tag:blogger.com,1999:blog-1474608369333206681.post4627512504950509724..comments2023-10-29T13:02:52.613+05:30Comments on தமிழ் ஓவியா: வீரமணி ஒரு விமர்சனம்தமிழ் ஓவியாhttp://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-1567451967484268382011-12-08T19:16:51.854+05:302011-12-08T19:16:51.854+05:30பதில் சொல் தினமலரே!
திராவிடர் கழகத் தலைவர் கி.வீ...பதில் சொல் தினமலரே!<br /><br /><br />திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி: சிறீரங்கத்தில் அர்ச் சகப் பார்ப்பனர்களை பல்லக்கில் வைத்துத் தூக்கும், மனித உரிமைக்கு எதிரான நடவடிக்கை மீண்டும் தொடர்ந்தால், திராவிடர் கழகம் போராட்டத்தில் குதிக்கும்.<br /><br />டவுட் தனபாலு: இப்படித்தான், கல் சிலையைக் கும்பிடுறவன் காட்டுமிராண்டின்னீங்க... ஈ.வெ.ரா., சிலையைக் கும்பிடறீங்க... கிருஷ்ண ஜெயந்தியை கிண்டல் பண்ணீங்க... அண்ணாதுரை நூற்றாண்டு விழா கொண்டாடுறீங்க... பல்லக்கு தூக்குற தைக் கண்டிக்கிறீங்க... தலைவர்களை சாரட் வண்டியில வச்சு ஓட்டுறீங்க... வாழ்க உங்க பகுத்தறிவு...!<br /><br />- தினமலர், 7.12.2011<br /><br />வழக்கம் போல வல்லடி வழக்கிலே ஈடுபட்டுள்ளது தினமலர்.<br /><br />தலைவர்களுக்கு விழா எடுப்பதும், பார்ப்பானைப் பல்லக்கில் வைத்துத் தூக்கிச் செல்லுவதும் ஒன்றா!<br /><br />இந்தப் பால பாடம் கூடத் தெரியாத கூட்டத்துக்குப் பத்திரிகை ஒரு கேடா?<br /><br />மனிதனை மனிதன் தூக்குவதை நியாயப்படுத்தும் காட்டுவிலங்காண்டி கள் இன்றைக்கும் இருக்கத்தான் செய்கிறார்கள்.<br /><br />ஒரு சூத்திரப் பூசாரியைப் பார்ப் பனர்கள் பல்லக்கில் வைத்துத் தூக்கு வார்களா?<br /><br />சிறீரங்கக் கோவில் பார்ப்பனர் களின் கால்கள் எல்லாம் முடமாகிப் போய்விட்டனவா? நடந்து சென்றால் கவுரவம் குறைந்து போய்விடுமா?<br /><br />பெரியார் சிலையை யாரும் கும்பிடு வதில்லை, கும்பிடக்கூடாது என்பதற் குத்தான் கடவுள் இல்லை கடவுள் இல்லை! என்ற கல்வெட்டு அதில் இடம் பெற்றுள்ளது.<br /><br />சிறீரங்க நாதன் கோவிலுக்கு எதிரிலும், காஞ்சி சங்கர மடத்துக்கு எதிரிலும் தந்தை பெரியார் சிலை இருக் கிறதே - ஆத்திரம் வராதா அய்யர் கூட்டத்துக்கு?<br /><br />காலையில் எழுந்தவுடன் காஞ்சி சங்கராச்சாரியார் பெரியார் சிலையைச் சுற்றிவந்து கும்பிடுப் போடுவதாகக் கேள்வி - இப்படிப்பட்ட கூட்டத்துக்கு இனிமேல் இப்படித்தான் எழுத வேண்டும்.<br /><br />பிறக்காத கடவுள்களுக்குப் பிறந்த நாள் விழா கொண்டாடுவதும், பிறந்து வளர்ந்து நாட்டு மக்களுக்குத் தொண்டு செய்யும் - செய்த தலைவருக்குப் பிறந்த நாள் கொண்டாடுவதும் ஒன்றல்ல.<br /><br />பிறப்பு - இறப்பு அற்றவன் - உருவமற்றவன் கடவுள் என்று கத்திக் கொண்டு உருவம் ஏன்? கோவில் ஏன்? ஆண்டாண்டு திருக்கல்யாணம் ஏன்? போன வருடம் செய்து கொண்ட கல்யாணத்தை எவன் அடித்துக் கொண்டு போனான்? பதில் சொல் தினமலரே!<br /> ---"விடுதலை” 8-12-2011தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.com