tag:blogger.com,1999:blog-1474608369333206681.post2393665801148050084..comments2023-10-29T13:02:52.613+05:30Comments on தமிழ் ஓவியா: பெண்ணடிமை நீங்க பெண்களே சம்பாதியுங்கள்-பெரியார்தமிழ் ஓவியாhttp://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comBlogger55125tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-48624065679059511552015-06-30T19:49:36.509+05:302015-06-30T19:49:36.509+05:30கழகக் கூட்டங்களுக்கு காவல்துறை அனுமதி மறுப்பது குற...கழகக் கூட்டங்களுக்கு காவல்துறை அனுமதி மறுப்பது குறித்து சட்டரீதியாக அணுகப்படும் திராவிடர் கழக வழக்குரைஞர் அணி கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானம் சென்னை, ஜூன் 30_ கழகக்கூட்டங்களுக்கு காவல் துறை அனுமதி மறுப் பது குறித்து சட்ட ரீதியாக அணுகப்படும் திராவிடர<br /><br />கழகக் கூட்டங்களுக்கு காவல்துறை அனுமதி மறுப்பது குறித்து சட்டரீதியாக அணுகப்படும்<br /><br />திராவிடர் கழக வழக்குரைஞர் அணி கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானம்<br /><br /><br /><br />சென்னை, ஜூன் 30_ கழகக்கூட்டங்களுக்கு காவல் துறை அனுமதி மறுப் பது குறித்து சட்ட ரீதியாக அணுகப்படும்<br /><br />திராவிடர் கழக வழக் குரைஞரணி கலந்துரை யாடல் கூட்டம் சென்னை, பெரியார் திடலில் 21.6.2015 அன்று காலை 10.30 மணி யளவில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு திராவி டர் கழகத் தலைவர், தமி ழர் தலைவர், ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தலைமை தாங்கினார். இக்கூட்டத் தில் கலந்து கொண்டவர் களும் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும் பின்வரு மாறு:_<br /><br />கி.வீரமணி, ஜெ.துரை சாமி, கரூர் இராசசேகரன், மு.சென்னியப்பன், ஆ.வீரமர்த்தினி, ஆ.பாண் டியன், ம.வீ.அருள்மொழி, ந.இளங்கோ, த.வீரசேக ரன், சின்னம்பேடு எஸ். கண்ணன், செஞ்சி விவே கானந்தன், ஜெ.தம்பிபிர பாகரன், வி.பெரியசாமி, எஸ்.பி.சக்திவேல், எஸ்.குமாரதேவன், இராம ராஜன், அ.அருள்மொழி, பீ.இரமேஷ், இரா.சர வணகுமார், மு.இராசா<br /><br />நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்<br /><br />1) தற்போதைய சூழ் நிலையில் சட்டக்கல்வி யின் அவசியம் அதிகரித்து வருவதாகவும், தற்போ தைய சட்டக்கல்வி தர மானதாகவும், போது மானதாகவும் இல்லாத தால் பெரியார்- _ மணி யம்மை பல்கலைக் கழகத்தில் சட்டக்கல்லூரி தொடங்க ஏற்பாடு செய்ய வேண்டுமென்று பெரியார் மணியம்மை கல்வி அறப் பணிக்கழகத்தையும், பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தையும் இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.<br /><br />2) அண்மைக்காலத் தில் திராவிடர் கழகம் சார்பாக ஏற்பாடு செய்யும் பொதுக்கூட்டங்களுக்கு உரிய காலத்தில் அனுமதி தராமலும், போதிய கார ணமின்றி அனுமதி மறுப் பதும், சட்டவிரோதமான வகையில் கூட்டத்தில் பேச வேண்டிய கருத்து களுக்கு தடைவிதிப்பதும், காவல் துறையின் வாடிக் கையாக இருந்து வருகிறது. இந்த சட்ட விரோத போக்கினை தடுப்பதற்கு அந்தந்த மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள் திராவிடர் கழக சட்டத் துறை அமைக்க, சட்ட ஆலோசனைக் குழுவிடம் அணுக வேண்டுமென்று மேற்படி சட்ட ஆலோ சனைக்குழு தமிழகம் எங்கும் ஒரே சீரான அணுகுமுறையை மேற் கொள்ள அறிவுறுத்த வேண்டும் என்றும் கேட் டுக்கொள்கிறது. இப்பிரச் சினை சட்ட ரீதியாக அணுகப்படும்.<br /><br /><br /><br />3) திராவிடர் கழக வழக்குரைஞரணி சார்பாக விரைவில் மாவட்டம் தோறும் முக்கியமான சட்டப்பிரச்சினைகள் குறித்த கருத்தரங்குகள் நடைபெற வேண்டுமென தீர்மானிக்கப்படுகிறது.<br /><br />4) ஆங்கிலேயர் ஆட் சிக் காலத்தில் குடிமக் களை அடக்கி ஒடுக்குவ தற்காக ஏற்படுத்தப்பட்ட பல காலாவதியான சட் டங்களை தற்போதைய காலத்திற்கு ஏற்றவாறும், அரசியல் சட்டம் அங் கீகரிக்கும் கருத்துரிமை, பேச்சுரிமைகளுக்கு பங்கம் ஏற்படாதவகையில் திருத் தங்கள் மேற்கொள்ளப் பட வேண்டுமென்று மத் திய _ மாநில அரசைக் இக் கூட்டம் கேட்டுக்கொள் கிறது.<br /><br />5) விரைவில் திராவி டர் கழக வழக்குரைஞரணி மண்டல, மாவட்ட நிர் வாகிகள் நியமிக்கப்பட வேண்டுமென்றும் தீர் மானிக்கப்படுகிறது.<br /><br />திராவிடர் கழக வழக் குரைஞரணி மதுரை மண் டல மாவட்ட நிர்வாகிகள் நியமனம்<br /><br />தராவிடர் கழக சட் டத்துறை செயலர் ச. இன் பலாதன் அவர்களால் ஏற்பாடு செய்யப்படட தராவிடர் கழக வழக்கு ரைஞரணி அமைப்புக் கூட்டம் 27.10.2014 மதுரையில் தராவிடர் கழக வழக்குரைஞரணி துணைத்தவைர் பொ.நடராசன் நீதிபதி (பணி நிறைவு) அவர்கள் இல்லத்தில் நடைபெற்ற போது கீழ்க்கண்ட நர் வாகிகள் தேர்வு செய்யப் பட்டனர்.<br /><br />மதுரை மண்டலம்<br /><br />தலைவர்: கோ. சுப்பிர மணியன் பி.ஏ. பி.எல்., வழக் குரைஞர், தண்டுக்கல். செயலர்: -மு. சத்தார்த் தன், பி.ஏ., பி.எல்., வழக் குரைஞர், உயர்நதிமன்றம், மதுரை.<br /><br />மதுரை மாவட்டம்<br /><br />தலைவர்: கே. பொன் னையா, எம்.ஏ., பி.எல்., வழக் குரைஞர், உயர்நதிமன்றம், மதுரை, செயலர்: சோ. தியாக ராசன், பி.ஏ., பி.எல்., வழக் குரைஞர், உயர்நதி மன்றம், மதுரை,<br /><br />தண்டுககல் மாவட்டம்<br /><br />தலைவர்: சுப. ஜெக நாதன், பி.ஏ., பி.எல்., வழக குரைஞர், திண்டுக்கல்<br />செயலர்:- சாக்ரடீஸ், பி.ஏ., பி.எல்., வழக்கு ரைஞர், திண்டுக்கல்.<br /><br />விருதுநகர் மாவட்டம்<br /><br />அமைப்பாளர் - பகர தன் பி.ஏ., பி.எல்., வழக் குரைஞர், திருவில்லிபுத் தூர்<br />தேனி மாவட்டம்<br /><br />அமைப்பாளர்: - சின்ன முத்து பி.ஏ., ப.எல்., வழக் குரைஞர், பெரியகுளம்.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-51587495297542042572015-06-30T19:43:28.897+05:302015-06-30T19:43:28.897+05:30கவலை ஏன்?
மனிதர்கள் எந்த மதத்தில் இருந் தாலும், ...கவலை ஏன்?<br /> <br />மனிதர்கள் எந்த மதத்தில் இருந் தாலும், அவர்கள் எந்த மதத்திற்குப் போனாலும், மற்ற மதத்தைச் சார்ந்த மனிதனுக்கு அதனால் கவலை ஏன் ஏற்படவேண்டும்?<br />_ (குடிஅரசு, 16.11.1946)தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-90866388685234399442015-06-30T19:40:15.528+05:302015-06-30T19:40:15.528+05:30பா.ஜனதா தலைவர் பாலியல் தொல்லை பெண் தொண்டர் புகார் ...பா.ஜனதா தலைவர் பாலியல் தொல்லை பெண் தொண்டர் புகார் - காவல்துறை விசாரணை<br /><br />கான்பூர், ஜூன் 30_ உத்தரபிரதேசம் மாநிலத் தில் பாரதீய ஜனதா தலைவர் மற்றும் அவரது 4 உதவியாளர்கள் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பெண் தொண்டர் புகார் கொடுத்து உள்ளார். பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் அனுப் திவாரி தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பாதிக்கப்பட்ட பெண் புகாரில் தெரிவித்துள் ளார் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த ஜூன் 20ஆ-ம் தேதி பெண் தொண்டரை அவரது வீட்டில் இறக்கிவிடுவதாக காரில் ஏற்றிச்சென்ற, திவாரி காரில் அவரிடம் தவறாக நடந்து கொண்டதாக பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார். இவ்விவகாரம் தொடர் பாக கட்சியின் அப்பகுதி தலைவர்களிடம் பாதிக்கப் பட்ட பெண் புகார் தெரிவித்துள்ளார்.<br /><br />இதனையடுத்து கட்சியின் அலுவலகத்திற்கு மறுநாள் வந்த திவாரி தனது உதவியாளர்கள் நான்கு பேருடன் புகார் அளித்த பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டு உள்ளனர். அவருடைய ஆடைகளை களைவதற் கும் முயற்சி செய்துள் ளனர் என்று காவல்துறை யில் தெரிவித்துள்ளனர்.<br /><br />இந்த இரண்டு சம் பவம் தொடர்பாக கட் சியின் அப்பகுதியை சேர்ந்த தலைவர்களிட மும், மாநில தலைவர்களி டமும் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்து உள்ளார் என்றும் இது தொடர்பாக அவர்களுக்கு எதிராக எந்தஒரு நட வடிக்கையும் எடுக்கப்பட வில்லை என்றும் தெரி விக்கப்பட்டுள்ளது. இதனையடுத்தே பாதிக் கப்பட்ட பெண் காவல் நிலையத்தை அனுகி உள் ளார் என்றும் தெரிவிக் கப்பட்டுள்ளது. காவல் அதிகாரியின் உத்தரவின்பேரில், பெண் ணின் புகாரை ஏற்றுக் கொண்டு காவல்துறையி னர் வழக்குப் பதிவு செய்து உள்ளனர். இதுதொடர் பாக விசாரணை நடை பெற்று வருவதாகவும், விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என் றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.<br /><br /><br /><br />Read more: http://www.viduthalai.in/e-paper/104219.html#ixzz3eYRa2RGfதமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-42774381110382469652015-06-30T19:39:35.350+05:302015-06-30T19:39:35.350+05:30குஜராத்தில் யோகா கட்டாய பாடமாம்
காந்திநகர், ஜூன் ...குஜராத்தில் யோகா கட்டாய பாடமாம்<br /><br />காந்திநகர், ஜூன் 30- குஜராத் மாநிலத்தில் வருகிற 2016-ஆம் ஆண்டு 9-ஆம் வகுப்பு முதல் அனைத்து பள்ளி மாண வர்களுக்கு யோகாவை கட்டாய பாடமாக்க அரசு திட்டமிட்டுள்ளது. ஆர் எஸ்எஸ்-சின் யோகா திட்டத்தை, குஜராத் மாநில அரசு முதன் முதலில் 9-ஆம் வகுப்பு மாணவர்கள் முதல் உயர் கல்வி படிக்கும் மாணவ ர்கள் வரை கட்டாய பாடமாக கொண்டுவர திட்டமிட்டு உள்ளது. குஜராத் மாநிலம் முழு வதும் உள்ள 15 ஆயிரம் உயர்நிலை மற்றும் மேல் நிலை பள்ளிகளில் 2016-ஆம் ஆண்டு முதல் யோகா பாடம் நடத்தப் பட உள்ளது. அரசு மற்றும் தனியார் பள்ளி களில் யோகா பாடத்தை நடத்த குஜராத் கல்வி அமைச்சர் பூபேந்திரசிங் சாதஸ்மா தலைமையில் அமைக்கப்பட்ட குழு முடிவு செய்துள்ளது.<br /><br />இதற்கான ஏற்பாடுகள் ஏற்கெனவே தொடங்கி விட்டதாகவும் கூறப்படு கிறது. மேலும் இந்த ஆண்டு தீபாவளி விடு முறையில் பள்ளிகளில் உள்ள அனைத்து ஆசிரி யர்களுக்கும் யோகா பயிற்சி அளிக்க திட்ட மிடப்பட்டிருக்கிறது. அப்போது அவர்களுக்கு யோகாவில் உள்ள பல ஆசனங்கள் செய்வது பற்றி பயிற்சி அளிக்கப் படும். அது மட்டுமல்லா மல் யோகாவில் ஏற்படும் நன்மைகள் குறித்து மாண வர்களுக்கு சொல்லிக் கொடுக்க ஆசிரியர்களுக்கு விளக்கம் அளிக்கப்படும் என்று கல்வி அமைச்சர் பூபேந்திரசிங் சாதஸ்மா தெரிவித்தார். பள்ளி மாணவர்களின் யோகா பாடத்தில் போக்குவரத்து விதிமுறைகள், சுற்றுச் சூழல் சுகாதார விழிப் புணர்வு, மரம் நடுதல், காடுகள் அவசியம் குறித் தவைகளும் இடம் பெறும் என்று அறிவிக்கப்பட்டுள் ளது. மேலும் தொழில் அதிபர்கள் திருபாய் அம் பானி, நான்ஜி மேத்தா பற்றிய பாடங்களையும் அறிமுகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.<br /><br />இதுபற்றி கடந்த வெள்ளிக்கிழமை கல்வி அமைச்சர் பூபேந்திரசிங் சாதஸ்மா தலைமையில் நடந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இறுதி முடிவு விரைவில் கல்விக்குழு எடுக்கும் என்று கூறப்படுகிறது. இதேபோல் கடந்த ஆண்டு நரேந்திர மோடி குறித்து பள்ளிகளில் பாடத்தை கொண்டு வர அரசு திட்டமிட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு ஏற்பட்டதால் தனது திட்டத்தை அரசு கை விட்டது. ஏற்கெனவே குஜராத்தில் கல்வியை காவிமயமாக்கும் விதத்தில் பல்வேறு பாடத் திட்டங் கள் சேர்க்கப்பட்டிருக் கின்றன என்பது குறிப் பிடத்தக்கதுதமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-82819024545237406702015-06-30T19:39:01.417+05:302015-06-30T19:39:01.417+05:30சமஸ்கிருதம் மக்களின் மனதைத் தூய்மைப்படுத்துகிறதாம்...சமஸ்கிருதம் மக்களின் மனதைத் தூய்மைப்படுத்துகிறதாம் சுஷ்மா ஸ்வராஜ்<br /><br /><br />பாங்காக், ஜூன் 30_- சமஸ்கிருத மொழி மக்களின் மனதைத் தூய்மைப்படுத்துவதாகவும் அதனை மேலும் விரிவாகப் பரப்ப வேண்டு மெனவும் இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்திருக்கிறார். தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் 16ஆவது உலக சமஸ்கிருத மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் 60 நாடுகளைச் சேர்ந்த சமஸ் கிருத நிபுணர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இந்த விழாவில் கலந்து கொண்டு பேசியபோது மக்களிடம் சமஸ்கிருத மொழி பேசுவதற்கு பிரச்சாரம் செய்யப்பட வேண்டும். இந்த மொழி மக்களின் மனதை துய்மைப்படுத் துவதுடன் உலகம் முழுவதையும் புனிதப்படுத்தும் என்று அவர் தெரிவித்தார். மேலும், சாஸ்திரங் களுக்கும் அறிவியலுக்கும் இடையே உள்ள இடை வெளியை குறைக்க வேண்டும் என்பதில் நாங்கள் முயற்சி எடுக்கி றோம் என்றும் அமைச்சர் சுஷ்மா தனது உரையில் தெரிவித்தார். அவர் இந்த மாநாட்டில் சமஸ்கிருத மொழியிலேயே பேசியது குறிப் பிடத்தக்கது.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-80958106196253300412015-06-29T22:56:30.175+05:302015-06-29T22:56:30.175+05:30மாதுளம் பழமும் மருத்துவச் சிறப்பும்
மாதுளம்பழம்...மாதுளம் பழமும் மருத்துவச் சிறப்பும்<br /><br /><br /><br />மாதுளம்பழம் என்றாலே பெரும்பாலும் பலர் அதன் முத்துக்களின் சாரத்தை மட்டும் ருசித்து விட்டு விதைகளை உமிழ்ந்து விடுவார்கள். ஆனால் மாதுளம்பழத்தின் சத்தோ அதன் விதைகளில் தான் அதிகம் உள்ளது என்பதை அவர்கள் அறிந்திருக்க மாட்டார்கள்.<br /><br />பொதுவாக அக்டோபர் மாதத்திலிருந்து டிசம்பர் மாதத்திற்குள் பூத்துக் காய்த்து பழமாகும் மாதுளம் பழத்தின் சத்துக்களையும், மருத்துவச் சிறப்புகளையும் இப்போது பார்ப்போம். மாதுளம்பழத்தில் அதிக பட்சமாக நீர்சத்து 78 விழுக்காடு உள்ளது. மாதுளம் பழத்தைப் பொறுத்தவரை பூ, தோல், விதை என அனைத்து மே மருத்துவச் சிறப்பு வாய்ந்தவை.<br /><br />மாதுளம் பூ, இரத்த வாந்தி, இரத்த மூலம், வயிற்றுக் கடுப்பு, சூடு முதலியவற்றை போக்கும். பூவை கஷாயமாக செய்து குடித்தால் தொண்டை தொடர்பான பலபிணிகளும் அகலும். மாதுளம் பழரசம் தாதுவைப் பெருக்கும், வாந்தியை நிறுத்தும் மற்றும் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய்க் குறை பாடுகளை அகற்றும்.<br /><br />இது தவிர, காதடைப்பு, வெப்பக்காய்ச்சல், மந்தம், மயக்கம் ஆகியவற்றையும் பழரசம் விலக்கும். மாதுளம் பழரசத்துடன் ஒன்றரைப் பங்கு கற்கண்டு அல்லது வெள்ளைச் சர்க்கரை சேர்த்துப் பாகு பதத்தில் காய்ச்சி வைத்துக் கொண்டு சாப்பிட்டு வந்தால் பித்தம் தொடர்பாக ஏற்படக்கூடிய பிரச்சினைகள் நீங்கும்.<br /><br />அன்றாடம் பாதி மாதுளம்பழம் அளவிற்கு நன்றாக மென்று சாப்பிட்டு வந்தால் மலக்கட்டு நீங்கும், மாதுளம் பழச்சாறும், இஞ்சிச்சாறும் சம அளவு எடுத்து சிறிதளவு தேன் கலந்து சாப்பிட்டால் எவ்வளவு கடுமையான இருமலும் குணமாகும். மாதுளம்பழத்தின் விதைகளை எடுத்து வெயிலில் உலர்த்திப் பொடி செய்து தினமும் பசும்பாலில் சிட்டிகை அளவு கலந்து சாப்பிட்டு வந்தால் தாது பலம் பெற்று உடலும் நலம் பெறும். இது தவிர,<br /><br />மேலே குறிப்பிட்டது போல் தொடர்ந்து 40 நாட்கள் சாப்பிட்டால் ஆண்மைக் குறைபாடு நீங்கும். மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் தொடர்ந்து ஏற்படும் விக்கல் உடனே நிற்கும். ஏதேனும் காரணத்தினால் நீர் அருந்தாமலே,<br /><br />டலில் நீர்த் தன்மை குறைந்த அதிக தாகம் எடுக்கும் போதே மாதுளம்பழம் சாப்பிட்டால் உடனடியாக தாகம் தணியும். மாதுளம் பழச்சாற்றில் கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் உடல் சூட்டு நோய்கள் நீங்கும். உடல் குளிர்ச்சியடையும். மாதுளம் பூக்களை உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு வேளைக்கு ஒரு சிட்டிகை வீதம் சாப்பிட்டால், இருமல் நிற்கும்.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-71765579551105927372015-06-29T22:55:52.053+05:302015-06-29T22:55:52.053+05:30வாத நோய் போக்கும் நன்னாரி
அங்காரி மூலி, நறுநெட்...வாத நோய் போக்கும் நன்னாரி<br /><br /><br /><br />அங்காரி மூலி, நறுநெட்டி, பாதாள முளி, கோபாகு, சாரிபம், பாறட்கொடி, நீறுண்டி, சாரியம் என்று பல்வேறு பெயர்களால் அழைக்கப்படும் நன்னாரி நமது உடலில் ஏற்படும் அதிகமான வெப்பத்தை அகற்றி பல்வேறு வெப்ப நோய்களையும் நீக்குகிறது. நன்னாரி என்றவுடன் நமக்கு நினைவுக்கு வருவது சர்பத்துதான். இதன் மணத்திற்கும் சுவைக்கும் ஆட்படாதவர்களே இல்லை என்று கூறலாம்.<br /><br />அதுவும் கோடைகாலத்தில் சில் என்று அதை குடிக்கும் போது ஏற்படும் அனுபவமே தனியானது. எதிரடுக்கில் நீண்ட இலைகள் கொண்டது. இதன் கொடிகம்பி போன்று அமைந்திருக்கும். மணம் வீசும் வேர்கள் மருத்துவ குணம் கொண்டவை. தானாகவே வளரும் பாலுள்ள கொடி இனம்.<br /><br />நறுக்குமூலம்,நறுநீண்டி, தாதுவெப்ப அகற்றியாகவும் வியர்வை, சிறுநீர் ஆகியவற்றை பெருக்கும் மருந்தாகவும் நோயகற்றி உடல் தேற்றவும் உடல் உரமூட்டவும் பயன்படும். குடும்ப வாழ்க்கையில் ஈடுபடும் போது சில ஆண்களுக்கு எரிச்சல் ஏற்படும்.<br /><br />இவர்கள் நன்னாரி வேரை 15 கிராம் அளவில் எடுத்து 500 மிலி தண்ணீரில் நசுக்கி போட்டு 250 மிலியாக சுண்டியதும் வடிகட்டி 50மிலி அளவில் மூன்று நாட்கள் காலை மாலை குடித்து வர எரிச்சல் நீங்கி முழுமையான குணம் ஏற்படும்.<br /><br />பச்சை நன்னாரி வேர் 5 கிராம் நன்கு அரைத்து 200 மிலி பாலில் சாப்பிட்டு வர மூலச்சூடு, மேக அனல், மேக வெட்டை, நீர்க்கடுப்பு, நீர்ச்சுருக்கு, வறட்டு இருமல் ஆகியவை தீரும். நீண்ட நாட்கள் இதை சாப்பிட்டு வர நரை முற்றிலும் மாறும். நன்னாரி வேரை குடிநீர் செய்து இளம் சூட்டில் 100மிலி அளவில் குடித்து வந்தால் ஆண்மை பெருகும். நன்னாரி சர்பத்தாகவும் குடிக்கலாம்.<br /><br />நன்னாரி வேர் 20 கிராம் எடுத்து அரை லிட்டர் தண்ணீரில் போட்டு 200 மிலியாக காய்ச்சி 100 மிலி வீதம் காலை மாலை சாப்பிட்டு வர நாட்பட்ட வாதம். பாரி சவாதம், தோல் நோய்கள் நீங்கி குணமடையும். பித்த குன்மம் முற்றிலும் நீங்கும்.<br /><br />நன்னாரி வேரை இடித்து 135 கிராம் எடை எடுத்து அதனுடன் 700 மில்லி வெந்நீர் விட்டு நான்கு மணி நேரம் ஊற வைத்து வடிகட்டி 1 கிலோ அளவில் சீனியை சேர்த்து சிறு தீயில் காய்ச்சி வைத்துக் கெண்டு வேளை ஒன்றுக்கு 2 தேக்கரண்டி வீதம் தண்ணீரில் கலந்து குடித்து வந்தால் வெப்பம் தணியும்.<br /><br />நன்னாரி வேரை வாழை இலையில் சுருட்டி பொட்டலமாக கட்டி அதை கும்பிசாம்பலில் புதைத்துவைத்து மறுநாள் எடுத்து நன்னாரி வேரில் உள்ள நரம்பை நீக்கிவிட்டு, வெல்லம், சீரகம் சேர்த்து அரைத்து நெல்லிக்காய் அளவு உருண்டையாக பிடித்து உண்டு வந்தால் நீர் சுருக்கு, நீர் எரிச்சல் நீங்கும்.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-55411187519802307642015-06-29T22:55:26.755+05:302015-06-29T22:55:26.755+05:30அனைவருக்கும் உகந்த வெங்காயம்...!
ஒரு கடி வெங்காயத...அனைவருக்கும் உகந்த வெங்காயம்...!<br /><br />ஒரு கடி வெங்காயத்தில் ஒரு பிடி பழங்கஞ்சி குடிக்கிற ஏழ்மை. பர்கரிலும் வெங்காயம் சுவைக்கிற வளமை... இப்படி வெங்காயம் ஒரு பொதுமை காட்டி நிற்கிறது. இது ஒரு பழமையான மூலிகைப்பயிர். 6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எகிப்தியர்கள் ருசித்தது. இதன் அதிக பயன்பாட்டை அரேபியர்களிடம் பார்க்கலாம்.<br /><br />வெங்காய காரத்திற்கு அலைல் புரோப்பைல் டை சல்பைடு வேதிப்பொருளே காரணமாம். இதுவே நெடி நிரப்பி, கண்ணீர் வரவழைக்கிறது. எனவேதான் வெட்டுபவனையே அழவைத்து விந்தை செய்யும் வெங்காயத்தை தமிழ் இலக்கியங்களும் விட்டுவைக்கவில்லை. மரத்தில் தொங்கும் தேன் ராட்டு எடுக்க, வெங்காயத்தை மென்று ஊதி ஈ துரத்துவதை கிராமத்துச் சிறுவர்களிடம் இன்றும் காணலாம்.<br /><br />இன்றும் திருமண வீடுகளில் வழங்கும் சீர்பொருட்களில் ஒரு தட்டு வெங்காயமும் இடம் பிடிக்கிறது. சந்தனத்திற்கு மாற்றாக வெற்றிலையுடன் வெங்காயம் சேர்த்து அரைத்த கலவையை புண், வேனற்கட்டு வராதிருக்க குழந்தைகளின் மொட்டைத் தலைகளில் தடவுதல் தென்மாவட்டத்தில் தொடர்கிறது.<br /><br />தவறுக்கு தண்டனையாய் கண்களில் வெங்காயச் சாறிடுதல் தென்னக கிராமங்களில் இருக்கிறது. மயங்கியவரை எழுப்பிட வெங்காயம் முகரச் செய்தலும் உண்டு. வெங்காயத்தில் புரதம், தாது உப்புகள், வைட்டமின்கள் என உடம்புக்கான ஊட்டச்சத்து அதிகம். இதய சக்தி தருகிறது. நரை, தலை வழுக்கையை தடுக்கிறது. உடல் வெம்மை தணித்து, ரத்த விருத்தி, எலும்பு வலிமை நிறைக்கிறது.<br /><br />பித்த, கண், வாத நோய்கள் தீர்க்கிறது. பாலில் இட்டு காய்ச்சிக் குடித்தால் சளி, இருமல் பறக்கிறது. இன்னும் உணவே மருந்தாக வெங்காயம் செய்யும் விந்தைகள் ஏராளம்.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-85556138776704595972015-06-29T22:53:13.770+05:302015-06-29T22:53:13.770+05:30அன்றாடம் பயன்படுத்தும் காய்கறிகளின்
சத்துக்களும், ...அன்றாடம் பயன்படுத்தும் காய்கறிகளின்<br />சத்துக்களும், மருத்துவ குணங்களும்<br /><br /><br /><br /><br />தக்காளி: வைட்டமின், ஏ, பி, சி மற்றும் இரும்புச்சத்துக்கள் உள்ளன. உடல் உறுதி, ரத்தவிருத்திக்கு நல்லது.<br /><br />கத்தரிக்காய்: வைட்டமின் பி, சி, பாஸ்பரஸ், போலிக் ஆசிட் உள்ளன. ரத்தத்தை சுத்திகரிக்கும் இயல்புடையது.<br /><br />புடலங்காய்: வைட்டமின் ஏ, பி, இரும்பு, தாமிரம், கால்சியம் சத்துக்கள் உள்ளன. பீன்ஸ்: புரதம், கால்சியம், இரும்பு, வைட்டமின் ஏ, பி, சி சத்துகள் உள்ளன. எலும்பு வலுவடைய உதவுகிறது.<br /><br />வெண்டைக்காய்: மூளை வளர்ச்சிக்கு உதவும், குழந்தைகளுக்கு ஞாபக சக்தி அதிகரிக்கும். போலிக் ஆசிட், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்துகள் உள்ளன. அவரைக்காய்: நார், புரதச்சத்துக்கள் உள்ளன. மலச்சிக்கலை நீக்கும்.<br /><br />முருங்கைக்காய்: வைட்டமின் ஏ, பி, சி மற்றும் பாஸ்பரஸ், இரும்புச்சத்துக்கள் உள்ளன. ஆண்களுக்கு ஆண்மையை அதிகரிக்க உதவும், பெண்களுக்கு உதிரப்போக்கை கட்டுப்படுத்தும்.<br /><br />வெங்காயம்: தினமும் சாப்பாட்டில் சின்ன வெங்காயம் சேர்த்தால் கொழுப்பு கரையும். கால்சியம், இரும்புச்சத்துக்கள் உள்ளன.<br /><br />சுண்டைக்காய்: வைட்டமின் ஏ, புரதம், இரும்புச்சத்துக்கள் உள்ளன. எலும்புகளுக்கு வலு சேர்க்கவும், ரத்தசோகை வராமல் தடுக்கவும் உதவும்.<br /><br />கருணைக்கிழங்கு: கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் பி சத்துக்கள் உள்ளன. இதை சாப்பிட்டால், உடல் வளர்ச்சிக்கு நல்லது. மூல நோய் வராமல் தடுக்கவும், கட்டுப்படுத்தவும் செய்கிறது.<br /><br />வாழைத்தண்டு: பாஸ்பரஸ், இரும்பு, கால்சியம் சத்துக்கள், வைட்டமின் பி, சி ஆகியவை உள்ளன. சிறுநீர் பாதையில் கல் அடைப்பை கரைக்க உதவும்.<br /><br />வாழைப்பூ: கால்சியம், பாஸ்பரஸ், புரதம், நார், இரும்புச்சத்துகள் உள்ளன. வைட்டமின் பி, சி உள்ளன. மலச்சிக்கலை போக்க உதவும்.<br /><br />பீட்ரூட்: சோடியம், துத்தநாகம், கால்சியம், பொட்டாசியம் சத்துக்கள் உள்ளன. உடலை வலுப்படுத்தும்.<br /><br />உருளைக்கிழங்கு: மாவுச்சத்து அதிகம் உள்ளது. வைட்டமின் ஏ, சி மற்றும் பாஸ்பரஸ், இரும்புச்சத்து ஆகியவை உள்ளன.<br /><br />பாகற்காய்: வைட்டமின் ஏ, பி, சி, பாஸ்பரஸ், கால்சிய சத்துக்கள் உள்ளன. சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும்.<br /><br />காரட்: வைட்டமின் ஏ அதிகம் உள்ளது. பார்வை கோளாறை கட்டுப்படுத்தும். ரத்த விருத்தி தரும்.<br /><br />மரவள்ளிக்கிழங்கு: உடலுக்கு குளிர்ச்சி தரும். பனங்கிழங்கு: புரதச்சத்து அதிகமுடையது. மலச்சிக்கலை போக்கி பசியை அதிகரிக்கும்.<br /><br />இப்படி பலப்பல சத்துக்கள் காய்கறிகளில் குவிந்து கிடக்கின்றன. எனவே, கேரளா உள்ளிட்ட ஒரு சில மாநிலங்களில், தமிழகத்தில் காரைக்குடி உள்ளிட்ட ஒரு சில இடங்களில் வீட்டு உரிமையாளர்கள் மொட்டை மாடியில் தோட்டம் அமைத்து காய்கறிகளை வளர்த்து வருகின்றனர். இயற்கை முறையில், பூச்சிக்கொல்லி மருந்து அதிகமின்றி உருவாகும் இந்த காய்கறிகள் உடலுக்கும் நல்லது.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-19023713774557607122015-06-29T22:50:38.098+05:302015-06-29T22:50:38.098+05:30செத்தமொழி சமஸ்கிருதத்திற்கு மோடி அரசு தரும் முக்கி...செத்தமொழி சமஸ்கிருதத்திற்கு மோடி அரசு தரும் முக்கியத்துவத்தை பாரீர்<br /><br />குடந்தை கருணா<br /><br /><br />ஆண்டு தோறும் உலக அளவில் சமஸ்கிருதத்தின் வளர்ச்சிக்கு பாடுபட்ட ஒருவருக்கு 20,000 அமெரிக்க டாலர் பரிசாக வழங் கிடவும், வெளியுறவு அமைச்சகத்தில் சமஸ்கிருதத்திற்கு என தனியாக ஒரு இணை செயலாளர் நியமனம் செய்வதாகவும், பாங்காக் நகரில் நடந்த உலக சமஸ்கிருத மாநாட்டில் இந்திய வெளியுறவுத் துறை அமைச் சர் சுஸ்மா சுவராஜ் அறிவித்தார்.<br /><br />மோடி அமைச்சரவை பதவி ஏற்கும்போது, சுஸ்மா சுவராஜ் சமஸ்கிருத மொழியில் உறுதி மொழி எடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.<br />இந்த அம்மையார்தான், பகவத் கீதை தேசிய நூல் என அரசு அறி விக்க இருக்கிறது என்பதை டில்லி யில் நடைபெற்ற ஒரு விழாவில் பேசியவர். தற்போது, அரசால் குற்ற வாளி என அறிவிக்கப்பட்ட அய்.பி. எல். சூதாட்ட நாயகன் லலித் மோடிக்கு மனிதாபிமான அடிப் படையில் விசா வழங்கியதாகக் கூறு வதும் இந்த சுஸ்மா சுவராஜ் தான்.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-11334614531220003412015-06-29T22:47:37.171+05:302015-06-29T22:47:37.171+05:30முதலில்...
மனிதத் தர்மத்தை அடிப்படையாக வைத்து மனி...முதலில்...<br /><br />மனிதத் தர்மத்தை அடிப்படையாக வைத்து மனிதச் சமுதாயத்திற்கு யாராவது தொண்டாற்ற வேண்டு மானால், முதலில் செய்யவேண்டியது பகுத்தறிவுப்படி மக்களை நடக்கச் செய்வதும், சிந்திக்கச் செய்வதுமே யாகும்.<br />(விடுதலை, 25.7.1968)தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-30981678193364845462015-06-29T22:47:05.026+05:302015-06-29T22:47:05.026+05:30கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை
வெளிநாடுகளில் இந்...கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை<br /><br />வெளிநாடுகளில் இந்திய முதலாளிகள் பதுக்கி வைத்துள்ள தொகை அசாதாரணமானது; குறிப்பாக ஸ்விட்சர்லாந்து நாட்டு வங்கிகளில்தான் பெருந் தொகை பதுங்கிக் கிடக்கிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் கழுத்தில் துண்டைப் போட்டு இறுக்கி, கறுப்புப் பணத்தைக் கொண்டு வந்தே தீருவோம் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனின் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்வோம் என்று அடேயப்பா மோடியும் அவரைச்சார்ந்த விற்பன்னப் புலிகளும் கொட்டி முழங்கிய சமாச்சாரத்தைக் கேட்டு கொட்டாவி விட்டுக் காத்துக் கொண்டு இருந்தனர் - இந்திய மக்களும், இந்தியாவில் வறுமைக் கோட்டுக்கும் கீழ் இருக்கும் மக்கள் 30 சதவிகிதம் மக்களும். இரவு உணவுக்கு வழியின்றி வயிற்றில் ஈரத் துணியைப் போட்டுக் கொண்டு புரண்டு புரண்டு படுக்கும் மக்கள் தொகை 19 கோடி.<br /><br />நாள் ஒன்றுக்கு வெறும் 20 ரூபாய் வருமானம் உடையோர் 77 விழுக்காடு என்று புள்ளி விவரங்களை அள்ளி விடுவதும் இந்திய அரசுதான்.<br />இந்தச் சூழலில் வெளிநாட்டு வங்கிகளில் பதுங்கிக் கிடக்கும் கறுப்புப் பணத்தை இந்தியாவுக்குக் கொண்டு வருவோம் கொண்டு வருவோம் என்று சொல்லிக் கொண்டுதான் வருகிறார்களே தவிர நடைமுறையில் சுழியம்தான் இவ்வளவுக் கால அவகாசம் கொடுத்தால் பண முதலைகள் வாளா இருக்குமா?<br />அந்தக் கறுப்புப் பணத்தை அந்த வங்கிகளிலிருந்து எடுத்து வேறு ஏற்பாடுகளைச் செய்துவிட மாட் டார்களா?<br />தேர்தலுக்கு முன்பு மோடி பேசிய பேச்சை இப்பொழுது மாற்றிப் பேச ஆரம்பித்து விட்டனர்.<br /><br />'வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள அனைத்து கருப்புப் பணத்தையும் மீட்டு நாட்டின் ஒவ்வொருவர் கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவோம்' என்று மோடி(போபாலில் 18 ஏப்ரல் 2014-அன்று நடந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது) பேசியது குறித்து நிதியமைச்சர் அருண் ஜேட்லி விளக்கம் அளித்துள்ளார்.<br /><br />மாநிலங்களவையில் அருண் ஜேட்லி இது குறித்து விளக்கம் அளிக்கும்போது, "வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கப்பட்டுள்ள கருப்புப் பணம் பற்றிய உத்தேசங் களின் அடிப்படையில் ஓர் 'எடுத்துக்காட்டுக்கு' கூறியதே அந்த ரூ.15 லட்சம் விவகாரம்" என்றார். நாடாளுமன்ற தேர்தலின்போது கருப்புப் பணத்தை ஒழிப்பது பற்றி தனது பிரச்சாரங்களில் மோடி கூறிய போது, கருப்புப் பணம் முழுதையும் ஒட்டுமொத்தமாக இந்தியாவுக்கு கொண்டு வந்து ஒவ்வொரு இந்தியரின் கணக்கிலும் ரூ.15 லட்சம் சேர்ப்போம் என்று கூறியது பற்றி மாநிலங்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது.<br /><br />அதற்குப் பதில் அளித்த ஜேட்லி, "வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தின் அளவு, அதைப் பற்றிய உத்தேசக் கணிப்புகளின் அடிப்படையில் அந்தத் தொகையை ஏற்றுக் கொண்டோமேயானால், ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் ஏற்படும் பயன் ரூ.15 லட்சமாக இருக்கும் என்ற அடிப்படையில் எடுத்துக் காட்டு கூற்றாக மட்டுமே அது கூறப்பட்டது.<br /><br />மேற்கூறிய இந்த அர்த்தத்தில்தான் பலரும் அதனைப் பயன்படுத்தினர். எனவே இதனை இந்தப் பொருளில் புரிந்து கொள்ள வேண்டும் என்றார் அருண் ஜேட்லி. இது எவ்வளவுப் பெரிய உண்மைக்கு மாறானது என்பது நாட்டு மக்களுக்கு மிக நன்றாகவே தெரியும். பாஷ்ய கர்த்தாக்கள் இப்படித் தான் பேசுவார்கள்.<br />இவர்கள் வியாக்கியானம் மக்களைத் திருப்திப் படுத்தாத நிலையில், பிஜேபியின் அகில இந்தியத் தலைவர் அமித்ஷா வேறு வழியின்றி ஓருண்மையைப் போட்டு உடைத்து விட்டார்.<br /><br />மோடி பேசியது உண்மைதான்; அது தேர்தல் நேரத்தில் அரசியலுக்காகச் சொல்லப்பட்டது என்று சொன்னாரே பார்க்கலாம். மக்களின் மறதிதான் இத்தகைய அரசியல்வாதிகளுக்கு மூலதனமாகும்.<br /><br />அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் போது நிலத்தைக் கையகப்படுத்தும் மசோதாமீது எப்படியெல்லாம் இந்த பிஜேபி நாடாளுமன்ற உறுப் பினர்கள் குதியாட்டம் போட்டார்கள்; இப்பொழுது இந்தப் பூனையும் இந்தப் பாலைக் குடிக்குமா என்கிற பாணியில் பேச ஆரம்பித்து விட்டார்கள். மக்கள் பிரச் சினையைத் திசை திருப்பிட யோகா போன்றவற்றைக் கொண்டு வந்து திணிக்கிறார்கள். கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதைதான்.<br /><br />இரயில்வே போன்ற பெரும் அரசுத் துறைகளே கார்ப்பரேட்டுகளின் கைகளுக்குத்தான் போகப் போகின்றன. உண்மையிலேயே ஆட்சி நடத்துப வர்களும் அவர்களே!தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-69908451354059147772015-06-29T22:46:03.657+05:302015-06-29T22:46:03.657+05:30ஆட்சியாளர்கள் வரலாற்று பாடப் புத்தகங்களை எழுதக் கூ...ஆட்சியாளர்கள் வரலாற்று பாடப் புத்தகங்களை எழுதக் கூடாது : அப்துல் கலாம்<br /><br /><br /><br />புதுடில்லி ஜூன் 29_ ஆட்சியதிகாரத்தில் இருப்பவர்கள் வரலாற்றுப் பாடப் புத்தகங்களை எழுதக் கூடாது என்று குடியரசு முன்னாள் தலை வர் அப்துல் கலாம் கூறி யுள்ளார்.<br /><br />ஒளிமயமான எதிர் காலத்துக்கு அறிவியல் வழிகள்' என்ற நூலை அப்துல் கலாம் எழுதியுள் ளார். அதில், விண்வெளி அறிவியல், ரோபாட் டிக்ஸ், மருத்துவம், புதைப் படிமவியல் ஆகிய துறை களில் உள்ள இளைஞர் களுக்கு அறிவுரை வழங் கும் வகையில் இந்தப் புத் தகம் எழுதப்பட்டுள்ளது. இந்நிலையில், டில்லியில் அவர், ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:<br /><br />பெரும்பாலான வரலாற் றுப் பாடப் புத்தகங்கள் ஆட்சியாளர்களால் எழுதப்பட்டவை. அந்தப் புத்தகங்களை நேர்மை யுடன் அணுகி, ஆய்வு செய்ய வேண்டும். வர லாற்று ரீதியாக உண்மை யில் என்ன நடந்தது என் பதையும் கண்டறிய வேண்டும்.<br /><br />புத்தகங்கள் மறு ஆய்வு செய்யப்பட்டு, முறையாக எழுதப்பட வேண்டும். அந்தப் புத்த கங்களை ஆட்சியதிகாரத் தில் இருப்பவர்கள் எழுதக் கூடாது. மாறாக, கல்வித் துறையில் சிறந்து விளங்கு பவர்கள் எழுத வேண்டும் என்றார்.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-44989500682916819632015-06-29T22:44:38.352+05:302015-06-29T22:44:38.352+05:30மந்திரச்சடங்குகளுக்காக தம்பியின் ரத்தத்தையே உறிஞ்ச...மந்திரச்சடங்குகளுக்காக தம்பியின் ரத்தத்தையே உறிஞ்சி எடுத்த மந்திரவாதி கைது<br /><br />புர்த்வான், ஜூன் 29- வளர்ச்சி யடைந்த நவீன சமூகம் என்று மனித சமூகம் தன்னை கருதிக் கொள்ளும் இந்தக் காலத்திலும் கூட, மந்திரச் சடங்குகளுக்காக தனது உடன்பிறந்த சகோதரரின் ரத்தத்தையே உறிஞ்சி எடுத்த கொடூரம் மேற்கு வங்க மாநிலத்தில் நடந்துள்ளது. காஞ்சன் நகர் கிராமத்தில் மந்திர தந்திர வேலைகளில் ஈடுபட்டு வருபவர் ஷூபஜித்(40).<br /><br />கடந்த சில வாரங்களாக இவரது தம்பியான ஷாமிக்கை கிராமத்தில் எங்கும் காணமுடியாததால், சந்தேகமடைந்த கிராம மக்கள் அவரது வீட்டை மறைமுகமாக சோதனையிட்டனர். அப்போது, அவரது தம்பி ஷாமிக், உடல் நலம் மிகவும் மோசமான நிலையில் வீட்டிற்குள் அடைத்து வைக்கப்பட்டிருப்பதைக் கண்டுபிடித் தனர். இதுகுறித்து காவல் நிலை யத்தில் புகாரளித்தனர்.<br /><br />உடனடியாக நடவடிக் கையில் இறங்கிய காவல் துறையினர் ஷூபஜித்தின் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது கடந்த ஒன்றரை மாதங்களாக ஷாமிக்கை அடைத்து வைத்து தனது மந்திரச் சடங்கு களுக்காக அவரிடமிருந்து ரத்தத்தை உறிஞ்சி எடுத்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து ஷூபஜித்தைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-89427428420152590502015-06-29T22:44:10.569+05:302015-06-29T22:44:10.569+05:30அம்மன் கோவிலில் தீ விபத்து: பக்தர்கள் அலறியடித்து ...அம்மன் கோவிலில் தீ விபத்து: பக்தர்கள் அலறியடித்து ஓட்டம்<br />காஞ்சீபுரம், ஜூன் 29 காஞ்சீபுரம் ராஜாஜி மார்க்கெட் பின்வாயில் பகுதி யில் சிறீதண்டு மாரியம்மன் கோவில் உள்ளது.<br />புகழ் பெற்ற இக்கோவிலுக்கு பொதுமக்கள் தினமும் அதிகளவில் வந்து செல்வர். இந்நிலையில் நேற்று மதியம் கோவிலில் அமைக்கப்பட் டுள்ள இன்வெர்டர்கள் திடீரென வெடித்தது. இதனால் தீ மளமளவென பரவ தொடங்கியது.<br /><br /> <br /><br />இதை பார்த்து கோவில் அருகில் இருந்தவர்கள், பக்தர்கள் அலறி அடித்துக்கொண்டு ஓடினர். விபத்து குறித்து காஞ்சீபுரம் தீயணைப்பு துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. விரைந்து வந்த அவர்கள் தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனர். இது குறித்து விஷ்ணு காஞ்சி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-90898530141589742802015-06-29T22:43:48.004+05:302015-06-29T22:43:48.004+05:30பூசாரி வீட்டை சூறையாடிய காட்டு யானைகள்
வால்பாறை, ஜ...பூசாரி வீட்டை சூறையாடிய காட்டு யானைகள்<br />வால்பாறை, ஜூன் 29 வால் பாறை பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரிக்கத் தொடங்கி வருகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன் னால் வில்லோனி எஸ்டேட் பகுதியில் முகாமிட்டிருந்த 2 குட்டி உள்பட 7 காட்டு யானைகள் கொண்ட கூட்டம் லோயர் பாரளை எஸ்டேட் பகுதி குடியிருப்புக்குள் புகுந்து வீடுகளை சேதப்படுத்தி விட்டு புதுத்தோட்டம் வனப்பகுதியில் முகாமிட்டிருந்தது.<br /><br /> <br /><br />இந்த யானைகள் கூட்டம் நேற்று இரவு அங்கிருந்து வால்பாறை பொள்ளாச்சி மெயின்ரோட்டை கடந்து புதுத்தோட்டம் பகுதியில் உள்ள குடியிருப்புக்குள் புகுந்து பூசாரி மணி என்பவரின் வீட்டின் ஜன்னலை உடைத்தது.<br /><br />வீட்டுக்குள் துதிக்கையை உள்ளே விட்டு சாப்பிடுவதற்கு அரிசி கிடைக்குமா? என்று தேடியது. வீட்டி லிருந்த பொருட்கள் முழுவதையும் உடைத்து சேதப்படுத்தியது. தகவல றிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வனத்துறையினர் எஸ்டேட் பகுதி மக்களுடன் இணைந்து யானை களை விரட்டினர்.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-68487342257110231572015-06-29T22:43:26.404+05:302015-06-29T22:43:26.404+05:30பக்தி படுத்தும் பாட்டைப் பாரீர்!
வினோத வழிபாடாம...பக்தி படுத்தும் பாட்டைப் பாரீர்!<br /><br /><br /><br />வினோத வழிபாடாம்:<br />அரச மரத்திற்கும் வேப்ப மரத்திற்கும் திருமணமாம்!<br />வத்தலக்குண்டு, ஜூன். 29 திண் டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே பட்டிவீரன்பட்டி அண்ணா நகரில் கருப்பண்ணசாமி பாண்டி கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் சிவனின் உருவமாக அரச மரத்தையும், அம்மனின் உருவமாக வேப்பமரத்தையும் கருதி இரு மரங் களுக்கும் கிராம மக்கள் திருமணம் நடத்தி வினோத வழிபாடு செய்து வருகிறார்கள்.<br /><br />உலக அமைதி வேண்டி இந்த திருமணம் ஆண்டுதோறும் நடை பெறுவதாக கிராம மக்கள் அய்தீகமாக கருதுகின்றனர். இதே போல இந்த ஆண்டும் மணமக்கள் போல அரச மரத்தையும், வேப்பமரத்தையும் ஜோடித்து திருமணம் செய்து வைக் கப்பட்டது.<br /><br />இதற்காக மணமேடை அமைத்து யாகம் வளர்த்து கோவில் குருக்கள் மூலம் திருமணம் நடத்தி வைக்கப்பட் டது. தொடர்ந்து ஊர் கிராம மக்கள் அட்சதை தூவி வாழ்த்தினர். இந்த நிகழ்ச்சியில் வத்தலக்குண்டு, பட்டி வீரன் பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் பங்கேற்னர்.<br /><br />இது குறித்து கிராம மக்கள் கூறுகையில், இயற்கையான மரங்களை தெய்வங்களாக வழிபட்டு அவற்றுக்கு திருமணம் செய்து வைத்தால் ஊரில் அமைதி நிலவும் என்பது எங்களது அய்தீகம். அதனால் ஊரில் அமைதி நிலவ மரங்களுக்கு திருமணம் நடத் தினோம். கடந்த 33 ஆண்டுகளாக இது போன்று செய்து வருகின்றோம் என்றனர்.<br /><br /><br /><br />Read more: http://www.viduthalai.in/e-paper/104167.html#ixzz3eTLCnh3gதமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-29403619062692558782015-06-27T22:34:01.483+05:302015-06-27T22:34:01.483+05:30அறிவு ஆசான் தந்தை பெரியாருக்கு யுனெஸ்கோ விருது வழங...அறிவு ஆசான் தந்தை பெரியாருக்கு யுனெஸ்கோ விருது வழங்கிய நாள்- இந்நாள்!<br /><br />1970 ஜூன் 27 நினைவிருக்கிறதா? அன்று ஒரு பொன்னாள் - அறிவு மலர்ந்து மணம் வீசிய நாள் -அன்றுதான் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களுக்கு அய்.நா.வின் யுனஸ்கோ தேடி வந்து விருது அளித்து பெருமை என்னும் விருதினை அணி கலனாக பூண்டநாள்!<br />பெரியார் - புதிய உலகின் தொலை நோக்காளர்<br />தென்கிழக்கு ஆசியாவின் சாக்ரட்டீஸ்<br />சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை<br />அறியாமை, மூடநம்பிக்கை,<br />பொருளற்ற பழக்க வழக்கங்கள் மற்றும்<br />கீழான நடவடிக்கைகளுக்கு கடும் எதிரி என்ற விருது வழங்கப்பட்ட நாள்! மத்திய அமைச்சர் திரிகுணசென் தலைமையில், தமிழக முதல்வர் மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்களால் அறிவு ஆசான் பெரியாரின் திருக்கரங்களில் அந்த விருது வழங்கப்பட்டது.<br /><br />குறிப்பு: இத்தகு பெருமைமிக்க பாராட்டுரைகளை ஆய்வு செய்து கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கடந்த ஆண்டு நான்கு நாள்கள் கட்டணத்துடன் கூடிய ஆய்வு சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். இவ்வுரைகள் தொகுக்கப்பட்டு சிறந்த ஆய்வு நூலாக விரைவில் வெளிவர உள்ளது.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-20866909815709500952015-06-27T22:30:39.279+05:302015-06-27T22:30:39.279+05:30ஏனென்றால் வாழ்க்கையில் எப்பவும் ரிடையர்மன்ட் தேவைஇ...ஏனென்றால் வாழ்க்கையில் எப்பவும் ரிடையர்மன்ட் தேவைஇல்லை. பணி செய்வதுதான் நிறைவடையலாம். completition the service. வாழ்க்கையில் கடைசி வரைக்கும் உழைப்பது இருக்கிறது பாருங்கள் அதில் ரிடையர் மென்ட்டுக்கு அடையாளமே இல்லை. ரிடையர்மென்ட் என்றால் எல்லாம் சோர்ந்துபோய், ஒன்றுமே இல்லாமல் அப்படியே இருக்கிறமாதிரிதான். பணி நிறைவு அப்படி என்றால், நிறைவான பணி முடித்திருக்கிறார். அந்த வங்கிப் பணிகளுக்காக குமரேசனைப் பாராட்டி, நன்றி தெரிவித்து, வழியனுப்புவதற்காக வந்திருக்கிறீர்கள். நான் இங்கே வந்திருப்பது அவரை வரவேற்பதற்காக வந்திருக்கிறேன். பொதுப்பணிக்கு வாருங்கள். உங்களுக்கு என்று சில இடங்களை காலியாக வைத்திருக்கிறோம். எதிர்பார்த்தே வைத்திருக்கிறோம்.<br /><br />ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்<br />செத்தாருள் வைக்கப் படும்.<br /><br />இருக்கின்ற அத்தனைபேரையும் உயிரோடு உள்ள வர்களாக திருவள்ளுவர் ஒத்துக்கொள்ளமாட்டேன் என்கிறார். இல்லறம் என்பது ஒரு பகுதி, அந்த இல்லறத்தையும் தாண்டி தந்தை பெரியார் சொன்னார் துறவறம் அல்ல, தொண்டறம் என்று சொன்னார். எனவே, அவர் தொண் டறத்தை செய்வதற்கு காலம் கனிந்திருக்கிறது. இரு கைகளை நீட்டி மலர்ந்த முகத்தோடு நாங்கள் வர வேற்கிறோம். ஆசிரியர் பாலு அற்புதமாக ஒரு கவிதையை எழுதியிருக்கிறார்.<br /><br />“Bud as blossom I’m happy to see, My Bud has come as Blossom”<br /><br />அது மட்டுமல்ல, குமரேசன் மொட்டாக இருந்து பூத்தார், காய்த்தது, கனிந்தது. அந்த கனியின் சுவையை நாம் எல்லாம் பகிர்ந்து கொண்டிருக்கிறோம் என்பதற்குத்தான் இந்த அரிய விழாவாகும். ஆகவே, சிறப்பான நிகழ்ச்சி.<br /><br />Religion may divide, Caste may divide, Party may divide, Positions may divide, But Humanism Unites. we welcome to humanism service. Thanking you.<br /><br />மதம், ஜாதி, கட்சி, பதவிகள் பிரிக்கலாம்; ஆனால், மனிதநேயம் இணைக்கிறது. அந்த மனிதநேயப் பணிக்கு உங்களை அன்போடு வரவேற்கிறோம். நன்றி, வணக்கம்! _ இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி பேசுகையில் குறிப்பிட்டார்.<br /><br />கலந்துகொண்டவர்கள்<br /><br />திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பெரியார் புத்தக நிலைய மேலாளர் த.க.நடராசன், பெரியார் நூலக வாசகர் வட்ட செயலாளர் சத்தியநாராயணன், பொருளாளர் மனோகரன், துணைச் செயலாளர் சேரன், வட சென்னை மாவட்டத் தலைவர் சு.குமாரதேவன், தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், தொழிலாளர் அணி இணைச் செயலாளர் செல்வராசு, பெரியார் களம் இறைவி, சி.வெற்றிச்செல்வி, வழக்குரைஞர்கள் ந.விவேகானந்தன், சென்னியப்பன், பேராசிரியர் இசையமுது, மருத்துவர் தேனருவி உள்பட ஏராளமானவர்கள் விழாவில் பங்கேற்றனர். விழா நிகழ்ச்சிகளை மாநில மாணவரணி செயலாளர் பிரின்சு என்னரெசு பெரியார் இணைப்புரைகளுடன் தொகுத்தளித்தார்.<br /><br /><br /><br />Read more: http://www.viduthalai.in/page-4/104039.html#ixzz3eHajc3WOதமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-9011114603893045262015-06-27T22:30:34.228+05:302015-06-27T22:30:34.228+05:301933இல், எங்களைப் போன்றவர்கள் பிறக்காத காலத்தில் க...1933இல், எங்களைப் போன்றவர்கள் பிறக்காத காலத்தில் குடிஅரசு ஏட்டில் தந்தை பெரியார் எழுதிய தலையங்கத்தில் அவர்கள் தெளிவாகச் சொல்லுகிறார் கள். நன்றி என்பது உதவி செய்பவர்கள் எதிர்பார்ப்பது அல்ல. பயன் அடைந்தவர்கள் காட்ட வேண்டிய பண்பு. உதவி செய்தவர்கள் எதிர்பார்க்கக் கூடாது. பயன் அடைந்தவர்கள் காட்ட வேண்டிய பண்பு. உதவி செய்ப வர்கள் எதிர்பார்த்தால், அதை சிறுமைக்குணம் என்று சொல்வேன் என்று சொல்கிறார். எத்தனையோ பேருக்கு உதவி செய்த உடன், நாம் உதவி செய்தோமே, அவர்கள் நன்றி சொல்லவில்லையே என்று எதிர்பார்க்கக் கூடாது. எதிர்பார்த்தால் நமக்கு உதவி செய்யும் மனப்பான்மையே வராது. மனித இயல்பு அது. பல பேருக்கு தந்தை பெரியார் அவர்கள் சொல்வார்கள். பிரத்யட்ச அனுப வத்தில் நடைமுறையில் இந்த காரியம் அவருக்கு சொன் னேனே அது நடந்ததா? என்று கேட்பார். முடித் தாயிற்று அய்யா, அவருக்கு இந்நேரம் கிடைத்திருக்குமே என்று சொன்னால், ஆமாமாம், கிடைக்கவில்லை என்றால்தான் மறுபடியும் என்னிடம் வந்திருப்பாரே அவர், கிடைத்திருந்தால் வந்திருக்கமாட்டார். வரவில்லை என்றால் கிடைத்துவிட்டது என்றுதான் அர்த்தம் என்று சொல்வார்கள். அது இயல்பு. உலகியல். ஆனால், அந்த சூழ்நிலையிலே மிகப் பெரிய அளவுக்கு செய்திருக்கிறார்கள் என்றால், சாதாரணமானதல்ல. எனவே, அவருடைய தொண்டு நிரம்ப சிறப்பானது. இதில் தமிழில் சொல்லும்போது பணி நிறைவு என்று போட்டார்கள். சின்ன திருத்தம். இந்தியன் வங்கியி னுடைய பணிநிறைவு. அவர் பணி இன்னும் நிறைய, அந்தப்பணியை இப்போது நாங்கள் வாங்கிக் கொண் டிருக்கிறோம், நாங்கள் பெற்றிருக்கிறோம். உங்களுடைய செலவு, எங்களுடைய வரவு. அதைத்தான் அய்யா நமச்சிவாயம் அவர்கள் அழகாக சொன்னார்.<br /><br />I am a student of the economics and I would have a crucial age which was one of the I have read, many theories might have come after sixty years. The judicial theory of economics, there is an acclimatory of proof, One man’s Expenditure is Another man’s Income. we all knew this. So, your expenditure-ðEG¬ø¾, your completion job, I don’t call it as retirement, because I never say retirement. Because retirement is very different.<br /><br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-87591824892299474782015-06-27T22:30:18.846+05:302015-06-27T22:30:18.846+05:30
சிறப்பான பணியில் இருக்கக்கூடியவரான கே.வி. ஆச்சார்...<br />சிறப்பான பணியில் இருக்கக்கூடியவரான கே.வி. ஆச்சார்யா அவர்களே, ஆச்சார்யா என்றாலே வணக் கத்துக்குரிய குரு என்றுதான் வடமொழியிலே பெயர். அந்த பெயரே அவருக்கு அமைந்திருக்கிறது இயல்பாக. அதேபோல இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் உதவி பொது மேலாளர், மேனாள் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அலுவலர் சங்க துணைத்தலைவர் டாக்டர் ஆர்.சங்கர நாராயணன் அவர்களே, குமரேசன் எப்போதும் அவருடைய தொழிற்சங்கத்திலே நிரம்ப ஈடுபாடு கொண்டவர். எங்களுக்கெல்லாம், அவரோடு நெருங்கிப் பழகியவர்களுக்கெல்லாம் தெரியும். தொலைப்பேசியிலே திடீரென்று அழைத்து ஏதாவது செய்தியை விசாரிப் பேன். அப்போது அவர் பேசிக்கொண்டே சொல்வார் இன்னும் இரண்டு நாள்களில் வந்துவிடுவேன். இப்போது நாகபுரியில் இருக்கிறேன் என்று சொல்லுவார். திடீரென்று கவுகாத்தியிலே இருக்கிறேன் என்று சொல்லுவார். அடுத்த நாள் கேட்டால், நான் விஜய வாடாவில் இருக்கிறேன், வந்துவிடுவேன் என்று சொல் வார். நான்தான் அதிகம் அலைகின்றேன் என்று இதுவரைக்கும் தவறாக நினைத்துக்கொண்டிருந்தேன். அதைவிட அதிகமான அலைச்சலும், நிரம்ப மகிழ்ச்சி யாகவும் தொழிற்சங்கத்தில் அவருடைய வேலையாக இருந்துள்ளது என்று சொன்னால், அதற்கு முழுக்க முழுக்க காரணமாக இருக்கக்கூடிய கோபிநாத் ராவ் அவர்களே, அவர் சொன்னார், தொழிற்சங்கத்தில் இருப் பவர்கள் வருத்தத்தோடு வருவார்கள், கவலையோடு வருவார்கள், அவர்களை திருப்பி அனுப்பும்போது மகிழ்ச்சியோடு அனுப்பவேண்டும் என்று சொல்வார் என்று சொன்னார். நிரம்ப புதுமையாக இருக்கிறது. எனக்குத் தெரிந்தவரையில் மகிழ்ச்சியோடு தொழிற்சங்கத்தலைவர்கள் போய் இருக்கிறார்கள். வருத்தத்தோடு திரும்பி இருக்கிறார்கள்.<br /><br />இந்த தொழிற் சங்கம் நிரம்ப வித்தியாசமான தொழிற்சங்கமாக இருக்கக்கூடிய அளவிலே, ஒரு எடுத்துக்காட்டான தொழிற்சங்கமாக சிறப்பாக இருக்கின்ற அளவிலே இது ஒரு கூட்டுக் குடும்பமாக நடந்து வந்திருக்கிறது. அதுவும் பழைய காலத்துக் கூட்டுக்குடும்பம், அப்படிப்பட்ட எழில் மிகுந்த நிலையில் இருக்கக்கூடிய கோபிநாத் அவர்களே, அதேபோல அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் என்று சொல்லக்கூடிய அளவிலே நாம் ஒரு நண்பரை சந்தித்தோமானால், அவர் ஆனந்த குமார் அவர்கள் எல்லோரிடத்திலும் கனிந்த அன்போடு இருக்கக் கூடியவர்கள், அதேபோல அதற்கு சமமாக நிரம்ப அன்பாக அவர் தமிழ் மண்ணுக்கு அப்பாற் பட்டவராக இருந்தாலும், தமிழ் மண்ணுக்கே உரியதாக இருக்கக்கூடிய அளவுக்கு ஜெ.டி.சர்மா அவர்கள் நம்மிலே ஒருவராக இருக்கக்கூடியவர். இவ்வளவு பெரிய நிலையிலே இத்தனை பேரின் அன்பு.<br /><br />சாதாரணமாக வரவேற்பதற்கு நிறைய பேர் வரு வார்கள். வழியனுப்புவதற்கு இவ்வளவு பேர் வருவார் களா என்று சொல்ல முடியாது. அப்படிப்பட்ட நிலை யிலே இங்கு அவருடைய தொண்டு எப்படிப்பட்டது? அவருடைய பணி எப்படிப்பட்டது என்பதில் ஈர்க்கக்கூடிய அளவிலே, ஒரு பெரிய அரசியல் அமைப் புகளில் எல்லாம்கூட ஆட்களைக் கூட்டிக்கொண்டு வருகிறார்கள். ஆனால், இங்கு பார்த்தால் ஒரு குடும்பப் பாசத்தோடு, பெரிய மகிழ்ச்சியோடு இருக்கும்போது, அவர் என்னை அழைக்கும் போது தலைவர் என் றெல்லாம் கூறினாலும், நமக்கு எல்லோருக்கும் தலைவர் தந்தை பெரியார் என்று நினைக்கிறவன், நான் தொண்டனுக்குத் தொண்டன். தோழனுக்குத் தோழன். அந்த முறையில் இருக்கும்போது அவர் எனக்கு சகோ தரர் அவ்வளவுதான்.<br /><br />அப்படிப்பட்ட ஒருவர் இந்த வாய்ப்பு சாதாரணமானதல்ல. அய்யா தந்தை பெரியார் அவர்கள் சொல்வார்கள் தமிழர்களிடையே நன்றி காட்டுவது, அய்யா நமச்சிவாயம் அவர்கள் சொல் லும்போது சொன்னார்கள். நிரம்ப புதுமையாக இருக் கிறது, ஆசிரியரை அழைத்து, அவருக்கு சொல்லிக் கொடுத்த ஆசிரியர், அவருக்கு வேலை சொல்லிக் கொடுத்தவர்கள், தொழிற்சங்கத்திலே வழிகாட்டக் கூடியவர்கள் இவர்களையெல்லாம் அழைத்து அவர்களுக்கு நன்றி காட்டக்கூடிய ஒரு நன்றிகாட்டுத் திருவிழா ‘Thanks Giving Day வழி அனுப்புவிழா என்பதைக்கூட ‘Get Together’ என்பதைக்கூட ‘Thanks Giving Day’ என்று நன்றி சொல்லக்கூடிய விழா. நன்றி என்று சொல்லும்போது, நிரம்ப வியப்பாக ஒன்றைச் சொன்னார். தந்தை பெரியார் தத்துவத்திலே ஊறியவர் நம்முடைய அருமைத் தோழர் குமரேசன் அவர்கள் மாநிலப் பகுத்தறிவாளர் கழகத்தின் பொதுச்செயலாளர் கூடுதலாக அந்தப்பணியைச் செய்கிறார்.<br /><br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-4788721301841390212015-06-27T22:30:05.182+05:302015-06-27T22:30:05.182+05:30தொண்டறம் செய்வதற்கு காலம் கனிந்திருக்கிறது; மலர்ந்...தொண்டறம் செய்வதற்கு காலம் கனிந்திருக்கிறது; மலர்ந்த முகத்தோடு குமரேசன் அவர்களை வரவேற்கிறோம்!<br /><br />தொண்டறம் செய்வதற்கு காலம் கனிந்திருக்கிறது; மலர்ந்த முகத்தோடு குமரேசன் அவர்களை வரவேற்கிறோம்!<br /><br />தந்தை பெரியார் கொள்கையை சுட்டிக்காட்டி தமிழர் தலைவர் சிறப்புரை<br /><br /><br /><br />பகுத்தறிவாளர் கழகப் பொதுச்செயலாளர் வீ.குமரேசன் பாராட்டுவிழாவில் பெரியார் மணியம்மை பல்கலைக்கழக வேந்தர், பகுத்தறிவாளர் கழகப் புரவலர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றுகையில் குறிப்பிட்டதாவது:<br /><br />மிகுந்த எழுச்சியோடு ஒரு வழியனுப்பு, நன்றி அறிவிப்பு எல்லாவற்றையும் கடந்த ஒரு எழில் மிகுந்த உணர்ச்சிபூர்வமான, அறிவுபூர்வமான எல்லாம் கலந்த ஒரு நிகழ்ச்சி என்று நாம் பெருமைப்படத்தக்க ஒரு நிகழ்ச்சியாக நடந்துகொண்டிருக்கக் கூடிய அருமைத் தோழர் குமரேசன் அவர்களுடைய பணி நிறைவு என்பதையொட்டி, இங்கே வருகைபுரிந்து அவருடைய சிறப்புகளையெல்லாம்பற்றிய மலரையும் வெளியிட்டு, தந்தை பெரியாருக்கும், இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கும் உள்ள நீண்டகால தொடர்புபற்றியும் சிறப்பாக எடுத்து வைத்த என்றென்றைக்கும் எங்கள் நன்றிக்கும், பாராட்டுக்கும் உரிய மேனாள் செயல் தலைவர் அன்பிற்குரிய அய்யா நமச்சிவாயம் அவர்களே, இந்த நிகழ்ச்சியிலே எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான் என்று அந்த காலத்திலே சொல்வார்கள். இறைவன் என்பதற்கு கடவுள் என்று பொருள் கொள்ளுகிற வர்களும் உண்டு.<br /><br />தலைவன் என்று பொருள் கொள் ளுகிறவர்களும் உண்டு. எப்படிப்பட்ட நம்பிக்கைகள் உள்ளவர்கள் எப்படி சொல்லிக்கொண்டாலும், வணக்கத்துக்கும், பின்பற்றுதலுக்கும் உரியவர் நமக்கு போதித்த ஆசிரியர் என்ற அந்த சிறப்பான வகையிலே நன்றி மறவாது அறிவியல் ஆசிரியர் அவருக்கு சொல்லிக் கொடுத்த ஆசிரியரை முதன்மைப்படுத்தி, இங்கே அழைத்து சிறப்பு செய்யப்படும் மேனாள் அறிவியல் ஆசிரியரான நாடார் சரசுவதி மேல்நிலைப்பள்ளியின் ஆசிரியர் பாலு அவர்களே, அதேபோன்று வேளாண் துறையிலே அவர்களுக்கு பெரிய வாய்ப்பு அளித்து சிறப்பாகச் செய்த, வேளாண்மைத்துறையின் மேனாள் கூடுதல் இயக்குநர் கே.எம்.இராமானுஜம் அவர்களே, முதன்முதலில் தனக்கு வேலையைப் பயிற்றுவித்தவர் என்ற பெருமையோடும், நன்றியுணர்வோடும் அழைத்துப் பாராட்டப்பட்டிருக்கிற ஹுபர்ட் ராபின்சன் அவர்களே, அதேபோல இந்த நிகழ்ச்சியிலே சிறப்பான வகையில் முதல்முறையாக அவர்களுக்கு பெருமை சேர்த்துக்கொண்டு இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் அமைப்பினிலே தலைவராக இருந்து, எல் லோருடைய பாராட்டுதலும், மகிழ்ச்சிக்குரியதாகவும், எவரிடத்திலும் இன்முகத்தோடு எதையும் பேசக்கூடிய தான ஒரு சந்திப்பை முதல்முறை அல்ல, இரண்டாம் முறையாக சந்திக்கின்ற வாய்ப்பைப் பெற்றிருக்கிறேன்.<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-75767433489549910822015-06-27T22:28:23.988+05:302015-06-27T22:28:23.988+05:30இந்த ஆர்.எஸ்.எஸ்., பாஜக பரிவாரங் களால் சுதந்திர போ...இந்த ஆர்.எஸ்.எஸ்., பாஜக பரிவாரங் களால் சுதந்திர போராட்ட தியாகி என பொய்யாக வர்ணிக்கப்பட்டு, நாடாளுமன் றத்தின் மய்ய மண்டபத்தில், காந்தியின் படத்திற்கு எதிராகவே, அன்றைய வாஜ்பாய் அரசால் 2003-இல் படமாக வைக்கப் பட்டுள்ள சவார்க்காரின் வீரத்தையும் சற்று பார்ப்போம்.<br /><br />இந்த சவார்க்கர், காந்தி கொலையில் தொடர்புண்டு என்று கைது செய்யப் பட்டவர். முறையான ஆவணங்கள் இல்லை என்பதால் விடுதலை ஆனவர்.<br /><br />சவார்க்கர், சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டார் என்பதாக அந்தமான் சிறையில் இருந்தவர்; அவர் சிறையில் இருந்து வெளிவர பிரிட்டிஷ் அரசுக்கு மன்னிப்பு கடிதம் எழுதுகிறார். என்னை பிரிட்டிஷ் அரசு, இரக்கத்தோடும், கருணையோடும் விடுதலை செய்தால், இந்த அரசுக்கு வலி மையான ஒரு விசுவாசியாக இருப்பேன்; அரசு என்ன மாதிரி விரும்புகிறதோ, அந்த வகையில் நான் சேவை செய்ய சித்தமாக இருக்கிறேன். என்மீது கருணையை மேன்மை தங்கிய தங்களால் மட்டுமே வழங்க முடியும். ஆகவே, இந்த ஊதாரித்தனமான மகன் பிரிட்டிஷ் அரசான பெற்றோரிடம் செல்லாமல் எங்கு செல்ல முடியும்<br /><br />இப்படி எழுதி, வெளியில் வந்து, எந்த நடவடிக்கையிலும் ஈடுபடாமல் காலத்தை கழித்தவர்தான், இந்த சவார்க்கர். இவர் தான் நாடாளுமன்றத்தில் படமாக வைக்கப்பட் டுள்ளார். இதைவிட அவமானம் நாடாளு மன்றத்திற்கு எதுவாக இருக்க முடியும்?<br /><br />இந்த குறிப்புகளை சதாத்ரு சென் எழுதி ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக பதிப்பகம் வெளியிட்டுள்ள நூலில், உள் துறை அமைச்சகத்தின் குறிப்புகளிலிருந்து அதன் ஆசிரியர் மேற்கோள் காட்டியுள்ளார்.<br /><br />ஆனால், திமுக 1975-இல் நெருக்கடி நிலைப் பிரகடனத்தை கடுமையாக எதிர்த்த நிலையில், இந்திரா காந்தியின் சார்பில் இரு பிரதிநிதிகள், கலைஞரைச் சந்தித்து, நீங்கள் நெருக்கடி நிலையை ஆதரிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை; மாறாக எதிர்க்காமல் இருந்தால், திமுக ஆட்சி தொடரும் என தெரிவித்தபோது, கலைஞர், தான் பெரியார், அண்ணா ஆகியோரின் மாணவன், எக் காரணத்தைக் கொண்டும் நெருக்கடி நிலையை ஆதரிக்க முடியாது. ஜனநாயகத்திற்கு ஆதரவாகவே திமுக இருக்கும் என உறுதிபட தெரிவித்ததை, ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையில் (25.6.2015) மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.<br /><br />இதற்கு முற்றிலும் மாறாக, நெருக் கடி நிலை பற்றி மூச்சு விடாமல் இருந்த கட்சி புரட்சி நடிகராக இருந்து புரட்சித் தலைவரான எம்.ஜி.ஆரின் அதிமுக,<br /><br />இப்படி, பிரிட்டிஷ் அரசிடம் கைது செய்யப்பட்டால், மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்தவர்களும், நெருக்கடி நிலை சட்டத்தின்போது கைது செய்யப் பட்டு மன்னிப்பு கடிதம் எழுதி வெளியே வந்தவர்களுமான, பாஜக, ஆர்.எஸ்.எஸ். கம்பெனி, தற்போது நாற்பாதாம் ஆண்டு நிகழ்ச்சியை நடத்துகிறார்களாம்.<br /><br />நெருக்கடி நிலைக் காலத்தில் அதை எதிர்த்து இறுதி வரை நின்றவர்கள் யார்? அதற்காக ஆட்சியை இழந்தவர்கள் யார்? அதை எதிர்க்காமல் கட்சியை நடத்தியவர்கள் யார்? கைது செய்யப் பட்டதும் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்து வெளியே வந்து இன்றைக்கு ஜனநாயகக் காவலர்களாக காட்டிக் கொள்பவர்கள் யார்? இதற்கான வரலாற்று நிகழ்வுகளை பதிவு செய்ய வேண்டியது நம் கடமை. இதை நாம் சரியாக செய்யாத தினால்தான், மன்னிப்பு கேட்டவர்கள் இன்றைக்கு ஜனநாயகக் காவலர் வேடம் போடுகிறார்கள். தங்களுக்கு சார்பான கருத்துக்களை மட்டுமே பேச வேண்டும்; மாறான கருத்துக்கள் விவாதம் மேற் கொண்டால், வெடி குண்டு வீசுவோம்; ஆட்களை தீர்த்துக் கட்டுவோம் என சொல்லும் ஒரு பாசிசக் கூட்டம், நெருக் கடி நிலையில் ஜனநாயகம் நெரிக்கப் பட்டது என நிகழ்ச்சி நடத்தும் கூத்து இந்தியாவைத் தவிர வேறு எங்கும் நடக்காது.<br />இன்றைய தலைமுறை, இந்த வரலாற்றை தெரிந்து கொண்டால்தான், எதிர்காலத்தில் ஜனநாயகத்திற்கு நெருக்கடி வந்தால் யார் அதற்கு போராடுவார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள முடியும்.<br /><br /> <br /><br />- குடந்தை கருணாதமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-8330831243792442792015-06-27T22:28:18.927+05:302015-06-27T22:28:18.927+05:30நெருக்கடி நிலை பிரகடனமும், பாஜக., ஆர்.எஸ்.எஸ். தகி...நெருக்கடி நிலை பிரகடனமும், பாஜக., ஆர்.எஸ்.எஸ். தகிடுதத்தமும்<br /><br /><br />ஜூன் 25, 1975. இந்திரா காந்தியால் நெருக்கடி நிலை சட்டம் பிரகடனம் செய்யப்பட்டு. நாற்பது ஆண்டுகள் கழிந்துவிட்டன. அய்ம்பது வயதுக் குட்பட்டவர்களுக்கு, இந்த இருண்ட காலத்தின் சமூக, அரசியல் நடப்புகள் இன்று தெரியாது. தமிழ் நாட்டில் திரா விடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும், நெருக்கடி நிலை சட்டத்தால், கடுமையாக பாதிக்கப்பட்ட இயக் கங்கள். முன்னணித் தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டு, ஓராண்டு கடும் சிறை வாசம் மேற்கொண்டவர்கள் இந்த இயக்கத்தவர். சட்டமன்றத்தில் 183 உறுப்பினர்களைக் கொண்ட தனிப் பெரும்பான்மைப் பெற்ற கட்சியான திமுக, நெருக்கடி நிலையை ஆதரிக் காமல், எதிர்க்கிறது என்பதற்காக, 356-ஆவது பிரிவின் கீழ் ஆட்சி கலைக்கப்பட்டது.<br /><br />மிசா சட்டத்தை பயன்படுத்தி, பலரும் கைது செய்யப்பட்டனர். சிறையில் இருந்த திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, முரசொலிமாறன், மு.க. ஸ்டாலின், ஆற்காடு நா. வீராசாமி போன்றோர் கடுமையாக தாக்கப் பட்டனர். சிட்டிபாபு, சாத்தூர் பாலகிருஷ்ணன் ஆகிய இருவரும், சிறை யில் கடுமையாக தாக்கப்பட்டு, சிறையில் மாண்டனர்.<br /><br />ஆளுநர் ஆட்சி என்ற பெயரில் தவே, சுப்ரமணியம் என்ற இரு பார்ப்பனர் களின் கொடுங்கோல் ஆட்சியைத்தான் தமிழகம் சந்தித்தது. விடுதலையில் தந்தை பெரியார் எனப் போடக்கூடாது என சென்சார் செய்யும் அளவுக்கு கட்டுப் பாடுகள் இருந்தன. அந்த இரு பார்ப் பனர்களும் சிண்டை அவிழ்த்து ஆடிய ஆட்டம் கொஞ்சம் நஞ்சமல்ல. வட நாட்டில் பல தலைவர்கள் கைது செய் யப்பட்டாலும், அவர்களுக்கு இத்தகைய தாக்குதல்கள் நடந்ததாக செய்திகள் இல்லை. பல தலைவர்கள் உடல் நலம் கருதி, பிணை பெற்று வந்துவிட்டார்கள்.<br /><br />அதில், இன்றைய பாரத ரத்னா வாஜ்பாயும் ஒருவர். அவர் கைது செய்யப்பட்டதும், உடல் நலம் கருதி, இறுதிவரை மருத்துவமனை சிகிச்சை யில் தான் இருந்தார்.<br /><br />ஏறக்குறைய இருபது மாதம் நெருக் கடி நிலை அமுலில் இருந்த காலத்தில், பெரும்பான்மை மாதங்கள், வாஜ்பாய் பரோலில் வெளியில் இருந்தார். அரசுக்கு எதிராக எந்த நடவடிக்கையிலும் ஈடுபடு வதில்லை என்ற உறுதிமொழியைக் கொடுத்துவிட்டு, வாஜ்பாய் வெளியில் இருந்தார்.<br /><br />இவ்வாறு நாம் சொல்லவில்லை; இன்று பாஜகவின் முக்கிய தலைவர்களில் ஒருவ ரான சுப்ரமணியன் சுவாமி கூறியதைத் தான் நாம் மேற்கோள் காட்டுகிறோம். இதோடு அவர் நிறுத்தவில்லை.<br /><br />அன்றைக்கு ஆர்.எஸ்.எஸ். தடை செய்யப்பட்டு, அதன் அன்றைய தலைவர் பாலாசாகிப் தியோரஸ், ஏர்வாதா சிறையில் இருந்தார். அங்கிருந்து இந்திரா காந்திக்கு பல கடிதங்கள் எழுதினார். ஆர்.எஸ்.எஸ்.க் கும், ஜெயபிரகாஷ் இயக்கத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், தங்கள் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு, இந்திரா காந்தியின் இருபது அம்ச திட்டத்திற்கு முழு ஒத்து ழைப்பு தந்து பாடுபடும் என்று மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்தார்.<br /><br />தியோரஸும், வாஜ்பாயும் இவ்வாறு மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்து நெருக்கடி நிலைக்கு எதிரான இயக்கத்திற்கு முற்றிலும் துரோகம் இழைத்து விட்டார்கள். அப்போதைய மகாராட்டிர சட்டமன்ற நடவடிக்கைகளின் குறிப்புகளில் இந்த செய்திகள் இருக்கின்றன என ஆதாரத் துடன் சொன்னவரும் சாட்சாத் சுப்ர மணியன் சுவாமிதான். ஆதாரம் வேண்டு வோர், ஆங்கில இந்து பத்திரிக்கையில் ஜூன் 13, 2000 அன்று அவர் எழுதிய கட்டுரையைப் படித்து தெரிந்து கொள்ளவும். எந்த தருணத்தில் சுப்ரமணியன் சுவாமி இந்த கட்டுரையை எழுதினார் தெரியுமா? நெருக்கடி நிலைப் பிரகடனம் செய்து இரு பத்தைந்து ஆண்டுகள் ஆகிய நிலையில், அதை பாஜக நினைவுபடுத்தி நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்ததைக் கிண்டல் செய்து, சுவாமி இந்த கட்டுரையை எழுதினார்.<br /><br />இவ்வாறு வாஜ்பாயும், ஆர்.எஸ்.எஸ். தலைவர்களும் மன்னிப்பு கோருவது ஒன்றும் புதிதல்ல. இதே பாரதரத்னா வாஜ்பாய், 1942 வெள்ளையனே வெளி யேறு போராட்டத்தில் கலந்து கொண்ட தியாகி என பீலா விட்டு, அது வடிகட்டின பொய் என்றும், எதேச்சையாக நான் கலவரம் நடந்த பகுதியில் இருந்தேன்; என்னை கைது செய்து விட்டார்கள் என நீதிமன்றத்தில் கடிதம் கொடுத்ததை, பிரண்ட் லைன் ஆங்கில பத்திரிகை (பிப்ரவரி 7-20, 1998) வெளியிட்டு, முக மூடியை கிழித்து விட்டது. அதேபோல், காந்தி படுகொலைக்குப் பின் ஆர். எஸ்.எஸ். இயக்கம் ஒரு முக்கிய காரணம் என்ற அடிப்படையில் பிப்ரவரி 2, 1948-இல் தடை செய்யப்பட்டது. இனி அரசி யல் நடவடிக்கை எதிலும் கலந்து கொள்ள மாட்டோம்; எங்கள் அமைப்பு ஒரு கலாச்சார அமைப்பு என்று ஒரு சட்ட விதி உருவாக்கி, மத்திய அரசுக்கு கடிதம் கொடுத்ததற்குப் பின் தான், ஜூலை 11, 1949-இல் ஆர்.எஸ்.எஸ். மீதான தடை நீக்கப்பட்டது.<br /><br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-64158485964543857652015-06-27T22:27:54.132+05:302015-06-27T22:27:54.132+05:30நீதிக்கட்சியும் அவர் ஆற்றலுடன் இயங்கியதைக் கண்ட மு...நீதிக்கட்சியும் அவர் ஆற்றலுடன் இயங்கியதைக் கண்ட முத்தையா செட்டியார் அவர்கள், அண்ணாவை அணுகி, உங்களுக்குக் கை நிறைய ஊதியமும், தனி வீடும், தனிக் கார் வசதியும் தருகிறேன்; என்னிடம் பணிக்கு வந்து விடுங்கள் என்று கூறியபோதும், பெரியாரின் குருகுல வாழ்க்கையை விட்டு வர மாட்டேன் என்று, சொற்பச் சம்பளத்தில் தந்தை பெரியாரின் விடுதலை இதழில் தொண்டாற்றினார் அண்ணா. தாம் எம்.ஏ. படித்திருந்தாலும், அய்யாவின் அறிவியக்கத்தின் தன்மானக் கொள்கையால் ஈர்க்கப்பட்ட அண்ணா இறுதிவரை, நான் கண்டதும், கொண் டதும் ஒரே தலைவர் தந்தை பெரியார் தாம் என்றார்.<br /><br />1949இல் இராபின்சன் பூங்காவில் பெரியாரிடமிருந்து பிரிந்து, திராவிட முன்னேற்றக் கழகம் எனும் தனி இயக்கம் கண்ட போதும், மேடையின் மத்தியில் ஒரு காலி நாற்காலியிட்டு, இது தந்தை பெரியாருக்கே உரிய தலைவர் நாற்காலி; தி.மு.கழகத்திற்குத் தனித் தலைவர் கிடையாது. என்றைக்கு இருந்தாலும் தந்தை பெரியார்தாம் தலைவர் என்று, தந்தைபெரியாரிடம் பக்தியும் பாசமும் காட்டியவர் அண்ணா.<br /><br />1967இல் மக்கள் அண்ணாவை முதல் அமைச்சர் ஆக்கியவுடன், முதல் வேலையாகத் திருச்சிக்கே சென்று, அங்கே தங்கியிருந்த தந்தை பெரியா ருக்கு மாலை அணிவித்து, அமைந்தி ருக்கும் மந்திரி சபையே தந்தை பெரியா ருக்குக் காணிக்கை என்று கூறி, அய் யாவை நெகிழ வைத்தார். தாம் கடுமை யாக எதிர்த்துப் பிரச்சாரம் செய்தாலும், தனயன் அண்ணா காட்டிய உயரிய பண் புணர்வு, தந்தை பெரியாரைச் சிலிர்க்க வைத்தது.<br /><br />தமிழக மக்கள் படிப்பாற்றல் பெற்றவர் களாகவும், நூலறிவு மிக்கவர்களாகவும் திகழ வேண்டுமென்று, அண்ணா கனவு கண்டார். ஏனெனில், அவரே எளிய ஓட்டு வீட்டில் பிறந்தாலும் ஏராளமான நூல்களை இராப் பகலாகப் படித்து, மாமேதையாக விளங்கியதால், புத்த கங்களே மக்களுக்குப் புத்தறிவு ஊட்டக் கூடியவை என்று, திடமாக நம்பினார்.<br /><br />ஓர் எழுத்தாளர் சங்க மாநாட்டில் அறிஞர் அண்ணா, இப்படி முழங்கினார்: பாருங்கள்! நம் நண்பர் ஒருவரின் புதுமனை புகுவிழாவிற்குச் சென்றால், அவர் பெருமிதத்துடன் தாம் புதிதாகக் கட்டிய வீட்டின் திண்ணைகளைக் காட்டுவார்; கூடத்தைக் காட்டுவார்; வர வேற்பு அறையைக் காட்டுவார்; சமையல் அறையைக் காட்டுவார்; சாப்பிடும் அறையைக் காட்டுவார்; படுக்கை அறை யைக் காட்டுவார்; கடவுள் அறையை காட்டுவார். ஆனால் இதுதான் நான் படிக்கும் படிப்பறை என்று, ஒன்றைக் காட்டுகிறாரா? அப்படி வீட்டுக்கு வீடு நூலக அறை திகழும் நாள்தான், அறிவுப் புரட்சிக்கு வழிவகுக்கும் திருநாள்!<br /><br />எத்தனை சிந்தனை ஆழத்துடன் அண்ணா அவர்கள் உதிர்த்த சொற்கள் இவை!<br /><br />அதேபோல் தமிழ் மாந்தர், அறி யாமைச் சேற்றிலிருந்தும் வைதிகச் சகதியிலிருந்தும் வெளியே வந்தால் தான் அறிவார்ந்த விஞ்ஞான முன் னேற்றம் காண முடியும் என்று, திட்ட வட்டமாக எண்ணினார் அண்ணா.<br /><br />அவர் ஒருமுறை அழுத்தத்து டனும், சிந்தனைச் செழுமையுடனும் கூறினார்; கடிகாரத்தின் நொடி முள்ளும், மணிமுள்ளும் நகர்வதைக் கவனித்து, வாழ்க்கையை வேகமாக நகர்த்திக் கொண்டிருக்கும் மேனாட் டார், எங்கோ உயரத்திற்கு முன் னேறிப் போய்க் கொண்டிருக்கி றார்கள். ஆனால் இன்னமும் பஞ்சாங் கத்தைப் பார்த்து, நவக்கிரகங்கள் நகர்வதைப் மட்டுமே சார்ந்து செயல் படும் நாம், பின்னேறிக் கொண்டே இருக்கிறோம்<br /><br />அறிவுப் பாதைக்கு நம்மை ஆற்றுப் படுத்திட அண்ணாவின் சிந்தனையோட்டம் எப்படியெல்லாம் செயல்பட்டது.<br /><br />அறிஞர் அண்ணா முதல் அமைச் சரான பிறகுகூட ஒரு விருந்து ஏற்பாடு நாகரசம்பட்டியில் திரு என்.எஸ். சம்பந்தம் வீட்டில். அப்போது முதல் வரை தனக்கு அருகில் அமர்த்திட வேண்டுமென அய்யா - விரும்பி ஜாடை காட்டினார் எங்களிடம்.<br /><br />அண்ணாவோ மிகுந்த கூச்ச சுபாவம் உள்ளவர். அவர் தயங்கி சில இலைகள் தள்ளி என் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டார். இதற் கிடையில் அய்யாவுக்குப் பக்கத்தில் ஒரு அதிகம் பேசும் தொணதொணா ஒருவர் அந்த இலையை ஆக்கிர மித்துக் கொண்டார்! அய்யாவுக்கு வந்த கோபத்தை எங்கள்மீது பார் வையில் காட்டி பிறகே உணவு உண்டார்!<br /><br />ஈரோட்டில் விடுதலை ஆசிரிய ராக இருந்தபோது எப்படி அய்யா விடம் இருந்தாரோ - நடந்தாரோ - அதே பயபக்தி யுடன் முதல் அமைச் சரான அண்ணாவும் இருந்தார்.<br /><br />அத்தகையவர்களை இனி எளி தில் எங்கே சந்திக்கப் போகிறோம்?<br /><br />கவவேந்தர் கா. வேழவேந்தனின் மற்ற கட்டுரைகளும் நல்ல தகவல் களஞ்சியங்கள் ஆகும்.<br /><br /> <br /><br />- கி.வீரமணி - வாழ்வியல் சிந்தனைகள்<br /><br /><br /><br />Read more: http://www.viduthalai.in/page-2/104054.html#ixzz3eHa7A5Kgதமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.com