tag:blogger.com,1999:blog-1474608369333206681.post1520022298923204978..comments2023-10-29T13:02:52.613+05:30Comments on தமிழ் ஓவியா: கி.வீரமணி கூட்டத்தில் கல்வீச்சு - ஆர்.எஸ்.எஸ். காலிகளின் வன்முறைதமிழ் ஓவியாhttp://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-38187335246235176092011-09-27T18:14:38.859+05:302011-09-27T18:14:38.859+05:30விருகம்பாக்கத்தில் ஆர்.எஸ்.எஸ்., விஷமிகளின் கைவரிச...விருகம்பாக்கத்தில் ஆர்.எஸ்.எஸ்., விஷமிகளின் கைவரிசை மற்றும் தந்தை பெரியார் சிலைக்கு அவமதிப்பு குறித்துக் காவல்துறையிடம் புகார்<br /><br />சென்னை- விருகம்பாக்கத்தில் கடந்த 24ஆம் தேதி நடைபெற்ற - தந்தை பெரியார் 133ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா பொதுக் கூட்டத்தில் (தமிழர் தலைவர் கி. வீரமணி அவர் களும் பங்கேற்ற நிகழ்ச்சி) ஆர்.எஸ். எஸ்., இந்து முன்னணி காலிகள் கோழைத்தனமாக மேடையை நோக்கி கல்லெறிந்தது - 50-க்கு மேற்பட்ட டியூப்லைட்டுகளை உடைத்துவிட்டு ஓடியது குறித்து சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் கழகப் பொதுச் செயலாளர் கலி. பூங்குன்றன் நேரில் புகார் கொடுத்துள்ளார் (26.9.2011).<br /><br />காவல்துறை அதிகாரிகளின் எதிரி லேயே டியூப்லைட்டுகளை விஷமிகள் அடித்து நொறுக்கியதைப் பார்த் திருந்தும், பொதுச் சொத்துகள் நாசப்படுத்தப்பட்டது தொடர்பாகவும் எந்தப் பிரிவின் கீழும் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை.<br /><br />இதுகுறித்தும், வன்முறையில் ஈடுபட்டவர்கள், பாதிக் கப்பட்ட திராவிடர் கழகத் தோழர்கள் இரு தரப்பினர்மீதும் ஒரே வகையான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்திருக்கிறது காவல் துறை. அதாவது அடித்த வனும், அடிபட்டவனும் ஒன்று என்ற பார்வை காவல்துறைக்கு எப்படி வந்தது என்று தெரிய வில்லை.<br /><br />இந்த இரண்டு நிலை குறித்தும் சென்னை மாநகர காவல் துறை ஆணையரிடம் நேற்று புகார் கொடுக்கப்பட்டுள்ளது.<br /><br />தந்தை பெரியார் சிலைக்கு துளசி மாலை<br /><br />சென்னை அண்ணாசாலை - சிம்சன் அருகில் உள்ள தந்தை பெரியார் சிலைக்குக் காலிகள் - விஷமிகள் 25ஆம் தேதி இரவோடு இரவாக துளசி மாலையைப் போட்டு விட்டு ஓடியுள்ளனர். இதுகுறித்தும் மாநகரக் காவல்துறை ஆணையரிடம் நேற்று புகார் கொடுக்கப்பட்டது.<br /><br />விரைந்து நடவடிக்கை எடுப்பதாக காவல்துறை ஆணையர் திரிபாதி அய்.பி.எஸ். அவர்கள் கூறினார். கழகப் பொதுச் செயலாளர் கலி. பூங்குன்றனும், வழக்குரைஞர் த. வீரசேகரனும் சென்றிருந்தனர்.<br /> ---"விடுதலை” 27-9-2011தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-294997854976123472011-09-26T22:14:53.380+05:302011-09-26T22:14:53.380+05:30திராவிடர் கழகக் கூட்டத்தில் கலகம் விளைவிப்பதா? கலை...திராவிடர் கழகக் கூட்டத்தில் கலகம் விளைவிப்பதா? கலைஞர் கண்டனம்<br /><br /><br /> தந்தை பெரியார் அவர்களின் 133ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா, சென்னை விருகம்பாக்கத்தில் திராவிடர் கழகம் மற்றும் திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் சார்பில் 24.9.2011 அன்று நடைபெற்றபோது - தமிழர் தலைவர் வீரமணி பேசும்போதும் - பேராசிரியர் சுப. வீரபாண்டியன் பேசும்போதும் - ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணியைச் சேர்ந்த சிலர் இடைமறித்து எதிர்க்குரல் எழுப்பியதோடு - கற்களைக் கொண்டு தாக்க முயன்றிருப்பதும், அதற்கு இந்த அரசின் காவல்துறை ஒத்துழைப்பு தந்திருப்பதும், இனமான உணர்வை எழுப்பும் கருத்துக்களை எதிர்க்க சக்தியற்றவர்கள் நடத்திய வன்முறைச் செயல்கள்; கலவரமாக ஆகியிருப் பதும் வருந்தத்தக்கது, கண்டிக்கத்தக்கது.<br /><br />இதுபோன்ற நிகழ்ச்சிகளில் கருத்துக்களை எடுத்துச் சொல்வதற்கு காவல்துறையினர் ஒத்துழைப்பு நல்க வேண்டுமேயல்லாமல் கலகம் விளைவிப்போருக்கு துணை போயிருக்கக் கூடாது என்பதை திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கூறுகிறேன் என்று திமுக தலைவர் கலைஞர் அவர்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.<br /> -------------"விடுதலை” 26-9-2011தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.com