Search This Blog

31.8.14

விநாயகரின் மனைவியர் பட்டியல்-விநாயகன் இறக்குமதி சரக்கே...!


பண்டை இலக்கியத்தில் விநாயகர் இல்லை
நம் தமிழ்நாட்டில் பண்டைத் தமிழ் நூல்களில் இவ்விநாயகர் வழிபாடு சொல்லப்படவில்லை. திருஞான சம்பந்தர் தன் தேவாரத்தில் விநாயகர் வழிபாட்டைப் பற்றிக் கூறியுள்ளார். உமையம்மை பெண் யானையின் வடிவு கொள்ளச் சிவபிரான் ஆண் யானை வடிவு கொண்டு யானை முகத்தை உடைய கணபதியைத் தோற்றுவித்தான் என்கிறார். சிறுத்தொண்டர் பரஞ்சோதி என்ற பெயரோடு வட பகுதியில் வாதாபி என்ற நகர் மேல் படையெடுத்துச் சென்று அந்நகரை அழித்து வெற்றி கொண்டு வந்தபோது அங்கு சிறப்பாகக் காணப்பட்ட கணபதியின் படிமத்தையும் கொண்டு வந்து தம்மூரில் கணபதீச்சுரம் செய்து வழிபட்டார் என்ணீபதும், வாதாபி யிலிருந்து கொணர்ந்தமையால் வாதாபி கணபதி எனப் பெயர் பெற்றார் என்பதும் இங்கு நினைவு கூர்தல் வேண்டும்.
---------------------------(தமிழாகரர் வித்துவான் செ. வெங்கடராமச் செட்டியார், அண்ணாமலைப் பல்கலைக் கழகம், "தன்னை நினையத் தருகிறான்" என்ற கட்டுரையில் பக்கம் 17)
(மேல் இரு கருத்துகளுக்கும் ஆதார நூல்: சிதம்பரம் முக்குறுணி விநாயகர் திருக்குடமுழுக்கு விழா மலர் 8+9+1978)
சிவனுக்குப் புதிய உறவு
பாடல் பெற்ற கோயில்களில் நாயன்மார் காலத்தில் விநாயகரை வைத்து வழிபட்டதாகத் தெரியவில்லை. விநாயகர் தமிழகத்துத் தெய்வம் அல்லர். முருகன் சங்க நூல்களில் இடம் பெற்றிருப்பது போல விநாயகர் இடம் பெற வில்லை. விநாயகர் வழிபாடு பம்பாய் மாகாணத்தில்தான் மிகுதியாகக் காணப்படுகிறது. அம்மாகாணம் பல்லவர் காலத்தில் பண்டைச் சாளுக்கியரால் ஆளப்பட்டு வந்தது. சிறுத் தொண்ட நாயனார் சாளுக்கியர் தலை நகரான வாதாபியைக் கைப்பற்றியபோது இப்புதிய கடவுளை அங்கு கண்டார். தாம் முன்னர் கண்டறியாத அத்திருவு ருவத்தைக் கண்டதும் வியப்புற்று அதனை எடுத்து வந்து தம் ஊரில் சீராளதேவன் கோயிலில் வைத்து வழிபட லானார். அது முதல் சீராளன் கோயில் கணபதீச்சுரம் எனப் பெயர் பெற்றது என்பதே தெரிகிறது. இக்கணபதீச்சுவரமே சம்பந்தர் பாடல்களில் இடம் பெற்றது. பின்னர் நாளடைவில் இப்புதிய கடவுளுக்கும், சிவபெருமானுக்கும் உறவுமுறை கற்பிக்கப்பட்டது. அதன் பயனாக விநாயகர் சிவபெரு மானுக்கு முதல் திருமகனாராகக் கருதப்பட்டார். இவ் விநாயகர் வாதாபியிலிருந்து குடியேறிய தெய்வம் என்பதை 'வாதாபி கணபதி பஜேம் பஜேம்' என்ற தோத்திரத்தாலும் நன்குணரலாம்.
------------------------------(சைவப் பெரும்புலவர் டாக்டர் மா. இராசமாணிக்கனார் எழுதிய "சைவ சமயம்" என்ற நூலில் பக்கம் 62)
6ஆம் நூற்றாண்டில் விநாயகர்
வடமொழியில் புராண நூல்கள் இயற்றினவர், இழிந்த மக்களின் நடையைக் காட்டிலும் அருவருக்கத்தக்கச் செய்திகளைப் பொய்யாகப் பிணைத்துக் கட்டிச் சிவபிரான் மேலும் உமைப் பிராட்டியார் மேலும் அவை தம்மை ஏற்றி யானை முகம் உடைய பிள்ளையார் அவ்விருவர் பால் நின்று தோன்றிய வரலாறுகளைப் பலவாறு ஒன்றோ டொன்று மாறுபடப் பகர்ந்திருக்கின்றனர்.
யானை முகம் உடைய பிள்ளையாராகிய கடவுள் வணக்கம் கி.பி. 5ஆம் நூற்றாண்டின் ஈற்றிலாதல் 6ஆம் நூற்றாண்டின் துவக்கத்திலாதல் தோன்றியதாகல் வேண்டும்.
---------------------------(மறைமலைஅடிகள் எழுதிய "தமிழர் மதம்" என்ற நூலில்+ பக்கம் 190)

விநாயகரின் மனைவியர் பட்டியல்
விநாயகர் தன்னை வணங்கியவர்க்கு விக்கினத்தை நீக்குவோரும், அவ்வகை வணங்காதவர் க்ரு விக்கி னத்தைத் தருபவரும் ஆவார். இவர் சித்தி, புத்தி, வல்லபை, விஷ்ணு மூர்த்தியின் குமாரிகளாகிய மோதை, பிரமோதை, சுமகை, சுந்தரி, மனோரமை, மங்கலை, கேசினி, காந்தை, சாருகாசை, சுமத்திமை, நந்தினி, காமதை முதலியவரை மணந்தார். இவரது பிறப்பைப் புராணங்கள் பல பேதபடக் கூறும் (பக்கம் 1440)

யானைத் தலையர்
கஜமுகர்: ஒரு காலத்தில் சிவமூர்த்தியும், பிராட்டியும் நந்தவனத்துச் சித்திர மண்டபத்தில் எழுதி இருந்த ஆண், பெண் யானைகளைப் பார்க்க அவற்றினின்றும் கஜமுகர் தோன்றினார். (பக்கம் 315)
----------------------------(மேற்கூறிய இரு கருத்துகட்கும் ஆதாரம் ஆ.சிங்கார வேலு முதலியார் தொகுத்த "அபிதான சிந்தாமணி")
இந்த இறக்குமதி சரக்குதான் தமிழ்நாட்டின் கடவுளா? சிந்திப்பீர்.
                   -----------------------" விடுதலை” 28-8-2014
Read more: http://viduthalai.in/page1/86655.html#ixzz3BvhcNHsv

48 comments:

தமிழ் ஓவியா said...

நெஞ்சம் மறக்கவில்லை

மன்னார்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் எழுத்தராகப் பணி புரிந்து கொண்டு பகுத்தறிவாளர் கழக செயலாளராகவும் பணி செய்து வந்தேன். மன்னை நாராயணசாமி அவர்களின் வீடு ஒன்றில் வாடகைக்குக் குடி இருந்தேன். எனது வீட்டின் அரு கில் அன்னை நாகம்மையார் மன்றம் இருந்தது. அங்கு கழகக் கூட்டங்கள், வாழ்க்கை ஒப்பந்த விழாக்கள் நடந்து வந்தன.

உள்ளிக்கோட்டை பக்கிரிசாமி, எடமேலையூர் இராசன், நகரத் தலைவர் அழகிரிசாமி, காளவாய்க்கரை கோவிந்தராசு, நீடாமங்கலம் ஆறுமுகம், சுப்பிரமணியன் போன்ற கழகத் தலைவர்கள் வீட்டிற்கு வருவார்கள். மன்னை நாராயணசாமி, அவர்களை சந்தித்து பேசிவிட்டு செல்வார்கள். அரசு அதிகாரிகளும் என் மூலம் மன்னை அவர்களை சந்தித்து வரு வார்கள். நானும் அவர்களை மன்னை யிடம் அழைத்துச் சென்று அறிமுகம் செய்து வைப்பேன். கும்பகோணம் சோழன் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராகப் பணி செய்த பாசுக்கரன் என்பவர் கழகத் தலைவர்களுடன் எனது வீட்டிற்கு வந்தார்.

எனது மூத்த மகள் திலகவதி பள்ளி இறுதி வகுப்பு (எஸ்.எஸ்.எல்.சி) முடித்து விட்டு வீட்டில் இருந்தது. அதைக் கவனித்த ஓட்டுநர், குடந்தை போக் குவரத்துக் கழக மேலாண்மை இயக் குநராக ஞான.அய்யாசாமி பணி செய்கிறார்கள். தந்தை பெரியார் அவர்களிடம் நெருங்கிப் பழகியவர். அவர்களிடம் கூறினால் கட் டாயம் வேலை போட்டுத் தருவார்கள் என்றும், கூடவே தானும் வருவதாக வும் தெரிவித்தார்கள்.

அவர்களை தாங்கள் பார்க்க வரும்போது அன் றைய விடுதலை நாளிதழை அவர்கள் பார்க்கும்படி கையில் எடுத்து வரவும் என்று தெரிவித்தார். அதன்படி அவரை அழைத்துக் கொண்டு கும்பகோணம் தலைமை அலுவலகம் சென்றேன். நான் மன்னார்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பணி செய்வதையும், பகுத்தறிவாளர் கழக செயலாளராகச் செயல்படுகிறேன் என்றும் கூறினார். கையில் வைத்திருந்த அன்றைய விடுதலை நாளிதழை அவர்கள் மேசை மீது வைத்தேன். அதைப்படித்து விட்டு அதன் பிறகுதான் விசாரித்தார்கள்.

எனது மகள் திலகவதி எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெற்றுள்ளது. அதனால் ஏதாவது வேலை போட்டுத் தாருங்கள் என்றேன். கூட வந்த ஓட்டு நரும் நான் மன்னை நாராயணசாமி அவர்கள் வீட்டில்தான் குடியிருக்கிறார் என்று கூறினார்கள்.

போக்குவரத்து கழகத்தில் பெண் களை வேலைக்கு சேர்ப்பதில்லையே என்றார்கள். உடன் அருகில் தட்டச்சு செய்து கொண்டிருந்த எனது பெண்ணுடன் படித்த பெண்னைப் பார்த்தேன். அதை கவனித்த அவர்கள் தட்டச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். எழுத்தர் பணிகளுக்கு பெண்களை சேர்ப்ப தில்லை என்றார்கள். எனக்கு பையன்கள் இல்லை அவசியம் செய்ய வேண்டு மெனக்கூறி விண்ணப்பத்தைக் கொடுத்தேன்.

வாங்கிக் கொண்டு வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளதா என்று கேட்டார்கள். செய்துள்ளது என்று கூறினேன். உடன் தட்டச்சரிடம் தஞ்சாவூர் வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கு கடிதம் எழுதி பட்டியல் கேட்கும்படி கூறினார். எனது மகள் பெயரைச் சேர்த்து பட்டியல் வாங்கி வந்தேன். எனது மகள் வேலை சம்பந்தமாக மன்னை அவர்களிடம் நடந்த விவரங்களைக் கூறி கட்டாயம் வேலை வாங்கித் தரும்படிக் கூறினேன்.

சரியெனக்கூறி இயக்குநரிடம் சொன்னார்கள். அவர் களும் தொலைபேசியில் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் வந்த பட்டி யலில் உள்ள அனைவருக்கும் நேர்முகத் தேர்விற்கு அழைப்பு அனுப்பப்பட்டது. அதில் மன்னை அவர்களின் நேர்முக உதவியாளர் கடகம் இராமநாதன், உறவினர் பையனுக்கும் நேர்முக தேர் விற்கு அழைப்பு அனுப்பப்பட்டது.

அந்தப் பையனுக்கும் மன்னை அவர்களிடம் சொல்லி சிபாரிசு செய்யப்பட்டது. எனது மகளுக்கும் அந்தப் பையனுக்கும் சிபாரிசு செய்த தால் உடனே இயக்குநர் அவர்கள் மன்னை அவர்களிடம் கேட்டபோது முதலில் பரிந்துரை செய்ததை நினைவில்லாமல் சொல்லிவிட்டேன். முதலில் சொன்ன திலகவதிக்கே நியமன ஆணை வழங்கும்படிக் கூறினார்கள்.

ஆகவே மன்னார்குடி போக்குவரத்து கழக பணி மனையில் ரூ.600 (ஆறு நூறு ரூபாய் மட்டும்) தினக்கூலியாக நியமனம் செய்தார்கள். தனது வேலையை திறமையாகச் செய்ததால் ஓராண்டுக்குப் பிறகு கும்பகோணம் தலைமை அலுவலகத்திற்கு எழுத்தராகப் பணி நியமனம் செய்தார்கள். அங்கு பணி மூப்பு அடிப்படையில் பிரிவு கண் காணிப்பாளராக பணி செய்து அண் மையில் பணியிலிருந்து ஓய்வு பெற்றுள்ளது.

சென்னை பெரியார் திடலுக்கு வரும் போதெல்லாம் ஞான.அய்யாசாமி அவர்களைச் சந்தித்து நலம் விசாரித்து வருவேன். அவர்கள் இயற்கையெய் தியதை விடுதலை மூலம் அறிந்து பெரிதும் வருந்தினேன்.

- ச.மு.செகதீசன் (மாவட்ட தி.க. (மயிலாடுதுறை)

Read more: http://viduthalai.in/page2/86875.html#ixzz3C1XdiQCp

தமிழ் ஓவியா said...

சத்தியமூர்த்திபற்றி ராமசாமி முதலியார்!


அரசியலாகட்டும், அலுவலகமா கட்டும் மகா உழைப்பாளிகள் போலவும், உண்மைத் தொண்டர்கள் போலவும் பாவலா செய்வது பார்ப் பனர்களுக்கு கை வந்த கலை!

பார்ப்பன அரசியல் மேதை சத்தியமூர்த்தி 1934 வாக்கில் காங்கிரஸ் சார்பில் மத்திய சட்டசபை தேர்தலுக்கு நின்றார். தேர்தல் கூட்டங்களில் என்ன பேசினார்கள் தெரியுமா? காங்கிரஸ் நாட்டுக்கு தியாகம் செய்த கட்சி. நாங் கள் எல்லாம் ஜெயிலுக்கு போனவர்கள், எனவே எங்களுக்கு ஓட்டு போடுங்கள் என்றார். இங்கேதான் வேடிக்கை.

சத்தியமூர்த்தி ஜெயிலுக்கு போக நேர்ந்ததையும் -_ அங்கு அவர்பட்ட கஷ்டத்தையும் ஏ. ராமசாமி முதலியார் அம்பலமாக்குவதைக் கவனியுங்கள்.

ஒரு சமயம் தோழர் சத்தியமூர்த்தி கோவிந்தப்ப நாயக்கன் தெருவில்ஒரு கடையில் நாற்காலி போட்டு உட் கார்ந்து கொண்டு சட்ட பகிஷ்கார துண்டு பிரசுரங்களை ஜனங்களுக்கு விநியோகித்துக் கொண்டிருந்தார்.

அப்போது அவரை போலீசார் கைது செய்து மாஜிஸ்டிரேட்டின் முன் நிறுத்தினார்கள். மாஜிஸ்டிரேட் சத்தியமூர்த்தியை பார்த்து அய்யா சத்தியமூர்த்தியே -_ இவ்வளவு மலிவான விலையில் நான் உன்னை பெரிய வீரனாக்க விரும்பவில்லை என்று சொல்லி எச்சரித்து விடுதலை செய்து விட்டார். சத்தியமூர்த்தி சிறைக்கு போகாததைப்பற்றி மக்கள் கேவலமாக பேச ஆரம்பித்துவிட்டார்கள். அவர் சிறைக்கு போனால்தான் மரியாதை என்ற நிலைமை ஏற்பட்டது.

கணக்கற்ற இளைஞர்கள் தடியடிபட்டு ஜெயிலுக்கு போய்க் கொண்டிருந்தனர். உயிர் போனாலும் சத்தியமூர்த்தி அப்படி தடியடி படமாட்டார். எனவே ஒரு மோட்டார் தேடிபிடித்து அதில் உட்கார்ந்துகொண்டு மறுபடியும் நோட்டீஸ் விநியோகம் செய்தார். இது பெரிய குற்றமாகாது என்றும், கைது ஆனாலும் பெரிய தண்டனை கிடைக் காது என்றும் முழு நம்பிக்கையோடு சத்திய மூர்த்தி மோட்டார் சட்ட மறுப்பில் இறங்கினார்.

ஆனால் பாவம். பதினெட்டு மாதம் தீட்டினார்கள். சிறை தண்டனை உத்தரவான அதே இடத்தில் ஏ வகுப்பு போடும்படி மன் றாடி வேண்ட, மாஜிஸ்டிரேட்டும் மனம் இரங்கி அவ்விதமாக அனுமதித் தார். வேலூர் ஜெயிலுக்கு அனுப்பி னார்கள். உடம்பு சரியில்லை என்று ஜெனரல் ஆஸ்பத்திரியில் நான்கு மாதம் இருந்தார். ஆஸ்பத்திரியில் எல்லா சுதந்திரங்களும் உண்டு.

ஜெயிலில் இருந்தபோதும் -_ அங்குவரும் (சத்திய மூர்த்திக்கு எதிர்க்கட்சி) பிரமுகர்களை வேண்டி எவ்வளவோ வசதிகளை ஜெயிலில் பெற்றுக் கொண்டார். மேலும் நீதிக்கட்சிக்காரர்களின் உதவி யுடன் குறித்த காலத்திற்கு முன்பே விடுதலை ஆனார். அப்படி உதவியவர் களில் நானும் ஒருவன். சத்தியமூர்த்திக்கு எள் மூக்கத்தனையாவது பெருந்தன்மை இல்லை என்பது நிச்சயம். வடிகட்டிய நன்றி கெட்டதனமே அந்த மகானுபா வரின் இயற்கைச் சுவாபம் என்று தெரிகிறது.

பார்ப்பனர்களால் _- மகாமேதை யாகவும், தியாகியாகவும் இன்று சொல்லப்படும் சத்தியமூர்த்தியின் யோக்கியதையே இப்படி என்றால்.. அந்தோ! வெட்கம் என்றால் வீசை என்ன விலை என்று கேட்கும் விசித்திர இனமே!

பகுத்தறிவு 21.10.1937

Read more: http://viduthalai.in/page8/86825.html#ixzz3C1ZC3jZp

தமிழ் ஓவியா said...

அன்றும் - இன்றும்!


காஞ்சீபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் பட்டப் பகலில் அக்கோ யில் மேலாளர் சங்கரரா மன் கொலை செய்யப்பட் டார். அந்த சங்கரராமன். காஞ்சிபுரம் சங்கராச்சாரி யார் ஜெயேந்திர சரஸ்வதி மீது குற்றஞ்சாட்டி எழுதிய கடிதங்கள் பிரசித்திப் பெற் றவை. அந்தச் சூழலில் காஞ்சி ஜெயேந்திரரால் ஏவப்பட்டவர்கள் இந்தப் படுகொலையைச் செய்த னர் என்று ஏடுகளில் ஏராளமான செய்திகள் வெளி வந்ததுண்டு

இந்த வழக்குத் தமிழ் நாட்டில் விசாரிக்கப்பட் டால் தமக்கு நியாயம் கிடைக்காது என்று கூறி சங்கராச்சாரியார் தரப்பில் உச்சநீதிமன்றம் சென்ற போது, உச்சநீதிமன்ற நீதி பதி திரு. பாலசுப்பிரமணி யம் என்பவர் நான் சங்க ராச்சாரியார் சீடன்; எனவே இந்த வழக்கினை நான் விசாரிக்க மாட்டேன்! என்று சொன்னது எத் தனைப் பேருக்கு நினை வில் இருக்கும் என்று தெரிய வில்லை.

உச்சநீதிமன்ற ஆணைப்படி இந்த வழக்கு புதுச்சேரி நீதிமன்றத்தில் நடத்தப்பட்டது. மொத்தம் 189 சாட்சியங்களில் 83 பேர் பிறழ் சாட்சியாகி விட்டார் கள். எந்த ஒரு வழக்கிலும் இத்தனைப் பேர் பிறழ் சாட்சியங்களாக மாறிய வரலாறு இல்லை; இப்படி பிறழ் சாட்சி சொன்னவர் கள்மீது கூட நடவடிக்கை எடுக்க சட்டத்தில் இடம் உண்டு. இந்த வழக்கில் அதுபற்றிக் கவலைப்பட்ட தாகத் தெரியவில்லை.

சங்கராச்சாரியார் இரு வரும் மற்றவர்களும் ஒட்டு மொத்தமாக விடுதலை செய்யப்பட்டார்கள்; அதன் மீது மேல் முறையீடு செய்ய புதுச்சேரி அரசு - ஆளுநர் அனுமதி வழங் கிய நிலையில், சுப்பிர மணியசாமி என்ற பச்சை பார்ப்பனர் ஒருவர் குடி யரசு தலைவருக்கு மனு கொடுக்கிறார். இந்த வழக் கின்மீது மேல் முறையீடு செய்வதற்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று அதில் கூறியுள்ளார்.

அதனைக் கண்டித்து தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் அறிக்கை ஒன்றினை வெளியிட்டார். சு. சாமி யின் புகாரை ஏற்கக் கூடாது என்று குடியரசு தலைவருக்கு மின்னஞ்சல் அனுப்புமாறு அந்த அறிக் கையில் வேண்டுகோள் விட்டிருந்தார். (8.8.2014)

இந்தச் சூழ்நிலையில் இந்த வழக்கை மேல் முறையீடு செய்யலாமா கூடாதா என்று அட்டர்னி ஜெனரலின் கருத்துக் கேட் கப்பட்டது. ஒரு மாவட்ட அளவில் நடைபெற்ற ஒரு வழக்குக்காக அட்டர்னி ஜெனரலிடம் கருத்துக் கேட்கும் போதே அதன்மீதான அய் யப்பாட்டை திரா விடர் கழகத் தலைவர் எழுப்பினார். (21.8.2014) அது உண்மை என்பதை நிரூபிக் கும் வகையில் அட்டர்னி ஜெனரல் மேல் முறையீடு தேவையில்லை என்று கூறி விட்டார்.

இந்த நேரத்தில் குடிஅரசு ஏட்டில் (20.2.1927) வெளி வந்த ஒன்றை எடுத்துக் காட்டுவது பொருத்தமான தாகும். பார்ப்பானை சுவாமி என்ற காலமும் போச்சே! லோக குரு என்ற காலமும் போச்சே! காலில் விழும் காலமும் பேச்சே! காலைக் கழுவி தண்ணீரைக்குடித்து மோட்சத்திற்குப் போகும் காலமும் போச்சே! நம் எல்லோரையும் வைப் பாட்டி மக்கள் சூத்திரர் கள் என்னும் காலமும் போச்சே!

காங்கிரஸ் தலைவர்: துரைகளே! இது வகுப்புத் துவேஷம் அல் லவா!

துரை: பொறும் பொறும் சட்ட மெம்பரை யும் அட்வொகேட் ஜென ரலையும் அபிப்ராயம் கேட் போம்; அவசரப் படாதே யும் (குடிஅரசு - 20.2.1927).

இதற்கு விளக்கம் தேவையில்லை அன்றும் அட்வொகேட் ஜெனர லைக் கேட்டார்கள்; இன்று அட்டர்னி ஜெனரலைக் கேட்கிறார்கள் - புரிகிறதா!

- மயிலாடன் 30-8-2014

Read more: http://viduthalai.in/page1/86799.html#ixzz3C1aDuUkJ

தமிழ் ஓவியா said...

உள்ளதைச் சொன்னால் எரிச்சலா?

மும்பை, ஆக.30_ விநாயகரை பற்றி, சமூக வலைதளத்தில் கிண்டலடித்தும், அவதூறாகவும் கருத்து தெரிவித்த, பாலிவுட் இயக்குனர் ராம் கோபால் வர்மாவுக்கு, கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

பாலிவுட்டின் பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மா. 'சத்யா, ரங்கீலா, சர்க்கார் ராஜ்' உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். விநாயகர் சதுர்த் தியான நேற்று, சமூக வலைதளமான, 'டுவிட்டர்'ல், சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டார். விநாயகரை கிண்டலடித்தும், கேலி செய்தும், அவ மதிக்கும் வகையிலும், பல கருத்துகளை தெரி வித்திருந்தார்.

'விநாயகருக்கு, அவரின் தலையையே, அவரால் காப்பாற்ற முடியவில்லை. பக்தர்களை எப்படி காப்பாற்றுவார். மற்ற கடவுள்களை விட, விநாயகர் அதிகம் சாப்பிடுவார் போலிருக்கிறது. அதனால் தான், குண்டாக இருக்கிறார். விநாயகரை வழிபட்டு, பலன் அடைந்த பக்தர்களின் பட்டியலை வெளியிட முடியுமா?' என்பது போன்ற பல சர்ச் சைக்குரிய விஷயங்களை அவர் தெரிவித்திருந்தார்.

விநாயகர் சதுர்த்தி அன்று, ராம்கோபால் வர்மா இவ்வாறு தெரிவித்துள்ளது, கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, ''என் கருத்துகள் யார் மனதையாவது புண்படுத்தியிருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்கிறேன்,'' என்றார்.

Read more: http://viduthalai.in/page1/86804.html#ixzz3C1aSchzc

தமிழ் ஓவியா said...

சிக்கல் விநாயகருக்கு சிக்கல்!

திருவிடைமருதூர், ஆக.30_ கும்பகோணம் அருகே உள்ள சிக்கல் நாயக்கன்பேட்டையில் 50 ஆண் டுக்கு முன்பு கட்டப்பட்ட அய்யனார்கோவில் உள்ளது. இந்து சமய அறநிலைக்கு சொந்தமான இந்த கோவிலை இரவு வழக்கம்போல் பூட்டிச் சென்றனர். இந்த நிலையில் கோவிலுக்குள் புகுந்த சிலர் மூலவர் சன்னதி முன்பு இருந்து விநாயகர் சிலையை திருடி சென்றுவிட்டனர்.

இதுபற்றி கோவில் பரம்பரை அறங்காவலர் வரதராஜன் திருப்பனந்தாள் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விநாயகர் சிலையை திருடிய வர்களை தேடி வருகிறார்கள். விநாயகர் சதுர்த்தி விழாவின் போது விநாயகர் சிலை திருடப்பட்ட சம் பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Read more: http://viduthalai.in/page1/86801.html#ixzz3C1abtGnl

தமிழ் ஓவியா said...

காய்கறி உண(ர்)வுப் பிரச்சினை!

மத்திய ஆட்சி இந்துத்துவா ஆட்சியாகவே நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக நடந்து கொண்டு வருகிறது.

பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் கலந்து கொள்ளும் விருந்தில் இறைச்சி உணவுக்குத் தடையாம். அயல் நாடுகளில் உள்ள இந்தியத் தூதரக அலுவலகங் களுக்குக்கூட இந்த ஆணை பொருந்துமாம்.

பிரதமர் அலுவலகம் சார்பில் அனைத்து அமைச்சர் கள், உயர் அலுவலகங்கள், வெளிநாடுகளில் உள்ள இந்தியத் தூதரக அலுவலகங்களுக்கு இந்தியப் பிரதமர் அலுவலகத்திலிருந்து இந்த வகையில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

இது சரியானது தானா? சட்ட ரீதியிலோ, தார்மீக ரீதியிலோகூட இது ஏற்றுக் கொள்ளத்தக்கது தானா என்பதைப் புத்தியைச் செலுத்தி சிந்திக்க வேண்டும்.

பிரதமராக இருக்கக் கூடிய ஒருவர் சைவ உணவை சாப்பிடுபவராக இருக்கலாம்; பிரதமர் அப்படி இருக்கிறார் என்பதற்காக மற்றவர்களும் அவ்வாறுதான் சைவ உணவு சாப்பிட வேண்டும் என்று வற்புறுத்த, ஆணை பிறப்பிக்க, நிர்ப்பந்திக்க யாருக்கும் உரிமை கிடையாது. இந்த அடிப்படை மனித உரிமையைக் கூடத் மதிக்கத் தயாராக இல்லாதவர்தான் இந்தியாவின் பிரதமர் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்.

பிரதமர் அலுவலகத்தில் இந்த ஆணை இந்தியாவின் உயர் மட்டப் பதவியை அலங்கரிக்கும் குடியரசுத் தலைவர் அலுவலகத்தைக் கட்டுப்படுத்தப் போவதில்லை. வங்காளத்தில் உள்ளவர்கள் விரும்பிச் சாப்பிடுவது மீன்தான் என்பது பிரதமருக்கும் பிரதமரின் அலுவலகத்தில் உள்ளவர்களுக்கும் இது தெரிந்தது தானே!

இதில் இன்னொரு கேள்வியும் தொக்கி நிற்கிறது. பிரதமர் வெளிநாடுகளுக்குச் செல்லும்போது (இந்த நூறு நாட்களில் அது தானே தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கிறது) வெளிநாட்டு அரசு அளிக்கும் விருந்திலும் இந்தக் கட்டுப்பாட்டை இந்தியப் பிரதமர் அலுவலகம் விதிக்கப் போகிறதா என்பது ஒரு கசப்பான கேள்வியாக இருக்கலாம்.

பசுவதைத் தடை சட்டம்பற்றி இன்னொரு வகையில் பேசிக் கொண்டு இருக்கிறார்கள். பிஜேபி ஆளும் மாநிலங்களில் பசுவதைத் தடை சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

கோ பாதுகாப்புப் பற்றி தேர்தல் அறிக்கையிலும் குறிப்பிட்டுள்ளார்கள்; அனேகமாக மத்திய அரசே பசு வதைத் தடுப்புச் சட்டம் ஒன்றைக் கொண்டு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இந்திய அரசின் இந்த நிலைப்பாட்டைக் கண்டு உலக நாடுகள் கைதட்டிச் சிரிக்காதா?

ஒரே ஒருவர் சைவ உணவு சாப்பிட வேண்டும் என்பதற்காக மற்றவர்கள் அனைவரும் அத்தகைய உணவையே சாப்பிட வேண்டும் என்று வற்புறுத்துவது ஜனநாயகமா? இந்தியா இதற்கு மாறான திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறதா? என்ற நியாயமான கேள்வி சிந்தனைத் திறன் உள்ள ஒவ்வொருவருக்கும் ஏற்படாமல் போகாது!

வி.வி. கிரி அவர்கள் குடியரசு தலைவராக இருந்தபோது சிங்கப்பூர் சென்றிருந்தார். அப்பொழுது தனக்குச் சமையல் செய்பவர்கள் பிராமணர்களாக இருக்க வேண்டும் என்று வற்புறுத்த தமிழ்நாட்டி லிருந்து பார்ப்பன சமையற்காரர்கள் அனுப்பி வைக்கப்பட்டதையும் இந்த இடத்தில் நினைவு கூர்வது பொருத்தம்.

சைவ உணவு தேவை என்றால், சிங்கப்பூரிலேயே அதனை சமைத்துக் கொடுக்க தேர்ந்த சமையற்காரர்கள் இல்லாமலா போய் விட்டார்கள்? அப்பொழுது இது ஒரு பிரச்சினையாகப் பேசப்பட்டதுண்டு - விமர்சிக்கப் பட்டதுண்டு.

நீண்ட காலத்திற்குப் பிறகு ஆட்சியில் உயர்மட்டப் பதவியில் உள்ளவர்களின் உணவுப் பிரச்சினை, அரசின் அதிகார பூர்வ அறிக்கையாக இப்பொழுது வெளி வந்துள்ளது.

இது அடுத்தவர்களின் உரிமையில் மூக்கை நுழைக்கும் மோசமான நடவடிக்கையாகும். இந்தப் போக்குத் தொடருமேயானால், தனி மனிதனின் தனிப்பட்ட உணர்வுகளில் பழக்க வழக்கங்களில் மோடி அரசு தலையிடக்கூடும் என்று எதிர்ப்பார்க்கலாம்.

தொடக்கத்திலேயே இது கண்டிக்கப்பட வேண்டும் எதிர்க்கப்பட வேண்டும் - விவாதங்கள் எழுப்பப்பட வேண்டும். ஊடகங்களும் ஒதுங்கிக் கொள்ளாமல் பெரும்பான்மையான மக்களின் உண(ர்)வுப் பிரச்சினையைத் தனி மனிதரின் ஆசாபாசத்தின் முடிவுக்கு விட்டுவிட முடியுமா? வெளிப்படையான விவாதங்கள் வெளிச்சத்திற்கு வரட்டும் - அதனை வரவேற்கிறோம்.

Read more: http://viduthalai.in/page1/86790.html#ixzz3C1atUqRG

தமிழ் ஓவியா said...

சட்டசபைக்குப் பார்ப்பனர் செல்வதன் ஆபத்து

திருவாளர் ராவ்பகதூர் கிருஷ்ணமாச்சாரியர் எம். எல். ஏ. இந்திய சட்டசபைக்கு நமது பிரதிநிதியாக அனுப் பப்பட்டவர். அவர் சமூக சட்டம் செய்ய சட்ட சபைக்கு அதிகாரம் இருக்கக் கூடாதென்றும் மத விஷயங்களில் எந்தச் சீர்திருத்தவாதியும் பிரவேசிக்கக் கூடாதென்றும், கல்யாண வயதைப் பற்றி சாஸ்திரங்களில் என்ன கூறியிருக்கிறதோ அதற்குச் சிறிதுகூட மாற்றம் செய்யச் சீர்திருத்தவாதி களையாவது, சர்க்காரையாவது, சட்டசபைகளை யாவது அனுமதிக்கக் கூடாது என்றும் பேசி அதற்காகக் கட்டுப்பாடான பிரச்சாரம் செய்ய வேண்டுமென்று தன்னால் கூடியவரை தான் சட்ட சபையில் பார்த்துக் கொள்வதாகவும் கூறியிருக்கின்றார்.

சுயராஜ்யம் கிடைத்த பிறகு சமூக சட்டம் செய்து கொள்ளலாம் என்று மக்களை ஏமாற்றி அரசியல் குழியில் விழுகும்படி செய்யும் பார்ப்பன தேசியவாதிகளும் அவர்களது பத்திரிகைகளும் இதற்கு யாதொரு பதிலும் சொல்லாமல் வாயை மூடிக் கொண்டேயிருக்கின்றன.

நாம் இந்தப் பித்தலாட்டங்களை எடுத்துக் காட்டினால் அது தேசத்துரோகம் என்பதாகவும் சுயராஜ்யத்திற்கு முட்டுக் கட்டையாகவும் போய்விட்டதாகக் கூக்குரல் போட்டு விஷமப் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்து விடுகிறார்கள்.

ஆகவே எப்படியாவது சட்டசபை முதலிய தானங் களுக்கு அரசியல் கட்சிகளையும் அபிப்பிராயங்களையும் எதிர்பார்க்காமல் உண்மையான சீர்திருத்தத்திற்கு போதிய உணர்ச்சியுள்ள மக்களாகப் போகும்படி பார்த்துக் கொள்ள வேண்டியதாகும்.

அதை விட்டு விட்டு அரசியல் கொள்கைகள் என்பதைக் கவனித்துக் கொண்டு எந்தக் காரணத்தை முன்னிட்டாவது பார்ப்பனர்களை நமது பிரதிநிதிகளாக அனுமதித்தோமானால் விதவைகள் கற்பம் உதிரக் கட்டியாகி திடீரென்று மறைந்து விடுவதுபோல் நமக்குத் தெரியாமலேயே அவர்கள் பார்ப்பனியப் பிரதிநிதி யாகவேதான் ஆகிவிடுவார்கள். அதில் சிறிதும் சந்தேகம் கொள்ளுவது அறியாமையேயாகும்.

- குடிஅரசு - கட்டுரை - 26.10.1930

Read more: http://viduthalai.in/page1/86768.html#ixzz3C1bdsXMW

கிரி said...

தமிழ் ஓவியா ஒரு நல்ல நாள் (இந்து மதத்தில்) வந்தா போதும் உடனே அதை விமர்சித்து / திட்டி ஒரு பதிவு போட்டுடுறீங்க..!

எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம்.. பகுத்தறிவு என்றால் இந்து மதத்தை மட்டும் திட்டுவதா?

தமிழ் ஓவியா said...

அரசியல் வியாபாரம்


டா க்டர் பி. சுப்பராயன் அவர்கள் அடுத்துக் கூடும் சட்டசபைக் கூட்டத்திற்கு மூன்று தீர்மானங்கள் அனுப்பப் போவதாகத் தெரிகின்றது. அதாவது,

1. சில பாதுகாப்புகளுடன் குடியேற்ற நாட்டத்துக்குக் குறைந்த எந்தத் திட்டமும் திருப்தியளிக்காது என்று இச்சபை அபிப்பிராயப்படுவதாக இந்த கவர்ன்மெண்ட் பிரிட்டிஷ் கவர்மெண்டாருக்குத் தெரிவிக்க வேண்டுமென இச்சபை சிபார்சு செய்கிறது.

2. பலாத்காரமற்ற குற்றங்களுக்காகத் தண்டிக்கப்பட்ட அரசியல் குற்றவாளிகளையெல்லாம் விடுதலை செய்ய வேண்டுமென்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குச் சிபார்சு செய்யும்படி இச்சபை சிபார்சு செய்கிறது.

3. அரசியல் கைதிகள் நடத்தப்படும் விதத்தைப் பற்றி விசாரணை செய்ய ஒரு கமிட்டி நியமிக்க வேண்டுமென்று இச்சபை கேட்டுக் கொள்ளுகிறது. என்பவையாகும். ஆகவே, இம்மூன்று தீர்மானங்களையும் நம்மைப் பொறுத்தவரை நாம் இவைகளை அரசியல் வியாபாரத் தீர்மானங்களென்றே சொல்லுவோம்.

இதற்காக ஜஸ்டிஸ் கட்சியார்கள் பயந்து கொள்ளவோ திக்கு முக்காடவோ தேவையில்லையென்றும் சொல் லுவோம். ஏனெனில் இந்த மாதிரி காரியங்களின் நடவடிக் கைகளை ஆதாரமாய் வைத்துக் கொண்டு கூப்பாடு போடும் தேசியப் பத்திரிகைகள் என்பவைகள் எல்லாம் ஜஸ்டிஸ் கட்சிக்கு நிபந்தனையில்லாத அடிமைகளாய்ப் போய்விட்டபடியாலும் சென்ற தேர்தலின் போது தேசியக் கட்சியை விட ஜஸ்டிஸ் கட்சி மோசமானது என்று கருதி அதைக் காப்பாற்ற வேண் டிய பொறுப்பு ஏற்பட்டது போல் இப்போது ஜஸ்டிஸ் கட்சியை விட தேசியக்கட்சி மோசமானது என்று கருதி ஜஸ்டிஸ் கட்சியைக் காப்பாற்றித் தீரவேண்டிய பொறுப் புடை யவைகளாகி விட்டபடியாலும் அவைகள் கருவாடு திருட்டுக் கொடுத்த பார்ப்பனத்தி போல் வெளியில் சொல்லாமல் வாயை மூடிக் கொள்ளும்.

ஆகையால், ஜஸ்டிஸ் கட்சியார் இவ்விஷயத்தில் யாருக்கும் பயப்படாமல் தங்கள் கொள்கையைத் தைரியமாய் வலியுறுத்தலாம் என்பதாகத் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

- குடிஅரசு - துணைத்தலையங்கம் - 09.11.1930

Read more: http://viduthalai.in/page1/86770.html#ixzz3C1bwCOSJ

தமிழ் ஓவியா said...

ஜாதி மதப் பெயர் கொடுக்காதீர்கள்: முக்கியமான வேண்டுகோள்

இவ்வருஷக் கோடியில் சர்க்காரால் ஜனங்களுடைய எண்ணிக்கையை எடுக்கும் சென்சஸ் வேலை நடைபெறும். அதில் கணக்கெடுப்பவர்கள் உங் களிடம் வந்து விசாரிக்கையில் நீங்கள் ஜாதி மதத்தைப் பற்றி கேட்கப்படுவீர்கள்.

அப்போது முறையே இந்தியன் என்றும் பகுத்தறிவுக்காரன் என்றும் மாத்திரம் தான் சொல்ல வேண்டுமே ஒழிய எவ்வித மதத்தின் பேராவது ஜாதியின் பேராவது சொல்லக் கூடாது என்று தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

ஏனெனில் ஜாதி வித்தியாசத்தை ஒழிக்க இந்தியாவில் எல்லாப் பிரமுகர்களும் ஒரே முகமாய் நின்று மும்முரமாய் வேலை செய்யும் போது நாம் மறுபடியும் அதைச் சொல்லிக் கொண்டிருப்பது மூடத்தனமும் கவலையும் சுயமரியாதையும் அற்ற தன்மையுமாகும்.

அதுபோலவே இந்தியர்களில் யாராவது தன்னை இந்து என்று மதத்தின் பெயரைச் சொல்லுவதும் சுத்த முட்டாள் தனமாகும். இந்து மதம் என்பதாக ஒரு மதம் இல்லை யென்றும் அப்படியிருப்பதாகச் சொல்லும் மதத்தின் தத்துவமும் மக்கள் பிறவியில் உயர்வு தாழ்வு கற்பிப்பதும் 20 கோடி இந்துக்கள் என்பவர்களில் பார்ப்பனர்கள் தவிர மற்றவர்கள் எல்லோரும் பார்ப்பனருக்கு அடிமைகள்,

அவர்களது தாசிமக்கள் என்கின்ற மானமற்ற தன்மை கொண்ட பொருளே இருப்பதால் சுயமரியாதையுள்ள எவரும் தங்களை இந்துக்கள் என்று சொல்லக்கூடாது. தவிரவும் இந்து என்னும் பதத்திற்குத் திருடன், அயோக்கியன், மோசக்காரன் என்று அர்த்தம் என்பதையுமுணருங்கள் என்று தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

- குடிஅரசு - வேண்டுகோள் - 09.11.1930

Read more: http://viduthalai.in/page1/86769.html#ixzz3C1c7VNXC

தமிழ் ஓவியா said...

அரசியல் வியாபாரம்


டா க்டர் பி. சுப்பராயன் அவர்கள் அடுத்துக் கூடும் சட்டசபைக் கூட்டத்திற்கு மூன்று தீர்மானங்கள் அனுப்பப் போவதாகத் தெரிகின்றது. அதாவது,

1. சில பாதுகாப்புகளுடன் குடியேற்ற நாட்டத்துக்குக் குறைந்த எந்தத் திட்டமும் திருப்தியளிக்காது என்று இச்சபை அபிப்பிராயப்படுவதாக இந்த கவர்ன்மெண்ட் பிரிட்டிஷ் கவர்மெண்டாருக்குத் தெரிவிக்க வேண்டுமென இச்சபை சிபார்சு செய்கிறது.

2. பலாத்காரமற்ற குற்றங்களுக்காகத் தண்டிக்கப்பட்ட அரசியல் குற்றவாளிகளையெல்லாம் விடுதலை செய்ய வேண்டுமென்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குச் சிபார்சு செய்யும்படி இச்சபை சிபார்சு செய்கிறது.

3. அரசியல் கைதிகள் நடத்தப்படும் விதத்தைப் பற்றி விசாரணை செய்ய ஒரு கமிட்டி நியமிக்க வேண்டுமென்று இச்சபை கேட்டுக் கொள்ளுகிறது. என்பவையாகும். ஆகவே, இம்மூன்று தீர்மானங்களையும் நம்மைப் பொறுத்தவரை நாம் இவைகளை அரசியல் வியாபாரத் தீர்மானங்களென்றே சொல்லுவோம்.

இதற்காக ஜஸ்டிஸ் கட்சியார்கள் பயந்து கொள்ளவோ திக்கு முக்காடவோ தேவையில்லையென்றும் சொல் லுவோம். ஏனெனில் இந்த மாதிரி காரியங்களின் நடவடிக் கைகளை ஆதாரமாய் வைத்துக் கொண்டு கூப்பாடு போடும் தேசியப் பத்திரிகைகள் என்பவைகள் எல்லாம் ஜஸ்டிஸ் கட்சிக்கு நிபந்தனையில்லாத அடிமைகளாய்ப் போய்விட்டபடியாலும் சென்ற தேர்தலின் போது தேசியக் கட்சியை விட ஜஸ்டிஸ் கட்சி மோசமானது என்று கருதி அதைக் காப்பாற்ற வேண் டிய பொறுப்பு ஏற்பட்டது போல் இப்போது ஜஸ்டிஸ் கட்சியை விட தேசியக்கட்சி மோசமானது என்று கருதி ஜஸ்டிஸ் கட்சியைக் காப்பாற்றித் தீரவேண்டிய பொறுப் புடை யவைகளாகி விட்டபடியாலும் அவைகள் கருவாடு திருட்டுக் கொடுத்த பார்ப்பனத்தி போல் வெளியில் சொல்லாமல் வாயை மூடிக் கொள்ளும்.

ஆகையால், ஜஸ்டிஸ் கட்சியார் இவ்விஷயத்தில் யாருக்கும் பயப்படாமல் தங்கள் கொள்கையைத் தைரியமாய் வலியுறுத்தலாம் என்பதாகத் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

- குடிஅரசு - துணைத்தலையங்கம் - 09.11.1930

Read more: http://viduthalai.in/page1/86770.html#ixzz3C1cEsRh0

தமிழ் ஓவியா said...

புதிய பாரத் மாதா - ஹிந்து மாதாதான்! ஜே! ஜே!!

- ஊசி மிளகாய்

இந்த வார கல்கி ஏட்டில் (7.9.2014) ஒரு கேள்வி - பதில் வெளிவந்துள்ளதை அப்படியே தருகிறோம்.

கேள்வி: ஜாதி, மத உணர்வுகளை 10 ஆண்டுகள் நிறுத்தி வையுங்கள் என்கிறாரே மோடி?

(கல்கியின்) பதில்: பிரதமர் பதவியேற்றபின் முதல் முறையாக ஒரு அபத்த வேண்டுகோளை விடுத்துள்ளார் மோடி. பத்து ஆண்டுகள் என்ன கணக்கு? அதன் பிறகு மறுபடி இந்த தீய உணர்வுகள் தலையெடுத்தால் பாதகமில்லையா? என்ன? சரியான திட்டங்களை வகுத்து மனப்பூர்வமாக செயல்படுத்தினால் பத்து ஆண்டுகளில் ஜாதி, மத உணர்வுகளை அடியோடு ஒழித்துக் கட்ட முடியும்.

ஆனால், அதற்குக்கூட சங்பரிவார் அமைப்பு களின் ஒத்துழைப்பு மோடிக்குக் கிடைக்காது.

- கல்கியின் தராசு கூறும் இக்கருத்துக்களை உண்மையான - யதார்த்தமான - நிலவரத்தின் பிரதிபலிப்பாகும். சங்பரிவாரங்கள் என்றாவது ஜாதி ஒழிய வேண்டும் என்று கூறிட முன் வருமா? அதன் தத்துவ கர்த்தரான கோல்வாக்கரின் ஞான கங்கை நூலில் அவர் வர்ண தர்மத்தை (ஜாதியை) நியாயப்படுத்தியுள்ளதோடு அதனை சிலாகித்துப் பாதுகாக்க அல்லவா வற்புறுத் துகிறார்?

இங்குள்ள ஆர்.எஸ்.எஸ். காரரான கோயங்கா வீட்டுக் கணக்கப் பிள்ளை ஸ்ரீமான் குருமூர்த்தி அய்யர் வாள் சில நாள்களுக்கு முன் ஜாதி, பொருளாதாரத்திற்கு மிகவும் உதவுவதாகக் கூறி, ஜாதிப் பாதுகாப்பை மேம்படுத்தி உபந்நியாசம் செய்தாரே மறந்து விட்டதா?

அதை மிகப் பெரிய அளவில் தினமணி ஏட்டில் போட்டு விளம்பரப் படுத்தினரே - குருமூர்த்தி அய்யர்வாளின் ஆர்.எஸ்.எஸ். கூட்டு சகாவான ஸ்ரீமான் விளம்பரப்புகழ் வைத்தியநாத அய்யர்வாள் - அது எதைக் காட்டுகிறது?

மோடி ஜாதியை ஒழிக்க, மதத்தை அடக்க முன் வருவாரா? வரத்தான் முடியுமா? அவரது மூக்கணாங்கயிறு ஆர்.எஸ்.எஸ். கையில் அல்லவா உள்ளது?

பிரதமர் மோடி உண்மையில் விரும்பினால் அரசியல் சட்டத்தில் உள்ள 17ஆவது விதியில் மாற்ற வேண்டியது ஒரே ஒரு வார்த்தையைத்தான்! (ஒரு அரசியல் சட்டத் திருத்தம் ஏகமனதாக நிறைவேற போதிய பெரும்பான்மை உள்ளதே!) தீண்டாமை ஒழிக்கப்பட்டு விட்டது என்ற 17ஆவது விதியில் திண்டாமைக்கு பதில் ஜாதி என்ற சொல்லை மாற்றிப் போட்டாலே, பெரிய சமூகப் புரட்சி சரித்திரத்தை மோடியால் படைத்து விட முடியுமே! 18 இடங்களில் இந்திய அரசியல் சட்டத்தில் ‘Caste (ஜாதி) இடம் பெற்றுள்ளதே!

அது மட்டுமா? இந்தியாவின் அத்தனைக் குடி மக்களும் ஹிந்துக்கள் தானாம்! அதுதான் இந்தியாவின் அடையாளமாம்!

தேசிய அடையாளம் என்று மோடி அரசின் சிறுபான்மையினர் நலன் காக்கும் திருமதி நஜ்மா அப்துல்லா திருவாய் மலர்ந்தருளி, ஆர்.எஸ்.எஸ். தலைவரின் குரலுக்கு ஹெர் மாஸ்டர்ஸ் வாய்ஸ் ஆக ஆகி உள்ளார் நியூஸ்X என்ற ஆங்கில TV சேனல் இன்று காலை இதனை தொடர்ந்து விளம்பரப்படுத்திக் கொண்டே இருந்தது!

நாடு எங்கே போகிறது பார்த்தீர்களா? நமது அரசியல் சட்டத்தின் அடிப்படையை இம்மாதிரி கடப்பாறைகளால் பெயர்க்கும் முயற்சி துவங்கி, ஜாம் ஜாம் என்று நடைபெறுகிறது!

அகண்ட பாரதம் அட்லஸ் வந்து விட்டது.

புதிய பாரத மாதாக்கீ! ஜே! ஜே!!

இந்தியா ஒழிந்து ஹிந்துயா வந்தது போலும்!

Read more: http://viduthalai.in/page1/86725.html#ixzz3C1cjREQh

தமிழ் ஓவியா said...

பிள்ளையார் ஊர்வலம் என்ற பெயரால்....

தமிழ்நாட்டில் விநாயக ஊர்வலம் என்பது மகாராட்டிர மாநிலத்திலிருந்து இறக்குமதி செய்யப் பட்டது. தமிழ்நாடு முழுவதும் 60 ஆயிரம் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டையாம். ஒரு சிலைக்கு கிட்டதட்ட செய்யப்படும் செலவு ரூ.10 ஆயிரத்திற்குமேல்; 60 ஆயிரம் சிலைகள் என்றால் ரூ. 60 கோடி செலவாகும். சில இடங்களில் நாள் கணக்கில் வைத்துப் பூஜை செய்கிறார்கள். அப்படி வைக்கப்படும் சிலைக்கும் சம்பந்தப்பட்ட பகுதியில் உள்ளவர்களுக்குப் பணம் பரிமாறப்படுகிறது.

பச்சையாகச் சொன்னால் பச்சை வியாபாரமாகவே இருக்கிறது; பிள்ளையாரின் கதையைச் சொல்ல ஆரம்பித்தால் வயிற்றைப் புரட்டிக் கொண்டுதான் வரும் - அத்தகைய கும்பிச் சகதி.

திருஞானசம்பந்தன் எழுதி வைத்துள்ள பாடல் ஒன்று வலிவலம் சிவன் கோயிலில் (நாகை மாவட்டம்) பொறிக்கப்பட்டுள்ளது.

பிடியதன் உருவுமைகொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடும் அவரிடர்
கடிகண பதிவர அருளினன் மிகுகொடை
வடிவினர் பயில்வலி வலம் உறையிறையே
இமயமலையின் அடிவாரத்தில் ஆண் யானையும் பெண் யானையும் புணர்வதைக் கண்ட அம்மையும் அப்பனும் (சிவனும் - பார்வதியும்) காம வெறி கொண்டு இவர்களும் ஆண் - பெண் யானைகளாக உருக் கொண்டு புணர்ந்ததால் யானைத் தலை கொண்ட பிள்ளையாரைப் பெற்றெடுத்தார்களாம்.

மக்களைப் பக்திப் போதையில் ஆழ அழுத்தி விட்டதால் இந்த ஆபாசங்கள் எல்லாம் அவர்களுக்கு ஒரு பொருட்டல்ல என்ற நிலை ஏற்பட்டு விட்டது.

இந்து மதத்தில் இந்த பிள்ளையார் இருக்கிறாரே - சரியான கோமாளிப் பாத்திரப் பிறப்பு!

பக்தர்கள் இந்தப் பிள்ளையாரை எந்தப் பெயரிட்டும் அழைக்கலாம்; கார்கில் பிள்ளையார் கிரிக்கெட் பிள்ளையார், கடன் தீர்த்த விநாயகர் - என்று எந்த அளவுக்கும் கிறுக்கலாம் யாரும் ஏன் எதற்கு என்று கேட்க மாட்டார்கள்.

பிடித்து வைத்தால் பிள்ளையார் என்ற சொலவடையையும் நினைவில் கொள்க!

சிவன் கோயில்களிலும், தேர்களிலும் ஒரு பெண்ணின் பெண் உறுப்பினுள் துதிக்கையை நுழைத்துக் கொண்டு இருப்பது போல உருவங்களை வடிக்கிறார்கள் என்றால் இந்த வெட்கக் கேட்டை என்னவென்று சொல்லுவது?

தமிழ் செம்மொழி ஆனால் ஏழை விவசாயி வீட்டுக் கட்டுத்தறி தடை இல்லாமல் ஓடுமா? வீட்டுக்கு வீடு மட்டன் பிரியாணி கிடைக்குமா? என்று எழுதும் பார்ப்பனர்களை நோக்கி நாம் கேட்க வேண்டாமா? இந்தப் பிள்ளையார் ஊர்வலம் நடத்தினால், மழை கொட்டோ கொட்டென்று கொட்டுமா? முப்போகம் சாகுபடி நடக்குமா? மின்பற்றாக்குறை மின்னல் போல பறந்து ஓடிடுமா?

பள்ளிகளில்கூட கழிப்பறை இல்லாமல் தமிழ்நாட்டு இருபால் மாணவர்கள் அவமானப்படும் இந்த நாட்டில் அழுக்குருண்டை பிள்ளையாருக்கு ஒரு சதுர்த்தியா? அதற்காக ஊர்வலமா? அதற்காக அரசு விடுமுறையா? அதற்காக பல கோடி ரூபாய் செலவழிப்பா? என்ற நியாயமான கேள்விக்கு நாணயமான பதில் உண்டா என்று சவால் விட்டுக் கேட்கிறோம்.

விநாயகர் ஊர்வலம் என்ற பெயரில் ஆங்காங்கே கலவரங்கள்; சிறுபான்மையினர் வழிபாட்டு இடங்கள் மீது கல்லெறிதல், கலாட்டா செய்தல் இன்னோரன்ன நாகரிகமற்ற அழி செயல்கள்!

சமுதாய அமைப்புகளோ, அரசியல் கட்சிகளோ ஊர்வலம் நடத்தினால் ஆயிரத்தெட்டு கேள்விகளை எழுப்பி அனுமதி மறுக்கும் அரசாங்கம், காவல்துறை ஒவ்வொரு முறையும் பிள்ளையார் ஊர்வலத்தில் வன்முறைகள் வெடிக்கின்றனவே - அதற்கு மட்டும் அனுமதியளிப்பு - ஏன்?

மதக் காரணம் என்றால் அது என்ன நெய்யில் பொரித்ததா?

பல ஊர்களில் பிள்ளையார் ஊர்வலத்தின் போது இந்து முன்னணிகளின் துண்டறிக்கைகள் விநியோகம் - அவற்றில் சிறுபான்மை மக்கள் மீது அவதூறு மாரி!

போதும் போதாதற்கு இப்பொழுது மத்தியில் ஒரு இந்து மதவாத ஆட்சியே அமைந்து விட்டது - கேட்கவா வேண்டும்?

தந்தை பெரியார் பிறந்து பகுத்தறிவுப் போதனை செய்தார். அதனால் புத்தி தெளிவு பெற்று கல்வி, உரிமை, வேலை வாய்ப்புகள் பெற்று முன்னேற்றத் திசையில் பயணித்து வருகிறோம்.

அவற்றை நேரில் வீழ்த்த முடியாத வேதியக் கூட்டம், பக்தி என்னும் போதை மாத்திரைகளை இத்தகைய மத ஊர்வலங்கள் மூலம் இலவசமாக விநியோகித்து வருகிறது; ஏமாந்து விடாதீர்கள்! ஏமாந்தால் மீண்டும் ஒரு குலத்துக்கொரு நீதி என்னும் - மனுதர்மப் பார்ப்பன ஆதி பத்தியத்தின் காலடியில் தான் மிதிபட நேரிடும்!

ஏமாறாதீர்கள்! ஏமாறாதீர்கள்!! எச்சரிக்கை! எச்சரிக்கை!!

Read more: http://viduthalai.in/page1/86699.html#ixzz3C1dFtaRZ

தமிழ் ஓவியா said...

ராஜ்நாத்சிங் மகன் பிரச்சினை என்ன?


புதுடில்லி ஆக.29_ கடந்த வாரம் மத்தியில் உள்ள முக்கியமான அமைச்சர் ஒருவரின் மகன் ஒரு தொழில் அதிபரிடம் இருந்து பெரும் தொகையாக லஞ்சம் வாங்கினாராம், இது எப்படியோ மோடியின் பார் வைக்குச் சென்றது. உடனே மோடி அவரை அழைத்து வாங்கியப் பணத்தை திருப்பிக்கொடுக்கச் சொன்னாராம்.

இந்த செய்தி டில்லியில் அனைத்து அமைச்சரவை சகாக்களிடம் பரபர பானது இந்த நிலையில் ராஜ்நாத் சிங் அமித்ஷா, மற்றும் ஆர் எஸ் எஸ் தலைவரை திடீரென சந்தித்த சம்பவம் இந்த விவகாரத்தை மேலும் பரபரப்பாக்கிவிட்டது..

இந்த நிலையில் நவ்பாரத் டைம்ஸ் என்ற இந்திப்பத்திரிகை பரபரப்பான செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது ராஜ்நாத் சிங்கின் மகன்பற்றி டில்லியில் உள்ள முக்கிய பெண் அமைச்சர் ஒருவர் பொய்யான தகவலை மோடியிடமும், ஆர்.எஸ்.எஸ் தலைவரிடமும் தொடர்ந்து புகார் அளித்து வருவதாகவும், தன்னுடைய வளர்ச்சியில் பொறுக்காத அந்த பெண் அமைச்சர் மீது மிகவும் கோபத் தில் உள்ளதாகவும் அந்தப்பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது.

இந்தச் செய்தியை உண்மையாக்கும் விதமாக கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமை அமித் ஷா, மற்றும் மோகன் பகவத்தைச் சந்தித்தார். இந்த விவகாரம் தொடர்பாக அமித்ஷா மற்றும் மோகன் பகவத் தரப்பில் எந்த ஒரு பதிலும் வரவில்லை. ஆனால் ஆர்.எஸ்.எஸ் செய்தித்தொடர்பாளர் ராஜ்நாத் சிங் மோகன்பகவத்தை சந்தித் தார் என்றும் இது எப்போதும் உள்ள பொதுவான சந்திப்பு இந்தச் சந்திப் பிற்கும் தேர்தல் தோல்வி மற்றும் அவ ரது சொந்தப் பிரச்சனைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று கூறினார். பிரதமரின் அலுவலத்தில் இருந்து வந்த உறுதியான தகவலின் படி சில நாட்களுக்கு முன்பு மத்தியில் உள்ள முக்கிய அமைச்சர் ஒருவரின் மகன் மோடியைச் சந்திக்க வந்ததாகவும், மோடி அவரிடம் மிகவும் கடினமாக நடந்துகொண்டார் என்றும், இந்த விவகாரம் இத்தோடு முடித்துக் கொள்ள வேண்டும் மேலும் இது போன்ற செயலில் இறங்கினால் கடு மையான நடவடிக்கை எடுக்கவெண்டி இருக்கும் என்று கூறியதாகவும், கூறப்பட்டது.

இது தொடர்பாக பாஜக தலைமை அலுவலகம் தரப்பில் கூறியதாவது: ராஜ்நாத் சிங்கின் மகன் விவகாரம் தொடர்பாக எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும் அது பொய்யானது என்றால் நேரடியாக அந்த அமைச் சரைப் பற்றி பிரதமரிடமும் பாஜக தலைவரிடமும் புகார் அளிக்கலாமே அதைவிடுத்து கட்சி பிரமுகர்களிடம் விவாதித்துக்கொண்டு இருப்பது இந்தப் பிரச்சனையை மேலும் சிக்கலாக்கிவிடும் என பாஜக கட்சி கூறியுள்ளது.

மத்தியில் அமைச்சரவை அமைக் கப்படும் போதே முக்கியப் பதவி களுக்கு கடும்போட்டி ஏற்பட்டது, முக்கியமாக ராஜ்நாத் சிங்கின் உள்துறை அமைச்சர பதவியைக் கைப்பற்ற 4 பெரிய பாஜக தலை வர்கள் முயன்றனர்.

ஆனால் அவர் ஆர்.எஸ்.எஸ் தலைமையை அணுகி உள்துறை அமைச்சர் பதவியைக் கைப்பற்றிக்கொண்டார்.

கடந்த இரண்டு மாதங்களாக மத மோதல்கள், மற்றும் அஸ்ஸாமில் நடந்த கலவர எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல் என பல்வேறு சிக்கல் களைச் சந்தித்துக்கொண்டு இருந்த ராஜ்நாத் சிங்கை தற்போது மகன் விவ காரம் மூலமாக சிக்கவைத்து விட்டார்கள், இருப்பினும் இன்னும் சில மாதங்களில் ஜார்கண்ட், மஹராஷ்டிரா, ஜம்முகாஷ்மீர் போன்ற மாநிலங்களில் தேர்தல் நடைபெற விருப்பதால் தேவையில் லாமல் அமைச்சரவையில் மாற்றம் கொண்டுவரும் போது அது தேர்தலில் பிரச்சினையை கிளப்பும் எனவே தேர்தல் முடிந்த பிறகு ராஜ்நாத் சிங் கின் பதவி பறிபோகும் என்று தெரி கிறது.

Read more: http://viduthalai.in/page1/86704.html#ixzz3C1dOLXma

தமிழ் ஓவியா said...

வெண்ணீறு அணிந்தது என்ன? என்ன? என்ன?


நாடகக்காரன் ராஜாவேசம் போட்டுக் கொண்டு
நடிப்பது போல், இந்த மடையன்களும் சாம்பல் அடித்துக் கொண்டு, கொட்டை கட்டிக் கொண்டு
பக்தன் போல வேசம் போடுகிறான். - ஈ.வெ.ராமசாமி

நேசமுற்று பூசை செய்து நீறுபூசிச் சந்தனம்
வாசமோடு அணிந்து நெற்றிமை திலகம் இட்டுமே
மோசம், பொய், புனைசுருட்டு முற்றிலும் செய் மூடர்காள்
வேசரி களம் புரண்ட வெண்ணீறாகும் மேனியே.
-சிவவாக்கியர்

நேமங்கள், நிட்டைகள், வேதங்கள், ஆகம நீதிநெறி
ஓமங்கள், தர்ப்பணம், செப மந்திர யோகநிலை,
நாமங்கள், சந்தனம், வெண்ணீறு பூசி நலமுடனே
சாமங்கள் தோறும் இவர் செய்யும் பூசைகள் கற்பனையே!
- பட்டினத்தார்

அழகிய உடல்மேல் சாம்பலைப் பூசி
அருவருப்பாக்கலும், மகளிர்
கொழுவிய குழலை மொட்டையாய் மழித்துக்
குரங்கைப் போல் தோன்றலும், அறியா
மழலையர் கையினுட் காவடி எடுத்து
மலையின் மேல் ஏற்றலும் இவைதாம்
வழிபடு முறையோ? இதுகொலோ சமயம்?
மடமைகள் கண்டிரங்குமென் நெஞ்சே.
- தடங்கண்சித்தர்

கோவணாண்டி கோலத்திலோ, சடைமுடியுடனோ, அழுக்கேறிய உடம்புடனோ, பட்டினியாக இருத்தலோ, மண்மீது புரள்தலோ, மூச்சை அடக்கிக் கொண்டு உட்கார்ந்திருத்தலோ ஆசையை வெல்லாத ஒருவனை புனிதனாக்கி விட முடியாது.
- புத்தர்

தொகுப்பு: சி.நடராசன்

Read more: http://viduthalai.in/page1/86712.html#ixzz3C1dgyIqj

தமிழ் ஓவியா said...

தீண்டாமைக் கொடுமை மடமை


இந்தியத் துணைக்கண்டத்தில் தீண்டாமை என்பது எந்த அளவிற்கு இருந்தது என்பதற்கு ஒரு சம்பவத் தைக் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

ஒரு சமயம் சுபாஸ் சந்திரபோஸ் அவர்கள் ஒரு வக்கீலிடம் நன் கொடை வசூலிப்பதற்காய்ச் சென் றிருந்தார். அப்போது அந்த வழக் கறிஞர் என்னிடம் நன்கொடைக்கு வந்திருக்கிறீர்களே, என்னை தொட்டால் தீட்டு என்கிறார்கள் ஆனால் என் பணத்திற்கு மட்டும் அந்தத் தீட்டு இல்லையா? என்று கேட்டார்.

எல்லாவற்றையும் கடந்தவன் நான். நான் தீண்டா மையை அனுஷ்டிப்பவன் அல்ல என்றாராம் சுபாஸ் சந்திரபோஸ்.

அப்படியானால், ஒருநாளைக்கு என் வீட்டுக்கு வந்து விருந்து சாப்பிடுங்கள்; சாப்பிட்ட மறுநாள் நன்கொடை தருகிறேன் என்றார் அந்த வழக்கறிஞர்.

உடனே சுபாஸ் சந்திரபோஸ், சரி நாளைக்கே நாலைந்து உயர்ந்த ஜாதிக்காரர்களுடன் வந்து உங்கள் வீட்டில் சாப்பிடுகிறேன். நீங்களும் உங்கள் ஜாதிக்காரர்கள் சிலரை எங்க ளுடன் சேர்ந்து சாப்பிட ஏற்பாடு செய்யுங்கள் கலந்து அமர்ந்து சாப்பிட்ட பிறகு நன்கொடை தாருங்கள் என்றார். சரி என்றார் வக்கீல்.

அவர்கள் வந்த போது வழக்கறிஞர் மிகவும் சோகமாக உட்கார்ந்திருந்தார். ஏன்? என்று கேட்டார் போஸ். என்னால், நான் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியவில்லை என்றார். என்ன, காரணம்? என்று கேட்ட போது, நீங்கள் உயர்ந்த சாதிக்காரர்களை என் வீட்டில் சாப்பிட அழைத்துக் கொண்டு வந்து வீட்டீர்கள்;

ஆனால், என் ஜாதியை சேர்ந்தவர்கள் யாரும் அய்யோ உயர்ந்த ஜாதியாருடன் சேர்ந்து சாப்பிடுவதா? என்ன பாபம் செய்ததாலோ இப்படிப்பட்ட பிறப்பெடுத்திருக்கிறோம் - அவர்களோடு சேர்ந்து சாப்பிடும் பாவத்தையும் செய்தால், இன்னும் எத்தனை பிறப்புக்கு இடர்ப்பட வேண்டுமோ! என்றாராம்.

இந்த அளவுக்கு இந்த நாட்டிலே தீண்டாமை வேர் விட்டிருந்தது.

இந்த அடிமை நிலைமை யைத்தான் அடியோடு தகர்த் தெறியப் பாடுபட்டார் தந்தை பெரியார்.

ஆதாரம்: கடலூர் மாநாட்டில் விடுதலை விரும்பி பேச்சு, முரசொலி (19.7.1981

Read more: http://viduthalai.in/page1/86718.html#ixzz3C1doqt00

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியார் பொன்மொழி

இன்றைய சுதந்திரம் வட நாட்டா னுக்கும் அவன் மொழிக்கும் தென்னாட்டவர் அடிமையாய் வாழ வேண்டுமென்றே ஆக்கப்பட்டுவிட்டது. வெள்ளையரிடமிருந்து பெற்ற சுதந்திரத்தைவிட வடவரிடமிருந்து சுதந்திரம் பெறுவதே மிகமிக முக்கியமானது.

Read more: http://viduthalai.in/page1/86718.html#ixzz3C1dxe1jD

தமிழ் ஓவியா said...

நிர்வாணப் பெண்கள்!

ஒரிசா மாநிலம் தன்சாரண்யா என்ற காட்டுப் பகுதியில் மலைவாழ் மக்கள் வாழ்கிறார்கள். அங்கு ஆண்கள் உடை உடுத்திக் கொள்கிறார்கள். பெண்கள் மட்டும் நிர்வாணமாகத் திரிகிறார்கள். அதற்குக் காரணம் கீழ்க்கண்ட மூடநம்பிக்கையாகும்.

ராமனுடன் சீதை இந்த காட்டில்தான் தங்கினாளாம். தனது ஆடைகளைக் கரையில் களைந்து வைத்து விட்டு ஒரு அருவியில் சீதை குளிக்கச் சென்றாளாம். அந்த உடைகளை அக்காட்டில் இருந்த பெண்கள் எடுத்துக் கொண்டு போய் விட்டார்களாம். குளித்து விட்டுக் கரையேறிய சீதை உடைகளின்றி நிர்வாணமாக நின்றாளாம். உடனே அந்தப் பெண்களுக்கு சாபமிட்டாளாம்.

என்னுடைய உடைகளைத் தூக்கிக் கொண்டு போய் வீட்டீர்கள் இனிமேல் இந்தப் பகுதியில் எந்தப் பெண்ணாவது உடை அணிந்தால் அவன் கணவன் இறந்து போய் விடுவான் என்று சாபமிட்டாளாம். அதிலிருந்து அந்தப் பகுதியில் எந்தப் பெண்ணும் உடை அணியாமல் நிர்வாணமாய் திரிகிறார்களாம். இப்பொழுது அதிகாரிகள் மிகவும் சிரமப்பட்டு இடுப்பில் சிறுதுணியைச் சுற்றிக் கொள்ளச் செய்துள்ளனர்.

மூடநம்பிக்கையின் கேவலத்திற்கு இதைவிட வேறு என்ன எடுத்துக்காட்டு வேண்டும்?

Read more: http://viduthalai.in/page1/86717.html#ixzz3C1eI4iHI

தமிழ் ஓவியா said...

மதம் என்றாலே எனக்கு ஒருவித வெறுப்பு; அடிக்கடி மதத்தைக் கண்டித்திருக் கிறேன். அதை உருத்தெரி யாமல் ஒழித்துக்கட்ட வேண் டுமென்று ஆசைப்பட்டிருக் கிறேன். மதம் என்றால் குருட்டு நம்பிக்கை, பிற் போக்குத்தனம், பிடிவாத மான வெறித்தனம், மூடப்பழக்கம், சுரண்டல், சுயநலத்தைப் பாதுகாத்தல் என்பதுதான் என் முடிவு.

- ஜவகர்லால் நேரு, (சுயசரிதை, பக்கம் 374

Read more: http://viduthalai.in/page1/86717.html#ixzz3C1ePOdfU

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

செம்புக் கம்பி

தேக்கி வைக்கப்பட் டுள்ள மின்சாரத்தைச் செலுத்துவதற்கு செம்புக் கம்பியை இன்றைய விஞ் ஞானம் கண்டுபிடித்துள் ளது. ஆனால், அக்காலத் திலேயே ஆண்டவன் அருள் ஒளியை செம்பி னால் கடத்த முடியும் என உணர்ந்து, இறைவன் உருவங்களை செம்பி னால் சிலை வடித்தார்கள்.
- கிருபானந்தவாரியார் தாய் வார இதழ் 28.8.1983)

அப்படியானால் கல்லால் செதுக்கப்பட்ட கடவுள் சிலைகள், அய்ம் பொன்னால் செய்யப் பட்ட கடவுள் சிலைகள் அருள் ஒளியைக் கடத் தாது என்று அர்த்தமா? செப்புக் கம்பியால் மின் கடத்தப்படுகிறது என் பதை நிரூபிக்க முடியும் (கையை வைத்தால தெரி யும் சங்கதி) செம்பினால் செய்யப்பட்ட கடவுள் சிலை அருள் ஒளியை கடத்துகிறதுஎன்பதற்கு என்ன நிரூபணம்?

Read more: http://viduthalai.in/page1/86658.html#ixzz3C1ejkrMF

தமிழ் ஓவியா said...

திருமணமாகுமுன் மணமக்களுக்கு மருத்துவப் பரிசோதனை:

திருமணமாகுமுன் மணமக்களுக்கு மருத்துவப் பரிசோதனை:

நீதியரசர் என். கிருபாகரன் கருத்து வரவேற்கத்தக்கதே!

இதனை ஒரு இயக்கமாகவே நடத்துவோம் - வாரீர்!


21ஆம் நூற்றாண்டிலும் மனிதக் கழிவுகளை மனிதனே சுமப்பதா? நவீன தொழில் நுட்ப முறைகளைக் கையாள வேண்டும்!

தமிழர் தலைவர் ஆசிரியர் வாழ்வியல் அறிக்கை திருமணத்திற்குமுன் மணமக்கள் மருத்துவ சோதனை செய்து கொள்வது தான் சரியானது - அறிவியல் பூர்வமானது என்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நீதிபதி என். கிருபாகரன் அவர்கள் அளித்த தீர்ப்பை வரவேற்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

மதுரை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஜஸ்டீஸ் திரு. என். கிருபாகரன் அவர்கள் வாழ்க்கை சம்பந்தமான வழக் கொன்றில் மிக அருமையான தீர்ப்பு ஒன்றினை சமூக நலம் சார்ந்த கண்ணோட்டத்தில் விஞ்ஞான பார்வையோடு வழங்கியுள்ளார்கள்.

ஜோதிடப் பொருத்தமல்ல - மருத்துவ ரீதியான பொருத்தம் தேவை!

திருமணங்களை ஏற்பாடு செய்யும் முன்பு நம் நாட்டுச் சமூக அமைப்பில் உள்ள பெரும்பாலான நடைமுறை என்ன?

ஜாதி, மதம், அதற்குப் பாதுகாப்பான ஜோசியம் பார்த்தல் - இவைகளைப்பற்றி தான் கவலைப்பட்டு அதிக முக்கியத்துவம் கொடுத்து, (ஏராளமான வரதட்சணை என்று கொடும் சமூக நோய்க்கும் சத்தமில்லாமல் ஆளாகி) திருமணங்களை நடத்திக் கொள்ளுகின்றனர்.

மணமக்களுக்கு மற்ற பொருத்தங்களைப் பார்ப்பதற்குப் பதிலாக, அறிவியல் அடிப்படையில் ஆதாரபூர்வமானதாக இவை இல்லாத நிலையில் - அறிவியல், உடலியல் - மருத்துவ ரீதியாக அவ்விருவருக்கும் மருத்துவப் பரிசோதனை சான்றுகளைப் பார்த்து ஒருவருக்கொருவர் உடல் ரீதியாகப் பொருத்தமானவர்களா என்று அறிந்து, திருமணங்களை ஏற்பாடு செய்தால், பின்னாள் அத்திருமணங்கள் - அந்தக் காரணங்களுக்காகத் தோல்வி அடையும் நிலை - வழக்கு மன்றங்களுக்குச் செல்லும் அவசியம் ஒரு போதும் ஏற்படாது. தேவையற்ற மன உளைச்சல்கள் - தானாகவே தீரும்.

ஜோதிடம் பார்ப்பது, மற்ற பொருத்தங்களை சடங்கு சம்பிரதாயங்கள் வழியில் பார்ப்பது அறிவியல் - பகுத் தறிவுக் கண்ணோட்டத்தில் சரியானது - உண்மையானது அல்ல.

சட்டத் திருத்தம்கூட கொண்டு வரலாமே பல திருமணங்களில் முதல் இரவிலேயே பல அதிர்ச்சி மணமகளுக்கோ, மணமகனுக்கோ தாக்கும் நிலை ஏற்பட்டு, அவர்கள் துன்பக் கேணியில் தள்ளப்படுகிறார்கள்.

ஏற்பாடு செய்த இருசாராரின் பெற்றோர்களுக்கோ அவர்களைவிட பன்மடங்கு வலியும், வேதனையும்! யாரையோ தேள் கொட்டியது போன்ற நிலையும்தான் ஏற்படுகிறது.

மதுரை உயர்நீதிமன்றத்தில் நீதியரசர் தந்த நல்லதோர் தீர்ப்பு!

மத்திய, மாநில அரசுகள் திருமணச் சட்டங்களில் இம்முயற்சியை ஒரு முன் நிபந்தனையாக்கிடும் வகையில் சட்ட திருத்தத்தைக் கொணர மதுரை உயர்நீதிமன்றத்தில் (அது சென்னை உயர்நீதிமன்றத்தின் ஒரு பகுதிதான்) வழங்கப்பட்ட இத்தீர்ப்பு ஒரு முன்னோட்டமாக அமைய வேண்டும்.

மருத்துவர்கள் தவறான சான்றிதழ் தந்தால் கடும் தண்டனை என்றும்கூட அச்சட்டத்தின் ஒரு பிரிவை முக்கியமாக இணைக்கலாம். அதன்மூலம் எப்போதாவது நிகழக் கூடிய தவறும்கூட நிகழ வாய்ப்பின்றித் தடுக்கலாம்!

இந்தக் கருத்தை வலியுறுத்தி- அதாவது மண ஏற்பாடுகளுக்குமுன் மணமக்களாக விரும்புவோர் சரியான மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு சான்று களோடும், மற்ற ஏற்பாடுகள் துவங்கி நடந்தால், பாதி திருமணங்கள் தோல்வி அடையாது. நீதிமன்றங்களுக்கு வழக்குக்குச் செல்ல முடியாது.

நாம் தொடர்ந்து வலியுறுத்தி வந்த கருத்துதான்

உடல் நோய்களை மறைத்து, எப்படியாவது திருமணம் நடந்து விட்டால்போதும் என்ற தவறான முயற்சிகள்தான் இப்படி இரு சாராருக்கும்; பிறகு தீராத வேதனையையும், மாறாத துயரத்தையும் ஏற்படுத்தி விடுகின்றன என்பதை பல சுயமரியாதைத் திருமண மேடைகளிலும், பெண்கள் விடுதலை மாநாட்டிலும் சொற்பொழிவு ஆற்றும் போதும் நாம் இடைவிடாமல் வலியுறுத்தி வந்துள்ளோம் - வருகிறோம்.

அது மட்டுமல்ல சென்னை பெரியார் திடலில் இயங்கும் பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையத்தின்மூலம் ஏற்பாடாகும் மணமக்கள் இருவருக்கும் இரத்தச் சோதனை, HIV சோதனை போன்றவைகளை நடத்திய பிறகே மணம் ஏற்பாடுகள் துவங்கி நடைபெறுவது வழக்கத்தில் உள்ளது.

சமூக ஆர்வலர்களும் முன்வரட்டும்!

இப்படி ஒரு சட்டத் திருத்தம் வந்து திருமண முறையில் நம் நாட்டில் மாறுதல் வந்தால் அதனால் அதிகம் பயன் பெறுவது முதலாவது மகளிரே ஆவர்; அடுத்து பெற் றோர்கள்ஆவார்கள்; அவர்களின் நிம்மதி குலைக்கப் படாது, முதுமையில் வாழும் வசதியும் உத்தரவாதமும் அதனால் ஏற்படும்.

சமூகநல ஆர்வலர்களும், சமூக சீர்திருத்த அமைப்பு களும் இதற்காக ஒரு தனி இயக்கமே நடத்திட உடனடியாக முன் வருதல் அவசியம் - அவசரமுங்கூட.

கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்

சென்னை
28.8.2014

Read more: http://viduthalai.in/page1/86653.html#ixzz3C1eszjp8

தமிழ் ஓவியா said...

செப்டம்பர் 3- மக்கள் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் ஏன்? ஏன்?

இலங்கையில் நடந்தது திட்டமிட்ட இனப்படுகொலை என்பது உலகறிந்த ஒன்றாகும். இந்தியாவின் பிரதமராக இருந்த இந்திராகாந்தி அவர்கள் இலங்கையில் நடப்பது இனப்படு கொலையே என்று அழுத்தந் திருத்தமாகவே கூறினார் (16.8.1983).

1984 செப்டம்பர் 23 - வெளிநாட்டில் சுற்றுப் பயணம் செய்து கொண்டிருந்த பிரதமர் இந்திரா காந்தி ஒரு பேட்டியில் கூறினார். இலங்கைத் தமிழர் பிரச்சினையைத் தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் அங்குள்ள தமிழர்களில் மிதவாதிகள்கூட தீவிரவாதிகளா கும் விபரீதம்தான் ஏற்படும் என்று சொன்னாரே - ஈழத்தில் அதுதானே நடந்தது.

காந்தியாரைவிட அகிம்சைவாதி என்று போற்றப்படும் ஈழத் தமிழர் தந்தை செல்வநாயகம் - தனி நாடு என்பதை எந்த கால கட்டத்தில், எந்த அவசியத்தில் முழங்கினார் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டாமா?

செல்வா அவர்கள் மறைந்த போது சிறீமாவோ பண்டார நாயகா என்ன கூறினார்? கண்டனம் தெரிவிக் கும் போதுகூட மென்மையான வார்த்தைகளையே உபயோகிக்கக் கூடியவர் செல்வா என்று ஒப்புதல் வாக்கு மூலம் அல்லவா கொடுத்தார்.

பன்றிகளுக்குமுன் முத்துக்களைப் போட்டால் என்ன பயன்? அது போன்றதுதான் சிங்கள அரசின் முன் ஈழத் தமிழர்களுக்கு நியாயம் கேட்பதும். இதில் அய்.நா. மன்றம் நேர்மையாக நடந்து கொள்ளவில்லை. அப்பிரச்சினையில் கடமை தவறி விட்டோம் என்று, எல்லாம் நடந்து முடித்த தற்குப் பிறகு அய்.நா. செயலாளர் பான்.கீ.மூன் இவ்வாறு கூறுகிறார். பொதுவுடைமைப் பேசும் சீனாவும், ருசியாவும், கியூபாவும் எவ்வளவுக் கேவலமாக நடந்து கொண் டுள்ளன? தேசிய இனப்பிரச்சினைபற்றி மாவீரன் லெனின் சொன்னதையெல்லாம் காலில் போட்டு மிதித்துக் கொண்டு அல்லவா இலங்கை இட்லர் மகிந்த ராஜபக்சேவுக்குச் சந்தன மாலை அணிவித்து சபாஷ் போட்டன.

முதலாளித்துவ நாடான அமெரிக்கா மனித உரிமை ஆணையத்தில் தீர்மானத்தைக் கொண்டு வரவேண்டிய நிலை! ஈழப் பிரச்சினையில் பொதுவுடைமை நாடுகள் என்று கருதப்படுகின்ற நாடுகள் நடந்து கொண்ட விதம் - அந்தத் தத்துவத்தை நோக்கி வீறு கொண்டு எழ வேண்டிய இளைஞர்களைக் காயடித்துப் போட்டு விட்டது.

கம்யூனிசத் தத்துவம் மேலும் பரவாமல் ஆக்கியதில் இந்தக் கம்யூனிஸ்ட் நாடுகள்தான் பொறுப்பு ஏற்றாக வேண்டும். இதற்கு மன்னிப்பு என்பதே கிடையாது.

இந்தோனேசிய அரசின் முன்னாள் தலைமை வழக் குரைஞர் மார்ச்சுகி தாருஸ்மான் தலைமையில் அமெரிக் காவின் சட்ட வல்லுநர் எல்வேன் ரெட்னர், தென்னாப் பிரிக்க அறிஞர் யாஷ்மின் சூக்கா ஆகியோர் அடங்கிய விசாரணைக் குழுவை அய்.நா. செயலாளர் பான்.கீ.மூன் தான் நியமித்தார். அந்தக் குழு தன் அறிக்கையை அய்.நா. விடம் அளித்து விட்டது. இலங்கையில் நடந்தது இனப்படு கொலை தான் என்று அறுதியிட்டுக் கூறியது அம்மூவர் குழு அறிக்கை.

ஈழத் தமிழர்களைக் கொன்று குவிக்க கனரக ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன. அய்.நா.வால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உணவு வழங்கும் மய்யங்கள்கூட இலங்கை ராணுவத்தின் தாக்குதல்களிலிருந்து தப்பிட வில்லை. மருத்துவமனைகளும் குறி வைத்துத் தாக்கப் பட்டன. இலங்கை ராணுவத்தின் இந்த இனப்படுகொலை வெளி உலகத்தின் வெளிச்சத்துக்கு வந்து விடக் கூடாது என்பதற்காக வெளிநாட்டு ஊடகக்காரர்கள் அனுமதிக்கப் படவில்லை என்பது உள்பட இலங்கை அரசின் போர்க் குற்றத்தை நீண்ட பட்டியலிட்டுக் காட்டி விட்டது.

தமிழ் ஓவியா said...

இந்த நிலையில் அய்.நா. செய்ய வேண்டியதெல்லாம் சட்டப்படி இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவதே!

பொது மக்கள்மீது யுத்தம் நடத்தியபோதுதான் அய்.நா. தன் கடமையைச் செய்யவில்லை. அதற்குக் கழுவாயாக, அந்தப் போர்க் குற்றவாளியைக் கூண்டில் ஏற்றுவதற்குப் பதிலாக, அவரைக் கூப்பிட்டு அய்.நா.வின் பொதுப் பேரவையில் பேச அழைப்புக் கொடுப்பது என்றால் இதன் பொருள் என்ன? இனப்படுகொலைக்கு அத்தாட்சிப் பத்திரமா - அங்கீகாரமா?

அய்.நா.வின் கொள்கைக்கு மனித உரிமைக் காப்புக்கு அய்.நா.வே அணுகுண்டு வைக்கிறது என்று தானே பொருள்?

ஜெனிவா மனித உரிமை ஆணையத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானத்தின்படி அய்.நா.வால் நியமிக்கப் பட்ட விசாரணைக் குழுவை இலங்கைக்குள் அனுமதிக்க மாட்டோம் என்று இடி அமீன்போல, ஹிட்லரைப் போல கர்ச்சிக்கும் ஒருவரை அய்.நா.வின் முடிவை மதிக்காத ராஜபக்சேவை அய்.நா. மன்றத்தில் பேச அழைப்பது அடிப்படையில் சரியானது தானா?

அய்.நா.வுக்கு என்று பொது மரியாதையும், கவுரவமும் கிடையாதா? அய்.நா. இதுபோன்ற பிரச்சினைகளில் இந்தக் கண்ணோட்டத்தோடு நடந்து கொண்டால் அய்.நா. உறுப்பு நாடுகள்தான் அய்.நா.வை எப்படி மதிக்கும்? தவறு செய்பவர்களை, குற்றம் செய்பவர்களை எப்படிதான் தண்டிக்க முடியும்?

இரண்டாம் உலகப் போரின்போது, போர்க் குற்றம் புரிந்தனர் என்று சொல்லி ஜப்பானிய பிரதமர்களாக விருந்த ஜெனரல் டோஜோ, ஜெனரல் கொய்கோ, ஜப் பானியர் இராணுவத் தளபதியாக இருந்த யோஷி ஜிரோ உமேசு போர் அமைச்சராகவிருந்த செய்ஷிரோ ஹட்ட ஹாக்கி உட்பட பலருக்கும் தண்டனை வழங்கப்பட வில்லையா?


அதைப்போல நூரம்பர்க் விசாரணை மன்றத்தில் ஜெர்மானியப் படைகளின் தலைமைத் தளபதியாகவிருந்த ஹெர்மன் கோயரிங், எஸ்.எஸ். படைகளின் உயர் மட்ட தளபதிகளாகவிருந்த எர்னஸ்ட் கால்ட்டென் புரூனர், அடால்ப் ஈச்மென் ஆகியோர் உட்பட நாஜி உயர்மட்ட தலைவர்கள் தண்டிக்கப்பட்டனரே.

போஸ்னிய முன்னாள் குடியரசுத் தலைவர் கராட்ஜிச் போர்க் குற்றங்களுக்காக 2008ஆம் ஆண்டு ஜூலை 18ஆம் தேதி கைது செய்யப்பட்டு பெல்கிரேடு போர்க் குற்ற நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டாரே! அதன்பின் பன்னாட்டு நீதிமன்றத்தின் பாதுகாப்பில் ஹேக் நகரில் சிறை வைக்கப்பட்டாரே இந்தக் குற்றவாளிகளை விட குரூரமான இனவெறியர் மகிந்த ராஜபக்சேவுக்கு முறைப்படி தண்டனை கிடைக்கச் செய்யாவிட்டால் 21ஆம் நூற்றாண்டே அவமானப்பட்டுத் தலை குனிந்து நிற்கும்.

அதற்கு முன்னதாக குறைந்தபட்சம் அய்.நா. மன்றத்தில் பேசக் கொடுத்திருக்கும் அழைப்பை யாவது அய்.நா. விலக்கிக் கொள்ள வேண்டும் - டெசோ வின் இந்தத் தீர்மானத்தை முதலில் அய்.நா. மதித்து தனது மரியாதையைக் காப்பாற்றிக் கொள்ளட்டும் செப்டம்பர் 3ஆம் தேதி தலைநகரில் டெசோ சார்பில் நடத்தப்பட உள்ள பெருந்திரள் ஆர்ப்பாட்டம் அய்.நா.வுக்கே நெருக்கடி கொடுக்கும் என்பதில் அய்யமில்லை.

கட்சிகளை மறந்து தமிழினமே ஒன்று திரளட்டும்!

Read more: http://viduthalai.in/page1/86645.html#ixzz3C1fUrAfo

தமிழ் ஓவியா said...

மனிதன்



பலவிதக் கருத்துகளையும், நிகழ்ச்சி களையும்பற்றிச் சிந்தித்து இது நல்லது, இது தீயது என்று உணரக் கூடிய சக்தி பெற்று, நல்லனவற்றைக் கடைப்பிடிக்கக் கூடியவன் எவனோ அவனைத்தான் மனிதன் என்று கூற முடியும்.
(விடுதலை, 9.6.1962)

Read more: http://viduthalai.in/page1/86644.html#ixzz3C1fjKvIE

தமிழ் ஓவியா said...

திராவிடர் கழகம்!


மிகப்பெரிய வரலாற்றுக்குச் சொந்தமான திராவிடர் இனமக்கள் எழுந்து நின்று இன்று ஒருமுறை கரவொலி எழுப்பலாம்.

ஏன்? இன்றைக்குத்தான் திராவிடர் கழகம் என்ற வர லாற்றைத் திருப்பிப் போட்ட சமூகப் புரட்சி இயக்கத்தின் பிறந்த நாள் (1944). ஆம், இது சேலம் மாநாட்டில் நடந்த ஒன்று.

மக்கள் பிறவியினால் ஜாதி பேதம் கற்பிக்கப்பட்டி ருப்பதையும், அவற்றுள் உயர்வு - தாழ்வு கற்பிக்கப்பட்டிருப் பதையும் இக்கழகம் மறுப்ப தோடு, அவைகளை ஆதரிக் கிற, போதிக்கிற, கொண்டு இருக்கிற மதம், சாஸ்திரம், ஸ்மிருதி, புராணம், காவியம் என்பவை முதலாகிய எவை யும் பொது மக்களும், குறிப்பாக நம் கழகத்தவர்களும் பின்பற்றக்கூடாது என்றும், அவைகள் நம்மீது சுமத்தப் படாமல் இருக்கவேண்டிய காரியம் தீவிரமாய்ச் செய்ய வேண்டுமென்று இம்மாநாடு தீர்மானிக்கிறது.

******

சர்க்காரால் தொகுதி வகுக்கப்பட்ட எந்தவிதமான தேர்தலுக்கும், கட்சி அங்கத் தினர்கள் நிற்கக்கூடாது; இதை ஏற்று ஒரு வாரத்தில் இதன்படி கட்டுப்பட்டு நடக் காதவர்கள் எவரும் இக்கட்சி யில் இருக்க இஷ்டமில்லை என்று கருதிக் கட்சியை விட்டு நீங்கிக் கொண்டவர் களாகக் கருதப்படவேண்டிய வர்கள் என்பது உள்ளிட்ட நவமணி (ஒன்பது) தீர்மானங் கள் சேலம் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.

அரசியலில் இருந்து விடு பட்டு அடிப்படைச் சமூக மாற் றத்தைக் கொண்டுவரவேண் டும் என்பதற்காகவே திராவி டர் கழகம் பிறப்பெடுத்தது.

ஏதோ ஒரு வழியில் நாம் மக்களுக்குப் பகுத் தறிவை உண்டாக்கிவிட்டோ மேயானால், பிறகு அவர்கள் எல்லாவற்றையும் ஒரே கண்ணாடி கொண்டு பார்த்து உண்மையை உணரக்கூடிய வர்களாகி விடுவார்கள் என்றார் தந்தை பெரியார்.

அரசியலில் நுழைந்து பதவிப் பக்கம் தலை வைத் தால் கொள்கைகளில் சமரசம் செய்துகொள்ள நேரிடும் என்பதால்தான் இருமுறை சென்னை மாநில பிரதம அமைச்சராகப் பொறுப்பு ஏற் கும்படி வெள்ளை அரசிட மிருந்து தங்கத்தட்டில் வைத்து அழைப்புக் கொடுத்த போதும், அதனை மறுதலித்தவர் மகத் தான புரட்சியாளராம் தந்தை பெரியார் அவர்கள்.

ஆட்சிக்கு அவர் சென்ற தில்லை; ஆனால், ஆட்சி யைத் தன் கொள்கைப் பாதை யில் கொண்டுவர ஆட்டு வித்தவர்! ஆட்சிக்குச் செல் லாத தந்தை பெரியார் அவர்களுக்கு இந்த ஆட்சியே பெரி யாருக்குக் காணிக்கை என்று ஆட்சித் தலைவர் அண்ணா சொன்னார் என்றால், அதன் அருமையைத் தெரிந்து கொள்ளலாமே! (20.1.1967)

பேதமற்ற இடம்தான் மேலான திருப்தியான இடமாகும் என்றார் உயர் எண் ணங்கள் மலரும் சோலை யாம் தந்தை பெரியார் (குடிஅரசு, 11.11.1944, பக்கம் 11).

சமூகநீதி, பெண்ணடிமை ஒழிப்பு, மூட நம்பிக்கை ஒழிப்பு, வருண - வர்க்கப் பேத ஒழிப்பு, தொழிலாளி, முதலாளி என்ற நிலையே இருக்கக்கூடாது என்னும் மிக உயர்ந்த சமநிலை - சமத் துவக் கோட்பாடுகள் - திரா விடர் கழகத்தினுடையது - இவை ஏதோ ஒரு எல்லைக் குட்பட்ட தத்துவங்கள் அல்ல - உலகிற்கே தேவைப்படு பவை! அதனால்தான் மண் டைச் சுரப்பை உலகு தொழும் என்று தந்தை பெரியார்பற்றி புரட்சிக்கவிஞர் தொலை நோக்கோடு பாடினார்.

- மயிலாடன்

குறிப்பு: திராவிடர் கழகம் பிறந்த அந்த சேலம் மாநாட் டில் ஒரு தீர்மானத்தின்மீது உரை யாற்றிய சிறுவன் வீரமணிதான் இன்றைக்கு திராவிடர் கழகத்தின் ஒப்பில்லாத மானமிகு தலைவர்.

Read more: http://viduthalai.in/page1/86592.html#ixzz3C1gPtgiy

தமிழ் ஓவியா said...

மும்பையில் பணக்கார கணபதியின் சக்திக்கு சவால்! நாளொன்றுக்கு ரூ.50 கோடிக்கு காப்பீடாம்!

மும்பையில் பணக்கார கணபதியின் சக்திக்கு சவால்!

நாளொன்றுக்கு ரூ.50 கோடிக்கு காப்பீடாம்!

தீ விபத்து, தீவிரவாத தாக்குதல், கலவரங்களில் பாதிப்பிலிருந்து இழப்பீடு பெறத் திட்டமாம்

மும்பை, ஆக.27- மும்பை வடாலாவில் ஜி.எஸ்.பி. சேவா மண்டல் சார்பில் விநாயகர் சிலைக்கு ரூ.260 கோடி அளவில் காப்பீடு செய்துள்ளது. விநாயகர் சிலை மற்றும் சிலைக்கு அணிவிப்பதற்காக பக்தர்களால் அளிக்கப்படும் தங்க ஆபரணங்கள் ஆகியவற்றை தீ விபத்து, தீவிரவாதம் மற்றும் கலவரங்களிலிருந்து காக்கும் வகையில் காப்பீடு செய்துள்ளதாக ஜி.எஸ்.பி. சேவா மண்டல் கூறுகிறது.

ரூ.22 கோடி மதிப்பில் தங்கம்

மும்பை மாநகரிலேயே பணக்கார அமைப்பாக உள்ள ஜி.எஸ்.பி. மண்டல் ரூ.259 கோடிக்கு காப்பீடு பெற்றுள்ளது. கிங் சர்க்கிள் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கணபதி சிலையை 5 நாள்கள் பூஜை செய்வதற்காக வைத்திருப்ப தற்காக நாளொன்றுக்கு ரூ.51.7 கோடி மதிப்பில் காப்பீடு செய்யப்பட்டுள்ளது. சிலை மட்டும் ரூ.22 கோடி மதிப்பில் தங்கம் இதுவரை செலவாகி உள்ளதாம்.

காப்பீடு தேசியமயமாக்கப்பட்ட காப்பீட்டு நிறுவனத் தின்மூலம் காப்பீடு செய்யப்பட்டுள்ளது. மும்பை மாகரி லேயே மற்ற மண்டல்களை விட அதிக மதிப்புள்ள மண்ட லாக வடாலாவில் அமைக்கப்பட்டு உள்ளது. மும்பை மாநகரில் பிரபலமான லால்பக்ச ராஜா ரூ.51 கோடிக்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது. அதையும்கூட மிஞ்சிவிட்டது வடாலா ஜிஎஸ்பி மண்டல். தீவிபத்து, தீவிரவாதத் தாக்குதல் மற்றும் கலவரங்களிலிருந்தும் காக்கும்வகையில் ஜி.எஸ்.பி. யின் காப்பீடுமூலம் சிலை, தங்கம், மண்டபம் என்று இவைகளுக்கு மட்டுமின்றி அங்கு கூடும் பக்தர்களுக்கும் சேர்த்து காப்பீடு உள்ளடக்கி உள்ளது. முதல் நாளில் தொடங்கும் காப்பீடு விழா முடிந்ததுமே முடியாது. அமைப்பைச் சேர்ந்தவர்கள் விழா கடைசி நாளில் சிலையின் தங்க ஆப ரணங்களை பாதுகாப்பாக வங்கியின் பாதுகாப்புப் பெட்டகத்துக்குள் வைப் பதுவரை காப்பீடு இருக் கும். முதல் நாளில் தொடங்கி சிலை நகைக்கடைகளி லிருந்து வரும் தங்க ஆபரணங்களைக்கொண்டு சிலையை தண்ணீரில் மூழ் கடிக்கும் வரையிலும் அலங் காரங்கள் செய்யப்படும். தண்ணீரில் மூழ்கடிப்பதற்கு சற்றுமுன்பாக சிலையிலிருந்து தங்க ஆபரணங்கள் அகற் றப்பட்டு, அடுத்த ஆண்டுக்கு பாதுகாப்பாக வைக்கப்படும்.

மண்டலுக்கான காப்பீட்டுத் தொகை ரூ.258.9 கோடி

ஜி.எஸ்.பி.மண்டல் மூத்த அறக்கட்டளை உறுப்பினரான சத்தீஷ் நாயக் கூறும்போது, தேசிய மயமான காப்பீடு நிறுவனங்கள்மட்டும் பங்கேற்பதற்கான ஒப்பந்தப் புள்ளியைக் கோரினோம். காப்பீட்டுத்துறையில் உள்ள தனியாரை உள்ளேக் கொண்டுவரவில்லை. காப்பீட்டுத் தவணைத்தொகையை வெளியிடவில்லை. ஆனாலும், காப்பீட்டுக்கான பிரீமியத் தொகை மட்டும் இலட்சங்களில் இருக்கும். மண்டலுக்கான காப்பீட்டுத் தொகை ரூ.258.9 கோடியாக அமைக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

லால்பக்சா ராஜா மண்டல் ரூ. 51 கோடி காப்பீட்டுத் தொகைக்கு தவணைத் தொகையாக(பிரீமியம்) ரூ. 12 இலட்சத்தை செலுத்தியுள்ளது. அதன்படி பார்க்கும்போது, ஜிஎஸ்பி மண்டல் காப்பீட்டுத் தவணைத் தொகை (பிரீமியம்) குறைந்தபட்சம் ரூ.50 இலட்சத்தையாவது செலுத்த வேண்டியிருக்கும் என்று கருதப்படுகிறது.

தவணைத்தொகை ரூ.இரண்டரை இலட்சத்துக்கும்மேல்...

காப்பீட்டு நிறுவனத்தின் மூத்த மேலாளர் ஒருவர் கூறுகையில், சாதாரண பாலிசியைப் போன்று மண்டல் காப்பீட்டுப் பிரீமியித்தை கணக்கிட முடியாது. சாதாரண மாக காப்பீட்டுத்தொகை ரூ.இரண்டு கோடி என்றால், அதற்கானத் தவணைத்தொகை ரூ.இரண்டரை இலட் சத்துக்கும் மேல் இருக்கும். ஆனால், மண்டல் காப்பீடு செயல்பாடு வேறு விதமானது. அவர்கள் காப்பீடு செய் துள்ளதானது தீ விபத்து, தீவிரவாத செயல்கள் போன்ற வற்றைக் குறிப்பிட்டுள்ளார்கள். ஆகவே, ரூ. 259 கோடி காப்பீட்டுக்கு அரை கோடியைத் தாண்டியே தவணைத் தொகை இருக்கும். ஆனாலும், இது யூகத்தின் அடிப் படையிலான வேலையே ஆகும்.

தேங்காய் ஒப்பந்தப்புள்ளி

ஜிஎஸ்பி மண்டல் சார்பில் 1.75 இலட்சம் எண்ணிக்கை யில் தேங்காய்கள் பெறுவதற்காக ஒப்பந்தப்புள்ளியைக் கோரி உள்ளது. இறுதியாக ரூ.31.5 இலட்சத்துக்கு முடி வானது. அதன்படி, தேங்காய் ஒன்றின் விலை ரூ.18-லிருந்து ரூ.20 ஆக இருக்கும்.

5 இலட்சத்தில் தங்க மலர்

ஜிஎஸ்பி மண்டல் 150 கிராம் எடை அளவுள்ள தங்க மலர் ரூபாய் 5 இலட்சம் மதிப்பில் கொடையாகப் பெற் றுள்ளது என்று அதன் அறக்கட்டளை சார்பில் தெரிவிக் கப்பட்டுள்ளது.

Read more: http://viduthalai.in/page1/86597.html#ixzz3C1gYCnrz

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

கிருதா யுகத்தில் சத் தியமும், திரேதாயுகத்தில் ஞானமும், த்வாபர யுகத் தில் வைராக்கியமும் மோக்ஷத்திற்குச் சாதனம். ஆனால், இக்கலியில் பக்தியினாலேயே மோக்ஷம் கிடைக்கிறது. - காமகோடி, 1.5.1994

அப்படியோ? திரேதா யுகத்தில்தான் அறிவுக்கு (ஞானத்துக்கு) வேலை. கலியில் அறிவுக்கு வேலை யில்லை என்று பொருளா?

ஆமாம், அது என்ன மோக்ஷம்? அதன் அட் ரஸ் என்ன?

Read more: http://viduthalai.in/page1/86598.html#ixzz3C1gfyG2g

தமிழ் ஓவியா said...

தமிழ் முன்னேற...


முதலாவதாக தமிழ் முன்னேற்றமடைந்து உலக பாஷை வரிசையில் அதுவும் ஒரு பாஷையாக இருக்கவேண்டுமானால், தமிழையும், மதத்தையும் பிரித்துவிட வேண்டும். தமிழுக்கும், கடவுளுக்கும் உள்ள சம்பந்தத்தையும் கொஞ்சமாவது தள்ளி வைக்கவேண்டும்.
- (குடிஅரசு, 26.1.1936)

Read more: http://viduthalai.in/page1/86602.html#ixzz3C1gyFeD4

தமிழ் ஓவியா said...

சர்வ சக்தி(?)


மேற்கு வங்காளம் கொத்தல் பூரிலிருந்து கடந்த 24ஆம் தேதி நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த 60 பேர்கள் குடும் பத்துடன் தமிழ்நாட்டுக் குச் சுற்றுலா புறப்பட்டு வந்தனர். சமையல் செய்து சாப்பிடுவதற்கு 6 சமையல் எரிவாயு உருளைகளையும் (சிலிண்டர்களையும்) பேருந்தில் ஏற்றியிருந் தனர். 30.8.2014 இரவு 10 மணியளவில் கன்னியா குமரி சென்று கொண்டி ருக்கும்போது திருபுல் லாணி தாதனேந்தல் பேருந்து நிறுத்தம் அரு கில் பேருந்து வந்தபோது, பேருந்தின் பின்புறத்தில் திடீரென தீபிடித்தது.

ஓட்டுநர் அவசர அவசரமாக பேருந்தை சாலை ஓரத்தில் சாமர்த் தியமாக நிறுத்தினார். பேருந்துக்குள்ளிருந்த சமையல் வாயு உருளை யும் வெடித்தது. பயணி கள் அலறியடித்துக் கொண்டு வெளியேறி னர். ஆனால் வயது மூப் படைந்த 5 பேர் விரை வாக வெளியேற முடி யாத நிலையில் கருகிப் போனார்கள் என்பது பெரி தும் வருந்தத்தக்கதாகும்.

இவ்வளவுக்கும் இந்தப் பயணிகள் தமிழ கம் வந்தது கோயில் தலங்களைச் சுற்றிப் பார்த்து சாமி தரிசனம் செய்யத்தான்! திருப்பதி ஏழுமலையான் கோயி லில் தரிசனத்தைத் தொடங் கிய இவர்கள் வழியில் காஞ்சீபுரம், திருக்கழுக் குன்றம், சிறீரங்கம், இராமேசுவரம் உட்பட பல கோயில்களுக்கும் சென்று சாமி தரிசனம் செய்து வந்தனர்.

கன்னியாகுமரி சென்று அங்குள்ள அம் மனை வழிபடச் சென்ற வர்களுக்குத்தான் இந்தப் பரிதாப நிலை ஏற்பட் டுள்ளது.

கோயிலுக்குச் சாமி கும்பிட சென்றவர்கள், கோயில் திரு விழாக் களுக்குச் செல்லக் கூடிய வர்கள். இதுபோன்ற விபத்துக்களில் சிக்கி பரிதாபகரமாக மரணம் அடைவது அன்றாடம் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

இன்றுகூட விநாயகர் பொம்மையை நீரில் கரைக்கச் சென்ற ஓமலூர் கல்லூரி மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி மரணம்! பொள்ளாச்சி அருகே சிலைகளைக் கரைக்க காரில் சென்ற இந்து முன்னணியினர் மூவர் விபத்தில் மரணம் என்ற செய்திகள் வெளி வந்துள்ளன. இவ்வளவுக்குப் பிற கும் கோயில் கோயிலாக மக்கள் போவதும், சாமி தரிசனம் செய்வதும், நேர்த் திக் கடன் கழிப்பதும் சரியானதுதானா? என் பதைச் சிந்திக்க வேண் டாமா?

கடவுள் என்ற ஒருவர் இருந்தால், அவருக்குச் சக்தி இருக்கிறது என்பது உண்மையென்றால் கரு ணையே வடிவமானவன் என்று எழுதி வைத்திருப் பதில் கடுகளவு யதார்த் தம் இருக்குமேயானால், நாட்டு மக்களைக் காப் பாற்றுவது ஒருபுறம் இருக் கட்டும்; குறைந்தபட்சம் தன்னை நாடி வந்த பக்தர்களையாவது காப் பாற்ற வேண்டாமா?

பக்தி வந்தால் புத்தி போகும் என்று பெரியார் சொன்னது கேலிக்கல்ல வாழ்க்கையின் யதார்த் தம் என்பதை மக்கள் உணரட்டும்!

- மயிலாடன்

Read more: http://viduthalai.in/e-paper/86915.html#ixzz3C7YE3p00

தமிழ் ஓவியா said...

பொள்ளாச்சி, செப்.1- பொள்ளாச்சி அருகே விநாயகர் சிலைகளை கரைக்க சென்ற போது எதிரே வந்த பேருந்து மீது மோதி, கார் கட்டுப் பாட்டை இழந்து மரத் தில் மோதியது. இந்த விபத்தில் இந்து முன் னணியை சேர்ந்த 3 பேர் உடல் நசுங்கி பலியானார் கள். 3 பேர் படுகாய மடைந்தனர்.

இந்த பரிதாப சம்பவம் குறித்து காவல்துறை தரப் பில் கூறப்படுவதாவது:-

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதி களில் இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்ட 36 விநாயகர் சிலைகளை அம்பராம்பாளையம் ஆழியாற்றில் கரைக்க நேற்று ஊர்வலமாக கொண்டு சென்றனர்.

ஊர்வலத்தில் சென்ற வர்களுக்கு சாப்பாடு வாங்கி கொண்டு இந்து முன்னணியை சேர்ந்த நாகராஜன் (வயது 32), குகன் (21), கார்த்தீஸ்வரன் (30), சபரி (30), பிரகாஷ் (29), விக்னேஷ்குமார் (24), சுரேஷ்குமார் (27) ஆகி யோர் ஒரு காரில் எஸ் .மேட்டுப்பாளையத்தில் இருந்து பொள்ளாச்சி அருகே உள்ள அம்பராம் பாளையத்திற்கு சென் றனர். காரை கார்த்தீஸ் வரன் ஓட்டினார்.

மாலை சுமார் 5.30 மணிக்கு கார் மீன்கரை ரோடு நஞ்சேகவுண்டன் புதூர் பிரிவு அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது முன்னால் சென்ற வாகனத்தை கார் முந்த முயன்ற போது எதிரே கோவிந்தா புரத்தில் இருந்து பொள் ளாச்சி நோக்கி வந்த தனியார் பேருந்து மீது மோதியது.

இதில் நிலை தடு மாறிய கார், பேருந்துமீது மோதிய வேகத்தில் சாலையோரத்தில் இருந்த மரத்தின் மீது மோதி சுக்குநூறாக நொறுங்கி உருக்குலைந்து போனது. மேலும் பேருந்தின் முன் புற கண்ணாடி உடைந்த துடன், முன்பகுதி சேதம் அடைந்தது.

காரில் இருந்தவர்கள் படுகாயங்களுடன் உயி ருக்கு போராடிக் கொண் டிருந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் பொள் ளாச்சி மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வா ளர்கள் தங்கவேல், கோபி மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் காவல் துறையினர் பொது மக்கள் உதவியுடன் காரில் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிருக்கு போராடி கொண்டிருந்தவர்களை மீட்டனர்.

இதில் சம்பவ இடத்திலேயே நாகராஜன் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். குகன், விக்னேஷ்குமார், பிரகாஷ் ஆகியோரை அந்த பகுதி யில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கும், சபரி, கார்த்தீஸ்வரனை கோவை அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர். இதில் சிகிச்சை பலன் அளிக்காமல் குகன், கார்த்தீஸ்வரன் ஆகி யோர் பரிதாபமாக இறந் தனர்.

சபரி ஆபத்தான நிலை யில் கோவை அரசு மருத் துவமனைக்கும், விக் னேஷ்குமார், பிரகாஷ் ஆகியோர் அம்பராம் பாளையத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை யிலும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும் காரில் வந்த சுரேஷ்குமார் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.

இதுகுறித்து காவல் துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Read more: http://viduthalai.in/e-paper/86916.html#ixzz3C7YNRduS

தமிழ் ஓவியா said...

விநாயகர் சிலையை கரைத்த போது கல்லூரி மாணவர்கள் உள்பட 3 பேர் சாவு!

விநாயகர் சிலையை கரைத்தபோது கல்லூரி மாணவர்கள் உள்பட 3 பேர் தண்ணீரில் மூழ்கி பரி தாபமாக உயிரிழந்தனர்.

சேலம் கிச்சிப்பாளை யம் கருவாட்டுப்பாலம் பகுதியை சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி வெண்ணிலா. இவர்களது மகன் விக்னேஷ்வரன் (வயது 17). இவர் சேலம் அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.ஏ. முதலாமாண்டு படித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணபிர சாத் (18). இவர் சேலத்தில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரி யில் 3ஆ-ம் ஆண்டு படித்து வந்தார்.

இந்த நிலையில் விநாய கர் சதுர்த்தியையொட்டி அந்த பகுதியில் வெண் ணிலா உள்பட பலர் ஒரு விநாயகர் சிலையை பூஜைக்கு வைத்திருந்தனர். இந்த சிலையை நேற்று கரைக்க திட்டமிட்டனர். அதன்படி, நேற்று காலை விநாயகர் சிலையை ஒரு சரக்கு ஆட்டோவில் ஏற்றினர். பின்னர் அந்த ஆட்டோவில் வெண் ணிலா, அவரது மகன் விக்னேஷ்வரன், கிருஷ்ண பிரசாத் உள்பட 15 பேர் ஏறி புறப்பட்டார்கள்.

நண்பகல் 1 மணியள வில் அவர்கள் கங்காதரன் குட்டையை அடைந்தனர். அங்கு ஆட்டோவில் இருந்து விநாயகர் சிலையை கீழே இறங்கி வைத்து பூஜைகள் செய்து வழிபட்டனர். பின்னர் விக்னேஷ்வரன், கிருஷ்ண பிரசாத் உள்பட 7 இளை ஞர்கள் சிலையை தூக்கிக் கொண்டு குட்டையில் தேங்கி நின்ற தண்ணீருக் குள் இறங்கினார்கள்.

அப்போது கரையில் நின்ற பெண்கள், ஆழ மான பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று கூறி னர். ஆனால், அதையும் மீறி இளைஞர்கள் 7 பேரும் ஆழமான பகு திக்கு சென்று விநாயகர் சிலையை தண்ணீரில் கரைத்தனர். அப்போது விக்னேஷ்வரன், கிருஷ்ண பிரசாத் உள்பட 5 இளை ஞர்கள் சேற்றில் சிக்கிக் கொண்டனர். சிறிது நேரத் தில் 3 பேர் சேற்றில் இருந்து மீண்டு தண்ணீரில் தத்தளித்தபடி கரைக்கு வந்து சேர்ந்தார்கள்.

ஆனால், விக்னேஷ்வர னும், கிருஷ்ணபிரசாத்தும் தண்ணீருக்குள் இருந்த சேற்றில் சிக்கி உயிருக்கு போராடினார்கள். இத னால் கரையில் நின்ற பெண்கள், காப்பாற்றுங் கள்; காப்பாற்றுங்கள் என்று கூச்சலிட்டனர். சத்தம் கேட்டு அருகில் நின்று கொண்டிருந்தவர் களும், உடன் வந்த இளை ஞர்களும் அவர்களை காப்பாற்ற முயன்றனர். ஆனால், முடியவில்லை. இதனால் சேற்றில் சிக்கிய 2 பேரும் மூச்சுத்திணறி உயிரிழந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் காவல்துறை யினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். ஓமலூர் தீயணைப்பு குழுவினரும் அங்கு வந்தார்கள்.

அவர்கள் குட்டையில் இறங்கி உடல்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 1 மணி நேர போராட்டத்துக்கு பிறகு கிருஷ்ணபிரசாத்தின் உடல் மீட்கப்பட்டது. இதையடுத்து சுமார் 2 மணி நேரத்துக்கு பிறகு விக்னேஷ்வரனின் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். சேலம் ஜாகீர் அம்மா பாளையம் பகுதியை சேர்ந்தவர் அண்ணா மலை (வயது 48), கட்டட தொழிலாளி. இவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து விநாயகர் சிலையை கரைப்பதற்காக மேட்டூர் காவிரி ஆற்றுக்கு வந்தார். அங்கு புதுப்பாலம் அருகே உள்ள காவிரி ஆற்றில் இறங்கி சிலையை கரைக்க முயன்றபோது, ஆழமான பகுதிக்கு சென்ற அண்ணாமலை தண்ணீரில் மூழ்கி உயிரி ழந்தார்.

Read more: http://viduthalai.in/e-paper/86916.html#ixzz3C7YUi2Sx

தமிழ் ஓவியா said...

மயிலாப்பூரில் கேட்கும் குரல்


சென்னையில் இந்திய தேசிய பெண்கள் சம்மேளனத் தின் 60ஆம் ஆண்டு விழா கடந்த சனியன்று நடைபெற் றுள்ளது. அதில் உயர்நீதிமன்ற நீதிபதி பிரபாஸ்ரீதேவன், சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆனி ராஜா, பெண்கள் கூட்டமைப்பின் தலைவர் கே. சாந்தகுமாரி, பேராசிரியர் காதம்பரி போன்றோர் கலந்து கொண்டு கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

பாலியல் வன்கொடுமை மட்டுமே பெண்களுக்கு எதிரான கொடுமையல்ல. கல்வி, சுகாதாரம், சொந்த நிலம் வழங்கப்படாததும் பெண்கள்மீதான வன்முறைதான் என்று கூறப்பட்டு இருப்பது சிறந்த கருத்துக்களே!

பாலியல் வன்முறை என்று கூறும்பொழுது அண்மைக் காலங்களில் இதன் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துக் கொண்டு இருக்கிறது. பெண் குழந்தைகள்கூட இதில் தப்ப வில்லை என்பது - நாம் 21ஆம் நூற்றாண்டில்தான் வாழு கிறோம் என்று சொல்லுவதற்கும் வெட்கப்படத்தான் வேண்டும்.

தமிழ்நாட்டில் இந்த நோய் வெகு வேகமாகப் பற்றிக் கொண்டு திரிகிறது. டில்லியில் மருத்துவக் கல்லூரி மாண விக்கு ஏற்பட்ட கொடுமையை எதிர்த்து தலை நகரமே மக்கள் தலைகளாகக் காணப்பட்டது. பெரும் யுத்தமே நடந்தது; அதன் விளைவாக ஆட்சி மாற்றமேகூட நிகழ்ந்ததுண்டு.

தமிழ்நாட்டில் ஒவ்வொரு நாளும் குறைந்தபட்சம் இந்தத் திசையில் ஒரு செய்தியாக வந்து கொண்டு தானி ருக்கிறது! ஆனால் இந்தியாவின் தலைநகரம் கொதித் தெழுந்ததுபோல தமிழ்நாட்டில் ஏன் நிகழவில்லை? இதில் அரசியலும் இருக்கிறது. ஊருக்கே உபதேசம் செய்யப் பிறப்பெடுத்ததாக மார் தட்டும் தமிழ்நாட்டு ஊடகங்களும் இதற்குத் துணை போயுள்ளன என்பதும் வருத்தத் திற்குரியதே.

இன்னும் குறிப்பிடத்தக்கது என்னவென்றால் பாதிக்கப்பட்டவர்களுக்குரிய இழப்பீடுகள் பற்றியது. 357-ஏ குற்ற நடைமுறைச் சட்டம் 1973 இதுபற்றிப் பேசுகிறது. உயிரிழப்பு ரூ.3 லட்சம், பாலியல் வன்முறை ரூ.3 லட்சம், மன உளைச்சல் ரூ.ஒரு லட்சம் வழங்கப்பட வேண்டும்.

கடந்த ஈராண்டுகளில் இதுபற்றிய நிலை என்ன? 212 வழக்குகளில் 73 குழந்தைகள் மருத்துவ உதவிக்காகவும் 65 பேர் மனநல மருத்துவ உதவிக்காகவும், 38 பேர் பாதுகாப்பு இல்லங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளனர். 2013-2014 கால கட்டத்தில் வெறும் ஏழு பேர்களுக்கு மட்டுமே இழப்பீடு அளிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கொடுமைக்கு இழப்பீடு பரிகாரமா என்று கேட்கக் கூடும்.

பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டதாலேயே அவர்கள் தற்கொலை செய்து கொள்ள வேண்டுமா? அந்தக் கொடுமைக்கு ஆளானவர்களா அதற்குக் காரணம்! காரணமானவர்கள் சட்டத்தின் சந்து பொந்துகளில் நுழைந்து நுழைந்து தப்பித்துக் கொள்கின்றனர். ஆனால் பாதிக்கப்பட்ட பெண்ணின் வாழ்வுதான் பரிதாபமானது! இந்த நிலையில் அவர்களுக்கு இழப்பீடும், பராமரிப்புச் சேவைகளும் கண்டிப்பாக தேவைப்படுகின்றன.

இது போன்ற வழக்குகளில் காவல்துறைக்கு ஒரு காலக் கெடு விதித்துக் குற்றவாளிகளைக் கூண்டில் நிறுத்த வேண்டும். பத்து பதினைந்து ஆண்டுகள் என்றால் இது அந்தப் பாலியல் கொடுமையைவிட மோசமானது.

பெண்களுக்குக் கல்வி வேலை வாய்ப்பு அவசியம் தேவை. அதே நேரத்தில் கல்விச் சாலைகளிலும், பணியாற் றும் இடங்களிலும்கூட பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லையே! இதற்கொரு முடிவு கட்டப்பட வேண்டாமா? கொஞ்ச நாட்களுக்குப் பெண்கள் கைகளில் துப்பாக் கியைத் தான் கொடுத்துப் பார்க்கலாமே - என்ன ஆகி விடப் போகிறது என்பதை அனுபவத்தில்தான் அறிய முடியும்.

பெண்களைப் பலகீனமானவர்கள் என்று கருதும் ஆண்களின் சிந்தனையில் ஒரு அச்சத்தை ஏற்படுத்த வேண்டியது. காலத்தின் கட்டாய மட்டுமல்ல; உளவியல் ரீதியான நோய்த் தடுப்பு என்றுகூட இதனைக் கருதலாம்.

ஆண்களுக்கு நிகராக பெண்களுக்குச் சொத்துரிமை என்று சட்டம் வந்தாகி விட்டது; இது எந்த அளவுக்குச் செப்பமாக, நீதியாக, நேர்மையாக, நாணயமாக செயல்பாட்டில் இருக்கிறது என்பது கண்டறியப்பட வேண்டும். இதில் ஓட்டைகள் ஏதேனும் இருக்குமானால் அதனையும் அடைத்தாக வேண்டும்.

சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கில் உரையாற்றிய நீதிபதி - நீதித்துறையில் பெண்களுக்கு உரிய இடங்கள் கிடைக்கப் பெறவில்லை. பெண் நீதிபதியாக இருக்கும் பட்சத்தில்தான் வாழ்வியல் அனுபவங்களின் அடிப் படையில் பெண்களின் பிரச்சினைகளைப் புரிந்துகொண்டு தீர்ப்பு வழங்க முடியும் என்றும் கூறியுள்ளார்.

இதுபோன்ற அடிப்படை உரிமைகளைப் பெண்கள் பெற வேண்டும் என்றால் சட்டம் செய்யும் இடங்களில் (சட்டமன்றம் - நாடாளுமன்றங்களில்) பெண்களுக்கு 33 சதவீதம் தொடர்பான சட்டம் நிறைவேற்றப்படாமல் தடைகளுக்குள் சிக்கிக் கிடக்கிறதே அதுநடைமுறைக்கு வர வேண்டாமா? இது வரக் கூடாது என்பதில் மட்டும் பெரும்பாலான அரசியல் கட்சிகள் ஓரணியாகத் திரண்டு கூடிக் குலவுவதை என்னென்று சொல்லுவது?

பூனைகளால் எலிகளுக்கு விடுதலை கிடைக்குமா? அதுபோலவே ஆண்களால் பெண்களுக்கு விடுதலை ஒரு போதும் கிடைக்காது என்று சொன்ன பெண்ணியல்வாதி தந்தை பெரியார் அவர்களின் கருத்துதான் சமுதாயத்தின் முன் பேரொளியாய் எழுந்து நிற்கிறது.

தமிழ் ஓவியா said...

மக்கள் விழிப்புணர்வு இதில் மகத்தானது; தந்தை பெரியார் அவர்களின் பெண்ணியக் கருத்துகள் ஆரம்பக் கல்வி நிறுவனங்களிலிருந்து கற்பிக்கப்பட வேண்டும் பெண்ணடிமைத்தனம் என்பது மதத்தின் வாயிலாக - பக்தியின் வாயிலாக குருதியில் ஊறச் செய்யப்பட்டுள்ளது. அந்த வேரை எடுத்தெறியாமல், வெறும் ஒத்தடங்கள் கொடுப்பது நகைச்சுவைக்கான நல்ல தீனியாகும்.

உடல் ரீதியாக பெண்கள் பலகீனமானவர்கள் என்றால் அந்தப் பலகீனத்தைப் போக்குவதற்கான பயிற்சிகள் பள்ளிகளில் கட்டாயம் இடம் பெற வேண்டும்.

தந்தை பெரியார் அவர்கள் சொல்லுவதுபோல பெண்கள் சிங்காரம், அணிமணிகளில் ஆழ்ந்து கிடக்கும் உணர்வு என்னும் சிறையிலிருந்து விடுதலையாக வேண் டும். அப்படியொரு நிலைப்பாடு பெண்கள் மத்தியில் வெகுண்டெழுந்தால், சிந்தனைகள் உரிமைகளின் பக்கமும், ஆண்கள் ஆதிக்கத்தின் பக்கமும், கம்பீரமாக எழும் அல்லவா! மயிலாப்பூரில் பேசிய பெண்ணுரிமையாளர்கள் இந்தத் திசையில் சிந்தித்தார்களா பேசினார்களா? என்று தெரியவில்லை! அவர்கள் பேசாவிட்டாலும் பெரியார் இயக்கம் பேசும் - பெரும் புரட்சியையும் நடத்திக் காட்டும்! வாழ்க பெரியார்!

Read more: http://viduthalai.in/page-2/86921.html#ixzz3C7YnT6b3

தமிழ் ஓவியா said...

தேனினும் இனிய விடுதலை

22.8.2014 நாளிட்ட விடுதலை நாளிதழில் வெளிவந்துள்ள செய்திகள் அனைத்தும் அருமை. அவை பாதுகாக்கப்பட வேண் டிய பாதுகாப்புப் பெட்டகமாகவும், கருத் துக் கருவூலமாகவும் திகழ்கின்றன. குறிப்பாக

1) ஜாதி - தீண்டாமை ஒழிய அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் ஆகும் உரிமையினை நிறைவேற்றித் தருமாறு முதல்வர் ஜெயலலிதா அவர்களை வலி யுறுத்தி தமிழர் தலைவர் அவர்கள் விடுத்துள்ள அறிக்கை மற்றும் கோமாதா ஆந்திராவில் படுத்தியபாடு!

2) நம்ம தியாகராயர் நகர்! - கோவி. லெனின் அவர்கள் எழுதிய கட்டுரை.

3) 375-ஆம் ஆண்டில் சென்னை நகரம்! - தலையங்கம், கைவல்யம் நாள் (22.8.1877).

4) சிப்பாய்க் கலகம் சுதந்திரப் போராட்டம் அல்ல - மதப்போராட்டமே என்று சொன்னவர் தந்தை பெரியார்! என் கின்ற அரிய என் போன்ற இளைஞர் களுக்கும் - மாணவர்களுக்கும் புதிய தகவலை திராவிடர் வரலாற்று ஆய்வு மய்ய சிறப்புக் கூட்டத்தில் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வாரி வழங்கிய பல வரலாற்றுத் தகவல்கள்.

5) மாணவர்களுக்கான பெரியார் 1000 வினா - விடைப் போட்டி நடைமுறைகள்!

6) பகுத்தறிவுக் களஞ்சியம் பகுதியில்; புத்தர் அறிவுரைகள், தந்தை பெரியார் பொன்மொழி மற்றும் தாய்மார்களுக்கு தந்தை பெரியார் அறிவுரை, மருத்துவம் வென்றது, விடை என்ன? என்ற தலைப்பில் ஆத்திகவாதிகளுக்கு அடுக்கடுக்கான அர்த்தமுள்ள கேள்விகள் ஆகியவை மக்களை சிந்திக்கத் தூண்டுகின்றன.

7) மேலும், சென்னையின் 375 ஆம் ஆண்டில் திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் வரலாற்றுக் கொண்டாட்டம் - நடைப்பயணம்! நடைப்பயணம் மேற் கொண்ட கழக முன்னோடிகள் - தோழர்கள் ஆகியோர் தியாகராயர் நகர் பேருந்து நிலையம் அருகிலுள்ள தந்தை பெரியார் சிலை முன்பும், தியாகராயர் நகர் டாக்டர் நடேசன் பூங்காவிலும் எடுத்துக்கொண்ட வண்ணப் புகைப்படங்கள் கண்களைக் கவர்ந்தன.

8) இறுதியாக, நாளைய தலைமுறைக் கான நாற்றங்கால் - பெரியார் 1000! போன்ற எண்ணற்ற பயனுள்ள செய்திகள் இளைஞர் களுக்கும், மாணவர்களுக்கும் விருந்தாக வும் அரு மருந்தாகவும் அமைந்தது.

இவ்வாறு தேனினும் இனிய செய்தி களைத் தாங்கி பல வண்ணங்களுடனும், பகுத்தறிவு எண்ணங்களுடனும் நாள் தோறும் வெளிவருகின்ற உலகின் ஒரே பகுத்தறிவு நாளேடான விடுதலை நாளேட் டினை இளைஞர்களும் - மாணவர்களும் ஆவலுடன் படித்துப் பாராட்டி மகிழ் கின்றனர், போற்றிப் புகழ்கின்றனர்.

வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!

- சீ.இலட்சுமிபதி, தாம்பரம், சென்னை-45

Read more: http://viduthalai.in/page-2/86924.html#ixzz3C7ZRhKpG

தமிழ் ஓவியா said...

பற்களில் கறை போக்க...

என்னதான் டூத் பிரஷ் உபயோகித்து ஒருமுறைக்கு இரண்டு முறை பல் தேய்த்தாலும் நமது பற்களில் கறை கொஞ்சம் கொஞ்சமாக படிந்து விடுகிறது.

பல் மருத்துவக்கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு முதலில் சொல்லித் தருவதே, அவர்களின் பற்களை சுத்தம் செய்து கொண்டு வரச் சொல்வது தான். நீண்ட நாட்களாக இருக்கும் கறைப் படிவங்களை சுத்தம் செய்வது மிகவும் எளிது. பொட்டாசியம் பர்மாங்கனேட் என்ற வேதிப்பொருள் (Pottasium Permanganate) (KMNO4)பெரும்பாலான மருந்துக் கடைகளில் பாக்கெட்டுகளில் கிடைக்கும்.

இதனை வாங்கி வெது வெதுப்பான நீரில் மிகச்சிறிய அளவில் (small pinch) போட்டு (தண்ணீரில் போட்டவுடன் ஊதா நிறமாக மாறும்) அந்த தண்ணீரை வாயில் ஊற்றி நன்றாக கொப்புளிக்க வேண்டும். (துவர்ப்புத் தன்மை கொண்டது) அதிகமாக இந்த வேதிப்பொருளை நீரில் போடக்கூடாது. கரு ஊதா நிறமாக மாறும். துவர்ப்புத் தன்மை அதிகரித்து விடும்.

கொஞ்சம் கொஞ்சமாக கொப்புளித்த பின்னர் பிரஷ் கொண்டு (பேஸ்ட் போடாமல்) சுத்தம் செய்யும் போது பல வருடங்களாக இருந்த கறைகள் பெயர்ந்து வெளியேறும். பற்கள் பளிச்சென்று ஆகிவிடும்.

பல் வலியிலிருந்து நிவாரணம் பெற சில வழிமுறைகள்

பல் வலியிலிருந்து நிவாரணம் பெற கோவைப்பழம் சாப்பிடலாம்.

மகிழம் இலையை கஷாயம் செய்து வாய்க் கொப்பளித்து வந்தால், பல் நோய் எதுவும் அண்டாது.

மாவிலையைப் பொடி செய்து பற்களைத் துலக்கி வந்தால், பற்கள் உறுதி பெறும்.

ஒரு துண்டு சுக்கை எடுத்து வாயில் போட்டுக் கொண்டால், பல்வலி நீங்கும்.

நந்தியாவட்டை வேரை மென்று துப்பினால், பல்வலி குணமாகும்.

Read more: http://viduthalai.in/page-7/86882.html#ixzz3C7a9FYir

தமிழ் ஓவியா said...

நெல்லிக்காயின் மருத்துவ குணங்கள்


நெல்லிக்காய் லேகியம்: 150 கிராம் பனை வெல்லத்துடன் இரண்டு ஆழாக்கு தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து பனைவெல்லம் கரைந்தவுடன் இறக்கி இதனை மேலாக இறுத்து வடிகட்டி ஒரு பாத்திரத்தில் விட வேண்டும்.

பின்னர் அடுப்பில் வைத்து அதனுடன் ஒரு ஆழாக்கு அளவு சுத்தமான பசும்பால் விட்டு நன்றாக கொதித்து வரும் சமயம், இடித்து சலித்த நெல்லிக்காய் வற்றல் தூளில் ஆழாக்கு அளவு இதில் போட்டு பாகுபதம் வரும்போது, அரை ஆழாக்கு தேன், அரைஆழாக்கு சுத்தமான பசு நெய்யினை விட்டுக் கிளறி லேகியபதம் வந்தவுடன் இறக்கவேண்டும்.

ஆறிய பின்னர் வாயகன்ற பாட்டிலில் இட்டு மூடி வைத்து தினசரி காலை மற்றும் மாலையில் தேக்கரண்டி சாப்பிடலாம்.

இந்த லேகியம் வாதம், பித்தம், சிலேத்துமம் ஆகியவற்றை சமன் செய்யும். உடலுக்குப் பலத்தை தருவதுடன், பித்தம் காரணமாக ஏற்படும் கிறுகிறுப்பு, வாந்தி, அரோசிகம் மாறும். ரத்தம் சுத்தமாகும்.

பெருங்குடல், சிறுகுடல், இரைப்பைகளில் ஏற்படும் கோளாறுகள் நீங்கும். சொறி, சிரங்கு நமைச்சல் குணமாகும். கருவுற்ற நிலையில் 21 நாள்கள் சாப்பிட சுகப்பிரசவம் ஏற்படும். கருப்பை கோளாறுகளைக் குணப்படுத்தும். காய கல்ப மாக செயல்படும் இந்த லேகியம் 3 மாதம் வரை கெடாது.

நெல்லிக்காய் வடாம்: ஒரு படி நெல்லிக்காயை கொஞ்சம் கொஞ்சமாக உரலில் போட்டு இடித்தால் மசித்து அதன் வித்துக்கள் வெளியேறும். நைந்தபின் வித்துக்களை நீக்கி விட்டு, ஒரு பாத்திரத்தில் போட்டு வைத்துக் கொள்ள வேண்டும்.

எல்லாக் காய்களையும் இடித்த பின் பெரிய பச்சை மிளகாயில் 10-ம், இரண்டு கொட்டை பாக்களவு தோல் சீவிய இஞ்சி, கைப்பிடியளவு கறிவேப்பிலை, தேவைக்கேற்ப உப்பு ஆகியன சேர்த்து மறுபடியும் உரலில் போட்டு மைபோல் இடிக்கவேண்டும்.

பின்னர் அதனை எடுத்து உளுந்து வடை அளவிற்கு அடையாகத் தட்டி சுத்தமான பாயில் வைத்து, வெயிலில் உலர்த்தவேண்டும்.
நீர் சுண்டி சருகுபோல காய்ந்த பின் எடுத்து ஜாடியில் அடுக்கி மூடி வைத்துவிட வேண்டும். வாரத்திற்கு ஒரு முறை வெயிலில் காயவைத்து எடுத்து வைக்கவேண்டும். இது வெகுநாட்கள் கெடாது.

நெல்லிக்காய் சஞ்சீவி லேகியம்: நன்றாக பழுத்த நெல்லிப்பழங்களின் விதைகளை நீக்கி வெயிலில் சருகாக உலரவிட வேண்டும். பின்னர் அதனை உரலில் இடித்து சலித்துக் கொள்ள வேண்டும்.

சுக்கு, மிளகு, திப்பிலி இவைகளை தலா 5 கிராம் எடுத்து இடித்து சலித்து வைத்துக் கொள்ளவேண்டும். இரண் டாழாக்கு பசுவின் பாலை நன்றாக கொதிக்க வைத்து, அதில் 200 கிராம் பனைவெல்லத்தை போட்டு பாகு பதம் வரும் சமயம், அரை ஆழாக்கு சுத்தமான தேனை விட்டு சுக்கு, மிளகு, திப்பிலி தூளையும் சேர்த்து நன்றாக கிளறி இறக்கி ஒரு வாயகன்ற பாட்டிலில் போட்டு வைத்துக் கொண்டு தினசரி தேக்கரண்டி காலையில் மட்டும் சாப்பிட்டு வர 40 நாளில் ரத்தம் சுத்தமாகும்.

Read more: http://viduthalai.in/page-7/86883.html#ixzz3C7aHn1oA

தமிழ் ஓவியா said...

விநாயகர் ஊர்வலம்: ஊரெல்லாம் ரகளை!



செய்யாறில்...

செய்யாறு, செப்.1-_செய்யாறில் விநாயகர் சிலை ஊர்வலம் காந்தி சாலை வழியாக செல்ல அனுமதி மறுத்ததால் 2 மணிநேரம் போராட்டம் நடந்தது.

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு செய் யாறு நகர இந்து முன்னணி சார்பில் டவுன் பகுதி யில் 11 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட் டிருந்தன. இந்த சிலைகளை கோனேரிராயன் குளத்தில் கரைப்பதற்காக நேற்று திருவோத்தூர் சிறீவேதபுரீஸ் வரர் கோவிலின் முன்பிருந்து ஊர்வலம் தொடங்கியது.

ஊர்வலம் மார்க்கெட், மண்டித் தெரு வழியாக செல்ல காவல்துறையினர் அறிவுறுத்தி காந்தி சாலை யில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஆனால் காந்தி சாலை வழியாகத்தான் ஊர்வலம் செல்வோம் என பாதுகாப்புப் பணியிலிருந்த மாவட்ட காவல்துறை துணைக் கண்காணிப்பாளரிடம் சி.ரவிச்சந்திரன் மற்றும் காவல்துறையினரிடம் வாக்கு வாதத்தில் ஈடு பட்டனர்.

தொடர்ந்து காந்தி சாலை வழியாக செல்ல காவல் துறையினர் அனுமதி மறுத்ததால் இந்து முன்னணி இளைஞர்கள் சாலையில் அமர்ந்து போராட் டத்தில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி போராட்டம் நீடித்ததால் பதற்றம் ஏற்பட்டது. காந்தி சாலையில் கடைகள் அடைக்கப்பட்டன. காவல் துறையின் சமா தானத்தை ஏற்க மறுத்ததால் காவல்துறையினர் காந்தி சாலை வழியாக ஊர்வலம் செல்ல அனுமதித்தனர்.

விநாயகர் சிலைகள் அனைத்தும் கோனேரிராயன் குளத்தில் கரைக்கப்பட்டன.

Read more: http://viduthalai.in/page-8/86888.html#ixzz3C7aqQ7GQ

தமிழ் ஓவியா said...

விநாயகர் சதுர்த்தி-மு.க.ஸ்டாலின் வாழ்த்தா? தி.மு.க. தலைமை நிலையம் மறுப்பு!


சென்னை, செப்.1- தி.மு.க. தலைமைக் கழகம் நேற்று (31.8.2014) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொருளாளர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் பிரத்யேக இணையதளத்தில், விநாயகர் சதுர்த்தி நாளன்று வாழ்த்துக்களை தெரிவித்ததாக வந்துள்ளது.

தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் இணைய தளத்தைப் பராமரிக்கின்ற சில தோழர்கள் ஆர்வ மிகுதியின் காரணமாக, எல்லாரும் தெரிவித்திருப்பதைப் போல தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாக வெளியிட்டுள்ளனர். இது தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் முன்னனுமதியின்றி நடைபெற்ற செயலாகும்.

இந்த வாழ்த்துச் செய்தி அவரது விருப்பப்படியானது இல்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



குறிப்பு: தி.மு. கழகப் பொருளாளர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் இப்படி கொள்கை தெரியாதவர்களை அம்மாதிரி பொறுப்பில் அமர்த்துவதைத் தவிர்க்கவேண்டும். -ஆசிரியர்

Read more: http://viduthalai.in/page-8/86893.html#ixzz3C7b0mpQj

தமிழ் ஓவியா said...

சிசேரியன் - சோதிடம்?


குழந்தை பிறக்கும் நேரத்தை வைத்து ஜாதகம் கணிக்கிறார்கள். ஜாதகம் சரியா? என்கிற கேள்வி ஒருபுறம் இருக்கட்டும்; இவர் கள் குழந்தை பிறக்கும் நேரம் என்கிறார்களே - அது எந்த நேரமாம்?

இதற்குத் தந்தை பெரியார் எடுத்து வைக்கும் வினாக்கள் இணையற்ற அறிவுத் தோட்டாக்கள்.

பிறந்த காலம் என்பது வயிற்றுக்குள் இருக்கும் போதே ஜீவன் (உயிர்) ஏற் பட்ட காலமா? அல்லது வயிற்றிலிருந்து 7, 8, 9, 10 மாதங்களில் எப்பொழுதானா லும் பிறக்கும் காலமா? அப்படிப் பிறக்கும் காலத்தில் தலை வெளியில் தெரியும் காலமா? அல்லது ஒரு நாள் அரை நாள் குழந்தை கீழே விழாமல் கஷ்டப்படும் காலத் தில் தலை வெளியாகி நிலத் தில் பட்டு, கால் நிலத்தில் விழாமல், தாய் சரீரத்தில் பட்டுக் கொண்டிருக்கும் காலமா? அல்லது மருத்து வச்சி கைவிட்டு எடுத்த நேரமா? அல்லது டாக்டர் வயிற்றை அறுத்து எடுத்த காலமா? என்பனவாகிய கேள்விகள் ஒருபுறம் இருக்க, ஜீவனுடைய சரீரமெல்லாம் பூமியில் விழுந்த நேரம் என்பதாக வைத்துக் கொண்டே பார்ப்பபோமானா லும், அந்த நேரத்தையாவது எப்படிச் சரியாகக் கண்டு பிடிக்க முடியும் என்பதை யோசிப்போம்! (நூல்: சோதி டம்) என்று அறிவு நாணய மாகத் தந்தை பெரியார் எழுப்பும் வினாக்களுக்கு விடையளித்துவிட்டு ஜாதகத் தைக் கணிக்கட்டும்!

ஒரு செய்தி வெளிவந் திருக்கிறது. என்.கண்ணன் அய்யராம் - பட்டீசுவரத்தை (கும்பகோணம் வட்டம்) சேர்ந்தவர். அவர் நிபுணத் துவம் எதில் தெரியுமா?

இதோ ஓர் எடுத்துக் காட்டு:

நிகழும் விஜய வருஷம் பங்குனி மாதம் 26 (16.3.14) ஞாயிற்றுக்கிழமை பூர நக்ஷத் திரம் கூடிய சுபதினத்தில் காலை 9.30-க்குமேல் 10.15-க் குள் ரிஷப லக்னத்தில் அறு வைச் சிகிச்சை செய்து குழந்தை எடுக்க உத்தமம் - என்று ஜாதகம் கணித்துள் ளார். இச்செய்தி முகநூலில் வெளிவந்துள்ளது.

எப்படி இருக்கிறது? குழந்தை இயற்கையாகப் பிறப்பதற்கு முன்பாக, நல்ல நேரம் குறித்து, அப்பொழுது சிசேரியன் செய்து குழந் தையை வெளியில் எடுப்பார் களாம்!
இந்த வைதிகம் அல்லது அய்திகம் எந்த சாத்திரத்தில் சொல்லப்பட்டுள்ளதாம்.

இந்தப் பார்ப்பனர்கள் வயிற்றுப் பிழைப்புக்காக எதைத்தான் செய்யமாட்டார் கள்?

இவ்வளவுக்கும் இவர் கள் சொல்லுகிற லக்னமாக இருக்கட்டும், கோள்களாகட் டும் பூமியிலிருந்து எவ்வள வுத் தொலைவில் உள்ளன. சூரியன் (இது கோளே அல்ல நட்சத்திரம்) 93 லட்சம் மைல்கள்; புதன் - 25.8 லட் சம் மைல்கள்; வெள்ளி - 27 லட்சம் மைல்கள்; வியாழன் - 390.6 லட்சம் மைல்கள்; சனி - 777 லட்சம் மைல்கள்; யுரேனஸ் - 1.69 கோடி மைல் கள்; நெப்டியூன் - 2.7 கோடி மைல்கள்.

குழந்தை பிறக்கும் நேரத் திற்கும், இலட்சக்கணக்கான, கோடிக்கணக்கான மைல் தூரத்தில் இருக்கும் இவை களின் நேரத்திற்கும் ஏதாவது சம்பந்தா சம்பந்தம் உண்டா? இவர்கள் இங்குள்ள நேரத் தைத்தானே கணிக்கிறார்கள். ஆனால், அந்தக் கோள்களில் இதே நேரம்தானா?

அறிவையும், பொருளை யும் சுரண்டும் இந்த சோதி டக் கொள்ளையர்களை என்ன சொல்ல - என்ன செய்ய?

- மயிலாடன்

Read more: http://viduthalai.in/page1/86535.html#ixzz3C9lkawcV

தமிழ் ஓவியா said...

செய்தியும் சிந்தனையும்

பசை!

செய்தி: திருப்பதி கோவில் அறங்காவலர் குழுத் தலை வர் பதவிக்கு ஆளும் கட்சிக்குள் கடும் போட்டி; வேறு வழியின்றி முதல மைச்சர் சந்திரபாபு நாயுடு அதிரடி முடிவு எடுத்து வருவாய்த் துறை செயலா ளரைத் தலைவராக நிய மித்தார்.

சிந்தனை: ஏன் கடும் போட் டியாம்? கோடிக்கணக்கில் பணம் புரளும் பசை மிகுந்த பதவியாயிற்றே!

Read more: http://viduthalai.in/page1/86542.html#ixzz3C9m8LnFV

தமிழ் ஓவியா said...

பொது மக்கள் நலன்!


இது நம்முடைய நாடு; இதன் நலனில் நமக்குப் பொறுப்பும், அக்கறையும் உண்டு. நாம் பொதுமக்கள் நலனுக்காக தொழில் செய்கிறோமே ஒழிய, அரசாங்க அதிகாரிகள் நலனுக்காக அல்ல. (குடிஅரசு, 25.8.1940)

Read more: http://viduthalai.in/page1/86479.html#ixzz3C9o104ip

தமிழ் ஓவியா said...

வாழும் மனிதர்களும் வள்ளுவரின் கணக்கெடுப்பும்!


பிறக்கும் மனிதர்கள் என்றாவது ஒரு நாள் இறக்கும் மனிதர்களே! இது நாள்வரை... எதிர் காலத்தில் எப்படியோ! ஆனால் சாகாமல் வாழும் மனிதர்கள் என்றும், செத்த மனிதர்கள் என்றும், மனித உருவில் உள்ள எலும்பும் தோலும் போர்த்த மனிதர்கள் என்றும், பழிப்பு நீங்கிய மனிதர்கள் என்றும், ஒரு அருமையான கணக்கெடுப்பை, மனிதர்களின் தரப் பிரிப்பை - சமுதாயப் பார்வையோடும், மனிதப் பண்புகளை முன்னிறுத்தியும் திருக்குறளை எழுதிய திருவள்ளுவர் படம் பிடித்துள்ளார் - ஈராயிரம் (2000) ஆண்டுகளுக்கு முன்பே என்பது வியக்கத்தக்கது அல்லவா?

உயிருடன் உள்ள மனிதர்களையெல்லாம் திருவள் ளுவர் வாழும் மனிதர்களாக, தன் கணக்கெடுப்பில் பார்க்க மறுக்கிறார்.

பின் யார்தான் வாழும் மனிதர் - அவரது கூரிய கண்ணோட்டத்தில்...?

ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப்படும் (குறள் 214)

ஒப்புரவு என்ற அதிகாரத்தில் மற்றவர் துன்பத்தைக் கண்டு வெறும் இரக்கத்தை மாத்திரம் காட்டாமல், துன்பப்படுபவர் இடத்தில் தன்னையே நிறுத்தி, துன்பத்தை உணர்பவராக்கிக் கொண்டு உதவிடத் துடிக்கிறார்களே, அவர்களே உண்மையில், வாழும் மனிதர்கள் ஆவர்; அந்தப்படிக்கு இல்லாத உயிருடன் உலவும் ஏனையோர் செத்தவர்கள் கணக்கில் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டியவர்கள் என்கிறார்!

சமூக வாழ்வில், முந்திக் கொண்டு பிறரது துன்பத்தை தமக்கே ஏற்பட்ட துன்பமாகக் கருதி செயல்படுவோரைத் தான் வாழும் மனிதர் என்று அங்கீகரிக்கிறார் வள்ளுவர்!
இரக்கப்படுதலை ஆங்கிலத்தில் Sympathy என்று அழைக்கிறார்கள்; ஆனால் மேற்காட்டிய - துன்பத்தை உணர்ந்து துன்பப்பட்டவரின் இடத்தில் தன்னை நிறுத்தும் நிலைக்கு Empathy என்று கூறப்படுகிறது.

மனிதநேயத்தின் தலை சிறந்த கூறு இது! ஆனால் மனிதர்களிடையே வெகு அபூர்வமாகவே காணப்படு கிறது என்பதால், மிகக் கோபமாக வள்ளுவர் மற்றவர் களை செத்தவர்கள் கணக்கில் சேருங்கள் என்கிறார்!

இன்னொரு குறளும்கூட இப்படி இறந்தவர்-செத்தவர் கணக்கில் - சேர்க்கப்பட வேண்டியவர்கள் பற்றிக் கூறுகிறது!

இறந்தார் இறந்தார்அனையர் சினத்தை
துறந்தார் துறந்தார் துணை (குறள் 310)

இதன் கருத்து: அளவு கடந்த கோபத்தைக் கொண்டவர்; உயிருடன் காணப்பட்டாலும் அவர் உண்மையில் செத்தாரைப் போன்றே கருதப்படுவார். சினத்தை அறவே துறந்தவர்கள், துறந்தவர்க்கு (உண்மைத் துறவிகளுக்கு) ஒப்பாக உயர்ந்தவராகவே கருதப்படுவர்.

இந்தக் கணிப்புப்படி சினத்தின் உச்சிக்கு சென்றவர்களை வாழும் மனிதர்களின் பட்டியல் கணக்கெடுப்பில் வள்ளுவர் கொண்டுவர மறுக்கிறார்!

உடற்கூறுபடி பற்பல நேரங்களில் உச்சக் கட்ட சினம், அதிகமான ரத்தக் கொதிப்பு, மாரடைப்பு, மூளை ரத்தக் குழாய் வெடிப்பு (Cerebral Hemorrhage) போன்றவைகளில் கூட கொண்டு போய் மனிதர்களை உண்மையாகவே செத்தவர்களாக்கி விடுகின்றதே அக்கண்ணோட்டத்தோடுகூட இக்குறளை நோக்கின் எவ்வளவு அருமையான மதிப்பீடு இது என்பது புரிகிறது!

மற்றொரு வகையில் தோற்றத்தால் மனிதர்கள்; ஆனால் உண்மையில் அத்தகையவர்கள் வாழும் மனிதர்கள் அல்லர். அல்லவே அல்லர் - வள்ளுவரின் கணக்கெடுப்பின்படி.

இது ஒரு தனி ரகம்!

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்பு தோல்போர்த்த உடம்பு (குறள் 80)

இதன் பொருள்: அன்போடு பொருந்தி இயங்கும் உடம்புதான், உயிர் நிலை பெற்று விளங்கும் உடம் பாகும். அப்படிப்பட்ட அன்பு இல்லாதவரின் உடம்பு எலும்பின் மேல் போர்த்தப்பட்ட வெற்று உடம்பே யாகும்.

மற்றொரு வகையும் வள்ளுவரின் கணக்கெடுப்பில் வருகிறது!

வசை ஒழிய வாழ்வாரே வாழ்வார் இசை ஒழிய
வாழ்வாரே வாழாதவர் (குறள் 240)

தம்முடைய வாழ்க்கையில் பழிப்பு நீங்க வாழ்பவரே, உயிரோடு வாழ்பவர் ஆவார்; புகழ் நீங்க வாழ்பவர் - அவர் உயிரோடு வாழ்ந்தாலும்கூட, உள்ளபடியே வாழாதவரே ஆவார்! என்பதே இக்குறள் கூறும் கருத்து.

எனவே, வள்ளுவரின் கணக்கெடுப்பின்படி மனிதர்கள் நம் நாட்டு மக்கள் தொகையில் மிக மிகக் குறைவுதான்! இல்லையா...?!



- கி.வீரமணி

Read more: http://viduthalai.in/page1/86481.html#ixzz3C9oA5Fyn

தமிழ் ஓவியா said...

நீதியை மறைக்கும் நிழல் விலகுமா?


பிற இதழிலிலிருந்து....

தீக்கதிர் தலையங்கம்


நீதியை மறைக்கும் நிழல் விலகுமா?

காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கில் மேல் முறையீடு செய்யத் தேவையில்லை என்று மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் முகுல்ரகோத்கி கூறியுள்ளதாக தகவல் கள் வெளியாகியுள்ளன. மத்தியில் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு பொறுப்பேற்ற பிறகு நடந்து வரும்பல்வேறு வகுப்புவாத திருகல்களில் ஒன்றாகவே இந்தக் கருத்தையும் எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது. காஞ்சி மடாதிபதிகள் ஜெயேந்திரர் மற்றும் விஜயேந்திரர் குற்றம் சாட்டப்பட்ட இந்தக் கொலை வழக்கில் 2013ஆம் ஆண்டு நவம்பர் 13ஆம் தேதி புதுச்சேரி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

முந்தைய அதிமுக ஆட்சிக் காலத் தில்தான் இந்த வழக்கு பதியப்பட்டது.

தமிழகத்தில் விசாரணை நடைபெற்றால் நியாயமாக நடைபெறாது என்று சங்கராச்சாரியார்கள் வழக்கு தொடுத்ததன் காரணமாகவே புதுவை நீதிமன்றத்திற்கு இந்த விசாரணை மாற்றப்பட்டது. அப்போதிலிருந்தே இந்த விசாரணை தடுமாறத் துவங்கியது. இன்னும் சொல்லப்போனால் வழக்கைப் பதிவு செய்த தமிழக காவல்துறை, குற்றவாளிகள் தண்டனை பெறுவதில் அக்கறை காட்டவில்லை. இந்த வழக்கில் சங்கரராமன் குடும் பத்தினர் உட்பட 83 பேர் பிறழ் சாட்சியங் களாக மாற்றப்பட்டனர். சங்கரமடத்தின் அரசியல் மற்றும் அதிகாரசெல்வாக்கு யாருக்கும் தெரியாத பரம ரகசியமல்ல. சங்கரமடத்தின் மிரட்டல் காரணமாகவே பிறழ்சாட்சி அளித்ததாக சங்கரராமன் குடும்பத்தினர் வழக்கின் தீர்ப்பு வந்தபிறகு கூறியது குறிப்பிடத்தக்கது. சங்கராச்சாரி யார்கள் மீது வழக்குப்பதிவு செய்யப் பட்டபோதே அதை எதிர்த்து போராட்டம் நடத்தியவர்கள் பாஜகவினர்.இப்போது மத்தியில் அவர்களுடைய ஆட்சி நடப் பதால்தான் அரசுத்தலைமை வழக்கறிஞர் இத்தகைய கருத்தை கூறியுள்ளார் என்றே புரிந்துகொள்ள வேண்டியுள்ளது. கொல்லப்பட்டவரின் குடும்ப உறுப் பினர்களே பிறழ் சாட்சிகளாக மாறியுள்ள தால் இந்த வழக்கை மேல்முறையீடு செய்தால் உயர்நீதிமன்றத்தின் கண்டனத் திற்கு ஆளாகவேண்டியிருக்கும் என்று அவர் கூறியுள்ளதாக தகவல்கள் தெரி விக்கின்றன.

குடும்ப உறுப்பினர்களே பிறழ் சாட்சிகளாக மாற்றப்பட்டுள்ளார்கள் என்றால் அவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளித்து முறையான, நியாயமான விசா ரணை நடைபெறுவதை உத்தரவாதப் படுத்த வேண்டியது மத்திய அரசின் பொறுப்பு இல்லையா?

இந்த வழக்கில் மேல்முறையீடு செய்ய புதுவைஅரசு உரிய ஆர்வம் காட்ட வில்லை. இந்த வழக்கின் முழு உண்மை யும் தமக்குத் தெரிவிக்கப்படவில்லை என்று முன்னாள் துணை நிலை ஆளுநர் வீரேந்திர கட்டாரியா கூறி யுள்ளார். பின்னர் அவர் அளித்த அனுமதியின் அடிப்படையிலேயே மத்திய அரசின் கருத்தை புதுவை அரசுகேட்டுள்ளது. அதற்கு எதிர் மறையான பதிலை மத்திய அரசு வழக்கறிஞர் கூறியுள்ளார். இந்த வழக்கு மேல் முறையீடு செய்யப் படுவதில் தமிழக அதிமுக அரசும் அக்கறை காட்ட வேண்டும். சட்டப் பூர்வமாக என்ன செய்ய வேண்டுமோ அதை செய்ய வேண்டும். சங்கரராமன் கொல்லப்பட்டது உண்மையெனும் போது கொலை செய்தவர்கள், கொலைக்கு காரணமானவர்கள் தண் டிக்கப்படுவது அவசியம் அல்லவா?

- நன்றி: தீக்கதிர் 25.8.2014

Read more: http://viduthalai.in/page1/86482.html#ixzz3C9oNmiEI

தமிழ் ஓவியா said...

ஏமாற்றம் - எத்தனை காலந்தான்?


ஆசிரியருக்குக் கடிதம் >>>

ஏமாற்றம் - எத்தனை காலந்தான்?

விடுதலை நாள் விழாவில் (15.8.2014) சென்னை கோட்டையில் கொடியேற்றி வைத்து தமிழக முதல்வர் அவர்கள் ஆற்றிய உரையைக் கவனித்திருப்பீர்கள். ஒவ்வொரு ஆண்டிலும் தியாகிகளின் ஓய்வூதியத்தை உயர்த்தி அறிவிப்பது முதல்வரின் வாடிக்கை இவ்வாண்டு ரூபாய் ஆயிரம் உயர்த்தப்பட்டிருக்கிறது.

இதன்படி இந்நாள் வரை ரூ. 10000 (பத்தாயிரம்) வாங்கிக் கொண்டிருந்த (சு)தந்திரப் போராட்ட வீரர்கள் இனி ரூ. 11000 (பதினோராயிரம்)மும், ரூ. 4000 (நாலாயிரம்) வாங்கிக் கொண்டிருந்த எல்லைப் போராட்ட வீரர்கள் இனி ரூ. 5000 (அய்யாயிரம்) பெறுவார்கள். ஆனால் ஜிணீனீவீறீ ஷிநீலீஷீணீக்ஷீ தமிழறிஞர்கள் என அழைக்கப்படுகிற மொழிக் காவலர்களின் நிலை மிகவும் பரிதாபத்துக்குரியது. இந்த ஆண்டும் மொழிக் காவலர்கள் அலட்சிய படுத்தப்பட்டு, புறக்கணிக்கப்பட்டிருக் கிறாகள். முதுமையில், வறுமையில் வாடும் அவர்களை முதலமைச்சர் கண்டு கொள் வதே இல்லை. அடித்தட்டு வாசிகளாகிப் போன அவர்கள் இன்று வரை பெறுவது வெறும் ரூ. 3000 (மூவாயிரம்) மட்டுமே, விண்ணுக்கும் மண்ணுக்குமான இடைவெளி!

ஏனிந்த ஏற்றத் தாழ்வு? எதனால் வந்தது இந்த மூன்றடுக்கு முரண்? எப்படி வந்தது மாற்றாந்தாய் மனப்பான்மை? உதாசீனப்படுத்தி ஒதுக்கித் தள்ள காரணம் என்ன? அவர்களிடம் கண்ட பிழைதான் என்ன? சமச்சீரான அலைவரிசையில் ஒரு தாய் மக்களாகப் பார்க்கப்பட்ட ஈகிள் புதிய சமூக அநீதிக்கு ஆளாக்கப்பட்டது ஏன்?
இந்த அவல நிலையை அறிந்தும் நம் திராவிடத் தலைவர்கள் அமைதி காப்பதும், குரல் கொடுக்காததும் ஏன்? அன்றாட அறிக்கைகளில் இடம் பெறும் அருகதை கூடவா இல்லை? ஆளும் கட்சியின் அலட்சியம் தெரிந்தும், மொழிப் போரை முன்னின்று நடத்தியவர்களாவது அன்புகாட்டி அரவணைக்கக் கூடாதா? ஊடகங்கள் உதவுமே?

ஓர் அதிர்ச்சித் தகவல் சொல்லித்தான் ஆக வேண்டும். 1965ம் அதற்கு முன்பும் நடத்திய மொழிப்போர்களில் பங்கேற்று சிறை சென்றோர் நூற்றுக்கு 95பேர் இன்று இல்லை. மிகச்சிலரும் மரபுரிமையினருமே மிஞ்சியிருக்கிறார்கள். ஆனால் (1947க்கு முன்) 1942ல் விடுதலைப் போரில் ஈடுபட்டவர்களாக நம்பப் படுகிறவர்களில் 65 விழுக்காட்டிற்கு மேல் மத்திய மாநில அரசுகளால் பயன்பெற்று வருகிறார்களாம். முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் ஒரு முறை சொன்னது. இந்தியாவில் ஒரு லட்சம் பேர் சுதந்திர போராட்ட வீரர்களாக உதவித் தொகை பெறுகிறார்கள்!.

உடலை வருத்திப் போராட துணிவு மட்டும் போதாது. வயதும் உடலும் ஒத்துழைக்க வேண்டும். இதை எழுதுகிற நான் உள்ளிட்ட இருக்கிற அத்தனை பேரும் மாற்றுத் திறனாளிகள் என்பதே நிலை.

நீதிமன்ற படிக்கட்டுகளில் ஏறலாம் என்றால் காலம் கருதி காத்திருக்க வேண்டும். மன உளைச்சல்தான் மிஞ்சும். நிதி உதவிக்கு பிறரை நாடவேண்டும். நாட்கள் எண்ணப்படுகிற இத்தருணத்தில் அரசிடம் கையேந்துவது ஒன்றே போதும்.

(ச.பா) எஸ்.பி.மணியம், மொழிக்காவலர்,
ஈரோடு இல்லம், சிவகாசி, மேற்கு 626124.

Read more: http://viduthalai.in/page1/86486.html#ixzz3C9oXbr00

தமிழ் ஓவியா said...

அண்ணாவுக்கு பாரத ரத்னா! கலைஞர் வேண்டுகோள்!


சென்னை, ஆக. 25- இந்தியப் பேரரசின் பாரத ரத்னா விருது, இந்திய நாட்டில் உள்ள மூத்த தலை வர்களுக்கு ஆண்டுதோறும் வழங்குவதையொட்டி, தென்னகத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரான பேரறிஞர் அண்ணா அவர்களுக்கு இந்த ஆண்டு பாரத ரத்னா விருது வழங்கவேண்டுமென்று தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் குடியரசுத் தலைவர் அவர்களுக்கும், இந்தியப் பிரதமர் அவர்களுக்கும் வேண்டுகோள் விடுத்து நேற்று கடிதம் எழுதியுள்ளார்கள்.

அந்தக் கடிதத்தில் தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் குறிப்பிட்டுள்ளதாவது:

விருதுக்குப் பெரிதும் பொருத்தமானவர்

திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனரும், மிகப்பெரிய சமூகசீர்திருத்தவாதியும், எழுத்தாளரும், இலக்கியவாதியும், சொற்பொழிவாளருமான பேரறிஞர் அண்ணா அவர்கள் இந்த விருதுக்குப் பெரிதும் பொருத்தமானவர் என்றும், அவருக்கு இந்த ஆண்டு பாரத ரத்னா விருது வழங்குவது பொருத்தமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

அதன் விபரம் வருமாறு:-

காஞ்சி தந்த காவியத் தலைவர் உலகத் தமிழர் உள்ளங்களில் எல்லாம் சிம்மாசனம் போட்டுக் கொலு வீற்றிருக்கும் செந்தமிழ் அறிஞர், பேரறிஞர் பெருந் தகை அண்ணாஅவர்கள்! பல்துறை ஆற்றல் நிரம்பப் பெற்ற அறிவுலக மேதை!

எளிய குடும்பத்தில் பிறந்து, நல்ல மாணவராக, ஆற்றல்மிகு பேச்சாளராக, சிறந்த எழுத்தாளராக, உள்ளம் கவர்ந்த பத்திரிகை ஆசிரியராக, நல்ல நூலா சிரியராக, நாடக ஆசிரியராக, நாடக நடிகராக, பண் பட்ட அரசியல் வாதியாக, உத்தமத் தலைவராக, ஒப்பற்ற வழிகாட்டியாக, நாடு போற்றும் முதல் அமைச்சராக, பல்துறை ஆற்றல் நிரம்பப் பெற்ற அறிவுலக மேதையாக ஓங்கு புகழ் எய்தியவர் பேரறிஞர் அண்ணா அவர்கள்.

ஏழை, எளிய மக்களிடையே தம் பேச்சாற்றலால் அறிவுப் புரட்சியை உருவாக்கியவர் அவர்.

தமிழ்ச் சொற்றொடர் அமைப்பிலே புதிய நடை கண்டு, எழுச்சி மிகுஎழுத்தால், இலட்சக்கணக்கான இளைஞர்களின் இதயங்களைக் கவர்ந்து, எழுத்துலகில் புரட்சியை உண்டாக்கிய மேதையான பேரறிஞர் அண்ணா அவர்கள் அடக்கத்தின் வடிவமாகத் திகழ்ந் தார்கள். முதன்முதலாக, அரசியலில் குடும்பப் பாச உணர்வை ஊட்டியவர்; மாற்றாரையும் மதிக்கக் கற்றுத் தந்த ஆசான்; மாபெரும் ஜனநாயகத் தலைவர் அவர். கடமை, கண்ணியம், கட்டுப்பாடு எனும் தாரக மந்திரத்தை அரசியல் உலகத்திற்கு அறிமுகம் செய்து வைத்த ஆற்றலாளர் பேரறிஞர் அண்ணாஅவர்கள்.

சீர்திருத்தக் கருத்துகள்

பேரறிஞர் அண்ணா அவர்கள் திரைப்படங்களுக்குக் கதை வசனம் எழுதி, சுயமரியாதைக் கொள்கைகளை, சீர்திருத்தக் கருத்துகளை மக்களிடையே பரப்பினார். ஏழை எளியவர்களின் நல்வாழ்வுக்காக பல்வேறு போராட்டங் களில் ஈடுபட்டுப் பலமுறை சிறைவாசம் ஏற்றார்.

தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, சுயமரியாதைத் திருமணச் சட்டத்தை நிறைவேற்றி, சுயமரியாதை இயக்கத் தலைவர் தந்தை பெரியாருக்கு அன்புப் பரிசு என்று அதனை அறிவித்தார். தமிழ் மக்களின் சிந்தனையில் படிந்து கிடந்த அழுக்குகளை அகற்றி தமிழகத்தை மாற்றியமைக்க தம் நாவையும், எழுது கோலையும், இறுதி மூச்சுவரை பயன்படுத்தினார்.

/page1/86472.html#ixzz3C9oy5bFn

தமிழ் ஓவியா said...

தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்தவர்

தமிழ்மொழி உயர்வுக்காகவும், தமிழர்களின் மேம் பாட்டுக்காகவும், தமிழ்நாட்டின் சிறப்புக்காகவும் வாழ்நாள் எல்லாம் ஓயாதுபாடுபட்ட உத்தமர் அவர்! தமிழ்நாடு என தாய்க்குப் பெயர் சூட்டிய தனயன்!

இப்படை தோற்கின் எப்படை வெல்லும் என்று தம்பிமார் பெரும்படையைக் கண்டு, நெஞ்சுயர்த்திப் பெருமிதம் கொண்ட பெருமகனான பேரறிஞர் அண்ணா அவர்கள் - மெட்ராஸ் ஸ்டேட் என்ற பெயரை தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்து தாய்க்குப் பெயர் தந்த தனிப்பெரும் தனயன் என்ற பெரும் புகழுக்குரியவர்!

சுயமரியாதைச் சுடரொளி - சொக்கவைக்கும் சொற்பொழிவாளர் - எழுத்துவேந்தர் - தென்னகத்தின் மிகப்பெரும் அரசியல் தலைவர் எனப் பாராட்டி, வருணித்து முடிக்க முடியாத அளவுக்கு பல்வேறு சிறப்புக்களுக்கும், பெருமைகளுக்கும் உரியவர் பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள்!

இந்நிலையில், இந்தியப் பேரரசின் பாரதரத்னா விருது, இந்திய நாட்டில் உள்ள மூத்த தலைவர்களுக்கு ஆண்டுதோறும் வழங்குவதையொட்டி, தென்னகத் தின் மூத்த தலைவர்களில் ஒருவரான பேரறிஞர் அண்ணா அவர்களுக்கு இந்த ஆண்டு வழங்கவேண்டு மென்று தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் குடியரசுத் தலைவர் அவர்களுக்கும், இந்தியப் பிரதமர் அவர் களுக்கும் வேண்டுகோள் விடுத்து நேற்று (24.8.2014) கடிதம் எழுதியுள்ளார்கள். தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் எழுதியுள்ள அக்கடிதங்களில் கூறப்பட்டுள்ள தாவது:-

நமது தேசியத் தலைவர்களில் சிலருக்கு பாரத ரத்னா விருது வழங்குவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக நாங்கள் அறிகிறோம்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத் தலைவர் அறிஞர் அண்ணா அவர்கள் தமிழ்நாட்டின் மாபெரும் சமூக சீர்திருத்தவாதி, மாபெரும் எழுத்தாளர், பேச்சாளர் மற்றும் இலக்கியவாதியாவார்.

தமிழிலும், ஆங்கிலத்திலும்....

தமிழிலும், ஆங்கிலத்திலும் அவரது இலக்கிய மற்றும் அரசியல் படைப்புகள் தமிழ்நாட்டில் மிகச் சிறந்தவற்றில் ஒன்றாகப் போற்றப்படுகிறது. இந்தியாவின் மிக உயர்ந்த விருதான பாரதரத்னா விருது வழங்கி கவுரவிக்கப்பட அவர் முற்றிலும் தகுதி உடையவராவார்.

வரவிருக்கும் குடியரசுதினத்தன்று அறிஞர் அண்ணா அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கும்படி நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அந்தக் கடிதத்தில்கூறப்பட்டுள்ளது.

Read more: http://viduthalai.in

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

மலர் வேண்டாம் மனம் போதும்!

சிவபெருமானுக்கு பூஜை செய்ய புன்னை, வெள்ளெருக்கு, செண் பகம், நந்தியாவட்டை, நீலோத்பவம், பாதிரி, அரளி, செந்தாமரை ஆகிய எட்டு வகையான மலர்களைப் பயன்படுத் தலாம். இம்மலர்கள் அஷ்ட புஷ்பங்கள் எனப்படு கின்றன. இவற்றில் சில இப்போது கிடைப்ப தில்லை. இம்மலர்களை படைத்து மட்டும்தான் சிவனை வழிபட வேண்டு மென்பதில்லை. நமசி வாய என அவர் திருநாமத்தை உச்சரித்து, மனம் என்னும் பூவால் வழி பட்டாலே போதும். மலர்களால் அர்ச்சித்து வணங்கிய பலன் கிடைத்து விடுமாம்!

இதைப் போல கோயி லுக்குச் செல்லாமல் வீணா கப் பணத்தை எதையும் செலவு செய்யாமல், உள்ளமே கோயில் என்று கருதி வீட்டில் இருந்த படியே மனதளவில் சிவனை வழிபட்டால் போதும் என்ற முடிவுக்கு வர வேண்டியதுதானே - கோயில்களையும் இழுத்து மூடிவிடலாம் அல்லவா!

Read more: http://viduthalai.in/page1/86360.html#ixzz3C9qXdZpm

தமிழ் ஓவியா said...

கோமாதா ஆந்திராவில் படுத்தியபாடு!


ஞானபூமியாம் இந்த நாடு! புண்ணிய பூமியாம் இந்த நாடு!

பாரத நாடு பழம்பெரும் நாடு - இப்படிப் பாடுவதில் ஒன்றும் குறைச்சல் இல்லை!

நாள்தோறும் வரும் செய்திகளோ, உலக மகா அவமானத்தின் உச்சத்தில் நம் நாட்டைக் கொண்டு செல்லும் அவலச் சுவைகள்!

இன்று டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேட்டில் ஒரு செய்தி - மூடநம்பிக்கை இந்த நாட்டினை எப்படியெல்லாம் உருக்குலையச் செய்துள்ளது என்பதற்குக் கலங்கரை வெளிச்சம் போல், வெளிச்சம் போட்டு உலகத்திற்குக் காட்டும் செய்தியாகும்!

தெலங்கானா பகுதியில் உள்ள வாரங்கல் பகுதியில் நேற்று ஒரு செய்தி... ஒரு பசு மனித உருவ கன்றுக் குட்டியைப் போட்டதாம்! அது பேச ஆரம்பித்ததாம், (தெலுங்கில் தான் பேசியதோ! அல்லது ஹிந்தி உருது மொழியில் பேசியதோ விசாரிக்க வேண்டும் இனிமேல்தான்) பூகம்பம் வந்து அப்பகுதியே அழியப் போகிறது என்று அந்தப் பசு மாடு மனிதக் குட்டி கூறியதாம்! அதனால் அப்பகுதி மக்கள் பூராவும் வீட்டுக்குள் இருக்காமல், தூங்காமல் இரவெல்லாம் கண் விழித்துக் காத்துக் கிடந்தார்களாம்!
எங்கும் வதந்திகள்! வதந்திகள்!!

அதை நம்பி, செவ்வாய் இரவு முழுவதும் சாவுக்குப் பயந்து, அதே போல புதன் இரவும் இரு நாட்களில் இப்படி விழித்தே வெளியில் பீதியில் குந்தியிருந்தார்களாம் எவ்வளவு பெரிய அறிவுக் கொழுந்துகள் பார்த்தீர்களா? இந்த லட்சணத்தில் கைத் தொலைபேசிகளும் இத்திருப்பணிக்கு - வதந்திக்கு உதவினவாம்! எவ்வளவு வெட்கக்கேடு!
மொபைல்ஃபோன் கண்டுபிடித்தவன் இதைக் கேட்டால் தூக்கு மாட்டிக் கொள்ள மாட்டானா?

கரிம்நகர், வாரங்கல், நாலகொண்டா, மேடாக் பகுதிகளில் குழந்தைகளையும் தூங்கவிடவில்லையாம் பெற்றோர்கள்! என்ன மடமை!!

கோமாதா, குலமாதா என்ன பாடுபடுத்துகிறது பார்த்தீர்களா?

எங்கள் நாட்டுக்கெந்த நாடு ஈடு?

பைத்தியக்காரத்தனத்தைப் பாங்குடன் பரப்புவதில் எந்த நாடு ஈடு?

- ஊசி மிளகாய்

Read more: http://viduthalai.in/page1/86301.html#ixzz3C9rRCD3o