தொடர்ந்தது.<br /><br />தற்போது திடீரென பார்ப்பனப் புரோகிதனை இணையத் தில் தேடி வீட்டிற்கு வரவழைக்கும் புதுவித பித்தலாட்டம் துவங்கியுள்ளது.<br /><br />Read more: http://viduthalai.in/page7/98233.html#ixzz3VD5osAu2<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-68427958583411521252015-03-23T17:39:25.272+05:302015-03-23T17:39:25.272+05:30
திருப்பதி கோவிலில் பக்தர்களிடம் பண மோசடி
நகரி, ...<br /><br />திருப்பதி கோவிலில் பக்தர்களிடம் பண மோசடி<br /><br />நகரி, மார்ச் 23_ திருப் பதி ஏழுமலையான் கோவி லில் யுகாதி நாளை முன் னிட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டனவாம்.<br /><br />நேற்று காலை முதல் மாலை 6 மணி வரை 43,227 பக்தர்கள் ஏழு மலையானை தரிசனம் செய்தனராம். அதன்பிற கும் தர்ம தரிசனத்துக்கு 21 கம்பார்ட் மெண்டு களில் பக்தர்கள் நிரம்பி வழிந்தனராம். இவர் களுக்கு தரிசனத்துக்கு 11 மணி நேரம் ஆனதாம். பாதயாத்திரையாக வந்த பக்தர்கள் தரிசனத் துக்கு 6 மணி நேரம் காத்து இருந்தனராம்.<br /><br />கூட்டத்தைப் பயன் படுத்தி பக்தர்களிடம் பணம் மோசடி செய்த இடைத்தரகர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.<br /><br />ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டம் பிரம்மபுத்ராவைச் சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர் விக்னேஷ்வர ராவ் தனது 2 நண்பர் களுடன் கோவிலுக்கு வந்தார்.<br /><br />அப்போது அவர்களி டம் ஒருவர் அறிமுகமாகி தான் தேவஸ்தான ஊழி யர் என்றும், நபருக்கு ரூ.500 கொடுத்தால் ஏழு மலையானை உடனடி யாக தரிசிக்க ஏற்பாடு செய்வதாக கூறினார். இதை நம்பிய கல்லூரி மாணவர்கள் 3 பேரும் ஆளுக்கு ரூ.500 வீதம் ரூ.1500 கொடுத்தனர்.<br /><br />உடனே அவர் வைகுண் டம் வரிசையில் அனுப்பி உள்ளே ரமணா என்ப வர் இருப்பார் அவர் உங் களை மூலவர் அருகே அழைத்துச் செல்வார் எனக் கூறி நழுவினார்.<br /><br />ஆனால் அனுமதிச் சீட்டு இல்லாததால் அவர் களை தரிசனத்துக்கு ஊழி யர்கள் அனுமதிக்க வில்லை. ரமணாவை தேடியபோது அப்படி ஒருவர் அங்கு இல்லை என்பதும் தாங்கள் ஏமாற் றப்பட்டோம் என்பதை யும் அவர்கள் உணர்ந் தனர். பின்னர் தர்மதரி சன வரிசையில் நின்று ஏழுமலையானை தரி சித்து திரும்பினார்.<br /><br />வெளியே வந்தபோது பாஸ்போர்ட் சென்டரில் தங்களை ஏமாற்றிய இடைத்தரகர் நிற்பதை கண்டனர். உடனடியாக 3 பேரும் அவரை பிடித்து காவல் நிலையத்தில் ஒப் படைத்தனர்.<br /><br />விசாரணையில் அவ ரது பெயர் பனிக்குமார் (32) என்பதும் கிழக்கு கோதாவரி மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. பனிக் குமாரை காவல்துறையி னர் கைது செய்தனர்.<br /><br />Read more: http://viduthalai.in/page-8/98394.html#ixzz3VD58PX5S<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-61552100259105868182015-03-23T17:37:05.635+05:302015-03-23T17:37:05.635+05:30கோடையில் உடலுக்கு குளிர்ச்சி தரும் பதநீர் பதநீர்
...கோடையில் உடலுக்கு குளிர்ச்சி தரும் பதநீர் பதநீர்<br /><br />நமது தேசிய பானம் என்றும் கூறலாம். இது கலப்படமில்லாமல் அருந்தினால் இதன் சிறப்பே தனி எனலாம். நம் நாட்டில் பெரிய அளவில் இதை உற்பத்தி செய்து மருத்துவத்திற்கு பயன்படுத்தினால் இதன் செயல்பாடுகள் அளப்பரியது பல்வேறு நோய்களை நீக்கவல்லது.<br /><br />இந்த பதநீரிலும், பனை வெல்லத்திலும் எல்லாவித ஊட்ட சத்தும் உள்ளது என கண்டு அறிந்திருக்கிறார்கள். கோடை காலத்தில் தாகம் தணிக்க அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியது. இதை பருகினால் உடலுக்குநல்ல குளிர்ச்சியை ஏற்படுத்தும் ஆற்றல் கொண்டது. கோடையில் ஏற்படும் நீர் கடுப்பை நீக்க பதநீர் அருந்தலாம்.<br /><br />தொழு நோயை நீக்கும் பதநீர்<br /><br />நாளும் ஒரே பனை மரத்தில் இருந்து பதநீர் இறக்கி காலை, மாலை அருந்தி பனைஓலைப்பாயில் படுத்து பனைவிசிறியை பயன்படுத்தி பனைஓலையில் உணவு உண்டு பனைஓலை குடிசையில் 96 நாள்கள் தங்கி இருந்தால் தொழு நோய் நீங்கும் என ஒருமருத்துவ குறிப்பு உண்டு .<br /><br />மாதவிடாய் தடை<br /><br />மாதவிடாய் தடைபட்டு அதனால் கருப்பை சார்ந்த நோய்களால் பெண்கள் அவதிபடுவார்கள். இந்த நோய்களுக்கு பனையின் குருத்தை அதன் உள்பகுதியை உட்கொண்டால் மாதவிடாய் சிக்கலின்றி வெளியேறி நோயை நீக்கும் .<br /><br />இரத்த கடுப்பு<br /><br />வெந்தயத்தை 50 கிராம் எடுத்து லேசாக வறுத்து பொடித்து காலை,மாலை இருவேளை 50 மி.லி அளவு சூடாக்கிய பதநீரில் கலக்கி அருந்திவர இரத்த கடுப்பு .மூல சூடு தணியும். அதேபோல மஞ்சளை பொடித்து அரை தேக்கரண்டி 50 மிலி காலையில் இறக்கிய பதநீரில் கலக்கி உட்கொள்ள வயிற்று புண் தொண்டைப்புண், வெப்ப கழிச்சல் , சீத கழிச்சல் நீங்கும் .<br /><br />இதில் நார்ச் சத்து மிகுந்திருப்பதால் பெண்களின் பேறு காலத்திற்குப்பின் உண்டாகும் மலச்சிக்கலை நீக்குகிறது. இதயத்தை வலுப்படுத்துகிறது . இதில் உள்ள சுண்ணாம்பு சத்து எலும்புகளை வலுபடுத்துகிறது.<br /><br />Read more: http://viduthalai.in/page-4/98388.html#ixzz3VD4Zvu6M<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-37561654257494005262015-03-23T17:36:32.283+05:302015-03-23T17:36:32.283+05:30இருமலை குணமாக்கும் மாதுளம் பூக்கள்
மாதுளம் மொட்டு...இருமலை குணமாக்கும் மாதுளம் பூக்கள்<br /><br />மாதுளம் மொட்டுக்களை சேகரித்து வெயிலில் உலர்த்தி பொடி செய்து அதனை வேளைக்கு ஒரு சிட்டிகை எடுத்து வெந்நீருடன் பருகினால் இருமல் நீங்கிவிடும். மாதுளம் பூவை லேசாக தட்டி சாறு எடுக்கவும். அதனுடன் சம அளவு அருகம்புல் சாறு கலந்து மூன்று வேளை குடித்து வர உடனடி பலன் கிடைக்கும்.<br /><br />தொண்டை ரணம்: மாதுளம் பூக்களை மசிய அரைத்து அத்துடன் இரண்டு மடங்கு நீர் விட்டுக் காய்ச்சவும். கொதி வந்ததும், இறக்கி வடிகட்டி அத்துடன் சிறிது தேன், எலுமிச்சம் பழச்சாறு சேர்த்துக் வாயில் ஊற்றிக் கொப்பளித்து தொண் டைக்குள் மெதுவாக விழுங்கவேண்டும். இதனால் தொண்டை கரகரப்பு, தொண்டையில் ரணம் போன்றவை குணமடையும்.<br /><br />தாதுபலம்: தினமும் காலையில் நான்கு மாதுளம் பூக்களை மென்று தின்று பால் குடித்து வர ரத்தம் சுத்த மடையும். மாதுளம் பூவை பசும் பாலில் வேகவைத்து சிறிது தேன் கலந்து அருந்தினால் நரம்புகள் வலிமை பெறும். நரம்புத்தளர்ச்சி நீங்கும். தாதுபலம் பெறும்.<br /><br />ரத்த மூலம்: மாதுளம் பூக்களைச் சேகரித்து வெயிலில் காயவைத்து, வேலம் பிசின் 30 கிராம் எடுத்து வெயிலில் காயவைத்து இரண்டையும் உரலில் போட்டு இடித்து மாவு சல்லடையில் சலித்து வாயகன்ற கண்ணாடி பாட்டிலில் போட்டு பத்திரப்படுத்தவும். காலை, மாலை ஒரு தேக் கரண்டியளவு தூளுடன் அதே அளவு தேன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் ரத்த மூலம் குணமாகும்.<br /><br />Read more: http://viduthalai.in/page-4/98386.html#ixzz3VD4Nr0ua<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-79037706676020098652015-03-23T17:35:23.359+05:302015-03-23T17:35:23.359+05:30மணத்தக்காளி கீரையின் உடல்நலப் பயன்கள்
மணத்தக்காளி...மணத்தக்காளி கீரையின் உடல்நலப் பயன்கள்<br /><br />மணத்தக்காளிக்கீரையை உணவுடன் சேர்த்து எடுத்துக்கொண்டால் உடல் குளிர்ச்சியடையும் குறிப்பாக பூப்பெய்திய காலத்தில் சிறுமிகளுக்கு கொடுத்துவரலாம். வாரம் இருமுறை மணத்தக்காளியை உண்டு வர கடுமையான உழைப்பின் காரணமாக உடல் உள்ளு றுப்புகளில் ஏற்படும் அழற்சியை போக்கலாம்.<br /><br />இருதயத்தின் செயல்பாடு வலிமை கூடும். களைப்பை நீக்கி நல்ல உறக்கத்தை கொடுக்கும். மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் அளிக்கும். கண்பார்வை தெளிவு பெறும்.<br /><br />வயிற்று நோய், வயிறு உப்புசம், வாய்வுத் தொல்லை உடையவர்கள் மணத்தக்காளிக்கீரையை சமைத்து உண்டால் நோய்க் கட்டுப்பாட்டுக்குள் வரும். கீரையுடன் தேங்காய் சேர்த்து கூட்டு செய்து சாப்பிட்டு வந்தால் குடல் புண், மற்றும் சிறுநீர்ப்பை எரிச்சல் போன்ற பிரச்சினைகள் நீங்கும்.<br /><br />மணத்தக்காளி வற்றல் வாந்தியைப் போக்கி பசியின்மையைப் போக்கும்.கீரைப்பூச்சி என்ற தொல்லை ஏற்பட்டால் மணத்தக்காளி அதனை வெளியேற்றும். மணத்தக்காளிக் கீரைக்கு குரலை இனிமையாக்கும் குணமும் உண்டு.<br /><br />கருப்பையில் கருவலிமை பெறவும், பிரசவத்தை எளிமைப்படுத்தவும் இக்கீரை உதவுகிறது. மணத் தக்காளியின் வேர் மலச்சிக்கலை நீக்கும் மருந்துகளில் சேர்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மணத் தக்காளிப் பழம் டானிக் போல மதிப்பு மிகுந்த பழமாகும்.<br /><br />பேதி மருந்தாக இப்பழத்தைச் சாப்பிடலாம். இந்த வகையில் மிகுந்த பயனைத் தந்து, நன்கு பசி எடுக்கவும் செய்கிறது. இக்கீரையிலும் நார்ச்சத்து அதிகம் இருக்கிறது. அதனால் மலச்சிக்கலை விரைந்து குணமாக்கும்.<br /><br />மனம் காரணம் இன்றிச் சில சமயங்களில் படபடக்கும். உடலுக்குள் குத்தலும் எரிச்சலும் இருக்கும். உடம்பில் வலியாகவும் இருக்கும். எதைக் கண்டாலும் இதனால் எரிச்சலும் உண்டாகும். இந்த நேரத்தில் மணத்தக்காளிக் கீரையைப் பருப்புடன் சேர்த்து மசியலாக்கிச் சாப்பிட்டால் உடல் உறுப்புகளும், மனமும் அமைதியடையும், மனத்திற்கு மகிழ்ச்சி உண்டாகும்.<br /><br />உள் உறுப்புகளை மணத்தக்காளிக் கீரை பலப்படுத்தியும் விடுகிறது. நீர்க்கோவை நோய் மகிச்சிறந்த முறையில் குணமாக இக்கீரை பயன்படுகிறது. எல்லா வகையான காய்ச்சல் களையும் இக்கீரை தணிக்கும். காய்ச்சல் குணமாகும்வரை இக்கீரையைச் சமையல் செய்து உண்ண வேண்டும். மணத்தக்காளிப் பழமும் விரைந்து இதுபோல் காய்ச்சலைக் கட்டுப்படுத்தும்.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-35945639131383821112015-03-23T17:26:38.228+05:302015-03-23T17:26:38.228+05:30
பெண் அடிமைத்தனம் மிக மோசமான மனித இழிவு எனக் கூறி...<br />பெண் அடிமைத்தனம் மிக மோசமான மனித இழிவு எனக் கூறியவர் பெரியார்<br /><br />உயர்நீதிமன்ற நீதிபதி உரை<br /><br />தஞ்சாவூர், மார்ச்.23 தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் உலக மகளிர் நாள் கருத்தரங்கு நடந் தது. கருத்தரங்கிற்கு தமிழ்ப் பல்கலைக் கழக துணை வேந்தர் பொறுப்பு குழு உறுப்பினர் அங்கயற் கண்ணி தலைமை தாங் கினார். பல்கலைக் கழக இசைத்துறை உதவி பேரா சிரியை மாதவி வரவேற்றார்.<br /><br />கருத்தரங்கில் பெண் ணிய மஞ்சரி என்ற நூலை வெளியிட்டு சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை நீதிபதி து.அரி பரந்தாமன் பேசும்போது கூறியதாவது:<br /><br />உலகம் முழுவதும் கொண்டாடப்படும் உலக மகளிர் நாள் பெண் விடுதலைக்காக அனுசரிக் கப்படுகிறது.<br /><br />பண்டைய காலத்தில் பெண்கள் சரி சமமாக நடத்தப்பட்டு வந்த நிலையில் ஒரு கட்டத்தில் அடிமைப்படுத்தப்பட்டனர். விவசாயத் தொழில் வளர்ச்சியடைந்து சொத்துக்கு வாரிசு என்ற நிலை உருவானபோது, பெண்கள் பொருளாகவும், பின்னாளில் வெறும் இயந்திரமாகவும் கருதப் பட்டு அடிமைப்படுத்தப் பட்டனர்.<br /><br />இந்த அடிமைத்தனம் நம்முடைய நில உடைமை சமூகத்தில் கொடிகட்டிப் பறக்கிறது. இந்த அடி மைத் தனத்துக்கு எதி ராகக் குரல் கொடுக்கப் படுகிறது. இந்த அடிமை முறையைப் பெண்களும் அக்காலத்தில் ஏற்றனர். இதனால், பெண்கள் பொருளாகப் பார்க்கப்பட் டதுடன், பாலியல் இயந் திரமாகவும், கருவியாகவும் பயன்படுத்தப்பட்டனர். மன்னர்கள் காலத்தில் உடன் கட்டை ஏறுதல், இளவயது திருமணம், தேவதாசி முறை உள் ளிட்ட கொடுமைகளைப் பெண்கள் அனுபவித்தனர்.<br /><br />உறுதியாகக் குரல் கொடுத்தவர் பெரியார்<br /><br />கடந்த நூற்றாண்டில் தொழில், விஞ்ஞான, சமூக வளர்ச்சி அடைந்த நிலை யில் பெண் விடுதலைக்கும் குரல் எழுப்பப்பட்டது. பெண் விடுதலைக்காகப் பல பேர் குரல் கொடுத் தாலும், உறுதியாகக் குரல் கொடுத்தவர் தந்தை பெரியார். மற்ற அடிமைத் தனங்களை விட பெண் அடிமைத்தனம் மிக மோசமான மனித இழிவு செயல் எனக் கூறினார் பெரியார்.<br /><br />இளவயது திருமணம், தேவதாசி முறை உள் ளிட்ட கொடுமைகளை எதிர்த்து 1940 ஆம் ஆண்டு முதல் மாபெரும் இயக்கம் நடைபெற்று வருகிறது. என்றாலும், பெண்களுக்கு இன்னும் சம அளவு உரிமை கிடைக்கவில்லை. எல்லா துறைகளிலும் பெண்கள் கால் பதித்துள்ளனர் என்றாலும், ஆட்சி முறையில் சம அளவு பங்கு பெறவில்லை. உதா ரணமாக உச்சநீதிமன் றத்தில் உள்ள 31 நீதிபதி களில் ஒரு பெண் மட் டுமே உள்ளார். உயர் நீதி மன்றத்தில் உள்ள 60 நீதிபதிகளில் 3 பேர் மட் டுமே பெண்கள்.<br /><br />இந்த நிலைமை மாற இதுபோன்ற கருத்தரங்கங்களில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். மேலும், மாற்று சிந்தனை உருவாக வேண்டும்.<br />இவ்வாறு அவர் கூறினார்.<br /><br />Read more: http://viduthalai.in/e-paper/98373.html#ixzz3VD1x7Tyy<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-43589575391792896832015-03-23T17:26:08.844+05:302015-03-23T17:26:08.844+05:30காவிக் கூட்டத்தின் வன்முறை கைவரிசை
மகாராஷ்டிராவில...காவிக் கூட்டத்தின் வன்முறை கைவரிசை<br /><br />மகாராஷ்டிராவில் 300 ஆண்டு பழைமையான தேவாலயம் தாக்கப்பட்டது<br /><br /><br />பன்வேல்(மகாராஷ்டிரா) மார்ச் 23 நவி மும்பையில் 17-ஆம் நூற்றாண்டில் போர்ச்சுகீஸியர்களால் கட்டப்பட்ட தேவாலயம் ஒன்று தாக்குதலுக்கு ஆளானது. டில்லி, ஹரி யானா, மத்தியபிரதே சத்தைத் தொடர்ந்து மகாராஷ்டிராவிலும் காவிகளின் கைவண்ணம் தொடர்கிறது. வெள்ளிக்கிழமை இரவு மத்தியபிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள தேவாலயம் ஒன்று அடித்து நொறுக்கப்பட்ட நிலையில் சனிக்கிழமை அன்று இரவு நவிமும்பை யில் உள்ள தேவாலயம் ஒன்றும் தாக்குதலுக்கு ஆளானது.<br /><br />நவிமும்பையில் உள்ள செயின்ட்ஜார்ஜ் கத்தோலிக்க தேவாலயம் 17 ஆம் நூற்றாண்டில் போர்ச்சுகீஸியர்களால் கட்டப்பட்டது. நவிமும் பையில் முதல்முதலாக பள்ளிக்கூடம் ஒன்றும் இந்த தேவாலயத்தின் நிர்வாகத்தினரால் கட்டப் பட்டதாகும். ஆங்கிலேயர் காலத்தில் கல்லூரியாக மாற்றப்பட்ட இந்த தேவாலயத்தின் கீழ் பல்வேறு கல்வி நிறுவ னங்கள் இயங்கி வருகின் றன. இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு ஆராதனைக்காக காலை யில் தேவாலயத்திற்கு வந்தவர்கள் தேவாலயத் தின் வெளிப்புறமுள்ள சிலைகள் உடைந்து கிடப் பதையும் பல இடங்கள் கல்லெறிந்து தாக்குதல் நடத்தியதற்கான அடை யாளங்களைக் கண்டனர். உடனடியாக இவ்விவ காரம் குறித்து பன்வேல் காண்டேஷ்வர் காவல் நிலையத்தில் புகார் செய் யப்பட்டது. இந்த தாக் குதல் குறித்து மாநில கிறிஸ்தவ சிறுபான்மை யினர் அமைப்பின் தலை வர் ஆபிரகாம் மாத்யூ கூறும்போது இந்தப் பகுதியில் உள்ள சில இந்து அமைப்பைச் சேர்ந் தவர்கள் கடந்த சில நாட் களாகவே தேவாலயத் திற்கு வரும் கிறிஸ்தவர் களை அவதூறாக பேசு வதும், மிரட்டுவதுமாக தொடர்ந்தது, இது குறித்து அரசுக்கு எழுத்து மூலமாகவும் புகார் அளித் துள்ளோம். அதே நேரத் தில் காவல்துறையிலும் பல கிறிஸ்தவர்கள் புகார் செய்துள்ளனர். இந்த நிலையில் நேற்று இரவு மோட்டர் சைக்கிளில் வந்த சிலர் கற்களை தேவாலயத்தின் மீது வீசியுள்ளனர். இதில் தேவாலயத்தின் வாயிலில் வைத்துள்ள செயின்ட் ஜார்ஜ் உருவச்சிலை சேதமடைந்துள்ளது,<br /><br />புனிதநூல் வைக்கப்படும் பீடத்தில் உள்ள கண்ணா டிகளை உடைத்துள் ளனர். மேலும் கதவின் மேல் உள்ள பரிசுத்த மாதா சிலையின் கண் ணாடிகளையும் உடைத்து விட்டுச் சென்றுள்ளனர். இது திட்டமிட்ட தாக் குதலே ஆகும். திடீரென இந்த தாக்குதல் நடக்க வில்லை. இந்தப்பகுதியில் உள்ள 4 தலைமுறை மக் களுக்கு மதம் இனம் பாராமல் கல்விபோதித்த எங்கள் தேவாலயத்தின் மீது தாக்குதல் நடத்த எப்படித்தான் இவர் களுக்கு மனம் வந்ததோ என்று கூறினார். இச்சமபவம் குறித்து பன்வேல் நகர காவல் துறை இணை ஆணையர் சூரியவன்சி கூறும்போது இந்த விவகாரம் தொடர் பாக நாங்கள் விசாரணை செய்து வருகிறோம். விரை வில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்று கூறினார்.<br /><br />Read more: http://viduthalai.in/e-paper/98371.html#ixzz3VD1oJoPZ<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-89433098004226690192015-03-22T17:23:35.352+05:302015-03-22T17:23:35.352+05:30இதுதான் பிரதமர் மோடியின் சாதனை
300 நாட்களில் 600 ...இதுதான் பிரதமர் மோடியின் சாதனை<br /><br />300 நாட்களில் 600 மதக் கலவரங்கள் 49 பேர் மரணம்!<br /><br />மனித உரிமை அமைப்புகள், தொழிற்சங்கங்கள் அதிர்ச்சி அறிக்கை<br /><br />புதுடில்லி, மார்ச் 22- மோடி தலைமையிலான பாஜக ஆட்சியின் 300 நாட் களில் 600 மதக்கலவ ரங்கள் நடந்துள்ளன; அதில் 49 பேர் மரண மடைந்துள்ளனர் என்று தொழிற்சங்கங்களும் மனித உரிமை அமைப்புகளும் கண்டனம் தெரிவித் துள்ளன.<br /><br />மோடி ஆட்சியின் கீழ் அதிகரித்து வரும் சிறு பான்மையினர் மீதான தாக்குதல்கள் மற்றும் வன்முறைகளை எதிர்த்து புதுடில்லியில் நாடாளு மன்ற வீதியில் நாடு முழுவதும் உள்ள மனித உரிமை அமைப்புகளும் சிஅய்டியு, ஏஅய்டியுசி உள்ளிட்ட தொழிற்சங் கங்களும் இணைந்து ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தின.<br /><br />அப்போது மோடி ஆட்சியின் 300 நாட் களில் 600 மதக்கலவ ரங்கள் என்ற பெயரில் 100 பக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டனர். அந்த அறிக்கையில் கூறியுள்ளதாவது: மோடி ஆட்சிக்கு வந்து 300 நாட்களில், இன்றைக்கு மார்ச் வரை 600 மதக் கலவரங்கள் நடத்தப்பட் டுள்ளன. இவை திட்ட மிடப்பட்டு சிறுபான்மை யினர் அதிகமாக இருக் கும் பகுதிகளில் நடத்தப் பட்டவையாகும். இந்த கலவரங்களில் 49 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 149 தாக்குதல்கள் கிறிஸ் துவர்கள் மீது நடத்தப் பட்டுள்ளன.<br /><br />மீதி முஸ்லிம்களின் மீது நடத்தப்பட்டவை யாகும். ஆனால், கிறிஸ் தவ அமைப்புகள் 168 வன் முறைகள் நிகழ்ந்துள்ள தாக ஆவணப்படுத்தியுள் ளன. இதில் சத்தீஸ்கரில் தான் அதிகபட்சமாக 28 சம்பவங்கள் நடந்துள் ளன. இதனைத் தொடர்ந்து மத்தியப் பிரதேசத்தில் 26ம் உத்தரப்பிரதேசத்தில் 18ம் தெலுங்கானாவில் 15ம் நடத்தப்பட்டுள்ளன. சமீபத்தில் மேற்கு வங்கத்தில் 73 வயது இறைப்பணி செவிலியர் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் கொடூரம் ஒரு திட்டமிட்ட சிறுபான் மையினர் மீதான வன் முறையின் ஒரு பகுதி யாகும்.<br /><br />இது எங்குமே நடை பெறாத கொடூரம் ஆகும். நேரடியான கலவரங்கள் மூலம் நடத்தப்பட்ட தாக்குதல்கள் நீங்கலாக, ஜனநாயக அமைப்புகள் மீது எண்ணற்ற தாக்கு தல்கள் தொடுக்கப்பட் டன. இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது.<br /><br />Read more: http://viduthalai.in/e-paper/98312.html#ixzz3V7AfSzhz<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-12677767441736657752015-03-22T17:21:31.623+05:302015-03-22T17:21:31.623+05:30இன்றைய ஆன்மிகம்?
பிரகதீஸ்வரர்
பிரகதீஸ்வரம் என்றா...இன்றைய ஆன்மிகம்?<br /><br />பிரகதீஸ்வரர்<br /><br />பிரகதீஸ்வரம் என்றால் உலகெங்கும் வியாத் திருப்பது என்று பொரு ளாம்; அப்படியென்றால் தஞ்சை பிரகதீஸ்வரர் அமெரிக்கா, ஜப்பான், சீனா, ருசியா உள்ளிட்ட நாடுகளில் எல்லாம் வியா பித்துள்ளாரா? ஏற்றுக் கொள்ளத்தக்கக் கடவுளா? ஒபாமாவும் அன்றாடம் பிரகதீஸ்வரரைத்தான் வணங்குகிறாரா?<br /><br />Read more: http://viduthalai.in/e-paper/98311.html#ixzz3V7A9SWXJ<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-23569987516450468262015-03-22T17:20:17.871+05:302015-03-22T17:20:17.871+05:30மோடி அரசுக்கு சொந்தக் கட்சி ஆளும் மாநிலமே எதிர்ப்ப...மோடி அரசுக்கு சொந்தக் கட்சி ஆளும் மாநிலமே எதிர்ப்பு!<br />கோவாவில் மாட்டிறைச்சிக்குத் தடையில்லை!<br /><br />கோவா முதல் அமைச்சர் அறிவிப்பு<br /><br />பானாஜி மார்ச் 22_ பாஜக ஆளும் மாநில மான கோவாவில் மாட் டிறைச்சிக்குத் தடை விதிக்க இயலாது என அம்மாநில முதல்வர் லட் சுமிகாந்த் பரோஷ்கர் எதிர்ப்பு தெரிவித்துள் ளார். பரோஷ்கரின் இந்த அறிவிப்பால் மத்தியில் உள்ள பாஜகவிற்கு நெருக் கடி ஏற்பட்டுள்ளது. மத்தியில் பாஜக தலைமையில் ஆன அரசு அமைந்த உடனேயே நாடுமுழுவதும் இறைச்சிக்காக மாடு களைவெட்டுவதை தடைசெய்யவேண்டும் என்ற கோரிக்கையை ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் துணை அமைப் புகள் கோரிக்கை வைத் தன. இதைத் தொடர்ந்து குஜராத்தில் உள்ள பல் டானா என்ற மாவட் டத்தை மாட்டிறைச்சி இல்லாத மாவட்டமாக அறிவித்தது. இதனைத் தொடர்ந்து ராஜஸ் தானில் உள்ள சில மாநக ராட்சிகள், மத்தியப் பிரதேசத்தில் சில மாவட் டங்கள் என மெல்ல மாட்டிறைச்சி தடை விதித்துக் கொண்டே சென்றது, கடந்த நவம்பர் மாதம் மகாராஷ்டிரா மாநிலத்தில் பதவி ஏற்ற தேவேந்திரபிட்னவிஸ் தடாலடியாக மாநிலம் முழுவதும் மாட்டிறைச் சிக்கு தடைவிதித்தார்.<br /><br />இதனால் அந்த மாநிலத் தைச் சேர்ந்த 15-லட்சத் திற்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்பை ஒரே நாளில் இழந்தனர். இந்த தடையை நாடுமுழுவதும் கொண்டுவரும் முயற் சியில் பல்வேறு பொதுக் கூட்டங்கள் கருத்து கேட்புக்கூட்டங்களை மத்திய அரசு நிகழ்த்தி வருகிறது, தமிழகத்தில் கூட கோவையில் விளம் பரமில்லாமல் சில இந்து அமைப்புகள் மாட்டி றைச்சி தடை செய்ய வேண்டுமா வேண்டாமா என்ற கருத்துகணிப்பை நடத்தியுள்ளன.<br /><br />மத்திய அரசின் சட்ட திட்டங்கள்பற்றிக் கவலையில்லை<br /><br />இந்த நிலையில் பாஜக ஆளும் மாநிலங்களில் ஒன்றான கோவாவில் மாட்டிறைச்சியை தடை செய்யமாட்டோம் என்று கோவா மாநில முதல்வர் அறிக்கைவிடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: எங்களுக்கு மத்திய அரசின் சட்ட திட்டங்கள் குறித்து கவலையில்லை எங்களின் மாநிலத்தில் பெரும் பான்மை என்ணிக்கையில் மாட்டிறைச்சி உண்பவர் கள் வாழ்கிறார்கள். அவர்களின் வாழ்க்கை யில் ஒரு பகுதியாக மாட் டிறைச்சி உள்ளது. ஆகை யால் இந்த மாநிலத்தில் மாட்டிறைச்சி உண்பதை தடைசெய்யும் எண்ணம் எங்களுக்கு இல்லை. மேலும் அவர் கூறிய தாவது, பசு அல்லது காளைகளை சில இந் துக்கள் புனிதமாக கருது கிறார்கள். அதற்காக பெரும்பான்மையான எண்ணிக்கையில் மாட் டிறைச்சி உண்ணும் மக் களின் உணவுப்பழக்கத் தில் கைவைக்கமுடியாது. ஊடகங்கள் பாஜக சிறுபான்மையின விரோத கட்சியாக காட்டிவரு கிறது, ஆனால் நாங்கள் ஊடகங்களின் இந்த போக்கிற்கு பலியாகமாட் டோம். கோவாவில் எக்காரணத்தைக் கொண் டும் மாட்டிறைச்சிக்கு தடைவிதிக்கமாட்டோம், என்று கோவா முதல்வர் கூறியுள்ளார்.<br /><br />மாட்டிறைச்சி மேளா ஆண்டுதோறும் கோவா விழா ஏப்ரல் மாதம் நடைபெறும் இந்த விழாவில் மாட்டிறைச்சி மற்றும் கடல் உணவு வகைகள் முக்கிய இடம் பெறும், இந்த விழாவின் போது உலகம் முழுவதிலும் இருந்து சுற்றுலாப்பயணிகள் வருவார்கள். அருகில் உள்ள மகாராஷ்டிரா மாநிலம் மாட்டிறைச்சிக்கு தடைவிதித்துள்ளதால் கோவாவிலும் இதன் தாக்கம் எதிரொலிக்கும் அப்படி இங்கும் மாட்டிறைச்சிக்கு தடைவிதிக்கப்பட்டால் கோவாவிற்கு வரும் சுற்றுலாப்பயணிகளையே அது எதிரொலிக்கும் இதன் மூலம் கோவாவின் முக்கிய பொருளாதார முதுகெலும்பான சுற்றுலா தடைபட்டுப்போகும் ஆகையால் வருமானம் கைவிட்டுப் போகக் கூடாது என்பதற்காக முன்கூட்டியே கோவா முதல்வர் இந்த அறி விப்பை வெளியிட்டுள் ளார்.<br /><br />முன்னாள் ஆர்.எஸ்.எஸ். தீவிர உறுப்பினரான கோவாமுதல்வரின் இந்த அறிக்கைக்கு இதுவரை ஆர்.எஸ்.எஸ் தலைமை யில் இருந்து எந்த எதிர்ப் பும் வரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது<br /><br />Read more: http://viduthalai.in/e-paper/98310.html#ixzz3V79ovfXH<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-10193434094327247342015-03-21T18:27:06.383+05:302015-03-21T18:27:06.383+05:30நெய்வேலி அருகே பழைமையான கல் ஆயுதம் கண்டெடுப்பு
மர...நெய்வேலி அருகே பழைமையான கல் ஆயுதம் கண்டெடுப்பு<br /><br />மருங்கூர் கிராமத்தில் சுமார் 2200 ஆண்டுகள் பழைமையான கல் ஆயு தத்தை சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வரலாற்றுத் துறை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்.<br /><br />கடலூர் மாவட்டம், நெய்வேலி அருகே உள்ள மருங்கூர் கிராமம் பல அரிய தகவல்கள் பொதிந்துள்ள இடமாக கருதப்படுகிறது. இங்கு அரசு மருத்துவமனைக்கு வடக்குப் பகுதியில், கிழக்கு மேற்காக சுமார் 5.5 ஏக்கர் பரப்பளவு நிலத்தில் பழங்கால மக்கள் பயன்படுத்திய பல்வேறு பொருள்கள் கிடைத்து வருகின்றன.<br /><br />அதாவது, சுமார் 2200 ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பகுதியில் இரும்புக் காலத்திய மக்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் கிடைத்து வருகின்றன.<br /><br />கல் ஆயுதம்: இந்நிலையில், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இந்த ஊரைச் சார்ந்த ராஜசேகர் என்பவர், தனது தோட்டத்தில் மரக்கன்றுகள் நடுவதற் காக தோண்டியபோது, சுமார் மூன்ற ரையடி ஆழத்தில் கல் ஆயுதம் கிடைத் துள்ளதாக சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வரலாற்றுத் துறைக்கு தகவல் அளித்தார்.<br /><br />அதன்பேரில், இந்தத் துறையைச் சார்ந்த தொல்லியல் ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன் உள்பட ஆய்வு மாணவர்கள் கல் ஆயுதத்தை ஆய்வு செய்தனர். 1,050 கிராம் எடை கொண்ட கூழாங்கல்லின் நடுப்பகுதியில் 6 செ.மீ. அளவில் வட்ட வடிவ துளை இடப்பட்டுள்ளது. மேலும், 12 செ.மீ. சுற்றளவும், 6 செ.மீ. கணமும் கொண்ட தாக இந்த ஆயுதம் வடிவமைக்கப்பட் டுள்ளது.<br /><br />இந்த ஆயுதத்தின் நடுவில் உள்ள துளையில் 6 செ.மீ. கன அளவு கொண்ட ஒரு வலிமையான மரக் குச்சியினை சொருகி, கதை போன்ற தற்காப்பு ஆயுதமாக பண்டைய கால மக்கள் பயன்படுத்தியிருக்கலாம்.<br /><br />மேலும், நெல், பயறு வகை தானி யங்களை பிரித்தெடுக்கவும், விலங்கு களை வேட்டையாட சுத்தியல் போன்ற கருவியாகவும் இந்த ஆயுதத்தை பயன் படுத்தி இருக்கலாம் என தெரிகிறது.<br /><br />கடந்த 2009-ஆம் ஆண்டு இந்த ஊரைச் சார்ந்த ராமலிங்கம் என்பவர், தனது நிலத்தை சீர் செய்தபோது, 4 அடி ஆழத்தில் உடைந்த முதுமக்கள் தாழிகள், அதன் மூடுகற்கள் கிடைத்தன. அந்தப் பகுதியில் இருந்து தமிழ் பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட மட்கல ஓடுகளும் கிடைத்தன.<br /><br />பண்டைகால மக்களின் வாழ்விடப் பகுதி: இந்தக் கிராமத்தின் தெற்குப் பகுதியில் உள்ள குளத்தின் கிழக்கு கரைப் பகுதியில் 10 அடி உயரமும், ஒரு ஏக்கர் பரப்பளவும் கொண்ட பண் பாட்டு மேடு உள்ளது.<br /><br />இந்தப் பகுதியில் கடந்த 2005-ஆம் ஆண்டு சாலை சீரமைக்க பள்ளம் தோண்டியபோது பழங்கால செங்கற்கள், சிவப்பு நிற மட்கல ஓடுகள், நான்கு கால்களுடன் கூடிய அம்மிக்கல், பெண்கள் விளை யாடுவதற்குப் பயன்படுத்திய சில்லு கருவிகள் கிடைத்தன.<br /><br />மேலும், சுமார் 9000 ஆண்டுகளுக்கு முன்பு மருங்கூர் பகுதியில் வாழ்ந்த நுண்கற்கால மக்கள் பயன்படுத்திய கல் லாயுதங்கள், கற்செதில்கள், பிறைவடிவ கல்லாயுதங்களும் இந்தப் பகுதியில் நடத்தப்பட்ட கள ஆய்வில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.<br /><br />தற்போது கல் ஆயுதம் கிடைத்த இடத்தில் இருந்து சுமார் 100 மீட்டர் தூரத்தில் இரும்புக் கால பண்பாட்டை சார்ந்த மக்களின் முதுமக்கள் தாழிகள் காணப்படுவதால், இந்த ஆயுதமும் அதே காலக்கட்டத்தை சார்ந்ததாக இருக்கலாம் என சிவராமகிருஷ்ணன் தெரிவித்தார்.<br /><br />Read more: http://viduthalai.in/page4/98230.html#ixzz3V1a999Es<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-80870407278779175272015-03-21T18:26:33.625+05:302015-03-21T18:26:33.625+05:30தாலி வந்தது ஏன்?
சென்னை அரசாங்கத்தின் ஆணைப்படி வ...தாலி வந்தது ஏன்?<br /><br />சென்னை அரசாங்கத்தின் ஆணைப்படி வெளியிடப்பட்ட மலபார் அஞ்சேங்கோ (Malabar and Anjengo) கெஜட்டின் பதிப்பாசிரியர் சி.ஏ. கின்னஸ் அய்.சி.எஸ். பின்வருமாறு சொல்கிறார்.<br /><br />மருமக்கள் தாயம் என்ற முறையையும், மக்கள் தாயம் என்ற முறையையும் கடைப்பிடித்து வந்த எல்லாப் பிரிவு மக்களிடையிலும் வேறொரு திருமணச் சடங்கு முறை காணப்பட்டது. அந்தத் திருமண முறை தாலி கட்டுத் திருமணம் என்று சொல்லப்பட்டது. மலையாளிகளின் திருமணப் பழக்கங்களில், இந்தத் தாலி கட்டுத் திருமணம் என்பது தனித்தன்மை வாய்ந்தது.<br /><br />புதுமையானது; வேறுபட்ட தன்மையுடையது என்றெல்லாம் சொல்லப்படுகிறது. ஒரு பெண் பூப்படைவதற்கு முன் அவள் கழுத்தில் ஒரு தாலியைக் கட்டுவது தான் இந்தப் பழக்கத்தின் அடிப்படையாகும். அந்தப் பெண்ணின் ஜாதி அல்லது அவளைவிட உயர் ஜாதியைச் சேர்ந்த ஒரு மனிதனால் இந்தத் தாலி கட்டப்படுகிறது.<br /><br />அதற்குப்பிறகுதான் அந்தப் பெண் சம்பந்தம் என்னும் மண ஒப்பந்தம் செய்வதற்குரிய உரிமையைப் பெறுகிறாள். தாலி கட்டுகிறவன் அல்லது மணவாளனுக்கு அந்தப் பெண்ணுடன் இணையும் உரிமையை வழங்கு வதற்காகத்தான் தாலி கட்டும் திருமணம் என்னும் சடங்கு நடத்தப்படுகிறது என்று பொதுவாகக் கருதப்படுகிறது.<br /><br />சத்திரியர்கள், அதற்கும் மேலாகப் பூதேவர்கள் என்று சொல்லப் பட்ட பிராமணர்கள் ஆகியோர் கீழ்ஜாதிப் பெண்களை முதலில் அனுபவிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டதுதான் இந்தச் சடங்கு முறையின் தோற்றுவாயாக இருக்கக் கூடும் என்று சிலர் கருதுகிறார்கள். (தொகுதி (பக்.101)<br /><br />(டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் எழுதிய காங்கிரசும், காந்தியும் தீண்டத்தகாதவர்களுக்குச் செய்ததென்ன? என்ற நூலின் பக்.205-206)<br /><br />Read more: http://viduthalai.in/page4/98229.html#ixzz3V1ZqbbAz<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-76716099638432207732015-03-21T18:23:38.936+05:302015-03-21T18:23:38.936+05:30பித்தக்கோளாறைப் போக்கும்அன்னாசி
இயற்கை நமக்கு அளி...பித்தக்கோளாறைப் போக்கும்அன்னாசி<br /><br />இயற்கை நமக்கு அளித்துள்ள கொடைகளில் முக்கியமான பழங் களில் ஒன்று அன்னாசிப் பழம். அன்னாசியில் மாங்கனீஸ் சத்துக்கள் நிறைய உள்ளன. சமீபத்திய ஆய்வுகளில் இது நிரூபிக்கப் பட்டுள்ளது.<br /><br />அன்னாசி பெரும்பாலும் வெப்ப மான பகுதிகளில் பயிரிடப்படுகிறது. புரதத்தை செரிக்கக் கூடிய புரோமலைன் என்ற என்சைம் இதில் அதிகம் உள்ளது. இது ரத்தம் உறையாமல் பாதுகாக்கிறது. தையாமின் மற்றும் வைட்டமின் சி சத்தும் அன்னாசியில் அதிகம் உள்ளது.<br /><br />அன்னாசிப் பழம் சாப்பிடுவதால் காது மற்றும் சளித்தொல்லை, ஃப்ளூ காய்ச்சல் உள்ளிட்டவற்றில் இருந்தும் பாதுகாப்பு கிடைக்கும். இப்பழத்தில் உள்ள மாங்கனீஸ் உடலில் ஆன்டி ஆக்சிடன்ட்களின் சக்தியை அதி கரிக்கும்.<br /><br />இது இதய நோய்கள் மற்றும் மாரடைப்பில் இருந்து பாதுகாப்பளிக்கிறது. இப்பழத்தில் உள்ள இதர பிற வைட்டமின்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.இது சோர்வின்றி செயல்பட ஏதுவாகிறது. உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள அன்னாசி நிறைய சாப்பிடலாம் என்கின்றனர் டாக்டர்கள்.<br /><br />அன்னாசி பழத்தில் விட்டமின் பி உயிர்ச்சத்து அதிக அளவில் உள்ளது. அது உடலில் ரத்தத்தை விருத்தி செய்வதாகவும், உடலுக்கு பலத்தை தருவதாகவும் இருப்பதோடு, பல நோய்களை குணப்படுத்தும் அரிய மருந்தாகவும் இருக்கிறது. தேகத்தில் போதுமான ரத்தமில்லாமல் இருப்பவர் களுக்கு அன்னாசிப்பழம் ஒரு சிறந்த மருந்தாகும்.<br /><br />நன்றாக பழுத்த அன்னாசி பழத்தை சிறு சிறு துண்டுகளாக செய்து வெய்யிலில் தூசிப்படாமல் உலர்த்தி வற்றல்களாக செய்து வைத்து கொண்டு தினமும் படுக்க செல்வதற்கு 1/2 மணி நேரத்திற்கு முன்னதாக ஒரு டம்ளர் பாலில் 5 அன்னாசி வற்றல்களை ஊற வைத்து, பின் படுக்கச் செல்லும் போது ஊறிய வற்றல்களை 48 நாட்கள் சாப் பிட்டு வரவேண்டும்.<br /><br />இதனால் பித்தம் சம்பந்தமான அனைத்துக் கோளாறுகளும் நீங்கும். அன்னாசிப் பழத்தை, தொடர்ந்து சாப்பிட்டு வர பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை நோய் குணமாகும்.அன்னாசி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர, அனைத்து விதமான உடல் உபாதை களும் தீரும். இதைத் தொடர்ந்து ஜூஸ்சாகவும் குடித்து வர, ஆண்களின் முக அழகு பொலிவு பெருகும்.<br /><br />ஒரு நாளைக்கு தேவையான மாங்கனீஸ் உப்பைப் பெற ஒரு கப் பழத் துண்டுகளைச் சாப்பிட்டு வந்தால் போதும் அல்லது அரைப்பழம் சாப்பிட்டால் போதும். பழம் புதிய பழமாக இருக்க வேண்டும். பொட்டாசியம், கால்சியம் போல உடல் நலத்திற்குத் தேவையான உப்பு குளுக்கோஸ் வளர்சிதை மாற்றத்தில் பங்கு வகிக்கிறது.<br /><br />அன்னாசி பித்தக் கோளாறுகளை விரைந்து குணமாக்குகிறது. அன்னாசியில் கொழுப்பு குறைவு, நார்ச்சத்து அதிகம், அன்னாசியில் புரதம் தாராளமாக இருப்பதால் ஜீரணக் கோளாறு உடலில் வீக்கம் போன்றவை எதிர்ப்படாது. இளம்பெண்கள் உட்பட அனைவரின் தொப்பையையும் கரைக்கும் சக்தி அன்னாசிக்கு உண்டு.<br /><br />ஓர் அன்னாசிப்பழத்தைச் சிறு துண்டுகளாக நறுக்கி நான்கு தேக்கரண்டி ஓமத்தை பொடி செய்து அதில் போட்டு நன்றாகக் கிளறி ஒரு டம்ளர் தண்ணிர் ஊற்றிக் கொதிக்க விடவும்.இரவில் அதை அப்படியே வைத்திருந்து மறு நாள் காலையில் அதைப் பிழிந்து சாறு எடுத்து வெறும் வயிற்றில் சாப்பிடவும். இந்த முறைப்படி பத்து நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உங்கள் தொப்பை கரைய ஆரம்பிக்கும்.<br /><br />Read more: http://viduthalai.in/page4/98225.html#ixzz3V1ZGx0bE<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-32284979951791243402015-03-21T18:23:07.349+05:302015-03-21T18:23:07.349+05:30கம்பராமாயணத்திற்கு ஒரு சவுக்கடி!
கம்பரின் பயனற்ற ...கம்பராமாயணத்திற்கு ஒரு சவுக்கடி!<br /><br />கம்பரின் பயனற்ற கற்பனை களுக்கும் பொருளற்ற பாடல் களுக்கும் அடிகள் கடல் தாவு படலத்தை அடுத்தடுத்து எடுத்துக் காட்டுவார். அவர்கள் கூற்றை யான் ஏற்றுக் கொண்டு ஆயினும், சாமி! கம்பரின் நல்ல பாட்டுக்களைப் பாருங்கள் என்று மீண்டும் யான் சுவைக்கும் பாடல்களை எடுத் தெடுத்து மொழிவேன். கடைசியில் வழக்கின் முடிவென்ன?<br /><br />திருநாவு! அதெல்லாம் சரிதான். கம்பரால் பண்டைத் தண்டதமிழ் மரபு, தனித்தமிழ், தமிழர் இன, நாகரிகச் சிறப்பெல்லாம் மறக்கடிக் கப்பட்டன. சைவ வைணவத்திரு முறைகள் சிறப்புக்களெல்லாம் குறைந்தன. தமிழ்ப் பெருங்காவியங் கட்கும், தமிழிற்குமுள்ள சிறப்புகள் குன்றின. தமிழ்ப்பற்றும் குறைந்தது. ஆரிய நாகரிகமும், வடமொழியும் அதன் காவியங்களும் எங்கும் போற்றப்பட்டன.<br /><br />பெரிய புராணம், திருவிளையாடல் புராணம், சிலப்பதி காரம், சிந்தாமணி, மணிமேகலை முதலிய தமிழ்நாட்டாருக்கே உரிய தமிழ்க்காவியங்களைப் பிராம ணர்கள் பயிலாதும் பாராட்டாதும் இகழ்ந்து ஒதுக்குகின்றனர், பிரா மணர்களில் மிகப்பெரும்பாலோர் தேவார திருவாசகத் திருமுறைகளை ஓதுதலும், பாராட்டுதலும் இல்லை. தமிழ்நாட்டுக் கதைகள், வரலாறு களைப் போற்றுவதுமில்லை. இவற்றிற்கெல்லாம் காரணம் கம்பராமாயணமே!<br /><br />இவ்வாறு பிராமணர்களால் கம்பராமாயணமும், அதன் சார்பான ஆரிய வடநாட்டுக் கதைகளான பாரதம், பாகவதம், கீதை, பஜனை, சாதி, சடங்கு, மூடப்பழக்க வழக் கங்கள், கடவுள் நிலைக்கு மாறான கருத்துக்களும் எங்கும் பரவிவிட்டன.<br /><br />பிராமணர்களின் இப்பரப்புதல் களால் பார்ப்பனரல்லாதவர்களும் அவர் முறைகளை மேற்கொண்டு நம் தமிழ், தனித்தமிழ் - தமிழின நாகரிகத்திற்கே மாறு பட்டவர் களாய்ப் பொய்க் கதைகளை நம்பி, பயனில்லாச் சடங்குகளைச் செய்து தாமும் ஏமாறி அறிவிலிகளாய் வறிதே வாணாளை வீணாளாக்கு கின்றனர்.<br /><br />தம்மை சார்ந்த ஏனையோரையும், அவ்வாறாக்கி விடுகின்றனர். ஆதலால் இவற்றிற்கெல்லாம் முதற் காரணமான கம்பராமாயணப் பயிற்சியையும், பரப்புதலையும் புலவர்கள் கைவிட்டாக வேண்டும்.<br /><br />(மறைமலை அடிகளாரின் மகன் வித்துவான் மறை திருநாவுக்கரசு தீட்டிய - மறைமலை அடிகளின் வரலாறு என்ற நூலில் பக்கம் 648)<br /><br />குறிப்பு: இதில் நாவு என்று குறிக்கப்பெறுவது மறைமலை அடிகளாரின் மகன் மறை திருநாவுக்கரசு ஆவார்.<br /><br />Read more: http://viduthalai.in/page4/98224.html#ixzz3V1Z9wCJZ<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-23908347352532297952015-03-21T18:20:44.842+05:302015-03-21T18:20:44.842+05:30கச்சனம் - கருஞ்சட்டை வீரர் ப. ஆத்மநாதன்
திருத்துற...கச்சனம் - கருஞ்சட்டை வீரர் ப. ஆத்மநாதன்<br /><br />திருத்துறைப்பூண்டியிலிருந்து திருவாரூர் செல்லும் சாலையில் இருக்கும் கச்சனம் தான் நான் பிறந்து வளர்ந்த ஊர். எனக்கு இப்ப எண்பத்தி ரெண்டு வயது ஆகிறது. எட்டாவது வரைக்கும் படிச்சேன். அதுக்கு மேல் படிக்க முடியவில்லை. காரணம் ஏழ்மையான விவசாய குடும்பம்.<br /><br />எனக்கு எலெக்டிரிக்கல் வேலையில் கொஞ்சம் ஆர்வம் அதிகம். லைன் மேனுக்கு உதவியா போவேன். கோயில் திருவிழாவுக்கு லைட் கட் டுவேன். அப்ப கோயிலில் நடக்கும் சில தவறான செயல்களை காண முடிந்தது.<br /><br />அந்த காலத்திலே எங்க அப்பா திராவிட நாடு பத்திரிகை வாங்குவார். நான் படிச்சு பல விவசயங்களை தெரிந்து கொண்டேன்.<br /><br />வாய்ப்பு கிடைக்கும் நேரத்தில் கடவுள் மறுப்பு, மூடநம்பிக்கை இவைகளைப்பற்றி நண்பர்களிடம் பேசுவேன். அதனால நான் ஒரு கடவுள் மறுப்பாளன் என அப்பகுதியிலேயே அறிமுகமானேன்.<br /><br />அந்த சமயத்தில் தான் தோலி. ஆர்.எஸ். (ஆர். சுப்பிரமணி) சாந்தன் ஆகியோர் என்னை வந்து சந்திச்சு எங்க பகுதிக்கு என்னை பொறுப்பாள ராக நியமிச்சாங்க மிலிடரி வைத்திய நாதன் எனக்கு அப்போது உதவியாக இருந்தார்.<br /><br />முதன் முதலாக வடபாதி மங்கலம் திருஞானசம்பந்தத்தை அழைத்து எங்க ஊரில் கூட்டம் போட்டோம். ஒரு முறை எங்க ஊரில் வைத்து இருந்த வெங்கடாசலபதி படத் துக்கு செருப்பு மாலை போட்டு விட்டேன்.<br /><br />எனக்கு 33ஆவது வயதில் திருமணம் அதில் என்னானா அந்த பொண்ணு வேறு ஒரு வருக்கு நிச்சயம் செய்யப் பட்டது. ஏதோ காரணத் தால் அந்த பையன் இறந்து விட்டான். உடனே அந்த பொண்ணு ராசி இல்லாத பொண்ணு. அதான் நிச்சயம் செய்யப்பட்ட பையன் செத்துப் போயிட்டான் என செய்தியை பரப்பி விட்டார்கள். அதை அறிந்து நான் போய் அந்த பெண்ணை மணந்தேன். இன்னிக்கு வரைக்கும் நான் சாக வில்லை.<br /><br />திருத்துறைப்பூண்டியில் நடந்த தீக் குண்டம் இறங்கிற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தீயில் இறங்கினேன். தஞ்சை பெரியார் சிலை திறப்பு விழா உட்பட பல வெளியூர் நிகழ்ச்சிக்கு போய் உள்ளேன். தனித் தமிழ்நாடு போராட் டம் சட்ட எரிப்பு போராட்டம் என பல போராட்டங்களில் கலந்து கொண்டேன். நான் சிறுவன் எனக் கூறி கைது செய்யவில்லை. சிறைக்கு போகாதது வருத்தம்தான். இனி வாய்ப்பு கிடைத்தால் விட மாட்டேன்.<br /><br />கச்சனத்தில் ஆர்.எஸ்., சாந்தன் கோவிந்தசாமி, வைத்தியநாதன் மற்றவர்களோடு சேர்ந்து ஜாதி ஒழிப்பு மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டை ஆப்பரக்குடி மீனாட்சி தியேட்டரில் நடத்தினோம். அந்த மாநாட்டில் அய்யா, ஆசிரியர், பாலதண்டாயுதம், எஸ்.எஸ். பாஷா, யாதுப், கவிஞர் கலி. பூங்குன்றன் ஆகியோர் கலந்து கொண்டனர்.<br /><br />ஆசிரியர் தலைமையில் அம்பகரத் தூரில் கோயிலில் எருமை மாடு வெட் டுவதைத் தடுத்து நிறுத்த போராட்டம் நடந்தது. அதிலும் கலந்து கொண்டேன். நம்ம போராட்டத்துக்கு பின் அங்கே கிடா வெட்டுவது தடை செய்யப் பட்டது.<br /><br />தேர்தல் பிரச்சாரத்தின்போது அய்யாவுடன் சேர்ந்து சில நாட்கள் வேனில் பிரச்சாரத்திற்கு சென்றது வாழ்வில் மறக்க முடியாத வாய்ப்பு<br />எனது மூத்த மகளுக்கு அய்யா அறிவுக்கண்ணு என்று பெயர் வைத் தார். மயிலாடுதுறையில் அய்யா தலை மையில் நடைபெற்ற கவிஞர் திருமணத் துக்கு போய் வந்தேன். அய்யா காலம் முதல் இன்று வரை முடிந்த வரை எல்லா நிகழ்ச்சிகளுக்கும் சென்று வருகிறேன்.<br /><br />கடைசியா நான் கூற விரும்புவது ஆசிரியரைப் பற்றி அய்யா அவர்கள் ஆசிரியர்மீது வைத்த நம்பிக்கை வீண் போகவில்லை. ஆசிரியர் நம் இயக்கத் தின் ஈடில்லா சொத்து. ஓய்வு இல்லாமல் கொள்கைக்காக உழைக்கிறார். தனி மனித ஒழுக்கத்துக்கு இலக்கணம் ஆசிரியர்தான்.<br /><br />69 சதவீத இடஒதுக்கீடு மண்டல் குழு அறிக்கையை அமுல்படுத்த வைத் தது பொன் ஏட்டில் பொறிக்கப்பட வேண்டியது.<br /><br />வாழ்க பெரியார் தொடர்க ஆசிரியர் பணி<br /><br />சந்திப்பு: தி. குணசேகரன், திருத்துறைப்பூண்டி<br /><br />Read more: http://viduthalai.in/page3/98222.html#ixzz3V1YXLF78<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-12050697757119581612015-03-21T18:20:07.186+05:302015-03-21T18:20:07.186+05:30தமிழின் தனித் தன்மை
உலகின் பழைய மொழிகள் ஏழு. அவற்...தமிழின் தனித் தன்மை<br /><br />உலகின் பழைய மொழிகள் ஏழு. அவற்றில் இப்போது வரை வழக்கில் இருக்கும் மொழிகள் மூன்றுதான். ஒன்று தமிழ். இடமிருந்து வலமாக எழுதப்படும் மொழிகளில் பழைய மொழி தமிழ் மட்டும்தான். அதாவது தமிழ் எப்படி எழுதப்பட்டதோ, அதே போல்தான் இன்று உலகின் பல மொழிகள் எழுதப்படுகின்றன.<br /><br />இந்தியாவில் கிடைத்துள்ள ஏறத்தாழ ஒரு லட்சம் கல்வெட்டுப் பதிவுகளில் அறுபதாயிரத்திற்கும் அதிகமானவை தமிழில் உள்ளன. மற்ற மொழிகள் அனைத்தும் ஐந்து விழுக்காட்டுக்கும் குறைவான கல்வெட்டுகளையே கொண்டுள்ளன. தமிழ் பிராமியில் எழுதப்பட்ட கல்வெட்டுகள் எகிப்து, தாய்லாந்து, இலங்கை ஆகிய நாடுகளில் கிடைத்துள்ளன.<br /><br />இவற்றின் வயது கி.மு.300. அதாவது 2300 ஆண்டுகளுக்கு முன்னரும் தமிழ் இருந்திருக்கிறது. திருக்குறள் 2000 ஆண்டுகளுக்கும் முந் தியது. ஆனால், அதில் உள்ள சொற் களை நாம் இப்போதும் பயன்படுத்தி வருகிறோம்.<br /><br />உதாரணம்: எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப் பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார்<br /><br />தமிழ் எழுத்துக்களைப் பயன்படுத்தி எண்களும் எழுதப்பட்டன. கோடிக்கு மேல் குறிப்பிடுவதானால், ஆங்கிலத் தில் பத்து கோடி, நூறு கோடி என்று தான் எழுத வேண்டும். அவற்றிற்கென தனிச் சொற்கள் கிடையாது. ஆனால், தமிழில் உண்டு. கோடி கோடி என்பதை பிரமகற்பம் என்ற ஒரு சொல்லில் எழுதிவிடலாம். அதேபோல பின்னத்தில் 320ல் ஒரு பங்கைக் குறிப்பது வரை ஒரு சொல்லில் குறிப்பிட முடியும் (முந்திரி).<br /><br />தன்னிலிருந்து மலர்ந்து வரும் ஒலி என்பதைக் குறிப்பிடும் தம்இழ் என்ற சொல்லே தமிழ் என ஆயிற்று என்றும், தகுதியான பேச்சு முறை என்பதைக் குறிக்கும் தம் மிழ் என்ற சொல்லே தமிழ் என ஆயிற்று எனவும் செக் நாட்டு அறிஞர் கமில் சுவலபில் கூறியுள்ளார்.<br /><br />வன்மையான ஓசை உடைய எழுத்துக்கள், மென்மையான ஓசை உடைய எழுத்துக்கள், இரண்டிற்கும் இடைப்பட்ட ஓசை உடையவை என்பதை உணர்த்தும் வகையில் தமிழின் மெய்யெழுத்துக்கள் வல்லினம், மெல்லினம், இடையினம் என வகைப்படுத்தப்பட்டுள்ளன. (கசடதபற வல்லினம், ஙஞணநமன மெல்லினம், யரலவழள இடையினம்)<br /><br />ஒவ்வொன்றிலிருந்தும் ஓர் எழுத்தை எடுத்து (த வல்லினம், மி மெல்லினம், ழ் இடையினம்), தமிழ் என மொழிக்குப் பெயரிடப்பட்டுள்ளது.<br />உலகில், பெயரைக் கொண்டே மொழியின் தன்மையை அறியும் பெயர் வேறு எந்த மொழிக்கும் கிடையாது. இணையத்தில் அடி எடுத்து வைத்த முதல் இந்திய மொழி தமிழ்.<br /><br />தமிழ், உலகில் இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அரசு அலுவல் மொழியாக உள்ளது. மேலும், இலங்கையில் நாடாளுமன்ற மொழியாகவும் உள்ளது.<br /><br />Read more: http://viduthalai.in/page3/98223.html#ixzz3V1YNM7pD<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-3180030449167597532015-03-21T18:15:13.373+05:302015-03-21T18:15:13.373+05:30இதன் பயனாகவே (அம்மையாருக்கு அரசியலிலும் மதத்திலும்...இதன் பயனாகவே (அம்மையாருக்கு அரசியலிலும் மதத்திலும் செல்வாக்கு இருக்கும்வரை) தோழர் சி.விஜயராகவாச் சாரியாராகிய அய்யங்கார் காங்கிரஸ் பிரசிடெண்டாக முடியா மலேயே போய்விட்டது.<br /><br />இந்தக் காரணத்தால் சென்னை அய்யங்கார்கள் அரசியலில் மிதவாதிகள் ஆகி தோழர்கள் சி.எஸ். கஸ்தூரிரங்கய்யங்கார், சி.விஜயராகவாச்சாரியார், சி.ராஜகோபா லாச்சாரியார், எஸ். சீனிவாசய்யங்கார் முதலிய அய்யங்கார்கள் ஒன்று சேர்ந்து, மறுபடியும் அம்மையாரின் அரசியல் செல்வாக்கை ஒழிக்க வேண்டியவர்களானார்கள்,<br /><br />இதற்கு பார்ப்பனரல்லாத தோழர்கள் பி.வரதராஜீலு, வி.ஒ.சிதம்பரம் பிள்ளை, ஜார்ஜ் ஜோசப், ஈ.வெ.ராமசாமி முதலியவர்களையும், அய்யர் பார்ப்பனரில் தோழர் எஸ். சத்தியமூர்த்தி அய்யர் முதலியவர்களையும் பயன்படுத்திக் கொண்டு, அம்மையாரை எதிர்த்து அம்மை யாருக்கு பல தொல்லைகளும் கொடுத் தார்கள். அம்மையாருக்கு சரியான போட்டித் தலைவராக தோழர் காந்தியாரைப் பிடித்துக் கொண்டுவந்து மகாத்மாவாக்கினார்கள்.<br /><br />இதன் பயனாகவும் அம்மையாரின் வயோதிகத்தின் பயனா கவும் அம்மையார் அரசியலில் சிறுகச்சிறுக, விட்டுக் கொடுத்துக் கொண்டே வந்துவிட்டார்கள் என்றாலும் அரசாங்கத்தின்மூலம் தனது விபூதிப் பார்ப்பன அய்யர் சிஷ்யர்களுக்கு அளவு கடந்த உதவி செய்து கொண்டே வந்தார்.<br /><br />தோழர் சர்.சி.பி. போன்றவர்கள் எல்லாரும் உயர்ந்த அந்தஸ்திற்கு அம்மையாராலே ஆக்கப் பட்டவர்கள் ஆவார்கள், அம்மையாரின் அபார சத்தியை ஒரு வார்த்தையில் சொல்ல வேண்டுமானால், அம்மையார் இந்த உலகம் முழுவதும் ஒரு ஆட்சிக்கு உட்படுத்தி அதன், தலைமை ஸ்தானத்தைக் கொடுத்தால் அதை ஒருகையிலும், அதன் ராணுவ ஆட்சியை மற்றொரு கையிலும்,<br /><br />உலகமத (போப்) குருவேலை யை உபவேலை யாகவும், பார்க்கத் தகுதியும் ஆற்றலும் உடையவர் என்றே சொல்லுவோம். ஆகவே பெண்களுக்கு எவ்வளவு ஞானம் எவ்வளவு தைரியம் எவ்வளவு சக்தி இருக்கின்றது என்று கணிப்பதற்கு அம்மையார் ஒரு ஒப்பற்ற சாதனமாவார். அப்படிப்பட்ட அம்மையார் தனது 86ஆவது வயதில் முடிவெய்தியதுபற்றி யாரும் வருந்த வேண்டியதே இல்லை.<br /><br />ஏனெனில் இனி தன்னால் யாதொரு காரியமும் செய்யமுடியாமல் போய்விட்டதென்றால் உடனே முடி வெய்துவிட வேண்டியதுதான் நல்லறிவின் குறிப்பாகும்.<br /><br />ஆகவே அம்மையாரைத் தாயைப்போலவும் குருவைப் போலவும் தெய்வத்தைப் போலவும் கருதி அம்மையாரைப் போற்றிவந்த அவரது சிஷ்யர்கள் பெரிதும் மனித ஜீவ இயற்கையை உணர்ந்த ஞான வான்கள் ஆதலால் அப்படிப் பட்டவர்களுக்கு பிறரது அனுதாபமோ ஆறுதலோ அவசியம் இல்லையென்றே கருதுகிறோம்.<br /><br />குடிஅரசு - துணை தலையங்கம் - 24.09.1933<br /><br />Read more: http://viduthalai.in/page-4/98290.html#ixzz3V1WpNjrXதமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-53484872004517437682015-03-21T18:15:06.805+05:302015-03-21T18:15:06.805+05:30பெசண்டம்மையாரின் முடிவு
தோழர் அன்னிபெசண்டம்மையார்...பெசண்டம்மையாரின் முடிவு<br /><br />தோழர் அன்னிபெசண்டம்மையார் 20.09.1933 அன்று மாலை 4 மணிக்கு சென்னை அடையாற்றில் முடிவெய்தி விட்டார்கள். அம்மையாரின் வாழ்வு பெண் மணிகளுக்கு ஒரு படிப்பினையாகும். ஆண்களுக்கும் ஓர் அறிவுறுத்தல் ஆகும்.<br /><br />பெண்கள் பாவஜென்மம் என்றும், பேதமையென்பது மாதர்க்கணிகலம் என்றும், பெண்கள் ஆண்களின் காவலுக் குட்பட்டு இருக்க வேண்டியவர்கள் என்றும், அறியாமையும், அயோக்கியத்தனமும், முட்டாள்தனமும், மூர்க்கத்தனமும் கொண்ட வாக்கியங்களை பொய்யாக்கி அவற்றில் பொதிந் துள்ள சூழ்ச்சிகளை வெளியாக்க வென்றே தோன்றியவர் என்று கருதும்படியானவர் நமது பெசண்டம்மையார்.<br /><br />தோழர் பெசண்டம்மையார் ஒரு பாதிரியாரின் மனைவி யாவார் பாதிரிகளின் கொடுமையும், பித்தலாட்டமும் அம்மையாரை நாஸ்திகமாக்கி, தெய்வம்இல்லை என்று பிரச்சாரம் செய்யும்படி செய்தது பிறகு புருஷனைவிட்டு பிரிந்தார். பிறகு கர்ப்பத் தடையை யாவருக்கும் பிரச்சாரம் செய்துவந்தார் கர்ப்பத்தடையை சட்டசம்பந்த மாக்கினார். அக்காலத்திலேயே அரசாங்கத்தையும் எதிர்த்து பிரச்சாரமும் செய்தார்.<br /><br />பின்னர் தனது 32ஆம் வயதுக்கு மேல் மறுபடியும் பள்ளிக்கூடத்தில் சேர்ந்து படித்தார். பிறகு பல புத்தகங்களை எழுதினார். அதன் பிறகு பிரம்மஞான சங்கத்தில் சேர்ந்தார். அதன் பிறகு இந்தியாவுக்கு வந்தார் வந்து அச்சபையின் உலக தலைவரானார். பிறகு சென்னையை வாசஸ்தலமாகக் கொண்டார். கிறிஸ்தவ மதத்தை கண்டித்து இந்துமத தத்துவ பிரச்சாரம் என்னும் பார்ப்பன மதப்பிரச்சாரம் செய்தார்.<br /><br />இதனால் சென்னையில் உள்ள விபூதி பூசும் பார்ப்பனரிடம் மிக செல்வாக்கு அடைந்தார். அய்க்கோர்ட்டு ஜட்ஜ்கள் உள்பட அநேக பெரிய பதவியாளர்களை தனக்கு சிஷ்யராகக் கொண்டார். அரசாங்கத்திலும் ஒரளவு செல்வாக்குப் பெற்று. விபூதிப் பார்ப்பனர்களுக்கு அச்செல்வாக்கை பெரிதும் உதவினார்.<br /><br />இதுகண்டு பொறாத சென்னை நாமம் போடும் அய்யங்கார் பார்ப்பனர்கள் அம்மையாருக்கு பல தொல்லைகளை விளைவித்தார்கள். அவற்றை சமாளிக்க (முன் பார்ப்பன மதப்பிரச்சாரம் செய்தது போலவே) அரசியலில் தலையிட்டு அரசியல் பிரச்சாரமும் செய்தார்கள். இதன் பயனாயும், அம்மையாரின் அபார சக்தியாலும் இந்தியா முழுமைக்கும் அரசியல் தலைவராயும் விளங்கினார்.<br /><br />காலஞ்சென்ற தோழர்கள் தாஸர், பாலர், நேரு முதலியவர்கள் எல்லாம் அம்மையாருக்கு சிஷ்யர்களாக இருந்தார்கள். அம்மையார் ஓடி ஆடித்திரிய சக்தி உள்ளவரையில் அய்யங்கார் கூட்டத்தை பொது வாழ்வில் தலை எடுக்க வொட்டாமல் செய்து கொண்டே வந்தார்.<br /><br /><br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-11681076134165347532015-03-21T18:13:22.093+05:302015-03-21T18:13:22.093+05:30நாகம்மாள் தகனம்
தோழர் ஈ.வெ.ரா.நாகம்மாள் அவர்கள் 1...நாகம்மாள் தகனம்<br /><br />தோழர் ஈ.வெ.ரா.நாகம்மாள் அவர்கள் 11ஆம் தேதி மாலை 4 மணிக்கு இனிதாங்காது என்ற நிலையில் ஆஸ்பத் திரியிலிருந்து வீட்டுக்கு அழைத்து வரப்பட்டார். வந்ததும் கடைசி ஸ்திதியில் செய்யக்கூடிய சிகிச்சைகளை செய்து பார்த்ததும் இரவு 7-45 மணிக்கு அம்மையார் ஆவி நீத்தார்கள்.<br /><br />உடனே அம்மையாரின் உடல் சுத்தம் செய்யப் பட்டு நன்கு அலங்கரித்து ஈ.வெ.ரா. அவர்கள் இல்லத்தின் முன் மண்டபத்தில் யாவரும் எளிதில் பார்த்துச்செல்ல வசதியுடன் அழகிய பெட்டியில் அடக்கம் செய்து வைக்கப்பட்டது. உடனே 8-30 மணிக்கு யாவருக்கும் (ஈ.வெ.ரா. உள்பட) சாப்பாடு நடந்தது. ஊர் பிரமுகர்களும், வெளியூர் தோழர்களும் இரவு முழுவதும் வந்து கொண்டே இருந்தார்கள்.<br /><br />அநேகமாக எல்லோரும் இரவு முழுவதும் விழித்துக்கொண்டே கேளிக்கையாய் இருந்ததோடு இடை இடையே டீ வழங்கப்பட்டு வந்தது. முக்கியமாய் யாவரும் கவனிக்க வேண்டியதும், கவனித்ததுமான சம்பவம் யாதெனில் நெருங்கிய உறவினர் முதல் உற்ற தோழர்கள் வரை யாவரும் அழுதல் என்னும் அநாகரிகமான காரியத்தை அறவே ஒழித்து ஆண் பெண் அடங்கலும் ஒற்றுமையாய் பேசிக்கொண்டும் நாளைய காரியங்கள் கவனித்தும் வந்ததே.<br /><br />மறுநாள் காலை 9 மணி அளவிற்கு தகனத்துக்கு எடுத்துச் செல்லப்படும் என்று இரவே துண்டுப் பிரசுரம் ஊரெல்லாம் வழங்கப்பட்டது. அந்தப்படிக்கே மறுநாள் காலையில் எவ்வித சடங்கும் இல்லாமல் ஒரு இரதத்திற்கு ஒப்பான ஒர் அழகிய நாலு சக்கரவண்டியில் அம்மாளின் உடல் மூடப்பட்ட பெட்டி வைக்கப்பட்டு பெட்டியை பட்டாடைகளாலும், புஷ்பங் களாலும்,<br /><br />அலங்கரித்து வைத்து பல ஆயிரக்கணக்கான ஜனங்கள் பின்தொடர தகனம் செய்ய குறிப்பிட்டிருந்த இடத்தை நோக்கி வண்டி மெல்ல தள்ளிக்கொண்டு செல்லப்பட்டது. ஊர்வல ஆரம்பத்தில் போட்டோ படக்காரர்கள் பலர் படம் எடுத்தார்கள்.<br /><br />வழிநெடுக அநேக கடைகளிலும், முக்கியமாய் சுயமரியாதை வாலிபர் சங்கத்தின் முன்னிலும் (மகாநாட்டிற்கு அழைத்துச் செல்லப்படும் தலைவருக்கு மாலைகள் சூட்டி உபசரிப்பதை போல்) நிறுத்தி நிறுத்தி மாலைகள் போடப்பட்டு புஷ்பங்கள் வாரி வாரி இறைக்கப்பட்டன.<br /><br />தகனம் நடக்கும் இடமாகிய காவேரிக்கரை அணுகியதும் உடனே தகன ஏற்பாடுகள் நடந்து<br /><br />கொண்டேயிருக்கும் போது தோழர் எஸ். மீனாட்சி சுந்தரம் பி.ஏ., எல்.டி., அவர்கள் தலைமையில் ஒர் கூட்டம் கூடி வந்திருந்த பிரமுகர்களும், இயக்க தோழர்களும் தங்கள் அனுதாபத்தை தெரிவித்துக் கொண்டதுடன் தோழர்கள் சாமி சிதம்பரனார், ராவணதாஸ், சேலம் நடேசன், டாக்டர் கிருஷ்ணசாமி, மாயவரம் சி. நடராஜன், ஈ.வி.நஞ்சப்ப செட்டியார், எம்.சிக்கையா, மைதீன் பாட்சா முதலியவர்கள் அம்மையாரின் குணாதிசயங்களைப் பற்றியும்,<br /><br />வரலாற்றைப் பற்றியும் பேசினார்கள். பின் தோழர் ஈ.வெ.ரா அவர்கள் பதில் சொல்லி முடித்தவுடன் கூட்டம் முடிந்து எல்லோரும் வீடு திரும்பினார்கள். வெளியூர் பிரமுகர்கள் வந்துகொண்டே இருப்பதுடன், தந்திகளும், கடிதங்களும் வந்து குவிந்து கொண்டிருக்கின்றன.<br /><br />ஒரு மணி நேரத்தில் எல்லாம் முடிந்தது. தகனம் செய்த பின்பு எவ்வித சடங்கும் அது சம்பந்தமான நடவடிக்கையும் இல்லை. ஈ.வெ.ரா. சனிக்கிழமை இரவு சுற்றுப்பிரயாணம் செய்வதற்குத் திருச்சிக்குப் புறப்பட்டு விட்டார்.<br /><br />குடி அரசு - கட்டுரை - 14.05.1933<br /><br />Read more: http://viduthalai.in/page-4/98291.html#ixzz3V1Wg6Zt1<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-56893079592265404622015-03-21T18:08:33.581+05:302015-03-21T18:08:33.581+05:30பார்ப்பனர் சதி
பார்ப்பனர்களுக்கு விரோதமாக எவர் ந...பார்ப்பனர் சதி<br /><br /><br />பார்ப்பனர்களுக்கு விரோதமாக எவர் நடக்க ஆரம்பித்தாலும், அவர் களை ஒழித்துக் கட்டவே பார்ப்பனர் சதி செய்வார்கள். புராண கால முதலே இதுதான் அவர்கள் நடவடிக் கையாக இருந்து வந்திருக்கிறது.<br /><br />- (விடுதலை, 14.7.1961)<br /><br />Read more: http://viduthalai.in/e-paper/98252.html#ixzz3V1VSThdI<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-34967081552754514792015-03-21T18:06:57.603+05:302015-03-21T18:06:57.603+05:30பகவத் கீதையை தேசிய நூலாக அறிவிக்க இயலாது! உச்சநீதி...பகவத் கீதையை தேசிய நூலாக அறிவிக்க இயலாது! உச்சநீதிமன்றம் தீர்ப்பு<br /><br /><br />புதுடில்லி மார்ச் 21 பகவத் கீதைஎன்னும் நூலை தேசிய நூலாக அறிவிக்க இயலாது என்று கூறி வழக்கறிஞர் பாலகிருஷ்ணன் என்பவர் தொடுத்த பொது நல வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.<br /><br />2014-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்து மத அமைப்புசார்பில் நடந்த ஒரு கூட்டத்தில் வெளி விவகாரத்துறை அமைச் சர் சுஸ்மா சுவராஜ் பேசும் போது; விரைவில் பகவத் கீதையை தேசிய நூலாக அரசு அறிவிக்கும் என்று கூறியிருந்தார். மத்திய அமைச்சரின் இந்த அறிவிப்பு தேசிய அளவில் கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத் தியது. சில இந்துமத அமைப்புகள் கூட மத்திய அமைச்சரின் இந்த அறிவிப்பிற்கு கண்டனம் தெரிவித்திருந்தது. அதே நேரத்தில் இதற்கு வலு ஊட்டுவதுபோல் மோடி வெளிநாட்டிற்கு செல் லும் போதெல்லாம் அங் குள்ள தலைவர்களின் கையில் வலுக்கட்டாய மாக பகவத்கீதையை திணித்துவிட்டு வருகிறார்.<br /><br />அரசின் தேசிய நூல் பற்றிய கொள்கை முடிவுகள் தெளிவில்லாத பட்சத்தில் வழக்குரைஞர் பாலகிருஷ்ணன் என்பவர் பகவத்கீதையை தேசிய நூலாக அறிவிக்கவேண் டும் என்று அரசுக்கு ஆணையிடக்கோரி பொது நலமனு ஒன்றை தாக்கல் செய்தார்.<br /><br />இந்த பொதுநலமனு வெள்ளிக் கிழமையன்று விசார னைக்கு வந்தது. இந்த மனுவை விசா ரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல்.தத்து கூறியதா வது:<br /><br />ஒரு நூலை தேசிய நூலாக அறிவிக்கவேண் டும் அல்லது அதை தவிர்க்கவேண்டும் என் பதை நீதி மன்றம் வலி யுறுத்த முடியாது. இந்திய சமூகம் என்பது பல்வேறு மதம் மற்றும் இனங் களைக் கொண்ட நாடு. அரசு எடுக்கும் எந்த ஒரு செயலும் அனைத்து சமூகத்தினருக்கும் இணக்கமான ஒன்றாகத் தான் இருக்கவேண்டும். சமூக நல்லிணக்கம் சார்ந்த பிரச்சனைகளில் அரசின் முடிவு அனைத்து மக்களும் ஏற்றுக் கொள்ளும் ஒன்றாக இருக்கவேண்டும்.<br /><br />பகவத் கீதை என்பது ஒரு மதத் தினரின் புனித நூல், நீதி மன்றம் இந்த விவகாரத் தில் எந்த ஒரு கருத்தும் சொல்லமுடியாது. அரசு அரசியல் சாசனப்படி செயல்படும், ஆகவே இந்த வழக்கை தள்ளுபடி செய் கிறோம் என்று கூறினார்.<br /><br />Read more: http://viduthalai.in/e-paper/98243.html#ixzz3V1V2itGs<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-34169903320314045352015-03-21T18:06:03.553+05:302015-03-21T18:06:03.553+05:30இன்றைய ஆன்மிகம்?
மஞ்சள் நீர்
கடை திறக்கும்போது வ...இன்றைய ஆன்மிகம்?<br /><br />மஞ்சள் நீர்<br /><br />கடை திறக்கும்போது வாசலில் மஞ்சள் நீர் தெளிப்பது எல்லாம் பிற் காலத்தில் புகுந்து விட்ட பழக்கங்கள். மகாலட் சுமிக்கு விருப்பமான மஞ்சளைக் கால்படும் விதமாக கீழே தெளிப்பது தவறு என்கிறது ஓர் ஆன் மிக இதழ்.<br /><br />ஒருவர் சரி என்பது இன்னொருவர் தவறு என்பார். இதெல்லாம் இந்து மதத்தில் சர்வ சாதாரணம். பூமிகூட பூமாதேவிதான் அதில் என்னென்னவெல் லமோ நடக்கிறதே!<br /><br />Read more: http://viduthalai.in/e-paper/98240.html#ixzz3V1UqoPw2<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-6466004006697581882015-03-20T20:16:18.463+05:302015-03-20T20:16:18.463+05:30பசு மாட்டை யாகத்திலே கொன்று எப்படி சாப்பிடுவது என்...பசு மாட்டை யாகத்திலே கொன்று எப்படி சாப்பிடுவது என்று பார்ப்பனர்களுடைய இதிகாசத் திலே சொல்லி இருக்கிறார்கள். மார்பிலிருந்து பருந்தின் வடிவத்தில் சதையை அறுத்தெடுக்க வேண் டும். பின் கால்களிலிருந்து இரண்டு துண்டுகளை அறுத்தெடுக்க வேண்டும். முன் கால்களிலிருந்து அஃகு வடிவமாக இரண்டு துண்டுகளை எடுக்க வேண்டும்.<br /><br />அவ்வாறு அதே இடங்களிலிருந்து 26 துண்டுகளை அறுத்தெடுத்தபின், எல்லாவற்றையும் அறுத்தெடுத்துக் கொள்க. அப்படி சமைத்து சாப்பிட வேண்டும் என்று கூறியுள்ளார்கள்.<br /><br />மாட்டைக் கொல்லும்போது நன்றாக அடித்துக் கொல்! கொல்!! என்று சத்தம் போடவேண்டும். அந்த மாட்டை அடிக்கும்போது நன்றாக அடி அடி என்று சத்தம் போடவேண்டும். இப்படியெல்லாம் புரா ணத்திலே, இதிகாசத்திலே எழுதி வைத்திருக்கிறார் கள். இப்போது இந்துக்களின் புனிதம் என்று சொல்கிறாயே, இந்து மதத்திலே இருப்பதை ஏன் மாற்றிப் பேசுகிறாய்? நாங்கள் எடுத்துச் சொல்லும் போது உனக்கு ஏன் கோபம் வருகிறது?<br /><br />பார்ப்பனர்கள் மாமிச உணவை எப்போது விட் டார்கள் என்பதற்கு வரலாறு இருக்கிறது. புத்தர் காலத்திற்குமுன்வரை பார்ப்பனர்கள் சாப்பிட்டுக் கொண்டுதான் இருந்தார்கள். கவுதம புத்தர் தோன்றி, இந்தப் பார்ப்பன யாகங்களை எதிர்த்து, நெருப்பில் போட்டு பொசுக்குகின்ற அந்த யாகங்களைத் தடுத்து நிறுத்தி மக்கள் மத்தியிலே வைதீக, ஆரிய, பார்ப்பன எதிர்ப்பை உண்டாக்கி,<br /><br />மக்கள் பவுத்த மதத்துக்கு மாறும் சூழ்நிலையில், பார்ப்பனர்கள் தங்கள் மதத் தைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்பதற்காக சைவத்துக்கு மாறினார்கள். இதுதான் வரலாறு. இதை நாங்கள் சொல்லவில்லை. ராகுலசாங்கித்யாயன் என்கிற உலகப்புகழ்பெற்ற, மிகப்பெரிய வரலாற்றுப் பேராசிரியர் எடுத்துக்கூறியுள்ளார்.<br /><br />பார்ப்பனர்கள் இதற்கப்புறம்தான் பசு மாட்டுக் கறியை உண்ணக்கூடாது என்று கொண்டுவந்தார்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.<br /><br />_ இவ்வாறு திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் சிறப்புரையில் உரை யாற்றும்போது குறிப்பிட்டார்.<br /><br />கலந்துகொண்டவர்கள்<br /><br />மயிலை சேதுராமன், வழக்குரைஞர்கள் ஆ.வீரமர்த் தினி, ந.விவேகானந்தன், ம.வீ.அருள்மொழி, க.பால முரளி, சரவணன், மு.பவானி, வி.வளர்மதி, ச.அரவிந்த், அய்ஸ்அவுஸ் சேது, ச.துணைவேந்தன், சந்தோஷ், யாழ்ஒளி, தங்கமணி, திருவொற்றியூர் கணேசன், சுமதி, கூடுவாஞ்சேரி ராசு, மதுரவாயல் தங்க.சரவணன், அம் பத்தூர் பூ.இராமலிங்கம், கோவிந்தராசன், இளை ஞரணி மகேந்திரன்,<br /><br />மு.முகிலன், மணிதுரை, எம். இரமேஷ், ஜெயப்பிரகாஷ், சிவக்குமார், இசையின்பன், பசும்பொன், கலையரசன், சவுந்தரராஜன், பெரியார் பிஞ்சுகள் அபினா சுருதி, கோவன் சித்தார்த், அசுரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.<br /><br />Read more: http://viduthalai.in/page-8/98203.html#ixzz3UwAnkzk9தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-54259885084874701052015-03-20T20:16:13.431+05:302015-03-20T20:16:13.431+05:30இந்தியக் கோமாதா கறப்பது என்ன?
இந்தியாவில் இருக்கு...இந்தியக் கோமாதா கறப்பது என்ன?<br /><br />இந்தியாவில் இருக்கும் பசுக்கள் கோமாதா என்று சொல்கிறார்களே, ஒரு நாளைக்கு சராசரியாக 2.19 கிலோ கிராம் அளவில்தான் பால் கறக்கிறது. இந்திய கோமாதா பாலைக் கறக்கவில்லை, நம்முடைய பணத் தைத்தான் கறக்கிறது.<br /><br />கோமாதாவைப் பராமரிக்க வேண்டும் என்றால் நாம்தான் செலவு செய்யவேண் டும். ஆனால், வெளியாடுகளில் கனடா, டென்மார்க் அந்த நாடுகளில் அவன் கோமாதா என்று சொல்வதில்லை. 75 லிட்டர் பால் கறக்கும் மாடுகளை அந்த நாடுகளில் கோமாதா என்று சொல்வதில்லை.<br /><br />செயற்கைக் கருவூட்டலில் எந்த விந்து?<br /><br />பசுமாட்டைக் கருத்தரிக்க என்ன செய்கிறீர்கள்? கால்நடை மருத்துவமனைக்குக் கொண்டு போகி றீர்கள். செயற்கை முறையில் கருத்தரித்தல்; அதில் எந்தக் காளையின் விந்தைப் போடுகிறார்கள் தெரியுமா? இந்தியாவில் உள்ள காளைமாடுகளின் விந்துக்களைச் சேர்ப்பதில்லை. வெளிநாட்டு காளைகளின் விந்தைத்தான் சேர்க்கிறார்கள்.<br /><br />நாள் ஒன்றுக்கு 75 லிட்டர் கறக்கக்கூடிய வெளிநாட்டு பெர்சியன், ஜெர்சி முதலிய காளைகளின் சினை முட்டைகளை கோமாதாவுக்குள்ளே செலுத்தி கருத் தரிக்கச் செய்கிறார்கள். கோமாதா கற்பு என்னாயிற்று?<br /><br />அவர்களின் மிலேச்சப் பசுக்களின் விந்தணுக்களை கோமாதாவுக்குள் செலுத்தி செயற்கைக் கருத்தரித்தல் செய்கிறார்கள். கோமாதா கோமாதா என்கிறார் களே? கோயில்களில் நேர்த்திக்கடன் என்று பசுமாடு களை விடுகிறார்கள். அப்படி விடப்படும் பசுக்களை கோயில் நிர்வாகம் சரியாகப் பராமரிப்பதில்லை.<br /><br />அதைத் திருட்டுத்தனமாக கசாப்புக்கடைக்கு அனுப்புகிறார்கள். பத்திரிகைகளில் செய்திகள் வந்தன.கோயிலுக்கு விடப் பட்ட பசுக்களையே கசாப்புக்கடைக்குக் கொண்டு செல்கிறார்கள். உலகில் அதிகமாக மக்கள் சாப்பிடக் கூடிய உணவு ஒன்று என்றால், அது மாட்டுக்கறி தான். சத்துள்ள உணவு, ஆட்டுக்கறியைவிட பாதி விலையில் கிடைக்கின்ற மாட்டுக்கறியை அரசே சாப் பிடச் சொல்லவேண்டும்.<br /><br />ஆனால், அரசு என்ன செய்கிறது? பார்ப்பனர்கள் மாட்டுக்கறியை சாப் பிட்டதே இல்லையா? பசு புனிதம் என்கிறார்களே, புராணங்கள், இதிகாசங்களில் பார்ப்பனர்கள் எப்படி யாகம் நடத்தினார்கள்? பசு மாட்டை நெருப்பில் போட்டுக் கொளுத்தி, எப்படிச் சமைத்து எப்படி சாப்பிடுவது என்று கூறப்பட்டுள்ளதே. எங்களிடம் ஆதாரம் உள்ளது.<br /><br />பசுக்கறியைப் பார்ப்பனர்கள் சாப்பிட்ட விதம்<br /><br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-35669239325231753132015-03-20T20:15:58.705+05:302015-03-20T20:15:58.705+05:30மாநில அரசினுடைய கருத்துகளையெல்லாம் கேட்டு, அதனடிப்...மாநில அரசினுடைய கருத்துகளையெல்லாம் கேட்டு, அதனடிப்படையில் இப்படி ஒரு சட்டம் கொண்டுவருவதற்கான முயற்சிகளை மேற்கொண் டிருக்கிறார்கள். இப்படி ஒரு செய்தியை வெளிநாட் டில் இருப்பவர்கள் கேள்விப்பட்டால் வாயாலேயே சிரிக்க மாட்டார்கள். இந்துமதவெறி. ஏதோ மத்தியிலே ஆட்சிக்கு வந்துவிட்டோம் என்கிற திமிர்.<br /><br />பத்து ஆண்டுகள் மத்தியிலே காங்கிரசு ஆட்சி இருந் தது. அவர்கள் செய்த சில தவறுகளின் காரணமாக அந்த இடத்திலே போய் உட்கார வைத்தார்களே தவிர, இந்துத்துவாமீது அபரிதமான ஆர்வம் மக்களுக்குப் பெருக்கெடுத்து ஓடி இவர்களை ஆட்சிக்கட்டிலில் அமர வைத்திருக்கிறார்கள் என்று நினைத்தால் அதைவிட படு முட்டாள்தனம் உலகத் திலே வேறு எதுவும் இருக்க முடியாது.<br /><br />நாள் ஒன்றுக்கு ரூபாய் 20 சம்பாதிக்கக்கூடியவர்கள், இந் தியாவிலே 77 விழுக்காடு இருப்பதாகச் சொல்லு கிறார்கள். இரவு சாப்பாடு இல்லாமல் தூங்குபவர்கள் இந்தியாவிலே 70 கோடி பேர் இருப்பதாகச் சொல்லு கிறார்கள். ஓர் அரசு என்றால், இதுபற்றித்தான் கவலைப்பட வேண்டும்.<br /><br />வெறும் 20 ரூபாயில் எப்படி ஒரு நாள் பொழுதைக் கழிக்க முடியும்? இந்தியா சுதந்திரமடைந்து இத்தனை ஆண்டுகள் ஆனதற்குப் பின்னாலே, இரவு சாப்பாடு இல்லாமல் வயிற்றைப்பிசைந்துகொண்டு ஏழை எளிய மக்கள் இன்றைக்கு வாழ்ந்து கொண்டிருக்கிறார்களே, இதற்கு என்ன திட்டம் போடுவது?<br /><br />மக்களுடைய அடிப் படைத் தேவையான இருக்க இடம், உண்ண உணவு, உடுக்க உடை இந்த அத்தியவசியமான பொருளை மக்களுக்கு எப்படி உறுதிப்படுத்துவது? இதைப்பற்றி ஓர் அரசு சிந்தித்தால், திட்டமிட்டால், அது நல்லரசு என்று சொல்லலாம்.<br /><br />இன்று இரவு என்ன சாப்பிடுவது, நாளை மதியம் எதைச் சாப்பிடக்கூடாது என்று சட்டாம்பிள்ளைத் தனமாக தனக்குக் கிடைத்த ஆட்சி அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தக்கூடிய ஒரு கூட்டம் நாட்டிலே புறப்பட்டிருக்கிறது.<br /><br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.com