tag:blogger.com,1999:blog-1474608369333206681.post1080236547473288329..comments2023-10-29T13:02:52.613+05:30Comments on தமிழ் ஓவியா: கூடங்குளம் பிரச்சினை பற்றி - கி.வீரமணிதமிழ் ஓவியாhttp://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-8704864748736845582011-12-30T19:14:32.953+05:302011-12-30T19:14:32.953+05:30புதிய அணைக்கு பூமி பூஜையா?
உத்தமபாளையம், டிச.30-...புதிய அணைக்கு பூமி பூஜையா?<br /><br /><br />உத்தமபாளையம், டிச.30-முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்ட வாய்ப்பில்லை என பொது மக்களுடன் நடந்த சமாதான கூட்டத்தில் தேனி மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி விளக்கம் அளித்தார்.<br /><br />முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக கடந்த 24 நாள்களாக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புதிய அணை கட்டுவதற்கு வரும் 1ஆம் தேதி பூமிபூஜை நடக்க இருப்பதாக தகவல் பரவியதால் மீண்டும் பதற்றம் ஏற்பட்டது. இதனால் காவல்துறை பொதுமக்கள் நல்லுறவுக்காக தேனி மாவட்டம் உத்தமபாளையம் வருவாய் கோட்டாட் சியர் அலுவலகத்தில் நேற்று அமைதிக் கூட்டம் நடந்தது.<br /><br />கூட்டத்தில் பேசிய மக்கள், ஜனவரி ஒன்றாம் தேதி புதிய அணைக்கு அடிக்கல் நாட்டப் போவதாக தகவல் பரவியுள்ளது. இது சில ஊடகங்களிலும் வெளியாகி யுள்ளன. எனவே கேரளாவிற்கு எதிராக பொருளாதார முற்றுகைப் போராட்டம் தொடர வேண்டும். எக்காரணம் கொண்டும் கேரளாவிற்கு பேருந்துகளை இயக்கக் கூடாது. இதன் பிறகாவது கேரளாவில் இருந்து இனி புதிய அணை கட்ட மாட்டோம், தற்போதுள்ள அணையை இடிக்க மாட்டோம் என்று அறிவிக்க வேண்டும். அதுவரை பொதுமக்கள் நடத்தும் போராட்டத்திற்கு அதிகாரிகள் குறுக்கீடாக இருக்ககூடாது என்றனர்.<br /><br />தேனி ஆட்சியர் கே.எஸ்.பழனிச்சாமி கூறியதாவது: ஜனநாயக வழியில் இனிமேல் எந்தப் போராட்டம் நடந்தாலும் அனுமதி தரப்படும். தேவையில்லாத வதந்திகளை நம்பாதீர்கள். பேருந்துகளை தற்போது நிறுத்தி உள்ளதால் பாதிக்கப் பட்டிருப்பது அங்குள்ள தமிழர்கள்தான். முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினை உச்ச நீதிமன்றத்தில் உள்ளது. உச்ச நீதிமன்ற வழிகாட்டு தலின்படி, நிபுணர் குழுவினர் ஆய்வுசெய்து வருகின்றனர். இந்த அறிக்கை மார்ச் மாதம் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. அதன் பின், இறுதி தீர்ப்பு வர உள்ளது. அதுவரை எந்த அணையும் கட்ட முடியாது. அணையை இடிக்கவும் முடியாது.<br /><br />ஜனவரி ஒன்றாம் தேதி புதியஅணை கட்டுவதற்கு பூமி பூஜைகள் போடப்போவதாக வந்த தகவல் உண்மையில்லை. இது குறித்து கேரளாவில் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டோம். அப்படி எதுவும் நிகழ்ச்சி இல்லை என்று பதில் வந்துள்ளது. வதந்திகளை நம்ப வேண்டாம். முல்லைப் பெரியாறு அணையின் முடிவு உச்ச நீதிமன்றத்தில் உள்ளதால், யார் எதை கூறினாலும் அதை நம்பி மக்கள் வீணாக வன்முறைப் போராட்டங்களில் ஈடுபட வேண்டாம்.<br /><br />தேனி மாவட்ட கண்காணிப்பாளர் பிரவீன்குமார் அபினவ் பேசியதாவது: கேரளாவில் தமிழர்கள் மீது தாக்குதல் நடக்கிறதா என்று நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். அங்குள்ள தமிழர்கள் இங்கு வரும்போது நேரடியாக விசாரிக்கிறோம். - இவ்வாறு பிரவீன்குமார் அபினவ் கூறினார்.<br /> -----------”விடுதலை”30-12-2011தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-53207670150421202862011-12-30T19:08:18.513+05:302011-12-30T19:08:18.513+05:30கருத்துச் சொல்ல விரும்பவில்லையாம்
கேள்வி: கேரள ...கருத்துச் சொல்ல விரும்பவில்லையாம்<br /><br /><br /><br />கேள்வி: கேரள அட்வகேட் ஜெனரலே அணை உடைந்தாலும் தண்ணீரைத் திருப்பிவிட முடியும். இதனால் கேரளாவுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்று கூறியுள்ளாரே?<br /><br />கேரள முதல் அமைச் சர் உம்மன்சாண்டி: அவர் கருத்துக்களுக்குப் பதில் சொல்ல நான் விரும்பவில்லை.<br /><br />ஏன் பதில் சொல்ல வில்லை? பதில் சொல்ல முடியாது - அதனால் பதில் சொல்ல விரும்பவில்லை<br /><br />- இது தானே உண்மை?<br /> -------------"விடுதலை” 30-12-2011தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-24510951007502668532011-12-30T19:04:04.240+05:302011-12-30T19:04:04.240+05:30வேண்டாம் தற்கொலைகள்!
முல்லைப் பெரியாறு உரிமைப் ப...வேண்டாம் தற்கொலைகள்!<br /><br /><br />முல்லைப் பெரியாறு உரிமைப் பிரச்சினை யாக இருந்தாலும் சரி, ஈழத் தமிழர் பிரச்சினை யாக இருந்தாலும் சரி, வேறு எந்தப் பிரச் சினையாக இருந்தாலும் சரி, இவற்றுக்காகத் தமிழர்கள் தற்கொலை செய்து கொள்வது வருந்தத்தக்கது.<br /><br />தற்கொலை செய்து கொள்வதால் இவற் றிற்குப் பரிகாரம் கிடைத்து விடப் போவதில்லை. மாறாக களத்தில் குதித்து உரிமைகளை மீட்கும் பட்டாளத்து வீரர் ஒருவர் இழப்பு என்பதே உண்மையாகும்.<br /><br />பொதுவாக தற்கொலை கோழைத்தனம் என்று சொல்லப்பட்டாலும், இத்தகு தற்கொலை களை வீர தீரச் செயல் என்று பாராட்டுவதும், தலைவர்கள் அறிக்கைகளை விடுவதும், நினைவுச் சின்னங்களை எழுப்புவதும் எந்த வகையில் நியாயம்?<br /><br />இவை ஒரு வகையில் தற்கொலைகளை ஊக்குவிப்பது ஆகாதா? நாட்டு மக்களுக்கு, நல்லது காட்டுவதுதான் தலைவர்களின் நடத்தையாக இருக்க வேண்டுமே தவிர, தவறான வழிகாட்டுதல்களைச் செய்வது நேர்மையானதல்ல.<br /><br />வெளிப்படையாக தற்கொலைகளைக் கண்டித்து கருத்துக்களை வெளியிட வேண்டும்; தற்கொலைகளை மேற்கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளவும் வேண்டும்.<br /><br />ஆனால் நம் நாட்டிலோ எல்லாம் தலை கீழாகத்தானே நடக்கின்றன.<br /><br />உண்ணாவிரதப் போராட்டத்தைக்கூட தந்தை பெரியார் ஏற்றுக் கொள்வதில்லை. அது ஒரு சண்டித்தனம் என்றார். காந்தியார் உண்ணாவிரதம் இருந்ததையே கண்டித்தவர் தந்தை பெரியார்.<br /><br />உரிமைகளை உரமாக நின்று போராடிப் பெற வேண்டுமே தவிர அய்யோ, நான் பட்டினி கிடக்கிறேன் செத்துப்போகப் போகிறேன் தயவு செய்து இரக்கப்பட்டு இந்தக் காரியத்தைச் செய்து கொடுங்கள்! என்று கேட்பது, யாசிப்பது கோழைத்தனமல்லவா! இரக்கப்பட்டு பிச்சை போடுவதுபோல அரசுகள் நடந்து கொள்ள வேண்டுமா?<br /><br />காந்தியார் உண்ணாவிரதம் இருந்து மிரட்டியதால்தானே தாழ்த்தப்பட்டவர்களுக்குக் கிடைக்க வேண்டிய தனித் தொகுதி முறை கிடைக்காமல் போயிற்று?<br /><br />காந்தியாரின் மனைவி கஸ்தூரிபாவுக்குத் தாலிப் பிச்சை கொடுக்க வேண்டும் என்று அண்ணல் அம்பேத்கர் அவர்களைக் கேட்டுக் கொண்டவர்கள் ஒருபுறம்; காந்தியார் உயிருக்கு ஒன்று என்றால்... என்று அம்பேத்கர் அவர்களை மிரட்டியவர்கள் இன்னொருபுறம்!<br /><br />மேலை நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து கொண்டிருந்த தந்தை பெரியார் ஒருவர் தானே ஒரு காந்தியாரின் உயிர் முக்கியமல்ல; அதைவிட கோடானு கோடி தாழ்த்தப் பட்டவர்களின் உரிமைதான் முக்கியம் என்று டாக்டர் அம்பேத்கருக்குத் தந்தி கொடுத்தார்.<br /><br />இப்பொழுது தொட்டதற்கெல்லாம் உண்ணா விரதம் என்கிற வியாதி கிளம்பி விட்டதே! அன்னா ஹசாரே போன்றவர்கள், தாம் நினைப்பது நடந்தே தீர வேண்டும் என்கிற மிரட்டலுக்கு இந்த உண்ணாவிரதத்தை ஆயுதமாக்கி பயன்படுத்துவதில் நியாயம் உண்டா?<br /><br />விவாதித்து - உண்மையை நிலை நாட்டி கோரிக்கைகளை ஈட்டுவதுதான் அறிவு நாணயமே தவிர, தற்கொலை செய்து கொள்வதன் மூலமாகவோ உண்ணாவிரதம் இருந்து உயிர் விடுவதன் மூலமாகவோ மக்கள் மத்தியில் உணர்ச்சிகளைத் தூண்டி, வன்முறைகளை கொம்பு சீவி விடுவது பொறுப்புணர்ச்சி ஆகுமா?<br /><br />தந்தை பெரியார் அவர்களால் நாட்டுக்குக் கிடைத்துள்ள சமுதாய மாற்றங்கள் எந்த அடிப்படையில் என்பதை ஒரு கணம் சிந்தித்துப் பார்த்தால், இந்தத் தற்கொலைகள், உண்ணா விரதங்கள் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போய்விடும்.<br /><br />தலைவர்களும், ஊடகங்களும் இந்த வகை யில் சிந்தித்து நாட்டுக்கு நல்வழி காட்டட்டும்!<br />----------விடுதலை -30-12-2011தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-14316887763175155192011-12-30T07:36:22.290+05:302011-12-30T07:36:22.290+05:30திசை திருப்பும் இந்து முன்னணி!
கூடங்குளம் அணுமின...திசை திருப்பும் இந்து முன்னணி!<br /><br /><br />கூடங்குளம் அணுமின் நிலையப் பிரச்சினை தமிழ்நாட்டின் பிரச்சினைக்குரிய பிரச்சினையாக வடிவெடுத்துள்ளது.<br /><br />அணுமின் நிலையம் உருவானால், அப்பகுதியில் உள்ள மக்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டு விடும் என்று கூறி அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்திக் கொண்டுள்ளனர்.<br /><br />முன்னாள் குடியரசுத் தலைவரும், விஞ்ஞானி யுமான அப்துல்கலாம் அவர்கள் கூடங்குளம் அணுமின் நிலையத்தைப் பார்வையிட்டு, சரியான வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அச்சப்படத் தேவையில்லை என்று தம் கருத்தினைப் பதிவு செய்துள்ளார்.<br /><br />இதற்கு ஆதரவு - எதிர்ப்பு என்ற இரு நிலைகள் தோன்றியுள்ளன. எதிர்ப்பு அணியின் குழுவினர் பிரதமரை சந்தித்துத் தங்கள் தரப்பு வாதங்களை எடுத்து வைத்துள்ளனர்.<br /><br />தொழில்நுட்ப வல்லுநர்கள் குழு அமைக்கப்பட்டு அவர்களின் அறிக்கை கோரப்பட்டுள்ளது. இந்த நிலையில் இதனை ஒரு மதப் பிரச்சினையாக திசை திருப்புவதில் இந்து முன்னணி முனைந்து நிற்பது ஆபத்தான அணுகு முறையாகும்.<br /><br />இந்து முன்னணியின் மாநிலத் துணைத் தலைவர் ஒருவருக்கு தொலைப்பேசியில் மிரட்டல் விடப்பட் டுள்ளதாம். மிரட்டியவர்கள் யார் என்று தெரிய வில்லை. இப்படி அனாமதேயமாக தொலைப்பேசியில் விடப்பட்ட மிரட்டலை மய்யப்படுத்தி, இந்து முன்னணியின் நிறுவன அமைப்பாளர் திருவாளர் இராம. கோபாலன், இதுதான் சந்தர்ப்பம் என்று கருதி- அணுமின் நிலையத்தை எதிர்ப்பவர்களின் பின்னணி யில் வெளிநாட்டு சக்திகள் இருக்கின்றன என்ற தோரணையில் பிரச்சினையைச் சூடுபடுத்தி யிருக்கிறார்.<br /><br />கூடங்குளம் வட்டாரத்தில் வாழும் மக்கள் பெரும்பாலோர் கிறித்துவர்களாக இருப்பதை மனதிற் கொண்டு இந்து முன்னணி அமைப்பாளர் மிரட்டுவதைப் புரிந்து கொள்ள முடிகிறது.<br /><br />ஏதாவது பிரச்சினை கிடைக்காதா - அதனைச் சிறுபான்மையினருக்கு எதிராகத் திசை திருப்ப முடியாதா என்கிற நரிக்குணம் எப்பொழுதுமே இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ். வகையறாக்களுக்கு உண்டு. அதில் பெரும்பாலும் தந்திர யுக்திகள் தோள் தட்டி, தொடை தட்டி நிற்கும்.<br /><br />இஸ்மாயில் என்று பச்சைக் குத்திக் கொண்டு காந்தியாரைச் சுட்டுக் கொன்ற ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனரான நாதுராம் கோட்சேயின் வழி வந்தவர்களாயிற்றே!<br /><br />இந்தப் பிரச்சினையையும், இந்து - கிறித்தவர் பிரச்சினையாக உருமாற்றம் செய்யத் துடித்துக் கொண்டு இருக்கின்றனர்.<br /><br />ஏற்கெனவே தென் மாநிலங்களில் இந்தப் பிரச்சினையை ஆறிப் போய் விடாமல் அவ்வப்போது விசிறிவிடும் ஒரு வேலையை இந்து முன்னணி ஆர்.எஸ்.எஸ். வகையறாக்கள் செய்து கொண்டுதான் இருக்கின்றன.<br /><br />கூடங்குளம் அணுமின் நிலையம் என்பது மதரீதியான பிரச்சினையல்ல; அது ஒட்டு மொத்தமான நாட்டு மக்கள் பிரச்சினை.<br /><br />இதனை மதப் பிரச்சினையாக்க முயல்வதைவிட கேடு கெட்டதனம் வேறு ஒன்றும் கிடையாது. எதையும் மதப் பார்வையோடு பார்க்கும் ஓர் அணுகுமுறையை சங்பரிவார்க் கும்பல் செய்து வருகிறது.<br /><br />சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தில் இராமனைக் கொண்டு போய்த் திணித்து அதனை முடக்கியவர்கள் அல்லவா!<br /><br />முற்றும் உணர்ந்தவர்கள் என்ற நிலையில் உள்ள உச்சநீதிமன்ற பேரறிவாளர்கள் அதனை ஏற்று, இடைக்காலத் தடையை ஏற்படுத்தி, நீண்ட காலமாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் பொருளாதார ரீதியாக வளம் ஏற்படுத்தும் திட்டத்திற்கு முட்டுக் கட்டை போட்டுள்ளனர்.<br /><br />இதுபோன்றவைகளில் மத மூக்கை நுழைய விடுவதற்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட வேண்டும். அனாமதேயங்கள் தொலைப்பேசியில் பேசியதாகக் கூறப்படுவதையெல்லாம் வைத்துக் கொண்டு, வீராவேச பேச்சுகளில் ஈடுபடக் கூடாது, கூடவே கூடாது.<br /><br />காவல் புலனாய்வுத் துறை இதில் துரிதமாகச் செயல்பட்டு, யார் தரப்பில் தவறு இருந்தாலும், சட்டப்படி நடவடிக்கை எடுக்கக் கோருகிறோம்.--"விடுதலை” தலையங்கம் 2-12-2011தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.com