tag:blogger.com,1999:blog-1474608369333206681.post4037615049909485608..comments2023-10-29T13:02:52.613+05:30Comments on தமிழ் ஓவியா: பெரியாரின் பார்ப்பனஎதிர்ப்பு மதஎதிர்ப்புப் பிரச்சாரம்தான் முக்கிய காரணம்?எதற்கு?ஏன்?தமிழ் ஓவியாhttp://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comBlogger55125tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-72860569432073960382015-02-04T20:16:40.227+05:302015-02-04T20:16:40.227+05:30தேநீர் இரட்டைக் குவளை
மலைஜாதிப் பெண்
கிள்ளிப் பறி...தேநீர் இரட்டைக் குவளை<br /><br />மலைஜாதிப் பெண்<br />கிள்ளிப் பறித்தாள்<br />தேயிலையை அங்கே!<br />கறவைப் பசுவை<br />பாடிக் கறந்தாள்<br />பால் வந்ததிங்கே!<br />கரும்பாலை அலுப்பில்<br />தினம் அவன் உழைத்தே<br />சக்கரை சேர்ந்ததிங்கே!<br />தண்ணீர் கலந்தவன்<br />என்ன ஜாதியோ?<br />என்ன எழவோ?<br />-என யாரும் கேட்டறியேன்.<br />பாத்திரம் தேய்த்தவன்,<br />அடுப்பைச் செய்தவன்,<br />எரிக்கிற எண்ணெய்,<br />கழுவுகிற சோப்புக் கட்டி,<br />எதற்கும் ஆதிமூலம் கேட்டறியேன்.<br />ஜாதி பேசும்<br />சுத்தபத்தம் எல்லாம்<br />தேநீர்க் கடை<br />இரட்டைக் குவளையில்தான்.<br />இப்பெல்லாம் எங்க சார்<br />இரட்டை டம்ளர். எல்லாமே பிளாஸ்டிக் டம்ளர்தானே' என்பவன்<br />வலிந்து சொல்வான்<br />இப்பெல்லாம் யாரு சார்?<br />ஜாதி பாக்குறா! என்று.<br /><br />- தம்பி. அழ. பிரபு, மதுரைதமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-85379016515596493802015-02-04T20:15:53.033+05:302015-02-04T20:15:53.033+05:30துளிச் செய்திகள்
பன்னாட்டுக் குற்றவியல் நீதி...துளிச் செய்திகள்<br /><br /><br /> பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தின் உறுப்பினர் நாடாக பாலஸ்தீனம் ஜனவரி 6 அன்று இணைந்துள்ளது.<br /><br /> வெளிநாடு வாழ் இந்தியர்கள் மின்னணு முறையில் ஓட்டளிக்கத் தேவையான ஏற்பாடுகளை எட்டு வாரங்களுக்குள் செய்துதர மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் ஜனவரி 12 அன்று ஆணையிட்டது.<br /><br /> அய்ரோப்பிய நாடான குரோஷியாவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் கொலிந்தா கிரயா கிதாரொவிச் வெற்றிபெற்று அந்நாட்டின் அதிபர் பதவி ஏற்கும் முதல் பெண் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.<br /><br /> சுரங்க முறைகேடு வழக்கில் கைதாகி சிறையிலிருந்த கருநாடக மேனாள் அமைச்சர் ஜனார்த்த ரெட்டிக்கு 40 மாதங்களுக்குப் பின்னர் ஜனவரி 20 அன்று நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் ஆணையிட்டது.<br /><br /> பயங்கரவாதிகள் மீதான வழக்கை விரைந்து விசாரிப்பதற்காக சிறப்பு ராணுவ நீதிமன்றங்கள் ஏற்படுத்த வகை செய்யும் அரசியல் சாசனத் திருத்த மசோதாக்கள் இரண்டினை பாகிஸ்தான் அரசு ஜனவரி 3 அன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, அவை ஜனவரி 6 அன்று நிறைவேற்றப்பட்டன.<br /><br /> சத்தீஸ்கர் மாநிலம் ராய்கர் மாநகராட்சித் தேர்தலில் மேயர் பதவிக்குப் போட்டியிட்ட திருநங்கை மதுகின்னார் வெற்றி பெற்றுள்ளார்.<br /><br /> சவுதி அரேபியா நாட்டில் மன்னர் அப்துல்லா ஜனவரி 23 அன்று மரணம் அடைந்ததை அடுத்து புதிய மன்னராக சல்மான் அறிவிக்கப்-பட்டுள்ளார்.<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-26510991147727537212015-02-04T20:14:46.437+05:302015-02-04T20:14:46.437+05:30கருத்து
மார்க்சிஸ்ட் தலைவர்கள் பலர் தற்போது சிந்...கருத்து<br /><br /><br />மார்க்சிஸ்ட் தலைவர்கள் பலர் தற்போது சிந்தனை ரீதியாக முதலாளித்துவ ஆதரவாளர்களாகி-விட்டனர். சமூக, பொருளாதாரக் கொள்கையின்படி நான் இன்னும் ஒரு மார்க்சிஸ்ட்தான். முதலாளித்துவ நாடுகளில் ஏழை, பணக்காரர்கள் இடையேயான வித்தியாசம் அதிகரித்துள்ளது. சரிசமமான பகிர்வுக்குத்தான் மார்க்சிசத்தில் முக்கியத்துவம் தரப்படுகிறது.<br /><br />- தலாய் லாமா, புத்த மதத் தலைவர், திபெத்.<br /><br />இந்தியாவில் ஒரு மணி நேரத்துக்கு எட்டு விபத்துகள் நடைபெறுகின்றன. இந்தியாவில் நடைபெறும் விபத்துகளில் 15 விழுக்காடு தமிழகத்தில் நடப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இந்நிலையில், ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் இரண்டு பேர் செஞ்சிலுவைச் சங்கம் அல்லது அவசர ஊர்தி சேவை போன்ற முதலுதவிச் சங்கங்களில் தொண்டாற்ற வேண்டும்.<br /><br />- கே.ரோசய்யா, தமிழக ஆளுநர்<br /><br /><br />மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி நாட்டில் 1000 ஆண்களுக்கு 918 பெண்கள் மட்டுமே உள்ளனர். இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண நாடு முழுவதும் பெண் சிசுக் கொலை அறவே ஒழிக்கப்பட வேண்டும்.<br /><br />- மேனகா காந்தி, மத்திய அமைச்சர்<br /><br /> <br /><br />சொல்றாங்க...<br /><br /> <br /><br />பகவத் கீதையைப் பாடத்திட்டத்தில் சேர்ப்பது தொடக்கம்தான். பாரதப் பண்பாட்டையும் நாகரிகத்தையும் கற்பிக்கும் வகையில் விரைவில் கல்வி முழுமையாகக் காவி மயமாக்கப்படும்.<br /><br />- ராம் பிலாஸ் சர்மா, கல்வி அமைச்சர், ஹரியானா<br /><br />சொல்றேங்க...<br /><br />நல்லா கற்பிங்க அமைச்சர் சார்!<br /><br />ஆனா... நண்பன் படத்து டயலாக் மாதிரி கற்பிங்கிறது கற்பழின்னு ஆகாமப் பாத்துக்குங்க! ஏன்னா... நீங்க சொல்ற பாரதப் பண்பாட்டின் மகாபாரதத்தையும், பாகவதத்தையும், இதர புராணங்களையும் மாதிரி கற்பழிப்பு சீன் உள்ள கதைகள் உலகத்திலேயே கிடையாது!<br /><br />சொல்றாங்க...<br /><br />பகவத் கீதையை முன்னிறுத்தி அரசியல் நடைபெறுவதை ஏற்க முடியாது. உலகில் உள்ள அனைவருக்கும் கீதை பொதுவானது. அது பா.ஜ.க.விற்கு மட்டும் சொந்தமல்ல.<br /><br />- பூபிந்தர் சிங் ஹுடா, மேனாள் முதல்வர், ஹரியானா<br /><br />சொல்றேங்க...<br /><br />இதுதானா சார் உங்க டக்கு! பா.ஜ.க. மட்டும் இதை வச்சு அரசியல் பண்ணக்கூடாது... நாங்களும் பண்ணு-வோம்ங்கிறீங்களா... விஷம் யார் கையில இருந்தாலும் விஷம்தான் சார்.<br /><br />சொல்றாங்க...<br /><br />டில்லியில் ராமபக்தர்களின் அரசாங்கம் அமைந்துள்ளது. ஜெய்ஸ்ரீராம் என்ற மக்களின் பிரார்த்தனையால்தான் ராம பக்தர்களால் டில்லியில் ஆட்சி அமைக்க முடிந்துள்ளது. உத்தரப் பிரதேச மாநில அரசு அயோத்தியை மேம்படுத்தவில்லை. அயோத்தியைப்பற்றி தற்போதைய சமாஜ்வாடி மற்றும் முந்தைய பகுஜன் சமாஜ் அரசுகளுக்கும் அக்கறை இல்லை. இதற்குக் காரணமே இந்தக் கட்சிகளின் ஜாதிய அரசியல்தான். - நிதின் கட்காரி, மத்திய அமைச்சர்<br /><br />சொல்றேங்க...<br /><br />ஆமாங்க... அவங்களோடது பிற்படுத்தப்-பட்ட தாழ்த்தப்பட்ட மக்களின் அரசியல். உங்களோடது பார்ப்பன உயர்ஜாதி அரசியல்!தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-79919936100243552992015-02-04T20:11:00.900+05:302015-02-04T20:11:00.900+05:30எதுக்காவது போராடுவோம்?"
போனவாரம் மாதொருபாகன்...எதுக்காவது போராடுவோம்?"<br /><br />போனவாரம் மாதொருபாகன் மனதைப் புண்படுத்துகிறது என்று போராடியவர்கள், இப்போது நயன்தாரா பீர் வாங்குவது போல் நடிக்கக்கூடாது என்று போராட்ட அறிவிப்பு விடுத்திருக்கிறார்கள். எப்படியாவது செய்திகளில் இடம்பெற்றுவிட வேண்டும் என்ற நோக்கில் எதற்குப் போராட்டம் நடத்துவது என்று தெரியாமல் எல்லாவற்றுக்கும் போராட்ட அறிவிப்பு விடுக்கிறார்கள் இந்துத்துவ காமெடியினர். ஏதோ நம்மால ஆன உதவியையும் செய்யலாமே! எதற்கெல்லாம் போராட்டம், எப்படியெல்லாம் நடத்தலாம் என்பதை நம் உண்மை வாசகர்கள் எழுதி அனுப்பலாம். சிறந்த போராட்டத்திற்குப் பரிசு உண்டு. வரும் பிப்ரவரி 8-ஆம் தேதிக்குள் உங்கள் ஆலோசனைகளை அனுப்பிவையுங்கள்.<br /><br />எதுக்காவது போராடுவோம்?<br /><br />உண்மை<br /><br />பெரியார் திடல், 84/1, (50), ஈ.வெ.கி.சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை-7<br /><br />unmaionline@gmail.comதமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-77274553953489834602015-02-04T20:10:06.893+05:302015-02-04T20:10:06.893+05:30உங்களுக்குத் தெரியுமா?
பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தி...உங்களுக்குத் தெரியுமா?<br /><br /><br />பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் வழக்குகளை விசாரிக்கும் ஆங்கிலேய நீதிபதிகளுக்கு உதவியாக சாஸ்திரங்களை எடுத்துச் சொல்லும் பொறுப்பில் பார்ப்பனர்களே இருந்தார்கள் என்பதும், அந்தப் பார்ப்பனர்கள் தங்கள் விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப கருத்துகளைக் கூறி வந்தார்கள் என்பதும் உங்களுக்குத் தெரியுமா?தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-47279360752146087842015-02-04T20:09:40.592+05:302015-02-04T20:09:40.592+05:30இரோம் சர்மிளா : விடுதலையும் தொடரும் கைதுகளும்
இர...இரோம் சர்மிளா : விடுதலையும் தொடரும் கைதுகளும்<br /><br /><br />இராணுவச் சட்டங்கள்<br /><br />இரோம் சர்மிளா :<br /><br />விடுதலையும் தொடரும் கைதுகளும்<br /><br /><br />'சர்மிளா தற்கொலைக்கு முயலும் குற்றவாளி', அவரைக் காண இம்பால் நீதிமன்றத்தை அணுகியபோது நீதிபதி அனுமதி மறுத்துக் கூறியவை இவை. ஆனால் அதே நீதிமன்றம் 'சர்மிளா குற்றமற்றவர், அவரது போராட்டம் சட்டப்பூர்வமானது என தீர்ப்பளித்து. ஜனவரி 22ஆம் தேதி விடுதலை செய்தது.<br /><br />ஆனால் அடுத்த நாள் இரவே மருத்துவ உதவி தரப்படுகிறது என மீண்டும் கைது செய்யப்பட்டார். இந்த விடுதலையும் தொடரும் கைதுகளும் சர்மிளாவின்மேல் நிகழ்த்தப்படுவதல்ல, அவர் வைக்கும் கோரிக்கையின்மேல் நிகழ்த்தப்படுபவை.<br /><br />மணிப்பூரில் நடைமுறையில் உள்ள ராணுவ சிறப்பதிகாரச் சட்டத்தை நீக்க வேண்டும் என்பதுவே அந்தக் கோரிக்கை. அதற்காகவே கடந்த 14 ஆண்டுகளுக்கும் மேலாக உண்ணாவிரதத்தைத் தொடர்ந்து வருகிறார்.<br /><br />இந்தச் சட்டத்தை இங்கிலாந்து காலனிய காலத்தில் எதிர்த்த அதே காங்கிரஸ்தான், இந்திய விடுதலைக்குப் பிறகு இங்கு நடைமுறைப்படுத்தியது.<br /><br />இந்திய விடுதலைக்குப் பிறகான அரை நூற்றாண்டு காலம் கடந்தும் நடைமுறையில் உள்ள ராணுவ சிறப்பதிகாரச் சட்டம், மத்தியில் எந்த அரசாங்கம் மாறினாலும் மாறாத ஒன்று. அந்தச் சட்டம் ஏற்படுத்திய வன்முறையே எனது உண்ணாவிரதத்துக்குக் காரணம் என்கிறார் சர்மிளா.<br /><br />அப்படி என்ன வன்முறை? நவம்பர் 2, 2002, மாலோம் என்ற பகுதியில் காலைப் பேருந்துக்காக நின்று கொண்டிருந்த 10 பேர் எவ்வித எச்சரிக்கையுமின்றி அசாம் ரைபில்ஸ் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.<br /><br />அதில் ஓர் இளைஞர் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியிடம் வீரதீர விருது பெற்றவர். இந்தச் சட்டத்துக்குக் கொடுக்கப்படும் கேள்விகள் கேட்கமுடியாத உட்சபட்ச அதிகாரத்தை எதிர்த்து அன்று முதல் காலவரையற்ற உண்ணாவிரதத்தை சர்மிளா தொடர்கிறார்.<br /><br />ஏன் இந்தச் சட்டம்? 1948இல் இந்தியாவால் வலுக்கட்டாயமாக இணைத்துக் கொள்ளப்பட்ட மணிப்பூரிலும் இன்னும் பிற வடகிழக்குப் பகுதிகளிலும் இந்திய _- காலனித்துவ ஆட்சி (Indian Colonial Rule) என்று நிலவும் அரசியல் சூழலை இன்றளவும் இந்திய அரசு ஏற்கத் தயாராக இல்லை என்பதால் இங்கு ராணுவ சிறப்பதிகாரச் சட்டத்தை வைத்திருக்க வேண்டிய நிலை இந்திய அரசுக்கு உள்ளது. ஆனால் இந்திய அரசு, ஆயுத இயக்கங்கள் ஊடுருவலைத் தடுக்கவே இச்சட்டம் என்கிறது.<br /><br />தற்கொலை குற்றமல்ல<br /><br />அண்மையில் உச்ச நீதிமன்றம் அய். பி. சி. 309, அதாவது தற்கொலைக்கு முயல்வது குற்றமாகாது என்றது. இப்போது சர்மிளாவுக்குக் கொடுக்கப்பட்ட விடுதலை, அய். பி. சி. 309 விலக்கப்பட்ட அடிப்படையில்தான் என எண்ணப்பட்டது.<br /><br />தற்கொலைக்கு முயலும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள சட்ட ஆணையகம், தற்கொலைக்கு முயல்வோரைத் தண்டிப்பது சரியாகாது. அவர்களுக்கு அதிலிருந்து மீண்டும் உளவியல் சார்ந்த சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்றது.<br /><br />சட்ட ஆணையகம் கருத்தின் அடிப்படையில், இங்கு சிகிச்சையானது ராணுவ சிறப்பதிகாரச் சட்டக் கொள்கை மீதே தேவையாக உள்ளது.<br /><br />- மகா.தமிழ்ப் பிரபாகரன்<br /><br />(கட்டுரையாளர் நியூஸ்7 தொலைக்காட்சியில் தமிழ் செய்தியாளராகப் பணியாற்றுபவர். இரோம் ஷர்மிளா குறித்து அத்தொலைக்காட்சியில் சிறப்புப் பதிவினைச் செய்தவர்.)தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-90161526439388757412015-02-04T20:06:56.515+05:302015-02-04T20:06:56.515+05:30அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மில்லியன் டாலர் குட்டு!
...அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மில்லியன் டாலர் குட்டு!<br /><br />ஜனவரி 26 - குடியரசு நாளைக் கொண்டாடும் சாக்கில் பிரதமர் மோடி அவர்கள் தன்னை உலகத் தலைவர்களில் ஒருவராகக் காட்டிக் கொள்ளும் வகையில் ஈடுபட்டுள்ள பல்வேறு திட்டமிட்ட செயல்களில் ஒன்றாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அவர்களையே இவ்வாண்டு முக்கிய விருந்தினராக அழைத்துள்ளார்!<br /><br />இதனால் ஏற்படும் பலன்களும் விளைவுகளும் பொறுத்திருந்து பார்க்கப்பட வேண்டியவையாகும்.<br /><br /> <br /><br />ஏற்கெனவே திரு. மன்மோகன் சிங் அவர்கள் பிரதமராக இருந்தபோது போட்ட அணுசக்தி ஒப்பந்தத்தில், ஒப்புக் கொள்ளப்பட்டாமல் இழுபறியாக இருந்த சில பிரிவுகளும் நம் மக்களுக்குக் கேடு_பாதகம் விளைவிக்கக்கூடிய பிரிவுகளும் சேர்த்து இப்போது பிரதமர் மோடி அரசால் கையொப்பமிடப்பட்டு, முழுக்க அமெரிக்காவின் பக்கமே சாய்ந்துவிட்ட நிலை ஏற்பட்டுள்ளது.<br /><br />அணு உலையினால் ஏற்படும் ஆபத்துகளுக்கு அமெரிக்கா (வெளிநாடு) எவ்விதத்திலும் பொறுப்பேற்காது; நஷ்டஈடு தராது. மாறாக, அணு உலையை ஏற்படுத்தும் நாடே அதற்கு முழுப் பொறுப்பேற்க வேண்டும் என்ற பிரிவை ஒப்புக் கொண்டிருப்பது, நமது முழு சரணாகதியைத்தான் காட்டும். பொதுவாக இதுமாதிரி ஒப்பந்தங்கள் இரு சாராருக்கும் வெற்றி, யாருக்கும் தோல்வி இல்லை என்ற (Win Win Situation) அடிப்படையில் அமைவதே விரும்பத்தக்கது!<br /><br />அமெரிக்க முதலீடு என்பதால் அதிக லாபம் யாருக்கு? உள்நாட்டுத் தொழில்நுட்ப அறிவு (Technical Know) எந்த அளவு வளரும்; பொறுத்திருந்து பார்த்தால் புரியும்.<br /><br />பொதுவாக இவ்வாட்சி ஒரு பக்கம் மதவாதம்; மற்றொரு பக்கம் கார்ப்பரேட் முதலாளிகளின் ஏகபோகப் பண்ணையம் இவற்றின் நிலைக்களனாக உள்ளது என்பன மறுக்க முடியாதவை.<br /><br />அதானிகள், அம்பானிகள், டாட்டா, பிர்லாக்கள் போன்ற கொள்ளை லாபக் குபேரர்கள் கொழுக்கவும், விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரம், நிலங்களைக்கூட அடிமாட்டு விலைக்கு விற்று வயிற்றில் ஈரத் துணியைப் போட்டுக் கொள்ளும் நிலைதான்; உர மானியம் ரத்து, உணவுக்கான சலுகைகள் ரத்து போன்றவை இதன் உண்மை நிறத்தைக் காட்டும்!<br /><br />நமது விருந்தினராக வந்த அமெரிக்க அதிபர் ஒபாமா பேசுகையில், இந்தியாவின் ஆர்.எஸ்.எஸ். மதவெறியைப் பளிச்சென்று சுட்டிக்காட்டிய-தோடு, சரியான எச்சரிக்கையையும் தந்துள்ளார்.<br /><br />இந்தியாவின் வளர்ச்சி எப்போது வளர்ச்சிப் பாதையில் செல்லும் என்றால், அது மதவாதத்தை விட்டுவிட்டு மதத்தின் பெயரால் பிரிவினைவாதச் செயல்களை நடத்தாமல் இருக்கும்பொழுதுதான் இந்த நாட்டின் வளர்ச்சி சிறப்பாக அமையும். அதுவரை நாட்டின் வளர்ச்சி என்பது கேள்விக்-குறியாகத்தான் இருக்கும்.<br /><br />இந்திய அரசியல் சட்டத்தின் (அடிப்படை உரிமை) 25ஆவது பிரிவு அனைத்து மக்களும் சமம் என்று குறிப்பிடுகிறது. அனைவருக்கும் _ தேர்வு செய்வதிலிருந்து, சுதந்திரமாய் பேசுவதற்கும், பின்பற்றுவதற்கும், பரப்புவதற்கும் உரிமை உள்ளது. நமது இரண்டு நாடுகளிலும், அனைத்து நாடுகளிலும் மதச் சுதந்திரத்தைக் காக்கும் பொறுப்பு அரசுக்கு மட்டுமன்றி அனைவருக்கும் உள்ளது.<br /><br />இப்படி பிரதமர் மோடிக்கும், ஆட்சியிலிருக்கும் அவரது கட்சியினருக்கும் பராக் ஒபாமா இந்திய அரசியல் சட்டப் பிரிவு பற்றி பாடம் எடுத்துள்ளார்!<br /><br />ஆர்.எஸ்.எஸ்., சங்பரிவார்கள் முதல் மற்ற மதவாத அடிப்படையாளர்களும் அதிர்ச்சி அடைந்திருப்பார்கள். இது டாலர் தேசத்திலிருந்து வந்த மில்லியன் டாலர் குட்டு!<br /><br />மோதிரக் கையால் குட்டுப்படுவதைவிட டாலர் கையால் குட்டுப்படுவதைப் பெருமையாகக் கருதுவார்களோ? இதைத்தானே நாம் அன்றும் இன்றும் கூறி வருகிறோம்.<br /><br />- கி.வீரமணி, ஆசிரியர்தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-8891611108155448172015-02-04T20:04:37.725+05:302015-02-04T20:04:37.725+05:30உரிமையைப் பெறும் வழி
நாம் நம்முடைய உரிமைகளைப் பெ...உரிமையைப் பெறும் வழி<br /><br /><br />நாம் நம்முடைய உரிமைகளைப் பெறுவது என்றாலே என்ன அர்த்தம் என்றால், நம்முடைய உரிமைகளைப் பறித்து வருகிற எதிரிகளின் ஆதிக்கம் அழிவு என்றுதான் அர்த்தம் ஆகும். அவர்களுடைய அழிவின் மீதுதான் நாம் நம் உரிமைகளைப் பெற முடியும். - (விடுதலை, 30.5.1951)<br /><br />Read more: http://viduthalai.in/page-2/95508.html#ixzz3Qmr1GkpT<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-62808594711881189962015-02-04T20:04:08.571+05:302015-02-04T20:04:08.571+05:30நீதி போதனை வகுப்பா?
உச்சநீதிமன்றத்தில் டில்லியைச்...நீதி போதனை வகுப்பா?<br /><br />உச்சநீதிமன்றத்தில் டில்லியைச் சேர்ந்த வழக்குரைஞர் ஒருவர் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.<br /><br />சமூகத்தில் அறநெறிகள் குறைந்து வருகின்றன. பணம் சம்பாதிப்பது மட்டுமே சமூகத்தின் குறிக்கோளாக மாறி வருகிறது. இதுபோன்ற சமூகச் சீரழிவை மாற்றி அமைக்க வேண்டும். எனவே, பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்புவரை நீதி போதனை வகுப்பைக் கட்டாய மாக்கி, மாணவர்களுக்கு அறநெறிகளைப் போதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை அந்த வழக்குரைஞர் கள், தன் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.<br /><br />இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல்.தத்து, நீதிபதி சிக்ரி ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மத்திய அரசும், மத்திய அரசின் கல்வி வாரியமும் விளக்கம் அளிக்கவேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.<br /><br />இதற்கு முன்பேகூட இந்தக் கருத்து உலா வந்து கொண்டிருக்கிறது. மேலோட்டமாகப் பார்க்கும்பொழுது இது நல்லதுதானே - நல்லொழுக்கத்தை மாணவர்களாக இருக்கும் பருவத்திலிருந்தே பயிர் செய்தால்தானே அவர்களின் எதிர்காலம் ஒழுக்கம் உள்ளதாக, கட்டுப்பாடு உள்ளதாக இருக்கும் என்று சொல்லக்கூடும்.<br /><br />நடைமுறையில் பார்க்கும்பொழுது - அதுவும் பி.ஜே.பி. மத்தியில் ஆட்சியில் இருக்கும் இந்தக் காலகட்டத்தில் - சங் பரிவார்க் கூட்டத்தின் அழுத்தத்தில் ஆட்சி நடை போடும் ஒரு சமயத்தில் நீதி போதனை என்பது இந்து மதப் பிரச்சாரப் புயலாகத்தான் வீசும்.<br /><br />ஏற்கெனவே அரியானாவில் கீதை கட்டாயப் பாடமாக வைக்கப்பட்டு விட்டது; கல்வித் திட்டத்தையே இந்து மயமாக ஆக்க இருப்பதாகவும் அம்மாநில முதலமைச்சர் அறிவித்துள்ளார்.<br /><br />நீதி போதனை என்றாலே இதிகாசக் கதைகள், புராணக் கதைகளைத்தான் மாணவர்களுக்குப் போதிப்பார்கள்; பல ஆண்டுகளுக்குமுன் உயர்நிலைப் பள்ளிகளில் நீதி போதனை வகுப்பு (Moral Instruction) நடைபெற்றுக் கொண்டு தானிருந்தது. அப்பொழுதும் புராண அளப்புகள்தான்; இராமன் கதை, அரிச்சந்திரன் கதை, குரு பக்திக்கு எடுத்துக்காட்டு கட்டை விரலைக் காணிக்கையாக துரோணாச்சாரிக்குக் கொடுத்த ஏகவலைவன் கதை களைத்தான் கதைத்துக் கொண்டிருந்தனர்.<br /><br />குசேலனுக்கு 27 குழந்தைகள் - அவன் கிருஷ்ணன்மீது கொண்ட ஆழமான பக்தியின் காரணமாக கிருஷ்ண பகவான் தங்கத்தையும், பொருளையும் வாரி வழங்கி செல்வந்தனாக ஆக்கினார். ஆகவே, மாணவர்களே, பகவான்மீது பக்தி செலுத்துங்கள் என்று சொல்லுவதனால் மாணவர்கள் சோம்பேறிகளாக ஆவதைத் தவிர வேறு வழியே இல்லை!<br /><br />தந்தை பெரியார்தான் அறிவார்ந்த வினாவை எழுப்பினார்.<br /><br />ஒருவனுக்கு 27 குழந்தைகள் இருந்தால், அவன் வருஷத்துக்கு ஒரு குழந்தையைப் பெற்றிருந்தால், இருபது வயதிலும், அதற்கு மேற்பட்ட வயதும் நிறைந்த குழந்தை கள் எட்டாவது இருக்கும்.<br /><br />இந்தக் குழந்தைகளும் சோம் பேறித் தடியன்போல், ஒரு வேலைக்கும் லாயக்கு இல்லாத மாமிசப் பிண்டங்களாக அல்லவா இருந்திருக்கக் கூடும்! இப்படி இருபது வயதுக்கு மேற்பட்டவர்களை வீட்டிலே வைத்துக்கொண்டு ஒருவன் பிச்சைக்குப் போயிருந்தால், அந்த நாட்டில் மற்றவர்களும் இதுபோல் இருந்திருக்க வேண்டாமா? அப்படி இருந்தால் அந்த நாடு எப்படி உருப்படி ஆகியிருக்கும்? இப்படிப்பட்ட சோம்பேறித் தடியர்களுக்குக் கடவுள் செல்வம் கொடுக்கலாமா? (பொன்னி பொங்கல் மலர், 1948)<br /><br />என்று தந்தை பெரியார் எழுதியுள்ளாரே! இதில் ஒரு வரியை மறுக்க முடியுமா? மதம் காட்டும் மார்க்கம், புராணம் காட்டும் புத்தியுரை இதுதானா?<br /><br />இவற்றையெல்லாம்தானே நீதி போதனை வகுப்பில் சொல்லிக் கொடுத்தார்கள்? இனிமேலும் சொல்லியும் கொடுப்பார்கள்.<br /><br />கொள்கைக்காக நஞ்சுண்டு மறைந்த சாக்ரட்டீசை பற்றியா சொல்லிக் கொடுக்கப் போகிறார்கள்?<br /><br />பக்தி என்பது தனிச் சொத்து, ஒழுக்கம் என்பது பொதுச் சொத்து என்று கூறிய தந்தை பெரியார் அவர்களின் கொள்கையைப் பற்றியா எடுத்துக் கூறுவார்கள்?<br /><br />இப்பொழுதே ஆசிரியர் தினம் என்பதை குரு உத்சவ் என்று சொல்லி வியாசரின் பிறந்த நாளைத்தான் இன்றைய தினம் மத்தியில் ஆட்சியிலிருக்கும் வகையறாக்கள் கொண்டாடுகிறார்கள்.<br /><br />நேருவின் பிறந்த நாளைக் குழந்தைகள் நாளாக ஏற்காமல், சின்ன வயதில் வெண்ணெய்யைத் திருடி, வாலிப வயதில் பெண்ணைத் திருடிய கிருஷ்ணன் பிறந்த நாளை(?) கொண்டாடக் கூடியவர்கள்.<br /><br />இத்தகைய ஓர் ஆட்சியில் நீதி போதனை என்ற வகுப்பு எந்தக் கேவலத்திற்கு - பிற்போக்குத் தனத்திற்கு, மூட நம் பிக்கைக்கு இழுத்துப் போகும் என்பதைச் சிந்திக்க வேண்டாமா?<br /><br />நீதி போதனை வகுப்பில் மதச்சார்பின்மை என்னும் தத்துவத்தின் சீலத்தைச் சொல்லிக் கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியுமா?<br /><br />ராமராஜ்ஜியத்தை உண்டாக்குவோம் - இந்து ராஜ்ஜி யத்தைப் படைப்போம் என்று காட்டுக் கூச்சல் போடுவோர் ஆட்சி அதிகாரத்தில் இருக்கக்கூடிய இந்தக் காலகட்டத் தில் நீதி போதனை வகுப்பு என்பது மாணவர்கள் மத்தியிலேயே மதவாதத்தைத் திணிக்கும் பேராபத்தில் கொண்டு போய் விடும் - எச்சரிக்கை!<br /><br />எச்சரிக்கை!!<br /><br />Read more: http://viduthalai.in/page-2/95509.html#ixzz3QmqsR4HW<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-75125484134499136352015-02-04T20:01:12.601+05:302015-02-04T20:01:12.601+05:30வாய்க் கொழுப்பு நீள்கிறது
முஸ்லீம்கள் நாய்போல் பி...வாய்க் கொழுப்பு நீள்கிறது<br /><br />முஸ்லீம்கள் நாய்போல் பிள்ளைகளை பெற்றுத் தள்ளுகிறார்களாம் பி.ஜே.பி.யைச் சேர்ந்த பிராச்சி சாமியாரிணி பேச்சு<br /><br />புதுடில்லி, பிப்.4_ விசுவ இந்து பரிசத் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் பேசிய பிஜேபி தலைவர் களில் ஒருவரான பிராச்சி சாமியாரிணி லவ் ஜிகாத் செய்பவர்கள் நாய்களைப் போல் 40_50 பிள்ளைக ளைப் பெற்றுத்தள்ளுகி றார்கள். இந்துக்கள் 4 குழந் தைகளைப் பெறக் கூறி னால் சிலருக்கு கோபம் வரு கிறது என்று பேசினார். ஞாயிறன்று இரவு புதுடில்லியில் விசுவ இந்து பரிஷத் ஏற்பாடு செய்திருந்த ஒரு கூட்டத் தில் கலந்து கொண்டு பேசிய பாஜக தலைவர் களுள் ஒருவரான சாமியா ரிணி பிராய்ச்சி என்பவர் பேசும்போது, இந்துக்கள் 4 குழந்தைகளைப் பெற வேண்டும் என்று நாட்டு நலனில் அக்கறை கொண்டு பேசிய நமது மூத்த சாதுக்கள் மற்றும் இந்து நலனுக்கு என்றென்றும் பாடுபடும் அரசியல் தலை வர்கள் கூறினால், தேச நலனுக்கு எதிரான சிலர் இந்தக் கூற்றைத் தவறாக சித்தரித்து மக்களிடையே பொய் பிரச்சாரம் செய் கின்றனர்.<br /><br />இவர்கள் இந்து நலனுக்கு எதிரானவர்கள், இந்து ராஷ்டிரம் அமை வதற்கு முட்டுக்கட்டை போடுபவர்கள். இவர்க ளால் நமக்கு என்றென் றும் தொல்லைதான்.<br /><br />ஆனால் லவ்ஜிகாத் (முஸ்லீம்கள்) செய்பவர் கள் 40 குழந்தைகளை நாய்களைப்போல் பெற்றுத் தள்ளுகின்றனர். இப்படி நாய்களைப் போல் குழந்தைப் பெறு வதை யாரும் கண்டு கொள்ளவில்லை; ஆனால், இந்து ராஷ்டிரத்தின் ஒற்றுமைக்கு 4 குழந்தை களைப் பெறக் கூறினால் அதை எதிர்க்கின்றனர். இனிவரும் காலங்களில் எந்த வித பொய்ப்பிரச் சாரங்களையும் இந்துமக் கள் கவனத்தில் கொள் ளக்கூடாது அவர்களது கடமை 4 நான்கு குழந் தைகளைப் பெறுவது மட் டுமே, இதை தொடர்ந்து செய்துவந்தால் விரைவில் நமது நாடு இந்து நாடாக மாறிவிடும், மேலும் 4 குழந்தைகளுக்குமேல் உள்ள இந்து குடும்பங் களுக்கு பாராட்டும், பணமும் வழங்கப்படும்.<br /><br />இதன்மூலம் அனைத்து இந்துக்களும் 4 குழந்தை களுக்குமேல் பெற்றுக் கொள்ளவேண்டும் என்ற கடமையுணர்ச்சி வரும், இந்தியாவில் உள்ள முக் கிய முஸ்லிம் தலைவர்கள் அனைவரும் தங்கள் தாய் மதமான இந்து மதத் திற்குத் திரும்பவேண்டும் என்று பிராச்சி சாமியா ரிணி தமதுரையில் கூறினார்.<br /><br />Read more: http://viduthalai.in/e-paper/95505.html#ixzz3QmqCso9c<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-12912567683678462172015-02-04T20:00:42.799+05:302015-02-04T20:00:42.799+05:30விடுதலை வாசகர்களுக்கு ஓர் இனிய அறிவிப்பு
நாட்டின...விடுதலை வாசகர்களுக்கு ஓர் இனிய அறிவிப்பு<br /><br />நாட்டின் முக்கிய பிரச்சினைகளை விவாதிக்கும் வகையில், உரத்த சிந்தனையாக ஓர் புதிய பகுதி "கருத்துக்களம்" என்ற பொதுத் தலைப்பில் முக்கிய தலைப்புகளை அறிவிப்போம்.<br /><br />100 - 150 சொற்களுக்கு மிகாமல் சுருங்க எழுதி விளங்க வைக்கும் வகையில், மின் அஞ்சல் மூலம் விடுதலை ஆசிரியருக்கு அனுப்பலாம்.<br /><br />வெளிவரும் சிறப்பான கருத்துகளுக்கு தக்க பரிசுகள்- புத்தகங்களாக அளிக்கப்படும்.<br /><br />திராவிடர் இயக்கத்தால் தமிழும், தமிழரும் வளர்ந்தன ரா? இல்லையா?<br /><br />முதல் களம்<br /><br />இரு கருத்துகளும் வரலாம். (Point - Counter Point வாதம் - எதிர்வாதம்போல் அமையும்)<br /><br />அனுப்பப்படும் கருத்துகள் அத்தனையும் இடம்பெறும் என்று உறுதி அளிக்க இயலாது.<br /><br />ஆனால், மாறுபட்ட கருத்துகளுக்கு இடம் நிச்சயம் உண்டு.<br /><br />- ஆசிரியர், விடுதலை<br /><br /> <br /><br />mail id : viduthalaimalar@gmail.com<br /><br />Read more: http://viduthalai.in/e-paper/95501.html#ixzz3Qmq4hUPn<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-75109681806765822482015-02-03T20:05:48.704+05:302015-02-03T20:05:48.704+05:30எச்சரிக்கை: அய்பாட், ஆண்ட்ராய்ட் பயன்படுத்தும் குழ...எச்சரிக்கை: அய்பாட், ஆண்ட்ராய்ட் பயன்படுத்தும் குழந்தைகளின் மூளைத்திறன் வெகுவாக பாதிக்குமாம்<br /><br />நியூயார்க், பிப். 3- அமெரிக்காவில் அய்பாட், ஆண்ட்ராய்ட் போன், டேப்லெட் போன்ற நவீன தொழில்நுட்ப சாதனங்களை உபயோகிக்கும் குழந்தைகளை வைத்து ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது.<br /><br />பாஸ்டன் பல்கலைக்கழக குழந்தைகள் நல மருத்துவர் குழு நடத்திய இந்த ஆய்வில், குழந்தைப் பருவத்தின் ஆரம்ப கட்டங்களில், வழக்கமான நட்புணர்வு மற்றும் எதேச்சையான விளையாட்டுகளை தவிர்த்து இதுபோன்ற சாதனங்களின் அதீத பயன்பாடானது, பரிதாப உணர்ச்சி, சமூக சிந்தனை மற்றும் சிக்கலை தீர்க்கும் மூளையின் திறன் ஆகியவற்றில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என தெரியவந்துள்ளது.<br /><br />மேலும் அதிக நேரம் தொலைக்காட்சி பார்ப்பதால் குழந்தைகளின் மொழி மற்றும் சமூகத்திறன்கள் பாதிக்கப்படும் என்பதும் இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.<br /><br />Read more: http://viduthalai.in/page-8/95497.html#ixzz3Qh0nNgOI<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-76624952936158766762015-02-03T19:55:20.763+05:302015-02-03T19:55:20.763+05:30அரபு மொழியில் திருக்குறள்
ராமநாதபுரம், பிப். 3_ ...அரபு மொழியில் திருக்குறள்<br /><br />ராமநாதபுரம், பிப். 3_ திருக் குறளை அரபு மொழியில் வெளியிட நடவடிக்கை எடுத்து வருவதாக செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் பதிவாளர் முனைவர் எம். முத்துவேல் தெரிவித்தார். ராமநாதபுரம் சேதுபதி அரசு கலைக் கல்லூரி தமிழ் உயராய்வு மய்யமும், சென்னையில் உள்ள செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனமும் இணைந்து நடத்தும் செவ்விலக்கியக் கலைவடிவங்களும், மாற்றுக் கலை வடிவங்களும் என்பது குறித்த 10 நாள் பயிலரங்கம் கல்லூரியில் திங்கள்கிழமை தொடங்கியது. தொடக்க விழாவுக்கு கல்லூரி முதல்வர் அ.ஜோசப்துரை தலைமை வகித்தார். காரைக்குடி அழகப்பா பல்கலையின் பதிவாளர் வெ. மாணிக்கவாசகம் பயிலரங்கை தொடக்கி வைத்தார். விழாவில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் பதிவாளர் முனைவர் எம். முத்துவேல் பேசியதாவது: 21-ஆம் நூற்றாண்டில் மனிதர்கள் எதிர்கொள்ளும் சவால்களுக்குகூட விடை தரக்கூடிய வகையில் திருக்குறள் அமைந்துள்ளது. திருக்குறளின் 1330 குறட்பாக்களையும் தனித்தனி ராகத்தில் இணையத்தில் பாடலாகக் கேட்கலாம். 1812இல் திருக்குறள் அச்சேறுவதற்கு முன்பாகவே 1730இல் குறள் அய்ரோப்பிய மொழியில் மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது. ஓலைச்சுவடியிலிருக்கும்போதே வேறு மொழிக்கு மொழி பெயர்க்கப்பட்டது திருக்குறள் ஒன்றாகத்தான் இருக்கும். தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி, குஜராத்தி உள்ளிட்ட பல மொழிகளிலும் திருக்குறள் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. விரைவில் அரபு மொழியில் திருக்குறளை வெளியிட செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.<br /><br />இதுவரை 80க்கும் மேற்பட்டோர் ஆங்கிலத்தில் திருக்குறளை மொழி பெயர்த்திருக்கின்றனர்.<br /><br />இவற்றில் சிறந்த 18 மொழி பெயர்ப்புகளை தேர்வு செய்து தொகுத்து அதை நூலாக்கியிருக் கிறோம். கல்லூரிகளில் செம் மொழித் தமிழில் முதுகலை படிப்பு தொடங்கினால் ஒரு மாணவருக்கு மாதம் ரூ.3 ஆயிரம் வழங்குகிறோம். புத்தகங்கள் வாங்க ஆண்டுக்கு ரூ.5 ஆயிரம் நிதியுதவி செய்கிறோம். முனைவர் பட்டம் பெற ஒரு மாணவருக்கு மாதம் ரூ.12 ஆயிரமும், முனைவர் பட்ட மேலாய்வுக்கு ஒரு மாதத்துக்கு ரூ.18 ஆயிரம் வீதம் 5 பேருக்கு நிதியுதவி செய்யப்படுகிறது என்றார் முத்துவேல்.<br /><br />Read more: http://viduthalai.in/page-2/95482.html#ixzz3QgyB2Mqe<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-85829856776328864652015-02-03T19:54:47.504+05:302015-02-03T19:54:47.504+05:30மனிதன்
மனிதன் ஒருபோதும் தனித்து வாழக்கூடியவன் அல...மனிதன்<br /><br /><br />மனிதன் ஒருபோதும் தனித்து வாழக்கூடியவன் அல்ல; அப்படி வாழவும் அவனால் முடியாது; அதனால்தான் கூட்டமாகக் கூடி வாழ்கிறான். சமுதாயத் திற்குத் தேவையான ஒவ்வொரு காரியத் தையும் ஒவ்வொருவன் செய்கிறான்.<br />(விடுதலை, 10.02.1960)தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-8520671337459709442015-02-03T19:52:48.139+05:302015-02-03T19:52:48.139+05:30மாநில மொழிகளைக் காக்க ஒற்றுமையுடன் போராட வேண்டும் ...மாநில மொழிகளைக் காக்க ஒற்றுமையுடன் போராட வேண்டும் கர்நாடக முதல்வர் சித்தராமையா<br /><br /><br />மாநில மொழிகளைக் காக்க அனைவரும் ஒற்று மையாகப் போராட வேண்டும் என்று, கர் நாடக முதல்வர் சித்தர மையா கேட்டுக் கொண் டார்.<br /><br />கர்நாடக மாநிலம், ஹாசன் மாவட்டம், ஷாரவணபெலகோலாவில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய 81-ஆவது கன்னட சாகித்ய மாநாட் டைத் தொடக்கிவைத்து அவர் பேசியது:<br /><br />மத்திய அரசின் மொழிக் கொள்கையால், மாநில மொழிகளைக் காக்க வேண்டிய அவசி யம் ஏற்பட்டுள்ளது. தமது மாநில மொழிகளைக் காக்க பக்கத்து மாநிலங் களைச் சேர்ந்த அனை வரும் ஒற்றுமையாகப் போராட வேண்டும்.<br /><br />கர்நாடகத்தில் கன்னட மொழிக்கு ஆபத்து ஏற்படும்போது அனைவரும் ஒன்றி ணைந்து போராடி வரு கிறோம். கன்னட மொழி யைக் காக்க, வரும் காலங் களிலும் இது தொடர வேண்டும்.<br /><br />ஆங்கில மொழி மோகத் தால் தனியார் பள்ளிகள் கன்னட மொழியைப் புறக்கணித்து வருகின்றன. இதனால், நமது மண் ணிலேயே நமது தாய் மொழி அழியும் சூழ் நிலை ஏற்பட்டுள்ளது.<br /><br />எனவே, நமது மொழியைக் காக்க வேண் டியது நமது அனைவரின் கடமை. இதுகுறித்து அனைத்துக் கட்சித் தலைவர்களை ஒன்றி ணைத்து பிரதமரைச் சந்திக்க முடிவு செய்யப் பட்டுள்ளது. இதுதொடர் பாக அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கடிதம் எழுத முடிவு செய்துள் ளேன்.<br /><br />கன்னட மொழியைக் காக்க வேண்டும் என்ற நோக்கத்தில், ஒன்றாம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை கட்டாயம் கன்னடம் கற்பிக்க வேண் டும் என சட்டத்திருத்தம் செய்யப்பட உள்ளது.<br /><br />ஒன்றாம் வகுப்பு முதல் தாய்மொழியைக் கற்பிக்க தமிழகத்தின் மாதிரியில் சட்டத்தை அமல்படுத்த திட்டமிட்டுச் செயல் பட்டு வருகிறோம். கர் நாடகத்தில் அனைத்து மொழிகளைச் சேர்ந்த வர்களும் வாழ்ந்து வரு கின்றனர்.<br /><br />ஆனால், ஆங்கில மொழி வேறு நாட்டிலி ருந்து இங்குவந்து குடி யேறி உள்ளது. அதனை தாய்மொழியாகக் கொண் டவர்கள் 0.5 சதம்கூட இருக்க மாட்டார்கள். என்றாலும், அனைவரும் ஆங்கில மோகம் கொண் டுள்ளது வேதனை அளிக் கிறது.<br /><br />அனைத்து மாநிலங் களிலும் தங்கள் தாய் மொழியைக் கட்டாய மாக்க வேண்டும் என காங்கிரஸ் அரசு உறுதி யாக உள்ளது. கன்னட சாகித்ய மாநாட்டில் நிறைவேற்றப்படும் தீர்மா னங்களைச் செயல்படுத்த அரசு உதவியாக இருக்கும் என்றார்.<br /><br />நிகழ்ச்சியில், அமைச்சர் ராமலிங்க ரெட்டி, கன் னட சாகித்ய மாநாட்டின் தலைவர் சித்தலிங்கையா உள்ளிட்டோர் உடனிருந் தனர்.<br /><br />Read more: http://viduthalai.in/e-paper/95473.html#ixzz3QgxWnT6Q<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-46097698351787074952015-02-03T19:51:58.381+05:302015-02-03T19:51:58.381+05:30காந்தியின் கொள்ளுப் பேரன் எச்சரிக்கை
இந்தூர், பி...காந்தியின் கொள்ளுப் பேரன் எச்சரிக்கை<br /><br /><br />இந்தூர், பிப்.3-_ மகாத் மாவை சுட்டுக்கொன்ற கோட்சே பெயரை தங்கள் இயக்க வளர்ச்சிக்காக சிலர் பயன்படுத்துவது வேதனைக் குரிய விஷயம் என்று காந்தியின் கொள்ளுப் பேரன் துஷார் காந்தி தெரி வித்துள்ளார். காந்தியைச் சுட்டுக்கொன்ற, நாதுராம் கோட்சே ஒரு தேச பக்தர் என்றும், அவருக்குக் கோவில் கட்டப்படும் என்றும் சில தலைவர்கள் கூறி வருகின்றனர். இது காந்தியின் கொள்ளுப்பேரன் துஷார் காந்திக்கு (வயது 55) மனவேதனையை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து அவர் கூறியதாவது: காந்தியார் அவர் களைச் சுட்டுக் கொன்றவர் கோட்சே என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அவரது பெயரை தங்கள் இயக்க வளர்ச்சிக்காக சிலர் பயன் படுத்துவது வேதனைக்குரிய விஷயம். மகாத்மா அகிம்சை கருத்துகளை கொண்டிருந்தார். ஆனால் மற்றவர்கள் வெறுப்பு மற்றும் பகைமை எண்ணங் களை வளர்த்தனர். கோட்சேயை போற்றுவது, நாட்டின் வன்முறைக்கு வித்திடும் செயலாகும். இவ் வாறு துஷார் காந்தி கூறியுள்ளார்.<br /><br />Read more: http://viduthalai.in/e-paper/95470.html#ixzz3QgxKXDTu<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-84335664505395652282015-02-03T19:51:25.787+05:302015-02-03T19:51:25.787+05:30அண்ணா
நூல் விமர்சனம் என்ற பகுதியில் இவ்வார கல்கி...அண்ணா<br /><br /><br />நூல் விமர்சனம் என்ற பகுதியில் இவ்வார கல்கி இதழில் (8.2.2015 பக்கம் 48) கருத்து ஒன்று கூறப்பட் டுள்ளது.<br /><br />நா. முத்துநிலவன் கட் டுரை ஒன்றில்:<br /><br />கம்பனைப் பற்றிய கட்டுரை ஒன்றில் வடமொழி பக்தி நூல்களை விடவும் தமிழ்நாட்டுப் பக்தி இயக்கங் களும், இலக்கியங்களும் ஜாதி உடைப்புக்கு ஆற்றிய பங்கை ஆய்வு செய்வது அவசியம்... என்று கூறுவதை முக்கியமாகக் கவனிக்க வேண்டும். தீ பரவட்டும் என்று நெருப்பு வைத்து விட்டால் மட்டுமே அழிந்து நீறாகி விடக் கூடியவன் அல்லன் கம்பன் என்பது வரலாறு தெரிந்தவர்களுக்கு மட்டுமே புரியக் கூடிய செய்தி என்று புத்திசாலித் தனமாக ஏதோ சொல்லி விட்டதாக கல்கியில் குறிப் பிடப்பட்டுள்ளது.<br />சொல்லின் செல்வர் இரா.பி. சேதுப்பிள்ளை அவர்களுடனும், பசுமலை நாவலர் சோமசுந்தர பாரதி<br /><br />யாருடனும், முறையே சென் னையிலும், சேலத்திலும் அண்ணா அவர்கள் கம்ப இராமாயணம், பெரிய புரா ணத்தை எதிர்த்து நடத்திய அந்த விவாதப் போரில் கம்ப இராமாயணமும், பெரிய புராணமும் கொளுத்தப்பட வேண்டியவையே என்று அண்ணா அவர்கள் ஆற்றிய உரை தீ பரவட்டும் என்ற நூலாக வெளி வந்துள்ளது. அதைத்தான் முத்துநிலவன் மறைமுகமாக அறிஞர் அண் ணாவைச் சாடியிருக்கிறார். வரலாறு தெரியாதவர்கள் என்றும் ஜாடை பேசுகிறார். கல்கிக்கு இது ஒரு மகிழ்ச்சி யான அம்சம்தானே!<br /><br />அண்ணா அவர்களிடம் விவாதம் நடத்தியவர்களே தங்கள் தோல்வியை ஒரு வகையில் ஒப்புக் கொண்ட நிலையில், காலங் கடந்து கல்கியோ அவர் எடுத்துக் காட்டும் நூலாசிரியரோ கதறிப் பயனில்லை.<br /><br />அண்ணாவுக்கு வரலாறு தெரியுமா தெரியாதா என் பதை அவரின் ஆரிய மாயை நூலைப் படித்து விட்டுப் பேச வேண்டும்.<br /><br />இராமாயணம் என்பது ஆரியர் திராவிடர் போராட் டம் என்று வரலாற்று அறிஞர்கள் கூறியதுதான்! பி.டி. சீனிவாசய்யங்காரோ, விவேகானந்தரோ, திரா விடர் இயக்கத்தைச் சேர்ந் தவர்கள் அல்லர் - வரலாறு தெரியாதவர்களும் அல்லர். இவர்களே ஆரியர் - திரா விடர் போராட்டம் என்று தான் சொல்லுகிறார்கள்.<br /><br />கம்பனாகிய திராவிடன் - தமிழன், நமது இனத்தை இழிவுபடுத்தும் ஒரு நூலைத் தமிழில் எழுதினானே என்ற சினம், சுயமரியாதை உள்ள வர்களுக்கு ஏற்படத்தான் செய்யும்; சுயமரியாதை உணர்வே தேவையில்லை என்று நினைத்தால் அவர் களிடம் விவாதம் செய்வதில் அர்த்தம் இல்லை.<br /><br />வையகம் என்னை இகழுமோ, மாசு வந்து எய்துமோ? என்று கம்பன் தொடக்கத்திலேயே ஏன் எழுதினான்? அதில் ஒரு குற்ற உணர்வு மேலோங்கி நிற்பதற்குக் காரணம் என்ன? இதைப் பற்றியெல்லாம் சிந்திக்காமல் வரலாறு தெரி யாதவர்கள் என்று பொத்தாம் பொதுவில் எழுதுவது எந்த வகையில் புத்திசாலித்தனம்?<br /><br />ஒன்றை எதிர்ப்பதற்குக் காட்டக் கூடிய அடையா ளம்தான் தீ மூட்டுவதாகும்.<br /><br />அந்நிய துணிகள் பகிஷ் காரம் என்று அந்தத் துணி களை எரிக்கவில்லையா? இராமாயணத்தை தந்தை பெரியார் எரித்தது - எரிக்கச் சொன்னது - அதன்மீது எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும் என்ற கோட்பாட் டின் அடிப்படையில்தானே!<br /><br />ஆரிய - திராவிடப் போராட்டத்தில் கல்கி எந்தப் பக்கம் நின்று பேசும் என்று யாருக்குத்தான் தெரியாது!<br /><br />- மயிலாடன்<br /><br />Read more: http://viduthalai.in/e-paper/95464.html#ixzz3QgxBOuLJ<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-78293582874384214672015-02-02T20:29:37.238+05:302015-02-02T20:29:37.238+05:30
இவ்வாறு இறந்ததற்குக் காரணம் அப்பெண், தன்னை தெய்வத...<br />இவ்வாறு இறந்ததற்குக் காரணம் அப்பெண், தன்னை தெய்வத் தன்மை உள்ளவள் என்றும், தான் மனிதனைக் கல்யாணம் பண்ணிக் கொள்ள யோக்கியதை இல்லை என்றும் கூறியதாகவும் கடிதம் எழுதி வைத்திருந்த தாகவும் சொல்லப்படுகிறது.<br /><br />அப்பெண் இறந்ததற்குத் தெய்வத் தன்மை கற்பிக்கப்பட்டவுடன், ஏராளமான ஜனங்கள் கூடி, முனிசிபல் அதிகாரிகளின் உத்தரவுப் பெற்று அப்பிணத்தை ஊர்வல மாகத் தூக்கிச் சென்று அடக்கஞ் செய்தார்களாம். இதன்பின் அப்பிணத்தைப் புதைத்த இடத்தில் கோயில் கட்டுவ தற்காக ஜில்லா முழுதும் பணம் வசூல் பண்ணுகிறார்களாம்.<br /><br />நமது நாட்டு மக்களின் பயித்தியக்காரத்தனத்தைக் காட்டு வதற்கு இதைவிட வேறு என்ன உதாரணம் வேண்டும்?<br /><br />வாங்கினகடனை திருப்பிக் கொடுக்க முடியாத காரணத் தால் மானமுள்ளவர்கள் பலர் தற்கொலை செய்து கொண்டு உயிர் துறந்திருக்கிறார்கள். கௌரவமாக ஜீவனம் பண்ணிய வர்கள், கஷ்டப்பட வேண்டிய சந்தர்ப்பம் நேர்ந்த போது கஷ்டம் பொறுக்கமுடியாமல் தற்கொலை செய்து கொண்டி ருக்கிறார்கள் குடும்பச் சச்சரவு காரணமாகத் தற்கொலை செய்து கொண்டு மடிந்து போனவர்களில் ஆண் களும் உண்டு, பெண்களும் உண்டு.<br /><br />மணமகன் பிடிக்காத காரணத்தால், மணமகள் தற்கொலை செய்து கொண்டு இறப்பதும், மணமகள் பிடிக்காத காரணத்தால் மணமகன் தற் கொலை செய்து கொண்டு சாவதும் உண்டு. இம்மாதிரி இதற்கு முன் நடை பெற்றும் இருக்கின்றது ஆகையால் தற்கொலை செய்து கொண்டு இறப்பதில் தெய்வத்தன்மை கற்பிப்பதும், அதை மக்கள் நம்பி ஏமாறுவதும் மூடத்தனமேயாகும்.<br /><br />மசூலிப்பட்டணத்தில் இறந்து போன மணப்பெண் விஷய மும் வெறும் தற்கொலையே தவிர வேறு ஒன்றும் ஆச்சரிய முள்ளதல்ல வென்றே நாம் சொல்லுவோம். அந்தப் பெண், தனக்குக் குறிப்பிட்டிருந்த மாப்பிள்ளை பிடிக்காத காரணத்தால் இறந்திருக்க வேண்டும்; அல்லது புத்தி தடுமாற்றத்தால் இறந்திருக்க வேண்டும். இதைத் தவிர வேறு எந்த காரணமும் கூற முடியாது.<br /><br />இவ்வாறு உண்மையைச் சிந்தித்து பார்க்கும் அறிவில்லாமல் தெய்வீகத் தன்மையை நம்பி ஒருவர் சென்ற வழியே மற்றவர்களும் ஆட்டு மந்தைப் போலச் செல்வதனால் உண்டாகும் பைத்திய காரத்தனத்தையும், பொருள் நஷ்டத்தையும் யாராவது கவனிக்கின்றார்களா? இந்தமாதிரியே செத்துப் போனவர்கள் சம்பந்தமாக உண்டான மூடநம்பிக் கைகள் காரணமாகத் தான் இன்று நமது நாட்டில் எண்ணற்ற கோயில்கள் பெருகியிருக்கின்றன.<br /><br />கிராமங்களில் உள்ள பல வகைப்பட்ட கோயில்களெல்லாம் செத்துப் போனமனிதர்கள் பேரால் ஏற்பட்டவை என்பதை இன்றும் கிராமங்களில் உள்ள வர்கள் அந்தக் கோயில் சாமி களைப் பற்றிச் சொல்லும் கதை களால் அறியலாம். இப்பொழுது மசூலிப் பட்டினத்தில் நடந்த சம்பவமும் இதற்குத் தகுந்த உதாரணமாகும்.<br /><br />பொது ஜனங் களிடம், இந்த மாதிரியான இயற்கை நிகழ்ச்சிகளை எல்லாம் தெய்வத்தன்மை என்று நம்புகின்ற குணம் இருக்கின்ற வரை யிலுமவர்கள் முன்னேற்ற மடையப் போவதில்லை. ஆகையால் பகுத்தறிவுடைய தோழர்கள் இது போன்ற விஷயங்கள் நேரும் போதெல்லாம் பொது ஜனங்களை எச்சரித்து ஏமாறாமலிருக்கும் படி செய்ய முன் வருமாறு வேண்டுகிறோம்.<br /><br />குடிஅரசு - கட்டுரை - 05.06.1932<br /><br />Read more: http://viduthalai.in/page1/95304.html#ixzz3QbG8gGP7<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-18358524856340352802015-02-02T20:29:31.993+05:302015-02-02T20:29:31.993+05:30தற்கொலை தெய்வீகமா? (தேசியத்துரோகி)
மசூலிப்பட்டிண...தற்கொலை தெய்வீகமா? (தேசியத்துரோகி)<br /><br /><br />மசூலிப்பட்டிணத்தில், ஒரு போலீஸ் சேவகரின் மகளுக்குக் கல்யாணம் நடத்துவதாக ஏற்பாடு செய்யப் பட்டிருந்ததாம். கல்யாணத்திற்கு முதல் நாள் அந்த மணப்பெண், கல்யாண உடைகளை அணிந்து கொண்டு வீட்டின் கொல்லைப் புறத்தில் அடுக்கியிருந்த விறகில் ஏறித் தானே நெருப்பு வைத்துக் கொண்டு இறந்து விட்டாளாம்.<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-80066146283348613742015-02-02T20:28:27.681+05:302015-02-02T20:28:27.681+05:30ஆகையால் நமது இயக்க அன்பர்களும், வாலிபர்களும், பெண்...ஆகையால் நமது இயக்க அன்பர்களும், வாலிபர்களும், பெண்களும் இம்மண விடுதலையைக் கண்டு சுயமரியாதை மணம், கலப்பு மணம், விதவை மணம், விவாக விடுதலை செய்து கொண்டே பெண்ணையோ, ஆணையோ, மணஞ் செய்து கொள்ளுதல் ஆகிய காரியங்களில் ஊக்கம் குன்றாமலிருக்கும்படி கேட்டுக் கொள்ளுகிறோம்.<br /><br />இறுதியாகத் தோழர் பொன்னம்பலனார் அவர்கள் தமக்கும் திருமதி சுலோச்சனா அவர்களுக்குமுள்ள மண ஒப்பந்தத்தை நீக்கிக் கொண்ட செய்தி அவருடைய தோழர்கள் பலருக்கும் சிறிது மனத்துயரை உண்டாக்கக் கூடியதானாலும், அவருடைய உண்மையான வீரத்தன்மையைப் பாராட்டுமாறு செய்யாமலிருக்க முடியாது.<br /><br />மணமக்கள் இருவருள் எப்பொழுது ஒருவர் வாழ்க்கைமுறைக்கு மற்றொருவர் ஒத்து நடக்கவில்லையோ, ஒருவர் குணத்தோடு மற்றொருவர் குணம் வேறு பட்டதாக ஆகிவிடுகின்றதோ, ஒருவர் செய்கையோடு மற்றொருவர் செய்கை முரண்பட்டு விடுகின்றதோ அப்பொழுது அவர்கள் பேருக்காக மட்டும் கணவன் மனனவிகளாக இருந்து வாழ்க்கை நடத்துவதில் என்ன பயனிருக்கிறது? அத்தகைய வாழ்க்கையைக் காட்டிலும் எவர் விரும்பினாலும் அவர் தமது மண ஒப்பந்தத்தை நீக்கிக் கொண்டு மகிழ்ச்சியான வாழ்க்கை நடத்த முற்படுவதில் சிறிதும் தவறோ, நீதியற்ற தன்மையோ இருப்பதாகப் பகுத்தறிவுடைய எவரும் கூறமாட்டார்கள்.<br /><br />ஒரு சமயம் அவ்வையார் என்னும் தமிழ்ப் பெரும்புலவராகிய பெண்மணியார் தனது மனைவியின் குணம் பிடிக்காமல் இல்லற வாழ்க்கையில் துன்பப்பட்டுக் கொண்டிருந்த ஒருவனை நோக்கி பார்த்தாவுக்கேற்ற பதிவிரதையுண்டானால், எத்தாலும் கூடி இருக்கலாம் - சற்றேனும், ஏறு மாறாக இருப்பாளேயாமாயின் கூறாமல் சன்யாசங்கொள் என்று புத்தி கூறியதாக ஒரு பாடலும் வழங்குகின்றது.<br /><br />இப்பாடலை உண்மையாக நம்புகின்ற வைதிகர்களும், பண்டிதர்களும்கூட இந்த மண ஒப்பந்த நீக்கத்தை ஒப்புக் கொள்ளுவார்கள் என்பதில் அய்யமில்லை. அவ்வையார் ஆண்களுக்கு மாத்திரம் இப்பாடலைக் கூறினார்; ஆனால் நமது இயக்கம் பெண்களுக்கும் இத்தகைய உரிமையைத் தாராளமாக வழங்குகின்றது என்ற செய்தியையும் இவ்வமயத்தில் நினைப்பூட்ட விரும்புகின்றோம்.<br /><br />ஆகையால், தோழர் பொன்னம்பலனார் அவர்கள், தைரியமாகத்தனது மனச்சான்று விரும்பியபடி, உலகினர் அறியும் படி தமது மண ஒப்பந்தத்தை நீக்கிக் கொண்ட செயலை மீண்டும் நீதியான செயலென்றே, சந்தேகப்படுகின்றவர்களுக்குத் தெரிவிக்க விரும்புகின்றோம் இது பற்றி நமது எதிரிகள் அவதூறு விளம்பரம் புரிவார்களானால், அதைக்கேட்டு ஏமாறாமலிருக்கு மாறும் எச்சரிக்கை செய்கின்றோம்.<br /><br />குடிஅரசு - கட்டுரை - 24.04.1932<br /><br />Read more: http://viduthalai.in/page1/95302..html#ixzz3QbFukAd8தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-58869265017727214682015-02-02T20:28:22.361+05:302015-02-02T20:28:22.361+05:30பொன்னம்பலனார் சுலோச்சனா
நமது இயக்கத்தின் உண்மை ஊ...பொன்னம்பலனார் சுலோச்சனா<br /><br /><br />நமது இயக்கத்தின் உண்மை ஊழியர்களில் ஒருவராகிய தோழர் பொன்னம்பலனார் அவர்களைப் பற்றி நாம் அறிமுகம் பண்ணி வைக்க வேண்டியது அவசியமற்றதாகும். அவர் தமது வாழ்க்கையை நமது இயக்கத்திற்கே தத்தஞ் செய்தவர் என்பதையும்,<br /><br />நமது இயக்கத்திற்குப் பணி செய்ய முற்பட்டது முதல் அவர் அடைந்த துன்பங்களும், நஷ்டங்களும், ஏமாற்றங் களும் பல என்பதையும் அனேகமாக நமது இயக்க அன்பர்கள் எல்லோரும் அறிவார்கள். என்றாலும் அவருடன் நெருங்கிப் பழகிய தோழர்கள் நன்றாய் அறிவார்கள் என்று கூறுதல் மிகையான கூற்றேயாகும்.<br /><br />இவர் சென்ற சில தினங்களுக்குமுன், அதாவது 08-04-1932 முதல், தமது மனைவியார் திருமதி சுலோச்சனா அவர்களுக்கும் தமக்குமிருந்த மண ஒப்பந்தத்தை நீக்கிக் கொண்டார் என்று கேள்வி யுற்றவுடன் சிறிது சஞ்சலமடைந்தோம்.<br /><br />திருமதி. சுலோச்சனா, தோழர் பொன்னம்பலனார் திருமணம் நிறைவேறி சரியாக இன்னும் ஓராண்டே முடியவில்லை. இதற்குள் மண ஒப்பந்தத்தை நீக்கிக்கொண்டு இருவரும் பிரிந்து விடுவதென்றால், அது கேட்போர்க்கு அதிலும், மண ஒப்பந்தத்தை நீக்கிக் கொண்டதன் உண்மையான காரணத்தை அறியாதவர் களுக்குக் கொஞ்சம் திடுக்கிடக் கூடிய செய்தியாகவே காணப்படும்.<br /><br />நமது இயக்கத்தின் பகுத்தறிவுக்கிசைந்த கொள்கைகளில் கணவன் மனைவி களுக்குள் ஒற்றுமையோடு இருந்து வாழ்வதற்கு முடியாத மனப்பிணக்கு ஏற்பட்டு, அப்பிணக்கு நீங்குவதற்கு வழியில்லாமலிருந்தால் அப்பொழுது கணவனோ அல்லது மனைவியோ யார் விரும்பினாலும் தங்கள் மண ஒப்பந்தத்தை நீக்கிக் கொள்ளலாம் என்பதும் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒரு கொள்கையாகும். ஆகையால் நமது தோழர் செய்தக் காரியம் எந்த வகையிலும் தவறான காரிய மல்ல என்பதே நமது அபிப்பிராயமாகும்.<br /><br />தனது வாழ்க்கை முறைக்குத் திருமதி. சுலோச்சனா அவர்கள் ஒத்துவர முயலாததோடு, குணம், செயல் களில் வேறுபட்ட காரணத்தால் இருவர் மனராசியிலும் (இருவருடைய சம்மதத்தின் பேரிலும்) பல தோழர்கள் முன்பாகவும் தமது மண ஒப்பந்தத்தை நீக்கிக் கொண்டதாகத் தமது புதுவை முரசு பத்திரிகையில் தோழர் பொன்னம்பலனார் வெளியிட்டிருக்கிறார்.<br /><br />தோழர் தமது மணத்தை நீக்கிக் கொண்டதற்குக் காட்டியுள்ள நீதியான காரணத்தின் உண்மை அறிகின்றவர்கள் எவரும் அவர் செய்கையைப் பற்றி ஒன்றும் குறை கூறமுடியாது என்பது திண்ணம். ஆனால் இவ்விஷயத்தை நமது எதிரிகள் ஒரு காரணமாக வைத்துக் கொண்டு நமது இயக்கத்தைப் பற்றியும் சுயமரியாதைக் கலப்பு மணங்களைப் பற்றியும் குறை கூறுவார் களென்பதில் அய்யமில்லை.<br /><br />ஆனால் எதிரிகள் கூறும் குறை களைக் கண்டு இயக்க அபிமானிகள் யாரும் அஞ்சவேண்டிய அவசியமோ, கவலைப்படவேண்டிய அவசியமோ இல்லையென்று தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றோம்.<br /><br />சுயமரியாதை மணமோ, சுயமரியாதைக் கலப்பு மணமோ நடைபெறுவதற்கு முன் மணமகன், மணமகள் இருவரும் ஒவ்வொருவரிடமுள்ள மனப்போக்கை யும், குணங்களையும், பழக்க வழக்கங்களையும் நன்றாக ஆராய்ந்து தங் களுக்குள் ஒற்றுமையும் ஒருவரோடு ஒருவர் மனப்பிணக்கின்றி எப்பொழுதும் சேர்ந்து வாழ முடியும் என்ற நம்பிக்கையும் ஏற்பட்ட பின்னர் மணம் புரிந்து கொள்ளுவதால் எக்காலத்திலும் மண விடுதலை செய்து கொள்ளுவதற்கு இடமிருக்காதென்பதில் அய்யமில்லை.<br /><br />தோழர்கள் பொன்னம்பலனார், சுலோச்சனா மண ஒப்பந்தமும் இவ்வாறு ஆரம்பத்திலேயே கொஞ்சம் நன்றாய் ஆலோசனை செய்தபிறகு நடைபெற்றிருக்குமாயின் இப்பொழுது மண ஒப்பந்தத்தை நீக்கிக் கொள்ளும்படியான நிலைமை ஏற்பட்டிருக்க முடியாது என்பதே நமது உறுதியான எண்ணமாகும்.<br /><br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-46102184186701120782015-02-02T20:27:18.514+05:302015-02-02T20:27:18.514+05:30பகிஷ்கார யோசனை
காங்கிரஸ் காரியக் கமிட்டியில் தற்ப...பகிஷ்கார யோசனை<br /><br />காங்கிரஸ் காரியக் கமிட்டியில் தற்போது செய்தி ருக்கும் பகிஷ்கார யோசனை மிகவும் புத்திசாலித்தன முள்ளதாகவும், வேடிக்கையானதாகவும் இருக்கிறது. ரயில் போஸ்டாபீஸ், தந்தி முதலியவைகளையும் பகிஷ்காரம் செய்ய வேண்டுமாம். ஆனால் எந்த காங்கிரஸ்காரராவது இவைகளை நடைமுறையில் செய்து காட்ட முடியுமா? என்று கேட்கிறோம்.<br /><br />இந்த பகிஷ்கார வியாக்கியானம் வெகு வேடிக்கையானது! ரயிலைப் பகிஷ்காரஞ் செய்வதென்றால் முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு வண்டிகளில் ஏறாமல் மூன்றாவது வகுப்பில்தான் ஏறவேண்டுமாம்! தபால் பகிஷ்காரம் என்றால் கவர் எழுதாமல் கார்டுகளிலேயே எழுத வேண்டுமாம்.<br /><br />தந்தியைப் பகிஷ்கரிப்பது என்றால் கூடுமானவரையில் வார்த்தைகளைச் சுருக்கித் தந்தி கொடுக்க வேண்டுமாம்! இதுதான் இந்த பகிஷ்காரங் களுக்குக் காங்கிரஸ்காரர்கள் செய்யும் அருமையான அர்த்த புஷ்டியுள்ள விருத்தியுரை.<br /><br />இந்த வியாக்கியானம் கூறவும், இந்தப் பகிஷ்காரப் பிரசாரஞ் செய்யவும் வேண்டிய அவசியமே இல்லை. பொருளாதார நெருக்கடியுள்ள தற்காலத்தில் இப்படித்தான் நடந்து தீருகின்றது. ஏழை மக்கள் ரயிலில் முதலாவது, இரண்டாவது வண்டிகளை எப்பொழுதும் திரும்பிப் பார்த்தே இருக்க மாட்டார்கள்.<br /><br />அவர்கள் எழுதும் கடிதங் களும் குறைவு. அதுவும் கார்டு 9 பைசாவும், கவர் 1 அணா 3 பைசாவும் ஆனவுடன் நிச்சயமாகக் கார்டில்தான் எழுது வார்கள். தந்திக்கும் அவர்களுக்கும் வெகுதூரம் ஆகையால் இந்தப் பகிஷ்காரத்தைப் பற்றிப் பிரயோசன மில்லை.<br /><br />உண்மையிலேயே பகிஷ்காரம் பண்ண வேண்டுமானால், வெள்ளைக்கார அரசாங்கத்திற்குச் சொந்த மானதையெல்லாம் நாம் உபயோகிக்கக் கூடாது என்று இருக்க வேண்டுமேயானால், முதலில் நாம் இந்த நாட்டி லேயே இருக்கக் கூடாது. ஏன்? இந்த நாட்டை இப்பொழுது வெள்ளைக்கார அரசாங்கந்தானே ஆண்டு கொண்டிருக்கின்றது? ஆகவே அவர் களுடைய ஆட்சிக்குள் அடங்கிய நாட்டில் இருப்பது பாவம் அல்லவா? ஆகையால் எல்லோரும் சமுத்திரத்தில் குடியேற வேண்டும்;<br /><br />வெள்ளைக் காரர் ஆளும் பூமியைப் பகிஷ்காரம் பண்ண வேண்டும் என்று தீர்மானஞ் செய்வார்களானால் இன்னும் மெச்சத்தக்கதாக இருக்கும் என்று யோசனை கூறுகிறோம்.<br /><br />குடிஅரசு - துணைத்தலையங்கம் - 10.01.1932<br /><br />Read more: http://viduthalai.in/page1/95301.html#ixzz3QbFhSS37<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-25828387491892269982015-02-02T20:25:49.852+05:302015-02-02T20:25:49.852+05:30ஆர்.எஸ்.எஸ். குடும்பத்தைச் சேர்ந்தவர்களும், காவியா...ஆர்.எஸ்.எஸ். குடும்பத்தைச் சேர்ந்தவர்களும், காவியாளர்களும் இதனை வலியுறுத்தியே வருகிறார்கள்.<br /><br />1. இந்தியாவில் இந்துக்களின் எண்ணிக்கை குறைந்து மைனாரிட்டி ஆகி விடுவார்கள். அதை தடுக்க இந்துத் தம்பதிகள் கட்டாயம் 5 குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றார் அசோக் சிங்கால் (23.2.2014 - போபால்)<br /><br />2. இந்துக்கள் 3 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொள்ள வேண்டும். எதிர்காலத்தில் இந்து நாடு உருவா க்க இது முக்கிய கடமையாகும் என்றார் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் (10.10.2014, கொல்கத்தா)<br /><br />3. இந்துக்களின் பலம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டு வருகிறது. ஆகவே இந்துக்கள் குறைந்தது அய்ந்து குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றார் பிரவீன் தொகாடியா (10.11..2014 - உத்ரகாண்ட்)<br /><br />4. உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் லோக்சபா தொகுதி பா.ஜ., எம்.பி., சாக்ஷி சாமியார் மீரட்டில் நடந்த கூட்டம் ஒன்றில் பேசும் போது இந்துப் பெண்கள் அனை வரும் 4 குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் (13.1.2015). 5. இந்து பெண்கள் அனைவரும் தலா 10 குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று உத்தர்காண்ட் சங்கராச்சாரியார் வாசுதேவனாந்த் சரஸ்வதி ஆலோசனை தெரிவித்துள்ளார் (19.1.2015 - அலகாபாத்)<br /><br />நாடு எங்கே செல்கிறது என்பதை பொறுப்பு வாய்ந்த குடிமக்களும் வாக்காளர்களும் எண்ணிப்பார்க்க வேண் டாமா? இதில் இன்னொரு பிரச்சினையும் முக்கியமானது. குழந் தைகளைப் பெற்றுக் கொள்ளுங்கள், பெற்றுக் கொள் ளுங்கள் என்று கூச்சல் போடுகிறார்களே - அவர்களை நோக்கி மிக முக்கியமான கேள்வி ஒன்று இருக்கிறது.<br /><br />குழந்தைகளைப் பெறுவது பெண்கள்தானே! குழந்தை களைப் பெற்றுக் கொண்டே இருப்பதுதான் அவர்கள் வேலையா? அவர்களின் நிலையை எண்ணிப் பார்த் திருந்தால் இப்படி சொல்வார்களா?<br /><br />இந்துத்துவா வாதிகளுக்கும் பெண்ணுரிமைக்கும் என்ன உறவு? பெண்களை அடிமைப் பொருளாக கருது வதுதானே இந்து மதம் - அந்த கண்ணோட்டத்தில் இப்படி யெல்லாம் பேசித் திரிகிறார்கள் என்னும் போது இந்த இந்து மதம்தான் எவ்வளவு மோசமானது என்பதைப் பெண்கள் எண்ண வேண்டும். இந்த வகையில் பார்த்தால் கூட பெண்ணுரிமைக்கு எதிராக இந்த இந்துமதம் ஏன் வளர வேண்டும் என்றுதான் பெண்கள் நினைப்பார்கள் - நினைக்க வேண்டும்.<br /><br />இதில் என்ன வேடிக்கை என்றால் குழந்தைப் பிறப்பு பற்றி சாமியார்கள் பேசுவதுதான். என்ன செய்வது. இந்து மத சாமியார்கள் ஆசிரமத்தை சோதனை செய்தால் அங்கே கர்ப்பத்தடைக் கருவிகள் தான் ஏராளமாக குவிந்து கிடக்கின்றன.<br /><br />கருவில் இருப்பது ஆணா, பெண்ணா என்று துல்லிய மாக கண்டுபிடிக்கக்கூடிய எந்திரங்களும் இருக்கின்றன.<br /><br />அர்த்தமுள்ள இந்துமதத்தை நினைத்தால் குடலே புரட்டிக் கொண்டே வருகிறது - மகா வெட்கக்கேடு! வெட்கக்கேடு!!<br /><br />வளர்க பகுத்தறிவு!!<br /><br />Read more: http://viduthalai.in/page1/95296.html#ixzz3QbFGTnWLதமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-8002354966597037122015-02-02T20:25:43.876+05:302015-02-02T20:25:43.876+05:30மக்கள் தொகைப் பெருக்கம் ஓர் எச்சரிக்கை!
இந்துத்த...மக்கள் தொகைப் பெருக்கம் ஓர் எச்சரிக்கை!<br /><br /><br />இந்துத்துவா வாதிகள் இப்பொழுது புதிய முழக்கம் ஒன்றைக் கொடுத்துக் கொண்டுள்ளனர்.<br /><br />இந்துக்களே! நமது மக்கள் தொகை குறைய ஆரம்பித்து விட்டது. முசுலிம் களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது ஆபத்து! ஆபத்து!! இந்த நிலையில் நீங்கள் என்ன செய்ய வேண்டும்? குழந்தைகளைச் சரமாரியாகப் பெற்றுத் தள்ளுங்கள்! என்பது தான் இவர்கள் முழக்கம். எந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் எண்ணிக்கை கூடினால் என்ன, குறைந்தால் என்ன? இது ஒரு பிரச்சினையா?<br /><br />மதம் வளர்ந்தால் மத வெறியும் சேர்ந்தே வளரப் போகிறது; அதன் விளைவு மோதல்கள் - உயிர்ப் பலிகள் - இவற்றின் காரணமாக சமுதாயத்தில் எல்லா வகையான நல்ல வளர்ச்சிகளும் கெட்டுக் குட்டிச்சுவராகி போகும். அவ் வளவு தானே!<br /><br />அத்தகைய மதத்தின் வளர்ச்சியால் என்ன பயன்?<br /><br />இன்னொரு வகையில் இந்தப் பிரச்சினையை அணுக வேண்டாமா? ஏற்கெனவே 120 கோடி மக்கள் தொகையால் மூச்சுத் திணறி கொண்டு இருக்கிறது இந்திய துணைக் கண்டம். இன்னும் பத்து ஆண்டுகளில் சீனாவையும் புறந்தள்ளி உலகின் மக்கள் தொகை அதிகம் உள்ள நாடாக இந்தியத் துணைக்கண்டம் இருக்கப் போகிறதாம்!<br /><br />உலகநாடுகளின் வளர்ச்சி விகிதத்தில் இந்தியா 72ஆவது இடத்தில் இருக்கிறது. நாள் ஒன்றுக்கு ரூ.20 வருமானம் உள்ளவர்கள் இந்தியாவில் 77 சதம் இருக்கிறார்கள் என்கிறது அரசின் புள்ளி விவரம். மக்களின் அடிப்படைத் தேவைகள், இன்னும் பூர்த்தியாக வில்லை; பள்ளிகளில் கழிவறை வசதிகள் செய்வதில் கூட தன்னிறைவு இல்லை. மனிதன் மலத்தை இன்னொரு மனிதன் சுமக்கும் கேவலம் மற்றோர் புறத்தில்.<br /><br />வேலையில்லாத் திண்டாட்டம் விலா எலும்பை முறிக்கிறது. உணவு உற்பத்தியிலும் பிரச்சினை, விவசாயி கள் தற்கொலை செய்து கொள்ளும் அவலநிலை!<br /><br />இந்தநிலையில் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பது அரசின் கொள்கையும், திட்டமாகவும் இருந்து வருகிறது. ஆனால் ஆட்சியில் இருக்கும் கட்சிக்காரர்களே- அந்த கட்சியின் துணை அமைப்புகளே - ஆட்சியின் கொள்கைக்கு விரோதமாக இந்துக்களே! குழந்தைகளை பெற்றுத்தள்ளுங்கள் என்று கூசாமல் குரல் கொடுப்பது வெட்கக்கேடு அல்லவா. பொறுப்பற்ற தன்மை அல்லவா! திருவாரூரில் செய்தியாளர்களிடம் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் இதனை சுட்டிக் காட்டி கண்டிக்கவும் செய்தாரே!<br /><br />இந்தக் கண்ணோட்டத்தில் மற்ற மற்ற அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் கண்டிக்க வேண்டியது அவர் களின் பொறுப்பான கடமையாகும்.<br /><br />இதில் என்ன கொடுமை என்றால் ஆளும் பிரதமரோ, கேபினட் அமைச்சர்களோ யாரும் இதனைக் கண்டு கொள்வதில்லை. காரணம் அவர்களும் இந்துத்துவாவாதி களாகவும், இந்து மக்களின் எண்ணிக்கை உயர வேண்டும் எனும் எண்ணம் உடையவர்களாகவும் இருப்பதுதான்.<br /><br />ஓசூரில் கடந்த 25ஆம் தேதி நடைபெற்ற விசுவ இந்து பரிஷத் மாநாட்டில் கூட மகாபாரதத்தில் பாண்டவர்கள் போல அய்ந்து குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று தீர்மானமே நிறைவேற்றி உள்ளனரே!<br /><br />ஒரு குடும்பத்தில் ஒரு குழந்தை இருப்பதால் இந்துக்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந்த நிலை நீடித்தால் இந்துமக்கள் சிறுபான்மையின மக்களாக மாறும் அவல நிலை ஏற்படும். எனவே, ஒரு குடும்பத்திற்கு பஞ்ச பாண்டவர்கள் போல அய்ந்து குழந்தைகளை இந்துக்கள் பெற்றுக் கொள்ள வேண்டும். இதனால் முதியோர் இல்லங்கள் குறையும் என்பதுதான் அந்தத் தீர்மானம்.<br /><br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-2278374379068558152015-02-02T20:24:57.956+05:302015-02-02T20:24:57.956+05:30
எளிமை எளிமை என்று பேசி வருப வர்கள் யார்? அமெரிக்க...<br />எளிமை எளிமை என்று பேசி வருப வர்கள் யார்? அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கலந்து கொண்ட குடியரசு நாள் விழாவில் கலந்து கொண்ட இந்தியப் பிரதமர்<br /><br />நரேந்திர மோடி அணிந்திருந்த சட்டையின் மதிப்பு பத்து லட்சம் ரூபாயாம்! இவர்தான் ஏழை இந்தியாவின் பிரதிநிதியா?<br />தனது பெயரை அந்த உடையில் பதித் துள்ளார். மன நோயாளிகள்தான் இவ்வாறு நடந்து கொள்ளவார்கள் என்று கூறினார் திருமா.<br /><br />தோழர் தா. பாண்டியன்<br /><br />இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் தா. பாண்டியன் அவர் கள் உரையில் அனல் பறந்தது. அந்த அனல் வீச்சில் ஒரு சில.<br /><br />60 ஆண்டுகளுக்குமுன் உச்சநீதிமன் றத்தால் கொலைகாரன் என்று குற்றஞ் சாட்டப்பட்டு, தூக்குத் தண்டனை விதிக்கப் பட்ட இந்து மதவெறியன் நாதுராம் கோட்சேக்கு இப்பொழுது சிலை வைக்கப் போகிறார்களாம். இந்தத் தைரியம் வந்தது எப்படி? நம்மை எல்லாம் என்னவாக நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள்?<br /><br />காசியில் மதன்மோகன் மாளவியா இந்துப் பல்கலைக் கழகத்தைத் திறந்தார். இந்து மன்னர்கள் எல்லாம் பணம் கொடுத் தார்கள். அவ்விழாவில் பார்வையாளராக இருந்த காந்தியார் அய்ந்து நிமிடம் பேசுவ தற்கு அனுமதிக்கப்பட்டார். அப்படிப் பேசும் போது நறுக்கென்று ஒன்றைக் குறிப்பிட்டார்.<br /><br />இந்த மேடையில் வீற்றிருக்கும் மன்னர்களின் மகுடங்களில் ஜொலிக்கும் நகைகளை உருக்கி, அதைக் கொண்டு ஏழை எளிய மக்களுக்குப் பாட சாலை களைத் திறந்தால் என்ன என்று கேட்டார் காந்தியார். ஏழெட்டுப் பேர்கள் மேடையில் ஏறிக் காந்தியாரைத் தூக்கிச் சென்று விட்டனர்.<br /><br />முதல் நாள் வரை கடவுள் இருக்கிறார் என்று சொன்ன காந்தியார், இந்த நிகழ்ச் சிக்குப் பின் உண்மைதான் - சத்தியம்தான் கடவுள் என்று சொல்ல ஆரம்பித்து விட்டார் என்ற வரலாற்றுத் தகவலைப் பதிவு செய்தார் தோழர் தா.பா.<br /><br />இன்னும் என்ன நடக்கிறது. கோயிலைக் கட்டியவன் தமிழன் - எல்லாம் கட்டி முடிக்கப்பட்ட பின் நீ வெளியே போ - உள்ளே வராதே என்று சொல்லி விட்டானே பார்ப்பான் நூற்றுக்கு மூன்று பேர் உள்ளே - 97 பேர் வெளியே வா? என்ன நியாயம் இது.<br /><br />இந்த 60 ஆண்டில் இடஒதுக்கீட்டின் காரணமாக எங்கள் மக்கள் படித்தார்கள். சந்திராயன் வரை எங்கள் தமிழர்கள் கண்டு பிடிக்கவில்லையா? எந்தப் பார்ப்பான் கண்டுபிடித்தான்? சொல்லுங்கள் பார்க்கலாம் என்று பளிச் பளிச் சென்று வாள் வீச்சாக அமைந்திருந்தது தோழர் தா.பா.வின் உரை.<br /><br />திராவிடர் கழகம் இதுபோன்ற நிகழ்வு களைச் செய்வது புதிதல்ல; தொடர்ந்து இந்தப் பணியைச் செய்து கொண்டு தானிருக்கிறது என்று குறிப்பிட்டார்.<br /><br />Read more: http://viduthalai.in/page1/95303.html#ixzz3QbEbdaVkதமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.com