tag:blogger.com,1999:blog-1474608369333206681.post1260590503647430889..comments2023-10-29T13:02:52.613+05:30Comments on தமிழ் ஓவியா: தமிழ்நாட்டுப் பார்ப்பனர் அறிவிலிகளா?பேராசை பிடித்த அயோக்கியர்களா?தமிழ் ஓவியாhttp://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-33920491716794578162012-04-13T19:33:24.876+05:302012-04-13T19:33:24.876+05:30பி.பி. மண்டல்
இது பெரியார் மண், இந்த மண்ணிலிருந்...பி.பி. மண்டல்<br /><br /><br />இது பெரியார் மண், இந்த மண்ணிலிருந்து ஏராளம் நான் தெரிந்து கொண்டு இருக்கிறேன். பெரியார் தமிழ்நாட்டில் ஒடுக்கப்பட்ட மக்களுக் காக அயராது பாடுபட் டார். வடக்கே பிற்படுத் தப்பட்ட மக்களுக்காக லோகியா குரல் கொடுத் தார் - பிற்படுத்தப்பட்ட மக்களை ஓ சூத்திரர் களே! என்று தான் விளிப்பார்.<br /><br />உயர் ஜாதிக்காரர் களின் கைகளில் இருக் கும் அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். பதவிகள் நம் மக்களுக்கு முட்டுக் கட்டை போட்டுக் கொண்டு தானிருக்கும்.<br /><br />மார்க்ஸிஸ்டுகள் ஆளும் மேற்கு வங்கத் திலும், ஜனசங்கம் ஆளும் ராஜஸ்தானிலும் பிற்படுத் தப்பட்ட மக்கள் பற்றிய சிந்தனையே கிடையாது.<br />காகா கலேல்கர் தலைமையில் பிற்படுத்தப் பட் டோருக்கான முதல் ஆணையம் அமைக்கப் பட்டது. அந்த அறிக்கை யின் பரிந் துரைகள் செயல்படுத்தப்பட வில்லை.<br /><br />நாங்கள் எங்கள் பரிந் துரைகளை அறிக்கை யாகக் கொடுக்கத்தான் முடியும். அதனை செயல் படுத்த வைப்பது உங்கள் கைகளில் குறிப்பாக பெரி யார் பிறந்த இந்த மண்ணில் தான் இருக் கிறது.<br /><br />ஜாதியால் பிரிந்து கிடக்கக் கூடாது. இந்து மதம்தான் ஜாதியை உண்டாக்கியது. ஜாதியை மறந்து இந்தியா முழுமை யும் உள்ள பிற்படுத்தப் பட்ட மக்கள் ஒன்று சேர வேண்டும்<br /><br />இப்படி குரல் கொடுத் தவர் யார் தெரியுமா? இரண்டாவது பிற்படுத்தப் பட்டோர் நல ஆணையத் தின் தலைவரான பிந்தேஸ் வரி பிரசாத் மண்டல் (பி.பி. மண்டல்) ஆவார்.<br /><br />அந்தப் பதவியில் இருந்தபோதே அரிமா குரல் கொடுத்தார். எங்கே? சென்னை பெரியார் திடலில். எப்பொழுது? 30.6.1979 அன்று. பெரியார் திடலில் கொடுக்கப்பட்ட வரவேற்பின்போதுதான் இவ்வாறு குறிப்பிட்டார்.<br /><br />அந்நிகழ்ச்சியில் பங்கு கொண்டு உரையாற்றிய திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் மானமிகு கி.வீரமணி அவர்கள் அறிக் கையைச் செயல்படுத்தா மல் விட மாட்டோம் என்று மண்டல் முன்னிலையில் சூளுரைத்தார்.<br /><br />ஆம், இதற்காக 42 மாநாடுகளையும் 16 போராட் டங்களையும் அகில இந்திய அளவில் நடத்தி வெற்றியும் கண்டது - திராவிடர் கழகம் ஆனால் வெற்றியை நேரில் காணும் வாய்ப்பு மண்டல் அவர்களுக்கு கிட்ட வில்லை! இன்று அவரின் நினைவு நாள் (1982). - மயிலாடன் 13-4-2012தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-58550332495799232192012-04-12T19:08:54.294+05:302012-04-12T19:08:54.294+05:30ஒவ்வொரு கால கட்டத்திலும்...
இதில் அரசியலுக்கு இடம...ஒவ்வொரு கால கட்டத்திலும்...<br /><br />இதில் அரசியலுக்கு இடமில்லை. அரசியலுக்கு அப்பாற்பட்ட சமூகப் புரட்சி இயக்கமான திராவிடர் கழகம் தமிழர்களின் உயிர் நாடிப் பிரச்சினைகளை முன்னெடுத் துச் சென்றுள்ளது - வழக்கம் போலவே!<br /><br />ஒவ்வொரு கால கட்டத்திலும் தமிழ்நாடு, தமிழினம் ஒடுக்கப்பட்ட மக்கள் வஞ்சிக்கப்பட்ட நிலை, ஈழத் தமிழர் வாழ்வுரிமை, சமூகநீதி, மதவாத எதிர்ப்பு, ஜாதி ஒழிப்பு, மூடநம்பிக்கை எதிர்ப்பு போன்றவற்றை முன்னிறுத்தி தொடர் பிரச்சாரம் என்கிற பெருமை மிக்க கடமையினை ஆற்றி வருவது திராவிடர் கழகமே!<br /><br />அந்த அடிப்படையில்தான் இந்தப் பிரச்சாரப் பயணங்களும் மேற்கொள்ளப்பட்டன.<br /><br />அணித் தலைவர்கள்<br /><br />மானமிகு தோழர்கள் கழகப் பொதுச் செயலாளர் சு. அறிவுக்கரசு, துணைப் பொதுச் செயலாளர் டாக்டர் துரை. சந்திரசேகரன், தலைமைக் கழகப் பேச் சாளர்கள் டாக்டர் அதிரடி க. அன்பழகன், தஞ்சை இரா. பெரியார்செல்வன், இராம. அன்பழகன் ஆகியோர் தலைமையில் இந்தப் பிரச்சாரப் பயணம் பயனுள்ள வகை யில் அமைந்தது கண்டு பெரிதும் மகிழ்ச்சி அடைகிறேன்.<br /><br />இந்த அணித் தலைவர்களுடன் இணைந்து உரையாற்றிய கழகச் சொற்பொழிவாளர்கள், மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சி நடத்தும் கலைஞர்கள், ஒருங் கிணைப்பாளர்கள், புத்தக விற்பனையாளர்கள், ஓட்டுநர்கள், உதவியாளர்கள் அனைவருக்கும் கழகத்தின் சார்பில் நெஞ்சம் நிறைந்த பாராட்டுகளையும், வாழ்த்து களையும் தெரிவித்துக் கொள்கிறேன். மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள் மிகச் சிறப்பான முறையில் நிகழ்ச்சி களை ஏற்பாடு செய்தமைக்காக அவர்களையும் மிகவும் பாராட்டுகிறோம்.<br /><br />மாவட்ட மாநாடுகளோ!<br /><br />மதுரை, கரூர், திருச்சி, கடலூர், தாம்பரம் ஆகிய இடங்களில் ஒவ்வொரு அணியின் பிரச்சாரம் நிறைவு அடைந்த பொதுக் கூட்டங்களில் பங்கு ஏற்கும் வாய்ப் பினை நான் பெற்றேன்.<br />மாநாடுகள் போல் அவை அமைந்திருந்தன. மாவட்ட மாநாடாக அறிவித்திருக்கலாமோ என்றுகூட நான் எண்ணியதுண்டு.<br /><br />உயிர்ப்புடன் கழகம்<br /><br />நமது கழகத் தோழர்களின் களப்பணிகள் எந்த அளவு சிறப்பாக இருக்கின்றன என்பதற்கும், நமது கழகச் சொற்பொழிவாளர்கள் எந்த அளவுக்குத் தகவல்களைத் திரட்டித் தங்களைத் தயார்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள் என்பதற்கும், கழகம் எந்த எந்த அளவுக்கு வீரியத்துடன் இருக்கிறது என்பதற்கும், பொது மக்களின் எதிர்பார்ப்பும், மதிப்பீடும் எந்த அளவு கழகத்தின்பால் இருக்கின்றன என்பதற்கும் இந்தத் தொடர் சுற்றுப் பயணம் மிகச் சிறந்த எடுத்துக்காட்டும், நிரூபணமும் ஆகும்.<br /><br />1938 முதல் 2012 வரை<br /><br />1938இல் இந்தி எதிர்ப்பையொட்டி அஞ்சா நெஞ்சன் அழகிரி அவர்களை அணித் தலைவராகவும் (தலைவர் அய்.குமாரசாமி பிள்ளை, யுத்த மந்திரி திருமலைசாமி) கொண்டு தமிழர் பயணம் ஒன்றினை தந்தை பெரியார் அவர்கள் திருச்சியில் தொடங்கி வைத்தார்.<br /><br />குலக்கல்வித் திட்ட ஒழிப்பை முன்னிறுத்தியும் நாகப்பட்டினத்திலிருந்து 1954இல் பிரச்சாரப் படை ஒன்று கழகத்தின் சார்பில் நடத்தப்பட்டதுண்டு. ஆச்சாரியார் ஆட்சியை விட்டு விலகி ஓடியதற்கு அந்தப் பெரும் பயணம் ஒரு முக்கிய காரணியாக இருந்தது.<br /><br />1938 தொடங்கி 2012 வரை நமது கழகம் நடத்தும் பிரச்சாரப் பயணம் என்பது வரலாற்றுக்குத் திருப்பம் தரும் (நுயீளைடினநள) நிகழ்வுகளாகும்.<br />தேவைப்படும் பொழுதெல்லாம் இனியும் இது தொடரும். மீண்டும் அனைவருக்கும் பாராட்டுகள்! தந்தை பெரியார் பணி முடிப்போம்!<br />வாழ்க பெரியார்!<br />வளர்க பகுத்தறிவு!! 12-4-2012தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-3228192796165590222012-04-12T19:07:03.525+05:302012-04-12T19:07:03.525+05:30சொற்பொழிவாளர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் மாவட்டக் கழக...சொற்பொழிவாளர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள் அனைவருக்கும் பாராட்டுகள் தந்தை பெரியார் பணிமுடிப்போம்!<br /><br /><br />1938 முதல் 2012 வரை கழகத்தின் பிரச்சாரப் பயணங்கள்<br /><br />தமிழகம் தழுவிய அளவில் பெரும் விழிப்புணர்வு!<br /><br />சொற்பொழிவாளர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள் அனைவருக்கும் பாராட்டுகள்<br />தந்தை பெரியார் பணிமுடிப்போம்!<br /><br />கழகத் தலைவர் விடுத்துள்ள அறிக்கை<br /><br />5 முக்கிய நோக்கங்களை முன்னிறுத்தி திராவிடர் கழகத்தால் நடத்தப்பட்ட பிரச்சாரப் பெரும் பயணம் குறித்தும், இவற்றில் ஈடுபட்டுச் சிறப் பாகக் கடமையாற்றிய தோழர்களுக்குப் பாராட்டுத் தெரிவித்தும், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:<br /><br />வஞ்சிக்கப்பட்ட தமிழ்நாட்டின் உரிமைக் காப்புப் பிரச்சாரப் பெரும் பயணம் - திராவிடர் கழகத்தின் சார்பில் மார்ச் 23இல் தொடங்கி ஏப்ரல் 11இல் முடிக்கப் பெற் றுள்ளது.<br /><br />அனேகமாக தமிழ்நாட்டின் முக்கிப் பகுதிகளில் இந்தப் பிரச்சாரம் நடத்தப்பட்டு பெரும் அளவுக்கு விழிப்புணர்ச்சி ஏற்படுத்தப்பட்டுள்ளது.<br /><br />இலக்குகள் அய்ந்து<br /><br />1. ஈழத் தமிழர்கள் - தமிழக மீனவர்கள் பாதிப்பு<br /><br />2. காவிரி நீர்ப்பிரச்சினை<br /><br />3. முல்லைப் பெரியாறு பிரச்சினை<br /><br />4. சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம்<br /><br />5. தமிழிலும் அகில இந்திய நுழைவுத் தேர்வுகள் எழுதும் உரிமை<br /><br />இவற்றை முன்னிறுத்தி இந்தத் தொடர் பிரச்சாரம் நடைபெற்றுள்ளது. இந்த அய்ந்து பிரச்சினைகளும் தமிழ் நாட்டின் மிக முக்கியமான உரிமைப் பிரச்சினைகள் என்பதை எவரும் ஒத்துக் கொள்வர்தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.com