tag:blogger.com,1999:blog-1474608369333206681.post4579465688876218572..comments2023-10-29T13:02:52.613+05:30Comments on தமிழ் ஓவியா: பள்ளிகளில் சர்வ சமய வழிபாடா?தமிழ் ஓவியாhttp://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comBlogger54125tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-180107013432832022012-10-03T07:52:54.108+05:302012-10-03T07:52:54.108+05:30[தந்தை பெரியார்] இந்த நாட்டில் காந்தி சிலைகள் இருப...[தந்தை பெரியார்] இந்த நாட்டில் காந்தி சிலைகள் இருப்பதே அவமானம்<br /><br /><br />சட்டத்திலே சாதியைக் காப்பாற்ற ஏற்பாடு செய்திருக்கிறார்கள்; அந்தப்படி செய்ததற்கு அடிப்படைக் காரணம் காந்தி. காந்தி பெயரைச் சொல்லித்தான் சாதிக்குப் பாதுகாப்பான ஏற்பாடு செய்ய முடிந்தது. எனவே, இந்த நாட்டில் காந்தி சிலை இருப்பது அவமானம் என்கிறேன். இன்று காங்கிரஸ்காரர்கள் சொல்லுகிறார்களே, "வெலிங்டன் சிலை இருக்கக் கூடாது; விக்டோரியா ராணி சிலை கூடாது; நீலன் சிலை கூடாது' என்று; அதுபோல காந்தி சிலை எங்கள் நாட்டில் இருக்கக் கூடாது என்று சொல்ல எனக்கும் உரிமையுண்டு. ஒரு வெலிங்டனும், நீலனும் செய்யாத அக்கிரமத்தை எங்களுக்கு காந்தி செய்துள்ளார்.<br /><br />காந்தி மனதார ஏமாற்றி, சாதியைக் காப்பாற்றப் பலமான சட்டம் செய்து கொண்டு, பார்ப்பானுக்குப் பாதுகாப்புக் கொடுத்து, நம்மை என்றும் அடிமையாக இருக்க ஏற்பாடு செய்துவிட்டுப் போய்விட்டார். நம்மவனோ நான் நாயக்கனாயிற்றே, நான் கவுண்டனாயிற்றே என்று நினைத்துக் கொண்டு சூத்திரன் என்பதைப் பற்றிக் கவலைப்படாமல் இருக்கிறானே தவிர, வேறு என்ன? தெரியாமல் தொட்டால், நெருப்பு சுடாமல் விடுமா? தெரியாதது போலவே இருந்து விட்டால், சூத்திரப் பட்டம் இல்லாது போய்விடுமா?<br /><br />ராசகோபாலாச்சாரியார் மதுரையில் பேசும்போது, "சிலர் தீண்டாமை ஒழிய வேண்டுமென்றதைத் தப்பாகப் புரிந்து கொண்டு, சாதியே ஒழிய வேண்டுமென்கிறார்கள். காந்தி ஒருக்காலும் சாதி ஒழிய வேண்டும் என்று சொல்லவில்லை; சாதி காப்பாற்றப்பட வேண்டுமென்றார்' என்று பேசினார். சாதி ஒழியக் கூடாது என்று சொல்லத் தைரியம் வந்துவிட்டதே, என்ன சங்கதி என்று பார்த்தால் ஒவ்வொன்றாகத் தெரிகிறது. காந்தி வருணாசிரம தர்மத்தை (சாதியை) காப்பாற்ற வேண்டும் என்று சொன்னதை ஆதாரமாக வைத்துக் கொண்டு அதன்படியே சாதியை அசைக்க முடியாதபடி சட்டம் செய்து விட்டார்கள். இது, காந்தி மனதாரச் செய்த துரோகம். இந்தப் பித்தலாட்டம் உங்களுக்குத் தெரியாது.<br /><br />டாக்டர் அம்பேத்கர் ஒரு புத்தகம் எழுதியுள்ளார். இதில் காந்தி செய்த பித்தலாட்டங்களை நல்லபடி எடுத்துப் போட்டுள்ளார். "தீண்டாமை ஒழிப்புக்குக் காங்கிரசும் காந்தியும் செய்தது என்ன?' என்பது அந்தப் புத்தகம்.<br /><br />நான் காங்கிரசில் இருந்தபோதே சமுதாயத் துறையில் சமத்துவம் ஏற்படுத்த வேண்டும் என்று நிறையப் பேசியிருக்கிறேன். அப்போது காந்தி, "தீண்டப்படாதவர்களைக் கிணற்றில் தண்ணீர் எடுக்க விடாவிட்டால் வேறு தனிக் கிணறு கட்டிக் கொடு. கோவிலுக்குள் விடாவிட்டால் வேறு தனிக் கோவில் கட்டிக் கொடு' என்றார்; பணமும் அனுப்புகிறேன் என்றார். அப்போது நாங்கள்தான் அந்த ஏற்பாட்டை எதிர்த்தோம். "கிணற்றில் தண்ணீர் எடுக்கக் கூடாதென்று இழிவுபடுத்தும் இழிவுக்குப் பரிகாரமில்லாவிட்டால் அவன் தண்ணீரில்லாமலே சாகட்டும்' என்றேன்.<br /><br />"அவனுக்கு இழிவு நீங்க வேண்டும் என்பது முக்கியமே தவிர, தண்ணீரல்ல' என்றேன். கோயில் பிரவேசம் வேண்டுமென்று கூப்பாடு போட்டோம். என் கூக்குரலுக்குக் கொஞ்சம் மரியாதை உண்டு என்பது ராஜாஜிக்குத் தெரியும். கோயில்களுக்குள் தீண்டப்படாதவர்கள் என்பவர்களை அழைத்துக் கொண்டு நுழைந்தோம். கேரளத்தில் பெரிய ரகளையாகிக் கொலையும் நடந்து விட்டது. ராஜாஜி, காந்தியிடம், "ராமசாமி பேச்சுக்கு மரியாதை உண்டு; ரகளை ஆகும். ஆதலால் கோவிலில் நுழைய விட்டுவிட வேண்டியதுதான்' என்றார். அதற்குப் பிறகும், "சூத்திரன் போகின்ற அளவுக்குப் பஞ்சமன் போகலாம்' என்றார்கள். நான், "சூத்திரனும் பஞ்சமனும் ஒன்றாகி, நாங்கள் இன்னும் கொஞ்சம் மட்டமானோமே தவிர, பார்ப்பான் அப்படியேதானே இருக்கிறான். சாதி ஒழிய வேண்டுமா, வேண்டாமா? என்றேன்.<br /><br />அப்போதிருந்தே காந்தி, சாதி காப்பாற்றப்பட வேண்டும் என்ற முயற்சியில் பார்ப்பனருக்கு உடந்தையாகவே இருந்து பல மோசடிகள் செய்து, நம்மை ஏமாற்றி விட்டார். காந்திக்கு இருந்த செல்வாக்கு, நம்மைப் பார்ப்பானுக்கு அடிமையாகவும் பார்ப்பான் பார்ப்பனனாகவே இருக்கவும்தான் பயன்பட்டது. இன்னும் சாதி ஒழிப்புக்கு விரோதமாக "காந்தி சொன்னது; காந்தி மகான் காட்டிய வழி' என்று கூறிச் சட்டத்திலும் பாதுகாப்புச் செய்து கொண்டார்கள்.<br /><br />காந்தி செய்த மோசடி மக்களுக்குத் தெரிய வேண்டும். அதனால்தான், "காந்தியின் படத்தை எரிப்போம்; எங்கள் நாட்டில் காந்தி சிலையிருப்பது கூடாது அகற்ற வேண்டும்' என்று சொல்லுகிறோம். காந்தியின் பெயரைச் சொல்லித்தானே பிழைக்கிறோம்; காந்திக்கு மரியாதை கெட்டுவிடும் போலிருக்கிறதே என்று நினைத்து அரசாங்கத்திற்கு சாதியை ஒழிக்க உணர்ச்சி வரலாம். "ஆகா! காந்தி படத்தை எரித்தால் ரத்தக் களறி ஆகும்!' என்கிறார்கள். ஆகட்டுமே என்ன நஷ்டம்? <br /><br />(தர்மபுரியில், 19.9.1957 அன்று ஆற்றிய உரை. "விடுதலை' 9.10.1957)தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-73576822619111940592012-10-03T07:13:37.746+05:302012-10-03T07:13:37.746+05:30இதனையடுத்து, தொழில் முறை படிப்புக்கான நுழைவுத் தேர...இதனையடுத்து, தொழில் முறை படிப்புக்கான நுழைவுத் தேர்வை தமிழக அரசு ரத்து செய்தது. மேலும், கிராமப் பகுதிகளில் 3 ஆண்டுப் பணியை நிறைவு செய்த மருத்துவர்களுக்கு மருத்துவ முதுநிலைப் பட்டப்படிப்பில் 50 விழுக்காடு இடங்களை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. அதிலும், மலைப் பகுதி மற்றும் பழங்குடியினர் வசிக்கும் இடங்களில் பணியாற்றிய மருத்துவர்களுக்கு சிறப்பு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.<br /><br />முதுகலைப் பட்டப் படிப்பை முடித்த மருத்து வர்கள், குறைந்தபட்சம், ஒரு குறிப்பிட்ட காலம் வரை, அரசு மருத்துவக் கல்லூரிகளில் பணியாற்று வதற்காக அவர்களிடமிருந்து உறுதிப் பத்திரங் களைப் பெறுவதிலும், தமிழக அரசு வெற்றி பெற்றுள்ளது. இந்த நடவடிக்கை, நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவர்களின் தேவையைப் பூர்த்தி செய்வதில் பேருதவியாக அமைந்தது. பொது நுழைவுத் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டால், இப்படிப்பட்ட முனைப்பான திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் சட்ட ரீதியிலான சிக்கல் ஏற்படும். தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு விதிமுறைகளின் அடிப்படையில் நடத்தப்படும். பொது நுழைவுத் தேர்வு முறையில், கிராமப்பகுதி மருத்துவ சேவை, குறைந்தபட்சம் ஒரு குறிப்பிட்ட காலம் வரை அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற வேண்டும் என்பவற்றிற்கெல்லாம் வழிவகை இல்லாமல் போய்விடக் கூடும்.<br /><br />மாநில அரசுகளுடன் ஆலோசனை நடத்தி அவற்றின் கருத்துகளை அறிந்த பின்னர்தான், அகில இந்திய பொது நுழைவுத் தேர்வு நடத்துவது குறித்த கொள்கை முடிவு எடுக்கப்படும் என மத்திய சுகாதார அமைச்சர் மாநில அரசுகளுக்கு உறுதியளித் திருந்தார். இதுகுறித்த கருத்துகளை தமிழக அரசும் மத்திய அரசுக்கு தெரிவித்திருந்தது. அகில இந்திய அளவில் பொது நுழைவுத் தேர்வு நடத்தும் திட்டம், கல்வி முறையை நிர்வகித்து வரும் மாநில அரசின் உரிமைகளில் தலையிடும் நடவடிக்கை.<br /><br />தமிழகத்தில் பின்பற்றப்பட்டு வரும் தனித் தன்மை வாய்ந்த இடஒதுக்கீட்டுக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதில், சிக்கல்களை ஏற்படுத் தும், மீண்டும் மீண்டும் தமிழக அரசு விடுத்திருந்த வேண்டுகோள்களை பொருட்படுத்தாமல், தற் போது, நுழைவுத் தேர்வு குறித்து மத்திய அரசு வெளி யிட்டுள்ள அறிவிப்பு, தமிழகத்தின் கருத்துகளை மத்திய அரசு அலட்சியப்படுத்தியுள்ளது என்பதை தெள்ளத் தெளிவாக உணர்த்துகிறது. பொது நுழைவுத் தேர்வை நடத்தும் முடிவிலிருந்து மத்திய அரசு பின்வாங்கத் தயாராக இல்லை என்பதையும் எடுத்துக்காட்டுகிறது. மருத்துவக் கல்லூரிகளில் ஆனு, ஆளு முதுகலை பட்டயப் படிப்பு ஆகியவற்றில் சேர தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு, கட்டாயம் என்பதும், மத்திய அரசின் அறிவிப்பில் குறிப்பிடப் பட்டுள்ளது. தமிழக அரசின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் மத்திய அரசு தன்னிச்சையாக வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது.<br /><br />சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசின் சார்பில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டு, பொது நுழைவுத் தேர்வு நடத்துவதற்கு தடை உத்தரவு பெறப்பட்டுள்ளதையும் மத்திய அரசு அலட்சியப் படுத்தியுள்ளது.<br />மருத்துவக் கல்லூரிகளில் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளில் சேர அகில இந்திய அளவில் பொது நுழைவுத் தேர்வு நடத்தும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு தமிழக அரசு சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்துக் கொள்கிறேன்.<br /><br />இந்த பொது நுழைவுத் தேர்வு நடத்துவதில் தமி ழக அரசுக்கு விதிவிலக்கு அளித்து, தற்போதுள்ள நிலையே தொடர அனுமதிஅளிக்க வேண்டும்.<br />- இவ்வாறு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்து உள்ளார் 2-10-2012தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-77558213559865687142012-10-03T07:13:29.605+05:302012-10-03T07:13:29.605+05:30வரவேற்கத்தக்க முயற்சி!
மருத்துவக் கல்லூரிகளில் ...வரவேற்கத்தக்க முயற்சி!<br /> <br />மருத்துவக் கல்லூரிகளில் சேர தேசிய நுழைவுத் தேர்வு<br /><br />தமிழ்நாடு அரசு எதிர்க்கிறது - ரத்து செய்க!<br /><br />தமிழ்நாடு முதலமைச்சர் பிரதமருக்குக் கடிதம்<br /><br /><br /><br />சென்னை, அக். 2- மருத்துவக் கல்லூரிகளில் சேர அகில இந்திய நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்ற மத்திய அரசின் முடிவை தமிழ்நாடு அரசு எதிர்க் கிறது; அதனைக் கண்டிப்பாக ரத்து செய்ய வேண் டும் என்று பிரதமருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். கடிதம் வருமாறு:<br /><br />கடந்த ஜூலை 30ஆம் தேதி அன்று நான் எழுதிய கடிதத்தில், மருத்துவக் கல்லூரி இளங்கலை மற்றும் முதுகலை பட்டப் படிப்புகளுக்கு அகில இந்திய அளவில் பொது நுழைவுத் தேர்வு நடத்தும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித் திருந்தேன். தமிழக அரசு எதிர்ப்புத் தெரிவித்திருந் தும், கல்வியாண்டு 2013-ல் ஆனு, ஆளு மற்றும் முதுகலை பட்டயப் படிப்பில், மாணவ - மாணவியர் சேர தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை நடத்த தேசிய தேர்வு வாரியத்திற்கு மத்திய அரசு உத்தர விட்டுள்ளது குறித்து எனது கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.<br /><br />தொழில்முறை படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வை ரத்து செய்வதை தமிழக அரசு ஏற்கெனவே ஒரு கொள்கை முடிவாக அறிவித்துள்ளது என்பதை எனது முந்தைய கடிதத்தில் உறுதிபடத் தெரிவித் துள்ளேன். சமூகப் பொருளாதார நிலையில் மிகவும் பின்தங்கியுள்ள கிராமப்பகுதி மாணவர்கள், தங்கள் பகுதிகளிலிருந்து, நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி அளிக்கும் கல்வி மையங்களுக்குச் செல்வதற்கோ, தேவையான புத்தகங்களை வாங்குவதற்கோ, அவர்களின் பொருளாதார நிலை பெரும் தடையாக அமைந்துள்ளது என்பது, நிபுணர் குழு நடத்திய விரிவான ஆய்வில் தெரிய வந்தது.<br /><br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-363857611468600252012-10-03T07:08:16.982+05:302012-10-03T07:08:16.982+05:30ஈழத் தமிழர் பிரச்சினைகள்பற்றி கலைஞர் கடிதத்திற்கு ...ஈழத் தமிழர் பிரச்சினைகள்பற்றி கலைஞர் கடிதத்திற்கு பிரதமர் எழுதியுள்ள பதில்<br /><br />தி.மு.க. தலைவர் மானமிகு டாக்டர் கலைஞர் அவர்கள் 20-8-2012 அன்று ஈழத் தமிழர் பிரச்சினைகள் பற்றி இந்தியப் பிரதமருக்கு எழுதி இருந்த கடிதத்திற்கு இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் 25-09-2012 அன்று பதில் கடிதத்தை கலைஞர் அவர்களுக்கு எழுதியுள்ளார்.<br /><br />அக்கடிதத்தின் தமிழாக்கம் வருமாறு:<br /><br />அன்புள்ள டாக்டர் கருணாநிதிஜி,<br />இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகள் பற்றி நீங்கள் 20-8-2012 அன்று எழுதிய கடிதத்திற்கு பதிலான இந்தக் கடிதத்தை நான் எழுதுகிறேன்.<br /><br />உங்கள் கடிதத்தில் எழுப்பப்பட்டிருந்த அனைத்துப் பிரச்சினைகள் பற்றியும் நான் கவனத்தில் எடுத்துக் கொண்டேன்.<br /><br />இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவடைந்த போதிலிருந்து, இலங்கை வாழ் தமிழ் குடிமக்களின் நலன்களின் மீது இந்திய அரசு தனது கவனத்தைச் செலுத்தி வருகிறது. புலம் பெயர்ந்த தமிழர்களை மறுபடியும் அவர்களின் குடியிருப்புகளி லாவது அல்லது வேறு இடங்களிலாவது குடியமர்த்துவது என்பதற்கே நமது அரசு முக்கியமாக அதிக அளவில் முன்னுரிமை அளித் துள்ளது. அதிகாரப் பங்கீடு பற்றி இலங் கைத் தமிழர்களின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை இலங்கை அரசுக்கு நாங்கள் தெரிவித்துள்ளோம். சமத்துவம், கவுரவம், நீதி மற்றும் சுயமரியாதையுடன் கூடிய வாழ்க்கையை இலங்கை தமிழ் சமூகத்தினருக்கு எதிர்காலத்தில் அளிப்பது பற்றி நாங்கள் தொடர்ந்து இலங்கை அரசுடன் பேசிக் கொண்டிருக்கிறோம்.<br />மிக்க மரியாதையுடன்,<br />தங்கள் உண்மையுள்ள,<br />ஒப்பம். மன்மோகன்சிங் 2-10-2012தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-19979927332022939442012-10-03T07:06:44.106+05:302012-10-03T07:06:44.106+05:30
செய்தியாளர் :- கூடங்குளம் பிரச்சினையில் தற்போது ப...<br />செய்தியாளர் :- கூடங்குளம் பிரச்சினையில் தற்போது போராட் டம் தீவிரம் அடைந்திருக்கிறது. இதில் மத்திய, மாநில அரசுகளுக்கு நீங்கள் சொல்கின்ற கருத்து என்ன?<br /><br />கலைஞர் :- மத்திய அரசு, மாநில அரசைப் போல இருதலைக் கொள்ளியாக செயல்படக் கூடாது என்பது தான் என்னுடைய கருத்து. கூடங்குளம் பற்றிப் பேசுவதென்றால், அது பெரிய வரலாறு. உங்கள் மொழியிலே, உங்களுக்குத் தெரிந்த மொழியிலே சொல்லவேண்டுமேயா னால், அது பெரிய ராமாயணம். ஏனென்றால் கூடங்குளம் தொடங் கிய போது, அதனால் மின்சார உற்பத்தி அதிகமாகும், நாட்டிற்குப் பயன்படும் என்றெல்லாம் சொன்ன போது அதை வரவேற்றவர்கள் நாங்கள். இப்போதும் வரவேற்பவர் கள் தான். ஆனால் அதனால் மக் களுக்கு ஆபத்து ஏற்படும், வாழ்வா தாரமே சீர் குலையும் என்றெல்லாம் குரல் கிளம்பிய போது அதைப் பற்றி முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் உடனடியாக - அவருடைய கட்சிக் கூட்டத்திலே அல்ல, ஆட்சியின் அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டி, கூடங்குளத்தில் பணிகளை யெல்லாம் நிறுத்தி வைக்கவேண்டு மென்று தீர்மானத்தை நிறைவேற்றி, அதை டெல்லிக்கு அனுப்பி வைத் தார். அதன் பிறகு இப்போது, கூடங் குளத்தால் ஏற்படும் ஆபத்துகளை விளக்கிப் போராடு கின்ற மக்களை அழைத்துப் பேசியோ அல்லது அரசின் மூலமாகவோ சமாதானப் படுத்துகின்ற - அவர்களுக்குத் தெளிவு ஏற்படுத்துகின்ற எந்த முயற்சிகளிலும் ஈடுபடாமல், அடக்குமுறையால் அதை ஒடுக்கி விடலாம் என்று கருதி செயல்படுகிறார். அதைத் தான் நாங்கள் கண்டிக்கிறோம்.<br /><br />செய்தியாளர் :- கிரானைட் குவாரி விஷயத்தில் முன்னாள் அமைச்சர் மீதும், இப்போதுள்ள அமைச்சரின் மகன் மீதும் வழக்கு தொடுத்து காவல்துறையினர் தேடிக் கொண்டிருக்கிறார்கள். அதை அரசியல் பழிவாங்கும் போக்கு என்று நீங்கள் நினைக்கிறீர்களா?<br /><br />கலைஞர் :- அரசியல் பழி வாங்கும் செயல் இன்று சர்வ சாதாரணமாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது தொடுக்கப்படுகிறது என்பதை நான் நன்றாக அறிவேன். இந்த கிரானைட் குவாரி பிரச் சினையில் சம்பந்தப்பட்ட வர்கள் என்று யார் யார் மீது குற்றம் சாட்டி யிருக்கிறார்களோ, அவர்களைப் பற்றி யெல்லாம் பத்திரிகைகளிலே செய்தி கள் வருகின்றன. சிக்கியவர்களில் யார்யார் உண்மையான தவறு செய்த வர்கள், தவறு செய்யாதவர்கள் யார் என்பது என்பதெல்லாம் இப்போது தெரியாது. ஏனென்றால் இந்தத் தொழிலிலே ஈடுபட்டவர்கள் யார் யார் என்பதை கடந்த கால அ.தி.மு.க. ஆட்சியிலேயிருந்து கணக்கிட்டு, அதைப் பற்றி பரிசீலிக்க சி.பி.ஐ. விசாரணை வைப்பது தான் உசிதமாக இருக்கும் என்று நான் கருதுகிறேன்.<br /><br />செய்தியாளர் :- தலைமைச் செய லகத்திற்கு முன்னால் இருந்த கல்வெட் டில் இருந்த உங்கள் பெயரை அழித்திருக்கிறார்கள். பக்கத்திலேயே ஜெயலலிதாவின் பெயர் தாங்கிய கல்வெட்டினை புதிதாக வைத்திருக் கிறார்கள்.<br /><br />கறுப்புச் சட்டை மனிதச் சங்கிலி ஆர்ப்பாட்டம் அந்த வழியாகத் தான் செல்கிறது.<br />உங்கள் தொண்டர்கள் கல்வெட் டினைப் பார்த்து விட்டு கோபப்பட மாட்டார்களா?<br /><br />கலைஞர் :- இதெல்லாம் சாதா ரண விஷயம்.<br /><br />இவ்வாறு கலைஞர் அவர்கள் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார்.<br /><br /> <br /><br />பிற்போக்குத்தனமான, மதச் சார்புள்ள ஆட்சி வந்துவிடக் கூடாது<br /><br />செய்தியாளர் :- பல்வேறு முரண்பாடுகளோடு மத்திய அரசு செயல்படும் இந்த நிலையில், தொடர்ந்து தி.மு.க. அவர்களுக்கு ஆதரவு அளிப்பதின் காரணம் என்ன?<br /><br />கலைஞர் :- இந்தியாவிலே ஒரு பிற்போக்குத்தனமான, மதச் சார்புள்ள ஆட்சி வந்து விடக் கூடாது என்பது தான் முக்கிய காரணம். 2-10-2012தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-33938228275726957822012-10-03T07:06:33.447+05:302012-10-03T07:06:33.447+05:30பிற்போக்கான மதச் சார்பான ஆட்சி வந்துவிடக் கூடாது!
...பிற்போக்கான மதச் சார்பான ஆட்சி வந்துவிடக் கூடாது!<br /><br />செய்தியாளர்களிடம் கலைஞர் பேட்டி<br /><br /><br /><br />சென்னை, அக்.2- இன்றைய மத்திய ஆட் சியைத் தொடர்ந்து ஆதரிப்பதற்குக் கார ணம் - ஒரு பிற்போக் கான மதச் சார்பான ஆட்சி வந்துவிடக் கூடாது என்பதற்காகத் தான் என்று திமுக தலை வர் கலைஞர் அவர்கள் நேற்று அண்ணா அறி வாலயத்தில் செய்தி யாளர்களிடம் கூறினார். செய்தியாளர் :- போராட்டத் தீர்மானத் தின் மீது எடுத்த முடி வைப் பற்றி கூறுங்கள்?<br /><br />கலைஞர் :- அனைத்து வகையிலும் செயலிழந்து விட்ட அ.தி.மு.க. அரசின் மக்கள் விரோதப் போக் கைக் கண்டித்து சென்னை மாநகரில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலு வலகத்திலே இருந்து, கடற்கரைச் சாலை வழியாக, கடற்கரைச் சாலையிலே உள்ள கலங்கரை விளக்கம் வரையில் - அக்டோபர் 5ஆம் தேதி வெள்ளிக் கிழமை பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரையில் கறுப்புடை அணிந்த மனிதச் சங்கிலி யும் - அதுபோலவே தமி ழகம் முழுவதும் மாவட் டத் தலைநகரங்களிலும் அதே நாளில் பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரையில் அவ் வாறே கறுப்புடை அணிந்த மனிதச் சங்கிலி யும் அமைத்து ஆர்ப் பாட்டம் நடத்துவ தென்று இந்தச் செயற் குழு தீர்மானித்துள்ளது.<br /><br />செய்தியாளர் :- சென்னையில் நடைபெ றும் கறுப்புடை அணிந்த மனிதச் சங்கிலி ஆர்ப் பாட்டத்திற்கு யார் தலைமை ஏற்கிறார்கள்?<br /><br />கலைஞர் :- சென் னையிலே நடைபெறும் கறுப்புடை அணிந்த மனிதச் சங்கிலி ஆர்ப் பாட்டத்திற்கு நானே தலைமை வகிக்கிறேன். மற்ற மாவட்டங்களில் நடைபெறும் ஆர்ப் பாட்டங்களைப் பற்றி மாவட்டக் கழகச் செய லாளர்கள் கலந்து பேசி முடிவெடுத்து அறிவிப் பார்கள்.<br /><br />செய்தியாளர் :- டீசல் விலை உயர்வு பற்றி?<br /><br />கலைஞர் :- அதை யெல்லாம் உள்ளடக்கித் தான் தீர்மானங்கள் நிறைவேற்றியிருக்கிறோம். ஏழு தீர்மானங்களில் அவைகள் எல்லாம் அடங்கும்.<br /><br />செய்தியாளர் :- மத்திய அமைச்சரவை யில் புதிதாக சேர மாட் டோம் என்று சொல்லி யிருக்கிறீர்கள். அதற்கு என்ன காரணம்?<br /><br />கலைஞர் :- பங்கு பெற மாட்டோம் என் பது தான் காரணம்.<br /><br />செய்தியாளர் :- அ.தி.மு.க. பொறுப் பேற்றதிலிருந்து அதி காரிகள் எல்லாம் அடிக் கடி மாற்றப்படுகிறார் கள். அமைச்சர்கள் மாற்றப்படுகிறார்கள். பேரவைத் தலைவரே<br /><br />இப்போது பதவி விலகியிருக்கிறார். அதைப்பற்றி தி.மு.க. வின் கருத்து?<br /><br />கலைஞர் :- நிறைவேற்றப்பட் டுள்ள ஏழு தீர்மானங்களில் இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதில் அடங்கியிருக்கிறது.<br />அந்நிய முதலீடு<br /><br />செய்தியாளர் :- அய்க்கிய முற்போக்குக் கூட்டணியில் நீங்கள் இடம் பெற்றிருக்கிறீர்கள். அந்நிய நேரடி முதலீட்டினை எதிர்த்து எதிர்க் கட்சிகள் நாடாளுமன்றத் திலே தீர்மானம் கொண்டு வந்தால், அதை தி.மு.க. ஆதரிக்குமா?<br /><br />கலைஞர் :- ஆதரவு அளிப் போம்.<br /><br />செய்தியாளர் :- இப்போதுள்ள அரசியல் சூழ்நிலையில் மூன்றாவது அணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?<br /><br />கலைஞர் :- அதற்கான முயற்சி களிலே சிலர் ஈடுபட்டிருக்கிறார்கள். அவர்களிடம் கேட்க வேண்டிய கேள்வியை அந்த அணியைப் பற்றியே சிந்திக்காமல் இருக்கின்ற எங்களிடம் கேட்பது நியாயமல்ல.<br /><br />செய்தியாளர் :- பா.ஜ.க. உள் ளிட்ட கட்சிகள் நாடாளுமன்றத் திற்கு முன் கூட்டியே தேர்தல் வரும் என்று சொல்கிறார்கள். உங்கள் கருத்து என்ன?<br /><br />ஜோசியத்தில் நம்பிக்கை இல்லை<br /><br />கலைஞர் :- நான் ஜோசியம் சொல்ல விரும்பவில்லை. பொது வாக ஜோசியத்திலே நம்பிக்கையும் இல்லை.<br /><br />செய்தியாளர் :- காங்கிரசுடன் தி.மு.க. விற்கு உறவு எவ்வாறு உள்ளது?<br /><br />கலைஞர் :- உறவு என்பது வேறு. அதற்கிடையே இது போன்ற சில பிரச்சினைகளை பேசித் தீர்ப்பது என்பது வேறு. ஆகவே இந்தப் பிரச்சினைகளுக்காக உறவு பாதிக்காது.<br /><br />செய்தியாளர் :- அய்க்கிய முற் போக்குக் கூட்டணியின் ஒருங் கிணைப்புக் கூட்டத்தில் தி.மு. கழகம் தன்னுடைய மாறுபட்ட பிரச்சி னைகளை முன் வைத்ததா?<br /><br />கலைஞர் :- கட்சி வேறுபாடு எதுவும் இல்லை. பிரச்சினைகளின் மீது எங்களுடைய கருத்துக்களை தி.மு.க. சார்பிலே கலந்து கொண்ட வர்கள் வெளியிட்டிருக்கிறார்கள்.<br /><br />செய்தியாளர் :- அய்க்கிய முற் போக்குக் கூட்டணியில் தி.மு.க. தன்னுடைய எதிர்ப்புகளைத் தெரி வித்த பிறகும், பிரதமர் எடுத்த முடிவில் மாறுதல் இருக்காது என்று சொல்லியிருக்கிறாரே?<br /><br />கலைஞர் :- உடனடியாக அந்தக் கருத்தைப் பற்றி சவால் முறையில் எதுவும் செவதற்கில்லை. மக்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் எங் களுக்குள்ள அக்கறையின் காரண மாக பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள் மேலும் இவைகளைப் பற்றிச் சிந்திப்பார் என்ற நம்பிக் கையில் இருக்கிறோம்.<br />கூடங்குளம் பிரச்சினை<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-24944992636703057812012-10-02T18:13:04.330+05:302012-10-02T18:13:04.330+05:30காந்தியார் கொல்லப்பட்டது ஏன்?
இந்தியா சுதந்திரம் ப...காந்தியார் கொல்லப்பட்டது ஏன்?<br />இந்தியா சுதந்திரம் பெற்றது 15.8.1947இல் காந்தியார் கொல்லப்பட்டது - 30.1.1948இல் அதாவது சுதந்திரம் பெற்ற 168ஆம் நாள் கொல்லப்பட்டார்.<br /><br />காந்தி, இந்தியாவை மதச் சார்பற்ற நாடு என்று சொன்னது. 7.12.1947-இல்; காந்தி கொல்லப்பட்டது 30.1.1948-இல். அதாவது அவர் நம் நாடு மதச் சார்பற்றது என்று சொன்ன 53ஆம் நாள் கொல்லப்பட்டார். காந்தி, இந்தியா சுதந்திரம் பெற்றவுடன் பார்ப்பனரின் நடத்தையைப் பார்த்து அவர் சுயமரியாதைக்காரராகிவிட்டார். அவர் கொல்லப்படாவிட்டால், இந்தியா சுயமரியாதைக் கொள்கை நாடாகி விடும் என்று பயந்தே அவரைக் கொன்றார்கள்.<br /><br />- தந்தை பெரியார்தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-39074070740994810062012-10-02T18:11:09.490+05:302012-10-02T18:11:09.490+05:30அகில இந்திய நுழைவுத் தேர்வை எதிர்த்து ஓரணியில் தமி...அகில இந்திய நுழைவுத் தேர்வை எதிர்த்து ஓரணியில் தமிழ்நாடு<br /><br />இளநிலை மருத்துவப் படிப்புக்கும், முதுநிலை மருத்துவப் படிக்கும் அகில இந்திய அளவில் தேசிய நுழைவுத் தேர்வு நடத்தப்படுவதை எதிர்த்து திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் அறிக்கை வெளியிட்டார். (விடுதலை 27.9.2012)<br /><br />இந்த அறிக்கை இப்பொழுது மிகவும் சூடு பிடித்து விட்டது. முன்னாள் முதல் அமைச்சர் - தி.மு.க. தலைவர் மானமிகு கலைஞர் அவர்களும் இந்திய நுழைவுத் தேர்வை எதிர்த்து தம் கருத்தினை வெளியிட்டுள்ளார்.<br /><br />ம.தி.மு.க. பொதுச் செயலாளர் திரு. வைகோ அவர்களும் அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வை எதிர்த்துக் கருத்துத் தெரிவித்ததுடன், அதற்காகப் போராடவும் தயார் என்றும் அறிவித்துள்ளார்.<br /><br />தமிழ்நாடு முதல் அமைச்சர் மாண்புமிகு செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்கள் இதுகுறித்துப் பிரதமர் அவர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.<br /><br />தமிழ்நாட்டில் நுழைவுத் தேர்வு கிடையாது. மேலும் தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது - அகில இந்திய நுழைவுத் தேர்வு நடத்தினால் அந்த இடஒதுக்கீடு பாதிக்கப்படும். மேலும் கிராமப்புற ஏழை - எளிய மக்கள் நுழைவுத் தேர்வு எழுதுவதற்கான வாய்ப்பு வசதிகள் பெற்றிடவும் இல்லை.<br /><br />கிராமப் பகுதிகளில் 3 ஆண்டுகள் பணியாற்றி யவர்கள் குறிப்பாக மலை வாழ் மக்கள் பகுதிகளில் பணியாற்றும் இளங்கலை பட்டம் பெற்ற மருத் துவர்களுக்கு (ஆக்ஷக்ஷளு) முதுநிலை மருத்துவப் படிப்புக்கு 50 விழுக்காடு இடஒதுக்கீடு தமிழ்நாட்டில் ஒதுக்கப்பட்டு வருகிறது. மத்திய தேர்வாணையம் அகில இந்திய அளவில் நுழைவுத் தேர்வை நடத்தினால் இந்த வாய்ப்புகள் பறி போகக் கூடிய ஆபத்து இருப்பதையும்பற்றி மிகச் சரியாகவே முதல் அமைச்சர் பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.<br /><br />மேலும் மாநில அரசின் உரிமையில் மத்திய அரசு தலையிடுவதையும் முதல் அமைச்சர் சுட்டிக் காட்டத் தவறவில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்னும் வேறுபாடு இல்லாமல் அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வை எதிர்ப்பதை மத்திய அரசு புரிந்து கொள்ள வேண்டும்.<br /><br />இப்படி ஒரு நுழைவுத் தேர்வைக் கொண்டு வருவதற்கு முன்பாக மாநில அரசின் கருத்துக் கேட்கப்படும் என்று மத்திய சுகாதாரத் துறை உறுதி கொடுத்ததற்கு மாறாக இப்படி நடந்து கொள்வது கண்டிக்கத்தக்கதே!<br /><br />நெருக்கடி நிலை காலத்தில் கல்வியை மாநிலப் பட்டியலிலிருந்து பொதுப் பட்டியலுக்குக் கொண்டு சென்றதைப் பயன்படுத்தி இப்படி தன்னிச்சையாக ஒரு தரப்பாக முடிவு செய்ய முடியும் என்று மத்திய அரசு கருதுமேயானால் அது மத்திய - மாநில அரசுகளின் மோதலில் தான் கொண்டு போய்விடும் என்பதைக் சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.<br /><br />இதையும் கடந்து தமிழ்நாட்டில் அனைத்து மக்களும் கட்சிகளும் ஒன்று திரண்டு வீதிக்கு வந்து போராடும் நிலையையும் இது உருவாக்கும் என்பதில் அய்யமில்லை. தந்தை பெரியார் பிறந்த சமூகநீதி மண் - சமூகநீதிக்காகப் பாடுபட்டு நிலை நிறுத்திய திராவிடர் இயக்கம் வேரூன்றிய பூமியும்கூட! இந்திய அரசமைப்புச் சட்டம் முதன் முதலாகத் திருத்தப்பட்டதற்குக் காரணமாக இருந்ததும் தந்தை பெரியார் தலைமையிலான போராட்டங்கள்தான் என்பதை மறந்து விடக்கூடாது.<br /><br />மண்டல் குழுப் பரிந்துரைகளை அமல்படுத்துவ தற்காக திராவிடர் கழகம் 42 மாநாடுகளையும் 16 போராட்டங்களையும் நடத்தியது என்ற வரலாற்று உண்மையையும் நினைவூட்டுகிறோம்.<br />அகில இந்திய நுழைவுத் தேர்வு என்பது இந்திய அளவில் அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களையும், கிராமப்புற ஏழை - எளிய மக்களையும் பாதிக்கக் கூடியது என்பதால் இந்தத் திட்டத்தை அறவே ரத்து செய்வது தான் நல்லது; அல்லது நுழைவுத் தேர்வை விரும்பாத மாநிலங்களில் ரத்து செய்ய வேண்டும்.<br /><br />ஏற்கெனவே ஆந்திர மாநிலம் மற்றும் காஷ்மீரில் அகில இந்திய நுழைவுத் தேர்வு கிடையாது. இப்பொழுது குஜராத்தும், மேற்கு வங்கமும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான நாடாளுமன்ற குழுவிடமும் திராவிடர் கழகம் தன் கருத்தைப் பதிவு செய்துள்ளது. நாடாளுமன்ற குழுவும், தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையமும் இந்தப் பிரச்சினையில் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம் 2-10-2012தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-72566699716349082402012-10-02T06:10:26.001+05:302012-10-02T06:10:26.001+05:30காரைக்கால் முதல் மேட்டூர்வரை
தமிழ்நாட்டின் காவிரி...காரைக்கால் முதல் மேட்டூர்வரை<br /><br />தமிழ்நாட்டின் காவிரி நீர் உரிமைக்கான விழிப் புணர்வுப் பிரச்சாரத்தை அக்டோபர் 2 முதல் காரைக் காலில் தொடங்கி அக்டோபர் 8 இல் மேட்டூரில் நிறைவு பெற செய்ய இருக்கிறது திராவிடர் கழகம்.<br /><br />காவிரி நீர் பிரச்சினையில் ஒவ்வொரு கட்டத் திலும் திராவிடர் கழகம் முன்னின்று, தன் முக்கிய கடமையினை ஆற்றி வந்திருக்கிறது.<br /><br />அதே கடமையினைத்தான் இப்பொழுதும் ஆற்றிட முன் வந்தும் உள்ளது.<br /><br />காவிரி நீர் கருநாடக மாநிலத்தில் உற்பத்தியா கிறது என்கிற ஒரே காரணத்தால், அம்மாநிலத்துக்கு மட்டுமே அது உரிமையானது என்று பொருள் கிடையாது.<br /><br />நதிநீர் தொடர்பான சட்டங்களும், விதிகளும் உலகம் தழுவிய அளவில் உள்ளன. எந்த ஒரு நாடும் கருநாடகம் நடந்துகொள்வதுபோல் நடந்துகொள்ள முடியாது.<br /><br />தனக்கு விஞ்சிதான் தானதருமம் என்று நினைக்கிறதோ கருநாடகம் என்று எண்ணத் தோன்றுகிறது.<br /><br />கருநாடகம் தமிழ்நாட்டுக்குத் தருவது, தானமும் அல்ல - தருமமும் அல்ல. சட்டப்படி தமிழ்நாட்டுக்கு உரிய நீரைத்தான் தமிழ்நாடு கேட்கிறதே தவிர, மடிப்பிச்சை ஒன்றும் ஏந்திவிடவில்லை.<br /><br />மத்திய அரசு நினைத்தால், கருநாடகத்தின் மீது சட்டப்படியான நடவடிக்கையை எடுக்க முடியும். உச்சநீதிமன்றத்தின் ஆணையையே கருநாடகத் தால் மீற முடிகிறது; அப்படி மீறினாலும் கரு நாடகத்தின் மீது எந்தவித நடவடிக்கையையும் எடுக்க முடியவில்லை என்பது எவ்வளவு பரிதாபகர மான நிலை!<br /><br />இன்னும் சொல்லப்போனால் அரசமைப்புச் சட்ட நெருக்கடி என்று கூட இதனைக் கூற முடியும். நீதிமன்ற அவமதிப்பு வழக்கையும் கூடத் தொடர முடியும். ஆனால், எதுவும் நடைபெறவில்லை.<br /><br />காவிரி நதி நீர் ஆணையத்தின் தலைவராக இருக்கக்கூடிய பிரதமர் பிறப்பித்த ஆணைக்குக் கருநாடகம் கட்டுப்பட்டுத்தான் தீரவேண்டும் என்று உச்சநீதிமன்றம் நேற்றைய தீர்ப்பில் கூறி இருக்கிறது.<br /><br />தமிழ்நாட்டில் குறுவை சாகுபடி நாசமாகப் போய்விட்டது. சம்பா சாகுபடியாவது நடக்க வேண்டும். நாளொன்றுக்கு 2 டி.எம்.சி தண்ணீர்த் தேவை என்று உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை ஒன்று தமிழ்நாடு அரசின் சார்பில் வைக்கப்பட்டுள்ளது.<br /><br />வினாடிக்கு 9000 கனஅடி நீர் என்ற பிரதமரின் ஆணையையே மதிக்காத மாநிலம் ஆயிற்றே கருநாடகம். பிரதமரின் அந்த ஆணையை உச்சநீதிமன்றம் வழிமொழிந்து இருக்கிறது.<br /><br />கருநாடகம் என்ன செய்யப் போகிறது?<br /><br />இதற்குக் கருநாடக அரசு கட்டுப்படவில்லை யென்றால் மத்திய அரசோ, உச்சநீதிமன்றமோ அடுத்து என்ன நடவடிக்கையை எடுக்கப் போகிறது? இந்தியாவே எதிர்பார்க்கிறது.<br /><br />கருநாடகத்தைப் பொறுத்தவரை எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், காவிரி நீர்ப் பிரச்சினையில் ஒரு மோதல் போக்கைத்தான் கடைப்பிடிக்கிறது. அது சட்டத்தையோ, நியாயத்தையோ, நியதியையோ கடைப்பிடிப்பதில்லை.<br /><br />ஒன்றை ஒப்புக்கொள்ளவேண்டும் தேசியத் திலகங்கள். இந்தியா ஒரே நாடு; தேசிய ஒருமைப் பாடு, தேசிய நீரோட்டம் என்றெல்லாம் வாய்கிழியப் பேசுபவர்கள் அப்படிப் பேசுவதெல்லாம் உதட்டளவில் தான் என்பதை ஒப்புக்கொள்ளவேண்டும்.<br /><br />நதிநீர்ப் பிரச்சினை, இந்தியாவைத் துண்டு போட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. தேசியம் பேசும் அண்ணாச்சி, காவிரி நீர் என்னாச்சு என்று திராவிடர் கழகம் பேரணிகளில் முழக்கமிடுவதுண்டு. அது ஒன்றும் வெற்று முழக்கமல்ல என்பதை இப்பொழுதாவது சம்பந்தப்பட்டவர்கள் உணர வேண்டும்.<br /><br />கட்சிகளைக் கடந்து தமிழ்நாட்டு மக்கள் ஓரணியாய் எழுந்து நின்று குரல் கொடுக்க வேண்டும். சட்ட விரோத - நியாய விரோத காரியங் களில் எல்லாம் கருநாடகம், கேரளம் போன்ற மாநிலங்கள் கைகோத்து நிற்கும்போது சட்டமும், நியாயமும் நம் பக்கம் இருக்கும் பிரச்சினையில்கூட தமிழ்நாட்டு மக்கள் ஒன்று சேரவில்லை என்றால், தமிழ்நாடு தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டுக் கொண்டே தானிருக்கும் என்பதில் அய்யமில்லை.<br /><br />திராவிடர் கழகம், காரைக்கால்முதல் சேலம் வரை மேற்கொள்ளும் எழுச்சிப் பயணத்தை வெற்றி யாக்கிக் கொடுப்பது நம் அனைவரின் கடமையாகும். 29-9-2012தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-28581735702403739602012-10-02T06:10:00.624+05:302012-10-02T06:10:00.624+05:30
தொடக்க விழாவில், பகுத்தறிவு கொள்கை சார்ந்த புத்தக...<br />தொடக்க விழாவில், பகுத்தறிவு கொள்கை சார்ந்த புத்தகங்கள் வெளியிடப்பட்டன. இங்கிலாந்து நாட்டு பகுத்தறிவு எழுத்தாளர் ஜிம் ஹெர்ரிக் எழுதிய ‘‘The Atheist Centre: Unbound by Cages’’ எனும் புத்தகத்தினை தமிழர் தலைவர் டாக்டர் கி. வீரமணி வெளியிட்டார். ‘‘My Life with Gora’’ (கோராவுடன் எனது வாழ்க்கைப் பயணம்) எனும் சரஸ்வதி கோராவின் தன் வலராறு நூலினை அய்தராபாத் திறந்தவெளி பல்கலைக் கழகத்தின் மேனாள் துணைவேந்தர் பேராசிரியர் ஆர்.வி.ஆர். சந்திரசேகரராவ் வெளியிட்டார். ‘‘Women Visionaries and Activists’’ (பெண் சிந்தனையாளர்களும் மற்றும் போராளிகளும்) எனும் தொகுப்பு நூலை டில்லி காந்தி அமைதி நிறுவனத்தின் தலைவர் ராதாபட் வெளியிட்டார்.<br /><br />விகாஸ் கோரா எழுதிய ‘‘Life and Work of Saraswathi Gora’’ (சரஸ்வதி கோராவின் வாழ்வும், பணியும்) எனும் நூலை நாகார்ஜுனா பல்கலைக் கழகத்தின் மேனாள் துணை வேந்தர் பேராசிரியர் பாலமோகன்தாஸ் வெளியிட்டார்.<br /><br />சரஸ்வதி கோரா நூற்றாண்டு புகைப்படக் கண்காட்சி<br /><br /><br /><br />பன்னாட்டு மனித நேய மற்றும் நன்னெறி ஒன்றியத்தின் தலைவர் சோனியா எக்கரிக்ஸ் அவர்களுக்கு தமிழர் தலைவர் கி.வீரமணி சால்வை அணிவித்து சிறப்பு செய்தார்.<br /><br />சரஸ்வதி கோராவின் வாழ்க்கைப் பயணத்தின் பல்வேறு கட்டங்களைப் பிரதிபலிக்கும் ஒளிப்படங்களின் தொகுப்பாக அரியதோர் புகைப்படக் கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது.<br /><br />தொடக்க விழா நடைபெறும் முன்பு புகைப்படக் கண்காட்சியினை பெரியார் மணிம்மை பல்கலைக் கழக வேந்தர் தமிழர் தமிழர் டாக்டர் கி. வீரமணி அவர்களது முன்னிலையில், தென் குஜராத் பல்கலைக் கழக மேனாள் துணைவேந்தர் பேராசிரியர் பி.ஏ. பாரிக் திறந்து வைத்தார். புகைப்படக் கண்காட்சியில், கோராவின் 101 ஆவது பிறந்த நாள் நிகழ்ச்சியில் விஜயவாடாவில் தமிழர் தலைவர் பங்கேற்ற நிகழ்வு, சரஸ்வதி கோரா சென்னை- பெரியார் திடலுக்கு வருகை தந்த நிகழ்வுகளை நினைவூட்டும் ஒளிப்படங்கள் இடம்பெற்றிருந்தன.<br /><br />பிற மாநிலங்களிலிருந்து பல்வேறு நாத்திக, பகுத்தறிவு அமைப்புகளின் பொறுப்பாளர்கள் நூற்றாண்டு விழாவில் பங்கேற்றனர். சரஸ்வதி கோராவின் நூற்றாண்டு விழாவில் கலந்துகொள்ளச் சென்ற தமிழர் தலைவருடன், பகுத்தறிவாளர் கழகப் பொதுச்செயலாளர் வீ. குமரேசன், திராவிடர் கழக ஊடகத் துறையின் மாநிலச் செயலாளர் பிரின்ஸ் என்னாரெசு பெரியார், புகைப்படக் கலைஞர் பா. சிவகுமார் ஆகியோர் உடன் சென்றிருந்தனர். 29-9-2012தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-26699176322762481402012-10-02T06:09:53.445+05:302012-10-02T06:09:53.445+05:30ஜெர்மன் நாட்டு பகுத்தறிவாளர் டாக்டர் வோல்கர் முல்ல...ஜெர்மன் நாட்டு பகுத்தறிவாளர் டாக்டர் வோல்கர் முல்லர் அவர்களுக்கு தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தார்.<br /><br />ஆனால், இந்த நாட்டில் கடவுள் தத்துவம், மத நம்பிக்கைகள் அனைத்தும் மனிதநேயத் தன்மை களுக்கும், செயல்களுக்கும் புறம்பாக இருக்கும் நிலையில், ஒரு நல்ல குடிமகன் கடவுள் மறுப்பாளராக தான் இருக்க முடியும். கடவுளை மறுக்கும், கடவுள் தத்துவத்தை எதிர்க்கும் பகுத்தறிவு நிலையினை இந்த மண்ணில் உருவாக்கியவர்கள், தந்தை பெரியாரும், கோராவும் ஆவார்கள். இந்தச் சமூக மாற்றப் பயணத்தில் போராடிய சரஸ்வதி கோரா அவர்களின் நினைவுகள், செயல்பாடு கள் போற்றுதலுக்குரியவை; பின்பற்றி கடைப்பிடிக்கப்பட வேண்டியவை. எதையும் பகுத்தறிந்து அறியும் மனப்பாங்கு, செயல்பாங்கு மக்களிடம் வளர்ந்திட வேண்டும்.<br /><br />பகுத்தறிவுபற்றி அறிஞர் அண்ணா விளக்கம்<br /><br /><br /><br />சரஸ்வதி கோரா நூற்றாண்டு புகைப்படக் கண்காட்சியினை தமிழர் தலைவர் கி.வீரமணி முன்னிலையில் தென் குஜராத் பல்கலைக் கழக மேனாள் துணைவேந்தர் பேராசிரியர் பி.ஏ.பாரிக் திறந்து வெத்தார்<br /><br />தந்தை பெரியாரின் தலைமை மாணாக்கரும், தமிழகத்தின் அரசியல் தளத்தில் தந்தை பெரியாரின் கொள்கைகளுக்கு ஆக்கம் கூட்டியவருமான தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணா அவர்கள் சிதம்பரம் - அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் ஆற்றிய உரையில், பகுத்தறிவு என்பதற்கு செயல்பாட்டு தன்மை மிக்கதொரு விளக்கத்தினை அளித்தார்.<br /><br />‘‘Rationalism does not mean repudiation of basic and fundamental truths and maxims, but the annihilation of dubious modes of thought and action.<br /><br />பகுத்தறிவுக் கொள்கை என்பது அடிப்படை மதவாதக் கொள்கை கோட்பாடுகளை மறுப்பது மட்டும் ஆகாது. போலித்தனமான, உண்மைக்கு மாறான எண்ணம் மற்றும் செயல்களை எதிர்த்து அவைகளை அழித்திடும் ஆக்கப் பூர்வமான பணி ஆகும்.<br /><br />அப்படிப்பட்ட பகுத்தறிவுக் கொள்கையினை ஏந்திச் செல்லும் போராளிகளாக நாம் இருந்திடவேண்டும் என்பது அறிஞர் அண்ணாவின் பேரழைப்பு. பகுத்தறிவு பற்றிய இப்படிப்பட்ட தொடர் சிந்தனை, சமூக மாற்றத் திற்கான செயல்களை உருவாக்கிட ஆரம்பகாலத்தில் வித்திட்டவர்கள் தந்தை பெரியாரும், கோராவும் ஆவார்கள்.<br /><br />சரஸ்வதி கோராவிற்கு நூற்றாண்டு நினைவு தபால்தலை வெளியிடக் கோரிக்கை!<br /><br /><br /><br />இங்கிலாந்து நாட்டுப் பகுத்தறிவாளர், சீரிய எழுத்தாளர் ஜிம் ஜெர்ரிக் அவர்களுக்கு தமிழர் தலைவர் கி.வீரமணி சால்வை அணிவித்து சிறப்பு செய்கிறார்.<br /><br />தந்தை பெரியாருக்கும், கோராவிற்கும் நூற்றாண்டு நினைவு தபால்தலைகளை இந்திய அரசு வெளியிட்டது. நினைவு தபால்தலைகளை வெளியிடுவது அந்தத் தலைவர்களுக்குப் பெருமை சேர்ப்பது என்பது மட்டும் அடிப்படை ஆகாது. சமூக மாற்றத்திற்குப் பாடுபட்ட அந்தத் தலைவர்களுக்கு நினைவு தபால் தலை வெளியிடுவதால் இந்திய அரசு தனக்குப் பெருமை சேர்த்துக் கொள்கிறது என்பதே உண்மையான நிலையாகும்.<br /><br />அப்படிப்பட்ட செயலாக நூற்றாண்டு விழா காணும் நாத்திகப் போராளி சரஸ்வதி கோராவின் நினைவிற்கு சிறப்புத் தபால் தலை வெளியிட்டு இந்திய அரசு தனக்குப் பெருமை சேர்த்துக்கொள்ளவேண்டும். இந்த வேண்டுகோளை இந்திய நாத்திகர் மற்றும் அமைப்பின் சார்பாக இந்திய அரசுக்கு கோரிக்கையாக, இந்த நூற்றாண்டு நிறைவு வேளையில் வைத்திடுகிறோம். சமூக மாற்றத்திற்காகப் பாடுபட்ட தலைவர்களுக்கு சிறப்புத் தபால் தலை வெளியிடுவது சமூக மாற்றத்தினை விரைவுபடுத்திடும் செயலாகும். அத்தகைய செயல்களை நிறைவேற்ற இந்திய அரசு முன்வரவேண்டும்.<br /><br /><br /><br />விஜயவாடா நாத்திகர் மய்யத்தின் செயல் இயக்குநர் டாக்டர் விஜயம் அவர்களுக்கு தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் பாராட்டு தெரிவித்தார்<br /><br />வாழ்க நாத்திகக் கொள்கை! பெருகிடுக பகுத்தறிவு!<br /><br />இவ்வாறு உரையாற்றினார் தொடக்க விழா நிகழ்ச்சிக்குத் தலைமையேற்று நடத்திய தமிழர் தலைவர்.<br /><br />வெளிநாட்டு நாத்திகப் பெருமக்களுக்கு தமிழர் தலைவர் பாராட்டு<br /><br />தந்தை பெரியாரின் கொள்கைக் குடும்பமும், கோராவின் கொள்கைக் குடும்பமும் சமூக மாற்றத் திற்காகப் பாடுபட்டுவரும் ஒரே விதமான அமைப்பு களாகும். அந்த நிலையில், சரஸ்வதி கோரா நூற்றாண்டு விழாவிற்கு வருகை தந்துள்ள பன்னாட்டு மனிதநேயர் மற்றும் நன்னெறி ஒன்றியத்தின் தலைவர் திருமதி சோனியா எக்கரிக்ஸ், ஜெர்மன் நாட்டு சுதந்திர சிந் தனையாளர் அமைப்பின் தலைவர் டாக்டர் வோல்கர் முல்லர், இங்கிலாந்து நாட்டு பகுத்தறிவு எழுத்தா ளர், பத்திரிகையாளர் ஜிம் ஹெர்ரிக் ஆகியோருக்கு பெரியார் இயக்கத்தின் சார்பில் சிறப்பு செய்யப்படுகிறது எனக் கூறி அவர் கள் அனைவருக்கும் தமி ழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் சால்வை அணி வித்து பாராட்டு தெரிவித் தார். நாத்திகர் மய்யத்தின் செயல் இயக்குநர் கோரா வின் மைந்தர் டாக்டர் விஜ யம் அவர்களுக்கும் சால்வை அணிவித்து சிறப்புச் செய்தார்.<br /><br />நூற்றாண்டு விழா புத்தக வெளியீடுகள்<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-3654297246387215972012-10-02T06:08:12.416+05:302012-10-02T06:08:12.416+05:30தமிழர் தலைவர் கி. வீரமணி தலைமை உரை
தொடக்க விழாவின...தமிழர் தலைவர் கி. வீரமணி தலைமை உரை<br /><br />தொடக்க விழாவினை தலைமையேற்று நடத்திய தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் தனது உரையில் குறிப்பிட்டதாவது:<br /><br />ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்<br /><br />பெரியார் இயக்கமும், கோரா இயக்கமும் சமூக மாற்றத்திற்காகப் பாடுபட்டுவரும் இருபெரும் நாத்திக இயக்கங்களாகும். ஒரே நாணயத்தின் இரு பக்க பகுத்தறிவு அமைப்புகளாகும். வெளிநாட்டில் நாத்திகர், பகுத்தறிவாளர், மனிதநேயர் எனும் சொல் பயன்பாடு கருத்தியல் அடிப்படையில் வேறுபட்டு பொருள் கொள்ளப் படும் சூழல்கள் நிலவுகின்றன. ஆனால், இந்திய நாட்டைப் பொறுத்த அளவில் பகுத்தறிவாளர், மனிதநேயர் என்பவர்கள் அடிப்படையில் நாத்திகர்களாகத்தான் இருந்திடல் வேண்டும். அத்தகைய கருத்தியல் தன்மை, செயல்பாட்டுப் பக்குவத்தினை தந்தை பெரியாரும், கோராவும் உருவாக்கிவிட்டனர்.<br /><br />அவர்கள் உருவாக்கிய அந்த கருத்தியல் தன்மைகள் பகுத்தறிவு அமைப்பு களுக்கு வழிகாட்டுபவையாக உள்ளன. விஜயவாடா நாத்திகர் மய்யத்தின் நிறுவனர் கோராவின் பணிகளுக்கு உறுதுணையாக இருந்து அவரது மறைவிற்குப் பின்னர் மய்யத்தின் செயல்பாடுகளை தலைமையேற்று நடத்திய அவரது துணைவியார் சரஸ்வதி கோராவின் நூற் றாண்டு நிறைவு விழாவில், கலந்துகொள்வது ஒரு குடும்ப விழாவில் பங்கேற்பதற்கு ஒப்பானதாகும். தந்தை பெரியாருக்குப் பின் இயக்கத்தினை தலைமையேற்று நடத்திய அன்னை மணியம்மையாரைப் போன்று கோரா வின் மறைவிற்குப் பின் அவர்தம் அமைப்பினை நடத்திய நாத்திகப் பெண் போராளி சரஸ்வதி கோரா அவர்களா வார்கள்.<br /><br />அறிவியல் மனப்பான்மையினை வளர்த்திட வலியுறுத்தும் இந்திய அரசமைப்புச் சட்டம்<br /><br />இந்திய அரசமைப்புச் சட்டம் குடிமக்களுக்கான அடிப்படை உரிமைகளை வழங்கியுள்ளதுபோல, குடிமக்கள் ஆற்றிட வேண்டிய அடிப்படைக் கடமைகளையும் வலியுறுத்துகிறது. அப்படிப்பட்ட அடிப்படைக் கடமைகளில் ஒன்றாக விதி 51ஏ(எச்) வலியுறுத்திக் கூறுவதாவது:<br /><br />ஒவ்வொரு குடிமகனும் அறிவியல் மனப்பான்மை யினை, கேள்வி கேட்டு உண்மை அறியும் உளப்பாங்கினை, சமூக சீர்திருத்தத்தை, மனிதநேயத்தினை வளர்த்திட வேண்டும்.<br /><br />Art 51a(h) says, ‘‘It shall be the duty of every Citizen to develop scientific temper, humanism and the spirit of inquiry and reform.’’<br /><br />அறிவியல் மனப்பான்மையினை வளர்த்திட, எதையும் கேள்வி கேட்டு உண்மை நிலை அறியும் உளப்பாங்கு அவசியம். உண்மை நிலை அறிந்து கொண்டால், சுற்றி யுள்ள சமூகச் சூழல்களை சீர்திருத்தும் எண்ணம் உருவாகும். இந்தப் பணியில் மனிதநேய உணர்வுகளும் உள்வாங்கப்பட்டால் மானிடம் செழித்திடும்.<br /><br /><br /><br />துவக்க நிகழ்ச்சியில் தமிழர் தலைவர் கி.வீரமணி தலைமை உரை ஆற்றினார்.<br /><br />இந்திய அரசமைப்புச் சட்டம் வலியுறுத்திடும் அடிப்படைக் கடமையினை ஆற்றிட ஒவ்வொரு குடிமகனும் தலைப்பட்டால், சமுதாயத்தில் நிலவும் ஏற்றத் தாழ்வுகள், மூடநம்பிக்கைகள் அகன்று புத்துலகம் பிறந்துவிடும். இந்த அடிப்படைக் கடமையினை ஆற்றிட முற்பட்டால், அதன் நிறைவு நிலை ஒவ்வொரு குடிமகனும் நாத்திகராக மாறிடும் நல்ல நிலைமை உருவாகிடும். காரணம், மத உணர்வுகளுக்கும், அறிவியல் மனப்பான்மைக்கும் தொடர்பு இல்லை;<br /><br />மூட நம்பிக்கையின் அடிப்படையில் உருவானவை கடவுள், மத உணர்வுகள்; எதையும் கேள்வி கேட்டு அறிந்து உண்மை நிலை உணருவது அறிவியல் மனப்பான்மை ஆகும். நீரும் நெருப்பும் ஒன்றாதல் இயலாது. அதுபோல, அறிவியல் மனப்பான்மையும், கடவுள் நம்பிக்கையும் ஒருங்கே அமைந்திட முடியாது. அந்த வகையில் இந்திய அரச மைப்புச் சட்டம் வலியுறுத்தும் அடிப்படைக் கடமையினை ஆற்றிடும் குடிமக்கள் அனைவரும் நாத்திகர்களே.<br /><br />நாத்திகர் என்பது பெருமையுடன் சொல்லக்கூடிய சமுதாயக் கடமை ஆற்றிடும் அடையாளம் ஆகும், வெளிநாட்டில் உள்ள பல்வேறு பகுத்தறிவாளர்களும், மனிதநேய அமைப்பினைச் சார்ந்தவர்களும் தம்மளவில் கடவுள் மறுப்பாளர்களாக இருந்தாலும், நாத்திகர் என தம்மை அடையாளப்படுத்திக் கொள்ள தயங்கும் நிலையே உள்ளது.<br /><br /><br /><br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-14388807538838751642012-10-02T06:07:57.242+05:302012-10-02T06:07:57.242+05:30இந்திய அரசமைப்புச் சட்டம் வலியுறுத்தும் அடிப்படைக்...இந்திய அரசமைப்புச் சட்டம் வலியுறுத்தும் அடிப்படைக் கடமை ஆற்றிடும் குடிமக்கள் அனைவரும் நாத்திகரே!<br />ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நடைபெற்ற சரஸ்வதி கோரா நூற்றாண்டு நினைவு விழாவில் தமிழர் தலைவர் எழுச்சிப் பிரகடனம்!<br /><br /><br />விஜயவாடாவில் நடைபெற்ற சரஸ்வதி கோரா நூற்றாண்டு நிறைவு விழாவில் பகுத்தறிவு எழுத்தாளர் ஜிம் ஹெர்ரிக் எழுதிய ‘‘The Atheist Centre: Unbound by Cages’’ நூலை தமிழர் தலைவர் கி. வீரமணி வெளியிட்டார் (28.9.2012)<br /><br />விஜயவாடா, செப். 29- ஆந்திர மாநிலம், விஜயவாடா வில் நாத்திகப் பெண் போராளி சரஸ்வதி கோராவின் நூற்றாண்டு நிறைவு விழா செப்டம்பர் 28 மற்றும் 29 ஆகிய இரு நாள்களும் ஏற்பாடு செய்யப்பட்டு நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.<br /><br />முதல் நாள் நடைபெற்ற நூற்றாண்டு நிறைவு விழா தொடக்க நிகழ்ச்சியில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி தலைமையேற்று எழுச்சிப் பேருரை ஆற்றினார்.<br /><br />ஆந்திர நாத்திக அறிஞர் கோரா அவர்களின் துணைவியார் சரஸ்வதி கோராவின் நூற்றாண்டு நிறைவு நிகழ்ச்சிகள், விஜயவாடாவில் உள்ள சித்தார்த்த கலை மற்றும் அறிவியல் கல்லூரி அரங்கில் நடைபெற்று வரு கின்றன. உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும், இந்தியா வின் பிற மாநிலங்களிலிருந்தும் வருகை தந்த நாத்தி கர்களின் சங்கமமாக நூற்றாண்டு விழா அமைந்துள்ளது.<br /><br /><br /><br />கோரா மற்றும் சரஸ்வதி கோரா பன்னாட்டு ஆய்வு மய்யத்தினை பன்னாட்டு மனிதநேய மற்றும் நன்னெறி ஒன்றியத்தின் தலைவர் சோனியா எக்கரிக்ஸ் திறந்து வைத்தார். தமிழர் தலைவர் கி. வீரமணி முன்னிலை வகித்தார்.<br /><br />முதல் நாள் (செப்.28) நடைபெற்ற நூற்றாண்டு விழா தொடக்க நிகழ்ச்சிக்கு திராவிடர் கழகத் தலைவரும், பெரியார் மணியம்மை பல்கலைக் கழக வேந்தருமான தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் தலைமை வகித்தார்.<br /><br />கோரா குடும்பத் தலைவரான, மருத்துவர் டீமாஸ் கோராவின் வரவேற்பு நாட்டியத்துடன் தொடக்க விழா நிகழ்ச்சிகள் தொடங்கின. பெல்ஜியம் நாட்டைச் சார்ந்த கல்வியாளரும், பன்னாட்டு மனிதநேய மற்றும் நன்னெறி ஒன்றியத்தின் தலைவருமான சோனியா எக்கரிக்ஸ் (Sonja Eggereikx) சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.<br /><br /><br /><br />சரஸ்வதி கோரா நூற்றாண்டு நிறைவு விழாவினை ஜெர்மன் சுதந்திர சிந்தனையாளர் மன்றத்தின் தலைவர் டாக்டர் வோல்கர் முல்லர் தொடங்கி வைத்தார். தமிழர் தலைவர் கி. வீரமணி தலைமை வகித்தார் (28.9.2012).<br /><br />பெரியார் இயக்கத்திற்கு மிகவும் தொடர் புள்ளவரும் ஜெர்மனி நாட்டு சுதந்திர சிந்தனையாளர் சங்கத்தின் தலைவருமான முனைவர் வோல்கர் முல்லர் (Dr.Volker Muller) மற்றும் இங்கிலாந்து நாட்டைச் சார்ந்த சிறந்த பத்திரிகையாளரும், பகுத்தறிவு எழுத்தாளரும், மனிதநேயர் இதழின் மேனாள் ஆசிரியருமான ஜிம் ஹெர்ரிக் (Jim Herrick), டில்லியிலிருந்து வருகை தந்த காந்தி அமைதி நிறுவனத்தின் தலைவர் ராதாபட், நாகார் ஜுனா பல்கலைக் கழகத்தின் மேனாள் துணைவேந்தர் பேராசிரியர் வி. பாலமோகன் தாஸ் ஆகியோர் தொடக்க விழாவில் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.<br /><br /><br /><br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-64869986861805881612012-10-02T06:07:01.533+05:302012-10-02T06:07:01.533+05:30மருத்துவக் கல்வியில் நுழைவுத் தேர்வு முறையை அறவே ஒ...மருத்துவக் கல்வியில் நுழைவுத் தேர்வு முறையை அறவே ஒழிப்பதற்கு முயற்சி மேற்கொள்ளவேண்டும் மத்திய அரசுக்குக் கலைஞர் கோரிக்கை<br /><br /><br /><br />சென்னை, செப். 29- தமிழகத்தில் நுழைவுத் தேர்வு முறையை ஒழித்தது தி.மு.க. ஆட்சிதான் என்பதை யாரும் மறந்திருக்கமாட்டார்கள். ஆனால், மருத்து வக் கல்வியில் மத்திய அரசு அளவில் நுழைவுத் தேர்வினை நடத்தப் போவதாகச் செய்திகள் வருகின் றன. இந்தப் பிரச்சினைபற்றி அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு உடனடியாகத் தலையிட்டு, இதிலே நுழைவுத் தேர்வு முறையை ஒழித்தும், இதர பிற் படுத்தப்பட்டோருக்குரிய இட ஒதுக்கீட்டு வழி வகை செய்தும் நல்லதோர் முடிவு காண வேண்டு மென்று வலியுறுத்துகிறேன் என்று தி.மு.க. தலைவர் கலைஞர் தெரிவித்துள்ளார்.<br /><br />தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் நேற்று (28.9.2012) இது தொடர்பாக வெளியிட்டுள்ள கேள்வி - பதில் அறிக்கையில் கூறியிருப்பதாவது:<br /><br />கேள்வி : தமிழகத்தில் நுழைவுத் தேர்வு என்பதை ஒழித்த பிறகும், மருத்துவக் கல்வியில் மத்திய அரசு அளவில் நுழைவுத் தேர்வினைத் திணிக்க இருப் பதைப் பற்றி?<br /><br />கலைஞர்: தமிழகத்தில் நுழைவுத் தேர்வு முறையை ஒழித்தது தி.மு.க. ஆட்சிதான் என்பதை யாரும் மறந்திருக்கமாட்டார்கள். ஆனால் மருத்து வக் கல்வியில் மத்திய அரசு அளவில் நுழைவுத் தேர் வினை நடத்தப்போவதாக செய்திகள் வருகின்றன. அதில் மத்திய அரசு உடனடியாகத் தலையிட்டு, நுழைவுத் தேர்வு முறையை அறவே ஒழிப்பதற்கு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண் டும் என்பதுதான் நமது கருத்து.<br /><br />ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் 15 சதவிகித இடங்களை மத்தியத் தொகுப்புக்கு எடுத்துச் சென்று, அந்த இடங்களை நிரப்ப அகில இந்திய அடிப்படையில் நுழைவுத் தேர்வு நடத்துகிறார்கள். அதுபோலவே மருத்துவக் கல்லூரிகளில் முது நிலைப் பிரிவில், அதாவது எம்.டி., எம்.எஸ்., போன்ற வகுப்புகளில் சேருவதற்கும் அகில இந்திய அளவில் நுழைவுத் தேர்வு வைக்கப்படுகிறது. இவ்வாறு மத்திய தொகுப்புக்கு எடுத்துச் செல்லப்படும் இடங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு தனி ஒதுக் கீடும் அறவே இல்லை.<br /><br />இந்தப் பிரச்சினை பற்றி அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு உடனடி யாக தலையிட்டு, இதிலே நுழைவுத் தேர்வு முறையை ஒழித்தும், இதர பிற்படுத்தப்பட்டோருக் குரிய இட ஒதுக்கீட்டுக்கு வழிவகை செய்தும் நல்ல தோர் முடிவு காணவேண்டுமென்று வலியுறுத்து கிறேன்.<br /><br />கேள்வி: பேரவை வைர விழா அக்டோபர் 29 ஆம் தேதி காலை 10 மணிக்குத் தொடக்கம் - மறு நாள் 30ஆம் தேதி காலை 11 மணிக்குத் தொடக்கம் - என்ன காரணம்?<br /><br />கலைஞர்: அக்டோபர் 29ஆம் தேதி திங்கட் கிழமை காலையில் 7.30 மணி முதல் 9 மணி வரை ராகுகாலம், அதனால் காலை 10 மணிக்கு வைர விழா தொடக்கம். 30ஆம் தேதி செவ்வாய்க் கிழமை காலை 9 மணி முதல் 10.30 மணி வரை எமகண்டம். அதனால் பேரவை 11 மணிக்குத் தொடக்கம். வாழ்க அண்ணா! பெரியார் நாமம் வாழ்க! நாங்கள்தான் அ.இ.அ.தி.மு.க.!<br /><br />கேள்வி: தி.மு.க. ஆட்சியில் திட்டமிடப்பட்டது என்றோ, அதில் உள்ள சூழ்ச்சி குறித்தோ தெரியாமல், முதல்வர் திறந்து வைக்கப் போகிறார் எனத் தெரிவித்ததால், ஏமாந்து, அண்ணா பவள விழா வளைவை இடிக்க அனுமதிக்கும் தீர் மானத்தை நிறைவேற்றியதற்காக வெட்கப்படு கிறேன், வேதனைப்படுகிறேன் என்று சென்னை மாநகர மேயர் சொல்லியிருக்கிறாரே?<br /><br />கலைஞர்: எப்படியோ, அண்ணா பவள விழா வளைவை இடிக்க அனுமதிக்கும் தீர்மானத்தை அவர்கள்தான் நிறைவேற்றினார்கள் என்பதை ஒப்புக் கொண்டுவிட்டார்கள். மேலும் முதல்வர் திறந்து வைக்கப் போகிறார் என்றால், எதைப் பற்றியும் கவலைப்படாமல் செயல்படுவார்கள் என்பதையும் மேயரே ஒப்புக் கொண்டுவிட்டார்! கழக ஆட்சியில் திட்டமிட்டது; மேம்பாலம் கட்டு வதுதான்! அண்ணா பவள விழா வளைவை இடிப் பது அல்ல! அதில் எந்தச் சூழ்ச்சியும் கிடையாது என்பதுதான் உண்மை.<br /><br />- இவ்வாறு தி.மு.க. தலைவர் கலைஞர் தமது அறிக்கையில் கூறியுள்ளார்.29-9-2012<br /><br /><br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-37247746358549911932012-10-02T06:05:30.935+05:302012-10-02T06:05:30.935+05:30அவர்தம் அருமைச் செல்வன் அன்புக்கரசன் கழகப் பொதுக் ...அவர்தம் அருமைச் செல்வன் அன்புக்கரசன் கழகப் பொதுக் குழு உறுப்பினர்.<br /><br />மானமிகு தோழர்கள் உ.மு.சங்கர், மானமிகு வெங்கிடுசாமி என்பவர்கள் சாதாரணமானவர்களா? தம் மறைவுக்குப் பிறகும் தமது உடலை மருத்துவ மனைக்கு ஒப்படைத்த தொண்டறச் செம்மல்கள் பெத்து, இராமசாமி ஆகியோர் மறைந்தும் மறையாத மாணிக்கங்கள் அல்லவா?<br /><br />தோழர்கள் ரங்கராசு, சுப்பையா, சடகோபன் ஆகியோர் என்றென்றைக்கும் நமது நிரந்தர நினைவுக்குரிய செம்மல்களே!<br /><br />கோட்டூர் ஓரி, ரங்கசாமி, கே.கே.பட்டி பி. இராசேந்திரன், லோயர் கேம்ப் ராசு, கம்பம் எஸ்.எஸ். ஆண்டி, வி.என்.முத்து என்று ஒரு நீண்ட பட்டியலே உண்டே!<br /><br />இத்தகு கொள்கைச் சீலர்கள் வீரநடை போட்ட பகுதியிலே, கம்பம் நகரிலே கறுஞ்சட்டைக் குடும்பங் களின் சங்கமம் வரும் அக்டோபர் முதல் தேதி.<br /><br />சமூக நீதித் திசையில் ஏராளமான இடிகள் விழுந்து கொண்டே இருக்கின்றன.<br /><br />குறுக்கு வழியிலே, சமூக நீதியின் குரல் வளையை இறுக்கும் கொலைகார சதிகள் திட்டமிட்ட வகையிலே நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றன.<br /><br />தேனி மாவட்டத்தின் பெரும்பகுதி விவசாயம் - முல்லைப் பெரியாறு நீர்த் தேக்கத்தை உயிர் நாடியாகக் கொண்டு அதனை நம்பியே உயிர் வாழ்ந்து கொண்டு இருக்கிறது.<br /><br />கேரள மாநில அரசு அதிரடியாக, முரட்டுத் தனமாக, சட்ட விரோதமாகவும், நியாய விரோதமாகவும் அப்பகுதி மக்களின் வயிற்றிலடிக்கும் பொல்லாக் காரியத்தில் ஈடுபட்டுக் கொண்டு இருக்கின்றது.<br /><br />இந்தியத் துணைக் கண்டத்தில் வஞ்சிக்கப்படும் ஒரு மாநிலம் உண்டென்றால், அது தமிழ்நாடுதான்.<br /><br />தமிழர்களிடையே ஒற்றுமை இல்லை; எல்லோரும் இங்கே தனித் தனிதான்! சாவு வீட்டில் கூட ஒன்று சேர முடியாத அரசியல் நெடி ஒரு புறம், ஜாதி சச்சரவுகளை ஆங்காங்கே உண்டாக்கும் சக்திகள் மற்றொரு புறம்.<br /><br />இந்த நிலையில் தமிழா இனவுணர்வு கொள்! தமிழா, தமிழனாக இரு!! என்ற இலட்சிய முழக்கங்களோடு பெரியார் பேரணி அக்டோபர் முதல் தேதி கம்பத்தில்! எழுச்சிமிக்க மாவட்ட மாநாடும் அங்கே!<br /><br />ஆம். கம்பத்தில் கழகக் கொள்கைக் கொடியை ஏற்றுவோம் - வாருங்கள், தோழர்களே!<br /><br />தமிழர் தலைவர் இன முரசம் கொட்டுகிறார். கழக முன்னணியினர் பங்கேற்கின்றனர்.<br /><br />விடுமுறை நாட்கள்தான். குடும்பம் குடும்பமாகக் கம்பம் நோக்கி வாரீர்! வாரீர்!!<br /><br />மாவட்டக் கழகத் தலைவர் போடி ச.இரகுநாக நாதன் தேனி மாவட்டத்தின் தொண்டறச் செம்மல்! பல பொதுப் பணிகளிலும் தம்மை அர்ப்பணித்துக் கொள்ளும் ஆற்றலாளர்.<br /><br />பெரியார் சேவை மய்யம், பெரியார் சமத்துவ மின் மயானம், தந்தை பெரியார் குருதிக் கொடைக் கழகம் போன்றவற்றிலும் தம் முத்திரையைப் பொறித் துள்ளவர். அவர்தம் இணையர் - கழகப் பொதுக் குழு உறுப்பினர் பேபி சாந்தா, போடி அரிமா சங்கத்தின் தலைவர். பெண் ஒருவர் இத்தகு பொறுப்புக்கு வருவது எல்லாம் அரிதல்லவா?<br /><br />போடி என்றால் நகர செயலாளர் முருகன் நம் நெஞ்சில் நிழலாடக் கூடியவர். கருத்துக் கருவூலம் என்று கணிக்கப்பட்டவர். ஒடுக்கப்பட்ட மக்களின் வேலை வாய்ப்புக்காக வங்கித் தேர்வுப் பயிற்சி, எல்.அய்.சி. பயிற்சிகளை நடத்தியவர். தமிழர் தலைவர் அவர்களின் பிறந்த நாளில் தொடர்ந்து பத்தாண்டுக் காலம் குருதிக் கொடை இயக்கத்தை நடத்தியவர்!<br /><br />பெரியார் சமத்துவம் எனும் பெயரில் நகரில் நவீன எரியூட்டும் சுடுகாட்டினை நிர்மாணித்தவர் திம்மன் நாயக்கப்பட்டி வெள்ளைச்சாமி, வீரபத் திரன், சின்னமனூர் ராசு மாயாண்டி, மாவட்டச் செயலாளர் தமிழ்ச் செல்வன்- கே.கே.பட்டி தோழர் கே.கே.பட்டி தோழர்கள் என்றாலே துடிப்பு மிக்கவர்கள் ஆயிற்றே!<br /><br />கோயில் தீக்குண்டத்திலேயே நுழைந்து கடவுள் இல்லை! இல்லவே இல்லை! என்று முழங்கி தீ மிதித்துக் காட்டி பக்தர்களையே சிந்திக்க வைத்த சீர்மிகு தோழர்களாயிற்றே!<br /><br />மாவட்ட அமைப்பாளர் பாஸ்கர், மாவட்ட இளைஞரணி தலைவர் போடி சுருளிவேல் என்று ஆற்றல் மறவர்கள் நிறைந்த கோட்டம் அது!<br /><br />அனைத்துத் தோழர்களின் அருமையான ஒத்துழைப்போடு ஓகோ என்று நடக்கும் கம்பம் மாநாடு கைநீட்டி அழைக்கிறது - வாருங்கள், தோழர்களே - தமிழர்களே!<br /><br />- மின்சாரம் 29-9-2012தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-35122548710726830072012-10-02T06:05:23.553+05:302012-10-02T06:05:23.553+05:30கம்பம் அழைக்கிறது!
கம்பத்தில் மாநாடு தேனி மாவட...கம்பம் அழைக்கிறது!<br /> <br /><br /><br />கம்பத்தில் மாநாடு தேனி மாவட்டத்தின் திராவிடர் கழக மாநாடு வரும் திங்கள் கிழமையன்று (1-10-2012) மாலை நடைபெற உள்ளது.<br /><br />பேரணியும் சேர்ந்து மாநாட்டின் எழுச்சியைப் பறைசாற்றப் போகிறது கம்பம்.<br /><br />இரண்டு மூன்று முறை ஒத்திவைக்கப்பட்ட மாநாடு இது. இப்பொழுது வட்டியும் முதலுமாகச் சேர்ந்து பேரெழுச்சியோடு நடைபெற உள்ளது.<br /><br />தேனி, பெரியகுளம், போடி, கம்பம் போன்ற பகுதிகள் இன்று நேற்றல்ல - நீதிக்கட்சிக் காலம் தொட்டு - திராவிடர் இயக்கத்துக்கு நெருக்கமான பகுதிகளாகும்.<br /><br />மறைந்தாலும் தம் தொண்டின் மூலம் மறக்க முடியாத எண்ணற்ற சுயமரியாதைச் சுடரொளி களைத் தந்த சிறந்த பகுதிகள் இவை.<br /><br />பெரியகுளம் பகுதியை எடுத்துக் கொண்டால் மாவட்டச் செயலாளர் தொண்டின் இலக்கணமாம் மறைந்த நமது மானமிகு ச.பெ. அழகிரியை மறக்க முடியுமா? மாவட்டக் கழகத் தலைவராக பல்லாண்டு பணியாற்றிய மானமிகு ம.வெ. முத்துக் கருப்பையன் அவர்களைத்தான் மறக்க முடியுமா? கழகத்தில் மட்டுமல்ல, அரிமா சங்கத்திலும் தம்மை இணைத்துக் கொண்டு தம் முத்திரையைப் பொறித்தவராயிற்றே!<br /><br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-22522346644577113922012-10-02T06:03:49.148+05:302012-10-02T06:03:49.148+05:30கடவுளைப்பற்றிய மக்களின் நினைவு மறதி: போப்பின் புலம...கடவுளைப்பற்றிய மக்களின் நினைவு மறதி: போப்பின் புலம்பல்<br /><br /><br /><br />கடவுளைப்பற்றி நமது நவீன சமூகத்துக்கு ஒரு குறிப்பிட்ட அளவு நினைவு மறதி ஏற்பட்டிருக்கிறது என்று கூறி, மக்களிடையே குறைந்து வரும் கடவுள் நம்பிக்கை பற்றி, தனது ஸ்பெயின் நாட்டுப் பயணத்தின் போது, 16ஆம் பெனடிக்ட் போப் புலம்பியிருக் கிறார். ஒரு காலத்தில் தீவிர கத் தோலிக்க கிறித்துவ நாடாக இருந்த ஸ்பெயினில், பாசிச சர்வாதிகாரி பிரான்சிஸ்கோ பிராங்கோவுக்குப்பின் மக்களின் மீதான தேவாலயத்தின் பிடி வியக்கத்தக்க வகையில் வெகுவாகத் தளர்ந் துள்ளது.<br /><br />ஸ்பெயின் நாட்டு தலைநகரி லிருந்து வடகிழக்கே 50 கி.மீ. தொலைவில் உள்ள யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய நினைவுச் சின்ன மான, எல் எஸ்கோரியல் துறவிகளின் மடத்தில் சில நூறு இளம் கன்னித் துறவிகளிடம் பேசும்போது, மேற்கு நாடுகளில் மதச்சார்பின்மை பலமான பிடிமானத்தையும், தாக்கத்தையும் ஏற்படுத்தி யுள்ளது என்று பொதுவான முறையில் போப் பேசினார்.<br /><br />உலக இளைஞர் தினத்தையொட்டி கத்தோலிக்க கிறித்துவ மதத்தின் சார்பில் ஸ்பெயினில் நடைபெற்ற கொண்டாட்டத்தில் பேசும்போது, தங்களின் வாழ்க் கையைத் தங்களின் மத நம்பிக்கைகாக அர்ப்பணிப்பது என்ற அவர்களது முடிவு இன்றைய உலகிற்கு தெரிவிக்கப்படும் பொருள் நிறைந்த செய்தியாகும் என்று அவர் கூறினார்.<br /><br />கடவுள் நம்பிக்கை என்பது ஒரு குறிப்பிட்ட கிரகணம் போல இன்று உலகில் இடம் பெற்றிருப்பதை நாம் காணும்போது, நம்மில் ஆழமாகப் பொதிந்துள்ள நமது அடையாளத்தை இழக்க வழிகோலும் அளவுக்கு, நம்பிக் கை என்னும் நமது கருவூலத்தை மறுத்து, கிறித்துவ மதத்தை ஒட்டு மொத்தமாக மக்கள் நிராகரித்து விட வில்லையென் றாலும், கடவுளைப் பற்றிய நினைவுமறதி மக்களிடையே ஒரு வகை யில் இன்று நிலவுவது அனைத்திலும் மிகவும் முக்கிய மானதாகும் என்று அவர் கூறினார்.<br /><br />அவர் முன்னுரிமை அளித்து மேற்கொண்டிருக்கும் முக்கியமான செயல்திட்டம் ஸ்பெயின் போன்ற நாடு களில் கிறித்துவ மதத்தை விழித்தெழச் செய்ய முயல்வதே! ஸ்பெயின் நாட்டுக்கு அண்மையில் தொடர்ச்சியாக மூன்று முறை பயணமாக போப் வந்தது, தமது கிறித்துவ பாரம்பரியத்தை அய்ரோப்பிய நாடுகளுக்கு நினைவூட்டுவது மற்றும் அந்நாட்டு மக்களின் அன்றாட வாழ்க்கையில் கடவுளை இடம் பெறச் செய்வது என்ற பணிக்கு, ஒரு முக்கியமான போர்க்கள மாக ஸ்பெயின் நாட்டை அவர் கருதுவதையே காட்டுகிறது.<br /><br />பெரும்பாலான அய்ரோப்பிய நாடுகளில் ஏற்பட்டதைப் போலவே ஸ்பெயின் நாட்டிலும் கடந்த சில பத்தாண்டு காலத்தில், தேவாலயத்தின் செல்வாக்கு பெருமளவில் சரிந்து வருகிறது. பெண்களின் உரிமைகள், சமத்துவம், ஓரின பாலியல் பழக்கம், கருக்கலைப்பு போன்றவற்றுக்கு எதிரான கத்தோலிக்க கிறித்துவ மதத்தின் நிலைப் பாடுதான் படித்த மத்திய தர மக்களில் பெரும்பாலோரை அம்மதத்தில் இருந்த நம்பிக்கையை இழக்கச் செய்துள்ளது.<br /><br />நன்றி: தி இந்து 21.8.2011 செய்தி<br /><br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-31011154955186331362012-10-02T06:03:15.749+05:302012-10-02T06:03:15.749+05:30அறிவியல்
23.1.1938 அன்று ஆயக்கவுண்டன் பாளையத்தி...அறிவியல்<br /><br /><br /><br />23.1.1938 அன்று ஆயக்கவுண்டன் பாளையத்தில் கூடிய மாநாட்டில் தந்தை பெரியார் குறிப்பிட்டதாவது:-<br /><br />மக்கள் பிறப்பது கூட இனி அருமையாகத்தான் போய்விடும். அதுபோலவே சாவும் இனி குறைந்து விடும். மனிதன் வெகு சுலபமாக நூறு ஆண்டுகள் வாழ முடியும். யாரும் சராசரி ஒன்று, இரண்டு பிள்ளைகளுக்கு மேல் பெற மாட்டார்கள். ஆண் - பெண் புணர்ச்சிக்கும், பிள்ளை பேறுக்கும் சம்பந்தமில்லாமலே போய்விடும்.<br /><br />வேலை செய்கிற குதிரைகள் வேறு. குட்டி போடுகிற, போடச் செய்கிற குதிரை வேறு என்கிற மாதிரி மனித சமூகத்தில் இருக்கும். பிள்ளைப் பெறும் தொல்லை, வளர்க்கும் தொல்லை, அதற்குச் சொத்து சுகம் தேடும் தொல்லை ஒழிந்து போகும் என்கிற நம்பிக்கை உண்டு.<br /><br />- குடிஅரசு, 30.1.1938<br /><br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-44864240863142017362012-10-02T06:02:50.346+05:302012-10-02T06:02:50.346+05:30கல்விக் கண்களைத் திறந்தது நீதிக்கட்சி
குற்றாலம்,...கல்விக் கண்களைத் திறந்தது நீதிக்கட்சி<br /><br /><br />குற்றாலம், செப்.28- திராவிடர் கழகத்தின் சார்பில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடந்த இரண்டாவது வகுப்பில் நீதிக்கட்சியின் தோற்றமும், சாதனைகளும் என்ற தலைப்பில் செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு உரையாற்றினார். வள்ளல் வீ.கே.யென் மண்டபத்தில் நேற்று தொடங்கிய முதல் வகுப்பில், திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் பெரியார் ஓர் அறிமுகம் என்ற தலைப்பில், பயிற்சி மாணவர்களுக்கு பெரியாரைப் பற்றிய எளிய முறையில் அறிமுகம் செய்து வைத்தார்.<br /><br />முதன் முறையாக பெண்களுக்கு வாக்குரிமை<br /><br />பெண்களுக்கு முதல் முதலாக வாக்குரிமை கொடுத்ததும் சூத்திரர், பஞ்சமர் என்று அரசு அலுவலக ஆவணங்களில் இருந்த கொடுமையை தீர்மானம் போட்டு நீக்கியதும், 10, 039 பள்ளிகளை திறந்ததும், மதிய உணவு திட்டம் கொண்டு வந்ததும் இலவச படிப்பு தந்ததும் நீதிக்கட்சி தான் என்று நீதிக்கட்சியின் சாதனைகளை பட்டியலிட்டார்.<br /><br />தாழ்த்தப்பட்டவர்கள் வளர்ச்சியில் திராவிடர் இயக்கத்தின் பங்கு<br /><br />7,36,000 ஏக்கர் தரிசு நிலத்தில் 4,40,000 ஏக்கர் நிலத்தை ஆதிதிராவிடர்களுக்கு பட்டா போட்டு கொடுத்தது நீதிக்கட்சிதான். வீடு இல்லாதவர்களுக்கு கல் வீடு கட்டிக் கொடுத்தது நீதிக்கட்சிதான். 1928இல் தாழ்த்தப்பட்டவர்களுக்கு 8 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கியது நீதிக்கட்சிதான் என்று வரலாற்று புள்ளி விவரங்களை எடுத்துரைத்தார்.<br /><br />கம்பன் அடகு வைத்த இனமானம்<br /><br />தொடர்ந்து வேத இதிகாச புராணப் புரட்டு என்ற தலைப்பில் பேராசிரியர் முனைவர் ப.காளிமுத்து வகுப்பு எடுத்தார். அதில் வேத இதிகாச புராணங்களில் இருக்கும் புரட்டுகளை ஆதராங்களோடு மாணவர்கள் முன் எடுத்து வைத்தார். வால்மீகியின் இராமா யணத்தை கம்பன் தமிழில் மொழிபெயர்த்தபோது நமது இனமானத்தை அடகு வைத்து விட்டதை காரண காரியத்தோடு எண்பித்தார்.<br /><br />தமிழ்ப்புத்தாண்டு என்ற போர்வையில் நம்மீது திணிக்கப்பட்ட பார்ப்பன பண்பாட்டு 60ஆண்டுக் கணக்கை மாணவர்களின் புத்தியில் பதிய வைத்தார்.<br /><br />மதிய உணவுக்குப் பிறகு, மீண்டும் திராவிடர் கழக செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு சுயமரியாதை இயக்கத்தின் தோற்றமும் சாதனைகளும் என்ற தலைப்பில் வகுப்பு எடுத்தார்.<br /><br />1929இல் நடந்த சுயமரியாதை மாநில மாநாட்டில் பெரியாரால் கொண்டு வரப்பட்ட தீர்மானங்கள் இன்று இந்தியா முழுவதிலும் சட்டங்களாக ஒன்றன் பின் ஒன்றாக வரிசையாக சொல்லிக் கொடுத்தார்.<br /><br />இனமானம், மொழிமானம் காத்தது சுயமரியாதை இயக்கம்தான்<br /><br />தொடர்ந்து அடுத்த வகுப்பில் பார்ப்பன பண்பாட்டு படையெடுப்பு என்ற தலைப்பில் திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் வகுப்பெடுத்தார்.<br /><br />நமது ஊர்ப்பெயர்கள், நமது சந்ததிகளின் பெயர்கள் எப்படி சமஸ்கிருதமாகிறது என்பதை சிந்திக்கவும், சிரிக்கவும் வைத்தார். சோமசந்திர பாரதியார் எப்படி திருமணத்தில் கருமாதி மந்திரத்தை புரோகிதர் ஓதியதை கண்டுபிடித்து நிறுத்தியவர் என்ற வரலாற்றின் நிகழ்வை மாணவர்கள் முன் எடுத்து வைத்தார்.<br /><br />கீழாத்தூர் சீனிவாச சாஸ்திரி மொழிபெயர்த்த விவாக மந்திரார்த்த போதினி என்ற புத்தகத்தை சுட்டிக் காட்டி, பார்ப்பன பண்பாட்டுப் படையெடுப்புக்கு ஆதாரமாக, பார்ப்பனர் எழுதியதையே எடுத்துக் காட்டினர். அதில் இருக்கும் சோம பிரதமோ விவிதே, காந்தர்வோ விவிதே, உத்தர திருதியோ, அகனிஸ் டோபதி துரியஸ்தே, மனுஸ்யஜா - என்ற மந்திரத்தின் பொருளை பார்ப்பனர் எழுதிய புத்தகத்தில் இருந்தே நிறுவினார்.<br /><br />கே.பி.கே. மேனனும், ஜார்ஜ் ஜோசப்பும்<br /><br />கவிஞரைத் தொடர்ந்து, இயக்கப் போராட் டங்கள் என்ற தலைப்பில் பொதுச் செயலாளர் டாக்டர் துரை.சந்திரசேகரன், திராவிடர் கழகத்தின், தந்தை பெரியாரின் போராட்ட உத்தியையும், இறுதியில் வெற்றி பெற்றதையும் உணர்ச்சியோடு மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். அவர், தனது உரையில், வைக்கம் போராட்டம், சேரன்மாதேவி குருகுலப் போராட்டம், மொழிப்போர், ஹிந்தி, எழுத்துகளை அழிக்கும் போராட்டம், ஜாதி ஒழிப்பு போராட்டம் என்று ஒவ்வொன்றையும் விளக்கமாக கூறினார்.<br /><br />கணினிப் பயிற்சி<br /><br />தொடர்ந்து, கணினி தொடர்பான அடிப்படை செய்திகளையும், மாணவர்களின் கேள்விகளுக்கு, பதிலளித்து, பெரியார் வலைக்காட்சியில் அலு வலகத்தில் பணிபுரியும் இணைய மேம்படுத்துநர் தமிழ்ச்செல்வன் உரையாற்றினார்.<br /><br />பெரியார் திரைப்படம்<br /><br />முதல் நாள் பயிற்சியில் இறுதியில் பெரியார் திரைப்படம் திரையிடப்பட்டது. இதற்கு கீழச்கரண்டை பொன்னுதுரை, இதற்கான கருவிகளை, கொடுத்து உதவினார். மாணவர்கள் பெரியார் திரைப்படத்தை ஆர்வத்துடன் பார்த்தனர்.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-9520195236410155662012-10-02T05:59:34.400+05:302012-10-02T05:59:34.400+05:30மத நம்பிக்கையே இல்லாமல் வாழும் மக்கள்
உலகின் ஒன்ப...மத நம்பிக்கையே இல்லாமல் வாழும் மக்கள்<br /><br />உலகின் ஒன்பது நாடுகளில் சமீபத்தில் நடந்த ஓர் ஆய்வில், அந்நாடுகளில் பெரும்பான்மையான மக்கள் மத நம்பிக்கையே இல்லாமல் வாழ்ந்து வருவது தெரிய வந்துள்ளது.<br /><br />இதனால், அவற்றில் தற்போது இருக்கும் மதங்கள் விரைவில் காணாமல் போய்விடும் என்று அந்த ஆய்வு கூறுகிறது.<br /><br />ஆஸ்திரேலியா, ஆஸ்திரியா, கனடா, செசன்ய குடியரசு, பின்லாந்து, அயர்லாந்து, நெதர்லாந்து, நியூசிலாந்து மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய ஒன்பது நாடுகளில் சமீபத்தில் ஓர் ஆய்வு நடத்தப்பட்டது.<br /><br />இந்தநாடுகளில் கடந்த 100 ஆண்டுகளுக்குமேல் எடுக்கப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டு, அங்குள்ள மக்களின் மத விவரங்கள் சேகரிக்கப்பட்டன. அதன்படி, இந்நாடுகளில் பெரும்பான்மையான மக்கள் மத நம்பிக்கை இல்லாமலேயே வாழந்து வருவது தெரியவந்துள்ளது.<br /><br />இப்படியே போனால் இன்னும் சில ஆண்டுகளில் அங்கு மதங்களே இல்லாமல் போய்விடும் என்று அந்த ஆய்வு எச்சரித்துள்ளது. அமெரிக்காவின் டல்லஸ் நகரில் நடந்த ஒரு கூட்டத்தில் இந்த ஆய்வின் முடிவு வெளியிடப்பட்டது. அதன்படி, மிகக் குறைந்தபட்சமாக நெதர்லாந்தில் 40 சதவிகிதம் பேரும், அதிகபட்சமாக செசன்ய குடியரசில் 60 சதவிகிதம் பேரும் மதநம்பிக்கை அற்றவர்களாக வாழ்ந்து வருகின்றனர்.<br /><br />இதுகுறித்து கருத்து தெரிவித்த நிபுணர்கள் சிலர், இது ஒரு சாதாரண கணக்குதான். அதாவது, நாம் மேற்கொள்ளும் ஒரு காரியத்தால் ஏதாவது பயன் விளைந்தால் அக்காரியத்தையும் நாம் தொடர்ந்து செய்வோம்.<br /><br />உதாரணமாக, ஸ்பானிய மொழி பேசுவதால் விளையும் பயன், பெரு நாட்டில் தற்போது வழக்கழிந்து வரும் கொச்சுவான் மொழி யைப் பேசுவதால் விளையும் பயனைவிட மிக அதிகம்.<br /><br />இதே கணக்கை மத நம்பிக்கையிலும் நீங்கள் வைத்துப் பார்க்கலாம் என்று தெரிவித்தனர்.<br /><br />தினமலர், 27.3.2011, பக்கம் 12<br /><br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-42553022248954334602012-10-02T05:57:01.175+05:302012-10-02T05:57:01.175+05:30மோடியின் முகம்!
குஜராத் மாநில முதல் அமைச்சர் நரேந...மோடியின் முகம்!<br /><br />குஜராத் மாநில முதல் அமைச்சர் நரேந்திரமோடியின் ஆட்சிபற்றி பார்ப்பன ஊடகங்கள் புகழும் வார்த்தைகளைச் சொல்லி மாளாது. தொழிற்புரட்சி என்றால் குஜராத்தைப் போய் அல்லவா பார்க்க வேண்டும் என்று பராக்குப் பாடுவார்கள்.<br /><br />மோடி ஆட்சிக்கு முன்பிருந்தே குஜராத் தொழில் வளம் மிக்க மாநிலம்தான். இந்தியா முழுமையும் குஜராத்திகள் தங்கள் வியாபார சாமராஜ்ஜியத்தை நிறுவியவர்கள் தாம்.<br /><br />அப்படியே மோடி ஆட்சியின் காரண மாகத்தான் குஜராத் தொழில் வளம் கொழிக்கிறது என்று வைத்துக் கொள்வோம்! அதற்காக அவரின் எல்லாவிதமான வெறி பிடித்த முஸ்லிம் எதிர்ப்பு ஒழிப்புக் கொள் கைகளையும், நடவடிக்கைகளையும் சகித்துக் கொள்ள வேண்டுமா? சிறுபான்மையின மக்களுக்கு இந்திய அரசமைப்புச் சாசனத்தில் அளிக்கப்பட்டுள்ள வாய்ப்புகளை எல்லாம் புறந்தள்ளக் கூடியவர் -சட்ட ரீதியாகவே தேர்தலில் நிற்கவோ ஆட்சியில் அமரவோ எப்படி அருகதை உடையவராக இருக்க முடியும்?<br /><br />திருவாளர் சோ ராமசாமி அய்யர்வாளைக் கேட்டால் பதில் சொல்லுவார். குஜராத்தில் உள்ள இஸ்லாமியர்கள் அண்மையில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் மோடிக்குத்தான் ஆதரவாக வாக்களித்தார்கள் என்று சிலாகிக்கிறார்.<br /><br />மூவாயிரம் முஸ்லீம் மக்களைக் கொன்று குவிப்பதற்குக் காரணமான முரடர் ஒருவர் ஆட்சியில் இருந்தால், சிறுபான்மை மக்கள் அச்சத்தின் காரணமாகக்கூட அந்த நிலைப்பாட்டை எடுத்திருக்கக் கூடும்.<br /><br />கோத்ரா ரயில் பெட்டி எரிப்பு - அதன் தொடர்ச்சியான அவலங்கள் பற்றிக் குறிப் பிடும்பொழுது முதல் அமைச்சர் என்ற பொறுப்பில் உள்ளவர் என்ன சொன்னார்? எந்த ஒரு செயலுக்கும் ஒரு விளைவு உண்டு என்று தத்துவம் பேசவில்லையா? நான் எந்த முகத்தை வைத்துக் கொண்டு வெளிநாடு செல்லுவேன் என்று பிரதமர் வாஜ்பேயி புலம் பினாரே - குஜராத் கலவரத்தின் பின்னணியில் இதன் பொருள் என்ன? ராஜ தர்மத்தைக் காக்க வேண்டும் என்று மோடிக்கு பிரதமர் வாஜ்பேயி குத்திக் காட்டியதன் நிலைப்பாடு என்ன?<br /><br />இன்றுவரை திருந்தியிருக்கிறாரா இந்த நவீன இட்லர் மோடி?<br /><br />முஸ்லீம்களின் கல்வி நலனுக்கென ஒரு பள்ளிக்கு 50 லட்சம் ரூபாய் வீதம் மத்திய அரசு மாநில அரசுகளுக்கு வழங்குகிறது. இதில் 90 சதவீதத்தை மத்திய அரசு கொடுக்கிறது. 10 சதவீதத்தை மாநில அரசுகள் ஏற்க வேண்டும் என்ற நியாயமான நிபந்தனைதான் இது.<br /><br />இந்தியாவில் அனைத்து மாநில அரசுகளும் இதனை வரவேற்று ஏற்றுக் கொண்டிருக்க குஜராத் முதல் அமைச்சர் மோடி மட்டும் முரண்டு பிடிப்பானேன்?<br /><br />நாங்கள் பத்து சதவீதம் பணம் கொடுத்தால்தானே நீங்கள் 90 சதவீதம் கொடுப்பீர்கள்! என்று எதிர் வினா போடுகிறார்.<br /><br />இது ஒரு முதல் அமைச்சர் வாயில் இருந்து வரக் கூடிய சொல் தானா? வரலாமா?<br /><br />இந்த யோக்கியதையில் உள்ள ஒருவர் தான் ஒரு மாநிலத்தில் சிறுபான்மை மக்களை அரச பயங்கரவாதமாக நர வேட்டை ஆடியது போதாது என்று, இந்திய பிரதமர் நாற்காலியில் உட்கார வைத்து அந்த நரவேட்டையை இந்தியத் துணைக் கண்டம் அளவுக்கு நடத்தி முடிக்க நாக்கை நீட்டிக் கொண்டு அலைகிறது பார்ப்பன ஓநாய்க் கூட்டமும், காவிப் பயங்கரவாதக் கும்பலும்.<br /><br />மோடியின் ஆட்சியில் நடைபெற்ற படுகொலைகளில் சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை கொடுக்கும் பருவம் தொடங்கி விட்டது. மோடியின் அமைச்சரவை சகாக்கள் கூட இதில் தப்பவில்லை. இதற்கு மேலும் இவர் வீராப்புப் பேசுகிறார் என்றால் இவரை எந்தப் பட்டியலில் சேர்ப்பது? இதைவிட இவரைத் தூக்கிச் சுமக்க ஆசைப்படுவோரைக் குறித்துத்தான் என்ன நினைப்பது? 29-9-2012தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-67535458603178507322012-10-02T05:56:29.827+05:302012-10-02T05:56:29.827+05:30
இந்நோய் ஆரம்பக் கட்டத்தில் குணப்படுத்தக் கூடியதா...<br />இந்நோய் ஆரம்பக் கட்டத்தில் குணப்படுத்தக் கூடியதாக இருந்தா லும்கூட, அந்நோயைக் குணப்படுத் தாமல் விட்டால், அந்நோய் இருபால் மக்களுக்கும் உயிர்க்கொல்லி நோயாக அமைகிறது என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும்.<br /><br />எளிதாக முதலில் இந்நோயை அடையாளம் கண்டால், குணப்படுத் திவிட முடியும் என்பதை எல்லோருக் கும் தெரியும் வகையில், விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும். நம்முடைய ஊடகங்கள் அதனை தெளிவுபடுத்த வேண்டும்.<br /><br />நாங்கள் இன்றைய தினம் ஒரு தனி வேன் மூலம் ஏற்பாடு செய்துள்ளோம். நகரும் மருத்துவமனையாய் அது இயங்கும். புற்றுநோய்க்கான ஆராய்ச் சியை மேற்கொள்வோம் - இந்நோ யைக் கண்டுபிடிக்கக் கூடிய வகையில் எளிய முறையில் பரிசோதனை செய்து ஆண் - பெண் இருபாலரும் செய்து கொள்ளலாம். குறிப்பாக பெண்கள் அதிகமாகப் பயன்படுத்திக் கொள் ளலாம்.<br /><br />புற்றுநோய் - தொடக்கத்தில் கண்டு அறிவோம்!<br /><br />ஒவ்வொரு மாதமும் சுற்று வட் டாரத்தில் உள்ள கிராமத்திற்குச் செல்லும், ஏனென்றால், நகர மக் களுக்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. அதனால்தான் கிராமத்திற் குச் செல்லுகிறோம். மருத்துவம னைக்குப் போய் பரிசோதனை செய்துகொள்ளுங்கள் என்றால், பல பேர் தயங்குவார்கள். இந்நோய் இருக் கின்றது என்று சொல்வதற்கே பலர் கூச்சப்படுகிறார்கள், வெட்கப்படு கிறார்கள். மற்ற நாட்டவர் எல்லாம் நோயை சொல்வதிலே கூச்சப்படுவ தில்லை.<br /><br />ஆகவே, எல்லோருக்கும் சோதனை என்ற முறையிலே ஆய்வு செய்வதற்குத் தான் இந்த வேனை பயன்படுத்தவிருக் கிறோம்.<br /><br />கணினிப் பயிற்சி<br /><br />அதுபோலவே, அறிவியல் முறை யிலே இன்றைக்குக் கணினி யுகமாக இருக்கிறது. எவ்வளவுதான் மெத்த படித்த மேதாவிகளாக இருந்தாலும், கணினியைப் பயன்படுத்தத் தெரிய வில்லை என்றால், தற்குறிகள்தான்.<br /><br />எனவே, புது வகை தற்குறிகள் இப்போது உருவாகிக் கொண்டிருக் கிறார்கள். ஆகவே, அதனைப் போக்க வேண்டும். எந்த வயதினராக இருந் தாலும், ஒரு வாரம், பத்து நாள், ஒரு மாதம் முயற்சித்தால், இன்றைக்குக் கணினியைப்பற்றி கற்றுக்கொள்ள முடியும். கணினி அறிவைப் பெருக்க வேண் டும் என்பதற்காக ஒரு வேனை ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.<br /><br />புற்றுநோய்க்கான வேனை நம் முடைய ஜெகதீஷ் சந்திரபோஸ் அவர் கள் ஒரு சிறந்த டாக்டர்; அவர்கள் இதனைத் தொடங்கி வைத்திருப்பது எங்களுக்கெல்லாம் மகிழ்ச்சியைத் தருகிறது. அதேபோல, கணினி யுகத் திலே மிகப்பெரிய அளவிற்கு குபேரன் அவர்கள் நல்ல பணியைச் செய்து கொண்டு வருபவர். அவர்கள் இங்கே வந்து மிகச் சிறப்பாக செய்தார்கள்.<br /><br />பெங்களூரு இந்திய அறிவியல் கழகம் (இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ்) அதிலே இருக்கக் கூடிய தலைசிறந்த ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான டாக்டர் அருணன் அவர் கள் இங்கே அறிவியல் கண்காட்சி யைத் தொடங்கி வைத்திருக்கிறார்கள்.<br /><br />எல்லா கிராமங்களுக்கும் சென்று வருங்காலத்தில் பிரச்சாரம் செய்து, மக்களை மூட நம்பிக்கைகளிலிருந்து வெளிக்கொணர்ந்து அறிவியல் மனப் பான்மை (Scientific Temper) என்பதை உருவாக்கும் என்பதற்காக இந்த ஆக்கப் பணிகளையெல்லாம் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத் தின் 61 ஆம் ஆண்டு தொடக்க விழா விலும், 60 ஆம் ஆண்டு நிறைவு விழா விலும் நாங்கள் செய்கின்றோம்.<br /><br />மக்களை நோக்கிக் கல்வி<br /><br />நாட்டிலே கல்வி என்பது கல்விக் கூடங்களிலே மட்டும்தான் சொல்லிக் கொடுக்கப்படும் என்பதைத் தவிர, கல்விக் கூடங்களே மக்களை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்று சொல்லக் கூடிய அளவிற்கு, பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் இன்றைக்கு ஒரு புதிய அத்தியாயத்தை உருவாக்கி இருக்கிறது. அதனை ஊடகங்களின் ஒத்துழைப்போடு பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.<br /><br />- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி உரையாற்றினார்.<br /><br />பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவன வைர விழா திருச்சி பெரியார் கல்வி வளாகத்தில் நடைபெற்றபோது பேட்டி அளித்தார். இந்திய அறிவியல் கழக பேராசிரியர் இ.அருணன், தமிழ்நாடு தகவல் தொழில்நுட்ப குழுமத்தின் தலைவர் ப.குபேரன், பிரபல மருத்துவர் எஸ்.ஜெகதீஸ் சந்திரபோஸ் ஆகியோர் உடன் இருந்தனர்.<br /><br />29-9-2012தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-73896449496632378482012-10-02T05:56:19.531+05:302012-10-02T05:56:19.531+05:30நம்மை நோக்கியல்ல - மக்களை நோக்கிச் செல்வோம் புற்று...நம்மை நோக்கியல்ல - மக்களை நோக்கிச் செல்வோம் புற்றுநோய் பற்றி விழிப்புணர்வு மற்றும் சோதனைகளை மேற்கொள்வோம்! செய்தியாளர்களிடம் கழகத் தலைவர்<br /><br /><br /><br />திருச்சி, செப். 28- கிராமப் பகுதி களில் புற்றுநோய்ப் பற்றி போதிய விழிப்புணர்வு இல்லாத நிலையில், நடமாடும் வாகனத்தின் மூலம் புற்று நோயைக் கண்டறிந்து குணப்படுத்தும் முயற்சியில் ஈடுபடும் ஒரு திட்டத்தை பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் செயலாளர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடம் (23.9.2012) கூறினார்.<br /><br />பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் என்ற நிறுவனம் பதிவு செய்யப்பட்டு, பெரியார் அவர்களால் தொடங்கப்பெற்ற சுயமரியாதை இயக்கத்தின் சொத்துக்கள் இவை களையெல்லாம் பாதுகாத்து, அந்த அறக்கட்டளை சிறப்பாக இயங்கு கின்ற வகையிலே, இப்போது 60 ஆவது ஆண்டு விழா நிறைவு விழா - சரியாக 60 ஆண்டுகளுக்கு முன்னாலே இதே திருச்சியில்தான் தந்தை பெரியார் அவர்கள், பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனம் என்ற இந்த நிறு வனத்தை பதிவு செய்தார்கள்.<br /><br />இந்நிறுவனத்தை அறக்கட்டளை யாக அங்கீகரிக்கமாட்டோம் என்று வருமான வரித்துறையினர் உட்பட பல வகையிலும் தடைகள் இருந் தாலும், அதையெல்லாம் தாண்டி ஒரு மிகச் சிறப்பான அறக்கட்டளையாக வருமான வரித்துறையே அங்கீகரிக்கக் கூடிய வகையில், தந்தை பெரியார், அதற்குப் பிறகு தலைமை தாங்கிய அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் இவர்கள் காலத்திலே 60 லட்சம் ரூபாய், 80 லட்சம் ரூபாய் என்றெல் லாம் வரி போடப்பட்டு, பிறகு அதை எதிர்த்து Income Tax Appellate Tribunal (ITAT) மேல்முறையீட்டுக் கழகத்தின் சார்பாக இந்நிறுவனம் அங்கீகரிக்கப் பட்டு, அதன் பிறகு மிகப்பெரிய அறக்கட்டளையாக வளர்ந்தது.<br /><br />இன்றைக்கு 60 ஆண்டு நிறைவு விழாவை குறிக்கக் கூடிய வகையில், ஆக்க ரீதியான பணிகளைச் செய்ய வேண்டும் என்ற முடிவுக்கு அறக்கட்டளையின் டிரஸ்டிகளாகிய நாங்கள் எல்லோரும் வந்தோம்.<br /><br />கடவுளை மற - மனிதனை நினை<br /><br />காரணம், தந்தை பெரியார் அவர் களை கடவுள் மறுப்பாளராக மட் டுமே வெளியே காட்டுகிறார்கள். அவரை விட தலைசிறந்த மனிதநேயர் வேறு யாரும் கிடையாது.<br /><br />கடவுளை மற என்று சொன்ன தந்தை பெரியார், மனிதனை நினை என்பதை வலியுறுத்தினார். அந்த அடிப்படையிலே இன்றைக்குக் கூட மிகப்பெரிய அளவில் மக்களை மிரட்டிக் கொண்டிருக்கக் கூடிய ஒரு நோய் - கொடிய நோய் என்று கருதக் கூடிய நோய் - புற்றுநோய் ஆகும். இந்நோயைக் கண்டுதான் எல்லோரும் அஞ்சுகிறார்கள்.<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-81075628339645268992012-10-02T05:54:59.739+05:302012-10-02T05:54:59.739+05:30சேது கால்வாய்த் திட்டம் மேலும் தாமதிக்கக்கூடாது! :...சேது கால்வாய்த் திட்டம் மேலும் தாமதிக்கக்கூடாது! : திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை<br /><br /><br /><br />சேது சமுத்திரக் கால்வாய் திட்டப் பணிகள் மீண்டும் துவக்கி நடத்திட தமிழ்நாட்டு நலன் நாடுவோரை ஒன்று திரட்டி அழுத்தம் கொடுத்து, குரல் கொடுக்க முன் வருதல் அவசியம் தேவை தேவை என்று தமிழர் தலைவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:<br /><br />நேற்று (27-9-2012) புதுடில்லியில் திருமதி சோனியா காந்தி அவர்களது தலைமையில் கூடிய அய்க்கிய முற்போக்குக் கூட்டணி (U.P.A) யின் ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட பல்வேறு முக்கிய முடிவுகளைப் பற்றி செய்தியாளர்களிடம் அறிவித்த உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள், கடந்த 5 ஆண்டுகளுக்கு மேல் நிலுவையில் உள்ள சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டப் பணிகளை மீண்டும் துவக்கி நடத்திட உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரத்தை மத்திய அரசு தாக்கல் செய்யும், இது பற்றி விரைவில் மத்திய அமைச்சரவை முடிவு எடுக்கும் என்று அறிவித்துள்ளார்.<br /><br />இதை கட்சிக்கப்பாற்பட்ட அனைத்து மக்களும், தமிழ்நாட்டு வளர்ச்சியில் உண்மையான அக்கறை கொண்டுள்ள கட்சிகளும் அமைப்புகளும் வரவேற்கும் என்பது உறுதி.<br />இதற்கு முன் சுமார் 2000 கோடி ரூபாய்களைச் செலவழித்த பிறகு, இராமன் பாலம் அங்கே இடிபடுகிறது என்று கூறி, மதவாத மூடநம்பிக்கையைக் குறுக்கே கொண்டு வந்து போட்டு உச்சநீதி மன்றத்தில் நிறுத்தச் சொல்லி வாதாடிய பார்ப்பனீயத்தின் போக்கு மிகவும் கண்டனத்திற்குரியது.<br /><br />தனது கட்சியின் இரண்டு, மூன்று தேர்தல் அறிக்கைகளில், ஏன் விரைவாக சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை மத்திய அரசு முடிக்கவில்லை என்று குற்றம் சுமத்திய அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா அவர்கள், அதற்கு நேர்மாறாக இராமன் பாலம் உடையும் எனவே, அது கூடாது என்றும் கூறியதை என்னவென்று சொல்வது? அதிலும் சுப்பிரமணிய சுவாமி ஒருபுறம், இவர் இன்னொரு புறம் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.<br /><br />அதன் விளைவாக உச்சநீதிமன்றம் ஒரு நிபுணர் ஆய்வுக் குழுவிடம் வேறு வழித்தடங்களில் திருப்ப வாய்ப்பு உள்ளதா என்று ஆராயும்படி கேட்டது. அந்த நிபுணர் பச்சோரி 3 ஆண்டுகள் ஆன நிலையில் ஆராய்ந்து ஆறாம் வழித்தடம்தான் - தற்போது ஆடம்ஸ் பாறைகள் உள்ள - (கற்பனையான இராமன் பாலம் பகுதி) பகுதிதான் உகந்தது. வேறு தடங்களில் மாற்றினால் வேறு சிக்கல் வரும். பணிகள் எளிதில் முடியாது என்று திட்ட வட்டமாகவே கூறிவிட்டது.<br /><br />இனியும் காத்திராமல், தென் மாநிலங்களுக்கும், தமிழ்நாட்டின் தென் மாவட்ட மக்களுக்கும் வேலை வாய்ப்பினையும் பொருளாதார வளர்ச்சியையும் தரும் சேது கால்வாய்த் திட்டத்தை முடிக்கும் பணியை - உச்ச நீதிமன்றத்தினை உடனே அணுகி, வழக்கை முடித்து செயல்பாட்டைத் துவக்கிட வேண்டியது அவசரமும் - அவசியமும் ஆகும்!<br /><br />எனவே உண்மையான தமிழ்நாட்டு நலன் நாடுவோரை ஒன்று திரட்டி அழுத்தம் கொடுக்க வேண்டியது மிகவும் முக்கியம்.ஒத்த கருத்துள்ள அனைத்துக் கட்சிகளும் குரல் கொடுக்க முன்வருதல் தேவை! தேவை !!<br /><br />தமிழர்களின் 150 ஆண்டு கால கோரிக்கையும் தேவையுமான இத்திட்டம் - மக்கள் வரிப்பணம் ரூ.2000 கோடி செலவு செய்யப்பட்டும் முழுமையடையாமல் இருப்பது வேதனைக்குரியது என்பதாலும் அதன் மூலம் கிடைக்கும் பயன் மிகவும் முக்கியம்.<br />இலங்கைக்கு உதவிடும் வகையில் இத்திட்டத்தின் எதிர்ப்பாளர்கள் நடவடிக்கை அமைகிறதோ என்ற அய்யத்தையும் எவரும், எளிதில் புறக்கணித்துவிடமுடியாது!<br /><br />எனவே விரைந்த செயல் தேவை!<br /><br />சென்னை<br />28.9.2012<br /><br />கி. வீரமணி<br />தலைவர், திராவிடர் கழகம்<br /><br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-79668905080745915912012-10-02T05:46:52.157+05:302012-10-02T05:46:52.157+05:30எதுதான் சமூகநீதி?
இதுவல்ல சமூகநீதி? - எனும் தலைப்...எதுதான் சமூகநீதி?<br /><br />இதுவல்ல சமூகநீதி? - எனும் தலைப்பில் தினமணி தலையங்கம் தீட்டியுள்ளது (26.9.2012).<br /><br />1992 இல் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினூடே சொல்லப்பட்ட ஒரு வாசகத்தைப் பிடித்துக் கொண்டு இட ஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பாளர்கள், தங்கள் எதிர்ப்பு ஏவு கணையை ஏவிக் கொண்டு இருக்கிறார்கள்.<br /><br />தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 69 சதவிகித இட ஒதுக்கீடு என்பது சட்ட ரீதியாகப் பாதுகாக்கப்பட்டு விட்டது.<br /><br />76 ஆவது சட்டத் திருத்தம் செய்யப்பட்டு 9 ஆவது அட்டவணையிலும் பாதுகாப்பு செய்யப்பட்டு விட்டது. இந்தப் பாதுகாப்பு என்பதே - நீதிமன்றம் தலையிடக் கூடாது என்பதற்காகத்தான். (அதில் கூட தலையிட முடியும் என்று உச்சநீதிமன்றம் சொல்லி இருப்பது என்பது - நாடாளுமன்றம், நீதிமன்றம் இவற்றிற்கிடையே ஒரு மோதல் போக்கை உருவாக்கக் கூடியதாகும்).<br /><br />50 சதவிகிதத்திற்கு மேல் இட ஒதுக்கீடு போகக் கூடாது என்று கறாராக உச்சநீதி மன்றம் சொல்லவில்லை. மாநிலத்திற்கேற்ற சூழலில் விதிவிலக்குகள் உண்டு என்று உச்சநீதிமன்றம் ஒப்புக்கொண்டும் இருக்கிறது.<br /><br />குறிப்பாக வடகிழக்கு மாநிலங்களில் பெரும் எண்ணிக்கையில் மலைவாழ் மக்கள் இருப் பதைக் கணக்கில் கொண்டு 80 சதவிகிதம் வரை கூட இட ஒதுக்கீட்டின் அளவு சென் றுள்ளதே!<br /><br />உச்சநீதிமன்றம் காலங்காலமாக வலியுறுத்தி வரும் கிரீமிலேயர் பிரிவினரை இந்த இட ஒதுக்கீட்டிலிருந்து நீக்கும் திட்டத்தை எந்த அரசும் வாக்கு வங்கி அரசியலுக்காக ஏற்கத் துணிவில்லாமல் இருக்கின்றன என்று நச்சுப் பொடி தூவுகின்றது தினமணி!<br /><br />காலங்காலமாக உச்சநீதிமன்றம் சொல்லி வருகிறதாமே? நூறு ஆண்டுகளாகவா? 150 ஆண்டுகளாகவா?<br /><br />உண்மையைச் சொல்லப் போனால் காலாகாலமாக கல்வியைத் தங்களுக்கு மட்டுமே இட ஒதுக்கீடு செய்துகொண்ட பார்ப்பனர்களுக்காகத்தானே தினமணி இப்படி பேனா நர்த்தனம் ஆடுகிறது?<br /><br />இந்தக் கிரீமிலேயர் சரியான அளவுகோல் அல்ல என்பதற்குப் பெரிய ஆராய்ச்சிகள் தேவையில்லை.<br /><br />தொடக்கத்தில் ஆண்டு வருமானம் ரூபாய் ஒரு லட்சம் என்று ஆரம்பித்து இப்பொழுது நாலரை இலட்சம் ரூபாய் என்று மாற்றியமைக் கப்பட்டுள்ளதே! இதனை எப்படி நிலையான அளவுகோலாகக் கருத முடியும்?<br /><br />வாக்கு வங்கி அரசியல் இருப்பதால்தான் கிரீமிலேயர் அளவுகோலை அரசியல் கட்சிகள் ஏற்க மறுப்பதாக தினமணி தலையங்கம் தீட்டுகிறதே - அப்படியே பார்த்தாலும் பெரும் பாலான வாக்கு வங்கி என்பது தாழ்த்தப் பட்டோர், பிற்படுத்தப்பட்டோர்தானே? அவர் களின் நலன்களுக்கு எதிராக செயல்பட எந்த அரசியல்வாதிக்குத்தான் துணிவு ஏற்பட முடியும்?<br /><br />பயனடைந்தோர் மீண்டும் மீண்டும் சலுகைகளை அனுபவிக்கிறார்களாம் - இது ஒரு நவீன வர்ணாசிரமமாம்! வர்ணாசிரமம்பற்றி தினமணி வைத்தியநாதய்யர்கள் பேசலாமா?<br /><br />இந்தத் தலையங்கம்கூட வர்ணாசிரம வெறியின் ஊற்றுக்கண் பீறிடல் தானே?<br /><br />இந்தப் பிரச்சினை தீருவதற்கு மிக எளிதான வழிமுறை இருக்கவே இருக்கிறது.<br /><br />நூற்றுக்கு மூன்று சதவிகிதமாக இருக்கிற பார்ப்பனர்களாகிய எங்களுக்கு அந்த மூன்று சதவிகிதம் மட்டும் இட ஒதுக்கீடு செய்தால்போதும் என்று ஒரு வரி எழுதட்டுமே! பார்ப்பன சங்கத்தைக் கூட்டித் தீர்மானமும் போடட்டுமே - ஒரு நொடியில் பிரச்சினை தீர்ந்துவிடுமே!<br /><br />முன்வருமா தினமணி, துக்ளக், தினமலர் வகையறாக்கள்? 29-9-2012தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.com