tag:blogger.com,1999:blog-1474608369333206681.post3099800938741283215..comments2023-10-29T13:02:52.613+05:30Comments on தமிழ் ஓவியா: மதம் பாதி-அரசியல் பாதி-மடங்களில் டி.வி.க்கள்-ராம்தேவ் மருந்தில் மாட்டுக்கொழுப்புதமிழ் ஓவியாhttp://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-47466044163695835382011-06-22T18:20:57.792+05:302011-06-22T18:20:57.792+05:30விளக்கம் கேட்டு தாக்கீது உச்சநீதிமன்றம் அதிரடி உத்...விளக்கம் கேட்டு தாக்கீது உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு<br /><br />கறுப்பு பணத்தை மீட்கநடவடிக்கை எடுக்கக் கோரி யோகா குரு ராம்தேவ், கடந்த 4ஆம் தேதி டில்லி ராம் லீலா மைதானத்தில் பட்டினிப் போராட்டம் இருந்தார். ஆயிரக் கணக்கான ஆதரவாளர் களும் பட்டினிப் போராட்டம் நடத் தினர். <br /><br />ஆனால், அவர் யோகா நடத்த அனுமதி வாங்கிவிட்டு, உண்ணா விரத போராட்டம் நடத்தியதாக கூறி, அன்று நள்ளிரவில் காவல்துறையினர் அனைவரையும் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டு வீசியும் விரட்டியடித்தனர். ராம்தேவை டில்லியை விட்டு வெளி யேற்றினர்.<br /><br />தானாகவே உச்சநீதிமன்றம்<br /><br />இதுதொடர்பாக, பத்திரிகை செய் திகளின் அடிப்படையில் தானாக முன் வந்து வழக்கு ஒன்றை பதிவு செய்த உச்சநீதிமன்றம், ராம்லீலா மய்தானத் தில் தூங்கிக் கொண்டிருந்த போராட்டக்காரர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்ற வேண்டிய அவசியம் என்ன?<br /><br />மனித உரிமைகளை மீறிய இச்செயல் குறித்து மத்திய உள்துறை செயலாளர் ஜி.கே.பிள்ளை, டில்லி தலைமைச் செயலாளர் திரிபாதி, காவல்துறை ஆணையர் குப்தா ஆகி யோர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.<br /><br />காவல்துறை பதில் மனு!<br /><br />இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் காவல்துறையினர் பதில் மனு தாக்கல் செய்தன. அதில் கூறப்பட்டிருந்த தாவது:<br /><br />ராம்தேவ் சார்பில், யோகா வகுப் புகள் நடத்தப் போவதாக கூறி ராம்லீலா மய்தானத் தில் அனுமதி வாங் கப்பட்டிருந்தது. அதை மீறி அவர்கள் பட்டினி போராட்டம் நடத்தினர். ராம் லீலா மய்தானத்தில் 5,000 பேருக்கு வரை தான் அனுமதி அளிக் கப் பட்டிருந்தது.<br /><br />ஆனால், 20,000 பேர் கூடிவிட்டனர். இதை யடுத்து அங்கிருந்து ராம்தேவை பாதுகாப் பாக வெளியே அழைத்து செல்ல முயன்றபோது, தொண்டர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கற்களை எறிய ஆரம் பித்தனர்.<br /><br />இதனால் காவல்துறையினர் வேறுவழியின்றி 8 கண்ணீர் புகை குண்டை மட்டும் வீசினர். ராம்தேவ் ஆதரவாளர்கள்மீது தடியடி நடத்தப் பட்டதாக கூறப்படு வதும் தவறு. இவ்வாறு காவல்துறை யினரின் பதில் மனுவில் கூறப்பட்டிருந்தது.<br /><br />இந்த மனு, கோடைக்கால நீதிபதி கள் பெஞ்சான பி.சதாசிவம், ஏ.பி. பட்நாயக் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அதைத் தொடர்ந்து நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியதாவது:<br /><br />இந்த விவகாரத்தில், ராம்தேவ் தரப்பு விளக்கம் என்ன என்பது குறித்து அறிய விரும்புகிறோம்.<br /><br />அதனால் அவர் நடத்தும் பாரத் சுவாபிமான் டிரஸ்ட் தனது தரப்பு விளக்கத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவேண்டும். வழக்கின் அடுத்தக் கட்ட விசாரணை ஜூலை 11ஆம் தேதி நடைபெறும்.<br /><br />இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.<br /><br /> ----"விடுதலை” 21-6-2011தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.com