tag:blogger.com,1999:blog-1474608369333206681.post1728567770281006331..comments2023-10-29T13:02:52.613+05:30Comments on தமிழ் ஓவியா: நமக்கு ஒழுக்கமான கடவுளே இல்லையே!தமிழ் ஓவியாhttp://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comBlogger45125tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-55170476243944516742014-04-05T04:54:12.787+05:302014-04-05T04:54:12.787+05:30முதல்தரமான விரோதி!
எல்லா மதங்களுக்கும், புரோகிதக்...முதல்தரமான விரோதி!<br /><br />எல்லா மதங்களுக்கும், புரோகிதக் கூட்டத்தாருக்கும் முதல்தரமான விரோதியாக இருப்பது எது தெரியுமா? பகுத்தறிவு என்று இருக்கிறதே ஒரு பொருள் - அது தான்! வேறு எது?<br /><br /> <br /><br />- வால்டேர்<br /><br />Read more: http://viduthalai.in/page-7/78153.html#ixzz2xxll5DZM<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-41867355189265908472014-04-05T04:53:29.432+05:302014-04-05T04:53:29.432+05:30ஈ.எம்.எஸ். பார்வையில் மதம்
புராதன பொதுவுடைமையின் ...ஈ.எம்.எஸ். பார்வையில் மதம்<br /><br />புராதன பொதுவுடைமையின் வீழ்ச்சியைத் தொடர்ந்து, கிரீஸிலும் ரோமிலும் தோன்றியது போன்ற அடிமை அமைப்பு முறையிலிருந்து மாறுபட்ட ஒரு வர்க்க வேற்றுமையும், சுரண்டல் முறையும்தான் இங்கு உருவாகியது.<br /><br /> <br /><br />சிந்து சமவெளி தடயங்களை பரிசீலிக்கும் போது அன்றைய சமூக வாழ்க்கையின் பகுதியாக, கிரீஸிலும் ரோமிலும் இருந்தது போன்ற அடிமைமுறை சிந்து சமூகத்தில் இருந்திருக்கவில்லையா என்று சந்தேகிக்க வேண்டியுள்ளது.<br /><br />ஆனால் சிந்து சமவெளி நாகரிகத்தையே அழித்து ஒரு புதிய நாகரிகத்தை உருவாக்கிய ஆரியர்கள் அடிமைகள் - எஜமானர்கள் என்ற வர்க்க வேறுபாட்டுக்குப் பதிலாக ஆரம்பத்தில் நான்கு வர்ணங்களும் பிறகு எண்ணற்ற ஜாதிகளும் உபஜாதிகளுமடங்கிய ஓரமைப்பை உருவாக்கினர்.<br /><br />இது நமது சமூக வாழ்க்கையில் இந்தியாவுக்கு உரித்தான ஒரு விசேஷ தன்மையை அளித்தது. அடிமை முறையிலுள்ளதுபோல தெளிவானதும் மறுக்க முடியாதது மான சுரண்டல் முறைக்கு பதிலாக வருணாசிரம தர்மத்தினுடையவும் ஜாதி ஆசாரங்களுடையவும், இவைகளுக்கு நியாயம் கற்பிக்கின்ற மத நம்பிக்கை களுடையவும் திரைக்குப் பின்னால் வளர்ந்த மேல்ஜாதி ஆதிக்கம் மேலோங்கி வந்தது. இதற்குப் பாரதீய நாகரிகம், ஹர்ஷ நாகரிகம் என்பது போன்ற செல்லப் பெயர்களும் கிடைத்துள்ளன.<br /><br />- ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாட் எழுதிய இந்திய வரலாறு என்னும் புத்தகத்தின் 36ஆம் பக்கத்தி லிருந்து<br /><br />குறிப்பு: இந்திய சமூகத்தில் வர்க்க பேதத்தை விட ஜாதி பேதமே மேலோங்கியுள்ளது என்ற தந்தை பெரியாரின் கருத்தை ஈ.எம்.எஸ். இங்கு ஒப்புக் கொண்டுள்ளது குறிப்பிடத்தகுந்தது.<br /><br />Read more: http://viduthalai.in/page-7/78153.html#ixzz2xxlcGiJv<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-37769951385208351732014-04-05T04:53:00.569+05:302014-04-05T04:53:00.569+05:30விதியை நம்பி வீண்போவோர்!
மக்கள் மூடநம்பிக்கையில் ...விதியை நம்பி வீண்போவோர்!<br /><br />மக்கள் மூடநம்பிக்கையில் மூழ்கியிருப்பதால் அவர்கள் பகுத்தறிவைக் கொண்டு சிந்திக்கமுடியவில்லை. இதற்கு மதமும் துணை போகிறது. இந்த மக்களின் மத நம்பிக்கைகள் முழுக்க முழுக்க மூடநம்பிக்கை நிரம்பி யவை. ஆனால், மேலை நாடுகள் பல நூற்றாண்டுகளுக்கு முன்னதாகவே இந்த மூட நம்பிக்கைகளிலிருந்து விடுபட்டுக் கொண்டன.<br /><br />சமூக பொருளாதார நிலைகளும், மதக் கட்டுப்பாட்டின் அடிப்படையிலேயே உள்ளன. இந்த மத நம்பிக்கைகள் புதிய திட்டமிடுதலுக்கும், வளர்ச்சிக்கும் தடைக்கற்களாக இருந்து வருகின்றன. பொருளாதாரத்தில் தாழ்ந்த நிலையில் உள்ள மக்களும் இவைகளை பற்றி எல்லாம் கவலைப்படுவதில்லை.<br /><br />கடவுள் விட்ட விதி இது என்று விதியை நம்பி காலத்தைக் கழிக்கின்றனர். இதனால் தான் தாழ்த்தப்பட்டவர்கள் கோயில்களுக்குள் நுழைய முடியாமலும், பொதுக் கிணறுகளைப் பயன்படுத்த முடியாமலும் உள்ள நிலை இருக்கின்றது.<br /><br />- இந்திய நிலை குறித்து ஏசியன் டிராமா என்ற நூலில் குன்னர் மிர்டல். பக்கம் 41<br /><br />Read more: http://viduthalai.in/page-7/78153.html#ixzz2xxlUmAKR<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-37880644417994469322014-04-05T04:52:33.529+05:302014-04-05T04:52:33.529+05:30
மத ஆதிக்கத் தொல்லை!
மதத்தின் பயனாக நமது வாழ்வில...<br />மத ஆதிக்கத் தொல்லை!<br /><br /><br />மதத்தின் பயனாக நமது வாழ்வில் எவ்வளவு துன்பங்கள், தொல்லைகள் அடைய நேரிடுகிறது என்பதை உணர்ந்தால், மேலும் மேலும் மதங்களிடம் வெறுப்புத் தோன்ற இடமேற்படுகிறதே ஒழிய, சிறிதாவது அதைச் சகிக்க இடமே இல்லாமல் இருக்கின்றது.<br /><br />கிறிஸ்தவ மதத்தைப் பற்றி எழுதினோம் என்பதற்காக குடிஅரசு பத்திரிகை ஜாமீன் கேட்கப்பட்டுப் போயிற்று. மகம்மதிய மதத்தைப் பற்றி எழுதினதற்காக புரட்சி பத்திரிகை ஜாமீன் கேட்கப்பட்டுப் போயிற்று.<br /><br />இந்து மதத்தைப் பற்றி எழுதுகிறோம் என்பதற்காக தினந்தோறும், நிமிடந்தோறும் அடைந்து வரும் தொல்லையும், நசுக்குச்சேட்டை உபத்திரவங்களும் கணக்கு வழக்கில் அடங்காது.<br /><br />பார்ப்பனர்களை உத்தியோகஸ்தர் களாகக் கொண்ட போலீஸ் இலாகா, போஸ்டல் இலாகா, ரயில்வே இலாகா, நிதி இலாகா, நிருவாகம் மற்றும் அநேக துறைகளில் கீழே இருந்து அய்கோர்ட் நிருவாக சபை வரையில் ஆங்காங்குள்ள மதக் காப்பாளர்களான பார்ப்பனர்களால் நாம் அடைந்து வரும் கஷ்டம் சித்திரவதைக் கொப்பாகவே இருந்து வருகின்றது.<br /><br />- தந்தை பெரியார்<br /><br />Read more: http://viduthalai.in/page-7/78153.html#ixzz2xxlLlO30<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-32221228478830307822014-04-05T04:51:53.986+05:302014-04-05T04:51:53.986+05:30காந்தியார் மீது நேருவின் தாக்குதல்!
(புதுடில்லியி...காந்தியார் மீது நேருவின் தாக்குதல்!<br /><br />(புதுடில்லியில் 3.1.1947 அன்று நடைபெற்ற இந்திய விஞ்ஞான மாநாட்டில் நேரு அவர்கள் ஆற்றிய உரையின் ஒரு பகுதி இது. சத்திய சோதனை என்றும், கடவுள் சொன்னார் என்றும் அடிக்கடி கூறிக் கொண் டிருந்த காந்தியாரை மறைமுகமாகத் தாக்குகிறார் நேரு. படித்துப் பாருங்கள் - உங்களுக்கே புரியும்! - ஆ.ர்.)<br /><br />தனிப்பட்ட நபரொருவரின் சத்திய சோதனையல்ல விஞ்ஞானம். மக்கள் நலனுக்குப் பயன்படுவதாயின், அது தனிப்பட்டவரின் சோதனையைக் காட்டிலும் பரப்பு மிகவுள்ளதே, பட்டினியால் பரிதவிக்கும் மனிதனுக்கு சத்தியம்; உண்மையென்பதெல்லாம் அர்த்தமற்ற வெறுஞ் சொற்களே. அவனுக்கு உணவு வேண்டும். பட்டினிப் பசித்துயரில் சூழ்ந்துள்ளவனுக்கு கடவுளைப்பற்றிக் கவலையில்லை. அவனுக்கு உணவு வேண்டும். இந்தியா பசிப் பட்டினியால் அவதியுற்று வரும் நாடாகும்.<br /><br />பட்டினிப் பட்டாளங்கள் முன்னிலையிலா கடவுள் சத்தியம்!<br /><br />கோடிக்கணக்கான பட்டினிப் பட்டாளங்களின் முன்னிலையில் கடவுள், சத்தியம் என்று வெற்றுரை பகருவதும், அழகொழுக வாழ்க்கைத் தத்துவங்களை யெடுத்தியம்புவதும், அவர்களை கேலி செய்வதற்கே யொப்பாகும் பட்டினியால் வதையுறுவோருக்கு, உண்ண உணவும், உடுக்க உடையும், இருக்க இடமும் தந்தாக வேண்டும். அவர்களுக்குக் கல்வி அளித்தாக வேண்டும். சுகாதார வசதிகள் ஏற்படுத்தி கொடுத்தாக வேண்டும்.<br /><br />சுருக்கமாக வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதனுக்கும் இன்றியமையாதது வேண்டப்படும் வசதிகள் அத்தனையும் அளித்தாக வேண்டும். இவற்றை நாம் செய்து விட்டோ மானால் அதன் பிறகு வேதாந்தம் பேசலாம்; கடவுளைப்பற்றி நினைக்கலாம். எனவே, இந்தியாவின் 40 கோடி மக்களைப் பற்றிய சிந்தனையிலீடுபட வேண்டும் விஞ்ஞானிகள். விஞ்ஞனம் பரப்புவோம். பண்டிதர் ஜவஹர் மேலும் கூறியதாவது:-<br /><br />நாங்கள் பெரிதும் விரும்புவது<br /><br />சர்க்கார் நடவடிக்கையெடுத்துக் கொள்வரென்று கருதி விஞ்ஞான காங்கிரஸ் இவ்விஷயங்களைக் கவனியாது வெறுமென இருந்து விடாது என நம்புகிறேன். சர்க்கார்கள் நல்லனவாயுமிருக்கலாம்; கெட்டன வாயுமிருக்கலாம்.<br /><br />ஆனால், எல்லா சர்க்கார்களும் ஆமை வேகத்தில் செல்லக்கூடியனவே ஆகும். அவர்களை சுறு சுறுப்பாக்குவது ஒன்றே ஒன்றுதான். மறைமுகமாக அவர்களது எதிர்காலத் தைப் பாதிக்கக் கூடிய பொதுமக்கள் கூச்சலே அது. சர்க்காரிடமிருந்து எதுவுமெதிர்பார்க்க விஞ்ஞானி களுக்கு உரிமை உண்டு.<br /><br />தற்கால இந்திய சர்க்காரின் உறுப்பினன் என்ற முறையில் நான் இதைக் கூற ஆசைப்படுகிறேன். இந்தியாவில் விஞ்ஞானம் பெருத்த அளவில் வளர்ச்சியுற வேண்டுமென நாங்கள் பெரிதும் விரும்பு கிறோம்.<br /><br />விஞ்ஞான ஆராய்ச்சியை விரிவுபடுத்த எங்களாலியன்றதைச் செய்வோம். விஞ்ஞான முன்னேற்றத்திற்கும், அதன் வாயிலாக உலக மக்களின் நலத்துக்கும் நாங்கள் உலக விஞ்ஞானிகளுடன் ஒத்துழைக்க ஆயத்தமாகியுள்ளோம்.<br /><br />Read more: http://viduthalai.in/page-7/78152.html#ixzz2xxlCiFbi<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-11455100794395567612014-04-05T04:50:50.055+05:302014-04-05T04:50:50.055+05:30
மதம் போதிப்பது என்ன?
வாழ்நாள் முழுதும் உழைத்தும...<br />மதம் போதிப்பது என்ன?<br /><br /><br />வாழ்நாள் முழுதும் உழைத்தும் போதிய வருவாய் இன்றி வாழும் மனிதர்கள் அனைவருக்கும் மதத்தினால் போதிக்கப்படுவது என்ன? இந்தப் பூவுலகில் அடங்கி வாழ வேண்டும்; பொறுமையுடன் வாழ வேண்டும். அவ்வாறு வாழ்ந்தால் சொர்க்கத்தின் பரிசு தங்களுக்கு கிடைக்கும் என்ற மன அமைதி கொள்ள வேண்டும் என்பதே.<br /><br />பிறரது உழைப்பின் மீது தம் வாழ்வினை ஆதாரமாகக் கொண்டு வாழும் நபர்கள் மதத்தினால் என்ன போதிக்கப் படுகிறார்கள்? இவ்வுலகில் வறியோர்க்கு வழங்கும் தரும நெறியினைக் கடைப்பிடித்து வாழ்தல் என்ற சுலபமான வழியில் சுரண்டல்காரர்களின் வாழ்வினையும் மதம் நியாயப்படுத்துகிறது.<br /><br />அதாவது, சொர்க்கத்தில் நல்வாழ் வினைப் பெறுவதற்குச் சுலபமான விலையில் பயணச் சீட்டுகள் அவர்களுக்கு விற்பனை செய்யப்படுகின்றன.<br /><br />- மதத்தைப் பற்றி என்னும் நூலில் லெனின்<br /><br />Read more: http://viduthalai.in/page-7/78152.html#ixzz2xxkuNKsQ<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-77200533032711517152014-04-05T04:48:19.943+05:302014-04-05T04:48:19.943+05:30
மத்திய காங்கிரஸ் கூட்டணியிலிருந்து விலகியது ஏன்? ...<br />மத்திய காங்கிரஸ் கூட்டணியிலிருந்து விலகியது ஏன்? கலைஞர் விளக்கம்<br /><br />கேள்வி :- தி.மு. கழகம் மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசிலிருந்து விலக உண்மையான காரணம், இலங்கைத் தமிழர் பிரச்சினை அல்ல என்றும், அலைக்கற்றை வழக்கு தான் காரணம் என்றும் ஜெயலலிதா கோவையில் கூறியிருக் கிறாரே?<br /><br />கலைஞர் :- 1998-1999ஆம் ஆண்டுகளில் சொந்தப் பிரச்சினைகளை-சுயநலக் கோரிக்கைகளை முன் வைத்து மத்தியில் ஆட்சி செய்த வாஜ்பய் அரசை படாத பாடு படுத்தி, இறுதியாக குடியரசுத் தலைவரைச் சந்தித்து வாஜ்பய் அரசுக்கு அளித்துவந்த ஆதரவைத் திரும்பப் பெறக் கடிதம் கொடுத்து, மத்திய அரசையே கவிழ்த்தவரின் எண்ணம் அப்படித்தானே இருக்கும்! அலைக் கற்றை வழக்குக்காக மத்திய அரசிலிருந்து விலகுவது என்றால், அந்த வழக்கில் தி.மு. கழகத்தினரை கைது செய்தபோதே விலகி வந்திருப் போம். ஆனால் அப்போது தி.மு. கழகம் மத்திய அரசி லிருந்து விலக வில்லை. மத்திய அரசிலிருந்து தி.மு.க. விலகிய போது நான் விடுத்த அறிக்கையில், தமிழ் இளை ஞர்களும், வாலிபர்களும் தங்கள் இனம் வாழ - மொழி வாழ - நடத்திய வீர மரணப் போராட்டங்கள்கூட தமிழ் உணர்வற்றவர்களால் எள்ளி நகையாடப்பட்டாலும், அவைகளையெல்லாம் மீறி நமது குறிக்கோள் வெற்றியே முக்கியம் என்ற கொள்கை உறுதியோடு; ஈழப் போரில் மாண்டு மடிந்த போராளிகளுக்கும், அவர்தம் குடும்பத் தாருக்கும் வீர வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிற சூழலில் அவர்தம் காலடி மண்ணெடுத்து, அதனைத் திலகமாக இட்டுக் கொண்டு, அந்தத் திலகத்தின் சாட்சியாக - தமிழ் ஈழத்தில் சிங்களப் பேரினவாதிகளால் நடத்தப்பட்ட - அதிலும் குறிப்பாக ராஜபக்சே அரசின் போர்க் குற்றங்கள் மலிந்த - இரு கருத்துக்கு இடமில்லாத வகையில் இனப் படுகொலையே நடத்தப்பட்டு - உலக அரங்கில் உள்ள நாடுகளின் விவாதத்திற்கு உரியதாக ஆகிவிட்ட இந்தச் சூழலில் உலகில் மிகப் பெரிய ஜனநாயக நாடு என்று மார் தட்டிக் கொள்ளும் இந்தியத் திருநாடு, இந்தப் பிரச்சி னையின் ஆழத்தை உணராமல், விளைவுகளைக் கருதாமல், ஒதுங்கி நிற்பதோ; அல்லது எதிர் மறை கருத்துரைப்பதோ - இந்தி யாவில் காந்தியடிகளும், இலங்கையில் தந்தை செல்வ நாயகமும் சுதந்திரப் போராட்டத்திற்காகத் தேர்ந்தெடுத்து நடத்திய அறவழிகளை - அறவே மூடிவிடுவதற்கான; ஜனநாயக விரோதச் செயல்களாகும். இவைகளையெல்லாம் அய்.நா. மன்றத்திலும், அய்.நா. மனித உரிமைகள் ஆணையத்திலும் நீதி நெறியோடு ஆய்ந்து பார்த்து - அனைத்து நாட்டு மக்களின் இதயத்தையும் குளிர வைக்கும் முடிவுகளை மேற்கொள்வார்கள் என்று எதிர்பார்த்தோம்.<br /><br />ஆனால் அதற்கு மாறாக இழப்பின் உச்சத்திற்கே தள்ளப்பட்ட இலங்கையும், அந்த இலங்கையின் தொப்புள் கொடி உறவு கொண்ட தமிழகம் இடம் பெற்றுள்ள இந்தி யாவும், இந்த ஜனநாயக விரோதச் செயல்களுக்கு கதவு களைத் திறந்து விட்டிருப்பதை இன உணர்வுள்ள எந்த ஒரு தமிழனும் ஏற்றுக் கொள்ள இயலாது. எனவே குதிரை குப்புறத் தள்ளியதும் அல்லாமல், குழியும் பறித்த கதையாக, அமெரிக்காவின் வரைவுத் தீர்மானத்தை பெருமளவுக்கு நீர்த்துப் போக விட்டதோடு; திராவிட முன்னேற்றக் கழகம் முன் மொழிந்த திருத்தங்கள் எவற்றையும் இந்திய அரசு சிறிதும் பரிசீலனையும் செய்யவில்லை. எனவே, ஈழத் தமிழருக்கு எந்த வகையிலும் பயன்படாத சூழ்நிலை களே உருவாக்கப்பட்டுள்ள நிலையில், இதற்குப் பிறகும் இந்திய மத்திய ஆட்சியில் திராவிட முன்னேற்றக் கழகம் நீடிப்பது தமிழினத்திற்கே இழைக்கப்படும் பெரும் தீமை என்பதால், திராவிட முன்னேற்றக் கழகம் மத்திய அமைச்சரவை யிலிருந்தும், அய்க்கிய முற்போக் குக் கூட்டணியிலிருந்தும் உடனடியாக விலகிக் கொள்வதென முடிவு செய்யப் பட்டுள்ளது என்ற வரிகளை மீண்டும் ஒரு முறை படித்தால், தி.மு.கழகம் எதற்காக மத்திய அரசிலிருந்து விலகியது என்பதைத் தெரிந்து கொள்ள முடியும். வாதத்திற்கு மருந்து உண்டு, விதண்டா வாதத்திற்கு மருந்து ஏது?<br /><br />- (முரசொலி, கலைஞர் பதில்கள், 4.4.2014)<br /><br />Read more: http://viduthalai.in/page-3/78117.html#ixzz2xxkGrcgX<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-43653121644729889442014-04-05T04:47:12.454+05:302014-04-05T04:47:12.454+05:30
ஊழல் மன்னன் மோடி பராக்! பராக்!!
* 5 ஆண்டுகளில் ...<br />ஊழல் மன்னன் மோடி பராக்! பராக்!!<br /><br /><br />* 5 ஆண்டுகளில் குஜராத் முதல்வர் வணிக விமானங்கள் அல்லது அரசு விமா னங்களை பயன்படுத்தாமல் ஏறத்தாள 200 பயணங்களுக்கு மேல் தனியார் சொகுசு விமானங்களை பயன்படுத்தியுள்ளார் எங்கிருந்து வந்தது அவ்வளவு பணம்?<br /><br />* குஜராத்தில் டாட்டா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு ஒரு சதுர மீட்டர் ரூபாய் 900 என்ற மதிப்பில் 11000 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. ஆனால் அந்த நிலத்தின் அன்றைய சந்தை மதிப்பு ஒரு சதுர மீட்டருக்கு ரூபாய் 10,000 இதன் மூலம் அரசுக்கு இழப்பு ரூபாய் 33000 கோடி.<br /><br />* குஜராத் அரசு தடை செய்யப்பட்ட நிறுவனத்திடமிருந்து கால்நடை தீவ னத்தை 5 கிலோவிற்கு ரூ 240 வீதம் வாங்கி யுள்ளது ஆனால் அதன் சந்தை மதிப்பு 5 கிலோவிற்கு ரூ 120 முதல் 140 வரை தான்!!!<br /><br />*அரசு நிலத்தை அரசிடமிருந்து அதானி என்னும் பெரு நிறுவனம்<br /><br />ஒரு சதுர மீட்டர் 50 பைசாவுக்கு வாங்கி அதே நிலத்தை அரசு நிறு வனத்துக்கு ஒரு சதுர மீட்டர் 500 ரூபாய்க்கு குத்தகைக்கு விட்டதில் பல லட்சம் கோடி ஊழல் (மோடி ஊரு ஊராக சுற்றுவது அதானியின் சார்டர்ட் விமானங் களில் தான்)<br /><br />* காண்ட்லா துறைமுகத்தின் 16000 ஏக்கர் நிலத்தை, சந்தை மதிப்பில் 6% ஆக இருக்க வேண்டிய குத்தகை தொகையை ஏக்கருக்கு வெறும் ரு 144 வீதம் ஏலம் விட்டதில் 2 லட்சம் கோடி ஊழல்!!<br /><br />* கிருஷ்ணா கோதாவரி ஆற்றுபடுகை யில் எரிவாயு கண்டுபிடிக்கும் குஜராத் மின்கழக திட்டம் வெளிநாட்டு நிறுவனத் திற்கு எந்த ஏலத்தொகையுமின்றி விற்றதில் இழப்பு 20000 கோடி!!!<br /><br />ஓய்வு பெற்ற நீதிபதி எம்.பி. ஷா தலைமையில் மோடியின்மீது 17 ஊழல் கள் பற்றி விசாரணை நடப்பது ஏன்? வாக்காளர் களே சிந்திப்பீர்!<br /><br />- அபு ரயான்<br /><br />Read more: http://viduthalai.in/e-paper/78112.html#ixzz2xxjkj0sf<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-54116343656095552192014-04-05T04:43:49.623+05:302014-04-05T04:43:49.623+05:30
சிந்தித்துப் பார்
நீ கிணற்றுத் தவளையாக இருக்க ...<br />சிந்தித்துப் பார்<br /> <br /><br />நீ கிணற்றுத் தவளையாக இருக்க விரும்புகிறாயா? அல்லது வேடந் தாங்கலில் வந்து இளைப்பாறிப் போகும் வெளிநாட்டுப் பட்சியாக இருக்க விரும்புகிறாயா? மனிதனே சிந்தித்துப் பார். - (விடுதலை, 22.9.1967)<br /><br />Read more: http://viduthalai.in/page-2/78121.html#ixzz2xxj9RGdh<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-39268341821695195422014-04-05T04:42:44.258+05:302014-04-05T04:42:44.258+05:30
நாகம்மையார் குழந்தைகள் இல்லத்தில் சேர்க்கை
திரு...<br />நாகம்மையார் குழந்தைகள் இல்லத்தில் சேர்க்கை<br /><br /><br />திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்தில் சேர்ந்து கல்வி பயில நான்காம் வகுப்பு முதல் பனிரெண் டாம் வகுப்பு முடிய புதிய மாணவிகள் சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவம் 5.4.2014 தேதி காலை 10 மணிமுதல் மாலை 5 மணிவரை மேற்படி இல்லத்தில் வழங்கப்படும். இவ்வில்லத்தில் தங்கி கல்வி பயிலும் மாணவிகளுக்கு அனைத்தும் இலவசமாக அளிக்கப்படும்.<br /><br />சேர்க்கைக்கான விதிமுறைகள்:<br /><br />1. தாய் - தந்தை இருவரும் இல்லாதவராக இருத்தல் வேண்டும்<br /><br />2. பெற்றோர் ஊனமுற்றோர்களாக இருந்தால், அவர்களின் குழந்தைகளுக்கு முன்னுரிமை வழங்கப் படும் (மருத்துவச் சான்றிதழ் இணைக்கப்படவேண்டும்.<br /><br />3. ஆண்டு வருமானம் ரூ.24,000/-த்திற்குக் குறைவாக இருத்தல் வேண்டும்.<br /><br />4. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் இவ்வில் லத்திற்கு வந்து சேரவேண்டிய கடைசி நாள்: 31.5.2014<br /><br />காப்பாளர்<br />நாகம்மையார் குழந்தைகள் இல்லம்,<br />பெரியார் நகர், திருச்சி-21<br /><br />Read more: http://viduthalai.in/page-8/78120.html#ixzz2xxir7I3u<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-90086026817635350092014-04-05T04:42:01.117+05:302014-04-05T04:42:01.117+05:30
நம்பத்தகுந்தவரா - சிந்திப்பீர்! ஜெயலலிதாபற்றி வாஜ...<br />நம்பத்தகுந்தவரா - சிந்திப்பீர்! ஜெயலலிதாபற்றி வாஜ்பேயி கூறியது என்ன?<br /><br />கேள்வி: ஜெயலலிதாவின் அரசியல் நடத்தும் விதம்பற்றி கூட்டணி அமைக்கும் போதே நீங்கள் அறிந்திருக்கவில்லையா?<br /><br />வாஜ்பேயி: இல்லை, நியாயமற்ற நிபந்தனைகளை நிறைவேற்றும்படி அவர் சொல்லுவார் என்று நாங்கள் எதிர்பார்க்க வில்லை. கூட்டணி அமைக்கப்படும் பொழுது இதைப்போன்ற நிபந்தனைகளை அவர் வைக்கவில்லை. விதித்திருந்தால், கூட்டணியை அமைத்திருக்கமாட்டோம்.<br /><br />கேள்வி: சென்னையில் நடந்த பொதுக் கூட்டத்தில் ஜெயலலிதா நிறைய தொந் தரவுகளைக் கொடுத்ததாகச் சொன்னீர்கள், என்ன தொந்தரவு கொடுத்தார்?<br /><br />வாஜ்பேயி: அ.தி.மு.க.வுடன் நல்ல நம்பிக்கையின் அடிப்படையில்தான் கூட் டணி அமைத்தோம். ஆனால், அரசாங்கம் அமைவதற்கு முன்பாகவே பிரச்சினைகள் ஆரம்பித்தன. தமிழ்நாட்டில், அ.தி.மு.க. வுடனான கூட்டணி மகத்தான வெற்றி பெற்ற பிறகும்கூட ஜனாதிபதிக்கு ஆட்சி அமைக்க ஆதரவுக் கடிதம் கொடுக்க மறுத்தார் ஜெயலலிதா. மிகுந்த தாமதம் மற்றும் நிச்சயமின்மைக்குப் பிறகே அந்தக் கடிதத்தை அவர் கொடுத்தார். சுதந்திர தினக் கொண்டாட்டம் உள்பட பல்வேறு சமயங்களில் ஆதரவை வாபஸ் பெறு வோம் என்கிற மிரட்டலை அ.தி.மு.க. விடுத்தது. ஒரு மாபெரும் விலையுடன்தான் அ.தி.மு.க. ஆதரவு எங்களுக்குக் கிடைத் தது என்பதை விரைவில் நாங்கள் உணர்ந்தோம்.<br /><br />கருணாநிதியின் அரசைக் கலைக்க வேண்டும் என்பதுதான் அந்த விலை. அது மட்டுமல்ல; பல ஊழல் வழக்கு களிலிருந்து ஜெயலலிதாவை மத்திய அரசு விடுவிக்கவேண்டும் என்பதும் அவருடைய நிபந்தனையாக இருந் தது. அந்த விலையைக் கொடுக்க நாங்கள் மறுத்தோம். மிரட்டலுக்கு அடி பணிந்து கொள்கைகளை விட்டுக் கொடுக்க நாங்கள் விரும்பவில்லை.<br /><br />அவருடைய நியாயமற்ற நிபந்தனைகளை நாங்கள் நிறைவேற்றப் போவதில்லை என்பதை உணர்ந்தவுடன் அவர் ஆதரவை வாபஸ் வாங்கிக் கொண்டார். எங்களைக் கண்டிக் கும் சதியில் காங்கிரசுடன் கைகோத்துக் கொண்டார்.<br />(குமுதம், 20.9.1999)<br /><br />தேர்தலுக்குப் பிறகு பி.ஜே.பி.யும் - அ.இ.அ.தி.மு.க.வும் கூட்டணி வைப்பதாக ஒரு விவாதத்திற்காக ஒப்புக்கொண்டாலும், ஜெயலலிதா சுயநலத்துக்காக, நிபந்தனைகளை வைக்கமாட்டாரா?<br /><br />வாஜ்பேயிக்கே தண்ணிக் காட்டியவர் - மோடி எம்மாத்திரம்?<br /><br />Read more: http://viduthalai.in/page-8/78127.html#ixzz2xxigsTch<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-59926338193466914782014-04-04T06:13:31.724+05:302014-04-04T06:13:31.724+05:30
துக்ளக் தர்பார்!
கேள்வி: நரேந்திர மோடி பிரதமர் ...<br />துக்ளக் தர்பார்!<br /><br /><br />கேள்வி: நரேந்திர மோடி பிரதமர் வேட்பாளர் என்று முடிவு ஆன நிலை யிலும், பா.ஜ.க.வில் அத்வானி, சுஷ்மா சுவராஜ், ராஜ்நாத்சிங், அருண்ஜேட்லி என பிரதமர் கனவு வேட்பாளர்கள் உள்ளார்களே?<br /><br />பதில்: இதைவிடக் கவலைக்கு இட மளிக்கக்கூடியது - தேர்தலுக்குப் பின் தோன்றக்கூடிய நிலை. மோடி பிரதமர் இல்லையென்றால், நம்மை ஆதரிக்கப் பல கட்சிகள் தயாராக இருக்கின்றன என்று ஒரு புரளியைக் கிளப்பிவிட்டு, வேறு யாராவது சிலர் தங்களை முன்னி றுத்திக் கொள்ளலாமே! அதை நினைத் தால்தான் கவலையாக இருக்கிறது.<br />(துக்ளக், 9.4.2014)<br /><br />இதன்மூலம் மோடிக்கு இரு பக்கமும் இடி என்பதை திருவாளர் சோ ராம சாமியே ஒப்புக்கொள்கிறார். பி.ஜே.பி. என்பது உள்கட்சிக் குழப்பம் மலிந்த நெல் லிக்காய் மூட்டை என்பதை ஒப்புக் கொண்டு விட்டார்.<br /><br />சோவே மனம் விட்டு விட்டார் என்பதுதான் உண்மை.<br /><br />கேள்வி: காங்கிரசையும், தி.மு.க.வை யும் மட்டும்தானே ஜெயலலிதா கடுமை யாக எதிர்த்துப் பிரச்சாரம் செய்கிறார். தனக்குக் கடும் போட்டி தரும் பா.ஜ.க. வையோ, அதன் கூட்டணி கட்சி களையோ விமர்சிப்பதில்லையே, ஏன்?<br /><br />பதில்: அ.தி.மு.க.வும், பா.ஜ.க.வும் கூட்டணி அமைத்திருந்தால், அது வரு கின்ற தேர்தல் வெற்றிக்கு மட்டுமின்றி, அது சீரான, சிக்கல் இல்லாத வகையில் மத்திய ஆட்சி அமைப்புக்கும் உதவியி ருக்கும் என்ற எண்ணமுடைய என் னிடம் - இந்தக் கேள்வியைக் கேட்பதும் ஒன்றுதான்; கேட்காமல் இருப்பதும் ஒன்றுதான்.<br />(துக்ளக், 9.4.2014)<br /><br />கேட்ட கேள்விக்குப் பதில் இருக் கிறதா?<br /><br />இதற்குப் பெயர்தான் பார்ப்பனப் புத்தி. இந்த நழுவல் பேர்வழிதான் அவாள் மொழியில் அறிவு ஜீவியாம்!<br /><br />இவர்களின் அறிவு நாணயம் எந்தத் தரத்தில் இருக்கிறது என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டே!<br /><br />ஜெயலலிதா அம்மையார் தன்னை எதிர்த்து நிற்கும் பி.ஜே.பி.யைப்பற்றி விமர் சிக்காதது - அரசியல் நேர்மையற்ற - சூது - தந்திரம்! இதை ஒப்புக்கொள்ள சோவுக் குத் தயக்கம். பூணூல் பாசம் பொல்லாதது ஆயிற்றே!<br /><br />கேள்வி: பா.ஜ.க. தனிப் பெரும்பான்மை பெறுவது அவ்வளவு எளிதல்ல - என்று மம்தா பானர்ஜி கூறியுள்ளாரே, சரியா?<br /><br />பதில்: உண்மைதான். பா.ஜ.க. மட்டுமே (கூட்டணிக் கட்சிகளின் எண்ணிக்கை இல்லாமல்) பாராளுமன்றத்தில் 272 இடங் களைப் பெறுவது எளிதல்லதான்.<br />(துக்ளக், 9.4.2014)<br /><br />மோடி அலை வீசுகிறது - மோடி அலை வீசுகிறது! என்று பீலா விட்டது எல்லாம் அசல் டூப்பு என்பதை சோ அய்யர் ஒப்புக்கொண்டுவிட்டாரே!<br /><br />Read more: http://viduthalai.in/page-8/78063.html#ixzz2xsFC5Sz9<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-36093023882259049222014-04-04T06:12:52.530+05:302014-04-04T06:12:52.530+05:30
உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட குடும்பத்திற்கு ஆற...<br />உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட குடும்பத்திற்கு ஆறுதல் கூறாத மோடியை மக்கள் எப்படி நம்புவார்கள்? சரத்பவார் கேள்வி<br /><br /><br />அலிபாக், ஏப். 3-குஜராத் கலவரத்தில் உயிருடன் எரித்து கொல்லப்பட்ட காங்கிரஸ் எம்பியின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறாத மோடியை மக்கள் எப்படி நம்புவார்கள் என்று சரத்பவார் கேள்வி எழுப்பியுள்ளார்.<br /><br />மகாராஷ்டிர மாநிலம், ரெய்காட் மக்களவை தொகு தியில் போட்டியிடும் தேசிய வாத காங்கிரஸ் வேட்பாளர் சுனில் தத்கரேயை ஆதரித்து மத்திய அமைச்சர் சரத் பவார் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசிய தாவது:<br /><br />நாட்டின் நலனுக்கு எப்படி உறுதி தருவார்?<br /><br />குஜராத் கலவரத்தில் உயிருடன் எரித்துக் கொல் லப்பட்ட காங்கிரஸ் எம்பி யின் குடும்பத்தைச் சந்தித்து ஆறுதல் கூறுவது குறித்து கவலைப்படாத மோடியை மக்கள் எப்படி நம்புவார் கள்? அப்படிப்பட்ட மனிதர் நாட்டின் நலனுக்கு எப்படி உறுதி தருவார்?<br /><br />நேரு காலத்தில் இருந்து பல மக்களவை தேர்தல் களை நாங்கள் பார்த்திருக்கி றோம். ஆனால், பிரதமர் வேட்பாளரை அறிவித்து தேர்தலை எதிர்கொள்வது இதுவே முதன்முறையா கும். இவ்வாறு பாஜக செய் வது அரசியலமைப்பை இழிவு படுத்துவதாகும். காங்கிரஸ் இல்லாத இந்தி யாவை உருவாக்க வேண் டும் என்று மோடி கூறு கிறார்.<br /><br />காங்கிரஸ்தான் ஆங்கிலேயரை விரட்டி இந் தியாவிற்கு சுதந்திரம் வாங் கிக் கொடுத்தது. பாஜக தலைவர்கள் இந்த நாட் டிற்காக என்ன தியாகம் செய்தார்கள். இவர்களை தேர்தலில் நாம் வெற்றிய டைய விடக்கூடாது என்று சரத்பவார் கூறியுள்ளார்.<br /><br />Read more: http://viduthalai.in/page-8/78057.html#ixzz2xsF3dcwl<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-12893138645473897682014-04-04T06:12:20.966+05:302014-04-04T06:12:20.966+05:30
நான் செய்தது குற்றமல்ல; புரட்சி முன்னாள் மத்திய அ...<br />நான் செய்தது குற்றமல்ல; புரட்சி முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.இராசா<br /><br /><br />உதகை, ஏப்.3- தொலைத் தொடர்புத் துறையில் நான் செய்தது குற்றமல்ல; புரட்சி என்று உதகை பிரச்சாரக் கூட் டத்தில் ஆ.இராசா பேசினார்.<br /><br />நீலகிரி மக்களவைத் தொகுதியில் 2 ஆவது முறை யாக போட்டியிடும் திமுக வேட்பாளர் ஆ.இராசா புதன்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார். அதன் பின், ஆட்சியர் அலுவலகம் அருகே கூடியிருந்த திமுக தொண்டர்களிடையே பேசி யதாவது:<br /><br />நீலகிரி தொகுதிக்கு கலை ஞரால் மீண்டும் ஒப்படைக் கப்பட்டுள்ளேன். கடந்த 5 ஆண்டுகளில் இத்தொகுதி யில் நான் ஆற்றிய பணிகளை திரும்பத், திரும்ப பட்டியலி டுவதில் அர்த்தமில்லை. ஆனால், அந்த பணிகளின் போதுதான் எனக்குச் சோதனை ஏற்பட்டது. அமைச்சர் பத வியிலிருந்து விலகவேண் டிய நிலை உருவானது.<br /><br />அதன்பின், இதுவரை யிலும் நான் அளித்த அனைத்து வாக்குமூலங்களி லும் எந்தவிதமான மாற்ற முமில்லை. ஆனால், கடந்த பல ஆண்டுகளுக்கு முன்னர் நடந்ததாக கூறப்பட்ட வற்றை ஜெயலலிதா தற் போது பேசி வருகிறார். அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக ஏற்கெனவே சிபிஅய்யும், நாடாளுமன்றக் கூட்டுக்குழுவும் விசாரணை நடத்தி முடித்த பின், அது தொடர்பான விளக்கத்தை யும் அளித்திருந்தேன்.<br /><br />ஆனால், அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக பிரதமர் எனக்கு எழுதிய கடிதத்தில் இருந்த அறிவுரையை கேட்காமல் நான் செயல்பட்டதாக ஜெய லலிதா கூறிவருவது உண் மைக்குப் புறம்பானது.<br /><br />இது தொடர்பாக, நாடா ளுமன்றக் கூட்டுக்குழுவுக்கு நான் அனுப்பிய 102 பக்க விளக்க அறிக்கை மீது விவா தம் நடத்தப்பட்டபோது, அதில் அதிமுக சார்பில் தம்பிதுரையும், மைத்ரேய னும் பங்கேற்றிருந்தனர்.<br /><br />ஆனால், அது எதுவுமே தெரியாமல் ஜெயலலிதா தற்போது பேசி வருகிறார். இதுதொடர்பாக, என்னுடன் நேரடியாக விவாதிக்க அவர் தயாரா என்பதை அறிவிக்க வேண்டும். அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக நான் எந்தக் குற்றமும் செய்ய வில்லை. நான் செய்தது புரட்சியேயாகும். புரட்சிக் காரனை எவ்வகையிலும் குற்றம் சாட்டக்கூடாது.<br /><br />ஸ்பெக்ட்ரம் அலைக் கற்றை ஒதுக்கீடு தொடர்பாக நடைபெற்ற சம்பவங்களை துண்டறிக்கையாக தயாரித் துள்ளேன். இது அனைத்து வாக்காளர்களின் வீடுகளுக் கும் தேடி வரும். அப்போது அனைவருக்கும் உண்மை தெரியும் என்றார்.<br /><br />Read more: http://viduthalai.in/page-8/78059.html#ixzz2xsEiqkt3<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-53473727057988160832014-04-04T06:10:11.127+05:302014-04-04T06:10:11.127+05:30செவ்வாயில் எரிமலைகள்
செவ்வாய் கோளில் பழமையான சூப...செவ்வாயில் எரிமலைகள்<br /><br />செவ்வாய் கோளில் பழமையான சூப்பர் வால்கேனோ எனப்படும் பெரிய எரிமலைகள் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.<br /><br />பல கோடி ஆண்டுகளுக்கு முன்னர் செயலில் இருந்த எரிமலைகள் அங்கு இருப்பதை அறிவியலாளர்கள் கண்டுபிடித்திருந்தாலும், தற்போது அறியப்பட்டுள்ள சூப்பர் வால்கேனோ-க்கள் இதற்கு முன்னதாக செயலில் இருந்ததற்கான அடையாளங்கள் தெரியவில்லை.<br /><br />செவ்வாய் கோளின் வடக்கு பகுதியில் இவை அமைந்திருக்கின்றன. அந்த கிரகத்தை ஆய்வு செய்து வரும் விண்கலங்கள் அனுப்பிய புகைப்படங்களிலிருந்து இந்த தகவலை லண்டனின் இயற்கை, வரலாற்று அருங்காட்சியகம் மற்றும் நாசா ஆராய்ச்சியாளர்களும் இணைந்து கண்டறிந் துள்ளனர்.<br /><br />பிற எரிமலைகளிலிருந்து வெளியேற்றப்பட்ட பிழம்பு மற்றும் சாம்பல் உள்ளிட்டவைக்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. முன்னொரு காலத்தில் செயலில் இருந்த எரிமலைகளினால் கோளின் வெப்பநிலை மாற்றம் பெற்றது என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.<br /><br />Read more: http://viduthalai.in/page-7/78073.html#ixzz2xsEOWAie<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-36895982351525341522014-04-04T06:09:43.770+05:302014-04-04T06:09:43.770+05:30உங்கள் மூளை சுத்தமா இல்லையா...?
இரவில் நன்றாக தூங...உங்கள் மூளை சுத்தமா இல்லையா...?<br /><br />இரவில் நன்றாக தூங்குவதால் மூளை சுத்தமாகிறது என்பது ஆய்வில் உறுதியாகியுள்ளது. ஆழ்ந்த உறக்கத்தில் தான் மூளையின் நச்சு கழிவுகள் வெளியேறுவதாக இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.<br /><br />ஒருவர் தூங்கும் போது அவரது மூளையின் அணுக் களிடையே உள்ள இடைவெளி அதிகரிப்பதால் இந்த கழிவுகள் வெளியேறுகின்றன என்பதை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.<br /><br />உறக்க நேரத்தில்தான் மூளை தன்னை தானே சுத்திகரிக்கிறது என்பதை விஞ்ஞானிகள் குழு தங்களது ஆய்வில் தெரிந்துக் கொண்டது. ஒரு எலியின் தலையில் மய் போன்ற திரவத்தை செலுத்திய விஞ்ஞானிகள், அந்த எலி உறங்கும்போது அந்த திரவம் வெளியேறியதை கண்டறிந்தனர்.<br /><br />அதுவே அந்த எலி விழித்திருக்கும்போது திரவம் வெளியே வராத நிலை இருந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனோடு மூளை அணுக்களுக்கு இடையே உள்ள இடைவெளியும், உறக்கத்தின்போது 60 சதவீதம் அதிகரிப்பதும் தெரியவந்துள்ளது.<br /><br />Read more: http://viduthalai.in/page-7/78073.html#ixzz2xsEIIOrb<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-18010810307040073252014-04-04T06:00:30.459+05:302014-04-04T06:00:30.459+05:30
பொருளல்ல...
மனக் குறையில்லாமல் வாழ வேண்டுமென்றால...<br />பொருளல்ல...<br /><br />மனக் குறையில்லாமல் வாழ வேண்டுமென்றால், வசதி தேடிக் கொள்ள வேண்டுமென்பது பொருளல்ல; இருப்பதைக் கொண்டு குறையில்லாமல் வாழவேண்டும். - (விடுதலை, 10.6.1970)<br /><br />Read more: http://viduthalai.in/page-2/78038.html#ixzz2xsBwqgHP<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-79075126031185177152014-04-04T05:48:51.648+05:302014-04-04T05:48:51.648+05:30
காரணம்; முலாயம்சிங், மாயாவதி ஆகியோர் இந்த சமூக நீ...<br />காரணம்; முலாயம்சிங், மாயாவதி ஆகியோர் இந்த சமூக நீதி - மண்டல் காற்று வீசியதைப் பயன்படுத்தி அல்லவா ஆட்சி, அதிகாரத்தைக் கைப்பற்றினர் என்று கணக்குப்போட்டு, அதே குரலில் முன்பு வி.பி. சிங்மீது எந்தக் குற்றச் சாற்றினைக் கூறினார்களோ, அதற்கு மாறாகச் சிறிதும் லஜ்ஜை இல்லாமல், இப்போது ஏதோ சமூகநீதிக்காகவே திடீர் அவதாரம், எடுத்ததுபோல வாக்காளர்களை ஏமாற்றிட முனைந்து, அதற்கே வீர வசனங்கள் பேச ஆரம்பித்துள்ளனர்.<br /><br />சமூகநீதியைக் கொள்கையாக ஏற்று பிஜேபி. அறிவிக்குமா?<br /><br />இது ஒரு தேர்தல் உத்தி, வியூகம். அடிப்படையில் ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்திற்கு நேர் விரோதமாகும்.<br /><br />குஜராத் வளர்ச்சி மாடல் என்று கூறுகிறார்களே அங்கே இடஒதுக்கீடு - சமூகநீதி ஓட்டங்கள் - எவ்வளவு விழுக்காடு அமலில் உள்ளன? ஆர்.எஸ்.எஸ். இதை ஒரு கொள்கை முடிவாக ஏற்று ஒரு தேர்தல் அறிக்கையை - பா.ஜ.க. பெயரில்- வெளியிடத் தயாரா?<br /><br />மிகப் பெரும்பான்மையான பிற்படுத்தப்பட்ட மக்களின் கண்களில் மிளகாய்ப் பொடி தூவி, அவர்கள் கையில் உள்ள வாக்குகளைப் பறிக்கும் திட்டம் இது என்பதல்லாமல் வேறு என்ன?<br /><br />கலைஞர்ஆட்சியில் முஸ்லீம்களுக்கு இடஒதுக்கீடு<br /><br />சமூகநீதி - இடஒதுக்கீடு என்பது அனைவர்க்கும் அனைத்தும் என்பதால்தானே தமிழ்நாட்டில் - கலைஞர் ஆட்சியில் - இந்தியாவுக்கு முன்னோடியாக இஸ்லாமியச் சிறுபான்மையினருக்கு முதல் கட்டமாக மூன்றரை விழுக்காடு இடஒதுக்கீடு தரப்பட்டது; அதுபோலவே பிற்படுத்தப்பட்ட கிறித்துவர்களுக்கும் முன்பே இடஒதுக்கீடு வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டது.<br /><br />உ.பி.யில், குஜராத்தில் பிஜேபி சார்பில் முஸ்லிம் வேட்பாளர் ஒருவர்கூடக் கிடையாது!<br /><br />குஜராத்தில் என்ன நடக்கிறது? மக்கள் தொகையில் 9 சதவிகிதமாக உள்ள இஸ்லாமியர் இதுவரை சட்டமன்றத்தில் ஒருவர்கூட கிடையாது. இதைவிடக் கொடுமை வேறு உண்டா? இதைப் பெருமையான சாதனை என்றும், இனி இப்படித்தான் எல்லா இடங்களிலும் நடைபெற வேண்டும் என்றும் இந்து நாளேட்டில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் (18.10.2013இல்) பேட்டி கொடுத்து மகிழ்கிறாரே!<br /><br />உத்தரப்பிரதேசத்தில் பெருவாரியான இடங்களை மோடியின் ஆர்.எஸ்.எஸ். (பாஜக என்பது வெளி வேஷம்) வென்றால்தானே நாடாளுமன்றத்தில் அதன் இலக்கு 272 இடங்கள் என்பதுமுடியும்?<br /><br />அதற்காக 80 இடங்களில் 78 இடங்கள் மோடி கட்சி போட்டியிடுகிறது; (இரண்டு கூட்டணிக் கட்சிக்கு)<br /><br />இந்த 78 இடங்களில் ஒரே ஒரு இஸ்லாமியர்கூட வேட்பாளராக நிறுத்தப்படவில்லை; இதுதான் குஜராத் மாடல் புரிந்து கொள்ளவேண்டும் பொது வாக்காளர்கள்!<br /><br />அங்குள்ள மக்கள் தொகையில் 17 விழுக்காடு இஸ்லாமியர்கள்; அவர்களுக்கு ஒரு இடம்கூட கிடையாது - பா.ஜ.க. வேட்பாளர் பட்டியலில்.<br /><br />பார்ப்பனர்களுக்கு 20 சதவிகிதம் வாய்ப்பு!<br /><br />ஆனால், சுமார் 12 விழுக்காடு உள்ள உ.பி. பார்ப்பனர்களுக்கு - 80 இடங்களில் இவர்களது வேட்பாளர்கள் 16 பேர்! - அதாவது 20 விழுக்காடு!<br /><br />இன்னொரு வேடிக்கை - விசித்திரம் - மாய வலை. பிற்படுத்தப்பட்டவருக்கு (ளிஙிசி) 24 இடம் அதாவது ஏறத்தாழ மூன்றில் ஒரு பகுதி (33 விழுக்காடு) பிற்படுத்தப்பட்டோர்மீது திடீர் கரிசனம்!<br /><br />இவர்களது தந்திரம் வியூகம் - பிற்படுத்தப்பட்டவர்களை, தாழ்த்தப்பட்டவர்களை முன்னிறுத்தி, சிறுபான்மையோரை முதலில் ஒதுக்கிவிட்டால், பிறகு ஆட்சியைப் பிடித்த பிறகு, மற்றவர்களை அடுத்த கட்டத்தில் பிடித்துக் கீழே தள்ளிவிட அதிக காலம் பிடிக்காது என்பதுதான்.<br /><br />தேவை பெரியார் நுண்ணாடி!<br /><br />இதை பெரியார் கண்ணாடி என்ற நுண்ணாடி போட்டுப் பார்த்தால் தான் புரியும்.<br /><br />இது புரியாமல், சில சீட்டுகளுக்காக மோடி வலையில் விழுந்தவர்கள் பரிதாபத்திற்குரியவர்கள் என்பது போகப் போகப் புரியும்.<br /><br />சமூகநீதியில்கூட போலிகளும், கள்ள நாணயங்களும் பெருகி விட்டன - எச்சரிக்கை! எச்சரிக்கை!!<br /><br /> <br /><br />கி.வீரமணி <br />தலைவர், திராவிடர் கழகம்<br /><br /><br />முகாம் : திண்டுக்கல்<br /><br />3.4.2014<br /><br />Read more: http://viduthalai.in/e-paper/78037.html#ixzz2xs8h7AKlதமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-44549599407910204002014-04-04T05:48:46.973+05:302014-04-04T05:48:46.973+05:30பி.ஜே.பி.யின் வேட்பாளர் பட்டியலைப் பாரீர்! உ.பி.யி...பி.ஜே.பி.யின் வேட்பாளர் பட்டியலைப் பாரீர்! உ.பி.யில், குஜராத்தில் ஒரு முஸ்லீம்கூட நிறுத்தப்படவில்லை<br /><br />பி.ஜே.பி.யின் வேட்பாளர் பட்டியலைப் பாரீர்!<br /><br />உ.பி.யில், குஜராத்தில் ஒரு முஸ்லீம்கூட நிறுத்தப்படவில்லை<br /><br />மூன்று சதவீதப் பார்ப்பனர்களுக்கோ 20 சதவிகித வாய்ப்பு!<br /><br />இவர்களை ஆதரிக்கலாமா? வாக்காளர்களே சிந்திப்பீர்!<br /><br />100 அம்சங்களைக் கொண்ட தி.மு.க.வின் தேர்தல் அறிக்கைக்கு ஈடு இணை ஏது?<br /><br />பி.ஜே.பி. வெளியிட்டுள்ள வேட்பாளர்கள் பட்டியலில் உத்தரப்பிரதேசம், குஜராத் மாநிலங்களில் ஒரே ஒரு முஸ்லீம் வேட்பாளர்கூட அறிவிக்கப்படவில்லை; ஆனால் உ.பி.யில் பார்ப்பனர்களுக்கோ 20 சதவிகித வாய்ப்பு! சமூக நீதிக்கு எதிரான இந்த அணியைத் தோற்கடிப்பீர் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:<br /><br />எப்பாடுபட்டேனும், யாருடன் கூட்டுச் சேர்ந்தாவது, மத்தியில் ஆட்சியைப் பிடித்தாக வேண்டும் என்ற கட்டாயத்திற்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்புத் தள்ளப்பட்டிருப்பதால், அதனுடைய இந்துத்துவா கொள்கையை அப்படியே தனது குஜராத் மாநிலத்தில், ஒரு பரிசோதனைக் கூடம் போல நடத்தி சிறுபான்மையினரான இஸ்லாமியர்களைப் பழி வாங்கிய நிகழ்வுகள் ஏராளம்! ஏராளம்!! கோத்ரா மற்றும் பல போலி என் கவுண்ட்டர்கள் வரை செய்ததில் சளைக்காதவராக திகழ்ந்ததால் மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தேர்தலை முன்னணியிலிருந்து நடத்தி வருகிறது.<br /><br />இடத்திற்கேற்ப வேடம் போடும் மோடி!<br /><br />அதற்காக அது ஆங்காங்கே இடத்திற்குத் தக்கபடி வேடத்தை அவ்வப்போது ஏற்கும்படி மோடியை இயக்கி வருகிறது.<br /><br />1992-இல் மண்டல் குழுப் பரிந்துரையின் ஒரு பகுதியை வேலை வாய்ப்பை - அமல்படுத்த ஆணை பிறப்பித்து, சமூகநீதியை நடைமுறைப்படுத்தக் காரணமான சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்களது ஆட்சியை 9 மாதங்களில் ஆர்.எஸ்.எஸ்ஸின் ஆணைப்படி பா.ஜ.க. கவிழ்த்தது!<br /><br />மண்டல் நாயகர் வி.பி. சிங் ஆட்சியைக் கவிழ்த்தவர்கள் யார்?<br /><br />அதற்காகவே மண்டலுக்கு எதிராக இராமன் கோவில் மண்டல் Vs மந்திர் என்ற முழக்கம் எழக் காரணமாகியது.<br /><br />அன்றைய பிரதமர் வி.பி.சிங்கிற்கு எதிராக மாணவர்களையும், முன்னேறிய ஜாதி என்ற ஆர்.எஸ்.எஸ். அமைப்பையும் (ABVP) தூண்டி கலவரங்களைத் திட்டமிட்டு நடத்தியது; காங்கிரசும் மறைமுகமாக இதை ஆதரித்து சமூகநீதிக்காக ஆட்சியை இழந்த வி.பி. சிங்கை ஜாதிமூலம் நாட்டைத் துண்டாடுபவர் “He is a Castesist” என்று பழி தூற்றினர்!<br /><br />உ.பி.யிலோ புதிய ராகம் ஏன்?<br /><br />ஆனால் அதே உ.பி.யில் 22 ஆண்டுகளுக்குப் பின், அங்கு வேகமாக வீசும் மண்டல் சமூக நீதிக் காற்றைப் பயன்படுத்தி, அதே ஆர்.எஸ்.எஸ். அமைப்பு, மோடி தனது முதல் பிரச்சாரத்தினைச் செய்யத் துவங்கும்போதே, நான் மிகவும் பிற்படுத்தப்பட்டவன். இனி (OBC & Dalits) பிற்படுத்தப்பட்டவர்களுக்கும், தாழ்த்தப்பட்டவர்களுக்கும் தான் முனைப்பான எதிர்காலம் என்கிறபடி நடப்பேன்! என்று புதிய ராகம் பாடினார்!<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-57751235796978802872014-04-03T07:31:23.611+05:302014-04-03T07:31:23.611+05:30
இந்த நூல் வேறொரு விதத்தில் ஆராய்ந்து கவனிக்கப்பட ...<br />இந்த நூல் வேறொரு விதத்தில் ஆராய்ந்து கவனிக்கப்பட வேண்டும்.<br /><br />இந்த நூல், மோடி பேசிய அல்லது நிகழ்த்திய உரைகளின் தொகுப்பு. இந்த உரைகள் அவர் முதலமைச்சர் என்ற தோரணையில், அய்.ஏ.எஸ். என்ற மாவட்ட ஆட்சியர் அந்தஸ்திலுள்ள அதிகாரிகளிடம் நிகழ்த்தியது. அப்படியானால் தான் மட்டும் தலித் பெருங்குடி மக்களைப் பற்றி இப்படித் தரக்குறைவான ஒரு பார்வையைக் கொண்டிருக்க வில்லை. மாறாக, அதனை அதிகாரிகள் வட்டத்திலும் பதிய வைத்திருக்கின்றார்.<br /><br />மோடி, இப்படியொரு கருத்தைத் தனது உயர்மட்ட அதிகாரிகளின் மனதில் பதிய வைத்திருக்கின்றார். திமிரோடு அதை நூலாகவும் வெளியிட்டிருக்கின்றார் என்ற செய்திகள் பரவலாயின. அதனை நவம்பர் 2007இ-ல் டைம்ஸ் ஆப் இந்தியா நாளேடும் வெளியிட்டது. இதனைத் தலித் மக்கள், - குறிப்பாக தமிழக தலித் மக்கள் எதிர்த்தார்கள். உடனேயே மோடிக்கு ஆதரவாக சங் பரிவாரங்கள் களத்தில் குதித்தன. ஆனால், நாடெங்குமுள்ள தலித் மக்கள் கொதித்தார்கள்.<br /><br />மனித உரிமை ஆர்வலர் சுகாஷ் கட்டேடர், இந்த நூலைத் தடை செய்ய வேண்டும். மோடியைக் கைது செய்து வன்கொடுமைச் சட்டத்தின்படி சட்டத்தின்முன் நிறுத்திட வேண்டும் என்று அகில இந்திய அளவில் குரல் எழுப்பினார். இந்தப் பின்னணியில் இந்த நூல் திரும்பப் பெறப்பட்டது. நூல் ஒருவேளை திரும்பப் பெறப்பட்டிருக்கலாம். ஆனால், அன்று மாவட்ட ஆட்சியர் அளவிலுள்ள அதிகாரிகளின் மனதில் மோடி பதிய வைத்த சிந்தனைப் போக்கை யார் திரும்பப் பெறுவது? மோடியை ஒரு பெரிய ஹீரோவாகக் காட்டிடும் பொறுப்பு ஆப்கோ - என்ற சர்வதேச நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.<br /><br />மோடியின் உரைகளை நூலாகத் தொகுத்து வெளியிட வேண்டும். மோடியை ஒரு சீரிய சிந்தனையாளனாகக் காட்டிட வேண்டும் என்ற பொறுப்பும் ஆப்கோ நிறுவனத்திடமே ஒப்படைக்கப்பட்டிருந்தது. அந்த நிறுவனம் பல கோடிப் பணத்தைப் பெற்றுக் கொண்டுதான் இந்தக் கீழ்த்தரமான நூல் வெளியீட்டுப் பணியைச் செய்தது. இந்த மொத்தக் குழப்பத்திலும் பெறப்படும் உண்மை என்னவெனில், மோடி தலித் மக்களை அவர்களின் அந்தக் கீழான தொழிலிலும், நிலையிலுமே வைத்திருப்பார். இன்று குஜராத்தில் நடந்து கொண்டிருப்பவை இதனை உறுதி செய்கின்றன.<br /><br />குஜராத்தில் டீக்கடை உட்பட அனைத்துப் பொதுத்தலங்களிலும் தலித்களுக்குத் தனிப் பாத்திரமாம். அதற்குப் பெயர் இராம பாத்திரமாம். Ram palia பிக்கா பாய் என்ற இந்த தலித், ஒரு விவசாயப் பண்ணையில் வேலை செய்கின்றார். அந்தப் பண்ணையில் அவருக்கென ஒரு தேனீர்க் குவளை வைக்கப்பட்டிருக்கும். அவருக்கான தேனீர் அந்தக் குவளையில் ஊற்றப்படும். தேனீரைக் குவளையில் ஊற்றுபவர் அந்தக் குவளையைத் தொடுவதுமில்லை. அதேபோல் உணவு வாங்கிடவும் தனி பாத்திரம். அந்தப் பாத்திரத்தையும் தொட்டு அல்லது கையில் வாங்கி யாரும் உணவைத் தருவதில்லை. மாறாக, சற்று தூரத்திலிருந்து உணவை வழங்குவார்கள். இப்படி தாழ்த்தப்பட்ட மக்களுக்காக வைக்கப்பட்டிருக்கும் தனிப் பாத்திரத்திற்கு குஜராத்தில் ராம் பாத்திரம் என்று பெயர்.<br /><br />அங்காடிகளில் அவர்கள் காய்கறிகளைத் தொட்டுப் பார்த்து வாங்கிட முடியாது. எட்டத்தில் நின்று சமிக்ஞைகள் செய்திட வேண்டும். தருவதை வாங்கிக் கொண்டு காசை அங்குள்ள கூடையில் போட்டுவிட்டுப் போய்விட வேண்டும். இதுதான் பல தலைமுறைகளாக நடந்து கொண்டிருக்கின்றது. அன்றைய நாள்களில் அந்த இராம பாத்திரம், களிமண் குவளையாக இருந்தது. இன்றைய நாட்களில் அது ஸ்டீல் சொம்புகளாக மாறி இருக்கின்றன. பல தேனீர்க் கடைகளில் இப்போது டீயைக் குடித்து விட்டுத் தூக்கி வீசப்படும் அளவிலுள்ள பிளாஸ்டிக் குவளைகளிலேயே டீ வழங்கப்படுகின்றது. தலித் மக்கள் பரவிக் கிடக்கும் குஜராத்தின் 22 மாவட்டங்களிலும் இந்தத் தனிக் குவளை முறை பின்பற்றப்படுகின்றது.<br /><br />நாட்டின் காவலன் என்று தன்னை அறிவித்துக் கொள்ளும் ஒரு மனிதனின் மூளையில் உள்ள அழுக்குகளும், அம்மனிதன் ஆட்சி செய்யும் நிலப்பரப்பில் வாழும் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையும் எப்படி இருக்கிறது என்பதை வெளிப்படுத்துவதன் மூலம் நாட்டு மக்களின் நெஞ்சங்களுக்கு ஒரு கேள்வியை முன்வைக்கிறோம். அது, நரேந்திர மோடியின் ஆட்சியில் தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, சிறுபான்மையின மக்களின் வாழ்வுரிமைக்கு, பாதுகாப்புக்கு என்ன உத்தரவாதம்?<br /><br />நன்றி: தமிழ் வெப் துனியா மார்ச் 12,2014தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-76791683738022471382014-04-03T07:31:18.595+05:302014-04-03T07:31:18.595+05:30மோடியின் ராம பாத்திரம்
நாட்டின் காவலன் என்று தன்...மோடியின் ராம பாத்திரம்<br /><br /><br />நாட்டின் காவலன் என்று தன்னை அறிவித்துக் கொள்ளும் ஒரு மனிதனின் மூளையில் உள்ள அழுக்குகளும், அம்மனிதன் ஆட்சி செய்யும் நிலப்பரப்பில் வாழும் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையும் எப்படி இருக்கிறது என்பதை வெளிப்படுத்துவதன் மூலம் நாட்டு மக்களின் நெஞ்சங்களுக்கு ஒரு கேள்வியை முன்வைக்கிறோம். அது நரேந்திர மோடியின் ஆட்சியில் தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, சிறுபான்மையின மக்களின் வாழ்வுரிமைக்கு, பாதுகாப்புக்கு என்ன உத்தரவாதம்?<br /><br />நரேந்திர மோடி எழுதிய நூல் ஒன்று 2007 ஆம் ஆண்டு வெளி வந்தது. அதன் பெயர் கர்மயோகம். அவர் எழுதிய நூல் என்பதைவிட அவருடைய உரைகளின் தொகுப்பு என்றுதான் கூற வேண்டும். அந்த நூலில் தலித் மக்களைப் பற்றிக் குறிப்பிடும்போது அவர்கள் மலம் அள்ளுதல் போன்ற பணிகளைச் செய்வதற்குக் காரணம், அவர்கள் அந்தப் பணிகளைப் புனிதமாகக் கருதுகின்றார்கள். “Experience in spirituality” ஆன்மீக அனுபவம் எனக் கூறுகின்றார். இதனால்தான் அவர்கள் மலம் அள்ளுதல் முதலான தொழில்களை இத்தனை காலமாக செய்கின்றார்களே அல்லாமல் அவர்கள் தங்களுக்கு வேறு தொழில்கள் கிடைக்கவில்லை என்பதனால் அல்ல என்கின்றார்.<br /><br />அவர் அந்த நூலில் எழுதுகிறார்:<br /><br />“I do not believe that they are doing this job just to sustain their livelihood had this been so, they would not have continued with this type of job, generation after generation... at some point of time somebody might have got the enlightenment, that it is their duty to work for the happiness of the entire society and god so. That they have to do this job, bestowed upon them by god so, and that his job of cleaning shared continue as a spiritual activity for centuries. This shared have continued generation after generation. It is impossible to believe that their ancestors did not have choice of adopting any other job or business.”<br /><br />இதன் பொருள்:<br /><br />நான் அவர்கள் (தலித்கள்) இந்தப் பணியைத் தங்கள் வயிறுகளை நிரப்புவதற்காகத்தான் செய்து கொண்டிருக்கின்றார்கள் என நம்பவில்லை. இதற்காகத்தான் அவர்கள் செய்கின்றார்கள் என்றால் நிச்சயமாக அவர்கள் இந்த அசிங்கமான தொழிலை இத்தனை தலைமுறையாகச் செய்து கொண்டிருக்க மாட்டார்கள். வரலாற்றின் ஒரு காலகட்டத்தில் இந்த மக்களில் யாருக்கோ, இந்தப் பணியைச் செய்வது மொத்த மனித இனத்திற்கும் செய்திட வேண்டிய பணி என்ற ஞானோதயம் ஏற்பட்டிருக்கின்றது. அதனால்தான் கடவுள் அவர்கள் மீது பணித்த இந்தக் கடமையை அவர்கள் செய்து கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் மீது கடவுள் அருள் செய்த இந்தக் கடமையைத்தான் அவர்கள் செய்ய வேண்டும்.<br /><br />இந்தத் துப்புரவுப் பணி, ஓர் உள்ளார்ந்த ஆன்மீக நடவடிக்கையாக, பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. இந்த ஆன்மிகப் பணிதான், தலைமுறை தலைமுறையாக நடந்து கொண்டிருக்கின்றது. இதல்லாமல் இந்தத் துப்புரவுப் பணிகளைச் செய்பவர்களின் தலைமுறைகளுக்கு வேறு வேலைகளோ, வாணிபங்களோ கிடைக்கவில்லை என நம்ப முடியவில்லை. இதிலிருந்து பெறப்படும் உண்மை மனித மலம் அள்ளுவது, பிணம் தூக்குவது முதலான பணிகள் ஆன்மிகத் தேடலும், நாடலுமாம். அதனால் அவர்கள் அந்தப் பணியைச் செய்திட வேண்டுமாம்.<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-19056905376970270372014-04-03T07:29:52.423+05:302014-04-03T07:29:52.423+05:30 நீங்களே சொல்லுங்க சார்....!
- டான் அசோக்
ஸ்ரீ... நீங்களே சொல்லுங்க சார்....!<br /> <br /><br />- டான் அசோக்<br /><br />ஸ்ரீநிவாச வெங்கட்ராமனுக்கு ஒரு 30 வயது இருக்கும். எனக்கும் அவ்வளவுதான். அலுவலகத்தில் சேர்ந்த முதல் நாள், எங்கிருந்து வர்றேள்? என்று மரியாதையாகத்தான் கேட்டான்.<br /><br />அடுத்து ஒன்றிரண்டு முறை பன்மையில் மரியாதையாகத்தான் அழைத்தான். திடீரென ஒருநாள், முகிலா... அந்தப் பாட்டிலை எடுத்துக்கொடு என்றான். என்னடா இது பார்த்த இரண்டே நாளில் ஒருமையில் அழைக்கிறானே என்று அதிர்ச்சி.<br /><br />ஆனாலும் வெளிக்காட்டிக்கொள்ளாமல் பாட்டிலை எடுத்துக்கொடுத்தேன். அடுத்து சில நாட்கள் அவன் வந்தாலே நான் பேசுவதில்லை. ஒருநாள் அவனாகவே, டேய்... அந்த சேரை எடுத்துக்கோ. எனக்கு இது வேணும், என்றான். எனக்கு இப்போது இரட்டிப்பு அதிர்ச்சி என்றாலும் சென்றமுறையைப் போலவே இப்போதும் அமைதியாக சேரை எடுத்துக்கொண்டு நகர்ந்தேன். அடுத்தமுறை இதே போல் மரியாதையில்லாமல் பேசினால், இல்லடா சீனிவாசா என பதில் சொல்லவேண்டும் என முடிவு செய்திருந்தேன். ஆனால் அவன் அதற்குப் பிறகு பலமுறை என்னிடம் ஒருமையில் பேசியும் என்னால் அவனிடம் ஒருமையில் பேச முடியவில்லை. எனக்கும் அது காலப்போக்கில் பழகிவிட்டது. ஒருநாள் பைக் நிறுத்தும் இடத்தில் பயங்கர சண்டை. ஸ்ரீநிவாசன் ஒரு இளவயது காவலாளியிடம் செமத்தியாக அர்ச்சனை வாங்கிக் கொண்டிருந்தான். ஓடிச்சென்று அங்கு நின்று மனம் நிறைய மகிழ்ச்சியோடு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்.<br /><br />திடீரென அந்தக் காவலாளி என் பக்கம் திரும்பி, நீங்களே சொல்லுங்க சார். நான் மரியாதையா சாரி சார்னு சொன்னேன். ஆனா இவன் எடுத்தவுடன, அவனே இவனேனு திட்றான். ஆஃபீஸ்ல வேலை பாத்தா நாங்கள்லாம் இவனுக்கு என்ன அடிமையா? என்றான். இல்லை, எனச் சொல்லிவிட்டு நகர்ந்துவிட்டேன்.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-4114591837080914332014-04-03T07:29:20.875+05:302014-04-03T07:29:20.875+05:30புதுப்பாக்கள்
ஆண்டவரும்
அளவுகோலும்!
நான் எப்போ...புதுப்பாக்கள்<br /> <br /><br />ஆண்டவரும்<br />அளவுகோலும்!<br /><br />நான் எப்போதும்<br />உன்னைக் கைவிட மாட்டேன்<br />என்று சொன்ன<br />என் ஆண்டவரே!<br />அனைத்தையும்<br />சுனாமி வந்து சுருட்டி<br />வாயில் போட்டுக்கொண்டுவிட<br />தனிமரமாய்<br />தன்னந்தனியே தவிக்கிறேனே!<br />நெஞ்சிலே நஞ்சை வைத்து<br />நாவிலே தேனைத் தடவி<br />நயவஞ்சகமாய்ப் பேசி<br />நம்பவைத்துக் கழுத்தறுப்பது<br />தனிமனித ஒழுக்கக்கேட்டின்<br />அடையாளம் மட்டும்தானா?<br />ஆண்டவராகிய உமக்கு - அந்த<br />அளவுகோல் கிடையாதா?<br /><br />- சீர்காழி கு.நா.இராமண்ணா<br /><br /> <br /><br />மகாத்மா மண்ணில்<br />மதம் எனும் மலத்தை<br />தேர்தல் களமாய்<br />தின்னுகின்றன<br />நாகரிகப் பன்றிகள்<br /><br />செய்திகளும் தின்பண்டங்களாக<br />தின்னுகின்றன மாயைகளை...<br />(மோடி... மோடி<br />ஜாடி... ஜாடி)<br /><br />ஜனநாயகம் என்னும் குடிசையை<br />அயோத்திய அனுமான்கள்<br />தீவைக்கின்றன...<br />மீண்டும்<br />பதாகை ஆட்சி<br />வேண்டுமென்று...<br /><br />நம் இராவணனின் விபீசனர்கள்<br />கூட்டாஞ்சோறு எனும்<br />தேர்தல் பந்தியில்<br />பாத்தி கட்டுகிறார்கள்<br /><br />இந்திய வாக்காளனுக்கு<br />நோட்டா எனும்<br />வாக்குச் சீட்டில்<br />வாக்குச் சாவடி<br /><br />ஜனநாயகமே<br />உனது மறுமலர்ச்சி<br />எப்போது?<br /><br />- சின்னவெங்காயம், சென்னைதமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-28518965178325713942014-04-03T07:26:58.395+05:302014-04-03T07:26:58.395+05:30 ஜாதகம் அது பாதகம்
இது நண்பர் ஒருவர் மூலமாகக் கே... ஜாதகம் அது பாதகம்<br /><br /><br />இது நண்பர் ஒருவர் மூலமாகக் கேள்விப்பட்ட உண்மைச் செய்தி. ஊர், பெயர் மாற்றப்பட்டுள்ளது.<br /><br /><br />என் நண்பருக்கு வேண்டியவர் ஒரு முதியவர். அவர் மனைவி மற்றும் அவர்களின் ஒரே மகன் (சுமார் 25 வயது) ஆகிய மூவரும் மகிழ்ச்சியுடன் வாழ்க்கை நடத்தி வந்தனர். ஒரு சில ஆண்டுகளுக்கு முன் வயோதிகத்தின் காரணமாக முதியவர் நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையாகி மருத்துவரிடம் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் ஒரு சிலர் சொல் கேட்டு அந்த முதியவரின் மகன் மாயவரத்தில் உள்ள ஒரு ஜாதகக்காரரைச் சந்தித்து தன் ஜாதகத்தைக் காட்டி தன் தகப்பனாரின் ஆயுளைப்பற்றி விசாரித்திருக்கிறார். அந்த ஜாதகத்தைப் பார்த்து நன்கு கணித்து அந்தப் பையனின் தகப்பனார் அதிகபட்சமாக 2 மாதம்தான் இருப்பார் என்றும், 2 மாதத்திற்குப் பின் பெரிய கண்டம் இருப்பதாகவும் எனவே அவர் இரண்டு மாதத்தில் இறந்துவிடுவார் என்றும் கூறினார். ஆனால் டாக்டர்களின் சிறந்த வைத்தியத்தாலும் மனைவி, மகன் பராமரிப்பாலும் பெரியவர் பூரண குணமடைந்து இன்றுவரை நலமாக உள்ளார்.<br /><br />பெரியவரின் மகன் ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு மீண்டும் அந்த ஜாதகக்காரரைப் பார்த்து, தன் தகப்பனார் நலமுடன் இருப்பதாகவும், ஜாதகத்தைக் கணித்துக் கூறியது தவறு என்றும் கூறியுள்ளார். அதற்கு ஜாதகக்காரர், தான் கணித்துச் சொன்னது உண்மை என்றும், ஜாதகம் பொய்க்காது என்றும் கூறியதுடன் அந்த 2 மாத காலத்தில் அந்தத் தெருவில் யாராவது பெரியவர் இறந்துவிட்டாரா என்று அந்த இளைஞரைக் கேட்டதற்கு அந்த இளைஞர் தன் வீட்டுப் பக்கத்து வீட்டில் ஒரு முதியவர் இறந்துவிட்டதாகச் சொன்னதாகவும், அதற்கு ஜாதகக்காரர், அப்படி என்றால் அவர்தான் உன் உண்மையான தந்தை என்று கூறி அந்த இளைஞரை அனுப்பிவிட்டார். பின் அந்த இளைஞன் தன் வீட்டில் வந்து விவரத்தைச் சொல்ல மூவரும் நிம்மதி இழந்து தவிப்பதாகவும், ஒருவரையொருவர் சந்தேகத்துடன் பார்ப்பதாகவும், நண்பர் சொன்னார். இந்த விஞ்ஞான காலத்திலும், படித்த, படிக்காத பாமரர்களும் அறிவைப் பயன்படுத்தாமல் ஜாதகத்தையும் ஜாதகக்காரர் சொல்வதையும் நம்பியதால் இதுபோல் அனேக குடும்பங்கள் நிம்மதியற்றுத் தவிக்கின்றன. எனவே, யாரும் ஜாதகத்தையோ ஜாதகக்காரர் கூறுவதையோ உண்மை என்று நம்பி வாழ்க்கையைப் பாழ்படுத்திக் கொள்ளலாமா?<br /><br />- ஆர்.டி.மூர்த்தி, திருச்சி<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-86351856780800794412014-04-03T07:26:21.903+05:302014-04-03T07:26:21.903+05:30சில்லறை யு(பு)த்தி
கேள்வி : சூரிய கிரகணம், சந்த...சில்லறை யு(பு)த்தி<br /><br /><br /><br />கேள்வி : சூரிய கிரகணம், சந்திர கிரகணம் போன்றவை நிகழும்போது, புண்ணிய நதிகளில் நீராடி, கடவுளை வணங்க வேண்டும் - போன்றவை விஞ்ஞான ரீதியில் அவசியமா..?<br /><br />பதில் : அவசியமில்லை. கிரகணங்கள் கிரகங்களின் நிழல்கள் என்றுதான் அறிவியல் சொல்கிறது. புண்ணிய நதிகளில் நீராடல் கடவுளை வணங்குதல் என்பதெல்லாம் மத நம்பிக்கையைக் காரணம் காட்டி பணம் பகிர்ந்து கொள்ளும் உத்தியே! கோவிலுக்கு வருமானம்... நதிக்கரை புரோகிதர்களுக்கு சில்லறை புரளும்!தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.com