tag:blogger.com,1999:blog-1474608369333206681.post1752410945003782699..comments2023-10-29T13:02:52.613+05:30Comments on தமிழ் ஓவியா: பார்ப்பான் மாத்திரம் எப்படி இவ்வளவு பெரிய பதவிக்கு வர முடிந்தது?தமிழ் ஓவியாhttp://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comBlogger73125tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-21063192856401569982013-09-21T18:13:29.710+05:302013-09-21T18:13:29.710+05:30
மோடியின் அரசியல் தந்திரம் மதவாதம்தான் மத்திய அமைச...<br />மோடியின் அரசியல் தந்திரம் மதவாதம்தான் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் பேட்டி<br /><br /><br />புதுடில்லி, செப். 21-மோடியின் அரசியல் தந்திரமே மதவாதம்தான் என மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூறி யுள்ளார்.<br /><br />பா.ஜ பிரதமர் வேட் பாளராக நரேந்திர மோடி நியமிக்கப் பட்டது குறித்து, மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் டில்லியில் நேற்று அளித்த பேட்டி:<br /><br />நரேந்திர மோடி ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் முகமூடி. அவர் பா.ஜ சார் பில் முன்னிறுத்தப்பட்டு உள்ளார். அதனால், அடுத்த மக்களவை தேர்தலில் காங்கிரசுக்கும், சங் பரிவார் அமைப்புக்கும் இடையே முதல் முறையாக நேரடி போட்டி நடைபெற உள்ளது. அடுத்த மக்களவை தேர்தலை பிரதமர் பதவிக்கான போட்டியாக மாற்ற பா.ஜ விரும்புகிறது. இந்த போட்டியில் காங்கிரஸ் ஈடுபடாது. யாரையும் காங்கிரஸ் முன் னிறுத்தாது என நினைக் கிறேன்.<br /><br />மோடியின் அரசியல் தந்திரமே மதவாதம்தான். அதனால்தான் அவரது வலதுகரமாக திகழும் அமித் ஷாவை உத்தரப் பிரதேசத்தின் பாஜ பொறுப்பாளராக நியமித் துள்ளார். அவர் தனது விளையாட் டை நடத்திவிட்டார். முசாபர் நகரில் மதக் கலவரத்தை தூண்டியது பா.ஜ. தான். மோடி முன்னிறுத்தப் பட்டதன் மூலம், இதுபோன்ற பல கலவரங்கள் வட மாநிலங்களில் நடக்கும். முதல் டிரெய்லர் முசாபர் நகரில் நடந் துள்ளது. இதுபோல் பல சம்பவங்கள் நடக்கும். மதவாதம் படிப்படியாக தூண்டப்படும் என அஞ்சுகிறேன். இந்திய அரசியலில் முக்கிய அங்கமாக இருக்கும் உ.பி., பிகார் போன்ற இடங் களில் மதக் கலவரம் தூண்டப்படும் என தெரிகிறது. இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் கூறினார்.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-76564209739287677212013-09-21T18:12:52.143+05:302013-09-21T18:12:52.143+05:30
மோடி பிரதமரானால் மக்கள் அச்சத்துடன் வாழவேண்டும் ஞ...<br />மோடி பிரதமரானால் மக்கள் அச்சத்துடன் வாழவேண்டும் ஞானபீட விருது பெற்ற எழுத்தாளர் அனந்தமூர்த்தி<br /><br /><br />பெங்களூரு, செப்.21- குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பிரதமரானால் பொதுமக்கள் அச்சத்துடன் வாழ வேண்டும் என்று, ஞானபீட விருது பெற்ற கன்னட எழுத்தாளர் யூ.ஆர்.அனந்த மூர்த்தி தெரிவித்தார்.<br /><br />பெங்களூருவில் கடந்த 15-ஆம் தேதி நடை பெற்ற கன்னட எழுத்தாளர் பரகூர் ராமசந்திரப் பாவின் நூல் வெளியீட்டு விழாவில் பேசிய எழுத்தாளர் யூ.ஆர்.அனந்தமூர்த்தி, நரேந்திர மோடி பிரமரானால் இந்தியாவில் வாழமாட்டேன் என்று குறிப்பிட்டிருந்தார்.<br /><br />அவரது கருத்துக்கு பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.<br /><br />யூ.ஆர்.அனந்தமூர்த்தி இப்போதே நாட்டை விட்டு வெளியேறட்டும் என்று பாஜக எம்.பி. அனந்த்குமார் ஹெக்டே போன்றோர் விமர் சித்தனர். கன்னட அறிஞர் சிதானந்த மூர்த்தியும் அவரது கருத்துக்கு ஆட்சேபம் தெரிவித்தார்.<br /><br />இந்த நிலையில், அனந்தமூர்த்தியின் கருத்துக்கு முற்போக்கு எழுத்தாளர்கள் பரகூர் ராம சந்திரப்பா, கே.மருளுசித்தப்பா உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்தனர்.<br /><br />இதனிடையில், மோடி குறித்து, தான் கூறியிருந்த விமர்சனம் தொடர்பாக பெங்களூருவில் வியாழக் கிழமை எழுத்தாளர் அனந்த்மூர்த்தி கூறியது:<br /><br />நரேந்திர மோடி பிரதமரானால், பொதுமக்க ளிடையே அச்ச உணர்வை ஏற்படுத்துவார். மக்கள் அச்சத்துடன் வாழ வேண்டும்.<br /><br />முன்னாள் பிரதமர்கள் ஜவகர்லால் நேரு, நரசிம்ம ராவ் ஆகியோர் ஆட்சி செய்த போது, பிரதமர் பதவிக்கு கவுரவம் கிடைத்தது. ஆனால், நரேந்திர மோடி பிரதமரானால், அந்தப் பதவியின் கவுரவம் களங்கப்பட்டுவிடும்.<br />பிரதமர் பதவிக்கான மரியாதை நரேந்திர மோடியால் சீர்கெடும். பாஜக தலைவர்கள் என்னைக் கடுமையாக விமர்சிக்கிறார்கள். மோடி ஆட்சிக்கு வராதபோதே, பாஜகவினர் இப்படி விமர்சிக்கிறார்கள் என்றால், அவர் ஆட்சிக்கு வந்தால், நிலைமை என்ன கதியாகும்?<br /><br />கடந்த காலத்தில் நேரு, இந்திரா காந்தியை விமர்சித்தபோதுகூட இந்தளவுக்கு என்னை யாரும் தாக்கிப் பேசவில்லை. ஆர்.எஸ்.எஸ்.அமைப்பின் இந்து மத தத்துவத்தை நான் ஏற்காததால், பாஜகவினர் எப்போதும் என்னை விமர்சிப்பார்கள். பாஜக ஒரு பாசிச கட்சி. இந்து மதத்தின் உண்மையான கோட்பாடுகளை அந்தக் கட்சியினர் சரிவரப் புரிந்து கொள்ளவில்லை.<br /><br />அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு மக்கள் விரோத ஆட்சி அல்ல. ஆனால், ஊழல் புரிந்துள்ள தால், அந்தக் கூட்டணி தண்டிக்கப்பட வேண்டும். இதற்காக நரேந்திர மோடியை தேர்ந்தெடுப்பது மட்டுமே தீர்வல்ல என்றார் அவர்.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-22849219735709969372013-09-21T18:12:12.329+05:302013-09-21T18:12:12.329+05:30தொழிலாளர்
சென்னைப் பார்ப்பனத் தலைவர்கள் தாங்கள் த...தொழிலாளர்<br /><br />சென்னைப் பார்ப்பனத் தலைவர்கள் தாங்கள் தான் தொழிலாளர்கள் விஷயத்தில் அதிக அக்கறையுள்ளவர்கள் என்றும், தொழிலாளர்களுக்கு வேண்டிய சகல சவுகரியங் களும் தங்களால் தான் செய்யக் கூடுமென்றும், தொழிலாளர்களுக்கு வேண்டிய பிரதிநிதித்துவங் களெல் லாம் தங்களால் தான் வாங்கிக் கொடுக்கக் கூடும் என்றும் சொல்லி, இதுகால பரியந்தம் தொழிலாளர்களை ஏமாற்றி அவர்களுடைய ஓட்டுகளைப் பெற்று பதவி பெற்று வந்தது பலருக்கும் தெரிந்த விஷயமே. சென்ற வருஷத்திய முனிசிபல் தேர்தல்களிலும், சட்டசபைத் தேர்தல்களிலும், அதற்கு முன் நடந்த தேர்தல்களிலும் இப்பார்ப் பனர்களின் சூழ்ச்சிகளை அறியாமல் ஏமாந்து, தொழிலாளர்கள் தங்களுடைய ஓட்டுகளையெல்லாம் பார்ப்பன அபேட்ச கர்களுக்கே கொடுத்து பார்ப்பனரல்லாதாரைத் தோற் கடிக்கச் செய்ததும் பலருக்கும் தெரிந்த விஷயமே. இப்படியிருக்க, இப்போது மேற்படி தொழிலாளச் சகோதரர் களில் தாங்களுக்கு தாங்களே பிரதிநிதியாய் இருக்கலா மெனக்கருதி, வரப்போகும் சென்னை முனிசிபல் தேர் தலுக்கு தங்கள் சகோதரர்களிலேயே இரண்டொருவரை அபேட்சகர்களாய் நிறுத்தத் தீர்மானித்திருக்கிறார்கள். இதை அறிந்த மேற்படி பார்ப்பனர்கள் தொழிலா ளர்களை ஏமாற்ற புதிதாய் ஒரு வழி கண்டு பிடித் திருக்கிறார்கள். அது என்னவென்றால், தொழிலாளர் களுக்கு பிரதிநிதித்துவம் வேண்டுமானால் அவர்கள் காங்கிரஸ் சுயராஜ்யக் கட்சியில் சேர வேண்டுமாம். இல்லாவிட்டால் அவர்கள் நிற்கக் கூடாதாம். இது எவ்வளவு வஞ்சகமானதென்பதை வாசகர் யோசிக்க வேண்டும். என்னவெனில், காங்கிரஸ் சுயராஜ்யக் கட்சியில், தொழி லாளர்கள் சேருவதானால் தொழிலாளிகளின் முதலாளி மார்கள் அதனை எப்படியாவது கெடுத்துவிடக்கூடும். அதனால் தொழிலாளிகள் காங்கிரசில் சேர முடியாமல் போய் விடலாம். இந்த சாக்கை வைத்துக் கொண்டு தொழி லாளர்களை சுலபமாகத் தள்ளிவிடலாம் என்பதுதான். தொழிலாளிகளுடைய ஓட்டுப் பெறும்போது மாத்திரம் யாரையாவது பிடித்து அவர்களை ஏமாற்றி அவர்களுடைய ஓட்டுகளைப் பெற்று விடலாம் என்கிற தந்திரத்தின் பேரில் தான் பார்ப்பனர்களின் தொழிலாளர் அனுதாபம் ஏற்கிறது. நமது தொழிலாள நண்பர்களோ இந்த சூழ்ச்சி களை அறியாமல் எடுப்பார் கைக் குழந்தைகளாயிருக் கின்றார்கள் இவைகளை எல்லாவற்றையும் அறிந்தேதான் நாம் தொழிலாளிகள் அரசியல் சம்பந்தமான எந்தக் கட்சியிலும் சேரக்கூடாது என்றும், அவர்கள் தங்கள் கால்களிலேயே நிற்கக்கூடிய சக்தியைப் பெற வேண்டும் என்றும் அது கொஞ்சகாலம் தாமதமானாலும் குற்றமில்லை என்றும், பேசியும், எழுதியும் வந்தோம். நாம் இப்படிப் பேசி, எழுதி வந்ததைப் பற்றி பல தொழிலாளர்கள் தலைவர்களுக்கும் தம் மீது மனஸ்தாப மேற்பட்டது நமக்கு தெரியும். ஈரோட்டில் கூடிய தொழிலாளர் மாநாட்டு உபசரணைத் தலைவர் முறையிலும் இதையே சொன்னோம். மித்திரன் அதைப்பற்றி மிகுதியும் கோபம் கொண்டது. ஆனபோதிலும் இன்னமும் நாம் அதே கொள்கையுடன் தான் இருக்கிறோம். இப்போது சென்னை காங்கிரஸ் கமிட்டியில் முனிசிபல் தேர்தலுக்கு அபேட் சகர்கள் நிறுத்தும் விஷயத்தில் ஸ்ரீமான்கள் சிங்காரவேலு செட்டி யாருக்கும், சத்தியமூர்த்தி, ரங்கசாமி அய்யங்கார், சீனிவாசய் யங்கார் முதலியவர்களுக்கும் நடந்த சம்பாஷணை, அடிதடி சண்டை முதலியவைகள் நடந்திருப்பதையும், தொழிலாளர் கூட்டத்தில் ஸ்ரீமான்கள் சிவராவ், கல்யாண சுந்தரமுதலியார் முதலியவர்கள் பேசிய பேச்சுக்களிலிருந்தும் பார்ப்பனத் தந்திரங்கள் நன்றாக விளங்குகின்றன. இனியாவது, நமது தொழிலாள சகோதரர்கள் இவ்வரசியல் புரட்டுகளின் மாய் கையில் இருந்து விலகுவார்களா என்பது தான் நமது கோரிக்கை. அப்படி அவர்கள் விலகித் தனிப்பட்ட ஹோதாவில் தொழிலாளி என்கிற முறையில் தேர்தலுக்கு நிற்பார் களானால், நாமும் நம்மாலானதைச் செய்யத் தயாராயிருக் கிறோம் என்றும், எந்தக்கட்சி எதிர்த்தாலும் அதை ஒரு கை பார்த்துவிடலாம் என்றும், நமது தொழிலாளர் சகோதரர் களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.<br />- குடிஅரசு - தலையங்கம் - 24.04.1927தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-70688723929752861302013-09-21T18:11:47.119+05:302013-09-21T18:11:47.119+05:30பார்ப்பன ஏமாற்றலும், மடாதிபதிகளின் மடமையும்
நம் ந...பார்ப்பன ஏமாற்றலும், மடாதிபதிகளின் மடமையும்<br /><br />நம் நாட்டு மடாதிபதிகளுக்கு வருஷம் 1000, 10000, 100000, 1000000 ரூபாய்கள் என்பதாக வருஷ வருமானம் வரும்படியான சொத்துக்களை நமது முன்னோர்கள் இம்மக்களின் அன்புக்கும் ஒழுக்கத்திற்கும் ஆத்மார்த்த விஷயங்களுக்குமாக உபயோகப்படவேண்டும் என்பதாகக் கருதி பொது நலத்திற்கு விட்டு அதை நிர்வகிக்க அக் காலத்தில் உண்மையாயும், யோக்கியமாயும் நடந்து வந்த சந்நியாசிகள் வசம் இப்பொறுப்பையும் விட்டு வந்தார்கள். ஆனால் இப்போது இப்பெரும் பொறுப்பேற்ற பொதுநல ஸ்தாபனங்கள் எந்நிலையில் இருக்கிறது என்பதும், இதை யார் அனுபவிக்கிறார்கள்? என்பதும், இதற்கு நிர்வாக கர்த்தாக் களாகிய சந்நியாசிகள் என்போரின் யோக்கியதை எப்படி இருக்கிறது? என்பதும் நாம் சொல்ல வேண்டியதில்லை. இம்மாதிரியான மடங்களையும் தேவஸ்தானங்களையும் தர்மத்திற்காகவும் பொதுநலத் திற்காகவும் அக்காலத்தில் சொத்துக்கள் விட்ட தர்மவான்களின் இஷ்டப்படி யோக்கியமாய் நடந்து வருகிறதா என்பதை கவனிக்க இந்துமத பரிபாலன சட்டம் என்பதாக ஒரு சட்டம் இயற்றியதற்கு இம்மடாதிபதிகள் தங்கள் சுயநலத்திற்கும் போக போக்கியத்திற்கும் குறைவு வந்துவிடுமென்பதாகக் கருதி பார்ப்பனர்களுக்கு வக்கீல் பீசாகவும் லஞ்சமாகவும் பிச்சையாகவும் அழுத பணங்கள் கணக்குவழக்கில் அடங்காது என்றே சொல்லலாம். இவ்வளவு பணங்களைத் தொலைத்தும் தாங்கள் வெற்றிபெறவில்லையே என்கிற கவலையுடன் இன்னமும் ஏதாவது வழியுண்டா என்று பார்ப்பதற்காக இரவும் பகலும் பார்ப்பனர்களின் பாதத்தில் விழுந்து அவர்கள் சொல்லுகிறபடியெல்லாம் தோப்புக் கர்ணம் போட்டுக்கொண்டு வருகிறார்கள். சமீபத்தில் ஸ்ரீமான் டி ரெங்காச்சாரியார் என்கிற ஒரு பார்ப்பனர் 30லட்சம் ரூபாயில் ஒரு பெரிய தர்மம் செய்யப் போவதாகவும் அதாவது வட நாட்டில் ஒரு பெரிய சமஸ்கிருத பள்ளிக்கூடமும் கோவிலும் கட்டப்போவ தாகவும் அதற்குப் பணம் வேண்டு மென்றும் இம்மட அதிபதிகளிடமிருந்து பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டு திருவாவடுதுறை பண்டார சன்னதி அவர்களைக் கேட்டதற்கு அவர் வருஷம் 6000 ரூபாய் வீதம் பத்து வருஷத்திற்குக் கொடுப்பதாய் ஒப்புக் கொண்டாராம். இவரைப் பார்த்து இனியும் மற்ற மட அதிபதிகளும் கொடுப்பார்கள். பிறகு ராஜாக்கள், ஜமீன்தார்கள், மிராசுதார்களும் கொடுப்பார்கள். ஏதாவது ஒரு வழியில் பார்ப்பானுக்குக் கட்டுப்படாத சுவாமியோ, பண்டார சன்னதியோ, ராஜாவோ, ஜமீன்தாரோ, மிராசுதாரோ, நாட்டுக்கோட்டையாரோ மற்ற ஏதாவது செல்வமுள்ள வர்களோ நமது நாட்டில் மிகமிக அருமையானதால் இந்த பணம்கொடுத்துதான் தீரவேண்டி வரும். ஆனால், இப்பணம் எதற்கு உபயோகப் படப் போகிறது? டேராடூனில் சமஸ்கிருத பள்ளிக்கூடமும், கோவிலும் கட்டத்தான் உபயோகப்படும். ஆனால், தமிழ்ப் பள்ளிக்கூடம் கட்டுவதற்காகவும் என்று வாயில் சொல்லி ஏமாற்றலாம். ஆனாலும் அங்கு போய் படிப்பதற்கு ஆள் எங்கே கிடைக்கும்? ஆதலால் அங்கும் 500, 600 பார்ப்பனப் பிள்ளைகள் பிழைக்கவும் கோவில் பிரவேசத்தில் வித்தியாசமில்லாத ஊரில்கூட கோவில்கட்டி வித்தியாசங்களை உண்டு பண்ணி இந்தியா முழுவதிலும் சூத்திரர்கள் உள்ளே போகக் கூடாது என்பதாக ஒரு நிரந்தர இழிவை உலகமெலாம் நிலைக்கச் செய்யவும்தான் ஏற்படப்போகிறது. இச்சூழ்ச்சி தெரிந்தும் நமது மட அதிபதிகள் நமது பணத்தை அள்ளிக் கொடுத்து பார்ப்பனர்களுக்கு நல்ல பிள்ளைகள் ஆகிறார்கள் என்றால் நமது கதி என்னே! என்னே!! நமது மடாதிபதிகளின் மடமை என்னே! என்னே!!<br /><br />- குடிஅரசு - துணைத்தலையங்கம் - 27.03.1927தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-8730496667715330292013-09-21T18:11:22.119+05:302013-09-21T18:11:22.119+05:30சத்தியாக்கிரகம்
ஜாக்கிரதை! ஜாக்கிரதை!! ஜாக்கிரதை!!...சத்தியாக்கிரகம்<br />ஜாக்கிரதை! ஜாக்கிரதை!! ஜாக்கிரதை!!!<br /><br />நமது நாட்டில் இப்போது சில தொண்டர்களுக்கு வயிற்றுப் பாட்டிற்கு வேறுமார்க்கமில்லாததால் ஊராரை ஏமாற்றவேண்டி சத்தியாக்கிரகம், சத்தியாக்கிரகம் என்று சொல்லி அவர்கள் வயிறு வளர்க்கப் பார்க்கிறார்கள். சத்தியாக்கிரகம் என்பதை விளையாட்டுப் பிள்ளைகள் மண்ணுக் கொழிக்கும் வேலை போல நினைத்துக்கொண்டு அதன் யோக்கியதையைக் கெடுக்கும் விஷயத்தில் நம் நாட்டுத் தொண்டர் என்போர்களில் சிலருக்கு வெகு துணிவு ஏற்பட்டுவிட்டது. சத்தியாக்கிரகம் செய்யும் முன் சத்தியாக்கிரகம் செய்ய வேண்டிய அவசியம் இன்னது என்பதையும் வெளிப்படுத்தி அதற்கு நாட்டினரின் சம்மதம் பெற்று சத்தியாக்கிரக விஷயத்திற்கு செல்வாக்கு உண்டாக்கி அதற்குத் தக்க யோக்கியதை உள்ளவர்களால் தொடங்கப்பட வேண்டிய காரியம். சத்தியாக்கிரகம் செய்வது பெட்ரோல் எண்ணெய்க்குப் பக்கத்தில் நெருப்பு புழங்கப் படுவதில் எவ்வளவு ஜாக்கிரதையாய் இருக்க வேண்டுமோ, அதுபோல சத்தியாக்கிரகமென்னும் நெருப்பை உபயோகிக்க வேண்டியது. தவறினால் தோல்வி ஏற்படுவது மாத்திரம் அல்லாமல் குறிப்பிட்ட லட்சியத்திற்கு அழிவு ஏற்படும் என்றேசொல்லுவோம். சத்தியாக்கிரகம் செய்யத் தகுந்தவர்கள் வயிற்றுச் சோற்று வீரர்கள் அல்ல. மற்றவர்களை வைவதற்காக அய்யங்காரிடம் பணம் வாங்கி வயிறுவளர்த்துக் கொண்டிருக்கும் வீரர்களுக்கு உரியதும் அல்ல என்பதை மக்கள் ஜாக்கிரதையாய் உணர வேண்டும். நாகபுரி சத்யாக்கிரகத்திற்கு மகாத்மாவின் ஆசி இல்லை என்று தெரிந்த உடன் ஸ்ரீமான் அவாரிக்கு 4 வருஷம் கடுங்காவல் தண்டனை ஏற்பட்டுவிட்டது. தமிழ்நாட்டு சத்தியாக்கிரக வீரர்களில் சிலரின் யோக்கியதை நமக்குத் தெரிந்ததே. அவர்கள் ஜெயிலில் நடந்த கொண்ட மாதிரியும், நாகபுரியில் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு வந்த மாதிரியும் இவைகளின் மூலம் தமிழ்நாட்டிற்கு ஏற்பட்ட அவமானமும் நாம் நேரில் அறிந்ததே. ஆதலால், வாசகர்களே போலி ஆசாமிகள் வேறுவழியில் சுய நலத்திற்கும் பணம் வசூல் செய்வதற்கும் விளம்பரம் செய்து கொள்ளுவதற்கும் கூலிக்கு மாரடிப் பதற்கும் ஆசைப்படுகிறவர்களான ஆசாமிகள் விஷயத்தில்! ஜாக்கிரதை! ஜாக்கிரதை!! ஜாக்கிரதை!!!<br />- குடிஅரசு - கட்டுரை - 12.06.1927தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-18016602549428339592013-09-21T18:09:50.980+05:302013-09-21T18:09:50.980+05:30எடுத்துக்காட்டான மாமனிதர் ஆசிரியர் இராமசாமி
ஓய்வு...எடுத்துக்காட்டான மாமனிதர் ஆசிரியர் இராமசாமி<br /><br />ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் - பெரியார் பெருந்தொண்டர் மானமிகு இராமசாமி அவர்கள்.<br /><br />தமிழர் தலைவர் அவர்களை வல்லத்தில் சந்தித்து இயக்கத்தின் கல்விப் பணிக்காக ரூபாய் 30 இலட்சத்தை யாரும் எதிர்பார்க்காத நிலையில் தமிழர் தலைவரிடம் அளித்து இன்ப அதிர்ச் சியை ஏற்படுத்தினார்.<br /><br />திருச்சி பெரியார் மாளிகையில் நடைபெற்ற (19.9.2013) திராவிடர் கழக மண்டல தலைவர்கள், தொண்டர்கள் செயலாளர்கள் கூட்டத்தில் ஆசிரியர் இராமசாமி அவர்களை மேடைக்கு அழைத்து, சால்வை அணிவித்துப் பாராட்டினார். அப்பொழுது கழகத் தலைவர் அவர்கள் கூறியதாவது:<br /><br />ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் இராமசாமி அவர்கள் 50 ஆண்டு காலமாக விடுதலை வாசகர் ஆவார். கண்ணுக்குத் தெரிந்த கருஞ்சட்டை அணிந்த இயக்கத் தோழர்கள் ஒரு பக்கம்; கண்ணுக்குத் தெரியாத கருஞ்சட்டை அணியாத ஆசிரியர் இராமசாமி போன்ற எண்ணற்ற பெரியார் தொண்டர்கள் நம் இயக்கத்தில் உண்டு - கண்ணுக்குத் தெரியா விட்டாலும், இயக்கத்திற்கு இத்தகையவர்கள் அஸ்திவாரம் போன்றவர்கள்.<br /><br />பெரியார் மருத்துவ நிதி, விடுதலை நிதி என்று தமது பங்களிப்பை அடிக்கடி அளித்துவரும் இந்தப் பெரு மகனார் இப்பொழுது ரூபாய் 30 இலட்சத்தை நன்கொடையாக வழங்கியுள்ளார்.<br /><br />பெரியார் கல்வி நிறுவனங்களைச் சுற்றிப் பார்த்து, அவற்றின் வளர்ச்சியை நேரில் கண்டு மகிழ்ச்சி அடைந்து, நம் நிதி பெரியார் பெயரில் அமைந்த நிறுவனங்களுக்குப் பயன்பட வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் இந்த நிதியை அளிக்க முன் வந்துள்ளார். செயங்கொண்டத்தில் நடைபெற்று வரும் பெரியார் மெட்ரிக்குலேசன் மேல் நிலைப் பள்ளிக்குப் புதிய கட்டடம் கட்டப்பட்டு அதற்கு ஆசிரியர் இராமசாமி அவர்களின் பெயர் சூட்டப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். (பலத்த கைதட்டல்) என்றார் கழகத் தலைவர்.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-22474249324552077052013-09-21T18:08:06.853+05:302013-09-21T18:08:06.853+05:30
வழிகாட்டும் நெறி - வாழ்வியல் சிந்தனை
தமிழர் தலை...<br />வழிகாட்டும் நெறி - வாழ்வியல் சிந்தனை<br /><br /><br />தமிழர் தலைவர் ஆசிரியர் அவர் களின் வாழ்வியல் சிந்தனைகள் (ஆகஸ்ட் 20-22) ஆகிய தேதிகளில் மூன்று நாட்கள் வெளிவந்து பிரச்சினைகளை வரவேற்கக் கற்றுக்கொள்வோம் என்ற கட்டுரை மிகவும் ஆக்கப்பூர்வமாக இன் றையக் கால கட்டத்திற்குத் தேவையான அருமருந்தாக இருந்தது.<br /><br />முதிர்ச்சியில்லாத நிலை தான் பிரச்சினைகளைக் கண்டு அஞ்சுவது, எதிர் கொள்ள பயப்படுவதும் ஆன மன நிலை. மனிதர்களிடம் உள்ள பகுத்தறிவை விட, சிறந்த போர் ஆயுதம் வேறு உண்டா? ஆழ்ந்து சிந்திக்கக்கூடிய அற்புத வரிகள்<br /><br />இன்றைய கால கட்டத்திலே அற்பக் காரணங்களுக்காக இளைஞர்கள் தேர்வில் தோல்வி, காதல் தோல்வி ஆகியவற்றிற்கு தற்கொலை முடிவு எடுப்பது எத்துணை அறியாமை - இதற் கெல்லாம் இக்கட்டுரை அரிய தன்னம் பிக்கை டானிக்! உடலியல், உளவியல் ரீதியாக ஆசிரியர் அவர்கள் பல்வேறு கருத்துக்களை சிறப்பாக குறிப்பிட்டுள் ளார். பிரச்சினைகளால் திசை தெரியாமல் தவிப்போருக்கு கலங்கரை விளக்கமாக இக்கட்டுரை வழிகாட்டும். சிறிய புத்தக மாக வெளியிட்டால் மாணவர்களும், இளைஞர்களும், மற்றவர்களும் படித்து தெளிவு பெறவேண்டிய வழிகாட்டும் நெறி - வாழ்வியல் சிந்தனை<br />- தி.க.பாலு (மாவட்ட தலைவர், பகுத்தறிவாளர் கழகம், திண்டுக்கல்)<br /><br />டாக்டர்கள் கவனத்திற்கு<br /><br />தொடர்ந்து, வேண்டாத பழக்கங்களை மக்கள் ஏற்றுக் கொண்டு மது மயக்கத் திற்குள் விழுந்துவிட நோயாளிகளாகி விட்டனர். அரசு மருத்துவமனைக்குத் தானே, ஏழை முதிய நோயாளிகள் செல்ல வேண்டிவரும். அங்கே அரசு ஊழியர் களை விட, மருத்துவர்களே நோயாளி களிடம் அலட்சியமாக கோபத்துடன் பேசுகின்றனர். அமைதி இழந்து, தன் மானமுள்ள ஆண் - பெண் வயதான நோயாளிகள் கோபங்கொண்டுவிடும் சூழலில் பாதிப்பு நோயாளிகளுக்குத் தான். மருத்துவர்கள் மனிதத்தன்மை மனிதாபிமானத்துடன் நடந்து கொண் டால் என்ன? அவ்வாறு நடந்து கொள் ளாததால், புற்றுநோய் போன்ற கொடிய நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் மருத் துவர்களால் மேலும் பாதிக்கப்படுகின்ற னர். தமிழ்நாட்டில் மட்டுமல்ல - புதுச்சேரி உட்பட ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி ஏனைய கட்சிகள் ஏழை வயதான நோயாளிகள் நல்வாழ்விற்கு குரல் கொடுக்க முன்வர வேண்டும். ஒரு நாளாவது மருத்துவ மனைகள் முன் மக்களின் ஆரவாரம், மனிதச்சங்கிலிப் போராட்டம் என, நடத்தி அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். இது அரசியல் அல்ல. தொண்டு, தந்தை பெரியார் வலியுறுத்திய மானிடப்பற்று அதைக் கடைப்பிடிப்போம்!... உருப்படுவோம்!...<br /><br />- எம்.எஸ்.மணி (முதுகுடிமக்கள் பாதுகாப்பு சங்கம்)தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-63312783916490597242013-09-21T18:07:31.435+05:302013-09-21T18:07:31.435+05:30
இந்தியத் திரைப்பட நூற்றாண்டு விழா
இந்தியத் திரை...<br />இந்தியத் திரைப்பட நூற்றாண்டு விழா<br /><br /><br />இந்தியத் திரைப்பட நூற்றாண்டு விழா சென்னையில் இன்று முதல் நான்கு நாட்கள் நடைபெறுகின்றது. இதற்காக தமிழ்நாடு அரசு சார்பில் ரூபாய் பத்து கோடி தாரை வார்க்கப் பட்டுள்ளது.<br /><br />இந்த விழா அவ்வளவு அவசியம்தானா? நாட்டு மக்களுக்கு இதனால் ஒரு கடுகளவு பயனாவது உண்டா? அப்படியே நடந்தாலும் 10 கோடி ரூபாயைத் தூக்கிக் கொடுக்க வேண்டுமா?<br /><br />முதல் அமைச்சர் முதல் குடியரசுத் தலைவர் வரை பங்கு கொள்வதன் மூலம் இந்த விழா தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது என்று காட்டுவதற்குப் பயன்படுமே தவிர பொது மக்களுக்கு இதனால் எந்தவிதப் பயனும் இருக்கப் போவதில்லை.<br /><br />கலை நிகழ்ச்சிகள் நடக்கலாம்; விளம்பரம் பெற்ற கலைஞர்கள் பங்கு கொள்ளலாம். அவற்றைக் கூட பொது மக்கள் சென்று நேரில் பார்க்க முடியுமா என்றால் அதுவும் நடக்காது. (ஒரு வகையில் பொது மக்கள் இளைஞர்கள் சென்று பார்க்காதது கூட நல்லது தான்!)<br /><br />நாட்டைப் பீடித்த அய்ந்து நோய்களுள் சினிமாவும் ஒன்று என்று அறிவுலக ஆசான் தந்தை பெரியார் கணித்தது ஆழமானது. மக்களின் பகுத்தறிவு வளர்ச்சிக்கோ, முற்போக்கு எண்ணங்களுக்கோ பயன்படுகின்ற வகையில் சினிமாக்கள் எடுக்கப்படுவதும் இல்லை.<br /><br />ஆபாசக் காட்சிகள், குத்தாட்டங்கள், சில சண்டைகள் என்று மசாலாவாக ஆக்கி மக்களின் பணத்தைத் திருடத்தான் பயன்படுகின்றது.<br /><br />இந்திய அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள 51-ஹ() பிரிவின்படி மக்கள் மத்தியில் விஞ்ஞான மனப்பான்மையை சீர்திருத்த உணர்வை உண்டாக்க வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் கடமை என்று கூறுகிறது.<br /><br />மாநில அரசோ, மத்திய அரசோ உதவுவதாக இருந்தால், அரசமைப்புச் சட்டத்தில் இந்தப் பிரிவில் கூறப்பட்டுள்ள கடமையைச் செய்யும் திரைப்படத்துக்குத்தான் உதவி செய்ய வேண்டும்.<br /><br />அதை விட்டு விட்டு திரைப்பட நூற்றாண்டு விழா என்பதற்காக மத்திய அரசோ, மாநில அரசோ மக்கள் பணத்தைக் கோடிக் கணக்கில் கொட்டுவது பொறுப்பான செயல்பாடல்ல.<br /><br />இன்றைக்குப் பெண்களுக்கு எதிராகப் பாலியல் வன்முறை என்பது அன்றாட மலிவான நிகழ்ச்சியாகி விட்டது; குழந்தைகள்கூட இந்தக் கொடுமையிலிருந்து தப்ப முடியவில்லை. இதற்கான காரணங்களில் சினிமாவுக்குத்தான் முதலிடம்.<br /><br />குடும்பத்தோடு உட்கார்ந்து கொண்டு தொலைக்காட்சியில் திரைப்படக் காட்சிகளைப் பார்ப்பதற்குக் கூச்சப்படும் நிலைதானே? இல்லை என்று மறுக்க முடியுமா?<br /><br />இன்றைக்குக் கறுப்புப் பணத்தைப்பற்றி நீட்டி முழக்குகிறார்கள். ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்து விட்டதாகப் புலம்புகிறார்கள். கருப்புப் பணச் சந்தையாக திரைப்படத் துறை இல்லை என்று விரலை நீட்டி அத்துறையைச் சார்ந்தவர்கள் கூறத் தயாரா?<br /><br />படத் தயாரிப்பாளர்களிடம் வாங்கும் தொகைக்கும், இரசீது கொடுக்கும் தொகைக்கும் வேறுபாடு இல்லை என்று தான் கூற முடியுமா?<br /><br />திரைப்பட விழாவிலும்கூட அரசியல் இருக்கிறது. திரைப்படத் துறையில் கலைஞர் அவர்களுக்கு இருக்கும் ஈடுபாடும், அனுபவமும் சாதாரணமானதல்ல. இந்த நூற்றாண்டு விழாவில் அவருக்கு முக்கிய இடம் அளிக்கப்பட்டு இருக்க வேண்டாமா? அரை நூற்றாண்டுக்கு மேலாக இத்துறையில் முத்திரை பொறித்தவர் கலைஞர் அல்லவா!<br /><br />அவர் முதலமைச்சராக இல்லை என்பதற்காக அவரது திரைப்படத்துறை ஈடுபாட்டை, குறைத்து மதிப்பிடத்தான் முடியுமா? அதையும் தாண்டி நமது கருத்து அரசுப் பணம் ரூபாய் பத்து கோடி, மக்கள் நலனுக்குப் பயன்பட்டு இருக்க வேண்டுமே தவிர இதுபோன்ற பயனற்றவைகளுக்குப் பயன்படக் கூடாதுதமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-90816326761250541742013-09-21T18:06:46.247+05:302013-09-21T18:06:46.247+05:30
மனிதத் தன்மை
மனிதன் நம்பிக்கை வழி நடப்பதை விட்ட...<br />மனிதத் தன்மை<br /><br /><br />மனிதன் நம்பிக்கை வழி நடப்பதை விட்டு விட்டு, அறிவின் வழிச் சென்று எதையும் சிந்திக்கவேண்டும். எதுவும் அறிவிற்கு நிற்கின்றதா என்று உரசிப் பார்க்கவேண்டும். அப்போது தான் மனிதன் காட்டுமிராண்டி நிலையில் இருந்து மனிதத் தன்மை அடைய முடியும். - (விடுதலை, 13.8.1961)தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-42736654577521277572013-09-21T18:04:54.790+05:302013-09-21T18:04:54.790+05:30
உலகமயமாகிறார் பெரியார்
உலகமயமாகிறார் பெரியார்
த...<br />உலகமயமாகிறார் பெரியார்<br /><br /><br />உலகமயமாகிறார் பெரியார்<br />தமிழர் தலைவர் எடுத்துக்காட்டு<br /><br />தோழர்களே, நமது தலைவர் தந்தை பெரி யார் அவர்களின் கொள் கைகள் தமிழ்நாட்டுக்கு மட்டும் சொந்தமல்ல - உலகிற்கே சொந்தம் - மண்டைச் சுரப்பை உலகுதொழும் என்று புரட்சிக் கவிஞர் பாடி யது வெற்றுச் சொற்கள் அல்ல - என்பதற்கு அடை யாளமாக உலகெங்கும் தந்தை பெரியார் அவர் களின் கொள்கைகள் பரவி வருகின்றன - வரவேற்கப்படுகின்றன.<br /><br />சிகாகோவை தலை மையிடமாகக் கொண்டு பெரியார் பன்னாட்டு மய்யமும் லண்டன், பிரான்சு, சிங்கப்பூர், மியான்மர், துபாய் முதலிய நாடுகளில் சிறப் பாகச் செயல்பட்டு வருகிறது. ஆப்பிரிக்கா வில் தோழர் எழிலரசன் முயற்சியால் பெரியார் ஆப்பிரிக்கன் ஃபவுண் டேசன் தொடங்கப் பட்டு, பணிகள் நடை பெற்று வருகின்றன.<br /><br />இவ்வாண்டு தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவான செப்டம்பர் 17-க்கு முன் 12ஆம் தேதி யன்று தந்தை பெரியார் விழாவில் கலந்து கொள்ள கொல்கத்தாவிலிருந்து அழைப்பு வந்தது.<br /><br />எங்களுக்கேகூட ஆச்சரியம்! கொல்கத்தா வில் ரிசர்வ் வங்கி அலு வலகத்துக்குள் நமது அய்யா விழாவைக் கொண்டாடினர். பெரிய பெரிய அதிகாரிகள் எல்லாம் அவ்விழாவில் கலந்து கொண்டனர். யூனியன் வங்கி பணியா ளர்கள் சார்பிலும் கொல்கத்தாவில் பெரி யார் விழா; அதேபோல பங்களாதேஷ் எல்லை என்று கருதக் கூடிய இடத்தில் இரயில்வே தொழிலாளர்கள் சார்பில் நடைபெற்ற தந்தை பெரியார் விழா வில் பங்கு கொண் டோம் - என்னுடன் பிற்படுத்தப்பட்ட பணி யாளர்கள் கூட்டமைப் பின் பொதுச் செயலா ளர் தோழர் கோ. கருணாநிதி அவர்களும் பங்கு கொண்டார்.<br /><br />கொல்கத்தாவில் டில்லியில் உள்ளது போல பெரியார் மய்யம் தொடங்க வேண்டும் என்று வேண்டுகோள் வைத்துள்ளனர்.<br /><br />ஒடிசாவில் ஒடியா மொழியில் ஊடிடடநஉவநன றுடிசமள டிக ஞநசலையச என்ற நமது இயக்கம் வெளி யிட்டுள்ள ஆங்கில நூலை ஒடியா மொழியில் வெளி யிட்டுள்ளனர். அதன் வெளியீட்டு விழாவுக்கு எனக்கு அழைப்புக் கொடுத்துள்ளனர். அக்டோபர் இறுதியில் செல்ல இருக்கிறேன்.<br /><br />தந்தை பெரியாரை உலகமயமாக்குவோம் என்று சொன்னது நிரூ பிக்கப்பட்டு வருகிறது. இப்பொழுது உலக மய மாகிக் கொண்டு இருக் கிறார்.<br /><br />- திராவிடர் கழக மண்டல தலைவர்கள், செயலாளர்கள் கூட்டத்தில் தமிழர் தலைவர் (திருச்சி - 19.9.2013)தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-43414628571297675542013-09-21T18:04:08.574+05:302013-09-21T18:04:08.574+05:30
காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் பெரியார் விழா வரவேற்...<br />காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் பெரியார் விழா வரவேற்கத் தகுந்தது<br /><br /><br />தந்தை பெரியார் அவர்களது 135ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவையொட்டி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் தந்தை பெரியார் அவர்களது படத்தை வைத்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஞானதேசிகன் அவர்கள் மாலையிட்டு பெரியார் பிறந்த நாள் விழாவைக் கொண்டாடியுள்ளார்!<br /><br />இதுதான் முதல் முறையாக இப்படி ஒரு நிகழ்ச்சி - (இதற்கு முன் பெரிய அளவில் மக்கள் தலைவர் அய்யா G.K. மூப்பனார் அவர்கள் முன்னின்று அனைத்திந்திய தலைவர்களை அழைத்து சென்னையில் மாபெரும் விழாவெடுத் தார்கள் என்பது ஒன்று) காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் நடைபெறவில்லை. இந்த முறையும், மரபும், அனைவராலும் போற்றிப் பின்பற்ற வேண்டிய பண்பாட்டு நிகழ்வு ஆகும்!<br /><br />தரந்தாழ்ந்த விமர்சனங்கள்<br /><br />தமிழ்நாட்டில் அண்மைக் காலமாக தலைவர்கள் பற்றிய விமர்சனங்கள் மிகவும் தரக் குறைவான தாகவும், தனி நபர் பற்றிய தாக்குதல்களாகவும் அமைந்து விட்டிருப்பது வேதனைக்கும் வெட்கத் திற்கும் உரியது. இப்போக்கு மாற வேண்டும். துக்க வீட்டில்கூட அரசியல் நுழைந்து, அதில்கூட விருப்பு, வெறுப்புகள் தலைவர்களைப் பொறுத்து காட்டப் படுவது தமிழ்நாட்டின் பாரம்பரிய பண்பாட்டுக்கு முற்றிலும் முரணானது - தவிர்க்கப்படல் வேண்டும்!<br /><br />கருத்து மோதல்கள், கொள்கை நிலை விமர்சனங்களாக மட்டுமே இருக்க வேண்டும். தனிப்பட்ட குடும்பப் பெண்கள் பற்றியும் விமர்சனங் களாகவும், இழிநிலைக்குச் செல்லப்படுவது கண்டனத்திற் குரியவைகளாக அனைவராலும் கருதப்பட வேண்டும். தடுக்க வேண்டும்.<br /><br />தலைவர்களுக்கு ஒரு வேண்டுகோள்!<br /><br />கட்சித் தொண்டர்கள், பேச்சாளர்கள், தலைவர்களைத் திருப்தி செய்து, மனதில் இடம் பிடிக்க மலிவான கீழ்த்தரமாகப் பேசுவதை தலைவர்கள் சுவைக்கக் கூடாது; மாறாக, கண்டிக்க வேண்டும்; ஒழுங்கு நடவடிக்கை எடுத்து, பொது வாழ்வைத் தூய்மைப்படுத்த அனைத்துத் தலைவர்களும் முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொள்ளுகிறோம்.<br /><br />தரந் தாழ்ந்த எழுத்தாளர்களை, ஏடு நடத்துவோர் ஊக்குவித்தால், அவ்வேடுகளைப் புறக்கணிப்பதே சரியான தண்டனை ஆகும். அதையும் செய்யலாம்; செய்ய வேண்டுகிறோம்.<br /><br />கி.வீரமணி<br />தலைவர்,<br />திராவிடர் கழகம்<br /><br /><br />சென்னை<br /><br />21.9.2013தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-86091404793322975232013-09-21T18:02:42.119+05:302013-09-21T18:02:42.119+05:30
ஆரியர்களுக்கு முன்னே யார் இருந்தார்கள்?
மேற்கு...<br />ஆரியர்களுக்கு முன்னே யார் இருந்தார்கள்?<br /><br /><br /><br />மேற்கு வங்காளத்தில் முர்ஷிதாபாத் ஜில்லாவில் ஊர் பெயர்கள், அவற்றில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களைப் பற்றிய ஆராய்ச்சி ஒன்று நடத்தப்பட்டது. ஊர் பெயர்களின் ஆராய்ச்சிகளில் சிதைந்த சரித்திரத்தை இணைக்க உதவும் ஆதாரங்கள் பல காணப்படும் என்பது உண்மை (on probing into place names, fossils on history will be found) ரா, குரி, குண்டா, ஜுலி, ஜோல் என்று முர்ஷிதாபாத் ஜில்லாவில் காணப்படும் பெயர்கள் _ நிச்சயமாக திராவிட ஆரம்பங்களைக் கொண்டவைகளாகும். ரார்ஹ் என்ற பகுதி _ ஆரியர்கள் அல்லாத இனத்தினரால் நிரம்பி இருந்தது என்பதற்கு இதுவே ஆதாரமாகும். இங்கே மற்றும் ஓர் உண்மையையும் குறிப்பிட வேண்டும். வங்காள மொழியில் ஒலி அமைப்பில் (Phonetics) எழுத்து அமைப்பில் (Morphology) வாக்கிய ஏற்பாடுகளில் (Syntax) வார்த்தை கோவைகளில் ((Vocabulary) சந்தேகத்திற்கிடமில்லாத திராவிட உறவுகளால் நிரம்பிக் கிடக்கின்றன. இவைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு ஊர் பெயர்களைப் பற்றிய பரவலான ஆராய்ச்சி செய்தால் _ வங்காளத்தின் பல பகுதிகளிலும் ஆரியர்கள் அல்லாத மக்கள் முக்கியமாக திராவிடர்கள் நிரம்பி இருந்தார்கள் என்பது நிச்சயம் தெரியவரும்.<br /><br />(Dr. N. D. Bhattacharya M.A. Ph.D., Indian Geographical Journal (July, Dec. 1969)தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-66654506987084439072013-09-21T18:00:15.396+05:302013-09-21T18:00:15.396+05:30
புத்தரின் ஆத்மா மறுப்பு!
புத்தர் கோசல நாட்டில் ...<br />புத்தரின் ஆத்மா மறுப்பு!<br /><br /><br />புத்தர் கோசல நாட்டில் பயணம் மேற்கொண்டிருந்தபோது, ஒரு பார்ப்பனர் ஆத்மா (உயிர்) பற்றி உங்கள் கருத்தென்ன? என்று வினவினார்.<br /><br />ஆத்மா (உயிர்) எதையும் அறியக்கூடியது என்று வாதத்திற்காக வைத்துக் கொள்ளுவோம்.<br /><br />கண்களைத் தோண்டி விட்டால், அந்த ஆத்மாவால் (உயிரால்) பார்க்க முடியுமா?<br /><br />காதுகளைச் செவிடு ஆக்கிவிட்டால் ஆத்மாவால் கேட்க முடியுமா?<br /><br />மூக்கை எடுத்து விட்டால் நாற்றத்தை ஆத்மாவால் உணர முடியுமா?<br /><br />நாக்கை அறுத்துவிட்டால் ருசி அறிய, பேச ஆத்மாவால் (உயிரால்) முடியுமா? என்று கேட்டுவிட்டு மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு தேவையற்ற சிந்தனைகள் இவையென்றும் சொல்லிக் கொண்டே நடந்தார்தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-68312116569078891402013-09-21T17:58:20.451+05:302013-09-21T17:58:20.451+05:30பார்ப்பனரின் விளம்பரம்
7.2.2013 நாள் தினமணி ஏட்ட...<br />பார்ப்பனரின் விளம்பரம்<br /><br /><br />7.2.2013 நாள் தினமணி ஏட்டில் வெளிவந்த கீழ்க்கண்ட விளம்பரம் பார்ப்பனர்கள் யார் - அவர்களுடைய இனவெறி எத்தகையது என்பதற்கு அடையாளமாகும்.<br /><br />இதோ அந்த விளம்பரத் தேவை<br /><br />கோவையிலுள்ள பிரபல இன்ஜீனியரிங் கம்பெனிக்குக் கீழ்க்கண்ட உத்தியோகங்களுக்கு விண்ணப்பங்கள் படித்த பிராமணர்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம்.<br /><br />1) Accountants: B.Com பட்டதாரிகள் மூன்று வருட அனுபவம் தேவை.<br /><br />2) Typists:<br />நன்கு படித்தவர்கள் சுயமாக லெட்டர்கள் தயாரித்து அனுப்பும் திறமை உள்ளவர்கள் குறைந்தது மூன்று வருட அனுபவம் தேவை.<br /><br />3) Sales representatives:<br /><br />வியாபாரத்தில் திறமையும், அனுபவமும் உள்ள பட்டதாரிகளிட மிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கிறோம்.<br /><br />மேற்கண்ட வேலைக்கு சமீபத்தில் ஓய்வு பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். திறமைக்கு ஏற்ற ஊதியம் உண்டு. ஒவ்வொரு வேலைக்கும் தனித்தனியாக விண்ணப்பித்து அனுப்ப வேண்டும்.<br /><br />Raj & Co Post Box No.9, Coimbatore - 641001.<br /><br />இந்த வேலைகளுக்கு பிராமணர்களிடமிருந்து மாத்திரம் விண்ணப்பம் எதிர் பார்க்கிறோம் என்று பார்ப்பனர்கள் பச்சையாக ஏடுகளில் விளம்பரம் செய்கிறார்கள் என்றால், பார்ப்பனர்கள் யார் என்று இன்னமும் தெரிந்து கொள்ளாதிருக்கும் மரக்கட்டைத் தமிழர்கள் தான் சிந்திக்க வேண்டும்.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-75511280386289524502013-09-21T17:57:23.312+05:302013-09-21T17:57:23.312+05:30கடவுள் நம்பிக்கை தேவையா?
பல துயரங்களை மறக்கும் ஒர...கடவுள் நம்பிக்கை தேவையா?<br /><br />பல துயரங்களை மறக்கும் ஒரு பெரிய திரையாக என்னுடைய புன்னகை விளங்குகிறது. நான் எப்பொழுதும் சிரித்துக் கொண்டே இருப்பதால் என்னுடைய மத நம்பிக்கை, என்னுடைய அன்பு ஆகியவை நிரம்பி வழிவதாகவும், கடவுளுடன் எனக்கு இருக்கும் நெருக்கமும், அவருடைய விருப்பத்துடன் ஒன்றி இருப்பதாகவும், என்னுடைய உள்ளத்தில் நிறைந்திருப்பதாகவும் மக்கள் நினைக்கிறார்கள். ஆனால் அவர்கள் உண்மையை அறியார்.<br />கடவுள் கடவுளேயல்லர். உண்மையில் அவர் இல்லை.<br /><br />- அன்னை தெரசா (தி இண்டு, 30.11.2002)தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-13921480387872821812013-09-21T17:56:51.134+05:302013-09-21T17:56:51.134+05:30இந்திரா கோவிலுக்குப் போவதேன்?
கோவிலுக்குப் போக வே...இந்திரா கோவிலுக்குப் போவதேன்?<br /><br />கோவிலுக்குப் போக வேண்டிய அவசியம் எனக்கு இல்லை என இந்திரா அம்மையார் இரண்டு கல்வி கமிஷன்களின் உறுப்பினர்களிடையே பேசினார்<br /><br />பிறகு ஏன் கோவிலுக்குப் போகிறார்? அவரே கூறிய செய்தி வருமாறு:- வகுப்பு இணக்கம் ஏற்பட வேண்டும் என்ற தனது குறிக்கோளுக்கு இது உதவுவதாக அவர் கூறினார்.<br /><br />வழக்கமாக, கோவிலுக்குச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் எதுவும் எனக்கு இருந்ததில்லை. ஆனால் நான் கோவில்களுக்குச் சென்றால் சிறுபான்மையினர் நலனுக்காக நான் கூறுவதை மெஜாரிட்டி சமூகத்தினர் தயாராக ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொண்டேன். இவ்வாறு இந்திராகாந்தி கூறினார்.<br /><br />(தினமணி, மார்ச் 27, 1983)தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-18569564949656777092013-09-21T17:56:19.273+05:302013-09-21T17:56:19.273+05:30
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தீர்மானம்
மூட நம்பிக...<br />தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தீர்மானம்<br /><br /><br />மூட நம்பிக்கைக்கு எதிராகப் போராடிய பகுத்தறிவாளர் நரேந்திர தபோல்கர் படுகொலையைக் கண்டித் தும், மூடநம்பிக்கைக்கு எதிரான முழுமையான சட்டம் தமிழகத்திலும், இந்தியா முழுமைக்கும் இயற்றக் கோரியும் தீர்மானம். இந்திய சமூகத்தை பீடித்துள்ள மூட நம்பிக்கைகளுக்கு எதிரான போரில் தன் உயிரையே விலையாக தந்துள்ளார் மஹாராஷ் டிரா மாநிலத்தைச் சேர்ந்த. நரேந்திரா தபோல்கர்.<br /><br />இப்படுகொலையை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கடுமையாகக் கண்டிக்கிறது. தபோல்கர் மூடநம்பிக்கைகளுக்கு எதிரானவர் மட்டுமல்ல; இயற்கையை நேசிப்பவர், சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிரானவர். விநாயகர் சதுர்த்தி விழாவின்போது பிளாஸ்டர் ஆப் பாரீஸ் என்னும் நச்சுப்பொருளை கொண்டு விநாயகர் சிலைகளை செய்து இயற்கையினை நாசப்படுத்துவதற்கு எதிராக போராடியவர். தமது வாழ்வில் அறிவியல் பிரச்சாரத்துடன் தாழ்த்தப் பட்ட மக்களுக்காகவும் போராடினார். சமூக நீதி நிலைத்திட, சமத்துவம் காண ஜாதிமறுப்புத் திருமணங்களை முன் னின்று நடத்திய சமூக போராளியான தபோல்கரின் கொலை ஒரு வெற்றி டத்தை உருவாக்கிவிட்டது. இது சமூக முன்னேற்றத்திற்கும் சமூக மாற்றத் திற்கும் மிகப்பெரிய இழப்பு.<br /><br />இந்திய அரசியல் சாசனம் பிரிவு 51 a(h), ஒவ்வொரு இந்திய குடியும் அறிவியல் மனப்பான்மையை வளர்த்துக் கொள்வது அடிப்படை கடமை என உணர்த்துகிறது. பில்லி சூனியம், மாந்திரிகம், ஜோதிடம், ஏவல், போலி சாமியார்கள் போன்ற பல மூடநம்பிக்கை இந்திய அரசியல் சாசனத்திற்கு முரனாக உள்ளது. இதன் அடிப்படையில் தமிழகத்திலும் இந்தியா முழுமைக்கும் மூடநம்பிக்கைக்கு எதிரான முழுமையான சட்டம் இயற்றக் கோருகிறோம். முற்போக்கு வாதிகளும் சீர்திருத்தவாதிகளும் தபோல்கர் கனவு கண்ட மூடநம்பிக் கைக்கு எதிரான பிரச்சாரத்தில் முன்பை காட்டிலும் வேகமாக எடுத்துச் செல்ல வேண்டுமென தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கேட்டுக்கொள்கிறது. தபோல்கரின் படுகொலையை விசாரித்து வரும் மஹராஷ்ட்ரா காவல்துறை மெத்தனமாக செயல்பட்டு வருவதைக் காண்கிறோம். காவல்துறை விரைந்து செயல்பட்டு தபோல்கரின் படு கொலைக்குக் காரணமான கொலையாளிகளையும் அவர்களைத் தூண்டியவர்களையும் கண்டறிந்து கடுமையான தண்டனை வழங்கிடக் கோருகிறோம். இந்தத் தீர்மானம்,விஞ்ஞானிகள், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் முற்போக்கு சிந்தனையாளர்கள் பங்குபெற்ற கண் டனக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. விஞ்ஞானிகள், எழுத்தாளர்கள் ,கலை ஞர்கள், மருத்துவர்கள், வழக்குரைஞர் கள், மாணவர்கள், ஆசிரியர்கள், தொழிலாளர்கள் , விவசாயிகள் மற்றும் முற்போக்கு சிந்தனையாளர்கள், உள்ளடக்கிய மூட நம்பிக்கைகளுக்கு எதிரான மக்கள் இயக்கம் இன்று (7.9.2013) இக்கூட்டத்தில் உருவாக்கப் பட்டது. இந்த இயக்கம் மூட நம்பிக் கைகளுக்கு எதிரான கருத்துப் பிரச் சாரத்தை மேற்கொள்ளும்.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-2029915852798067372013-09-21T17:54:57.738+05:302013-09-21T17:54:57.738+05:30
சர்வ சக்தியா? சர்வ சைபரா?
சுப்பன்: சர்வ சக்தியுள...<br />சர்வ சக்தியா? சர்வ சைபரா?<br /><br />சுப்பன்: சர்வ சக்தியுள்ள கடவுளை நம்பமாட்டேன் என்கிறானே இந்தப்பாவி எவ்வளவு சொன்னாலும் ஒத்துக்கமாட்டேன் என்கிறானே.<br /><br />ராமன்: அது மாத்திரம், அதிசயமல்லப்பா பசியாவரம் பெற்ற இந்த மகான் உணவு இல்லாமல் சாகக்கிடக்கிறார். ஒருவன் கூட ஒரு கை கூழ் ஊத்தமாட்டேங்கிறானே.<br /><br />சுப்பன்: பசியா வரம் பெற்றவனுக்கு கஞ்சி என்னத்துக்கு? பட்டினி கஷ்டம் எப்படி வந்தது?<br /><br />ராமன்: இது தான் வேடிக்கையா? நீ சொல்வது மட்டும் வேடிக்கையாக இல்லையா?<br /><br />சுப்பன்: என்ன நான் சொல்றதிலே வேடிக்கை?<br /><br />ராமன்: சர்வ சக்தி உள்ள கடவுள் என்றாய், அவனை ஒருத்தன் அப்படிப்பட்ட கடவுள் இல்லே என்று சொல்லுகிறான் என்றால் அது வேடிக்கையாக இல்லையா?<br /><br />சுப்பன்: சர்வசக்தி உள்ள கடவுள் என்கிறாய். அந்த சர்வ சக்திக்கு இந்த ஒரு சாதாரண மனுஷனை நம்பும்படி செய்யமுடியவில்லை என்றால் இது முட்டாள் தனமான, சிரிப்புக்கு இடமான காரியமாக இல்லையா?<br /><br />அதாவது பசியாவரம் பெற்ற மகான் பசியால் வாடுவது என்பதில் எவ்வளவு பித்தலாட் டம் இருக்கிறதோ அதேபோல் சர்வசக்தி உள்ள கடவுள் என்பதை ஒரு சாதாரண மனிதன் நம்பவில்லை என்பதும் அவனனை நம்பச்செய்ய அந்தக் கடவுளால் முடியவில்லை என்பதுமாகும்.<br /><br />-- _ சித்திரபுத்திரன் (விடுதலை 22.2.1972)<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-38417539812078288432013-09-21T17:54:24.300+05:302013-09-21T17:54:24.300+05:30
சரஸ்வதி கடாட்சமா?
கவிஞர் கண்ணதாசனையும் அவரது ஆ...<br />சரஸ்வதி கடாட்சமா?<br /><br /><br /><br />கவிஞர் கண்ணதாசனையும் அவரது ஆற்றலையும் அறியாதவர்கள் தமிழகத்தில் இருக்க முடியாது. சொல் வளமும், கருத்துக் கனிகளும் அவரது கவிதைகளில் மலிந்திருக் கும். தமிழுக்கு ஆற்றிய அளப்பரிய தொண்டு அவரின் பலவீனங்களைச் சுட்டெரித்து மறக்கச் செய்தது. அவரைப் பலவிதமாக போற்றிப் புகழ பலர் இருந்தாலும் திருவாளர் சோ சொல்லும் விதம் அலாதியானது. 28.8.2013 குமுதத்தில் கண்ணதாசன் சரஸ்வதி கடாட்சம் பரிபூர்ணமாகப் பெற்றவர் என்கிறார்.<br /><br />பாராட்டுவதற்கு வேறு வார்த்தைகளா இல்லை? கவிஞரின் பெருமையை இப்படியா கொச்சைப்படுத்துவது? எந்த ஒரு கலையும், தொழிலும் அதனால் வரும் முன்னேற்றமும் கடும் உழைப்பும், முயற்சியும், தன்னம்பிக் கையும் இல்லாமல் வந்து சேராது. யானை வந்து மாலை போடுவதும் நடக்காது. கவிதை புனையும் திறமையையும், தமிழறிவையும் கண்ணதாசன் வளர்த்துக் கொண்டார் என்று தானே நாடு இன்று வரை நம்பிக் கொண்டிருக்கிறது. சரஸ்வதி கடாட்சமும் கலைமகளின் அருளாசியும் காரணம் என்ற வாதம் நியாயந்தானா?<br /><br />இந்த நாட்டில் எத்தனையோ பேர் அறி வுத் தாகம் தணிக்க அலைந்து கொண்டிருக் கிறார்கள். பள்ளி, கல்லூரிகளில் படிக்கிறார் கள். நூல் நிலையங்களில் புத்தகங்களைத் தேடுகிறார்கள். அறிவு மட்டுமே போதாது என்று கருதுபவர்கள் கனக்கும் செல்வமும் நூறு வயதும் வேண்டும் என கோயில் பொம்மைகள் முன் விழுந்து கிடக்கிறார்கள். இத்தனை (பக்த) கோடிப் பேரைக் கண்டு கொள்ளாத கடவுளச்சி, கண்ணதாசனுக்கு மட்டும் கடாட்சம் காட்டியதை ஏற்க முடிய வில்லையே! அவர் மட்டும்தான் அவளுக்குச் செல்லப் பிள்ளையா? வீணை வாணி எழுப்பிய நாதம் நாட்டுக் கோட்டைக்கு மட்டும் தான் கேட்டதா? கடாட்சம் எனப் படும் கருணைப் பார்வை எந்த வயதில், எந்த நிலையில் கிடைத்தது என்று சொல்ல முடியுமா? பகுத்தறிவும் நாத்திகமும் பேசிக் கொண்டிருந்தாரே அதற்கு முன்பாகவா? இந்த மக்களைப் பார்த்து கருணை மறந்தே வாழ்கின்றார். தினம் கடவுளைத் தேடி அலைகின்றார் என்று பாடியதற்கு பிறகா? எண்ணில் அடங்கா கடவுள்களின் கடாட்சம் வழங்கும் உரிமையும், யோக்கியதையும் இவள் ஒருத்திக்கு மட்டும்தான் இருக்கிறதா?<br /><br />மூதேவியரில் இன்னொருத்தியும் உண்டே. சக்தியின் வடிவம் ஆயிற்றே. அவள் மட்டும் சாமான்யப் பட்டவளா? ரௌத்திரம் பழகிக் கொள்ள பராசக்தியை விட்டால் வேறு யார் இருக்கிறார்கள்? கொலை வெறியர்கள், கொலை பல செய்தவர்கள், ஆறுவது சினம் என்பதை அறியாதவர்கள் இவர்களில் யாரேனும் ஒருவர் அகப்பட்டால் போதுமே, பார்வதி கடாட்சம் பெற்றவர் என்று சொல்ல.<br /><br />இத்துடன் முடிந்து போய்விடக்கூடிய சமாச்சாரம் இதுவல்ல. அடையாளப்படுத் தப்பட வேண்டியவர்கள் இன்னும் இருக் கிறார்கள். காசாய உடையில் சாமியார் கோலத்தில் பக்திப் பழமாக நடமாடும் பீடாதிபதிகள், ஆனந்தாக்கள், அறவழிச் சித்தர்கள், தேவநாதன்கள் என பெரும் பட்டியலே வளர்கிறதே. அர்த்த சாமபூஜை நடுஇரவு நாமாவளி, முழு இரவு ஜெபம் என்று கூறி அப்பாவி இளம் பெண்களை வரவழைத்து சீரழிக்கும் வன்கொடுமை அரங்கேறிக்கொண்டு தானே இருக்கிறது. கடவுளின் கடாட்சம் இன்றி இக்கபட வேட தாரிகளுக்கு இதெல்லாம் சாத்தியப்படுமா? இது போன்ற லீலா விநோதத்தில் எந்தக் கடவுளும் சோடை போனதில்லையே.<br /><br />தசரதனுக்கு 64000 மனைவிகள்! இது என்ன சாதாரணம்! கிருஷ்ண பரமாத்மா வுக்கு 116108 மனைவிமார்களாம். இத்தனை பேர் போதாதென்று இன்னொருவனுடைய மனைவியான இராதையிடம் தான் பெரும் பொழுதைக் கழித்தானாம். சொல்வது அர்த்தமுன்ன இந்து மதம்! அப்படியானால் கிருஷ்ண கடாட்சம் என்ற ஒன்று இருந்து தானே தீரவேண்டும்? கன்னிவேட்டைக்காரர் கள், கற்பை களவாடுவோர், காமக் கொடூ ரர்கள் இவர்களுக்கா பஞ்சம்? அவர்களில் தகத்தகாய ஒருவரைக் கண்டறிந்து கிருஷ்ண கடாட்சத்துக்காரர் என்று சொல்லிவிட்டால் தீர்ந்தது பிரச்சினை. எளிதான காரியம் இல்லைதான். முயன்றால் முடியாதது உண்டோ?<br /><br />எத்தனையோ கடவுள்களும், கடாட்சங் களும் இருந்தாலும் இந்த நாட்டில் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழும் ஏதிலிகளின் எண்ணிக்கை சற்றும் குறைந்த பாடில்லை. குன்றின் மீது ஏறிக் கூறலாம். கஞ்சத் தனம், வஞ்சகம் சிறிதுமின்றி தாராளமாக வாரி வழங்கப்பட்ட கடாட்சம் ஒன்றே ஒன்றுதான். அதுவே குசேலர் கடாட்சம்!தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-69292839017713158192013-09-20T20:09:12.403+05:302013-09-20T20:09:12.403+05:30இந்துமதம் பற்றி தாகூர்!
டாக்டர் ரவீந்திரநாத் தாகூ...இந்துமதம் பற்றி தாகூர்!<br /><br />டாக்டர் ரவீந்திரநாத் தாகூர் தமது நண்பர் ஒருவருக்கு எழுதிய கடிதத்தில் காணப்படும் ஒரு பகுதி:<br /><br />இந்து மதம் இந்தியாவின் தலைவிதியானது நீக்க முடியாத ஒரு தலைவிதியாகும். அதன் கதி இந்தப்படி தவிர, வேறுவிதமாக இருக்க முடியாது. ஏனென்றால், நாம் நமக்குள் ஜாதி ஜாதியாக பிரிந்து விட்டோம். அந்தந்த ஜாதிக்குள்ளும் வகுப்பு வகுப்பாகவும் பிரிந்து விட்டோம்.<br /><br />இவ்வண்ணம் நாம் துண்டு துண்டுகளாகப் பிரிந்து போய் விட்டோம். இதனால் நாம் ஒத்து ஒருவரிடத்தில் மனிதத் தன்மையாக இருக்க முடியாமல் போய் விட்டதனால் நாம் அழிந்து ஒழிந்து போவதற்குத் தகுதியுடையவர்களாக ஆனோமே தவிர, நாம் இனி உலகத்தில் உயிருடன் இருக்கத் தகுதியுடையவர்களாக இல்லை.<br /><br />இப்படி நாம் பிரிந்து விட்டதாலேயே நாம் எக்காலத்திலும் நம் நாட்டைப் பிறருக்கு வசப்பட்டுப் போகும்படிக் கொடுத்துக் கொண்டே வந்திருக்கிறோம். நாம் நம் ஜாதிப்பிரிவுகளால் தற்கொலை செய்து கொண்டவர்களாக ஆகி விட்டோம். நாம் ஜாதிகளை ஒழித்து அதனால் நாம் முன்னுக்குவர வழிகோலவே இல்லை. நம் சாஸ் திரங்கள், ஜாதிப் பிரிவு களை மீறக்கூடா தென் றும், மீறினால் இவ்வளவு பாவம் இவ்வளவு தண் டனையென்றும் உரைத்து நம்மை அடக்கி விட்டன.<br /><br />நம் ஜாதிகளையும், அவற்றை வலியுறுத்தி நிலை நிறுத்தும் சாஸ் திரங்களையும் பெரியோர்கள் ஏற்படுத்தினார்கள் என்ற காரணத்தினால் அவை ஆதிகாலம் தொட்டு நடைமுறையில் அனுஷ்டிக்கப் பட்டு வருவதனால் அவற்றை நாம் தற்சமயம் இடையில் கலைக்கப்படாது என்ற மூடக்கட்டுப்பாட்டை வைத்துக் கொண்டி ருப்பதனால், நாம் மனிதத்தன்மை இழந்து உலகிலுள்ள பெரிய ஜன சமூகங்களுக்கு இடையில் தாழ்ந்து விட்டோம்.<br /><br />- இரவீந்திரநாத் தாகூர்தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-8386066077798094582013-09-20T20:08:08.951+05:302013-09-20T20:08:08.951+05:30விஞ்ஞான முடிவுக்கு எதிரானவை!
அறிவாளிகள் ஒரு விஷயத...விஞ்ஞான முடிவுக்கு எதிரானவை!<br /><br />அறிவாளிகள் ஒரு விஷயத்தின் எல்லா அம்சங்களையும் கவனமாக பரிசீலிக்காமல் அதைப்பற்றி முடிவு கூறமாட்டார்கள். மூடர்களும், கோழைகளும், சிந்திக்கத் தயங்குகிறவர்களும்தான் - குழந்தை பருவத்தில், அறிவு முதிர்ச்சியில்லாத காலத்தில், காரணத்தோடு புரிய முடியாத போது தங்களின் பெற்றோர்களாலும், ஆசிரியர்களாலும் திணிக்கப்பட்ட மூடக் கொள்கைகளைக் கண்ணை மூடிக் கொண்டு ஏற்கிறார்கள்.<br /><br />உலகிலுள்ள 80 கோடி இஸ்லாமியரும் வான மண்டல தூதுவரால் குர்-ஆன் அளிக்கப்பட்டதாக நம்புகிறார்கள்; 34 கோடி இந்துக்களும் தங்கள் கடவுளரில் ஒருவனான சிவனுக்கு ஆறு கைகள் இருப்பதாக நம்புகிறார்கள்; 16 கோடி பவுத்தர்களும் மறுபிறவு உண்டென்று நம்புகின்றனர் 91 கோடி கிறிஸ்துவரும் கடவுள் ஆறே நாட்களில் உலகைப் படைத்தான் என்று நம்புகின்றனர்.<br /><br />இப்படியெல்லாம் நம்புவதற்கு விஞ்ஞான ரீதியான சான்று எதுவும் இல்லை. அறிவைக் கொண்டு இதுவரையில் காணப்பட்ட உண்மைகளுக்கு இவை நேர் விரோதமானவை என்பதை விஞ்ஞானம் காட்டி விட்டது.<br /><br />- ஜேம்ஸ் ஹார்வி ஜான்சன்.<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-14881482144868579882013-09-20T20:07:44.298+05:302013-09-20T20:07:44.298+05:30
அறிவைத் தரக்கூடிய புத்தகங்களைச் சேகரிக்க வேண்டும்...<br />அறிவைத் தரக்கூடிய புத்தகங்களைச் சேகரிக்க வேண்டும்<br /><br /><br />உலக அறிவை, உருப்படியான காரியத்துக்குப் பயன்படும் அறிவைத் தரக்கூடிய புத்தகங்களைச் சேகரிக்க வேண்டும். பழைய முறைகளையும், எண்ணங்களையும் மேலும் ஊட்டக்கூடிய ஏடுகளைச் சேகரித்து அதற்குப் புத்தகச்சாலையென்று பெயரிடுவது; குருடர்களை கூட்டி வைத்து, அவர்கள் உள்ள இடத்துக்கு, வழிகாட்டுவோர் வாழும் இடம் என்று பெயரிடுவது போன்ற கோமாளி கூத்தாக முடியும்.<br /><br />ஒவ்வோர் வீட்டிலும், வசதி கிடைத்ததும், வசதி ஏற்படுத்திக் கொண்டதும் அமைக்க வேண்டிய புத்தகச் சாலையில், நாட்டு வரலாறு, உலக நாடுகளின் நிலையைக் குறிக்கும் நூல்கள் இவை முதலிடம் பெற வேண்டும்.<br /><br />பொதுவாகவே மக்களின் அறிவுக்கு தெளிவும், ஆண்மைக்கு உரமும், ஒழுக்கத்துக்கு வலிவும் தரத்தக்க நூல்கள் இருக்க வேண்டுமேயொழிய வாழும் இடத்தை வகையற்றது என்று கூறி வான வீதிக்கு வழிகாட்டும் நூல்களும், மாயா வாதத்தையும், மனமருட்சியையும் தரும் ஏடுகளும் தன்னம்பிக்கையைக் கெடுத்து, விதியை அதிகமாக வலியுறுத்திப் பெண்களை இழித்தும் பழித்தும் பேசிடும் நூல்களும் இருத்தலாகாது.<br /><br />பஞ்சாங்கம் அல்ல, புத்தகச் சாலையில் இருக்க வேண்டியது; அட்லாஸ் - உலகப்படம் இருக்க வேண்டும். இந்த அடிப்படைப் பிரச்சினையிலே நேர்மையான முறையையும், நெஞ்சுரத்தையும் காட்டியாக வேண்டும்.<br /><br />அப்போதுதான் வீட்டிற்கோர் புத்தகச்சாலை அமைப்பது என்பது அறிவுத் தெளிவுக்கு வழி செய்யும் - மனவளத்தை உண்டாக்கும்; நாட்டை முன் னேற்ற வழி வகுக்கும். புலியை அழைத்து பூமாலைத் தொ டுக்கச் சொல்ல முடியாது.<br /><br />சேற்றிலே சந்தன வாடை கிடைக்கு மென்று எண்ணக் கூடாது.<br /><br />நமது பூகோள அறிவு, பதி னான்கு லோகத்தைக் காட் டிற்கு. அந்த நாட்களில், நமது மார்க்க அறிவு நரபலியைக் கூடத் தேவை என்று கூறிற்று. அந்த நாட்களில் நமது சரித்திர அறிவு, பதினாறாயிரம் ஆண்டு ஒரு மன்னன் ஆண்டதாகக் கூறி வைத்தது. நமது பெண் உரிமையைப் பற்றிய அறிவு, காமக்கிழத்தி வீட்டுக்கு நாயகனைக் கூடையில் வைத்துத் தூக்கிச் சென்ற பத்தினியைப் பற்றி அறிவித்தது. நமது விஞ்ஞான அறிவு, நெருப்பிலே ஆறும், அதன் மீது ரோமத்தால் பாலமும் இருப்பதாக அறிவித்தது.<br /><br />அப்படிப்பட்ட எண்ணங்களுக்கு ஆதாரமாக இருந்த ஏடுகளை இந்த நாள்களிலே நாம் வீட்டில் புத்தகச் சாலையில் சேர்ப்பது, நாட்டு நலனுக்கு நிச்சயமாகக் கேடு செய்யும். பூகோள, சரித, ஏடுகள் இருக்க வேண்டும் - நமக்கு உண்மை உலகைக் காட்ட, நமக்கு ஒழுக்கத்தையும் வாழ்வுக்கான வழிகளையும் காட்ட, வீட்டிற்கோர், திருக்குறள் கட்டாயமாக இருக்க வேண்டும்.<br /><br />-அறிஞர் அண்ணாதமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-37708941515246227142013-09-20T20:06:26.806+05:302013-09-20T20:06:26.806+05:30
பா.ஜ.க. (மோடி) வெறும் முகமூடிதான்! அதன் உண்மை முக...<br />பா.ஜ.க. (மோடி) வெறும் முகமூடிதான்! அதன் உண்மை முகம் ஆர்.எஸ்.எஸ். திருப்பூரில் நடைபெற்ற கூட்டத்தில் பிருந்தாகரத் காட்டம்<br /><br />திருப்பூர், செப்.20- திருப்பூர் அரிசிக்கடை வீதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஜோதிபாசு நூற் றாண்டு விழா மற்றும் தீக்கதிர் நாளிதழ் சந்தா வழங்கும் விழாப் பொதுக்கூட்டம் 19.9.2013 மாலை 6 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் கே.காமராஜ் தலைமை தாங்கினார்.<br /><br />இக்கூட்டத்தில் பங்கேற்று சிறப்புரையாற்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் தோழர் பிருந்தாகரத் பேசியதாவது:<br /><br />அதிகாரத்தை ஏழை மக்களுக்குச் சாதகமாக பயன்படுத்தியவர் ஜோதிபாசு ஆவார். அவர் செயல்படுத்திய கொள்கைகளை எதிர்க்கட்சியினர்கூட குறைகூற முடியாது. 1946 ஆம் ஆண்டு தொழிலாளர் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார். அவர் பஞ்சாயத்து அமைப்பினை ஏற்படுத்தி, அதிகாரத்தை அதிகாரபர வலாக்கினார்.<br /><br />ஜோதிபாசுவின் வாழ்க்கையிலிருந்து ஏராளமான பாடங்களை நாம் கற்கவேண்டியுள்ளது.<br /><br />பிஜேபி (மோடி) என்பது வெறும் முகமூடிதானே தவிர, இதன் உண்மை முகம் ஆர்.எஸ்.எஸ். கொள்கைகள் ஆகும்.<br />மோடி தொழிலாளி என்ற வார்த்தையை வாயால்கூட உச்சரிக்காதவர். தொழிலாளிகளைப்பற்றிய எண்ணமும், சிந்தனையும் அறவே இல்லாதவர்; ஆனால், இப்படிப்பட்ட வருக்கு திருப்பூரில் எங்கு பார்த்தாலும் கட்-அவுட்கள் இருப்பது தொழிலாளர்களுக்கு இழிவாகும்.<br /><br />பெருமுதலாளிகள் பெருவாரியாக மோடியை விரும்புகிறார்கள். தம்பட்டம் அடிக்கிறார்கள்.ஆனால், திருப்பூர் போன்ற தொழிலாளர் நிறைந்த பகுதியில் மோடி ஏற்கப்படமாட்டார்.<br /><br />- இவ்வாறு அவர் உரையாற்றினார்.<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-75819971518207760252013-09-20T20:02:14.876+05:302013-09-20T20:02:14.876+05:30
ஆசிரியர் தகுதித் தேர்வும் தமிழுக்குத் துரோகமும்
...<br />ஆசிரியர் தகுதித் தேர்வும் தமிழுக்குத் துரோகமும்<br /><br /><br />ஆசிரியர் ஏங்கினால் வகுப்பறை தேங்கும் என்றார் அறிஞர் அண்ணா. ஆனால் இப்போதோ நம் அன்னைத் தமிழும் சேர்ந்து ஏங்குகிறது தேங்கு கிறது. ஆம் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தும் தேர்வு வாரியத்திற்குக் கொஞ்சமும் அடிப்படை அறிவே இல்லையென்றுதான் சொல்ல வேண்டும். ஒரு ஆசிரியர்க்கு அடிப் படை அறிவு என்பது எதுவாக இருக்க வேண்டும்? தன்னுடைய பாடத்துறையில் போதுமான அறிவைப் பெற்றிருக்க வேண்டும் அதுதான். ஆனால் பட்டதாரி ஆசிரியர் தகுதித் தேர்வில் தமிழுக்கு வழங்கப்படுகின்ற மதிப்பெண்களோ வெறும் 30 மதிப்பெண்களே. ஆங்கிலம் - 30, உளவியல் - 30, சமூக அறிவியல் - 60. எல்லாம் சரிதான். ஆனால் இதில் சமூக அறிவியல் பாடத்திற்கு ஏன் அதிக மதிப் பெண்கள்? இப்படி வைப்பதால் அந்தந்தத் துறைசார்ந்த ஆசிரியர் களுக்குத் தத்தம் துறை சார்ந்த பாடத்தில் எப்படி அறிவு பெருகும்? நாட்டம் வரும்? சமூக அறிவியல் பாடத்திற்குக் கொடுக்கிற அதே மதிப்பெண்களே அந்தந்தத் துறை சார்ந்த பாடத்திற்குத் தந்திருந்தால் தேர்வு வாரியத்தின் அறிவு நாணயம் விளங்கியிருக்கும். நாங்கள் தேர்வில் தோல்வியைக் கண்டது இதுதான் காரணம். இந்த மன நிலையில் பிள்ளைகளுக்கு எப்படிக் கற்பிப் போம்? தமிழ்ப் பிள்ளைகளுக்குத் தாய்மொழி அறிவே இல்லை. குற் றாலத்தில் எங்கோ மணம் வீசுகிறதே என்பதற்குப் பதிலாக குற்றாலத்தில் என்கோமணம் வீசுகிறதே என்று தப்பிதமாகப் படிக்கும் எழுதும் அவலநிலையைப் பாரீர்!<br /><br />TNPSC - தேர்வுகளில் தமிழுக்கு முக்கியத்துவம் குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து கண்டித்துப் போராட் டம் கண்டு மீண்டும் முக்கியத்துவம் பெற்றுத்தரப்பட்டது. ஆசிரியர் தகுதித் தேர்விலும் தமிழுக்கு முக் கியத்துவம் வேண்டும். தமிழ்ப் படித்த வர்க்கு முக்கியத்துவம் மறுக்கப் படுகிறது. எல்லாம் இந்தப் பார்ப்பன ஆட்சியின் தொல்லை.<br /><br />தமிழ்ப்படித்தவர்கள் முன்னேற முடிய வில்லை. முறையான தேர்வு முறையே இது இல்லை. இந்தக் கொடுமை போதாதென்று விடைத் தாள் வேறு மோசடி. இப்போது நடந்து முடிந்த தேர்வையும், அதன் முடிவையும் உடனே ரத்து செய்ய வேண்டும். முறையான தேர்வு முறை யுடன் (தமிழுக்கு முக்கியத்துவம் - 60 மதிப்பெண்) அல்லது அந்தந்தத் துறை சார்ந்த பாடத்திற்கு - 60 மதிப்பெண்கள் (அல்லது) மீண்டும் பதிவு மூப்பு அடிப்படையில் பின் பற்றிட வேண்டும் இதில் ஏதாவது ஒன்று நடந்தாக வேண்டும்.<br /><br />திராவிடர் கழகம் இந்தப் பிரச் சினையைக் கையில் எடுக்கத்தான் வேண்டும்<br /><br />தங்களை விட்டால் நாதி ஏது?<br /><br />தமிழாசிரியர்களுக்கு நல்லதொரு நீதியைக் கூடிய விரைவில் பெற்றுத் தர வேண்டும் என எதிர்ப் பார்க்கி றோம். நல்ல முடிவுக்காகக் காத்தி ருக்கிறோம்.<br /><br />ஒரு நாட்டில் பிறந்த மக்களுக்கு வேண்டப்படும் பற்றுகளுள் தலை யாய பற்று மொழிப்பற்றே. மொழிப் பற்று இல்லாதாரிடத்துத் தேசப் பற்றும் இராது என்பது உறுதி.<br /><br />தேசம் என்பது மொழியை அடிப் படையாகக் கொண்டு இயங்குவது. ஆதலால்,<br /><br />தமிழர்களுக்குத் தாய்மொழிப் பற்றுப் பெருகவேண்டும் என்பது எனது பிரார்த் தனை.<br /><br />- தந்தை பெரியார் (10-ஆம் வகுப்பு தமிழ் புத்தகம், பக்கம் 31)<br /><br />- பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள்<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-8131180281657031902013-09-20T20:01:39.179+05:302013-09-20T20:01:39.179+05:30
இதுதான் இடதுசாரி சிந்தனையா?
உச்சநீதிமன்ற முன்னா...<br />இதுதான் இடதுசாரி சிந்தனையா?<br /><br /><br />உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியும் கேரளா வில் அமைச்சராக (கம்யூனிஸ்டு) இருந்தவரும், இடதுசாரி சிந்தனையாளர் என்று பொதுவாகக் கூறப்படு வருமான திரு. வி.ஆர். கிருஷ்ண அய்யர் அவர்கள், 2014ஆம் ஆண்டு நடக்க இருக்கும் மக்களவைத் தேர்தலில், பிஜேபியின் பிரதமருக் கான வேட்பாளராக, நரேந்திரமோடி முன்னிறுத் தப்படுவதைத் தாம் வரவேற்பதாகவும், பிரதமர் பொறுப்புக்கு அவர்தான் தகுதியானவர் என்றும், தெரிவித்துள்ளார். நரேந்திர மோடியின் செயல் பாடுகள், அவரது நிர்வாகத் திறமையை, தேசிய அளவில் பயன்படுத்திக் கொள்ள, அவரை நாம் ஆதரிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.<br /><br />நிர்வாகத் திறமை உடையவரா நரேந்திர மோடி? என்பது ஒரு புறம் இருக்கட்டும்; அந்த நிருவாகத் திறமை எதற்குப் பயன்பட்டு இருக்கிறது என்பதை, உச்சநீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்தவருக்குத் தெரியாமல் போனது ஏன்?<br /><br />அவர் நிருவாகத் திறமையின் இலட்சணம் 2000-க்கும் மேற்பட்ட சிறுபான்மை மக்களைக் கொன்று குவித்தது தானா? அவருக்குச் சம்பந் தமே யில்லை என்று கூறப் போகிறார்களா?<br /><br />அதுவுண்மை என்றால், ஒரு முதல் அமைச்சருக்கே சம்பந்தம் இல்லாமல் பல்லாயிரம் பேர்கள் கொன்று குவிக்கப்பட்டனர் என்றால், செயல்படாத ஒருவர் முதலமைச்சராக இருந்தார் என்று பொருள் படாதா?<br /><br />ஓர் உண்மையைத் திட்டமிட்டு, மறைக்கப் பார்க்கின்றனர். நரேந்திரமோடி என்ற முதல் அமைச்சர், தன் நிருவாகத்தின் முழு சக்தியையும் பயன்படுத்தி, சிறுபான்மை மக்களைக் கொன்று குவித்திருக்கிறார் என்பதை மறைக்கப் பார்க் கிறார்கள்.<br /><br />அறிவு நாணயத்தோடு அவர் செயல்பாடு இருந்தால், இவ்வளவு பேரழிவுக்குக் காரணமாக இருந்ததற்குத் தான் பொறுப்பேற்ற, முதல் அமைச்சர் பதவியிலிருந்து விலகி இருக்க வேண்டாமா?<br /><br />கோத்ரா ரயில் பெட்டி எரிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து, அதனை ஒரு வாய்ப்பாகப் பயன் படுத்தி, சிறுபான்மையினருக்கு எதிரான வன் முறையைத் தூண்டுவதற்கு, ஒரு முதல் அமைச்சரே அதிகாரிகள் கூட்டத்தைக் கூட்டி ஏற்பாடு செய் தார் என்றால், இதனை எந்த கணக்கில் எடுத்துக் கொள்வது?<br /><br />பிஜேபி சட்டமன்ற, உறுப்பினர்களின் வாக்கு மூலத்தை தெகல்கா ஊடகம் பெற்று அம்பலப் படுத்தி விடவில்லையா?<br /><br />எந்த ஒரு செயலுக்கும் ஓர் எதிர் விளைவு உண்டு என்ற அய்ன்ஸ்டின் தேற்றத்தைக் கூறி, சிறுபான்மை மக்களுக்கு எதிரான திட்டமிட்ட வன்முறையை நியாயப்படுத்தியதை முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி அறிய மாட்டாரா? மோடியின் பின் புலத்தில் பணத் திமிங்கலங்கள் இருப்பது கூடவா மார்க்சியவாதி என்று கூறப்படுபவருக்குப் புரியாது?<br /><br />குஜராத் மாநிலத்தை, இந்துத்துவாவின் பரிசோ தனை சாலையாக ஆக்கி, அதில் வெ(ற்)றி பெற்ற நிலையில் அதே பாணியை ஒடிசா மாநிலத்தில் அரங்கேற்றவில்லையா? இதனை இந்தியா முழுமையும் அரங்கேற்றுவதற்குப் பச்சைக் கொடி காட்டலாமா?<br /><br />குஜராத் நிகழ்வினைத் தொடர்ந்து அன்றைய பிரதமர் வாஜ்பேயி எந்த முகத்தை வைத்துக் கொண்டு நான் வெளிநாடு செல்லுவேன்? என்று புலம்பினாரே!<br /><br />இன்றைக்குக்கூட அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகள் நரேந்திரமோடிக்கு விசா கொடுக்க மறுத்து வருவது எந்த அடிப்படையில்?<br /><br />இராமச்சந்திர குகா, மார்க்கண்டேய கட்ஜூ (இவரும் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதிதான்) பொருளாதார மேதை - நோபல் பரிசு பெற்ற அமர்த் தியா சென் போன்றவர்கள் நரேந்திர மோடிக்கு எதிரான கருத்துக்களைக் கூறி வந்துள்ள நிலையில், வி.ஆர். கிருஷ்ண அய்யர் இந்துத்துவா சக்திக்குத் துணை போவது கண்டிக்கத்தக்கது. இதுவரை அவர்மீது போர்த்தப்பட்டு இருந்த இடதுசாரி என்ற திரையை அவரே கிழித்துக் கொண்டு விட்டார் என்றே கருதப்பட வேண்டும்.<br /><br />மோடிக்குப் பல்வேறு முகாம்களும் குரல் கொடுக்கத் தொடங்கி விட்டன திட்டமிட்ட வகையில்; இதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது இந்திய வாக்காளர்களே!தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.com