tag:blogger.com,1999:blog-1474608369333206681.post3944290357020240558..comments2023-10-29T13:02:52.613+05:30Comments on தமிழ் ஓவியா: கச்சத்தீவு மீட்கப்பட வேண்டும் - கி.வீரமணிதமிழ் ஓவியாhttp://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-87300082541357249032012-08-25T07:49:47.399+05:302012-08-25T07:49:47.399+05:30பெற்றோர் இருக்கும் போது, பிள்ளைகள் காகத்திற்குச் ச...பெற்றோர் இருக்கும் போது, பிள்ளைகள் காகத்திற்குச் சாதம் வைக்கலாமா?<br /><br />தினசரி சாப்பிடும் முன் காகத்திற்கு சாதம் வைப்பதை யார் வேண்டுமானாலும் செய்யலாம். பித்ரு தினங்களில் பெற்றோர் இல்லாதவர்கள் மட்டுமே வைக்க வேண்டும். அமாவாசை, முன்னோர் வழிபாட்டு நாள் போன்றவை பித்ரு தினங்களாகும்.<br /><br />நமது கேள்வி:<br /><br /><br />காகங்கள் என்ன பித்ருக்களின் முகவர் களா? ஏமாந்த குழந்தைகளின் கைகளி லிருந்து காகம் கொத்திச் செல்லுகிறதே. அந்தப் பொருள் கூட பித்ருக்களுக்குத்தான் போய்ச் சேருமாதமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-45405814902242878282012-08-25T07:49:29.988+05:302012-08-25T07:49:29.988+05:30பாவச் செயலுக்குக் கடவுள்தானே பொறுப்பு?
பொறுப்பைத்...பாவச் செயலுக்குக் கடவுள்தானே பொறுப்பு?<br /><br />பொறுப்பைத் தட்டிக் கழிப்பவன்தான் பகவானா?<br />ஆண் வாரிசு இல்லாத என் தந்தைக்கு மகளாகிய நான் திதி கொடுக்கலாமா? <br />நேரடியாக கொடுக்க முடியாது. உங்கள் தந்தை அதாவது சித்தப்பா, அல்லது பெரியப்பா அல்லது அவர்களின் மகன்கள் போன்றவர்கள் மூலம் திதி கொடுக்கலாம். செலவிற்குப் பணத்தை நீங்கள் கொடுத்து விடலாம்.<br /><br />நமது கேள்வி:<br /><br /><br />பெண் ஏன் திதி கொடுக்கக்கூடாது? பெண் மட்டும் ஆண்டவனின் படைப்பு இல்லையா? சிவபெருமான் தலையில் ஒரு பெண்ணையும் (கங்கையையும்) இடுப்பில் ஒரு பெண்ணையும் (பார்வதியையும்) வைத்திருக்கும் போது, சக்தி இல்லையேல் சிவன் ஏது என்று கூட சொல்லிக் கொண்டு பெண்ணை இழிவுபடுத்துவானேன்?<br /><br />புத்தென்னும் நரகத்திலிருந்து தந்தை யைக் காப்பாற்றுபவன்தான் புத்திரனாம். உண்மையைச் சொல்லப்போனால் மகனை விட மகள்தானே தங்கள் பெற்றோர்களைப்; பெரும்பாலும் உபசரிப்பர். இந்த நிலையில் திதி கொடுக்கும் உரிமை மகனுக்கு மட்டும் ஏன்? ஓ, இந்து மதம் என்றால் பெண்ண டிமைத்தனம் தானே!<br /><br />காசு மட்டும் பெண்கள் கொடுக்க வேண்டு மா? ஓ, நாய் விற்ற காசு குறைக்காதே!<br /><br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-39836195041946213912012-08-25T07:48:38.631+05:302012-08-25T07:48:38.631+05:30
தவறு செய்த மனிதனுக்கு அடுத்த பிறவியில் துன்பம் கொ...<br />தவறு செய்த மனிதனுக்கு அடுத்த பிறவியில் துன்பம் கொடுப்பதை விட இந்தப் பிறவியிலேயே அவனைத் திருத்தக் கூடாதா? <br />சென்ற பிறவியில் செய்த பாவ புண்ணிய பலனை அனுபவிப்பதற்கே இந்தப் பிறவியின் ஆயுட்காலம் போதவில்லை. புதிதாகச் சேரும் பாவங்களுக்கும் இறைவன் துன்பத்தைக் கொடுத்தால் மனிதனால் தாங்க முடியாது. இதற்காகத்தான் அவன் திருந்தும் வரை பொறுமையாகத் தண்டிக்க மீண்டும் மீண்டும் பிறக்கச் செய்கிறார். <br />இந்த கருணையைப் புரிந்து கொண்ட வர்கள் தீயவழியில் சென்று பாவத்தைச் சேர்க்க மாட்டார்கள். புரிந்து கொள்ளாதவர்களும் தீயவழியில் சென்று பாவத்தை சேர்க்க மாட்டார்கள். புரிந்து கொள்ளாத வர்களும், புரிந்து அலட்சியப் படுத்துபவர்களும் தீயவழியில் சென்று பாவத்தை சேர்த்துக் கொண்டே இருப்பார்கள். அவர்கள் பக்குவப்படும் வரை பிறவிகளையும் அந்தந்த பிறவிகளில் இன்ப துன்ப அனுபவங்களையும் இறைவன் தந்து கொண் டேயிருப்பார்.<br />ஒரே பிறவியில் மனிதனைத் திருத்து வதற்கு சுவாமியின் கருணை உள்ளம் இடம் தாராது.<br /><br />நமது கேள்வி:<br /><br />இது உண்மையானால் கொலை குற்றப் புகழ் காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் எந்தப் பட்டியலில் அடங்குவார்? புற்று நோயால் அவதிப்பட்டு மாண்ட ரமண ரிஷியின் நிலை என்ன?<br /><br />ஒரு மாத காலம் படுத்த படுக்கையில் கிடந்து படாத பாடுபட்ட சாயிபாபாவும் பாவ ஆத்மாதானா?<br /><br />அவனன்றி ஓர் அணுவும் அசையாது என்று ஒரு பக்கத்தில் சொல்லிக் கொண்டு, பாவம் செய்வதை மட்டும் மனிதன் மீது சுமத்து வானேன்?<br /><br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-80798348435303613982012-08-25T07:47:59.595+05:302012-08-25T07:47:59.595+05:30தினமலர் - ஆன்மீக மலரும்: நமது வினாக் கணையும்
குழந...தினமலர் - ஆன்மீக மலரும்: நமது வினாக் கணையும்<br /><br />குழந்தைகளுக்கு வைக்கும் திருஷ்டிப் பொட்டே அழகாக இருந்தால் திருஷ்டி எப்படி கழியும்? <br />அழகாக இருந்தாலும் திருஷ்டிப் பொட்டு தானே? கருமையால் பொட்டு வைத்து விட்டால் பார்ப்பவர் களுக்கு முதலில் அதுதான் கண்ணில் படும். இதனால், குழந்தைக்கு ஏற்படும் திருஷ்டி கழிந்து விடும். வேண்டுமானால் நீங்கள் திருஷ்டிப் பொட்டை அழகாக வைக்காமல், கோணலாக வையுங்கள்.<br /><br />நமது கேள்வி:<br /><br /><br /><br />இது போன்ற திடீர்ப் பொட்டை பார்ப்பன அய்.ஏ.எஸ். அதிகாரி வீட்டுப் பிள்ளையின் கன்னங்களில் வைக்காதது ஏன்? திடீர்ப் பொட்டில் கலந்திருக்கும் இராசாயனப் பொருள் தோல் வியாதியைத் தானே உண்டாக்குகிறது?<br /><br /> <br />?தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-69455900594896708002012-08-25T07:46:19.773+05:302012-08-25T07:46:19.773+05:30உச்சநீதிமன்றத்தில் சு.சாமி மனு தள்ளுபடி!
புதுடில்...உச்சநீதிமன்றத்தில் சு.சாமி மனு தள்ளுபடி!<br /><br />புதுடில்லி, ஆக.24: 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு வழக்கில் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு உள்ள தொடர்பு பற்றி மத்தியப் புலனாய்வுத் துறை விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட உச்ச நீதிமன்றத்தில் ஜனதா கட்சி சுப்பிரமணிய சாமியும், வழக்குரை ஞர் சாந்திபூஷனும் தாக்கல் செய்த இரு மனுக்கள் இன்று உச்ச நீதிமன்றத்தால் தள்ளு படி செய்யப்பட்டன.<br /><br />2008 இல் ஏ.ராஜா அமைச்சராக இருந்த போது அளிக்கப்பட்ட 2ஜி அலைக்கற்றை உரிமங்கள் அளிக்கப் பட்டதில் அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு எதிராகக் கூறப் படும் குற்றச்சாட்டுகளுக்குப் போதிய ஆதாரங்கள் இல்லை என்று மத்திய புலனாய்வுக் கழகம் தொடக்கம் முதலே கூறி வருகிறது. சிதம் பரம் மற்றும் ராஜாவும் சேர்ந்து சதி செய் தார்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் அளிக் கப்படவில்லை என்று உச்சநீதிமன்றம் கூறி யுள்ளது.<br /><br />இதற்கு முன்னதாக இத்தகைய மனு ஒன்றை சி.பி.அய். தனி நீதிமன்றத்தில் சுப்பிர மணியசாமி தாக்கல் செய்திருந்தார். நீதிபதி ஓ.பி. சைனி தள்ளுபடி செய்தார். இதை எதிர்த்து மேல் முறை யீடு செய்யப்பட்ட போதுதான் உச்சநீதி மன்ற நீதிபதிகள் சிங்வி ராதாகிருஷ்ணன் ஆகி யோர் அடங்கிய அமர்வு மனுவைத் தள்ளுபடி செய்தது.<br /><br />இந்தக் குற்றச் சாட்டுக்காக சிதம்பரம் பதவி விலகவேண்டும் என்று கோரி வந்த பா.ஜ.கட்சிக்கு இது பெருத்த அடியாகும் என்றும், மதிப்பு மிகுந்த நீதி மன்றத்தின் நேரத்தை பா.ஜ.க. வீணாக்கிவிட்டது என் றும் மூத்த அமைச்சர் அம்பிகா சோனி தெரிவித்துள்ளார்.<br /><br />2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு ஊழல் பற்றி விசாரித்து வரும் நாடாளுமன்ற குழு பிரதமரையும், சிதம் பரத்தையும் அழைத்து விசாரிக்க வேண்டும் என்று கோரி பா.ஜ.க. உறுப்பினர்கள் நடப்பு வாரத்தின் தொடக்கத் தில் வெளிநடப்பு செய் தது குறிப்பிடத்தக்கது.<br />முகத்தில் கரிப்பூச்சு<br /><br />வாய்ச்சவடால், பிளாக்மெயில், வீராதி வீரர் சுப்ரமணியசாமி பார்ப்பனருக்கு இன்றைய உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பு அவரது வீராப்பின் முதுகெலும்பை முறித்து முகத்தில் கரி தடவிய தீர்ப்பல்லவா?<br /><br />அவரைத் தூக்கிப் பிடித்த பூணூல் ஊடகங்களே உங்கள் நிலையையும் பார்த்தீர்களா? அந்தோ பரிதாபம்!தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-73597292354201300872012-08-25T07:44:59.230+05:302012-08-25T07:44:59.230+05:30இப்போது நிலக்கரி ஊழல் என்பதும் கூச்சல் மூலம் பாமர ...இப்போது நிலக்கரி ஊழல் என்பதும் கூச்சல் மூலம் பாமர வாக்காளருக்கு இந்த உண்மை தெரியாமலேயே ஆக்கப்படக் கூடும். குற்றம் செய்திருந்தால் - அதனைச் சொல்ல வேண்டிய இடம் நாடாளுமன்றம் தானே?<br /><br />திருமதி சோனியாவின் சரியான கருத்து<br /><br />அய்க்கிய முற்போக்குக் கூட்டணி தலைவர் திருமதி சோனியாகாந்தி அவர்களின் சரியான ஒரு கருத்தை எடுத்து வைத்துள்ளார். காங்கிரஸ் இதுவரை தன்னைக் காப்பாற்றிடும் விளக்கமே (defensive) தந்து வந்துள்ளது; அதை சற்று மாற்றி டீககநளேஎந - எதிர்க்கட்சிகளின் முரண்பட்ட வாதங்களை, புரட்டுகளை, ஊழல்களை அவர்கள் ஆளும் மாநிலங்களும் இதற்குக் காரணமாக உள்ளன என்ற தகவல்களையெல்லாம் எடுத்துத் திருப்பி அடித்துக் கூற முன் வர வேண்டும்.<br /><br />பாபர் மசூதி இடிப்புக் குற்றவாளிகள்<br /><br />அது மட்டுமா? பாபர் மசூதி இடிப்பு கிரிமினல் வழக்கில் குற்றவாளிகளாக உள்ள பா.ஜ.க. தலைவர்கள்மீதுள்ள வழக்கு ஆண்டுகள் 1992 முதல் 2012 வரை 20 ஆண்டுகளாக ஊறுகாய் ஜாடியில் ஊறிக் கிடப்பதா?<br /><br />ஜஸ்டீஸ் லிபரான் கமிஷன் அறிக்கை குப்பைக் கூடையில் போடப்பட்டு எத்தனை ஆண்டுகள்?<br /><br />குஜராத், கருநாடகா மதவெறி ஊழல்கள் பற்றி பேச்சு மூச்சு உண்டா?<br /><br />பா.ஜ.க.வின் முகமூடிகள்!<br /><br />ஊழலை ஒழிக்க பா.ஜ.க.வின் முகமூடிகள் யார் யார் எந்தெந்த சுவாமிகள் என்று சொல்ல வேண்டாமா?<br /><br />அய்க்கிய முற்போக்குக் கூட்டணி முதலில் கூட்டணியின் கட்சிகளுக்குரிய முக்கியத்துவம் கொடுத்து, நடந்திருக்க வேண்டும். எதிர்க்கட்சிகளை திருப்தி செய்ய எவரையும் பலி கொடுக்க முன் வந்ததின் விளைவுதான் - இப்படிப்பட்ட நிலைமைகள்.<br /><br />ஓடுகிறவர்களைக் கண்டால் துரத்துகிறவர்கள் சும்மா இருப்பார்களா?<br /><br />தோழமைக் கட்சிகளிடம் தோழமை வேண்டாமா?<br /><br />நெருக்கடி வரும் நேரத்தில் மட்டும் தோழமையைத் தேடாமல், உறுதியுடன் இருந்து, மதச் சார்பின்மையை, ஜனநாயகத்தைக் காப்பாற்றிட துணிவுடனும், கூட்டணித் தெளிவுடனும் முடிவுகளை மேற்கொள்ள வேண்டும்.<br /><br />அரசியல் சந்தர்ப்பவாதம் (Political Expediency) என்பது பலன் தராது - யாருக்குமே!<br /><br />கொள்கை முடிவுகள் தொலைநோக்குடன் மேற்கொள்ளப்பட வேண்டும். நாடாளுமன்ற விவாதத்தில் எதிர்க்கட்சிகள் ஆதாரங்களைப் பதிவு செய்து அதிர வைக்கட்டுமே!<br /><br />வாக்கெடுப்புக்கு வழி கேட்கட்டுமே! இன்னும் 2 ஆண்டுகள் பொறுத்திருக்காமல் இப்படி ஒரு குறுக்கு சால் ஒரு போதும் பயன்தராது.<br /><br />அது ஜனநாயக முறை ஆகாது. காங்கிரஸ் 2ஜியிலிருந்து மாறி, தனது அணுகுமுறையில் புதிய கோணம் புதிய பார்வையைச் செலவழித்து மக்களிடம் உண்மைகளை விளக்க முன் வர வேண்டும்.<br /><br />கி.வீரமணி<br />தலைவர்,<br />திராவிடர் கழகம்தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-70055156025353506262012-08-25T07:44:43.119+05:302012-08-25T07:44:43.119+05:30எந்த அடிப்படையில் ராஜினாமா கோரிக்கை?
எந்த அடிப்பட...எந்த அடிப்படையில் ராஜினாமா கோரிக்கை?<br /><br />எந்த அடிப்படையில் பிரதமர் ராஜினாமா? நிலக்கரி ஊழல் (Coalgate என்ற ஊடகப் பெயர் வந்துள்ளதே) நிரூபிக்கப்பட்டுவிட்டதா? விவாதம்கூட நாடாளுமன்றத்தில் நடத்த இந்த எதிர்க்கட்சிகள் தயாராக இல்லையே! ஒரு சில கட்சிகள் இப்போதுதான் பா.ஜ.க.வின் சூழ்ச்சி வலையில் விழாமல், நாடாளுமன்றத்தில் விவாதிக்கலாம் என்று முன்வந்து கூறுகின்றன. அய்க்கிய முற்போக்குக் கூட்டணி 2ஜி அலை வரிசையில் தெளிவான ஒரு நிலைப்பாட்டினை மேற்கொள்ளவில்லை; உறுதியோடு இருந்திருந்தால் இந்நிலை அதற்கு வந்திருக்காது.<br /><br />கூச்சல் போட்டுக் குழப்பம் செய்வதா?<br /><br />முதலில் நாடாளுமன்ற பொதுக் கணக்குக்குழு கூட்டத் தயங்கி, காலந்தாழ்த்தி, பிறகு இரண்டு குழு விசாரணையை ஏற்று, பிறகு மத்திய அமைச்சர்கள் ராஜினாமா என்று ஆக்கி, பிறகு வழக்கு சி.பி.அய். மூலம் போட்டு - இவ்வளவும் ஏற்படாத இழப்புக்காக! (ஏற்பட்ட இழப்பாக இருப்பின் ஒரே விதமான தொகை அல்லவா குற்றச்சாட்டுகளில் வந்திருக்கும். அப்படி அல்லவே! ஒவ்வொருவரும் ஒவ்வொரு கட்டத்தில் ஒரு மாதிரி! வழக்கு இருப்பதால் நாம் உள்ளே புக விரும்பவில்லை).<br /><br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-11351345190020108692012-08-25T07:44:17.371+05:302012-08-25T07:44:17.371+05:30இந்திய நாட்டின் நாடாளுமன்றத்தினை கடந்த 3 நாள்களாக ...இந்திய நாட்டின் நாடாளுமன்றத்தினை கடந்த 3 நாள்களாக (இன்று காலை வரைகூட) நடக்க விடாமல் முடக்கும் வகையில், எதிர்க்கட்சிகள் குறிப்பாக முக்கிய எதிர்க்கட்சியான பா.ஜ.க.வும், அதன் தலைவர்களும் நடந்து வருவது, ஜனநாயகத்தின் முகத்தில் கரி பூசுவதாகும்.<br /><br />பிரதமர் உடனடியாக பதவி விலக வேண்டும்; அவர் அதனை அறிவிக்காவிட்டால் நாங்கள் நாடாளுமன்றத்தினை நடத்த அனுமதிக்கவே மாட்டோம் என்று சபையில் சண்டித்தனம் செய்து, நாடாளுமன்ற ஜனநாயகத்தினைக் கேலிக் கூத்தாக்குகின்றனர் எதிர்க்கட்சியினர்!<br /><br />அனுமானமா? உண்மையில் இழப்பா?<br /><br />முன்பு பிரதமர் மன்மோகன்சிங் பொறுப்பில் நிலக்கரி சுரங்கத்துறை இருந்தபோது, நிலக்கரிச் சுரங்க வருவாய் மூலம் ஒரு லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய்களுக்கு மேல் இழப்பு ஏற்பட்டிருக்கிறது என்று சி.ஏ.ஜி. என்ற மத்திய அரசின் தணிக்கை அதிகாரியின் அறிக்கை வெளி வந்துள்ளதை வைத்தே இத்தனை அமளி, துமளி - ஆர்ப்பாட்டங்கள்!<br /><br />நாம் முன் வைக்கும் சில நியாயமான கேள்விகளுக்கு அந்த எதிர்க்கட்சியினரும், அவர்களது ஒலி குழாய்களாக விளங்கும் பத்திரிகை, தொலைக்காட்சி ஊடகத்துறையினரும் பதில் அளிக்க முன்வர வேண்டும்.<br /><br />1. இந்தத் தொகை - அனுமானமா? உண்மையான இழப்பா? (It is only a presumptive loss) கற்பனை ஊகம்தானே!<br /><br />கடந்த காலத்தில் அப்படிச் செய்யாமல் ஏலம் விட்டிருந்தால் இவ்வளவு தொகை கூடுதலாக அரசுக்குக் கிடைத்திருக்கக் கூடும்; இதனைக் கடைப்பிடிக்காமல் விட்டதால் இந்த (யூக) இழப்பு என்றுதான் CAG Report கூறுகிறது.<br /><br />பதவிப் பசியில் பா.ஜ.க.,<br /><br />இப்படி பிரதமருக்கு நெருக்கடி கொடுத்து பதவி இழந்து பசியால் வாடும் பா.ஜ.க., மேலும் 2 ஆண்டுகள் 2014 பொதுத் தேர்தல் வரை காத்திருக்காமல் குறுக்கு வழியில், நாட்டில் ஒரு அவசரத் தேர்தலை மக்கள்மீது திணித்து விட்டால், தங்களுக்கு ஒரு சான்ஸ் - குருட்டுப் பூனை விட்டத்தில் பாய்ந்தது போல கிடைத்து விடாதா என்ற நப்பாசையின் காரணமாகவே இப்படிக் கூச்சல் போடுகின்றனர்!<br /><br />மூலகாரணம் என்ன?<br /><br />இதற்கு மூல காரணம் ஆளும் காங்கிரஸ் கட்சியின் பலவீனமான உண்மையான கூட்டணி நெறியைக் கடைப்பிடிக்காமல், மற்ற தோழமையினரை பலிகடாக்களாக்கி, தாங்கள் தப்பித்தால் போதும், அவர்களைத் திருப்தி செய்ய, அழி வழக்குகளைப் போட்டாவது எதிர்க்கட்சியினர் வாயை மூடினால் போதும் என்று 2ஜி அலைக்கற்றை வழக்கினை இதே போன்ற ஒரு யூக நட்டத்தினை CAG அறிக்கை வைத்து, எதிர்க்கட்சியினர் வாய்க்கு அவலைத் தந்ததின் விளைவுதான் இன்று அக்கட்சி மற்றும் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களை நோக்கி ஏவும் எதிர்க்கட்சியின் ராஜினாமா கோரிக்கை!<br /><br />2ஜி அலைக்கற்றை வழக்கில் உச்சநீதிமன்றத்தில் அது கொள்கை முடிவு (Policy Decision of the cabinet; government) என்று துவக்கத்தில் ஒரு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துவிட்டு, பிறகு தி.மு..க அமைச்சரையும் சம்பந்தா சம்பந்தமின்றி திருமதி கனிமொழியையும் குற்றவாளிகளாக இணைத்து சிறையில் பல மாதங்கள் வைத்தது எவ்வகையிலும் நியாயமா? இழப்பு பூஜியம்தான் என்று தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் கபில்சிபல் போன்றவர்கள் கூறியபிறகும்கூட இது நடந்திருக்கிறது.<br /><br />அதன் பார தூர விளைவுதான் - அதே அனுமான - யூக இழப்பாக அதைவிட பெரிய இழப்பை ஊதிக் காட்டி, உலகத்தார் கண்ணில் ஊடக கொயபெல்ஸ்களின் உதவி மூலம் இப்படி ஒரு திட்டமிட்டே பிரச்சாரத்தைச் செய்து, அப்பதவிக்குள்ள மரியாதையையும் காற்றில் பறக்க விடச் செய்கின்றனர்!<br /><br /><br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-1839290062371727312012-08-25T07:43:47.947+05:302012-08-25T07:43:47.947+05:30பதவியைக் குறுக்கு வழியில் பிடிக்க ஆசைப்பட வேண்டாம்...பதவியைக் குறுக்கு வழியில் பிடிக்க ஆசைப்பட வேண்டாம்! திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி<br /><br /><br /><br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-30523428997408147912012-08-25T07:33:51.316+05:302012-08-25T07:33:51.316+05:30தண்ணீரும் மின்சாரமும்
தமிழ்நாடு மக்களை இரு வேறு ப...தண்ணீரும் மின்சாரமும்<br /><br />தமிழ்நாடு மக்களை இரு வேறு பிரச்சினைகள் வாட்டி வதைத்துக் கொண்டு இருக்கின்றன. ஒன்று மின்சார வெட்டு, ஆட்சிப் பொறுப்புக்கு வந்த அ.இ.அ.தி.மு.க. அரசு, தமிழ்நாட்டின் மின் வெட்டுப் பிரச்சினை 6 மாதங்களில் தீர்த்து வைக்கப்படும் என்று அடித்துச் சொன்னது. 15 மாதங்கள் ஓடிய பிறகும் எந்தவித முன்னேற்றமும் இல்லை. இடையில் கொஞ்சம் மாற்றம் தெரிந்தது. பரவாயில்லை மின்வெட்டுத் தீர்ந்து விடும் என்று நம்பியிருந்த நிலையில் மீண்டும் கடும் பற்றாக்குறை எனும் புயல் வீசத் தொடங்கி விட்டது.<br /><br />பனிரெண்டு மணி நேரம் என்கிற அளவுக்குக்கூட மின்வெட்டு என்றால், அன்றாட வாழ்க்கை பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது என்று பொருள். உற்பத்திப் பாதிப்பு, வேலை வாய்ப்புப் பாதிப்பு இவற்றின் காரணமாக விலைவாசி ஏற்றம் என்று ஒன்றோடு ஒன்று சம்பந்தப்பட்டு இருக்கிறது.<br /><br />இந்த மின்வெட்டை நீக்க உருப்படியான முடிவுகள் ஏதாவது எட்டப்பட்டு இருப்ப தாகவும் தெரியவில்லை. மின்வெட்டினால் விவசாயம் கடும் பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறது. ஜூன் மாதத்தில் திறக்கப்படும் மேட்டூர் அணை திறக்கப்படாத நிலையில், குறுவைச் சாகுபடி நாசமாகப் போய் விட்டது. சம்பா விவசாயமும் கேள்விக்குறியாகிவிட்டது.<br /><br />நிலத்தடி தண்ணீரைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று நினைத்தால் மின் வெட்டின் காரணமாக மோட்டாரைப் பயன் படுத்த முடியாத முட்டுக்கட்டை! உரலுக்கு ஒரு பக்கத்தில் அடி என்றால் மத்தளத்துக்கு இரு பக்கம் அடி என்று சொல்லுவார்களே - அந்த நிலைக்கு நம் நாட்டு விவசாயிகள் ஆளாக்கப்பட்டுள்ளனர்.<br /><br />காவிரி நீரை நம்பி வாழும் டெல்டா மாவட்ட மக்கள் மட்டுமல்ல - முல்லைப் பெரியாறு பிரச்சினையால் தென் மாவட்ட விவசாயிகள் கை பிசைந்து நிற்கின்றனர்.<br /><br />இவற்றிற்கு எல்லாம் என்னதான் பரிகாரம்? விடிவு கிடைக்குமா? விடிவுக்கு ஏதாவது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படு கின்றனவா? அரசு என்ற ஒன்று இயங்குகிறதா? அதிகாரிகள் செயல்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்களா? என்ற வினா சாதாரண மக்கள் மத்தியிலேகூட செங்குத்தாக எழுந்து நிற்கிறது.<br /><br />உணவு உற்பத்தி பாதிக்கப்படும் நிலையில் அடுத்து வரும் காலம் மக்களுக்குக் கடும் சோதனையாக - வேதனையாக - சவாலாக இருக்கப் போகிறது. அதன் விளைவு கடுமை யானதாக இருக்கும்.<br /><br />தொலைநோக்குக் கண்ணோட்டத்தோடு பிரச்சினைகளுக்கு உருப்படியான தீர்வினைக் காண அரசு போர்க்கால அடிப்படையில் செயல்பட வேண்டாமா? யாருக்கோ வந்த விருந்து என்ற தன்மையில் ஏனோ தானோ என்று இருக்கலாமா?<br /><br />எதிர்க்கட்சிகள் வாய் திறந்தால், பேனாவைத் திறந்தால் அவர்கள்மீது வழக்குப் போடுவதை விட்டுவிட்டு, எதிர்க்கட்சிகள் என்றால் குற்றம் கூறத்தான் செய்வார்கள் என்கிற ஜனநாயகப் பண்பை ஏற்றுக் கொண்டு, மக்கள் சந்திக்கும் பற்றாக் குறைகளைச் சரி செய்யும் வேலையில் அரசு கவனம் செலுத்தட்டும்! 24-8-2012தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-20781007290197681582012-08-25T02:08:40.838+05:302012-08-25T02:08:40.838+05:30Veeramani. is another comedian in tamil politics.....Veeramani. is another comedian in tamil politics....Vadivelanhttps://www.blogger.com/profile/17692590132155596971noreply@blogger.com