tag:blogger.com,1999:blog-1474608369333206681.post2873610195823912368..comments2023-10-29T13:02:52.613+05:30Comments on தமிழ் ஓவியா: இத்தாலிக்குக் கிட்டப் பார்வை, இலங்கைக்கு எட்டாப் பார்வையா! தமிழ் ஓவியாhttp://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comBlogger46125tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-68722445914666655782013-03-21T05:49:03.254+05:302013-03-21T05:49:03.254+05:30
தலையெழுத்தாம்
ஒருத்தரைப் போய் ஏண்டா உன் பையன் ப...<br />தலையெழுத்தாம்<br /><br /><br />ஒருத்தரைப் போய் ஏண்டா உன் பையன் படிக்கவில்லை என்றால், அவன் தலையெழுத்து அவ்வளவு தான்; நமக்கெல்லாம் ஏதுங்க படிப்பு; அதெல்லாம் பார்ப்பானுக்குத்தான் என்பான்.<br /><br />(குடிஅரசு, 6.7.1968)<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-72455230088511506252013-03-21T05:47:44.794+05:302013-03-21T05:47:44.794+05:30
வந்துட்டாரய்யா நட்ராஜ் அய்யர்வாள்!
தமிழ்நாடு அர...<br />வந்துட்டாரய்யா நட்ராஜ் அய்யர்வாள்!<br /><br /><br />தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள தேர்வு முறையில் தமிழ் மொழி தூக்கி எறியப்பட்டுவிட்டது - இதனால் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்களுக்குப் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று கூறி திராவிடர் கழகம் தமிழ்நாடு முழுவதும் போராட்டத்தை நடத்தியது (மார்ச் 18, 19).<br /><br />தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளார். வேறு சில தலைவர்களும் எதிர்ப்பு களை அறிக்கையின்மூலம் தெரிவித்தனர்.<br /><br />நெருக்கடி முற்றியது என்றவுடன், தமிழைப் புறந்தள்ளும் திட்டத்திற்குக் கடைசி கையொப்பமிட்டு ஓய்வு பெற்ற முன்னாள் தலைவர் இப்பொழுது முழுக்கைச் சட்டையை மடக்கி விட்டுக்கொண்டு ஒன்றும் தெரியாத பாப்பாத்தி போட்டுக்கிட்டாளாம் தாழ்ப்பாள்! என்கிற தோரணையில், தாம் செய்த தமிழ் ஒதுக்கலுக்கு வக்காலத்து வாங்கிக்கொண்டு வந்துள்ளார். அவாளின் இனமலரோ எட்டுப் பத்தி தலைப்புக் கொடுத்து செய்தியையும் வெளியிட் டுள்ளது.<br /><br />வெண்டைக்காய் விளக்கெண்ணெய் - கத்தாழை களைக் குழைத்து சமாதானம் சொல்ல முயற்சிக்கும் திருவாளர் நட்ராஜ் அய்யர்வாளுக்குச் சில கேள்விகள்:<br /><br />1. பிரிவு -2 (குரூப்-2) தேர்வில் இருந்து வந்த பொதுத் தமிழ் முழுவதும் நீக்கப்பட்டுள்ளதா - இல்லையா?<br /><br />2. கிராம நிர்வாக அலுவலர் தேர்வில் இடம் பெற்றிருந்த பொதுத் தமிழ் முழுவதும் அகற்றப்பட் டுள்ளதா - இல்லையா?<br /><br />3. பிரிவு நான்கில் (குரூப்-4) இதுவரை தமிழில் கேட்கப்பட்டு வந்த 100 வினாக்களுக்குப் பதில் 50 வினாக்களாகக் குறைக்கப்பட்டுள்ளதா - இல்லையா?<br /><br />அறிவு நாணயமாக சுற்றி வளைத்து மூக்கைத் தொட முயற்சிக்காமல், நேரிடையாக திருவாளர் நட்ராஜ் அய்யர்வாள் பதில் சொல்லுவாரா?<br /><br />அய்யர்வாளுக்கு வக்காலத்து வாங்கும் இ(தி)னமணி, இ(தி)னமலர் அய்யர்வாள்களும்தான் பதில் சொல்லட்டுமே பார்க்கலாம்.<br /><br />ஈழத் தமிழர்களுக்காகப் போராட்டம் ஒரு பக்கம் - உள்ளூர் தமிழர்களுக்காகப் போராட வேண்டிய நெருக்கடி இன்னொரு பக்கம்.<br /><br />இரண்டுக்குள்ளுமே ஆரியக் கொடுக்கு இருக் கிறதே - இதனைத் தமிழர்கள் புரிந்துகொள்ள வேண்டாமா?<br /><br />குறிப்பு: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர் வாணையம் இணைய தளத்தில் வெளியிட்டுள்ள 72 பக்கங்களையும் படித்துவிட்டுதான் இந்தக் குற்றச்சாற்றை முன்வைத்துள்ளோம்.<br /><br />கூடுதல் செய்தி (Tail Piece)<br /><br />திடீர் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர் வாணையத்தின் இணைய தளத்திலிருந்து இந்தப் பகுதி இப்பொழுது நீக்கப்பட்டுள்ளது - மாற்றம் வந்தால் சரி!தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-7334463038644318972013-03-21T05:45:24.812+05:302013-03-21T05:45:24.812+05:30
ஈழத் தமிழர் பிரச்சினை: திரித்துக் கூறும் திருவாளர...<br />ஈழத் தமிழர் பிரச்சினை: திரித்துக் கூறும் திருவாளர்களுக்கு கலைஞர் கண்டனம்!<br /><br /><br />சென்னை, மார்ச் 20- ஈழத் தமிழர் பிரச்சினையில் இந்தியா என்ன செய்யவேண்டும் என்று தாம் கூறியதைத் திரித்துக் கூறும் கூட்டத்துக்கு தி.மு.க. தலைவர் கலைஞர் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அறிக்கை வருமாறு:<br /><br />இலங்கை அரசாலும், இலங்கை அரசின் நிர்வாகத்தில் உள்ளவர்களாலும், இலங்கைத் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை போர்க்குற்றங்கள் என்றும், இனப் படுகொலை என்றும் பிரகடனப்படுத்த வேண்டும் என்றும்;<br /><br />நம்பகத்தன்மை வாய்ந்த சுதந்திரமான பன்னாட்டு ஆணையம் ஒன்றை அமைத்து, குறிப்பிட்ட காலவரை யறைக்குள் இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்கள், மனித இனத்துக்கு எதிரான குற்றங்கள், பன்னாட்டு மனித உரிமை மற்றும் மனிதாபிமான சட்ட மீறல்கள் மற்றும் இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான இனப் படுகொலைகள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும்;<br /><br />திராவிட முன்னேற்றக் கழகம் இரண்டு திருத்தங்களை வலியுறுத்தியது. அந்தத் திருத்தங்களை, இந்திய நாடாளு மன்றத்தில் உடனடியாகத் தீர்மானமாக நிறை வேற்றி; அமெரிக்கத் தீர்மானத்தில் அந்தத் திருத்தங்களையும் இணைத்து ஆதரித்திட வேண்டும் என்று 19.3.2013 அன்று நான் சொன்னேன். உள்நோக்கத்துடன் திரிப்பதா?<br /><br />நான் தெளிவாகச் சொன்னதை, முதல மைச்சர் ஜெயலலிதாவும், ஒரு சில ஊடகங் களும் சரியாகப் புரிந்து கொள்ளாமலோ அல்லது உள்நோக்கத்துடனோ; அய்.நா. மனித உரிமை ஆணையத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதற்குப் பதிலாக, இந்திய நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினாலே போதும் என்று நான் சொன்னதைப் போல விமர்சனம் செய்திருப்பது கண்டனத்திற்குரியதாகும்.<br /><br />இலங்கையில் ராஜபக்சே அரசால் நடத் தப்பட்டது இனப் படுகொலையே என்பதை யும், நம்பகத் தன்மை வாய்ந்த சுதந்திரமான பன்னாட்டு ஆணையம் ஒன்றை அமைக்க வேண்டும் என்பதையும், அந்த ஆணையம் குறிப்பிட்ட காலவரையறைக்குள் விசார ணையை நடத்தி முடிக்க வேண்டும் என்ப தையும் முதலில் இந்திய அரசு ஏற்றுக் கொண்டு, அதனையொட்டி நாடாளுமன்றத் தில் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றிட வேண் டும். அந்தத் தீர்மானத்தை அமெரிக்கத் தீர்மானத்தோடு இணைத்து, அய்.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் கொண்டு வர வேண்டுமென்பதுதான் நமது விருப்பமும் வேண்டுகோளுமாகும்.<br /><br />ஆம்னெஸ்டி இண்டர்நேஷனல் எதிர்ப்பு!<br /><br />ஆனால் இலங்கையின் போர்க்குற்றங்கள் குறித்த சர்வதேச விசாரணை வேண்டும் என்ற கோரிக்கை, அமெரிக்கத் தீர்மானத்தில் இப் போது இடம் பெறவில்லை. அதற்குப் பதிலாக, இலங்கை அரசே விசாரணை நடத்த வேண் டுமென்று கூறப்பட்டுள்ளது. அமெரிக்கத் தீர்மானம் நீர்த்துப் போனதற்குப் பின்னணியில் இந்தியாவும் உள்ளதாக ஆம்னெஸ்டி இண்டர்நேஷனல் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.<br /><br />நீர்த்துப்போன தீர்மானம்!<br /><br />இப்படி அமெரிக்கத் தீர்மானம் பெருமள வுக்கு நீர்த்துப் போய்விட்டது. அய்.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் நடைபெற்ற ஆய் வின்போது, இலங்கை அரசு சார்பில் வைக் கப்பட்ட அறிக்கையை, இந்தியாவின் சார்பில் முழுவதுமாக ஏற்றுக் கொண்டு பாராட்டு தெரி விக்கப்பட்டதன் அடிப்படையிலேயே அமெரிக் கத் தீர்மானம் நீர்த்துப் போகச் செய்யப்பட்டிருக்கிறது.<br /><br />தி.மு.கழகம் முன்வைத்த திருத்தங் களும் மத்திய அரசால் முறையாக பரிசீலிக் கப்படவில்லை. இந்தச் சூழ்நிலைகளிலேதான் தி.மு.கழகம் தனது நிலைப்பாட்டை அறிவித்து, அய்க்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்து விலகிக் கொள்வது என்ற முடிவை மேற் கொண்டது. இதனைத் தெளிவாக தி.மு.கழகம் தெரிவித்திருந்த போதிலும் - வேண்டுமென்றே சிலர் திட்டமிட்டு - திசைதிருப்பி விஷமப் பிரச்சாரம் செய்வது கண்டிக்கத்தக்கது!<br /><br />- இவ்வாறு தி.மு.க. தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-70113245040769769062013-03-19T18:52:43.406+05:302013-03-19T18:52:43.406+05:30
காலத்துக்கேற்ற...
காலத்துக்கேற்ற மாறுதலுக்கு ஒத...<br />காலத்துக்கேற்ற...<br /><br /><br />காலத்துக்கேற்ற மாறுதலுக்கு ஒத்துவராதவன் வெற்றிகரமாய் வாழ முடியாது. மாறுதலுக்கு மனிதன் ஆயத்தமாய் இருக்கவேண்டும். முன்னேற்றம் என்பதே மாறுதல் என்பதை உணர்ந்த மனிதனே உலகப் போட்டிக்குத் தகுதியுடையவனாவான்.<br />_ (குடிஅரசு,26.1.1936)தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-82294710363609918592013-03-19T18:48:52.881+05:302013-03-19T18:48:52.881+05:30
காலச் சிலாசாசனம்!
உலக வரலாற்றில் எங்கும் கேள்வி...<br />காலச் சிலாசாசனம்!<br /><br /><br />உலக வரலாற்றில் எங்கும் கேள்விப்படாத இனப்படுகொலை இலங்கையில் ஈழத் தமிழர்களுக்கு சிங்களப் பேரினவாத அரசால் மிகக் கொடூரமான முறையில் நடத்தப்பட்டது.<br />இந்தியாவின் முன்னாள் பிரதமர்கள் இந்திராகாந்தியும், ராஜீவ் காந்தியும் இனப் படுகொலை (Genocide) என்ற சொல்லையே பயன்படுத்தியுள்ளனர்.<br /><br />இனப்படுகொலையை ஒரு நாடு செய்தால் அதில் எந்த நாடும் தலையிடலாம் - அது வெளிநாடு தலையிட்டக் குற்றமாகாது.<br /><br />உண்மை இவ்வாறு இருக்க, இந்திய அரசோ இனப்படுகொலை அரசைத் தட்டிக் கேட்பதற்குப் பதிலாக அந்த இனப்படு கொலை நாட்டை தமது நட்பு நாடாக அறிவிக்கிறது என்றால் - இந்தக் கொடுமையை என்ன சொல்ல!<br /><br />இன்றைய பேட்டியில் டெசோ தலைவர் கலைஞர் அவர்கள் மிகத் துல்லியமாகக் கோடிட்டுக் காட்டியது போல இந்தியாவும் போர்க் குற்றத்திற்கு இனப்படுகொலைக்கு உடந்தையாக இருந்த நிலையில், எதிர்காலத்தில் விசாரணைக்கு இந்தியா உட்படுத்தப்பட்டால் ஆச்சரியப்படுவதற் கில்லை.<br /><br />எத்தனையோ முறை இதமாக - பதமாக - போதுமானது என்பதை விடத் தாண்டி வாய்ப்புக் கொடுத்துப் பார்த்தும்கூட, இந்திய அரசின் போக்கில் எந்தவிதமான நேர்மை யான, மனித உரிமையுடன் மனிதநேயத் துடன் கூடிய போக்கோ, சிந்தனையோ அறவே யில்லை.<br /><br />வேறு வழியில்லை என்று உறுதியாகத் தெற்றென அறிந்த நிலையில்தான் டெசோ தலைவர் கலைஞர் அவர்கள் கடந்த 16ஆம் தேதி மத்திய அரசில் திமுக தொடர்வதில் இனியும் அர்த்தமில்லை என்றே அர்த்தமிக்க கருத்தினை ஆணித்தரமாக வெளியிட்டார். அதற்குப் பிறகாவது மத்திய அரசு சுதாரித்துக் கொண்டு தன்போக்கை மாற்றிக் கொண்டிருக்க வேண்டும்.<br /><br />தி.மு.க. தலைவரின் அந்த அறிக்கையை வரவேற்று தமிழர் தலைவர் - திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் அதே நாளில் (16.3.2013) அறிக்கை ஒன்றினை வெளியிட்டார்.<br /><br />கலைஞர் அவர்களின் அறிக்கை வெறும் பூச்சாண்டி அறிக்கையல்ல என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டதுடன் எந்த பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு என்றும் எச்சரித்திருந்தார்.<br /><br />எல்லாம் இந்திய அரசைப் பொறுத்தவரை - செவிடன் காதில் ஊதிய சங்காக ஆகி விட்டதால் தி.மு.க. ஓர் அறுவை சிகிச்சை முடிவினை எடுக்க நேர்ந்தது.<br /><br />தி.மு.க எடுத்த இந்த முடிவினை வரவேற்று திராவிடர் கழகத் தலைவர் அவர்கள் இன்று வெளியிட்ட அறிக்கையில், இது காலம் கருதி எடுக்கப்பட்ட ஞாலம் வரவேற்கும் முடி வாகும் என்று மிகச் சரியாகவே குறிப்பிட் டுள்ளார்.<br /><br />இனியாவது ஏற்றப்பாட்டுக்கு இறக்கப் பாடல் பாடுவதை நிறுத்தி விட்டு, உலகத் தமிழர்கள் ஒரே குரலில் ஈழத் தமிழர் உரிமையின் பக்கம் நிற்பார்களாக!<br /><br />தி.மு.க. இன்று எடுத்த முடிவு காலம் உள்ளவரை, உலகம் உள்ள வரை நிமிர்ந்து நிற்கும் காலக் கல்வெட்டாகும் - சிலா சாசனமும் ஆகும்! 19-3-2013தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-91239410192949493162013-03-17T19:06:05.881+05:302013-03-17T19:06:05.881+05:30
நமது எம்.ஜி.ஆர். முடிந்தால் பதில் சொல்லட்டும்!
...<br />நமது எம்.ஜி.ஆர். முடிந்தால் பதில் சொல்லட்டும்!<br /><br /><br /><br />நடைவண்டி நாயகர்களும் முந்தா நாள் மழையிலே நேற்று முளைத்த காளான்களும் டெசோவை நாடகம் என்று விமர்சிக்கலாமா? என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் சொல்லி விட்டாராம். அடேயப்பா, அ.இ.அ.தி.மு.க.வின் அதிகாரபூர்வ ஏடான டாக்டர் நமது எம்.ஜி.ஆர். தாண்டித் தோண்டி யில் விழுகிறது. தாம் தூம் என்று எகிறிக் குதிக்கிறது.<br /><br />நமது எம்.ஜி.ஆர். எழுத்தாளர்கள் ஜெ அம்மை யாரை சிக்கலில் நிறுத்தும் வேலையில் இறங்கவேண் டாம் என்று விடுதலை (21.2.2013) எச்சரித்திருந்தது.<br /><br />அம்மா மீது என்ன கோபமோ? மறுபடியும், மறுபடியும் வீண் சர்ச்சையில் ஈடுபட்டு, அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை சிக்கலில் மாட்டவைத்துக் கொண்டு இருக்கிறது அவ்வேடு!<br /><br />நமது எம்.ஜி.ஆர். ஏட்டுக்குச் சில கேள்விகள்:<br /><br />1. இலங்கையில் போரை நிறுத்தச் சொல்லுவது விடுதலைப் புலிகளைக் காப்பாற்றவே என்று சொன்னவர் யார்? இப்பொழுது போரினால் ஈழத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு விட்டார்களே என்று கிளிசரின் கண்ணீர் விடுவது யார்?<br /><br />2. போர் என்று சொன்னால் பொதுமக்கள் சாவது சகஜம் என்று சொன்னவர் யார்?<br />இப்பொழுது ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்டது குறித்து லிட்டர் லிட்டராகக் கண்ணீர் சிந்துவது யார்?<br /><br />3. இலங்கை உள்விவகாரத்தில் இந்தியா ஈடு பட்டால் நாளை இந்தியா விவகாரத்தில் மற்ற நாடுகள் தலையிடாதா? அய்ந்து முறை முதலமைச்சராக இருந்த கருணாநிதிக்கு இது கூடத் தெரியாதா? என்று கேள்வி கேட்டவர் யார்?<br />இதற்கு மாறாக முரண்பட்டுப் பேசுவது யார்?<br /><br />சாட்சாத் அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழ்நாடு முதலமைச்சருமான செல்வி ஜெயலலிதா அவர்கள்தானே!<br /><br />முடிந்தால் இவற்றை மறுத்துவிட்டு எழுந்து முண்டா தட்டட்டும் நமது எம்.ஜி.ஆர்.<br /><br />முடியவில்லை என்றால், மூலையில் ஒடுங்கிக் கிடக்கட்டும். இல்லை என்றால் வண்டி வண்டியாக எழுத நேரிடும்.<br /><br />கடைசியில் அம்மையார் அவர்களின்பாடுதான் திண்டாட்டம்!தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-77939526518486720052013-03-17T06:47:41.112+05:302013-03-17T06:47:41.112+05:30படிப்பு என்றால் பாரபட்சம். சொத்துக் கொடுப்பதில் தய...படிப்பு என்றால் பாரபட்சம். சொத்துக் கொடுப்பதில் தயக்கம்; பலர் கொடுப்பதேயில்லை!<br /><br />ஆடிப்பாடி, ஓடிப்பதுங்கி வெளியிடங்களுக்குச் சென்று விளையாட பெண்ணுக்கு அனுமதியில்லை. வீட்டுக்குள் முடக்கப்படுவதோடு, வீட்டு வேலைகளிலும் முடக்கப்படுகிறாள்.<br /><br />பருவ வயது வந்து பருவம் அடைந்துவிட்டால், பெண்ணுக்கு எல்லாமே பறிக்கப்படுகிறது. அடுத்த ஆணுடன் பேசக் கூடாது, பழகக் கூடாது. வெளியிடங்களுக்கு செல்லக் கூடாது. பெண்ணின் கல்வி பருவம் அடையும் வரை மட்டுமே என்ற கொடுமையான காலம் தற்போது கடந்துவிட்டது. இப்போது பெண்களின் படிப்பு தொடரப்படுகிறது. சற்றேறக்குறைய ஆண்களைப் போலவே கற்கின்றனர். வெளியிடங்களுக்குச் செல்கின்றனர்.<br /><br />பெண் கற்றால், வேலைக்குச் சென்றால் அவளின் திருமணச் சுமையும், தடையும் குறைகிறது என்பது இந்த மாற்றத்திற்கான பெருங்காரணம். என்றாலும் கிராமப்புறங்களில் இம்மாற்றம் குறைவே!<br /><br />பெண்களும் சரி, பெற்றோரும் சரி, மற்றவர்களும் சரி கீழ்க்கண்டவற்றை ஆழமாக உள்ளத்தில் பதிக்க வேண்டும்; செயல்படுத்த வேண்டும்.<br /><br />1. பால் வேறுபாடு என்பது இயற்கையானது. இதனால் ஆணுக்குப் பெண் -எந்த வகையினும் இளைப்பு அல்ல.<br /><br />2. பெண் பலம் குறைந்தவள் என்பது மூடநம்பிக்கை. பயிற்சி மேற்கொள்ளும் பெண் ஆணைவிட பலசாலி என்பதே அனுபவ உண்மை.<br /><br />3. பெற்ற நம் பிள்ளைகளில் ஆண் பெண் என்று பாகுபடுத்தி நடத்துவது மிகப் பெரும் தவறு. நம் பிள்ளை எதுவானாலும் சமமாக நடத்த வேண்டும். பெற்ற பிள்ளைகளிடம் வேறுபாடு காட்டுவது மனிதத் தன்மையில்லை! ஏன், விலங்குகள்கூட வேறுபாடு காட்டுவதில்லை!<br /><br />4. ஆணைப்போலவே பெண்ணுக்கும் கல்வியளிக்க வேண்டும்; உணவு உடை அளிக்கவேண்டும்.<br /><br />5. பருவம் அடைதல் என்பது ஓர் இயற்கை நிகழ்வு. அதன்பின் பெண்ணை முடக்குதல் மூடச் செயல். மாதம் மூன்று நாள்கள். அதற்கான பஞ்சுப் பட்டைகள் வந்துவிட்டன. அணிந்து கொண்டு ஆணைப் போலவே சாதிக்கலாம்.<br /><br />6. பருவத்திற்குப் பின் ஒழுக்கம் தவறினால், ஆண் பாதிக்கப்படுவதில்லை; பெண் கருச்சுமந்து பழியும் சுமக்கிறாள். இதுவே, பெண்ணுக்கு இயற்கையில் அமைந்த மாபெரும் பாதகநிலை. இதைக் கண்டே பெண்ணும் அஞ்சுகிறாள்; பெற்றோரும் அஞ்சுகின்றனர்.<br />இந்தப் பாதிப்பு இயற்கையாய் பெண்ணுக்கு இருப்பதால், பெண்கள்தான் கூடுதல் எச்சரிக்கையாய் இருந்து, ஆணின் மோசடிக்கு ஆளாகாமல் காத்துக் கொள்ள வேண்டும்.<br /><br />தப்பான நோக்கத்தில் உறவுக்கார ஆண் பழகினாலும், வெளி ஆண் பழகினாலும் செருப்பைக் கையில் எடுத்துப் பாருங்கள். மிரண்டு ஓடுவார்கள். செருப்பைவிட சிறந்த பாதுகாப்பு பெண்ணுக்கு வேறு இல்லை.<br /><br />தப்பாக தொடும்போதே வெறுத்துத் தள்ளினால் விலகிச் செல்வர். அனுமதித்தால் அடுத்தடுத்து முயன்று கெடுத்து ஒழிப்பர். இந்த நுட்பம் புரிந்து நடந்தால் பெண்கள் பெரும்பாலும் பாதிக்கப்படமாட்டார்கள்.<br /><br />பலாத்காரமாய் சிதைக்கப்படுவதற்கு பெண் பொறுப்பாளியல்ல. என்றாலும் அச்சூழலை பெண் முடிந்த அளவு தவிர்க்க வேண்டும். பெற்றோர்கள் இளமை முதலே பெண்களைத் தற்காத்துக் கொள்ள பழக்க வேண்டும்.<br /><br />விபத்துகளுக்கு அஞ்சி வாகனம் ஓட்டாமல் இருக்க முடியாது, மின்சாரத்தைப் பயன்படுத்தாமல் இருக்க முடியாது. அதேபோல், அயோக்கியர்களின் பாலுறவு வன்முறையும் ஒரு விபத்தே! அதை தவிர்க்கவும், தற்காக்கவும் முயல வேண்டுமேயன்றி, அஞ்சி அடங்கி ஒடுங்கிவிடக்கூடாது.<br /><br />7. ஆண்களுக்கு இந்த வேலை பெண்களுக்கு இந்த வேலை என்று பிரிக்காமல் பெண்களையும் அவர்கள் விருப்பப்படி எந்த வேலையும் செய்யவும், சாதிக்கவும் பழக்கவும் அனுமதிக்கவும் வேண்டும்.<br /><br />8. பெண்ணின் விருப்பம் இன்றியும், விருப்பம் அறியாமலும் மணம் முடிக்கக் கூடாது. வாழ விரும்புகின்றவள் விருப்பம் முக்கியம். காரணம், வாழ்க்கை அவருடையது. பிள்ளைகள் வாழ்வை பெற்றோர்கள் வாழ்வதோ, தீர்மானிப்பதோ கூடாது. பெற்றோர் சிறந்த ஆலோசகர்களாய் மட்டுமே இருக்க வேண்டும்; ஆதிக்கவாதிகளாய் இருக்கக் கூடாது.<br /><br />பெண்ணே! பெண்ணே!<br />துணிந்துநில்! தடைகளை தகர்!<br />துணிவை துணை கொள்!<br />துணிவே துணை<br /><br />என்பார் தமிழ்வாணன். பெண்களுக்கு அதுவே துணை! கணவன்கூட துணிவுக்கு அடுத்தத் துணைதான்! துணிந்தால் துக்கமில்லை. அஞ்சுதல் அடிமைப்படுத்தும்; துணிவு தூக்கி நிறுத்தும்! இயற்கை இடர்களை ஏற்றித்தள்ளு! துணிவை துணையாக்கு! பிஞ்சுப் பிள்ளைகள் இவற்றை நெஞ்சில் நிறுத்த வேண்டும்! அஞ்சாது அனைத்தையும் சந்திக்க வேண்டும்! ஆயுள் முழுக்கச் சாதிக்க வேண்டும்!தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-86537946442116878032013-03-17T06:47:36.115+05:302013-03-17T06:47:36.115+05:30பால் வேற்றுமை பாதிப்பா?
- சிகரம்
ஆண் பெண் பால்...பால் வேற்றுமை பாதிப்பா?<br /> <br /><br />- சிகரம்<br /><br />ஆண் பெண் பால் வேறுபாடு இயற்கையாய் அமைந்தது. இயற்கையை மாற்ற முடியாது. ஆனால், இயற்கையை எண்ணித் தளராமல், உறுதியுடன் முயன்றால் சாதனை என்பது உறுதி.<br /><br />நடைமுறையில் இந்த பால் வேறுபாட்டை பச்சிளங் குழந்தையாய் இருக்கும்போது பதியச் செய்வது தவறு. பெற்றோரும் மற்றோருமே இத்தவற்றைச் செய்கின்றனர்.<br /><br />பிறந்தவுடனே ஆண் என்றதும் சிறப்புக் கொஞ்சலும், சிறப்பு வசதியும், சிறப்புக் கவனிப்பும் காட்டப்படுகின்றன.<br /><br />பெண் பிறந்தால் பிதுக்குகிறார்கள் உதட்டை!<br /><br />பெண் பிறந்த செய்தி கேட்டால் பார்க்கக்கூட வராத தந்தை உண்டு. கள்ளிப்பால் மூலம் கதையை முடிக்கவும் சிலர் தயங்குவதில்லை. அதிலும் கொஞ்சம் இரக்கங்கொண்ட தாய், தந்தையர் குப்பையோடு சேர்த்துக் கொட்டி விடுகின்றனர். ஆக, பெண்ணைக் குப்பையாகக் கருதும் மனநிலை இன்னும் இருக்கவே செய்கிறது. இது அங்கொன்று இங்கொன்றுதானே தவிர, பொதுவாக இப்படியில்லை.<br /><br />என்றாலும், உணவு கொடுக்கும்போதும், உடை கொடுக்கும்போதும், படுக்க படுக்கை தரும்போதும் ஆணுக்கு உயர்வு, பெண்ணுக்குத் தாழ்வு. இது பெரும்பாலும் நடக்கிறது.<br /><br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-89884787437955766352013-03-17T06:46:35.119+05:302013-03-17T06:46:35.119+05:30அறிவுச் சுட்டியின் அதிரடிக் கேள்வி
வெள்ளைகாரங்க...அறிவுச் சுட்டியின் அதிரடிக் கேள்வி<br /> <br /><br />வெள்ளைகாரங்க நாடு குளிரா இருக்குமாம்; அதனால் அவங்க நாட்டுக் குழந்தைங்க பள்ளிக்கூடம் போகும்போது 'சூ' (shoe) போடுறாங்க. நம்ம நாடு சூரியன் சுட்டெரிக்கிற நாடு சும்மாவே வேர்த்துக் கொட்டுது; நம்ம குழந்தைங்களுக்கு எதுக்கு 'சூ' போட்டுவிடுறாங்க?தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-47707880656638753872013-03-17T06:44:49.284+05:302013-03-17T06:44:49.284+05:30
பாலியல் குற்றவாளிகளுக்கு அதிகபட்சமாக மரண தண்டனை அ...<br />பாலியல் குற்றவாளிகளுக்கு அதிகபட்சமாக மரண தண்டனை அவசரச் சட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல்<br /><br /><br />ஒரு பெண்ணின் இறப்புக்கு அல்லது நிரந்தர சுயநினைவற்ற நிலைக்கு வழிவகுக்கும் பாலியல் பலாத்காரக் குற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை விதிப்பதற்கான அவசரச் சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. டெல்லியில் கடந்த டிசம்பர் மாதம் 23 வயது கல்லூரி மாணவி கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான சட்டங்களைக் கடுமையாக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இது தொடர்பான பரிந்துரைகளை அளிக்க நீதிபதி வர்மா குழுவை மத்திய அரசு அமைத்தது. இக்குழு அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில் ஓர் அவசரச் சட்டத்தை அரசு உருவாக்கியுள்ளது.<br /><br />இந்நிலையில், மத்திய அமைச்சரவைக் கூட்டம் டெல்லியில் கூடி விவாதித்தது. அப்போது, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான அவசரச் சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் சாட்சிகள் சட்டம் ஆகியவற்றில் திருத்தங்களைச் செய்ய இந்த அவசரச் சட்டம் வழிவகை செய்கிறது. அடுத்ததாக, அவசரச் சட்டத்தைப் பிறப்பிக்குமாறு குடியரசுத் தலைவருக்கு மத்திய அரசு பரிந்துரை செய்ய உள்ளது.<br /><br />இந்த அவசரச் சட்டத்தில், பலாத்காரம் என்ற வார்த்தைக்கான விளக்கத்தை பாலியல் தாக்குதல் என மாற்றுதல், பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடும் குற்றவாளிக்கு தண்டனையை 7 ஆண்டுகளில் இருந்து அவரது ஆயுள் காலம் வரை என்று மாற்றுதல், ஆசிட் வீசுவதைத் தனிக் குற்றமாக மாற்றி அதற்குக் குறைந்தபட்சம் 10 ஆண்டு முதல் அதிகபட்சமாக ஆயுள் தண்டனை வரை விதிப்பது உள்ளிட்ட மாற்றங்கள் இடம் பெற்றுள்ளன. மேலும், ஒரு பெண்ணின் இறப்புக்கு அல்லது நிரந்தர சுயநினைவற்ற நிலைக்கு வழிவகுக்கும் பாலியல் பலாத்காரக் குற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை விதிப்பதற்கும் இச்சட்டம் வழிவகை செய்கிறது. இதுபோன்ற குற்ற வழக்குகளில் குறைந்தபட்சமாக 20 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படலாம். அதைக் குற்றவாளியின் இறப்பு வரை சிறைத் தண்டனை அல்லது மரண தண்டனையாக மாற்றுவது நீதிமன்றத்தின் சிறப்புரிமையாக இந்த அவசரச் சட்டம் வழிவகுத்துள்ளது, குறிப்பிடத்தக்கது.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-36306220616409675072013-03-17T06:43:12.940+05:302013-03-17T06:43:12.940+05:30
சிரிக்கலாம்...
பள்ளி மாணவன்: எங்கப் பாட்டி ந...<br />சிரிக்கலாம்...<br /><br /><br />பள்ளி மாணவன்: எங்கப் பாட்டி நேத்து சாமி வந்து ஆடுச்சுடா. ரொம்ப நேரமாகியும் மலை ஏறவே இல்லை.<br /><br />அவன்நண்பன் : டேய்... உங்கப் பாட்டி பஸ் ஏறுவதே ரொம்ப சிரமம். இதுல எங்கடா மலை ஏறுவது?<br /><br />தேநீர் கடையில் ஒருவர் : நிறைய காவடிகளைத் தூக்கிக்கிட்டு, கூட்டம் கூட்டமா போறாங்களே... இவ்வளவு காவடிகளா இருக்கு?<br /><br />மற்றவர் : ஆமாம் நண்பா! புஷ்பக் காவடி, பன்னீர் காவடி, இளநீர் காவடின்னு நிறைய இருக்கு. எல்லாக் காவடியையும் தூக்கிட்டுப் போயிட்டு, கடைசியா அன்னக் காவடியா இந்த டீக்கடையில தான்உட்கார்ந்திருப்பார்கள். அய்யப்பசாமி : கல்லும், முள்ளும் காலுக்கு மெத்தை.<br /><br />அறிவுச்சாமி: தம்பி அத கல்லு, முள்ளு மேல நின்னு சொல்லுங்க... சூப்பர் டீலக்ஸ் பஸ்ல இருந்து சொல்லாதீங்க... - வி.சி.வில்வம்தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-74839977949984400292013-03-17T06:42:27.171+05:302013-03-17T06:42:27.171+05:30
இந்தி நுழைப்பு
மது விலக்குப் போலவே இந்தி நுழைப...<br />இந்தி நுழைப்பு<br /><br /><br /><br />மது விலக்குப் போலவே இந்தி நுழைப்பு என்கிற திரு. ஆச்சாரியார் திட்டமும் மக்களது கல்வி அறிவைப் பாழ்படுத்த வேண்டுமென்றே கொண்டு வரப்பட்டதாகும்.<br /><br />பார்ப்பனர்களின் மொழியாகிய சமஸ்கிருதத்தைப் புகுத்தினால், அதற்குப் பெரிய எதிர்ப்பு ஏற்படும் எனக் கருதியே பார்ப்பன இன உணர்ச்சிக்கு அடிப்படையான சமஸ்கிருதத்தின் எதிரொலியான இந்தியை நுழைக்க முயற்சித்தார் திரு. ஆச்சாரியார்.<br /><br />இந்தியின் ரகசியம் என்ன என்பதையும், குடிஅரசின் மூலம் விளக்கிய பிறகே உண்மையை உணரலாயினர் மக்கள்.<br /><br />திரு. ஆச்சாரியார் பல முறை (லயோலா கல்லூரியில் ஒருமுறை) பேசும்போது, சமஸ்கிருதத்தின் அலங்கார அணிகளை நீக்கிப் பார்த்தால், அதுதான் இந்தி என்றும், இந்திக்கும் சமஸ்கிருதத்திற்கும் எவ்வித வேறுபாடும் கிடையாது என்றும் கூறினார்.<br /><br />இந்தியை ஒழிக்க பெரிய கிளர்ச்சி செய்து, 3,000 பேருக்கு மேல் ஆண்கள், பெண்கள், முதிய வர்கள், குழந்தைகள் உட்பட சிறை சென்று, இரண்டு உயிர்களைப் பலி கொடுக்க வேண்டி வந்தது.<br /><br />செகண்டரி ஸ்கூல் அய்ஸ் ஸ்கூல் ஒழிப்பு:<br /><br />கிராமங்களில் இருந்து வந்த 60 பிள்ளைகளுக்குக் குறைந்த மத்திய தர இங்கிலீஷ் பள்ளிக்கூடங்களும்,<br />60 பிள்ளைகளுக்குக் குறைந்த உயர்தர இங்கிலீஷ் பள்ளிக்கூடங் களும் எடுக்கப்பட்டு விட வேண் டும் என்று உத்தரவு பிறப்பித்தார்.<br /><br />60 பிள்ளைகள் கிராமத்தில் கிடைப்பது, அதுவும் 1938இல் என் றால், அது பெரிய சிரமமான காரிய மாகும் என்பதை நாம் யூகிக்க முடியும்.<br /><br />அந்த சாக்கை வைத்துக் கொண்டு பள்ளியை இழுத்து மூடச் சொன் னார் மகானுபாவர் ஆச்சாரியார் என்றால், அவரது மனுதர்ம மனப்பான்மைக்கு வேறு சான்று கூறவா வேண்டும்?<br /><br />சர்க்கார் அனுமதி பெற்றுப் பொது ஜனங்கள் நிர்வாகத்தில் நடைபெற்று வந்த பள்ளிகளை ஒழிக்க, சரியாக நடக்காத பள்ளிகள் அத்தனையும் இழுத்து மூடப்படும் என்றார்.<br /><br />திருத்தி செவ்வனே நடைபெறும் படி செய்யப்படும் என்று கூறவில்லை திரு. ஆச்சாரியார் என்பதைக் கவனியுங்கள்.<br /><br />கோயம்புத்தூரில் இருந்த (ஜஸ்டிஸ் கட்சி ஆட்சியில் துவக்கப்பட்டது) காட்டுத்துறைக் கல்லூரி (Forest College) யை இழுத்து மூடி விடும்படிச் செய்தார் திரு. ஆச்சாரியார்.<br /><br />இதனால் பயனடைந்தவர்கள் அத்தனை பேரும் தமிழர்கள் என்பதே இதற்கு அடிப்படையான காரணமாகும்.<br /><br />வகுப்புவாரி பிரதிநிதித்துவ முறையை ஒட்டி, தமிழர்களாகிய நமது பிள்ளைகளும் சரிசமமான வாய்ப்புப் பெற்றுப் படிக்க வைக்கச் செய்த காலேஜ் செலக்ஷன் கமிட்டியை (ஜஸ்டிஸ் கட்சியாரால் ஏற்படுத்தப்பட்டது) ஒரே வரியில் உத்தரவு போட்டு, ஒழித்துக் கட்டித் தமிழர்களது கல்லூரிப் படிப்பிற்குக் கல்லறை எழுப்பினார் காருண்ய சீலர் திரு. ஆச்சாரியார்.<br /><br />கம்யூனல் ஜி.ஓ. என்ற வகுப்புவாரி பிரதிநிதித்துவ உத்தரவு திரு. ஆச்சாரியார் ஆட்சியில் குற்றுயிரும் குலையுயிருமாகத்தான் இருந்தது.<br /><br />ஆச்சாரியார் ஆட்சியின் கொடுமைகள் நூல் பக்கம் 13<br /><br />க. பழநிசாமி, தெ. புதுப்பட்டி (கி.ஆ)<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-2892621869541917772013-03-17T06:40:33.034+05:302013-03-17T06:40:33.034+05:30நெருப்பாறு
நெருப்பாறு என்ற தலைப் பில் சின்னக்குத...நெருப்பாறு<br /><br />நெருப்பாறு என்ற தலைப் பில் சின்னக்குத்தூசி அவர்கள் எழுதிய பல்வேறு காலக் கட்டங்களில் எழுதிய கட்டுரை களின் தொகுப்பே நெருப்பாறு என்ற தலைப்பைக் கொண் டுள்ளது. தேச துரோகிகள் மீதும், சமூக விரோதிகள் மீதும், தீவிர வாதிகள் மீதும் ஏவப்பட வேண்டிய பொடா என்ற சட்ட ஆயுதத்தை தனக்குப் பிடிக்காத அரசியல் தலைவர்களின் மீதும் ஈழ ஆதரவாளர்கள் மீதும் பாய்ச்சியது பொடாவின் கூரிய நகம். இதுபோன்ற துயரங்களை, கைதிகள் சுமந்த வலிகளை அழுத்தம் திருத்தமாகப் பதிவு செய்து, காவல் துறையின் பாசிச குணத்தை பறைச்சாற்றியிருக்கிறார் சின்னக்குத்தூசியார்.<br /><br />நூல் கிடைக்குமிடம்:<br /><br />நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்,<br />105, ஜானி ஜான்சன் சாலை, இராயப்பேட்டை, சென்னை - 41.<br />தொடர்புக்கு: 044-43993029தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-38926049501099975642013-03-17T06:40:06.865+05:302013-03-17T06:40:06.865+05:30புதையல் (பாகம் -9)
புதையல் (பாகம் -9) என்ற தலைப...புதையல் (பாகம் -9)<br /><br />புதையல் (பாகம் -9) என்ற தலைப்பில் முன்னாள் முரசொலி இதழின் பொறுப்பாசிரியர் சின்னக்குத்தூசி என்கிற இரா.தியாகராஜன் அவர்கள் எழுதிய பல்வேறு காலகட்டங் களில் வெளிவந்துள்ள கட்டுரை களின் தொகுப்பே புதையல் என்று தலைப்பை கொண் டுள்ளது. புதையல் என்று கூறுகின்ற பெயருக்கு ஏற்ப அமைந்துள்ளது. ஏற்கெனவே புதையல் என்ற தலைப்பில் எட்டு பாகங்கள் வெளிவந்துள்ளன. இது ஒன்பதாவது பாகமாகும். இதில் 17 கட்டுரைகள் அடங்கியுள்ளன. அனைத்துக் கட்டுரை களும் அரசியல் தொடர்பானவையாகும். பழைய வரலாற்றைத் தெரிந்துகொள்ள அரிய நூல்.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-87330905296588236022013-03-17T06:39:37.546+05:302013-03-17T06:39:37.546+05:30கலைஞரின் காதலர் திருவாரூர் கு.தென்னன்
கலைஞரின் கா...கலைஞரின் காதலர் திருவாரூர் கு.தென்னன்<br /><br />கலைஞரின் காதலர் திருவாரூர் கு.தென்னன் என்ற நூலினை திருவாரூர் துரைச் செல்வம் அவர்கள், இந்தியா வின் மூத்த அரசியல் தலைவர் - தமிழகத்தின் அய்ந்து முறை முதல்வர் - முத்தமிழறிஞர் எனப் பல சிறப்புகளோடு விளங்கும் கலைஞரின் உற்ற நண்பர் திருவாரூர் கு.தென் னன். பள்ளிப் பருவத்திலிருந்து இருவருமே ஒரே லட்சியப் பாதையில் பயணித்தவர்கள். அந்தப் பயணம் என்பது தென்னன் அவர்கள் மறையும் வரை தொடர்ந்துள்ளது.<br />இந்தத் தலைமுறைக்குத் தெரியாத - முந்தைய தலைமுறை மறந்த இத்தகைய செய்திகளை மிகச் சிறப்பாகத் தொகுத்து எழுதி, திருவாரூர் கு.தென்னன் - கலைஞரின் காதலர் என்ற தலைப்பில் அருமையான நூலாகத் தந்திருக்கிறார் ஆசிரியர் துரைச்செல்வம்.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-82320524267950651342013-03-17T06:39:10.653+05:302013-03-17T06:39:10.653+05:30ஆர்.என்.கே.100
பொது வாழ்வில் ஒரு அதிசயம் என்று அழ...ஆர்.என்.கே.100<br /><br />பொது வாழ்வில் ஒரு அதிசயம் என்று அழைக்கப்படும் தோழர், நல்லகண்ணுவின் வாழ்க்கை வரலாற்றை ஆர்.என்.கே.100 என்ற தலைப்பில் பசுமைக்குமார் அவர்கள், நல்லகண்ணுவின் வாழ் வில், வாழ்க்கைப் பாதையில் நடந்த அரிய 100 சம்பவங்களை தொகுத்து நூலாக்கித் தந்திருக் கிறார். தோழர் நல்லகண்ணுவைப் போலவே பசுமைக் குமாரின் மொழிநடையும் எளிமையாக, சுத்தமாக இருக் கிறது. எல்லாரும் படித்துப் பயன் கொள்ளத்தக்க நூல் இது.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-48921324801588719622013-03-17T06:38:47.228+05:302013-03-17T06:38:47.228+05:30எதிர்க்குரல்
எதிர்க்குரல் என்ற நூலினை மனுஷ்யபுத்...எதிர்க்குரல்<br /><br />எதிர்க்குரல் என்ற நூலினை மனுஷ்யபுத்திரன் அவர்கள் எழுதி யுள்ளார். மனுஷ்யபுத்திரன் உரிமை யான பார்வை கொண்டவர், அவரது எழுத்துக்கள் சமூக அவலங்களையும், அரசியல் அவலங்களையும் தோலுரிக்கும். எதையும் மறைந்து நின்று மறுப்புச் சொல்லாமல் நேருக்கு நேராய், பட்டவர்த்தனமாய்ப் பேசும் இவரது எழுத்துக்கள் வர வேற்கத் தக்கவையாகும்.<br /><br />எதிர்க்குரல் என்ற நூலில் 32 கட்டுரைத் தொடரை தொகுத்துத் தந்துள்ளார். இதிலுள்ள கட்டுரைகள் மனிதா பிமானத்தின் குரலாக அமைந்துள்ளன. முதல் கட்டுரை நக்சலைட் வேட்டை என்ற பெயரில் சட்டீஸ்கர் மாநில சர்கேகுடா கிராமத்தில் காக்கிகளால் நரவேட்டை நடத்தப் பட்டதை காயங்களோடும் வலிகளோடும் கண்டிக்கிறது அந்தக் கட்டுரை.<br /><br />இரவு நேரத்தில் பார் அருகில், குடிவெறியர்கள் தனியாக சிக்கிய ஒரு இளம் பெண்ணை கசக்கி முகர்ந்து வெறி யாட்டம் போட்டதை வீடியோ காட்சிகளில் நாடே கண்டு நடுங்கியது. இந்தப் பேரவலத்தைச் சாடும் மனுஷ்ய புத்திரன், வெகுவிரைவில் பெண்கள் வாழத் தகுதியற்ற நாடுகளில் நாம் முதலிடத்தைப் பிடித்துவிடுவோம் என்பதில் சந்தேகம் இல்லை என்று மனதில் அறைகிறார். இந்தத் தொகுப்பு நூல் சமூகத்தின் மீது அக்கறை கொண்ட ஒவ் வொருவரின் கைகளிலும் இருக்க வேண்டிய மானுடக் களஞ்சியம்.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-36326699834276456042013-03-17T06:38:27.747+05:302013-03-17T06:38:27.747+05:30பெண் முதல்வர்கள் சாதனையா? வேதனையா?
பெண் முதல்வர்க...பெண் முதல்வர்கள் சாதனையா? வேதனையா?<br /><br />பெண் முதல்வர்கள் சாதனையா? வேதனையா? என்ற நூலினை திரு. குன்றில்குமார் அவர்கள் எழுதியுள்ளார்கள். இந்த நூல் இந்தியாவில் ஆட்சியில் உள்ள பெண் முதல்வர்களை வரிசைப்படுத்தி, பொது வாழ்வில் சாதிக்க விரும்பும் பெண்கள், அரசியலில் ஆரவாரமாக நுழையும் பெண்கள், ஆட்சி அதிகாரம் கைக்கு வந்தபின், அவர்கள் எப்படியெல்லாம் நடந்து கொண்டனர், நடந்து கொள்கிறார்கள் என்பதை படம்பிடித்துக் காட்டியுள்ளார்.<br /><br />குறிப்பாக ஆறு பெண் முதல்வர்களில் உத்திரப்பிரதேச மாநிலத்தில் 1963-ஆம் ஆண்டு முதன்முதலில் ஒரு பெண் முதல்வராகப் பதவி யேற்றார். அவர் சுசேதா கிருபளானி. அவர் முதலாவது பெண் முதல்வர் என்ற பெரு மையை பெற்றவர். தனிமனித ஒழுக்கம், உண்மை, நேர்மை, எளிமை, சகிப்புத்தன்மை, கடின உழைப்பு, சிறந்த நிர்வாக திறமை போன்ற நற்குணங்களை பொது வாழ்க்கையில் கடைப்பிடித்து அம்மாநிலத்தை முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் சென்றவர். பொது வாழ்வில் சாதிக்க விரும்பும் பெண்கள், குறிப்பாக மாநில பெண்முதல்வர்கள் சுசேதா கிருபளானியை பின்பற்றினாலே போதும் என்று அவர்களைப்பற்றி அருமையாகப் பதிவு செய்துள்ளார் நூலாசிரியர்.<br />மற்ற அய்ந்து பெண் முதல்வர்கள் செயல்பாடுகள் எவ்வாறு உள்ளன? பெண்களும் அரசாளப் பிறந்தவர் களே என்ற முழக்கம் சரியானதே என்பதை நிரூபித் திருக்கிறார்களா? இதுதான் அனைவரின் முன் தற்பொ ழுது எழுந்துள்ள கேள்வி. அதனை அலசிப்பார்க்கிறது இந்த நூல். படித்துப் பாருங்கள்...தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-78460274080665289892013-03-17T06:38:06.741+05:302013-03-17T06:38:06.741+05:30திராவிடர் இயக்கம் - நோக்கம் தாக்கம் - தேக்கம்
திர...திராவிடர் இயக்கம் - நோக்கம் தாக்கம் - தேக்கம்<br /><br />திராவிடர் இயக்கம் - நோக்கம் - தாக்கம் - தேக்கம் என்ற நூலினை திரு. கோவி. லெனின் அவர்கள் எழுதியுள் ளார்கள், திராவிடர் இயக்கம் ஏற்படுத்திய தாக்கத்தையும், அந்த இயக்கம் இன்று கண்டிருக்கும் தேக்கத்தையும் நக்கீரனின் முதன்மை துணை ஆசிரியர் கோவி லெனின் அவர்கள் ஆராய்ச்சிப் பார்வையோடு இந்த நூலில் விரித்துரைத்திருக் கிறார். ஒவ்வொரு காலகட்டம்தோறும் நிகழ்ந்த நிகழ்வு களை செம்மையாய் புரிந்துகொண்டு நூலில் பதிவு செய்திருக்கிறார். கனமான தகவல்கள்கொண்ட நூறு ஆண்டுகள் கடந்த வரலாற்றைக் கொண்ட திராவிட இயக்கத்தை உரையாடல் பாணியில் எளிமையாய் திராவிட சமூகத்தின் வரலாற்றை தமிழினம் உணர்ந்து மதித்துப் போற்ற வேண்டிய காகிதத்தாலான கருத்துக் களஞ்சியம். திராவிடத்தால் வீழ்ந்தோம், தமிழினத்தால் எழுந்தோம் என்று கூச்சலிடுகின்ற அரசியல் ஆமைகளுக்கு ஒரு புதிய நாவல்.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-65532550116822682762013-03-17T06:37:33.307+05:302013-03-17T06:37:33.307+05:30
நூல் மதிப்புரை
எழுத்துரு அளவு Larger Font Smaller...<br />நூல் மதிப்புரை<br />எழுத்துரு அளவு Larger Font Smaller Font<br /><br /><br />இளமை எனும் பூங்காற்று<br /><br />பேராசிரியர் சுப.வீரபாண் டியன் அவர்கள், அறிவு என்ற செல்வத்தைத்தான் இளமை எனும் பூங்காற்று எனும் இந்தப் புத்தகத்தின் வாயிலாக இளை ஞர்களுக்கு அள்ளி வழங்கி யிருக்கிறார்.<br /><br />தான் அறிந்ததை - அதன் மூலம் பெற்ற செல்வத்தை இளைய தலைமுறைக்குப் பொதுவுடைமையாக்க வேண் டும் என்ற நோக்கத்தின் அடிப்படையிலேயே இளமை எனும் பூங்காற்று என்ற தலைப்பில் தான் அறிந்த சாதனையாளர்கள் பற்றி அறியாத தகவல்கள், நம் பார்வைக்கு அதிகம் தென்படாத சாதனையாளர்களின் ஆற்றல்கள், விடுதலைக் களத்தில் தங்களையே தந்த போராளிகள், இனத்திற்காகவும், மொழிக்காகவும் தியாகி களானவர்கள், கலைத்துறை வல்லுநர்கள், அறிவியல் அறிஞர்கள் எனப் பலதரப்பட்ட சரித்திர சாதனையாளர்கள் பற்றி பதிவு செய்துள்ளார்.<br /><br />இந்த நூல், நாளைய சாதனையாளர்களுக்கான நல்வழிகாட்டி, சாதிக்கத் துடிக்கும் ஒவ்வொரு இளைஞன் கையிலும் இந்தப் புத்தகம் இருக்க வேண்டும். அவர் களுடைய நெஞ்சில் இந்த நூலின் கருத்துக்கள் பதிய வேண்டும். அவ்வளவு அரிய தகவல்கள் கொண்டது பேராசிரியரின் நூல்.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-4563342850023132362013-03-17T06:36:15.635+05:302013-03-17T06:36:15.635+05:30
பொன் மொழிகள்
எல்லோருமே வெற்றியை விரும்பு கின்ற...<br />பொன் மொழிகள்<br /><br /><br /><br />எல்லோருமே வெற்றியை விரும்பு கின்றனர். ஆனால் ஒரு சிலரே அதற்காக உழைக்கின்றனர். - சிசரோ<br /><br />உறுதியான மனம் கொண்டவர்களே உன்னதமான எதிர் காலத்தை உருவாக்கிக் கொள்கின்றனர். - கார்லைல்<br /><br />எதிர்ப்பும் தடையும் இருந்தால் தான் மனிதன் விரைந்து முன்னேற முடியும். - மேட்டர்லிங் உழைக்காமல் வெற்றி பெற முயல்வது, வயலில் விதைக்காமல் அறுவடைக்குச் செல்வதைப் போன்றது. - எமர்சன்<br /><br />வாழ்க்கையில் வெற்றி பெற ஆசைபடுபவர் முதலில் கவலையை ஒதுக்கி வைக்க வேண்டும் - மில்டன்தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-3974390707172083172013-03-17T06:35:27.353+05:302013-03-17T06:35:27.353+05:30பழங்கள்
பப்பாளி: சீசன் இல்லாத காலத்திலும் தேடிப்...<br />பழங்கள்<br /><br /><br />பப்பாளி: சீசன் இல்லாத காலத்திலும் தேடிப்பிடித்துச் சாப்பிட வேண்டிய பழம். மூன்று வேளை உணவிலும் சேர்த்துக் கொள்ளலாம். கல்லீரல், மாதவிலக்குக் கோளாறுகள் அகலும். மூட நம்பிக்கை காரணமாக இதை "மிஸ்" பண்ணாதீர்கள்.<br /><br />கொய்யா: இரத்தத்தை எளிதில் சுத்தப்படுத்தும். தோல் நோயாளி களுக்கு அரிய மருந்து கொய்யாப் பழம். வருடம் முழுவதும் கிடைக்கும் இப்பழத்தைத் தவறாமல் சாப்பிட வேண்டும்.<br /><br />அன்னாசி: இரத்த சோகை, மஞ்சள் காமாலை நோய் வராமல் தடுக்கும். வயிற்றிலுள்ள பூச்சிகளைக் கொல்லும் ஆற்றல் வாய்ந்தது. ஆனால் அதிகம் சாப்பிடக்கூடாது. வாயும் குடலும் வெந்துவிடும்.<br /><br />உலர் திராட்சை: தினமும் 25 கிராம் உலர் திராட்சை சாப்பிட்டு வந் தால் நரம்பு தளர்ச்சியின்றி வாழலாம். மூளை சுறுசுறுப்பாகச் செயல்படும். நாள்பட்ட நோயாளிகளுக்கு நல்ல உணவு.<br /><br />சாத்துக்குடி: தாகத்தை அடக்கிப் பசியையும் போக்கி மருந்தாகவும் செயல்படுகிறது. கால்சியம் அதிகம் உள்ள பழம். 30 வயதுக்கு மேற்பட்ட வர்கள் அடிக்கடி சாத்துக்குடி பழம் சாப்பிடவும்.<br /><br />பலரைப் பாதிக்கும் சிறுநீரகக் கோளாறு, கல்லீரல் கோளாறு முதலிய வற்றை தடுக்க ஆப்பிள், வாழைப்பழம், திராட்சை, பப்பாளி, அன்னாசி முதலிய பழங்களை தினமும் பழ சாலெட்டாக 400 கிராம் சாப்பிட்டாலே போதும். நம் உணவில் 20% பழங்கள் இடம் பெற்றாலே நோய்கள் கட்டுப் பட்டு ஆரோக்கியமாக வாழலாம்தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-19503160535341886692013-03-17T06:33:48.759+05:302013-03-17T06:33:48.759+05:304. Product Quality & Customer Review
பெரும்பா...4. Product Quality & Customer Review<br /><br />பெரும்பாலான தளங்கள் உண்மையான நிறுவன பொருட்களையே வழங்குகின்றன. எனவே பிரபலமான தளத்தில் வாங்கும் போது போலி பொருளோ என்ற பயம் உங்களுக்கு தேவை இல்லை.<br /><br />பல தளங்கள் உற்பத்தியாளர் வாரண்டி (Manufacturer Warranty) உடன் தான் பொருளை விற்கின்றன. ஒரு குறிப்பிட்ட பொருள் சந்தை விலையை விட மிகக் குறைவாக இருந்தால் அந்த தளம் Manufacturer Warranty தருகிறதா என்று கவனித்து வாங்குங்கள். சில தளங்களில் Seller Warranty என்று இருக்கும், இதனால் ஏதேனும் பிரச்சினை என்றால் பொருளை விற்றவரிடம் தான் செல்ல வேண்டி இருக்கும். eBay தளத்தில் இதை நீங்கள் பார்க்கலாம்.<br /><br />குறிப்பிட்ட ஒரு பொருள் பற்றி தெரியாமல் வாங்குகிறீர்கள் என்றால் அந்த பொருள் எந்த அளவிற்கு உபயோகமானது, அது எப்படிபட்டது போன்றவற்றை அறிய பல தளங்கள் Customer Review வசதியை கொடுத்துள்ளன. இதில் அந்த பொருளை வாங்கிய பலர் அதன் நிறை, குறைகளை பற்றி சொல்லி இருப்பார்கள். அதை கவனித்து வாங்க வேண்டும்.<br /><br />குறிப்பிட்ட தளத்தின் சர்வீஸ் பற்றி அறிய இணையத்தில் தேடலாம், அல்லது ஏற்கனவே வாங்கிய அனுபவம் உள்ள நண்பர்களிடம் கேட்கலாம்.<br /><br />eBay தளத்தில் பொருளை விற்பது யாரோ ஒருவர் என்பதால், குறிப்பிட்ட விற்பனையாளருக்கு வந்துள்ள Positive Feedback - ஐ பொறுத்து பொருளை வாங்கவும். இது Seller Info பகுதியில் இருக்கும்.<br /><br /><br /><br />5. Payment Options<br /><br />ஆன்லைன் மூலம் வாங்கும் போது தற்போது பல வகையான Payment வசதிகள் உள்ளன. ஆர்டர் செய்யும் போதே Credit Card, Debit Card (ATM Card), Net Banking மூலம் பணம் செலுத்தும் வசதிகள் உள்ளன. இதில் நீங்கள் Secured ஆகத் தான் பணம் செலுத்துகிறீர்களா என்பதை கவனியுங்கள்.<br /><br />பணம் செலுத்தும் பக்க URL "HTTPS" என்று ஆரம்பித்து இருக்க வேண்டும். இது உங்கள் பாதுகாப்பை உறுதி செய்யும்.வெறும் HTTP என்று மட்டும் இருந்தால், ஆர்டர் செய்வதை தவிர்க்கவும்.<br /><br />இதில் பயம் உள்ளவர்கள் Cash On Delivery வசதி இருந்தால் அதை தெரிவு செய்து கொள்ளலாம். இதில் பொருள் உங்களுக்கு வந்து சேரும் நாளன்று நீங்கள் பணம் செலுத்தினால் போதும்.<br /><br />EMI மூலம் வாங்கும் போது, பல தளங்கள் Processing Charge என்று ஒன்றை வசூலிக்கும். அப்போது மற்ற தளங்களில் குறிப்பிட்ட பொருளின் விலை மற்றும் EMI - யில் Processing Charge இல்லாமல் வருகிறதா என்று பாருங்கள். இதனால் உங்களுக்கு பணம் மிச்சம் ஆகும்.<br />- பிரபு கிருஷ்ணா (கற்போம்)தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-64868522810140562062013-03-17T06:33:44.022+05:302013-03-17T06:33:44.022+05:30ஆன்லைன் ஷாப்பிங் - கவனிக்க வேண்டிய விஷயங்கள்
ஆன்ல...ஆன்லைன் ஷாப்பிங் - கவனிக்க வேண்டிய விஷயங்கள்<br /><br />ஆன்லைன் ஷாப்பிங் தான் இப்போதைய ட்ரெண்ட். கிட்டத்தட்ட நமக்கு தேவையான அனைத்து பொருட்களையும் பல்வேறு ஆன்லைன் நிறுவனங்கள் நமக்கு விற்கின்றன. நிறைய தளங்கள், நிறைய பொருட்கள். எதை நம்புவது? எப்படி வாங்குவது போன்ற விசயங்களை இன்று பார்ப்போம்.<br /><br />1. Return Policy<br /><br />ஆன்லைன் மூலம் வாங்கும் போது இது மிக அவசியமாக கவனிக்க வேண்டிய ஒரு விஷயம். ஒரு ஆடையோ, காலணியோ வாங்கும் போது அளவு சரியாக இல்லை என்றால் அதை திரும்ப அனுப்பி வேறு ஒன்றை வாங்கும் வசதி நமக்கு இருக்க வேண்டும். இல்லாவிட்டால் வாங்கிய பொருள் வீண் தான்.<br /><br />இதற்கு என்ன விதிமுறைகள் என்பதையும் அறிதல் அவசியம். பெரும்பாலும் பொருள் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் வாங்கிய அன்றே அது குறித்து தகவல் தெரிவிக்க வேண்டி இருக்கும். அதே சமயம் நீங்கள் அதை சேதாரப் படுத்தி இருக்க கூடாது.<br /><br />2. Shipping Cost and Time<br /><br />இது மிக மிக அவசியமாக கவனிக்க வேண்டிய விசயம். காரணம் பெரும்பாலான தளங்கள் இப்போது ஒரு டிவி வாங்கினால் கூட இலவசமாக Ship செய்கிறார்கள். இந்த சமயத்தில் shipping க்கு என்று தனியாக பணம் கட்ட சொன்னால் அந்த தளங்களை தவிர்த்தல் நலம்.<br /><br />இதில் eBay மட்டும் விதிவிலக்கு, காரணம் அது ஒரு சந்தை. பொருட்களை விற்பது பல நிறுவனங்களை சேர்ந்தவர்கள். எனவே விலை குறைவாக இருக்கவும் வாய்ப்பு உள்ளது, Shipping க்கு கட்டணம் கேட்கவும் வாய்ப்பு உள்ளது.<br /><br />பல நேரங்களில் சிறு நகரங்கள். கிராமங்கள் போன்றவற்றிற்கு குறிப்பிட்ட தளம் பொருளை நேரடியாக அனுப்ப முடியாத போது அதை Registered Post வாயிலாக அனுப்புகிறார்களா என்பதை கவனித்துக் கொள்ளுங்கள். பெரும்பாலான தளங்கள் இதற்கும் கட்டணம் வசூலிப்பது இல்லை.<br /><br />அடுத்து Shipping Time. அதிகபட்சம் 15 நாட்கள் தான் எந்த ஒரு பொருளுக்கும் Shipping Time, அதற்கு மேல் காத்திருக்க சொன்னால் நீங்கள் வேறு தளத்தில் சென்று வாங்கலாம். பெரு நகரங்கள் என்றால் 4-5 நாட்களுக்குள் பொருட்கள் கிடைத்து விடும்.<br /><br />உங்களுக்கு வரும் மின்னஞ்சல் உறுதிச் செய்தியில் Expected Delivery Time என்பதை விட முன்னதாகவே பொருள் உங்களுக்கு வந்து சேர வேண்டும், இல்லை என்றால் ஏதோ பிரச்சினை என்பதை நீங்கள் உணரவேண்டும். உடனடியாக பொருள் எங்கே உள்ளது என்பதை Tracking மூலம் செக் செய்யும். இன்னும் Order Ship செய்யப்படவே இல்லை என்றால் Cancel செய்து விட்டு நேரடியாக கடையில் சென்று வாங்கி விடுங்கள்.<br /><br />3. Cash Back<br /><br />ஒரு பொருளை ஆர்டர் செய்த உடன் நமக்கு அது அவசியமில்லை என்று தோன்றும் அல்லது வேறு ஒரு பொருளை வாங்க தோன்றும். அம்மாதிரியான சமயங்களில் நீங்கள் ஆர்டர் செய்த பொருளை கான்சல் செய்யும் வசதியை குறிப்பிட்ட தளம் உங்களுக்கு வழங்குகிறதா என்று கவனியுங்கள்.<br /><br />அதோடு முழுப்பணமும் உங்களுக்கு வந்து சேரும்படி இது இருக்க வேண்டும். பெரும்பாலும் 5 முதல் 7 நாட்களுக்குள் உங்கள் பணம் திரும்ப வந்து விடும்.<br /><br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-56100604696842273012013-03-17T06:27:50.091+05:302013-03-17T06:27:50.091+05:30
இவற்றையெல்லாம் நன்கு மனத்தில் பதிய வைத்திருந்தார்...<br />இவற்றையெல்லாம் நன்கு மனத்தில் பதிய வைத்திருந்தார் இந் திரா அம்மையார். இந்திராகாந்தியை மடக்குவதற்கு இலங்கைக் குடியரசுத் தலைவர் ஜெயவர்த்தனா எவ்வளவோ முயன்று பார்த்தார். நாம் இருவரும் ஒரே இனத்தைச் (ஆரியர்) சேர்ந் தவர்கள்; என் மூக்கும் உங்கள் மூக்கும் அமைப்பில் ஒன்று போலவே இருக்கின்றன பார்த்தீர்களா! என்றெல்லாம் அன்பொழுகப் பேசிப்பார்த்தார். இந்திராகாந்தி அவரை நம்பவில்லை.<br /><br />இலங்கையில் தமிழீழத் தாயகம் கேட்டுப் போராடி வந்தவர்கள், இளைஞர்கள் ஆயுதம் ஏந்திய போராட்டத்தில் தங்களை ஈடு படுத்திக் கொண்டபோது இந்திரா காந்தி அம்மையார் விடுதலைப் புலி களின் இயக்கத்தலைவர் தம்பி பிர பாகரனை அடையாளம் கண்டு அவர்களுக்கு வேண்டிய உதவி களையெல்லாம் செய்தார். ஜெய வர்த்தனாவின் முயற்சி வெற்றி பெறவில்லை. இந்திராவின் மரணத் திற்குப் பிறகு ராஜீவ்காந்தி பிரத மரான பிறகு இந்திய வெளியுறவுக் கொள்கையில் பெருத்த மாற்றம் ஏற்பட்டது, நட்பு நாடான இலங்கைக்குள் அமைதிப்படை அனுப்பப்பட்டது. இந்திய விமா னங்கள் தமிழீழப் பகுதியில் தாழ் வாகப் பறந்து யாரும் கேட்காமலேயே உணவுப் பொட்டலங்களைப் போட்டு விட்டுவந்தன. செய்தியாளர் கள் இதுபற்றிப் பிரதமர் ராஜீவ் காந்தியிடம், வேறு ஒரு நாட்டுக்குள் இவ்வாறு அத்துமீறி நுழையலாமா? என்று கேட்டதற்கு ‘It is a lesson to Jeywardane’ என்று பதில் சொன் னார். இதற்குப் பெயர் நட்பு நாடு!<br /><br />வரலாற்றுச் சிறப்புமிக்க நாளந்தா பல்கலைக்கழகம் புத்த மார்க்கம் பற்றிய பல அறிவுச் செல்வங்களைத் தன்னகத்தே கொண்டு விளங்கியது. அந்த அறிவுக் கருவூலத்தை ஆரியர் கள் நெருப்பிட்டுக் கொளுத்தி விட்டார்கள்.<br /><br />உலகப்போர் நடந்தபோது செர்மானிய விமானங்கள் லண்டன் ஆக்சுபோர்டு, கேம்பிரிட்ஜ் பல் கலைக் கழகங்களைக் குறி வைத்துத் தாக்கின. ஓர் இனத்தை அழிப்பதற்கு அந்த இனத்தின் அறிவுக் கருவூ லத்தை அழித்துவிட்டால் போதுமே.<br /><br />லட்சக்கணக்கான நூல்களைக் கொண்ட, ஆசியாவிலேயே மிகப் பெரிய நூலகமாக விளங்கிய யாழ். பொது நூலகத்தைச் சிங்களப் படையினர் நெருப்பிட்டுச் சாம்ப லாக்கி விட்டார்கள்! தான் போற்றி வளர்த்த நூலகம் எரிவதைப் பார்த்த ஒரு பாதிரியார் நெஞ்சு வெடித்து நூலகத்தின் முன்பாக இறந்து போன தும் அவரைத் தூக்கி எரியும் நூலகத் திற்குள் சிங்களப் படையினர் வீசி விட்டுக் கைகொட்டிச் சிரிக்க வில்லையா?<br />லட்சக்கணக்கான தமிழ் மக்கள், குழந்தைகள், பெண்கள் கொல்லப் பட்ட கொடூர நிகழ்வுகளுக்கு ஒரு கண்டனம் கூடத்தெரிவிக்காத டில்லி ஆட்சியாளர்கள் தமிழ்மக்களின் நண்பர்களா?<br /><br />இலங்கையை இன்னும் நட்பு நாடெனக்கருதுவோரைத் தமிழினத் தின் நண்பர்களாகக் கருதுவோரை வஞ்ச நெஞ்சம் படைத்த முட்டாள் கள் என்போம்!<br /><br />ஆதலின் இலங்கை எந்தக் காலத்திலும் இந்தியாவின் நட்பு நாடாக இருந்ததில்லை. பிற்காலச் சோழர் காலத்தில் இதே நிலைதான் இருந்தது. எனவே இலங்கையை நட்பு நாடென்று உரிமை பாராட்டுவோர் - இனப்படுகொலை நடத்திய நாட்டோடு நல்லுறவு வேண்டுவோர் உலகமெங்கும் பரந்து கிடக்கும் பத்துக்கோடித்தமிழர்களின் எதிரிகளாகவே கருதப்படுவார்கள் என்பது உறுதி.<br /><br />இறுதியாக - ஒரு நட்பு நாட்டின் பிரதமரான ராஜீவ்காந்தி இலங்கைக் குச் சென்றபோது அவருக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை அளிக்கப் படுகிறது. அப்போது சிங்கள ராணுவ வீரன் ஒருவன் தன் துப்பாக்கிக் கட் டையால் ராஜீவ் காந்தியின் உயிருக் குக் குறிவைத்துத் தாக்க முற்படு கிறான். ராஜீவ் தடுமாறிச் சமாளித்துக் கொள்கிறார் இக்காட்சி உலகம் முழுவதிலுமுள்ள ஊடகங்களில் வெளியாகியது. ராஜீவைத் தாக்கிய அந்த ராணுவ வீரனுக்குப் பதவி உயர்வு தரப்பட்டது. பின்னாளில் அவன் நாடாளுமன்ற உறுப்பினராகக் கூடத் தேர்ந்தெடுக்கப்பட்டான். (ராஜீவ் காந்தியின் கொலை வழக்கு விசாரணை இங்கிருந்தல்லவா தொடங்கப் பெற வேண்டும்). இதனால் இலங்கை இந்தியாவின் நட்பு நாடு என்பது ஒரு கேலிக்கூத்து! அடி முட்டாள்தனம்! ஒரு நட்பு நாட்டின் பிரதமரைக் கொலை செய்ய முயன்றவனுக்குப் பதவி உயர்வும், பாராளுமன்ற உறுப்பினர் பதவியும் கிடைக்கிறது என்றால் அந்த நாட்டை நட்பு நாடென்று சொல் வதற்கு டெல்லி வெட்கப்பட வேண் டாமா? அவர்களுக்கு அதுவெல்லாம் தெரியாது. சுப்பிரமணியசாமியைப் போன்ற புரோக்கர்கள் இருக்கும்வரை ராஜபக்சேவைப் போன்ற கொடுங்கோலர்களுக்கு மகிழ்ச்சி தானே! ஓர் அயோக்கியன் இன்னோர் அயோக்கியனை அண்மையில் கொழும்பில் சந்தித்து உரையாடி விட்டு டெல்லி திரும்பியிருக்கிறான். உலகம் முழுக்க ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக நிற்கும் நேரத்தில் டெல்லியும், சு.சாமியும் ராஜபக் சேவோடு கை குலுக்குவது எவ்வளவு இழிந்த செயல்!தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.com