tag:blogger.com,1999:blog-1474608369333206681.post2239073256551252560..comments2023-10-29T13:02:52.613+05:30Comments on தமிழ் ஓவியா: காதலர் தினம் வாழ்க! ஜாதி ஒழிப்பு மலர்க!தமிழ் ஓவியாhttp://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-22114317953784445352011-02-15T17:52:21.130+05:302011-02-15T17:52:21.130+05:30நாய்க்கும் நாய்க்கும் கலியாணமாம்! சிங்கத்துக்கும் ...நாய்க்கும் நாய்க்கும் கலியாணமாம்! சிங்கத்துக்கும் சிங்கத்துக்கும் எப்போதாம்?<br /><br />காதலர் தினத்தைக் கொச் சைப்படுத்துவதற்காக இந்து முன் னணியினர் நாய்க்கும் நாய்க்கும் சென்னையில் புளியந்தோப்பு குட்டிதம்பிரான் தெருவில் விவாஹ சுப முகூர்த்தம் (கல்யாணம்) செய்து வைத்தார்களாம். நாய் களைக் குதிரைகள்மீது அமர வைத்து ஊர்வலமாக அழைத்து வந்தனராம்.<br /><br />நாய் என்றால் அலட்சியம், கேவலம் என்று நினைத்துக் கல்யாணம் செய்து வைத்திருக்க மாட்டார்கள் என்று நம்பு வோமாக.<br /><br />நாய் என்பது இந்து மதத் தத்துவப்படி வேதத்தின் உருவ மாகும். பைரவனின் வாகன மாகும்.... (சவுநக முனிவர் நாய்க்குத்தான் பிறந்தார் என்பது கூடுதல் தகவல்)<br /><br />நாய் மட்டுமா? நேரம் கிடைக் காத காரணத்தால் கழுதைக்கும் கழுதைக்கும்கூட கல்யாணம் கட்டி வைத்திருப்பார்கள். கார ணம், காங்கேய முனிவர் கழுதைக்குப் பிறந்தவராக்கும். தவளைக்குக்கூட ஜாம் ஜாமென்று வேத மந்திரங்கள் முழங்க, கன்னியாதானம் (கல்யாணம்) செய்து வைத்திருப்பார்கள். தவளை என்றால் சாதாரணமா? மாண்டவியர் தவளைக்குத் தானே பிறந்தார்!<br /><br />நரி சிக்கியிருந்தால் நரிக்கும் நரிக்கும்கூட புரோகிதரை அழைத்து, அக்னி குண்டம் வளர்த்து, சப்தபதி வைத்து தாரா முகூர்த்தம் நடத்தி வைத்திருப் பார்கள். காரணம் ஜம்புக முனி வர் இந்து மத புராணப்படி ஜம்புக முனிவர் நரிக்குப் பிறந்தவராக்கும்.<br /><br />கோட்டான் கிடைத்திருந்தால் கோட்டானுக்கும் கோட்டானுக் கும் கோலாகலமாக பாணிக் கிரகம் செய்து வைத்திருப்பார்கள். காரணம் கணாதர் முனிவர் கோட்டானுக்குப் பிறந்த புத்திரர் ஆயிற்றே!<br /><br />கரடிக்கும் கரடிக்கும் கலி யாணம் நடத்தி, சாந்தி முகூர்த் தமும் நடத்தி இருப்பார்கள். கரடி கையில் சிக்கினால் உயிரைக் காவு கொடுக்க நேருமோ என்ற பயம்தான்.<br /><br />கரடி என்றால் சாதாரணமா? ஜாம்புவந்தர் முனிவர் கரடிக்கு க்ஷணித்தவர் ஆயிற்றே!<br />குதிரைக்கும் குதிரைக்கும் குஷியோடு கல்யாண மண்ட பத்தை வாடகைக்கு எடுத்துக்கூட நடத்தியிருப்பார்கள். இத்தாண்டு நடத்தாவிட்டால் என்ன, அடுத்த ஆண்டு நடத்தினால் போச்சு. குதிரைக்குப் பிறந்த அஸ்வத் தாமனைக் கவுரவிக்க வேண் டாமா?<br /><br />கிளிக்கும் கிளிக்கும்கூட கில்ட்டுக் கலரில் பத்திரிகை அடித்து கின்னரர், கிம்புருடர், அட்டதிக்கு பாலர்கள் சாட்சியாக கல்யாணம் செய்யலாமே. சுகர் முனிவர் கிளியின் சேஷ்ட புத்திரனாயிற்றே!<br /><br />காதலர் தினத்தை அவமானப் படுத்துவதாக நினைத்துக் கொண்டு நாய்க்கும் நாய்க்கும் கல்யாணம் நடத்தியிருந்தால் அது இந்து மதத்தைக் கேவலப் படுத்துவதாகும். இந்து மக்களின் மத உணர்வையும் புண்படுத்து வதாகும். இந்து முன்னணிக்காரர் களும் தி.க.வில் சேர்ந்து விட் டார்களோ!<br /><br />இதனை நாங்கள் சும்மா விடப் போவதில்லை என்று விசுவ ஹிந்து பரிஷத்காரர்கள் போராட் டம் நடத்தினாலும் நடத்தலாம். யார் கண்டது?<br /><br />அது சரி, சிங்கத்துக்கும் சிங்கத்துக்கும் சிங்காரம் செய்து எப்பொழுது திருக்கல் யாண உற்சவத்தை நடத்தப் போகிறார்களாம்!<br /><br />நல்ல விருந்து கிடைக் கும் அல்லவா! (விருந்து பக்தர் களுக்கா - சிங்கத்துக்கா?)<br />பக்தர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.<br /><br /> --கருஞ்சட்டை -"விடுதலை” 15-2-2011தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-50561312021946335282011-02-14T19:04:25.509+05:302011-02-14T19:04:25.509+05:30காதலர் தினம் சிந்தனைக்கு
புழுக்களுக்குப் பூவின் ம...காதலர் தினம் சிந்தனைக்கு<br /><br />புழுக்களுக்குப் பூவின் மணம் தெரியுமா?<br /><br />புழுக்களுக்குப் பூக்களின் மணத்தைப்பற்றி விமர்ச்சிக்க இப் புவியில் இவர்களுக்கு என்ன அருகதை இருக்கிறது...? எப்படி இருப்பினும் ஒரு புறம் ஜாதிய ரீதியாக காதலுக்கு எதிர்ப்புத்தன்மை நிலவும் நிலையில் - இந்துத்துவா காதலுக்குக் கடுமையான எதிர்ப்புகளைக் காட்டுகின்ற நிலையில் - காதலர்கள் தங்கள் காதலை பொது இடங்களில் மிகவும் கண்ணியத்தோடு கையாள வேண்டும். இல்லையெனில் மக்களின் பேராதரவு காதலர் களுக்குக் கிடைக்காமல் - காதல் திருமணங்களுக்கு ஆதரவு கிடைக்காமல் போய் விடும். அப்புறம் முற்போக்காளர்களின் ஆதரவையும் இழந்து விட்டு காதலர்கள் தங்கள் காதலை வெற்றியுடையதாக மாற்றிக் கொள்ள மாற்று வழியில்லாமல் திண்டாடும் நிலையே ஏற்படும்.<br /><br />தமிழர்களின் பொதுமறையாக உள்ள திருக்குறள் மட்டுமே - காதல் வாழ்க்கையின் மகத்துவத்தை அக்குவேறு, ஆணி வேறாக அழகுடன் பிரித்து இன்பத்துப் பாலில் கூறியிருக்கிறது.<br /><br />திருக்குறளில், காதல் துவங்கும்போது காதலன் காதலியின் காதல் முன்னுரையைப் பற்றி இவ்விதமாக திருவள்ளுவர் கூறுகிறார்..! அதாவது,<br />யான்நோக்கும் காலை நிலம் நோக்கும் நோக்காக்கால்<br />தான் நோக்கி மெல்ல நகும். (குறள் - 1094) என்கிறார்.<br /><br />அதாவது ... அவளை நான் பார்க்கும்போது, அவள் என்னை பார்க்கமாட்டாள் - ஆனால்<br />அவளை நான் பார்க்காத போது, அவள் என்னைப் பார்த்து சிரித்துக் கொள்வாள் என்று<br />ஒரு பெண்ணுக்குள் ஒளிந்து கிடக்கும் காதல் தன்மையை அப்படியே படம் பிடித்துக் காண்பிக்கிறார்....<br /><br />இப்படி வள்ளுவமே தமிழர் வாழ்க்கை காதலோடு பிறந்து, காதலோடு வளர்ந்து, காதலோடு சிறப்பது என்று கூறுகின்ற வகையில் தமிழரின் காதல் வாழ்க்கை பண்பாட்டிற்கு எந்தக் கொம்பனும் தடைபோட முடியாது. இதைத் தடுக்க எந்த இந்துத்துவா சக்தியும் பாம்பு பிடித்த குரங்காய்க் குதித்தாலும், கூச்சலிட்டாலும் தந்தை பெரியார் பிறந்த சுயமரியாதை மண்ணில் காதலை வேர் அறுக்கும் வேலையில் இந்துத்துவா சக்தியால் வெற்றி கொள்ளமுடியாது. மாறாக இந்துத்துவா சக்திகள் மூக்கு அறுபட்டுத்தான் ஓடும்...!<br /><br />இன்றைய காதலர் தினத்தில் காதலர்கள் பரிசுப் பொருள்களை ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொண்டாலும். - இருபத்து நான்கு மணிநேரமும் நாம் உயிர் வாழத்துடிக்கும் இதயத்தைக் காதலிப்பவருக்கு பரிசாகக் கொடுப்போம்...! காதலிக்கும் முன் யோசிப்போம்..! காதலை நேசிப்போம்! காதலராக வசிப்போம்! காதல் அன்பை சுவாசிப்போம்..! என்று கூறி...! காதலர்கள் எதிர்நோக்கும் காதல் வெற்றியடைய காதலர்கள் முழுத் தகுதியைப் பெற்றுக் கொள்ள வழி வகுப்போம்...! என்ற சூளுரையோடு முற்போக்கு சக்திகள்... காதல் இதயங்களை இணைத்து மானுட வாழ்க்கையை அழகுபடுத்த வேண்டும்... காதலில் தோற்றுக் காயப்பட்ட மனத்திற்கு காயம் ஆற களிம்பு பூசும் அன்பைப் பொழிய வேண்டும்... என்கிற தீராத நினைவுகளோடு, எண்ணங்களோடு,<br />நன்றி...!! நன்றி...!! வணக்கம் வளர்க காதல்...!! வாழ்க காதலர் தினம்!<br /><br />- ஏ.ஜூலியாஸ், சட்டக் கல்லூரி மாணவர், ஈரோடு.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.com