tag:blogger.com,1999:blog-1474608369333206681.post428920328652025954..comments2023-10-29T13:02:52.613+05:30Comments on தமிழ் ஓவியா: ராமன் செருப்பாலே அடிக்கப்பட்டான் என்பது திட்டமிட்ட செய்கை அல்ல!-கி.வீரமணி தமிழ் ஓவியாhttp://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-90176267526818610252014-12-30T20:20:37.924+05:302014-12-30T20:20:37.924+05:30மரண பயம் - தேவையற்றது! பயனற்றது!
மரணம் - சாவு எ...மரண பயம் - தேவையற்றது! பயனற்றது!<br /><br /><br />மரணம் - சாவு என்பதுகூட கொடுமை அல்ல. பற்பல நேரங்களில் கூட்டு வாழ்க்கையின் காரணமாக ஏற்படுத்தும் துயரத்தின், துக்கத்தின் கர்த்தா - அந்த துயரம் ஆறறிவு படைத்த மனித குலத்திற்கு இருப்பது போலவே, அய்ந்தறிவுள்ள மிருகங் களுக்கும்கூட உள்ளது; நாம் பற்பல நேரங்களில் கண்கூடாகவே அதைப் பார்க்க முடிகிறது. ஆனால் மரணத்தை விட மிகவும் கொடுமையானது மரண பயம்; யாரும் எளிதில் மரணத்தை எதிர்கொள்ளத் தயாராக இருப்ப தில்லை.<br /><br />தனது லட்சியங்களாக மரணத்தை யாசித்துப் பெற்று மகிழும் கொள் கையாளர்களான சாக்ரட்டீஸ், பாஞ் சாலச் சிங்கம் பகத்சிங் போன்றவர் களுக்கு மரண பயம் இருந்ததில்லை.<br />மரணம் இவர்களைக் கண்டு வேண்டுமானால் ஒரு வேளை பயந்திருக்கக்கூடும்!<br /><br />இராணுவத்தில் சேர்ந்து, நாட்டைப் பாதுகாப்பது நமது கடமை என்ற உணர்வோடு தொண்டு செய்யும் நமது இராணுவ வீரர் - வீராங்கனைகளுக்கு மரண பயம் எளிதில் ஏற்படுவதில்லை.<br />கடமையாற்றுவதில் உள்ள மகிழ்ச் சியும் பெருமையும் அவர்களிடமிருந்து அந்த பயத்தை ஓட ஓட விரட்டியடிக் கிறது! மனிதர்களில் தீரா நோயின் கொடுமையால் அவதிப்படுகிறவர்கள் - வாழுவதை விட நாம் மரணமடைவது மேலல்லவா என்று நினைக்கும் நிலைக் குத் தள்ளப்படும்போதும் மரண பயம் அவர்களைவிட்டு விடை பெற்றுக் கொள்ளுகிறது! கருணைக் கொலை செய்து விடுங்களேன்; எனது இந்த கொடுமையான நோய்த் துன்ப வலியி லிருந்து விடுதலை பெற மாட்டோமா? என்று எண்ணம் அவர்களுக்கு ஏற்படுவதும் உண்டு.<br /><br />காதல் போயின் சாதல் சாதல் நன்று என்று பாடும் இளஞ்சிட்டுகள் காதலர்கள் ஜாதியால் - மதத்தால் ஏற்பட்ட தொல்லை களை வென்றெடுத்து மீண்டு வாழுவோம் என்ற தன்னம்பிக்கையைப் பெற முடியாத பலவீனத்தால் தாக்கப்படும்போது, அவர் களுக்குக்கூட மரண பயம் அகன்று விடுகிறது!<br /><br />மரணத்திற்குப் பிறகு ஜீவன் உண்டு, ஆத்மா உண்டு. மோட்சம் - நரகம் என்ற நம்பிக்கை உண்டு, மறுபிறப்பு என்பதில் நம்பிக்கை உள்ளவர்களுக்குத்தான் மரண பயம் வாட்டி வதைக்கும் அவதி உண்டு.<br /><br />குறிக்கோள் இன்றி - குறுக்கு வழி களானாலும் பரவாயில்லை என்று பணம் சேர்த்து ஊரடித்து உலையில் கொட்டி எதற்குச் சேர்க்கிறோம் - என்பது அறி யாது தானும் அதை சரியாக துய்க்காமலும், பொது நலப் பணிகளுக்குக் கொடுத்து அதன் மூலமாவது செத்த பிறகும் வாழும் நிலைக்குத் தன்னை உயர்த்திடத் தெரி யாமலும் - தன் பெண்டு தன் பிள்ளை தன் குடும்பம் என்ற சின்னதோர் கடுகு உள்ளத்தவர்களுக்கும் மரண பயம் மிகவும் அதிகம்!<br />தான் சேர்த்து வைத்த சொத்தை விட்டு விட்டுப் போகிறேனே என்று புலம்பும் புல்லர்களான சின்ன மனிதர்களையும் நிச்சயம் மரணபயம் வாட்டி வதைக்கும்.<br /><br />சீரிய பகுத்தறிவாளர்கள், சுயமரியா தைக்காரர்களுக்கு மரண பயம் என்பதே ஏற்பட தத்துவ ரீதியாகவே இடமில்லை. காரணம் அவர்களுக்கு மரணத்திற்குப் பிறகு போவது ஒன்றுமில்லை; நாம் விட்டுச் செல்ல ஏதாவது இருக்கிறது என்றால் அது நம் கொள்கை வாழ்க் கையின் நன்மைகளாக மட்டுமே இருக்க முடியும். நமது அனுபவங் களை, சந்தித்த சங்கடங்களை, எதிர்ப்புகளைப் பதிவு செய்து விட்டு விட்டுச் சென்றால், அது வரும் தலைமுறைக்குப் பயன்படும்.<br /><br />மரண பயம் அவர்களை என்றும் ஒன்றும் செய்யாது! சுயமரியாதை வாழ்வு சுகவாழ்வு என்பதன் பொருள் இதுதான்! - இல்லையா? 10.3.1933 பிறந்து 81 ஆண்டுகள் வாழ்ந்து அண்மையில் (19.12.2014) மறைந்த சுயமரியாதை வீராங்கனை மானமிகு ஏ.பி.ஜெ. மனோரஞ்சிதம் அம்மையாரின் சில ஆண்டுகள் முன்கூட்டியே எழுதி வைத்திருந்த மரண சாசனம் எவ்வளவு அற்புத மான துணிச்சலின் வெளிப்பாடு! மரணத்தை வென்ற மகத்தான வீராங் கனை.<br /><br />கவலையால் எப்படி பிரச்சனை களைத் தீர்க்க முடியாதோ, அது போலத்தான் மரண பயத்தால் மரணத்தைத் தள்ளிப்போடவும் முடியாது; தவிர்க்கவும் முடியாது; பின் எதற்காக வீண் கவலை? சிந்திப் பார்களாக!<br /><br />- வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி<br /><br />Read more: http://viduthalai.in/page-2/93640.html#ixzz3NOQ5bcIs<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-51249483871352404332014-12-30T20:19:56.688+05:302014-12-30T20:19:56.688+05:30இறந்த பின்...
ஒரு மனிதனுடைய சொந்தத்துக்காக என்று...இறந்த பின்...<br /><br /><br />ஒரு மனிதனுடைய சொந்தத்துக்காக என்று ஒன்று இருக்குமானால், அது அவன் இறந்த பின், அவனை மற்றவர்கள் மறக்காமல் புகழ்ந்து பேசுவதுதான்.<br />(விடுதலை, 31.3.1950)<br /><br />Read more: http://viduthalai.in/page-2/93638.html#ixzz3NOPvFppW<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-18579139440136834562014-12-30T20:17:53.898+05:302014-12-30T20:17:53.898+05:30கோட்சேவுக்கு கோயில் கட்ட முயற்சித்தால் தேசிய பாதுக...கோட்சேவுக்கு கோயில் கட்ட முயற்சித்தால் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது: உ.பி. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு<br /><br /><br />லக்னோ, டிச.30- காந்தியை சுட்டுக் கொன்ற நாது ராம் கோட்சேவுக்கு கோயில் கட்ட முயற்சிப்ப வர்கள் மீது தேசிய பாது காப்பு சட்டம் பாயும் என உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள சிதாபூர் மாவட்ட மாஜிஸ் திரேட் அறிவித்துள்ளார். உ.பி. மாநிலம், சிதாபூர் மாவட்டத்தில் நாது ராம் கோட்சேவுக்கு வரும் ஜனவரி மாதம் சிலை வைக்கப்படும் என அங் குள்ள கமலேஷ் திவாரி என்பவர் அறிவித்தார். சிலை வைக்கும் இடத்தில் கோயில் கட்டுவதற்காக பரா கிராமத்தில் உள்ள தனக்கு சொந்தமான நிலத்தின் ஒரு பகுதியையும் அவர் ஒதுக்கித் தந்துள் ளார். இதற்கிடையே, கோட்சேவுக்கு கோயில் கட்ட அனுமதிக்க மாட்டோம் என உத்தரப் பிரதேசம் மாநில நவ் நிர்மான் சேனா அறிவித் துள்ளது.<br /><br />Read more: http://viduthalai.in/e-paper/93650.html#ixzz3NOPPlBkq<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-88536896953803197072014-12-30T20:17:12.440+05:302014-12-30T20:17:12.440+05:30கர்நாடகாவில் டிசம்பர் 29 பகுத்தறிவு நாளாகக் கொண்டா...கர்நாடகாவில் டிசம்பர் 29 பகுத்தறிவு நாளாகக் கொண்டாடப்படும்!<br /><br />முதல்வர் சித்தராமய்யா அறிவிப்பு<br /><br />பகுத்தறிவுக் கவிஞர் குவேம்புவின் பிறந்த நாளன்று (டிசம்பர் 29) அவரைச் சிறப்பிக்கும் வகையில் பகுத்தறிவு நாளாகக் கொண்டா டப்படும் என்று கர்நாடக முதல்வர் சித்தராமய்யா அறிவித்துள்ளார்.<br /><br />நேற்று (டிசம்பர் 29) குப்பள்ளியில் ராஷ்ட் ரகவி குவேம்பு பிரதீஸ் டனா என்ற அமைப்பு சார்பில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட சித்தராமய்யா இதை அறிவித்தார். மேலும் அவர் தமதுரை யில், தனது இலக்கியப் பணியின் மூலம் மூட நம்பிக்கைகளையும், ஜாதி, மதங்களின் பெயரால் மக்கள் சுரண்டப்படுவதையும் எதிர்த்து மக்களுக்கு விழிப்புணர்வூட்டியவர் அவருக்கு சரியான வகையில் சிறப்பு செய்யும் பொருட்டு அவரது பிறந்த நாளான டிசம்பர் 29 அய் பகுத்தறிவு நாளாக அரசு கொண்டா டும் என்று அறிவித்தார். அதையொட்டி ஒவ்வோ ராண்டும் அரசு அலு வலகங்களிலும், கல்வி நிறுவனங்களிலும், பகுத் தறிவையும், அறி வியல் மனப்பான்மை யையும் வளர்க்கும் விதத் தில் நிகழ்ச்சிகள் நடத் தப்படும் என்று தெரி கிறது.<br /><br />Read more: http://viduthalai.in/e-paper/93647.html#ixzz3NOPDJb00<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-54176140277236610472014-12-29T20:24:26.158+05:302014-12-29T20:24:26.158+05:30ஒரு கதை
நிற்க, சென்னைத் தோழர்கள் சென்னையைப் பார்த...ஒரு கதை<br /><br />நிற்க, சென்னைத் தோழர்கள் சென்னையைப் பார்த்துக் கொண்டால் நான் வெளி ஜில்லாக்களில் வேலை செய்ய வசதியாயிருக்கும். இதற்கு ஒரு இடந்தானா வேண்டும்? எங்கள் ஊரில் ஒரு முதியவரிருந்தார். “தேங்காய் மூடி” என்று அவரை ஒருவர் அழைத்தால் போதும் உடனே கோபம் வந்து விடும். அவர் ஓடுமிடமெல்லாம் துரத்தி வருவார். எனது சிறுவயதில் இது எங்கட்கு ஒரு வேடிக்கையாக இருந்தது. அதே போல் இன்று இந்தி ஒழிக என்று எங்கு யார் சொன்னாலும் போதும் ஆச்சாரியார் அங்கு உடனே ஓடிவருவார். ஏன் இனி தேங்காய்மூடி என்றாலே போதும் அவர் நிச்சயம் வருவார். (கைதட்டல்) ஏன் அவர் ஒரு பைத்தியக்காரர். உங்களைப் போன்ற இளைஞர்களும், தாய்மார்களும் சென்னையை பார்க்கிறேன் என்று வாக்குறுதி அளித்தால் நான் அடிக்கடி இங்கு வர வேண்டியதுமில்லை. வெளியில் 5, 6 ஜில்லாக்களில் வேலை செய்வேன். இப்படி 100க்கணக்காய் இருக்கின்றது தேங்காய் மூடிக்கதை. <br /><br />பெரியார்--குடி அரசு - சொற்பொழிவு - 27.11.1938தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-10757813390143879862014-12-29T20:17:03.332+05:302014-12-29T20:17:03.332+05:30பசுவதை தடுப்புச் சட்டம் கோரும் பசுநேய ஆர்வலரின் கன...பசுவதை தடுப்புச் சட்டம் கோரும் பசுநேய ஆர்வலரின் கனிவான கவனத்திற்கு..<br /><br />இந்தியாவிலிருந்து 6 பெரிய நிறுவனங்கள் தான் வெளிநாடுகளுக்கு மாட்டிறைச்சியை ஏற்றுமதி செய்கின்றன. அவற்றில் 4 நிறுவனங்கள் இந்துக்களால் குறிப்பாக பார்ப்பனர்களால் நடத்தப்படுகிறது.<br /><br />1. அல்கபீர் ஏற்றுமதி பிரை.லிட்.<br />உரிமையாளர்: சதிஷ் & அதுல் அகர்வால்<br /><br />2. அரேபியன் ஏற்றுமதி பிரை.லிட்.<br />உரிமையாளர்: சுனில் அகர்வால்<br /><br />3. M.K.R புரோசன் புட் ஏற்றமதி பிரை.லிட்<br />உரிமையாளர்: மதன் அபோட்<br /><br />4. P.M.L இன்டஸ்டிரீஸ் பிரை.லிட்<br />உரிமையாளர்: A.S.பிந்தரா<br /><br />முதலில் இந்த நிறுவனங்களை தடை செய்ய தயாரா? முடியாது எனில் உங்கள் மாட்டரசியல் யாரை ஏமாற்ற??<br /><br />நன்றி : மக்கள் உரிமை & வேந்தன். இலதமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-24539213139797547002014-12-29T17:58:41.354+05:302014-12-29T17:58:41.354+05:30திராவிடர் கழகம் அடிப்படையில் ஒரு பிரச்சார இயக்கமாக...திராவிடர் கழகம் அடிப்படையில் ஒரு பிரச்சார இயக்கமாகும். நம் நாட்டு ஊடகங்களும், கலைகளுக்கான கருவிகளும் மக்கள் மத்தியில் மூடச் சரக்குகளை விநியோகம் செய்யும் கேடுகெட்ட வேலையில் இறங்கி இருப்பதால், திராவிடர் கழகத்தின் பகுத்தறிவுப் பிரச்சாரம், மூடநம்பிக்கை ஒழிப்புப் பிரச்சாரம், முற்போக்குப் பிரச்சாரம் மிகவும் அதிகமாகத்தேவைப்படுகிறது.<br /><br />அந்த வகையில் ஒகேனக்கல் திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழு முக்கியத்துவம் பெறுகிறது. கழகப் பொறுப் பாளர்கள் இதில் கவனம் செலுத்துவார்களாக.<br /><br />அடுத்ததாக, ஒகேனக்கல் தலைமைச் செயற்குழு வற்புறுத்தி இருப்பது, திராவிடர் விழிப்புணர்வு வட்டார மாநாடாகும். நாடு தழுவிய அளவில் 2000 மாநாடுகளை நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.<br /><br />இந்தியாவில் கை ஓங்கி நிற்கும் காவி மதவாதத் தடுப் புக்குத் தேவையான மூலிகை என்பது - தந்தை பெரியார் அவர்களின் திராவிடர் இயக்கச் சித்தாந்தம்தான்.<br /><br />1925 இல் தந்தை பெரியார் அவர்களால் தோற்றுவிக்கப் பட்ட சுயமரியாதை இயக்கம் நாட்டுக்குத் தந்த அந்தச் சுயமரியாதை இயக்கத் தத்துவம்தான் - நாட்டை அச்சுறுத்தி வரும் இந்துத்துவா பாசிச நோயினை முறிக்கும் மூலிகையாகும்.<br /><br />அதுவும் தந்தை பெரியார் இன்றைக்கு இந்தியாவிற்கே தேவைப்படும் மகத்தான தலைவராகப் பேருரு எடுத்துள்ளார். அதற்கான முன் குரலைத் தமிழ்நாட்டில் உரத்த முறையில் எழுப்புவோம்!<br /><br />இதன் எதிரொலி இந்தியாவெங்கும் எதிரொலிக்கும் என்பதில் அய்யமில்லை.<br /><br />எழுச்சியுடன் செயல்படுவீர் தோழர்காள்!<br /><br />Read more: http://viduthalai.in/page-2/93580.html#ixzz3NHzZeLQ7<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-85532344077536452952014-12-29T17:58:36.886+05:302014-12-29T17:58:36.886+05:30ஒகேனக்கல்லின் முடிவுகள்
திராவிடர் கழகத் தலைமைச் ...ஒகேனக்கல்லின் முடிவுகள்<br /><br /><br />திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் (ஒகேனக்கல், 28.12.2014) நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மிகவும் முக்கியமானவையாகும்.<br /><br />மாதந்தோறும் ஒவ்வொரு தலைப்பின்கீழும் பிரச்சாரக் கூட்டங்களை நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனவரியில் மதவெறி எதிர்ப்பு குறித்துப் பிரச்சாரம் என்பது - குறிப்பாக காந்தியாரை இந்துவெறி பாசிசக் கும்பல் படுகொலை செய்ததை மய்யப்படுத்தியே! வேறு எந்தக் காலகட்டத் தையும்விட, இந்தக் காலகட்டத்தில் இது மிகமிக முக்கிய மானதாகும்.<br /><br />1948 ஜனவரி 30 இல் அந்தப் படுகொலை நிகழ்ந்தது. படு கொலை செய்த நாதுராம் கோட்சே என்ற இந்துமத வெறியன் ஆர்.எஸ்.எஸ்.காரன் என்று சொல்லப்பட்டபொழுது அதனை மறுத்தனர் - அப்படியென்றால் இந்த கோட்சே என்பவன் எந்த அமைப்பைச் சேர்ந்தவன் என்ற கேள்வி எழுந்தபோது, அவன் இந்து மகாசபையைச் சேர்ந்தவன் என்று கைகாட்டினர்.<br /><br />அதேநேரத்தில், நாதுராம் கோட்சேயின் சகோதரரான கோபால் கோட்சேயும், அவன் மனைவியும் நாதுராம் கோட்சே பச்சையான ஆர்.எஸ்.எஸ்.காரர்தான். நாங்கள் பிறந்து வளர்ந்த தொட்டில் ஆர்.எஸ்.எஸ். என்றே அடித்துக் கூறினார்கள். கோட்சேயை ஆர்.எஸ்.எஸ். இல்லை என்று சொல்லுவது பச்சை கோழைத்தனம் என்று பி.ஜே.பி.யின் மூத்த தலைவரான எல்.கே.அத்வானியைச் சாடினார்கள்.<br /><br />இப்பொழுது ஏற்பட்டுள்ள இன்னொரு சிக்கல் என்ன தெரியுமா? கோட்சே ஆர்.எஸ்.எஸ்.காரர் அல்ல - இந்து மகா சபைக்காரர் என்று சொன்னார்கள் அல்லவா - இப்பொழுது அந்த இந்து மகாசபையை உருவாக்கிய மதன்மோகன் மாளவியாவுக்குப் பாரத ரத்னா விருது அளிக்கப் போகிறதாம் - நரேந்திர மோடி தலைமையிலான பி.ஜே.பி. அரசு. அதற்குக் குடியரசுத் தலைவரும் ஒப்புதல் வழங்கிவிட்டாராம்.<br /><br />அப்படிப் பார்த்தாலும் காந்தியாரைப் படுகொலை செய்த இந்து மகாசபையைத் தோற்றுவித்த மதன்மோகன் மாள வியாவுக்குப் பாரத ரத்னா விருது அளித்தால், அதன் பொருள் என்ன?<br />காந்தியாரைக் கொன்றதற்காக அந்த அமைப்பை உரு வாக்கியவருக்கு, இந்தியாவின் தலைசிறந்த விருதான பாரத ரத்னா அளிக்கப்படுகிறது என்றால், மத்தியில் உள்ள பி.ஜே.பி. அரசின் தராதரத்தை - பாசிச மதவெறித்தனத்தை எளிதிற் புரிந்துகொள்ளலாமே!<br /><br />இப்பொழுது எந்த அளவுக்கு இந்துத்துவா சக்திகளின் மதவெறிக் கை நீண்டுள்ளது தெரியுமா? காந்தியாரைப் படுகொலை செய்த அந்த நாதுராம் கோட்சேவுக்கு இந்தியா வின் முக்கிய நகரங்களில் சிலை எழுப்பப் போகிறார்களாம். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும்கூட கொலைகாரன் கோட்சேவின் சிலையை வைக்கவேண்டும் என்று கோரிக்கை வைக்கும் அளவுக்கு இந்து மதவெறியர்களுக்கு, பாசிஸ்டு களுக்குப் புதிய தெம்பு பிறந்திருக்கிறது. அந்தத் தெம்பு என்பது மத்தியில் இந்துத்துவா கட்சியான பி.ஜே.பி. ஆட்சிப் பொறுப்பில், அதிகாரத்தில் வந்ததால் வந்த ஒன்றே!<br /><br />இன்னும் ஒருபடி மேலே சென்று கோட்சேவுக்குக் கோவில் எழுப்புகிறார்களாம். அதுவும் காந்தியார் படுகொலை செய்யப்பட்ட அதே ஜனவரி 30 இல் இது நடைபெறுமாம்.<br /><br />இதுபோன்ற நிகழ்ச்சிகளில் பி.ஜே.பி.யில் உள்ள பிரமுகர் களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் வெளிப்படையாகவே கலந்துகொள்கிறார்கள். நெருக்கிக் கேட்கும்போது, கோட்சேவுக்குச் சிலை எழுப்புவதற்கும், கோவில் கட்டு வதற்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று ஒருபுறத்தில் சொன்னாலும், பி.ஜே.பி.யின் முக்கிய தலைவர்கள் இதில் ஈடுபட்டு வருவது குறித்துக் கேட்டால், நேரிடையாகப் பதில் சொல்ல முடியாமல் விழி பிதுங்கித் திணறுகிறார்கள். ஒவ் வொரு தொலைக்காட்சி விவாதத்திலும் கேட்கப்படும் கேள்வி களுக்குப் பதில் சொல்ல முடியாமல், மிகப் பரிதாபகரமான இடத்திற்குத் தள்ளப்படுகிறார்கள். வெட்கம்! வெட்கம்!! மகாவெட்கம்!!!<br /><br />கோட்சேயின் சிலைகள் நிறுவப்படுவதற்கும், கோவில்கள் கட்டப்படுவதற்கும் இந்தப் பி.ஜே.பி. அரசு அனுமதிக்கிறதா? ஒரு கொலைக் குற்றவாளிக்குச் சிலை வைப்பதற்கும், கோவில் கட்டுவதற்கும் ஓர் அரசே அனுமதிக்குமேயானால், மறைமுக மாகக் காந்தியார் படுகொலையை ஆதரிக்கிறார்கள் என்றுதானே பொருள்படும்.<br /><br />ஜனவரி தொடங்கி டிசம்பர் வரை ஒவ்வொரு மாதத்திலும் பிரச்சாரம் செய்யப்படுவதற்கான பொருள் கொடுக்கப்பட் டுள்ளது. அதேநேரத்தில், குறிப்பிட்ட காலத்தில் நிகழும் சமூக, அரசியல், பொருளாதாரப் பிரச்சினைகளைப் பேச மாட்டார் கள் என்று அதற்குப் பொருள் அல்ல. அந்தத் தலைப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று பொருளாகும்.<br /><br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-57352229313217568292014-12-29T17:56:56.053+05:302014-12-29T17:56:56.053+05:30மதம் பயன்படாது
மதம் என்பது ஒரு கட்டுப்பாடு, மதத்...மதம் பயன்படாது<br /><br /><br />மதம் என்பது ஒரு கட்டுப்பாடு, மதத்தில் ஈடுபட்ட ஒரு மனிதன் அவன் எவ்வளவு அறிவாளியாய் இருந்தாலும், அந்தக் கட்டுப்பாட்டுக்கு அடங்கி நடக்கவேண்டும் என்பதைத் தவிர, மற்றபடி அந்த மனிதனுக்கு எந்தவிதமான பயனும் ஏற்படப் போவதில்லை.<br />_ (குடிஅரசு, 7.5.1949)<br /><br />Read more: http://viduthalai.in/page-2/93579.html#ixzz3NHzQ9tPT<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-27673705844912357252014-12-29T17:56:21.272+05:302014-12-29T17:56:21.272+05:30ஒரே நாடு, ஒரே கலாச்சாரம் என்ற கொள்கை பேராபத்தை விள...ஒரே நாடு, ஒரே கலாச்சாரம் என்ற கொள்கை பேராபத்தை விளைவிக்கும்<br /><br />ஒரே நாடு, ஒரே கலாச்சாரம் என்ற கொள்கை பேராபத்தை விளைவிக்கும்<br />குடியரசு துணைத் தலைவர் அமித் அன்சாரி<br /><br />புதுடில்லி, டிச.29_ சங் பரிவாரங்களின் மடத்தன மான, ஒரே நாடு, ஒரே கலாச்சாரம் என்ற கூச் சல் இந்தியாவிற்குப் பேரா பத்தை விளைவிக்கும் என்று குடியரசு துணைத் தலைவர் அமித் அன்சாரி கூறியுள்ளார். ஞாயிறன்று ஜவகர் லால் நேரு பல்கலைகழத் தில் நடந்த இந்திய வர லாற்று ஆய்வு குழுமத்தின் (மிஸீபீவீணீஸீ பிவீஷீக்ஷீஹ் சிஷீஸீரீக்ஷீமீ) 75- ஆம் ஆண்டு விழாவில் கலந்துகொண்டு வர லாற்று ஆய்வு மாணவர் களுக்கு மத்தியில் பேசிய அமித் அன்சாரி கூறிய தாவது:- இந்திய துணைக் கண்டம் என்பது பல் வேறு பகுதிமக்களின் தனித்தனி கலாச்சாரங் களை, பழக்கவழக்கங் களை உள்ளடக்கியது. இந்திய மனித வரலாறு குறித்து ஆய்வு நூல்களில், இந்தியாவில் பிரபலமான 4,635 இனக்குழுக்கள் உள்ளன. இது பிரபல மான இனக்குழுக்கள் மாத்திரமே, அட்டவ ணையில் இல்லாத பல் வேறு சிறிய இனக்குழுக் கள் உண்டு. இந்த இனக் குழுக்கள் நமது நாட்டின் அடையாளச் சின்ன மாகும்.<br /><br />தற்போது பல்வேறு இனக்குழுக்களிடையே அமைதியற்ற சூழல் உரு வாகிக்கொண்டு இருக் கிறது. பல்வேறு தேசிய இனக்குழுக்கள் அடங்கிய நாட்டில் வாழ்கிறோம். ஒரு நகரத்தில் ஒரு பகுதி யில் வாழும் மக்களி டையே பல்வேறு கலாச் சார மாறுபாடுகள் உள் ளன. நமது நாடு பல்வேறு காலகட்டங்களில் வேறு வேறு கலாச்சாரங்கள் ஊடுருவிய போது நாம் அதை ஏற்றுக்கொண்டு பிரிவு பேதமில்லாமல் வாழ்ந்து வருகிறோம். இந்திய நாட்டில் வாழும் மக்களின் இந்த மன நிலைதான் நமது நாட் டின் அடையாளமாக இன் றளவும் உலக அரங்கில் பார்க்கப்படுகிறது. நாம் நமது வர லாற்றை தெளிவாகப் படிக்கவேண்டும். கலாச் சார மாற்றங்களினால் ஏற்பட்ட நன்மை தீமை களை அலசவேண்டும். தேவையற்றவைகளை தவிர்த்து நன்மைகளை எடுத்துக்கொண்டு வளர்ச் சிப் பாதையில் நாம் செல்லவேண்டும்.<br /><br />வரலாறு மத நம்பிக் கையின் கீழ் என்றுமே எழுதப்படக்கூடாது, அதன் பாதையில் நாம் செல்லவும் கூடாது. மத நம்பிக்கையால் எழுப்பப் பட்ட வரலாறும், மனித நாகரிக வளர்ச்சியை மய் யமாகக் கொண்டு எழுதப் பட்ட வரலாறும் ஒன் றல்ல. முன்னது ஒருபால் மக்கள் அவர்களது நன் மைக்காக எழுதி வைப்பது. பின்னது தவறுகளைத் திருத்திக்கொள்ள எதிர் காலத்திற்கு ஒரு கருவூலச் செல்வமாகச் சேர்த்து வைப்பது. வரலாறு நமது தவறு களை திருத்திக் கொள்ள வும், அந்தத் தவறு மீண்டும் நிகழாவண்ணம் தவிர்க்கவும் நல்ல வழி காட்டும் காலக்கண்ணா டியாக இருக்கவேண்டும். அன்று நடந்த அதே தவறுகளை மீண்டும் செய்ய முனைதல் கூடாது. மேலும் நமது பல்வேறு மொழிகள், கலாச்சாரம், பழக்கவழக்கங்கள் கொண்ட நமது நாட்டை ஒரே கலாச்சாரம் என்ற குடையின்கீழ் கொண்டு வந்தால் அது எதிர்கால இந்தியாவிற்கே பேரா பத்தை விளைவிக்கும் என்று கூறினார்.<br /><br />பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே ஒரே நாடு, ஒரே கலாச்சாரம் அனைவரும் இந்துக்கள் என்ற முழக்கம் ஓங்கி வருகிறது. ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் தொடர்ந்து இந்தியா முழுவதும் இந் துக்கள்தான் இருக்க வேண்டும். எந்த மதத் தவரானாலும் அவர் இந்துதான் என்று கூறிக் கொண்டு இருக்கிறார். மறைமுகமாக கட்டாய மதமாற்றம் நடந்து கொண்டு இருக்கும் போது குடியரசு துணைத் தலைவரின் இந்தக் கூற்று பலரின் சிந்தனையைக் கவர்ந்துள்ளது.<br /><br />Read more: http://viduthalai.in/e-paper/93575.html#ixzz3NHzDB1y6<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-42608054927883712322014-12-29T17:55:32.600+05:302014-12-29T17:55:32.600+05:30இன்றைய ஆன்மிகம்?
உலகில் உள்ள சகல வகை பொருள்களிலி ...இன்றைய ஆன்மிகம்?<br /><br />உலகில் உள்ள சகல வகை பொருள்களிலி ருந்து நாம் பெறும் பயன்கள், செல்வங்கள் அனைத்தும் இலட்சுமி கடாட்சம் இருந்தால்தான் கிடைக்கும் என்கிறது ஒரு வார இதழ்.<br /><br />அப்படியென்றால் குறுக்கு வழியில் சென்று பணம் குவிக்கிறார்களே, கள்ள நோட்டு அடித்து கோடீசுவரர்கள் ஆகிறார் களே - அவைகூட இலட்சுமி தேவியாரின் கடாட்சத் தால்தானா?<br /><br />Read more: http://viduthalai.in/e-paper/93577.html#ixzz3NHz60JMu<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-10654987191230901662014-12-29T17:55:09.401+05:302014-12-29T17:55:09.401+05:30400 சீடர்களுக்கு ஆண்மை நீக்கம்; சாமியாருக்கு எதிரா...400 சீடர்களுக்கு ஆண்மை நீக்கம்; சாமியாருக்கு எதிரான மனு மத்திய புலனாய்வு குழு விசாரணை: உயர்நீதிமன்றம் உத்தரவு<br /><br />சண்டிகர், டிச.29- பஞ்சாப் மாநிலத்தில் ஆசிரமம் ஒன்றில் 400 சீடர்களுக்கு ஆண்மை நீக்கம் செய்யப் பட்டதாக புகார் கூறப்பட்டது. இதையடுத்து அந்த ஆசிரம சாமியார் மீது மத்தியப் புலனாய்வுக் குழு விசாரணை நடத்த பஞ்சாப் அரியானா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அரியானா மாநிலம் திரிசாவில் தேரா சச்சா சவுதா என்ற ஆன்மீக அமைப்பு மற்றும் ஆசிரமத்தை நடத்தி வருபவர் குருமேத் ராம் ரகீம். இவர் மீது இவரது முன்னாள் சீடரான சவுகான் என்பவர் பஞ்சாப் அரியானா உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுத்தாக்கல் செய்துள்ளார்.<br /><br />அந்த மனுவில், சாமியார் குருமேத் ராம் ரகீம், தனது 400 சீடர்களுக்கு ஆண்மை நீக்கம் செய்துள்ளதாகவும், இந்த ஆண்மை நீக்கம் ஆசிரமத்திற்கு உள்ளேயே நடைபெற்றதாகவும் தெரிவித்துள்ளார். ஆண்மை நீக்கம் செய்தால்தான் கடவுளை சந்திக்க முடியும் என்று உறுதி அளித்து இதனை சாமியார் செய்த தாகவும், தனது மனு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சவுகான் கூறியுள்ளார்.<br /><br />இந்த மனுவை விசாரித்த நீதிபதி கண்ணன், ஆண்மை நீக்கம் செய்ய சம்மந்தப்பட்டவர்கள் சம்மதம் கொடுத் திருந்தாலும், இது மனிதாபிமானமற்ற செயல் என்றார். இந்த மனு தொடர்பாக மத்தியப் புலனாய்வுக் குழு விசாரணை நடத்தவும் உத்தரவிட்டுள்ளார்.<br /><br />Read more: http://viduthalai.in/e-paper/93578.html#ixzz3NHyzkXEt<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-83984539963869340002014-12-29T17:51:29.437+05:302014-12-29T17:51:29.437+05:30
85. மிளகையும் எருக்கம்பூவையும் சம எடை எடுத்து நன்...<br />85. மிளகையும் எருக்கம்பூவையும் சம எடை எடுத்து நன்றாக அரைத்து பனை வெல்லம் கூட்டி சிறு குளிகை செய்து சாப்பிட்டால் இழுப்பு நோய் குணமாகும்.<br /><br />86. சீரகத்துடன் மிளகைச் சேர்த்துச் சாப்பிட அஜீரணம் போகும். சீரகத்தை அரைத்து எலுமிச்சை சாற்றுடன் கலந்துகொடுக்க கர்ப்பிணிகளின் வாந்தி நிற்கும். சுண்ணாம்பில் ஊற வைத்த, பொடித்த சீரகம், வயிற்று ஜீரண நீரைச் சீர்படுத்தி அல்சர் நோயைக் கட்டுப்படுத்தும்.<br /><br />87. வெங்காயத்தை உப்புடன் கூட்டிச் சாப்பிட வயிற்று வலி நீங்கும். வெங்காயத்துடன் சிறிது ஓமத்தைச் சேர்த்து வேக வைத்து குடிநீர் செய்து குடிக்க நீர்த்தாரை சம்பந்தப்பட்ட கோளாறுகள் நீங்கும்.<br /><br />88. மஞ்சள் நீரை அருந்த காமாலை கட்டுப்படும். மஞ்சள் நீரில் ஒரு சிறிய வெள்ளைத் துணியை நனைத்து நிழலில் உலர்த்தி வைத்துக்கொண்டு கண் நோய் உள்ளவர்கள் கண்களை துடைத்துக் கொண்டால் கண் சிவப்பு, கண் அருகல், கண்வலி, கண்ணில் நீர் கோர்த்தல் ஆகியவை தணியும். சிறந்த கிருமிக் கொல்லி, மணத்திற்காகவும் நிறத்திற்காகவும் உணவில் சேர்க்கப்படுகிறது.<br /><br />89. ஏலக்காய் ஏல விதையை பனை வெல்லத்துடன் சேர்த்து இடித்துச் சாப்பிட்டால் வாயில் நீர் ஊறுதல், தாகம், வியர்வையுடன் கூடிய தலைவலி, மிகுந்த வறட்சி, கபம் முதலியன கட்டுப்படும். ஏலக்காய் எண்ணெய்யை தலைவலி மருந்துடன் சேர்த்து சுளுக்கு, அடிபட்டவீக்கம் முதலான வற்றின் மீது தேய்க்க வலி நீங்கும்.<br /><br />90. இலவங்கத்தை நீர் விட்டு அரைத்து நெற்றியிலும், மூக்கின் மீதும் இட்டால் தலை பாரம் குணமாகும். இதை அனலில் வதக்கி வாயில் இட்டு சுவைத்தால் தொண்டைப் புண் ஆறும். பற்களின் ஈறு கெட்டிப்படும். தேனில் இழைத்துச் சாப்பிட்டால் உடல் வெப்பத்தைத் தடுக்கும். புண்ணில் சீழ் பிடிப்பதையும் கை, கால் நடுக்கத்தையும் இலவங்க எண்ணெய் தீர்க்கும்.<br /><br />91. சோம்பு (பெருஞ்சீரகம்) லேசாக வறுத்து பொடித்து இரண்டு கிராம் அளவில் எடுத்து சர்க்கரை சேர்த்து தினம் இரண்டு வேளை சாப்பிட வயிற்று வலி, வயிற்று உப்புசம், செரியாமை, இரைப்பு முதலியன நீங்கும். இதன் சூரணம் வியர்வையை உண்டாக்கி சிறு நீரை அதிகப்படுத்தும்.<br /><br />92. அரிசி அல்லது ஜவ்வரிசிக் கஞ்சியுடன் வெந்தயத்தைச் சேர்த்து காய்ச்சிக் கொடுக்க தாய்ப்பால் நன்றாகச் சுரக்கும். வெந்தயத்தை ஊர வைத்து தலையில் தேய்த்துக் குளித்தால் தலை முடி நன்றாக வளரும். வெந்தயக் கீரை அஜீரணக் கோளாறை நீக்கும். தினமும் இரவில் ஒரு கைப்பிடி வெந்தயத்தை ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப் பாட்டுக்குள் வரும்.<br /><br />93. வயிறு இதமாக புழுங்கலரிசி நொய்க்கஞ்சியுடன் வெந்தயம் கால் ஸ்பூன் சேர்த்து, மோருடன் கலந்து காலையில் 2 கப் குடித்தால் வயிறு இதமாகும்.<br /><br />94. பன்னீரில் ஏலக்காய், தேன் கலந்து குடிப்பது மூளைக்குப் புத்துணர்ச்சி தரும்.<br /><br />95. வெள்ளரிப் பிஞ்சு, இளநீர், மோர், நீராகாரம், லெமன், ஜூஸ் ஆகியவை சிறுநீரகத்தை குளுமைப்படுத்தும்.<br /><br />96. சிறுநீர் எரிச்சல் நீங்க ஜீரகத்தையும், கற்கண்டையும் சுவைத்துச் சாப்பிடுதல் நல்ல பயன் தரும்.<br /><br />Read more: http://viduthalai.in/page-7/93594.html#ixzz3NHxoSNvoதமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-26658352518057362362014-12-29T17:51:24.828+05:302014-12-29T17:51:24.828+05:30எளிய உணவுப் பொருட்களின் மருத்துவ குணங்கள் (தொடர்ச்...எளிய உணவுப் பொருட்களின் மருத்துவ குணங்கள் (தொடர்ச்சி)<br /><br />மிக எளிய உணவு பொருட்களில் உள்ள மருத்துவ குணங்களால் உடலில் உண்டாகும் பல்வேறு நோய்கள் தீர்க்கின்றன.<br /><br />75. கடுக்காயை வாயில் ஒதுக்கி வைத்தால் வாய்ப்புண் ஆறும்.<br /><br />76. மிளகுபொடி, சுக்குப்பொடி, தண்ணீர் போட்டு கஷாயமாக்கி பாலும், வெல்லமும் சேர்த்து பருகினால் உடம்பு வலி தீரும்.<br /><br />77. சுத்தமான வெள்ளாட்டுப் பாலில் ஒரு கரண்டி இஞ்சிச் சாற்றை கலந்து கொடுத்தால் குழந்தைகளுக்கு சளித் தொல்லை இருக்காது.<br /><br />78. ரோஜாமொக்கு, சுக்கு, ஏலக்காய், கொத்துமல்லி வகைக்கு 5 கிராம் எடுத்து இளவறுப்பாக வறுத்து அம்மியில் வைத்து பெரும் பருக்கையாக உடைத்து வைத்துக்கொண்டு காலை, மாலை சாப்பிட்டு வந்தால் உடல் சூடு சமப்படும்.<br /><br />79. நிம்மதியான உறக்கத்தைப் பெற ஒரு தேக்கரண்டி கசகசாவை எடுத்து இரண்டு முந்திரி பருப்பு சேர்த்து அரைத்து பசும்பாலில் கலந்து காய்ச்சி சிறிது கற்கண்டும் சேர்த்து பருகினால் நிம்மதியான உறக்கத்தைப் பெறலாம்.<br /><br />80. சூட்டினால் ஏற்படும் வலியாக இருந்தால் தொப்புளைச்சுற்றி ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெய் அல்லது நல்லெண்ணெய் தடவி தொப்புளுக்குள்ளும் விடலாம்.<br /><br />81. சுக்குத்தூளை கரும்புச் சாற்றுடன் கலந்து சாப்பிட, வயிற்று எரிச்சல் தீரும்.<br /><br />82. தொண்டைக்கட்டு ஜலதோஷத்தினால் தொண்டை கட்டிக் கொண்டால் மிளகைப் பொடி செய்து, ஒரு ஸ்பூன் நெய்யை சூடு செய்து அதில மிளகுப் பொடியை சேர்த்துக் குடித்தால் தொண்டைக் கட்டு விலகும்.<br /><br />83. வெள்ளரிக்காய் விதையை அரைத்து அத்துடன் அய்ந்து பங்கு நீர் சேர்த்து கரைத்து வடிகட்டி சர்க்கரை சேர்த்துக் கொடுக்க நீரடைப்பு, நீர் எரிச்சல் ஆகியவை போகும். பசி கொடுக்கும் ஆற்றலும் வெள்ளரிக் காய்க்கு உண்டு.<br /><br />84. பெருங்காயத்தை நீரில் கரைத்து ஒரு சங்களவு எடுத்து சிறிது ஓமத்தையும் சேர்த்துக் கொடுக்க குழந்தைகளுக்கு உண்டாகும் மாந்தம், வயிற்றுப் பொருமல் போகும்.<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-30205982709946556572014-12-29T17:49:39.430+05:302014-12-29T17:49:39.430+05:30நோய்களை தீர்க்கும் கீரைகள்..
காய்கறிகளில் மிகவும...நோய்களை தீர்க்கும் கீரைகள்..<br /><br /><br />காய்கறிகளில் மிகவும் சத்தானவை கீரை வகைகள்:<br /><br />ஒரு கிலோ முளைக்கீரையில், 70 கிலோ வாழைப்பழத்திற்கு நிகரான வைட்டமின் ஏ சத்து உள்ளது.<br /><br />ஒரு கிலோ அகத்திக்கீரையில் உள்ள சுண்ணாம்பு சத்தைப் பெற 113 கிலோ ஆப்பிள்களை சாப்பிட வேண்டும். ஒரு கிலோ அரைக்கீரையில் சுமார் 32 கிலோ அன்னாசிப்பழத்திற்கு நிகரான சத்து நிறைந்துள்ளது.<br /><br />இதேபோல் 100 கிராம் முருங்கை கீரையில் சுண் ணாம்புச் சத்து, மணிச்சத்து, மாங்கனீசிய சத்து, சாம்பல் சத்து உள்ளிட்டவை நிறைந்து காணப்படுகின்றன. தண்டுக்கீரை, அரைக்கீரை, பொன்னாங்கணிகண்ணிக்கீரை, கரிசலாங்கண்ணிக்கீரை உள்ளிட்டவற்றில் சுண்ணாம்பு சத்து அதிகமாக உள்ளன.<br /><br />முளைக்கீரை, அரைக்கீரை, பசலைக்கீரை, வல்லா ரைக்கீரை உள்ளிட்டவற்றில் இரும்புச்சத்து அதிகமாக காணப்படுகின்றன. இத்தனை நற்குணங்களை கொண்ட கீரைகளை தினந்தோறும் சாப்பிட்டு வந்தால், கண் பார்வை, இரத்த நாளங்கள், ஜீரண உறுப்புகள் போன்றவற்றிற்கு பயன் கிடைக்கும்.<br /><br />இதேபோல் வாய்ப்புண், மூலநோய், குடல் அழற்சி, அல்சர் போன்ற நோய்களுக்கும் கீரை சிறந்த மருந்தாக உள்ளது.<br /><br />Read more: http://viduthalai.in/page-7/93594.html#ixzz3NHxbpaBP<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-4679424778125557182014-12-29T17:48:43.670+05:302014-12-29T17:48:43.670+05:30இந்து மதத்தின் அடிப்படைகள் - ஜாதியக் கொடுமைகள் கொண...இந்து மதத்தின் அடிப்படைகள் - ஜாதியக் கொடுமைகள் கொண்டவை!<br /><br />இந்து மதத்தின் அடிப்படைகள் - ஜாதியக் கொடுமைகள் கொண்டவை!<br /><br />ஒகேனக்கல் பெரியாரியல் பயிற்சிப் பட்டறையில் இரண்டாம் நாளில் தமிழர் தலைவர் விளக்கம்<br /><br />தருமபுரி, டிச.29_ திராவிடர் கழகத்தின் சார்பில், தருமபுரி மாவட்டம் ஒகேனக் கல்லில் நடைபெற்றுவரும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறையில் இரண்டாம் நாள் வகுப்புகள் டிசம்பர் 28 அன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது. காலை 9 மணியளவில் முதல் வகுப்புத் தொடங்கியது. தமிழர் தலைவர் அவர்கள் இந்துத்துவா என்ற தலைப்பில் பயிற்சி வகுப்பெடுத்தார்.<br /><br />தமிழர் தலைவர்<br /><br />இந்து மதத்தின் அடிப்படைகள், ஜாதியக் கொடுமைகள் போன்றவை குறித்தும், இந்துத்துவா என்பதன் பொருளையும் விளக்கங்களுடனும், ஆதாரத்துடனும் தமிழர் தலைவர் அவர்கள் தெரிவித்தார்.<br /><br />தொடர்ந்து பேராசிரியர் காளிமுத்து அவர்கள், ஆரியர் _ திராவிடர் _ தமிழர் என்ற தலைப்பில் திராவிடர் இனத்தின் வரலாறு, ஆரியர்கள், திராவிட மொழிகளை சிதைத்தது, பார்ப்பனப் பண்பாடுகளை திராவிட கலாச்சாரத்துடன் கலந்து, திரா விடர்களின் உண்மையான கலாச்சாரங்களை சீரழித்தது போன்ற வரலாற்று உண்மை களை எடுத்துரைத்தார்.<br /><br />அவரைத் தொடர்ந்து, மூட நம்பிக்கை கள் ஒரு மோசடியே என்ற தலைப்பில், மருத்துவர் இரா.கவுதமன் அவர்கள் வகுப்பெடுத்தார். அவர் சாமியாடுதல், பேய், பில்லி, சூனிய மோசடிகள் குறித்து மருத்துவ ரீதியான உண்மைகளை எடுத்துரைத்தார்.<br /><br />அவரது உரை புதிய தோழர்களுக்குத் தெளிவான விளக்கத்தை அளித்தது.<br /><br />பகல் உணவிற்கு முன்னர், இறுதி வகுப்பாக, கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் பார்ப்பன பண்பாட்டுப் படையெடுப்பு என்ற தலைப்பில், பார்ப்பனர்கள் நமது திராவிட கலாச்சாரத்தின்மீது தொடுத்த பண்பாட்டுப் படையெடுப்பின் விளைவாக ஏற்பட்ட தாக்கங்களை விளக்கமாக எடுத்துக் கூறினார். பெயர் வைப்பதில் தொடங்கி, பண்டிகைகள், மொழி, பழக்கவழக்கங்கள், வழிபாட்டு முறை என பல்வேறு வகையிலும் பார்ப்பனியம் நமது பண்பாட்டை, கலாச்சாரத்தை சிதைத்து, தனது பண்பாட்டுப் படை யெடுப்பை திராவிட இனத்தின்மீதும், தமிழ் மொழியின்மீது திட்டமிட்டு தொடுத்ததை விரிவாக விளக்கிக் கூறினார்.<br /><br />மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜாதி ஒழிப்புபற்றி கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் பேசினார். அதைத் தொடர்ந்து, கழகச் சொற்பொழி வாளர் முனைவர் அதிரடி அன்பழகன், திராவிடர் இயக்க மாவீரர்கள் என்ற தலைப்பில் பயிற்சி அளித்தார்.<br /><br />கழகப் பொருளாளர் மருத்துவர் பிறை நுதல்செல்வி, பெரியாரும் பெண்ணுரிமையும் என்ற தலைப்பில் பயிற்சி வகுப்பெடுத்தார்.<br /><br />விழிப்புணர்வுப் பாடல்கள்<br /><br />அடுத்ததாக, தஞ்சை சம்பந்தம் அவர்கள், மாணவ, மாணவிகளுக்கு யோகா பயிற்சி பற்றி விளக்கினார். அதைத் தொடர்ந்து அன்பு கலைக் குழுவினரின் விழிப்புணர்வுப் பாடல்கள் பாடப்பட்டன.<br /><br />இறுதியாக பயிற்சி பெறுபவர்களுக்குப் பெரியார் திரைப்படம் திரையிட்டு காட்டப்பட்டது.<br /><br />Read more: http://viduthalai.in/page-8/93607.html#ixzz3NHxL0RRq<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-12558397509341068872014-12-28T20:12:10.709+05:302014-12-28T20:12:10.709+05:30சிறுபான்மை மக்களை ஏமாற்றும் மோடி இந்திய கிறிஸ்தவர்...சிறுபான்மை மக்களை ஏமாற்றும் மோடி இந்திய கிறிஸ்தவர் முன்னணி கண்டனம்<br /><br /><br />மதுரை, டிச.28- இந்திய கிறிஸ்தவர் முன் னணியின் தலைவர் டாக்டர் எம்.எல்.சுந்தரம் வெளியிட்டுள்ள அறிக் கையில் கூறியுள்ளதாவது: சங்பரிவாரங்களின் சங்க மத்தில் மத்தியில் ஆளும் பாஜக கட்டாய மத மாற்றுத் தடைச்சட்டம் ஒன்றை அரங்கேற்ற முயல்வது கண்டனத்திற் குரியது. இம்முயற்சி, இந் திய அரசியல் சட்டத்திற்கு முரணானது. மதச் சிறு பான்மையினரை அச் சுறுத்தி, நசுக்கும் செய லாகும். ஆட்சியைப் பிடிக் குமுன், சமயச்சார்பற்ற கொள்கையை தூக்கிப் பிடிப்போம் என உறுதி யளித்துவிட்டு, ஆட்சிக்கு வந்த பின் தன் விருப்பம் போல் சமய அடிப் படை வாதிகளின் ஆலோசனை யில் கிறிஸ் தவ மற்றும் இஸ்லாமிய சிறுபான்மை யினரின் சமய உரிமை களை மறுக்கவும், மறைக் கவும், அழிக்கவும் ஆவன செய்யும் அராஜக சட் டத்தை மத்தியில் கொண்டு வர பாஜக முயற்சிக்கிறது.<br /><br />இது முற்றிலும் ஜனநாய கக் கோட்பாடுகளுக்கு விரோதமாகும். இத்த கையச் சூழலில் இந்தியா ஒரு ஜனநாயக நாடு என அழைக்கப்படும் பெரு மையை இழந்துவிடும். பிரதமர் மோடி சிறந்த நிர்வாகி என நம்பி வாக் களித்து வெற்றி பெறச் செய்த சிறுபான்மைச் சமூகத்தினரை ஏமாற்றும் செயலாகும். மத உரிமை மனித உரிமையே! கட் டாய மதமாற்றத்தைத் தடுக்க ஏற்கனவே நாட் டில் உள்ள தண்டனைச் சட்டங்கள் போதுமானது என்ற நிலையில், இப் போது இதுபோன்ற புதிய சட்டங்கள் தேவை யில்லை. எனவே, கிறிஸ்த வர்களும், இஸ்லாமியர் களும் ஒன்றிணைந்து இத்தகைய அவசியமற்ற சட்டத்தை எதிர்த்திட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.<br /><br />Read more: http://viduthalai.in/e-paper/93540.html#ixzz3NCgxkmw0<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-15688392599940741402014-12-28T20:11:30.342+05:302014-12-28T20:11:30.342+05:30இன்றைய ஆன்மிகம்?
கிள்ளுக் கீரையா?
பார்வதி குளிக்...இன்றைய ஆன்மிகம்?<br /><br />கிள்ளுக் கீரையா?<br /><br />பார்வதி குளிக்கும் பொழுது பிர்மா எட்டிப் பார்த்தான் என்று பிர்மாவின் ஒரு தலையை சிவன் கிள்ளினானாமே - இதுதான் கடவுளின் ஒழுக்கமா? பிர்மா என்ன சிவனுக்குக் கிள்ளுக் கீரையா?<br /><br />Read more: http://viduthalai.in/e-paper/93541.html#ixzz3NCgoP6yT<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-75823828464926720412014-12-28T20:11:02.624+05:302014-12-28T20:11:02.624+05:30போக்குவரத்துத் தொழிலாளர் வேலை நிறுத்தத்தில் திராவி...போக்குவரத்துத் தொழிலாளர் வேலை நிறுத்தத்தில் திராவிடர் தொழிலாளர் அணியினரும் பங்கேற்பர்!<br /><br /><br />போக்குவரத்துத் தொழிலாளர் வேலை நிறுத்தத்தில்<br /><br />திராவிடர் தொழிலாளர் அணியினரும் பங்கேற்பர்! <br /><br />தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துப் பணியாளர் களின் சங்கங்கள், ஊதிய உயர்வு தொடர்பான பேச்சு வார்த்தை உள்ளிட்ட பல நியாயமான கோரிக் கைகள் தொடர்பாக வேலை நிறுத்த அறிவிப்பு தந்துள்ள நிலையில் அரசுடன் நடந்த பேச்சு வார்த்தையில் 27.12.2014-இல் கூட, உடன்பாடு ஏற்படாத நிலையில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டவாறு, 29.12.2014-இல் வேலை நிறுத்தம் தொடங்க உள்ளது. வேலைநிறுத்தத் தில் போக்குவரத்து திராவிடர் தொழிலாளர் அணியைச் சார்ந்த பணியாளர்களும் பங்குபெற்று, வேலைநிறுத்தத்தில் ஈடுபடுமாறு தோழர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கழகத் தலைவரின் வழி காட்டுதல்படி இவ்வறிவிப்பு வெளியிடப்படுகிறது.<br /><br />- சு.அறிவுக்கரசு<br />28.12.2014 தொழிலாளர் அணிச் செயலாளர்<br />திராவிடர் கழகம்<br /><br />Read more: http://viduthalai.in/e-paper/93538.html#ixzz3NCgY4EN7<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-56872093671589703632014-12-28T20:09:47.199+05:302014-12-28T20:09:47.199+05:30காந்தியார் நினைவு நாளில் மதவெறி எதிர்ப்பு பிரச்சார...காந்தியார் நினைவு நாளில் மதவெறி எதிர்ப்பு பிரச்சார கூட்டங்கள் நடத்தப்படும்<br /><br /><br />யார் இந்த மண்ணுருண்டை மாளவியா?காந்தியார் நினைவு நாளில் மதவெறி எதிர்ப்பு பிரச்சார கூட்டங்கள் நடத்தப்படும்<br /><br />திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுவின் தீர்மானங்கள்<br /><br /><br />ஒகேனக்கல், டிச.28- ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான 12 மாதங் களுக்குரிய பிரச்சார திட்டம் திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுவின் கூட்டத்தில் வகுக்கப்பட்டது.<br /><br />திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டம் ஒகேனக்கல்லில் 28.12.2014 ஞாயிறு காலை 10 மணிக்கு திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.<br /><br />கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:<br /><br />1. இரங்கல் தீர்மானம்: திராவிடர் கழகப் பொதுக்குழு உறுப்பினரும் இளம்பருவம் தொட்டு திராவிடர் கழகத்தில் ஈடுபட்டு, தனது 81ஆம் வயது வரை, கழக வீராங்கனையாக ஒளி விட்ட ஏ.பி.ஜெ.மனோரஞ்சிதம் அவர்களின் மறை விற்கு தலைமை செயற்குழு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.<br /><br />2. ஜனவரியில் மதவெறி எதிர்ப்பு, பிப்ரவரியில் தமிழர் உரிமைக் காப்பு, மார்ச்சில் மகளிர் புரட்சி, ஏப்ரலில் ஒடுக்கப் பட்டோர் உரிமைக் காப்பு, தமிழர் கலை-பண்பாட்டுப் புரட்சி, மே மாதத்தில் தொழிலாளர் உரிமைக் காப்பு (சமதர்மம் சமத்துவம் பரப்புரை), ஜூன் மாதத்தில் மொழி மானம் - உணர்வு உரிமைக்காப்பு, ஜூலையில் கல்விப் புரட்சி, ஆகஸ்ட் மாதத்தில் சமூகநீதி எழுச்சி, செப்டம்பரில் தமிழர் எழுச்சி-புரட்சி, அக்டோபரில் மூடநம்பிக்கை ஒழிப்பு, நவம்பரில் ஜாதி ஒழிப்புப் புரட்சி, டிசம்பரில் இன இழிவு ஒழிப்பு என்கிற தலைப்புகளில் திராவிடர் கழகம் தனது பிரச்சாரங்களை திட்டமிட்டபடி மேற்கொள்வது என்று தீர்மானிக்கப் படுகிறது.<br /><br />குறிப்பாக வரும் ஜனவரி 30-ஆம் தேதியன்று தமிழ்நாடு தழுவிய அள வில் காந்தியார் படுகொலை செய்யப் பட்ட நாளில் மதவெறி எதிர்ப்புப் பிரச்சாரத்தை மேற்கொள்வது என்று தீர்மானிக்கப்படுகிறது.<br /><br />3. ஒவ்வோர் ஆண்டிலும் தந்தை பெரியார் பிறந்த நாளில் (செப்டம்பர் 17) கொள்கை முழக்கத்துடன் பேரணி நடத்துவது என்றும் ஒவ்வொரு நினைவு நாளிலும் (டிசம்பர் 24) அமைதிப் பேரணி நடத் துவது என்றும் தீர்மானிக் கப்படுகிறது.<br /><br />4. தமிழ்நாடு முழுவதும் வட்டார திராவிடர் எழுச்சி மாநாட்டை எல்லா ஒன்றி யங்களிலும் நடத்துவது என் றும், அதனுடன் இணைந்து புத்தகச் சந்தைகளை நடத் துவது என்றும், ஒவ்வொரு மாநாட்டிலும் தொடக்கத்தில் ஒரு மணி நேரம் மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சி அல்லது கலை நிகழ்ச்சிகளை நடத் துவது என்றும் தீர்மானிக்கப் படுகிறது. வட்டார மாநாடு களில் ஒத்த கருத்துள்ள கட்சிகளைச் சேர்ந்த தலைவர் களையும் அழைத்து நடத்துவது என்று தீர்மானிக்கப் படுகிறது.<br /><br />5. இதிகாசம், புராணம், பார்ப்பனப் புரட்டுகள், சாமியார்கள் பற்றி சிறப்பு அரங்கக் கூட்டங்களை நடத்துவது என்று தீர்மானிக்கப்படுகிறது.<br /><br />6. ஊதிய உயர்வு உள்பட பல்வேறு நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து தமிழக அரசுடன் மேற் கொள்ளப்பட்ட பேச்சு வார்த்தையில் எவ்வித முன்னேற் றமும், உடன்பாடும் எட்டப்படாத நிலையில் 29.12.2014 முதல் தொடங்கப்பட உள்ள தமிழகப் போக்குவரத்துத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தில் திராவிடர் தொழிலாளர் அணியைச் சேர்ந்த தோழர்களும் பங்கு பெறுவது என்று தீர்மானிக்கப்படுகிறது.<br /><br />Read more: http://viduthalai.in/e-paper/93533.html#ixzz3NCgJ0yI0<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.com