Search This Blog

17.4.14

யாரோ பண்ணியதற்குப் பார்ப்பானை ஏன் குறை சொல்ல வேண்டும்?

என்றென்றும் சூத்திரனாக இருப்பதைவிட மானக்கேடு வேறு என்ன?

எங்களைப் பார்ப்பனத் துவேஷிகள் (வெறுப்பாளர்கள்) என்று சொல்கிறார்கள், "எவனோ பண்ணினான்; பார்ப்பானை ஏன் திட்ட வேண்டும்?" என்று சிலர் கேட்கிறார்கள். எவனோ பண்ணினால் இவன் ஏன் பூணூல் போட்டுக் கொள்கிறான்? ஏன் தன்னைப் பிராமணன் என்று சொல்லிக் கொள்கிறான்? ஏன் உச்சிக்குடுமி வைத்துக் கொள்கிறான்? ஏன் அக்கிரகாரத்தில் தனியாக வாழ்கிறான்? அவனுடைய பெண்டாட்டி மட்டும் ஏன் தனியான வகையில் புடைவை கட்டிக் கொள்ள வேண்டும்? இந்த மாதிரியெல்லாம் ஏன் அவன் தன்னைத் தனியாகப் பிரித்து வேறுபடுத்திக் காட்டிக் கொள்ள வேண்டும்? 'யாரோ பண்ணியதற்குப் பார்ப்பானை ஏன் குறை சொல்ல வேண்டும்?' என்று சட்டசபையில் சிலர் பேசுகிறார்கள். எவனோ பண்ணியிருந்தால் இந்தப் பார்ப்பான் ஏன் அவனைப் பின்பற்ற வேண்டும்? அவன் சொன்னபடி ஏன் நடக்க வேண்டும்? இவன் தானே நம்மைச் சூத்திரன் என்று சொல்கிறான்?

எவனோ உழைக்க இவன் அள்ளிக் கொட்டிக் கொள்ள வேண்டும் என்பதுதான் சமுதாய அமைப்பு, சாஸ்திரம், புராணம், சட்டம் என்றால், நாம் எப்படிச் சும்மா இருக்க முடியும்? இந்த நிலைமையை மாற்றத்தானே நாம் பாடுபடுகிறோம். மற்றப்படி எனக்கு எந்தத் தனிப்பட்ட பார்ப்பனர் மீதும் விரோதம் (பகைமை) கிடையாது.


சாதிக்கு ஆதாரமாக என்னென்ன இருக்கின்றனவோ அவையெல்லாம் ஒழிந்தால்தான் சாதி ஒழியும். அவற்றிலெல்லாம் கைவைக்கக்கூடாது என்றால் எப்படி ஒழியும்? கெட்ட துஷ்ட ஜந்துக்கள் ஒரு இடத்தில் இருந்தால் அவைகளை ஒவ்வொன்றாகச் சுட்டுக் கொண்டிருந்தால் ஆகுமா? துஷ்ட ஜந்துக்கள் இருக்க எவை காரணமாக இருக்கின்றனவோ அந்தக் கல், மண், முள், காடு எல்லாவற்றையும் நெருப்பு வைத்து ஒழித்து சமமாக்கினால்தானே அங்கிருக்கும் தேள், பாம்பு, கரடி, புலி எல்லாம் ஒழியும்? அந்த மாதிரிதானே சாதிக்கு ஆதாரமாக யார் யார் இருக்கிறார்களோ, என்னென்ன இருக்கின்றனவோ அவைகள் எல்லாம் ஒழிக்கப்பட வேண்டும் என்கிறோம்.

'மதத்தில் பிரவேசிக்கமாட்டோம்; சாதி முறையைப் பழக்க வழக்கங்களைக் காப்பாற்றுவோம்; இவை தனிப்பட்ட உரிமைகள்; இந்த உரிமைகள் பாதுகாக்கப்படும்' என்று அழுத்தமாகச் சட்டம் செய்து வைத்துக் கொண்டார்கள்.

கடவுள் சாதியை உண்டாக்கினார் என்றால் கடவுளை உடை, கொளுத்து என்று சொல்லிப் பிள்ளையாரை உடைத்தோம்! இராமனைக் கொளுத்தினோம்.

சட்டத்தில் சாதிக்குப் பாதுகாப்பு இருக்கிறது. அந்தப் பாதுகாப்பு நீக்கப்பட வேண்டும்.

இல்லையென்றால் அதற்கான விளக்கமோ சாதிக்குப் பாதுகாப்பான பகுதிகளை நீக்குவதற்கு உறுதிமொழியோ அரசாங்கத்திடமிருந்து வரவேண்டும். இல்லையென்றால் அரசமைப்புச் சட்டத்தைக் கொளுத்துவோம் என்று 3-ஆம் தேதி (1957-நவம்பர்) கூடிய தஞ்சாவூர் மாநாட்டில் தீர்மானம் போட்டு 15-நாள் வாய்தா (காலக்கெடு) கொடுத்தோம்.

இன்றோடு அந்த வாய்தா தீர்ந்து போய்விட்டது. நாம் கொடுத்த 15- நாள்களில் என்ன செய்தார்கள் தெரியுமா? சாதியைக் காப்பாற்ற பாதுகாப்பு செய்து கொண்டார்கள்!

இந்தச் சட்டம் சாதியைக் காப்பாற்றுகிறது; ஆகவே இதை நெருப்பு வைத்துக் கொளுத்தப் போகிறோம் என்று சொல்கிறோம்; இல்லை நெருப்பு வைக்கக்கூடாது என்றால் அந்த மாதிரி சாதிக்குப் பாதுகாப்பு சட்டத்தில் இல்லை என்பதற்கு விளக்கம் கொடுக்க வேண்டும்; அல்லது இருந்தால் சட்டத்தைத் திருத்துகிறேன் என்று சொல்ல வேண்டும்.

நீ சாதியைக் காப்பாற்றித்தான் தீருவேன் என்கிறாய். சாதியைக் காப்பாற்றும் சட்டத்தைக் கொளுத்துபவர்களும் 3-ஆண்டு சிறை என்று சட்டம் கொண்டு வந்து விட்டாய்; இந்தச் சட்டத்திற்குப் பயந்து கொண்டு கொளுத்தாவிட்டால் நாளைக்கு நம்மைச் சூத்திரன் என்றே கூப்பிடுவான்!

சட்டத்தில் ஏதாவது குறையிருந்தால் அதனை முறைப்படி திருத்தலாம் என்று மந்திரி சொல்கிறார். அரசமைப்புச் சட்டத்தை வகுத்த பார்ப்பனர்கள், நம்முடைய மக்கள் என்றென்றைக்கும் அடிமையாய் இருப்பதற்காக சட்டம் வகுத்துக் கொண்டார்கள். அதை எளிதில் மாற்ற முடியாதபடி பாதுகாத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே தான் கொளுத்துகிறோம். கொளுத்துவது அவசியமில்லை என்று சொன்னால் சட்டம் இந்த வகையில் செய்ய முடியுமென்று சொல்லட்டுமே?


இப்போது சாதியைக் காப்பாற்ற சட்டம் எழுதி வைத்துக் கொண்டுள்ளான். இன்னும் கொஞ்ச நாள் போனால் - நாங்கள் ஒழிந்தால் அவனவன் சாதி முறைப்படி வாழவேண்டுமென்று கொண்டு வந்துவிடுவான்!

நம் கண் முன்னாலேயே ஆச்சாரியார் குலக்கல்வித் திட்டம் கொண்டுவந்தாரே? பாதி நேரம் குலத்தொழில் படிக்காத பிள்ளைகளைப் பள்ளியில் சேர்க்காதே என்று உத்தரவு போட்டாரே? இது ஒரு வருடம் நடந்ததே! இத்தனைக்கும் அன்று எதிர்க்கட்சி மெஜாரிட்டி (பெரும்பான்மை) ஒன்றும் அசைக்க முடியவில்லையே! கத்தியை எடு என்று சொன்னவுடன் ஓடினார். பிறகு காமராசர் வந்தார் குலக்கல்வித் திட்டத்தை எடுத்தார்.

நாளையதினம் காமராசர் ஒழிந்து இந்த நிலைமை திரும்பாது என்பதற்கு என்ன உத்தரவாதம்? அந்த மாதிரியான சட்டமும், அமைப்பும், வாய்ப்பும் அவர்களுக்கு இருக்கின்றன. ஒவ்வொரு நிமிடமம் நாம் உயிருக்குப் பயந்து கொண்டுதானே வாழவேண்டியிருக்கிறது? இன்னமும் புதிது புதிதாக அதிகாரங்களையெல்லாம் அவன் (பார்ப்பான்) அதிகமாக்கிக் கொண்டு இருக்கிறான். இந்த நிலைமையில் நாம் சும்மா இருந்தால் எல்லாவற்றையும் நாம் ஒப்புக் கொண்டுள்ளோம் என்று அவன் மேலும் மேலும் நம்மை அழுத்துகிறான்!

சட்டத்தைக் கொளுத்துகிறோம் என்று சொன்னால் மேலே இருப்பவர்கள் கவனிக்க வேண்டும். ஏன் இவ்வாறு இவன் சொல்கிறான்? ஏன் இப்படிச் செய்கிறான் என்பதைக் கவனிக்க வேண்டும்; சும்மா பிடித்து அடை என்றால் அடைத்து விடுகிறார்கள். அதனால் எரிந்து கரியாகிய சட்டம் எரியாததாக ஆகிவிடுமா?


1957-நவம்பர் 3-ஆம் தேதி தஞ்சாவூரிலே மாநாடு நடைபெற்றது உங்களுக்கெல்லாம் தெரியும். 6-ஆம் தேதி என்னைப் பிடித்து திருச்சி, குளித்தலை, பசுபதி பாளையம் ஆகிய மூன்று ஊர்களில் பேசிய பேச்சுக்களை வைத்து என் மீது (வழக்கு) போட்டிருக்கிறார்கள்.

சட்டசபையில் மந்திரியே சொல்லியிருக்கிறார் "ராமசாமி சொல்வது எல்லாம் சட்டத்துக்கு உட்பட்டே இருக்கின்றன" என்று; "இல்லை இல்லை, கொல்லு குத்து என்று பேசியிருக்கிறார்" என்று பத்திரிகைக்காரர்கள் எல்லாம் கூப்பாடு போட்டார்கள்; "அப்படியானால் அவர் பேசிய பேச்சுக்களை எழுதிய ரிப்போர்ட்களைக் கொண்டு வாருங்கள்" என்று பத்திரிகைக்காரர்களை மந்திரி கேட்டார்; இந்தப் பத்திரிகைக்காரர்கள் ஒருவரும் போகவில்லை.

சட்டசபையில் மந்திரி சொல்கிறார் நம்முடைய நடவடிக்கைகள் சட்டத்துக்கு உட்பட்டே இருக்கின்றன என்று; இதை இந்தியா முழுவதிலும் உள்ள பத்திரிகைகள் வெளியிட்டுள்ளன.

பிறகு இந்தப் பார்ப்பனர்கள் மேலிடத்தில் போய் ரகளை (கலகம்) செய்திருக்கின்றனர்; அதன் பின்னர் மேலிடத்திலிருந்து உத்தரவு வந்திருக்கிறது! மேலிடத்தாருக்கு நல்ல பிள்ளையாக நடந்து கொள்வதற்காக இப்போது கேசு (வழக்கு) எடுத்து இருக்கிறார்கள்; மேலிடத்து உத்தரவுக்காக நம்மீது நடவடிக்கை எடுப்பதனால் நமக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது?

முன்பு கொடி கொளுத்துகிறேன் என்ற சமயத்தில் சட்டம் செய்ய முடியாது என்று சொன்னவர்கள் இப்போது சட்டம் செய்திருக்கிறார்கள். அவனுக்குத் தமிழ்நாடு சட்டசபையிலே சட்டம் செய்திருக்கிறார்கள். அவனுக்கு நாடாளுமன்றத்திலேயே சட்டம் செய்ய வெட்கம்; உலகமெல்லாம் தெரிந்துபோகுமே. தமிழ்நாட்டில் காந்தி சிலையை உடைக்கிறார்கள் அரசமைப்புச் சட்டத்தைக் கொடியைக் கொளுத்துகிறார்கள். அரசமைப்புச் சட்டத்தை எரிக்கிறார்கள் என்பது.

சட்டசபையிலே, என் மீது நடவடிக்கை எடுக்க சட்டமில்லை என்று சொன்ன விஷயத்திற்கே இப்போது நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள்; எது எப்படியிருப்பினும் கோர்ட்டில் ( நீதிமன்றத்தில்) இருக்கும் வழக்கைப் பற்றி நான் அதிகம் பேச விரும்பவில்லை. அதற்காக வேறு நடவடிக்கை வந்துவிடுமே என்பதற்காக அல்ல; மனப்பூர்த்தியாகவே சொல்கிறேன்.

இந்த அரசமைப்புச் சட்டத்தில் சாதிக்கும், மதத்திற்கும் அவனவனுக்குண்டான பழக்க வழக்கங்களைக் காப்பாற்றிக் கொள்ளவும், அடிப்படை உரிமைகளில் ஒன்றாக மத சுதந்திரம் கொடுத்திருக்கின்றான். மாகாண அரசாங்கமே இதில் பிரவேசிக்க முடியாது. இந்து மதம் உள்ள வரையில் நாங்கள் சூத்திரர்கள்தான் - அடிமைகள்தான்; ஆகவே இந்த உரிமை கொடுத்துள்ள அரசமைப்புச் சட்டம் ஒழிக்கப்பட்டே ஆக வேண்டும்.


இந்த நிலைமைக்கு வந்ததற்கே காரணம் ஒரு ஓட்டலில் "பிராமணாள்" என்று போட்டுள்ள போர்டை (பெயர்ப் பலகையை) எடுக்க மறுத்தான். அந்த ஓட்டலில் (உணவகம்) முன்மறியல் செய்து 800-பேர்வரை சிறைக்குச் சென்றிருக்கின்றனர். நம்முடைய சர்க்கார் (அரசு) ஏதும் செய்ய முடியாமல் விழிக்கிறார்கள். மேலே சொல்லிச் செய்யக் கூடாதா என்றால் அவனுக்கு மத சுதந்திரம் கொடுத்துள்ளோமே என்கிறான். ஏதோ ஓர் அளவுக்குச் செய்ய வேண்டும் என்றால் செய்யலாம். நாம் இங்கே மறியல் செய்கிறோம்; அங்கே கேரள ஆட்சியில் சாதிச் சொல் போடக்கூடாது என்று மிரட்டியிருக்கிறான்.

நாங்கள் தொடர்ந்து மறியல் செய்து கொண்டிருக்கிறோம். மேலும் மேலும் தொடர்ந்து செய்து கொண்டிருந்தால் அதனால் ஏதாவது பயன் ஏற்படும் என்றால் செய்து கொண்டிருக்கலாம். நிலைமை மாறவில்லை. ஆகவே அரசமைப்புச் சட்டத்தைக் கொளுத்தப் போகிறோம். இதில் வெற்றி பெறாவிட்டால் காந்தி சிலையை உடைக்கப்போகிறோம்.

நேற்று சட்டசபையிலேயே கேட்டிருக்கிறார்கள் ஜவகர்லால் நேரு ராஜேந்திரபிரசாத் இவர்களுக்குக் கொடும்பாவி கட்டி இழுத்து, இவர்களுடைய சிலையை உடைத்தால் நீ என்ன செய்வாய்?" என்று; வேண்டுமானால் அதற்குச் சட்டம் செய்; சட்டத்தினாலேயே உயிர்வாழ்! மக்களுடைய அன்பினால், திருப்தியினால் நீ (அரசாங்கம்) உயிர்வாழப் போவதில்லை.

சுதந்திரம் (விடுதலை) வந்துவிட்டது என்று நீ சொல்கிறாய்; இன்னமும் நாங்கள் சூத்திர்கள் தான்; வடநாட்டானால் கொள்ளையடிக்கப்படத்தான் இந்தச் சுதந்திரம் என்றால், நாங்கள் சட்டத்தைக் கொளுத்திவிட்டு அதன் விளைவை அனுபவிக்கிறோம்; எத்தனை பேரைத் தண்டிக்க முடியும்? எவ்வளவு நாளைக்குத் தண்டிக்க முடியும்?

போலீஸ்காரனுக்கு அடங்கி நட, சட்டத்திற்கு அடங்கி நட என்று நான் சொல்கிறேன். இப்படிச் சொல்கிற என்னுடைய பேச்சைக் கூட மதிக்கவில்லையானால் என்ன பொருள்? இல்லை நான் சொல்வது பொது மக்கள் கருத்தா இல்லையா என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். நேற்று நடந்தது தஞ்சாவூரில் மாநாடு அதில் 2-லட்ச மக்கள் திரண்டனர். அவர்களுடைய உணர்ச்சியை நீ பார்த்திருக்க வேண்டும். இல்லை பொது ஜன வோட்டு எடு; சாதி ஒழிய வேண்டுமா வேண்டாமா என்று. ஒன்று மில்லை வெறும் அடக்கு முறை தான் என்றால் என்ன அர்த்தம்?

அடக்கு முறைச் சட்டம் செய்த பிறகு நாம் சும்மா இருந்தால் வெளியில் தலை காட்ட முடியுமா? இந்த நிலையில் குடும்பத்துக்கு ஒருவர் சிறைக்குப் போக நாம் துணிந்துவிட வேண்டியதுதானே! மூன்று வருடமா அது மூன்று நிமிடம் என்றால் தானே நாம் மனிதர்!

ஆகவே சாதிக்குப் பாதுகாப்பான அரசமைப்புச் சட்டத்தை வருகிற 26-ஆம் தேதியன்று நாம் ஆயிரக்கணக்கில் கொளுத்த வேண்டும். இரகசியமாயல்ல, பகிரங்கமாகக் கொளுத்தி விட்டுப் பெயர் கேட்டால் சந்தோஷமாகக் கொடுங்கள்! கோர்ட்டுக்கு (நீதிமன்றத்துக்கு) அழைத்துக் கொண்டு போனால் செல்லுங்கள்!

"இந்தச் சட்டம் சாதியைக் காப்பாற்றும் சட்டம்; இந்தப் பார்ப்பனச் சதிச்சட்டத்தை லேசில் மாற்ற முடியாது. இதற்கு எங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் அறிகுறியாக இதைக் கொளுத்தினோம்" என்று சொல்லுங்கள்.

முக்கியமாக உள்ள கழகத் தோழர்கள் நூற்றுக்கணக்கில் சட்டப் புத்தகம் வாங்கி  ஊரில் எல்லோருக்கும் கொடுக்க வேண்டும்; மக்கள் எல்லோரும் இதைக் கொளுத்த வேண்டும். கொளுத்த அந்தத் துண்டு காகிதங்களையும் சாம்பலையும் ஒரு கவரில் போட்டு புக்போஸ்டில் (நூல் அஞ்சலில்) மந்திரிக்கு அனுப்ப வேண்டும்.

தைரியமுள்ளவர்கள் உங்களுடைய பெயர், விலாசம் (முகவரி) எல்லாம் அதில் போட்டு அனுப்புங்கள்.

"எங்களுடைய பிள்ளை குட்டிகளாவது சூத்திரத் தன்மையிலிருந்து விடுபட்டே ஆக வேண்டும்; அதற்காக எந்த விலை கொடுக்கவும், நாங்கள் யார் என்பதை 26-ஆம் தேதியன்று நிரூபித்துக் காட்டுங்கள்!


---------------------------- 17.11.1957 கடலூர் மஞ்சை மைதானத்தில் பெரியார் ஈ.வெ.ரா. சொற்பொழிவு- “விடுதலை”, 22.11.1957

33 comments:

தமிழ் ஓவியா said...


திருநங்கைகளை மூன்றாவது பாலினமாக அங்கீகரித்து உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு வரவேற்கத்தக்கது


திருநங்கைகளை மூன்றாவது பாலினமாக
அங்கீகரித்து உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு வரவேற்கத்தக்கது

சமுதாயம், கல்வி, பொருளாதார வளர்ச்சிக்கு மத்திய, மாநில அரசுகள் உதவிட வேண்டும்

தமிழர் தலைவர் அறிக்கை

உலகத் தமிழர்களின் வெந்த புண்ணில் வேல்!

திருநங்கைகளை மூன்றாவது பாலினமாக அங்கீகரித்து உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பினை வரவேற்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

உச்சநீதிமன்ற வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க நாள் நேற்று (15..4.2014); நீதிபதிகள் கே.எஸ். இராதாகிருஷ்ணன், திரிபாதி ஆகியோரால் திருநங்கைகளை மூன்றாவது பாலினமாக அங்கீகரித்து வழங்கப்பட்ட தீர்ப்புதான் அது.

சமுதாயத்தில் அவர்களின் நிலை

அரவாணிகள் என்ற பெயரில் ஏதோ நடமாடும் நிலையில் தான் அவர்கள் இருந்து வந்தனர். சமுதாயத்தில் ஏதோ அருவருப்பானவர்கள் கேலிக்குரியவர்கள் என்பது போன்ற மனப்பான்மை இருந்து வந்தது.

பிறப்பின் அடிப்படையில் உருவ அமைப்பில் சில மாற்றங்கள் இருந்து விடுவதாலேயே அவர்கள் மதிக்கப்படத் தகுந்தவர்கள் அல்ல என்ற மனப்பான்மை மனிதத் தன்மையற்றது - பகுத்தறிவுக்கும் விரோதமானது.

உச்சநீதிமன்ற தீர்ப்பு

ஓர் உச்சநீதிமன்ற தீர்ப்பின் வாயிலாக அம்மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டது என்பது பெரிதும் போற்றி வரவேற்கப்பட வேண்டிய ஒன்றாகும். இந்திய அரசமைப்பு - பாலினம், மதம், ஜாதி ஆகிய வேறுபாடுகளைக் கடந்து சம வாய்ப்பை அனைத்துக் குடி மக்களுக்கும் வழங்குகிறது என்று உச்சநீதிமன்ற தீர்ப்பில் சிறப்பாக எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் திருநங்கைகளை மூன்றாம் பாலினமாக அங்கீகரிப்பதற்கு (இந்திய அரசமைப்புச் சட்டம் அமலாகி) 64 ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கின்றன என்றாலும் காலந் தாழ்ந்தாவது இப்படி ஒரு தீர்ப்பு வந்ததே என்று வரவேற்று மகிழ்ச்சி அடைகிறோம். உச்சநீதிமன்ற தீர்ப்பினை வரவேற்று, நேற்று (14.5.2014) சென்னை ஈக்காட்டுத் தாங்கலில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்திலும் பேசினேன்.

திராவிடர் கழகம் நடத்திய கோவைப் பெண்கள் மாநாட்டுத் தீர்மானம்

13.4.2013 அன்று கோவை சுந்தராபுரத்தில் திராவிடர் கழகத்தின் சார்பில் நடத்தப்பட்ட புரட்சிப் பெண்கள் மாநாட்டில் திருநங்கைகள் குறித்த தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது.

திருநங்கையர்களுக்கான உரிமைகளும், வாய்ப்புகளும்

(1) ஆண், பெண் என்ற இருபாலோடு திருநங் கைகளை மூன்றாவது பாலாக, மாற்றுப் பாலினம் என்று சட்டரீதியாக அறிவிக்கப்பட வேண்டும் என்றும், Sex என்ற அரசு விண் ணப்பங்களில் இப்பிரிவுக்கும் சம இடம் தரவேண்டியது அவசியம்.

(2) திருநங்கைகளின் முன்னேற்றத்திற்காக உருவாக்கப் பட்டுள்ள வாரியம் இன்னும் செயல்படாத நிலையில் இருப்பதை மாற்றி, உடனே செயல்படவைக்க வேண்டும் என்றும்,
(3) சட்டமன்றங்கள், நாடாளுமன்றத்தில் சிறுபான்மை யினர் நியமனம் செய்யப்படுவது போல திரு நங்கையருக் கும் அந்த வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்றும்,

தமிழ் ஓவியா said...


(4) கல்வி, வேலைவாய்ப்பில் திருநங்கையர்க்குக் குறிப் பிட்ட அளவில் இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்றும் திருநங்கையர்களுக்கு வீடு கட்ட மனை, நிதி உட்பட அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும் என்றும் இம்மாநாடு மத்திய, மாநில அரசுகளை வற்புறுத்துகிறது என்பதுதான் அந்தத் தீர்மானம்!

மாநாடுகளில் திராவிடர் கழகம் நிறைவேற்றும் தீர்மானங்கள் எல்லாம் பிற்காலத்தில் சட்டங்களாக வடிவம் பெற்று வந்துள்ளன. அந்த வரிசையில் இதுவும் முக்கியமானதாகும். அந்தக் கோவைப் பெண்கள் மாநாட்டில் ரேவதி என்ற திருநங்கை அவர்களும் கலந்து கொண்டு அவர்களின் பிரச்சினைகள் குறித்து கருத்துக் கூறும் வாய்ப்பும் அளிக்கப்பட்டது.

அரவாணிகள் என்ற பெயரை திருநங்கைகள் என்று அழைத்து, அவர்களுக்கென்று வாரியம் அமைத்த சாதனைக்குச் சொந்தக்காரர் மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்களே.

தி.மு.க. தேர்தல் அறிக்கையில்

16ஆவது மக்களவை தேர்தல் திமுக அறிக்கையில் கூட, மிகவும் கவனமாக அவர்கள் பிரச்சினை முக்கியமாக இடம் பெற்றுள்ளது. மொத்தம் நூறு அம்சங்களைக் கொண்ட ஆவணக் காப்பகமான திமுகவின் தேர்தல்அறிக்கையில் 11ஆவது அம்சமாக அரவாணிகள் (Transgenders) என்ற தலைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரவாணிகள்

இந்தியாவிலேயே முதன்முதலாகக் கலைஞர் ஆட்சி யில்தான் அரவாணிகள் எனப்படும் திருநங்கைகளுக்கு அங்கீகாரம் அளித்திடும் வகையில், அவர்களுக்குக் குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. அவர்களுக்குத் தேவைப்படும் அறுவை சிசிச்சையை இலவசமாக செய்வதற்கும் வழிவகை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் அரவாணிகள் நலவாரியம் ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சிகளின் தொடர்ச்சியாக; அரவாணிகளுக்கு தேசிய அளவில் உரிய அங்கீகாரம் பெற்றுத் தரும் வகையில், அவர்களுக்கு தி.மு.கழக ஆட்சிக் காலத்தில் வழங்கப்பட்ட சலுகைகள் அனைத்தையும் அகில இந்திய அளவில் வழங்கிட தி.மு.கழகம் பாடுபடும். மேலும், கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளிலும் அவர் களுக்கு உரிய இடம் வழங்கிடுவதோடு, அரவாணிகளை மூன்றாம் பாலினமாக அங்கீகரித்திட வேண்டுமென மத்திய அரசை தி.மு.கழகம் வலியுறுத்தும்.

சமுதாயத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் பகுதியினர்மீது எப்பொழுதுமே உண்மையான திராவிடர் இயக்கத்திற்கு அக்கறை உண்டு என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டாகும்.

கோவை திராவிடர் கழக மாநாட்டுத் தீர்மானம் - திமுக தேர்தல் அறிக்கை இவற்றைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத் தீர்ப்பும் இசைவாக வந்ததற்காக உள்ளபடியே மிக்க மகிழ்ச்சி அடைகிறோம்.

உச்சநீதிமன்றத் தீர்ப்பில் சுட்டிக் காட்டியதுபோல இது ஒரு முக்கிய மனித உரிமைப் பிரச்சினையும்கூட!

உச்சநீதிமன்றத் தீர்ப்பில் திருநங்கைகளின் சமூக பொருளாதாரப் பிரச்சினைகள் திருப்திகரமாக இல்லை என்று கூறப்பட்டுள்ளது. அது உண்மைதான் என்றாலும் கல்வி நிலையிலும் மிக மிகப் பின் தங்கிய நிலையில் தான் உள்ளனர்.

மத்திய - மாநில அரசுகளின் கடமை

திராவிடர் கழக மாநாட்டிலும் திமுக தேர்தல் அறிக்கையிலும் இவை குறிப்பிடப்பட்டுள்ளன. இவற்றை எல்லாம் கணக்கில் எடுத்துக் கொண்டு மத்திய, மாநில அரசுகள் அவர்களுக்கென்று ஒரு தனிச் சிறப்பான திட்டத்தை (Scheme) வகுத்து, அவர்களைச் சமூகத்தில் மதிக்கத்தக்க மனிதர்களாக மற்றவர்களுக்கு இணையான வர்கள் என்ற சமூக அங்கீகாரம் கிடைத்திட அவர்களின் கல்வி, சமுதாய, பொருளாதார நிலையை உயர்த்திட ஆவன செய்யுமாறு வலியுறுத்துகிறோம்.

இந்தியாவில் முப்பது லட்சம் திருநங்கைகள் இருக்கின் றனர். அவர்கள் வாழ்வு புதிய திருப்பம் பெற வேண்டும்; பல்வேறு மூடநம்பிக்கைகளில் ஈடுபட்டு வரும் அந்தத் தன்மையிலிருந்து அவர்கள் விடுபட்டு, முற்போக்குத் திசையில் அவர்கள் அடி எடுத்து வைக்க வேண்டும். அவர் களில் படித்தவர்கள் இந்த வகையில் வழி காட்ட வேண்டி யதும் அவசியமாகும். கழகமும் இதில் கவனம் கொள்ளும்.

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

16.4.2014
சென்னை

Read more: http://viduthalai.in/e-paper/78758.html#ixzz2z6IJmQU4

தமிழ் ஓவியா said...


அம்பேத்கருக்குப் பாரத ரத்னா பட்டம் வழங்கியது பிஜேபி அரசாம் - மோடியின் பொய்யான தகவல்


இந்தியாவின் சட்ட மேதை பாபாசாகிப் அம் பேத்கரின் பிறந்த நாள் விழா வின் போது நரேந்திரமோடி, காங்கிரஸ் கட்சியை கடு மையாக தாக்கிப் பேசினார். அவர் கூறியதாவது: காங் கிரஸ் அரசு, அம்பேத்கர் வாதிகளையும், தலித்துக் களையும் அவமானப் படுத்தி அவர்களை அடி மைகளாக்கி வைத்துள்ளது என்று கூறினார்.

இதற்கு பதில் அளித்த காங்கிரஸ் துணைத் தலைவர் குஜராத் மாடல் அங்குள்ள தொழிலதிபர்களுக்குத்தான் அதிக லாபத்தை ஈட்டித் தந்திருக்கிறதே தவிர, அடிப்படை வசதிகள் கூட சாமானிய மக்களைச் சென்ற டையவில்லை, அங்குள்ள தலித் மற்றும் பழங்குடியின மக்களின்நிலை மிகவும் கவலைக்குரியதாக உள்ளது மோடி, தலித்மக்களை தேவை யற்ற குடிமகன்களாகவே கருதுகிறார், கடந்த 15 ஆண்டுகளாக குஜராத்தில் தலித்துக்களின் நிலை மிக வும் மோசமானதாக மாறி விட்டது, என்று கூறினார்.

ராகுல்காந்தியைத் தொடர்ந்து காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் சந்தீப் சுரஜ்வாலா, மோடியின் குற்றச்சாட்டிற்கு பதிலளிக் கும் போது கூறியதாவது இந்தியா முழுவதும் இத்தேசத்தின் அரசியல் சாசன தந்தையை கொண் டாடிக்கொண்டு இருக்கும் போது நரேந்திரமோடி, தலித் விரோத மனப்பான் மையை வெளிப்படுத்து கிறார்.

அவர் தலித்துகளை மனதால் பாதிக்கப்பட்டவர் கள் என்றும், தலித்துகளின் குணம் என்றும் மாறாத ஒன்று என்றும் பழித்துக் கூறுகிறார். மோடி எழுதிய கர்ம யோக் என்ற நூலைப் பற்றி சுரஜ்வாலா, மோடி தனது நூலில்(48, 49 ஆம் பக்கத்தில்) தூய்மைப் பணியாளர்களைப் பற்றிக் குறிப்பிடும்போது தூய் மைப்பணியாளர்களின் முன்னோர்கள் மனித மலங்களை அள்ளுவதை கடவுளுக்குச்செய்யும் பணியாகக் கருதினார்கள், ஆகவே அவர்கள் முகம் சுழிக்காமல் தங்கள் பணி களை பயபக்தியுடன் செய்து வந்தனர். அவர்களின் நோக்கமே சமூகத்திற்கு ஆற் றும் தொண்டுதான், கட வுளுக்கு ஆற்றும் தொண்டு என்று கருதினர்.

ஆகவே இந்தத் தொழிலை நூற்றாண்டு களாக பயபக்தியுடன் செய்து வந்தனர். இந்தப் பணியை, ஆன்மீகப் பணியை விட மேன்மை யான பணி என்று கருதலாம். இந்த நிலையில் தூய்மைப்பணியாளர்களை வேறு ஒரு பணிக்கு அமர்த் துவதோ அல்லது அவர் களாக வேறு ஒரு பணியைத்தேர்ந்தெடுப்பதோ, கடவுளுக்குச் செய்யும் விரோதமான காரியமாகும் என்று எழுதியுள்ளார். 2010 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30 ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான பள்ளிவிழாவில் கலந்துகொண்ட போது மோடி கூறியதாவது; மனவளர்ச்சி குன்றிய வர்கள், தலித்துகளைப்போன்றவர்கள், அவர்களுக்கும் உங்களைப்போன்று சிறப்பு கவனிப்பு தேவைப்படுகிறது. அவர்கள் கண்காணிப்பில் வைக்கப் படவேண்டியவர்கள், என்று கூறினார். மோடியின் இந்தப் பேச்சு எவ்வளவு கீழ்த்தரமானது. கடந்த 10 ஆண்டுகளில் மோடி தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கான எந்த ஒரு திட்ட வரைமுறையையும் முன்வைக்க வில்லை என்றார். மீண்டும் பொய்: அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கியது, வாஜ்பாய் தலைமையிலான அய்க்கிய ஜனநாயகக் கூட்டணி அரசு என்கிறார் நரேந்திர மோடி அம்பேத்கருக்கு பாரத ரத்னா வழங்கியது, வி.பிசிங் தலைமையிலான அரசு. இது அனைவருக்கும் தெரிந்த பொதுவான செய்தியாகும்

Read more: http://viduthalai.in/e-paper/78763.html#ixzz2z6IgEwqO

தமிழ் ஓவியா said...


பாஜ ஆட்சியமைத்தால் மதக்கலவரம் வெடிக்கும்: ப. சிதம்பரம்


காரைக்குடி, ஏப். 16-பாஜ கையில் ஆட்சி சென்றால் நாட்டில் மதக்கலவரம் ஏற்படும் என மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் எச்சரித்தார்.

சிவகங்கை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்துக்கு வாக்குகள் சேகரித்து காரைக்குடி அருகே கோட்டையூர், பள்ளத்தூர், கானாடுகாத்தான் உள்பட பல்வேறு பகுதிகளில் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பேசியதாவது: மத்திய அரசை அமைக்கக்கூடிய சக்தி, வல்லமை காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமே உள்ளது. 1999இல் பாஜ ஆட்சி அமைத்து, இந்தியா ஒளிர்கிறது எனக்கூறி மீண்டும் தேர்தலை சந்தித்தது. ஆனால் தோல்வியையே சந்தித்தது.

ஆர்எஸ்எஸ் இயக்கம் நேரடியாக அரசியலுக்கு வராமல் பாஜ முகமூடியுடன் வருகிறது. இது மத, மொழி வெறியர்கள் நடத்தும் நச்சு இயக்கம். பாஜ சுதந்திரமாக செயல்பட முடியாது. ஆர்.எஸ்.எஸ். நினைத்தது எல்லாம் பாஜ தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளது. சேது சமுத்திர திட்டத்தை ராமர் பாலம் என்று கூறி தடுத்தவர்கள். இவர்கள் கையில் ஆட்சி சென்றால் மதக்கலவரம் ஏற்படும். பாஜ தேர்தல் அறிக்கையில் இடஒதுக்கீடு குறித்து சொல்லவில்லை. இவர்கள் இட ஒதுக்கீட்டுக்கு எதிரானவர்கள்.

இவ்வாறு சிதம்பரம் பேசினார்.

மோடியின் போலி வாக்குறுதிகளால் நல்லது நடக்காது: அசோக் கெலாட்

ஜெய்ப்பூர், ஏப். 16-''பா.ஜ.க.வின் போலியான வாக்குறுதிகள் நாட்டிற்கு எந்த நன்மையையும் அளிக் காது. ராகுல் காந்தியின் வளர்ச்சிக்கான பாதைகளும், திட்டங்களுமே நாட்டிற்கு நன்மையை வழங்கும்'' என முன்னாள் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், 'ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே மற்றும் மோடி இருவரும் வழங்கி வரும் போலியான வாக்குறுதிகள் குறித்து வாக்காளர்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். அவர்கள் தேர்தல் பிரச்சாரங்கள் மூலம் மக்களை ஏமாற்றுவதற்கு முயற்சி செய்கிறார்கள். தனது பேச்சுக்களில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் மோடி, போலி வாக்குறுதிகளை வழங்குவதன் மூலம் பதவி நாற்காலியை அடைவதையே தனது குறிக் கோளாக கொண்டுள்ளார். நாட்டின் வளர்ச்சிக்கு தேவையான எந்த மாற்றுத் திட்டங்களும் அவரிடம் இல்லை. அவர் மக்களை தவறாக வழிநடத்துகிறார்.' என்றார்.

குஜராத்தில் பெண்களின்
தொலைபேசி ஒட்டு கேட்பு
மோடி மீது ராகுல் குற்றச்சாட்டு

புனே, ஏப்.16- பாஜ பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடி பெண் அதிகாரம் பற்றி பேசி வரு கிறார். ஆனால், அங்கு பெண்களின் தொலைபேசியை ஒட்டுக்கேட்க அவர் உத்தரவிட்டுள்ளார் என்று காங் கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட் டியுள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் புனேயில், காங்கிரஸ் வேட்பாளர் விஸ்வஜீத் கதமை ஆதரித்து நடந்த நேற்று பிரச்சாரக் கூட்டத்தில், ராகுல் காந்தி பேசியதாவது: குஜராத் முதலமைச்சர் பெண்களின் தொலை பேசியை ஒட்டுக்கேட்கிறார். அம்மாநில காவல் துறையினர் பெண்களை வேவு பார்ப்பதற்காக அவர்களின் பின்னால் சென்று கொண்டிருக்கின்றனர். முதலில் அவர்கள் பெண்களுக்கு மரியாதை கொடுக்க கற்றுக் கொள்ளட்டும். அதன்பின்னர் அவர்கள் பெண் அதிகாரம் பற்றி பேசலாம்.

காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் பெண்களுக்கான பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள் ளன. ஆனால், பாஜ ஆளும் மாநிலங்களில் இது மிக, மிக குறைவாக உள்ளது. சட்டீஸ்கரில் 20,000 பெண்கள் காணாமல் போயுள்ளதாக வழக்குகள் பதிவாகி உள்ளன.

நரேந்திர மோடி தன்னுடைய ஒரு பொதுக் கூட்டத்துக்கு 10கோடி செலவழிக்கிறார். இதுதவிர கூட்டத்தை பிரபலப்படுத்த பத்திரி கைகளில் பெருமளவில் பணம் கொடுத்து விளம்பரங்கள் வெளியிடப்படுகின்றன. இந்த பணம் முழுவதும் குஜராத்தில் இருந்துதான் கொண்டு வரப்படுகிறது. குஜராத் மாடல் வளர்ச்சி என்பது வெறும் மிட்டாயை போன்றதுதான். இதன் மூலம் ஒரு சில தொழிலதிபர்கள் மட்டுமே பயன் அடைந் துள்ளனர் என்றார்

Read more: http://viduthalai.in/e-paper/78764.html#ixzz2z6Ixw200

தமிழ் ஓவியா said...


குழப்பத்தின் உச்சியில் முதல் அமைச்சர்!


அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதல் அமைச்சருமான செல்வி ஜெயலலிதா அவர்கள் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் திடீரென்று சில புதிய சொற்களை உதிர்க்க ஆரம்பித்துள்ளார்.

தமிழ்நாட்டிலேயே எந்த அரசியல் கட்சித் தலைவரும் தேர்தல் பிரச்சாரத்திற்குக் கிளம்புவதற்கு முன்பாகவே தனது பிரச்சாரத்தைத் தொடங்கியவர் அவர்.

அ.இ.அ.தி.மு.க.வை எதிர்த்து தி.மு.க. தலைமையில் ஜனநாயக முற்போக்குக் கூட்டணியும், பிஜேபி உள்ளிட்ட கட்சிகள் தேசிய ஜனநாயகக் கூட்டணி என்ற பெயரிலும், காங்கிரசும் போட்டியிட்டாலும் இதுவரை திமுக பற்றியும், காங்கிரஸ் பற்றியுமே காரசாரமாக எழுதிப் படித்து வந்தார். பிஜேபியைப் பற்றி ஏன் அவர் வாய்த் திறக்கவில்லை? மோடியைப்பற்றி ஏன் விமர்சிக்கவில்லை? என்ற வினா பல தரப்பிலும் எழுந்து வந்தது; ஏடுகளும் சுட்டிக் காட்ட ஆரம்பித்தன.

பிஜேபிக்கும் அஇஅதிமுகவுக்கும் இடையே மறைமுகமான கூட்டு இருப்பதுதான் இதற்குக் காரணம் என்ற நியாயமான விமர்சனங்கள் வெளி வர ஆரம்பித்தன.

மிகவும் காலந்தாழ்ந்து இப்பொழுதுதான் பிஜேபி யைப்பற்றி விமர்சிக்கத் தொடங்கியுள்ளார்ஜெயலலிதா. பிஜேபியுடன் மறைமுகக் கூட்டு என்ற கருத்து வெடித்துக் கிளம்பிய நிலையில், அது தமக்குப் பாதகமாக அமையும் என்ற எண்ணத்தில் முதன் முதலாக பிஜேபியை எதிர்த்து பேச ஆரம்பித்துள்ளார். பி.ஜே.பி. காங்கிரஸ் அல்லாத ஆட்சி அமைய வேண்டும் என்று கூடக் கூறுகிறார். அதே நேரத்தில் பிஜேபியின் பிரதமருக்கான வேட்பாளர் நரேந்திர மோடி குறித்து ஒன்றும் சொல்லவில்லை. நரேந்திர மோடியும் முதன் முதலாக திமுகவோடு இணைத்து அஇஅதிமுக-வையும் சாடியுள்ளார் ஜெயலலிதாவும், மோடியும் சொல்லி வைத்துக் கொண்டு பேசுவதுபோல பேசி இருக்கிறார்கள்.

அது எப்படியோ போகட்டும்; அ.இ.அ.தி.மு.க, பொதுச் செயலாளர் என்ன காரணம் கூறி பி.ஜே.பியைத் தோற்கடிக்க வேண்டும் என்று கூறுகிறார்?

பி.ஜே.பி.யின் தேர்தல் அறிக்கையில் காவிரி நீர்ப் பற்றியோ, முல்லைப் பெரியாறு பிரச்சினைபற்றியோ, இலங்கைத் தமிழர் பற்றியோ, தமிழக மீனவர்கள் பற்றியோ, கச்சத் தீவைப் பற்றியோ குறிப்பிடப்பட வில்லை என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில்தான் பிஜேபியை எதிர்ப்பதாகக் கூறுகிறார் ஜெயலலிதா.

அதே நேரத்தில் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் சென்னை தேர்தல் கூட்டங்களில் எழுப்பிய வினாவுக்கு அம்மையாரிட மிருந்து விடை இல்லை. பி.ஜே.பி.யின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ள இந்துத்துவா அஜண்டாபற்றி முதல் அமைச்சர் கருத்துத் தெரிவிக்காதது ஏன்?

ராமன் கோயில் கட்டுதல், பொது சிவில் சட்டம், ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கென்று உள்ள சிறப்புத் தகுதிகளை உறுதிபடுத்தும் அரசமைப்புச் சட்டம் 370ஆவது நீக்கம் குறித்து ஜெயலலிதா அம்மையாரின் கருத்து என்ன? என்ற வினாவைத் தமிழர் தலைவர் எழுப்பியுள்ளார்.

இந்த முக்கியமான வினாவுக்கு விடையளிக்காமல், வேறு பிரச்சினைக்குச் செல்லுகிறார் அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர். இதன் மூலம் பிஜேபியின் இந்துத்துவா கொள்கையோடு ஒத்துப் போகிறார் என்று பொருள். இந்த ஆபத்தான போக்கை தமிழக வாக்காளப் பெரு மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

தேர்தல் கணிப்புகள் சில நாட்களாக, அஇஅதி முகவுக்குப் பாதகமாக வர ஆரம்பித்துள்ள நிலையில், அஇஅதிமுக பொதுச் செயலாளர் பிஜேபியைப்பற்றி இந்த அளவுக்காவது பேச வேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.

திடீரென்று காங்கிரஸ், பிஜேபி அல்லாத கட்சிகளின் கூட்டணி அரசு அமைய வேண்டும் என்று கூறியிருக்கிறார். அந்த மூன்றாவது அணியைச் சுக்கல் நூறாக நொறுக்கிய அம்மையாரா அது குறித்துப் பேசுவது? இடதுசாரிகள் இப்பொழுது என்ன நினைப்பார்கள்?

இந்த அம்மாவுக்கு என்னாச்சு? மூன்றாவது அணிக்காகத் தானே இந்த அம்மையாரோடு கூட்டணி வைக்க முயற்சித்தோம், இடதுசாரிகளுடன் கூட்டணியை முறித்துக் கொண்டவர் அஇஅதிமுக பொதுச் செயலாளர் தானே! இந்த நிலையில் மூன்றாவது அணியைப்பற்றிப் பேசுகிறாரே - இது என்ன குழப்பம்! இந்த அம்மாவுக்கு என்று தெளிவான திட்டவட்டமான சிந்தனை ஏதும் கிடையாதா? என்று இடதுசாரிகள் மட்டுமல்ல; விவரம் தெரிந்த எவரும் அவ்வாறு கருதவே செய்வார்கள்.

ஆக அம்மையார் குழப்பத்தின் உச்சியில் இருக்கிறார் என்பது தெரிந்து விட்டது; தோல்விப் பயம் காரணமாக நேற்று என்ன சொன்னோம், இன்று என்ன சொல்லுகிறோம் என்பதுகூடத் தெரியாமல் பேசிக் கொண்டு இருக்கிறார்.

இப்படிப்பட்ட குழப்பவாதியை வெற்றியடையச் செய்தால் நாடுதான் குழப்பத்துக்கு ஆளாக நேரிடும்; முன்னுக்கு பின் முரணாகப் பேசும் அம்மையாருக்கு இந்தத் தேர்தலில், தக்க பாடத்தைப் போதிப்பது தமிழக வாக்காளர்களின் முக்கியக் கடமையாகும்.

Read more: http://viduthalai.in/page-2/78767.html#ixzz2z6JEic00

தமிழ் ஓவியா said...


மக்களே நீதிபதிகள், நல்ல தீர்ப்பை தருவார்கள்! - ஆ. ராசா பேட்டி


மக்களை நீதிபதிகளாக கருதி, 'நல்ல தீர்ப்பை தாருங்கள்' என, கேட்கிறேன்; நிச்சயம் தருவார்கள். அதேபோல, ஜெயலலிதா மீது நடந்து வரும் சொத்து குவிப்பு வழக்கின் விவரங்களை முழுமையாக மக்களிடம் தெரிவித்து, அவரால் மக்களிடம் ஓட்டு கேட்க முடியுமா? இதனை சவாலாகவே கேட்கிறேன்,'' என, நீலகிரி தொகுதி தி.மு.க., வேட்பாளர் ஆ.ராஜா சவால் விட்டு உள்ளார். மற்ற எம்.பி.,க்கள் ஓட்டம்பிடிக்கும் நேரத்தில், தான் சிறையில் இருந்த போதும், தொகுதி பிரச்சினைகளை கவனிக்க நிர்வாகிகளை நியமித்து நற்பணியாற்றியதால், தொகுதி மக்களிடம் செல்வாக்கு பெற்றுள்ள முன்னாள் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் ஆ.ராஜா, தனது தேர்தல் பிரச்சாரம், வெற்றி வாய்ப்பு மற்றும் சூழ்ந்து உள்ள சர்ச்சைகள் குறித்து, 'தினமலர்' நாளிதழுக்கு அளித்த சிறப்பு பேட்டி:


நீலகிரி தொகுதியில், தற்போதைய சூழலில், அனைத்து கட்சிகளின் பிரச்சார வியூகங்களையும், 'பா.ஜ, வேட்பாளரின் மனு தள்ளுபடி' சம்பவம் மாற்றியுள்ளது. தி.மு.க.,வின் பிரச்சார வியூகத்தை இது எப்படி பாதித்து உள்ளது?

தி.மு.க.,வின் தேர்தல் பிரச்சாரம், எங்களுடைய திட்டப்படிதான் நடந்து வருகிறது. என் தொகுதியில், நான் இதுவரை மக்களுக்கு செய்த பணிகளை வைத்து தான், மக்களை சந்தித்து, ஓட்டு கேட்கிறேன். புதிய வாக்குறுதி எதுவும் அளிக்கவில்லை. வெற்றி பெற்றால் மக்களுக்காக மேலும் பல்வேறு பணிகளை நிச்சயம் செயல்படுத்துவேன்.

'2ஜி' அலைக்கற்றை ஊழல் குற்றச் சாட்டு தொடர்பாக, நீங்கள் சிறையில் இருந்த காலத்தில், உங்கள் தொகுதி யில் நடந்த வளர்ச்சிப் பணிகளை எவ்வாறு செயல்படுத்தினீர்கள்?

மலை மாவட்டம், சமவெளி பகுதி என்று பாராமல், பல்வேறு திட்டங்களை மக்களுக்காக செயல்படுத்தி உள்ளேன். சிறையில் இருந்த காலத்தில் கூட, என் தொகுதி நிதியில், 19 கோடி ரூபாய் மதிப் பீட்டில், 510 பணிகளுக்கு, நிதி ஒதுக்கீடு செய்து, அதில், 80 சதவீத பணிகள் நிறைவேறி உள்ளன. மீதமுள்ள பணிகள் விரைவில் முடியும்.குறிப்பாக, மின்சாரம் இல்லாத பழங்குடியின கிராமங்களுக்கு, சிறப்பு அனுமதியின் கீழ், மின் இணைப்பு கிடைக்க செய்தேன். மேலும், மேட்டுப் பாளையம் மற்றும் ஊட்டியில் இரண்டு அலுவலகங்களை திறந்து, மக்களிடம் மனுக்களை பெற்று, அவர்களுக்கு தேவையானவற்றை தொடர்ந்து நிறைவேற்றி வருகிறேன்.

'2ஜி' வழக்கு, சிறைவாசம் ஆகியவை உங்களை பிரபலப்படுத்தியதா, பிரச்சினையில் ஆழ்த்தியதா?

எல்லா காலகட்டங்களிலும், ஒரு புரட்சி வரும்போது, அதன் வெற்றி என்பது, எளிதாக கிடைத்து விடாது. பல்வேறு எதிர்ப்பு, தடைகள் வரத்தான் செய்யும். அதிலிருந்து மீண்டுவந்து, அதன் பயன்கள் மக்களுக்கு கிடைக்கும்போது, இத்தகைய குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் நீர்த்துப்போகும். மக்கள் சக்திக்கு முன், எந்த குற்றச்சாட்டும் நிலைக்காது. அது விரைவில் நடக்கும்.

'2ஜி' வழக்கு பற்றி, ஒரு வக்கீலான உங்களின் கருத்து?

பொதுவாக, 'பி.சி.ஆக்ட்' (ஊழல் தடுப்பு சட்டம்) என்று வரும்போது, மூன்று காரணிகள் அதில்விவாதிக்கப்படும். சொத்து சேர்ப்பு; அரசுக்கு வருவாய் இழப்பு; தனியார் நிறுவனங்கள் பெற்ற பலன் ஆகிய மூன்று சாராம்சங்களை வைத்துதான் இந்த வழக்கு நகரும். நான் குற்றமற்றவன் என்பதை, நிச்சயம் நிரூ பிப்பேன். எனது வழக்கில், வருமானத் துக்கு அதிகமான சொத்து இல்லை; அரசுக்கு வருவாய் இழப்பு இல்லை என்பதை ஏற்கனவே சட்டத்தின் முன் நிரூபித்துவிட்டேன். தனியார் நிறுவனங் களின் பலன் பற்றிய விஷயத்தில், மத்திய அரசுக்கும், சி.பி.அய்.,க்கும் இடையே சட்டப்படியான விவாதங்கள் நடந்து வருகின்றன. '2ஜி' ஸ்பெக்ட்ரம் திட்டத் தால், அலைபேசி பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 90 கோடியாக உயர்ந் துள்ளது. கட்டணம், 50 பைசாவாக குறைந்து உள்ளது. இதுதான், என் முயற்சியால் மக்களுக்கு கிடைத்த பயன்.


தமிழ் ஓவியா said...

'2ஜி' வழக்கு, உங்கள் அரசியல் வாழ்வில் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தியது?

இந்த வழக்கை சந்திப்பதற்கு முன்பும், நான் எப்படி இயல்பாக இருந்தேனோ, அப்படித்தான், சிறைக்கு சென்று திரும் பிய போதும் இருக்கிறேன். தி.மு.க., தலை வர் கலைஞர் கூறியதைப் போல், இந்த வழக்கு பலூனை போல் பெரிதாக்கப்பட்டு உள்ளது. பின் ஒன்றுமில்லாமல் போகும். அப்பொழுதும், நான் இதேபோலத் தான் இருப்பேன். எனது மக்கள் பணி தொட ரும். குறிப்பாக, இந்த வழக்கை பொறுத்த வரை, நான் இதுவரை ஒருவாய்தா கூட வாங்கவில்லை. அரசு வக்கீலையோ, நீதிபதியையோ மாற்றச்சொல்லி மனு போடவில்லை.

ஜெயலலிதாவின் பிரச்சார கூட் டங்களில் '2ஜி' வழக்கு தான் முன் வைத்து பேசப்படுகிறது. இது உங் களுக்கு பாதகமாக உள்ளதா?

அவர்கள் என்ன கூறுவது, '2ஜி' ஊழல் குற்றச்சாட்டு குறித்த அனைத்து அம்சங் களையும், மக்களிடையே நானே பிரச்சாரங்களில் தெரிவித்து, அவர்களை நீதிபதிகளாக கருதி, 'நல்ல தீர்ப்பை தாருங்கள்' என, கேட்கிறேன்; நிச்சயம் தருவார்கள். அதுபோல, ஜெயலலிதா மீது நடந்து வரும் சொத்து குவிப்பு வழக்கின் விவரங்களை, முழுமையாக மக்களிடம் தெரிவித்து, அவரால் மக்களிடம் ஓட்டு கேட்க முடியுமா? இதனை சவாலாகவே கேட்கிறேன்.

கோவையில் நடந்த தி.மு.க., பொதுக்கூட்டத்தில் கருணாநிதி பேசும் போது, விரக்தி வெளிப்பட்டதே...

கடந்த 1969ஆம் ஆண்டு, பெரியாருக் கும், இது போன்ற விரக்தி ஏற்பட்டது. ஆனால், அதற்கு பின், அவர், 20 ஆண்டுகளுக்கும் மேலாக மக்களுக்காக உழைத்தார். அதேபோல, தலைவர் கலைஞர், சலிப்பையே, உழைப்பாக மாற்றும் ஆற்றல் பெற்றவர். கோவையில் பேசிய பின், மறுநாள் அவிநாசியில் பேசிய பிரச்சார கூட்டத்திலேயே, அது வெளிப்பட்டதே. அவர் இன்னும் பல ஆண்டுகள், மக்களுக்காக நிச்சயம் உழைப்பார்.

பா.ஜ.க., களத்தில் இல்லாத காரணத்தால், தே.மு.தி.க., ஓட்டு உங்களுக்கு கிடைக்குமா?

நிச்சயம் என் வெற்றிக்கு அது வலுச்சேர்க்கும் என்று நம்புகிறேன்.

நீங்கள் வெற்றி பெற்று டில்லிக்கு சென்றாலும், அங்கு ஆட்சியில் அமரப்போகும் எந்த ஒரு தேசிய அளவிலான அணியும், உங்கள் கட்சிக்கு எதிர்க்கட்சியாக தான் இருக்கப் போகிறது. அந்த சூழ்நிலை யில் நீலகிரி தொகுதியில் எத்தகைய பணிகளை உங்களால் செயல்படுத்த முடியும்?

டில்லியை பொறுத்தவரை, எதிர்க்கட்சிகள் என்பது, 'எதிரி' கட்சிகளாக நிச்சயம் இருக்காது. எம்.பி.,யாக, நான் இருந்த காலகட்டங்களில், மத்தியில் உள்ள அனைத்து அரசு துறைகளுக்கும் சென்று, பல்வேறு திட்டங்களை மக்களுக்காக நிறைவேற்ற முடிந்தது. நீங்கள் நினைப் பது போல் பா.ஜ., ஆட்சிக்கு வந்தால் கூட, நீலகிரி தொகுதி மக்களுக்கு தேவையான வளர்ச்சித் திட்டங்களை என்னால் குறிப்பிட்ட துறைகளிடம் பேசி இங்கு கொண்டு வர முடியும்.

சுற்றுலாத்தலமான ஊட்டிக்கு, நீங்கள் அறிவித்த, கேபிள் கார் திட் டம், ஹெலிகாப்டர் சர்வீஸ் திட்டங் கள் என்னாச்சு?

இந்த திட்டங்களின் முதற்கட்ட பணிகளை, குறிப்பிட்ட வெளிநாட்டு நிறுவன நிர்வாகிகள் மற்றும் அரசு அதிகாரிகளுடன் வந்து, ஊட்டியில் கள ஆய்வு செய்தேன். சில காரணங்களால் செயல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டது உண்மைதான். வரும் நாட்களில், மாநில அரசின் ஒத்துழைப்பு இருந்தால், நிச்சயம் செயல்படுத்த முடியும்.

* கூடலூரில் பாரதியார் பல்கலை கட்டடம், விடுதி, 2.54 கோடி ரூபாயில் கட்டப்பட்டது

* ஊட்டி எச்.பி.எப்., தொழிற்சாலைக்கு 30 கோடி ரூபாய், மத்திய அரசின் அவசர கால நிதி பெற்றுத் தரப்பட்டது

* கடந்த 2009ல், நீலகிரியில் நடந்த பேரிடர் பாதிப்பின் போது, 100 கோடி ரூபாய் மதிப்பில் பணிகள் நடந்தன

* மேட்டுப்பாளையம் - அவிநாசி சாலை, 19.9 கோடி ரூபாயில் அகலப் படுத்தப்பட்டது

* மேட்டுப்பாளையத்தில், 2.19 கோடி ரூபாயில் கோர்ட் கட்டடம் கட்ட நிதி ஒதுக்கீடு

* நீலகிரி தொகுதி சாலை மேம் பாட்டுக்காக, மத்திய நெடுஞ்சாலைத் துறை நிதியில், 100 கோடி ரூபாய் பெற்றுத் தரப்பட்டது

* அவிநாசியில் ஒரு கோடி ரூபாயில் சவக்கிடங்கு கட்டப்பட்டது

* அன்னூரை தலைமையிடமாக கொண்டு தாலுகா அறிவிக்கப்பட்டது

* அன்னூரில் புதிய சார்--பதிவாளர் அலுவலக கட்டடம்

* பண்ணாரி சாலை சீரமைப்பு

* மேட்டுப்பாளையம் மருத்துவமனை மேம்பாடு

* சத்தியமங்கலத்தில் புதிய சார்பு நீதிமன்றம் அமைக்க மாநில அரசின் அனுமதி பெற்றுத் தந்தேன்

* அவிநாசி - அத்திக்கடவு திட்ட ஆய் வுக்கு உத்தரவு

* அஞ்சலக அம்பு திட்டத்தின் கீழ், தொகுதி முழுவதிலும், 35 தபால் அலுவலகங்களை மேம்படுத்தியது.

ஆகியவற்றை குறிப்பிட்டு சொல்ல முடியும். இது தவிர, மேலும் பல பணிகள் நடந்து உள்ளன.

- (நன்றி: தினமலர் 16.4.2014)

Read more: http://viduthalai.in/page-2/78768.html#ixzz2z6JhvvYf

தமிழ் ஓவியா said...


திருநங்கைகள் 3ஆம் பாலினம் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு கலைஞர் வரவேற்பு



சென்னை, ஏப். 16- திருநங்கைகளை 3ஆம் பாலினமாக உச்சநீதிமன்றம் அறிவித்ததை திமுக தலைவர் கலைஞர் வரவேற்றுள்ளார்.

இது தொடர்பாக திமுக தலைவர் கலைஞர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப் பதாவது:

2006ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின் போது, திமுக சார்பில் வெளியிடப் பட்ட தேர்தல் அறிக்கையில், அனைத்து சமுதாயத் தினராலும், ஒதுக்கப்பட்ட நிலையில் வைக்கப் பட்டுள்ள அரவாணிகளின் நலன்களைப் பாது காக்கத்தக்க வகையில், அவர்களின் பல்வேறு கோரிக்கைகளை முறைப்படி பரிசீலித்து முடிவு கள் மேற்கொள்வோம் என்று தெரிவித்திருந் தோம்.

சொன்னதைச் செய்வோம், செய்வதை சொல்வோம் என்பதற்கிணங்க, திமுக ஆட்சியில் 15-4-2008இல் தமிழ்நாடு அரவாணிகள் நல வாரியம் தொடங்கப்பட்டு, 3,878 அரவாணிகள் கணக்கெடுக்கப்பட்டு, 2,328 அரவாணிகளுக்கு அடையாள அட்டைகளும், 1,238 பேருக்குக் குடும்ப அட்டைகளும், 133 பேருக்குத் தொகுப்பு வீடுகளும், 100 பேருக்குத் தையல் இயந்திரங் களும், 482 பேருக்கு வீட்டு மனைப் பட்டாக் களும், 585 பேருக்கு காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் மருத்துவ அட்டைகளும் வழங்கப்பட்டன.

20-08-2009இல் அரவாணிகள் நல வாரியத்தின் மூலம் ரூ. 25 லட்சத்து 53 ஆயிரம் நிதி உதவி வழங்கப்பட்டது. அரவாணிகளுக்காக 150 சுயஉதவிக் குழுக்கள் அமைப்பதற்கு ரூ. 6 லட்சத்து 9 ஆயிரமும், சுய தொழில் தொடங்க ரூ. 64 லட்சமும் வழங்கப்பட் டுள்ளது. 20-10-2011இல் அரவாணிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் வகையில் வாரியத்திற்கென ரூ 1 கோடி நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டது.

திருநங்கைகளின் நலனுக்காக திமுக ஆட்சியில் இருந்த போது, இவ்வளவையும் செய்ததோடு, அண்மையில் இந்த நாடாளுமன்றத் தேர்தலை யொட்டி திமுக சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையிலும், திமுக ஆட்சிக் காலத்தில் வழங்கப்பட்ட சலுகைகள் அனைத்தையும், அகில இந்திய அளவில் திருநங்கைகளுக்கு வழங்க திமுக பாடுபடும். மேலும், கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளிலும் அவர்களுக்கு உரிய இடம் வழங்கிடுவதோடு, அரவாணிகளை 3ஆம் பாலினமாக அங்கீகரித்திட வேண்டுமென மத்திய அரசை திமுக வலியுறுத்தும் என்றும் தெரிவித்திருந்தோம். தேர்தல் அறிக்கையில் கூறி, அதற்கான தேர்தல் நடைபெறுவதற்கு முன் பாகவே, திமுக தேர்தல் அறிக்கையில் கூறியது நிறைவேறு கின்ற வகையில் திருநங்கைகளை 3ஆம் பாலினமாக அறிவித்து உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி யுள்ளது என செய்தி வெளிவந்துள்ளது.
இந்தத் தீர்ப்பு திருநங்கைகள் வாழ்வில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். அந்தத் தீர்ப்பில், மத்திய அரசும், மாநில அரசுகளும் அவர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு சிறுபான்மையினருக்கு உள்ள எல்லா உரிமைகளையும் வழங்க வேண்டும். கல்வி, வேலை வாய்ப்பு உள்ளிட்ட அனைத் திலும் சிறுபான்மையினருக்கு உள்ள உரிமை களை அவர்களுக்கு வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

திருநங்கைகளின் நல்வாழ்வுக்காக பல ஆண்டுக் காலமாக குரல் கொடுத்த திமுகவிற்கு இந்தத் தீர்ப்பு பெரிதும் மகிழ்ச்சியை தந்துள்ளது. இந்தத் தீர்ப்பினை வழங்கிய நீதியரசர்கள் கே.எஸ். ராதாகிருஷ்ணன், ஏ.கே. சிக்ரி ஆகி யோருக்கும், இந்த வழக்கைத் தொடுத்த லட்சுமி நாராயணன் திரிபாதிக்கும் நம் இதயமார்ந்த நன்றியைத் தெரிவிப்பதோடு, இந்த முடிவினை திமுக சார்பில் பெரிதும் வரவேற்று, பாராட்டு கிறேன். இவ்வாறு கலைஞர் கூறியுள்ளார்.

Read more: http://viduthalai.in/page-2/78779.html#ixzz2z6K3oO4p

தமிழ் ஓவியா said...


இந்து அலுவலகத்தில் மாமிச உணவு சாப்பிடக்கூடாதாம்!

தி ஹிந்து (பிரபல ஆங் கிலம் மற்றும் புதிதாக துவங் கப்பட்ட தமிழ் பத்திரிகை யின் தலைமையகமாக இருக் கும் சென்னை அலுவலகத் தின் கேண்டீனில் சாப்பிடுபவர்கள் பெரும்பான்மை யானவர்கள் சைவ சாப்பாடு சாப்பிடுபவர்களாம்; அவர் கள் பிற பணியாளர்கள் கொண்டுவரும் அசைவ உணவுவகைகளின் வாசனை யை சகித்துக் கொள்ள முடி யாத காரணத்தால் சங்கடத் திற்குள்ளாகின்றனராம்..

அதனால் மாமிச உணவு சாப்பிடும் தி ஹிந்து(அந்த பத்திரிகை பணியாளர்கள் எந்த காரணம் கொண்டும் தாங்கள் வீட்டிலிருந்து கொண்டு வரும் மாமிச உண வை கேண்டீனுக்கு கொண்டு வராதீர்கள் என்று எச்சரித் திருக்கிறார்.

தி ஹிந்து பத்திரிகை அலுவலகத்தின் மனிதவள மேம்பாட்டுத்துறையின் துணைத்தலைவர் சிறீதரன்..

மாமிச உணவை தி ஹிந்து கேண்டீனுக்குள் கொண்டு வரக்கூடாது என்று ஏற் கெனவே இருக்கும் தடையையும் அவர் மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்தியிருக்கிறார் ஊருக்கெல்லாம் சமத்துவத்தையும், மதச்சார் பற்ற அரசியலையும் போ திக்கும் தி ஹிந்து அலுவலக கேண்டீனில் அசைவ சாப் பாட்டுக்கு இடமில்லை;

மாமிசம் சாப்பிட தடை இருக்கிறது அதை மீறாதீர்கள் என்று கடுமையாக எச்சரிக் கும் சுற்றறிக்கை அனுப்பு கிறார் அதன் மனிதவள மேம்பாட்டு அதிகாரி.

அப்படியானால்தி ஹிந்துவில் பணிபுரியும் எண்ணிக்கையில் சிறுபான்மையினரான அசைவ சாப்பாட்டாளர்கள் தங்கள் உணவை எங்கே சாப்பிடுவது என்கிற நியாயமான கேள்விக்கு பெரும்பான்மை மரக்கறியாளர்களின் அசவுகரியம் பற்றி கவலைப்பட்ட சிறீதரன் பதில் சொல்ல வில்லை. ஒரு வேளை மாமிசம் சாப்பிடுபவர்கள் மனிதர் களே அல்ல என்று நினைத்து விட்டார்களோ!

Read more: http://viduthalai.in/page-2/78787.html#ixzz2z6KLh9Y8

தமிழ் ஓவியா said...


எதிர்ப்பு! எதிர்ப்பு!! மோடிக்கு சர்வதேச ஊடகங்களும் எதிர்ப்பு


புதுடில்லி, ஏப்.17- பாஜக பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடிக்கு பிரதம ராக வாய்ப்பில்லை என்று சர்வதேச அளவில் ஊடகங் கள் கருத்துக்களை வெளி யிட்ட வண்ணம் உள்ளன.

அண்மையில் வெளிவந் துள்ள தி எக்கனாமிஸ்ட் அதன் அட்டையில் நம்பிக் கையான பிரதமர் என்ற தலைப்பிட்டுள்ளது. தன் னுடைய தலையங்கத்தில் கடுமையான வார்த்தை களாகவே, இந்தியாவின் மிக உயர்ந்த அலுவல கத்தை திரு.மோடிக்கு இந்த செய்தித்தாளில் பெற்றுத்தர முடியாது என்று எழுதி உள்ளது. இதுபோன்றே சிறிதுசிறிதாக உருவாக்கி, மோடி அலை என்று இருப் பதாக மோடியின் ஆதரவா ளர்களிடையே கருத்து ஏற் படுத்தப்பட்டது. அதனா லேயே அவரைத் தாக்கும் அறிக்கைகளும், தலையங் கங்களும் வந்தன.

தி கார்டியன் ஏட்டின் ஏப்ரல் 14 ஆம் தேதியிட்ட இதழில், நரேந்திர மோடி என்று தலைப்பிட்டு மோடி யின் ஹிந்துத்துவா தீவிர வாதத்துக்கு பிரிட்டன் தோள் கொடுக்காது என்று எழுத்தாளர் பிரியம்வதா கோபால் எழுதியுள்ளார். அதுமட்டுமின்றி அய்க்கிய ராஜ்ஜியம் (இங்கிலாந்து) அம்மனிதருடனான தொடர்புகளைத் துண் டித்துக்கொள்ள வேண்டும் என்கிற கருத்தை உருவாக்கி உள்ளார். அவர் எழுதும் போது, உலகமே அறிந் துள்ள, முக்கியமாக வலது சாரித்தன்மையில் மீண்டும் தீவிரத்துடன் இருப்பதை அறிந்து நாம் கண்டிப்பாக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பிரிட்டன் பாசி சத்துக்கு எதிராக உள்ள நிலையில், நாட்டின் நீதி, நிர்வாகம் போன்ற அதிகா ரத்தை கண்டிப்பாக மோடி போன்றவர்கள் பெற அனு மதிக்கக் கூடாது.

கடந்த மாதம் சமூக வலைத்தளத்தில், தானேரிச் சார்டு சுருக்கமாக மோடி குறித்து எழுதும்போது, படிகம்கூட வைரஸ் பாதிப் புக்குள்ளானது என்று குறிப்பிட்டுள்ளார்.

மோடி பிரதமரானால் இந்தியா நீதியின் பாதைக்கு வரவே முடியாது. வளர்ச்சி அடைந்துள்ளதாக மோடி தரப்பில் கூறுவது குறித்து கூறும்போது,

குஜராத் மாநிலத்தில், பொருளாதார வளர்ச்சி என் பதைவிட மோடியின் செயல் அதிபயங்கரமானது. அடிப்படை மனிதத் தன்மை குறித்து மறக்கலாமா? வளர்ச்சி விகிதத்தை உயர்த் துவதில் பெரும்பான்மை இந்தியர் சகிப்புத்தன்மை யற்ற, கருணையற்ற, ஒரு சார்பு நிலையில் இருப்பது தான் என்றால் நீதி இல் லையே என்று குறிப்பிட் டுள்ளார்.

மோடி தன் திரும ணத்தை தேர்தல் உறுதி ஆவ ணத்தில் ஒப்புக்கொண் டுள்ள தகவலும் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.

தி பாகிஸ்தான் பிரஸ் குறிப்பாக மோடியின் காஷ் மீர் நிலைப்பாடு குறித்து எழுதியுள்ளது. தி எக்ஸ் பிரஸ் டிரிபியூனில் சஞ்சய் குமார் மோடி தென் ஆசி யாவில் பொது நியதி களுக்கு சவால் விடுகிறார் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், காஷ்மீரின் நிலையில் மாற்றம் செய்ய நினைத்தாலோ, அணுக் கொள்கையை பின்னுக்குத் தள்ளினாலோ கடும் எதிர் விளைவுகளைச் சந்திக்க நேரிடும். பாகிஸ்தானுக்கும், இந்தியாவுக்கும் கேடா னவர் மோடி என்றும் கூறியுள்ளார்.

ஹஃப்ஃபிங்டன் போஸ்ட்டில் மூன்று முறை சுனில் ஆடம்ஸ் என்பவர் மோடிக்கு ஆதரவாக எழுதி யிருந்தாலும், மார்ச் 31 அன்று மோடி ஒரு கருவி தான் என்கிறார். இந்தியா வின் பின்னணியை விட்டு விட்டு அல்லது பாதுகாப்பு இல்லாத பகுதிகளையா வது நீக்கிவிட்டு, பிரபல பார்ப்பனர் கூறுவதுபோல, கணவன் - மனைவியி டையே கொடுத்தலும், பெறுதலும் போல் இருக்கவேண்டும் என்று ஆடம்ஸ் கூறுகிறார்.

- டைம்ஸ் ஆஃப் இந்தியா, 16.4.2014

Read more: http://viduthalai.in/e-paper/78801.html#ixzz2zC96RLay

தமிழ் ஓவியா said...


காஞ்சி சங்கராச்சாரியாரின் முகமூடியும் மோடியின் கல்யாண பந்தத்தின் மர்மமும்!

15.4.2014 நாளிட்ட தமிழ் இந்து நாளேட்டில் வெளிவந்துள்ள - இதுவரை மற்ற நாளேடு களிலோ, வார ஏடுகளிலோ வெளிவந்திராத ஒரு செய்தி இதோ, படியுங்கள்!

மோடி தனது மனைவி பெயரை அறிவித்தது எப்படி?: பின்னணியில் காஞ்சி காமாட்சி அம்மனின் அருள் எனத் தகவல் பாஜக கூட்டணியின் பிரதமர் வேட் பாளர் நரேந்திர மோடி தனது மனைவி பெயரை அறிவித்ததன் பின்னணியில் காஞ்சி காமாட்சியம்மன் இருப்பதாக அக்கோயில் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

நரேந்திர மோடி தனது மனைவி யசோதா பென் பெயரை வேட்பு மனுவில் குறிப்பிட்டவுடன், அது நாடு முழுவதும் மாபெரும் விவாதப் பொருளாக எடுத்துக் கொள்ளப்பட்டு, பெரும் சர்ச்சையை ஏற் படுத்தியது. இந்த விவாதத்தின் தீவிரம் குறைந்துவரும் நிலையில், மோடி தனது மனைவியின் பெயரை அறிவிக்கும் முடி வுக்கு பின்னணியில் காஞ்சிபுரம் காமாட்சி யம்மன் இருப்பதாக அக்கோயில் வட் டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயி லில் கடந்த மார்ச் 14 ஆம் தேதி உலக நன்மை வேண்டி தசமஹா வித்யா ஹோ மம் தொடங்கியது. மார்ச் 23 ஆம் தேதி வரை 10 நாள்கள் நடைபெற்றது. இதில் பாஜக தேசிய செயலாளர் முரளிதரராவ், தமிழ்நாடு மாநில துணைத் தலைவர் எச்.ராஜா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இதன் பிரசாதத்தை கோயில் பிரதான அர்ச்சகர் நடராஜ சாஸ்திரி எடுத்துக் கொண்டு மார்ச் 26 ஆம் தேதி டில்லியில் உள்ள மோடியை சந்தித்து கொடுத்துள் ளார். பிரசாதத்தில் காஞ்சிபுரம் காமாட்சி யம்மனின் பட்டுப்புடவையும் இருந் துள்ளது. இந்தப் பட்டுப் புடவையைக் கொண்டு சென்ற நடராஜ சாஸ்திரி, இந்தப் புடவையை உங்கள் மனைவியிடம் கொடுங்கள் என்று மோடியிடம் கூறினா ராம். சற்று மவுனம் காத்து பின்னர் வியந்து போய் நரேந்திரமோடி பிரசாதத்தை பெற்றுக்கொண்டாராம். அம்பாள் பக்த ரான நரேந்திர மோடி, காமாட்சியம்மனின் பட்டுப்புடவை வழங்கப்பட்டதையும், அதை அவரது மனைவியிடம் கொடுக்கு மாறு கூறியதையும் காமாட்சியம்மனின் உத்தரவாக எடுத்துக்கொண்டார். அதன் பிறகே வேட்புமனு தாக்கலின்போது, தனது மனைவியின் பெயரை குறிப் பிட்டார் என்று அக்கோயில் வட்டாரங் களில் பேசப்பட்டு வருகிறது.

இது குறித்து நடராஜ சாஸ்திரியிடம் கேட்டபோது, நரேந்திர மோடியை சந் தித்ததும், அவருக்கு அம்மனின் பட்டுப் புடவை வழங்கப்பட்டதும் உண்மை. இதன் பின்னரே அவருக்கு மனமாற்றம் ஏற்பட்டு மனைவி பெயரைத் தெரிவித் துள்ளார் என்றார் அவர்.

காஞ்சி காமாட்சி மோடிக்காக அருள்பாலித் துள்ளார் போலும்; (அவாள் காஞ்சி காமாட்சி யம்மன்) முழுக்க முழுக்க காஞ்சி மடத்தின்கீழ் - அதாவது ஜெயில் - பெயில் புகழ் ஜெயேந் திர சரசுவதி அன்ட் கோவின் நிர்வாகத்தின்கீழ் நடைபெறுவதால், இந்த ஏற்பாடே பெரிய வாள், சிறியவாள் அனுமதியோடோ அல்லது முழு ஆதரவோடுதானே நடந்திருக்க முடியும்; இல்லையா! (காசி விசாலாட்சியம்மையார் என்ன செய்வாளோ).

காஞ்சி மடத்தின் அருள், நித்திய கல்யாண குணங்களோடு ஆசிகள் வழங்கியுள்ளார், நாளைய பிரதமர் என்ற பூரிப்பில், புளகாங் கிதத்தில் உள்ள ஹரஹர நரேந்திரருக்காக!

இந்த ஹரஹர நரே சத்தம் வடக்கேயுள்ள (ரூப் ஆனந்த்) சங்கராச்சாரிக்கு ஏக கோபத்தை உண்டாக்கி, மோடியை வாரணாசியில் ஒரு வகையாக தேர்தல் வேலை பார்க்க முடிவு செய்துவிட்ட நிலையில்,

இங்கே காஞ்சிப் பெரியவாள் யாகம், யோகம் எல்லாம் செய்து, முந்தைய அத் வானியை வர வழைத்ததுபோல, காஞ்சிக்கு மோடியை தம்பதி சமேதராக வரவழைத்துத் தர முன்னேற்பாடு திட்டமோ!

இதற்காக, செருப்புப் பேச்சுப் புகழ் காரைக் குடி அய்யரும் தனி ஏற்பாடு செய்துள்ளாராம்!

பலே, பலே, யாகம் கைகொடுக்குமா?

மே 16 இல் தெரியும்!


- ஊசிமிளகாய்

Read more: http://viduthalai.in/e-paper/78802.html#ixzz2zC9HNYWD

தமிழ் ஓவியா said...


பார்ப்பான் உயிர்

பார்ப்பான் உயிர் கடவுள் பொம்மையிலும், கல்லிலும்தான் இருக்கிறது. அவை ஒழிந்தால் பார்ப்பானைப் பிராமணன் என்றோ, சாமி என்றோ, மேல்சாதியான் என்றோ எவனும் மதிக்கமாட்டான். - (விடுதலை, 3.12.1971)

Read more: http://viduthalai.in/page-2/78796.html#ixzz2zC9fXdnm

தமிழ் ஓவியா said...

பாபர் மசூதி இடிப்புக் குற்றவாளிகள்- உஷார்!

பாபர் மசூதி இடிப்புப்பற்றி கோப்ரா போஸ்ட் என்ற புலனாய்வு இணைய ஏடு வெளியிட்டுள்ள தகவல் நாட்டு மக்கள் மத்தியில் ஒரு பரபரப்பை ஏற்படுத்திவிட்டது.

பி.ஜே.பி. வட்டாரத்தில் பெரும் கலக்கத்தையும் ஏற்படுத்திவிட்டது. தேர்தல் ஆணையத்திடம் காவடி எடுத்துப் பார்த்தார்கள். அதைத் தடை செய்யவேண்டும் என்றனர் - தேர்தல் ஆணையம் உடன்படவில்லை.

23 முக்கிய தலைவர்கள் பேட்டி எடுக்கப்பட்டனர் - இரகசியமாக வீடியோவிலும் பதிவு செய்துவிட்டனர்.

இந்த இரகசிய வீடியோ பதிவில் இடம்பெற்றவர்கள் யார் என்பதைத் தெரிந்துகொண்டால் ஒரு வகையில் ஆச்சரியமாகவும் - ஏன் அதிர்ச்சியாகவும்கூட இருக்கும்.

வினய் கட்டியார், உமாபாரதி, கல்யாண்சிங், சுவாமி சச்சிதானந்த், சாக்ஷி மஹராஜ், மஹந்த் ராம்விலாஸ் வேதாந்தி, சாத்வி ரிதம்பரா, மஹந்த் அவைத்யநாத், சுவாமி நிருத்ய கோபால்தாஸ் உள்ளிட்ட மேலும் பி.ஜே.பி. பஜ்ரங்தள் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த முக்கிய தலைவர்களும் இந்த வீடியோ பதிவில் இடம்பெற்றிருந்தனர்.

17 ஆண்டு விசாரணைக்குப் பிறகு நீதிபதி லிபரான் ஆணையம் பாபர் மசூதி இடிப்பில் 68 பேர் குற்றவாளி கள் என்று அறுதியிட்டுக் கூறியது. வாஜ்பேயி பெயரை எப்படி சேர்க்கலாம் என்று நாடாளுமன்றத்தையே நடுங்க வைத்த யோக்கிய சிகாமணிகள்தான் இந்தப் பி.ஜே.பி.யினர் சட்டத்தின்முன் அனைவரும் சமம் என்பதெல்லாம் அவர்களின் அகராதியில் கிடையாதே!

ரேபரேலி (உத்தரப்பிரதேசம்) நீதிமன்றம் ஏற்கெ னவே அத்வானி உள்பட 49 பேர்கள் மீது குற்றவியல் சட்டம் 147, 153(ஜி), 149, 153(பி) மற்றும் 505 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கைப் பதிவு செய்திருந்தது.

கலகம் விளைவித்தல், மக்களிடம் குரோத உணர்ச்சிகளைத் தூண்டுதல், சட்ட விரோதமாகக் கூடுதல், தேசிய ஒருமைப்பாட்டுக்குக் குந்தகம் விளை வித்தல், ஒரு சமுதாயத்துக்கு விரோதமாக குற்றம் செய்யத் தூண்டுதல், பீதியை உண்டாக்குதல் என்ற குற்றங்களின் பிரிவுகள் இவை.

அத்வானியே தலைமை தாங்கிதான் பாபர் மசூதியை இடித்தார். அத்வானிபற்றிய குற்றப் பத்திரிகையில் சி.பி.அய். பகிரங்கமாகக் கூறியுள்ளது.

நீங்களும், மற்றவர்களும் பாபர் மசூதியை இடிக்க ஒரு சதித் திட்டம் தீட்டி இருக்கிறீர்கள். சம்பவ இடத்தில் அன்று காலை (1992, டிசம்பர் 6) பத்தரை மணியளவில் பொதுக்கூட்டம் ஒன்றில் தீவிரமாகப் பங்கெடுத்திருக் கிறீர்கள். பல தலைவர்களும் மசூதியை இடித்துத் தரைமட்டமாக்கு என்று ஆவேசமாகப் பேசி, கரசேவகர் களை, தொண்டர்களைத் தூண்டினீர்கள், காலை 11.45 மணிக்கு சம்பவ இடத்திற்கு வருமாறு தொண்டர்களுக் குக் கட்டளையிட்டீர்கள். மசூதியை இடிக்க டிராக்டர் களோ, புல்டோசர்களோ வேண்டாம். ஆளுக்கொரு தடியை எடுத்தாலே போதும் - மசூதி இடிந்துவிடும் என்று ஆவேசமாகப் பேசி இருக்கிறீர்கள்.

மசூதி இடிக்கப்படும் வரை உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சர் கல்யாண்சிங் பதவியை ராஜினாமா செய்யவேண்டாம் என்று சொன்னீர்கள். அப்பொழுது தான் மத்தியப் படை, மசூதி இடிப்பைத் தடுத்து நிறுத்த முடியாது என்று முதலமைச்சர் கல்யாண்சிங்குக்கு யோசனை சொன்னீர்கள்.

கரசேவை என்றால் பஜனையும், பக்திக் கீர்த்தனை யும் பாடுவதல்ல. சர்ச்சைக்குரிய, தகராறுக்குரிய 2.73 ஏக்கர் நிலத்தில் செங்கல் கொண்டு ராமர் கோவில் கட்டுவதாகும் என்று சொல்லியிருக்கிறீர்கள் என்று அத்வானிமீது சி.பி.அய். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. மேலும் பிற்பகல் 3.15 மணிக்கு மத்தியப் படையினர் மசூதிக்குள் நுழைவதைத் தடுக்க மசூதிகளின் வாயில்களை இழுத்து மூடுங்கள் என்று உத்தரவிட் டீர்கள் என்ற தகவலும் அதில் அடக்கம்.

பி.ஜே.பி.யில் இருந்து விலகிய நிலையில், கல்யாண் சிங்கும், பாபர் மசூதி இடிப்புத் தொடர்பாக பா.ஜ.க. தலைவர்களை நம்பி ஏமாந்தேன் என்று லக்னோவில் செய்தியாளர்களிடம் கூறினாரே! (தினமணி, 3.6.2009).

அதுமட்டுமல்ல, அத்வானியின் பாதுகாப்பு அதிகாரி அஞ்சு குப்தா அய்.பி.எஸ். என்பவரும், அத்வானிதான் கரசேவகர்களுக்குக் கட்டளையிட்டார் என்று லிபரான் ஆணையத்தின்முன் சாட்சியம் கூறினாரே!

பிசினஸ் இந்தியா ஏட்டின் செய்தியாளர் ருச்சிரா குப்தாவும் அத்வானியின் கட்டளைகள்பற்றி லிபரான் ஆணையத்தின்முன் சாட்சியம் சொன்னதுண்டே!

தமிழ் ஓவியா said...

பத்திரிகையாளர்கள் தாக்கப்படுகிறார்கள் - அவர் களைக் காப்பாற்றுங்கள் என்று அத்வானியிடம் கேட்டுக் கொண்டேன்; அவரோ அசைந்து கொடுக்கவில்லை. மாறாக எனக்கு இனிப்பு வழங்கினார் என்று அந்தப் பெண் பத்திரிகையாளர் கூறியுள்ளார்.

இன்னும் ஒருபடி மேலே சென்று, நாடாளுமன்றத் திலேயே அதிகாரபூர்வமான எதிர்க்கட்சித் தலைவ ராகிய சுஷ்மா சுவராஜ் என்ன கூறினார் தெரியுமா? பாபர் மசூதியை இடித்தது நாங்கள்தான் - தண்ட னையை ஏற்கத் தயார்! என்று சொன்னாரே! (தினமலர், 9.12.2009).

இவ்வளவுக்குப் பிறகும் பாபர் மசூதி இடிப்புக் குற்றவாளிகள் தண்டிக்கப்படாமல் ராஜ நடைபோட்டுத் திரிகிறார்கள் என்றால், இதனைவிட வெட்கக்கேடு வேறு ஒன்று இருக்க முடியுமா?

அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு (ஹிறிகி) உரிய முறையில் வழக்கை நடத்தியிருந்தால், இந்தப் பிஜேபி தலைவர்கள் எல்லாம் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிடும் தகுதியையே இழந்து இருப்பார்களே!

கோப்ரா போஸ்ட் புலனாய்வு இணைய தள நிறுவனம், தேர்தல் நேரத்தில் மீண்டும் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது. பாபர் மசூதியை இடித்த மதவெறியர்களை ஆளவிடலாமா? என்ற வினாவை வாக்காளர்கள் மத்தியில் எழுப்புவது அவசியமாகும்.

Read more: http://viduthalai.in/page-2/78797.html#ixzz2zC9nw2v6

தமிழ் ஓவியா said...


கைத்தறி நெசவாளர்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் இயக்கம் திமுக தான் பல்லடம் தேர்தல் பிரச்சாரத்தில் சுப.வீரபாண்டியன் பேச்சு


அருள்புரம், ஏப். 17- கைத் தறி நெசவாளர்களின் வளர்ச்சி என்றென்றும் உற்ற துணை யாக இருப்பது திராவிட முன் னேற்றக்கழகம் தான் என்று சுப.வீரபாண்டியன் குறிப் பிட்டார்.

திருப்பூர் மாவட்டம், பல் லடம் ஒன்றியத்திற்குட்பட்ட அருள்புரத்தில் (14.4.2014) அன்று மாலை 6 மணியள வில் ஜனநாயக முற்போக் குக் கூட்டணியின் சார்பில் திறந்த ஜீப்பில் தெரு முனைப் பிரச்சாரம் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு பல்ல டம் ஒன்றிய திமுக செயலா ளர் ராஜசேகர் தலைமை தாங் கினார்.

இப்பிரச்சாரத்தில் கோவை நாடாளுமன்றத் தொகுதியின் திமுக வேட்பா ளர் வழக்குரைஞர் கணேஷ் குமார் அவர்களை ஆதரித்து திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச் செய லாளர் பேராசிரியர் சுப.வீர பாண்டியன் பேசியதாவது: தமிழகத்தில் காலங்காலமாக தொன்று தொட்டு இருந்து வரும் தொழில்கள் உழவு, நெசவு, மீன்பிடிப்பு ஆகிய வைகளாகும். இந்த அடிப் படையான தொழில்களுக்கு கலைஞர் ஆட்சி என்னென்ன நன்மைகளைச் செய்தது! இன்றைய ஆட்சி என்ன செய் துக்கொண்டிருக்கிறது என்பதைப் பற்றி பேசுவதற் குத்தான் இந்தக்கூட்டம்.

கடன் நீக்கம்

விவசாயிகள் எண்ணிப் பார்க்க வேண்டும். திமுக ஆட்சியில் 7000 கோடி ரூபாய் விவசாயக்கடன் ரத்து செய் யப்பட்டது. இதன் மூலம் 2,26,000 குடும்பங்கள் பயன் பெற்றன. மிகமுக்கியமாக இதில் அதிமுகவைச் சார்ந்த நிலவுடைமையாளர் தான் அதிக அளவில் பயன்பெற் றுள்ளார்கள். பாரபட்சமின்றி அனைத்துக் கட்சி நண்பர் களும் இலாபமடைந்திருக் கின்றார்கள். இதற்கு நன்றி காட்ட வேண்டாமா?

இலவச மின்சாரம்

மின்சாரமே இல்லாத நாட்கள் தான் இப்போது வந்து கொண்டிருக்கிறது. அப்படியிருக்கையில் இலவச மின்சாரம் எப்படி வரும்? தமிழகம் முழுவதும் இருள் சூழ்ந்துள்ளது. மின் சாரக் கம்பியில் துணிகாயப் போடும்நிலை ஏற்பட்டுள் ளது. தண்ணீரை ஒரு அரசாங் கம் விற்பனை செய்கிற தென்றால் உலகிலேயே அது தமிழ்நாட்டு அரசாங்கம் தான். கலைஞர் இலவச மின் சாரம் தந்தாரே! விவசாயப் பெருங்குடிமக்கள் நினைத் துப் பார்க்க வேண்டாமா?

உழவர் சந்தை

விவசாயிகளின் உற்பத் திக்கு சரியான விலை கிடைக்க கலைஞர் அவர்கள் உழவர் சந்தையைக் கொண்டு வந் தார். இதன் வரவால் எத் தனை விவசாயக் குடும்பங் கள் மகிழ்ச்சிக் கடலில் தத் தளித்தார்கள் தெரியுமா? முதலில் 117 சந்தைகளை கலைஞர் கொண்டு வந்தார். பிறகு அதிக எண்ணிக்கை யில் கொண்டு வரப்பட்டது. ஆனால், இப்போது 13 காய் கறிக்கடைகளை கோடிக் கணக்கான மக்கள் வாழ் கின்ற நாட்டில் தற்போதைய அரசு திறந்துள்ளது. இது போன்றவர்களுக்கு இனியும் வாக்களிக்கலாமா?
கைத்தறித்தொழில் கைத்தறித்தொழிலுக்கு எப்போதும் துணை நிற்பது திமுக தான். கைத்தறித் தொழிலுக்கு விதிக்கப்பட்டி ருந்த மத்திய மதிப்புக் கூட்டு வரியை நீக்கிய ஆட்சி திமுக வின் பொற்கால ஆட்சி, ஆனால் இப்போது இப்பகு தியில் விசைத்தறிகள் ஓட வில்லை. கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி, உரிமை யாளர்களின் வேலை நிறுத் தம் தொடர்ந்த வண்ணம் உள்ளது. ஜவுளி உற்பத்தியா ளர்கள் முத்தரப்பு பேச்சு வார்த்தையில் ஏற்பட்ட ஒப் பந்தப்படி விசைத்தறி உரி மையாளர்களுக்கு உயர்வு தரவில்லை. இப்பிரச்சினை யைத்தீர்க்க தற்போதைய அரசு எவ்வித நடவடிக்கை யும் எடுக்கவில்லை.

இது தொழிலாளர்கள் நிறைந்த பகுதி. அன்றாடம் தொழில் நிமித்தமாகப் பய ணித்துக்கொண்டிருப்பவர்கள் நீங்கள், பேருந்து கட்டண உயர்வைப் பற்றி நான் சொல்லி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை. நீங்களே நன்றாகச் சிந்தித் துப்பாருங்கள்.

மீன்பிடி தொழிலுக்கு எவ்வித நன்மைகளையும், பாதுகாப்பையும் வழங்காத அரசாக தற்போதைய அரசு இருந்து வருகிறது. இந்த நிலைமாற அதிக வாக்குகள் வித்தியாசத்தில் கோவை நாடாளுமன்றத் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் ஜனநாயக முற்போக்குக் கூட்டணி திமுக வேட்பாளர் கணேஷ் குமார் அவர்களை நீங்களெல் லாம் பெற்றிபெற வைக்க வேண்டும் என்று சுப.வீ. அவர்கள் உரையாற்றினார்.

இந்நிகழ்வில் திராவிடர் கழகத்தின் திருப்பூர் மாவட் டச் செயலாளர் யாழ்.ஆறுச் சாமி, பேராசிரியர் அவர்க ளுக்கு சிறப்பு செய்தார். திரா விட இயக்கத் தமிழ் பேரவை யின் மாநில இணைப் பொதுச் செயலாளர் சிற்பி செல்வராசு, சேகாம்பாளையம் ரங்கசாமி, ரமேஷ், திருப்பூர் பிரகாசு, சிவாசலமூர்த்தி, சரவண மூர்த்தி, திமுக இலக்கிய அணியின் மாவட்ட துணை அமைப்பாளர் இளங்கோ, தி.க இளைஞரணியைச் சார்ந்த மணிகண்டன் உள்ளிட்ட ஜனநாயக முற்போக்குக் கூட் டணியின் செயல் வீரர்கள் பலரும் பங்கேற்று நிகழ்வைச் சிறப்பித்தனர்.

Read more: http://viduthalai.in/page-3/78827.html#ixzz2zCAumyBS

தமிழ் ஓவியா said...


கோவை தொண்டறச் செம்மல் மருத்துவர் பக்தவத்சலத்துக்கு வாழ்த்து


டாக்டர் பக்தவத்சலம், தமிழர் தலைவர் கி.வீரமணி, கோவை வசந்தம் இராமச்சந்திரன் மற்றும் டாக்டரின் அலுவலக நிர்வாகி

கோவையின் சிறந்த தொண்டறச் செம்மலான மருத்துவர் கே.ஜி.பக்தவத்சலம் அவர்களது கே.ஜி.பி. மருத்துவமனை என்பது மருத்துவத் தொழிலை தொண்டாகவும் செய்து வரும் அரிய சிறப்பான நிறுவனம் ஆகும்.

அதன் நிறுவனர் மதிப்பிற்குரிய மருத்துவர் கே.ஜி.பக்தவத்சலம் அவர்கள் அதனைத் துவக்கி 50 ஆண்டுகள் நிறைவு என்பதும், அவரது திருமணம் நடந்தது 50 ஆண்டு நிறைவு என்பதும் அவர்கள் கோவையில் நம்மை நேரில் சந்தித்து 8.4.2014 அன்று தெரிவித்தபோது மிகவும் மகிழ்ந்து, சிறப்பாடை போர்த்தி வாழ்த்துத் தெரிவித்தேன்.

அதை விட முக்கியம் எனது உளப்பூர்வ நன்றியையும் தெரிவித்தேன்; காரணம் முதலில் எனக்கு இதய நோய் தாக்கியபோது, அவருடைய மருத்துவமனையும் மருத்துவர்களும் தான் காப்பாற்றினார்கள்;

எனது பணி தொடர அப்போது செய்த அரிய உதவி மறக்க முடியாதது, எனவே நன்றியும் தெரிவித்தோம். அம்மருத்துவமனையும், மனித நேயரும் பண்பாளருமான மருத்துவர் கே.ஜி.பக்தவத்சலனாரும் வாழ்க! வளர்க!

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

Read more: http://viduthalai.in/page-8/78824.html#ixzz2zCBeDO2q

தமிழ் ஓவியா said...


தேர்தல்: தா.பாண்டியன் கணிப்பு இந்த தேர்தலில் தமிழகத்தில் வெற்றி வாய்ப்புகள் எப்படி இருக்கும்?


திமுகவுக்குத் தொடக்கத்தில் இருந்த தைவிட இப்போது நம்பகத்தன்மை தருகிற சூழ்நிலை வந்திருப்பது உண்மை. அதிமுக எடுத்த நிலை காரணமாக திமுகவுக்கு சிறுபான்மையினர் ஆதரவு பெருகி இருப் பது மறுக்க முடியாத ஒன்று. ஆகவே தொடக்கத்தில் இருந்ததைவிட இப்போது திமுக முன்னேறி இருக்கிறது.

அதேபோல தேர்தல் தொடங்குவதற்கு முன்பு, அதிமுக வுக்கு இருந்த நம்பிக்கை, மக்கள் தந்த ஆதரவு என்பது கரைந்து வருவது தெளி வாகத் தெரிகிறது.

காங்கிரஸ் கட்சி, வெற்றிபெற மாட் டோம் என்பதை அவர்களாகவே அறிவித்து விட்டார்கள். தமிழகத்தில் சமூக சேர்க்கை காரணமாக பி.ஜே.பி ஓரிரு இடங்களில் வெற்றி பெறக்கூடும் என்று நானும் நினைத் தது உண்டு.

ஆனால் அவர்களின் தேர்தல் அறிக்கைக்குப் பின், தமிழகத்தில் அவர் களும், அவர்களோடு கூட்டு சேர்ந்தவர்க ளும் ஓர் இடத்தில் கூட வெற்றி பெற வாய்ப்பு இல்லை.

கம்யூனிஸ்ட் இயக்கம் அமைத்துள்ள அணி அனைத்து இடங்களிலும் ஜெயிக்கும் என்று வீரவசனம் பேசமாட்டேன். ஏனென் றால் தேர்தல் என்பது பணம் புழங்கும் அரசியல் சந்தை.

- தா.பாண்டியன் - ஜூனியர் விகடன் (20.4.14) பேட்டியிலிருந்து

Read more: http://viduthalai.in/page-8/78823.html#ixzz2zCCGml24

தமிழ் ஓவியா said...


ராஜஸ்தானில் பாஜக தேர்தல் செலவுக்கு பாபா ராம்தேவின் பணமா?


செய்தியாளர்களிடமிருந்து தப்பித்து ராம்தேவ் ஓட்டம்!.

ஜெய்ப்பூர்.ஏப்.18- செய்தியாளர் சந்திப்பில் யோகா சாமியார் பாபா ராம்தேவ் தப்பி ஓட்டம் பிடித்தார். யோகா குரு என்று சொல்லிக் கொள் ளும் சாமியார் பாபா ராம் தேவ் சிபாரிசின்பேரில் பாஜகவின் வேட்பாளராக மஹந்த் சந்த்நாத் யோகி என்பவர் ஆல்வார் தொகு தியில் நிறுத்தப்பட்டுள் ளார். ஆல்வார் தொகுதியில் மத்திய அமைச்சர் ஜிதேந் திர சிங் காங்கிரசு தரப்பில் நிறுத்தப்பட்டுள்ளார்.

கடந்த புதன்கிழமை அன்று செய்தியாளர்களி டையே ராம்தேவ் பேசும் போது வெளிநாடுகளில் கறுப்புப் பணம் பதுக்கப் பட்டுள்ளது குறித்துப் பேசினார். தம்மிடம் மைக்ரோ மைக் உள்ளதை மறந்து ஆல்வார் தொகுதி பாஜக வேட்பாளர் மஹந்த் சந்த்நாத் யோகி பல இடங் களிலிருந்தும் பணத்தைக் கொண்டுவருவதில் ஏராளமான பிரச்சினை களை சந்தித்து வருவதாக ராம்தேவிடம் கூறினார். அப்போது வேகமாக இடைமறித்த ராம்தேவ் இந்த இடத்தில் இந்த பிரச்சினையைப் பற்றிப் பேசக்கூடாது. நீ என்ன முட்டாளா? என்று கேட்டு மஹந்திடமிருந்த மைக்ரோ மைக்கைப்பிடுங்கிக் கொண்டார்.

செய்தியாளர்கள் முன் னிலையில் ராம்தேவும், மஹந்தும் வெட்கித் தலை குனிந்தனர்.

இதுகுறித்து அனைத்து செய்தியாளர்களும் கேள்வி கேட்கத் தொடங்கினார்கள். செய்தியாளர்களின் கேள்வி களுக்குப் பதில் அளிக்கா மல் போக்குக்காட்டி விட்டு, செய்தியாளர்களின் சந்திப்பை பாதியில் நிறுத் தியதோடு அந்த இடத்தை விட்டு வெளியேறிவிட்டார். இதுகுறித்து பின்னர் மஹந்த் கூறும்போது, பணத்தைப்பற்றி பேசிக் கொள்ளவில்லை. செய்தி யாளர்கள்தான் தேவையில் லாமல் பதட்டத்தை உரு வாக்கி விட்டார்கள் என்று கூறினார். ராஜஸ்தானில் இப் பிரச்சினையே கறுப்புப் பணம்மீட்பது குறித்துப் பேசிவரும் பாஜகவுக்கு பதிலடியாக காங்கிரசின் பிரச்சாரத்தில் பொறிபறக்க வழிவகுத்துள்ளது.

காங்கிரசு சார்பில் தொடர்பாளராக உள்ள அர்ச்சனா ஷர்மா கூறும் போது, மோடிக்கு ராம் தேவ் உதவுவதுடன், கறுப் புப் பணம்குறித்து தேசத் தையே தவறான பாதைக்கு கொண்டு செல்கிறார். உண் மையான தகவல் என்ன வென்றால், ராம்தேவும், அவர் சீடர்களும் ஏராள மான கறுப்புப் பணத்தை வைத்துள்ளனர். அவர் கருப்புப் பணத்தைக் காட்டி தன்னுடைய சீடர் களுக்குப் போட்டியிடும் இடத்தைப் பெற்றதோடு, தேர்தல் பிரச்சாரத்துக்கும் பணத்தை தள்ளி விடுகிறார். தேர்தல் ஆணையத்திடமி ருந்தும், ராஜஸ்தான் மாநில தேர்தல் துறையிடமிருந் தும் நடவடிக்கை எடுப் பார்கள் என்று எதிர்பார்க்கி றோம் என்றார்.

(- ஹிந்துஸ்தான் டைம்ஸ், 17-4-2014)

Read more: http://viduthalai.in/e-paper/78856.html#ixzz2zHrSvlaj

தமிழ் ஓவியா said...


செய்தியும் சிந்தனையும்


பெண்?

செய்தி: மோடி பிரதமரா னால் மகளிர் நலத் திட் டங்கள் நிறைவேற்றப்படும்.
- இல. கணேசன் (பிஜேபி)

சிந்தனை: மகளிர் நலத் திட் டங்களை நிறைவேற்றுவது இருக்கட்டும். முதலில் உங்கள் கட்சி சார்பில் ஒரு பெண்ணுக்காவது தேர்த லில் நிற்க வாய்ப்புக் கொடுத் தீர்களா?

சாடுகிறார் மோடி

மீனவர் பிரச்சினைக்கு காரணம் ஜெயலலிதாவும் சோனியாவும்தான். - குமரியில் மோடி

மோடிக்குப் பதிலடி!

குஜராத் மாநிலத்தைவிட தமிழகம் பல்வேறு துறைகளில் முதலிடத்தில் உள்ளது.

- கிருஷ்ணகிரியில் முதல் அமைச்சர் ஜெயலலிதா


பாஜக - தெலுகு தேசம் கூட்டணி சிக்கல்

சீமாந்திராவில் பாஜக கூட்டணியிலிருந்து விலகி தெலுகு தேசம் கட்சி சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்படு வார்கள் என்று சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

சீமாந்திராவில் அறிவிக்கப் பட்டுள்ள பாஜக வேட்பாளர் கள் பலவீனமாக உள்ளதால், வெற்றி வாய்ப்பு இருக்காது எனவே, சீமாந்திராவில் பாஜக கூட்டணியிலிருந்து விலகி உள்ளதாக தெரிவித்தார்.

Read more: http://viduthalai.in/e-paper/78855.html#ixzz2zHroKDKJ

தமிழ் ஓவியா said...


வாக்குப்பதிவு இயந்திரத்தை வாஸ்துப்படி திசை மாற்றி வைக்கச் சொன்ன அமைச்சர்


கோலார், ஏப்.18- கருநாடக மாநிலம் கோலார் மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட வாக்குச்சாவடி யில் மத்திய அமைச்சர் முனியப்பாவின் வேண்டு கோளை ஏற்று, வாஸ்து சாஸ்திரப்படி வாக்குப் பதிவு இயந்திரத்தை திசை மாற்றி வைத்தார்'' என்ற புகாரின் பேரில் தேர்தல் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தலில், கர்நாடக மாநிலம் கோலார் தொகுதியில் மத்திய அமைச்சர் முனியப்பா போட்டி யிடுகிறார்.

கோலார் மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட ஹரோஹள்ளி வாக்குச் சாவடிக்கு வியாழக்கிழமை காலை முனியப்பா வாக் களிக்க வந்தபோது, வாக் குப்பதிவு இயந்திரம் தெற்கு நோக்கி இருந்ததை கண்டு அவர் அதிருப்தி அடைந்ததாக கூறப்படு கிறது.

இதனையடுத்து வாஸ் துப்படி அந்த எந்திரத்தை வடகிழக்கு திசையை நோக்கி மாற்றி வைக்கும் படி அவர் கேட்டுக் கொண் டார். அவரின் வேண்டு கோளை ஏற்று, வாக்குப் பதிவு இயந்திரத்தை தேர் தல் அதிகாரியும், முனியப் பாவின் ஆதரவாளர்களும் திருப்பி வைத்துள் ளனர். இதுகுறித்து புகார் தெரி விக்கப்பட்டதை அடுத்து, வாக்குப்பதிவு இயந்தி ரத்தை திசை மாற்றி வைத் ததாக தேர்தல் அதிகாரியை ஹரோஹள்ளி வாக்குச் சாவடியில் இருந்து தேர்தல் ஆணையம் இடமாற்றம் செய்துவிட்டது.

இந்த தகவலை கோலார் துணை ஆணை யரும், தேர்தல் அதிகாரியு மான டி.கே. ரவி செய்தியா ளர்களிடம் தெரிவித்தார்.

Read more: http://viduthalai.in/e-paper/78857.html#ixzz2zHs2Udh7

தமிழ் ஓவியா said...


மக்களையும், அம்பேத்கரையும், மோடி பரிவாரிடமிருந்து காப்பாற்றுவோம்
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

- குடந்தை கருணா

அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல் 14-ல், மோடிக்கு அம்பேத்கர் ஞாபகம் வந்து விட்டது. அம்பேத்கர் படத்திற்கு மாலை இடுகிறார். வணங்குகிறார். அடுத்து மோடி சொல்கிறார். பாஜக ஆட்சியில் இருந்தபோதுதான், அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது என வழக்கம் போல், புளுகு மூட் டையை அவிழ்த்து விட்டுள்ளார்.

பாஜக ஆட்சியில் இருந்தது 1998 முதல் மே 2004 வரை. ஆனால், 1990-இல் வி.பி.சிங் பிரதமராக இருந்த போது, அவரது ஆட்சியில் அம்பேத் கருக்கு பாரத ரத்னா விருது வழங் கப்பட்டது. அண்மைக்கால நிகழ்வு களைக்கூட, பொய்யாகப் பேசும் திறமை, மோடிக்கு மட்டும் தான் உள்ளது.

திடீரென அம்பேத்கர் மீது மரி யாதை; தலித் மக்கள் மீது பாசம், மோடிக்கும், பாஜகவிற்கும் வந்திருக் கிறது. ஆனால், தலித் மக்களைப்பற்றி மோடியின் கருத்து என்ன?

கர்மயோக் எனும் நூல் நவம் பர் 2007-இல் மோடியால் எழுதப் பட்ட நூல். குஜராத் மாநில பெட் ரோலிய கூட்டு நிறுவனம் மூலம் அச்சிடப்பட்டது. அந்த நூலின் சாத்னா பார்வா என்ற பகுதியில், தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களான வால்மீகி சமுதாயத்தினர், மலம் அள்ளும் பணியில் ஈடுபட்டுள்ளதை இந்து மத அடிப்படையில் ஆதரித்து நரேந்திர மோடி எழுதியுள்ளார்.

வால்மீகி (ஒரு தலித் இனக் குழு) மக்கள் மலம் அள்ளும் பணியை தங்களின் வாழ்வாதாரமாக மட்டும் நினைத்து செய்கிறார்கள் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. அது தான் காரணம் என்றால், அந்தப் பணியை அவர்கள் தொடர்ந்து பல தலைமுறைகளாக செய்திட வாய்ப் பில்லை. அவர்களில் யாருக்காவது ஏதோ ஒரு நேரத்தில் கடவுளுக்கும், சமுதாயத்திற்கும் மகிழ்ச்சி தருவது தங்கள் கடமை என்கிற ஞானம் தோன்றியிருக்கும்; கடவுளின் கருணையால் தங்களுக்கு அளிக்கப் பட்ட இந்த மலம் அள்ளும் பணியை செய்திட வேண்டும்; இத்தகைய சுத்தப்படுத்தும் பணியை பல நூற்றாண்டுகளாக எந்தவித உள் நோக்கமின்றி ஓர் ஆத்மிகமான பணியாக அவர்கள் செய்திருக்க வேண்டும்; இது தொடர்ந்து பல தலைமுறைகளாக நடைபெற்றிருக்க வேண்டும். அவர்களது மூதாதையர் களுக்கு வேறு எந்தப் பணியும் செய்வதற்கு வாய்ப்பு இல்லாமல் இந்த மலம் அள்ளும் பணியை செய்தார்கள் என நம்புவது இயலாது என எழுதி உள்ளார்.

அடுத்தவர் மலத்தை, தலையில் சுமக்கும் அவல நிலை, இன்னொரு மனிதனுக்கு இருக்கக்கூடாது என நாகரிக எண்ணம் கொண்டவர்கள் கருதவும், அதற்கு, நீதி மன்றங்களும் தீர்ப்பு தந்து கொண்டிருக்கும் இந்த காலத்தில், அதனை புனித செயலாகக் கருதி, தலித் மக்கள் செயல்பட, மோடி விருப்பம் தெரிவிக்கிறார் என் றால், மோடியை நாகரிக மனிதராக எப்படிக் கருத முடியும்?

நான் இந்து தேசியவாதி; ஆர்.எஸ். எஸ்-இல் இருப்பதை பெருமை யாகக் கருதுகிறேன் என பகிரங்கமாக கூறியவர் மோடி. அத்தகைய மோடி, மனிதனை பிறப்பால் பேதம் காட்டும் இந்து மதத்தில் பிறந்தேன்; ஆனால் இந்துவாக சாக மாட்டேன் என உறுதி பூண்டு, புத்த நெறியை ஏற்றுக் கொண்ட அம்பேத்கரை வணங்குவதும், மாலை இடுவதும், அம்பேத்கரை இழிவுபடுத்துவதா கும். அதேபோல், அம்பேத்கர், தன் வாழ்நாள் முழுவதும் எந்த மக்களின் இழிவைப் போக்க வேண்டும் என்று போராடினாரோ, அந்த தலித் மக் களை, மேலும் இழிவு படுத்தும் விதமாக மோடி நூல் எழுதுவதும், மோடியின் சிந்தனையும், செயலும் எவ்வாறு இருக்கும் என்பதற்கும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எத்தகைய ஆபத்து உள்ளது என்பதையும் எடுத் துக்காட்டுகிறது

Read more: http://viduthalai.in/page-2/78868.html#ixzz2zHsJ1oLU

தமிழ் ஓவியா said...


மூட மக்கள்


ஒவ்வொருவனும் தன்னை அன்னியன், கீழ்ச் சாதி என்று கூப்பிடுவதைச் சகித்துக் கொண்டுதான் மற்றவனைக் கீழ்ச் சாதி என்று கூப்பிடுவதில் திருப்தியும், பெருமையும் அடைகிறான். அதுதான் மூட மக்கள் என்பதற்கு அடையாளம்.

(விடுதலை, 24.9.1950)

Read more: http://viduthalai.in/page-2/78862.html#ixzz2zHsn9KRr

தமிழ் ஓவியா said...

ஜனநாயகத்துக்கே கேடான சர்வே

என்டிடிவியின் சர்வே முறைகேடு வெளுத்துவாங்கும் டில்லி இணைய ஊடகம்

டில்லி. ஏப்.18- என்டிடிவி அளித்துள்ள புதிய சர்வே முடிவுகள் அப்படியே எடுத்துக் கொண்டால், நடைபெற்றுவரும் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 275 இடங்களைப் பெறும் என்று முன்கூட்டியே சொல்லி உள்ளது. உத்தரப்பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சி, சமாஜ்வாடி மற்றும் காங்கிரசு இதற்குமுன் பெற்ற எண்ணிக்கைகளை மொத்தமாக இழந்து நிற்பதாகவும், அவர் களைக்காட்டிலும், மோடி அலையால் உபியில் மொத்தமாக 51 இடங்களை வாரிச் சுழற்றிக் கொள்வதாகவும் சர்வே கூறுகிறது.

காங்கிரசு அனைத்துத் தேர்தலிலும் தனியே குறைந்தபட்சமாக 92 இடங்களை வென்றுள்ளது. சர்வேபடி அய்க்கிய முற் போக்கு கூட்டணியில் வெறும் 111 இடங் கள் மட்டுமே பெறும் என்று கூறியுள்ளது.

ஆம்ஆத்மி டில்லியில் வெடித்துக் கிளம்பியது. சர்வேபடி, மிகச் சொற்ப மாகவே அக்கட்சி பெறும் என்கிறது.

பாஜக, அதன் ஆதரவாளர்களுக்கு அல்லது சர்வே எடுத்ததாக சொல்பவ ருக்கு கிறிஸ்துமஸ் ஆண்டின் தொடக்கத் திலேயே வந்துவிடுகிறது என்பதுபோல் சர்வே முடிவு உள்ளது.

சர்வேயில் எடுக்கப்பட்ட முடிவுகள் உண்மையாகவே வாக்காளர்களின் கருத்துகளைக் கொண்டதுதானா?

எப்படிப் பார்த்தாலும், தேர்தல் நேரத்தில் என்டிடிவி எடுத்துள்ள இந்த சர்வே, போதுமான ஆதாரங்கள் இல்லா மல், பரப்பப்பட்டுள்ளது. அவர்களின் பிழைப்புக்காகவும் எடுக்கப்பட்டிருக் கிறது. சர்வே முடிவு என்பது ஊடகங்களின் கருத்துத்திணிப்புதானோ என்று எல்லோ ருடைய மனதிலும் எழுந்துள்ள கேள்விக்குப் பதில் சொல்ல வேண்டும்.

பிரச்சினையே தேர்தல் ஆணை யத்தின் முடிவால் அல்ல. அது வரை யறுத்துள்ள கெடுபிடியான நேரம்தான். ஒரு மாதம்வரையிலான தேர்தலின் மத்தியில் சர்வே எடுக்கும் உரிமை மறுக் கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளால் நிலைமை மோசமாகி விட்டது. தேர்தல் ஆணையத்தின் அவசரகோலத்தில் எடுக்கப்பட்டுள்ள திடீர் முடிவுகளால், தற்போது என்டிடிவி சர்வே முடிவுகளை உறுதிப்படுத்தவோ, சர்வே முடிவுகளுக்கு மாறான நிலையிலிருப்பதை எடுத்துக்காட்டவோ வழி இல்லை. சர்வே முடிவால் பாதிக்கப் பட்டவர்கள் கருத்து தெரிவிக்க இயலா மலும் உள்ளது. என்டிடிவி சர்வே ஆணை யத்தின் விதிமுறைகளை கடைப்பிடித் துள்ளதாகக் கூறினாலும், உள்ளார்ந்த உணர்வுகளுக்கு இடம் கொடுக்கவில்லை.

ஆணையத்தின் இறுதிக்கெடுவாகிய ஏப்ரல் நான்காம் தேதிக்குப்பிறகு கருத்துக்கணிப்பு எடுக்கப்பட்டதை மன்னித்து, சாதகமான காரணங்களைக் கூறி வெளியிட அனுமதித்துள்ளது.

தமிழ் ஓவியா said...


வாக்களிப்பவர்கள் தாமாக முடி வெடுப்பதற்கு வாய்ப்பாக, போதிய கால இடைவெளி இருக்கவேண்டும் என்கிறது. இதனாலேயே, தேர்தலுக்குப்பின் கருத்துக்கணிப்பு என்கிற பெயரில் வாக்களித்தவர்கள் யாருக்கு வாக்களித் தார்கள் என்பதை வெளியிடும்போது, வாக்களிக்கக் காத்திருப்போரையும், அதைப்போலவே வாக்களிக்க வலியுறுத் துவதாகிவிடும். எனவே, ஆணையம் அனைத்து இடங்களிலும் வாக்குப்பதிவு முடியும்வரை கருத்துக்கணிப்பை வெளி யிடுவதைத் தடை செய்துள்ளது.

என்டிடிவி சட்டத்தின் ஓட்டைகளில் நுழைந்து, ஆணையம் விதித்த கெடு வுக்குமுன்பாக எடுத்து முடிக்கப்பட்டது போல் இருப்பது முற்றிலும் தவறானது. ஏப்ரல் நான்காம் தேதிக்கு முன்னதாக எடுத்துள்ளதாகக் கூறி தற்போதைய நிலவரங்களையும் இணைத்தே சர்வே முடிவை வெளியிட்டுள்ளது.

இந்த முடிவு மக்களிடையே ஒருசார் பான ஆதரவுநிலையை அதிகப்படுத்தும் நோக்கமேயாகும். மேலும், உச்சகட்ட தேர்தல் காய்ச்சலில் இருக்கும்போது, வாக்காளர்களின் முடிவு என்னவென்றே ஊகிக்க முடியாத நேரத்தில் தேர்தலின் ஒரு பகுதியாக சர்வே முடிவை ஒரு சார்பாக வெளியிட்டுள்ளது.

ஊடகங்களிடையே உள்ள கடும் போட்டியில் பார்வையாளர்கள் மத்தியில் சர்வே எடுத்தது அந்த ஊடகத்தின் பெரிய வெற்றியாகும். ஆனால், அதன் விலை என்ன?

ஒரு குறிப்பிட்ட கட்சிமட்டும் மிகப் பெரிய வெற்றி பெறும் என்று வெளியிட்டு வாக்காளர்களைத் திசை திருப்புவதை என்டிடிவி செய்துள்ள நோக்கம் தெரி கிறது. தவிர்க்கவே முடியாதவகையில் திரும்பதிரும்ப அவர்களிடையே வெற்றிபெறுவது இன்னார்தான் என்று கருத்து வெளியிடும்போது, அவர்களும் தங்கள் கருத்தை மாற்றிக்கொண்டு வெற்றிபெறுவதாக சித்தரிக்கப்பட்டதன் பக்கம் சாய்வதற்கு வாய்ப்பு ஏற்படுகிறது. இந்தியாவில் யார் வெல்வதாக கருது கிறார்களோ அவர்களை ஆதரிக்கும் மனோநிலைக்குத் தள்ளப்படுவார்கள்.

மூத்த செய்தி ஆசிரியர் ஒருவர் கூறும்போது, ஒரு பெண்ணுக்கு மோடியைப்பற்றி ஒன்றுமே தெரியாது, அவர் நாட்டுக்கு நல்லது செய்வார் என்பதைவிட, வெற்றிபெறுவார் என்று தேர்தல் பிரச்சாரத்தின்போது கேள்விப் பட்டாராம். அதனால் வாக்களிக்க திட்டமிட்டுள்ளாராம். இப்படித்தான் அனைத்து அரசியல்வாதிகளும் உண்மை வேறாக இருந்தாலும், அதற்கும் மேலாக தொடர்ந்தாற்போல் மிகப்பெரிய வெற்றி பெறுவதாகக் கூறிவருகின்றனர். இப்படித்தான் மோடி வெற்றிபெறுவதாக, அடுத்த பிரதமர் என்று தொடர்ந்து கூறி, வாக்காளர்களை திசை திருப்பி வருகின்றனர்.

என்டிடிவி சர்வே பாஜகவுக்கு உதவுகிறது. அதேநேரத்தில் காங்கிரசை ஒரு பொருட்டாகக் கூட கருதவில்லை. ஆம்ஆத்மி கட்சி, தன்னைக்காத்துக் கொள்ள போராடும் தேவை உள்ளதாகும். அந்த அமைப்புகள், அதன் கொள்கைகள் ஆகியவற்றைத் தாக்குவதுபோல் சர்வே முடிவு உள்ளது. மற்ற இடங்களைக் காட்டிலும், வாக்காளர்கள் மத்தியில் டில்லியில் இதன்பாதிப்பு அதிகமாகும்

எல்லாவற்றையும் கடந்து, இந்த கசப்பான தேர்தல் பிரச்சாரக் காலத்தில் இதுபோன்ற வாதங்கள் பங்குதாரர்களால், சர்வே முடிவை பாராட்டுபவர்கள், வரவேற்பவர்களுக்கு கொள்கை ஏதும் கிடையாது. பிரச்சாரக் களத்தில் இந்த சர்வே முடிவைச் சொல்லி கிடைக்காத இடத்திலும் ஆதரவைத் தேட முயல் வார்கள். அநேகமாக மாபெரும் தேர் தலின் முடிவு என்பது சர்வே முடிவுக்கு தொடர்பின்றியே வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

-ஃபர்ஸ்ட் போஸ்ட், 15-4-2014, டில்லி

Read more: http://viduthalai.in/page-2/78865.html#ixzz2zHt9PKii

தமிழ் ஓவியா said...


ஒரு லட்சம் விதவை தாய்மார்களை ஏமாற்றிய ஜெயலலிதா


குடும்ப ஓய்வூதியதாரர்களாகிய விதவை தாய்மார்களை ஏமாற்றிவிட்ட தற்போதைய அதிமுக பொதுச் செயலாளர் செல்வி ஜெ.ஜெயலலிதாவால் சுமார் ஒரு லட்சம் குடும்ப ஓய்வூதியம் பெறும் விதவை தாய்மார்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள் எப்படி என்றால் 1.6.1988 முதல் 31.12.1995 முடிந்த காலத்தில் தமிழ்நாடு அரசு ஊழியராக வேலை பார்த்துஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப் பட்டதில் அகவிலைப்படி முழுமையாக சேர்த்து வழங்காமல் 13 சதவீதம் மட்டும் சேர்த்து வழங்கியது தவறு என உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதில் கடந்த 17.1.2013 இல் உச்சநீதிமன்றம் ஓய்வூ தியதாரர்களின் மேல்முறையீடு மனுவை ஏற்று அகவிலைப்படியை முழுமையாக வழங்க வேண்டுமென தீர்ப்பு வழங்கியது.

இதன் அடிப்படையில் தமிழ்நாடு அரசு 23.8.2013 தேதியிட்டு அரசாணை எண் 363அய் வெளியிட்டது. இதில் என்ன வேதனை என்றால் மேற்படி அரசாணை எண். 363 இன் பாரா 15 இன் வரிசை எண். 3,4,5 இல் மேற்படி அரசானை வெளியிடப்பட்ட தேதியான 23.8.2013 இல் யார், யார் உயிருடன் இருக்கிறார்களே, அவர்களுக்குத் தான் இந்த ஆணை பொருந்தும். 23.8.2013 தேதிக்கு முன்பே இறந்த ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதிய பலன் கிடையாது என்பது தான் சரத்து இதனால் முற்றிலும் பாதிக்கப்பட்டவர்கள் குடும்ப ஓய்வூதியம் பெறும் விதவை தாய்மார்கள் என்பது தான் விதவை தாய்மார்களுக்கு ஜெயலலிதா செய்த துரோகம் என்றால் மிகையாகாது.

வயது முதிர்ந்த (Senior Citizen) விதவை குடும்ப ஓய்வூதியம் பெற்று வருப வர்களின் வயிற்றெரிச்சலை விளக்க வேண்டும். நமது தேர்தல் பிரச்சாரத்தின் போது விளா வரியாக அதாவது பெண்களுக்கு அதிலும் விதவை தாய்மார்களுக்கு துரோ கம் செய்த ஜெயலலிதாவுக்கா? உங்கள் ஓட்டு.

குறிப்பு: தீர்ப்பின்படி ஓய்வு பெற்ற அரசு ஊழியர் எந்த தேதியில் இறந்தாரோ, அந்த தேதியில் பணப்பயன் கொடுக்க வேண்டும் - அ.அப்துல் ஜப்பார், கூட்டுறவு சார்பதிவாளர், பிள்ளையார் பட்டி, தஞ்சாவூர்.

Read more: http://viduthalai.in/page-2/78867.html#ixzz2zHtkRmCA

தமிழ் ஓவியா said...


சூனியமும் புராதன மதங்களும்


சூனிய வித்தையை விடுவதென்றால் நமது புண்ணிய புராதன நூல்களைத் தூர எறிவதாகும் என்று சர்.தாமஸ் மோர் கூறினார். என்னுடைய அபிப்பிராயத்தில் அவர் கூறியது முற்றிலும் சரியே.

ஜான்வெஸ்லி என்பவர் பேய் பிசாசுகளிலும், சூனிய வித்தைகளிலும் அதிக நம்பிக்கை கொண்டிருந்தார். இது சம்பந்தமான சட்டங்கள் எல்லாம் இங்கிலாந்தில் ரத்தாகி அநேக ஆண்டுகளுக்குப் பின்னும் இவர் தம் நம்பிக் கையை வற்புறுத்தியிருக்கிறார்.

இந்த ஜான் வெஸ்லி என்பவர்தான் முதன் முதலாக நூதன மாதிரி கோவில் ஸ்தாபித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. நியூ இங்கிலாந்தில் ஒரு பெண் சூனிய வித்தைக்காரி என்பதற்காகவும், அவள் நரியாக மாறினாள் என்பதற் காகவும் குற்றம் சாற்றப்பட்டாள். இந்த நிலையில் அவளைச் சில நாய்கள் கடித்துவிட்டன.

நியாய ஸ்தலத்தின் உத்தரவின்படி ஏற்பட்ட மூன்று பேர் கூடிய கமிட்டியார் அவளைச் சோதனை செய்தனர். அவர்கள் அவளுடைய ஆடையை விலக்கி சூனியக் காரியின் சூட்சம ஸ்தானத்தைத் தேடினார்கள். அதாவது, அந்த விசேஷ இடத்தில் குண்டூசியால் குத்தினால் வேதனை உண்டாகாதாம். அவள் தான் ஒரு போதும் நரியாக மாறினதில்லை என்று மறுத்தாள்.

கமிட்டியார்கள் செய்த சிபார்சின் பேரில் அவள் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டாள். இவ்வட்டூழியங்கள் எல்லாம் (இங்கிலீஷ் சர்ச்சிலிருந்து பிறந்தவர்களான) ப்யூரிட்டன் பிரதர்ஸ் என்று சொல்லப் பட்ட கடவுளை வணங்க தைரியமாக கடல் கடந்து இங்கிலாந்திலிருந்து அமெரிக்கா சென்று தம் சகோதரர்களைக் கொடுமைப்படுத்திய கிறிஸ்தவர்களால் செய்யப்பட்டன.

கோடைகாலத்தில் பனியுண்டாக்கியதற்காகவும், மூடு பனியால் விளை பொருள்களைக் கெடுத்ததாகவும், புயல், பீர், சாராயம் முதலியன கசப்படைந்ததற்காகவும், ஒரு பாவமும் அறியாத மனிதர்கள் தீயிட்டுக் கொளுத்தப் பட்டனர். எவனும் எந்தக் குற்றத்துக்காவது உள்ளாகி தண்டனை அடையாமல் இருக்க முடியவில்லை.

குற்றம் சாட்டப்பட்ட எல்லோரும் தண்டிக்கப்பட்டனர். எல்லோருடைய ஜீவனும் ஆபத்துக் கிடமானதாகவே இருந்தது. ஒவ்வொருவனும் மற்றவனுடைய இரக்கத்தை எதிர்பார்த்தவனாக இருந்தான்.

இந்த நம்பிக்கை பேய், பிசாசு உண்டு; சூனிய வித்தை உண்டு; சூனிய வித்தைக்காரர்கள் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கை மிக வேரூன்றி இருந்தபடியால் இதன் உண்மையைச் சந்தேகிக்கும் எவன்பேரிலும் அவ நம்பிக்கை வைக்கப்பட்டது. பேய், பிசாசு இல்லை என்று எவன் சொன்னாலும் அவனைத் தெய்வ நிந்தனையுடைய துஷ்டன் என இகழ்ந்து வந்தனர்.

(கர்னல் ஆர்.ஜி.இங்கர்சால் எழுதிய பேய்-பூதம்-பிசாசு என்ற நூலில்)
தகவல்: குன்னம் ராமண்ணா

Read more: http://viduthalai.in/page-7/78881.html#ixzz2zHu8PV6O

தமிழ் ஓவியா said...

இப்போ பிராமணனும் இல்லே பிராமண தர்மமும் இல்லே!

வினா: வேத மந்திரத்தை இந்த மாதிரி விலை பேசி விற்கலாமா?

புரோகிதர் பதில்: எல்லாம் காலக்கோளாறுதான். காலம் ரொம்பத் தப்பாப் போச்சு. நாங்கள்ளாம் இந்த மாதிரி வந்துட்டோம். இப்ப பிராமணனும் இல்லே.. பிராமண தர்மமும் இல்லே.

வினா: நீங்க முன்னே பார்த்த மாதிரி ஜனங்களிடம் பக்தி இருக்கிறதா இப்போது?

புரோகிதர் விடை: பக்தியாவது. ஒண்ணாவது? கோவிலுக்கு வர்றவன் சாமி தரிசனத்துக்கா வர்றான்? சைட் அடிக்கன்னா வர்றான். பொம்மனாட்டிகள் மட்டும் என்ன யோக்கியம்? அவாளும் புடவை, நகை, நட்டு இதெல்லாம் போக, நேரம் இருந்தா சுவாமி, அம்பாளை நெனச்சுக்கிறா!

- துக்ளக், 1-6-1981 இதழ், பக்கம் 32
தகவல்: கிருட்டினசாமி, செகந்திராபாத்

Read more: http://viduthalai.in/page-7/78881.html#ixzz2zHuNt196

தமிழ் ஓவியா said...

கண்டு முட்டு - கேட்டு முட்டு!

வைணவர்களில் இருக்கின்ற இருபிரிவாளர்களான வடகலை நாமக்காரர்களும், தென்கலை நாமக்காரர்களும் ஒருவரையொருவர் பார்த்துவிட்டாலே - அதாவது தென்கலை நாமம் போட்டிருப்பவரை வடகலை நாமம் போட்டிருப்பவர் நேரிடையாகக் கண்டுவிட்டாலும், வடகலை நாமம் போட்டிருப்பவரை தென்கலை நாமம் போட்டிருப்பவர் நேரிடையாகக் கண்டுவிட்டாலும் - அந்த பாவத்தைப் போக்க சுவற்றிலே போய் முட்டிக் கொள்வார்களாம் - இவர்கள் கண்டு முட்டுகள் ஆவார்கள்!

சைவர்களும், வைணவர்களும் ஒருவரையொருவர் எதிர்ப்பாகக் கருதி வந்தனர் அந்தக் காலத்தில் - அப்படி இருக்கும்போது சைவர்கள் செல்லும் வழியில் - செல்லும் போது வைஷ்ணவக் கடவுளைப் பற்றி பெருமையாகவோ, புகழ்ந்தோ பேசுவதைக் காதாலோ கேட்டுவிட்டாலும், அதே போன்று வைஷ்ணவர்கள் காதில் படும்படி சைவர்கள் தங்கள் கடவுளைப்பற்றி பெருமையாகவோ, புகழ்ந்தோ பேசுவதைக் கேட்டுவிட்டாலும் அந்தைப் பாவத்தைப் போக்குவதற்கு சுவற்றிலே போய் முட்டிக் கொள்வார்களாம் - இப்படி செய்வதை கேட்டு - முட்டு என்பர்.

இப்படி கண்டு முட்டு, கேட்டு முட்டுகளைப் போன்று இன்றைய அரசியல் கட்சிக்காரர்கள் எதிர்ப்பாக நடந்து கொள்கின்றனர்.
(10.10.1977 அன்று கடலூர் திராவிடர் கழகப் பொதுக் கூட்டத்தில் கழகப் பொதுச் செயலாளர் கி.வீரமணி உரையிலிருந்து)

தகவல்: துரை.சந்திரசேகரன்

Read more: http://viduthalai.in/page-7/78880.html#ixzz2zHudTgpt

தமிழ் ஓவியா said...

விஞ்ஞான முடிவுக்கு எதிரானவை

அறிவாளிகள் ஒரு விஷயத்தின் எல்லா அம்சங் களையும் கவனமாக பரிசீலிக்காமல் அதைப்பற்றி முடிவு கூறமாட்டார்கள். மூடர்களும், கோழைகளும், சிந்திக்கத் தயங்குகிறவர்களும்தான் - குழந்தை பருவத்தில், அறிவு முதிர்ச்சியில்லாத காலத்தில், காரணத்தோடு புரிய முடியாத போது தங்களின் பெற்றோர்களாலும், ஆசிரி யர்களாலும் திணிக்கப்பட்ட மூடக் கொள்கைகளைக் கண்ணை மூடிக் கொண்டு ஏற்கிறார்கள்.

உலகிலுள்ள 80 கோடி இஸ்லாமியரும் வான மண்டல தூதுவரால் குர்-ஆன் அளிக்கப்பட்டதாக நம்புகிறார்கள்; 34 கோடி இந்துக்களும் தங்கள் கடவுளரில் ஒருவனான சிவனுக்கு ஆறு கைகள் இருப்பதாக நம்புகிறார்கள்; 16 கோடி பவுத்தர்களும் மறுபிறவு உண்டென்று நம்புகின்றனர் 91 கோடி கிறிஸ்துவரும் கடவுள் ஆறே நாட்களில் உலகைப் படைத்தான் என்று நம்புகின்றனர்.

இப்படியெல்லாம் நம்புவதற்கு விஞ்ஞான ரீதியான சான்று எதுவும் இல்லை. அறிவைக் கொண்டு இதுவரையில் காணப்பட்ட உண்மைகளுக்கு இவை நேர் விரோத மானவை என்பதை விஞ்ஞானம் காட்டி விட்டது.

- ஜேம்ஸ் ஹார்வி ஜான்சன்

Read more: http://viduthalai.in/page-7/78880.html#ixzz2zHumGwZ4

தமிழ் ஓவியா said...


அம்மையாரை அம்பலப்படுத்தும் அண்ணா திமுக ஏடு


ஈழத் தமிழர்களுக்காக ஆட்சியை இழந்தது திமுக என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் சொல்லிவிட்டாராம்.
அதிமுக ஏடான நமது எம்.ஜி.ஆர். சும்மா இருக்குமா? விட்டேனா பார்? என்று எகிறிக் குதிக்கிறது.

முடிந்தால் காரணா காரியத்தோடு மறுக்க வேண்டும். முடியாவிட்டால் மூலையில் போய் முடங்கிட வேண்டும். ஏன் வீணாக அரட்டைக் கச்சேரி நடத்த வேண்டும்?

பதினெட்டு கடல்மைல் தொலைவில் பல்லாயிரம் உயிர்கள் அய்யோ என ஓலமிட்டு எழுப்பிய மரண ஒலியை, அன்றாடம் பாராட்டு விழாக்கள் நடத்தி, அதில் எழுந்த ஜால்ரா சத்தத்தின் மூலம் மறைத்து விட்ட மாபாதகன் கருணாநிதி என்று எழுதுகிறதே - எதற்காக?

கண்ணாடி மாளிகையிலிருந்து கற்கோட்டை நோக்கிக் கல் எறியலாமா?

போரை நிறுத்த வேண்டும் என் பதன் மூலம் கருணாநிதி விடுதலைப் புலிகள் அமைப்பைக் காப்பாற்றுவதற் கான முயற்சியில் தற்போது ஈடுபட்டு இருக்கிறார் - இது ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்றல்ல என்று சொன்னவர் யார்? அம்மையார் ஜெயலலிதா தானே, இதனை வெளியிட்டதும் இதே நமது எம்.ஜி.ஆர்ஏடு தானே! (16.10.2008).

இதன் மூலம் என்ன தெரிகிறது? ஈழத்தில் போரை நிறுத்த வேண்டும் என்று கலைஞர் வற்புறுத்தி இருக்கிறார் என்பதையும், அப்படிப் போரை நிறுத்தக் கூடாது என்று ஜெயலலிதா கூறியிருக் கிறார் என்பதையும், நமது எம்.ஜி.ஆர் ஏடே ஏற்றுக் கொண்டு இருக்கிறதே!

18 கடல் மைல் தொலைவில் பல்லா யிரம் ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்டது குறித்துக் கண்ணீர் வடிக்கிறதே நமது எம்.ஜி.ஆர். - அந்தப் பல்லாயிரம் உயிர் கள் கொல்லப்பட்டதை நியாயப்படுத் தியவர்தானே செல்வி ஜெயலலிதா!

ஒரு யுத்தம் - ஒரு போர் நடக்கும் போது அப்பாவி மக்கள் கொல்லப் படுவார்கள் - இதில் எந்த நாடும் விதிவிலக்கல்ல - என்று ஜெயலலிதா சொல்லவில்லையா? அப்படி சொன்னதை இதே நமது எம்.ஜி.ஆர். ஏடும் (18.1.2009). கொட்டை எழுத்தில் பொறிக்க வில்லையா?

கூட இருந்தே குழி பறிக்கும் என்பார் கள்; நமது எம்.ஜி.ஆர் ஏட்டின் எழுத் தாளர்கள் இதைத்தான் செய்து கொண்டு இருக்கிறார்களோ என்று சந்தேகப்பட வேண்டியுள்ளது.

அம்மையாரை அம்பலப்படுத்த வைப் பதில் அவர்களுக்கு அப்படி என்னதான் தீராத ஆசையோ!

Read more: http://viduthalai.in/page-8/78890.html#ixzz2zHv0aT8x

தமிழ் ஓவியா said...


நடிகர்கள் - பதில் சொல்லியாக வேண்டும்!


ஒரு நாள் ரஜினி சந்திப்பு! - இன்னொரு நாள் நடிகர் விஜய் சந்திப்பு! ஆக மோடி தேர்தல் நடிகர் ஆகி? இருக்கிறார் என்பதுதானே இந்த நாடகத்தின் பின்னணி. எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்னும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்! சம்பிரதாய சந்திப்பாம்! சொல்லுகிறார்கள்; படிப்பவர்களின் காதுகளில் பூ சுற்றுகிறார்கள்! நேரடியாகச் சொல்லத் தைரியம் இல்லை - இதில் யாருக்கும் வெட்கம் இல்லை!

தமிழ்நாட்டு மக்கள் ஒன்றும் ஏமாந்த சோணகிரிகள் அல்லர்.

இந்தத் தமிழ்நாட்டு நடிகர்களும் ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டும். இந்துத்துவாவைக் கையில் எடுத்துக் கொண்டு, மதவாதத்தைத் திணித்து மக்கள் மத்தியில் கல வரத்தை உண்டு பண்ணத் திட்டமிட்ட மதவெறியர் களுக்கு ஒரு வகையில் துணை போயிருக்கிறார்கள் இந்த நடிகர்கள் என்பதை மறக்க வேண்டாம்!

இந்தத் தவறுக்குப் பின்னொரு காலத்தில் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டிய நிலை ஏற்படும்! - சிறுபான்மை மக்கள் மத்தியிலும் மதச்சார்பற்ற எண்ணங்கொண்ட மக்கள் மத்தியிலும் இவர்களுக்குரிய இடம் என்ன? ஏன் இந்த விஷப் பரிட்சை?

Read more: http://viduthalai.in/page-8/78888.html#ixzz2zHvL8ukw

தமிழ் ஓவியா said...

முஸ்லிம்கள் மீதான மோடியின் அன்பு போலியானது: அகிலேஷ்

பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, முஸ்லிம்கள் மீது காட்டி வரும் அன்பு போலித் தனமானது என்று உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் சாடினார்.

உத்தரப் பிரதேச மாநிலம் ஹார்டோயில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அவர் பேசும்போது, "மோடிக்கு தேர்தல் நேரத்தில் தான் முஸ்லிம்களின் ஞாபகம் வருகிறது. அவர் முஸ்லிம்கள் மீது தற்போது காட்டி வரும் அன்பு போலியானது.

முஸ்லிம்கள் தன்னை நேரில் பார்த்தால், என்னை விரும்ப ஆரம்பித்து விடுவர் என்று நேற்றுகூட அவர் பேசியுள்ளார். ஆனால், முஸ் லிம் மக்கள் மோடியையும், பாஜக தலைவர் களையும் நம்பிவிடக் கூடாது.

காங்கிரஸின் தவறான கொள்கைகளால் மட்டுமே பாஜக என்ற கட்சி இன்னும் இருக் கிறது. தற்போது ஒரு பக்கம் மதவாத சக்திகளும், மறுபக்கம் சோசலிச சிந்தனையாளர்களும் இருக்கின்றனர்.

இதில், யாரைத் தேர்வு செய்ய வேண்டும் என்று மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும். சமாஜ்வாதி தலைவர் முலாயம் சிங்கால் மட்டுமே நாட்டின் நலனை காக்க முடியும் என்றார் அகிலேஷ் யாதவ்.

Read more: http://viduthalai.in/page-8/78884.html#ixzz2zHvdsM50

தமிழ் ஓவியா said...

கார்ப்பரேட், மதவாத சக்திகளின் பொது வேட்பாளர் நரேந்திர மோடி: பிரகாஷ் காரத் தாக்கு

பாஜக பொது வேட்பாளர் நரேந்திர மோடி கார்பரேட் நிறுவனங்கள், மதவாத சக்திகளின் பொது வேட்பாளர் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் தெரி வித்துள்ளார்.

வாரணாசியில் செய்தியாளர்களிடம் வியாழக் கிழமை அவர் கூறியதாவது:

நரேந்திர மோடியை எதிர்த்து வாரணாசி தொகுதியில் பொது வேட்பாளரை நிறுத்தலாம் என்று முதலில் ஆலோசிக்கப்பட்டது.

அதற்காக காங்கிரஸ் அல்லாத மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்றிணைந்து பொது வேட்பாளரை நிறுத் தினால் மார்க்சிஸ்ட் வேட்பாளரை திரும்பப் பெற்றுக் கொள்ள தயாராக இருந்தோம். ஆனால், கட்சிகளிடம் கருத்தொற்றுமை ஏற்பட வில்லை.

இந்திய வரலாற்றில் முதல்முறையாக கார்ப் பரேட் நிறுவனங்கள் அனைத்தும் மோடியை ஆதரிக்கின்றன. இதற்கு முன்பு காங்கிரஸை ஆதரித்த கார்பரேட் நிறுவனங்கள் இப்போது மோடிக்கு ஆதரவாக மாறியுள்ளன. கார்பரேட் நிறுவனங்கள் மற்றும் மதவாத சக்திகளின் பொது வேட்பாளராக மோடி உள்ளார்.

வாரணாசியில் மோடி நிறுத்தப்பட்டிருப் பதன் மூலம் மதத்தின் அடிப்படையில் வாக் காளர்களை ஈர்க்க பாஜக, ஆர்.எஸ்.எஸ். திட்ட மிட்டிருப்பது தெளிவாகிறது.

இந்த நேரத்தில் விவசாயிகள், தொழிலா ளர்கள், இளைஞர்கள், மதச்சார்பற்ற சக்திகள் ஒன்றிணைந்து பாசிச, முதலாளித்துவ, மதவாத சக்தியை எதிர்த்துப் போராட முன்வர வேண் டும். வாரணாசியில் மோடியை தோற்கடிக்க வேண்டும் என்றார்.

Read more: http://viduthalai.in/page-8/78884.html#ixzz2zHvjIFHs