tag:blogger.com,1999:blog-1474608369333206681.post2837633177101108298..comments2023-10-29T13:02:52.613+05:30Comments on தமிழ் ஓவியா: சமஸ்கிருத எதிர்ப்பு என்றால் ஆரியம் அலறுவானேன்? தமிழ் ஓவியாhttp://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comBlogger58125tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-27585264222117088622014-08-10T19:48:36.312+05:302014-08-10T19:48:36.312+05:30
காந்தியார்
திரு. காந்தியார் சிறையில் மூன்று வேல...<br />காந்தியார்<br /><br /><br />திரு. காந்தியார் சிறையில் மூன்று வேலைகள் செய்கிறார். அவற்றுள் ஒன்று தக்ளியில் நூல் நூற்பது. மற்றொன்று பகவத் கீதையை ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பது. வேறொன்று இந்த இரண்டும் செய்து மீதி இருக்கும் நேரத்தில் ராமநாம பஜனை செய்வது.<br /><br />ஆகவே அவரது பகுத்தறிவுக்கு நாம் வேறு உதாரணம் காட்ட வேண்டிய தில்லையென்றே நினைக்கின்றோம். இம் மூன்று காரியங்களும் இந்தியாவின் பொது வாழ்க்கையையும் முன்னேற்றத்தையும் முன்னுக்குக் கொண்டு போகுமா? பின்னுக்குக் கொண்டு போகுமா வென்பதை யோசிக்கத் தக்கது.<br /><br />திரு. காந்தியிடம் குருட்டுப் பக்தியுள்ளவர்களுக்கு நாம் இப்படிக் கேட்பது சற்று கஷ்டமாக இருக்கலாம். தக்ளியில் நூல் நூற்பது எதை உத்தேசித்து என்று இதுவரை யாராவது தெரிந்தார்களா? தக்ளிநூல் வெள் ளைக்கார ஆட்சியின் கொடுமையையும் இந்தியாவின் பொருளாதார கொள்ளையையும் என்ன செய்து விடக்கூடும் என்பது நமக்கு விளங்கவில்லை.<br /><br />என்ன சொன்னாலும் தட்டிச் சொல்லாமல் கேட்பதற்குச் சில மக்கள் இருக்கின்றார்கள் என்பதைத் தவிர மற்றபடி அதில் என்ன உண்மை இருக்கின்றது. இரண்டாவதாக பகவத்கீதைக்கு ஆங்கில மொழி பெயர்ப்பு வேலை. இதுமுன் ஒரு தடவை டாக்டர் பெசன்டம்மையால் செய்தாய் விட்டது.<br /><br />இரண்டாவதாக திரு திலகரால் ஒரு தடவை கீதா ரகசியம் என்பதாக ஒரு மொழி பெயர்ப்பும் செய்தாய் விட்டது. இப்போது திரு. காந்தியும் இதையே ஆரம்பித்து விட்டார். கீதையின் தத்துவம் என்ன? அதன் பயனென்ன? என்பதைப் பற்றிய உண்மை யாராவது தெரிந்து அதை மதிக்கின்றார்களா?<br /><br />கீதையை ஒரு மனிதன் ஒப்புக் கொள்ளுவதானால் முதலாவதாக பாரதக் கதையை ஒப்புக் கொள்ள வேண்டும்.<br /><br />பிறகு கிருஷ்ணனையும், அவனது செய்கைகளையும், அவனையே கடவுளாகவும் ஒப்புக் கொள்ள வேண்டும்.<br /><br />இம்மூன்றிலும் சந்தேக முள்ளவர்கள் கீதையைப் பகவான் வாக்காகக் கொள்ள முடியாது. இது ஒரு புறமிருக்க அதிலுள்ள விஷயங்கள் வாழ்க்கைக்குப் பொருத்த மானதாகவோ அல்லது அனுபவத்திற்குச் சாத்தியமான தாகவோ இருக்கின்றதா? நிற்க மூன்றாவது காரியமாக பஜனை செய்து கொண்டி ருக்கிறாராம்.<br /><br />பஜனை என்பது புராணங்களில் உள்ள கடவுள்களைப் புராணக் கதைகளைச் சொல்லிக் கொண்டோ நினைத்துக் கொண்டோ இருப்பதாகும்.<br /><br />ஆகவே இம்மூன்று காரியங்களும் எவ்வளவு பகுத்தறிவும் பொது நல நன்மையுமான காரியம் என்பதை முடிவு செய்யும் விஷயம் வாசகர்களுக்கே விட்டுவிடு கின்றோம்.<br /><br />- குடிஅரசு - துணைத்தலையங்கம் - 27.07.1930<br /><br />Read more: http://viduthalai.in/page1/85536.html#ixzz39zzQpXqh<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-31990262023977345532014-08-10T19:34:15.524+05:302014-08-10T19:34:15.524+05:30
பெண்களுக்கு அறிவுரை கூறும் பெம்மான்கள்!
அறிவுரை...<br />பெண்களுக்கு அறிவுரை கூறும் பெம்மான்கள்!<br /><br /><br />அறிவுரைதான் இந்த நாட்டில் மிகவும் மலிவானது; அதுவும் பெண்களுக்கு ஆண்கள் அதிகம் அறிவுரை சொல்லுவதில் இந்தியாவை வெல்ல உலகில் எந்த நாடும் கிடையாது.<br /><br />பெண்கள் எந்த மாதிரி உடையை அணிய வேண்டும் என்று அறிவுரை சொல்லும் அருகதை ஆண்களுக்கு உண்டா என்பது அர்த்தமுள்ள முதல் கேள்வி.<br /><br />ஆனாலும், யாரையும் கேட்காமலேயே ஆண்கள் தாங்களே முன்வந்து வலிய அந்த உரிமையை எடுத்துக் கொண்டு அருளுபதேசம் செய்ய ஆரம்பித்து விடுகிறார்கள்.<br /><br />நாடாளுமன்றத்தில் தெலுங்குதேச மக்களவை உறுப்பினர் முரளி மோகன் மகந்த் பெண்கள் இந்தியக் கலாச்சாரத்துக்கு ஏற்ப கண்ணியமான உடை அணிய வேண்டும் என்று பேசப் போக, அவையில் கடுமையான எதிர்ப்புச் சுனாமியை அவர் எதிர் கொள்ளும் நிலை ஏற்பட்டு விட்டது; வேறு வழியின்றிப் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். (வாழ்க மகளிர் உறுப்பினர்கள்!)<br /><br />இதற்கு முன்னதாக கோவா மாநில பொதுப் பணித்துறை மூத்த அமைச்சர் சுதின் துவாலிகர் என்பவர் கூறிய கருத்தும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது..<br /><br />நமது நாட்டில் தற்போது பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்து வருவது கவலைக்குரியது. பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரிப்ப தற்குக் காரணம் பெண்கள்தான் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். பெண்கள் நாகரிக ஆடை அணிந்து கேளிக்கை விடுதிக்குச் செல்லுவதாலும் ஆண் துணை யின்றி துணிச்சல் என்ற பெயரில் தனியாக செல்லுவ தாலும்தான் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரிக்கின்றன என்று பேசியிருக்கிறார்.<br /><br />கருநாடக மாநிலம் மங்களூரில் இயங்கி வரும் ராம்சேனா அமைப்பின் தலைவர் முத்தலிப் என்பவர் பெண்கள் கேளிக்கை அரங்குக்குச் செல்லுகிறார்கள் என்ற பெயரில் மங்களூரில் உள்ள பல கேளிக்கை அரங்குகளில் வலிய நுழைந்து பெண்களைத் தாக்குகின்றனரே என்று செய்தியாளர்கள் சுட்டிக் காட்டியபோது, கோவா அமைச்சர் அதனை நான் ஆதரிக்கிறேன்; அவர்கள் ஒன்றும் தவறு செய்யவில்லை என்றும் பதில் சொல்லியிருக்கிறார்.<br /><br />மும்பையில் மும்பை கிழக்கு பகுதி சட்டப் பேரவை உறுப்பினர் பாலா சாலந்த் (சிவசேனா) என்பவர் முஸ்லிம் பெண் ஒருவரை வழிமறித்து அத்து மீறியதும் அண்மையில் மக்கள் கவனத்துக்கு வந்தது.<br /><br />இவர்மீது குற்றப் பிரிவு 506, 509 மற்றும் 504 சட்டப் பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டதே தவிர கைது செய்யப்படவில்லை.<br /><br />இவற்றையெல்லாம்விட ஒரு முக்கியமான செய்தி! பிரமுகர், ஒருவர் மத்தியில் ஆட்சியிலிருக்கும் பிஜேபி ஆட்சிக்கான மூக்கணாங் கயிற்றினைக் கையில் வைத்திருப்பவர் என்று சொல்லும் மாத்திரத்திலேயே அவர் ஆர்.எஸ்.எஸ்-இன் அகில இந்தியத் தலைவர் மோகன் பகவத்துதான் என்று மக்கள் எளிதில் புரிந்து கொள்வார்கள்.<br /><br />அவர் இந்தூரில் ஆர்.எஸ்.எஸ். பொதுக் கூட்டத்தில் வெளிப்படையாகவே பேசினாரே!<br /><br /><br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-49893314027457444682014-08-10T19:29:52.133+05:302014-08-10T19:29:52.133+05:30கோயிலில் தங்கக் குவியல்
குட்டி மாநிலமான இமா சலப் ...கோயிலில் தங்கக் குவியல்<br /><br />குட்டி மாநிலமான இமா சலப் பிரதேசத்தில் 29 கோயில் களில் 400 கிலோ தங்கம், 15,800 கிலோ வெள்ளிக் கட்டிகள் தூங்குகின்றனவாம்! (இவற்றை எடுத்து மக்கள் நலனுக்குப் பயன்படுத்தக் கூடாதா?)<br /><br />Read more: http://viduthalai.in/page1/85499.html#ixzz39zukPWp2<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-73781360226579668202014-08-10T19:29:26.653+05:302014-08-10T19:29:26.653+05:30செய்தியும் சிந்தனையும்
வெட்கக்கேடு
செய்தி: கருநா...செய்தியும் சிந்தனையும்<br /><br />வெட்கக்கேடு<br /><br />செய்தி: கருநாடகாவில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவனை 6 நாட்கள் ஆகியும் மீட்க முடியவில்லை.<br /><br />சிந்தனை: நாடெங்கும் இத்தகைய செய்திகள் வந்த வண்ணமேயுள்ளன. இதனைக் கூடத் தடுக்க முடியாத இந்த ஆட்சிகள் எந்தக் கேடுகளைத் தான் தடுக்கப் போகிறார்கள்? மனித உயிர்கள் அவ்வளவு மலிவா? வெட்கக் கேடு!<br /><br />Read more: http://viduthalai.in/page1/85499.html#ixzz39zue0cct<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-87467716554221790992014-08-10T19:23:54.841+05:302014-08-10T19:23:54.841+05:30
புதிய உயிரினங்கள் கண்டுபிடிப்பு
உலகம் முழுவதும...<br />புதிய உயிரினங்கள் கண்டுபிடிப்பு<br /><br /><br /><br />உலகம் முழுவதும் 18 ஆயிரம் புதிய உயிரினங்களை, விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அவற்றில், பூனையை போன்ற கரடியும், தரைக்கு கீழ், 3,000 அடிக்கு கீழ் இருக்கும் கண்ணில்லாத நத்தையும் அடங்கும். இதுகுறித்து, நேஷனல் மியூசியம் ஆப் நேச்சுரல் சயின்ஸ் என்ற அமெரிக்க நிறுவனத்தின் உயிரியல் விஞ்ஞானி, அண்டோனியோ வால்டேகேசஸ் தலைமையிலான விஞ்ஞானிகள் குழுவினர் கூறியதாவது: உலகில் 20 லட்சம் உயிரினங்கள் இருப் பதாகவும், இவற்றில் தற்போது 18 ஆயிரம் உயிரினங்கள் கண்டறியப் பட்டுள்ளன. இன்னும் 1 கோடி உயிரி னங்கள் கண்டுபிடிக்க வேண்டியுள் ளது. அவற்றில் பல அழிவின் விளம் பில் உள்ளன. இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.<br /><br />Read more: http://viduthalai.in/page6/85570.html#ixzz39ztDruUb<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-35835683969928375952014-08-10T19:22:28.096+05:302014-08-10T19:22:28.096+05:30
திதி கூறும் மந்திரம் என்ன?
மந்திரம்: யன்மே மாதா...<br />திதி கூறும் மந்திரம் என்ன?<br /><br /><br />மந்திரம்: யன்மே மாதா பிரலுலோப சரதி அனனு விருதா, தன்மே ரேதஹ பிதா விருங்க்தா ஆபுரண் யோப பத்யதாம் ரங்கராஜ சர்மணே ஸ்வாஹா. ரங்கராஜ சர்மணே அஸ்மது பித்ரே இதம் நமம.<br /><br />பொருள்: எனது தாய் பதிவிரதா தர்மங்களை முழு வதுமாக அனுஷ்டிக்காமல், அதன் காரணமாக நான் பிறந்திருந்தால், இந்த அக்னி யில் நானிடும் ஹவி ஸூக்கு உரிமை கோரி எனது சொந்த தகப்பனார் வருவார். அப்படி அவர் இந்த ஹவிஸைப் பெறாமல் தடுத்து, நான் எந்தத் தகப்பனாருக்கு இந்தச் சிரார்த்தத்தைச் செய்கிறேனோ அவர் அதாவது எனது தாயின் கணவர் இந்த ஹவிசைப் பெற வேண்டும்<br /><br />(ஆதாரம்: சுவாமி சிவானந்தா சரசுவதியின் ஞான சூரியன்)<br /><br />தன் தாயைச் சந்தே, கித்து, விபச்சாரி என்று கூறி பார்ப்பான் சொல்லும் மந்திரம் தான் திதி, ஒழுக்கக் கேடும் விபச்சாரமும் தானே பார்ப்பனீயம்!<br /><br />Read more: http://viduthalai.in/page5/85567.html#ixzz39zsrEJ87<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-73782186857271914312014-08-10T19:19:30.420+05:302014-08-10T19:19:30.420+05:30
வாஷிங்டன் வட்டார முன்னாள் தமிழ்ச் சங்க தலைவர் எம்...<br />வாஷிங்டன் வட்டார முன்னாள் தமிழ்ச் சங்க தலைவர் எம்.எம். இராஜ் பேட்டி<br /><br /><br /><br />வாஷிங்டன் வட்டார தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் தலைவரும், வாஷிங்டனில் வெளிவந்த முதல் தமிழ் மாத இதழான குமரி இதழின் நிர் வாக இயக்குநருமாகிய எம்.எம். இராஜ் அவர்கள் விடுதலை இதழுக்கு அளித்த நேர்காணல்:<br /><br />சமீபத்தில் நடந்த வேட்டிப் பிரச்சினையில் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் வேட்டிக்கு ஆதரவாகக் குரல் கொடுத்திருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது. அதுபோல இந்துக் கோவில்களில் ஆண்கள் சட்டை அணிந்து செல்லக் கூடாது என்ற பழக்கம் இருந்து வருகிறது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது. சட்டை அணிய கோவில் நிர்வாகிகள் அனுமதிக்க வேண்டும். அதற்காக அனைத்து அரசியல் கட்சிகளும் குரல் கொடுக்க வேண்டும்.<br /><br />அதுபோல் கோவில்களில் தமிழ் இன்னும் நுழைய வில்லை. சமஸ்கிருதம்தான் உள்ளது. அனைத்து கோவில் களிலும் தமிழில் வழிபடும் உரிமை வேண்டும். கோவில் வியாபார இடமாக மாறி விட்டது. பூஜை பொருட்கள், மலர் மாலைகள்கூட அதிக விலைக்கு ஏழை மக்களிடம் விற்பனை செய்வது கண்டிக்கத்தக்கது.<br /><br />திருவனந்தபுரம் பத்மனாப சாமி கோவிலில் இருக்கும் நகைகள் குமரி மாவட்ட மக்களுடை யது. அன்றைய திருவிதாங்கூர் அரசு இளை ஞர்கள் மீசை வைத்தால் அதற்கு வரி, இது போன்று பல வரிகள் போட்டும் தற்போதைய குமரி மாவட்ட மக்களின் உழைப்பு, பொருள் அனைத்தும் பத்மனாபசாமி கோவிலில் நகையாக உள்ளது. அங்கு இருக்கும் நகைகளில் சரிபாதி நகைகளை தமிழக அரசுக்கு கோவில் நிர்வாகம் வழங்க வேண்டும். தமிழக அரசு அந்தத் தொகையினை முழுக்க முழுக்க குமரி மாவட்ட மக்களின் வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும். பத்மனாபபுரத்தில் இருக்கும் அரண்மனை தற்போது கேரள அரசிடம் உள்ளது. இதனை மீட்டு அந்த அரண் மனையை தமிழக அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும் என்று அவர் கூறினார்.<br /><br />நேர்காணல்: கோ. வெற்றிவேந்தன், மாவட்ட செய்தியாளர்<br /><br />Read more: http://viduthalai.in/page4/85565.html#ixzz39zs785kJ<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-37292840437706330582014-08-10T19:17:15.875+05:302014-08-10T19:17:15.875+05:30
செக்யூலரிஸம் என்றால் என்ன?
செக்யூலர் செக்யூலர...<br />செக்யூலரிஸம் என்றால் என்ன?<br /><br /><br /><br /><br />செக்யூலர் செக்யூலரிஸம் என்ற சொற்கள். இந்தியா சுயாட்சி என்பது அடைந்தது முதல் அதிகமாக அடிபட்டு வருகின்றன. இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திலும் இவை இடம் பெற் றுள்ளன.<br /><br />இந்த செக்யூலர் செக்யூலர் கவர்ன் மெண்ட் என்பதற்கு ஆளும் குழுவினர் கூறும்பொருள், சமய சந்தர்ப்பத்துக் கேற்றபடி மாறுபடுகிறது.<br /><br />மதமற்ற அரசாங்கம் என்று அடி நாளிலும்; பின்னர் மதச்சார்பற்ற அரசாங்கம் என்றும் கருத்து விளக்கம் தெரிவிக்கப்பட்டது.<br /><br />குழப்பம்<br /><br />ஆனால், அண்மையிலோ ஆட்சி பீடாதிபதிகள் மத விழாக்களிலும், கும்ப மேளாக்களிலும் கலந்துகொண்டதனை பொது மக்கள் உலகம் குற்றம் கூறவே, செக்யூலர் என்றால் மதங்கள் மீது வெறுப்புக் கொண்டு ஒதுக்கித் தள்ளுவ தல்ல- _ எல்லா மதங்கள் பாலும் சமரச நோக்குடன் நடந்து கொள்வதேயாகும் என்று பச்சோந்தி விரிவுரை கூறப் பட்டது. இது செக்யூலரிஸம் என்பதை குழப்பமாக்கி விட்டதுடன் -_ அதன் நற்பயனில் சந்தேகம் கொள்ளவும் செய்து விட்டது.<br /><br />செக்யூலரிஸம் என்றால் ஆங்கில அகராதியில் தரப்பட்டுள்ள பொருள் -_ இந்த உலகானது -_ மறுவுலக சம்பந்தமில்லாதது என்பது. இதனை ஆரிய வடமொழியில் லோகாயிதம் என்கின்றனர். தமிழ் அகராதியிலும் இதே சொல் தரப்பட்டுள்ளது. இது பொருத்தமல்ல. ஏனெனில் இந்த லோகாயிதத்தின் தொடர்ச்சியாக பர மார்த்திகம் என்பதையும் பிணைத்துள் ளனர். அதாவது லோகாயித் வாழ்க்கையை அடுத்து பரமார்த்திகத்தை அடைய வேண்டுமென்றும் கருத்து விளக்கம் செய்து, லோகாயிதம் என்ப தன் உண்மைக் கருத்தையும் நோக்கத் தையும் பாழாக்கி விட்டனர். இந்தச் சொல்லுடன் மத இயலையும் கடவுளி யலையும் பிணைத்து விட்டனர்.<br /><br />உண்மை விளக்கம்<br /><br />செக்யூலரிஸம் என்பதன் உண்மை விளக்கப் பொருள் என்ன? இதன் மொழித்துறை வரலாறு என்ன? என்று அறிவியல்வாதிகளும் பகுத்தறிவுவாதி களும் ஆராய்ந்து பார்க்க வேண்டியுள் ளது. பகுத்தறிவியல் என்பது அறிவைப் பயன்படுத்தி மெய்யை உணர்தல். இவ்விதம் பகுத்தறிவு கொண்டு அறிந்த மெய்மைகளை நடைமுறையில் நடத்திக் காட்டுவதே செக்யூலரிஸம் ஆகும்.<br /><br />இந்த செக்யூலரிஸம் என்ற ஆங்கிலச் சொல்லை முதன் முதல் கையாண்டவர் பகுத்தறிவு மேதை ராபர்ட் இங்கர்சால் அவர்களின் அறிவியல் தோழர்களில் ஒருவரான ஜார்ஜ் ஜாகப்ஹோலியோக் என்பவர். இவரும் குழந்தை வயதில் மதத் துறையில் வளர்க்கப்பட்டவர். அறிவு விரிவடைந்ததும் இந்த மதப் புரட்டு களையும் மதமடமைக் கொள்கைகளை யும் எதிர்த்துப் புரட்சிக் கொடி தூக்கி னார். நாத்திகர் என்ற குற்றத்துக்காக 1841_42ஆம் ஆண்டு வாக்கில் இங்கி லாந்தில் சிறை வாசமும் செய்தவர்.<br /><br />நடைமுறையில் பரப்பியவர்<br /><br />தோழர் ஜார்ஜ்ஜாகப் ஹோலி யோக்தான் முதன் முதல் தமக்கும் தம் கோட்பாட்டினருக்கும் செக்யூலரிஸம் என்ற தனி இடு குறிப்பெயர் இட்டுக் கொண்டார். இந்தப் பகுத்தறிவு நடைமுறை இயல் கழகங்களும் லண் டனில் பல இடங்களில் தோற்றுவித்து நடத்தினார். பகுத்தறிவு இயல் பத் திரிகைகள் பலநடத்தினார். பகுத்தறிவு பத்திரிகையாளர் கழகமும் ஏற்படுத் தினார். இதற்கு முதல் தலைவரும் இவரே.<br /><br />பிரிட்டிஷ் செக்யூலர் யூனியன் என்ற பேரவைத் தலைவராகவும் இவர் பல்லாண்டுகளிருந்து பணியாற்றி, கோட்பாட்டையும், கழகத்தையும் பரப்பி, வலுப்படுத்தினார்.<br /><br />இந்த செக்யூலரிஸம் என்ற சொல்லுக்கு இவர்தந்த விளக்கப் பொருள் இந்த உலக வாழ்க்கை சம் பந்தமான கடமை வழிக் கோட்பாடு அமைப்பு என்பதாகும்.<br /><br />இங்கர்சால் விளக்கம்<br /><br />மேதை இங்கர்சால் இந்தச் சொல்லுக்குத் தந்துள்ள விளக்கப் பொருள் இந்த உலக விஷயங்களில் மனிதப் பண்பாட்டுடன் மனித அனு தாபத்துடன் நடந்து கொள்ளும் நெறி; அறியும் உணர்ச்சி கொண்டவர்களின் நலனுக்கான ஒவ்வொரு விஷயத்திலும் நடப்பிலும் கருத்துச் செலுத்துவது; அனுபவ உலக ஆய்வு அறிவு என்பதற்கு மறுபெயரும் இதுவாகும். அதாவது அவரவர்கள் புரிந்து கொண்ட முறையிலும் விருப்ப வாய்ப்புகளுக்கு ஏற்ற வகையிலும் வாழ்க்கைத் துறையை செப்பனிட்டு அமைத்துக் கொள்ளச் செய்வது இது. இங்கு இந்த உலகில் அவரவர்களுக்கான நல் வீட்டை அமைத்துக் கொள்வதில் நம்பிக்கை கொள்ளச் செய்வது இந்த செக்யூ லரிஸம்<br /><br />ஒவ்வொருவர் தனி முயற்சி ஊக்கம், அறிவு, ஆற்றல், ஆராய்ச்சி அனுபவம் ஆகியவற்றில் நம்பிக்கை கொள்ளச் செய்வது.<br /><br />நாமறியாததும் அமானுஷியமானது மான ஏதோ ஒன்றில் (கடவுள்) நம் பிக்கை கொள்வதைத் தவிர்ப்பது இது. இந்த வாழ்க்கையில், இந்த உலகில் மகிழ்ச்சியுடன் நல்வாழ்வு அனைவரும் வாழ வேண்டுமென்பதே இதன் குறிக்கோள் என்பதாகும். இந்த பகுத்தறிவியக்க செக்யூலரிச மேதைகளின் விளக்கத்திலிருந்து இந்த செக்யூலர் -_ செக்யூலரிஸம் என்பன மத இயல், கடவுளியல் மறுப்புக் கோட்பாடு _- மதம் கடவுள் என்பதனை ஒழித்துக் கட்டுவது என்பது தெளிவுபடுகிறது.<br /><br />Read more: http://viduthalai.in/page3/85563.html#ixzz39zrPHtqA<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-59844751240816914152014-08-10T19:15:55.334+05:302014-08-10T19:15:55.334+05:30
பெர்னாட்சா
ஜார்ஜ் பெர்னாட்சா தந்தை பெரியார் போ...<br />பெர்னாட்சா<br /><br /><br />ஜார்ஜ் பெர்னாட்சா தந்தை பெரியார் போலவே 94 ஆண்டுகள் வாழ்ந்து மறைந்தவர் (1856-1950) மிகச் சிறந்த இலக்கியப் படைப்பாளர். ஆங்கிலத்தில் அவர் எழுதிய நாடகங்கள் காலங்கடந்து நிற்கக் கூடியவை. இலக்கியத் தொண்டுக்காக நோபல் பரிசு அளிக்கப்பட்டது (1925). நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர் - பள்ளிப் படிப்பில் ஆர்வம் இல்லை - ஆனாலும், நூல்களைப் படிப்பதில் கட்டுக் கடங்கா ஆர்வம் கொண்டவர்.<br /><br />பல எழுத்தாளர்களுக்கு ஏற்பட்ட அனுபவம் போலவே தொடக்கத்தில் அவர் எழுதிய எழுத்துகள் ஈர்க்கப்படவில்லை. விடா முயற்சியால் வெற்றி பெற்றார். ஆங்கில இலக்கியத்தில் நாடகப் பஞ்சம் என்ற விமர்சனத்தை வீழ்த்தும் வகையில் அரிய சாதனைகளைப் படைத்தவர் ஆவார். 50-க்கும் மேற் பட்ட நாடகங்களை எழுதினார்.<br /><br />புராண மய்ய கருத்துகளைத் தூக்கி யெறிந்து சமூக மாற் றத்துக்கான கருத்து களை, சமூகச் சிக்கல்களை மய்யப் படுத்தி நாடகங்களைத் தீட்டினார். கருத்தும், வசீகர நடையும் காந்தமாக மக்களை ஈர்த்தது. இசை, நாடகங்களைத் திற னாய்வு செய்வதில் விற்பன்னர் என்ற பெய ரெல்லாம் இவருக்கு வந்து சேர்ந்தது. நல்ல பேச்சாளராக மிளிர வேண்டும் என்ற ஆசை அவருக்கு உண்டு. ஆனாலும், சபைக் கோழைத்தனம் என்பது அவரைப் பிடித்து உலுக்கியது. தானாகப் பேசிக் கொண்டு போக ஆரம்பித்தார். அதன்பின் கூட்டம் உள்ள இடத்தில் உரக்கப் பேச ஆரம்பித்தார். அதன் விளைவு தலைசிறந்த ஆங்கிலப் பேச்சாளர் என்ற புகழின் உச்சியில் பளபளப்பாகப் பறந்தார்.<br /><br />மிகுந்த நகைச்சுவை உணர்வைக் கொண்டவர். பேச்சிலும், எழுத்திலும் அவை போட்டி போடும். கிறித்துவக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தாலும், கார்ல் மார்க்சின் தத்துவம் இவரைக் கவர்ந்தது. அமைதி வழியில் சோசலிசக் கொள்கை களைப் பரப்புவதற்காக நிறுவப்பட்டிருந்த ஃபேபியன் கழகத்தில் (திணீதீவீணீஸீ ஷிஷீநீவீமீஹ்) சேர்ந்தார். பெர்னாட்சாவைப்பற்றி ஏராள மான துணுக்குகளும், தகவல்களும் உலகம் பூராவும் பரவியுள்ளன. பத்திரிகை யாளர் ஒருவர் உலகில் மிகச் சிறந்த அறிவாளி யார்? என்று ஷாவைக் கேட் டார். இரண்டாவது இடத்தில் ஸ்டாலின், மூன்றாவது இடத்தில் அய்ன்ஸ்டீன், முதல் இடத்தில் உள்ளவரின் பெயரைச் சொன் னால் என்னைத் தற்பெருமைக்காரன் என்று சொல்லிவிடுவீர்கள் என்றாராம்.<br /><br />அழகு கொழிக்கும் பெண் ஒருவர் ஷாவைச் சந்தித்து, நான் உங்களைத் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறேன். நம்மிருவருக்கும் திருமணம் நடந்தால், என்னைப் போன்ற அழகும், உங்களைப் போன்ற அறிவும் கொண்ட குழந்தை பிறக்கும் அல்லவா?<br /><br />என்றார் அந்தப் பெண்மணி. நீ சொல்வது சரியென் றாலும், என்னைப் போன்ற அழகும், உன்னைப் போன்ற அறிவும் கொண்ட குழந்தை பிறந்தால் என்னாவது? என்றாராம். பெர்னாட்ஷா எழுதி வைத்த உயில் புகழ் பெற்றது. சொத்தின் சரி பகுதியை அவரது நூலகத்திற்கு எழுதி வைத்தார்.<br /><br />Read more: http://viduthalai.in/page2/85561.html#ixzz39zrCxG4o<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-18190818513729789122014-08-10T19:12:47.286+05:302014-08-10T19:12:47.286+05:30
இந்த நாள் (10.8.1942) முரசொலிக்கு வயது 72
திராவி...<br />இந்த நாள் (10.8.1942) முரசொலிக்கு வயது 72<br /><br />திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் கலைஞர் அவர்களால் 10.8.1942 இல் தொடங்கப் பெற்ற முரசொலி இதழுக்கு இன்றுடன் 71 வயது நிறைவடைந்து 72 ஆவது வயது தொடங்குகின்றது.<br /><br />முரசொலி இதழ் திருவாரூரில் நடைபெற்று வந்த தமிழ் மாணவர் மன்றத்தின் சார்பில் சேரன் என்ற புனைப்பெயர் கொண்ட நமது கலைஞர் அவர்களால் தொடங்கப்பெற்று இலவசமாக வழங்கப்பெற்று வந்துள்ளது. (குடிஅரசு -_ 6.5.1944 பக்கம் 2)<br /><br />முரசொலி ஒலிக்குது பாரீர்! என்ற வாசகத்துடன் அறிவியக்கக் கொள்கைகளை அறிவுறுத்துவது ஆரியத்தை அலறவைப்பது, வைதீகத்தை வாட்டுவது, பண்டிதர்களைப் பதறவைப்பது என்ற கொள்கைகளைக் கொண்டு தொடங்கி 71 ஆண்டுகளைக் கடந்து வந்துள்ளது என்பதை அறியும் பொழுது உவகை மேலிடுகிறது. இடையில் எத்தனை சோதனைகள், வேதனைகளைக் கடந்து வந்துள்ளது.<br /><br />இதழினை ஆதரிக்க வேண்டிய வேண்டுகோளுடன் இளம் எழுத்தா ளர்களின் வெளியீடுகள் ஆரியருக்கு நல்ல டார்ப்பிடோக்கள் ஆதரிக்க வேண்டுவது திராவிடர்களின் கடமையாகும் என்று அன்றே அறிவித்தது.<br /><br />முரசொலி என்ற சுயமரியாதைக் கொள்கைகள் அடங்கிய துண்டுப்பிரசுரத்தை மாதமொருமுறை வெளியிடுவதெனத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. பெரியாரின் கொள்கைகளை சுயமரியாதை இயக்கத்துடன் இணைந்து பரப்பி வந்துள்ளது.<br /><br />கலைஞர் அவர்கள் எப்பொழுதும் மூத்த பிள்ளையாக முரசொலியைத் தான் முதலில் கூறுவார் என்பது நாம் அறிந்த உண்மை. எனவே, முரசொலியின் முகப்பு வாசகமான வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும் என்று அன்றே தமிழ் மாணவராக இருந்து இன்றும் தமிழர்களின் ஒப்பற்ற தலைவராக விளங்கும் கலைஞர் அவர்களுக்கும் தலைவரின் மூத்த பிள்ளையான முரசொலிக்கும் வாழ்த்துகளை வழங்கி மகிழ்கிறோம்.<br /><br />Read more: http://viduthalai.in/page-2/85589.html#ixzz39zqQLxQR<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-4160071043776317982014-08-10T19:09:26.581+05:302014-08-10T19:09:26.581+05:30
விக்ரஹம்
ஏடு நடத்தும் பார்ப் பனர்கள் ஒன்றை மறக்...<br />விக்ரஹம்<br /><br /><br />ஏடு நடத்தும் பார்ப் பனர்கள் ஒன்றை மறக் காமல் செய்வார்கள். அது வேறு ஒன்றும் இல்லை. அவர்களின் லோகக் குருவான சங்கராச்சாரியார் படத்தைப் போடுவார்கள். அவாளின் அருள்வாக்கு களை வெளியிடுவார்கள்.<br /><br />அதுபோல்தான் கல்கி (10.8.2014) மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் சந்திர சேகரேந்திர சரஸ்வதியா ரின் அருள்வாக்கு ஒன்றை வெளியிட்டு மகிழ்ந்துள்ளது.<br /><br />அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகியோர் பாடிய தேவார ஓலைச் சுவடி களை தில்லை நடராஜன் கோயிலில் ஓர் அறையில் போட்டுப் பூட்டி வைத்து விட்டனர் தீட்சிதர்கள்.<br /><br />சிதம்பரம் சிற்றம் பலத்திலே ஓதுவார் ஆறு முகசாமி திருவாசகப் பாடல்களைப் பாடியபொ ழுது இப்பொழுதுதான் தில்லை தீட்சிதர்கள் தடுத் தனர், அடித்தனர் என்று கருதிட வேண்டாம்! அந்தக் காலத்திலேயே அவை தமிழில் உள்ளன என்ற துவேஷப் புயலால் அவற்றை வெளியிலேயே விடக் கூடாது என்ற கெட்ட எண்ணத்தால் அவற்றை ஓர் அறையில் போட்டுப் பூட்டினர் என் பதை நினைவில் கொள்ள வேண்டும்.<br /><br />அந்த ஓலைச் சுவடி களை தீட்சிதர்களிடமி ருந்து மீட்க ராஜராஜ சோழன் நம்பியாண்டார் நம்பியுடன் தில்லை நட ராஜன் கோயிலுக்குச் செல்கிறான்.<br /><br />தில்லை வாழ் கோயில் தீட்சதர்களோ மன்ன வனே வந்து விட்டான்; மரியாதையாக தேவார ஓலைச் சுவடிகளை கொடுத்து விட வேண்டி யதுதான் என்று நினைக்க வில்லை; மாறாக தேவாரம் பண்ணிய அந்த சாட்சாத் மூவரும் நேரில் வந்து கேட் கட்டும்; அப்பொழுதுதான் தருவோம் என்று ஆணவ மாகச் சொற்களை வாரி இறைத்தனர்.<br /><br />இராஜராஜன் என்ன செய்தான்? அப்பர், சம் பந்தர், சுந்தரர் உருவப் பொம்மைகளை (விக்ர ஹங்களை) கொண்டு வந்து காட்டி, அந்த ஓலைச் சுவடிகளைத் தருமாறு வேண்டினான்; அப்பொ ழுதும் தீட்சிதர்கள் அசைந்து கொடுக்கவில்லை. இவை சிலைகள்தானே? இதனை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? என்று வினவிய நேரத்தில் ராஜராஜன் அப்படியானால் நடராஜப் பெருமானும் சிலையல் லவோ? என்ற வினாவைத் திருப்பிப் போட்டான்.<br /><br />அதற்கு மேலும் தடை செய்தால்.. வந்தவன் ராஜா ராஜன் ஆயிற்றே! கெஞ்சி னால் மிஞ்சுவதும், மிஞ் சினால் கெஞ்சுவதும்தான் பார்ப்பனர்களின் நிலை! நிலைமையைப் புரிந்து கொண்டு அந்த ஓலைச் சுவடிகள் குவிந்து கிடந்த அறையைத் திறந்தனர். கரையான் புற்று மூடிக் கிடந்தது. பெரும்பாலா னவை அழிந்தும் போய் விட்டன!<br /><br />சங்கராச்சாரியார் இது பற்றி என்ன சொல்கிறார்? கல்கி கூறுகிறது: ராஜராஜன் கொண்டு வந்தது விக்ர ஹம்தான் என்றாலும் ப்ராண பிரதிஷ்டை ஆன படியால் அது ப்ராண னுள்ள மூர்த்திகளே என்ப தால் தேவாரத்தை தீட்சி தர்களிடமிருந்து மீட்க முடிந்தது என்று கதை விடுகிறார். எப்படி இருக்கிறது? தீட்சிதர்களைக் காப்பாற்ற வேண்டும் அல்லவா!<br /><br />- மயிலாடன்<br /><br />Read more: http://viduthalai.in/e-paper/85616.html#ixzz39zpZdwCw<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-82184418986372489252014-08-09T07:53:39.306+05:302014-08-09T07:53:39.306+05:30
ராகு, கேது பெயர்ச்சி விழா
தஞ்சாவூர் மாவட்டம் கும...<br />ராகு, கேது பெயர்ச்சி விழா<br /><br />தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகில் உள்ள ராகு தோஷ பரிகாரத் தலமான திருநாகேசுவரத்தில் நடைபெற்ற ராகு பெயர்ச்சி விழாவிலும், நாகப்பட்டினம் மாவட்டம் கீழப்பெரும்பள்ளத்தில் உள்ள நாகநாதசுவாமி கோவிலில் நடைபெற்ற கேது பெயர்ச்சி விழாவிலும் திரளான மக்கள் கலந்து கொண்டனர் என்று செய்தி வெளியிட்டுள்ள (22.6.2014) அதே நாளிதழில் இல்லாத _ கற்பனையான ராகு _ கேது கோள்களின் பெயர்ச்சியும், அதற்கு ஆரவாரமாக விழாவும் எடுக்கிறார்கள். அதைக் காண திரளான பக்தர்கள் பணம், நேரம், உழைப்பு என எல்லாவற்றையும் வீணடித்துக்கொண்டு வருகிறார்களே, இப்படிப்பட்ட மூடநம்பிக்கைகளுக்கு ஓர் எல்லையே இல்லையா என்று எந்தச் சமூக ஆர்வலரும் ஆதங்கப்படக் காணோம்.<br /><br />இதெல்லாம் ஒருபுறம் கிடக்கட்டும். கைகளில் கயிறுகள் வண்ணவண்ணமாய்க் கட்டினால், நினைத்தது, கேட்டது எல்லாம் கிடைத்து தங்கள் வாழ்வில் வளமும் நலமும் பெருகும் என்று மூடத்தனமாக நினைத்துக் கொண்டுள்ள இன்றைய மக்களைப் பார்த்து இந்த அறிவுஜீவி சமூக ஆர்வலர்கள் மூடநம்பிக்கைக்கு ஓர் எல்லையே இல்லையா என்று கதறி கண்ணீர் வடிக்கக் காணோம்! அது சரி, அவர்கள் கைகளிலும் அல்லவா கொசகொசவென்று வண்ணக் கயிறுகளைச் சுற்றிக் கொண்டு மூடநம்பிக்கைக்கு ஓர் எல்லையே இல்லாமல் இருக்கிறார்கள்.<br />எப்படியோ, பேய் ஓட்டுவதாகக் கூறி முதியவர் தலையில் ஆணி அடித்ததைக் கண்டாவது மூடத்தனத்திற்கு ஓர் எல்லையே இல்லையா என்று கேள்வி எழுப்பிய அறிவு ஜீவிகளான அந்தச் சமூக ஆர்வலர்களை நாம் நெஞ்சாரப் பாராட்டுவோம்.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-31183272246137926662014-08-09T07:53:34.756+05:302014-08-09T07:53:34.756+05:30
இப்படிப்பட்ட பல்வேறு வகையான கல்வியறிவு இல்லாத எளி...<br />இப்படிப்பட்ட பல்வேறு வகையான கல்வியறிவு இல்லாத எளிய மக்களின் செயல்கள் _ மூடநம்பிக்கைகள்தான் இந்த நாளிதழ் குறிப்பிடும் சமூக ஆர்வலர்கள் மூடநம்பிக்கைகள் என்று கருதுகிறார்கள் போலும்.<br /><br />அதே நாளிதழில் (3.7.2014) சந்தோஷம் தருபவர் சக்கரத்தாழ்வார் என்ற தலைப்பில் விக்னேஷ்ஜி அய்யர் என்பவர் எழுதியுள்ள கட்டுரையில் சக்கரத்தாழ்வாரைப் பூஜித்தால் என்னவெல்லாம் நடக்கும் என்று விளாவாரியாக எழுதியுள்ளார்.<br /><br />1. நவக்கிரக தோஷங்கள் நீங்கும்!<br />2. விரைவில் திருமணம் கூடும்!<br />3. நினைத்த நல்ல காரியங்கள் கைகூடும்!<br />4. கடன் தொல்லை நீங்கும்!<br />5. வியாதி ஓடிவிடும்!<br />6. எதிரிகள் தரும் துன்பம் நீங்கும்!<br />7. கல்வியில் தடை நீக்கப்பட்டு மேலும் மேலும் தொடரும்!<br />8. வாழ்வில் வளம் கூடும்!<br />9. பொன்னையும் பொருளையும் வாரி வழங்குவார்!<br />என்று எழுதுகிறார்.<br /><br />இதைப்பற்றிக் கவலைப்பட்டு மூடத்தனத்திற்கு ஓர் அளவே இல்லையா என்று எந்த அறிவுஜீவி சமூக ஆர்வலரும் கேட்டதாகக் காணோம்.<br /><br />1.7.2014 அன்று வெளிவந்த இதே நாளிதழில், ஆந்திர மாநிலம் ஓங்கோலில் மழைவேண்டி நடைபெற்ற வருண பூஜையின்போது ஒரு தொட்டியில் உள்ள தண்ணீரில் கழுத்துவரை மூழ்கி பூசை செய்த குருக்கள் பற்றிய படச் செய்தி வந்துள்ளது. இதைப்பற்றி எந்த அறிவுஜீவி சமூக ஆர்வலர்களும் மூடநம்பிக்கைக்கு எல்லையே இல்லையா என்று கேட்கக் காணோம்.<br /><br />மேலே உள்ள படச் செய்திக்கு கீழே பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.69 உயர்வு. டீசல் 50 பைசா அதிகரிப்பு என்ற செய்தி வெளியாகியுள்ளது.<br /><br />அதைப் படித்தபோது, அதே தொட்டியில் பெட்ரோலை ஊற்றி அதில் குருக்கள் கழுத்துவரை மூழ்கி பெட்ரோல் வேண்டி பூதேவி பூஜை செய்தால், இந்த அறிவுஜீவி சமூக ஆர்வலர்கள் மூடத்தனத்திற்கும் ஓர் எல்லையே இல்லையா என்று கேட்பார்களா? மாட்டார்கள். மாறாக இவர்களும் மந்திரம்(?) ஓதுவார்கள்.<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-22808924807567233482014-08-09T07:53:24.072+05:302014-08-09T07:53:24.072+05:30மூடநம்பிக்கைக்கு எல்லையே இல்லையா?
அண்மையில் (3....மூடநம்பிக்கைக்கு எல்லையே இல்லையா?<br /> <br /><br />அண்மையில் (3.7.2014) நாளிதழ்களில் புதியதாக ஒரு மூடத்தனம் பற்றிய செய்தி வெளிவந்துள்ளது.<br /><br />திருநெல்வேலி நகரத்தில் வாழும் 60 வயது முதியவருக்குப் பேய் பிடித்திருப்பதாகக் கூறிய மந்திரவாதி, அந்தப் பேயை ஓட்டுவதற்காக முதியவர் தலையில் மூன்று அங்குல நீளமுள்ள துருப்பிடித்த ஆணியை அடித்துள்ளார். வலியால் துடித்த அவருக்கு வலி நிவாரணி மாத்திரைகளைக் கொடுத்திருக்கிறார்கள். சில நாளில் முதியவருடைய இடது கையும், இடது காலும் செயலிழந்து போகவே, அவரைப் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளார்கள். அங்கு அந்த முதியவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.<br /><br />இந்தச் செய்தியை வெளியிட்ட ஒரு நாளிதழ் (தி இந்து_தமிழ்) செய்தியின் இறுதியில் மூடநம்பிக்கைகளுக்கும் ஓர் எல்லையே இல்லையா என கேள்வி எழுப்புகின்றனர் சமூக ஆர்வலர்கள் என்று எழுதியுள்ளது.<br /><br />இதைப் படித்தபோது எனக்கு சில மூடநம்பிக்கைகள் நினைவிற்கு வந்தன.<br /><br />மழைவேண்டி தவளைக்கும் தவளைக்கும் திருமணம் செய்வது; மனிதனுக்கும் கழுதைக்கும் திருமணம் செய்வது; இடுகாட்டுக்குச் சென்று நிலத்தைத் தோண்டி மனித எலும்புகளை எடுத்துக் கடிப்பது: பேய் ஓட்டுவதாகக் கூறி வேப்பிலையால் அடிப்பது: தலையில் தேங்காய் உடைப்பது, பிறந்த குழந்தையை மாட்டுச் சாணத்தில் குளிப்பாட்டுவது... இன்னும் பல செய்திகள் என் மனதில் ஓடின.<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-79313653690413155022014-08-09T07:52:35.202+05:302014-08-09T07:52:35.202+05:30மத்திய அரசின் தேர்வாணைய வினாத்தாளில் பெண்களை அவமதி...மத்திய அரசின் தேர்வாணைய வினாத்தாளில் பெண்களை அவமதிக்கும் வினாக்கள்<br /><br /><br />பின்வரும் நடிகையரில் யார் அதிக உயரமானவர்?<br /><br />(அ) ஹூமா குரேஷி, (ஆ) கத்ரினா கைஃப், (இ) தீபிகா படுகோனே (ஈ) ப்ரீதி ஜிந்தா<br /><br />இந்தக் கேள்வி ஏதோ ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியின் இறுதியில் கேட்கப்பட்டு எஸ்.எம்.எஸ்.சில் பதில் சொல்லப்படும் போட்டிக் கேள்வி அல்ல.<br /><br />புது தில்லியில் உள்ள மத்திய தேர்வாணையம் நடத்திய மத்திய பணியாளர் தேர்வுக்கான வினாத்தாளில் இடம் பெற்றுள்ள வினாக்களுள் ஒன்று தான் மேலேயுள்ளது.<br /><br />அது மட்டுமல்ல, பெண்களை பாலியல் ரீதியாக இழிவுபடுத்துவதுபோல், தரக்குறைவாக பெண்கள் அனைவரும் பூனைகள், பூனைகள் அனைத்தும் எலிகள் என்கிற தலைப்பில் வினாவும் இடம் பெற்றது.<br /><br />பெண்களை இழிவுபடுத்தும்விதமாக பாலியல் வேறுபாடுகளுடன் வினாக்களைக் கேட்பதா என்று தேர்வாணையத்திடம் விளக்கம் கேட்டு கேரள மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.<br /><br />அதற்கு மத்திய தேர்வாணையத்தின் தலைவராக உள்ள ஏ.பட்டாச்சார்யா மன்னிப்புக் கேட்டுள்ளார். இது முறையில்லாதது, சகித்துக் கொள்ள முடியாதது, தரக்குறைவானது என்று கூறியதுடன் இந்தத் தகவலால் மிகவும் நிலைகுலைந்துபோய் உள்ளதாகவும் கூறியுள்ளார்.<br /><br />மேலும், மகளிர் ஆணையத்தின் வேண்டுகோளுக்கிணங்க தேர்வாணையம் அந்த இரு வினாக்களையும் நீக்கிவிடுவதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.<br /><br />இனி மத்திய அரசுப் பணிகளுக்குத் தேர்வு எழுதுவோர் இன்ச் டேப்புடன் அலைய வேண்டுமோ என்னவோ? அப்புறம் இடுப்பளவு பற்றி கேள்வி கேட்டுவிட்டால் என்ன செய்வது?தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-10552815196430793552014-08-09T07:51:47.241+05:302014-08-09T07:51:47.241+05:30பாலஸ்தீன சுயாட்சிப் பிரதேசம் என்று சொல்லப்படும் கா...பாலஸ்தீன சுயாட்சிப் பிரதேசம் என்று சொல்லப்படும் காசா முனை மற்றும் மேற்குக்கரைப் பகுதிகள் இணைந்துதான் எதிர்கால பாலஸ்தீன அரசாக அமைய வேண்டும். பாலஸ்தீனர்கள் இருந்தால்தானே அவர்களுக்கு அரசு என மனக்கணக்குப் போடுகிறது இஸ்ரேல். அதன் விளைவுதான் இப்போது நடைபெற்று வரும் தாக்குதல். மேற்குக்கரையில், பாலஸ்தீனர்களின் நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத யூதக்குடியிருப்பில் இருந்து, ஜூன் 12ஆம் தேதி, பதின்ம வயது யூதச்சிறார்கள் 3 பேர் காணாமல் போகிறார்கள்; ஜூன் 30ஆம் தேதி அவர்கள் சடலமாக கண்டெடுக்கப்படுகிறார்கள். இடையில், அந்தச் சிறார்களைக் கடத்தியது காசா முனை ஆட்சியாளர்களான ஹமாஸ் அமைப்பினர்தான் என்கிறது இஸ்ரேல் அரசு; எத்தகைய செயலுக்கும் பொறுப்பேற்கும் கொள்கை கொண்ட ஹமாஸ், தாங்கள் அந்தச் சிறார்களைக் கடத்தவில்லை என அடித்துச்சொல்கிறது.<br /><br />பாலஸ்தீனத்தில் ஒருங்கிணைந்த அரசு அமைக்கப்பட்டதுடன், அய்.நா.வில் நிரந்தர உறுப்பு நாடு அந்தஸ்து கோருவதையும் கண்ணில் நெருப்புப் பொறி பறக்கப் பார்த்து, தாக்குதலுக்குத் தருணம் பார்த்துக் கொண்டிருந்த இஸ்ரேலுக்கு இதைவிட உவப்பான காரணம் தேவையில்லை. ஹமாஸ் மீது கொலைக்குற்றம்சாட்டி முதலில் வான்வழித் தாக்குதல்; பிறகு தரை வழியாகவும் தாக்குதல். இஸ்ரேல் போர் தொடுத்திருக்கிறது என்கிறார்கள், கொல்லப்படுபவர்களோ குழந்தைகள், பெண்கள், முதியவர்கள்; மக்கள் நடமாடும் கடற்கரை, மருத்துவமனைகள், மசூதிகள் மீதுதான் குண்டுவீச்சு. ஜுலை 23ஆம் தேதி வரை கொல்லப்பட்ட பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 657; படுகாயமடைந்தவர்கள் பல்லாயிரம்.<br /><br />இலங்கையின் போர்க்குற்றங்கள் பற்றி துணிச்சலாகப் பேசிய அதே நவநீதம் பிள்ளைதான், இப்போதும் அய்.நா. மனித உரிமை ஆணையத்தின் சார்பில் இஸ்ரேலின் போர்க்குற்றங்களையும் கண்டிக்கிறார். அரச பயங்கரவாதத்தின் கோரமுகத்தை இஸ்ரேல் பாலஸ்தீனர்களுக்கு ஏற்கெனவே பலமுறை காட்டியிருக்கிறது. பயங்கரவாதத்திற்கு எதிராகப் போர் தொடுத்திருப்பதாகச் சொல்லும், பழம்பெரும் ஜனநாயக நாடான அமெரிக்காவோ உக்ரைன் விமானத்தை வீழ்த்தியதாகச் சொல்லி ரஷ்யாவுக்கு எதிராக மேற்குலகத்தைத் திரட்டி தொடைதட்டிக் கொண்டிருக்கிறது. அய்.நா.பாதுகாப்புக் கவுன்சிலும் அதற்காகக் கூட்டப்பட்டு பொருளாதாரத் தடைக்குத் தயாராகிவிட்டார்கள்.<br /><br />இதுவும்கூட அரச பயங்கரவாதத்தின் இன்னொரு முகம்தான்.<br /><br />ஈழப் போர்க் குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணைக்கு மறுக்கிறார் சிங்களப் பேரினவாத ராஜபக்சே. விசாரணைக் குழுவுக்கு விசாகூடத் தரமுடியாது என்கிறது உலகின் மிகப்பெரும் ஜனநாயக நாடான இந்தியாவை ஆளும் பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு. ஈழம், பாலஸ்தீனம், காஷ்மீரம் என எங்கெங்கும் அரச பயங்கரவாதத்தின் கோரமுகங்கள்; போர்முனையிலிருந்து முன்னெச்சரிக்கையாக வெளியேறியிருக்கலாமே, ஹமாஸ் பொதுமக்களைக் கேடயமாகப் பயன்படுத்துகிறது என நீலிக்கண்ணீர் வடிக்கும் அறிவாளிகளே, எங்கு செல்வது, சொல்லுங்கள் என்ற பாலஸ்தீனர்களின் அழுகுரல் உங்கள் செவிப்பறையை எட்டவில்லையா?தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-31136898458262734912014-08-09T07:51:42.200+05:302014-08-09T07:51:42.200+05:30கதறும் காசா முனை!
இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப் பட்டிரு...கதறும் காசா முனை!<br /><br />இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப் பட்டிருக்கும் பகுதி என அய்.நா. வர்ணிக்கும் காசா முனை (gaza Strip), 25 மைல் நீளமும், சில மைல் அகலமும் கொண்ட செவ்வக நிலப்பரப்பு. முள்ளிவாய்க்கால் போன்ற துண்டுநிலம். சுற்றிலும் காங்கிரீட் சுவர்களையும், முள்வேலிகளையும் எழுப்பி வைத்திருக்கிறது இஸ்ரேல். உள்ளே 20 லட்சம் பேர் நிரம்பி வழிகிறார்கள்.<br /><br />எதற்காகவும் வெளியே செல்ல முடியாது. ஒருங்கிணைந்த பாலஸ்தீன அரசு மேற்குக்கரை நகரமான ரமல்லாவில் பதவியேற்றுக்கொண்டபோது, காசா முனையிலிருந்து தேர்வு செய்யப்பட்ட 4 அமைச்சர்கள் அங்கு சென்று பதவியேற்றுக் கொள்ள முடியவில்லை. காரணம், மேற்குக்கரை என்பது அனாதையாக இருக்கும் மற்றொரு துண்டுநிலம் என்பதோடு, இரண்டுக்கும் நடுவே இருப்பது இஸ்ரேலின் நிலப்பரப்பு. சமையல்கட்டுக்கும், படுக்கையறைக்கும் நடுவே இருப்பது வேறொருவரின் வீடு; சுற்றிக்கொண்டும் செல்லமுடியாமல் முள்வேலி தடுப்பு என்றால், பாலஸ்தீனர்களின் இந்தப் புவியியல் அவலம் புரியாமல், இஸ்ரேல் நடத்தும் வெறியாட்டத்தை உங்களால் எப்படி விளங்கிக் கொள்ள முடியும்?<br /><br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-27948958611354319462014-08-09T07:51:32.977+05:302014-08-09T07:51:32.977+05:30ஒரே இரவு மட்டும் எங்களுடன் அல்_-ஷிபா மருத்துவமனையி...ஒரே இரவு மட்டும் எங்களுடன் அல்_-ஷிபா மருத்துவமனையில் தங்குங்கள், நிச்சயமாக அது வரலாற்றையே மாற்றியமைத்துவிடும் என உறுதியாக நம்புகிறேன். இதயமும், அதிகாரமும் வாய்க்கப் பெற்றவர்கள் ஒரே இரவு தங்கினால் போதும். பாலஸ்தீனர்கள் கொன்று குவிக்கப்படும் கோரத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு உறுதிபூணாமல், ஷிபா மருத்துவமனையிலிருந்து அகன்றுவிட முடியாது. ஆனால் இதயமும், கருணையும் அற்றவர்கள் காசா முனையைப் படுகொலை செய்ய கனகச்சிதமாக கணக்குத் தீட்டியிருக்கிறார்கள். ரத்தம் ஆறாகப் பெருக்கெடுத்து இரவையே நனைக்கிறது...<br /><br />எங்கும் மரண ஓலம், குழந்தைகளின் சிதைந்த உடல்கள், கையற்றுக் கதறும் பெற்றோர்கள்.. இஸ்ரேல் எனும் ஆக்டோபசின் பிடியில் சிக்கியிருக்கும், காசா முனை எனப்படும் பாலஸ்தீனத் துண்டுநிலத்தின் நிலை இதுதான். போர் நடைபெறாத காலங்களிலோ அது திறந்தவெளிச் சிறைச்சாலை. இஸ்ரேல் எனும் நச்சுவிதையை பாலஸ்தீன பூமியில் விதைத்த இங்கிலாந்தின் பிரதமர் டேவிட் கேமரூனே மனம் பொறுக்காமல் சொன்ன சொற்கள் இவை:<br /><br />இப்போது இஸ்ரேல் ராணுவம் வான்வழியாகவும், தரை வழியாகவும் கோரத் தாக்குதலைக் கட்டவிழ்த்துவிட்டுள்ள நிலையில், அய்.நா. அமைத்துள்ள முகாம்களில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் அடைக்கலம் புகுந்துள்ளனர். சாரை சாரையாக அஞ்சி ஓடிவரும் மக்களுக்கு இனி இடமில்லை எனுமளவிற்கு அது நிரம்பி வழிகிறது. உணவு, குடிநீர், மருத்துவ வசதிகளைப் பெற இனி உலக நாடுகள் மனது வைத்து நிதியளித்தால்தான் உண்டு என்று அய்.நா.வே கூறிவிட்டது.<br /><br />சர்வதேச விதிகளைக் கழிவறைக் காகிதம் என நினைத்து, அய்.நா. முகாம் என்றும் பாராமல், முன்னர் ஒருமுறை இஸ்ரேல் குண்டுவீசித் தகர்த்திருப்பதால், எங்கிருந்தாலும் சாவு நிச்சயம் என உறுதியுடனிருக்கும் பாலஸ்தீனர்கள் போர்முனைகளில் அலைந்து திரிகிறார்கள்.<br /><br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-2749021492808416422014-08-09T07:51:10.563+05:302014-08-09T07:51:10.563+05:30பாலஸ்தீனப் படுகொலை
ஈழமும்,காசா முனையும் :
அரச ...பாலஸ்தீனப் படுகொலை<br /> <br /><br />ஈழமும்,காசா முனையும் :<br /><br />அரச பயங்கரவாதத்தின்<br />கோர முகங்கள்!<br /><br />- அல்ஃபினா<br /><br />போர் மூண்டுவிடும்போது உயிருக்கு அஞ்சி சர்வதேச எல்லை வழியாக அண்டை நாடுகளில் அடைக்கலம் தேடும் வழக்கம் உலகெங்கும் உள்ளது. அப்பாவி சிவிலியன்களுக்கு வேறு என்ன வழி இருக்க முடியும்? அதற்கும்கூட முடியாமல் அடைக்கப்பட்டிருக்கும் பெரும்பேறு வாய்க்கப்பட்ட மக்களினம் ஒன்று உண்டு.<br /><br /> <br /><br />ஈழத் தமிழர்கள் போலவே ஈராயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக வரலாற்றுத் தொடர்ச்சி கொண்ட பாலஸ்தீனர்கள்தான் அந்த மக்களினம். தாய்மண்ணை இழந்து குற்றுயிரும் குலையுயிருமாகக் கதறும் பாலஸ்தீன காசா முனையின் கோரத்தை வீடியோ விளையாட்டுக் காட்சிகளைப் போல இஸ்ரேல் மட்டுமல்ல, உலக நாடுகள் மட்டுமல்ல, அய்.நா. மாமன்றமும் கடந்து சென்று கொண்டிருக்கிறது. வீடியோ விளையாட்டுகளில் இவ்வளவு வக்கிரக் காட்சிகளை இடம்பெறச் செய்து பார்ப்பவர்களைப் பதைபதைக்கச் செய்யலாமா என அப்பாவியாகக் கேட்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.<br /><br />உயிரைப் பொருட்படுத்தாமல் காசா முனைக்குச் சென்று போரில் காயம்பட்டவர்களுக்குச் சிகிச்சை அளித்து வரும் நார்வே மருத்துவர் டாக்டர் மேட்ஸ் கில்பர்ட், ஒபாமாவுக்கு எழுதியுள்ள திறந்த மடலில் கேட்கிறார், திரு.ஒபாமா, உங்களுக்கு இதயம் இருக்கிறதா?<br /><br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-79138385417730460472014-08-09T07:50:39.739+05:302014-08-09T07:50:39.739+05:30
அதன் எதிரில்போய் விழுந்து தங்கப்பா என்று கதறினார்...<br />அதன் எதிரில்போய் விழுந்து தங்கப்பா என்று கதறினார் கவிராயர்.<br /><br />அப்பன் ஆலயத்தில் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தார். தங்கம் அவர் தலையில் கிரீடமாக ஒளிவிட்டது. கோவில் மணிகள் மட்டும் நிதானந் தவறாமல் ஒலித்துக் கொண்டிருந்தன.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-1638064934456232482014-08-09T07:50:35.079+05:302014-08-09T07:50:35.079+05:30கவிராயர் தமிழுக்குச் செய்த அரும்பெரும் தொண்டைப் பா...கவிராயர் தமிழுக்குச் செய்த அரும்பெரும் தொண்டைப் பாராட்டி தமிழ்நாட்டின் தலைசிறந்த பத்திரிகைகள் எல்லாம் விமரிசனம் செய்தன. அவைகளைப் படித்ததும் தாங்க முடியாத மகிழ்ச்சி அவரைத் தன் நிலையில் இருக்க வொட்டாமல் செய்தது. அத்தனை புத்தகங்களையும் அப்படியே எடுத்துப்போய் அந்தக் கருணை வள்ளலின் காலடியில் காணிக்கையாக வைக்க வேண்டும் என்ற எண்ணத்தால் தூண்டப்பட்டு, வேகவேகமாக ஓடினார் செட்டியார் வீட்டை நோக்கி!<br />உள்ளே செட்டியார் யாருடனோ பேசிக் கொண்டிருந்ததால் கவிராயர் வெளியில் நிற்க வேண்டி ஏற்பட்டது.<br /><br />ஏது, இடிஞ்சு கிடந்த கோவிலைப் புதுப்பிச்சிருக்காப்போலே இருக்கே?<br /><br />புதுக்குரல்!<br /><br />கவிராயர் உள்ளத்தில் அந்தக் கேள்விக்குப் பதில் உருவானது. ஏதோ இந்த ஊர்க்காரவுங்களுக்குத்தான் அக்கறையில்லாமே இருக்குது. நாமாவது செய்யலாம் என்றுதான்<br /><br />அப்படியே அதன் எதிரொலியைச் செட்டியார் வாயிலிருந்து எதிர்பார்த்தார் கவிராயர்.<br />இல்லை, புதுசா இந்தக் கிராமத்திலே ஒரு இருநூறு வேலி நிலம் வாங்கினேன். இந்தக் காட்டுப்பய ஊருக்கு வந்து போகப் பயமாயிருந்துச்சி. செலவோடு செலவா இதைக் கட்டித் தொலைச்சிட்டா நாலு பேரு வந்து போக இருப்பாங்க. நமக்கும் பயமில்லாமே இருக்கும் என்றுதான்....<br /><br />டணார் என்று தொடங்கித் தொடர்ந்து ஒலித்தன ஆண்டவன் ஆலயத்திலிருந்து மணியொலிகள்.<br /><br />கவிராயர் கையிலிருந்த புத்தகங்கள் நழுவிக் கீழே விழுந்தன.<br /><br />திரும்பி வேகமாக நடந்தார். ஓடினார். பறந்தார்.<br /><br />அடி தாங்காது உயிர் துறந்த தங்கப்பன் பிணத்தை எரிக்கச் சுடுகாட்டுக்கு எடுத்துப் போய்க் கொண்டிருந்தனர்.<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-20351690910317962862014-08-09T07:50:25.705+05:302014-08-09T07:50:25.705+05:30ஒவ்வொரு செய்யுளாக இயற்ற இயற்றப் பக்கத்து வீட்டுக்க...ஒவ்வொரு செய்யுளாக இயற்ற இயற்றப் பக்கத்து வீட்டுக்காரர்களை அழைத்து அவ்வப்போதே அரங்கேற்றம் செய்த கவிராயருக்கு அந்தப் புது ஸ்தல புராணம் அச்சாகி வந்ததும் எவ்வளவு இன்பம் ஏற்பட்டிருக்க வேண்டும்? அப்போது தான் ஈன்ற கன்றை ஆசையோடு நாவால் தடவிக் கொடுத்தார். ஒவ்வொரு செய்யுளிலும் கற்கண்டும் கனிச்சாறும் கலந்து ஓடுவதைப் போலத் தோன்றியது. அவருக்கே அவற்றை எழுதும்போது அவருக்கே புலப்படாத உட்பொருளும் மெய்ப்பொருளும் அவற்றில் பொதிந்து கிடப்பதை அப்போதுதான் உணர்ந்தார். கவனிப்பாரற்றுக் கிடந்த அகராதியும் நிகண்டும் ஒன்றையொன்று கட்டிக் கொண்டு கண்ணீர் வடித்தன!<br /><br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-1451947836446570042014-08-09T07:50:10.473+05:302014-08-09T07:50:10.473+05:30இந்த நிகழ்சி செய்தியாகி எல்லாத் தமிழ் ஆங்கிலச் செய...இந்த நிகழ்சி செய்தியாகி எல்லாத் தமிழ் ஆங்கிலச் செய்தித்தாள்களிலும் நாத்திகம் பேசி நாத்தழும் பேறியவனுக்கு அந்த ஊர் மக்கள் நற்பாடம் கற்பித்தனர் என்ற தலைப்போடு வெளியாகி பிரான்சு, ஜெர்மனி, அமெரிக்காவரை பரவியது. அடுத்த நாள் மாலை கவிராயரைத் தேடிச் செட்டியாரே வந்துவிட்டார்.<br /><br />நம்ம கோவிலுக்கு அதன் மகிமையை விளக்கி நீங்கதான் ஒரு ஸ்தல புராணம் எழுதித் தரணும் என்ற வேண்டுகோளை வினயமாகத் தெரிவித்தார்.<br /><br />உடலை விட்டுப் பிரிந்த உயிர் எப்படி அந்தரத்தில் ஊசலாடும் என்பது இதுவரைக்கும் எவருக்குமே தெரியாது. ஆனால், அப்போது கவிராயர் அதை உண்மையாகவே அனுபவித்துக் கொண்டிருந்தார்.<br /><br />அன்றிலிருந்து கவிராயர் இரவும் பகலும் அகராதியும் நிகண்டுமாகக் காலங் கழிக்கத் தொடங்கினார்.<br /><br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-32609799173415863042014-08-09T07:50:00.049+05:302014-08-09T07:50:00.049+05:30இத்தனைக்குமிடையில் அனாதையாகக் கிடந்த அந்த ரட்சகன் ...இத்தனைக்குமிடையில் அனாதையாகக் கிடந்த அந்த ரட்சகன் மீது அந்த ஊரில் புதிதாக நிலம் வாங்கிய செட்டியாருக்கு அக்கறை பிறந்தது. வண்டி வண்டியாக வந்திறங்கிய கருங்கல்லும் செங்கல்லும் வானளாவும் மதிலாகவும் கோபுரமாகவும் உயர்ந்தன. எவனோ எங்கிருந்தோ வீசியெறிந்த வாழைப்பழத் துண்டு எப்படியோ நம் வாய்க்குள் வந்து விழுந்தால் ஏற்படும் திகைப்பும் மகிழ்ச்சியும் கவிராயர் உள்ளத்தைக் கட்டி அணைத்தன. நினைந்து நினைந்து நெக்குருகினார். மகிழ்ச்சியில் மல்கிய கண்ணீர் கசிந்து கசிந்து தரையில் விழுந்து சாய்ந்தது! பக்தர்களை ரட்சித்து துஷ்டர்களைத் துவம்சம் செய்யும் அந்தப் பரந்தாமனே செட்டியார் உருவில் அவதாரம் எடுத்துத் தங்கப்பனை மட்டம் தட்டிவிட்டதாக எண்ணி மகிழ்ந்தார். அன்று ஆண்டவன் கோவிலில் உட்பிரகாரத்தைச் சுற்றிப் பார்த்து வந்தார் கவிராயர். நிமிர்ந்து நின்ற கோபுரத்தின் நிழலில் நிம்மதியாகப் பள்ளி கொண்டிருந்த பரந்தாமனைப் பார்க்கப் பார்க்க அவருக்குப் பரவசமாக இருந்தது. தங்கக் கவசம்_அதில் பட்டுத் தெறிக்கும் பகலவனின் ஒளிக்கதிர்கள்! நீர்வீழ்ச்யிலிருந்து தெறித்து விழும் நீர்த்தி வலைகள் உடல்மேல் படும்மீது உண்டாகும் கோமளமான உணர்ச்சி கவிராயர் உள்ளத்தைத் தழுவியது. அதே நேரத்தில் கோவிலின் வாயிற்படியில் நின்ற தங்கப்பனுடைய பார்வை கல்லை உடைத்து உருவாக்கி அதற்கு உயிர் கொடுக்கும் தொழிலாளர்கள்மேல் பதிந்திருந்தது. காய்ந்து வறண்டு போன அவர்களுடைய உடல்கள்_ அவைகளை மேலும் மேலும் காய்ச்சிப் பதப்படுத்தும் கதிரவனின் வெம்மை! இத்தனை உழைப்பும் எவனோ ஒரு தனி மனிதன் புகழுக்கும் பெருமைக்கும்தானே என்பதை நினைத்தபோது அவன் நெஞ்சு பிளந்தது.<br /><br />அவர்கள் இருவரும் கோவிலிலிருந்து ஒன்றாகவேதான் திரும்பி வந்தார்கள். இரட்டை மாட்டு வண்டியில் பூட்டப்பட்ட காளைகள் வண்டிக்காரன் சாட்டையால் விரட்டப்பட்டு வெருண்டோடுவதுபோல, வேகம் வேகமாக மௌனமாக ஒருவரோடொருவர் பேசிக் கொள்ளாமல் நடந்து கொண்டிருந்தனர்.<br /><br />அய்யா! ஏழை! காலணாக் கொடுங்கோ! கடவுள் உங்களைக் காப்பாற்றுவார்!<br /><br />தீனமான அந்தக் குரல் இருவரையுமே திரும்பிப் பார்க்கச் செய்தது. ஒரு பேசும் எலும்புக் கூடு, பிணமாகாமல் என்னைக் காப்பாற்றுங்கள் என்று சொல்லாமற் சொல்லி நின்றது.<br /><br />கடவுள் உனக்கு நல்லகதி காட்டுவாரப்பா என்று உருக்கமாகச் சொல்லிக் கொண்டே நடந்தார் கவிராயர்.<br /><br />தங்கப்பன் ஒரு காலணாவை எடுத்து அந்தப் பிச்சைக்காரனிடம் கொடுத்தான். கவிராயரைக் குறும்பாக ஒரு முறை பார்த்தான்.<br /><br />நல்ல வேளை! கடவுள் இதற்காவது உபயோகப்படுகிறாரே! அதுவரையில் லாபம்தான்! என்று சொல்லிக் கொண்டே நடந்தான்.<br /><br />இந்தச் சின்னஞ்சிறு நிகழ்ச்சி அன்றிரவு தங்கப்பன் வீட்டெதிரே ஒரு பெருங்கூட்டத்தையே கூட வைத்துவிட்டது.<br /><br />கவிராயர் பக்தியால் தூண்டப்பட்டு ஆவேசத்தோடு கூச்சலிட்டார். அவர் கட்சி ஆட்கள் வெறிபிடித்துக் கூத்தாடினார்கள். செட்டியார் கொடுத்த காசும் அவர்களோடு சேர்ந்து கொண்டு அட்டகாசம் செய்தது. இவற்றால் ஏற்பட்ட பலன் தங்கப்பன் உடம்பிலிருந்து ஒருசில எலும்புகள் ஒடிந்து விழுந்ததுதான்! குற்றுயிரும் குலை உயிருமாக அவனை ஆக்கிவிட்டு அந்தக் கூட்டம் அங்கிருந்து நகர்ந்தது.<br /><br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-48529947739573287222014-08-09T07:49:47.376+05:302014-08-09T07:49:47.376+05:30
புதுமை இலக்கிய பூங்கா
பக்தி
- டி.கே.சீனிவாசன்... <br /><br />புதுமை இலக்கிய பூங்கா<br /><br />பக்தி<br /><br />- டி.கே.சீனிவாசன்<br /><br />புகழ்பெற்ற திராவிட இயக்க எழுத்தாளர்களுள் ஒருவரான டி.கே.சீனிவாசன் தாய்நாடு இதழின் ஆசிரியர். தத்துவ மேதை என்று அழைக்கப்பட்டவர். இவர் எழுதிய ஆடும் மாடும் என்ற நாவல் பெரும் வரவேற்பைப் பெற்றதாகும்.<br /><br />மாநிலங்களவை உறுப்பினராகவும், தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநராகவும், தமிழ்நாடு திட்டக் குழுவின் துணைத் தலைவராகவும் பொறுப்புகளை வகித்தவர்.<br /><br /> <br /><br />அடுக்கடுக்காக, ஒன்றுக்கொன்று ஆதரவாகப் பின்னிப் பிணைந்திருந்த அந்த மலரின் இதழ்களைப் பார்க்கும்போது, என் இதயம் மகிழ்ச்சியால் பொங்கிப் பூரித்தது. உதிக்கும் கதிரவன் ஒளி பட்டதும் அவை அத்தனையுமே விதிவிலக்கில்லாமல் மலர்ந்து சிரிக்கும். வட்டமிடும் வண்டு மலரை முத்தமிடும்போது ஒவ்வொரு இதழும் சிரிக்கும். ஒன்றுபட்டு வாழ்ந்த அந்தக் குடும்பத்தைத் துண்டுபடுத்திய அந்தச் சிறு நிகழ்ச்சி...!<br /><br />எவனோ ஒரு வேலையற்ற விவேகமில்லாத வீணன் அந்த மலரைச் செடியிலிருந்து பறித்து அதன் இதழ்களைப் பிய்த்துப் போட்டுவிட்டான். சேர்ந்து வாழ்ந்தபோது அவைகளுக்கு ஜீவசக்தி ஊட்டிய அதே கதிரவன் ஒளியே அவை சிதறி விழுந்தவுடன் சுருக்கித் தீய்த்துவிட்டது.<br /><br />என் மனம் இந்த அலங்கோலத்தைக் கண்டு அழுது கண்ணீர் வடித்தது. ஆனால்...? மலரின் இதழ்களுக்கு நாங்கள் ஒன்றும் உயர்ந்து போகவில்லை என்று மனித இதயங்கள் சொல்லிக் காட்டும்போதுதான் வெட்கத்தாலும் வேதனையாலும் துடிதுடித்துப் போனேன். பொன்னம்பலக் கவிராயருக்கும் தங்கப்பனுக்கும் இடையே இருந்த அந்த ஆழமான நட்பு கயிறு கட்டிப் பிணைத்த கதம்ப மாலையாக இல்லை, ஒன்றோடொன்று உருக்கி வார்த்த உலோகக் கலப்பாக இருந்தது. அந்தக் கலப்பைக் காய்ச்சித் தனித்தனியே பிரித்த நிகழ்ச்சி மிகவும் சாதாரணமானதுதான்.<br /><br />ஒரு நாள் பேச்சுவாக்கில் தற்செயலாக கவிராயர் திக்கற்றவர் களுக்குத் தெய்வந்தானே துணை என்று சொன்னார். தங்கப்பன் கொஞ்சம் சு.ம. வாடை படிந்தவன்! அவனும் விளையாட்டாகவே, தெய்வமே திக்கற்றுக் கிடக்கிறதே, அது எங்கே துணை செய்யப் போகிறது? என்று சொல்லிவிட்டான்.<br /><br />இந்த உரையாடலைவிட அது நிகழ்ந்த நேரந்தான் நெருப்பாக இருந்து அவர்கள் நட்பைப் பிரித்தது. அந்த ஊர்ப் பரந்தாமன் கோவில் பாழடைந்து கிடந்தது. சட்டபூர்வமான சோதாக்களுக்குப் பதிலாக கள்ள மார்க்கட் சோதாக்கள் அதைப் பஞ்சமா பாதகங்களுக்கும் பயன்படுத்திக் கொண்டிருந்தனர். தங்கப்பனுடைய சொற்கள் இந்தச் சோகச் சித்திரத்தைச் சுட்டிக் காட்டுவதுபோல கவிராயருக்குத் தெரிந்தது. ஆபத்பாந்தவன் அவருடைய இதயத்தின் ஆழத்தில் அவதாரமெடுத்து அபயம் அபயம் என்று கதறினார்.<br /><br />அன்றிலிருந்து கவிராயரும், தங்கப்பனும் கிழக்கும் மேற்கும் ஆனார்கள். இருவர் உள்ளங்களும் ஈட்டி முனைகளாக உருப்பெற்றன!<br /><br />ஏமாளித்தனத்தின் சின்னம் என்று பரிதாபப்பட்டான் தங்கப்பன். தடி கொண்டு தாக்கப்பட வேண்டிய படமெடுத்தாடும் நச்சுப் பாம்பு என்று ஆத்திரப்பட்டார் கவிராயர்.<br /><br />வேத, சாஸ்திர, புராணங்கள் கவிராயர் கைஆயுதங்களாக ஆயின; விடுதலை, திராவிட நாடு, போர்வாள் கொஞ்சம் சொந்தப் புத்தி, இவைதாம் தந்கப்பனுக்குக் கிடைத்த ஆயுதங்களும், அஸ்திரங்களும்!<br /><br />ஊர் இரண்டுபட்டது. சொற்போரில் தொடங்கி மற்போரில் வந்து முடிந்தது இந்தப் போராட்டம்! மலர்க்குலம் மனித குலத்தைப் பார்த்துக் கைகொட்டிச் சிரித்தது.<br /><br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.com