tag:blogger.com,1999:blog-1474608369333206681.post3668633416181713191..comments2023-10-29T13:02:52.613+05:30Comments on தமிழ் ஓவியா: தொழிலாளர்களின் சிந்தனைக்கு . . . பெரியார்தமிழ் ஓவியாhttp://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comBlogger56125tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-57259059255476523572014-05-09T06:57:07.369+05:302014-05-09T06:57:07.369+05:30பற்களை சோதிப்பதன் மூலம் பிறந்த தேதியை அறியலாம்
செ...பற்களை சோதிப்பதன் மூலம் பிறந்த தேதியை அறியலாம்<br /><br />சென்னை, மே 8- குழந்தை களுக்கு பற்கள் வளருவதை சோதிப்பதன் மூலம் அவர் களது பிறந்த தேதியைக் கண் டறிய முடியும் என ஹாங் காங் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும் குழந்தைகள் சார் மருத்துவ ஆராய்ச்சியா ளருமான மருத்துவர் ஜே. ஜெயராமன் கூறினார்.<br /><br />போரூர் சிறீராமச்சந்திரா பல்கலைக்கழகத்தில் பல் மருத்துவ கருத்தரங்கம் புதன் கிழமை நடைபெற்றது.<br /><br />இந்த நிகழ்ச்சியில் மருத் துவர் ஜே.ஜெயராமன் பேசி யது: பற்கள் வளர்வதைச் சோதிப்பதன் மூலம் ஒரு குழந்தை பிறந்ததை கிட்டத் தட்ட கண்டுபிடிக்கலாம். ஆண் குழந்தைகளின் வயதை 1.5 வாரம் மற்றும் பெண் குழந்தைகளின் வயதை 2.6 வார வித்தியாசத்துக்குள்ளும் துல்லியமாக நிர்ணயிக்க முடி யும்.<br /><br />இந்த வகையான சோத னைகள் இங்கிலாந்தில் பர வலாக பயன்படுத்தப்பட்டு சட்டரீதியாகவும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் இந்தியாவில் அடிப் படைத் தகவல்கள் முறை யாக சேகரிக்கப்பட்டு, அவை சரிபார்க்கப்பட்ட பின்புதான் இதுபோன்ற ஆய்வுகள் நடத் தப்பட வேண்டும் என்றார் ஜெயராமன்.<br /><br />யுனிசெஃப் அமைப்பு கடந்த 2012-ஆம் ஆண்டு வெளியிட்ட தகவலின்படி, இந்தியாவில் 5 வயதுக்குள் பட்ட 41 சதவீத குழந்தை களே பிறக்கும்போது பதிவு செய்யப்படுகின்றன.<br /><br />இது குறித்த விழிப்பு ணர்வை ஏற்படுத்தவும், குழந் தைத் தொழிலாளர் முறை, பாலியல் குற்றங்களிலிருந்து அவர்களைக் காப்பாற்றவும் இது போன்ற கருத்தரங்குகள் நடத்தப்படுகின்றன என சிறீ ராமச்சந்திரா பல்கலைக்கழ கத்தின் குழந்தை சார் பல் மருத்துவத் தலைவர் டாக்டர் எம்.எஸ்.முத்து கூறினார்.<br /><br />Read more: http://viduthalai.in/page-8/79913.html#ixzz31B4Lskyl<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-16479767936312961402014-05-09T06:54:58.043+05:302014-05-09T06:54:58.043+05:30சுறாக்களின் ஆயுட்காலம் 70 ஆண்டுகள்: ஆய்வில் தகவல்
...சுறாக்களின் ஆயுட்காலம் 70 ஆண்டுகள்: ஆய்வில் தகவல்<br /><br />பெரிய வகை வெள்ளை சுறாக்கள் எழுபது வயதுக்கும் மேல் வாழக்கூடியவை என ஆய்வு முடிவு ஒன்றில் தெரிய வந்துள்ளது.<br /><br />கதிரியக்கத் தன்மை கொண்ட கார்பனைக் கொண்டு சுறாக்களின் வயதை ஆய்வு செய்ததில் இவ்வகை ஆண் சுறாக்கள் 70வயதுக்கு மேலும், பெண் சுறாக்கள் 40 வயது வரையிலும் வாழக்கூடியவை எனக் கண்டறியப் பட்டுள்ளது.<br /><br />Read more: http://viduthalai.in/page-7/79908.html#ixzz31B3nDuko<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-70819909472198805272014-05-09T06:54:53.998+05:302014-05-09T06:54:53.998+05:30சென்னை, கொழும்பு புதையுறும் நகரங்களா?
நிலத்தடி நீ...சென்னை, கொழும்பு புதையுறும் நகரங்களா?<br /><br />நிலத்தடி நீர் வகைதொகையின்றி உறிஞ்சப்படுவதால் கடலோர நகரங்களின் பூமிமட்டம் வேகமாக உள்ளிறங்குவதாக நிலவியல் விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள். சென்னை, கொழும்பு போன்ற கடலோர நகரங்கள் இதனால் கூடுதலாக பாதிக்கப் படுவதாக அவர்கள் கூறுகிறார்கள்.<br /><br />ஏற்கெனவே, சுற்றுச்சூழலில் ஏற்பட்டுவரும் கடுமை யான பாதிப்புக்கள் காரணமாக புவியானது வேகமாக வெப்பமடைந்து வருகிறது. இதன் விளைவாக கடலின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்துவருவதால் சென்னை, கொழும்பு போன்ற கடலோர நகரங்களின் கடற்கரையோர பகுதிகள் படிப்படியாக கடலில் மூழ்கும் ஆபத்து அதி கரிக்கும் என்று விஞ்ஞானிகள் ஏற்கெனவே எச்சரிக்கை விடுத்திருக்கிறாரகள்.<br /><br />இத்தகைய எச்சரிக்கைகளுக்கு மத்தியில், இது போன்ற பெரு நகரங்களில் நிலத்தடி நீரை வேக வேகமாக உறிஞ்சி எடுப்பதால் இந்த நகரங்களின் நிலமே கூட படிப்படியாக உள்ளிறங்கி வருவதாக விஞ் ஞானிகள் தற்போது கண்டறிந்து எச்சரித்திருக்கிறார்கள்.<br /><br />அதாவது, உலகின் சில பகுதிகளில் கடல்நீர் மட்டம் அதிகரிப்பதைவிட, நிலம் உள்ளிறங்குவது என்பது மோசமான பிரச்சினையாக மாறிவருவதாக, அய்ரோப்பிய ஒன்றியத்தின் நிலவியல் விஞ்ஞான ஒன்றிய அவையின் கூட்டத்தில் பேசிய விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கிறார்கள்.<br /><br />சில கடலோர நகரங்களில் கடலின் நீர்மட்டம் அதிகரிக்கும் வேகத் தைவிட, நிலப்பகுதியானது பத்து மடங்கு அதிக வேகமாக உள்ளிறங்கிக்கொண்டிருப்பதாக இந்த விஞ் ஞானிகள் எச்சரித்திருக்கிறார்கள்.<br /><br />Read more: http://viduthalai.in/page-7/79908.html#ixzz31B3gTMEx<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-62187598671581404372014-05-09T06:54:05.814+05:302014-05-09T06:54:05.814+05:30
பெரிய விலங்குகள் குறைவதால் மனிதர்களிடையே நோய்கள்
...<br />பெரிய விலங்குகள் குறைவதால் மனிதர்களிடையே நோய்கள்<br /><br /><br />விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு தொற்று நோய்கள் வருவதென்பது உலகெங்கிலுமே அதிகரித்து வருகிறது.<br /><br />யானைகள், ஒட்டகச் சிவிங்கிகள் போன்ற பெரிய விலங்கினங்களின் எண்ணிக்கை குறைவதால் உயிரினக் கட்டமைப்பில் ஏற்படும் மாற்றங்கள் இந்த போக்குக்கு காரணமாக இருக்கலாம் என புதிய ஆய்வு ஒன்று குறிப்புணர்த்துகிறது.<br /><br />கென்யாவில் வேலி போட்டு பெரிய விலங்குகள் வருவது தடுக்கப்பட்டுள்ள வனப்பகுதிகளுக்கு சென்று ஸ்மித்ஸோனியன் மய்யத்தின் ஆராய்ச்சியாளர் குழு ஒன்று ஆராய்ந்தபோது, அங்கே பெரிய விலங்குகள் இல்லாத இடங்களில், எலிகள், ஈக்கள் போன்ற நோய்ப் பரப்பும் உயிரினங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கண்டறிந்துள்ளனர்.<br /><br />பெரிய வனவிலங்குகள் இல்லாதிருப்பதற்கும், பார்டொ னெல்லா போன்ற தொற்று நோய்க்கிருமிகள் பரவுவதற்கு காரணமான காட்டு எலிகளின் எண்ணிக்கை பெருக்கத் துக்கும் இடையே தொடர்பு இருப்பதாக தற்போது நடத்தப்பட்டுள்ள ஆய்வு காட்டுகிறது.<br /><br />பார்டொனெல்லா ஈக்களின் மூலமாக மனிதர்களிடத்தே பரவும்போது, உடலுறுப்பு செயலிழப்பு, ஞாபக சக்தி இழப்பு ஏன் உயிரிழப்பே கூட ஏற்படுகிறது.<br /><br />பெரிய விலங்குகளால் சுற்றாடலில் பெரிய தாக்கம் இருக்கும் என்பதால்தான் அவை இல்லாதபோது எலி களும் ஈக்களும் பெருகிவிடுகின்றன என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.<br /><br />அவ்விலங்குகள் பெருமளவான செடிகொடிகளை உண்கின்றன, பூமியில் தமது பெரும் பாதங்களை பதித்து நடக்கின்றன. இவற்றால் நிறைய பூச்சிகள் அழிவதுண்டு.<br /><br />ஆனால் பெரிய விலங்குகள் இல்லாமல்போனால், அது நோய்ப்பரப்பும் எலிகள் மற்றும் பூச்சிகளின் பெருக் கத்துக்கு வசதியாகப் போய்விடுகிறது.<br /><br />வன விலங்குகளைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைப்பதாக இந்த ஆய்வின் முடிவு அமைந்துள்ளது என ஸ்மித் ஸோனியன் ஆய்வறிக்கையை உருவாக்கிய குழுவின் தலைவரான டாக்டர் ஹில்லரி யங் கூறினார்.<br /><br />Read more: http://viduthalai.in/page-7/79908.html#ixzz31B3YnoG4<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-6917422358703105392014-05-09T06:53:29.877+05:302014-05-09T06:53:29.877+05:30நார்ச்சத்து மிகுந்த உணவு மாரடைப்பை தடுக்கும் - ஆய்...நார்ச்சத்து மிகுந்த உணவு மாரடைப்பை தடுக்கும் - ஆய்வு<br /><br />மாரடைப்பிலிருந்து மீண்டு வந்தவர்கள் அதிக நார்ச்சத்து மிகுந்த உணவுகளை உட்கொண்டால் அவர்கள் நீண்ட காலம் வாழலாம் என்று அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.<br /><br />மாரடைப்பிலிருந்து மீண்டு வந்த நான்காயிரத்திற்கும் அதிகமான மக்களிடம் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் பொதுச் சுகாதார பிரிவு ஆய்வு நடத்தியது.<br /><br />அதில் மாரடைப்பிலிருந்து மீண்டு வந்தவர்கள் அதிக நார்ச்சத்து மிகுந்த உணவுகளை உடகொண்டால் அவர்கள் நோயால் பாதிக்கப்பட்டு 9 ஆண்டுகளுக்கு பிறகும் ஆரோக்கிய மாக உயிர் வாழ்கிறார்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது.<br /><br />Read more: http://viduthalai.in/page-7/79907.html#ixzz31B3Qz9Mp<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-51112587409835522452014-05-09T06:52:42.259+05:302014-05-09T06:52:42.259+05:30
நல்ல நினைவுகள் விரைவாக மங்குவதில்லை
நாம் வாழ்க்...<br />நல்ல நினைவுகள் விரைவாக மங்குவதில்லை<br /><br /><br />நாம் வாழ்க்கையில் சில விஷயங்களை நீண்ட நாட்களுக்கு நினைவு கொள்கிறோம். அதே நேரம் சிலவற்றை குறுகிய காலத்தில் மறந்து விடுகிறோம்.<br /><br />இது எப்படி நடைபெறுகிறது என்பதை விஞ்ஞானிகள் இப்போது கண்டறிந்துள்ளார்கள்.<br /><br />மனித குலத்தை மகிழ்ச்சியாக வைத்திருக்கவும், எதையும் தாங்கும் வல்லமை கொண்டவர்களாக மனிதர் கள் வாழ்வதற்காகவும் நல்ல நினைவுகள் நீண்டகாலம் நீடித்திருக்கின்றன என்று உளவியல் அறிஞர்கள் கண்டுபிடித்துள்ளனர்.<br /><br />தீய நினைவுகளை விட்டொழித்து நல்ல நினைவுகளை தக்க வைத்துக் கொள்வது, வாழ்க்கையில் கசப்பான உணர்வுகள் மற்றும் நிலைமைகளை சமாளித்து சாதகமான அம்சங்களை முன்னெடுக்க உதவுகிறது என்று உளவியல் வல்லுநர்கள் கூறுகிறார்கள்.<br /><br />தீய நினைவுகள் விரைவாக மங்குகின்றன எனும் ஒரு கோட்பாடு 80 ஆண்டுகளுக்கு முன்னர் முதல் முறையாக முன்வைக்கப்பட்டது.<br /><br />பின்னர் 1970 ஆம் ஆண்டுகள் தொடக்கம் இதுகுறித்து பல்லின மக்களிடம் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக சுற்றுலாப் பயணம் தொடர்பான நினைவுகள் குறித்து ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. அதில் தாங்கள் அதில் கழித்த உல்லாசமான நாள்கள், சந்தித்த மக்கள் ஆகியவை குறித்து உடனடியாக நினைவு கூர்ந்தனர்.<br /><br />அதே நேரம் தாமதமான விமானப் பயணம் போன்றவற்றை அவர்கள் நினைவு கூரவில்லை.<br /><br />இதையடுத்து இந்த ஆய்வுக் கட்டுரையை எழுதியுள்ள உளவியல் விஞ்ஞானிகள், மனிதர்களிடையே விரும்பத் தகாத நினைவுகள் மற்றும் கசப்புணர்வுகள் வேகமாக மங்கி வருகின்றன என்று தெரிவித்துள்ளனர்.<br /><br />ஆகவே இயற்கையாகவே தீய நினைவுகள் விரைவாக மங்கத் தொடங்குகின்றன என்பது நாடுகளையும் கலாச்சாரங்களையும் கடந்த ஒன்றாக உள்ளது என்று ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன என்று விஞ்ஞானிகள் தமது கட்டுரையில் தெரிவித்துள்ளனர்.<br /><br />Read more: http://viduthalai.in/page-7/79907.html#ixzz31B3CkGXu<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-53873406660744595832014-05-09T06:46:52.527+05:302014-05-09T06:46:52.527+05:30
நிரந்தர விரோதி
நாட்டின் முன்னேற்றத்திற்கு மக்கள...<br />நிரந்தர விரோதி<br /><br /><br />நாட்டின் முன்னேற்றத்திற்கு மக்கள் ஒழுக்கமே முக்கியமானது. ஆனால், நமது நாட்டில் மதமும், மூடநம்பிக்கை யும் ஒழுக்கத்திற்கு நிரந்தர விரோதியாய் இருக்கின்றன.<br />(குடிஅரசு, 13.4.1930)<br /><br />Read more: http://viduthalai.in/page-2/79895.html#ixzz31B1kDrvJ<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-59366273115742330002014-05-09T06:46:27.280+05:302014-05-09T06:46:27.280+05:30
தமிழ்நாட்டின் ஒரு நாள் நிலவரம்
ஏடுகளைப் படித்த...<br />தமிழ்நாட்டின் ஒரு நாள் நிலவரம்<br /> <br /><br />ஏடுகளைப் படித்தால் எங்குப் பார்த்தாலும் கொலை, கொள்ளை, திருட்டு மோசடி முதலிய செய்திகள்தான் முக்கிய இடம் பெறுகின்றன.<br /><br />எடுத்துக்காட்டாக மே 7ஆம் தேதி ஒரு நாளில் மட்டும் ஏடுகளில் வெளிவந்த செய்திகள் வருமாறு:<br /><br />1) சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், மீனம்பாக்கம் விமான நிலையம், கோடம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை ஆகிய மூன்று இடங்களில் ஒரே நேரத்தில் வெடிகுண்டு மிரட்டல்கள்.<br /><br />2) பெல் தொழிற்சாலையில் செல்போன் குண்டு வெடிப்பு.<br /><br />3) சென்னையில் வாக்கு எண்ணும் மய்யத்தில் போதையில் இருந்த 3 காவல்துறையினர் இடை நீக்கம்!<br /><br />4) காகித ஆலையில் பணி பெற்றுத் தருவதாக ரூ.37.88 லட்சம் மோசடி.<br /><br />5) தாய், மகள், கொலை செய்யப்பட்ட வழக்கில் மூன்று பேர் கைது (புதுக்கோட்டை - திருமயம் - வி. லட்சுமிபுரம்)<br /><br />6) அறந்தாங்கி எல்.என். புரத்தில் இரு வீடுகளில் திருட்டு.<br /><br />7) மயிலாடுதுறை லாகடம் காசி விசுவநாதர் கோயிலில் உண்டியல் உடைக்கப்பட்டு, காணிக்கைகள் திருட்டு.<br /><br />8) தஞ்சாவூர் அருகே நல்லிச்சேரி கிராமத்தில் 4 வயது சிறுமி பாலியல் வன்முறை.<br /><br />9) சேலம் மத்திய சிறையில் வார்டன்களுக்குக் கைதி மது விருந்து.<br /><br />10) திருச்சிராப்பள்ளியில் நடைப்பயிற்சி சென்ற வழக்குரைஞர் மதியழகன் வெட்டிக் கொலை.<br /><br />11) பழனி அருகே ஏழு பேர் கொண்ட முகமூடிக் கும்பல் நிதி நிறுவன அதிபர், அவரது மனைவியைக் கத்தியைக் காட்டி, மிரட்டி, இரு நூறு பவுன் நகைகள் ரூ.35,000 ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டன.<br /><br />12) செம்பனார் கோயில் அருகே பெண்ணைத் தற்கொலைக்குத் தூண்டிய இருவர்மீது வழக்கு.<br /><br />13) சிறீரங்கம் தேரோட்டத்தின்போது நகை திருடிய பெண் கைது.<br /><br />14) பெண்ணைக் காதலிக்க வற்புறுத்தி மிரட்டிய கால்நடை உதவி மருத்துவர் கைது (குடவாசல்).<br /><br />இவை எல்லாம் ஒரே நாளில் தமிழ்நாட்டில் நடைபெற்ற நிகழ்வுகள்.<br /><br />ஒரு நாளில் இந்தளவு சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்ட நிகழ்வுகள் ஆண்டு ஒன்றுக்கு எத்தனை? அஇஅதிமுக ஆட்சிக்கு வந்த கடந்தமூன்று ஆண்டுகளில் எத்தனை இலட்சம் சம்பவங்கள் என்பதை நினைத்துப் பார்க்கவே அச்சமாக உள்ளது.<br /><br />ஆனால், முதல் அமைச்சர் துணிந்து தவறான தகவல்களை வீதிகளில் நடைபெறும் பொதுக் கூட்ட மேடைகளில் மட்டுமல்ல; சட்டப் பேரவையில் கூட சொல்லுகிறார் என்றால் என்ன சொல்ல?<br /><br />தாம் ஆட்சிக்கு வந்தவுடன் தமிழ்நாட்டில் உள்ள பிக்பாக்கெட்காரர்கள் எல்லாம் ஆந்திராவுக்கு ஓடி விட்டனர் என்று சொன்னவர்தான் தமிழ்நாடு முதல் அமைச்சர். இப்படியெல்லாம் ஒரு முதல் அமைச்சரால் மனதறிந்து உண்மைக்கு மாறாக எப்படி சொல்ல முடிகிறதுஎன்பதுதான் ஆச்சரியமானது.<br /><br />தமிழ்நாட்டில் உள்ள ஏடுகளும், ஊடகங்களும்கூட பெரும் அளவு மறைத்து விடுவதுண்டு. அவற்றையும் மீறி வெளிவந்த தகவல்கள்தான் மேலே எடுத்துக்காட்டப்பட்டுள்ளவை.<br /><br />திமுக பொருளாளர் - தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள்கூட சுட்டிக் காட்டியுள்ளார் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற முதல் அமைச்சர் போதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியிருக்கிறார்.<br /><br />வெறும் அரசியல் உணர்வோடு இவற்றையெல்லாம் மறுக்காமல், ஆரோக்கியமான முறையில் சிந்தித்து சட்டம் ஒழுங்கை நிலை நிறுத்த ஒல்லும் வகையில் உரிய முறையில் தக்க நடவடிக்கைகளை மேற் கொள்வதுதான் மக்கள் நல அரசு என்பதற்கான அடையாளமாக இருக்க முடியும்.<br /><br />கடந்த ஆட்சியில் நடக்கவில்லையா என்றெல்லாம் பதில் சொல்ல ஆரம்பிப்பது சமாதானமாக ஆகி விட முடியாது.<br /><br />காவிரியில் தண்ணீர் வராததால் விவசாயம் பாதிக்கப்பட்டது என்பது போன்ற காரணங்களை இந்தப் பிரச்சினையில் கூறிட முடியாது.<br /><br />அது வேறு பிரச்சினை; இது வேறு பிரச்சினை. காவல் துறையை, தன் பொறுப்பில் வைத்திருக்கிற முதல் அமைச்சருக்கு இதில் கூடுதல் பொறுப்பும், கடமையும் உள்ளது.<br /><br />பெண்கள் சாலைகளில் நடமாட முடியவில்லை; வீட்டு வாசலில் கோலம் போடும் பெண்களின் சங்கிலிகள் அறுத்து எடுக்கப்படுகின்றன. பட்டப் பகலிலேயே கொலைகள்; மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இடங்களில்கூட வீடு புகுந்து கழுத்தை அறுத்துக் கொலை என்பதெல்லாம் எந்தவகையில் நியாயப்படுத்தப்படக் கூடியவை?<br /><br />மக்கள் உயிர் வாழப் பாதுகாப்பு இல்லையென்றால் அதைவிட அவலம் வேறு எதுவாக இருக்க முடியும்?<br /><br />மற்றவர்கள்மீது குற்றச்சாற்றுகளைப் படித்துக் கொண்டே காலத்தை ஓட்டி விடலாம் என்று நினைத்தால், அதில் ஏமாற்றம்தான் மிஞ்சும்!<br /><br />Read more: http://viduthalai.in/page-2/79897.html#ixzz31B1c7Jmc<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-27279146767669508052014-05-09T06:44:40.756+05:302014-05-09T06:44:40.756+05:30
பிரிவு 370அய் விலக்குவது: காஷ்மீருக்கும் - இந்திய...<br />பிரிவு 370அய் விலக்குவது: காஷ்மீருக்கும் - இந்தியாவுக்கும் இடையே உள்ள பாலத்தை எரிப்பதாகும்<br /><br /><br />பிரிவு 370அய் விலக்குவது:<br />காஷ்மீருக்கும் - இந்தியாவுக்கும் இடையே உள்ள பாலத்தை எரிப்பதாகும்<br /><br />காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லாஹ் கொந்தளிப்பு<br /><br />சிறீநகர்.மே8- ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லாஹ் செய்தியா ளர்களுக்கு அளித்த பேட் டியில் 370ஆவது பிரிவுக் குரிய முக்கியத்துவம் குறித்து விரிவாக குறிப் பிட்டுள்ளார். இது குறித்து விவாதிப்பதற்கு சட்ட நிபுணர்களாக ஈடுபட்டு ஜனநாயகத்தைப் புறக்க ணிப்பதன்மூலம் மாநில மக்களை புண்படுத்திவிட் டார்கள் என்று கூறினார்.<br /><br />செய்தியாளரின் பேட் டியில் காஷ்மீர் முதல்வர் பிரிவு 370அய் விலக்குவது என்பது காஷ்மீருக்கும் இந்தியாவுக்கும் இடையே உள்ள பாலத்தை எரிப்பது என்று பொருளாகும் என்று கூறியுள்ளார்.<br /><br />கேள்வி: பாஜக மோடி யின் அண்மைக்காலப் பேச்சால், இது உங்கள் தொகுதியில் அரசியல் விளம்பரத்துக்காகப் பேசியதால், நீங்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாக்கப் பட்டுள்ளீர்கள். இந்த மாநில மக்களுக்கு அறிமுக மில்லாதவருடன் நீங்கள் போராடவேண்டி உள்ளதே?<br /><br />உமர் பதில்: ஆம். மோடியின் போக்கு, தேர் தல் வாக்குறுதிகள் ஆகிய வைமூலம் நாட்டில் ஜம்மு, காஷ்மீர் மாநிலத்தில் அமைதியைக்குலைக்கும் முடிவில் உள்ளார். ஆனால், அதில் மோடியால் என்ன செய்ய முடியும்? அரசிய லமைப்பிலிருந்து 370ஆவது பிரிவை நீக்குவதாகக் கூறி உள்ளார். இதன்மூலம், ஜம்மு காஷ்மீருக்கும், இந்திய யூனியனுக்கும் இடையே உள்ள அரசியலமைப்பு பாலம் அழிக்கப்பட்டு விடும். இந்திய யூனியனிலி ருந்து அடிப்படையி லேயே ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கட்ட மைப்பை புதைகுழிக்குள் தள்ளுவதுதான் இதன் பொருளாக உள்ளது.<br /><br />இரண் டாவதாக, அவர் கட்சி அதிகாரத்துக்கு வந்தால் லடாக் பகுதியை யூனியன் பிரதேசமாக ஆக்கிவிடும் என்று உறுதி அளித்துள் ளது. இச்செயல் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை மிகுந்த மோசமான நிலைக்கு உள்ளாக்குவதாகும். ஜம்மு, காஷ்மீரைப் பிரிப்பது என்பது ஏற்கெனவே உள்ள மோசமான பிரிவினை வாதங்களுக்குத் துணை யாகிவிடும். இந்தியாவு டனான மாநிலத்தின் பரந்த உறவும், வகுப்புவாதத்தி லிருந்து அமைதியும் ஆகிய<br /><br />இவ்விரண்டுமே பாதிக்கப்படும். இந்தியர்களில் எத்தனை பேர் இந்த பயங்கர மான சூழ்நிலையைப் புரிந்து கொள்கின்றனர் என்று எனக்குத் தெரிய வில்லை. கேள்வி: இந்தியாவில் உள்ள பலருடைய கருத் தாக இருப்பதை குறிப் பிட்டாக வேண்டும். 370ஆவது பிரிவின் மூலம் வெளி மாநிலத்தவர் ஜம்மு காஷ்மீர் பகுதியில் சொத் துக்களை வாங்குவதற்கான உரிமை மறுக்கப்படு வதாக தவறாக எண்ணுகிறார்கள்.<br /><br />குடிமக்களிடையே சம உரி மைக்கான பிரச்சினையாக இது உள்ளதுகுறித்து?<br /><br />உமர் பதில்: ஆம். இப் படியான புறக்கணிப்புக்கு அரசியல் கட்சிகள்தான் முழுப்பொறுப்பு. இது எனக்கு வருத் தத்தையே அளிக்கிறது. உண்மை என்னவென்றால், 370ஆவது பிரிவுமூலம் எதுவும் செய்ய முடியாது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சட்டங்கள்தான் வெளியிலிருந்து எவரும் சொத்துக்களை வாங்குவதிலிருந்து அனுமதி மறுக் கிறது. இதுவும் சுதந்திரத்துக்கு முன் உள்ள சட்டங்களாகும். இதுபோன்ற சட்டங்கள் மற்ற பல மாநிலங்களிலும் உள்ளது. எண்ணிக்கையில் சிறிய அளவில் மக்கள்தொகை இருக்கும் மாநிலங்களில் இதுபோன்ற சட்டங்கள் உள்ளன. 370ஆவது பிரிவு முற்றிலும் மாறுபட்டது. மாநிலத்தின் சட்டம் இயற்றுதலில் உள்ள நாடாளுமன்றத் தின் அதி காரம்குறித்தது. ஜம்மு காஷ்மீர் இந்தியாவில் தொடர்ச்சியாக இருப்பது குறித்து விவரிப்பது. நாகாலாந்து போன்ற பிற மாநிலங்களிலும் இதே போன்று அதிகாரம் வழங்கப்பட் டுள்ளது. நீங்கள் 370ஆவது பிரிவை நீக்குவதன்மூலம் அடிப்படையில் இந்தி யாவிலிருந்து ஜம்மு காஷ்மீரை வெளி யேற்றுகிறீர்கள் என்றார் அவர்.<br /><br />நன்றி : தி இந்து ஆங்கில நாளிதழ் 8.5.2014<br /><br />Read more: http://viduthalai.in/e-paper/79893.html#ixzz31B1BNrQi<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-23103408467727996222014-05-09T06:44:09.962+05:302014-05-09T06:44:09.962+05:30
பக்தி வந்தால் புத்தி போகும்
சிவபெருமானுக்கு நா...<br />பக்தி வந்தால் புத்தி போகும்<br /><br /><br /><br />சிவபெருமானுக்கு நாக்கை அறுத்து காணிக்கையாம்!<br /><br />ராஞ்சி, மே 8- நாக்கை பிளேடால் அறுத்து சிவ பெருமானுக்கு காணிக்கை செலுத்திய அதிர்ச்சியான நிகழ்வு ஜார்கண்ட் மாநிலத் தில் நடந்துள்ளது. ஜார் கண்ட் மாநிலம், தூகடா வில் உள்ள மகாதேவ் கர்ஹா என்ற சிவபெரு மான் கோவிலிலுக்கு லால் மோகன் சோரன் (வயது 17) வந்தார். பின்னர் திடீர் என அந்த கோவிலில் உள்ள சிவபெருமான் சந்நிதியில் முன்னால் பிளேடு ஒன்றை எடுத்து திடீரென தனது நாக்கை அறுத்து ஒரு பாத்திரத்தில் பிடித்து காணிக்கை செலுத்தினார்.<br /><br />அவர் எழுதி வைத்து இருந்த ஒரு குறிப்பில் நான் எனது நாக்கை அறுத்து சிவ பெருமானுக்கு காணிக்கை செலுத்துகிறேன்.தயவு செய்து என்னை கோவிலை விட்டு வெளியே அனுப்பி விடாதீர்கள். நான் சிவபெரு மானின் காலடியில் இருக்க வேண்டும் என கூறி இருந் தார்.<br /><br />உடனடியாக கோவில் நிர்வாகி லால்மோகன் சோரனை மருத்துவம னைக்கு அழைத்து சென் றார். மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். ஆனால், மருத் துவர்கள் எவ்வளவோ முயன்றும் மீண்டும் அந்த இளைஞனுக்கு நாக்கை ஒட்ட வைக்க முடியவில்லை.<br /><br />தற்போது வெறும் திரவ உணவு மட்டும் சாப் பிட்டு வரும் லால்மோகன் சோரன் வாய்பேச முடியாத நிலைக்கு ஆளானார். லால் மோகன் சோரன் குடும்பத்தினர் இந்த சம்பவம் குறித்து அதிர்ச்சி அடைந்தாலும், தன்னு டைய மகன் கடவுளுக்கு கொடுத்த காணிக்கையை எண்ணி பெருமைப்படுவ தாக கூறினர்.<br /><br />Read more: http://viduthalai.in/e-paper/79891.html#ixzz31B132qxV<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-26120702095725639172014-05-08T05:04:52.039+05:302014-05-08T05:04:52.039+05:30
மூடத் தனத்தில் கிராம மக்கள்
மூடத் தனத்தில் கிராம...<br />மூடத் தனத்தில் கிராம மக்கள்<br /><br />மூடத் தனத்தில் கிராம மக்கள்<br />மணப்பாறையில் மழை வேண்டி<br />கழுதைக்கும் கழுதைக்கும் திருமணமாம்!<br /><br />திருச்சி, மே 7- திருச்சி மாவட்டம் மணப்பாறை யை அடுத்துள்ள வையம் பட்டி ஒன்றியத்திற்குட்பட்ட வத்தமணியாரம்பட்டி கிராமம் உள்ளது. இக்கிராமத் தில் கடந்த 4 ஆண்டுகளாக சரியாக மழை பெய்யவில் லையாம். இதனால் அக் கிராமத்தில் வறட்சி ஏற்பட்டு விவசாயம் பாதிக்கப்பட்டுள் ளதாம். இதனால் தண்ணீர் பற்றாக்குறையை தீர்ப்பதற் காக கழுதைக்கும், கழுதைக் கும் திருமணம் செய்து வைத்தால் மழை பெய்யும் இப்படி ஒரு நம்பிக்கையை மூடத்தனமாக நம்பி, அக்கிராம மக்கள் வெகு சிறப்பாக பத்திரிகை அடித்து, விருந்து வைத்து தடபுலாக இத்திருமணத்தை நேற்று முன்தினம் நடத்தியுள்ளனர்.<br /><br />மனிதர்களுக்கு நடத்தப் படும் திருமணத்தை போன்று கழுதைக்கும், கழுதைக்கும் இத் திருமணத்தை நடத்தியுள் ளனர். சாதாரணமாகவே பருவ மழை பொய்த்து போய் விட்டது என்பது அனை வரும் அறிந்ததே. உலக மயமாக்கலுக்கு பிறகு ஒரு குறிப்பிட்ட சமூகம் முன் னேற வாய்ப்பாக வெளி நாட்டு மூலதனங்களை முன்னிறுத்தி ஆண்டாண்டு காலமாக விவசாயத்தையே நம்பி வாழ்ந்த மக்களின் வாழ்வாதாரமான விவசாய நிலங்கள் எல்லாம் வானு யர்ந்த கட்டடங்களாக மாறி விட்டன. இந்த சூழ்நிலை யில் விவசாயத்தைப் பாது காக்க அறிவியலை நம்பி, ஆக்கப்பூர்வமான பணிகளில் ஈடுபடாமல் மக்கள் தண்ணீர் பஞ்சத்தைத் தீர்க்க இது போன்ற மூடநம்பிக்கை காரி யங்களில் ஈடுபட்டு வருவது, வெட்கப்பட வேண்டிய விசயம்.<br /><br />சாதாரண மக்களே அறியாமையின் காரணமாக இதுபோன்ற காரியங்களில் ஈடுபடுகின்றார்கள் என்பது ஒரு பக்கம் இருந்தாலும், அரசே மூடத்தனத்தின் சாக்க டையில் மூழ்கியுள்ளது என் பதுதான் உண்மை. அண் மையில் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் அறநிலையத்துறை கோவில் களில் வருணஜபம் நடத்தும் படி உத்தரவே பிறக்கப் பட்டு, அதன்படி அனைத்துக் கோவில்களிலும் யாகம் நடத்தினார்கள். மழை வந்ததா? என்றால் இல்லை!<br /><br />தண்ணீர் பஞ்சத்தைத் தீர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மாறாக இதுபோன்ற மூட நம்பிக்கை காரியங்களில் ஈடுபடும் மக்களை தடுக்கவேண்டும்.<br /><br />Read more: http://viduthalai.in/page-3/79848.html#ixzz314lYimYV<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-70730674527895489772014-05-08T05:03:38.236+05:302014-05-08T05:03:38.236+05:30
எந்தப் பதுங்குக் குழியில் அப்போது இருந்தீர்கள் மோ...<br />எந்தப் பதுங்குக் குழியில் அப்போது இருந்தீர்கள் மோடிஜி!<br /><br />- குடந்தை கருணா<br /><br />தன்னை பிற்படுத்தப்பட்ட சமுதா யத்தில் பிறந்ததால், விமர்சித்து விட் டார் என்று பிரியங்கா மீது குற்றம் சுமத்தி உத்தரபிரதேசம் தோமாரியா கஞ்சில் தேர்தல் பிரச்சாரம் மேற் கொண்ட பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பேசி உள்ளார். பிரியங்கா சொன்னது, இவர்கள் எனது தந்தையை விமர்சிக்கிறார்கள்; அமேதி மக்கள் இந்த கீழ்தரமான அரசியலுக்கு தக்க பதிலடி கொடுப் பார்கள் என பேசினார். ஆனால், மோடி, இதனை, ஜாதி சாயம் பூசி, தான் பிற்படுத்தப்பட்டவன் என்ப தால், தன்னை தாக்குவதாக நீலிக் கண்ணீர் வடிக்கிறார்.<br /><br />இரண்டு நாட்களுக்கு முன், ராமன் படத்தை வைத்து, ராம ராஜ்யம் அமைக்க வாக்களியுங்கள் என மதத் தின் பெயரால், வாக்கு கேட்ட மோடி, இப்போது, ஜாதியைப் பற்றி பேசு கிறார்.<br /><br />சரி; ராம ராஜ்யத்தில், இந்த பிற் படுத்தப்பட்ட சூத்திர மக்களுக்கு என்ன கதி என மோடிக்குத் தெரியுமா? சம்பூகன் தவம் இருந்தான் என்பதற் காக, தர்மம் கெட்டுவிட்டது எனக் கூறி, சம்பூகன் தலை வெட்டப் பட் டது என ராமாயணத்தில் கூறப்பட் டுள்ளதே, அதைப் பற்றி தெரியுமா, மோடிக்கு?<br /><br />அந்த ராமாயணத்தையும், ராம னையும் தலையில் வைத்து வன்முறை ஆட்டம் ஆடும் ஆர்.எஸ்.எஸ். பரி வாரத்தில் பயிற்சி பெற்ற மோடி, இப்போது சொல்கிறார், தான் பிற் படுத்தப்பட்டவன் என்று?<br /><br />கோல்வார்க்கரின் சிந்தனையின் தொகுப்பில், சூத்திரர்களுக்கு என்ன நிலை என்று சொல்லப்பட்டிருக் கிறதே; அதனை இத்தனை காலம் ஏற்றுக்கொண்டு, அந்த ஆர்.எஸ்.எஸ்-இல் இருந்ததை பெருமையாக கருதும் மோடி சொல்கிறார், தான் பிற்படுத்தப்பட்டவன் என்று?<br /><br />குஜராத்தில் நான்கு முறை முதல் வராக இருந்த மாதவ் சிங் சோலங் கியின் ஆட்சியில் 1980-களில், கொண்டு வரப்பட்ட இட ஒதுக் கீட்டை எதிர்த்து நடத்தப்பட்ட இயக் கத்தில் தீவிரமாக இருந்த மோடி இப் போது சொல்கிறார், தான் பிற்படுத் தப்பட்டவன் என்று?<br /><br />மண்டல் குழு பரிந்துரையை வி.பி. சிங் அமல்படுத்தியதை தொடர்ந்து, வட நாட்டில், இட ஒதுக்கீடு எதிர்ப் பாளர்களால் எதிர்ப்பு தெரிவித்த போது, இந்த பிற்படுத்தப்பட்ட மனிதர் மோடி எந்த பதுங்கு குழியில் ஒளிந்திருந்தார்?<br /><br />வி.பி.சிங்கிற்கு எதிராக ரத யாத் திரை என்ற பெயரில் சமூக அநீதித் தீயை அத்வானி கொளுத்தியபோது, ரதத்திற்கு எண்ணெய் விட்ட மோடி, இப்போது சொல்கிறார், தான் பிற் படுத்தப்பட்டவன் என்று?<br /><br />2005 இல் மத்திய அரசில் அர்ஜூன் சிங், கல்வியில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கிய போது, எந்த ஆதரவும் தராத மோடி, இப்போது சொல்கிறார், தான் பிற்படுத்தப்பட்டவன் என்று?<br /><br />சமூக நீதியின் எந்த உணர்வும் இல்லாதவர்; அதற்கு எதிரான தத் துவத்தை ஏற்றுக்கொண்டு அதனை பெருமையாக கருதுபவர்; இப் போது சொல்கிறார், தான் பிற் படுத்தப்பட்டவன் என்று.<br /><br />பிற்படுத்தப்பட்ட மக்கள், மோடியின் இந்த மோசடிப்பேச்சை நிச்சயம் நிராகரிப்பார்கள்.<br /><br />Read more: http://viduthalai.in/page-2/79872.html#ixzz314lEjMLu<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-21731644810109766112014-05-08T05:02:41.583+05:302014-05-08T05:02:41.583+05:30
மோடியின் ராமன் பேச்சும் தேர்தல் ஆணையத்தின் விசாரண...<br />மோடியின் ராமன் பேச்சும் தேர்தல் ஆணையத்தின் விசாரணையும்!<br /><br /><br />மோடியின் ராமன் பேச்சு: அறிக்கை கோருகிறது தேர்தல் ஆணையம் என்று ஒரு செய்தி வெளி வந்துள்ளது.<br /><br />காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடும் அமேதி தொகுதியில் அவரை எதிர்த்துப் பேசிய பொதுக்கூட்டத்தில் மோடி தெரிவித்த கருத்துதான் சர்ச்சைக்குக் காரணம்.<br /><br />தனது பேச்சில் ராமன் என்ற சொல்லை மிக அதிகமாகப் பயன்படுத்தியிருக்கிறார்; ராமன் பிறந்த மண்ணிலிருந்து பேசுகிறேன் - காங்கிரசுக்குப் பாடம் புகட்டவேண்டும் என்று கூறியிருக்கிறார்.<br /><br />அவர் பேசியதோடு மட்டுமல்ல, அந்தப் பொதுக் கூட்ட மேடையின் பின்புறத்தில் ராமன் உருவம் பல வண்ணத்தில் தீட்டப்பட்ட பதாகையும் வைக்கப்பட்டு இருந்தது.<br />இதுதான் இப்பொழுது பிரச்சினைக்குக் காரணமாகும். தேர்தல் பிரச்சாரத்தில் மதவாதத்தைப் புகுத்தியதுதான் இதற்குக் காரணமாக இருக்க முடியும்.<br /><br />மக்கள் மத்தியில் அவர்களுக்குத் தேவையான திட்டங்களை உருப்படியாக வெளிப்படுத்த முடியாத போது - அதற்கான சிந்தனையோட்டம் இல்லாத கையறு நிலையில், பி.ஜே.பி. மக்களின் மலிவான நம்பிக்கையை - பக்தியைக் கையில் எடுத்துக் கொள்ள முயற்சிக்கிறது.<br /><br />தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் மோடி பேசியதை முதன்மைப்படுத்தாமல், தேர்தல் ஆணையம் நியாயமாக - பி.ஜே.பி.யின் தேர்தல் அறிக்கையைக் கவனத்தில் எடுத்துக்கொண்டு இருக்கவேண்டும்.<br /><br />அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமன் கோவில் கட்டுவோம் என்று தேர்தல் அறிக்கை யில் குறிப்பிடப்பட்டுள்ளதே - அது இந்திய அரசமைப் புச் சட்டத்தில் இடம்பெற்றுள்ள மதச் சார்பின்மைக் கொள்கைக்கு விரோதமான ஒன்றல்லவா! அதன்மீது தேர்தல் ஆணையம் எடுத்த நடவடிக்கை என்ன? ஒன்றுமில்லையே!<br /><br />பாபர் மசூதி உடைப்புத் தொடர்பான வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில், இப்படி ஒரு வாக்குறுதியைத் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டு இருப்பதுகூட நீதிமன்ற அவமதிப்பாகாதா?<br /><br />இதே உத்தரப்பிரதேசத்தில் இதே மோடி - உத்தரப் பிரதேசத்தின் மக்களவைத் தேர்தலில் பெரும்பான்மை வெற்றியை பி.ஜே.பி.,க்குத் தாருங்கள் - ராமன் கோவில் கண்டிப்பாகக் கட்டித் தருகிறோம் என்று சொன்னாரா - இல்லையா?<br /><br />அப்பொழுதெல்லாம் தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளாதது ஏன்?<br /><br />மகாராட்டிர மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் மதவாதத்தை எடுத்து வைத்த காரணத்தால், வெற்றி பெற்றது செல்லாது என்று உயர்நீதிமன்றம் தீர்ப்புக் கூறியது உண்டே!<br /><br />மதச்சார்பற்ற கொள்கை எங்கள் கட்சிக்கு உறுதியாக உண்டு என்று சொல்லிக் கொண்டிருக்கும் கட்சிகளுடன் கூட்டணி வைத்துக்கொண்டே, ராமன் கோவிலைக் கட்டுவோம் என்று பி.ஜே.பி.யின் தலைவர்களால் பேசப் பட்டு வருகின்றது. இது எப்படியென்றே தெரியவில்லை. தங்களுடன் கூட்டுச் சேர்ந்துள்ள கட்சிகள்பற்றிச் சற்றும் பி.ஜே.பி. கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை என்று சொல்லலாமா?<br /><br />அதேநேரத்தில், பி.ஜே.பி.யோடு கூட்டு வைத்துள்ள அந்த மதச்சார்பற்ற கட்சிகளும் - பி.ஜே.பி.யின் இந்த நிலைப்பாட்டை எதிர்த்துக் கருத்தும் சொல்லவில்லை என்பது மிகப் பரிதாபமே!<br /><br />பதவிப் பசி வந்தவர்கள் கையில் எது கிடைத்தாலும் உண்பார்கள் போலும்!<br /><br />இந்திய அரசமைப்புச் சட்ட வரம்புக்கு உட்பட்டு ராமன் கோவில் கட்டுவார்களாம் - அது எப்படி என்று தான் புரியவில்லை.<br /><br />அரசமைப்புச் சட்டத்தின் எந்தப் பகுதி இத்தகு செயலுக்கு இடம் அளிக்கிறது?<br /><br />மதச்சார்பற்ற தன்மை என்று அரசமைப்புச் சட்டம் கூறியதற்குப் பொருள்தான் என்ன?<br /><br />இன்னொன்றையும் இந்த இடத்தில் கவனிக்கத் தவறக்கூடாது. ராமன் கோவில் கட்டுவது என்பதுபோன்ற பிரச்சினைகளில் நீதிமன்றம் தலையிட முடியாது - இது மக்களின் உணர்வு சார்ந்த பிரச்சினை என்று பி.ஜே.பி. யினர் சொல்லிக் கொண்டும் வருகிறார்கள்.<br /><br />இந்த நிலையில், இவர்கள் ஆட்சி அதிகாரத்திற்கும் வந்து விட்டால், அரசமைப்புச் சட்டம் நீதிமன்றம் இவற்றை யெல்லாம் ஒரு பொருட்டாக மதிக்கக் கூடியவர்கள் அல்லர் என்கிற முறையில்தானே செயல்படுவார்கள்?<br /><br />மதப் பிரச்சினையைக் கைகளில் எடுத்துக்கொண்டுள்ள கட்சிகள், தேர்தலில் போட்டியிடக் கூடாது - முடியாது என்கிற அளவில் கடுமையான அளவில் சட்டம் கொண்டுவரப்பட்டு, அதனைக் கறாராக செயல்படுத்தா தவரை மோடிகளும், மோகன்பகவத்துகளும் எந்த எல்லையைத் தாண்டியும் எகிறிக் குதிப்பவர்கள் என்பதைக் கல்லில் செதுக்கி வைத்துக்கொள்ளலாம்.<br /><br />அடிப்படையை மறந்துவிட்டு, ஓடி விளையாடு பாப்பா என்ற முறையில், தேர்தல் ஆணையம் பெரிய பிரச்சினைகளையெல்லாம் கண்டும் காணாமல் இருந்து விட்டு, சின்னஞ்சிறிய புகார்களை விசாரிப்பதாகக் கூறுவதெல்லாம் அசல் ஏமாற்று வேலையே!<br /><br />Read more: http://viduthalai.in/page-2/79867.html#ixzz314l0Sajy<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-40935650042384546802014-05-08T05:01:15.579+05:302014-05-08T05:01:15.579+05:30
மோடி பிரதமரானால் நாடு பேரழிவை சந்திக்கும்: புத்தத...<br />மோடி பிரதமரானால் நாடு பேரழிவை சந்திக்கும்: புத்ததேவ்<br /><br /><br />பருய்பூர், மே 7- நாட்டின் பிரதமராக மோடி தேர்ந் தெடுக்கப்பட்டால் நாடு பேரழிவை சந்திக்கும் நிலை ஏற்படும் என மேற்கு வங்க முன்னாள் முதல்வரும், மா.கம்யூ னிஸ்டு கட்சியின் முக்கிய தலைவருமான புத்ததேவ் பட்டாச் சார்ஜி கூறி யுள்ளார்.<br /><br />இந்தியாவில் இந்துக்கள் மட்டுமே வசிக்க வேண்டும் என ஆர்.எஸ்.எஸ் விரும்புகிறது. ஆனால், நாங்கள் இது பேராபத்தை தரும் என கூறி வருகின்றோம். மோடியை பிரதமராக தேர்ந் தெடுப்பதற்கு மக்களுக்கு என்ன பைத்தியமா பிடித்திருக்கிறது. எனவே மோடியை நம்பாதீர்கள் என்று புத்ததேவ் கேட்டுக்கொண்டார்.<br /><br />நாடாளுமன்ற தேர்தல் துவங்கியவுடன் முத லில் மோடியை பற்றி பேசாத மம்தா, அவருக்கு பூச்செண்டு அனுப்பியுள்ளர்.<br /><br />தற்போது வரை மம்தா அதை தவறு என ஒத்துக்கொள்ளவில்லை என்று தெரிவித்துள்ள புத்ததேவ் தேர்தல் பொதுக் கூட்டங்களில் கலந்துகொள்ள ஹெலி காப்டரில் செல்லும் மம்தாவுக்கு பணம் எங்கிருந்து வருகிறது என கேள்வியெழுப்பியுள்ளார்.<br /><br />Read more: http://viduthalai.in/page-8/79853.html#ixzz314ke0J00<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-88739014590105019192014-05-08T04:56:57.399+05:302014-05-08T04:56:57.399+05:30
மனித நேயத்தைப் பரப்பி எல்லோருக்கும் கல்வியைத் தந்...<br />மனித நேயத்தைப் பரப்பி எல்லோருக்கும் கல்வியைத் தந்த பெருமையைப் படைத்தவர் தமிழறிஞர் கால்டுவெல் - தமிழர் தலைவர் புகழாரம் -<br /><br /><br />சென்னை, மே 7-தமிழறிஞர் கால்டுவெல் சிலைக்கு மாலை அணிவித்து பின்னர் செய்தியாளர்களிடம் தமிழர் தலைவர் கூறியதா வது:-<br /><br />தமிழுக்குத் தொண்டு செய்த தமிழறிஞர்கள், தமிழ்ப் புலவர்கள், தமிழ்ப் படைப்பாளிகள், தமிழ் இலக் கியக் கர்த்தாக்கள், தமிழ்க் கவிஞர்கள் இப்படிப்பட்ட வர்கள் போலவே வெளி நாட்டு அறிஞர்கள் அதிலும் குறிப்பாக கிறித்துவ மதத் தொண்டு செய்வதற்காக வந்த பலரும் தமிழை ஆய்வு செய்து தமிழுக்கு உரிய இடத்தை உலகளாவிய நிலையிலே அவர்களுடைய மொழிகளிலே கொண்டு சென்ற பெருமை உடையவர் களாக என்றென்றைக்கும் வரலாற்றில் வாழ்கிறார்கள்.<br /><br />அப்படிப்பட்டவர்களிலே முன்னோடியாகத் திகழக்கூடியவர் பாதிரியார் இராபர்ட் கால்டுவெல் அவர்கள் ஆவார்கள். திராவிடமொழிக்குடும்பம் என்கிற மிகப்பெரிய அள விற்கு ஒப்பியல் மொழி இலக் கணத்தை அவர்கள் சிறப்பாக அமைத்து அதன்மூலம் திரா விடர் மொழிகள் என்பது ஒரு குடும்பம். அதிலே தமிழ் அதற்குத் தலைமை தாங்கக் கூடிய தகுதி உள்ள மூத்த முதன்மையான மொழி என்ற உணர்வினை அவர்கள் அடித்தளம் இட்டவர்கள்.<br /><br />திராவிட நாகரிகம், திராவிட பண்பாடு என்பது மொழி அடிப்படையில் உருவான ஒரு சிறப்பான தனித்தன்மை யானது என் பதை அவர்கள் காட்டி இருக் கிறார்கள். அப் படிப்பட்ட பாதிரியார் இராபர்ட் கால்டு வெல் அவர்களை ஒரு மத வாதியாக பார்க்காமல் மனித நேயத்தைப் பரப்பி இங்கே எல்லோருக்கும் கல்வியைத் தந்த பெருமையைப் படைத்த பண்பும், தொண்டும் அவர் களுடைய நிலைக்கு உண்டு.<br /><br />அந்த வகையிலே இரு நூற்றாண்டுவிழா என்பது சிறப்பாக திராவிடர் இயக்கங் களாலே கொண்டாடப்படு வது மகிழ்ச்சிக்கும் பெரு மைக்கும் உரியது.<br /><br />திராவிடர் கழகத்தின் சார்பிலே வருகிற 12ஆம் தேதி அன்று பெரியார் திடலில் புதுமை இலக்கியத் தென்றல் அமைப்பின் சார்பில் கார்டு வெல்லின் இருநூறாவது நூற்றாண்டும், நம்முடைய காலத்திலே வாழ்ந்த பெரிய இலக்கிய மேதை, தமிழ் இலக்கியத்துக்கு ஒரு புத் தாக்கம் தந்து பலரை உரு வாக்குவதற்கு காரணமான பிரசன்ட விகடன் ஆசிரியர் நாரண. துரைக்கண்ணன் அவர்களின் நூற்றாண்டு விழா வும் நடைபெற இருக்கின் றது, அவர்கள் என்றைக்கும் மறைவ தில்லை, அவர்கள் சிறப்பாக வாழுகின்றவர் கள்.<br /><br />புரட்சிக்கவிஞர் அவர்கள் சொன்னதைப்போல தமிழ்த் தொண்டன் சாவதில்லை. தமி ழுக்குத் தொண்டு செய்பவர் கள் என்றைக்கும் வாழுகி றார்கள். கால்டுவெல் போன்ற அறிஞர்கள் என்றைக்கும், இன்றைக்கும் நம்மிடையே வாழுகிறார்கள்.<br /><br />- இவ்வாறு தமிழர் தலைவர் அவர்கள் செய்தி யாளர்களிடையே கூறினார்.<br /><br />Read more: http://viduthalai.in/page-8/79857.html#ixzz314jY6b00<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-25738659998276164782014-05-07T06:36:35.547+05:302014-05-07T06:36:35.547+05:30
அதிலும் சிலர் இப்படித்தான் அஜெந்தா குகைகளில் ஓவிய...<br />அதிலும் சிலர் இப்படித்தான் அஜெந்தா குகைகளில் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன என்று கூறிநம்மைத் திகைக்க வைத்தனர். திருச்சியி லிருந்து வருகை தந்திருந்த அய்ஸ்வர்யா என்ற பெரியார் பிஞ்சு, அவர்களுக்கு கொடுக்கப்பட்டிருந்த பழகு முகாம் கையேட்டில் உள்ள தந்தை பெரியாரின் கோட்டோவியத்தை அச்சு அசலாக, அதுவும் மிக விரைவில் வரைந்து முடித்து ஆச்சர்யப்படுத்தினார். இந்தப் பணியில் நம்மை மட்டுமல்ல அவர்களையே மறந்து கடமையே கண்ணாயினர்.<br /><br />இதுவரையில் அரங்கம், அறை என்ற அளவில் கட்டுப்படுத்தப்பட்ட விடுதலை என்றிருந்துமே உற்சாக மாக இருந்த பெரியார் பிஞ்சுகள் பரந்து விரிந்து கிடந்த விளையாட்டுத் திடலில் அனுமதிக்கப்பட்டதும் ஏய்... என்று உற்சாகத்துடன் பறவைகள் போன்று பறந்து திரிந்து தங்களுக்குப் பிடித்த விளையாட்டுகளைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு ஆடித் தீர்த்துவிட்டனர் அவர்களின் உற்சாகத்தை மங்கி வந்த வெளிச்சம்தான் கட்டுப்படுத்த வேண்டியதாயிற்று.<br /><br />சுவையான சிற்றுண்டிக்குப் பிறகு பெரியார் பிஞ்சுகள் பழகு முகாமின் ஒழுக்கப்படி அந்தந்த பிரிவுகளின் தலைவர்கள் (வாலண்ட்டியர்ஸ்) மூலம் வரிசைப்படுத் தப்பட்டு, முத்தமிழ் அரங்கத்திற்கு அழைத்துச் செல்லப் பட்டனர்.<br /><br />அங்கு முதல் நிகழ்ச்சியாக கை, கால் கழுத்து ஆகிய பகுதிகளில் கட்டியிருக்கும் கயிறுகளால் ஏற்படும் தீங்கை பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் பையோடெக் பிரிவின் ஆசிரியர் குமரன் விளக்கிப் பேசியும், சில பிஞ்சுகளை மேடைக்கு அழைத்து அவர் கள் கட்டியிருந்த கயிற்றின் ஒரு சிறு பகுதி, நக அழுக்கு களில் கொஞ்சம் பரிசோதனைக்குட்படுத்தி, நாளை அதன் விளைவை காண்பிக்கிறேன் என்றும் கூறி விடைபெற்றார்.<br /><br />கடல் பூதம் நாடகம்<br /><br />குழந்தைகள் ரசித்த வேலு மாமாவின் குதூகல நாடகம்<br /><br />அதைத் தொடர்ந்து, புதுவை பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் வேலுமாமா என்று குழந்தைகளால் அன்புடன் அழைக்கப்படும் பேராசிரியர் வேலுசரவண னின் குழுவினர் நடத்திக் காட்டிய கடல் பூதம் - நாடகம் பழகு முகாமின் முதல் நாள் நிகழ்ச்சிகளில் பிஞ்சுகளிடம் பலத்த வரவேற்பைப் பெற்றுவிட்டது. 209 பேரையும் தன் நாடகத்தில் சேர்த்துக் கொண்டு தானும் நடித்து அசத்தினார்.<br /><br />மாலை முழுவதும் விளையாட்டு<br /><br />பள்ளிக்கு செல்லக்கூடாது பாடம் படிக்க கூடாது குலத்தொழிலைத்தான் செய்ய வேண்டும் என்ற கருத்தை மாற்றி தான் விரும்புகின்ற தொழிலைச் செய்யாமல் படிக்கலாம் பள்ளிக்குச் செல்லலாம் என்ற வகையில் நாடகத்தை அமைத்து, இதையே ஆரவார மாக நகைச்சுவையுடனும் பெரும் பரபரப்புடன் நடத்தி காட்டி மாணவர்களுக்கு புத்தறிவு புகட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.<br /><br />கண்ணுக்கும், கருத்துக்கும் சுவை கிடைத்த பிறகு அனைவருக்கும் வயிற்றுக்கும் சுவை கொடுக்கப்பட்டது. தொடர்ந்து பிஞ்சுகள் அவர் களுக்கு கொடுக்கப்பட்ட அறைகளில் நண்பர்களுடன் அமர்ந்து ஆரவாரமாக அரட்டை அடித்துக்கொண்டே கையேட்டினை எழுதிவிட்டு அடுத்த நாளுக்கான ஆவலுடன் உறங்கச் சென்றனர்.<br /><br />நேற்றைய செய்தியில் திருத்தம்....<br />3 ஆம் பக்கம் 3 ஆவது பத்தியில்....<br /><br />புவி ஈர்ப்பு விசையை அய்சக் நியூட்டன் பள்ளிப் படிப்பினால் கண்டு பிடிக்கவில்லை என்பதையும் இது போன்றதொரு விடுமுறை நாளில்தான் கண்டு பிடித்தார் என்பதையும் அவரைப் போல ரிலேடிட்விட்டி தியரியைக் கண்டுபிடித்த அய்ன்ஸ்டீனைப் போலவும் சிந்திக்க கற்றுத்தரப் போகிறோம் என்று திருத்தி வாசிக்க வேண்டுகிறோம்.<br /><br />Read more: http://viduthalai.in/page-8/79813.html#ixzz30zI2jyDNதமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-63877645087583576792014-05-07T06:36:27.300+05:302014-05-07T06:36:27.300+05:30பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் பழகு முகாம் - ...பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் பழகு முகாம் - முதல் நாளில்...<br /><br /><br />சனாதன தர்மத்தை வேரோடு சாய்த்த கடல் பூதம்- நாடகம்!<br /><br />முப்பரிமாணக் காட்சியைக் கண்டு ரசிக்கும் பிஞ்சுகள்.<br /><br />தஞ்சை மே 6- பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தில் தொடங்கிய பழகு முகாமின் முதல் நாளில் கண்ணுக்கும், கருத்துக்கும் விருந்தான கடல் பூதம் நாடகம் குலத் தொழிலைத்தான் செய்ய வேண்டும் என்கிற பார்ப்பன தர்மத்தை தகர்ப்பதை ஆரவாரமாக நகைச் சுவையோடு நடத்திக் காட்டியது.<br /><br />கண்களுக்கு பயிற்சி புதிய முயற்சி<br /><br />பழகு முகாமின் தொடக்க நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்ற பிறகு தந்தை பெரியார், அன்னை மணியம் மையார், தமிழர் தலைவர் கி.வீரமணி , அப்துல்கலாம், கல்பனா சாவ்லா அண்ணல் காந்தி, ஜவர்ஹலால் நேரு, அன்னை தெரசா, தாமஸ் ஆல்வா எடிசன், டாக்டர் அம்பேத்கர் ஆகியோரின் படங்களுடன் கூடிய முகமூடி பெரியார் பிஞ்சுகளுக்கு வழங்கப்பட்டது.<br /><br />அந்தந்த தலைவர்களின் பெயர்களை ஆவலோடு தெரிந்து அதை அணிந்து கொண்டு, மேடையேறி தங்களை அறிமுகம் செய்து கொண்டனர். சுவையான மதிய உணவுக்குப் பிறகு கண்ணாடி அணிந்துள்ள 19 பெரியார் பிஞ்சுகளுக்கு பார்வைக் குறைபாட்டை பயிற்சி முகாம் அகற்றும் அரியதொரு முயற்சி கற்றுக் கொடுக்கப்பட்டது.<br /><br />இந்தப் பணிகளை யோகா ஆசிரியர் முரளீதரன் ஒருங்கிணைத்து கொடுத்தார். இதில் புதுவை சிவவீரமணி, பேரா. பர்வீன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.<br /><br />கலிலியோ அரங்கத்தில் குதூகலம்<br /><br />தொடர்ந்து பெரியார் பிஞ்சுகள் சுழற்சி அடிப்படை யில் Periyar Knowledge Centre கட்டடத்தின் இரண் டாவது தளத்தில் அமைந்துள்ள கலிலியோ அரங்கத்தில் முப்பரிமாணப் பட்டைப்படம் (3D Movie) காண்பிக் கப்பட்டது.<br /><br />அதில் டயனோசர்கள், இயற்கையைப் பேணுவது, ஆழ்கடல் ஆகியவைகளைப்பற்றி திரை யிடப்பட்டது. இந்தத் திரையிடல் பெரியார் பிஞ்சு களின் ஏதோபித்த ஆதரவை பெற்றது. அதே கட்டடத் தின் மூன்றாவது தளத்தில் கணினி விளையாட்டுகளி லும் ஆர்வத்துடன் பெரியார் பிஞ்சுகள் ஈடுபட்டனர்.<br /><br />இயற்கை வண்ணங்களில் பிஞ்சுகளின் எண்ணங்கள்<br /><br />கலைத் திறன் கற்கும் செல்வங்கள்<br /><br />பிறகு, பல்நோக்கு உள்விளையாட்டரங்கில் கிரே யான் பென்சில்கள் மூலம் ஓவியங்களையும், அய்ஸ் குச்சிகள்மூலம் மேசை, பேனா கூடு ஆகியவைகளை யும் படைப்பு ஓவியங்களில் இயற்கை வண்ணங் களைத் தீட்டியும் பழகு முகாமின் ஒருங்கிணைப்பா ளர்களையும், மற்றவர்களையும் பெரியார் பிஞ்சுகள் அசத்திவிட்டனர்.<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-16358613604136403202014-05-07T06:34:39.219+05:302014-05-07T06:34:39.219+05:30
மே 6: உலக ஆஸ்துமா தினம்
நுரையீரல்களுக்கு காற்ற...<br />மே 6: உலக ஆஸ்துமா தினம்<br /><br /><br /><br />நுரையீரல்களுக்கு காற்றை எடுத்துச்செல்லும் சுவாச குழாயின் உட்பகுதி வீங்கிக் கொள்வதால் ஏற் படும் குறைபாடே ஆஸ்துமா.<br /><br />இதனால் மூச்சு திணறல் ஏற்படுகிறது. இவர்களின் சுவாசப் பாதையால் சிறிய அளவிலான மாசுபாடைக் கூட பொறுத்துக்கொள்ள முடியாது. ஆஸ்துமா நோய் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத் தும் விதமாக, மே மாதத்தின் முதல் செவ்வாய் உலக ஆஸ் துமா தினமாக (மே 6ஆம் தேதி) கடைப்பிடிக்கப்படு கிறது.<br /><br />உங்கள் ஆஸ்துமாவை, உங்களால் தடுக்க முடியும் என்பது இந்தாண்டு இத் தினத்தின் மய்யக்கருத்து. 1998இல் இத்தினம் தொடங் கப்பட்டது.<br /><br />காற்றில் இருக்கும் புகை, மாசு மற்றும் சில வகை உணவுகள் கூட ஆஸ்துமா பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒவ்வாமையாக மாறும் என கண்டறியப்பட்டுள்ளது.<br /><br />ஆஸ்துமா நோயாளிகள் அதற் கான மருந்துகளை தொடர்ந்து உட்கொள்ள வேண்டும். ஒவ்வாமையை ஏற்படுத்தும் பொருட்களைத் தவிர்க்க வேண்டும்.<br /><br />சிலருக்கு உடற் பயிற்சியில் ஈடுபடுவது கூட ஒவ்வாமை ஏற்படுத்தும். தும்மல், இருமல், சுவாசித்த லில் ஏற்படும் சிரமம் ஆஸ் துமாவின் அறிகுறிகள். இவை இருந்தால், முன்னரே கண்ட றிந்து சிகிச்சை எடுத்துக் கொள்வது அவசியம். இதில் ஏற்படும் தாமதம் நுரையீ ரலை சேதப்படுத்திவிடும். சுற்றுச்சூழல் சீர்கேடுதான் ஆஸ்துமாவுக்கு பெரிதும் காரணம்.<br /><br />ஆஸ்துமாவுக்கு இப் போது இன்ஹேலர்கள் பரிந் துரைக்கப்படுகின்றன.<br /><br />இது நுகரப்படுவதால் மருந்து நேர டியாக சுவாசப் பாதைக்கு சென்று சீர் செய்கிறது.<br /><br />2025 இல் உலகில் 40 கோடி பேர் ஆஸ்துமாவால் பாதிக்கப் படுவர் என கணிக்கப்பட்டு உள்ளது.<br /><br />உலகில் 25 பேரில் ஒருவர் ஆஸ்துமாவினால் இறக்கிறார். அதில் 90 சதவீத மரணங்கள் தவிர்க்க கூடியவை. விழிப்புணர்வு இல்லா ததும், முறையான சிகிச்சை எடுக்காததும் மரணத்தை ஏற்படுத்துகிறது.<br /><br />சிறுவயதில் ஏற்படும் ஆஸ்துமாவுக்கு சூரிய ஒளியை அரிய மருந்தாக மருத்துவர்கள் தெரிவிக் கின்றனர்.<br /><br />இதிலிருந்து வைட் டமின் டி கிடைக்கிறது.<br /><br />Read more: http://viduthalai.in/page-3/79814.html#ixzz30zHdTsSz<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-54415863178800318402014-05-07T06:33:01.819+05:302014-05-07T06:33:01.819+05:30
இவர்கள் அமைக்கும் ராமராஜ்யம் எப்படி இருக்கும்?
உ...<br />இவர்கள் அமைக்கும் ராமராஜ்யம் எப்படி இருக்கும்?<br /><br />உத்தரப்பிரதேசம், பைசாபாத் தொகுதியில் பிரச்சாரம் செய்தார் மோடி. மேடையில் ராமர் படம்; கிரீடம் வைக்கப்பட்ட ராமர் படம். மோடி பேசும் ஒலிபெருக்கிக்கு பின் னால், ராமர் படம் இருக்க வேண்டும் என முடிவு செய்து, பேனர் வைக்கப் பட்டுள்ளது.<br /><br />மேடையில் பேசும் போது, மோடிக்குப் பின்னால், ராமரின் உருவத்தை மறைப்பதுபோல் மோடி நிற்பதற்கும், ராமரின் தலையில் உள்ள கிரீடம், மோடி தலையில் இருப்பது போல, மேடைக்கு எதிரே உள்ள மக்களுக்கு தெரியும் வண்ணம், அந்த பேனர் வைக்கப்பட்டுள்ளது.<br /><br />அங்கே பேசிய மோடி, தன் வாழ்நாள் முழு வதும், ஊழலை ஒழிப்பதற்கு போராட இருப்பதாகவும், ராமர் பிறந்த நிலத்தில் இருந்து இதனைக் கூறுவதாகவும் பேசி உள்ளார். காந்தியை வேறு சாட்சிக்கு அழைத்து உள்ளார். காந்தி ராமராஜ்யம் வேண் டும் என கனவு கண்டாராம்;<br /><br />அதனைப் போல், இவர் ராமராஜ்யம் அமைத் திட வாக்களியுங்கள் என்கிறார். பைசாபாத் தொகுதிக்கு உட்பட்டதுதான் அயோத்தி நகரம். ராமர் அங்கே தான் பிறந்தார் என்று சொல்லி, 400 ஆண்டுகால பாபர் மசூதியை இடித்த இடம் அந்த தொகுதியில்தான் உள்ளது.<br /><br />அத்தகைய பதற்றமான ஒரு பகுதியில் தான், மோடி, ராமர் படத்தை மேடையில் வைத்துக் கொண்டு, அப்பட்டமாக, மத உணர்வோடு பேசி உள்ளார். இது குறித்து, அந்த கட்சியின் இன்னொரு யோக்கியர் அருண் ஜெட்லியிடம், தொலைக்காட்சி ஊடகம் கேள்வி கேட்டதற்கு, ஜெட்லி சொல்கிறார்; மோடிக்கு ராமர் படம் வைத்தது தெரிந்திருக்காது; அந்த பகுதி நிர்வாகி கள் வைத்திருப்பார்கள்;<br /><br />இனிமேல், இதுபோல் செய்யாதீர்கள் என அறிவு றுத்தப்பட்டதாக சொல்லியிருக்கிறார், சட்ட நிபுணர் என கூறப்படும் ஜெட்லி. மத சின்னங்களை, தேர்தல் நேரத் தில் பயன்படுத்தக்கூடாது என்ற தேர் தல் விதிகூட தெரியாமலா இருக் கிறார்கள், பிரதமர் கனவு காணும் மோடியும், அவருக்கு துணை நிற்கும் ஜெட்லியும். இவ்வாறு மதச் சின்னங்களை பயன்படுத்துவது தவறுதானே என செய்தியாளர் ஜெட்லியிடம் கேட் கிறார். அதற்கு, ஜெட்லி, இது தவறு என்று சொல்ல முடியாது; பிழையான முடிவு என்று வேண்டுமானால் சொல் லலாம் என்கிறார். சட்டம் படித்தவர், வார்த்தை விளையாட்டைக் காட்டுகிறார்.<br /><br />1992-இல் பாபர் மசூதி இடிக்கப் பட்டபோது, அதில் கலந்துகொண்ட அத்வானி மற்றும் பாஜக தலைவர்கள், எங்களை மீறி இந்த செயல் நடந்து விட்டது என்றுதானே கூறினார்கள். ராமர் கோவில் கட்டுவதற்கான இயக்கம், மசூதி இடிப்பில் கலந்து கொண்ட கரசேவர்களின் பொறுமை யின்மையை கணக்கில் எடுக்காதது பிழைதான்; ஆனால், அதற்கு அந்த இயக்கத்தவர் பொறுப்பு என கூற முடியாது என்று சொன்னவர் தான் அத்வானி (இந்தியன் எக்ஸ்பிரஸ் 13.3.2011).<br /><br />இப்போது, ஜெட்லியும் பிழை என்கிறார். கலவரம் நடைபெற்ற முசாபர் நகர் பகுதியில் ஜாட் மக்களைப் பார்த்து, நீங்கள் வஞ்சம் தீர்த்துக் கொள்ளவேண்டும் என்று பேசிய மோடியின் வலது கரம், அமீத் ஷாவை, உ.பி.யில் எங்கும் பேசக்கூடாது என தடைவிதித்த தேர்தல் ஆணையம், பின்னர் அதனை தளர்த்தியது.<br /><br />இப் போது, அதே, அமீத் ஷா, ஆசாம்கர் தொகுதியில் பேசும் போது, இந்த பகுதிதான், தீவிரவாதிகளின் தளம் என முஸ்லீம் மக்கள் அதிகம் வாழும் பகுதியான ஆசாம்கர் பற்றி பேசுகிறார். ஆக, மோடி அலை எங்கும் வீச வில்லை என்பது தெரிந்ததும், குஜராத் வளர்ச்சி என்ற கோஷம் வீக்கம்தான் என்பது தோலுரிக்கப்பட்ட நிலையில், உத்தரப்பிரதேசம், பீகார், மேற்கு வங்கத்தில் இதுவரை நடைபெற்ற தேர்தல்களில், கள்ள ஓட்டு போடப் பட்டுள்ளதை, தேர்தல் ஆணையம் தடுக்க தவறிவிட்டது என்ற குற்றச் சாட்டை முன்வைக்கிறார் மோடி.<br /><br />இப்போது இறுதிக்கட்டமாக, ராம ரையும், ராமராஜ்யத்தையும், பயன் படுத்தி, தனது சுயரூபத்தை காட்டி யுள்ளார் மோடி. இதில் மிக முக்கிய மான விஷயம் எதுவெனில், பைசா பாத் தொகுதியில் மோடி பிரச்சாரம் செய்த பாஜக வேட்பாளர் லாலுசிங், பாபர் மசூதி இடிப்பில் குற்றம் சாட்டப்பட்டவர். ஏற்கனவே, முசாபர் நகர் தொகுதி யில் அந்த கலவரத்துக் காரணமானவர் தான் பாஜக வேட்பாளர்;<br /><br />2002 குஜராத் கலவரம் நடைபெற்றபோது, முதல்வ ராக இருந்தவர் மோடி; உள்துறை அமைச்சராக இருந்தவர் அமீத் ஷா. இப்போது சொல்லுங்கள், இவர் கள் அமைக்கும் ராமராஜ்யம் எப்படி இருக்கும் என்று?<br /><br />- குடந்தை கருணா<br /><br />Read more: http://viduthalai.in/page-2/79800.html#ixzz30zHE1e9R<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-75839548799600082822014-05-07T06:30:35.504+05:302014-05-07T06:30:35.504+05:30
இது உண்மையா?
சிதம்பரம் நடராசர் கோயிலில் பல உண்ட...<br />இது உண்மையா?<br /><br /><br />சிதம்பரம் நடராசர் கோயிலில் பல உண்டியல்கள் தமிழக அரசால் வைக்கப்பட்டன. உச்சநீதிமன்ற தீர்ப்பிற்குபின் இதுவரை உண்டியல்கள் திறக்கப்படவில்லை. தற்பொழுது, தீட்சிதர்கள் உண்டியல்களைத் திறக்க முயற்சி செய்தனர். முன்னாள் அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பிரமுகர் ஒருவர் முதல்வரின் தனிப் பிரிவுக்கும் - இந்து சமய அறநிலையத்துறைக்கும் கடிதம் எழுதி - முயற்சி செய்து, தீட்சிதர்கள் முயற்சியைத் தடுத்து நிறுத்தியுள்ளார். உண்டியல் திறப்பது அரசு உத்தரவால் நிறுத்தப்பட்டுள்ளது என்பது உண்மையா?<br /><br />Read more: http://viduthalai.in/e-paper/79782.html#ixzz30zGVsV4u<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-28312001582892448082014-05-07T06:29:27.642+05:302014-05-07T06:29:27.642+05:30
பிராமணர்களுக்குத் தனி சாப்பிடுமிடமாம் மார்க்சிஸ்ட...<br />பிராமணர்களுக்குத் தனி சாப்பிடுமிடமாம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டன இயக்கம்<br /><br /><br />பெங்களூரு, மே 6- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கர்நாடக மாநில செயலாளர் ஜி.வி. சிறீராம ரெட்டி செய்தியாளர்களி டையே கூறியிருப்பதாவது:<br /><br />:உடுப்பி சிறீகிருஷ்ண மடத்தில் பிராமணர்களுக் குத் தனி சாப்பிடுமிடமும், பிராமணர் அல்லாதவர் களுக்குத் தனி சாப்பிடு மிடமும் என்கிற பங்கி பேதா என்னும் வர்ணா சிரம முறைக்கு எதிராக பெங்களூரிலும், உடுப்பி யிலும் தொடர் ஆர்ப்பாட் டங்கள் நடத்திடவும்,. மற்ற மாவட்டத் தலைநகர்களில் 24 மணி நேர தர்ணா போராட்டம் நடத்திடவும் திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு மக்கள் மத்தியில் பாகுபாடு காட்டப்படும் நடைமுறைக்கு எதிராக மாநில அரசுஉறுதியாக நட வடிக்கை எடுத்து, இம் முறையை தடை செய்திட வேண்டும்.<br /><br />மாநிலத்தின் நடைமுறையில் இருந்து வரும் பிராமணர்கள் சாப் பிட்ட எச்சில் இலைகளில் பிராமணர் அல்லாதவர்கள் படுத்துப் புரளும் மட ஸ்நானா என்னும் இழி வான நடைமுறைக்கும், சாப்பிடுமிடத்தைப் பிரிக் கும் இக்கேவலமான பங்கி பேதா நடை முறைக்கும் கர்நாடக முதல்வர் சித்த ராமய்யா முற்றுப்புள்ளி வைப்பார் என்று எதிர் பார்த்தோம். ஆயினும் எது வும் நடை பெறவில்லை. இவ்வாறு ஜி.வி.சிறீராம ரெட்டி கூறினார்.<br /><br />Read more: http://viduthalai.in/e-paper/79780.html#ixzz30zGKXZ2c<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-67377014812012180322014-05-07T06:28:50.462+05:302014-05-07T06:28:50.462+05:30
மோடியின் பிரிவினைவாதப் பேச்சுக்கு செருப்பை வீசி எ...<br />மோடியின் பிரிவினைவாதப் பேச்சுக்கு செருப்பை வீசி எதிர்ப்பு தெரிவித்த வழக்கறிஞர்<br /><br /><br /><br />அலகாபாத் மே 6 - சமீப காலமாக தேச நலனுக்கு எதிராகவும் மத மோதலை தூண்டும் வகை யில் மோடியும் அவரது சகாக்களும் தொடர்ந்து பேசிவருகின்றனர். இது வட இந்திய மக்களி டையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அலகாபாத்தில் திங்கள் அன்று நடந்த பேரணியின் போது மக்களின் வெறுப்பு வெளிப்பட்டது. நேற்று காலை பேரணி நடந்துகொண்டு இருந்த போது கூட்டத்தில் இருந்து ஒருவர் நோ நோ மோதி டவுன் டவுன் மோதி என்று கூவிக்கொண்டு தனது காலில் இருந்த செருப்பை மோடியை நோக்கி வீசி னார். இந்த காட்சி உடனடி யாக அனைத்து தொலைக் காட்சியிலும் ஒளிபரப்பா னது. ஆனால் சில நிமி டங்களிலேயே அப்படி ஒரு சம்பவம் நடக்காதது போன்று அனைத்து தொலைக்காட்சிகளிலும் மோடியின் மேடைப்பிரச் சாரம் ஒளிபரப்பானது.<br /><br />இதனிடையே கூட்டத் தில் இருந்த பாஜகவினர் நரேந்திர மோடியின் பிரி வினைபேச்சிற்கு எதிர்ப்பு தெரிவித்து செருப்பை வீசிய நபரை பிடித்து அடித்து உதைத்தனர். கூட்டத்திற்குள் நுழைந்த காவல்துறையினர் அந்த நபரை பாஜக ரவுடிகளிடம் இருந்து காப்பாற்றி அலகா பாத் நகர காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித் தனர். விசாரணையில் பிரதாப் ருத்ரா சிங் என்ற அந்த நபர் அலகாபாத் நீதிமன்றத்தில் பயிற்சி வழக்கறிஞராக பணியாற்றுவதாகவும், கடந்த சில மாதங்களாக பாஜவினரும் நரேந்திர மோடியும் தேச நலனுக்கு எதிராக தேர்தல் பரப்புரை யில் பேசி வருவது குறித்து எனது எதிர்ப்பைத் தெரி வித்தேன். ஊடகங்கள் மோடியின் செயலை மறைத்து வைக்கும் செய லில் ஈடுபட்டு வரும் நிலையில் எனக்கு இந்தச் செயலைச் செய்வதைத் தவிர வேறு வழியில்லை என்று கூறினார். விசார ணைக்குப் பிறகு அவரை எச்சரித்து விடுதலை செய்தனர்<br /><br />Read more: http://viduthalai.in/e-paper/79781.html#ixzz30zGBNknV<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-87223399907543319912014-05-07T06:28:09.365+05:302014-05-07T06:28:09.365+05:30
மோடி பிரசார மேடையில் ராமன் படம், ராமன் கோயிலின் ம...<br />மோடி பிரசார மேடையில் ராமன் படம், ராமன் கோயிலின் மாதிரி வரைபடம் விளக்கம் கேட்கிறது தேர்தல் ஆணையம்<br /><br /><br />லக்னோ, மே 6- நரேந் திர மோடி பிரசாரம் செய்த மேடையின் பின்னால் ராமன் படம் வரையப்பட்ட பேனர் வைக்கப்பட்டிருந் தது குறித்து விளக்கம் அளிக்குமாறு பைசாபாத் மாவட்ட தேர்தல் அதிகா ரிக்கு மாநில தேர்தல் ஆணை யம் கடிதம் அனுப்பி உள்ளது.<br /><br />உத்தரபிரதேச மாநிலம் பைசாபாத் நகரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத் தில், பாரதீய ஜனதா கட்சி யின் பிரதமர் பதவிக்கான வேட்பாளர் நரேந்திர மோடி பேசினார். அவர் அந்த தொகுதியில் போட்டி யிடும் பா.ஜனதா வேட் பாளர் லாலு சிங்கை ஆதரித்து பேசினார்.<br /><br />மேடையின் பின்னணி யில் ராமன் படம் மற்றும் அயோத்தியில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள ராமன் கோவிலின் மாதிரி வரைபடம் ஆகியவை வரையப்பட்ட பேனர் அமைக்கப்பட்டிருந்தது. கூட்டத்தில் மோடி பேசு கையில், ராமன் கோவில் அமைக்கும் திட்டம் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. ஆனால் ராமன் வரலாறு மற்றும் வழிகாட்டி நெறி முறைகளை எடுத்துக்கூறி பாரதீய ஜனதா வேட் பாளரை வெற்றி பெற செய் யுமாறு கேட்டுக் கொண் டார். சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும் என்றும் மக்களை கேட் டுக்கொண்டார்.<br /><br />அப்போது பொது மக்கள் ஜெய் சிறீராம் என்று முழக்கம் எழுப்பினர்.<br /><br />அரசியல் கட்சி தலை வர்கள் தேர்தல் பிரச்சாரத் தின்போது மதம் சார்ந்த அல்லது கடவுள் படங்கள் எதுவும் பயன்படுத்தக் கூடாது என்பது தேர்தல் விதிமுறை. எனவே மோடி பேசிய மேடையின் பின்ன ணியில் ராமன் மற்றும் மாதிரி வடிவ கோவில் படம் அமைக்கப்பட்டிருந் ததை கவனித்த தேர்தல் அதிகாரிகள் இதுகுறித்து மாநில தலைமை தேர்தல் ஆணையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.<br /><br />இதுகுறித்து உத்தர பிரதேச மாநில தேர்தல் ஆணையர் உமேஷ் சின்கா, பைசாபாத் மாவட்ட தேர் தல் அதிகாரிக்கு விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப் பினார். இந்த தகவலை மாநில தலைமை தேர்தல் அதிகாரி உமேஷ் சின்காவே செய்தியாளர்களிடம் தெரி வித்தார்.<br /><br />Read more: http://viduthalai.in/e-paper/79779.html#ixzz30zFyj4oq<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-26071909405940752152014-05-07T06:27:33.200+05:302014-05-07T06:27:33.200+05:30
எஞ்சிய ஈழத் தமிழர்களுக்கும் இக்கதியா?
இலங்கை அர...<br /><br />எஞ்சிய ஈழத் தமிழர்களுக்கும் இக்கதியா?<br /><br />இலங்கை அரசுக்குத் தலையாட்டுவதா இந்திய அரசு?<br /><br />மாநில அரசு தப்பி வந்தவர்களை சிறையிடுவதா?<br /><br />தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி கண்டனம்<br /><br />ஈழத் தமிழர், தமிழக மீனவர் பிரச்சினைகளில் காங்கிரஸ், பிஜேபி நிலைப்பாட்டில் வேறுபாடு கிடையாது!<br /><br />ஈழத் தமிழர் வாழ்வுரிமை நாளுக்கு நாள் மிகவும் மோசமடைந்து வருவது மிகவும் வேதனைக்கும், வெட்கத்திற்கும் உரியதாகிவருகிறது. அய்.நா. மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கா கொண்டு வந்து நிறைவேற்றிய தீர்மானம் காரணமாக இலங்கை இராஜபக்சே அரசு சர்வதேச நெருக்கடிக்கு ஆளாகும் நிலை அதற்கு ஏற்பட்டுள்ளது.<br /><br />பொருளாதாரத் தடை, மற்ற நாடுகளின் இலங்கைப் புறக்கணிப்பு போன்ற நிலைமை, இராஜபக்ஷே அரசுக்கு வரவிருக்கும் எரிச்சலில், அங்கு எஞ்சியுள்ள அப்பாவி ஈழத் தமிழர்களின்மீது காட்டத் துவங்கியுள்ளது.<br /><br />முன்புபோலவே, தமிழ் இளைஞர்களை வேட்டையாடி மீண்டுமொரு இன அழிப்பு அத்தியாயத்தை புதிதாகத் துவக்கியுள்ளதாக, அங்கிருந்து தப்பித்து இங்கு வந்துள்ள ஈழத் தமிழர்கள் இரத்தக் கண்ணீருடன் ஏடுகளுக்குப் பேட்டி தந்துள்ளனர்! இதைப்பற்றி, அமெரிக்கத் தீர்மான வாக்கெடுப்பில் அதைப் புறக்கணித்து, இலங்கை அரசுக்கு உதவிய, இந்திய அரசு இப்போதும் மவுனம் சாதிக்கிறது; இதற்காக தனது கண்டனக் குரலை எழுப்பி இருக்க வேண்டாமா?<br /><br />ஈழத் தமிழ்ப் பெண்களும் பாலியல் வன்கொடுமைகளுக்கு சிங்கள இராணுவம், காவல் துறை மூலம் ஆளாக்கப்படுவதாக, அங்கிருந்து தப்பித்து வந்துள்ள தமிழ்க் குடும்பத்தினர் கதறிக் கதறிக் கண்ணீர் வடித்துக் கூறும் அவலம் பற்றி, மத்திய அரசு ஈழத் தமிழர்களைப் பாதுகாப்போம் என்று கூறிடும் அரசு கை பிசைந்து, வாய் மூடி நிற்கலாமா - இலங்கை அரசு முன்?<br /><br />அது மட்டுமா? வெந்த புண்ணில் வேலைச் சொருகும் கொடுமைபோல தீவிரவாதத்திற்கு ஆதரவாகச் செயல்பட்டதாகக் குற்றம் சாட்டி, 16 தமிழ் அமைப்புக்கள், அதன் ஆதரவாளர்களான 424 பேர்கள்மீது தடைவிதித்ததோடு, உலக நாடுகள் அனைத்தும் இதுபோலவே அவ்வமைப்புகள், அந்த 424 தமிழர்கள் அனைவர்மீதும் தடைகளை விதிக்க வேண்டுமென அறிவிப்பு வேண்டுகோள் விடுத்துள்ளனர்!<br /><br />இதனை பிரிட்டன், கனடா போன்ற நாடுகள் ஏற்க முடியாது; என்று நிராகரித்து விட்டன. ஆனால் இந்திய - மத்திய அரசு அத்தடையை இங்கும் போட்டு, இராஜபக்சே அரசின் ஈழத் தமிழர் வாழ்வுரிமை பறிப்புக்கு மிகப் பெரிய அளவில் துணை போய் இருக்கிறது. எவ்வளவு பச்சை அக்கிரமம் இது?<br /><br />பயங்கரவாதிகள் என்று இராஜபக்சே அரசால் போலி முத்திரை குத்தப்பட்ட விடுதலைப்புலிகளே அங்கு இல்லை; முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டார்கள், சகஜ நிலை திரும்பி விட்டது என்று ராஜபக்ஷேக்கு சகஸ்ரநாமம் பாடிய மத்திய அரசு, இப்போது மேலும் ஒரு சர்வதேசத் தவறினை இழைத்துள்ளது. உலகத் தமிழர்கள் மட்டுமல்ல மனிதநேயம் உள்ள எவரும் மன்னிக்கவே மாட்டார்கள்.<br /><br />கெட்ட பின்பு ஞானம் சிலருக்கு வருவதுண்டு; மத்தியில் உள்ள காங்கிரஸ் அரசுக்கு வரவே இல்லை.<br /><br />இந்த நிலையில், தமிழக அரசோ, அவர்களுக்கு நாங்கள் சளைத்தவர்கள் அல்ல என்று கூறுவதுபோல், உயிருக்குத் தப்பி வந்த அந்த ஈழத் தமிழர்களை பாஸ்போர்ட் இல்லாமல் வந்தவர்கள் என்று குற்றம் சுமத்தி, காவல்துறை சிறை பிடிக்கச் செய்வது எவ்வகையில் நியாயம்? முற்றிலும் மனிதநேயமற்ற செயல் அல்லவா? அவர்களை அகதிகள் முகாம்களுக்குத்தானே கொண்டு சென்று அடைக்கலம் தந்து காப்பாற்ற முன் வந்திருக்க வேண்டாமா? இந்த அரசுகளின் போக்கை வன்மையாகக் கண்டிக்கிறோம். தப்பி வரும் தமிழர்களை குறைந்த பட்சம் அகதிகள் முகாமுக்காவது அனுப்பி, அவர்களது தீராத துயரங்களுக்கு மருந்திடும் மனிதநேயச் செயலை மாநில அரசு செய்ய முன்வர வேண்டாமா? தமிழர்கள்தான் உலகிலேயே நாதியற்ற இனமா? தமிழர்களே சிந்தியுங்கள். மனிதநேயம் காப்பாற்ற பெரும் குரல் கொடுங்கள்; தயங்காதீர்கள்!<br /><br />கி.வீரமணி<br />தலைவர், திராவிடர் கழகம்<br /><br />6.5.2014 சென்னை<br /><br />Read more: http://viduthalai.in/e-paper/79776.html#ixzz30zFmyuV0<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-54178519916372265802014-05-07T06:26:19.214+05:302014-05-07T06:26:19.214+05:30
(3) சட்டமன்றங்கள், நாடாளுமன்றத்தில் சிறுபான்மையின...<br />(3) சட்டமன்றங்கள், நாடாளுமன்றத்தில் சிறுபான்மையினர் நியமனம் செய்யப்படுவது போல திருநங்கையருக்கும் அந்த வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்றும்,<br /><br />(4) கல்வி, வேலைவாய்ப்பில் திருநங்கையர்க்குக் குறிப்பிட்ட அளவில் இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்றும் திருநங்கையர்களுக்கு வீடு கட்ட மனை, நிதி உட்பட அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும் என்றும் இம்மாநாடு மத்திய, மாநில அரசுகளை வற்புறுத்துகிறது என்பதுதான் அந்தத் தீர்மானம்!<br /><br />மாநாடுகளில் திராவிடர் கழகம் நிறைவேற்றும் தீர்மானங்கள் எல்லாம் பிற்காலத்தில் சட்டங்களாக வடிவம் பெற்று வந்துள்ளன. அந்த வரிசையில் இதுவும் முக்கியமானதாகும். அந்தக் கோவைப் பெண்கள் மாநாட்டில் ரேவதி என்ற திருநங்கை அவர்களும் கலந்து கொண்டு அவர்களின் பிரச்சினைகள் குறித்து கருத்துக் கூறும் வாய்ப்பும் அளிக்கப்பட்டது.<br /><br />அரவாணிகள் என்ற பெயரை திருநங்கைகள் என்று அழைத்து, அவர்களுக்கென்று வாரியம் அமைத்த சாதனைக்குச் சொந்தக்காரர் மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்களே.<br /><br />16ஆவது மக்களவைத் தேர்தல் தி.மு.க. அறிக்கையில்கூட, மிகவும் கவனமாக அவர்கள் பிரச்சினை முக்கியமாக இடம் பெற்றுள்ளது. மொத்தம் நூறு அம்சங்களைக் கொண்ட ஆவணக் காப்பகமான தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் 11ஆவது அம்சமாக அரவாணிகள் (Transgenders) என்ற தலைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.<br /><br />இந்தியாவிலேயே முதன்முதலாக கலைஞர் ஆட்சியில்தான் அரவாணிகள் எனப்படும் திருநங்கைகளுக்கு அங்கீகாரம் அளித்திடும் வகையில், அவர்களுக்குக் குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. அவர்களுக்குத் தேவைப்படும் அறுவை சிசிச்சையை இலவசமாகச் செய்வதற்கும் வழிவகை ஏற்படுத்தப்பட்டுள்ளது.<br /><br />மேலும் அரவாணிகள் நலவாரியம் ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சிகளின் தொடர்ச்சியாக; அரவாணிகளுக்கு தேசிய அளவில் உரிய அங்கீகாரம் பெற்றுத் தரும் வகையில், அவர்களுக்கு தி.மு.கழக ஆட்சிக் காலத்தில் வழங்கப்பட்ட சலுகைகள் அனைத்தையும் அகில இந்திய அளவில் வழங்கிட தி.மு.கழகம் பாடுபடும். மேலும், கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளிலும் அவர்களுக்கு உரிய இடம் வழங்கிடுவதோடு, அரவாணிகளை மூன்றாம் பாலினமாக அங்கீகரித்திட வேண்டுமென மத்திய அரசை தி.மு.கழகம் வலியுறுத்தும்.<br /><br />சமுதாயத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் பகுதியினர்மீது எப்பொழுதுமே உண்மையான திராவிடர் இயக்கத்திற்கு அக்கறை உண்டு என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டாகும்.<br />கோவை திராவிடர் கழக மாநாட்டுத் தீர்மானம் _- தி.மு.க. தேர்தல் அறிக்கை இவற்றைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத் தீர்ப்பும் இசைவாக வந்ததற்காக உள்ளபடியே மிக்க மகிழ்ச்சி அடைகிறோம்.<br /><br />உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் சுட்டிக் காட்டியதுபோல இது ஒரு முக்கிய மனித உரிமைப் பிரச்சினையும்கூட!<br /><br />உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் திருநங்கைகளின் சமூக பொருளாதாரப் பிரச்சினைகள் திருப்திகரமாக இல்லை என்று கூறப்பட்டுள்ளது. அது உண்மைதான் என்றாலும் கல்வி நிலையிலும் மிக மிகப் பின் தங்கிய நிலையில்தான் உள்ளனர்.<br /><br />திராவிடர் கழக மாநாட்டிலும் தி.மு.க. தேர்தல் அறிக்கையிலும் இவை குறிப்பிடப்பட்டுள்ளன. இவற்றை எல்லாம் கணக்கில் எடுத்துக் கொண்டு மத்திய, மாநில அரசுகள் அவர்களுக்கென்று ஒரு தனிச் சிறப்பான திட்டத்தை (Scheme) வகுத்து, அவர்களைச் சமூகத்தில் மதிக்கத்தக்க மனிதர்களாக மற்றவர்களுக்கு இணையானவர்கள் என்ற சமூக அங்கீகாரம் கிடைத்திட அவர்களின் கல்வி, சமுதாய, பொருளாதார நிலையை உயர்த்திட ஆவன செய்யுமாறு வலியுறுத்துகிறோம்.<br /><br />இந்தியாவில் முப்பது லட்சம் திருநங்கைகள் இருக்கின்றனர். அவர்கள் வாழ்வு புதிய திருப்பம் பெற வேண்டும்; பல்வேறு மூடநம்பிக்கைகளில் ஈடுபட்டு வரும் அந்தத் தன்மையிலிருந்து அவர்கள் விடுபட்டு, முற்போக்குத் திசையில் அவர்கள் அடி எடுத்து வைக்க வேண்டும். அவர்களில் படித்தவர்கள் இந்த வகையில் வழிகாட்ட வேண்டியதும் அவசியமாகும். கழகமும் இதில் கவனம் கொள்ளும்.<br /><br />- கி.வீரமணி,<br />ஆசிரியர்தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.com