Search This Blog

21.4.14

ஜாதிக் கட்சி என்றால் என்ன?-பெரியார்



இன்று நாட்டில், அரசியலில் அல்லது கொள்கை இயலில், கட்சி என்பதே மறைந்து போய்விட்டது. பஞ்சாயத்து போர்டு முதல் பார்லிமெண்டு (நாடாளுமன்றம்) வரை ஜாதிகளின் பேரால்தான் அதுவும் கொள்கை, நாணயம் இல்லாமல் ஜாதிக் கட்சிகள் வளர்ந்து வருகின்றன.

இவற்றுள் பார்ப்பன ஜாதிக் கட்சி மாத்திரம் அந்த அந்த ஜாதிக்கு ஏற்ப நேர்மையாய் நடந்து கொள்ளுகின்றது.

மற்ற ஜாதிக் கட்சிகள் ஓட்டுக்கு ஜாதிபேர் சொல்லுவதைத் தவிர காரியத்தில் என்ன செய்தாவது, எதை விட்டுக் கொடுத்தாவது தனது சுயநலத்தைப் பெருக்கிக் கொள்ளுவது என்பதைத் தான் கொள்கையாகக் கொண்டு இருந்து வருகிறது.

ஜாதிக் கட்சி என்பது மற்ற ஜாதி மக்களை ஏய்க்கவும் பதவிபெற்றால் தங்கள் ஜாதி நலம் கூட கவனிக்காமல் ஜாதியின் பேரால் ஜாதி உட்பட பொதுநலத்தை விட்டுக் கொடுத்து பணம், பதவி, சலுகை சம்பாதிப்பதும் மாத்திரமே லட்சியமாகக் கொண்டு இருக்கிறது.


கல்வி விஷயத்தில் ஆச்சாரியார் செய்திருக்கும் அக்கிரமத் திட்டம் எல்லா ஜாதிககுமே கேடான பலன் தரும் காரியமாகும். இதைப்பற்றி எந்தக் கட்சியாரும் கவலைப்படவே இல்லை. ஒரு பேச்சம் பேசவே இல்லை.

ஆனால் லைசென்சு, பர்மிட், பதவி முதலிய சலுகைகளில் ஒரு கோஷ்டி கொள்ளையடிக்க  அதற்கு ஆக பரிசு பெற மாத்திரமே பயன்படுத்துகிறது.

ஆனதால் இனி ஒவ்வொரு ஜாதியிலும் ஜாதி பேரால் போட்டி கட்சி ஏற்பட வேண்டியது அவசியமாகிவிட்டது. இன்று பதவியிலிருப்பவர் எவரும் ஜாதிப்பேரால் பதவிக்கு வராமல் அந்தந்த ஜாதியார் செய்ய வேண்டும். படையாட்சி ஜாதியார் இதை அடுத்த தேர்தலில் பெரும் அளவுக்குச் செய்து காட்டுவார்கள் என்றே கருதுகிறோம்.

மற்ற ஜாதிக்கும் இயல்பாகவே முயற்சி ஏற்படலாம் என்று கருதுகிறோம்; இந்தப்படி ஒரு நிலை ஏற்பட்ட பின்பு தான் ஜாதி ஒழிய முடியும்.

இதற்குள் ஏராளமான 'வண்ணார்',  'நாவிதர்' முதலிய ஜாதிகள் விழித்துக் கொள்ளலாம் என்றும் கருதுகிறோம்.

----------------------------- பெரியார் ஈ.வெ.ரா. கட்டுரை."விடுதலை", 09.05.1953

48 comments:

தமிழ் ஓவியா said...


இப்படிக்கு வாசிப்பது தினமலர்! அய்ந்து மணி நேரம் வெயிலில் வாடிய குழந்தைகள்

ஆலந்தூர் கோர்ட் அருகே, நேற்று பிற்பகல் 3.30 மணிக்கு ஜெ. பிரச்சாரம் செய்வதாக, அறிவிக்கப்பட்டது. ஆனால் அவர் மாலை 5 மணிக்கு தான் வந்தார். மதியம் ஒரு மணி முதல், வேன்களில் அழைத்து வரப்பட்ட பெண்கள், மேடையருகே கொளுத்தும் வெயிலில், கைக்குழந்தைகளுடன் காத்திருந்தார்கள்.

வெயிலின் தாக்கத்தால் பாலுக்காகவும், குடி நீருக்காகவும் கைக்குழந்தைகள் அழுது கொண்டிருந்தன. பெண்கள், கேரள செண்டை மேளத்தையும், கொக்கலிக் கட்டை மனிதர்களையும், ஜெ., புகழ், நடனத்தையும் காட்டி குழந்தைகளை சமாதானப்படுத்திக் கொண்டிருந்தனர்.

வெறுப்படைந்த குழந்தைகள் வீட்டுக்கு செல்ல அடம் பிடித்தன, இருக்கும் இடத்தில் இருந்து திரும்ப முடியாமல் பெண்கள் மிகவும் சிரமப்பட்டனர். வயதானவர்கள், மிகவும் சோர்வடைந்தனர். பிற்பகல் 3 மணி முதல், காவல் துறையினர் கூட்டம் கூட்டமாக, சாலையில் நின்று கொண் டதால், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Read more: http://viduthalai.in/e-paper/78978.html#ixzz2zTbCOvmk

தமிழ் ஓவியா said...

முதல்வர் வருகையால் சாலைகளுக்கு விமோசனம்

முதல்வர் ஜெயலலிதா, இன்று (20ஆம் தேதி) வடசென்னை தொகுதியில் திருவொற்றியூர் தேரடி, மணலி நெடுஞ்சாலை சந்திப்பு, வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர், பெரவள்ளூர் சந்திப்பு ஆகிய இடங்களில் பிரச்சாரம் செய் கிறார். முதல்வர் வருகையை முன்னிட்டு, வண்ணாரப் பேட்டை முதல் திருவொற்றியூர் வரை பல ஆண்டுகளாக, வாகன ஒட்டிகளை அச்சுறுத்திய பல்லாங்குழிகளாக இருந்த சாலைகளில், தார் கலவை கொட்டி, ஒட்டு வேலை பகல், இரவாக நடக்கிறது.

அதேபோல், எரியாத மின் விளக்குகள் சீரமைக்கப்பட்டு உள்ளன. எம்.பி.எம்., சாலை, மூர்த்திங்கர் சாலை, மணலி சாலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பள்ளங்கள் சீர் செய் யப்பட்டன. இதுவரை போக்குவரத்து காவல் துறையினரின் கண்ணுக்கு தெரியாமல் இருந்த, எம்.கே.பி.நகர் மேற்கு நிழற்சாலை உள்ளிட்ட பல சாலைகளில், வேகத்தடைகள் எல்லாம் வாகன ஓட்டி களுக்கு தெரியும் வகையில் வண்ணம் பூசப்பட்டது. சாலை யோரம் குவிந்திருந்த மணற் குவியல் அகற்றப்பட்டது.

(தினமலர் 20.4.2014)

Read more: http://viduthalai.in/e-paper/78978.html#ixzz2zTbKewKu

தமிழ் ஓவியா said...


திருவனந்தபுரம் கோயிலில் கொள்ளையோ கொள்ளை!


திருவனந்தபுரம், ஏப்.20- பத்மநாபசுவாமி கோயிலில் இருந்து கிலோ கணக்கில் தங்க நகைகளை மணலில் கலந்து கடத்தப்பட்டதாக வும், தஞ்சாவூரை சேர்ந்த சில நகைக்கடை உரிமை யாளர்களுக்கும் இதில் தொடர்பு இருப்பதாகவும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் திடுக்கிடும் தகவல் தெரி விக்கப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம் பத்ம நாபசுவாமி கோயிலில் உள்ள ஏ முதல் எப் வரை யிலான 6 ரகசிய அறைகளில் பல லட்சம் கோடி மதிப் புள்ள பொக்கிஷங்கள் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டது. இந்த பொக்கிஷங் களை மதிப்பிட உச்ச நீதிமன்றம் ஒரு குழுவை நியமித்தது.

இந்நிலையில், கோயில் சொத்து குறித்து முழு விவரங்களை தெரிவிக்க, கோபால கிருஷ்ணன் என் பவரை உச்ச நீதிமன்றம் நியமித்தது. அவர் கடந்த 2 மாதங்களாக கோயிலில் ஆய்வு நடத்தி, சில தினங் களுக்கு முன் உச்ச நீதி மன்றத்தில் 550 பக்கங்கள் கொண்ட அறிக்கையை தாக் கல் செய்தார்.

அதில், மன்னர் குடும்பத்தினரும் கோயில் ஊழியர்களும் சேர்ந்து கோயில் பொக் கிஷங்களை கடத்தி இருக் கலாம் என பரபரப்பு குற் றச்சாட்டை கூறியுள்ளார். மேலும், கோயிலில் இருந்து கிலோ கணக்கில் தங்க நகைகளை மணலில் கலந்து கடத்தி சென்றுள்ளதாகவும், தஞ்சாவூரை சேர்ந்த சில நகைக்கடை உரிமையாளர் களுக்கு இது கொடுக்கப் பட்டதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அறிக்கையில் கூறப்பட் டுள்ள விவரம்: பத்மநாப சுவாமி கோயில் நகைகளை பாலிஷ் செய்வதற்காக தஞ் சாவூரை சேர்ந்த சில நகைக்கடைகளுடன் ஒப்பந்தம் செய்திருந்தனர். பல கட்டங்களாக இவர்கள் கோயில் நகைகளை பாலிஷ் செய்யும் பணியில் ஈடுபட் டனர்.

அப்போது கோயிலில் இருந்து கிலோ கணக்கில் நகைகளை மணலில் கலந்து இவர்கள் கடத்திச் சென்றுள் ளனர். பின்னர், இவர்கள் தவறை உணர்ந்தும் பயந் தும் சிறிது நகைகளை உண் டியலில் போட்டுள்ளனர். நகை பாலிஷ் போடும் பணியில் ஈடுபட்டிருந்த ராஜு என்பவருக்கு மட்டும் 3 கிலோ எடையுள்ள தங்க செயின் உள்பட 20 கிலோ தங்கம் கிடைத்துள்ளது.

கோயிலில் இருந்து எத்தனை கிலோ தங்கம் கடத்தப்பட்டுள்ளது என் பதை கண்டுபிடிக்க முடிய வில்லை. இந்த பொக்கிஷம் கடத்தலில் பல முக்கிய பிரமுகர்களுக்கும் தொடர்பு உள்ளது. இது தவிர கோயில் உண்டியலில் ஏராளமான அளவில் வெளிநாட்டு பணம் மற்றும் தங்க நகைகள் கிடைத்துள்ளன.

இவற்றை யும் பலர் சுருட்டியுள்ள னர். ரகசிய அறையில் இருந்து திருவாங்கூர் அரண்மனைக்கு ஒரு சுரங்கப்பாதை கண்டு பிடிக்கப்பட்டது. இந்த சுரங்கப்பாதை வழியாகவும் நகைகளை கடத்திச் சென் றிருக்கலாம். பொக்கிஷங் களை மதிப்பிட உச்ச நீதி மன்றம் உத்தரவிட்ட பின் னரும் ஏராளமான அளவில் நகைகள் கடத்தப்பட்டுள்ளன.

திருவிதாங்கூர் மன்ன ராக இருந்த மார்த்தாண்ட வர்மா, கோயில் ஊழியர்கள் பலருக்கு நகைகளை கொடுத்துள்ளார். இது தொடர்பாக ஒரு கோயில் ஊழியர் வாக்குமூலம் கொடுத்துள்ளார். இவருக் கும் கிலோ கணக்கில் தங்கம் கிடைத்துள்ளது.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட் டுள்ளது. கேரள எதிர்க்கட்சித் தலைவர் அச்சுதானந்தன், திருவனந்தபுரத்தில் நேற்று (19.04.2014) அளித்த பேட்டி:கோயிலில் இருந்து நகைகள் கடத்தப்படுவது குறித்து எனக்கு இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பே ஏராளமான புகார்கள் வந் தன. இது குறித்து அப் போதே கேரள அரசிடம் தெரிவித்தேன். ஆனால், மன்னர் குடும்பத்தினருக்கு பயந்து கேரள அரசு விசா ரணை நடத்த நடவடிக்கை எடுக்கவில்லை.

திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினர் தினமும் கோயிலுக்கு வந்து விட்டு செல்லும்போது பிரசாதம் கொண்டு செல்லும் பாயசம் வாளியில் நகைகள் கடத்திச் செல்வதாக நான் அப் போதே கூறினேன். அப் போது என்னை கேலி செய்தனர். இப்போது அது உண்மை என தெரிந்து விட்டது. இந்த கடத்தலுக்கு மன்னர் குடும்பத்தினரும், கேரள அரசும்தான் பொறுப் பேற்க வேண்டும். இவ் வாறு அச்சுதானந்தன் கூறினார்.

Read more: http://viduthalai.in/e-paper/78977.html#ixzz2zTbbsGMn

தமிழ் ஓவியா said...


அந்தப் பாட்டாளிச் சொந்தங்கள் யார்? பட்டியலிடுங்கள் பார்க்கலாம்


கேள்வி: வன்னியர்கள் ஓட்டு அந்நியருக்கு இல்லை என்கிறீர்கள். அப்புறம் அந்நியர்கள் ஓட்டு எப்படி வன்னியருக்கு விழும்?

பதில்: இது, 30 ஆண்டுகளுக்கு முன்பு ராமசாமி படையாச்சியார் இருந்தபோது சொல் லப்பட்டது. இப்போது யாரும் அப்படி சொல்வது இல்லை. பாமக என்பது அனைத்துத் தரப்பு மக்களுக்காகப் பாடுபடும் பாட்டாளிச் சொந்தங்களின் கட்சி. இதில் எல்லாத் தரப்பு மக்களும் இருக்கிறார்கள். எங்கள் கட்சியில் பொதுச் செய லாளரே தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர்தான்.

- பாமக இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அளித்த பேட்டி இது (ஜூனியர் விகடன் 20.4.2014)

இந்தக் கூற்று உண்மையா? இப்பொழுது பா.ம.க சார்பில் எட்டு பேர் நிறுத்தப்பட்டுள்ளார்களே - இதில் சிதம்பரம் ரிசர்வ் தொகுதியைத் தவிர மீதியுள்ள 7 பேர்களில் வன்னியர்களைத் தவிர வேறு யாராவது உண்டா? இதற்கு முன்பும்கூட வன்னியர்களைத் தவிர வேறு எந்த பாட்டாளிச் சொந்தங்கள் தேர்தலில் நிற்க வாய்ப்புக் கொடுக்கப்பட்டுள்ளனர்?

பட்டியலிருந்தால் வெளியிடட்டுமே, பார்க்கலாம்!

Read more: http://viduthalai.in/e-paper/78973.html#ixzz2zTbkbenS

தமிழ் ஓவியா said...

பால்ய விவாகமாம்

பா.ஜ.க.வுக்கு கொள்கைப் பரப்புச் செயலாளர் இப்பொழுதெல்லாம் வைகோ அவர்கள்தான்.

மோடியின் திருமணம் பிரச்சினையாகி விட்ட நிலையில் அவர் ஓடிவந்து மோடியைக் காப்பாற்றப் பார்க்கிறார் மோடிக்கு நடந்தது பால்ய விவாகமாம். அப்படியா? அது சட்டப்படி குற்றமாயிற்றே - இப்பொழுது யாரை உள்ளே தள்ளலாம்?

Read more: http://viduthalai.in/e-paper/78973.html#ixzz2zTc3LNQJ

தமிழ் ஓவியா said...


மோடிக்கு மட்டும்தான் ஆதரவு பாஜக.,வுக்கு எதிர்ப்பு மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா ராஜ்தாக்கரே பேட்டி


மும்பை.ஏப்.20- டைம்ஸ் நவ் தனியார்த் தொலைக்காட்சிக்கு மகா ராஷ்டிர நவ நிர்மாண் சேனா தலைவர் ராஜ்தாக்கரே அளித்த பேட்டியில் மோடியை மட் டுமே ஆதரிப்பதாகவும், பாஜக, ராஜ்நாத் சிங்கை ஆதரிக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.

தொலைக்காட்சியின் செய்தியாளர் அர்னாப் கோஸ் வாமி பாஜகவையும் அதன் தலைவர் ராஜ்நாத்சிங்கையும் எதிர்க்கும் அதேநேரத்தில் மோடியை ஆதரிப்பது ஏன்? என்று தொடர்ச்சியாகக் கேள் விகளை எழுப்பினார்.

அதற் குப் பதிலளித்த ராஜ்தாக்கரே, நான் தெளிவுபடுத்தி உள் ளேன். மோடியை அவரு டைய பணிகளுக்காக ஆதரித்து வருகிறேன். இதனால் நான் பாஜகவை ஆதரிப்பதாகப் பொருளில்லை. தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையும் எண்ணமே எனக்கு இல்லை. நாட்டில் நிலையான அரசு அமைய வேண்டும் என்றுமட்டுமே விரும்புகிறேன் என்று மோடியை ஆதரிப்பதற்கான விளக்கங்களைக் கூறினார்.

ஆனால், செய்தியாளர் கோஸ்வாமி தொடர்ச்சியாக மோடிக்கும், தாக்கரேவுக் கும் இடையே வெளிமாநி லங்களிலிருந்து மும்பையில் பணிபுரிவோர்பற்றிய முரண்பாடுகள் குறித்துக் கேட்டபோது, இந்த விவ காரத்தில் நான் மோடியின் கருத்தை ஏற்றுக்கொள்ள மாட்டேன்.

குஜராத்தில் வேண்டுமானால் சாதாரண வேலைகளைக்கூட செய்வ தற்கு ஆள் இல்லாமல் இருக் கலாம். ஆகவே, அவர் களுக்கு உத்தரப்பிரதேசத்தி லிருந்தும், பீகாரிலிருந்தும் ஆட்கள் தேவைப்படலாம். ஆனால், வேலை செய்யப் போதுமான ஆள்கள் எங் களிடம் இருக்கிறார்கள்.

பூனாவில் ராஜ்நாத்சிங் பேசும்போது மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா ஆதரவு குறித்து கூறும்போது, பாஜகவுக்கு நாங்கள் கேட் காமல் தாங்களாகவே ஆதரவு தெரிவித்துள்ளதாகக் கூறியுள் ளாரே என்று கேட்டபோது, நான் மோடியைத்தான் ஆதரிக்கிறேன். ராஜ்நாத்தை அல்ல. அவர் சொல்வது பற்றி எனக்குக் கவலை இல்லை என்றார்.

பெயர் குறிப்பிட விரும்பாத நவநிர் மாண் தொண்டர் கூறும் போது, ராஜ் தாக்கரே கூறு வதுபோல் மோடியின் செயல்களையொட்டி மோடியை மட்டுமே ஆதரிக் கிறோம். ஆதரவு என்று வரும்போது, மோடி ஆதரவு நிலையைமட்டுமே வாக்கா ளர்களுக்கும் தெளிவாகவே கூறியுள்ளோம் என்றார்.

இதனிடையே தொடர்ச்சி யான கேள்விகளால் ஆவேச மடைந்த ராஜ்தாக்கரே, இது பேட்டிதானே தவிர, குறுக்கு விசாரணை அல்ல என்று மிரட்டல் தொனியில்கூறி பாதியிலேயே பேட்டியை முடித்துக்கொண்டார்.

- ஹிந்துஸ்தான் டைம்ஸ், 17-4-2014

Read more: http://viduthalai.in/e-paper/78974.html#ixzz2zTcALRZ3

தமிழ் ஓவியா said...


வைகோவின் பரிதாபம் ஈழமும் - பா.ஜ.க.வும்


மோடி பிரதமரானால் அவரைப் பயன்படுத்தி ஈழத்தை சாத்தியமாக்குவார் வைகோ என்கிறார்கள் நண்பர்கள். 2002 இல் அன்றைய துணைப் பிரதமர் அத்வானி அவர்கள் இலங் கையிடம் ராஜீவ் கொலையில் குற்றவாளியாகத் தேடப்படும் பிரபாகரனைக் கைது செய்து இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கேட்டார்.

ஆனையிரவுப் போர் என்பது புலிகளின் ஈழப் போரில் பொன் எழுத்துக்களால் பொறித்துக் கொண்டாட வேண்டிய ஒரு நிகழ்வு. வியக்கத்தக்க அளவு வெற்றிகரமாக முன் னேறிய புலிகள் யாழ்ப்பாணத்தை வசப்படுத்தி விடுகின்றனர். யாழ் நகரை வசப்படுத்திய அடுத்த கணம் அவர்கள் யாழ் கோட்டையை முற்றுகையிடுகின்றனர்.

யாழ் கோட்டையில் பதுங்கியிருந்த அல்லது தங்கியிருந்த ஏறத்தாழ 4000 இலங்கை ராணுவ வீரர்களுக்கும் புலிகளிடம் சரணடைவதைத் தவிர வேறு வழி இல்லை என்கிற சூழல். இது நடந்தது 2002 இல்.

இது மட்டும் நடந்திருக்குமானால் ஒருக்கால் ஈழப் போரின் முகம் சற்று மாறியிருக்கக் கூடும். 4000 இலங்கை வீரர்கள் புலிகளிடம் சரணடைந்திருந்தால் அந்த 4000 வீரர்களையும் மீட்டெடுக்க வேறு வழியின்றி இலங்கையும் சற்று இறங்கி வந்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கக் கூடும்.

4000 இலங்கை வீரர்களும் சிங்களவர்கள் என்பதால் இலங்கை அரசாங்கத்திற்கு ஒரு நெருக்கடி ஏற்பட்டிருக்கும். சிங்கள மக்கள் என்ன செய்தேனும் அவர்களை மீட்டெடுக்க அரசாங்கத்தை நெருக்கி இருப்பார்கள். சர்வதேச நெருக்கடியும் ஏற்பட்டிருக்கும் இலங்கைக்கு.

அன்றைய பிரதமர் வாஜ்பேயி அவர்கள் தலையிட்டு அந்த நெருக்கடியிலிருந்து 4000. வீரர்களையும் மீட்டெடுக்க இலங்கைக்கு உதவினார் என்ற ஒரு செய்தியும் உண்டு.

எனில் ஈழ விஷயத்தில் வெண்ணெய் திரண்டு வந்தபோது தாழியை உடைத்தவர்கள் ஆகிறார்கள் பிஜேபியினர்.

மத்தியப் பிரதேச பி.ஜே.பி. முதல்வர் சிவ ராஜ்சிங் சௌஹான் சாஞ்சியில் கட்டப் பட்டுள்ள புத்தப் பல்கலைக் கழகத்தை துவக்கி வைக்க ராஜபக்ஷேவைத்தான் அழைத்தார். கறுப்புக் கொடி காட்டப் போன வைகோ அவர்களை கைது செய்து திறந்த வெளியில் இரவு பகலாக வைத்திருந்தது பி.ஜே.பி. அரசு. மட்டுமல்ல, இவர்களில் யாரேனும் ரயில் மார்க்கமாக வந்து விடக் கூடும் என பயந்த அவர்கள் அன்றைய தினம் போபால் மற்றும் விதிஷா இடையே எந்த ரயிலும் நிற்க அனுமதிக்க வேண்டாம் என்று ரயில்வே அமைச்சகத்திற்கு விண்ணப்பம் வைக்கிறது. 20.9.2012 அன்று 11 ரயில்கள் அந்த ரயில் நிலையங்களில் நிற்கவில்லை.

விண்ணப்பித்தது பி.ஜே.பி. ஒத்துழைத்தது காங்கிரஸ் ராஜ பக்ஷேவைக் காப்பாற்றவெனில் இருவரும் எப்போதும் கரம் கோக்கவே செய்வார்கள். 19.09.2012 அன்று பத்திரி கையாளர்களை சந்தித்தபோது ராஜபக்ஷே 2000 இந்து கோயில்களை இடித்து நாசப்படுத்தியவர் என்று கூட கட்காரியிடம் தான் சொல்லிப் பார்த்ததாகவும் ஆனாலும் அவர் இளகவில்லை என்றும் வைகோ சொன்னார்.

இரா. எட்வின்
(நன்றி: காக்கை சிறகினிலே ஏப்ரல் 2014)

Read more: http://viduthalai.in/page-2/78968.html#ixzz2zTcNDRIq

தமிழ் ஓவியா said...

ஜூனியர் விகடன் பார்வையில் குஜராத்தில் முஸ்லீம்கள்


பாம்பே ஹோட்டல் என்ற பகுதியில் உள்ள அகதி முகாமில் வசிக்கும் முஸ்லிம்கள்..

அகமதாபாத்தின் ஒதுக்குப்புறமான பகுதிகளில் ஒன்று ஜுஹாபுரா. முஸ் லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதி என்பதால்... இது மினி பாகிஸ்தான் என்றே பலரும் சொல்கிறார்கள். பளபளக்கும் சாலைகள் கொண்ட குஜராத் மாநிலத்தில் இருக்கும் இந்தப் பகுதியின் சாலைகளில் பைக்கில் செல்வதே பெரிய சவாலாக இருந்தது. கழிவு நீர் வசதி, குடிநீர் வசதி என்று எதுவும் இல்லாமல் பரிதவிக்கும் பலரிடமும் பேசினோம். 2002-க்குப் பிறகு கலவரம் இல்லை என்பது உண்மைதான்.

சட்டம் ஒழுங்கை கண்காணித்தால் மட்டும் போதுமா? நாங்கள் இன்னும் பயத்துடன்தான் இருக்கிறோம். அந்த பயத்தை அரசு போக்கவில்லை. முஸ்லிம் என்றால் அரசாங்கத்தில் வேலை கொடுக்க மாட்டார்கள். என்னைப் போல என் சந்ததியினரும் பூண்டு விற்றுத் தான் பிழைப்பு நடத்த வேண்டும் போலிருக் கிறது என்று ஷேக் அப்துல் மஜித் என்ற பெரியவர் தன் விதியை நொந்து கொண்டு சொன்னார்.

நடுத்தர வயதில் இருந்த இமாரத்தே ஷ்ரியாவின் குரலில், அவர் வாழ்க்கை யில் அனுபவிக்கக் கூடாத எல்லாத் துயரங்களையும் அனுபவித்த வேதனை தெரிந்தது. 2002 கலவரத்தின்போது போலீஸும் கொலையாட்டம் ஆடியது.

திடுதிப் என்று எங்கள் வீட்டுக்குள் புகுந்த போலீஸ், என்னுடைய கணவரை மொட்டை மாடிக்கு அழைத்துக் கொண்டு போய் நெஞ்சில் துப்பாக்கியை வைத்துச் சுட்டது. என்னுடைய நான்கு குழந்தை களோடும் பாதுகாப்புத் தேடி இந்தப் பகு திக்கு ஓடி வந்து விட்டேன். என்னுடைய தம்பிதான் செக்யூரிட்டி வேலை பார்த்து எங்களைக் காப்பாற்றுகிறான் என்று கலங்குகிறார்!

பாம்பே ஹோட்டல்!

2002க்குப் பிறகு அங்கு கலவரம் இல்லை என்பது உண்மைதான். ஆனால், 2002 கலவரத்தில் பாதிக்கபபட்டு குடியி ருந்த வீட்டை விட்டு விரட்டப்பட்ட முஸ்லிம் மக்களில் 300 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 1500 பேர் இன்னமும் அக திகள் முகாம் போன்ற ஒரு இடத்தில்தான் தங்கி இருக்கிறார்கள். அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று கேட்டோம். பாம்பே ஹோட்டலில்! என்று பதில் வந்தது. அவ்வளவு காஸ்ட்லியான பகுதி யிலா அவர்கள் இருக்கிறார்கள்? என்று ஆச்சரியப்பட்டபடி அந்த இடத்துக்குக் கிளம்பினோம்.

தமிழ் ஓவியா said...

நரோல் ரோடு பகுதியில் சென்று பாம்பே ஹோட்டல் எங்க இருக்கு? என்று கேட்டால், அதோ தெரியுது பாருங்க குப்பை மலை. அதான்! என்று ஏரியாவாசிகள் வழி சொல்கிறார்கள். பாம்பே ஹோட்டல் என்று கவர்ச்சியாகப் பெயர் இருந்தாலும் அங்கே ஹோட்டல் எல்லாம் எதுவும் இல்லை. அதற்குப் பதிலாக குப்பைக்கூளங்களால் ஆன மலைகள்தான் இருக்கின்றன. ராட்சத கிரேன்கள் அந்தக் குப்பை மலைகளை ஒன்றைவிட ஒன்று உயரமாகவோ, பள்ள மாகவோ ஆகிவிடாத படி சமமாக்கும் வேலையை ஒயாமல் செய்து கொண்டி ருந்தன. ஒரு பக்கம் குப்பை மலையை எரிக்கும் காரியத்தையும் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.

இந்தக் குப்பை மேட்டுக்கு நடுவே கொத்துக் கொத்தாக பல முஸ்லிம் குடும்பங்கள் வாழ்க்கை நடத்துவதை அறிந்து, குப்பைமேடுகள் வழியாக உள்ளே சென்றோம். குடலைப் புரட்டிக் கொண்டு வாந்தி வருகிறது. ஆனால், அங்கே இருப்பவர்களுக்கு அதுதான் வீடு. அவர்களின் வீட்டுக் குழந்தைகள் அந்தக் குப்பை மேட்டில்தான் சிரித்து மகிழ்ந்து விளையாடிக் கொண்டிருந் தார்கள். தன் குழந்தைக்கு தலைவாரிக் கொண்டிருந்த ரேஷ்மா பானுவிடம், ஏன் இன்னமும் இங்கேயே இருக்கீங்க.

இப்ப தான் கலவரம் எதுவும் நடப்பதில்லையே. நீங்க முன்பு வசித்த பகுதிக்கே சென்று விடுவதுதானே? என்று ஆதங்கத்தோடு கேட்டோம். நம்மை மேலும் கீழும் பார்த்த அவர், என்னுடைய சொந்தங்கள் பலரையும் ஓட ஓட விரட்டிக் கொன்ற எல்லோரும் அந்தப் பகுதியில்தான் இன்னமும் இருக்கிறார்கள்.

அதனால், எங்களால் அங்கே செல்ல முடியாது! என்றார் ஒருவித பயத்துடன். கணவனை இழந்த பெண்கள், ஊனமுற்றவர்கள், அப்பா, அம்மாவை இழந்து அனாதை யான குழந்தைகள் இங்கு வாழ்ந்து வருகின்றனர். தினமும் கிடைக்கும் கூலி வேலையை வைத்து இவர்கள் காலம் தள்ளுகிறார்கள்.

இந்த இடம் முஸ்லிம் பெரியவர் ஒருவருக்குச் சொந்தமானது. அவர்தான் இங்கு சிறு வீடுகள் கட்டி வாழ்வதற்கு அனுமதி தந்தார். எங்களுக்கு வீடு கட்டித் தராவிட்டாலும் பக்கத்தில் குப்பை கொட்டுவதையாவது நிறுத்துங்கள் என்று சொல்லிப் பார்த்தோம். ஆனால், நாளுக்கு நாள் இங்குதான் குப்பையைக் கொண்டுவந்து கொட்டுகிறார்கள்.

எங் களை இந்த இடத்தை விட்டும் விரட்டும் தந்திரமாகவே இதைப் பார்க்கிறோம் என்று காத்தூன் பீவி சொல்கிறார். அரசு அதிகாரிகளைக் கேட்டால், இதுதான் ஒதுக்குப்புறமான இடம். அங்குதான் குப்பையைக் கொட்ட முடியும் என் கிறார்கள். இந்த மக்களை யாரும் ஊருக்குள் வரக் கூடாது என்று சொல்ல வில்லை. அவர்களாகத்தான் அங்கு தங்கி இருக்கிறார்கள் என்றும் அதிகாரிகள் சொல்கிறார்கள்.

இன ஒதுக்கல் இருக்கிறது!

மோடி அஞ்சுகிற நபர்களில் முதன்மையானவர் என்று பெயர் எடுத்தவர் ஷப்னம் ஆஸ்மி. வீதி நாடகம் நடத்தியபோது கொலை செய்யப்பட்ட சஃப்தர் ஆஸ்மியின் சகோதரியான இவர், 2002-ஆம் ஆண்டு நடந்த கல வரத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கும் குழந் தைகளுக்கும் பல் வேறு உதவிகளைச் செய்து வருகிறார். அவரிடம் பேசினோம்.

முஸ்லிம்களுக்கு எதிரான கலவரம் கட்டவிழ்த்து விடப்பட்ட நாட்களுக்குப் பிறகு குஜராத்தில் பல இடங்களில், இந்து ராஜ்ஜியத்துக்கு வாருங்கள் என்ற பெயர்ப் பலகைகள் வைக்கப்பட்டன. இப்போது இந்த பலகைகள் பலவும் காணாமல் போய் விட்டன. பெயர்ப் பலகைகள் இலலையே தவிர, இந்தப் பலகை யாரால் எந்த அர்த்தத்தில் வைக்கப்பட்டதோ அந்த அர்த்தப் படிதான் குஜராத் இப்போது இருக்கிறது.

இன ஒதுக்கல் அமலில்இருக்கிறதோ என்று சந்தேகப்படும்படிதான் முஸ்லிம் கள் இங்கே தனித்தீவுகளாக தனிப் பகுதிகளில் வசிக்கிறார்கள். 2002-ஆம் ஆண்டு நடை பெற்ற கலவரத்தில் வீடு, வாசல், சொந்தங்கள் என்று அனைத் தையும் இழந்து ஓடி உயிர் பிழைத்த முஸ்லிம்கள் வாழும், நரோல் ரோடு பகுதி ஒன்று போதும்... இந்த ஆட்சியின் அவலத்தைக் காட்ட சபிக்கப்பட்ட கால்நடைகளைப் போல முஸ்லிம்கள் அங்கே வாழ்வதைப் பார்ப்பீர்கள்.

அதுவும் மழைக் காலங்களில் அந்தப் பகுதியின் நிலைமையை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது. தண்ணீரில் வீடுகள் மூழ்கிவிடும். மழை நீர் குப்பைமேட்டைக் கரைத்து எடுத்துவந்து, வீட்டில் மார்பு உயரத்துக்கு சேர்த்துவிடும்.

கணவர் களை இழந்த அந்த விதவைகளின் காலனியில், குழந்தை குட்டிகளும் தள்ளாத வயதினரும் காலம் தள்ளு வதைப் பார்த்தால், யாராக இருந்தாலும் மனம் பதைபதைக்கும். உயிர் வாழ்வதே இத்தனை சவாலான விஷம் என்றால், அவர்களுக்கு எங்கிருந்து பள்ளிக்கூடம், சாலை வசதி... எல்லாம்? என்று கேட்கிறார்.

ஜூனியர் விகடன் 20.4.2014

Read more: http://viduthalai.in/page-2/78971.html#ixzz2zTcWeJjs

தமிழ் ஓவியா said...


ஏப்ரல் 23 உலகப் புத்தக நாள் உரத்த சிந்தனை: புத்தகம் வாசிக்கப் பழகிடுவோம்! புத்தாக்க மனநிலையைப் பெற்றிடுவோம்!


- முனைவர் த.செயக்குமார்

புத்தகம் என்பது புதிய மனநிலையை அளிப்பது எனப் பொருள்படும். புத்தாக்கம் + அகம் = புத்தகம். இதுவே இன்றைய இருபால் இளைஞர்களிடமும் புத்தகம் வாசிக்கும் பழக்கம் வெகுவாகக் குறைந்து வருகிறது. அதிலும் குறிப்பாக பள்ளி மாணவப் பருவத்தினரும், கல்லூரி இளைய தலைமுறையினரும் பாடப் புத்தகங்களைத் தவிர, வேறு எந்தப் புத்தகத்தையும் படிப்பதில்லை என்பது மிகவும் வெட்கக் கேடான வேதனைக்குரிய செயலாகும்.

இவ்வுலகில் உயிர்களுக்குப் பிறகு விலைமதிக்க முடியாத செல்வம் என்பது புத்தகங்களே! ஒருவரது வாழ்வையே புரட்டிப்போடும் ஆற்றல் புத்தகங்களுக்கு உண்டு. நூல்களானது எடைக்குப் போடமுடியாத எழுத்துத் தங்கம். மேலும், பாதுகாத்து பத்திரப்படுத்த வேண்டிய படைக்கலன்கள் என்றே கூறலாம். நூல்கள் என்பது அறிவின் மூலப்படி, அதுவே நம்மை உயர வைக்கும் வாழ்க்கைப்படி என்றால் அது மிகையாகாது.

அறிவுலக ஆசான் தந்தை பெரியார் அடிக்கடி கூறுவார். சிந்தனை அறிவை வளர்க்கும், அறிவுதான் மனித வாழ்வை உயர்த்தும். இந்நாட்டில் பட்டதாரி மாணவர்களின் படிப்பு என்பது வெறும் வயிறு வளர்ப்பதற்காகவே பயன்படுகிறதே அல்லாமல் அறிவு பெறுவதற்காக இருக்க வேண்டும். மேலும் படிக்கும் மாணவர்கள் செக்குமாடாக இருக்காமல் பந்தயக் குதிரையாக இருக்க வேண்டும் என்பார்.

உலகில் தனிமனிதன் ஒருவன் அதிக புத்தகங்களை வாசிக்கும் பழக்கமுடைய மக்களைக் கொண்ட நாடு அயர்லாந்து ஆகும். இவ்வுலகில் தீமை செய்யாத ஒரு நல்ல நண்பன் புத்தகங்களே...! புத்தகங்கள் இல்லாத எந்த ஒரு வீடும் ஜன்னல் இல்லாத இருண்ட வீட்டுக்கு ஒப்பானதாகும். எனவே இல்லந்தோறும் நூலகங்களை உருவாக்குங்கள்.


தமிழ் ஓவியா said...

இன்றைய புத்தகங்களின் விலையைக் கண்டு வியக்காதீர்கள், ஒதுக்காதீர்கள். புத்தகங்களின் விலை என்பது, அதில் அச்சிடப்பட்டுள்ள தாள்களுக்கான விலையே தவிர, அதில் உள்ள படிப்பறிவின் விலை அல்ல என்பதை ஒவ்வொருவரும் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். அறிவின் விலை அளவிடற் கரியது, மதிக்க முடியாதவை.

ஒரு நாட்டின் வருங்கால சந்ததியினர் தேடித்தேடி அலைய வேண்டிய அற்புதப் புதையல்கள் புத்தகங்களே!. புத்தகங்களின் அருமை பெருமை பற்றி உலகின் பல பெரிய அறிஞர் பெருமக்கள் கூறியவற்றை இந்நாளில் சிந்தனைக்கு நினைவு கூர்வோம். உலகில் அதிகமாக சுயசிந்தனைக் கருத்துகளை எழுதிய பெருமைக்குரியவர், அதுவும் அவர் கூறினார், இவர் கூறினார் என்று யாரையும் மேற்கோள் காட்டாமல், இன மேம்பாட்டிற்காக எழுதியவர்.

இன்றளவும் காலத்தை விஞ்சி நிற்கும் கருத்துக் கதிரவனாம் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களே! தந்தை பெரியார் அவர்களின் எழுத்துகள் மட்டும் 18,75,000 - வரிகளுக்கும் மேலாக 75,000 பக்கங்களுக்கும் அதிகமாகவும், 100-களஞ்சியத் தொகுப்புகள் உள்ளிட்ட 238-க்கும் மேற்பட்ட நூல்களாகும்.

ஒரு முறை தந்தை பெரியார் அவர்களிடம் பத்திரிகை நிருபர் ஒருவர் சமுதாய விடுதலைக்கு தீர்வு ஒன்று கூறுங்களேன் அய்யா என்று கேட்டதற்கு, அய்யா சற்றும் யோசிக்காமல் பட்டவர்த் தனமாக பளிச்சென்று கூறிய பதில் என்ன தெரியுமா? அடுப்பூதும் பெண்கள் கையில் உள்ள கரண்டியைப் பிடுங்கிவிட்டு புத்தகம் கொடுத்தாலே போதும், விரைவில் சமுதாயம் விடுதலை அடைந்துவிடும் என்றாரே பார்க்கலாம்! இங்கே ஒன்றை சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

பெண் விடுதலையும - சமுதாய விடுத லையும் ஒன்றுக்கொன்று தொடர்புடையனவாகும். அதேபோன்று தந்தை பெரியார் அவர்கள் தமக்கான கொள்கை வாரிசாக குறிப்பிடுகையில், தாம் விட்டுச்செல்லும் சமத்துவப்பணிகள் தொடர்வதற்கு எனக்குப் பின் எனது நூல்கள்தான் எனது கொள்கை வாரிசு! எனப்பதிவு செய்துள்ளார். இதன் மூலம் புத்தகத்தின் அருமை அனைவருக்கும் புலப்படும் என்றே நம்புகிறோம்.

அதேபோன்று, தந்தை பெரியார் அவர்களின் தலை மாணாக்கனாம் பேரறிஞர் அண்ணா அவர்கள் ஒரு முறை மும்பைக்கு செல்லவேண்டி இருந்தபோது, 3 மணிநேர விமானப் பயணத்தில் செல்வதைத் தவிர்த்து, மகிழுந்தில் (கார்) 3 நாட்கள் பயணம் செய்து சென்றடைந்தார். இதுகுறித்து அப்போது அண்ணா அவர்களிடம் கேட்டபோது, 10-புத்தகங்கள் படிக்க வேண்டி இருப்பதால் இப்பயணம் இவ்வாறு மேற்கொண்டதாக அறிஞர் அண்ணா அவர்கள் பதிலளித்தார்.

அதே போன்று அண்ணா அவர்கள் புற்று நோயால் பாதிக்கப்பட்டு மரணத்தின் விளிம்பில் அமெரிக்கா கொண்டு சென்று, மருத்துவமனையில் ஆபத்தான அறுவை சிகிச்சை மேற்கொள்ள நேரம் குறிக்கப் பட்டபோது, மருத்துவரிடம் அறுவை சிகிச்சையை அரைமணி நேரம் தள்ளிவைத்துக்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்தாரம்.

தமிழ் ஓவியா said...

ஏன் தெரியுமா? அந்த ஆபத்தான அறுவை சிகிச்சையில் பலனளிக்காமல் மரணத்திற்கு சென்று விடுவோமோ என்ற நிலையிலும், தான் கடைசியாக வாசித்துக்கொண்டிருந்த புத்த கத்தை முடித்திட இன்னும் அரைமணி நேரம் ஆகும் என்பதால் ஒத்தி வைக்கக் கேட்டுக்கொண்டாராம் இதிலிருந்து நூல் வாசிப்பின் முக்கியத்துவத்தை அறிஞர்களின் வாழ்விலிருந்தும், அவர்களது அனுபவத்திலிருந்தும் நாம் அறியமுடிகிறது.

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியாரின் தத்துவ வாரிசாக விளங்கிக் கொண்டி ருக்கக்கூடிய இன்றைய தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களும் புத்தகக்காதல் கொண்டு வெகுவாக நூல் வாசிப்பவர் ஆவார். நூல்களைப் பற்றி அவர்கள் குறிப்பிடும்போது, நூல்களைப் படித்து கூர்மையாக்கப்படாத அறிவின் வளர்ச்சியை, உரமிடப்படாது குன்றிய பயிருக்கு ஒப்பாகக்கூறுவார்.

சிந்தனையைக் கூர்மைப்படுத்தியும், சாணை தீட்டிடவும் மூளைக்கு உணவு தேவை. அத்தகையை உணவு அறிவுள்ள நூல்களே! என்பார். நூலைப்படிப்பதன் மூலம் அறிவு வளரும், அறிவைப் பெருக்கினால் ஆயுள் வளரும் என எல்லோருக்கும் வாழ்வியல் சிந்தனையால் வழிகாட்டுகிறார் நம் தலைவர் கி.வீரமணி

ஒருமுறை நம் தேசத் தந்தை காந்தியாரிடம் எளிமையான தங்களுக்கு 1-கோடி ரூபாய் பணம் கிடைத்தால் என்ன செய் வீர்கள்? என்று கேட்டதற்கு, ஒரு நூலகம் கட்டுவேன் என்றாராம். அதேபோல சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு அவர்களிடம், ஒரு தீவிலுள்ள தனிமைச் சிறையில் தாங்கள் தள்ளப்பட்டால் என்ன செய்வீர்கள்? என்று வினவியபோது சற்றும் தயங்காமல் புத்தகங்களுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்துவிட்டு வருவேன் என்றாரே பார்க்கலாம்!.

இந்தியாவின் சட்டமாமேதை பாபாசாகேப் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் நாள்தோறும் 10 மணி நேரத்திற்கு மேலாக புத்தகங்கள் படிக்கும் பழக்கமுள்ளவர். அவர் ஒருமுறை அயல்நாட்டுப் பயணமாக லண்டன் சென்றபோது எங்கே தங்க விரும்புகிறீர்கள் என்று கேட்டபோது, எந்த விடுதி நூலகத்திற்கு அருகில் உள்ளதோ அங்கே தங்குகிறேன் என்றாராம்.

தமிழ் ஓவியா said...


தென் ஆப்ரிக்காவின் கருப்பர் இன விடுதலைக்காக போரடி 36 ஆண்டு காலம் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டு இன விடுதலைப் போரில் வெற்றிபெற்று அந்நாட்டின் அதிபராகி, சமீபத்தில் மறைவுற்ற நெல்சன் மண்டேலா அவர்கள் சிறையில் தனக்கு வேறு எந்த சுதந்திரமும் வேண்டாம். புத்தகம் வாசிக்கமட்டும் அனுமதிக்க வேண்டும் என வேண்டினாராம்.

ரஷ்யப் புரட்சி யாளர் லெனின் அவர்களிடம் தாங்கள் பிறந்த நாளுக்கு என்ன பரிசு வேண்டும் என அந்நாடு கேட்டப்போது, தனக்கு புத்தகம் மட்டும்தான் வேண்டும் என்று கூறிய மாத்திரத்தில் மக்கள் பல லட்சம் புத்தகங்களை பரிசாகக் குவித்தனர் என்பது வரலாறு.

மாவீரன் பகத்சிங் தீவிர புத்தகப் பிரியர். புத்தகங்கள் இருந்தால் போதும் சிறைக்கம்பிகளும், கொட்டடிகளும் ஒருவரை அடைத்து வைக்க முடியாது என சூளுரைத்தார். அவர் தன்னை தூக்கிலிடுவதற்கு கடைசி ஒரு நிமிடம் முன்புவரையில் சிறைச் சாலையில் புத்தகம் வாசித்துக்கொண்டே இருந்தார் என்பது எவ்வளவு உணர்ச்சியூட்டும் செய்தி. மார்ட்டின் லூதர்கிங் அவர்களிடம் பயங்கரமான போராட்ட ஆயுதம் எவை? என்று கேட்டதற்கு புத்தகங்கள் தான் எனக்கூறினாராம்.

ஹாலிவுட் கலைவாணரான நகைச்சுவை ஜாம்பவான் சார்லி சாப்ளின் தான் நடிப்பதற்காக ஒப்பந்தமாகும் ஒவ்வொரு படத்திற்கும் முன்பணம் வாங்கும்போதும் முதலில் 100 டாலருக்கு புத்தகங்கள்தான் வாங்குவாராம். அதேபோல, ஒரு குழந்தைக்கு நீங்கள் வாங்கித்தரும் மிகச்சிறந்த பரிசு எது? என்று வின்சென்ட் சர்ச்சிலிடம் கேட்டபோது, புத்தகம் தான் என்று பதிலளித்தார்.

பிரபல அறிவியல் விஞ்ஞானி ஆல்பர்ட் அயன்ஸ்டீனிடம் மனிதனின் மிகபெரிய கண்டுபிடிப்பு எது எனக் கேட்டபோது சற்றும் யோசிக்காமல், புத்தகம் தான் என பதிலளித்தாராம். பொதுஉடைமைச் சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் ஒரு புத்தகத்தைத் திறக்கும்போது, உலகை நோக்கி ஒரு ஜன்னலைத் திறப்பதாகக் குறிப்பிடுவாராம். பெட்ரண்ட்ரசல் அவர்கள் தமது கல்லறையில் மறக்காமல் எழுதி வைத்திருக்குமாறு கூறிய வாசகம் என்னவென்றால் இங்கே ஒரு புத்தகப்புழு உறங்குகிறது! என்று.

ஒரு முறை பேரறிஞர் இங்கர்சாலை குடும்பத்தோடு வெளியேறுமாறு தூக்கியெறியப்பட்டபோது அவர் சென்ற இடம் எது தெரியுமா? - நூலகம் தான்!. தனது பணியில் கிடைக்கும் முழு ஊதியத்திற்கும் புத்தகமாக வாங்கிக் குவித்த பெருமைக்குரியவர் யார் தெரியுமா? அவர்தான் பெயரால் இன்றும் சென்னை அண்ணாசாலையிலுள்ள மாவட்ட மய்ய நூலகத்திற்கு பெருமை சேர்த்துக்கொண்டிருக்கும் தேவநேயப் பாவாணர் ஆவார்.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்அவர்கள் இங்கிலாந்தில் தங்கிப் படித்துக்கொண்டிருந்த போது இந்தியாவிலிருந்து அவரது உதவியாளர் எமலியிடம் தனக்குப் பிடித்த புத்தகங்களை வாங்கி அனுப்பிடுமாறு கூறுவாராம். இன்றும் உலகப்புரட்சியாளர்கள் என்று அறியப்படும். காரல் மார்க்ஸ், சேகுவேரா, பிரபாகரன் - பிரடெரிக் ஏங்கல்ல், பிர்வின் இப்படி எத்தனையோ புரட்சியாளர் களும், அறிஞர்களும் புத்தகங்களை நிரம்பப் படித்து அதன் மூலம் தங்கள் பெயரை வரலாற்றில் பதிவு செய்துள்ளனர் அப்போ... நாமும்!

ஒவ்வொருவரும் நாளொன்றுக்கு குறைந்தது 1 மணி நேரமாவது அறிவார்ந்த நல்ல புத்தகங்களை தவறாது வாசிப்போம் எனும் நற்பழக்கத்தை இன்று முதல் கடைப்பிடிப்போம். உறுதிமொழி எடுப்போம் இவ்வாண்டு புத்தக நாளிலிருந்து பிறகு அதில் படித்தவற்றை அசைபோட்டு, அதிலுள்ள நல்ல செய்தி களை பிறருக்கும் எடுத்துச் சொல்வதையும் கடமையாகக் கொள்வோம்.

புத்தகம் வாசிக்கப் பழகிடுவோம்!

புத்தாக்க மனநிலையைப் பெற்றிடுவோம்!!

Read more: http://viduthalai.in/page-2/78970.html#ixzz2zTcj8how

தமிழ் ஓவியா said...


ஈழத் தமிழர்களுக்காக உண்மையிலேயே குரல் கொடுக்கக்கூடிய திருமா.வை வெற்றி பெறச் செய்வீர்! குமராட்சியில் தமிழர் தலைவர் வேண்டுகோள்


தமிழர் தலைவர் உரை கேட்க திரண்டிருந்தோர் (குமராட்சி, 18.4.2014)

குமராட்சி, ஏப். 20- ஈழத் தமிழர்களுக்காக உண்மையான உணர்ச்சியோடு குரல் கொடுக்கக்கூடிய எழுச்சித் தமிழர் திருமாவளவனை ஆதரித்து வெற்றி பெறச் செய்வீர் என்று கேட்டுக் கொண்டார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்.

குமராட்சியில் 18.4.2014 இரவு நடைபெற்ற தேர்தல் பரப்புரைப் பொதுக் கூட்டத்தில் உரையாற்றுகையில் அவர் கூறியதாவது:-

தமிழ்நாட்டின் எல்லா பகுதிகளுக்கும் சென்றுவிட்டு, இப்போது நம்முடைய பகுதிக்கு (சிதம்பரத்திற்கு) வந்து இருக்கிறோம் என்ற பெருமையோடு நான் இருக்கிறேன். எவ்வளவுதான் விரிந்த பரப்பை கொண்டிருந்தாலும், ஒரு காலத்தில் என்னுடைய மாவட்டம் கடலூர் மாவட்டத்தின் ஒரு பகுதியைச் சார்ந்தது. இதிலே, சிதம்பரத்திலே எழுச்சி தமிழர் தொல்.திருமாவளவன் நின்று வெற்றிகரமாக வென்று காட்ட இருக்கிற நேரத்தில், அவரும் நம்முடைய மாவட்டத்தை சார்ந்தவர்தான். இந்த மண்ணுக்கு உரியவர் தான். எனவே நாங்கள் பெருமைப்படுகிறோம்.

முதல் வெற்றி!

நல்ல ஒருங்கிணைப்பு இந்தக் கூட்டணியில்தான் (திமுக) இருக்கிறது. இங்கே தான் ஒடுக்கப்பட்ட, தாழ்த் தப்பட்ட, சிறுபான்மையினர் என அனைவரும் ஒன்றாக இருக்கக் கூடிய கூட்டணி இதுதான். டாக்டர் கலைஞர் தலைமையில் இருக்கக்கூடிய ஜனநாயக முற்போக்குக் கூட்டணி. எனவே, முதல் வெற்றியே, நம்முடைய சகோத ரர்கள் தனியாக இருந்தவர்கள் எல்லாம் ஒன்றாக இருக் கிறார்கள். ஒரே அணியில் இருக்கிறார்கள். இதுதான் முதல் வெற்றி.

அந்த கூட்டணியில், இவர் சின்னத்தை அவர் பயன் படுத்தக்கூடாது. அவர் சின்னத்தை இவர் பயன்படுத்தக் கூடாது என்று மோடியின் உருவத்தை அவர் பயன்படுத்தக் கூடாது என்றெல்லாம் குழப்பிக் கொண்டு இருக்கிறார்கள்.

பெரியார் பாசறையில்... திருமா.

விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் தொல்.திருமா வளவன் திடீரென்று கட்சி மாறியவர் அல்ல. அவர் நீண்ட காலமாக ஒரே கொள்கையுடன் புடம் போட்ட தங்கமாக இருக்கிறார். புடம் போட்ட இடம் பெரியார் திடல். பெரியார் பாசறையிலே. நாங்கள் எல்லாம் மகிழ்ச்சிய டைகிறோம். இந்தக் கூட்டணியின் வெற்றி, தமிழ்நாட் டிலே சுற்றி சுற்றி வந்து சொல்கிறோம். முடிவு செய்யப் பட்ட வெற்றி கூட்டணி ஆகும். நம்பிக்கையோடு சொல் கிறோம்.

இளைஞர்கள் நல்ல உற்சாகமாக இருக்கிறீர்கள். நீங்கள் நன்றாக தெரிந்து கொள்ளவேண்டும். மோடி தோல்வி பயத்தில் நடிகர்களை தேடித் தேடி வலை வீசுகிறார். வேறொன்றுமில்லை. அலை ஒன்றும் வீசவில்லை. இந்த நாட்டின் பிரதம வேட்பாளர் போய் நடிகரை தேடிக் கொண்டு இருக்கிறார். வெட்கக்கேடானது. இதிலிருந்து தெரியும் மோடியின் அலை வீசுகிறதா? இல்லை என்பது.

பி.ஜே.பி. தேர்தல் அறிக்கையில் உண்டா?


தமிழ் ஓவியா said...

இங்கே (தமிழ்நாட்டிற்கு) மோடி வந்தால், மீனவர் பிரச்சினைப் பற்றி பேசுகிறார். ஈழம் பற்றி பேசுகிறார். குமரியில் கூட பேசியிருக்கிறார். இதோ என் கையில், இருப்பது பாரதீய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கை. இந்த அறிக்கையில் ஈழம் பற்றியோ, மீனவர் பிரச்சினை பற்றியோ ஒரு வரியாவது உண்டா? பேசும்பொழுது மட்டும் ஈழம், மீனவர் பிரச்சினை என்று பேசுகிறார். ஒரு நாட்டின் அடிப்படைத் தேவை என்பது உண்ண உணவு, உடை, இருப்பிடம் மூன்றுதானே. இதுபற்றி அவர்களின் அறிக்கையில் உண்டா?

தமிழ்நாட்டில் இப்பொழுது குடிநீர் பஞ்சம், மின்சாரம் பற்றாக்குறை இதுபற்றி எடுத்து கூறி இருக்கிறார்களா?

பா.ஜ.க.வின் 3 திட்டம்

அவர்களுடைய முன்னுரிமை எங்கே இருக்கிறது? இதோ 2014 பா.ஜ.க. தேர்தல் அறிக்கை; அதிலே, முதலாவ தாக, பகவான் இராமனுக்குக் கோவில் கட்ட வேண்டும். அதற்கு எல்லா முயற்சிகளும் மேற்கொள்ளப்பட இருக் கிறது என்கிறார்களே! என்ன இராமனுக்கு அயோத்தியில் கோயில் இல்லாமலா? இருக்கிறது. 7000 கோயில்கள் இருக்கின்றன பெட்டிக்கடை போன்று. இராமர் என்ன வெயிலிலா இருக்கிறார்? பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் இராமர் கோவில் கட்ட வேண்டும். இதுதான் முதல் திட்டம். இரண்டாவது திட்டம் காஷ்மீர் 370 (திட் டத்தை) சட்டத்தை நீக்கும் கொள்கையை மீண்டும் கட்சி உறுதிப்படுத்துகிறது. அதற்கடுத்தாற்போல, மீண்டும் சிறுபான்மை மக்களை ஆத்திரப்படுத்தி சண்டை போடு வதற்குப் பொது சிவில் சட்டம் தேவை. இந்த மூன்றும் கலவரத்தை உண்டாக்கக் கூடியவையே!

ஒளிமிகு இந்தியா உருவாக...

ஏன்? நம்முடைய எழுச்சித் தமிழர் தொல்.திருமா வளவனுக்கு மோதிரம் சின்னத்தில் வாக்களித்து வெற்றிய டையச் செய்ய வேண்டும்? அதன் மூலமாக கலைஞரின் கரத்தை வலுப்படுத்தி, அதன் மூலமாக ஒரு ஒளிமிகுந்த இந் தியாவை உருவாக்கக்கூடிய ஆட்சியை நிறுவ வேண்டும். இல்லையென்றால், மற்றவர்கள் வெற்றி பெற்றால் என்ன ஆகும்? ஒரு இருண்ட காலம். 1992லே பாபர் மசூதி இடித்து, அந்த இடத்திலே இராமர் கோவில் கட்டப் போகிறோம் என்று சொல்லி, இரத்த ஆறு ஓடியது இந்தியா முழுவதும்.

தமிழ்நாடு ஒன்றுதான் அமைதியாக இருந்தது. காரணம் பெரியார் பிறந்த மண். பக்குவப்படுத்தி வைத்திருந்தார் பெரியார் அவர்கள். அண்ணா ஆண்ட மண் என்று சொன்னார்கள்.

தி.க.வின் கவலை

பதினெட்டு வயது ஓட்டுப் போட போகும் இளைஞர் களே! உங்களை வரவேற்கிறோம். அதே நேரத்தில், 22 ஆண்டுகளுக்கு முன் என்ன நடந்தது? இரத்த ஆறு ஓடியது. என்னென்ன கொடுமைகள் நடந்தன! அதுவெல்லாம் திரும்பக் கூடாது. இளைஞர்களே! இதை நன்றாக நினை விலே வைத்துக் கொள்ள வேண்டும். நீங்கள் பிறப்பதற்கு முன்னாலே இப்படிப்பட்ட ஒரு கொடுமை நடந்தது. அந்தக் கொடுமையை மீண்டும் செய்வதற்காகத்தான் இந்த திட்டங்கள். இந்த இராமர் கோவில் திட்டம் போன்று. எனவே, நாடு இருண்ட பாதைக்கு போகக்கூடாது. நாடு கலவர பூமியாக மீண்டும் ஆகக்கூடாது. நாடு ரகளை பூமியாக ஆகக் கூடாது. அமைதிப் பூங்காவாக இருக்கிற தமிழ்நாடு எப்படி பாராட்டப்பட்டதோ. அதே போன்ற நிலையை உருவாக்க வேண்டும் என்பதற்காகத்தான் நாங்கள் (திராவிடர் கழகம்) முயற்சி எடுத்துக் கொண்டு இருக்கிறோம்.

தமிழ் ஓவியா said...

பெரியாரின் இரண்டு சொல்

சிறுபான்மை மக்கள் அவர்களின் உரிமையைப் பெற வேண்டும். தந்தை பெரியார் சுயமரியாதை இயக்கத்தை தொடங்கிய நேரத்திலே, சொன்ன அற்புதமான இரண்டு சொற்கள் அனைவருக்கும் அனைத்தும் எல்லா மக்களும் எல்லா உரிமைகளையும் பெற வேண்டும். அவர்கள் சிறுபான்மையினராக இருந்தாலும், பெரும் பான்மையினராக இருந்தாலும், குடிமக்கள் என்று சொன்னால், அத்தனை உரிமைகளும் அவர்களுக்கும், இவர்களுக்கும் உண்டு என்ற பேதமில்லா பெருவாழ்வு வரவேண்டும். அதற்காகத்தான் இந்த ஜனநாயக முற் போக்கு கூட்டணி வந்திருக்கிறது. திமுகவின் தேர்தல் அறிக் கையிலே, அனைவருக்கும் அனைத்தும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு என அனைத்தும் இடம் பெற்றுள்ளன. அம்மையாரின் தேர்தல் அறிக்கையில் எதுவும் இடம் பெறவில்லையே!

டெசோ-வால்

ஈழத் தமிழர்களுக்கு பொது வாக்கெடுப்பு என்பது. இது டாக்டர் கலைஞர் தலைமையில் அமைந்த டெசோவிலே, எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன், எங்களைப் போன்றோர்கள் எல்லோருமே பங்கேற்று, ஒன்றரை ஆண்டுக்கு முன் போட்ட மாநாட்டை தடுத்தவர்தான் இந்த அம்மையார். நாங்கள் நீதிமன்றம் சென்று அதற்கு உரிமை கண்டோம். ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமைக்காக எடுத்த முயற்சியின் காரணமாகத்தான் இன்றைக்கு அமெரிக்கா, இலங்கையை, ராஜபக்சேவை போர்க் குற்ற வாளியாக, நிறுத்தக்கூடிய வாய்ப்பை பெற்று இருக்கிறது.

அப்போது அம்மையாருக்கு ஈழம் என்ற வார்த் தையே கசந்தது. அன்று இலங்கை அரசை காப்பாற்றியவர் தான் ஜெயலலிதா. இப்போது அம்மையார். மோடி தலைமையிலான பிஜேபியுடன் இரகசிய ஒப்பந்தம் போட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.

மக்களாகிய நீங்கள் பாஜகவிற்கு அளிக்கின்ற ஓட்டும் சரி, அதிமுகவுக்கு அளிக்கின்ற ஓட்டும் சரி ஒரே கம் பெனியில் நடிக்கிற நடிகர்களுக்கு கொடுக்கின்ற சம்பளம் மாதிரி. நாடகத்தில் ஒருவர் வில்லன் வேடம் போடுவார். ஒருவர் கதாநாயகன் வேடம் போடுவார். ஆனால், எல்லோரும் ஒன்றுதான். அதுமாதிரி அவர்களுக்குள் இகரசிய உடன்பாடு உள்ளது.

அமைதியான நாடாக விளங்க...

சென்ற முறை நீங்கள், எழுச்சி தமிழரை தேர்ந்தெடுத்து அனுப்பினீர்கள். நான் டில்லியிலிருந்து கேட்டேன். ஈழத் தமிழர் பிரச்சினையிலே, அந்த அமைச்சர்கள் முன்பு அனல் தெறிக்க பேசியவர். எனவே, அவர் என்றைக்கும் உங்க ளோடு இருக்கக்கூடியவர். அப்படிப்பட்டவர்களின் சின்னம் மோதிரம். நீங்கள் தவறாமல் 24ஆம் தேதி வாக்குச் சாவடிக்கு சென்று வாக்களியுங்கள். அதன் மூலம் ஒற்றுமையான அமைதியான நாட்டை பெறலாம் நீங்கள் அதற்குச் சிந்தித்து முடிவெடுங்கள் என்று உரையை நிறைவு செய்தார் தமிழர் தலைவர்.

Read more: http://viduthalai.in/page-4/78998.html#ixzz2zTdYPLBm

தமிழ் ஓவியா said...


தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் பிறந்த மண்ணில் ஜாதி, மத சண்டைக்கு இடம் இல்லை, நரேந்திரமோடி உணர வேண்டும் மாநிலங்களவை உறுப்பினர் கவிஞர் கனிமொழி பேச்சு


தருமபுரி, ஏப்.20- தரும புரி தொகுதி ஜனநாயக முற் போக்கு கூட்டணி வேட் பாளர் இரா.தாமரைச்செல் வனை (திமுக) ஆதரித்து மாநிலங்களவை உறுப் பினர் கவிஞர் கனிமொழி பாப்பி ரெட்டிப்பட்டி, பெரிய நத்தம், பொம்மிடி, கடத்தூர், தருமபுரி ஆகிய இடங்களில் தேர்தல் பிரச்சாரத்தை மேற் கொண்டு பேசும்போது:-

தலைவர் கலைஞர் அவர்கள் தமது வாழ்நாள் முழுவதையும் தாழ்த்தப் பட்ட, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்காக தன்னை போ ராட்டத்தோடு இணைத்துக் கொண்டு போராடி மக்க ளுக்கு தேவையான திட்டங் களை கொண்டு வந்தார். கொண்டுவரக் காரணமாக இருந்தார்.

2000-ஆம் ஆண்டு ஜெய லலிதாவுக்கு எதிராக தீர்ப்பு வந்தபோது கோவை வேளாண் மை கல்லூரி மாணவிகள் 3 பேர் கொளுத்தப்பட்டதும், 17 பேர் காயமடைந்ததும் மறந்து இருக்க மாட்டீர்கள். வலி மிகுந்த சம்பவமாக அது இருந்தது. அவர்களுக்கு ஆறுதல் கூற முடியுமே தவிர. நிதி உதவி செய்யமுடியுமே தவிர அந்த இழப்பை யாரா லும் ஈடுசெய்ய முடியாது. மக்களைப்பற்றி, மாணவர் களைப்பற்றி, மாணவி களைப் பற்றி கவலைப் படாத ஆட்சியாக அதிமுக ஆட்சி இருந்து வருகிறது.

மக்களைப் பற்றி ஜெய லலிதா சந்திக்காமல் மேலே பறந்து கொண்டிருக்கிறார். மண்ணின் மைந்தரான தலை வர் கலைஞர் 91 வயதிலும் சாலை வழியாக வந்து தினம் தினம், மக்களை சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.

கடமையைப் பற்றி பேசும் ஜெயலலிதா 3 ஆண்டு களில் எந்தக் கடமையை செய்தார்கள்? பெண்கள் தைரியமாக நடமாடமுடிய வில்லை, பெண்கள் திருடர் களுக்கு பயந்து நகையே போட்டுக்கொள்வதில்லை. அதுமட்டுமல்ல தமிழகத் தில் பெண்களுக்கெதிராக கொடுமைகள் தினமும் நடந்து கொண்டிருக்கிறது. தினம் தினம் கொலை, கொள் ளை என்ற சூழ்நிலையில் நாம் வாழ்ந்து கொண்டிருக் கிறோம். ஆந்திராவுக்கு ஓடிப் போனவர்கள் எல்லாம் திரும்பி வந்து விட்டார்கள் போல் உள்ளது.

ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு திமுக வை தவிர யாரும் உரிமை கோரமுடியாது. தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்க ளுக்காக வாதாடி, போராடி அந்த திட்டத்தை கொண்டு வந்தவர் கலைஞர் அவர் களும், தளபதி ஸ்டாலின் அவர்களும் தான். துளி அளவும் தொடர்பில்லாத வர்கள் இத்திட்டத்திற்கு சொந்தம் கொண்டாடு கிறார்கள். இந்த திட்டத்தை முறையாக இந்த ஆட்சி பயன்படுத்தி இருந்தால் குடிநீர் பிரச்சினை ஏற்பட்டி ருக்காது.

அரசின் பணத்தில் அதிமுக கட்சியினுடைய இரட்டை இலை சின்னத்தை பதித்துள்ளது. அரசு முத்திரை தான் போட வேண்டும். எந்த ஒரு அரசும் இதுபோன்ற செயலில் இறங்கியதாக சரித் திரம் கிடையாது.

கடந்த திமுக ஆட்சியில் 75 ஆயிரம் கோடி முதலீடு தமி ழகத்துக்கு வரப்பெற்றதன் மூலம் ஏராளமான வேலை வாய்ப்புகள் உருவாகின. இந்த ஆட்சியில் ஒப்பந்தங் கள் போட்டதோடு சரி எந்த தொழிற்சாலையும் வர வில்லை. 10 லட்சம் பட்ட தாரிகள் வேலையின்றி கிடக் கிறார்கள்.

பாமக.,வை சேர்ந்த 2 பேர் மத்திய அமைச்சர்களாக இருந்தபோது தமிழகத்திற்கு எந்த திட்டத்தையும் கொண்டு வரவில்லை. தருமபுரியில் திமுக ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட திட்டத் திற்கு மத்திய அமைச்சராக இருந்த சிலர் சொந்தம் கொண்டாடுகிறார்கள் எதையும் செய்யாமல் பேர் வாங்க நினைக்கிறார்கள். திமுக ஆட்சியில் வன்னியர் சமூகத்தின் உள்ளடக்கிய மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 20 சதவீதம் இட ஒதுக்கீடு கொண்டு வந்ததும் திமுக தான். இடஒதுக்கீட்டு போராட்டத்தில் உயிர்நீத்த மக்களுக்கு அவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி செய்ததும் திமுக அரசு தான் என்பதை மறந்து விட் டார்கள்.

தமிழகத்துக்கு திமுக, அதிமுக எதையும் செய்ய வில்லை என்று மோடி பேசி உள்ளார். தமிழகத்தில் அனைத்து மதத்தினரும் ஒற்று மையாக சகோதரர்களாக மனிதர்களாக வாழ்கின்றனர். அதை மோடி குஜராத் மாநில மாக மாற்றிட முயற்சி செய் யக் கூடாது.

பெரியார், அண்ணா, கலைஞர் பிறந்த மண் அந்த மண்ணில் ஜாதி சண்டைக்கு, மதச் சண்டைக்கு இட மில்லை, என்பதை நரேந்திர மோடி உணர வேண்டும் திராவிட இயக்கம் உருவாக் கிய அரசியல் நம்மைக் கைவிடாது இதை மீறி யாரும் மதத்தின் பெயரைச் சொல்லி ஜாதியின் பெயரைச் சொல்லி தமிழகத்திற்குள் ஊடுருவ முடியாது.

அனைத்து துறைகளிலும் தமிழகத்தை காட்டிலும் குஜ ராத் பின் தங்கிய நிலையில் தான் உள்ளது என்றார் கனி மொழி.

Read more: http://viduthalai.in/page-7/78984.html#ixzz2zTdxR3Ul

தமிழ் ஓவியா said...


அய்யோ பாவம் அதிமுக ஏடு!


தேர்தல் பயத்தில் ஜன்னிப் பிடித்து உளற ஆரம்பித்து விட்டது அண்ணா திமுகவின் அதிகாரபூர்வ ஏடான நமது எம்.ஜி.ஆர்.

உதய சூரியன் பொத்தானை அழுத்தினால் வீட்டின் விளக்கு எரியும்; நாட்டைப் பிடித்த இருள் அகலும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி சொல்லி விட்டாராம் (17.4.2014).

பொச பொச என்று எகிறிவிட்டது அந்த ஏட்டுக்கு. விவாதம் செய்யலாம் - வீரமணி அவர்கள் சொல்லுவது இந்தந்த வகையில் தவறு என்று தர்க்கம் செய்யலாம். ஆனால் வச்சுக்கிட்டா வஞ்சனை செய்கிறார்கள் - அவர்கள்? சரக்கு அவ் வளவுதான்! பந்தை அடிக்க முடிய வில்லையென்றால் காலைத்தானே அடிப்பார்கள் கையாலாகாதவர்கள்.

வசை மாரி பொழிந்து தள்ளுகிறது ஆனால் அவர்களை அறியாமலேயே ஒன்றை ஒப்புக் கொண்டு விட்டார்கள்.

ஏற்கெனவே உதவாத உதயசூரிய னுக்கு ஓட்டுப் போட்டதற்கான பலனாக கருணாநிதி ஆட்சி இருட்டையும், திருட் டையும், விதைக்கும், மின் தடையைத் தந்து, தமிழகத்தை மீளாத் துயரத்தில் ஆழ்த்தியது - என்று குறிப்பிட்டுள்ளது (17.4.2014).

விவாதத்துக்காகவே ஒப்புக் கொள் வோம். கலைஞர் ஆட்சியில் இரண்டு மணி நேர மின் வெட்டுக்கே இருட்டும் திருட்டும் என்றால், அம்மையார் ஆட்சி யில் எட்டு மணி நேரம், பத்து மணி நேரம் மின் வெட்டு நடைமுறையில் இருக்கும் இந்தக் காலத்தில் எத்தனை மடங்கு இருட்டும், திருட்டும் எகிறிக் குதிக்கும் - (அதுதானே இப்பொழுது நாட்டின் நிலைமை) பட்டப்பகலிலேயே கழுத்தை அறுத்துக் கொல்லும் புதிய கலாச் சாரத்தை அல்லவா அண்ணா திமுக ஆட்சி வளர்த்து விட்டிருக்கிறது.

ஒன்றை மட்டும் இங்கு சொல்ல வேண்டும். எதையாவது நமது எம்.ஜி.ஆர். ஏடும் கிறுக்குகிறது; அதற்கு வட்டியும் முதலுமாக விடுதலை கொடுத்தால் வாங்கிக் கட்டிக் கொள்வது. அதற்குமேல் எதையும் எழுத முடியாத அளவுக்கு மூச்சுத் திணறுவது,

இப்படியும் ஒரு பிழைப்பா?

Read more: http://viduthalai.in/page-8/79000.html#ixzz2zTf0YPZ7

தமிழ் ஓவியா said...


சோ கூட்டத்தின் சுருதி குறைகிறது


சோ கூட்டத்தின் சுருதி குறைகிறது

துக்ளக் நிருபர்கள் சில ஆயிரக்கணக்கான மக்களை, சுமார் இருபத்தைந்து தொகுதிகளில் சந்தித்துப் பேசியதிலிருந்து, தி.மு.க. பல தொகுதிகளில் அ.தி.மு.க.விற்கு கடும் போட்டியைத் தரக்கூடிய அளவில் இருக்கிறது என்று தோன்றுகிறது. தி.மு.க.வை வளர விடுவது தமிழக அரசியலுக்கு நல்லதல்ல என்ற என் கருத்தை நான் பல முறை துக்ளக்கிலும், ஆண்டு விழாக்களிலும் விளக்கியிருக்கிறேன். ஆனால், அந்த நிலை தோன்றவில்லை; தி.மு.க. கூட்டணி இரண்டாவது இடத்தைப் பிடிக்கக் கூடிய அளவில் ஆதரவு உள்ள கட்சியாகத் தெரிகிறது. - துக்ளக் (23.4.2014) தலையங்கம்

திமுக அவ்வளவுதான்! கடைசி இடத்திற்கத் தள்ளப் பட்டு விட்டது என்று பிலாக்கணம் பாடிக் கொண்டிருந்த சோ கூட்டத்தின் சுருதி அடங்கி விட்டது என்பதைத் தான் இது காட்டுகிறது. அவசரப்பட வேண்டாம். இன் னும் இடையில் சில நாட்கள் முடியில்லாத சோ என்ன செய்வார்? சுவரில் முட்டிக் கொள்ள வேண்டியதுதான்!

நூறு ரூபாய்க்கு இவ்வளவு தூரம்தான்!

ஸ்ரீபெரும்புதூரில் அதிமுக வேட்பாளர் கே.என். ராமச்சந்திரனுக்கு வாக்கு சேகரிக்கச் சென்றார் அமைச்சர் சின்னையா. அவருடன் 25-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் டூ வீலரில் கொடிகளைக் கட்டிக் கொண்டு சென்றனர். பாதி பிரச்சாரத்திலேயே பைக்கு களை நிறுத்தி விட்டு வீட்டுக்குக் கிளம்பத் தயாரானார்கள். காரணம் கேட்டபோது, நூறு ரூபாய்க்குத்தான் பெட்ரோல் போட்டுக் கொடுத்தாங்க. அதுக்கு இவ்வளவு தூரம்தான் வர முடியும் என்று சொல்லியிருக் கிறார்கள்.

கடுப்பான சின்னையா, ஆட்களை ஏற்பாடு செய்த கட்சி நிர்வாகியைக் காய்ச்சி எடுத்திருக்கிறார். பிறகு அனைத்து பைக்குகளுக்கும் தாராள பெட்ரோல் சப்ளை கிடைக்க... பிரச்சாரம் தொடர்ந்தது.

(ஜூனிடர் விகடன் 20.4.2014 பக்கம் 24)

கூலிக்கு மாரடிப்பு என்பது இதுதானோ!

Read more: http://viduthalai.in/e-paper/79023.html#ixzz2zZbBMpg9

தமிழ் ஓவியா said...

எஃப்.அய்.ஆர் பதிவு

பாட்னா, ஏப்.21:-தேர்தல் பிரச்சாரத்தின் போது, சர்சைக்குரிய விதத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் கிரிராஜ் சிங் மீது தியோகர் மாவட்டத்தில் உள்ள மோகன்பூர் காவல் நிலையத்தில் எப்அய்ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. பீகாரைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கிரிராஜ் சிங், பாஜ சார்பில் நாவாடா தொகுதியில் போட்டியிடுகின்றார். இவர் மோடியின் தீவிர ஆதரவாளர். இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு கிரிராஜ் சிங் பேசும்போது, மோடியை எதிர்ப்பவர்கள் பாகிஸ்தானின் ஆதரவாளர்கள். இவர்கள் தேர்தல் முடிந்தவுடன், பாகிஸ்தானில் போய் குடியேறி விட வேண்டும் என்று சர்ச்சைக்கு உரிய வகையில் கூறியி ருந்தார். இதை காங்கிரஸ் மற்றும் அய்க்கிய ஜனதாதள கட்சிகள் கண்டித்து, தேர்தல் ஆணையத் திடம் புகார் தெரிவித்தன. இதையடுத்து, கிரிராஜின் பேச்சு குறித்து தேர்தல் ஆணையமும் ஆராய்ந்து வருவதாக கூறியிருந்தது. காங்கிரஸ் கோரிக்கை: முன்னாள் அமைச்சர் கிரிராஜ் சிங் பேச்சு குறித்து நடவடிக்கை எடுக்க, அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.மிட்டல் தேர்தல் ஆணையத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில், கிரிராஜ் சிங்கின் பேச்சு முன்கூட்டியே திட்டமிடப்பட்டது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நேரத் தில், மதம் மற்றும் சமூக ரீதியாக பொதுமக்களை தூண்டிவிட்டு ஆதாயம் அடைய நினைக்கின்றனர். எனவே, எதிர்காலத்தில் முன்மாதிரியாக இருக்குமாறு தண்டனை வழங்க வேண்டும். என்று மிட்டல் கூறியுள்ளார்.

Read more: http://viduthalai.in/e-paper/79023.html#ixzz2zZbJxsY2

தமிழ் ஓவியா said...

மதவெறியை மாய்க்க ஜனநாயக முற்போக்கு அணியை ஆதரிப்பீர்! தமிழர் தலைவரின் முக்கிய அறிக்கை


மோடியை ஆதரிக்காவிட்டால் பாகிஸ்தான் ஓடுங்கள் என்றார் பிஜேபிக்காரர் ஒருவர்

இந்துக்கள் பகுதியில் முஸ்லீம்கள் வீடுகள் வாங்கினால் கல்லால் அடித்து விரட்டுங்கள் என்கிறார் வி.எச்.பி. தலைவர் தொகாடியா!

ஆட்சிக்கு வருவதற்கு முன்பே இந்தவெறி என்றால் ஆட்சிக்கு வந்தால் நாடே சுடுகாடாகும் - எச்சரிக்கை!

மதவெறியை மாய்க்க ஜனநாயக முற்போக்கு அணியை ஆதரிப்பீர்! தமிழர் தலைவரின் முக்கிய அறிக்கை

மீண்டும் 1992ம், 2002ம் நடக்காமல் இருக்க ஜனநாயக முற்போக்கு அணியை ஆதரிப்பீர்!

இந்துக்கள் பகுதிகளில் முஸ்லீம்கள் வீடுகள் வாங்கினால் கல்லால் அடித்து விரட்ட வேண்டும் என்று விசுவ ஹிந்து பரிஷத் தலைவர் பிரவீன் தொகாடியா பேசியுள்ளதை எடுத்துக்காட்டி, இவர்கள் ஆட்சிக்கு வந்தால் நாடே கலவரப் பூமியாகும் - சுடுகாடாகும் என்று எச்சரித்து, மதவெறியை மாய்த்து மனிதநேயம் காக்க ஜனநாயக முற்போக்குக் கூட்டணியையே ஆதரிக்க வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு :

ஜார்க்கண்ட் மாநிலத்தில் தியோகர் என்ற பகுதியில் பா.ஜ.க.வின் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள பிகார் மாநில பா.ஜ.க. மூத்த தலைவர் கிரிராஜ்சிங் என்பவர் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் 19ஆம் தேதி பேசும்போது.

நரேந்திரமோடியை பிரதமராக விடாமல் தடுப் பவர்கள், பாகிஸ்தானுக்குச் செல்ல தயாராக இருங்கள். மோடியை விமர்சிப்பவர்களுக்கு வருங் காலத்தில் (தேர்தலுக்குப் பிறகு) இந்தியாவில் இடமில்லை அவர்கள் வசிக்க பாகிஸ்தானில் தான் இடம் கிடைக்கும் என்று பேசியுள்ளார்.

எஃப்.அய்.ஆர். மட்டும்

பிகாரின் நவாடா தொகுதியில் போட்டியிடும் இவர் மோடியின் தீவிர ஆதரவாளராம். 2005 முதல் 2013 வரை பிகார் மாநில அமைச்சராகவும் இருந்தவர்.

இந்த மேடையில் இவருடன் பா.ஜ.க.வின் முந்தைய தலைவரான நிதின் கட்காரியும் (ஆர்.எஸ்.எஸ்.) மேடையில் உடன் இருந்து அவர் முன்னிலையில்தான் இப்படி கிரிராஜ்சிங் பேசியுள்ளார்.

நிதின்கட்காரி இதை ஆட்சேபித்தோ, பிறகு மறுத்தோ பேசவே இல்லை என்பது கோடிட்டுக் காட்டப்பட வேண்டிய உண்மையாகும்.

இவர்கள் இருவரின்மீது பிகார் தேர்தல் ஆணையர் இ.பி.கோ. மற்றும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி எஃப்.அய்.ஆர். போட்டிருக்கிறாரே தவிர, அவர்களைக் கைது செய்யவில்லை இதுவரை!

தமிழ் ஓவியா said...

இரண்டாவதாக, மோடி ஆளும் குஜராத்தில் (இன்று (21.4.2014) காலை வந்துள்ள டைம்ஸ் ஆஃப் இந்தியா ஏட்டுச் செய்திப்படி) ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தீவிரவாத அமைப்புக்களான விசுவ இந்து பரிஷத், பஜ்ரங் தளம் ஆகிய அமைப்புகளின் தலைவர்கள் வெறியூட்டும் வகையில் பேசியுள்ளனர். (இவர்களின் தலைவர்கள் எல்லாம் பாபர் மசூதி இடிப்புக் குற்றவாளிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது). கல்லால் அடித்து விரட்டுங்கள்

குஜராத்தில் ராஜ்கோட் நகரில் பவந்தர் பகுதியில் முஸ்லீம் வியாபாரிகள் இந்துக்கள் வாழும் பகுதியில் வீடுகள் வாங்கியுள்ளனர். அவரது வீட்டிற்கு முன் பஜ்ரங்தளம் அலுவலகம்! என்று போர்டு மாட்ட வேண்டும்; அந்த வீட்டை நாம் ஆக்கிரமித்து எடுத்துக் கொள்ள வேண்டும். இங்கு குஜராத்தில் உள்ள சட்டப்படி இந்துக்கள் பகுதியில் முஸ்லீம்கள் அசையா சொத்துக்கள் வாங்குவது சட்ட விரோதம் என்ற(Inter Community Sale of Immovable Property) மோடி அரசு சட்டப்படி (Disturbed Areas Act) தவறு என்று வலுக்கட்டாயமாக அதை இந்து அமைப்புக்கள் எடுத்துக் கொள்ள வேண்டும்; 48 மணி நேரத்துக்குள் வீட்டைக் காலி செய்யாவிட்டால் கற்களை வீசுங்கள், டயரைக் கொளுத்தி எறியுங்கள் - தக்காளியை வீசுங்கள்! வழக்குப்பற்றி பின்னால் பார்த்துக் கொள்ளலாம் என்று பேசி, இரவில் ஊர்வலம் நடைபெற்றுள்ளது. ராஜீவ் காந்தியைக் கொன்றவர்களையே தூக்கில் போடவில்லை; அதனால் நாம் கவலைப்பட வேண்டாம் என்றும் வி.எச்.பி. தலைவர் தொகாடியா பேசியுள்ளார்.

தலைக்கொழுத்துப் பேசி பச்சையாக குஜராத்தில் வன்முறை வெறியாட்டத்தைத் துவக்கி மீண்டும் 1992 பாபர் மசூதி - 2002 குஜராத் கலவரங்களைப் புதுப்பிக்க அச்சாரப் பாட்டு பாடுகிறார்கள்!

மோடி பதவிக்கு வருவதற்கு முன்பே இப்படியா?

மோடி பதவிக்கு வரவில்லை; இப்போதே இப்படி இவர்கள் ஹிட்லர் மொழியில் பேசுகிறார்கள் என்றால் அதன் விளைவு என்னவாகும்? நாடே கலவரப் பூமியாகும் - சுடுகாடாகும்!

நரிக்கு நாட்டாண்மை என்றால் கிடைக்கு இரண்டு ஆடு கேட்கும்! என்ற நிலை தானே ஏற்படும்?

வாக்காளர்களே சிந்தியுங்கள் - மதச் சார்பற்ற சக்திகள் விழித்தெழ வேண்டிய மிக முக்கியமான நேரம் இது! பி.ஜே.பி.க்குத் துணை போகக் கூடியவர்களும் சிந்திக்க வேண்டும். மதச் சார்பின்மையைக் காப்பாற்றவும் மக்களைப் பாதுகாக்கவும், சமதர்ம அரசாக சமூக நீதி அரசாக, மத்திய அரசு அமையவும், மதவெறி மாய்த்து மனிதநேயம் காக்கவும், சிறுபான்மையினரின் அச்சத்தைப் போக்கவும் ஜனநாயக முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களித்து, பாசிசத்திலிருந்தும், மதவெறிகளிலிருந்தும் நாட்டைக் காப்பாற்ற முன் வாருங்கள்!

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்



21.4.2014
திருச்சி (முகாம்)

Read more: http://viduthalai.in/e-paper/79026.html#ixzz2zZbQ8OeB

தமிழ் ஓவியா said...


இந்துத்துவாவுக்குத் துணைபோகும் கூட்டணிக் கட்சிகள்!

பாரதீய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கை வெளி வந்ததும் - சில அலைகள் கிளம்பி விட்டன. மோடி அலை அலை என்று சொல்லி வந்தவர்களை புதிய எதிர்ப்பு அலை கிளம்பி அவர்களைத் துரத்திக் கொண்டுள்ளது.

தேர்தலுக்குப் பல மாதங்களுக்கு முன்பே - பி.ஜே.பி. தேர்தல் அறிக்கையில் எங்களின் இந்துத்துவா நிகழ்ச்சி நிரல் இடம் பெறும் என்று பிஜேபியின் முக்கிய தலைவர்கள் வெளியிட்டு வந்தனர். ஆர்.எஸ்.எஸின் தலைவர் மோகன் பகவத்தும் தெரிவித்து வந்ததும் உண்மை. இது குறித்துத் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் எச்சரிக்கை வெளியிட்டும் இருந்தார்.

பி.ஜே.பி.யோடு கூட்டுச் சேரும் எண்ணத்துடன் இருந்த தமிழ் நாட்டுக் கட்சிகள் அப்பொழுதாவது விழித்துக் கொண்டிருக்க வேண்டும் - இந்தக் கட்சி களுக்குக் கொள்கைகள் சித்தாந்தம் என்பது தங் களுக்கு உண்டு என்று நினைத்திருந்தால்,.. அப்பொ ழுதே பிஜேபி உயர் மட்டத் தலைவர்களோடு பேசியிருக்க வேண்டும். இந்துத்துவா நிகழ்ச்சி நிரல் உங்கள் தேர்தல் அறிக்கையில் இடம் பெறுமாயின் நாங் கள் கூட்டணியில் இடம் பெறுவது என்பது கடினமான ஒன்றாக இருக்கும் என்று சொல்லியிருக்க வேண்டும்.

கொள்கைகள், கோட்பாடுகள் மீது பிடிப்பு இருந் தால் அல்லவா அந்த மாதிரி சிந்திப்பார்கள்? இதில் வெட்கக்கேடு என்னவென்றால், எந்தவித நிபந்தனை களுமின்றி முதன் முதலில் பிஜேபியோடு கூட்டணி வைத்துக் கொள்ள முதல் குரல் கொடுத்தது அடியேன் வைகோதான் என்று மார்தட்டுகிறார் என்றால் இந்தப் பிற்போக்குத்தனத்தை என்னவென்று சொல்லுவது!

ஊழல் ஊழல் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். ஊழலைவிட ஆபத்தானது மதவாதம் ஆயிற்றே! பாலில் தண்ணீர் கலப்பது ஊழல் என்றால் பாலில் நஞ்சு கலப்பது மதவாதம் ஆகும். (அப்படியே பார்த்தாலும் பிஜேபி ஒன்றும் ஊழலுக்கு அப்பாற்பட்ட உத்தமப் புத்திரன் அல்ல - சவப் பெட்டியிலேயேகூட ஊழல் செய்ய முடியும் என்று சாதித்துக் காட்டியவர்களே!).

எந்த ஊழல் காரணமாக கருநாடகாவில் பி.எஸ். எடியூரப்பா கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டாரோ, அந்த எடியூரப்பா மீண்டும் பா.ஜ.க.வுக்குப் பூர்ண கும்பம் கொடுத்து வரவழைக்கப்பட்டு விட்டாரே! பி.ஜே.பி. சார்பில் கருநாடகத்தில் போட்டியிடும் சிறீராமுலு யார்? சுரங்கத் தொழில் கொள்ளையில் அவர் பங்கு என்ன என்பது ஊர் சிரிக்கவில்லையா? ஊழல் என்ற பார்வையில் பார்த்தாலும் பி.ஜே.பி. யோடு கூட்டுச் சேர தமிழக அரசியல் கட்சிகள் தயங்கியிருக்கவே வேண்டும்.

பிஜேபியின் இந்துத்துவா தேர்தல் அறிக்கையின் அடிப்படையில் அதனோடு கூட்டுச் சேர்ந்த ம.தி.மு.க., பா.ம.க., தே.மு.தி.க. கட்சித் தலைவர்களை நோக்கி வினாக்கள் வெடித்துக் கிளம்பிய நிலையில், மூச்சுத் திணறி, ஏதோ ஒரு பதிலைச் சொல்லித் தீர வேண்டும் என்ற நெருக்கடிக்கு ஆளாகி விட்டனர்.

எங்களிடையே கொள்கை வேறுபாடு உண்டு என்பது உண்மைதான். கொள்கை வேறுபாடு இல்லா விட்டால் ஏன் தனித்தனியே கட்சியாக இயங்குகின் றோம் என்று சாமர்த்தியமாகப் பதில் சொல்லுவதாக நினைத்துக் கொண்டு ஜாலம் செய்து பார்க்கிறார்கள். ஒரு முக்கியமான கேள்விக்கு அவர்கள் பதில் சொல்லக் கடமைப்பட்டுள்ளார்கள். தேர்தலில் எதை முக்கியமாக வைத்துப் பரப்புரை செய்கிறார்கள்?

நாட்டில் மோடி அலை வீசுகிறது, மோடிதான் பிரதமர்! ஆகவே எங்கள் அணிக்கு வாக்களியுங்கள் என்று தானே வாக்குக் கேட்கிறார்கள்.

மோடிதான் பிரதமர் என்று சொன்னபிறகு மோடி பிரதமர் ஆசனத்தில் உட்கார்ந்தால், அவர்களுடைய தேர்தல் அறிக்கையின்படி ஆட்சி செய்யக் கடமைப் பட்டவர் ஆகி விடவில்லையா?

பிஜேபியின் தேர்தல் அறிக்கை வந்த பிறகாவது மோடிதான் பிரதமர் என்கிற பரப்புரையையாவது நிறுத்தினார்களா?

இந்த நிலையில், ஏதோ பிஜேபிதான் மதவாதக் கட்சி என்று நினைக்காமல், அதற்குத் துணை போகும் மதிமுகவும், பா.ம.க.வும், தே.மு.தி.க.வும் ஒரு வகையில் மதவாதக் கட்சிகளே என்ற முடிவுக்குத்தான் வாக்காளர் கள் உணர வேண்டும்.

பி.ஜே.பி.க்கு வாக்களித்தாலும், அதனுடன் கூட் டணி சேர்ந்துள்ள இந்தக் கட்சிகளுக்கு வாக்களித் தாலும் அடிப்படையில் ஒன்றுதான். இந்துத்துவா ஆட்சிக்கு, ராம ராஜ்ஜியத்துக்கு வாக்களித்ததாகவே பொருள்படும். தந்தை பெரியார் பிறந்த தமிழ் மண் - இதில் சம்பந்தப்பட்டவர்களை ஒருக்காலும், ஒருபோதும் மன்னிக்காது - மன்னிக்கவே மன்னிக்காது.

வாக்காளர்களே ஏமாந்து விடாதீர்கள்! எச்சரிக்கை! எச்சரிக்கை!!

Read more: http://viduthalai.in/page-2/79033.html#ixzz2zZcD8RkC

தமிழ் ஓவியா said...


பச்சை பதவி வெறி


2006-2007-ல் தமிழ் நாட்டில் கலைஞர் தலைமையில் திமுக ஆட்சி நடைபெற்ற நேரத்தில் சிறப்பு பொரு ளாதார மண்டலம் அமைத்திட திட் டங்கள் தீட்டப்பட்டது. இவற்றை பாமக நிறுவனர் கடுமையாக எதிர்த்தார். சென்னை விமான நிலையம் விரிவாக்கப்பட புளிச்சலூர் பகுதிகளில் நிலங்கள் கையகப்படுத்திட, பாமக எதிர்ப்பு தெரிவித்தது. உடனே அனைத்துக் கட்சி கூட்டம் 22.5.2007-ல் கலைஞரால் கூட்டப்பட்டு, அதில் பங்கேற்ற பாமக, மதிமுக, கம்யூ னிஸ்ட் கட்சிகளின் பிரதிநிதிகளின் கருத்தை ஏற்று, புளிச்சலூர் பகுதியல் லாமல், மக்களை வெகுவாக பாதிக் காத பகுதிகளை கையகப்படுத்தி விமான நிலையம் அமைத்திட ஓர் ஒருமித்த கருத்தை உருவாக்கினார்.

இது கலைஞரின் அணுகுமுறை.

ஆனால், குஜராத்தில் நடப்பது என்ன?

பாமக, மதிமுக புகழும் மோடி யின் ஆட்சியில், கடலோரப்பகுதியில் அதானி குழுமத்திற்கு, ஒரு சதுர அடி ரூ.1500 உள்ள நிலங்கள், ரூ.1 முதல் ரூ.32-க்கு தொழிற்சாலை நடத்துவ தற்கு, மக்களின் ஒப்புதல் இல்லாமல், கட்டாயப்படுத்தி கொடுக்கப்பட் டுள்ளது. ஆனால், அதானி குழுமம், இந்த இடங்களில் பெரும்பான்மை யான நிலங்களை, வேறு நிறுவனங் களுக்கு, அதிக விலையில் விற்றுவிட் டார்கள்.

எஸ்ஸார் நிறுவனத்திற்கு, ஹஜிரா பகுதியில் 7,24,687 சதுர அடி நிலம், மிகக்குறைந்த விலையில் விற்கப்பட்டது. இதனால், குஜராத் அரசுக்கு ரூ.238.50 கோடி நஷ்டம்.

மகுவா பகுதில் விளை நிலங் களை, தரிசு நிலங்கள் என மோசடி யாக அறிவித்து, 15000 மக்களின் வாழ்வாதாரத்தை நாசம் செய்து, சிமெண்ட் தொழிற்சாலை அமைத் திட, 269 ஹெக்டேர் நிலத்தை நிர்மா நிறுவனத்திற்கு அளித்தவர் மோடி.

மேற்கு வங்கத்திலிருந்து டாடா நிறுவனத்தின் நானோ கார் தொழிற் சாலையை குஜராத்திற்கு கொண்டு வந்து 1100 ஏக்கர் நிலத்தை, ஒரு சதுர மீட்டர் ரூ.900 என்று விற்றவர் மோடி. இந்த நிலங்களின் சந்தை மதிப்பு ஒரு சதுர மீட்டர் ரூ.10000. தமிழ் நாட்டில், கலைஞர், மற்ற கட்சிகளின் கருத்தை யும், மக்களையும் மதித்து, முடிவு எடுக்கிறார். அவர் ஒழிய வேண்டும்; திமுக தோற்கடிக்கப்பட வேண்டும் என்கிறது பாமகவும், மதிமுகவும்.

சிறப்புப் பொருளாதார மண்டலத் திற்காக, விவசாய நிலங்களை கட்டாயப்படுத்தி, குறைந்த விலைக்கு வாங்கி, பல்லாயிரம் விவ சாயிகளின் வாழ்க்கையைச் சிதைத்து, சில முதலாளிகளுக்கு சாதகம் செய் யும் மோடி, எந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியும் முடிவு எடுக்க வில்லை; ஏன், தனது அமைச்சரவை யைக்கூட்டி எந்த முடிவும் எடுப்ப தில்லை. அத்தகைய மோடி வெற்றி பெற வேண்டும் என இங்கே தொண் டையை உயர்த்தி முழக்கமிடுகிறது பாமக, மதிமுக.

ஆக, நோக்கம், பொருளாதார வளர்ச்சியும் இல்லை; ஒரு வெங்காயமும் இல்லை; பச்சை பதவி வெறி. இவர்களுக்கு தக்க பாடம் அளித்திட மக்களுக்கு கிடைத்த நல் வாய்ப்பு தான் ஏப்ரல் 24.

- குடந்தை கருணா

Read more: http://viduthalai.in/page-2/79037.html#ixzz2zZccxL13

தமிழ் ஓவியா said...


கேள்விப்பட்டதுண்டா?


கேள்விப்பட்டதுண்டா?

ஓர் ஆட்சியில் 32 உயர் மட்ட காவல் துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் வெளியே வந்த அந்த 32 காவல்துறை அதிகாரிகளும், ஒரு மாநில முதல் அமைச்சர்மீது குற்றஞ்சாட்டுவதுபற்றி இதற்கு முன் கேள்விப்பட்டதுண்டா? ஆம், பிஜேபியின் பிரதமருக்கான வேட்பாளரான மோடி ஆளும் குஜராத் மாநிலத்தில்தான் இந்த நிருவாக லட்சணம்!

கேள்விப்பட்டதுண்டா?

ஒரு மாநில முதல் அமைச்சரை நீரோ மன்னன் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கண்டித்த பிறகும்கூட, அதைப்பற்றிக் கிஞ்சிற்றும் கவலைப்படாமல், பதவியில் ஒட்டிக் கொண்டிருந்த முதல் அமைச்சரைப்பற்றிக் கேள்விப்பட்டதுண்டா? பி.ஜே.பி.யின் பிரதமருக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்ட குஜராத் முதல் அமைச்சர் நரேந்திரமோடிதான் அவர்.



கேள்விப்பட்டதுண்டா?

போலி என்கவுண்டர் தொடர்பான ஒரு வழக்கில் இந்த மாநிலக் காவல் துறையை நம்பக் கூடாது என்று உயர்நீதிமன்றம் சொன்னதற்குப் பிறகும்கூட இதுகுறித்து அலட்டிக்காமல் ஆட்சிப் பொறுப்பில் ஒட்டிக்கொண்டு இருந்த முதல் அமைச்சர் பற்றி கேள்விப்பட்டதுண்டா?

இப்பொழுது நாடு நேரில் பார்த்துக் கொண்டிருக்கும் குஜராத் மாநில முதல் அமைச்சர் நரேந்திரமோடி தான் அவர்!



கேள்விப்பட்டதுண்டா?

இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமிய மக்கள் கொல்லப்பட்டும் தனக்கு எந்தவித பொறுப்பும் இல்லை என்று சொன்ன முதல் அமைச்சரை எங்கேனும் கேள்விப்பட்டதுண்டா?

முதன் முதலாக - குஜராத்தை ஆளும் மோடி என்ற ஒருவரை இப்பொழுது தான் கேள்விப்பட்டுள்ளோம்.

Read more: http://viduthalai.in/page-2/79031.html#ixzz2zZd5MdYt

தமிழ் ஓவியா said...


ஆரோக்கியம் தரும் தர்பூசணி பழம்


கோடை பழமாக கருதப்படும் தர்பூசணி பழம் புத்துணர்ச்சியை மட்டும் தரக்கூடிய பழம் அல்ல. வெயில் காலத்தில், உடலுக்கு தேவையான குளிர்ச்சியை தரக்கூடிய சிறந்த பழமாக இது கருதப்படுகிறது. தர்பூசணி சாப் பிடுவதன் மூலம் உடலின் வெப்பத்தையும் ரத்த அழுத்தத் தையும் சரி செய்து கொள்ள முடியும். கட்டி, ஆஸ்துமா, பெருந்தமனி வீக்கம், நீரிழிவு, பெருங்குடல் புற்று நோய் மற்றும் கீல் வாதம் போன்றவற்றை தர்பூசணி மூலம் குணப்படுத்த முடியும்.

இதய நோய்கள் மற்றும் புற்று நோய் ஆண்டியாக் ஸிடண்ட் விகோபீனின் போன்ற நோய்களுடன் போராடி வெற்றி பெறும் தன்மை கொண்டது. இது தசை மற்றும் நரம்புகளின் செயல்பாட்டிற்கு இன்றியமையாததாக இருக்கிறது. குறைந்த ரத்த அழுத்தம் உள்ளவர்கள் தர்பூசணி சாப்பிடுவதன் மூலம் பொட்டாசியத்தை அதிகரித்து கொள்ள முடியும். தர்பூசணியில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி. சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.

கொழுப்பை குறைக்கும்: கண்களை பராமரிக்க வைட்டமின் ஏவும், மூளை மற்றும் செல் பாதிப்பை தடுக்க வைட்டமின் சி யின் உதவியுடன் செயல்படுகிறது. உடலிற்கு தேவையான இன்சூலினையும் மேம்படுத்தும். மேலும் தர்பூசணி சதை மற்றும் விதையும் பலன் தரக்கூடியது. தர்பூசணி விதையில் அதிக அளவில் ஊட்டச்சத்துகள் அடங்கியுள்ளன. இதில் உள்ள மெக்னீசியம் மற்றும் புரதம் கொழுப்பைக் குறைக்க வல்லது.

இதய பாதுகாப்பு: தர்பூசணியில் அது போல் உள்ள `சீட்ரூலின்' என்ற சத்து பொருள், வயாகராவை போல் ரத்த நாளங்களை விரிவடைய செய்து ரத்த ஓட்டத்தை அதிகரிக்குமாம். தர்பூசணியை சாப்பிட்ட பிறகு ஏற்படும் வேதியியல் மாற்றம் காரணமாக சிட்ரூலின்', அர்ஜினை னான' எனும் வேதிப் பொருளாக மாற்றப்படுகிறது.

அது இதயத்துக்கும், ரத்தம் ஓட்டம் சம்பந்தமான உடல் உறுப்புகளையும் ஊக்குவிக்கிறது. இந்த சிட்ரூலின் அர்ஜி னைன் வேதி மாற்றமானது, சர்க்கரை நோய்க்காரர் களுக்கும், இதய நோயாளிகளுக்கும் கூட நன்மை பயக்குமாம். கோடைகாலத்தில் கிடைக்கும் தர்பூசணிப்பழம் உடலுக்கு குளிர்ச்சியை தருவதோடு, இரும்பு சத்தும் நிறைந்ததாகும்.

Read more: http://viduthalai.in/page-7/79040.html#ixzz2zZdtzJLF

தமிழ் ஓவியா said...

கோடையை சமாளிக்க எளிதான வழிமுறைகள்

நமது நாட்டுத் சீதோஷ்ண நிலை பெரும்பாலும் வெப்பமாகவே இருக்கும். கடும் கோடைக் காலத்தில் இந்த நாள்களை எப்படிக் கழிக்கப் போகிறோம் என்ற பயம் ஒவ்வொருவருக்கும் எழுவது இயற்கை. நமது முன் ஜாக்கிரதையாலும், அழகு, ஆரோக்கியம் குறித்த அடிப்படை விழிப்புணர்ச்சியாலும் கோடை காலத்தைப் பிரச்சினையில்லாது சுலபமாகச் சமாளித்து விடலாம். நமது சருமத்தில் நிறத்தைத் தீர்மானிக்கும் நிறமிகள் உள்ளது.

அதிக நிறத்தை உடையவர்களுக்கு இது குறைவாகவும் தோலின் அடிப்பகுதியிலும் இருக்கிறது. அதனாலேயே அவர்கள் வெயிலில் சென்றவுடனேயே சருமம் சீக்கிரம் சிவந்து விடுகிறது. அதிகமாகவும் அவர்கள் சருமப் பாதிப்பை அடைகிறார்கள்.

ஆனால் நிறம் குறைந்தவர் களுக்கு இந்த நிறத்தைத் தீர்மானிக்கும் நிறமிகள் அதிகமாக இருக் கின்றன. மேலும் தோலுக்கு மிக அருகில் இருப்பதால் சூரிய ஒளியினால் அதிக பாதிப்பை அடைவதில்லை. வெயி லினால் சருமப் பாதிப்பை அடைபவர்கள் அவ்வப்போது அழகு நிலையம் சென்று ஃபேஷியல், ப்ளீச் செய்யும்போது முகம் பளிச்சென இருக்கும்.

கோடைக்காலத்தில் சருமம் அதிகமாக வியர்க்கும். வியர்வை அதிகமாகும் பொழுது நாற்றம் எடுக்கும். இதைப் போக்க இருவேளை குளித்து உடைமாற்ற வேண்டும்.

இறுக்கமான ஆடை அணியக் கூடாது. மெல்லிய பருத்தி ஆடையும், இள நிறமான ஆடையும் அணிவது நல்லது. வெயில் காலத்தில் நமது தலைமுடிக்கும், குறிப்பாக சருமத்திற்கும் பாதுகாப்பு ரொம்பவே அவசியம். வியர் வையினால் தலையில் அதிகமாக அரிப்பு எடுக்கும். பேன் தொல்லை அதிகமாகும்; முடி உதிரும்.

ஒருவித பாக்டீரியா சருமத்தை அரிக்க ஆரம்பிப்பதால் பொடுகுத் தொல்லையும் அதிகமாகும். பொடுகுத் தொல்லையைப் போக்க தற்பொழுது பொடுகு நீக்கி ஷாம்புகள் வந்துள்ளன. அவற்றையோ அல்லது மூலிகைகள் கலந்த ஷாம்புவையோ உபயோகப்படுத்தலாம். உடல் அதிக சூடாவதால், கண் எரிச்சல் அதிகமாகும்.

வெள்ளரிக்காயை வட்டமாகத் துண்டுகள் செய்து, கண் மேலே வைத்துச் சிறிது நேரம் படுத்தால் கண்களுக்குக் குளிர்ச்சி கிடைக்கும். கண்களுக்கு அடியிலுள்ள கரு வளையமும் நீங்கும்.

Read more: http://viduthalai.in/page-7/79040.html#ixzz2zZe1XmDS

தமிழ் ஓவியா said...


வரிவரியாய் ஒரு வைரம் பீர்க்கங்காய்


இயற்கையின் உன்னத படைப்பில் காய், கனிகள் விளைகின்றன. பீர்க்கங்காய், பீட்ரூட், பாகற்காய், காலிபிளவர் உள்ளிட்ட காய்கறிகளில் அதிக சத்துக்கள் உள்ளன. இதில் முக்கிய இடத்தை பீர்க்கங்காய் பிடிக்கிறது. இயற்கை சத்துக்கள் நிறைந்துள்ளதால், சந்தையில் இதற்கு கிராக்கி அதிகம். பீர்க்கங்காயில் குறைவான கொலஸ்ட்ரால் மற்றும் கொழுப்புச் சத்து உள்ளது.

இதில் நன்மை தரும் நார்ச்சத்து, வைட்டமின் சி, ரைபோபிளேவின், துத்தநாக சத்து, இரும்பு சத்து மற்றும் மெக்னீசியம் உள்ளது.ரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை உள்ளது. இதில் உள்ள இயற்கை சத்துக்கள் ரத்தம் மற்றும் சிறுநீரில் உள்ள சர்க்கரை அளவைக் குறைக்கிறது. பீர்க்கங்காயில் உள்ள பீட்டா குரோடீன் கண் பார்வைக்கு ஊட்டம் தரும்.

இதில் உள்ள செல்லுலோஸ் மலச்சிக்கலைப் போக்கி, வயிற்றை சீராக வைக்கும். பித்தப்பையை சுத்தப்படுத்தி, உடலில் ஆல்கஹால் இருந்தால், அதன் நச்சு முறிக்கும் அருமருந்து. உடல் எடையை குறைக்க உதவும். தோல் வியாதிகளான சொரியாஸிஸ் மற்றும் எக்ஸீமா ஆகிய வற்றை குணப்படுத்த பயன்படுகிறது.

பீர்க்கங்காய் சிறுநீரை பெருக்கும். உடலுக்கு உரம் ஏற்றும். இந்தக் காய் உடம்பை குளுமைப்படுத்தி தண்ணீரை அதிகரிக்கச் செய்யும். வயிற்று தொந்தரவுகளை நீக்குவதுடன், எளிதில் செரிமானமாகி வீரிய விருத்தியை உண்டாக்கும். பீர்க்கு இலைச் சாறு பித்தத்துக்கு கை கண்ட மருந்து.

இது ரத்தத்தில் உள்ள அசுத்தத்தைப் போக்கும். பெரியவர்கள் ஒரு வேளைக்கு அரை அவுன்சும், குழந்தைகள் கால் அவுன்சும் உட்கொள்ளலாம். பீர்க்கு இலைக் கஷாயத்தைக் கூட இதுபோன்று பயன்படுத்தலாம்.

பீர்க்கங்காயை சீவியெடுக்கும் தோலை துவையல் செய்து சாப்பிடுவதும் உண்டு. இந்தத் துவையல் நாக்கின் ருசியற்ற தன்மையைப் போக்கி செரிமான சக்தியை அதிகமாக்கும். சிறிது வெப்பத்தையும் கொடுக்கும்.

ஆனால் வாத உடம்புக்காரர்களுக்கு இது பொருத்தமானதாக இருக்காது. அவர்களைத் தவிர மற்றவர்களுக்குச் சிறந்தது. பீர்க்காங்காயை அதிகமாக சாப்பிட்டால் மந்தம் உண்டாகும். அதனால் ஏற்படும் தீமைகளுக்கு மசாலாவும், நெய்யும் மாற்றாக அமையும்.

Read more: http://viduthalai.in/page-7/79041.html#ixzz2zZeAvsDI

தமிழ் ஓவியா said...

இதய துடிப்பை சீராக்கும் கிவி பழம்

கிவி பழம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம் பெறும். மேலை நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கிவி பழம் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மருத்துவ பண்புகளை கொண்டுள்ளது.

இந்த பழத்திற்கு சீனத்து நெல்லிக்கனி என்றொரு பெயரும் உண்டு. கிவி பழத்தின் தோல் பச்சை நிறத்துடனும், பழத்தின் உள்ளே சிறிய கருப்பு விதைகளுடன் பச்சை, மஞ்சள் கலந்த சதையுடனும் இருக்கும். இதை கேக் மீது அழகுக்காக வைத்திருப்பதை நாம் பார்த்து இருப்போம்.

கிவி பழத்தில் ஏராளமான மினரல்கள், விட்டமின் சத்துக்கள் உள்ளன. சிட்ரஸ் ரக பழ வகையை சார்ந்த கிவி பழத்தில் வைட்டமின் சி, ஏ, இ அதிகம். இது தோல் நோய்கள், இதயநோய், புற்றுநோய், உடல் பருமன் போன்ற நோய்கள் தாக்காமல் இருக்க வைட்டமின் சி பயன்படுகிறது.

கிவி பழத்தில் உள்ள நார்சத்துகள் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுபடுத்துவதால் டயாபடீஸ் நோய் குணமாகும். மேலும் கொலஸ்ட்ராலைக் குறைக்கும். குழந்தைகளுக்கு ஆஸ்துமா, மூச்சிறைப்பு, சளி போன்றவற்றிலிருந்து கிவி பழம் பாதுகாக்கும்.

கிவி பழமானது குறைந்த அளவு கொழுப்பு சத்துகளை கொண்டுள்ளதால் எடை குறைக்க விரும்புபவர்கள் கிவி பழத்தை சாப்பிடலாம். விட்டமின் சி யை அதிக அளவில் கொண்டுள்ள கிவி பழம் நோய் எதிர்ப்பு சக்தியை கொண்டுள்ளது. நமது உடலில் கட்டுப்பாடு இல்லாமல் திரியும் ரேடிக்கிள்கள்தான் பல்வகையான சிதைவு நோய்களுக்கும், செல்களின் சிதைவிற்கும் அடிப்படைக் காரணங்களாக அமைகிறது.

இத்தகைய ரேடிக்கிள்களின் வன்தன்மையை அழித்து நோயின்றி நம்மை காக்கும் ஆற்றல் கிவி பழத்திற்கு உள்ளது. முதுமைக் காலத்தில் ஏற்படக்கூடிய கண் புரை, விழித்திரை சிதைவு, கண் நோய்களைத் தடுக்க தேவையான அளவு வைட்டமின் சி சத்துகளை கொண்டுள்ளதால் முதுமையில் இந்நோய்களிலிருந்து நம்மை பாதுகாக்கிறது.

இதயத்துடிப்பின் சீரற்ற நிலையை தடுத்து சீரான இயக்கத்திற்கு உதவி புரிகிறது. உடலில் பொட்டாசியத்தின் அளவானது குறைந்தால், இதயத் துடிப்பில் சீரற்ற நிலை ஏற்படக்கூடும். கிவி பழத்தில் அதிக அளவு பொட்டாசியச் சத்து இருப்பதால், இது இதயத் துடிப்பை சீரான நிலையில் வைத்துக் கொள்ள உதவுகிறது.

Read more: http://viduthalai.in/page-7/79041.html#ixzz2zZeJENNL

தமிழ் ஓவியா said...



ஆண்மையின் ஆணவமா?

ஆண் நிர்வாணம்
கடவுள் ஆகிறது!
பெண் நிர்வாணம்
காட்சி ஆகிறது!

காட்சி ஆனதோ
கை தொழுகிறது.
கடவுள் ஆனதோ
காமம் கக்குகிறது!

முரண் பாடுகள்
காலங் காலமாய்
சமூகச் சிக்கலா?
ஜாதீய தீண்டலா?
ஆண்மையின் ஆணவமா?

காதல், கண்ணீர்
இன்பம், துன்பம்
உரிமை, உணர்ச்சி
இருவருக்கும் பொதுவென
இன்றளவும் உலகம் நினையாதது ஏனோ?

தன் குழந்தையின்
அம்மணத்திற்கு ஆடை
அடுத்தவர் குழந்தை
ஆடை விலக்கல்.

திருத்தப்பட வேண்டியது
ஆடையா, ஆணவமா?
மறைக்கப்பட வேண்டியது
காதலா காமமா?
மாற்றம் தேவை!

பெண்ணின் ஆடையிலா?
ஆணின் பார்வையிலா?
சமூகத்தின் பதில்நோக்கி
காத்திருக்கும் பெண்குலம்!

- குடியாத்தம் ந.தேன்மொழி

தமிழ் ஓவியா said...

கருத்துரிமையை நெறிக்கும் சட்டம்

- சு.மதிமன்னன்

பிப்ரவரி 15 சனிக்கிழமை. டெல்லி பிரகதி மைதானத்தில் உலகப் புத்தகச் சந்தை. கடை எண் 11. வாசலில் 12 பேர் கூட்டம். பெங்குவின் பதிப்பகத்தின் நூல்கள் விற்கும் இடம். கூட்டம் கூச்சல் போட்டது. வென்டி டானிகர் ஹை! ஹை! என்று கூச்சல். போவோர், வருவோரையெல்லாம் கூச்சல் போடக் கூப்பிட்டனர் அந்த டஜன் நபர்கள். ஒருவரும் இவர்களோடு சேரவில்லை. இவர்கள் டர்ட்டி டஜன் என்று அவர்களுக்குத் தெரிந்திருக்குமோ?

வென்டி டானிகர் எழுதிய இந்துக்கள்_ மாற்று வரலாறு எனும் நூலைக் கண்டித்துக் கூச்சல். சிக்ஷா பச்சோ அந்தோலன் எனும் மதவெறிக் குழுவினரின் கூச்சல். அலட்சியப்படுத்திட வேண்டிய கூச்சல்.

ஆனால்....

பெங்குவின் பதிப்பகம் கூச்சலுக்குப் பயந்து பணிந்தது. அந்தப் புத்தகம் மொத்தத்தையும் திரும்பப் பெற்றுக் கொள்வதாகக் கூறியது. கூறியவாறு எழுதிக் கொடுத்தது. மதவெறிக் குழு சமாதானம் அடைந்தது. ஆனால், எழுத்தாளர்கள் நொந்து போயினர். கருத்துச் சுதந்திரம், எழுத்துச் சுதந்திரம் வேண்டும் என்பவர்கள் வருத்தப்பட்டனர். ஆயினும் என்ன? 125 கோடி மக்களை அச்சுறுத்த சிறு குழுவினர் போதுமே! அவர்களின் கையில் உள்ள ஆயுதம் அவ்வளவு வலுவானது! மத உணர்வு!

சாத்தானின் கவிதைகள் என்று ஒரு நூல். சல்மான் ருஷ்டி எழுதியது. மத உணர்வு என்று காரணம் காட்டி ஈரான் நாட்டு அதிபரே மரண தண்டனை விதித்தார். அந்த நூலை மொழிபெயர்த்தவர்கள்கூடக் கொல்லப்பட்டனர். ஆசிரியர் பிரிட்டனில் அடைக்கலம் பு-குந்தார். பத்தாண்டுகளுக்கு மேல் அவரைப் பாதுகாத்தது பிரிட்டன். ஆசிரியர் இன்றும் உயிருடன் உலவி வருகிறார்.

இந்த நூலைப் பதிப்பித்ததும் அதே பெங்குவின் பதிப்பகம்தான்! இப்போது மட்டும் ஏன் பெங்குவின் பின்வாங்கியது?

இந்தியாவின் ஆகப் பெரும் பணக்காரர் என்ற பெருமை பெற்றவர், திருபாய் அம்பானி. அவரது வரலாற்றை ஹமிஷ் மக்டனால்டு என்பவர் எழுதினார். தலைப்பு பாலியஸ்டர் இளவரசர்! இந்தியாவின் எல்லா உயர் நீதிமன்றங்களிலும் இந்நூலுக்குத் தடை வாங்கிவிட்டனர் 1998இல்! நூல் வரவே இல்லை!

நேரு _ காந்தி குடும்பம் பற்றி ஒரு நூல். குஷ்வந்த் சிங் எழுதினார். மேனகா காந்தி _ இந்திரா காந்தியின் இரண்டாவது மருமகள் _ வழக்குப் போட்டார். நூல் வெளி வருவதற்கு முன்பே தடை ஆணை வாங்கிவிட்டார்.

சட்ட விரோதமாகப் பொதுமக்களிடம் திரட்டிய 22 ஆயிரம் கோடி ரூபாயைத் திருப்பித் தருமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் அதன்படிச் செய்யாததால் உள்ளே தள்ளப்பட்ட சாஹரா அதிபர் சுப்ரதா ராய் பற்றி ஒரு நூல். சாஹரா: சொல்லப்படாத கதை என்று தலைப்பு. அவதூறாக எழுதப்பட்டிருப்பதாக வழக்குப் போட்டார் சுப்ரதா ராய். நூலுக்குத் தடை விதித்தது கல்கத்தா உயர் நீதிமன்றம்.

ஜெயலலிதா: ஒரு படப்பிடிப்பு என்ற தலைப்பில் ஒரு நூல். வாசந்தி என்ற எழுத்தாளர் எழுதினார். 1-.4.2011இல் வெளியிடப்பட திட்டம். ஒரு வாரத்திற்கு முன்னதாகவே தடை. பதிப்பாளர் ஓராண்டுக் காலம் வழக்காடிப் பார்த்தார். 27.8.2012இல் சென்னை அமர்வு நீதிமன்றம் தடை ஆணையை நிரந்தரமாக்கிவிட்டது. பதிப்பாளர் உயர் நீதிமன்றத்திற்குப் போகவில்லை. இதன் பதிப்பாளரும் பெங்குவின்தான்!

சிறீ அரவிந்தரின் வாழ்க்கைகள் என்று ஒரு புத்தகம். பீட்டர் ஹீஹ்ஸ் என்பார் எழுதி நியூயார்க்கில் வெளியிடப்பட்டது.

மனது புண்ணாகிவிட்டது என்று இரண்டு பேர் வழக்குப் போட்டனர். ஒரிசாவில், கீழமை நீதிமன்றங்களில்! வழக்கு விசாரணைக்குத் தடை விதித்துள்ளது ஒரிசா உயர் நீதிமன்றம். நூல் எழுதிய ஆசிரியரை நாட்டைவிட்டு வெளியேற்ற வேண்டும் என்று ஒரு வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில்! வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது. இந்த நூலின் பதிப்பாளரும் பெங்குவின்தான்.

இப்படி இந்தியாவில் எழுத்துரிமையும் கருத்துரிமையும் படும்பாடுகள் பற்றி எவ்வளவோ எழுதலாம்!

எதனால் இது இங்கே மட்டும்? இந்தியக் குற்றவியல் சட்டப் பிரிவு 295A தான் காரணம்! இச்சட்டம் எழுதப்பட்டது 1857இல்! இந்தியச் சிப்பாய்க் கலகம் நடந்ததற்குப் பிறகு, விக்டோரியா மகாராணி அளித்த உறுதிமொழிகளுக்குப் பின்னர் உருவாக்கப்பட்ட சட்டம். கிறித்துவர்களான அன்றைய ஆட்சியாளர்கள் தம் நாட்டுக் குடிமக்களான இந்து, முசுலிம்களின் மத உணர்வுகளுக்கு மாறாக நடந்து கொண்டனர் என்பதால்தான் சிப்பாய்க் கலகமே நடந்தது. அம்மாதிரி இனிமேல் நடக்காது என்ற உத்தரவாதத்தின் பேரில் சட்டம் எழுதப்பட்டது. இன்று அந்நியர் ஆட்சியும் இல்லை. எல்லோரும் இந்நாட்டு மன்னர் எனும் மக்களாட்சி(?) நடைபெறுவதாகக் கூறப்படுகிறது. இருந்தாலும் 160 ஆண்டுகளாக மாறுதல் இல்லாமலே சட்டம் இருக்கிறது!

சட்டத்திற்காக மக்களும் அவர்தம் உரிமைகளும் காவு கொடுக்கப்படுகின்றன.

கருத்துரிமை கிரிமினல் குற்றமாகக் கருதப்படுகிறது. சட்டத்திற்காக மக்களா? மக்களுக்காகச் சட்டமா?

தமிழ் ஓவியா said...

எது அறிவியல்

நீரை சூடு படுத்தினால் கொதிக்கும். எப்போது கொதிக்கும்? நீரின் வெப்பம் 100 டிகிரி அடைந்தவுடன் கொதிக்கும்.

எத்தனை தடவை 100 டிகிரி வெப்பத்தில் கொதிக்கும் ? ஒராயிரம் முறை அல்ல, ஈராயிரம் முறை அல்ல, ஒரு லட்சம் முறையானாலும், ஒரு கோடி முறையானாலும், ஒறாயிரம் கோடி முறையானாலும் 100 டிகிரி வெப்பத்தை அடைந்தால்தான் நீர் கொதிக்கும்.

இதுதான் - இப்படிதான் என்று உறுதியாக கூறுவது அறிவியல்.

இந்த மாதிரியும் இருக்கலாம் - இப்படியும் இருக்கலாம் என்பது யூகம் யூகம் யூகம் மட்டும்தான்.

ஜோசியம், ஜாதகம், நல்ல நேரம், கெட்ட நேரம் போன்றவற்றால் - அறிவியல் மாதிரி இதுதான் இப்படிதான் என்று சொல்ல இயலுமா ?

இப்படி சொல்ல இயலவில்லை என்றால், ஜோசியம், ஜாதகம், நல்ல நேரம், கெட்ட நேரம் இவை எவையுமே கண்டிப்பாக அறிவியல் இல்லை!

அறிவியல் இல்லாத ஒன்றை யூகத்தின் அடிப்படையில் நம்புவது நம்பாதது அவரவர் விருப்பமாக இருக்கலாம் ?

ஆனால், அறிவியல் இல்லாத ஒன்றை வைத்துக் கொண்டு, எடுத்து காட்டுக்கு, ஒருவருக்கு செவ்வாய் தோஷம் என்றும், கேட்டய நட்சத்திரம் என்றும், வரப் போற மாமியாருக்கு ஆகாது என்றும் சொல்வதெல்லாம் கடைந்தெடுத்த ஏமாற்றுத்தனம் அல்லாமல் வேறென்ன ? இதை விட அறிவுக்கு பூட்டு போடக் கூடிய செயல் இந்த லோகத்தில் தமிழகத்தை தவிர வேறெங்கே காண முடியும் ?

- - - _ ஹரிஷ் கமுககுடி மாரிமுத்து]

தமிழ் ஓவியா said...

மேதைமை

அறிஞர் பெர்னார்ட்ஷா நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர். அவரது படைப்புகளுக்குப் பதிப்பாளர்கள் ஒரு எழுத்துக்கு இவ்வளவு என்று பணம் கொடுப்பார்கள். பெரும்பாலும் ஓர் எழுத்துக்கு ஒரு ஷில்லிங் கொடுத்து விடுவார்கள்.

இதைக் கிண்டல் செய்ய நினைத்த ஓர் இளைஞன், பெர்னார்ட்ஷாவுக்கு ஆறு ஷில்லிங் அனுப்பி, இதைப் பெற்றுக் கொண்டு, ஷா தன் கைப்பட ஒரு கடிதம் தனக்கு எழுத வேண்டும் என்று கேட்டிருந்தான்.

பெர்னார்ட்ஷா, பண விஷயத்தில் எப்போதும் கறாராக நடந்து கொள்பவர்.

எனவே, தனது கடிதத்தில் ஆறு எழுத்திற்கு மேல் ஓர் எழுத்து கூடக் கூடுதலாக இருக்கக் கூடாது என்று, ஆறு எழுத்துகளைக் கொண்ட ஒரு வார்த்தையை எழுதி, அந்த இளைஞனுக்கு அனுப்பி வைத்தார்.

அந்த ஆங்கில வார்த்தை என்ன தெரியுமா? - Thanks.

தமிழ் ஓவியா said...

பிரபலமான விஞ்ஞானியான தாமஸ் ஆல்வா எடிசன் ஒரு முறை விருந்தொன்றில் கலந்து கொண்டபோது ஒரு நண்பர் அங்கு வந்து பேச ஆரம்பித்தார். எடிசனிடம் அவர் தொடர்ந்து இடை வெளியில்லாது நிறுத்தாமல் பேசிக் கொண்டிருந்தார். எடிசனுக்கோ தாங்க முடியவில்லை. இருந்தாலும் அங்கிருந்து நகலவும் வழியில்லை.

நண்பர் அருகிலிருந்த இன்னொருவரிடம் எடிசனை அறிமுகப் படுத்தினார். பேசும் எந்திரமான கிராம போன் ரிக்கார்டைக் கண்டு பிடித்தது என் நண்பர் எடிசன்தான், என்றார்

எடிசன் அவரிடம் சொன்னார், நான் பேசும் எந்திரத்தைக் கண்டு பிடித்தது உண்மைதான். ஆனால் நினைத்த நேரத்தில் அதை நிறுத்தி விட முடியும்.

- சந்திரன் வீராசாமி

தமிழ் ஓவியா said...

ஆதமும் ஏவாளும்
சாப்பிட்ட பழம் என்ன?

ஆதமும் ஏவாளும் சாப்பிட்ட பழம் என்ன என்ற கேள்விக்கு நீங்கள் உடனடியாக ஆப்பிள் என்று சொல்வீர்கள் என்று தெரியும்

விவிலியம் என்ன சொல்கிறது என்று பார்ப்போமா.

Genesis 2:9 And out of the ground made the LORD God to grow every tree that is pleasant to the sight, and good for food; the tree of life also in the midst of the garden, and the tree of the knowledge of good and evil.

Genesis 2:17 but of the tree of the knowledge of good and evil, thou shalt not eat of it; for in the day that thou eatest thereof thou shalt surely die.’

அது என்ன நன்மை மற்றும் தீமை குறித்த அறிவின் மரம்... இதை விட ஞானப்பழம் என்ற பெயர் பொருத்தமாக உள்ளதா

எத்தியோபியர்கள் படிக்கும் ஈனோகின் புத்தகத்தில் (31:4) இந்த மரம் குறித்து விளக்கப்பட்டிருக்கிறது. அது புளிய மரம் போலிருந்தது. அதன் பழங்கள் மெல்லிய திராட்சைபழங்களை போலிருந்தன, அதன் வாசனை பரவியிருதது

யூதர்களின் தல்முத் என்ற புத்தகம், அந்த பழம் திராட்சை என்கிறது. மற்றொரு தல்முத கதை ஏவாள் அந்த பழத்திலிருந்து வைன் அருந்தினாள் என்கிறது. அதை அத்திப்பழம் என்றும், கோதுமை என்றும் கூட கருதுகிறார்கள்

சிலர் அந்த பழம் மாதுளை என்று கூட சொல்கிறார்கள்.

மேல்நாட்டு ஓவியர்கள் மட்டுமே அந்த பழத்தை ஆப்பிள் ஆக்கினார்கள். (அவர்களுக்கு தெரிந்த பழம் அதுதான்). அதனால் தான் மேல் நாட்டு (ஐரோப்பிய) ஓவியங்களில் அந்த மரம் ஆப்பிள் மரமாகவும் அந்த பழம் ஆப்பிளாகவும் காட்டப்படுகின்றன. அவர்கள் (ஐரோப்பிய ஓவியர்கள்) என்ன செய்வார்கள். அவர்களுக்கு தெரிந்த பழத்தை ஓவியத்தில் வரைந்து விட்டார்கள். ஒரு வேளை ரவி வர்மா, இந்த காட்சியை வரைந்திருந்தால் தேங்காய் வரைந்திருக்கலாம்

அது இயேசுவும் அல்ல அது ஆப்பிளும் அல்ல

- மரியானோ ஆண்டோ புரூனோ மஸ்காரெனாஸ்

தமிழ் ஓவியா said...

மனுநீதிச் சோழன் நீதியின் அடையாளமா?


சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மனுநீதிச் சோழனின் சிலையை அகற்ற வேண்டும் என்று கோரி சேலம் இந்திரா நகரைச் சேர்ந்த வழக்குரைஞர் ஜி.பிரவீணா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில்,

மனுநீதிச் சோழனின் மகன் சாலையில் தேரோட்டிச் சென்றபோது திடீரென சாலையின் குறுக்கே ஓடிவந்த ஒரு பசுவின் கன்று தேர் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தது. இந்நிலையில் பசுவின் துயரத்தை அறிந்த மனுநீதிச் சோழன் தன் சொந்த மகனையே தேரை ஏற்றிக் கொன்றான். இதனால் நீதியின் அடையாளமாகப் போற்றப்படும் மனு நீதிச் சோழனின் சிலை உயர் நீதிமன்ற வளாகத்தில் நிறுவப்பட்டுள்ளது.

பசுவின் கன்று திடீரென சாலையின் குறுக்கே ஓடிவந்து தேர் சக்கரத்தில் சிக்கிக் கொண்டது. இதில் மனுநீதிச் சோழன் மகன் எந்தத் தவறும் செய்யவில்லை. பசுவின் கன்றைக் கொல்ல வேண்டும் என்ற எவ்வித நோக்கமும் அவனுக்கு இல்லை.

இந்நிலையில் ஒரு சிறுவனை கொடூரமாகக் கொன்ற மனுநீதிச் சோழனை நீதியின் அடையாளமாகக் கூற முடியாது. ஆகவே, உயர் நீதிமன்ற வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள மனுநீதிச் சோழன் சிலையை அகற்ற வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவினை விசாரித்த தற்காலிக தலைமை நீதிபதி சதீஷ் கே.அக்னிஹோத்ரி, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் மனுதாரரின் கோரிக்கை ஏற்புடையது அல்ல என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து மார்ச் 27 அன்று ஆணையிட்டனர். ஆனால்,கோரிக்கை என்னவோ மிகச்சரியானதுதானே. மனுநீதி என்பதே ஒரு குலத்துக்கு ஒரு நீதி உரைப்பதுதான். மனுநீதியை நம்பிய அந்த மதி கெட்ட மன்னன் ஓர் மனித உயிரை அல்லவா கொன்றிருக்கிறான். இன்றைய காலத்தில் சாலை விதிகளை மீறி குறுக்கே வந்து உயிரிழப்பவர்கள் அதிகம் இருக்கிறார்கள். அன்றாடம் செய்தி ஏடுகளில் பல்வேறு விபத்துகளை படிக்க நேர்கிறது. இன்று சாலை விதிகளை மதிக்கவில்லையென்றால்தான் தண்டனை.ஏனென்றால் இது மனித நீதிக் காலம். இப்படி ஓர் வழக்கு, இந்தக் காலத்தில் வந்தால் நீதிபதிகள் எந்த அடிப்படையில் தீர்ப்பளிப்பார்கள்? மனு நீதிச்சோழன் காட்டிய வழியிலா? அல்லது மனிதநீதி வகுத்த சாலைப் போக்குவரத்து சட்டங்களின் படியா?

இந்தக் கதையை மீண்டும் ஒரு முறை படித்துப் பாருங்கள். பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாகக் காட்டப்படும் விலங்குபசுவின் கன்று என்பதால் தான் மனுநீதி வேலை பார்த்திருக்கிறது. அது எருமையாகவோ, நாயாகவோ, கழுதையாகவோ ஏன் காட்டப்படவில்லை என்று கேள்வி எழுப்பிப் பார்த்தால் தெரியும் பார்ப்பன மனுநீதியின் லட்சணம். பசு புனிதமானது என்ற சிந்தனையைத் தவிர மனுநீதிச் சோழன் கதையைப் பார்ப்பனர்கள் முன்னிறுத்த வேறென்ன காரணம் இருக்க முடியும்?

- பெரியாரிடி

தமிழ் ஓவியா said...

மோடியின் குஜராத் மாடல் எது?
மோடியின் குஜராத் மாடல் எது?




மனுஷ்யபுத்திரன் (தனது முகநூல் பக்கத்தில்)

ஒரு புத்தகம் பற்றி குருட்டுத்தனமான மோடி ஆதரவாளர்களுக்குப் பரிந்துரைக்க விரும்புகிறேன். குஜராத் கலவரங்கள் பற்றிய சிறப்புப் புலனாய்வுக் குழு மோடியைக் குற்றமற்றவர் என்று அறிவித்ததன் மூலமாகத்தான் அவர் பிரதமர் வேட்பாளராக கம்பீரமாக வலம் வருகிறார். ஆனால் இந்தப் பரிசுத்தச் சீட்டு எப்படிப் பெறப்பட்டது என்பதை ஆதாரங்களுடன் இந்தப் புத்தகம் முன் வைக்கிறது.

பத்திரிகையாளர் மனோஜ் மிட்டா எழுதிய The Fiction of Fact-Finding: Modi & Godhra, a study of the Gujarat 2002 investigations என்ற இந்தப் புத்தகம் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பாதுகாப்பு ஏற்பாடுகளில் செய்த குளறுபடிகளுக்காக வர்மா கமிஷனால் கண்டிக்கப்பட்டு ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த அதிகாரி ஆர்.கே ராகவன் பின்னால் சி.பி.அய் இயக்குனராக வாஜ்பாய் அரசாங்கத்தினால் மறு வாழ்வு அளிக்கப்பட்டார். அவர்தான் மோடிமீதான இந்தச் சிறப்புப் புலனாய்வுக் குழுவிற்குத் தலைமை தாங்கினார். கலவரம் நடந்த பிப்ரவரி 27ஆம் தேதி நிலவரம் பற்றி தொடந்து காவல்துறை அதிகாரிகளுடன் கூட்டங்கள் நடத்திக்கொண்டிருந்த மோடி குல்பர்க் சொசைட்டி படுகொலை பற்றி தனக்கு 5 மணிநேரம் கழித்தே தெரியும் என்று புளுகினார். அதைச் சிறப்புப் புலனாய்வுக் குழு அப்படியே ஏற்றுக்கொண்டது. ஆனால் அந்த வன்முறையில், மோடியின் பொறுப்பு பற்றி இந்தப் புத்தகம் மிகத் தெளிவாக முன் வைக்கிறது. ராகவன் போன்ற அதிகாரிகள் மோடிக்கு வழங்கிய இந்தப் பரிசுத்தச் சான்றிதழின் மூலம் எப்படி நமது நீதி அமைப்பின் மீதான நம்பிக்கைகளைத் தகர்த்து எறிந்தார்கள் என்பதைப் பற்றி மனோஜ் மிட்டா ஆழமாக விவரிக்கிறார். மோடியின் குஜராத் மாடல் வளர்ச்சியைப் பற்றியே ஒப்பாரி வைப்பவர்கள் அவரது குஜராத் மாடல் நீதியைப் பற்றி ஒரு கணம் கண் திறந்து பார்க்க வேண்டும்.

இந்தப் புத்தகம் பற்றி அவுட் லுக் இதழ் வெளியிட்ட அறிமுகம் ஃப்ர்ஸ்போஸ்ட்.

இணைய தளம் வெளியிட்ட மனோஜ் மிட்டாவின் பேட்டி ஆகியவற்றின் இணைப்பைக் கீழே தந்திருக்கிறேன்.

http://www.outlookindia.com/article.aspx?289455
http://www.firstpost.com/politics/sit-chiefs-history-made-him-unfit-to-lead-probe-new-book-on-
2002-riots-1458785.html

தமிழ் ஓவியா said...


கேள்விப்பட்டதுண்டா?

விவசாயத்தில் 12 சதவிகிதம் சரிவைக் கண்டது அ.இ.அ.தி.மு.க ஆட்சி; இப்படியிருக்க, இந்தியாவிலேயே வளர்ச்சி தமிழ்நாட்டில் தான் என்று உண்மைக்கு மாறாகப் பேசும் முதலமைச்சர் - ஜெயலலிதாவைப் போல் வேறு எங்கும் கேள்விப்பட்டதுண்டா?

Read more: http://viduthalai.in/e-paper/79077.html#ixzz2zfV7Tkqp

தமிழ் ஓவியா said...


ஒழுக்கமும் சட்டமும்!


இன்றுள்ள ஒழுக்கங்கள் என்பவை எல்லாம் சட்டம்போல் சம்பந்தப்பட்ட விஷயங்களுக்குப் பொருந்தியவையே தவிர, எல்லோருக்கும் பொருந்தியவை அல்ல. - (குடிஅரசு, 24.11.1940)

Read more: http://viduthalai.in/page-2/79078.html#ixzz2zfVdweIO

தமிழ் ஓவியா said...

ஜாதீய மரபணுவைக் கண்டுபிடித்த கட்காரி


பி.ஜே.பி.யின் முன்னாள் அகில இந்தியத் தலைவர் நிதின்கட்காரி பிகார் தலைநகரமான பாட்னாவில் கடந்த 19 ஆம் தேதியன்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறிய கருத்து ஒரு சர்ச்சைப் புயலைக் கிளப்பியுள்ளது.

சிலர் வாயைத் திறந்தாலே - அதற்குள் அவர்கள் சிக்கலில் மாட்டிக் கொள்ளும் துகள்களும் இருப்பதுண்டு. இப்படி அடிக்கடி சர்ச்சைகளில் மாட்டிக்கொள்பவர் களுள் இவரும் ஒருவரே!

பிகாரின் மரபணுவில் ஜாதீயம் கலந்துள்ளது. அத னால்தான் பிகாரில் ஜாதீயத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அதே சமயம் பா.ஜ.க.வில் ஜாதீயத் துக்கு முக்கியத்துவம் கிடையாது. ஜாதீயத்துக்கு எதிரான கட்சி பி.ஜே.பி. என்று கூறியுள்ளார்.

கட்காரியின் இந்தப் பேச்சைக் கண்டித்து பிகார் மாநில காங்கிரஸ் தலைவர் பிரேம் சந்த் மிஸ்ரா பதிலடி கொடுத்துள்ளார். அவரது பேச்சுமூலம் பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். ஆகியவை பிகார் மக்களுக்கு எதிரா னவை என்பது தெளிவாகியுள்ளது. அவரது பேச்சுக்காக பிகார் மக்களிடம் பா.ஜ.க. மன்னிப்புக் கேட்கவேண்டும் என்று கூறியுள்ளார்.

பிகார் அய்க்கிய ஜனதா தளத்தின் செய்தித் தொடர் பாளர் ராஜீவ் ரஞ்சனும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற கருத்துகளைத் தெரிவித்து பிகார் மக்களை நிதின்கட்காரி அவமதித்துவிட்டார். இதுகுறித்து எழுத்துப்பூர்வமாக தேர்தல் ஆணையத்திடம் எங்கள் கட்சி புகார் செய்யும் என்று கூறியுள்ளார்.

ராஷ்ட்ரிய ஜனதா தளம் சார்பாகவும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிக்கலில் மாட்டிக் கொண்டதை உணர்ந்தே நிதின்கட்காரி வழக்கமாக பி.ஜே.பி. மற்றும் சங் பரிவார்க்காரர்கள் பின்பற்றும் அதே முறையைப் பின்பற்றியுள்ளார்.

பிகார் மாநில அரசியலில் ஜாதீயம் கலந்துள்ளது என்பதற்குப் பதிலாக மரபணுவில் ஜாதீயம் கலந்துள்ளது என்று தவறுதலாகக் கூறிவிட்டதாக பல்டி அடித்து விட்டார்.

இது ஏதோ வார்த்தைத் தவறி வரக் கூடியதல்ல - ஜாதீ யம் கலந்துள்ளது என்று சொல்லும்பொழுது மரபணு என்ற சொல் எப்படி வரும்? கொஞ்சம் அறிவைப் பயன் படுத்துபவர்களுக்கு இது எளிதில் விளங்காமல் போகாது.

பிகாரில் ஆட்சி அதிகாரம் என்பது பிற்படுத்தப்பட்ட வர்களின் கைகளில் இருந்து வருகிறது. இது இவர்களின் கண்களை உறுத்துகிறது என்பதுதான் உண்மை.

தமிழ் ஓவியா said...

அதேநேரத்தில் பா.ஜ.க.வை எடுத்துக்கொண்டாலும், ஆர்.எஸ்.எஸ். உள்ளடக்கிய சங் பரிவார்களை எடுத்துக் கொண்டாலும், பெரும்பாலான நேரங்களில், பெரும் பாலும் பார்ப்பனர்களாகவேதான் இருந்து வருகிறார்கள் என்பது வெளிப்படையான ஒன்றாகும்.
ஆர்.எஸ்.எஸின் தலைவர்கள் பெரும்பாலும் சித்பவன் பார்ப்பனர்களாகத்தானே வந்திருக்கிறார்கள் - இரண்டொருவர்களைத் தவிர.

பா.ஜ.க. என்றாலே பார்ப்பனர்களின் கட்சி என்ற வெகுமக்களின் எண்ணத்தை மாற்றவேண்டும் என்பதற் காகவே தாழ்த்தப்பட்டவர்களும், பிற்படுத்தப்பட்டவர் களும் ஒரு காலகட்டத்தில் திணிக்கப்பட்டனர்.

கோவிந்தாச்சாரியாரின் சமுதாய விஞ்ஞானம் (Social Engineering) இது.

அப்படி வந்தவர்தான் அகில இந்திய பா.ஜ.க. தலை வர் பங்காரு லட்சுமணன்; ஆனால், அடுத்த தேர்தலில் போட்டியிட அவருக்கு வாய்ப்புக்கூட அளிக்கப்பட வில்லை.

தமிழ்நாட்டில் டாக்டர் கிருபாநிதியும் அவ்வாறு அமர்த்தப்பட்டவர்தான்.

எப்படியெல்லாம் அவர் அவமானப்படுத்தப்பட்டார் என்பதை, அவர் வெளிப்படையாகக் கூறிப் புலம்பி னாரே! பி.ஜே.பி.யின் தேசியக் குழு உறுப்பினர் இல.கணேசன், தன் கையைப் பிடித்துக்கூட முறுக்கினார் என்று கூறினார் என்றால் நிலைமையைத் தெரிந்து கொள்ளலாமே! பிறகு தி.மு.க.வில் சேர்ந்துவிட்டார்.

உத்தரப்பிரதேச மாநிலத்திற்கு ஒரு பிற்படுத்தப்பட் டவர் தேவை என்றபோது கல்யாண்சிங்கை முன் னிறுத்தினார்கள். அவரைப் பலிகிடாவாக்கி பாபர் மசூதியையும் இடித்துத் தரை மட்டமாக்கினார்கள்.

ஆர்.எஸ்.எஸின் வேலை முடிந்தவுடன் கல்யாண் சிங் தூக்கி எறியப்படவில்லையா? அதேபோல, மத்தியப் பிரதேசத்தில் உமாபாரதி - அவருடைய உழைப்பால் மத்தியப் பிரதேசத்தில் பா.ஜ.க. ஆட்சி அமைந்தது; சிறிது காலம் அதன் முதலமைச்சராகவே இருந்தார். வழக்கு ஒன்றின் காரணமாகப் பதவி விலக நேர்ந்தது; வழக்கில் குற்றமற்றவர் என்று தீர்ப்பு வந்த நிலையில், மீண்டும் அவர் மத்தியப்பிரதேச மாநிலத்தின் முதலமைச்சராக அமர்த்தப்பட்டாரா? அதுதான் இல்லை.

பி.ஜே.பி.யை விட்டு வெளியேறும் நிலைக்கு அவர் தள்ளப்படவில்லையா? அந்த நேரத்தில் ஆர்.எஸ். எஸின் தலைவராக இருந்த சுதர்சன், உமாபாரதி வளர்ந்த விதம், குடும்பம் - சமூகநிலைபற்றித் தரக்குறைவாகப் பேச வில்லையா? ஒரு கட்டத்தில் உமாபாரதியும், கல்யாண் சிங்கும், பங்காரு லட்சுமணனும் பி.ஜே.பி. என்றாலே உயர்ஜாதி பார்ப்பனர் கட்சிதான் என்று விமர்சிக்கவில்லையா?

ஜகந்நாத் மிஸ்ரா போன்ற பார்ப்பனர்களின் ஆதிக் கத்தில் இருந்த பிகார் மாநிலம் - பிற்காலத்தில் பிற்படுத் தப்பட்டோர் கைகளுக்கு வந்த நிலையில், அதனைப் பொறுக்கமாட்டாது வெளியில் வந்து விழுந்த வார்த்தை கள்தான் - நிதின்கட்காரியின் அந்த ஜாதி மரபணு விஷயம்.

பார்ப்பன விரியன் குட்டிகளாயிற்றே - சும்மாவா ஆடும் பூணூல்?

Read more: http://viduthalai.in/page-2/79079.html#ixzz2zfVmLVZm

தமிழ் ஓவியா said...


கேள்விப்பட்டதுண்டா?


சேது சமுத்திரத் திட்டம் முதல் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை முடக்கி விட்டு, நான் எந்தத் திட் டத்தையும் முடக்கவில்லை யென்று மிகத் தைரியமாக மக்களிடம் பொய் மூட் டையை அவிழ்த்துக் கொட்டும் ஒரு முதல்வரை, ஜெயலலிதாவைத் தவிர வேறு எங்கும் கேள்விப் பட்டதுண்டா?

Read more: http://viduthalai.in/page-2/79087.html#ixzz2zfWTq8UG

தமிழ் ஓவியா said...


மனுஷ்யபுத்திரனின் பதில்


மனுஷ்ய புத்திரன் தேர்தல் களத்தில் இளைஞர்களின் பங்கு பற்றி சன் தொலைக்காட்சியில் விவாதத்தில் பங்கு கொண்டு பேசிக்கொண்டு இருந்தபோது கிரிஷ்ணகிரியில் மோடி பேசுவதை நேரடி ஒளிபரப்பு செய்தார்கள். மோடி குஜராத்தில் மின்சாரமும், தண்ணீரும் வெள்ளமாய் கிடைப்பது பற்றியும், வேலைவாய்ப்பில் குஜராத் கொடி கட்டிப் பறப்பது பற்றியும் பொய் சொல்லிக்கொண்டு இருந்தார்

நேரடி ஒளிபரப்பு முடிந்ததும் செய்தி யாளர் மனுஷ்யபுத்திரனிடம் இளைஞர்கள் அரசியல் விழிப்புணர்ச்சியுடன் இருக் கிறார்களா என்று கேட்டார்கள். அதற்கு பதில் அளித்த மனுஷ்ய புத்திரன் சற்றுமுன் பேசிய மோடி எவ் வளவு பொய்கள் கூறி இளைஞர்களை ஏமாற்றுகிறார் என்று பாருங்கள்.

குஜராத் அரசின் ஜூனியர் லெவல் வேலைக்கு 1500 இடங்களுக்கு 13 இலட்சம் பேர் விண்ணபிக்கிறார்கள். இதுதான் வேலையில்லாத் திண்டாட்டத்தை மோடி ஒழித்ததன் இலட்சியமா? நான்கு இலட்சம் விவசாயிகள் குஜராத்தில் மின் இணைப் புக்கு விண்ணப்பித்துவிட்டு பல மாதங் களாகக் காத்திருக்கிறார்கள். குஜராத் கிராமப்புறங்களில் மக்கள் குடி தண்ணீருக்காக பல மைல் தூரம் நடக் கிறார்கள். விவசாய நிலங்களை அதானி களுக்கும், டாட்டாவுக்கும் மோடி அள்ளி வழங்கியதில் பல்லாயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தினார் என்று சொல்லி அடுக்கடுக்காக அவர் சொன்ன அத்தனை யையும் கூறி குஜராத்தின் உண்மை நிலையை வெளிக்கொணர்ந்தார். மேலும் மோடி, இந்தத் தேர்தல் வாக் காளர்களுக்கான தேர்தல் அல்ல; கட்சி களுக்கான தேர்தல் அல்ல; இந்தியாவின் அத்தனைக் கோடி மக்களும் தேர்தலில் நிற்கிறார்கள் என்றார். அதற்கு பதிலளித்த மனுஷ்யபுத்திரன், மோடி வேட்பாளர்களை, கட்சியை , சித்தாந்தங்களைத் தாண்டி தனது தனிநபர் எதேச்சதிகாரத்தை நிறுவ விழைகிறார். அதுதான் அவர் பேசிவருவதன் அர்த்தம் என்றார்

இன்று மோடி பேசி முடித்த அடுத்த நிமிடம் அதே நேரலையில் விரிவாக மறுத்ததது சிறப்பானதாக இருந்தது.

-சரவணா இராஜேந்திரன்,
திருநெல்வேலி

Read more: http://viduthalai.in/page-2/79086.html#ixzz2zfWcgXmY

தமிழ் ஓவியா said...


கேள்விப்பட்டதுண்டா?


முஸ்லீம்கள் மட்டும்தான் சிறுபான்மையினரா? கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள், பார்சிகள் இருக்கிறார்கள், புத்த மதத்தினர் இருக்கிறார்கள் என்று சொல்லிவிட்டு, இப்பொழுது முஸ்லிம்களுக்கு ஒதுக்கீடு கொடுத்தது நான்தான் என்று ஜமக்காளத்தில் வடிகட்டிய உண்மைக்கு மாறாக அப்பட்டமாகச் சொல்லக் கூடிய ஒரு முதல் அமைச்சர் பற்றி கேள்விப்பட்டதுண்டா? வெகுதூரம் போக வேண்டாம் - தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் செல்வி ஜெயலலிதாதான் அவர்.

Read more: http://viduthalai.in/page-4/79070.html#ixzz2zfXKDnE9

தமிழ் ஓவியா said...


கேள்விப்பட்டதுண்டா?


முஸ்லீம்கள் மட்டும்தான் சிறுபான்மையினரா? கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள், பார்சிகள் இருக்கிறார்கள், புத்த மதத்தினர் இருக்கிறார்கள் என்று சொல்லிவிட்டு, இப்பொழுது முஸ்லிம்களுக்கு ஒதுக்கீடு கொடுத்தது நான்தான் என்று ஜமக்காளத்தில் வடிகட்டிய உண்மைக்கு மாறாக அப்பட்டமாகச் சொல்லக் கூடிய ஒரு முதல் அமைச்சர் பற்றி கேள்விப்பட்டதுண்டா? வெகுதூரம் போக வேண்டாம் - தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் செல்வி ஜெயலலிதாதான் அவர்.

Read more: http://viduthalai.in/page-4/79070.html#ixzz2zfXKDnE9

தமிழ் ஓவியா said...


கேள்விப்பட்டதுண்டா?


முஸ்லீம்கள் மட்டும்தான் சிறுபான்மையினரா? கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள், பார்சிகள் இருக்கிறார்கள், புத்த மதத்தினர் இருக்கிறார்கள் என்று சொல்லிவிட்டு, இப்பொழுது முஸ்லிம்களுக்கு ஒதுக்கீடு கொடுத்தது நான்தான் என்று ஜமக்காளத்தில் வடிகட்டிய உண்மைக்கு மாறாக அப்பட்டமாகச் சொல்லக் கூடிய ஒரு முதல் அமைச்சர் பற்றி கேள்விப்பட்டதுண்டா? வெகுதூரம் போக வேண்டாம் - தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் செல்வி ஜெயலலிதாதான் அவர்.

Read more: http://viduthalai.in/page-4/79070.html#ixzz2zfXKDnE9

தமிழ் ஓவியா said...


கேள்விப்பட்டதுண்டா?

மக்களைச் சந்திக்காமல் தேர்தலுக்குத் தேர்தல் மட்டும் ஹெலிகாப்டரில் பறந்துவந்து எழுதி வைத்ததைப் படித்துவிட்டுச் செல்லும் முதலமைச்சர் ஒருவரைப்பற்றிக் கேள்விப்பட்டதுண்டா?

கேள்விப்படுவதென்ன - இப்பொழுது நேரிலேயே பார்த்துக்கொண்டு தானிருக்கிறோம் - அவர்தான் மாண்புமிகு ஜெ.ஜெயலலிதா.

கேள்விப்பட்டதுண்டா?

யுத்தம் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள் என்று ஈழத்தில் இலங்கை அரசின் போரை நியாயப்படுத்திப் பேசிவிட்டு, இப்பொழுது ஈழத் தமிழர்கள் கொல்லப் பட்டதற்காகக் கண்ணீர்விடும் முதலமைச் சரைக் கண்டதுண்டா?

ஏனில்லை? இங்கே தமிழ்நாட்டில்தான் இருக்கிறார் - அவர்தான் புரட்சியைப் பெயருக்கு முன்னாள் ஒட்டி வைத்துக்
கொண்டுள்ள செல்வி ஜெயலலிதா.

Read more: http://viduthalai.in/page-6/79110.html#ixzz2zfYCsMb9