Search This Blog

13.4.14

அரசியல் வாழ்வு மனிதப் பண்பைக் கெடுத்து வருகிறதா?

அரசியல் வாழ்வு!

அரசியல் வாழ்வு நாளுக்கு நாள் மனிதப் பண்பைக் கெடுத்து வருகிறது. அரசியல் போட்டி என்பது மிகமிகக் கீழ்த்தரத்திற்கே போய்க் கொண்டிருக்கிறது.

இவை நம் பின் சந்ததிகளைப் பாழாக்கி விடும் போலத் தெரிகிறது.

இன்றைய மாணவர் சமுதாயத்திற்கு, கிளர்ச்சி - அதாவது சட்டம், அமைதி, ஒழுங்கு தன்மைகளை, அலட்சியமாய்க் கருதிப் போராட்டம் நடத்துவதைத் தான் உற்சாகமாய்க் கருதும்படியான நிலை ஏற்பட்டிருக்கிறதே ஒழிய, மனிதப் பண்பு பற்றிய கவலையோ, கல்வியைப் பற்றிய கவலையோ, சிறிதும் இல்லாமல் போய்விட்டது. இதற்கு அரசியல் போட்டியாளர்களே காரணமாவார்கள்.

ஜனநாயகம் என்பது தான் இதற்குக் காரணம் என்றும் சொல்ல வேண்டி இருக்கிறது.

சட்டம் - ஒழுங்கு மீறுதல், பலாத்காரச் செயலில் ஈடுபடுதல் முதலிய காரியங்கள் நம் நாட்டில் முதல் முதல் அரசியலின் பேரால் தான் துவக்கமானதாகத் தெரிகிறது. இதற்குக் காரணஸ்தர்கள் பார்ப்பனர் என்றுதான் சொல்ல வேண்டும். பார்ப்பனர்களுக்குத் தூண்டுகோல் மனுதரும சாஸ்திரம் தான்.

பார்ப்பன ஜாதி என்பதாக ஒரு வகுப்பு நாட்டில் இருக்கும்வரை சட்டம், ஒழுங்கு, அமைதி, பலாத்காரமற்ற தன்மை முதலியவை இருப்பது என்பது முடியாத காரியமாகத் தான் இருந்து வரும். பொதுவாகச் சொல்லப்படுமானால், அரசியலில் காலித்தனம் புகுத்தப்பட்டது. முதல் முதல் சிப்பாய்க் கலகத்தின் போது என்றாலும், நாம் அறிய வங்காலப் பார்ப்பனர்களால் தான் என்று சொல்ல வேண்டும். அதற்குப் பிறகு அரசியல் காலித்தனம் பொது மக்கள் செயலாக ஆக்கப்பட்டது காந்தியால் தான் என்று சொல்லலாம்.

சட்டசபைகளில் காலித்தனம் என்பது சத்தியமூர்த்தி அய்யர், மோதிலால் நேரு முதலிய பார்ப்பனர்களாலேயே ஆகும். சட்டசபையின் கவுரவமும் ஒழிக்கப்பட்டதற்குக் காரணம் காங்கிரஸ் பக்தர்கள் (காலிகள்) என்று தான் சொல்ல வேண்டும். இந்த நிலைமை வளர்ச்சிக்கு உற்சாகம் கொடுத்தவர்கள் பார்ப்பனப் பத்திரிக்கைகளே ஆவர்.


பொதுவாழ்வில் பார்ப்பனர்களுக்கு உள்ள ஆதிக்கம் குறைந்ததுடன் அவர்கள் காலித்தனத்தை வளர்த்து, நாட்டில் அமைதியையும், பொது ஒழுக்கத்தையும் பாழாக்கிவிட்டார்கள். பார்ப்பனர்கள் தங்களுக்குப் பார்ப்பனர் அல்லாதார்களில் மானம், ஒழுக்கம், நேர்மை ஆகியவற்றில் பற்றும், அருகதையும் உள்ள பெரிய மனிதர்கள் என்பவர்களின் ஆதரவு இல்லை என்று தெரிந்தவுடன் அயோக்கியர்கள், காலிகள், பொறுப்பற்ற கீழ்மக்கள் ஆகியோரையே பெரிதும் வேட்டையாடி விளம்பரம் கொடுத்து உண்மையில் பெருமையும், கவுரவமுள்ள பெரியவர்கள் என்பவர்களை எல்லாம் மூலையில் ஒடுங்கும்படிச் செய்துவிட்டார்கள். நல்ல பாரம்பரியத்தின் மதிப்பை எல்லாம் கெடுத்து விட்டார்கள்.

மனிதர்களின் தன்மையைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை என்றாலும், பண்பைப் பற்றிக் கவலைப்படவில்லையானால், மனித சமூதாயத்திற்குப் பாதுகாப்பு எப்படி இருக்க முடியும்?

சமதர்மம் பேசுகிறோம், எப்படிப்பட்ட சமதர்மம் ஏற்பட்டாலும் நம் சமுதாயமும், நாடும், பொது உடைமைச் சமுதாயமாகவும், பொது உடைமை நாடாகவும் ஆகும் வரையில் ஏழை, பணக்காரன் இருந்து தான் தீருவார்கள்; மற்றும் முதலாளி, தொழிலாளி இருந்துதான் தீருவார்கள்; எஜமான் - வேலைக்காரர்கள் இருந்து தான் தீருவார்கள்; இந்த நிலை இருக்குமானால் இருக்கும் வரை ஒரு கட்டுத்திட்டம், ஒழுங்கு முறை இருந்தால் தானே மனித வாழ்வும், காரிய நடப்பும் சரிவர நடந்தேற முடியும்?

மனிதனுக்கு இன்று சொத்துரிமை இருக்கிறது. இதில் மற்றவன் தனது பலாத்காரத்தைப் பயன்படுத்தி உரிமை பெறுவதென்றால், கையில் வலுத்தவன் பயனடைவது என்றால் மனித சமுதாயத்தில் அமைதியும், சமாதானமும் ஆன வாழ்வு எப்படி இருக்க முடியும்?

காந்தி, பார்ப்பானுக்குக் கூலியாகவும், பொறுப்பற்ற மனிதனாகவும் இருந்ததால் சட்டம் மீறுதல், உரிமையை ஒழித்தல், சண்டிததனம் செய்தல் முதலிய காரியங்களைத் தூண்டிவிடுவதில்  உற்சாகமாக இருந்து விட்டார்.

இன்றைய தினம் அறிவில்லாமல் காந்தியைப் புகழ்ந்து கூறி பெருமை அடைகிறார்களே ஒழிய, இன்றைய பலாத்காரம், சமாதான பங்கம், காலித்தனம் ஆகிய காரியங்களுக்கு யார் காரணம் என்பதைப் புகழ்கிறவர் எவரும் சிந்திப்பதே இல்லையே!

கட்டுப்பாடும், சமாதானமும் அற்ற தன்மையை சத்திய சோதனை என்னும் பேரால் உண்டாக்கி விட்டு ஜனநாயகத்தையும் ஏற்படுத்திவிட்டால் - எந்தக்குணம் எந்தத் தன்மை கொண்ட மக்கள் பெருவாரியாய் இருக்கிறார்களோ, அந்த மக்கள் ஆட்சிதான் நிலவும். "தொழிலாளர் தொல்லை," "கூலிக்காரர்கள் தொல்லை" இவர்களைத் தூண்டிவிட்டு வாழும் காலிகள் தொல்லை என்றால், நாட்டில் இந்த இனம் தானே மெஜாரிட்டியாக உள்ளனர்.

இந்த நிலையில் சமதர்மம், ஜனநாயகம் என்றால் நாடும் - மனித சமுதாயமும் எக்கதி ஆகும் என்பதைச் சிந்திக்க வேண்டாமா?

ஆகவே நமது "அரசியல் வாழ்வு" என்பதைப் பொது உடைமை வாழ்வாக ஆக்கிக் கொண்டால் தான் மக்கள் சமுதாயம் கவலையற்று சாந்தியும் சமாதானமும் பெற்று வாழ முடியும். இல்லாவிட்டால் மக்கள் சித்திரவதைக்கு ஆளாகத்தான் நேரும்.


------------------  தந்தைபெரியார் - 31.01.1969 அன்று 'விடுதலை'யில் வெளிவந்த தலையங்கம்.

38 comments:

தமிழ் ஓவியா said...


தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள்


தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் அனல் பறக்கும் பிரச்சாரக் கூட்டங்கள் நடைபெற்றுக் கொண்டி ருக்கின்றன.

90 வயதைக் கடந்த நிலையிலும்கூட திமுக தலைவர் கலைஞர் அவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

ஒவ்வொரு ஊருக்கும் செல்லும் பொழுதெல்லாம் அந்தவூருக்கும் அவருக்கும் உள்ள தொடர்பைப் பசுமையாக நினைவூட்டி, மலரும் நினைவுகளில் தோய்ந்து போகிறார்.

கோவை, ஈரோடு போன்ற நகரங்களில் பேசும்பொழுது திராவிடர் கழகத்தில் அவர் இளைஞராக இருந்தபோது நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை எல்லாம் நினைவூட்டினார்.

தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் பெரியாரைப் பற்றியும், அண்ணா அவர்களைப் பற்றியும், சுயமரியாதைக் கொள்கைகள்பற்றியும் பேசுகிறேன் என்று சிலர் நினைக்கலாம்... தந்தை பெரியார் போதனைகளையும் அறிஞர் அண்ணா அவர்களின் அறிவுரைகளையும் விட்டு விட்டு இந்தக் கருணாநிதியால் பேச முடியாது என்று சொன்னாரே - அதுதான் முத்தாய்ப்பு!

இயக்கத்தின் அஸ்திவாரம் சித்தாந்தங்கள் இளைஞர்களிடத்தில் போய் சேராத வரை வெறும் தேர்தல் பிரச்சாரம் ஆழமாகப் போய்ச் சேர்ந்திடாது. இளைஞர்கள் திசை மாறி ஓடுகிறார்களே என்று குறைபட்டுக் கொள்வதில் பொருள் இல்லை.

இளைஞர்களிடத்தில் திராவிடர் இயக்கச் சித்தாந் தங்களையும், சாதனையையும் எடுத்துக் கூறாவிட்டால் வேறு சீரழிவுத் திசையில்தான் பயணம் செய்வார்கள். முதுபெரும் தலைவர் கலைஞர் அவர்களிடத்தில் மற்ற பேச்சாளர்கள் இதனைப் பாலபாடமாகப் பெற வேண்டும்.

தி.மு.க. பொதுச் செயலாளர் இனமானப் பேராசிரியர் அவர்களும் செல்லும் இடங்களில் எல்லாம் இயக்கத்தின் இலட்சிய நீரோட்டத்தை எடுத்துச் சொல்லத் தவறுவதில்லை.

திராவிடர் கழகத் தலைவர் உரையைப் பற்றிச் சொல்ல வேண்டிய அவசியமில்லை.

குறிப்பாக, இந்தத் தேர்தல் என்பது குலதருமத்துக்கும், சம தர்மத்துக் குமிடையே நடக்கும் போராட்டம் என்பதைக் காரண காரியத்தோடு எடுத்துக் கூறி வருகிறார்.

பி.ஜே.பி.யின் தேர்தல் அறிக்கையைப் படிப்பவர்களுக்குத் தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் கூறும் கருத்துக்களின் உண்மை தெற்றெனப் புலனாகும்.

சமூக நீதிக்காகப் பிறந்த இயக்கமாயிற்றே திராவிடர் இயக்கம்.

பி.ஜே.பி.யின் தேர்தல் அறிக்கையிலே சமூக நீதி என்ற சொல்லோ, இடஒதுக்கீடு என்ற பதமோ மருந்துக்கும்கூட இடம் பெறவில்லையே!

மாறாக மதவாத அனல் காற்று தான் பி.ஜே.பி.யின் தேர்தல் அறிக்கையிலே வீசுகிறது. இந்த அடிப்படையை மக்களுக்கு எடுத்துச் சொல்லும் ஆழமான உரையாக திராவிடர் கழகத் தலைவர் அவர்களின் உரை அமைந்துள்ளது.

தி.மு.க. பொருளாளர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் தேர்தல் பிரச்சார உரை; களை கட்டி நிற்கிறது; யதார்த்தமாக. கால தட்ப வெப்ப நிலைக்கு ஏற்றாற்போல பல யுக்திகளை அவர் சொற்பொழிவில் காண முடிகிறது.

மக்களைப் பார்த்து ஜெயலலிதா கேள்வி எழுப்பி வருகிறார். செய்வீர்களா? செய்வீர்களா? என்று மக்களைப் பார்த்து செல்வி ஜெயலலிதா கேள்வி கேட்டு வருகிறார்.

அதே பாணியில் தோசையைத் திருப்பிப் போடுவதுபோல முதல் அமைச்சர் ஜெயலலிதாவைப் பார்த்து செய்தீர்களா? செய்தீர்களா? என்று கேட்பது வாக்காளர் மத்தியில் மிகவும் எடுபடுகிறது.

அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்களின் உரை - எழுதி வைத்துக் கொண்டு படிப்பதாகும். ஒரே உரையை எத்தனைக் கூட்டங்களில்தான் பேசுவது, பேசுவோருக்கே வெறுத்துப் போய் விடாதா? நாளடைவில் அவர் உரை உணர்ச்சியற்றதாக இருப்பதைப் பார்க்க முடிகிறது.

துணிந்து உண்மைக்கு மாறான வகையில் ஒரு முதல் அமைச்சர் பேசி இருப்பது ஆச்சரியமானது!

தமிழ்நாட்டில் மின் பற்றாக்குறை என்பதே கிடையாது என்று பேசக் கூடிய துணிவு அல்லது அசட்டுத் தைரியமே! இதனைக் கேட்கும் பொது மக்கள் முதல் அமைச்சரைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்று ஒரு கணம் எண்ணிப் பார்க்க வேண்டாமா?

அன்றாடம் மின் வெட்டினால் பல வகைகளிலும் அல்லற்படும் அந்த மக்களிடத்திலேயே இப்படி அபாண்டமாகப் பொய்யைக் கூறினால், அந்தப் பேச்சுக்கு என்ன மரியாதை இருக்க முடியும்?

இதில் இன்னொரு தகவலை முதல் அமைச்சர் கூறுவதுதான் வேடிக்கை.

மின்சார உற்பத்தி தன்னிறைவை அடைந்து விட்டதாம். ஆனால், நாள்தோறும் மின் உற்பத்தி நிலையங்கள் பழுதடைந்து விடுகின்றனவாம். இதில் ஏதோ சதி நடக்கிறதாம் - சொல்லுபவர் யார் தெரியுமா? ஒரு முதல் அமைச்சர்.

அப்படி சதி இருப்பது உண்மையென்றால் அதனைக் கண்டுபிடித்து, சதிகாரர்களைத் தண்டிக்க வேண்டியதும் முதல் அமைச்சரின் வேலைதானே! இப்படிக் கூறுவது - முதல் அமைச்சர் நிர்வாகத் திறன் அற்றவர் என்று பொருளாகி விடாதா?

தொலைக்காட்சிகளில் தலைவர்களின் உரைகளைக் கேட்கும் பொது மக்கள் இதுபற்றியெல்லாம் ஆழமாகச் சிந்திப்பார்களாக!

Read more: http://viduthalai.in/page-2/78566.html#ixzz2yiuH5uQ2

தமிழ் ஓவியா said...


விரட்டியடியுங்கள் என்றார் முதல்வர் விரட்டுகிறார்கள் மக்கள் - யாரை? தமிழர் தலைவர் தரும் சுவையான தகவல்

கூட்டம் நடக்கும் இந்தப்பகுதி பெரிய அக்ரஹாரம். நமக்கு நெருக்கமான, உறவுக்காரர்களின் பகுதி. நமக்கெல்லாம் தெளிவாக தெரியும். இன்றைக்கு அது புதியதல்ல. அறிவாசான் தந்தை பெரியார் காலத்திலிருந்தே. எங்களுடைய உறவுக்காரர்கள், இங்கே இருக்கிறார்கள் உறவை விட மேலானவர்களாக இருப்பார்கள்.
விரட்டியடியுங்கள் விரட்டியடியுங்கள்

ஜனநாயக முற்போக்கு கூட்டணி வேட்பாளர்கள் செல்லும் இடமெல்லாம் மக்கள் வரவேற்கிறார்கள். அன்பாக அழைக்கிறார்கள். அவர்கள் வீட்டுப் பிள்ளை யாக கருதுகிறார்கள்.

அங்கே! அஇஅதிமுக-வில் பார்த்தீர்கள் என்றால், மக்களைச் சந்தித்து வாக்கு கேட்கப் போகும்போது எம்.பி.யாக இருக்கிறார்கள் ஆனால் அந்த ஊருக்குள் நுழைய முடியவில்லை. காரணம் அந்த அம்மையார் சொன்னதை மக்கள் கேட்கிறார்கள்.

அம்மையார் விரட்டியடிங்க! விரட்டியடிங்க என்று சொன்னார். யாரை விரட்டியடிக்க வேண்டும் என்று மக்களுக்குத் தெரியும். ஆகவே தான் மக்கள் (அதிமுக காரர்களை) விரட்டி அடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

துணைத் தேர்தல் அறிக்கையாம்

ஈழத்தமிழர் பிரச்சினை, தமிழக மீனவர் பிரச்சனை ஆகியவை தொடர்பாக பாஜக தேர்தல் அறிக்கையில் ஒரு வரியாவது இடம் பெற்றுள்ளதா?

இங்கு (தமிழ்நாட்டில்) மோடி வலையில் சிக்கிய மீன்களாக, தோழர்கள் இருக்கிறார்கள். தனி ஈழம் தமிழ் ஈழம் பற்றி பிஜேபி அறிக்கையில் வரவில்லையே! அவர்கள் கேட்டதுண்டா? ஈழத்தமிழர் வாழ்வுரிமை பற்றி ஒரு வரியாவது இருக்கிறதா பிஜேபி தேர்தல் அறிக்கையிலே?

மத்திய பிரதேசத்தில் இராஜபக்சேவை வரவேற்றது யார்? பி.ஜே.பி.யில் ஒருவர் தான் வரவேற்றார்.

தேர்தல் அறிக்கையிலே மீனவர் பிரச்சினை இடம் பெறவில்லையே! என்று கேட்டால் தனி ஈழம் பற்றி ஒரு வரிகூட இல்லையே! என்றால் அதற்கு துணை தேர்தல் அறிக்கையில் வரும் என்கிறார் நம்ம ஊர் இல.கணேசன்

தேர்தல் அறிக்கையிலே (யாராவது) துணை தேர்தல் அறிக்கை கொடுத்தது உண்டா?

என்னய்யா குழந்தை பிறந்ததே இன்னும்சத்தம் போடாமல் இருக்கே. உயிர் இருக்கா? இல்லையா? என்று கேட்டால் இல்லைங்க இன்னொன்று வரும் அது சத்தம் போடும் என்றால் என்ன அர்த்தம்?

எங்கே அமைதி! எங்கே அமைதி?

அம்மையார் ஜெயலலிதா ஆட்சியில் 3 ஆண்டுகளில் 5,632 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர் (தமிழ்நாடு காவல்துறை அறிக்கைப்படி). மதுரையிலே பிரபலமான கொலை - கண்டுபிடிக்க முடிந்ததா? திருச்சியில் பிரபல மானவர் கொலை செய்யப்பட்டார். கண்டுபிடிக்கப் பட்டதா? (மூன்றரை ஆண்டுகள் ஆகிறதே) நம்முடைய காவல்துறைக்கு என்ன பெயர் ஸ்காட்லாந்தை மிஞ்சக்கூடியவர்கள் என்று பெயர் உண்டே! ஏன்? அவர்களால் முடியவில்லையே என்ன காரணம்? எங்கே அமைதி! அம்மையார் சிந்தித்து பார்க்க வேண்டாமா?

- ஈரோடு பெரிய அக்ரஹாரத்தில் தமிழர் தலைவர் 10.4.2014

Read more: http://viduthalai.in/page-4/78550.html#ixzz2yiuRL7R6

தமிழ் ஓவியா said...

குஜராத்தில் மோடி அலை இல்லை

ஜெயலலிதாவையா? நாங்களா? ஆதரிப்பதா?

தேர்தலுக்குப் பிறகு ஜெயலலிதாவை ஆதரிப்போம் என்று சொல்லுவதற்கு எங்களுக்கொன்றும் புத்திப் பேதலித்து விடவில்லை. எங்களைப் பொறுத்தவரை மத்தியில் பா.ஜ.க.வை ஆதரிக்கும் எந்த அரசுக்கும் நாங்கள் ஆதரவு தர மாட்டோம்.

- பால பாரதி (சி.பி.எம்)., எம்.எல்.ஏ.,

ப(பு)ஸ்வான்

ராமர் கோயில் கட்டுவது தே.ஜ. கூட்டணியின் கொள்கையல்ல என்கிறார் ராம்விலாஸ் பஸ்வான். பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையை இன்னும் அவர் படிக்கவில்லையோ! தேர்தல் பணியில் பிசியாக இருக்கிறார் போலிருக்கிறது.

குஜராத்தில் மோடி அலை இல்லை

குஜராத்தில் மோடி அலை இல்லை என்றுகுஜராத் காங்கிரஸ் தலைவர் சங்கர்சிங் வகேலா உறுதிபடக் கூறுகிறார். தாங்கள் ஏமாற்றப்பட்டுவிட்டதாக குஜராத் மக்கள்உணரத் தொடங்கியுள்ளனர் என்றும் அவர் கூறினார். குஜராத் முன்னாள் முதல்வரான இவர் சபர்காந்தா தொகுதியில் இருந்து மக்களவைக்குப் போட்டி யிடுகிறார். இவர் முன்பு பாஜகவில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த தேர்தலில் குஜராத்தில் உள்ள 26 தொகுதிகளையும் வெல்வோம் என்று பாஜக கூறியது. ஆனால் அங்கு காங்கிரஸ் 11 தொகுதிகளை வென்றது. அதில் இருவர் காங்கிரசை விட்டு ஓடி விட்டனர்.

தமிழ் ஓவியா said...

அண்மைக்காலங்களில் அதன் ஏழு சட்டமன்ற உறுப்பினர்களும், கீழ்மட்டத் தலைவர்களும் பாஜகவை நோக்கிச் சென்ற வண்ணம் உள்ளனர். ஒரு மாறுபட்ட கட்சி என்றும், கொள்கை பிடிப்புள்ள கட்சி என்றும் கூறிக் கொள்ளும் பாஜக ஓடி வந்தவர்களுக்கெல்லாம் மக்களவை தொகுதிகளை ஒதுக்கித்தருகிறது. தனது மூத்த தலைவர்களை நட்டாற்றில் நிற்க விடுகிறது. இதற்கு உதாரண மாக ஜஸ்வந்த் சிங் உள்ளிட்ட பலரைக் கூறலாம். சவுராஷ்டிரா, வடக்கு மற்றும் தெற்கு குஜராத்தில் காங் கிரஸ் கணிசமான வெற்றிகளைப் பெறும் என்றும் அவர் கூறியுள்ளார்.

பாஜகவில் தொகுதிகள் விற்பனைக்கு...

காவிக்கட்சியான பாஜகவில் மக்களவை தொகுதி களுக்கான இடங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன என்று சமாஜ்வாதிக் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்ட பாஜகவின் முன்னாள் மத்திய அமைச்சரும் மூத்த தலைவருமான அசோக் பிரதான் குற்றம் சாட்டுகிறார். இவர் செவ்வாய்க்கிழமையன்று பாஜகவில் இருந்து விலகி முலாயம் சிங் யாதவ் முன்னிலையில் சமாஜ்வாதி கட்சியில் சேர்ந்துள்ளார். பாஜகவில் மக்களவைத் தொகுதி இடங்கள் விற்கப்படுகின்றன. மூத்த தலைவர்களான அத்வானி, ஜஸ்வந்த் சிங் உள்ளிட்டோர் புறக் கணிக்கப்படுகின்றனர். இதனால் கட்சியில் அதிருப்தி வளர்ந்துள்ளது. ஏராளமான குழுக்கள் உருவாகி யுள்ளன. அவர்கள் இப்போது மக்கள் பிரச்சினைகள் பற்றிக் கவ லைப்படுவதில்லை. இன்றைய பாஜக தலைவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தைப் பிடிப்பதுதான் இலக்கு என்று அவர் கூறினார். சம்பல் பள்ளத்தாக்கு கொள்ளையன்

பா.ஜ.,வுக்கு ஆதரவாக ஓட்டு சேகரிப்பு

மத்திய பிரதேசத்தில், பா.ஜ., வேட்பாளர்களுக்கு ஆதரவாக, பிரபல, சம்பல் பள்ளத்தாக்கு முன்னாள் கொள்ளையன் மல்கான் சிங், பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். கடந்த, 1970 - 80ம் ஆண்டுகளில், மத்திய பிரதேசத்தின் சம்பல் பள்ளத்தாக்கு பகுதியில், பயங்கர கொலைகள் மற்றும் கொள்ளைகளை செய்தவன் மல்கான் சிங். அந்த பகுதியில், நூற்றுக்கும் மேற்பட்ட கொள்ளையர்களை சேர்த்து கொண்டு, அட்டூழியங்களை செய்து வந்த மல்கான் சிங், காங்கிரசை சேர்ந்த, அப்போதைய முதல்வர், அர்ஜுன் சிங் முன்னிலையில், 1982ல் சரணடைந்தார். அதன் பிறகு, அவருக்கும், அவரின் கோஷ்டியினருக்கும், மாநில அரசு தானமாக வழங்கிய நிலங்களில் விவசாயம் செய்து வாழ்க்கை நடத்தி வரும் மல்கான் சிங், இப்போது பா.ஜ.,வுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். குவாலியர் லோக்சபா தொகுதியில் போட்டியிடும் நரேந்திர சிங் தோமர், பிண்ட் தொகுதியில் போட்டியிடும் பாகிரத பிரசாத் போன் றோருக்காக பிரசாரம் மேற்கொண்டார். முகத்தில் பெரிய மீசை, 6 அடிக்கும் அதிகமான உயரம், கனத்த குரலில், திறந்த ஜீப்பில் அவர் சென்று, பா.ஜ., வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். ''காங்கிரஸ் ஆட்சியாளர்களின் கொடுமையால் தான் எங்களைப் போன்றவர்கள் முன்னர், கொள்ளை யடித்தோம். நாட்டில் நல்லாட்சியை மோடியால் தான் தர முடியும். எனவே, பா.ஜ.,வுக்கு ஓட்டளியுங்கள்,'' என, மல்கான் சிங் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். மல்கான் சிங் கதையை அடிப்படையாக வைத்து, பாலிவுட்டில் பல சினிமா படங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

கிரிமினல்கள்

கருநாடக மாநிலத்தில் தேர்தலில் போட்டியிடுபவர் களுள் 55 பேர் குற்ற வழக்குகளில் சிக்கியுள்ளார்கள். பெங்களூர் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிடும் சிறீராம் சேனைத் தலைவர் பிரமோத் முத்தாலிக்மீது கொலை முயற்சி வழக்குகள் உட்பட நிலுவையில் உள்ளது. எட்டு வழக்குகள் (இவர் சமீபத்தில் பி.ஜே.பி.யில் சேர்க்கப்பட்டு, கடும் எதிர்ப்புக் காரணமாக விலக நேர்ந்தது) அடுத்து சிறீராமுலு (பி.ஜே.பி.) இவர்மீது கொலை வழக்கு, கடத்தல் உட்பட நிலுவையில் உள்ளவை 7 வழக்குகள் கருநாடக மாநில பா.ஜ.க. தலைவர் பிரஹலாத் ஜோஷிமீது கனரா வங்கியில் புகுந்து கொள்ளையடித்த வழக்கு நிலுவையில் உள்ளது தேவகவுடாவின் மதச் சார்பற்ற ஜனதா தளம் வேட்பாளர்கள் 8 பேர் காங்கிரஸ் வேட்பாளர்கள் 6 பேர்மீது கிரிமினல் வழக்குகள் நிலுவை யில் உள்ளன.

Read more: http://viduthalai.in/e-paper/78564.html#ixzz2yiv1KaeJ

தமிழ் ஓவியா said...


திருமணத் தகவல்: முந்தைய தேர்தல்களில் மோடி மறைத்துவிட்டார் தேர்தல் ஆணையத்தில் கபில்சிபல் புகார்

புதுடில்லி, ஏப்.12-நாடாளுமன்ற தேர்தலில் வதோதரா தொகுதியில் போட்டியிடும் நரேந்திர மோடி கடந்த சில தினங் களுக்கு முன் வேட்பு மனு தாக்கல் செய்தார். அதில் தனது திருமணம் ஆகிவிட் டதென்றும், தனது மனைவி பெயர் யசோதா பென் எனவும் குறிப்பிட்டிருந் தார்.

தற்போதைய நாடாளு மன்ற தேர்தலில், எந்த வொரு வேட்பாளரும் வேட்பு மனுவுடன் தாக்கல் செய்யும் பிரமாண பத்திரத் தில் எந்தவொரு தகவலை மறைத்தாலோ, தவறான தகவல்களை அளித்தாலோ மனு நிராகரிக்கப்படும் என தேர்தல் ஆணையம் கடி வாளம் போட்டதால் மோடி இத்தகவலை இணைத்துள் ளதாக கூறப்பட்டது.

நரேந்திரமோடி, தனது திருமணம் குறித்து முதன் முதலாக தகவல் வெளி யிட்டிருப்பது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுவரை தான் திருமணம் ஆனவர் என்றோ, தனது மனைவி பெயர் பற்றியோ மோடி பகிரங்கமாக அறிவித்தது இல்லை.

குஜராத் சட்டசபைக்கு கடைசியாக 2012-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் போட்டியிட்டபோது கூட அவர் வேட்புமனு தாக்கல் செய்தபோது அளித்த பிரமாண பத்திரத்தில் மனைவி பற்றிய பகுதியை நிரப்பாமல் வெற்றிடமாக விட்டிருந்தார். இதுபற்றி தற்போது கேள்வி எழுப்பி யுள்ள காங்கிரஸ் கட்சி, முந்தைய தேர்தல்களில் தனது திருமண தகவலை மோடி மறைத்தது குறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் செய்துள்ளது. தேர் தல் ஆணையத்திடம் புகார் அளித்த சட்ட அமைச்சர் கபில்சிபல், 2002, 2007 மற்றும் 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல்களில் மோடி தனது திருமண தகவலை மறைத்துள்ள தாக தெரிவித்துள்ளார்.

எனவே, ஆணையம் அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண் டுள்ளார்.

Read more: http://viduthalai.in/e-paper/78562.html#ixzz2yivKnYJm

தமிழ் ஓவியா said...


மாற்றுத்திறனாளிகளை அவமானப்படுத்தும் விதமாக பேசிய மோடிக்கு கடும் கண்டனம்


சென்னை, ஏப். 12- மாற்றுத்திறனாளிகளை அவமானப்படுத்தும் விதமாக பேசியுள்ள பாஜக பிரதமர் வேட்பாளர் மோடிக்கு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் கண்டித்துள்ளது. இது குறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் பா.ஜான்சிராணி, துணைத் தலைவர் தே.லட்சு மணன், செயலாளர் எஸ்.நம்பிராஜன் ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, மாற்றுத்திறனாளி களை அவமானப்படுத் தும் விதத்தில் ஜாம்செட்பூ ரில் பேசியுள்ளதற்கு எமது சங்கத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித் துக் கொள்கிறோம்.

நாட்டிற்கு ஒரு ஊன முற்ற செவிட்டு ஊமை அரசு தேவையில்லை என - மாற்றுத்திறனாளிகள் எதற்கும் லாயக்கில்லை என்ற தொனியில் நரேந்திர மோடி பேசியிருப்பது மிகுந்த அதிர்ச்சியடையச் செய்துள்ளது. சத்தீஸ்கர் மாநில முன்னாள் முதல்வர் அஜித் ஜோகியை சக்கர நாற்காலி பயன்படுத்தும் நொண்டி என குறிப்பிட் டவர் என்பதால், மாற்றுத் திறனாளிகளை கொச் சைப்படுத்துவது இவ ருக்கு வாடிக்கையாகி வரு கிறது என சுட்டிக்காட்ட விரும்புகிறோம். நாட்டில் பார்வையற்ற, காதுகேளாத மாற்றுத் திறனாளிகள் சிவில் சர்வீஸ் உள்ளிட்ட பல உயர்ந்த பொறுப்புகளில் திறம்பட செயலாற்றி வரும் சூழ லில், மோடிக்கு மாற்றுத் திறனாளிகளைப் பற்றிய புரிதலே இல்லை என்ப தாகவே நாங்கள் கருது கிறோம். மாற்றுத் திறனா ளிகள் எதற்கும் லாயக் கில்லை என்ற மன நிலை உள்ள ஒருவர் பிரதமரா னால் மாற்றுத்திறனாளி களின் நிலைமை என்ன வாகும்? என்பதே மாற்றுத் திறனாளிகளின் தற்போ தைய கேள்வி.
போராட்டம்

மாற்றுத்திறனாளிகளைக் கொச்சைப்படுத்தும் விதத் தில் பேசியுள்ள மோடியும், பாரதீய ஜனதா கட்சியும் இதற்காக நிபந்தனையற்ற வருத்தம் தெரிவிக்க வேண்டும். இல்லையேல், மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபடு வதைத் தவிர்க்க முடி யாது.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

Read more: http://viduthalai.in/e-paper/78561.html#ixzz2yivU7Ozf

தமிழ் ஓவியா said...


ஆனந்த விகடனுக்குக் கவலை வேண்டாம்! தளபதி மு.க.ஸ்டாலின் சாதிப்பார்

மோசேவின் பத்துக் கட்டளைகளைப் போல நினைத்துக்கொண்டு 9.4.2014 தேதியிட்ட ஆனந்தவிகடன் தனது கருத்துகளைத் திமுகவின் முன் வைத்து இருக்கிறது. ஸ்டாலின் சாதிப்பாரா... சறுக்குவாரா என்று பத்து அம்சங்களை அடுக்கிக்காட்டி இருக்கிறது. ஸ்டாலின் சறுக்க வேண்டும் என்கிற எதிர்ப்பார்ப்பு அதன் போக்கில் தெரிகிறது. ஆனந்த விகடனின் ஆசை ஒரு போதும் நிறை வேறாது.

இந்தியாவில் காஷ்மீர் முதல் கன்னி யாகுமரி வரை தலைவர்களின் குடும்பத் தவர் அரசியலில் ஈடுபட்டு வருகிறார்கள். தேர்தல் களத்தில் போட்டியிடுகிறார்கள். இதைப் பற்றி இந்தியாவில் உள்ள அனைத்து ஏடுகளும் மாநில வாரியாக யார், எவர்? - என்கிற விவரங்களை எழுதி வருகின்றன. அந்தப் பட்டியலில் தமிழ்நாடும் இருக்கிறது. ஆனால் கலைஞர் குடும்பத்தை மட்டுமே வாரிசு அரசியல் செய்வதாகச் சிறப்பு கவனம் செலுத்தி இங்கே எழுதி வருகிறார்கள்.

ஆனந்தவிகடன் பெரியதாக சாதிப் பாரா சறுக்குவாரா என்று தலைப்பிட்டு விட்டு சிறிய தலைப்பாகத் திமுக மினிட் புக் என்று வேறு மகுடமிட்டு இருக்கிறது. திமுக மினிட்புக்கை என்றும் அக்கட்சி யினர் அயலாரை எழுதவிடுவதில்லை. மினிட் புக்கை அந்தந்த அமைப்பைச் சார்ந்தவர்கள் தான் எழுதுவார்கள். திமுகவின் மினிட் புக்கை இங்கே ஆனந்தவிகடன் எழுதுகிறது. திமுகவின் மினிட் புக்கை அயலார் பிடுங்கி எழுத கடைசித் தொண்டன்கூட ஒப்பமாட் டானே? அப்படித் தலைப்பிலே ஒரு சிறு கண்சிமிட்டலை வைத்து இருக்கிறது - ஆனந்தவிகடன்! அப்படி ஒரு அலாதி யான கற்பனை!!

ஆனந்தவிகடனின் கட்டுரைத் தொடக்கத்திலேயே கலைஞரின் பிரச்சார தொடக்க நாள் உரையின் ஒரு பகுதியை எடுத்து வெளியிட்டு இருக்கிறது. அதிலி ருந்து கலைஞரின் மனவோட்டத்தை தசாம்ச சுத்தமாக கணக்கிட்டு சொல் லுவதைப் போல் எழுதி இருக்கிறது. இப்போது காங்கிரசின் பாரம் கலை ஞருக்கு இல்லாததைத் தெரிவித்த ஆனந்தவிகடன், ஜெயலலிதா காங்கி ரசை மொத்து மொத்து என்று மொத்துவது எதற்காக என்று ஏன் தெரிவிக்கவில்லை? ஜெயலலிதா பாஜகவைக் கண்டு கொள் வதே இல்லையே? பிரச்சாரத்தின் போது! இது எதனால் என்று ஆனந்தவிகடன் சொல்லவில்லையே ஏன்?

தமிழ் ஓவியா said...


ஆனந்தவிகடன் நினைப்பது போல திமுக திணறிக் கொண்டு இருப்பதால் தலைவர் கலைஞர் பிரச்சாரத்திற்குப் போகிறார் என்பது சரியல்ல. சக்கர நாற்காலியில் அமர்ந்த பிறகு ஏற்பட்ட தேர்தல் வாய்ப்பு என்பது இப்போதுதான் வாய்த்து இருக்கிறது. கலைஞரை முழு வதுமாக உணர்ந்தவர்கள் தான் அவரின் மெய்ப்பாடுகளை அறிய முடியும். தலைவர் கலைஞருக்கு வயது தள்ளாமை என்பதெல்லாம் ஒன்றுமில்லை. அவர் பெரியார் மாதிரி இயல்புடையவர். அவரைவிட மூத்தவரான பேராசிரியர் களமிறங்கிவிட்டார். தலைவர் கலைஞர் எப்படி வாளா இருப்பார்? வாளாய் இருந் தவர் ஆயிற்றே! இதை ஆனந்தவிகடன் அறிந்து கொள்ள வேண்டும்.

ஸ்டாலின் பலத்தைப் பற்றி பேசி இருக்கிறது - ஆனந்த விகடன். அவரின் பலம் என்பது கடந்த 40 ஆண்டுகளாய் சிறுகச் சிறுகப் பயிலப் பயிலப் பெற்றது ஆகும். யாரோ நீர்வார்த்துக் கொடுத்தது அல்ல. அவர் எவரெஸ்ட் முகட்டைத் தொடுவதற்குள் பல தடைக்கற்கள். சுழலும் நாவும் அவரின் சூறாவளிப் பயணமும் இன்னமும் நிற்கவில்லை. அந்த உழைப்பு வீண் போகாது. வீண் போகவில்லை. தொண்டர்கள் உற்சாகத் துடன், கொண்டாடுகிறார்கள். அந்த உற்சாகம் ஆனந்த விகடனையும் கவர்ந்து இருக்கிறது. தலைமைக்கு உரிய பண்பு, தகைமை அனுபவத்தால் முகிழ்த்து வருவது. முகிழ்ந்து வருவது மறையாது. ஜனநாயகத்தில் வாரிசு உரிமையும் மரபும் இல்லை. அடம் பிடிப்பதால் மட்டும் பொதுவாழ்வில் மகுடம் கிடைத்து விடாது. அடம் பிடிப்பவரை அழும் குழந்தையை சமாதானப்படுத்தியாகி விட்டது. நல்வாழ்வும், புகழும், பவிசும் தந்தாகி விட்டது. ஒட்டாரம் பிடிப்பது நிற்கவில்லை. அடம் வெறும் அலறலாகி விட்டது. ஓயவில்லை என்பதால் சிகிச்சை தரப்பட்டது. சிகிச்சையின் போது சத்தம் அதிகம் தான் கேட்கும்.

தமிழ் ஓவியா said...

திராவிடர் இயக்கத்தின் 102-ஆவது ஆண்டின் பயணத்தில் எத்தனையோ அடங்கள் இருக்கத்தான் செய்தன. கால மும் அரசியல் அலைகளும் அவற்றை மாற்றிவிடும். எல்லா கிரிகளும் இமய கிரியை விட சிறியன தானே! காலமும் அரசியலும் இமயகிரி அல்லவா? இது ஆனந்தவிகடனுக்குத் தெரியாதா?

கலைஞரின் நிலைப்பாடுகள் என்றும் தவறியதில்லை. ஆனந்தவிகடன் புரிந்து கொள்ள வேண்டும். அவை அப்படியே இருக்கின்றன. சூரியன் சுற்றுவதில்லை, பூமி சுற்றுகிறது. தோற்றம் வேறு மாதிரியாகத்தான் தெரியும். ஒரு சிக்கல் சம்பந்தமாக முப்பது ஆண்டுகளுக்கு முன்பு ஆனந்தவிகடன் எழுதியதை இப்போது அதே சிக்கல் தோன்றி அதைப் பற்றி விகடன் எழுதுகிறபோது வேறுபாடு தெரியக்கூடும். இது நிலைப்பாட்டின் திரிதல் அல்ல. சிக்கல்களின் வளர்ச்சி யாகும். ஆகவே தலைவர் கலைஞர் பேசியவை அய்யத்திற்கு இடமளிக்கிற போது அவர் விளக்கம் அளிக்கிறார். இதில் என்ன தவறு?

நாடாளுமன்றத் தேர்தலில் வேட் பாளர் தேர்வில் திமுக தவறு செய்து விட்டது. இப்படிச் செய்யவில்லை. அப் படிச் செய்யவில்லை. இன்ன இன்னவர் களைத் தேர்ந்தெடுக்கக் கூடாது என்று ஆனந்தவிகடன் எழுதுகிறது. அதிமுக வில் அறிவிக்கப்பட்டு இருக்கிற வேட் பாளர்கள் எப்படிப்பட்டவர்கள்? அனு பவம் என்ன? அவர்களை அக்கட்சி அறிவித்த விதம் என்ன? அந்தக் கட்சி யின் ஜனநாயக மாட்சி என்ன? இவை பற்றியெல்லாம் ஆனந்தவிகடன் கவலைப்படவில்லை. விஜயகாந்த், வைகோ, இராமதாஸ் கட்சிகளைப் பற்றியும் கவலைப்படவில்லை. திமுக பற்றியும் ஸ்டாலின் பற்றியும் கவலைப் பட்டு ஆனந்தவிகடன் பத்துக் கருத்துக் களை எடுத்து வைத்து இருக்கிறது. திமுகவின்மீது ஸ்டாலின்மீது ஆனந்த விகடனுக்கு இருக்கிற அக்கறையை நாம் வரவேற்கிறோம். அதற்காக நன்றி பாராட் டுகிறோம். ஆனால், இவையெல்லாம் மனந்திறந்த ஆலோசனைகளாக நமக்குப் படவில்லை. ஸ்டாலின் சறுக்க வேண்டும் என்று எதிர்ப்பார்தது எழுதுபவைகளாகத் தெரிகின்றன.

தமிழ் ஓவியா said...

திமுகவில் குறுநில மன்னர்கள் இருக் கிறார்கள் என்கிறது ஆனந்தவிகடன். ஜனநாயக அமைப்பில் யாரும் குறுநில மன்னர்களோ, வேளிர்களோ இல்லை. ஸ்டாலின் மட்டுமே வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கவில்லை. இதில் கூட்டுப் பொறுப்பு இருந்தது. கூட்டு முடிவுகளும் இருந்தன. திமுகவின் நாடாளுமன்ற வேட்பாளர் தேர்வை அதிமுகவின் வேட்பாளர் தேர்வோடு ஒப்பிட்டுப் பார்த்தால் கூட்டுப் பொறுப்பு, கூட்டு முடிவு, கூட்டுத் தலைமை எல்லாமே திமுகவில் மட்டுமே இருந்தன. இதில் குறைகள் இருக்கலாம். எல்லோரும் நிறைவு பெறும் விதமாகத் தேர்வுகள் இல்லாமல் இருக்கலாம். ஆனால் எல்லாக் கட்சிகளை விடவும் திமுகவில் தனிப் பட்ட ஒருவரின் ஆதிக்கமே இருந்தது என்று சொல்ல முடியாது.

ஸ்டாலின் கட்சியின் பொருளாளர் இருபெரும் தலைவர்கள் முக்கிய பொறுப்புகளில் இருக்கிறார்கள். அப்படி இருக்கிறபோது மாவட்டச் செயலாளர் களின் கூற்றை மட்டும் ஸ்டாலின் கவனத்தில் கொண்டு மற்றவர்களை உதாசீனப்படுத்துகிற போக்கு ஸ்டாலி னுக்கு இருப்பதாக ஒரு குற்றச்சாட்டை ஆனந்த விகடன் கூறுகிறது. பரவலாகக் கட்சிக்காரர்கள் கூறுகிறார்கள் என்று ஆனந்த விகடன் குற்றம் சாட்டுகிறது.

ஆனந்தவிகடன் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். திமுக. அதிமுகவோ, மதிமுகவோ, தேமுதிகவோ, பாமகவோ அல்ல. ஸ்டாலின் வளர்ச்சி என்பது படிப்படியானது. ஆனந்தவிகடன் சொல் லுவது மாதிரி சிக்கலை அவராகவே ஏற்படுத்திக் கொள்ளமாட்டார். ஆகவே, ஆனந்தவிகடன் அடம் பிடிப்பவர்களை நியாயப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.

தமிழ் ஓவியா said...

ஸ்பெக்ட்ரம் வழக்கு நிலுவையில் உள்ளது. அதைப்பற்றி எல்லா தஸ்தா வேஜூகளையும் கையில் வைத் திருப்பது போல் எழுதுவது சரியல்ல. இவ்வளவு எழுதுகிற ஆனந்தவிகடன் ஜேபிசி கமிட்டியின் முன் அதன் தலை வர் ஆ.இராசாவை ஏன் அழைக்க வில்லை? அதைப்பற்றி விகடன் ஒன்றும் சொல்லாததேன்? அப்படி அழைப்பது ஜனநாயகத்தின் பாற்பட்டது இல்லையா? இதை இடதுசாரிகளே வரவேற்றனரே! தேர்தலில் ஆ.இராசாவை திமுக நிறுத்தி இருக்கிறது. மக்கள் தீர்ப்பளிக்கட்டும் பார்ப்போம்.

இளைஞர்களின் ஈர்ப்பு திமுகவில் இல்லை என்பதாக ஆனந்தவிகடன் எழுதுகிறது. திமுக இணைய தளத்தில் அதிகமாக விமர்சிக்கப்படுகிறது என்றும் எழுதுகிறது.

அதனால் எல்லாம் திமுகவின் செல்வாக்கு குறைந்துவிடாது. திமுகவின் தொடக்க நிலை என்பது வேறு. அன்றைய தேவைக்கு ஏற்ப பிரச் சாரங்கள் அமைந்தன. கழக விழாக்கள், மாநாடுகள், முப்பெரும் விழாக்கள் ஆகியவற்றையெல்லாம் கழகம் புறக் கணித்துவிட முடியாது.

இளைஞர்களிடம் ஈர்ப்பை ஏற்படுத்தும் வாய்ப்பிலும் ஸ்டாலின் கவனம் செலுத்தி வருகிறார். கழகத் தேர்தலுக்குப் பின் அவற்றின் வலிவுகூடும்.

உதயநிதியையும், சபரீசனை யும் ஆனந்த விகடன் இழுத்து வந்து இங்கே நிறுத்துவது தேவையில்லாதது ஆகும். ஸ்டாலின் சட்டமன்றத் தேர்தலைப் போலவே பிரச்சாரம் செய்கிறார் - என்கிறது ஆனந்தவிகடன்!

பிரதமர் வேட்பாளரைத் திமுக அறிவிக்க வேண்டிய அவசியமில்லை. ஏனெனில், எந்த தேசிய கட்சியோடும் திமுக தேர்தல் கூட்டணி வைத்துக்கொள்ளவில்லை. அதிமுக அப்படி இல்லை. பாஜகவோடு மறைமுகமாகத் தொடர்பு வைத்து இருக்கிறது. காங்கிரசைத் தாக்கும் ஜெயலலிதா பாஜகவைத் தாக்குவ தில்லை. இதன் பொருள் என்ன என்று ஆனந்த விகடனுக்குத் தெரியாதா?

திமுகவை ஜெயலலிதா தாக்குகிற போது ஸ்டாலின் எப்படி பேசாமல் இருக்க முடியும்? ஜெயலலிதா பேசுவ தற்குப் பதில் கொடுக்க வேண்டாமா? அவர் எழுப்புகிற வினாவுக்கு ஸ்டாலின் விடை சொல்லுகிறார். அப்படிச் சொல் லுவது ஆனந்தவிகடனுக்கு இது சட்ட மன்றத் தேர்தல் ஆகிவிடுகிறது.

ஜெய லலிதா பிரதமர் ஆவதற்கு ஸ்டாலின் ஏன் பயப்பட வேண்டும்? அப்படி எழுத ஆனந்தவிகடனுக்குத் துணிவு எங்கி ருந்து வந்தது? ஜெயலலிதா பிரதம ரானால் அவரின் ஊழலை அதன் பிறகு உலகமே கண்டுபயப்படும். ஆனந்த விகடன் தான் மீண்டும் ஜெயாவின் பய டேட்டாவை எழுத நேரிடும். எனவே ஜெயலலிதா பிரதமர் ஆனால் ஸ்டாலின் ஒரு போதும் பயப்படமாட்டார். கவலை வேண்டுமானால் படுவார்.

ஸ்டாலினின் நாடாளுமன்றத் தேர்தல் பணி ஜெயலலிதாவை கலக்கமுறும் விதத்தில் அமைந்து இருக்கிறது. விகடன் சொல்லுவது போல் அவர் நாடாளு மன்றத் தேர்தலை எதிர்நோக்காமல் இல்லை.

எதிர்வரும் சட்டமன்றத் தேர் தலையும் அவர் கவனத்தில் கொள்கிறார். அதில் என்ன தவறு இருக்க முடியும்? மத்தியிலும் அதிகாரத்தில் பங்கேற்பு இருக்க வேண்டும் - மாநிலத்திலும் அதிகாரம் இருக்க வேண்டும் என்று கருதுகிற காலத்தில் பாரபட்சமான நிலையை ஸ்டாலின் எப்படி எடுப்பார்; நினைப்பார்?

ஆனந்தவிகடன் சொல்லுவதுபோல திமுகவின் வெற்றியில் தான் அவரின் இமேஜ் இருக்கிறது. அந்த வெற்றியைப் பெறப் போகிறவர் ஸ்டாலின் தான்!

இதனால் அவரின் இமேஜ் இன்னும் உயரப் போகிறது. அவர் வெற்றியில் தான் ஒவ்வொரு திமுக காரனின் - திராவிடர் இயக்கத்துக்காரனின் ஆசை யும் மகிழ்ச்சியும் இருக்கிறது. எதிர்வரும் 2016 சட்டமன்ற தேர்தலையும் ஸ்டாலின் மிக எளிதாகச் சந்திப்பார்; ஏனெனில் அவர் சிறந்த சாதனையாளர்!

Read more: http://viduthalai.in/page-2/78567.html#ixzz2yivuFgK7

தமிழ் ஓவியா said...


இழிநிலை


உலகெங்கும் உள்ள மக்கள் விஞ்ஞான அறிவியல் துறையில் தீவிர முன்னேற்ற மடைந்து கடவுள்களிடம் போட்டியிட்டு வருகையில், தமிழன் மட்டும் இன்னும் மாட்டு மூத்திரம் குடித்து, மோட்சம் போக எண்ணும்படியான காட்டு மிராண்டியாய் மானமற்று வாழ்வதேன்? புத்தரின் அறிவுப் பிரச்சாரத்தைக் கைவிட்டதன் பயனல்லவா இந்த இழிநிலை!

- (விடுதலை, 10.8.1961)

Read more: http://viduthalai.in/page-2/78565.html#ixzz2yiwGHQls

தமிழ் ஓவியா said...


இழிநிலை
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

உலகெங்கும் உள்ள மக்கள் விஞ்ஞான அறிவியல் துறையில் தீவிர முன்னேற்ற மடைந்து கடவுள்களிடம் போட்டியிட்டு வருகையில், தமிழன் மட்டும் இன்னும் மாட்டு மூத்திரம் குடித்து, மோட்சம் போக எண்ணும்படியான காட்டு மிராண்டியாய் மானமற்று வாழ்வதேன்? புத்தரின் அறிவுப் பிரச்சாரத்தைக் கைவிட்டதன் பயனல்லவா இந்த இழிநிலை!

- (விடுதலை, 10.8.1961)

Read more: http://viduthalai.in/page-2/78565.html#ixzz2yiwGHQls

தமிழ் ஓவியா said...

மின் வெட்டுக்குக் காரணம் திமுக சதியாம் - சொல்வது முதல் அமைச்சர் கேட்பவர்கள் சிரிக்கமாட்டார்களா?

மின் வெட்டுக்குக் காரணம் திமுக சதியாம் - சொல்வது முதல் அமைச்சர்
கேட்பவர்கள் சிரிக்கமாட்டார்களா?

சேலம், ஏப். 12- மின்வெட் டுக்குக் காரணம் திமுக சதி என்று முதல் அமைச்சர் சொல் லலாமா? அப்படி சொன் னால் பொதுமக்கள் சிரிக்க மாட்டார்களா? என்ற வினாவை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி எழுப்பி னார் (முதல் அமைச்சர் சொன் னதை திராவிடர் கழகத் தலை வர் சொன்னபோது பொது மக்கள் சிரித்தனர்).

சேலத்திற்கு தேர்தல் நேரத் தில் வருகிறபோதெல்லாம், ஒரு மகிழ்ச்சியோடு, உற்சாக மாக, எங்களை அன்போடு வரவேற்கக்கூடிய அருமை வீரபாண்டியார் இல்லையே! என்ற ஏக்கத்தோடு, வேதனை யோடு வந்தாலும், அதற்குப் பதிலாக, நம்முடைய இராசா இருக்கிறார் என்ற ஆறுத லைச் சொன்னதும், அவர்க ளுடைய நினைவைப் போற் றிக் கொண்டு என்னுடைய உரையை துவக்க விரும்பு கிறேன்.

சேலத்து சிங்கம்

அந்த சேலத்து, சிங்கம் ஒரு கொள்கை இலட்சியத்தை முன்னாலே நிறுத்தக்கூடிய மாபெரும் சோதனையெல் லாம் சந்தித்தவர்கள். அவர் எந்த தேர்தல் ஆனாலும் எங் களை அழைக்காமல் நடத்தி யது இல்லை. அப்படிப்பட்ட உணர்வு படைத்த அவர் இன்றைக்கு ஒரு வருடமாக இல்லை. அதே நேரத்தில், அவர் இல்லையென்று யாரும் எதிரிகள் தப்பு கணக்கு போட மாட்டார்கள் என்று நினைக் கின்றேன். அதற்குப் பதிலாக, அத்தனை திராவிட முன் னேற்றக்கழக, திராவிடர் இயக் கத்து தோழர்கள் ஒவ்வொரு வரும் வீரபாண்டியராக மாறி இருக்கிறார்கள்.

சேலத்தை பொறுத்த வரையிலே, தந்தை பெரியார் அவர்கள் சொல்லுவார். இது என் தாய்வீடு. வேறு யாருக் கும் கிடைக்காத பெருமை சேலத்திற்கே கிடைக்கும். இயக்கத்தின் வரலாற்றில் சேலத்திற்கு தனி இடம் உண்டு.

இந்த சேலத்தில் 1944இல் நீதிக்கட்சி திராவிடர் கழக மாக பெயர் மாற்றம் செய் யப்பட்டது.

தமிழ் ஓவியா said...

அப்படிப்பட்ட வரலாற்றுக்கு உரிய நகரம். பேரறிஞர் அண்ணா அவர் கள் திராவிட நாடு ஏட்டிலே எழுதினார். சேலம் செயலாற் றும் காலம் என்ற தலைப்பில் அற்புதமான ஒரு தலையங் கத்தை எழுதினார்கள். 1940 லும் அந்த தலைப்பு பொருந் தும். 2014 இன்றைய தேர்தலி லும் அந்த தலைப்பு பொருந் தும். செயலாற்றி வெற்றியை குவிக்கக் கூடிய கட்டாயம், கடமை ஒவ்வொரு திராவிட ருக்கும் உண்டு. ஒவ்வொரு தன்மான வீரருக்கும் உண்டு. இந்த தேர்தல் வெறும் இடம் பிரிக்கக்கூடிய தேர்தல் அல்ல. வெறும் ஆட்சி மாற்றத்தை மட்டும் நிலை நிறுத்தக்கூடிய தேர்தல் அல்ல. அதைவிட ஆழமான ஒரு தேர்தல். இந்த நாட்டுக்கு சோதனையான தேர்தல்.

அந்த அம்மையார் (ஜெய லலிதா) கேட்கிறார். ஈழத் துக்கு கலைஞர் என்ன செய் தார்? திமுக என்ன செய்தது? இவை எல்லாம் தமிழருக்கு தெளிவாக தெரியும். ஈழத் தமிழருக்காக கலைஞர் என்ன செய்தார்? திட்டங்கள் சாதக மானது. இரண்டு முறை அவர்க ளுக்காக ஆட்சியை தியாகம் செய்தார் டாக்டர் கலைஞர். இங்கே உட்கார்ந்து இருக்கி றாரே அம்மையார் சுப்புலெட் சுமி அவர்கள் பட்ட கஷ்டங் கள். தடாவிலே அப்ப கஷ் டப்பட்டு இருக்கிறார். அவர் கள் சொல்கிறார்கள்.

என்னய்யா, பைத்தியக் கார தனம், இலையும் மல ராது. அவர்கள் கணக்குப்படி ஈழமும் வராது. போராடி னால் தான் ஈழம் மலரும். அதற்கு விழிப்புணர்வு ஏற் படுத்த வேண்டும். இப்படி அணிகளின் எண்ணத்தை ஈடேற்ற வேண்டும்.

அம்மையார் அவர்கள் மரண அடி அடிங்கள், சவுக்கு அடி அடியுங்கள் என்று சொல் கிறார்கள். வருகின்ற 24ஆம் தேதி தெரியும் யார் வெற்றி பெறப் போகிறார்கள் என்று அப்போது புரியும்.

மின்வெட்டா? திமுக சதியா?

சென்ற வாரம் வரை மின் மிகையாகிடும் நான் பார்த்துக் கொள்கிறேன் என்ற அம் மையார். ஏனென்றால், அம்மா மேலிருந்து வந்து பார்ப்பார். இன்றைக்கு திருநெல்வேலியில் புதியதாக ஒன்று கண்டு பிடித்தார்கள். அம்மையார் திருநெல்வேலியில் பேசும் போது, மின்வெட்டு ஏன் தெரியுமா?

நான் எவ்வளவு திட்டத்தை போட்டு மின் சாரத்தை கொண்டு வந்த விட் டேன். ஆனால், ஏற்கனவே இருந்த மேட்டூர் திட்டம், தூத்துக்குடி திட்டம் இங்கே எல்லாம் திமுககாரர்கள் சதி செய்து, எல்லா மெஷின்க ளையும் ஓடவிடாமல் செய்து விட்டார்கள் (பலத்த கைதட் டல்).

என்னய்யா அர்த்தம்? சொல்லும்போதே சிரிக்கிறீர் கள். இதைவிட வேற கேலி கூத்து உண்டா? நம் நாட்டில், திமுக சதி செய்து விட்டதாம். அதனால் மெஷின்கள் எல் லாம் பழுதாகி விட்டதாம். அதனால் மின்வெட்டு ஏற் பட்டதாம்.

இப்பொழுது திமுகவா ஆளுகிறார்கள். இங்க (அதி முக) தானே ஆளுகிறார்கள். இவர்கள் கைகளில்தான் (ஆட்சி) எல்லாம் இருக்கிறது. கேழ்வரகில் நெய் வருகிறது என்றால், கேட்பாருக்கு மதி இல்லையா என்று சொல்லு வார்கள். மக்களை எல்லாம் என்ன நினைத்துக் கொண்டு இருக்கிறார். சிந்திக்க வேண் டாமா? இன்று மாலை ஒரு செய்தியை பார்த்தேன். நெடுஞ் சாலைத் துறை கணக்குக்கா ரர்கள் 10,000 கோடியை தடுத்து நிறுத்தி இருக்கிறார்கள். இந்த நெடுஞ்சாலைத் திட்டம் விரி வாக்கத்திற்கு கொடுத்த 10,000 கோடியை தடுத்து நிறுத்தி விட்டார்கள். - இவ்வாறு தமி ழர் தலைவர் உரையாற்றினார்.

Read more: http://viduthalai.in/page-4/78549.html#ixzz2yiwnDwkh

தமிழ் ஓவியா said...


பார்ப்பனர்களும் சர்க்காரும் பங்காளிகளேயாவர்

டில்லியில் நடந்து கொண்டிருக்கும் இந்திய சட்டசபைக் கூட்டத்தில் விவாதத்திற்கு வந்த சாரதாபில் என்னும் கல்யாண வயது நிர்ணய மசோதா நிறைவேறாமல் இருப்பதற்குச் சர்க்கார் சூழ்ச்சி செய்தது மிகவும் அருவருக்கத் தக்கதும் இழி தன்மை பொருந்தியதுமான செய்கையாகும்.

சீர்திருத்த சம்பந்தமாக ஏதாவது ஒரு மசோதா கொண்டு வந்து சட்டசபைகளில் நிறைவேற்றப்பட வேண்டுமானால் சாதாரணமாகவே அதில் அநேக விதமான கஷ்டங்களுண்டு. சர்க்காராவது அல்லது பார்ப்பனர்களாவது ஏதாவது ஒரு சிறு விஷமம் செய்ய ஆரம்பித்து விட்டாலோ அதன் கஷ்டத்தைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை.

இந்த நிலைமையில் இந்துக்களின் கல்யாண நிர்ணய வயதைப் பற்றி சட்டம் கொண்டு வருவதற்கு எத்தனை காலமாக எத்தனை பேர்கள் கஷ்டப்பட்டு வந்திருக் கிறார்கள் என்பது சீர்திருத்த உலகில் இருப்பவர்களுக்கு விளங்காமல் போகாது. திரு. சாரதா அவர்கள் இந்த பில் கொண்டு வந்து அதற்கு செய்யவேண்டிய சடங்குகள் எல்லாம் செய்து அதற்காக எவ்வளவோ பணம் செலவும் செய்து கடைசியாக அது நிறைவேற்றத்தக்க உறுதியான நிலையில் இருக்கும்போது அது பழைய குப்பையில் போடுவதற்கு சர்க்கார் உடைந்தையாய் இருந்தார்களானால், சர்க்காரின் நாணயத்தையோ யோக்கியப் பொறுப்பையோ நாம் எப்படி மதிக்க முடியும்?

இந்தச் சர்க்கார் இந்நாட்டில் அரை வினாடியாவது இருக்க வேண்டுமென்று நாம் நினைத்திருந்தால் அது இந்நாட்டில் உள்ள பார்ப்பனியக் கொடுமையை அடியோடு ஒழிப்பதற்காகத்தான் ஆசைப்பட்டிருப்போமே யொழிய மற்றபடி சர்க்காரில் நடுநிலைமை தவறாது நீதியையோ அல்லது அவர் களுடைய பொதுநல உணர்ச்சியையோ மதித்தல்லவென்று திடமாய்ச் சொல்லுவோம்.

எனவே இந்த யோக்கியதையுள்ள அரசாங்கம் பார்ப்பனியக் கொடுமைக்கு உதவி புரிவதாயிருந்தால் அதனிடத்தில் எப்படித்தான் மக்களுக்கு நல்லெண்ணம் இருக்க முடியும்? தவிர சட்டசபையில் கல்யாண மசோதா விஷயத்தில் சர்க்கார் பார்ப்பனர் களுடன் சேர்ந்து கொண்டதற்குக் காரணம் சம்மத வயதுக் கமிட்டி அறிக்கை வந்த பிறகு யோசிக்கலாம் என்று கருதியது தானாம்.

இது யோக்கியமான சமாதானமல்லவென்றே சொல்லுவோம். கல்யாண வயது நிர்ணயத்திற்கும் சம்மத வயது நிர்ணயத்திற்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது. சம்மதவயது நிர்ணயம் என்பது ஒரு ஆணும் பெண்ணும் எத்தனையாவது வயதில் கலவி செய்து கொள்ளலாம் என்பது; கல்யாண வயது என்பது ஒரு ஆணும் பெண் ணும் எத்தனையாவது வயதில் கல்யாணம் செய்து கொள்ளலாம் என்பது.

கலவி என்பது ஒரு உணர்ச்சி கல்யாணம் என்பது ஒரு ஒப்பந்தம். பார்ப்பனர்கள் சொல்லுவது போல் கலவி உணர்ச்சி. பெண்களுக்கு 12-வயதிலும் ஆண்களுக்கு 14 வயதிலும் உண்டாகலாம்.

அவர்கள் தங்கள் தங்கள் உணர்ச்சிகளை தனித் தனியாகவேகூட தீர்த்துக் கொள்ளலாம். ஆகவே அதைத் தடுக்க சட்டம் செய்வது அவ்வளவு சாதாரண மான காரியமல்ல. எனவே அதோடு கூட கல்யாண வயது நிர்ணயம் சட்டத்தையோ சிக்கலாகுமென்று சொல்லுவதில் ஏதாவது பொருள் இருக்க முடியுமா?

கல்யாணம் என்பது ஒரு ஒப்பந்தம். அதுவும் தற்கால நிலையில், கல்யாணம் என்பது ஏற்பட்ட நாள் முதல் அவரவர்கள் சாகும்வரை கொண்டு செலுத்தித் தீர வேண்டியதான ஒப்பந்தம். அத்தகைய ஒப்பந்த காரியத்தைச் செய்து கொள்ள மக்களுக்கு எந்த வயதில் உரிமை உண்டு என்பதை யோசிப்பதற்கு ஏன் கால தாமதம் செய்ய வேண்டும்?

ஒரு மனிதன் தன் சொத்தை அடையவும், ஒரு வோட்டு கொடுக்கவும்,ஒரு பதவியை ஏற்கவும் மற்றும் பல சாதாரண காரியங்களுக்கெல்லாம் வயது நிர்ணயமிருக்கும்போது ஆயுள் வரை கட்டுப்பட வேண்டிய நிபந்தனை கொண்ட ஒரு ஒப்பந்தத்திற்கு வயது நிர்ணயம் இதுவரை செய்யாதிருந்ததே மனித வர்க்கத்தின் முட்டாள் தனத்தை அல்லது அயோக் கியதனத்தைக் காட்டுகின்றது என்றுதான் சொல்லவேண்டும்.

இவ்விஷயங்களில் பார்ப்பனர்கள் என்றைக்குமே எதிரிகளாய் இருக்கின்றார்கள் என்பது வெளிப்படை அதே காரியத்திற்கு அரசாங் கத்தார் துணை இருப்பது என்பது பார்ப்பனர்களுக்கு இவர்கள் பங்காளிகள் என் பதையே காட்டுகின்றது.

எப்படியெனில் பார்ப்பனர்கள் மதத்தின் பேரால் நிரந்தரமாய் வாழ நினைத்துக் கொண்டு இவ்வித அக்கிரமங்கள் செய்கின்றார்கள் என்றால் அரசாங்கத்தார் அரசாட்சியின் பேரால் நிரந்தரமாய் வாழ நினைத்துக் கொண்டு இவ்வித அக்கிரமங்களைச் செய்கின்றார்கள் என்பதுதான்.

குடிஅரசு - கட்டுரை - 10.02.1929

Read more: http://viduthalai.in/page-7/78594.html#ixzz2yix0ad1d

தமிழ் ஓவியா said...


சென்னையில் சைமன் கமிஷனுக்கு ஆடம்பரமான வரவேற்பு - பகிஷ்காரம் புஸ்ஸ் என்று போய்விட்டது

ராயல் கமிஷனுக்குப் பார்லிமெண்டால் நியமிக்கப்பட்ட சைமன் கமிஷன் அங்கத்தினர்களும் இந்திய பிரதிநிதிகளால் தெரிந்தெடுக்கப்பட்ட சென்ட்ரல் கமிட்டி அங்கத்தினர்களும் ரங்கூனிலிருந்து சென்னை துறைமுகத்திற்கு 18ஆம் தேதி காலை 6 மணிக்கு டிறா என்னும் கப்பலில் சுகமே வந்து சேர்ந்தார்கள்.

அவர்களை சென்னை மாகாண மக்களின் பிரதிநிதிகளால் சைமன் மாகாணக் கூட்டுக் கமிட்டிக்கு தெரிந்தெடுத்த பொது ஜனப் பிரதிநிதி அங்கத்தினர்களும் சென்னை அரசாங்க பிரமுகர்களும் கப்பலிலிருந்து இறக்கி துறைமுக மேடையில் வெகு அலங்காரமாய்ப் போடப்பட்டிருந்த பந்தல்களுக்கு அழைத்துச் சென்றார்கள்.

பந்தலில் சென்னை நகர மக்கள் சார்பாக சென்னை கார்ப்பரேஷன் சபைத் தலைவரும், கார்ப்பரேஷன் அங்கத்தினர்களும், மற்றும் சென்னைப் பிரமுகர்களும், தென் இந்திய மிராசுதாரர்களின் பிரதிநிதிகளாகிய மிராஸ்தார் சங்க அங்கத்தினர்களும், ஜமீன்தார்களும், ராஜாக்களும் மற்றும் வெளி ஜில்லா மக்களின் பிரதிநிதிகளாக ஜில்லா போர்டு மெம்பர்களும் மகமதிய சமூகப் பிரதிநிதிகளும் ஆதிதிராவிட சங்கப் பிரதிநிதிகளும்,

வர்த்தக சங்கப் பிரதிநிதி களும் மாகாண இளைஞர் சங்கப் பிரதிநிதிகளும் பொது ஜனங்கள் சார்பாக அரசாங்கத்தில் மந்திரிகளாக நியமிக்கப்பட்ட மந்திரிமார்களும் மற்றும் சென்னை மாகாணத்தைச் சேர்ந்த சகல திறப்பட்ட மக்களின் கூட்டமும் ஏராளமாக வந்திருந்து ஒவ்வொரு பிரதிநிதி தாபனங்களும் வரவேற்பு பத்திரங்கள் வாசித்துக் கொடுத்து அநேக வகுப்பு மகாநாடுகளில் கமிஷனை வரவேற்கச் செய்த தீர்மானங்களையும் தெரியப்படுத்தி வரவேற்றார்கள்.

சைமன் துரையவர்களும், கமிஷன் சார்பாக இவ்வாடம்பரமானதும் பிரதிநிதித்துவ மானதுமான வரவேற்பை ஏற்று அதற்குத்தக்க பதிலளித்த தோடு, தங்களது நன்றியறிதலையும் தெரிவித்து அரசாங்க விருந்தினராய்ச் சிலரும் மந்திரிகள் விருந்தினராய் சிலரும் தனிப்பிரபுக்களின் விருந்தினர் களாகச் சிலரும் அவரவர்கள் வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள்.

இவை தவிர மற்றும் அநேக பிரதிநிதித்துவ சபைகளினுடைய பத்திரங்களும் அழைப்புகளும் கமிஷனுக்கு ஏராளமாக இருந்தது.

என்றாலும் அவற்றை எல்லாம் ஏற்றுக்கொள்ள கமிஷனர்களுக்குப் போதிய சாவகாசம் இல்லை என்பதை முன்னமேயே அவர்கள் வருத்தத்துடன் தெரிவித்துக் கொண்டதின் மீது பல ஏற்பாடுகள் நிறுத்தப்பட்டு விட்டன.

எனவே, சென்னையில் தாங்கள் தான் பொது ஜனங்களின் பிரதிநிதிகள் என்றும் தங்கள் கருத்துத்தான் தேசமக்கள் கருத்தென்றும் தாங்களே தான் தேசத் தலைவர்கள் என்றும் தங்களுக்குத் தாங்களே விளம்பரம் செய்து கொண்டும் தங்களுக் குள்ளாகவே ஒருவருக்கொருவர் தலைவர் பட்டங்களை பரிமாறிக் கொண்டும் இருந்த - இருக்கின்ற - ஒரு சில ஆசாமிகள் கூடிக் கொண்டு சுமார் ஒரு வருஷ காலமாக பகிஷ்காரக் கூச்சல் போட்டும் எவ்வளவோ சூழ்ச்சிகளும் விஷமப் பிரச்சாரங்களும் செய்தும் கடைசியாக சைமன் பகிஷ்காரம் புஸென்று காலி வேட்டாய் போய் விட்டதுடன் சைமன் கமிஷன் வரப் போவதில்லை என்று தெரிந்த ஒரு தெருவில் நின்று தங்கள் செலவில் போட்டோ படம் பிடித்து தங்கள் தங்கள் பத்திரிகையில் போட்டுக் கொண்டதோடு பகிஷ்காரம் முடிவு பெற்றுவிட்டதென்றே சொல்லுவோம்.

ஒரு சமயம் பகிஷ்காரக் கூச்சல்காரர்கள் இதை ஒப்புக் கொள்ளுவதில்லை என்று சொல்லவருவார்களானால் அவர்களை ஒரே ஒரு கேள்வி கேட்கின்றோம். அதாவது, தமிழ்நாட்டு மக்களின் சார்பாக பகிஷ்காரக் கூச்சல் போட்டுக் கொண்டிருந்தவர்களில் அதாவது, திருவாளர்கள் சீனிவாசய்யங்கார், சத்தியமூர்த்தி, ஷாபிமுகமது, குழந்தை, வரதராஜுலு, திரு.வி.கல்யாணசுந்தரம், இரத்தினசபாபதி, அமீத்கான், ஜெயவேலு முதலிய கூட்டத்தார்களை விட எந்தவிதத்திலாவது அதாவது, தேசியப் பொறுப்பிலோ ஒழுக்கத்திலோ, தியாகத்திலோ, செல்வத்திலோ குறைந்த யோக்கியதை உடையவர்கள் ஒருவராவது சைமன் கமிஷனை வரவேற்ற பதினாயிரக்கணக்கான கூட்டத்தில் இருந்தார்களா என்று கேட்கின்றோம்.

குடிஅரசு - செய்தி விளக்கக்குறிப்பு - 24-02-1929

Read more: http://viduthalai.in/page-7/78591.html#ixzz2yixU8QTX

தமிழ் ஓவியா said...


திரு.ராஜகோபாலாச்சாரியின் பஞ்ச நிவாரணப் புரட்டு

சேலம் ஜில்லா திருச்செங்கோட்டுக்குப் பக்கத்தில் புதுப்பாளையம் என்கின்ற கிராமத்தில் திரு.ராஜகோபாலாச்சாரியார் கதரின் பெயரால் ஒரு ஆசிரமம் வைத்துக் கொண்டு மதுவிலக்குப் பிரச்சாரம் செய்வதாகவும், பஞ்ச நிவாரண வேலை செய்வதாகவும் அங்குள்ள ஏழை மக்களுக்குக் கூலி கொடுப்பதாகவும் தானியம் கொடுப்பதாகவும் அடிக்கடி பத்திரிகைகளில் எழுதிக் கொண்டும் திரு.காந்தியைவிட்டு தன்னை விளம்பரம் செய்யச் செய்தும் இதன் பலனாய் திரு.காந்தி சிபாரிசின் மீது வெளி இடங்களிலே யிருந்து பணம் வரும்படியாகச் செய்து கொண்டும் சூழ்ச்சிகள் செய்து பெரிய ஆர்ப்பாட்டங்கள் செய்து வருகிறார்.

இந்த சூழ்ச்சியும், ஆர்ப்பாட்டமும் அடுத்த சட்டசபைத் தேர்தலில் சேலம் ஜில்லா மக்கள் பூராவையுமே ஏமாற்றி அவர்களுடைய ஓட்டுக்கள் கிடைக்கும்படி செய்ய வேண்டும் என்கின்ற எண்ணம் வைத்தே செய்து வருகின்றார்கள்.

இவர் சென்ற தேர்தலின் போதும் இதே மாதிரி மதுவிலக்கின் பெயரால் செய்த பிரச்சாரங்களும் அவற்றின் மூலம் திரு.சி.வி.வெங்கிட்ட ரமணய்யங்கார் போன்ற பல பார்ப்பனர்களுக்கு வாங்கிக் கொடுத்த ஓட்டுகளும் மற்றும் திரு.காந்தியைவிட்டு திரு. ராஜகோபாலாச்சாரியார் சொல்லுகின்ற நபர்களுக்கே ஓட்டு கொடுங்கள் என்று எழுதச் செய்த சூழ்ச்சியும் மக்கள் அறிந்ததேயாகும். ஆனால் அந்தத் தேர்தல் நடந்த பிறகு அச்சூழ்ச்சிகளால் ஓட்டுப்பெற்ற சுயராஜ்ஜியக் கட்சியாரோ அல்லது காங்கிரசுக்காரரோ அல்லது சுதந்திரக் கட்சியாரோ செய்த வேலை என்ன என்று கேட்கின்றோம்.

கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைத்து பெரிய பூசாரி ஆய்விடுவதைப் போல், திரு.காந்தியைக் கொண்டு பணம் வசூலிப்பதும், அப்பணத்தைக் கொண்டும் மாதம் 50, 100, 150, 200- என்பதாக பார்ப்பனர்களுக்குச் சம்பளம் கொடுத்து பல பார்ப்பனர்களை வளர்ப்பதும், பார்ப்பனரல்லாதாரில் ஏதாவது ஒன்று இரண்டு பேர்களை அதுவும் முட்டாள்களாகத் தேடிப்பிடித்து அவர்களை வைத்துக் கொண்டு பார்ப்பனரல்லாதார்களையும் தான் சேர்த்துக் கொண்டிருப்பதாக பொது ஜனங்களை ஏமாற்றுவதும் ஆகிய இந்த பித்தலாட்ட காரியத்தினாலேயே பார்ப்பனரல்லாதாரை நிரந்தரமாய் ஏமாற்றலாம் என்று கருதி இருக்கின்றார்.

ஆதியில் இந்த ஆசிரமம் பெரிதும் பஞ்சமர்கள் என்பவர்களையே பிரதானமாகக் காட்டி ஏற்படுத்திய தாகும். அந்தப் பெயராலேயே பொதுஜனங் களிடையே! பணமும் வசூலிக்கப்பட்டது.

எனவே அப்பேர்ப்பட்ட ஒரு ஆசிர மத்தில் தீண்டாதார் என்பவர்கள் எத்தனை பேர்கள் சேர்க்கப்பட்டிருக் கின்றார் என்பதும், பார்ப்பனரல்லாதாராரிடமிருந்தே கொடுக்கப்பட்ட பூமியால் பார்ப்ப னரல்லாதாரிடமிருந்து வசூலிக்கப்பட்ட பணத்தில் நடைபெறும் ஆசிரமமான புதுப்பாளையம் ஆசிரமமென்பதில் இப்போது இருக்கும் பார்ப்பனர் எண்ணிக்கை எவ்வளவு?

அவர்களுக்குக் கொடுக்கும் சம்பளம் எவ்வளவு? பார்ப்பனரல்லாதார் எண்ணிக்கை எவ்வளவு? அவர்களுக்கு ஆள் ஒன்றுக்கு கொடுக்கப்படும் மாதச் சம்பளம் எவ்வளவு? ஆகிய இவைகளைக் கவனித்தால் ஆசிரமப்புரட்டும் ஆச்சாரியாரின் பஞ்ச நிவாரணப்புரட்டும் தீண்டாமை விலக்குப் புரட்டும் கதர்த் தொண்டு புரட்டும் தானாகவே ஒரு மூடனுக்குக் கூட விளங்கிவிடும் நிற்க.

இச்சூழ்ச்சிகள் நடக்கும் இவ்வாச்சிரமத்திற்காக திரு.காந்தியின் சிபாரிசை கேட்டுக் கொண்டு வடநாட்டிலும் தென்னாட்டிலும் சில பயித்தியக்காரர்கள் பணத்தை அள்ளிக் கொடுப்பதைப் பற்றியோ அவைகளை பொது நலத்தின் பெயரால் சில பார்ப்பனர்களை தின்று கொழுக்கச் செய்யும் அக்கிரமங்களைப் பற்றியோ நமக்குச் சிறிதும் கவலை இல்லை.

ஆனால் இந்தப் புரட்டுகளும் யோக்கியப் பொறுப்பற்ற காரியங்களும் சமீபத்தில் வரப்போகும் அடுத்த சட்டசபைத் தேர்தலில் பார்ப்பனரல்லாதார் கட்சியை ஒழிப்பதற்கு என்று செய்யப்படும் சூழ்ச்சி என்பதை அறியாமல் எங்கு பார்ப்பனரல்லாத மக்கள் ஏமாந்துபோய்ப் பார்ப்பனர்களுக்கும் அவர்களது கூலிகளுக்கும் தங்கள் ஓட்டுகளைக் கொடுத்து பார்ப்பனரல்லாதார் சமூகத்திற்கே தீங்கு விளைவித்துக் கொள்ளுவார்களோ என்கின்ற விஷயத்தில் தான் நாம் கவலைப்படுவதோடு பொதுமக்களையும் உஷாராயிருக்க வேண்டுமென்று எச்சரிக்கை செய்கின்றோம்.

குடிஅரசு - கட்டுரை - 10-03-1929

Read more: http://viduthalai.in/page-7/78592.html#ixzz2yixd28TP

தமிழ் ஓவியா said...


பசு மாமிசம்பற்றி குரல் கொடுப்போர் மாநிலத்தில்தான்...

நரேந்திர மோடி கடந்த ஒன்றரை ஆண்டாக இந்தியா முழுவதும் சுற்றி குஜராத் வளர்ச்சி என்ற பொய்யான தகவலை பேசிக்கொண்டு இருந்தார். ஆனால் அவரது பொய் முகம் தற்போது வெளிவரத்துவங்கியவுடன், இதுநாள் வரை நாட்டு வளர்ச்சி என்ற பொய்வேசத்தைக் களைந்து தனது உண்மையான இந்துத்துவா முகத்தை வெளிக்கொண்டு வந்துள்ளார்.

பசுவதை என்ற பெயரில் கர்மவீரரை உயிரோடு எரிக்க துணிந்த கும்பல் இன்று அதே பசுவதையை தேர்தல் களத்தில் இறக்கியுள்ளது. தற்போதைய அரசு பசுவதையை ஆதரிக்கும் அரசு, பசுப் பாதுகாப்பிற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காமல், பசுக் கொலை செய்யும் மாட்டிறைச்சி தொழிலுக்கு மானியம் கொடுத்துவருகிறது, என்ற மதரீதியாக மக்களை பிளவுபடுத்தி ஓட்டு வாங்க முற்பட ஆரம்பித்துள்ளது. ஆனால் பசுவதை மாட்டிறைச்சி தடை என்று பேசிவரும் மோடியின் உண்மை முகம் குஜராத் அரசின் மாட்டிறைச்சி ஏற்றுமதியால் கிடைக்கும் வருமானத்தின் புள்ளி விவரத்தில் இருந்தே தெரியவரும். குஜராத்தில் 2001-02ஆண்டு 10,600 டன்னாக இருந்த மாட்டிறைச்சி ஏற்றுமதி 2010-11ஆம் ஆண்டு 22,000 டன்னாக உயர்ந்துள்ளது. இது இந்தியாவின் மொத்த மாட்டிறைச்சி ஏற்றுமதியில் 27 விழுக்காடு ஆகும். இந்திய தொழில் வர்த்தக மய்யம் கொடுத்துள்ள புள்ளி விவரப்படி மாமிசம் ஏற்றுமதியில் அதிக லாபம் பார்க்கும் முதல் 10 மாநிலங்களில் ஒன்றாக குஜராத் திகழ்கிறது, பால் பொருட்கள் உற்பத்தி பெருகி வரும் அதே வேளையில் மாமிச ஏற்றுமதி இரண்டு மடங்காக உயர்ந்து விட்டது.

குஜராத்தில் சூரத், அகமதாபாத், வதோதரா, ஜாம் நகர், ராஜ்கோட் ஹப்பா, ஜூனாகட் போன்ற நகரங்களில் மாநக ராட்சியின் துணையுடன் மாட்டிறைச்சிக் கூடம் இயங்கிவருகிறது. இதற்கான அனைத்து உதவிகளும் அரசு மூலம் மாநராட்சிக்கு கிடைக்கிறது.

இங்கு ஒருநாளைக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாடுகள் வெட்டப்படுகின் றன. இதன் மூலம் மாநகராட்சிகளுக்கு அதிக வருமானமும் வருகிறது, உண்மை இப்படி இருக்க மோடி ஊர் ஊராகச் சென்று பொய்பேசிவருகிறார். பசுமாமி சத்தில் எளிதில் ஜீரணமாகி புரதத்துடன் கலக்கும் சொல்லுலோஸ் அதிகம் உள்ள தால் ஏற்றுமதியாளர்கள் பசுமாமிசம் இருப்பதை அதிகம் விரும்புகிறார்கள்.

சிவசேனாவும் தான்

மும்பை மாநகராட்சியின் தேவ்நாட் மாட்டிறைச்சிக்கூடம் தான் ஆசியா விலேயே மிகப்பெரிய மாட்டிறைச்சிக் கூடமாகும். அதேபோல் யூனியன் பிரதேச வரவுசெலவு தொகைக்கு ஈடுகொடுக்கும் வகையில் தேவ்னார் மாட்டிறைச்சிக் கூடத்தின் வருவாய் உள்ளது. இங்கிருந்து ரஷ்யா மற்றும் சில அய்ரோப்பிய நாடு களின் இராணுவத்தினருக்குத் தேவை யான மாட்டிறைச்சிகளும் இந்திய இரா ணுவத்திற்கு தேவையான இறைச்சிகளும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. கடந்த 20 ஆண்டுகளாக மும்பை மாநகராட்சியைத் தன்வசம் வைத்தி ருக்கும் சிவசேனா வெளியில் பசுப்பாது காப்பு பேசினாலும் தனது மாநகராட்சி யில் நடக்கும் இந்த மிருகவதைபற்றி மறைந்த சிவசேனைத்தலைவர் பால் தாக்கரே அவர்களும் பேசவில்லை, அதே போல் தற்போதைய தலைவர் உத்தவ் தாக்கரேயும் பேசவில்லை.

Read more: http://viduthalai.in/page3/78581.html#ixzz2yizGJiHz

தமிழ் ஓவியா said...


இந்தியாவில் பெண்கள் நிலை ஆடு மாடுகள் போல விற்கப்படுகிறார்கள்!

அய்க்கிய நாடுகள் சபை சார்பில் போதைப் பொருட்கள் மற்றும் குற்றங்கள் குறித்த அறிக்கை 2013-இல் வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக் கையில் இந்தியாவில் பெண்கள் விலைப் பொருட்களாக விற்பனை செய்யப்படுகிறார்கள் என்று கூறப் பட்டுள்ளது.

அசாம், மேற்கு வங்காளம், ஜார் கண்ட், பிகார், ஒடிஷா, மத்தியப் பிரதேசம், உத்தரப்பிரதேசம், குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களி லிருந்து 10 வயது முதல் பெண்கள் விலைக்கு விற்பனை செய்யப்படுகி றார்கள். இப்படி வெளி மாநிலங்களி லிருந்து விலைக்கு வாங்கப்படும் பெண்கள் அரியானாவில் உள்ள மேவாட் பகுதியில் பாரோ என்கிற பெயரில் அழைக்கப்படுகிறார்கள்.

வறுமையால் வரதட்சணை கொடுத்து திருமணம் செய்து கொடுக்க இயலாத குடும்பங்களிலிருந்து பெண் களை விலைக்கு வாங்கும் இடைத் தரகர்கள் பெரும் லாபத்துடன் பெண் களைப் பாரோக்களாக விற்றுவிடு கிறார்கள்.

அப்படி விற்கப்படும் பெண்களை திருமண உறுதி அளித்து, கொத்தடி மைகளாக, பாலியல் அடிமைகளாக, கட்டாயத் திருமணம், குறைந்த ஊதியக் கூலிகளாக, வீட்டுப் பணியாளாக என்று வயதுக்கேற்ப நடத்தப்படுகிறார்கள்.

இப்படி பாரோக்களாக பெண்கள் மாற்றப்படுவதை அப்பகுதியில் வெகு சாதாரணமான ஒன்றாக கருதுகிறார்கள்.

ரூபினா(40) என்கிற பெண் அசாமி லிருந்து 16 வயதில் கட்டாயத் திருமணத்துக்குப்பின், அரியானாவில் மேவாட் மாவட்டத்தில் குஹானா கிராமத்தில் பாரோவாக ஆக்கப்பட் டவர். இதுபற்றி அவர் கூறும்போது, பாரோவான எங்களுக்கென்று இட மேதும் இல்லை. விலங்குகளைப் போல் நாங்கள் நடத்தப்படுகிறோம். ஒருவன் தன்னிடமிருந்து வெளியேற்ற வேண்டுமானால், உள்ளூர்ப் பெண் ணைவிட, (பிற மாநிலப் பெண்) எங்களை உதைத்து வெளியே விரட்டி விடுவான். அவனுக்கு பணத் தேவை ஏற்பட்டால் எங்களை விற்று விடு வான் என்றார். இவர் தண்ணீர் வசதி, மின்சாரம் இல்லாத குடிசையில் வசிக்கிறார். இவரை பாரோ, மோல்கி (விலைக்கான பெண்) என்று கூறு கிறார்கள். ஒருமுறை பாரோக்களாக ஆக்கப்பட்ட பெண்கள் அய்ந்து முறைகூட பலர் கைமாறும்நிலை உள்ளது. சுடுகாட்டுக்கு போகும் வரையிலும் அவர்கள்நிலை இதுதான். நிரந்தரமாக எங்கும் இருக்க முடியாது. மூன்று மாதங்களுக்குமுன்பாக கணவனை இழந்த பெண்ணை அவள் கணவனின் உடன்பிறந்தவர்கள் வீட்டைவிட்டு வெளியேற்றி பாரோ பெண்ணாக ஆக்கப்பட்டுவிட்டார்.


தமிழ் ஓவியா said...

அரியானா, பஞ்சாப், மேற்கு உத்தரப்பிரதேசம் ஆகிய பகுதிகளில் அங்கீகாரமில்லாமல் நடைமுறையில் உள்ளது. இப்பிரச்சினை தீவிரமாகப் பரவியதற்குக் காரணம் ஆதிக்கத்துக் குட்பட்ட சமூக அமைப்பில் பாலியல் விகிதம் உள்ளது. வறுமையின் பிடியில் உள்ள அசாம், மேற்கு வங்காளம், ஜார் கண்ட் மற்றும் ஒடிஷா மாநிலங்களி லிருந்து பெண்களை விற்பனை செய்கிறார்கள்.

வழக்கமாகப் பெண்களை திருமணம் செய்வதாக உறுதி அளித்து, மேவாட் போன்ற பகுதிகளுக்கு அழைத்து சென்று, விற்பனை செய்து விடுகிறார்கள். சில நேரங்களில், வேறு பெண் கிடைக்காதபட்சத்தில் அதே பெண்ணை திரும்பவும் விற்பனை செய்கிறார்கள். சொந்த மாநிலத்து டனான உறவு அறுந்துபோன அப்பெண்களை கொத்தடிமைகளாக, கட்டாயத் திருமணத்துக்கு, பாலியல் தொழிலுக்கு உட்படுத்துகிறார்கள். தொண்டு நிறுவனமான திருஷ்டி சிறீ அத்யாயன் பிரபோதன் கேந்திரா தன்னுடைய கள ஆய்வில் அரியானா வில் 10ஆயிரம் வீடுகளை தேர்வு செய்ததில், 9ஆயிரம் பெண்கள் வெளி மாநிலங்களிலிருந்து விலைக்கு வாங் கப்பட்டு திருமணம் செய்துகொண்ட தகவல் தெரியவந்துள்ளது.

புதுடில்லியிலிருந்து இரண்டு மணிநேர பயணத்தில் அரியானாவின் 21 மாவட்டங்களில் ஒன்றான மேவாட் மாவட்டத்தில் பாலியல் விகிதம் சம நிலையில் இல்லாமல் உள்ளது. ஆயிரம் ஆண்களுக்கு 879 பெண்கள் என்கிற விகிதம் உள்ளது. தேசிய அளவில் ஆயிரம் ஆண்களுக்கு 927 பெண்கள் என்கிற விகிதம் உள்ளது. வட இந்தியாவில் திருமண முறை மாற்றத்துக்காக பணிபுரிந்தவரும், புதுடில்லி நேரு நினைவு அருங்காட்சி யகம், நூலகத்தின் முன்னாள் ஊழி யருமாகிய டாக்டர் பிரேம் சவுத்ரி கூறும்போது, அரியானாவில் 30 விழுக்காட்டுக்கு மேல் மணமாகாத ஆள்கள் 15 வயதிலிருந்து 44 வயதுவரை உள்ளனர். உள்ளூரில் பெண் கிடைக் காதவர்கள், வெளி மாநிலங்களிலிருந்து கொண்டு வருகிறார்கள் என்றார்.

தமிழ் ஓவியா said...

இந்தியன் சமூக பயிற்சி நிறுவ னத்தின் முதுநிலை ஆய்வாளர் சுஷ்மிதா குரு கூறும்போது, ஜிந்த் பகுதிக்கு நான் சென்றபோது, ஒடிஷா, ஜார்கண்ட் பகுதியிலிருந்து இந்து மற்றும் கிறித்துவ பெண்களைக் கண்டேன் என்றார்.

கிராமப் பிரமுகர்கள் கூறும்போது, குழந்தைத் திருமணம், பொருளாதாரக் காரணங்கள் ஆகியவற்றால்தான் பிரச் சினையே ஏற்படுகின்றது என்றனர்.

சர்பஞ்ச் லூஹிங்கா குர்த் கிரா மத்தைச் சேர்ந்த ஜாகீர்கான் என்பவர் கூறும்போது, இருபது வயதுக்குமேல் உள்ள ஆண்களுக்கு ஏழையாக, மாற்றுத்திறனாளியாக, துணைவரை இழவந்தவராக இருப்பவர்களுக்கு மணப் பெண்ணைக் கொடுப்ப தில்லை என்றார். 2011 புள்ளிவிவரப்படி, அரியானா வில் 72விழுக்காடு மக்கள் தொகையில் 60 விழுக்காடு கல்வி பெற்ற பெண்கள் உள்ளனர். குரேகானில் தொழில்நுட்பப் பூங்கா மற்றும் மாருதி சுசுகி நிறுவனம் உட்பட வாகன உற்பத்தித் தொழிற் சாலைகள் உள்ளன. ஆனால், 70 விழுக் காட்டினர் விவசாயத் தொழிலில்தான் உள்ளனர்.

எம்பவர் பீபிள் தொண்டு நிறுவ னத்தைச் சேர்ந்த சபிக் உர் ரஹ்மான் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட வர்களுக்காக பணிபுரிந்து வருபவரா வார். இவர் பாரோக்கள் குறித்து முழுமையாக அறிந்துள்ளார். அவர் கூறும்போது, வடஇந்தியாவில் அரி யானா உள்ளிட்ட பகுதிகளில் சண்டை களம் உள்ளது. பலதார மணம் செய் பவர்கள் உள்ளனர். சண்டையில் வெல்பவர்கள் பரிசைத் தட்டிச் செல்வார்கள். பரிசுப்பொருட்களாக பெண், நகை மற்றும் சொத்து, பொருட் கள் வழங்கப்படுவது வாடிக்கையாக உள்ளது என்றார்.

தேசிய குற்றப்பதிவுகள் குறித்த அறிக்கையில் 22ஆயிரம் சிறுமிகள், பெண்கள் 10 முதல் 30 வயதுவரை திருமணத்துக்காக 2012இல் கடத்தப் பட்டுள்ளார்கள் என்று குறிப்பிடப் பட்டுள்ளது. பெண்ணின் திருமண வயது குறித்து ஒருங்கிணைக்கப்பட்டுள்ள பாலியல் தொழிலில் உள்ளவர்களால் கோரிக்கை அரியானா, பஞ்சாப், உத்தரப்பிரதேசத் தில் முன்வைக்கப்பட்டுள்ளது என்று அய்க்கிய நாடுகள் சபையின் போதை மற்றும் குற்றங்கள் குறித்த அறிக்கை யில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட சட்ட உதவி மய்யப் பொறுப்பாளராகிய, மணமகள் என்று கூறி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப் பட்டவர்களுக்கான அமைப்பை நடத்திவருபவருமாகிய கவுசியாகான் கூறும்போது, ஒரு பெண் இரண்டு முதல் அய்ந்து முறை விற்பனை செய்யப்படுகிறாள் என்றார்.

அரியானாவைச் சேர்ந்தவராகவோ, பிற மாநிலத்தவராகவோ இருந்தாலும், ஆணுடன் உள்ள எந்த ஒரு பாரோ பெண்ணையும், அவர் பாரோ பெண் என்று கண்டுபிடிக்க முடியாது என்கிறார் ரூபினா. இவர் தற்போதைய கணவனுடன் சேர்வதற்குமுன் பாரோ வாக இருந்தவர். ஆனாலும், அவர் கணவன் மறைந்தால் வீட்டைவிட்டு வெளியேற்றப்படுவார். மேவாட்டிலிருந்து சுமார் நூறு கி.மீ. தூரத்தில் உள்ள ராஜஸ்தான் பாரத்பூரை அடுத்த கைத்வாடா என்கிற கிராமத்தில் முஹம்மத் குல்ஷான்(45) என்பவர் காளான் வளர்ப்புத் தொழில் செய்பவரான இவர் பகுதி நேர வேலையாக தொடர்ச்சியாக வடகிழக்கு மாநிலங்களிலிருந்து பெண் களை கொண்டு வருபவர். அவர் கூறும் போது, அசாம், கொல்கத்தா ஆகிய இரு இடங்களிலிருந்தும் பெண்களை அதிக அளவில் அனுப்புகிறார்கள் என்கிறார்.

அய்.நா. அறிக்கையின்படி, அசாம், மேற்கு வங்காளத்திலிருந்து அதிக அளவி லான பெண்கள் கட்டாயத் திருமணத்திற்கு உள்ளாகிறார்கள் என்கிறது. குல்ஷானின் தகவலை உறுதிப்படுத்துகிறது.

(- ஹிந்துஸ்தான் டைம்ஸ், 23-3-2014 டில்லி பதிப்பு)

தமிழில்: சரவணா இராஜேந்திரன்

Read more: http://viduthalai.in/page4/78586.html#ixzz2yizsyzb2

தமிழ் ஓவியா said...


ராமன் பிறந்த நாளை கண்டுபிடிச்சிட்டாங்கோ!


தமிழ் பாரம்பரிய அறக்கட்டளை சார்பில் என்ற தலைப்பில் சென்னை தியாகராயர் தக்கர்பாபா பள்ளி அரங்கில் டாக்டர் டி.கே.ஹரி நிகழ்த்திய உரை-காட்சி ( 05-04-2014) சனிக்கிழமை மாலை நடைபெற்றது. இராமன் என்பது வெறும் கதைப் பாத்திரமல்ல; உண்மையில் வாழ்ந்த சரித்திர புருஷனே என்பதை அறிவியல்? பூர்வமான(?) ஆதாரங்களுடன் அடித்துக் கூறினார் முனைவர் ஹரி. அதைப்புரிந்து கொள்ள நமக்கு எத்தனை கேலரி உணவு தேவை என்பதை நமது மூளை படும் பாட்டை அறிந்து கொண்ட பிறகு புரியும். அவர் அடித்துக்கூறுவது இராமன் பிறந்த நாள்: கி.மு.5114 ஜனவரி மாதம் 10 ஆம் தேதி பகல் 12.30 மணிக்கு என்று அவரது ஆராய்ச்சி கூறுகிறது. இதை நீங்கள் படித்துக்கொண்டிருக்கும் வேளையில், அதாவது, 2014 ஏப்ரல் 08ஆம் தேதியன்று, இராமனுக்கு 7128 ஆவது பிறந்தநாள்! (5114 + 2014 = 7128). அதை விட பெரிய அணுகுண்டு செய்தி என்னவென்றால் இதை நிரூபிக்க சாப்ட்வேர், ஹார்டுவேர் வெட்டிவேர் மற்றும் சல்லிவேர் எல்லாம் பயன்படுத்தி ஆராய்ந்தார்களாம். அதன் முடிவு வியப்பில் ஆழ்த்தியதாம் அதாவது

* நாசிக் என்ற இடத்தில் இலக்குமணன், சூர்ப்பனகையின் மூக்கை வெட்டியது, கி.மு. 5077 அக்டோபர் 7 ஆம் தேதி.

* வாலி வதம் நடைபெற்றது, கி.மு.5076 ஏப்ரல் 03ஆம் தேதி.

* ஹனுமான் இலங்கைக்குச் சென்ற தேதி: கி.மு. 5076 செப்டம்பர் 12.

* சுக்ரீவனின் படை ஹம்பியிலிருந்து (கிஷ்கிந்தா) புறப்பட்டது: கி.மு. 5076 செப்டம்பர் 19.

* அது ராவணன் கோட்டையை அடைந்தது: கி.மு. 5076 அக்டோபர் 12.

நிகழ்ச்சியின் முக்கியமான அம்சம், சுக்ரீவன் உத்தரவின் பேரில், அவனது இராணுவம் இலங்கைக்குச் செல்வதற் காகக் கட்டப்பட்ட பாலம் (ராமசேது) எத்தகைய தொழில்நுட்பத்துடன் வடிவ மைக்கப்பட்டது என்பதைப் பற்றியதாம். இறுதியில் கலைஞரின் கேள்விக்கு விடை யும் கிடைத்துவிட்டது. அதாவது சேதுபால தொழில் நுட்பம். எல்லாம் சரிங்கோ வரலாற்றுப் பாடப் புத்தகத்தில் அந்த காலகட்டத்தில் நதிக் கரை நாகரிகம் மாத்திரமே இருந்ததாக கூறியுள்ளார்களே. இன்றும் பல்கலைகழக வரலாற்றுப்பேராசிரியர் அதைத்தானே கூறி பாடம் எடுக்கிறார்கள், முனைவர் ஹரி அவர்கள் எழுதிய ஹிஸ்டோரிகல் ராமா உண்மை என்றால் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு? இதையெல்லாம் சேர்த்து விடுவார்களா?

அங்கு வந்த என்னைப்போன்ற சாமானியனும் இந்துமத்தில் பற்றுள்ள பெரியவாள்களும் இதை நம்பி கொஞ்சம் அல்ல அதிகமாகவே புகழ்ந்துவிட்டு இலவசமாக இரண்டு புத்தகங்களை அவர் கையெழுத்துடன் வாங்கிக்கொண்டு செல்லலாம். ஆனால் இந்துமத சாஸ்திரங்கள் படி நடப்பவர்கள் இதை நம்புவார்களா?, பகுத்தறிவுவாதிகள் சண்டைக்கு வருவது இருக்கட்டும்; வடக்கில் இருந்து லட்சு மண் சேனாவினர் வந்து வம்பு செய்யப் போகிறார்கள், ஏன் தெரியுமா சுமார் 30,00,000 அதாவது முப்பது லட்சம் வயதை கொண்டு ஒரு அவதார புருடரான இராமனுக்கு (இராமனே புரூடா தானே) வெறும் 7128 வயது என்று கூறுகிறாயே - உனக்கு எந்த அமெரிக்க அமைப்பு இராமர் பெயரை பாழ்படுத்த பணம் (திஸீபீ) கொடுத்தது என்று கேட்க மாட் டார்களா?

சாஸ்திரங்களில் கூறப்படுவது திரேதா யுகத்தில் இராம அவதாரம் நடந்தது. அதாவது 12,66,000(பனிரெண்டு லட்சத்து அறுபத்து ஆறாயிரம்) இது மாத்திரமா அதன் பிறகு கிருதா யுகம் அங்கு தான் கிருட்டிணர் பிறந்தார் அந்த யுகம் 17,28,000 (பதினேழு லட்சத்து இருபத்தெட்டாறா யிம்) ஆண்டுகள். இவை யிரண்டும் முடிந்த பிறகு கலியுகம் பிறக்கிறது. அதாவது கிமு 3102. இதெல்லாம் இந்து மத சாஸ்திரங்கள் கூறுகின்றன. வேண்டு மென்றால் மாம்பலம் ரயில் நிலையத் திற்கு அருகில் இருக்கும் ராமகிருஷ்ணா மடத்திற்குச் சென்று விளக்கம் கேளுங்கள் இல்லையென்றால் எழும்பூர் ரெயில் நிலையத்தில் உள்ள இராமகிருஷ்ணா புத்தக மய்யத்தில் சென்று கேளுங்கள்! உண்மையில் இராமனின் வயது 29,94,000 இதுதான் இந்துமத சாஸ்திரங் களின் படி கணக்கு எல்லாம் போட்டு அது வும் டிஜிடல் கால்குலேட்டர் ஒரு புள்ளி கூட தப்பாக கூறாது என்பதை கவனிக்க. அதுசரி ராமன் பாலம் கட்டியது 17 லட்சத்தை 25 ஆயிரம் ஆண்டுகள் ஆகி விட்டதாக சங்பரிவார் வகையறாக்கள் சொன்னதெல்லாம் டூப் - அசல் டூப்பு தானா!

என்னவோ போங்க கையில் காசும், எழுத்துத் திறமையும் இருந்தால் நேற்று கூட ராமர் எங்க வீட்டுக்கு வந்து விருந்து சாப்பிட்டுவிட்டு போனார் என்று பொஸ்தகம் போடலாம். கேட்டால் சாட்டிலைட் மற்றும் கூகிள் மேப் டைம்லைன் பிறகு வாட்ஸ் அப், மற்றும் ஸ்கைப் போன்ற இணையதள நேரடி ஒளிபரப்பு மூலம் ஆதாரம் வைக்கலாம். டிஜிடல் பொஸ்தகம் வைக்கலாம். ஆனால் எழுத்தாளர் ஹரி என் மனைவி வந்திருந்தால் இதைவிட அதிகம் தகவல் கூறியிருப்பார் என அடிக்கடி கூறினார். இதிலிருந்து என்ன தெரிகிறது.


எல்லாவற்றையும் விட தமிழ் பாரம் பரிய அறக்கட்டளை என்ற அமைப்பின் பணி தான் என்ன?

- சரா

Read more: http://viduthalai.in/page5/78588.html#ixzz2yj0Adc2j

தமிழ் ஓவியா said...


தாய்ப்பால் வங்கி

சென்னையில் விரைவில் இரண்டாம் தாய்ப்பால் வங்கி தொடங்கப்பட உள்ளது. எழும்பூரில் உள்ள குழந்தைகள் சுகாதார பயிற்சி நிறுவனத்தில் (மிஸீவீமீ ஷீயீ சிலீவீறீபீ பிமீணீறீலீ) கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக தாய்ப்பால் வங்கி தொடங்கப்பட்டது. தற்போது, தனியார் மருத்துவமனையாகிய விஜயா மருத்துவமனையில் தாய்ப்பால் வங்கி இந்த வார இறுதியில் தொடங்கப்பட உள்ளது.

பிறக்கும் குழந்தைக்கு புகட்டப்பட வேண்டிய தாய்ப்பால் மிகச் சிறப்பான உணவாகும். பிறக்கும் குழந்தைகளுக்கு பல்வேறு சந்தர்ப்பங்களில் தாய்ப்பால் கிடைக்காமல் போகிறது. தாய்க்கு பல காரணங்களால் பால்சுரக்காமல் உள்ளது. குறிப்பாக குறைப்பிரசவம், ஆரோக்கி யமில்லாத குழந்தைகளால் தாய்ப்பாலை அருந்த முடியாத நிலை ஏற்படுகின்றது. இதுபோன்ற தானே அருந்த முடியாத குழந்தைகளுக்கு, தாய்ப்பாலை வற் புறுத்தி அளிக்க மருத்துவர்களால் வலியுறுத்தப்படுகிறது என்று விஜயா மருத்துவமனையின் குழந்தைகள் பிரிவின் பொறுப்பாளராகிய அனில் குமார் கூறினார். தாய்ப்பால் அதிகம் சுரக்கும் தாய்மார்கள் கொடையாக வங்கியில் அளிக்கலாம். அப்படிக் கொடுக்கப்படும் தாய்ப்பால் ஆய்வுக்கு உட்படுத்தப்படும். ஆய்வில் சரிபார்க்கப்பட்டு, பின்னர் நுண்ணுயிரிகளைக் களைவதற்கு சூடு படுத்தப்பட்டு, வங்கியில் பாதுகாக்கப் படும். ஆறு மாதங்கள் வரை வங்கியில் பாதுகாக்கப்படுகிறது என்று மருத்துவர் குமார் தாய்ப்பால் வங்கியின் பயன்குறித்து குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கெனவே கொல்கத்தா, குஜராத், உதய்ப்பூர் மற்றும் பூனா ஆகிய நகரங் களில் தாய்ப்பால் வங்கி செயல்பட்டு வருகிறது. சென்னையில் அதற்கு முன்ன தாகவே தாய்ப்பால் வங்கிக்கான முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டு, செயல்படுத்த முடி யாமல் இருந்தது.

இதுதான் முதல் தனியார் மருத்துவ மனையில் தொடங் கப்பட்டுள்ள தாய்ப் பால் வங்கியாகும். குறைப் பிரச வத்தில் பிறக்கும் குழந்தை களுக்கும், தீவிர சிகிச்சைப் பிரிவில் (மிசிஹி) உள்ள குழந்தைகளுக்கும் தாய்ப்பால் வங்கியிலிருந்து அளிக்கப்படும்.
முறைப்படி தாய்ப்பாலை கொடை யாக அளிக்க விருப்பம் தெரிவிப்பவர் களின் தாய்ப்பால் மாதிரி எடுக்கப்பட்டு கிருமித்தொற்று, நுண்ணுயிரிகள் உள் ளனவா என்று ஆய்வு செய்யப்படும். கூடுதலாக சுரக்கும் தாய்ப்பாலை சேக ரித்து வைப்பதற்கு, தாய்மார்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். தாய்ப்பாலைப் பெறுவதற்கும், பிறக்கும் குழந்தைகளுக்கு தேவைப்படும் தாய்ப் பாலை அளிப்பதற்கும் பிற தனியார் மருத்துவமனைகளுக்கும் இணைப்பை ஏற்படுத்துகிறோம். தாய்ப்பாலை அளிக் கும் தாய்மார்கள் பட்டியலை பதிவு செய்கிறோம். தகுந்த விலையுடன் தாய்ப் பாலை அளிக்கவும் திட்டமிட்டுள்ளோம் என்று மருத்துவர் குமார் கூறினார். எழும்பூர் குழந்தைகள் சுகாதாரப் பயிற்சி நிறுவனத்தின் பிறக்கும் குழந்தை களுக்கான பிரிவான நியூனாடாலஜி தலைவரும், பேராசிரியருமாகிய ஜெ.குமுதா கூறும்போது, எழும்பூரில் உள்ள தாய்ப்பால் வங்கி நன்றாக செயல்பட்டு வருகிறது. சராசரியாக ஒரு நாளைக்கு ஆறு முதல் எட்டு தாய்மார்களிடமிருந்து தாய்ப்பாலை 800மிலியிலிருந்து ஒரு லிட்டர்வரை கொடையாகப் பெறுகி றோம். தீவிரசிகிச்சைக்கு அனுமதிக்கப் பட்டுள்ள குழந்தைகளின் தாய்மார்களிட மிருந்து தாய்ப்பாலைப் பெற்றுக் கொள்கிறோம் என்றார். மேலும் அவர் கூறும்போது, பாலின் பாதுகாப்பு பலமுறை செய்யப்படும் ஆய்வின்மூலம் உறுதி செய்யப்படுகிறது. குறைப்பிரசவத் தில் பிறக்கும் 1.00 கி.கி, 1.20 கி.கி. அளவில் எடை குறைந்த குழந்தைகளுக்கும், போதுமான அளவு பால் சுரக்காத தாய்மார்களின் குழந்தைகளுக்கும் வங்கி மூலம் தாய்ப்பால் வழங்கப்படுகிறது என்று கூறினார்.

Read more: http://viduthalai.in/page5/78590.html#ixzz2yj0J8xZz

தமிழ் ஓவியா said...


வேலை தேடி மக்கள் இடம் பெயர்ந்து கொண்டே இருக்கிறார்கள்!


விப்புல் பாண்டியா (பொதுச் செயலாளர், பங்கத்தன் மஸ்தூர் சங்கம், அகமதாபாத்); குஜராத்தில் வேலை இல்லாத் திண்டாட்டமே இல்லை என்பதுபோல சித்திரிக்கவே அரசு முனைகிறது. அதனால், வேலை இல்லாமல் இருப்பவர் களை எல்லாம் வெளி மாநிலத்தில் இருந்து வேலை தேடி வந்தவர்களாக அது சித்திரிக்க முயல்கிறது.

வெளிமாநிலத்தில் இருந்து மட் டுமல்ல, வளர்ச்சி காணாத பகுதி களில் இருந்து அதிக வளர்ச்சி கண்டுவரும் சூரத், அகமதாபாத், ராஜ்கோட், வதோதரா போன்ற நகரங்களுக்கு தினம் தினம் ஆயிரக்கணக்கான பலர் வேலை தேடி குடி பெயர்ந்து வருகிறார்கள்.

விவசாய நிலங்களை எல்லாம் அரசு தொழிற்சாலைகளுக்குத் தாரை வார்த்து விட்டதால்...

நிலச்சுவான்தார்களுக்கு வேண்டு மானால் பணம் கிடைத்திருக்கலாம். விவசாயக் கூலிகள்எங்கே வேலைக் குப் போவார்கள்? ஆனால், அரசு அவர்களை கண்டு கொள்வதே இல்லை. நகர்ப்புறங்களில் ஆபத் தான கட்டுமான வேலைகளில் வேலை செய்பவர் களுக்குப் பணி பாதுகாப்பு இல்லை.

ஆபத்தான வேலைகளில் ஈடுபடும் தொழி லாளர்களுக்கு தலைக் கவசம், ஷூ ஆகியவைகூட இந்த மாநிலத்தில் பல இடங்களில் வழங்கப்படுவது இல்லை. அதனால், கட்டட சாரம் சரிந்து தொழிலாளர் பலி, உயரத்தில் இருந்து கால் தவறி விழுந்து இருவர் பலி என்று தினம் தினம் இங்கே செய்திகள் வந்து கொண்டே இருக் கின்றன. அமைப்புசாரா தொழி லாளியைப் பொறுத்த மட்டில், அவன்தான் அவனது குடும்பத்துக்கு ஆதாரம்.

அவன் இப்படி திடீர் என்று இறந்துவிட்டால் அவனது குடும்பம் என்னாகும்? ஒரு தொழிலாளி உயிருடன் இருக்கும்போதே அவனது குழந் தைகள் படிக்க இங்கே வழியில்லை. இந்த நிலையில் அவன் இறந்து விட்டால், அவனது குழந்தைகளின் எதிர்காலம் என்னாகும்? இது போன்ற செலவுகளுக்காக தொழி லாளர் நலநிதி வரி என்ற பெயரில் அரசிடம் 500 கோடி ரூபாய் இருந்தும் அதில் இருந்துஒரு சதவிகிதத்தைக் கூட இந்த அரசு பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கோ அல்லது அவர்களது குடும்பங்களுக்கோ கொடுப்பது இல்லை. இந்தப் பணம் முழுவதையும் அது செலவு செய்யம லேயேதான் வைத்திருக்கிறது. தொழிற்சங்கங்களும் இடதுசாரி இயக்கங்களும் இங்கு நசுக்கப்பட்டு வெகு காலம் ஆகி விட்டது.

- ஜூனியர் விகடன் 6.4.2014

Read more: http://viduthalai.in/page7/78598.html#ixzz2yj0V9O9Z

தமிழ் ஓவியா said...


மோடி மனைவியின் மனக் குமுறல்!


தன்னை மிகவும் பிரபல மானவர் என்று உலகிற்கு தெரியும் வகையில் நடந்து கொள்பவர் மோடி, அதிலும் நான் சுயம்சேவகன்(ஆர் எஸ் எஸ் தொண்டன்) என்று எல்லா பொதுகூட்டமேடையிலும் பேசுவதை வழக்கமாக கொண்டு இருப்பவர். பொது வாக சுயம்சேவகர்கள் திரு மணம் செய்யக்கூடாது என்று விதிமுறை உண்டு. இதன் காரணமாக நரேந்திரமோடி உலகத்தாருக்கு திருமணமாகாதவர் என்ற பிம்பத்தையே ஏற்படுத்திவந்தார். சுமார் 6 முறை சட்டமன்ற தேர்தலில் போட்டி இட்டவர் தான் திருமணமானவர் என்று குறிப் பிடவில்லை. இவர் திருமணமானவர் என்று சொன்ன தகவல் எல்லாம் வதந்தி என்றும் நரேந்திரமோடி உறுதியான மனப்பான்மையுள்ள உண்மையான சுயம்சேவக் என்று ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத்தே 2013-மார்ச் நாக்பூரில் நடந்த ஆர் எஸ் எஸ் கூட்டத்தில் நரேந்திர மோடிக்கு புகழாரம் சூட்டியுள்ளார். இதனுடைய உண்மையான விளக்கம் கடு மையான பிரம்மச்சரியத்தைக் கடை பிடிக்கும் திருமணமாகாத தொண்டர் என்பதாகும். கடந்த வருடம் நரேந்திர மோடி பாஜக பிரதமவேட்பாளராக அறிவிக்கப்பட்டவுடன் அவரது திருமணம் குறித்த விவாதமும் துவங்கிவிட்டது, ஏற்கனவே 2008 ஒரு பிரபல ஆங்கில நாளிதழ் நரேந்திரமோடியின் மனை வியைப் பேட்டி கண்டு செய்திவெளியிட்டு பரபரப்பில் ஆழ்த்தியது. ஆனால் இந்த செய்தி அதிகம் பரவாமல் மறைக்கப்பட்டு விட்டது. இந்த வருடம் பெண்கள் தினம் அன்று நரேந்திரமோடியின் டீக்கடை விவாதம் என்ற நிகழ்ச்சியில் பெண்கள் தினம் குறித்த நரேந்திர மோடியின் பேச்சிற்கு தன்னுடைய மனைவியை சரியாக கவனிக்காதவர் பெண்களின் நலன் குறித்து பேசுவதற்கு தகுதியற்றவர் என திக்விஜய் சிங் குறிப்பிட்டிருந்தார். இவரது இந்த பேச்சிற்கு பாஜக தலைமை கண்டனம் தெரிவித்திருந்தது, மேலும் 2002ஆம் ஆண்டு குஜராத் சட்டமன்ற தேர்தலின் போது தான் திருமணமாகாதவர் என்று வேட்பாளர் பிரமாணபத்திரத்தில் எழுதியிருந்ததைக் குறித்து வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த குஜராத் நீதிமன்றம் தேர்தல் ஆணையம் தான் இது குறித்து முடிவெடுக்கவேண்டும் என்று வழக்கை தள்ளிவைத்துவிட்டது. இம்முறை ஆம் ஆத்மி தலைவர்களும் நரேந்திரமோடியின் திருமண வாழ்க்கை குறித்து பொதுக் கூட்டத்தில் கேள்வி எழுப்பி இருந்தனர். தனது திருமண விவகாரம் குறித்து மக்கள் கேள்வி கேட்கும் நிலைக்கு வந்த பிறகு தனது மவுனத்தைக் கலைத்து தான் திருமணமா னவர் என்று குறிப்பிட்டார் நரேந்திரமோடி.

நேற்று பாஜகவின் சார்பில் வதோதராவில் போட்டியிடும் நரேந்திர மோடி தனது வேட்பாளர் பிரமாணப் பத்திரத்தில் தான் திருமணமானவர் என்றும் தனது மனைவி பெயர் ஜசோதாபென் என்றும் குறிப்பிட் டுள்ளார்.

கடந்த 3 சட்ட மன்றத்தேர்தலின் போது தன்னை திருமணமாகாதவர் என்று குறிக் கும் விதமாக தனது பிரமாணப்பத்திரத்தில் திருமண பகுதியை நிரப்பாமல் விட்டு விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. மோடி திருமணமானவர் என்று குறிப்பிட்டிருப் பதை நகலாக எடுத்து வதோதரா ஆட்சியாளர் அலுவலக சுவரில் யாரோ ஒட்டி விட்டனர். இதை சிலர் பார்த்த பின்பு மோடி திருமணமானவர் என்று குறிப்பிட்ட செய்தி இரவு செய்தி ஊடகங்கள் மூலம் பரவியது. ஆனால் இதுவரை ஆட்சியாளர் அலுவலக இணையதளத்தில் மோடியின் பிரமாண பத்திர தகவல் குறித்து எந்த தகவலையும் சேர்க்கவில்லை.

சில வருடங்களுக்கு முன்பு ஜசோதா பென் ஒரு ஆங்கில இதழுக்கு அளித்த செய்தியின் தமிழாக்கம் “I am Narendra Modi’s Wife” | OPEN Magazine 2009
மார்ச்.

.”Joshodaben claims she was deserted and never given the privileges of a wife”...........
......

......நான் ஒரு சராசரி இந்தியப்பெண்ணிற்கு உண்டான மகிழ்ச்சிகளைக்கூட பெற முடியாத பாவப்பட்ட ஜென்மம் ஆகிவிட் டேன், எனது திருமணவாழ்க்கை துவக்கத் தில் இருந்தே பாலைவனமாகிப்போனது. மனைவிக்கான எந்த ஒரு அதிகாரமும் வழங்கவில்லை, மோடி அவர்கள் என்னை ஒரு மனைவியாகவே நினைக்கிறாரா இல்லையா என்று அவரிடம் தான் கேட்கவேண்டும் என்றார். இது பேட்டி கேட்கும் முன்பு கூறியவார்த்தை பேட்டி கொடுக்க வெளியே வந்தவரை மிரட்டிய பள்ளி நிர்வாகம், செய்தியாளர்களை விரட்டிவிட்டதுடன், சில நிமிடங்களில் காவல்துறை அதிகாரி ஒருவர் வந்து பத்தி ரிக்கையாளர்களை மிரட்டும் தொனியில் பேசி அனுப்பி இருக்கிறார்........

Read more: http://viduthalai.in/page8/78600.html#ixzz2yj1AEJJr

தமிழ் ஓவியா said...


பூனைக்குட்டி வெளியில் வந்தது ஆர்.எஸ்.எஸின் ஆலோசனை கேட்டு தயாரிக்கப்பட்டதுதான் தேர்தல் அறிக்கை அறிக்கைத் தயாரிப்புக் குழுத் தலைவர் ஜோஷி ஒப்புதல்


டில்லி, ஏப்13- பாஜக வின் தேர்தல் அறிக்கையில் ஆர்.எஸ்.எஸ்சின் செயல் திட்டங்கள் இடம் பெற் றுள்ளன அதன் ஆலோச னைகளும் பெறப்பட்டன என்று டில்லியில் செய் தியாளர்களிடம் பாஜக தேர்தல் அறிக்கைத் தயாரிப் புக்குழுவின் தலைவர் முரளி மனோகர் ஜோஷி விரிவாக ஒப்புதல் வாக்கு மூலம் அளித்துள்ளனர்.

"எந்த விஷயத்தில் இறங்குவதாக இருந்தா லும், அதற்கு முன், ஆர். எஸ்.எஸ்., அமைப்பின், அறிவுரையை கேட்பது எங்கள் வழக்கம். எங்கள் தேர்தல் அறிக்கையில், ஆர். எஸ்.எஸ்., அமைப்பின் தாக்கம் இருப்பதை மறைக்க வேண்டிய அவசியம் இல்லை' என்று பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒரு வரும், அந்த கட்சியின் தேர் தல் அறிக்கை தயாரிப்புக் குழுவின் தலைவருமான முரளிமனோகர் ஜோஷி டில்லியில் செய்தியாளர்களி டம் தெரிவித்துள்ளார்.

அவர் கூறும்போது, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு கலாச்சார அமைப்பு மட்டும் தான். இருப்பினும், தேச பக்தி, பண்பாடு விஷயங் களில் தலைசிறந்து விளங் கும் அமைப்பு அது. அந்த அமைப்பின் தாக்கம் பா.ஜ.க.வில் இருப்பதை பெருமையாகவே கருதுகி றோம். மஸ்தூர் சபா, கிசான் சபா என்று ஆர்.எஸ்.எஸ். சார்ந்த பல அமைப்பு களின் கருத்துகளை கேட்டு த்தான் தேர்தல் அறிக்கை தயாரிக் கப்பட்டது.

எந்தவொரு விஷயத் தில் இறங்குவதாக இருந் தாலும் அதற்கு முன் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கருத்துகளை கேட்பது பா.ஜ.க.வின் வழக்கம் தான். அந்த அமைப்பின் வழிகாட்டுதலை ஏற்பதா, வேண்டாமா என்பதில் இருவேறு கருத்துகள் இருக்க முடியாது. தேர்தல் அறிக்கை உருவாக்கியதி லும் கூட ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தாக்கம் இருப் பதை மறைக்க வேண்டிய அவசியம் இல்லை.

நரேந் திர மோடிக்கு வாரணாசி தொகுதியை நான் விட்டுக் கொடுக்க மறுத்ததாக தகவல்கள் வெளியாயின. நரேந்திர மோடி எங்கள் கட்சியின் பிரதமர் வேட் பாளராக அறிவிக்கப்பட்ட வர். அப்படிப்பட்ட தலை வருக்கு தொகுதியை தர மறுப்பேனா? அவ்வளவு தூரம் நான் என்ன முட் டாளா? என்றார்.

Read more: http://viduthalai.in/e-paper/78652.html#ixzz2yofa4d2A

தமிழ் ஓவியா said...


வெளிப்படைத் தன்மையும், கபடத் தன்மையும்


- குடந்தை கருணா

மதசார்பின்மைக் கொள்கைக்கு ஆதரவாக யார் முன் வந்தாலும் அதற்கு திமுக கை கொடுத்து, கை குலுக்கி வரவேற்கும் என கலைஞர் பொதுக் கூட்டத்தில் கூறினார்.

திமுகவின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுப் பேசும்போது, திமுகவின் தலைவர் கலைஞர் சொன்ன செய்தி, இந்த தேர்தலில், மதசார்பின்மை, சமூக நீதி என்ற இரண்டு கொள்கையையும் முன் வைத்து, திமுகவும் தோழமை கட்சிகளும் தேர்தலை சந்திக்கின்றன. இந்த கொள்கைக்கு ஆதரவாக யார் வந்தாலும் நாங்கள் வரவேற்போம் என்று கூறினார்.

பாஜகவை திமுக விமர்சிக்கவில்லை என சிலர் வேண்டுமென்றே கூறிய நிலையில், தேர்தல் பொதுக்கூட்டங்களில் மோடியையும், பாஜகவையும் விமர்சித்து, கலைஞரும், மு.க.ஸ்டாலினும் பேசி வருகிறார்கள். பாஜகவின் தேர்தல் அறிக்கையில் கூறிய மதசார்பின்மையைக் குலைக்கும் கொள்கைகளை விமர்சித்து திமுக வெளிப்படையாகப் பேசி வருகிறது.

கம்யூனிஸ்டுகளை எந்த காரணமும் சொல்லாமல் கழற்றி விட்ட நிலையில், மதசார்பின்மை கொள் கைக்கு ஆதரவாக கம்யூனிஸ்டுகள் இருக்க வேண்டும் என்றால், அவர்கள் திமுக அணிக்கு ஆதரவு தர வேண்டும் என கலைஞர் உள்ளிட்ட திமுக அணியினர் வேண்டுகோள் விடுத்தனர்.

திமுகவின் இந்த வேண்டுகோள் வெளிப் படையாக, கொள்கை அடிப்படையில் வெளியிடப் பட்ட வேண்டுகோள். மதசார்பின்மை கொள்கைக்கு மிகப் பெரிய ஆபத்து சூழ்ந்துள்ள நிலையில், திமுக மதசார்பின்மைக் கொள்கைக்கு ஆதரவினை வலுப் படுத்துவது இயற்கையானது; நியாயமானது.

அதே நேரத்தில், அதிமுகவின் நிலைப்பாடு எப்படி உள்ளது? கம்யூனிஸ்டுகள் எந்தக் காரணத்துக் காக விரட்டப்பட்டுள்ளார்கள் என்பதற்கு இதுவரை ஜெயலலிதாவோ, அதிமுகவோ எந்த காரணத்தையும் சொல்லவில்லை; பாஜகவோடு, தேர்தல் முடிந்து கூட்டு வைத்துக்கொள்ள அதிமுக முடிவு செய்துதான் இத்தகைய நிலையை எடுத்துள்ளது என இப்போது கம்யூனிஸ்டுகள் காரணம் சொல்கிறார்கள். இதற்கும் ஜெயலலிதா எந்தப் பதிலையும் சொல்லவில்லை;

ஜெயலலிதா பேசும் பொதுக்கூட்டங்களில் மோடி யைப்பற்றியோ, பாஜக பற்றியோ ஒரு விமர்சனம்கூட இதுவரை சொல்லவில்லை; பாஜக தலைவர்களும், மோடி உட்பட, தமிழ் நாட்டில் பொதுக்கூட்டங்களில் பேசும்போது, ஜெயலலிதா வையும் அதிமுகவையும் எந்த விமர்சனமும் செய்யவில்லை;

எதற்கெடுத்தாலும், கலைஞரைக் கேள்வி கேட் கும் ஊடகங்கள், ஜெயலலிதாவின் இந்த மவுனத் தைப்பற்றி அவரிடம் கேள்வி கேட்க தைரியம் இல்லை; மாறாக, சோ ராமசாமி மூலமாக கேள்வி பதில் என்கிற முறையில், பாஜக நிற்கும் இடங்கள் தவிர்த்து மற்ற இடங்களில் பாஜகவோடு கூட்டணி அமைத்திருக்கும் மதிமுக, பாமக, தேதிமுக வேட்பா ளர்களை ஆதரிக்காமல், அதிமுகவை ஆதரியுங்கள்.

அதிமுக வெற்றி பெற்றால், தேர்தலுக்குப் பிறகு மோடிக்கு உதவிகரமாக இருக்கும் என கபடத் தனமாக, சோவை விட்டு இந்த செய்தியை சொல்லி யிருக்கிறது ஜெயலலிதா தலைமையிலான அதிமுக வும், மோடியை முன்னிறுத்தும் பாஜகவும்.

மதசார்பின்மைக் கொள்கையை வலுப்படுத்த வெளிப்படையாக, நேர்மையாக ஆதரவு திரட்டும் திமுக அணிக்கு நாம் வாக்களிக்க வேண்டுமா? அல்லது தங்களோடு கூட்டணி அமைத்துள்ள கட்சி களை காவு கொடுத்து, கள்ள உறவு வைத்துள்ள பாஜக வையும், அதிமுகவையும் ஆதரிக்க வேண்டுமா?

Read more: http://viduthalai.in/page-2/78650.html#ixzz2yofpSnaV

தமிழ் ஓவியா said...


குடும்ப தர்மத்தையே காப்பாற்றாத மோடி நாட்டை எப்படிக் காப்பாற்றுவார்? லாலு பிரசாத் கேள்வி


பட்னா ஏப்.13- தன் மனைவியை மறைத்து, குடும்பத் தர்மத்தையே காப்பாற்றத் தவறிய மோடி நாட்டை எப்படி காப்பாற் றுவார் என்ற வினாவை எழுப்பினார் லாலு பிரசாத். ராஷ்ட்டிரிய ஜனதா தள கட்சிதலைவர் லாலு பிர சாத் - தலைநகர் பாட்னா வில் தனது கட்சி ஆதர வாளர்களுடன் தேர்தல் பற்றிய ஆலோசனைக் கூட் டம் நடத்தினார்.

கூட்டம் முடிந்த பிறகு பத்திரிகை யாளர்கள் பாஜக பிரதம வேட்பாளர் மோடியின் திருமணம் விவாதம் குறித்து கேள்வி கேட்டனர். குடும்ப தர்மம் காப் பாற்றுபவர் தான் தேசத்தின் தலைமை ஏற்க தகுதியான வர் என்றார் லாலு. நேற்று மாலை சமூக இணையதளத்தில் மோடி யின் திருமணவிவகாரம் குறித்து பதிலளித்த லாலு பிரசாத், மோடி போன்ற ஒரு முக்கியமான தலைவர் பல முறை அரசு விண்ணப்பங் களில் தனது திருமணத்தை மறைத்துவிட்டார்.

இம் முறை நீதிமன்ற தீர்ப்பின் படி வேறு வழியில்லாமல் தனக்கு திருமணமானதை யும், தனது மனைவி பெய ரையும் குறிப்பிட்டுள்ளார். குடும்ப தர்மமும் நாட் டைக்காப்பாற்றும் தர்ம மும் ஒன்றுதான் வீட்டிற் குத் தலைவனாக இருக் கிறவர். குடும்பத்தை சரி வர கவனிக்கவேண்டும்;

தனக்கு குடும்பம் உள் ளதையே மறைத்து இத் தனைக் காலம் வாழ்ந்தவர் எப்படி தேசத்தை காப் பாற்றும் பணியை செய்ய முடியும் என்று தெரிவித்தார்.

Read more: http://viduthalai.in/page-2/78645.html#ixzz2yofzABkv

தமிழ் ஓவியா said...


ரஜினியைப் பார்த்த மோடியைப் புறக்கணித்த விஜயகாந்த் பிஜேபி முகாமுக்குள் மோதல்!


டில்லி.ஏப்.14- மோடியின் கவனத்தை அவர் வெற்றிக்காக ஈர்ப்பதில் விஜயகாந்தைவிட ரஜினிகாந்த் இருப்பதாகக் கருதி சென்னை வருகையின்போது, ரஜினி வீட்டுக்கே சென்று சந்தித்தார். இதனால், வருத்தமடைந்த விஜயகாந்த் பாஜகவின் மோடியின் பிரச்சாரக் கூட்டத்தை முழுமையாகப் புறக்கணித்துள்ளார்.

டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் கூறியுள்ளபடி, மோடியின் கடைசி நேர சென்னை வருகைகுறித்து விஜயகாந்துக்கு தெரிவிக்கப்படவில்லை. சனிக்கிழமை அன்று பாஜகவின் தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் பங் கேற்க தன் கட்சியினரை விஜயகாந்த் அனுமதிக்கவில்லை. விஜயகாந்த் கட்சி முதலில் கூட்டணியின் அங்கமாக சேர்ந்துவிட்டபின் அவரைப்பின்பற்றும் ஏராளமானவர் களும் பாஜகவுடன் இணைந்து மாநிலம்முழுதும் செயல்பட்டு வந்துள்ளனர். இந்நிலையில் மோடி வருகை தெரிவிக்கப்படாததோடு, ரஜினிகாந்த்தை சந்தித்த விவகாரத்தால் விஜயகாந்த் கோபத்தில் உள்ளார்.

டைம்ஸ் ஆஃப் இந்தியாவிடம் விஜயகாந்த் கட்சிக் காரர் ஒருவர் கூறும்போது, விஜயகாந்த் எங்கெல்லாம் செல்கிறாரோ அங்கெல்லாம் பிரதமர் வேட்பாளர் மோடிகுறித்து பேசி வருகிறார். ஆனால், பாஜக இவரை விட அடுத்த நடிகருக்கு அதிக முக்கியத்துவம் அளிக் கிறது. ஆனாலும், அந்த நடிகர் பாஜகவுக்கு ஆதரவாக இருப்பதாக கூறவில்லை என்கிறார். மோடிக்கு கெட்ட வாய்ப்பாக ரஜினிகாந்துடனான சந்திப்பு அமைந்துவிட் டது. பாலிவுட் நடிகர் சல்மான்கானை மோடி சந்தித்தது போலவே இதுவும் நடந்துள்ளது. இது குறித்து நட்பு முறையில் சந்தித்ததாகவும், அரசியல் ஏதுமில்லை என்றும் அவர் கூறிவிட்டதால் மோடி ஏமாற்றத்துக்கே ஆளாகி உள்ளார். ரஜினிகாந்த் நன்றாகவே வாழ்த்தினார் என்பதாலேயே அவர் ஆதரித்துள்ளார் என்றால் அதை விட வேறு நகைச் சுவை கிடையாது. இது எதைக் காட்டுகிறது என்று சொன் னால் விஜயகாந்த் கடைசியாக நகைப்புக்கு உள்ளாகிறார் என்பதுதான்.

- -ஃபர்ஸ்ட்போஸ்ட், 14-4-2014, டில்லி

Read more: http://viduthalai.in/e-paper/78672.html#ixzz2yugf8PNM

தமிழ் ஓவியா said...


குஜராத் எல்லா மாநிலங்களுக்கும் பொருந்தாது!


நாட்டில் நரேந்திர மோடி அலை இல்லை முரளி மனோகர் முண்டா தட்டுகிறார்

புதுடில்லி, ஏப்.14-நாட்டில் பாரதீய ஜனதா அலைதான் வீசுகிறது என்றும், நரேந்திர மோடி அலை இல்லை என்றும் முரளி மனோகர் ஜோஷி கூறி உள்ளார்.

பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடியை அறிவிப்பதற்கு அக்கட்சியில் ஆரம்பத்தில் எதிர்ப்பு தெரிவித்த தலை வர்களில் ஒருவர் முரளி மனோகர் ஜோஷி. முன் னாள் மத்திய அமைச்சரான இவர், அக்கட்சியின் தேர் தல் அறிக்கை குழுவின் தலைவராக இருந்து வருகிறார்.

கடந்த 2009-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் அந்த தொகுதியை நரேந்திர மோடிக்கு விட்டுக் கொடுத்துள்ளார். இந்த நிலையில், செய்திச் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட் டியில் முரளி மனோகர் ஜோஷி கூறியதாவது:-

பிரதமர் பதவிக்கு பார தீய ஜனதாவின் பிரதிநிதி யாக நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டுள்ளார். இதனால் அவருக்கு கட்சி தலைவர்கள் ஆதரவு தெரி விக்கிறார்கள். நாடு முழுவ தும் ஆதரவு கிடைத்து வருகிறது.

நாட்டில் தற்போது பாரதீய ஜனதா அலை வீசு கிறது. அதை தனிப்பட்ட நபருக்கு (நரேந்திர மோடி) ஆதரவான அலையாகக் கருத முடியாது. குஜராத் மாநிலத்தில் ஏற்பட்டது போன்ற அபிவிருத்தி எல்லா மாநிலங்களுக்கும் பொருந்தும் என்று சொல்ல முடியாது.

அபிவிருத்தியில் எந் தெந்த மாநிலத்தில் நல்ல அம்சங்கள் இருக்கின்ற னவோ அவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். கட்சியில் இருந்து நீக்கப்பட் டுள்ள மூத்த தலைவருக்கு (ஜஸ்வந்த் சிங்), தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்குவது இல்லை என தீர்மானித்தது மத்திய தேர்தல் கமிட்டி எடுத்த முடிவு அல்ல. அது கட்சி யின் தலைவர் (ராஜ்நாத் சிங்), மற்றும் ராஜஸ்தான் முதல்அமைச்சரால் எடுக் கப்பட்ட முடிவு. இவ்வாறு முரளி மனோகர் ஜோஷி கூறினார்.

அவர் இவ்வாறு கூறி இருப்பது பற்றி பாரதீய ஜனதா மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத்திடம் செய்தியாளர்கள் கருத்து கேட்டனர். அதற்கு அவர், முரளி மனோகர் ஜோஷி என்ன கூறினார் என்பது பற்றி முழுமையாக அறிந்து கொண்ட பின்னர் தான் அதுபற்றி கருத்து தெரிவிக்க முடியும் என்றார்.

Read more: http://viduthalai.in/e-paper/78674.html#ixzz2yugpLe00

தமிழ் ஓவியா said...

புதுமாப்பிள்ளை போல பிரதமராவதற்கு அவசரப்படும் மோடி: சரத் பவார் காட்டம்

மும்பை, ஏப்.14- பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பிரதமராவதற்கு புதுமாப்பிள்ளை போல அவசரப்படுகிறார் என தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் விமர்சித்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் சிந்துதுர்க் அருகே காங்கிரஸ் மூத்த தலைவர் நாராயண் ரானேயின் மகன் நிலேஷ் ரானேயை ஆதரித்து பிரச்சாரம் செய்த தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் பேசியதாவது:- புதுமாப்பிள்ளை எப்படி திருமணம் செய்து கொள்ள அவசரப்படுவாரோ அதைப் போன்று பிரதமராவதற்கு நரேந்திர மோடி அவசரப்படுகிறார். குஜராத்தில் முன்னாள் காங்கிரஸ் முதல்வர்கள் பலர் மோடியை விட நன்றாக ஆட்சி செய்திருக்கிறார்கள். மோடி ஆட்சிக்கு வந்த பிறகு மாநிலத்தின் பொரு ளாதாரம் 18 சதவீதத்திலிருந்து 8 சதவீதமாக குறைந் துள்ளது. குஜராத் மக்களின் கடின உழைப்பிற்கான பலனையும், பெருமையையும் மோடி எடுத்துக் கொண்டு விட்டார். இவ்வாறு அவர் பேசினார்.

Read more: http://viduthalai.in/e-paper/78678.html#ixzz2yuh2di74

தமிழ் ஓவியா said...

பிரதமர் வேட்பாளர் என்ற கருத்து கற்பனையானது: மம்தா

கொல்கத்தா, ஏப். 14-தேர்தல் கருத்துக் கணிப் புகள் பிரதமர் பதவிக்கான போட்டியில் நரேந்திர மோடி முன்னிலையில் இருப்பதாக கூறி வரும் நிலையில் பிரதமர் வேட்பாளர் என்ற கருத்து கற்பனையானது, அரசியலமைப்பில் அது போன்ற ஒன்றே கிடையாது என திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரும், மேற்கு வங்காள முதல்வருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி யில் அவர் தெரிவித்ததாவது:- பிரதமர் வேட்பாளர் என்பது கற்பனையான கருத்து, அது போன்ற எதுவும் அரசியலமைப் பிலேயே கிடையாது. நாடாளுமன்ற ஜனநாயகத்தில், மக்கள் நாடாளுமன்ற பிரதிநிதி களைத் தேர்வு செய்கின்றனர். அந்த நாடாளுமன்ற பிரதிநிதிகள் பிரதமரை தேர்வு செய்கின்றனர்.

ஊழல், குடும்ப அரசியல், மதவாதம், ஆகிய வற்றை எதிர்த்து போராடுவதற்கு தயாராக இருக்கும் கட்சிகள் எங்கள் கூட்டணியில் உள்ளன. ஆனால் இதனை செய்வதற்கு காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க தவறிவிட்டது. காங்கிரஸ் நாட்டை ஆட்சி செய்வ தற்கு தேவையான நம்பகத்தன்மை, பொறுப்பு மற்றும் நன்னடத்தை ஆகிய அனைத்தையும் இழந்து விட்டது. மீண்டும் நம்மால் ஊழல் மிகுந்த அர சையோ, மதக்கலவரங்களை தன்னுடைய முகமாக கொண்டிருக்கும் அரசையோ ஆட்சிக்குக் கொண்டு வர முடியாது. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் போது, காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. இரண்டு கட்சிகள் வெல்லும் இடங்களை கூட்டினால் 273 இடங் களுக்கு கீழேயே இருக்கும். இதுதான் இன்றைய அரசியல் உண்மை. காங்கிரஸ், பா.ஜ.க. இரண்டு கட்சிகளும் இந்தியாவை விற்பதற்கான அரசையே அமைக்கின்றன. காங்கிரஸ் கட்சிக்கு பா.ஜ.க. மாற் றுக்கட்சி அல்ல. இரண்டு கட்சிகளும் ஒன்றுதான். இவ்வாறு அவர் கூறினார்.

Read more: http://viduthalai.in/e-paper/78678.html#ixzz2yuhGf5jk

தமிழ் ஓவியா said...


முதல் அமைச்சர் சொன்னதை அப்படியே செய்த குடிமக்கள்!


அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் தமிழ்நாடு முதல் அமைச்சர் செல்வி ஜெயலலிதா தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் தொடர்ந்து ஒன்றைச் சொல்லிக் கொண்டு வருகிறார். தி.மு.க.வினரை விரட்டி அடியுங்கள் - விரட்டி அடியுங்கள் என்று சொல்லிக் கொண்டு வருவதைப் பொது மக்கள் அப்படியே அட்சரம் பிறழாமல் செய்கிறார்கள்.

தேனியில் அதிமுகவைச் சேர்ந்த அமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தை மக்கள் விரட்டியடித்தனர். கரூரில் தம்பித்துரையை விரட்டியடித்தனர். சொன்னவர் முதல் அமைச்சர் அல்லவா? குடி மக்கள் கேட்க வேண்டாமா? - (பொது மக்கள் கைதட்டி சிரித்தனர்). அதைத்தானே குடி மக்கள் செய்கிறார்கள்!

- ஆற்காடு தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி

Read more: http://viduthalai.in/e-paper/78676.html#ixzz2yuhMvMhQ

தமிழ் ஓவியா said...

அம்பேத்கர் பிறந்த நாள் நமது சூளுரை
திராவிடர் கழகத் தலைவர் பேட்டி

இன்று உலகத் தலைவர் அண்ணல் அம்பேத்கரின் பிறந்த நாள். அவர் வாழ் நாளில் எல்லாம் மதவாதத்தை ஜாதிய வாதத்தை - சமதர்மத்திற்கு எதிரான சக்திகளை எதிர்த்து வந்தவர். தந்தை பெரியாரின் அன்புக்கும் மதிப்புக்குமுரியவர் - அவர்கள் இருவரும் ஒரு நாணயத்தின் இரு பக்கம் போல்.மதவாத சக்திகளும், ஜாதியவாதிகளும், பிற்போக்குவாதிகளும் தலை தூக்க எத்தனிக்கும் இந்தக் கால கட்டத்தில் அம்பேத்கர் அவர்கள் எண்ணங்களை நிறைவேற்றிட இந்நாளில் சூளுரை மேற்கொள்வோம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி.

- சென்னையில் செய்தியாளர்களிடம் 14.4.2014

Read more: http://viduthalai.in/e-paper/78677.html#ixzz2yuharuXT

தமிழ் ஓவியா said...

நீலகிரி தொகுதியில் - அ.தி.மு.க.வுக்கு பா.ஜ.க. ஆதரவு

12.4.2014 அன்று மாலையில் வந்த பத்திரிகை. பா.ஜ.க. கூட்டணியை உருவாக்குகிறேன் என்று ஒருவர் சொன்னார் - தமிழருவி மணியன். அவர் போகாத கட்சியே இல்லை. ஏராளமான கட்சிகளுக்கு ஒரு ரவுண்ட் போய்விட்டார். இனிமேல் போவதற்குக் கட்சியில்லை என்பதால் அவரே ஒரு இயக்கத்தை ஆரம்பித்து நடத்திக் கொண்டிருக்கக் கூடியவர்.

அவர் சொல்கிறார்:

நீலகிரி தொகுதியில் அ.தி.மு.க.வுக்குத்தான் பாரதீய ஜனதா கட்சி ஆதரவு என்று சொல்கிறார்.

ஆகவே, இதிலிருந்து என்ன தெரிகிறது? பெரியார் சொல்வதைப்போன்று பூனைக்குட்டி வெளியே வந்தது. கோணிப்பையில் இருந்த பூனைக்குட்டி வெளியே வந்தது.
பா.ஜ.க. அறிவிப்பா?

இது பாரதீய ஜனதா கட்சியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பா? என்று கேட்கலாம். இவர் (தமிழருவி மணியன்) தானே முன்னே நிற்கிறார். இதை இல்லை என்று அவர்கள் மறுக்கப்பட்டுமே! அவர் சொன்னது சொந்தக் கருத்து என்று மறுக்கவேண்டுமே! இந்தக் கூட்டத்தின் வாயிலாக கேட்கிறோம். இதிலிருந்து நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டும். இரண்டு பேரும் ஒன்றுதான். முன்பாகம், பின்பாகம். முன்பாகம் நாயக்கர் குதிரை; பின்பாகம் ராவுத்தர் குதிரை அவ்வளவுதான். குதிரை ஒன்றுதான்; நீங்கள் தடுமாறக் கூடாது.

இரண்டு பேரிடமும் அதே மதவாதம். ராமர் கோவில் திட்டம். ஒரே பிரச்சினை இருவரிடமும். ஆகவே, இவர்கள் வேறு திட்டம் போட்டிருப்பதை எண்ணி கவலைப்படவேண்டாம்.

Read more: http://viduthalai.in/page-4/78693.html#ixzz2yuiHx75W

தமிழ் ஓவியா said...

சிறுநீரக நோய்களைத் தீர்க்கும் வாழைத்தண்டு

சிறுநீர சம்பந்தப்பட்ட நோய்களால் துன்பப்படுகிற வர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு தான் இருக்கிறது. உடலில் உள்ள கழிவுகள் சிறுநீர் மூலம் வெளியேற்றப்படுகின்றது. சிறுநீரைக் கட்டுப்படுத்து வதாலோ அல்லது நோய் பாதிப்புகளாலோ சிறுநீர் சரிவர உடலை விட்டு வெளியேறாமல் இருக்குமானால், அது பல பிரச்சினைகளைத் தோற்றுவிக்கும்.

வாழைத்தண்டு சாற்றுக்கு சிறுநீரை பெருக்கும் தன்மை உண்டு. எனவே, இதை நீர்ச் சுருக்கு, எரிச்சல் போன்றவை தீர அருந்தி வரலாம். மேலும், இது தேவையற்ற உடல் பருமனையும் குறைக்கும்.

சிறுநீரகத்தில் கல் உருவாவது இன்று மிகப் பரவலாகக் காணப்படும் நோய். அதிக காரமான உணவு, மிகக் குறைவாக நீர் அருந்துதல், வறட்சியான உணவு, மது அருந்தும் பழக்கம், அடிக்கடி சிறுநீரை அடக்குதல் போன்ற காரணங்களால் சிறுநீர் தடைபட்டு சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகின்றது. வாழைத்தண்டை பொரியல் செய்து சாப்பிட்டால் குடலில் சிக்கியுள்ள முடி, நஞ்சு போன்றவை வெளியேறி விடும்

சிறுநீரகக் கற்களை வெளியேற்ற மருந்துகளும், மருத்துவ முறைகளும் இருந்தாலும் நாம் உட்கொள்ளும் உணவு மூலமும் சிறுநீரகக் கற்களை வெளியேற்றலாம். வாழைத் தண்டுக்கு சிறுநீரகக் கற்களை வெளியேற்றும் தன்மை உண்டு. வாழைத்தண்டை சுட்டு, அதன் சாம்பலை தேங்காய் எண்ணெயில் கலந்து பூசிவர தீப்புண், காயங்கள் ஆறும்.

வாழைத்தண்டை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால், ஆரம்ப நிலையில் உள்ள கற்களை மிக எளிதாகக் கரைத்து விடலாம். சிறுநீரகக் கற்கள் உள்ளவர்கள் வாழைத் தண்டை வாரம் மூன்று முறை உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும்.

வாழைத்தண்டை உலர்த்தி பொடியாக்கி தேன் கலந்து சாப்பிட்டு வர காமாலை நோய் குணமாகும். மேலும், கல்லீரல் வலுவ டையும். வாழைத்தண்டு நார்ச்சத்து மிக்க உணவாதலால் அதிக உடல் எடையால் அவதிப்படுகிறவர்கள், நீரிழிவு நோயாளிகள், ரத்தத்தில் கொழுப்புச் சத்து அதிகரித்து இருப்பவர்களுக்கு இது மிகச் சிறந்த மருந்து. இது ரத்தத்தை தூய்மை செய்யும் இயல்புடையது.

Read more: http://viduthalai.in/page-7/78673.html#ixzz2yulSPSj4

தமிழ் ஓவியா said...

உடல் நலத்தைப் பாதுகாக்க உணவில் கவனம் அவசியம்

பரபரப்பான தற்போதைய வாழ்க்கை சூழ்நிலையும், உணவு பழக்க வழக்கங்களும் நம்மை நோயில் தள்ளி விடுகின்றன. உணவு முக்கியம்தான். ஆனால், எது நல்லது என்பதை உணர்ந்து தேர்ந்தெடுத்து உண்பது சிறந்தது. பல ரெடிமேட் உணவுகள் கெட்டுப் போகாமல் இருக்க பல வேதிப் பொருட்கள் கலக்கப்படுகின்றன.

இவை ஆரோக் கியத்துக்கு உகந்தவை அல்ல. மேலும் இத்தகைய உணவு சாப்பிடும் குழந்தைகளின் ஆரோக்கியம் கெட்டு, படிப்பையும் பாழாக்கி விடுகிறது.

பீட்சா, பாஸ்தா போன்றவை மைதா மாவில் இருந்து தயாரிக்கப்படுபவை. ருசிக்காக இவற்றை எப்போதாவது சாப்பிட்டாலும், இவற்றுக்கு பதிலாக கோதுமை உணவு களை உட்கொள்ளலாம். இவை சீக்கிரமாக குளுக்கோஸாக மாறாது. எண்ணெய்யில் பொரித்த உணவுகளிலும் சத்து கிடையாது என்பதோடு பல்வேறு சிரமங்கள்தான் மிச்சம்.

ஹைட்ரஜன் செறிவூட்டப்பட்ட எண்ணெய். இது பிஸ்கட்டிலும், பிற நொறுக்குத் தீனிகளிலும் அதிகமாக இருக்கும். உணவுப் பொருள்கள் நீண்ட காலம் கெடாமல் இருக்கவேண்டும் என்பதற்காக எல்லா நிறுவனங்களும் எண்ணெயில் ஹைட்ரஜனை அதிகம் செலுத்துகின்றன.

டிரான்ஸ்ஃபேட் எனப்படும் இதை நம் உடலால் எளிதில் செரிக்க முடியாது. இதை உண்பதால் உடலில் கெட்ட கொழுப்புச் சத்துதான் அதிகம் சேரும். இப்படி அதிகமாகும் கெட்ட கொழுப்பினால், காலப்போக்கில் நாளங்கள் கடினமாகிவிடும். பக்கவாதம், புற்றுநோய் போன்றவை ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. சில உணவுப் பொருள்கள் உங்கள் குழந்தையின் உடல் அமைப்பில் பெரும் பிரச்சினையை ஏற்படுத்திவிடக் கூடும்.

ஒவ்வாமை, ஆஸ்துமா, அலர்ஜி, கிட்னி பாதிப்புகளை ஏற்படுத்தி விடும். நீர்ச்சத்தும் குறையும். இதுபோல் செயற்கை குளிர்பானங்களை தவிர்த்து, பழச்சாறுகளை அருந்துவது உடலுக்கு மிகவும் நல்லது. எந்த அளவுக்கு நொறுக்குத் தீனிகளை குறைக்கிறோமோ அந்த அளவுக்கு ஆரோக் கியம் பாழாகாமல் இருக்கும்.

இவற்றுக்கு பதிலாக பாதாம், அக்ரூட் போன்ற அதிக சத்துள்ள உணவு பொருட்கள், உடனடி சக்தி கிடைக்கும். இந்த கோடை காலத்தில் மிகவும் கவனம் அவசியம். நீர்ச் சத்து மிகுந்த பழங்களை உண்ணலாம்.

Read more: http://viduthalai.in/page-7/78682.html#ixzz2yulq11a7