Search This Blog

15.2.14

காதலர் தினம் - இந்துத்துவவாதிகளின் கண்களில் தான் ஆபாசம்!

காதலர் தினம் 

பிப்ரவரி 14 என்பது உலகம் அறிந்த ஒரு முக்கியமான நாள்; காதலர் தினமாக உலகெங்கும் கொண்டாடப் படுகிறது.

காதல் என்பது உயிர் இயற்கை; அது கட்டில் அகப்படும் தன்மையதோ! என்றார் புரட்சிக் கவிஞர்.

காதல் மனிதர்களிடத்தில் மட்டுமல்ல; எல்லா உயிரினங்களிடத்திலும் இழையும் இயற்கை உணர்வாகும்.

ஜாதி, மதம் இவற்றைக் கடந்தது காதலாகும். இதைப் புரியாத திடப் பொருளான சிலர் காதல் என்றால் ஒரு கெட்ட வார்த்தை என்ற மனப்பான்மையில் உழலுகின்றனர்.

இலக்கியத்தில் காதலை இரசிக்கின்றனர். அதுவே இயல்பாக சமூகத்தில் நடக்கும் பொழுது எண்ணெய்க் கொப்பரைச் சட்டியில் விழுந்தது போல கொதிக்கிறார்கள்.

சங்பரிவார்க் கும்பலைச் சேர்ந்தவர்கள் மிகவும் வெளிப்படையாகவே வெளியில் வந்து வன்முறையில் ஈடுபடுகிறார்கள். இந்நாளில் காதலர்கள் பொது இடங்களில் கூடுவதைத் தவறான பார்வையில் அணுகுகிறார்கள். 

கையில் மஞ்சள் கயிறுகளை எடுத்துக் கொண்டு போய் அந்த இடத்திலேயே தாலியை வலுக்கட்டாயமாகக் கட்டச் செய்கிறார்கள். இது பிற்போக்குவாதிகளின் வன்முறை நடவடிக்கையாகும் இது. வயது வந்த ஓர் ஆண் ஒரு பெண்ணின் உரிமையில் தலையிடும் அத்துமீறிய அதிகப்பிரசங்கித்தனமும் ஆகும்.

இப்படி அநாகரிகமாக நடந்து கொள்கிற இந்த இந்து மதவாதிகள். அவர்கள் கும்பிடும் கடவுள்களே காதல் லீலை களில் ஈடுபட்டுள்ளதை வசதியாக மறந்து விடுகிறார்கள்.

இந்து மதத்தில் முக்கிய கடவுளான கிருஷ்ணன் என்ப வன் யார்?   அவன் ஆபாசமாக நடந்து கொள்வதையே லீலா வினோதம் என்று மதித்துக் கண்களில் ஒத்திக் கொள்ளக் கூடியவர்கள், உயிர்களின் இயல்பான காதல் உணர்வைக் கண்டால் காய்ந்து வீழ்வானேன்?

கம்ப இராமாயணத்தில் சீதையை வருணித்ததை விடவா ஆபாசம் இன்னொரு இடத்தில் வாழ்கிறது?

இராவணன்  வசம் இருந்த சீதையிடம் தனது கணை யாழியைக் கொண்டு போய்க் கொடுக்க ராமன் பிரம்மச் சாரியான அனு மனிடம் சொன்னபோது, சீதையின் அந்தப் புரத்து அழகை எல்லாம் விவரித்துச் சொல்லுகிறானே - அவற்றை எல்லாம் பக்தி ரசமாக எண்ணிக் கண்களில் ஒற்றிக் கொள்ளும் கபோதிகள், வயது அடைந்த ஓர் ஆணும், பெண்ணும் ஒருவரை ஒருவர் விரும்புகின்ற உணர்வை ஒழுக்கக் கேடு என்று சொல்கிறார்கள் என்றால் அப்படி சொல்லுகின்றவர் களின் எண்ணத்தில் இருக்கும் ஒழுக்கக் கேடே இதற்குக் காரணமாகும்.

சுதந்திரமான காதலுக்கு இடமிருந்தால்தான் ஒரு சமூகமே, அறிவு, அன்பு, நாகரிகம், தாட்சண்யம் முதலியவற்றில் பெருக்கமடையும். நிர்ப்பந்தக் காதல் இருக்கும் இடத்தில் மிருகத் தன்மையும், அடிமைத் தன்மையும் தான் பெருகும் (குடிஅரசு 3.11.1929) என்றார் தந்தை பெரியார்.

காதல் சுதந்திரம், கல்யாண ரத்து, விதவை மணம், ஆகிய இம்மூன்றும் இருந்தால் நாட்டில் விபச்சாரம் தானாகவே குறைந்து விடும் என்றும் கூறுகிறார்.

இப்படிச் சொல்லுபவர்கள் ஏதோ ஒழுக்கக் கேட்டை வளர்க்கிறவர்கள் என்றும் அய்வருக்கும் தேவி அழியாத பத்தினி என்று எழுதி வைத்து தெய்வீக முத்திரைகளை அதற்குத் குத்துகின்றவர்கள்தான் ஒழுக்கத்தின் தர்ம கர்த்தாக்கள் என்றும் மதிக்கின்ற ஒரு போலி மனோபாவம் நாட்டிலே பரப்பப்பட்டுள்ளது. விதவைக்குத் திருமண உரிமை இல்லை என்று சொல்லும் நாட்டில் ஒழுக்கம் வளருமா, விபச்சாரம் வளருமா? என்று தந்தை பெரியார் கேட்ட கேள்விக்கு விடை எங்கே?

இந்துத்துவா மத வெறியர்களும், ஜாதி வெறியர்களும் காதல் திருமணங்களை எதிர்ப்பதற்கு முக்கிய காரணம், இத்தகைய காதல் திருமணங்களால் மதங்களும், ஜாதி களும் உடைந்து போகின்றனவே - அவற்றைப் பொறுக்க மாட்டாத ஆற்றாமையும், ஆத்திரமும்தான்.  காதல் திருமணத் தம்பதியர்களிடையே விட, பெற்றோர்கள் பார்த்து ஏற்பாடு செய்யும் தம்பதிகளிடையே தான், விவாக ரத்து அதிகமாக உள்ளது என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றனவே - இதற்கு என்ன பதில்?

உலகெங்கும் காதலர் தினம் கொண்டாடப்படுகின்றது. காதலர்கள் ஒருவருக்கொருவர் பரிசுகளைக் கொடுத்துத் தங்கள் அன்பினைப் பரிமாறிக் கொள்கின்றனர். அந்த நாடுகளில் எல்லாம் இதனைத் தவறான கண் ணோட்டத்தில் பார்ப்பதில்லை; இங்குள்ள இந்துத்துவவாதி களின் கண்களில் தான் ஆபாசம் குடி கொண்டு இருக்கிறது.

நவராத்திரி நாள்களில் குறிப்பாக மும்பை நகரில் அதிக எண்ணிக்கையில் திருமணம் ஆகாத பெண்கள் கர்ப்பம் தரிக்கிறார்கள் என்ற குற்றச்சாற்று ஆதார பூர்வமாக உள்ளதே - நவ ராத்திரிப் பண்டிகையைத் தடை செய்யக் கோருவார்களா? காதலர் தினத்தன்று காவிகள் கலாட்டா செய்வார்களே யானால் அவர்களுக்குத் தக்க வகையில் பாடம் கற்பிப்பது அவசியமாகும்.

                 --------------------------”விடுதலை”  தலையங்கம் 14-22014

28 comments:

தமிழ் ஓவியா said...


மாஸ்கோ சென்றார்

தந்தை பெரியார் அவர்கள் ஒரு வரலாறு. அந்த வரலாற்று நாயகர் வரலாறு படைத்த சோவி யத் ருசியாவிற்குள் காலடி வைத்த வரலாற்று குறிப்பு நாள் இந்நாள் (1932). எத்தனையோ தலைவர் கள், அரசியல் வாதிகள் ருசியா சென்று வந்து இருக்கலாம்;

ஆனாலும் தந்தை பெரியார் 82 ஆண்டு களுக்கு முன்பாகவே - போக்குவரத்துத்துறை வளர்ச்சி பெறாத அந்தக் காலகட்டத்தில் அய்ரோப் பிய நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டது சாதாரணமானதா? மூன்று மாதங்கள் ருசியாவில் தங்கி இருந்து பல வர லாற்றுச் சிறப்புமிக்க இடங்களையெல்லாம் பார்வையிட்டார். அவரது மொழி பெயர்ப்பாளராக பெண் ஒருவரை ருசியா அரசு ஏற்பாடு செய்து கொடுத் தது.

ருசியாவில் மே தினத் தன்று அந்த நாட்டின் பிரதமரான காலினின் பங்கேற்ற அரசு விழாவில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட ருசிய மக்கள் குழுமியி ருந்து மே தினத்தை மேன்மைமிக்க நாளாகக் கொண்டாடுகின்றனர். பல மாநில மக்களும் 6 மைல் அளவுக்கு ஊர்வலமாக வந்து லெனின் கிராட்டில் லெனின் உடல் பாதுகாக் கப்பட்டுள்ள இடத்தில் கூடுகிறார்கள். சாலையின் இரு ஓரங்களிலும் மூட நம்பிக்கைகளை முறிய டிக்கும் காட்சிகளும் மத குருக்களின் முகமூடி களைக் கிழிக்கும் அறிவுப் பூர்வமான காட்சிகளும் அணி செய்யப்பட்டதை யெல்லாம் தந்தை பெரி யார் கூறுகிறார்.

மத வாதிகள் எப்படியெல்லாம் மக்களைச் சுரண்டுகிறார் கள் என்பதுபற்றி எல்லாம் இரு மருங்கிலும் விளக்கக் காட்டுகளாம்! (இன்று அங்கு அவை எல்லாம் தலைகீழாக மாறியிருக் கின்றன என்பது வேறு சங்கதி!) அந்த மே தினத்தில் இதுவரை வராத இந்தியாவிலிருந்து சிறப்புப் பிரதிநிதிகள் இங்கு வந்துள்ளனர் என்று கூறி தந்தை பெரியாரும், எஸ். இராமநாதனும் அறிமுகப்படுத்தப்பட்டனர். இருவரும் எழுந்து நின்று தலையை உயர்த்தி அந்த மரியாதையை ஏற்றுக் கொண்டனர். ருசிய அரசின் அதிகாரப் பூர்வ இல்லமான கிரம்ளின் மாளிகையில் வெளி நாடுகளிலிருந்து மே தினத்துக்காக ருசியாவுக்கு வந்திருந்த பெரியார் பேராளர்களுக்கு விருந் தளித்து உபசரிக்கப்பட்டது.

அதில் தந்தை பெரியாரும், எஸ். இராமநாதனும் பங் கேற்றனர். அந்நிகழ்ச்சி யில் கம்யூனிஸ்டுக் கட்சித் தலைவரும், சோவியத்துப் பிரதமருமான காலினின் பங்கு கொண்டு தந்தை பெரியாரிடம் கை குலுக் கினார்.

ருசியா சென்று வந்த பிறகு ஈரோட்டில் கூடி சமதர்மத் திட்டத்தை வகுத் தார் தந்தை பெரியார் என்றாலும், எனது நீண்ட கால கருத்துக்களுக்கும், சிந்தனைகளுக்குமான செயல் வடிவத்தை ருசியா வில் கண்டேன் என்றே குறிப்பிட்டுள்ளது குறிப் பிடத்தக்கதாகும்.

- மயிலாடன்

Read more: http://viduthalai.in/e-paper/75253.html#ixzz2tLF14EKa

தமிழ் ஓவியா said...


முட்டாள்தனம் உனக்கு மட்டும்தான் சொந்தமா?

இஸ்ரேலில் கன்னி மேரி சிலை ஒன்று பேசிய தாக வந்த தகவல் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. இஸ்ரேலின் வடக்குப் பகுதியில் லெபனான் எல் லையை ஒட்டியுள்ள டர்ஷிஹா என்ற சிறிய நகரத்தில் ஒசாமா கவுரி என்ற குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவரது வீட்டின் வரவேற்பறையில் உள்ள கன்னி மேரி சிலை சமீப காலங்களாக பளபளப் புடன் இருப்பதை, மனைவி அமிரா பார்த்துள்ளாராம்.

இதனை சுத்தம் செய்த சிறிது நேரத்திற்கெல்லாம் மீண்டும் அந்த சிலையில் எண்ணெய்த் தன்மை தென்பட்டுள்ளதாம். அத்துடன் கன்னி மேரி சிலை தன்னிடம் பேசியதாகவும், தன்னை பயப்பட வேண்டா மென்று கூறிய தாகவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இந்தத் தகவல் வெளியே கசிந்து விடவே, நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு வந்து பார்வையிடுகின்றனர்.

மேலும் சிலையின் கன்னத்தில் ஒரு கண்ணீர் துளி திரண்டு வெளிப்பட்டதாகவும், கடந்த வாரம் மட்டும் 2,000க்கும் மேற்பட்டோர் வந்து இந்த சிலையை பார்த்து சென்றுள்ளதாகவும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர் என்பதுதான் இந்தச் செய்தி. இது போன்ற மூடநம்பிக்கைகளைப் பரப்புவது எல்லா மதத்திலும் உண்டு;

ஒரு சில நாள்களில் வந்த இடம் தெரியாமல் போய் விடும். சென்னையில்கூட சிலுவைக் குழந்தை என்று ஒரு புரூடா கிளம்பி சில நாள்களில் கப்சிப்! பிள்ளையார் பால் குடிக்கிறார் என்று புரளி கிளப்பி விடப்படவில்லையா? ஆர்.எஸ்.எஸ். காரர்களும் சந்திராசாமியும் சேர்ந்துதானே அந்தப் பித்தலாட் டத்தை அரங்கேற்றினர். பிள்ளையார் கொழுக்கட்டை தின்பதாக நிரூபித்தால் ஒரு லட்சம் ரூபாய் பரிசு என்று சென்னை அண்ணா சாலையில் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் டாம் டாம் அடித்தாரே!

இதுபோன்ற வெளி நாட்டுத் தகவல்களை தந்தை பெரியாரிடம் யாராவது சொன்னால் முட்டாள்தனம் என்பது உனக்கு மட்டும்தான் சொந்தமா? என்று கேட் பார். அதுதான் இப்பொழுது நினைவிற்கு வருகிறது.

மதம் என்றாலே அற்புதங்களைக் கிளப்பி விட்டு, அதை நம்பும் பாமர மக்களின் முட்டாள் தனத்தில்தானே உயிர் வாழுகிறது!

Read more: http://viduthalai.in/e-paper/75257.html#ixzz2tLFBwFNG

தமிழ் ஓவியா said...


வளர்கிறது

நீ இன்ன காரியம் செய்தால், உன் பாவம் மன்னிக்கப்படும்; பரிகாரமாகி விடும்; நீ பாவமற்றவனாக ஆகி-விடுவாய் என்று சொல்வதால் ஒழுக்கக்கேடே வளர்கிறது.
- (விடுதலை, 23.8.1961)

Read more: http://viduthalai.in/page-2/75259.html#ixzz2tLFp2cbF

தமிழ் ஓவியா said...


ஓராண்டில் நூறாண்டுச் சாதனை?


- குடந்தையான்

தமிழக அரசின் வரவு செலவு கணக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வரியில்லா பட்ஜெட் என பெருமை யோடு கூறப்பட்டுள்ளது. ஆனால், தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 2012-13 ஆண்டில் 4.14 விழுக்காடு தான்.

இது இந்திய அளவின் 4.9 விழுக் காட்டை விட குறைவு. இதற்கு முன்னர் ஜெயலலிதா முதல்வராக இருந்த 2005-06 ஆண்டில் தான் இந்த நிலை இருந்தது.

கலைஞர் தலைமையிலான திமுக ஆட்சியில் ஒட்டு மொத்த பொருளா தார வளர்ச்சி (GDP) 2009-10-ல் 10.8 விழுக்காடாகவும், 2010-11-ல் 13.12 விழுக்காடாகவும், நாட்டிலேயே முன்னணி மாநிலமாக திகழ்ந்தது. ஆனால், ஜெயலலிதா தலைமையி லான அதிமுக ஆட்சியில், பொருளா தார வளர்ச்சி 2011-12-ல் 7.42 விழுக் காடாக குறைந்து, தற்போது 4.14 விழுக்காடாக வீழ்ச்சியடைந்துள் ளது. தமிழகத்தில் நிலவும் மின் வெட்டின் காரணமாக, தொழில் துறை கடுமை யாக பாதிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்தப் பிரச்சினையை, அரசு முறை யாக எதிர்கொள்ள வில்லை. அவ்வாறு செய்திருந்தால், குறு, சிறு தொழில் முனைவோருக்கு உதவியாக இருந் திருக்கும்; இந்த அளவுக்கு வீழ்ச்சி இருந்திருக்காது என மத்திய அரசின் திட்டக்குழு உறுப்பினர் அபிஜித் சென் கருத்து தெரிவித்துள்ளார். இத்தகைய பொருளாதார வீழ்ச்சி காரணமாக, தமிழ் நாட்டின் வேலை வாய்ப்பும் பெருமளவு பாதிக்கப்பட் டுள்ளது.

இந்த விஷயங்களையெல் லாம், இங்கே உள்ள ஊடகங்கள் எதுவும் விவாதிப்பது இல்லை; தங் களை நடு நிலை ஊடகங்கள் என கூறிக்கொண்டு, கருத்துத் திணிப்பை அரசுக்கு சாதகமாக வெளியிடுவதில் மிகுந்த அக்கறையோடு செயல்படு கின்றன.

தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி, இந்த அளவுக்கு, இந்தியா வின் மற்ற மாநிலங்களைக் காட்டி லும், மிக மோசமான வீழ்ச்சியை அடைந்துள்ளது பற்றி, தமிழக நிதி அமைச்சர் கண்டு கொள்ள வில்லை; ஆனால் என்ன? ரூ.200 கோடிக்கு, மாடு வாங்கவும், ஆடு வாங்கவும் நிதி ஒதுக்கியுள்ளார். ஆடு, மாடு மேய்த்த நம் திராவிடர்கள், கல்வி கற்று மேம்பாடு அடைய வேண்டும் என பெரியார் போராடினார்.

நீதிக்கட்சியும், காமராசரும், மக்கள் கல்வி கற்று முன்னேறிட திட்டங்கள் தீட்டினர். ஆனால், அம்மையார் ஆட்சியில் மீண்டும் மாடு, ஆடு மேய்த்திடுவது தான் வளர்ச்சி எனக் கருதி, நிதி ஒதுக் கப்பட்டுள்ளது. ஓராண்டில், நூறாண்டு சாதனை என்பது இது தானோ?

Read more: http://viduthalai.in/page-2/75269.html#ixzz2tLFxD3bP

தமிழ் ஓவியா said...


ஜனநாயகம் படும் பாடு: மக்களவையில் மிளகு ஸ்பிரே அடித்து எம்.பி.கள் அமளி


புதுடில்லி, பிப்.14- கடும் அமளி, மோதலுக்கு இடையே மக்களவையில் தெலங்கானா தனி மாநில மசோதாவை மத்திய அரசு நேற்று தாக்கல் செய்தது. இதை தடுப்பதற்காக காங்கிரஸ் எம்.பி. ராஜகோபால் மிளகு ஸ்பிரே அடித்ததால் உறுப்பினர்களுக்கு கண் எரிச்சல், இருமல் ஏற்பட்டது. மைக், டேபிள் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டது. ராஜகோபால் தாக்கப்பட்டார். ஒரு எம்.பி கத்தி வைத் திருந்ததாகவும் சர்ச்சை எழுந்துள்ளது. மொத்தத்தில் நேற்று நாடாளுமன்றம் கொந்தளிப்பான சூழ்நிலையை சந்தித்தது. நேற்று காலை வழக்கம் போல் மக் களவை தொடங்கியதும் சீமாந்திராவை சேர்ந்த எம்.பி.களும் வழக்கம்போல் மசோதாவை எதிர்த்து அமளியில் ஈடுபட் டனர். இதனால் அவையை பகல் 12 மணி வரை ஒத்திவைப்பதாக மக்களவைத் தலைவர் மீரா குமார் அறிவித்தார். 12 மணிக்கு அவை மீண்டும் கூடியபோது, தெலங்கானா மசோதாவை தாக்கல் செய்வதற்கான அறிவிப்பு திடீரென வெளியிடப்பட்டது.

மசோதாவை தாக்கல் செய்யும்படி மத்திய உள்துறை அமைச்சர் சுசில் குமார் ஷிண்டேவுக்கு மக்களவைத் தலைவர் அழைப்பு விடுத்தார். இதனால், அவையில் பரபரப்பு ஏற்பட்டது. சீமாந் திரா எம்.பி.கள் அவையின் மய்யப்பகுதி யில் அமளியில் ஈடுபட்டனர். ஷிண் டேவுக்கு பாதுகாப்பாக காங்கிரசை சேர்ந்த ராஜ் பப்பர், அசாருதீன், லால் சிங் உள்ளிட்டோர் நின்றனர். மசோதாவை தாக்கல் செய்ய விடாமல் தடுக்க, சீமாந்திராவை சேர்ந்த காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் எம்.பி.கள் முயன்றனர். இதனால், அவையே போர்க்களம் போலானது.

கட்சியில் இருந்து நீக்கப்பட்ட சீமாந் திரா எம்.பி.களில் ஒருவரான லகடபதி ராஜகோபால், மக்களவைத் தலைவரின் இருக்கைக்கு கீழே உள்ள மக்களவை செயலாளரின் மேஜை மீது போடப்பட் டுள்ள கண்ணாடியை கையால் அடித்து நொறுக்கினார். தெலுங்கு தேசம் எம்.பி. யான வேணுகோபால் ரெட்டி, மக்கள வைத் தலைவரின் மேஜையில் இருந்த மைக்கை உடைக்க முயன்றார். பின்னர், மக்களவைத் தலைவர் மேஜை மீது வைக்கப்பட்டிருந்த காகிதங்களை எடுத்து கிழித்து வீசினார்.

மிளகு ஸ்பிரே...

இவர்களின் வன்முறையை தடுக்க காங்கிரசை சேர்ந்த எம்.பி.களும், மற்ற கட்சி எம்.பி.களும் முயன்றனர். ஆனால், அவர்களையும் தாக்க ராஜகோபாலும், வேணுகோபாலும் முயன்றனர். அந்த நேரத்தில் தனது இடுப்பில் மறைத்து வைத்திருந்த மிளகு ஸ்பிரேவை எடுத்து, தனக்கு எதிரே இருந்த மற்ற கட்சி எம்.பி.கள் மீது ராஜகோபால் அடித்தார். அதன் நெடி மிகவும் காட்டமாக இருந் தது. மேலும், ராஜகோபால் அதை ஸ்பிரே செய்த சில நொடியில், அவை முழுவதும் பரவியது. இதனால் எம்.பி.களுக்கு கண் எரிச்சல், தொடர் இருமல், மூச்சுத் திண றல் ஏற்பட்டு மிகவும் அவதிப்பட்டனர். உடனே, நாடாளுமன்ற மருத்துவர்கள் அவைக்கு ஓடி வந்து அவர்களுக்கு சிகிச்சை அளித்தனர். பல எம்.பி.களுக்கு கண் எரிச்சல் ஏற்பட்டு கண்ணீர் பீறிட்டு வந்தது. அவர்கள் அவைக்கு வெளியே ஓடினர். அதேபோல், செய்தி சேகரிப்பதற் காக அவையின் மேல் பகுதியில் அமர்ந் திருந்த பத்திரிகையாளர்களுக்கும் இத னால் பாதிப்பு ஏற்பட்டு வெளியே ஓடினர்.

தமிழ் ஓவியா said...

பாதிக்கப்பட்ட எம்.பி.கள்

இதனால், அவையே களேபரமானது. பாதிக்கப்பட்ட எம்.பி.கள் 4 ஆம்பு லன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அதே நேரம், ஸ்பிரே அடித்த ராஜகோபாலை சில எம்.பி.கள் அடித்து கீழே தள்ளினர். இதை பார்த்ததும் அவை காவலர்கள் ஓடி வந்து ராஜ கோபாலை காப்பாற்றி, மக்களவை தலைவர் அறைக்கு பாதுகாப்பாக அழைத்து சென்றனர். இந்த சம்பவங்கள் நடந்தபோது பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் அவையில் இல்லை. மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், கபில் சிபல், எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் போன்றவர்கள் இருந்தனர். ஒரு சில நிமிடங்களில் இந்த மோதல் சம்பவம் அரங்கேறி முடிந்தது. அதற்குள் மசோதாவை ஷிண்டே தாக்கல் செய்து முடிந்தார். உடனே, அவை மாலை 3 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மாலை 3 மணிக்கு அவை கூடியதும் அவையில் அமளி ஏற்பட்டது. இதனால், அவையை திங்கட்கிழமை வரை ஒத்திவைப்பதாக. அப்போது அவையை நடத்திய சத்பால் மகாராஜ் அறிவித்தார். இதனால், உறுப்பினர்கள் கலைந்து சென்றனர். கூட்டத்தொடர் முடியும் வரை

16 ஆந்திர எம்.பி.க்கள் தற்காலிக நீக்கம்

தெலங்கானா விவகாரத்தில் பிரச் சினைகளை ஏற்படுத்திய 16 ஆந்திர எம்.பி.கள் கூட்டத்தொடர் முடியும் வரை தற்காலிக நீக்கம் செய்யப் பட்டனர். நாடாளுமன்ற விதி பிரிவு 374ஏ-இன் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் அவைத் தலைவர் மீராகுமார் கூறினார். மக்களவைத் தலை வரை மதிக்காமல் நடந்து கொண்டது, அவையின் சட்டவிதிகளுக்கு இழுக்கு ஏற்படும் வகையில் நடந்து கொண்டது மற்றும் அவையின் நடவடிக்கைகளுக்கு ஊறு விளைவித்தது ஆகிய காரணங் களால் இந்த உறுப்பினர்களை நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்ய இந்த பிரிவு வழிவகுக்கிறது. இந்தக் கூட்டத்தொடர் முடியும் வரை அவர்கள் அவையில் இருந்து விலக்கி வைக்கப்படுவார்கள் என்று மீராகுமார் அறிவித்தார்.

பெயர் விவரம்: நாடாளுமன்றத்தில் இடைநீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக் கப்பட்ட 18 எம்.பி.களின் பெயர்கள் வருமாறு:- எல்.ராஜகோபால் (மிளகுத்தூள் தூவியவர்), சப்பம் அரி (தீக்குளிப்பதாக அறிவித்தவர்), அனந்த வெங்கடராமி ரெட்டி, ராயப்பட்டி சாம்பசிவராவ், எஸ்.பி.ஒய்.ரெட்டி, மகுந்த சிறீவாசலு ரெட்டி, வி.அருணகுமார், ஏ.சாய்பிரதாப், பாபிராஜு கனுமுரி, சுரேஷ் குமார் ஷெட்கர், கே.ஆர்.ஜி.ரெட்டி, கே.சுகேந் தர் ரெட்டி (இவர்கள் அனைவரும் காங்கிரசை சேர்ந்தவர்கள்) எம்.வேணு கோபால ரெட்டி (மைக்கை உடைத்த வர்), டாக்டர் நிரமல்லி சிவபிரசாத், கே.நாராயண ராவ் (மயங்கி விழுந்தவர்) நிம்மல கிரிஸ் டப்பா (இவர்கள் தெலுங் குதேசம் கட்சியை சேர்ந்தவர்கள்) மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரசை சேர்ந்த ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டி, எம்.ராஜ்மோகன் ரெட்டி.

2 பேர் பெயர்கள் நீக்கம்

பின்னர் மாலையில் நாடாளுமன்ற செயலாளர் ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில், சுரேஷ்குமார் ஷெட்கர் (தெலங் கானா ஆதரவாளர்), கே.பாபிராஜு கனுமுரி (சீமாந்திரா பகுதி) ஆகியோர் பெயர்களை இடைநீக்கம் செய்யப்பட் டவர்களின் பட்டியலில் இருந்து நீக்கி உத்தரவிட்டிருந்தார். இதனால் 16 எம்.பி.க்கள் மட்டுமே இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

Read more: http://viduthalai.in/page-2/75262.html#ixzz2tLG6jyW3

தமிழ் ஓவியா said...


சூனியமும் புராதன மதங்களும்!


சூனிய வித்தையை விடுவதென்றால் நமது புண்ணிய புராதன நூல்களைத் தூர எறிவதாகும் என்று சர்.தாமஸ் மோர் கூறினார். என்னுடைய அபிப்பிராயத்தில் அவர் கூறியது முற்றிலும் சரியே.

ஜான் வெஸ்லி என்பவர் பேய் பிசாசுகளிலும், சூனிய வித்தைகளிலும் அதிக நம்பிக்கை கொண்டிருந்தார். இது சம்பந்தமான சட்டங்கள் எல்லாம் இங்கிலாந்தில் ரத்தாகி அநேக ஆண்டுகளுக்குப் பின்னும் இவர் தம் நம்பிக்கையை வற்புறுத்தியிருக்கிறார். இந்த ஜான் வெஸ்லி என்பவர்தான் முதன் முதலாக நூதன மாதிரி கோவில் ஸ்தாபித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நியூ இங்கிலாந்தில் ஒரு பெண் சூனிய வித்தைக்காரி என்பதற்காகவும், அவள் நரியாக மாறினாள் என்பதற்காகவும் குற்றம் சாற்றப்பட்டாள். இந்த நிலையில் அவளைச் சில நாய்கள் கடித்துவிட்டன. நியாய ஸ்தலத்தின் உத்திரவின்படி ஏற்பட்ட மூன்று பேர் கூடிய கமிட்டியார் அவளைச் சோதனை செய்தனர்.

அவர்கள் அவளுடைய ஆடையை விலக்கி சூனியக் காரியின் சூட்சம ஸ்தானத்தைத் தேடினார்கள். அதாவது, அந்த விசேஷ இடத்தில் குண்டூசியால் குத்தினால் வேதனை உண்டாகாதாம். அவள் தான் ஒரு போதும் நரியாக மாறின தில்லை என்று மறுத்தாள். கமிட்டியார்கள் செய்த சிபார்சின் பேரில் அவள் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு தண்டிக்கப் பட்டாள்.

இவ்வட்டூழியங்கள் எல்லாம் (இங்கிலீஷ் சர்ச்சிலிருந்து பிறந்தவர்களான) ப்யூரிட்டன் பிரதர்ஸ் என்று சொல்லப் பட்ட கடவுளை வணங்க தைரியமாக கடல் கடந்து இங்கிலாந்தி லிருந்து அமெரிக்கா சென்று தம் சகோதரர்களைக் கொடுமைப்படுத்திய கிறிஸ்தவர்களால் செய்யப்பட்டன.

கோடைகாலத்தில் பனியுண்டாக்கியதற்காகவும், மூடு பனியால் விளை பொருள்களைக் கெடுத்ததாகவும், புயல், பீர், சாராயம் முதலியன கசப்படைந்ததற்காகவும், ஒரு பாவமும் அறியாத மனிதர்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டனர். எவனும் எந்தக் குற்றத்துக்காவது உள்ளாகி தண்டனை அடையாமல் இருக்க முடியவில்லை. குற்றம் சாட்டப்பட்ட எல்லோரும் தண்டிக்கப் பட்டனர். எல்லோருடைய ஜீவனும் ஆபத்துக் கிடமான தாகவே இருந்தது.

ஒவ்வொருவனும் மற்றவனுடைய இரக்கத்தை எதிர்பார்த்தவனாக இருந்தான். இந்த நம்பிக்கை பேய், பிசாசு உண்டு; சூனிய வித்தை உண்டு; சூனிய வித்தைக்காரர்கள் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கை மிக வேரூன்றி இருந்தபடியால் இதன் உண்மையைச் சந்தேகிக்கும் எவன்பேரிலும் அவ நம்பிக்கை வைக்கப்பட்டது. பேய், பிசாசு இல்லை என்று எவன் சொன்னாலும் அவனைத் தெய்வ நிந்தனையுடைய துஷ்டன் என இகழ்ந்து வந்தனர்.

(கர்னல் ஆர்.ஜி.இங்கர்சால் எழுதிய பேய்-பூதம் பிசாசு என்ற நூலில்) தகவல்: குன்னம் ராமண்ணா

Read more: http://viduthalai.in/page-5/75304.html#ixzz2tLGpVO4S

தமிழ் ஓவியா said...


உண்ணாமுலையாம்! ஞானப்பாலாம்!!


கேள்வி: ஒரு பசு மாடு என்ன போட்டால் கறக்கும்?

உண்மை: கறக்காது!...கறக்காது!!... கன்று போட்டால் தான் கறக்கும்! அதாவது கன்றீனாதது எதுவும் பால் கறக்காது! இதுவே உண்மை நிலை.

அப்படியானால், உண்ணாமுலைகளைச் சுமந்ததாகக் கூறப்படும் பார்வதியின் முலைகள் மட்டும் எப்படிச் சுரந்தன? என்ற கேள்வி எழுவது சகஜமே!

பார்வதிக்கு இரு குமாரர்கள் என்பது புராணக்கூற்று. இரண்டும் கர்ப்பத்திலிருந்து பிறவாதவை ஒன்று பார்வதி தம் உடலழுக்கை உருட்டித் திரட்டிப் பிடித்து வைத்ததே பிள்ளையார்! ஆனை முகன்! ஆனை வாய் உண்ணாமுலை! மற்றது பரமசிவனது விந்து தெரித்து அதாவது பார்வதியின் கர்ப்பத்தில் ஊறாமல் சரவணப் பொய்கையில் விழுந்து ஆறுமுகங்களுடன் பிறந்தது!

அதற்கும் ஆறு கிருத்திகைக் கன்னியர்கள் தான் பாலூட்டியதாகப் புராணமேயொழிய பார்வதி பாலூட்டினாள் என்பதாக இல்லை! ஆறுமுகமும் உண்ணாமுலை! ஆக, இங்ஙனம் அவதரித்த இரு குமாரர்களும் உண்ணாத முலைகளை யுடைய பார்வதிக்கு உண்ணா முலை என்ற ஒரு பெயரும் வந்தது போலும்!

இவ்விருவருக்கும் ஊட்டக் கிடைக்காத முலைப்பால் பாப்பாரச் சம்பந்தனுக்கு மட்டும் ஞானப் பாலாக ஊட்ட எப்படிச் சுரந்தது? சவுண்டி சம்பந்தன், ஞான சம்பந்தன் ஆனது எங்ஙனம்? தேவாரம் பாடியதும் எங்ஙனம்? ஞானப்பால் உண்டதால் பாடினான் என்றால் அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் எப்பால் உண்டு தேவாரங்கள் பாடினார்கள்? என்பன போன்ற பகுத்தறிவுக் கேள்வி களுக்கு என்ன சமாதனம்?

இவைகளைப் பற்றியெல்லாம் சிந்திக்காமல், வயிற்றுப் பிழைப்பாகக் காலட்சேபம் செய்யும் பண்டாரங்கள் ஞானப்பால் உண்டால் பக்திப் பாடல் பாடலாம்; புட்டிப் பால் உண்டால் டப்பா பாட்டுத்தான் பாடலாம்; இக்காலத் தாய்மார்களுக்கு பால் சுரப்பில்லை யென்றும், தாய்க்குலத்திற்கு இழிவையூட்டும் வகையில் உளறித் திரிவதென்றால் எவ்வளவு நெஞ்சுத் திமிர் இருக்கும்? மக்கள் முன்னேற்றத்திற்கு வேண்டிய கருத்துக் களைச் சொன்னால் பயனுள்ளதாகவும், நாடு முன்னேறு வதாகவும் அமையும். பண்டாரங்கள் இனியேனும் அறிவு பெற்றுத் திருந்தட்டும்!

Read more: http://viduthalai.in/page-5/75305.html#ixzz2tLGzOheN

தமிழ் ஓவியா said...


பார்ப்பான் உருவில் கடவுள்!


தோழர்களே! நான் கூறுகிறேன்! ஜாதி ஒழிந்தால் கடவுள் ஒழியும், பார்ப்பான் பூசை செய்யும் கோவிலுக்கு இனி எந்தத் தமிழனும் போகக் கூடாது.

சாமியும் பார்ப்பானுக்கு அனுகூலமாகத்தான் இருக் கின்றது. எப்படி நாம் பார்ப்பானை தொடக்கூடாதோ அதுபோல சாமியையும் தொடக் கூடாது. எப்படி பார்ப்பான் ஜாதியில் உயர்ந்தவனோ அது போல கடவுளும் உயர்ந்தது. பார்ப்பானும் பூணூல் போட்டிருக்கின்றான். கடவுளும் போட்டிருக்கிறது. பார்ப்பானுக்கும் உச்சிக்குடுமி. கடவுளுக்கும் உச்சிக்குடுமி.

பார்ப்பான் நாம் சமைத்ததை உண்ண மாட்டான்; கடவுளும் நாம் சமைத்ததை உண்பது கிடை யாது. பார்ப்பானும் நம் கண்முன் உண்ணாமல் மறைவாக உண்பான்; கடவுளும் அப்படியே. பார்ப்பானுக்கும் பஞ்சகச்சம், கடவுளுக்கும் பஞ்சகச்சம். பாப்பாத்தி தாருபாச்சி கட்டுகின்றாள், கடவுளச்சியும் அப்படியே கட்டுகின்றாள்.

பார்ப்பான் வீட்டிற்குள் நாம் செல்லக்கூடாது. அதுபோல் கடவுள் கோயிலுக்குள் நாம் செல்லக்கூடாது. இப்போது கூறுங்கள் , கடவுளும் பார்ப்பானும் அழிக்கப்பட வேண்டியவர்களா இல்லையா? என்று படித்தவர்களை கேட்கின்றேன்; பக்திமான்களைக் கேட்கின்றேன்; கடவுள் உருவம், குணம் ஒன்றும் இல்லாதவன்;

அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய் வியாபித்திருப்பவன் என்றெல்லாம் கூறிவிட்டு குழவிக்கல்லில் கடவுள் மகத்துவம் இருப்பதாக கூறி பெண்டாட்டியும், பிள்ளைக்குட்டிகளும் கற்பித்திருக் கின்றீர்களே இது எவ்வளவு பித்தலாட்டம்? வெள் ளைக்காரனும், சாயபுவும், கிறிஸ்தவனும் கூறுவதுபோல ஒரு கடவுளா உங்களிடத்தில் உள்ளது?

எனவே, இந்த நாட்டில் கடவுளுக்கும், கடவுள் தன்மைக்கும், மதிப்பிருந்தால் கடவுளர்களின் தாலிகள் அறுக்கப்படுமா? நகைகள் களவாடப்படுமா? அதே இடத்தில் அவர்களை ஏன் கடவுள் பிடித்து நிறுத்தக் கூடாது? இவற்றிலிருந்து கடவுளோ, கடவுள் தன்மையோ இந்த நாட்டில் இல்லாமல் போய்விட்டது என்பதுவும் அத் தனையும் பித்தலாட்டமென்பதுவும் புலனாக வில்லையா?

- தந்தை பெரியார்

Read more: http://viduthalai.in/page-5/75306.html#ixzz2tLH9zYra

தமிழ் ஓவியா said...


பால்ய விவாகம்!


குழந்தை: என்னடி அம்மா! நேற்று என் கழுத்தில் போட்டிருந்த நகையைக் காணோமே! அதை யார் எடுத்தார் கள்?

தாய்: அடிப்பாவி! அது நகையல்ல; தாலி, அதை ராத்திரி அறுத்தாய் விட்டது.

குழந்தை: எனக்குத் தெரியலையே!

தாய்: ராத்திரி 11 மணி இருக்கும்; நீ அப்போது தூங்கி விழுந்து கொண்டிருந்தாய்; ஆதலால் உனக்குத் தெரிய வில்லை. குழந்தை: அதை ஏன் அறுத்தார்கள்?

தாய்: அத்தாலியைக் கட்டின உன் புருஷன் இறந்து விட்டானல்லவா? அதனால் அறுத்து விட்டார்கள்!

குழந்தை: அவன் போனால் போகட்டுமே! வேறு யாரையாவது கட்டச் சொல்றதுதானே! அதை ஏன் எனக்குத் தெரியாமல் கழட்டிக் கொண்டாய்? அதை மறுபடியும் என் கழுத்தில் போட்டால் தான் சாப்பிடுவேன் ஊ! ஊ!! ஊ!!!

குடிஅரசு, 1-4-1928

Read more: http://viduthalai.in/page-5/75307.html#ixzz2tLHIwQ30

தமிழ் ஓவியா said...


எதிலும் லேட் தான்

எதிலும் லேட் தான்

கேள்வி: ஜெயலலிதா பிரதமர் ஆவாரா?

டி.கே. ரெங்கராஜன் எம்.பி: மாநில முதல் அமைச் சராக இருப்பவர் பிரதமராக வர முடியும். அப்படி அவர் பிரதமராக வந்தால் மாநிலங் களில் கஷ்டத்தை உணர்ந்தி ருக்கும் காரணத்தால் அவர் சார்ந்த மாநிலங்களுக்கு மட்டுமல்லாமல், எல்லா மாநிலங்களுக்கும் நன்மை செய்வார். ஆனால் யார் பிரதமர் என்பதை இப்போதே யாராலும் தீர்மானிக்க முடி யாது. (ஜுனியர் விகடன் 12.2.2014 பக்கம் 7)

ரொம்ப சரி.. இந்த ஞானோ தயம் சில ஆண்டுகளுக்கு முன் வந்திருந்தால் கால் நூற்றாண்டுக்காலம் மேற்கு வங்க முதல் அமைச்சராக இருந்த ஆளுமை மிகுந்த ஜோதிபாசு பிரதமராக வந் திருக்க முடியுமே - அந்த முடிவை எடுக்கத் தவறியது ஏன் காம்ரேட் என்று ஒரு கேள்வி நறுக்கென்று தோன் றுகிறது. எதிலும் இவர்கள் லேட்தான்!

கேடு கேடுதான்

வாசிங்டனில் ஒருவர் 87 மணி நேரம் தொடர்ந்து டி.வி. பார்த்து கின்னஸ் சாதனை படைத்ததாக ஒரு செய்தி.

இந்தச் செய்தியால் என்ன பயன்? இது ஒரு சாதனை என்று விளம்பரப்படுத்துவ தால் நல்லதைவிட கெட்டது தான் அதிகம் நடக்கும். லண்டனில் ஒருவன் 87 மணி நேரம் தூங்கினான். ருசியா வில் ஒருவன் 87 மணி நேரம் சாப்பிட்டுக் கொண்டே இருந் தான்; டோக்கியோவில் ஒரு வன் 87 மணி நேரம் சிரித்துக் கொண்டே இருந்தான்; சிறீ ரங்கத்தில் ஒருவன் 87 மணி நேரம் சாமி கும்பிட்டுக் கொண்டே இருந்தான் என்றே வைத்துக் கொள்வோம் அவற் றால் ஏற்படும் பலன் என்ன? படிப்பவனுக்கு நேரக்கேடு - நம்புகிறவனுக்கு அறிவுக் கேடு - கடைப்பிடிக்கிறவ னுக்கு எல்லாமே கேடுதானே!

நீடோ சாகவில்லை

அருணாசலப்பிரதேச காங்கிரஸ் சட்டப் பேரவை உறுப்பினர் நீடோ பவித்ரா வின் மகன் நீடோ டானியா. டெல்லியில் பி.ஏ. படித்து வந்தார். கடந்த மாதம் 30ஆம் தேதி டெல்லி லஜ்பத் நகரில் தனது தோற்றத்தைக் கேலி செய்தவருடன் நடத்திய வாக்கு வாதத்தில் கொல்லப் பட்டார் என்பது எத்தகைய கொடுமை! கொல்லப்பட்ட நீடோவின் குடும்பத்தினர் பிரதமரைச் சந்தித்துத் தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைக்குப் பரிகாரம் கிடைக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

மனிதனுக்குப் பகுத்தறிவுச் சிந்தனை இல்லை என்றால், குரோதம், இன வெறுப்பு, துவேஷம், அடுத்தவரை சீண்டும் கீழ்க் குணம் என்னும் அருவருப் பான மிருகத்தின்மீது தான் சவாரி செய்வான். நீடோவின் தந்தையார் பிரதமரிடம் வைத்த வேண்டு கோள் நீடோவின் சிலை ஒன்றை நிறுவ வேண்டும் என்பது. அப்படி நிறுவப்படும் சிலையின் பீடத்தில் வரலாற் றுக் குறிப்பை பொறிக்க வேண்டும். அப்பொழுதாவது புதிய சிந்தனைகள் பூக்கின் றனவா என்று பார்க்கலாம். அதன் மூலம் அவன் சாக வில்லை. சகலருக்கும் பகுத் தறிவு - மனிதநேயத்தின் அவசியத்தை வலியுறுத்திக் கொண்டு இருப்பானே!

Read more: http://viduthalai.in/e-paper/75347.html#ixzz2tOYb7eyq

தமிழ் ஓவியா said...


எதிலும் லேட் தான்

எதிலும் லேட் தான்

கேள்வி: ஜெயலலிதா பிரதமர் ஆவாரா?

டி.கே. ரெங்கராஜன் எம்.பி: மாநில முதல் அமைச் சராக இருப்பவர் பிரதமராக வர முடியும். அப்படி அவர் பிரதமராக வந்தால் மாநிலங் களில் கஷ்டத்தை உணர்ந்தி ருக்கும் காரணத்தால் அவர் சார்ந்த மாநிலங்களுக்கு மட்டுமல்லாமல், எல்லா மாநிலங்களுக்கும் நன்மை செய்வார். ஆனால் யார் பிரதமர் என்பதை இப்போதே யாராலும் தீர்மானிக்க முடி யாது. (ஜுனியர் விகடன் 12.2.2014 பக்கம் 7)

ரொம்ப சரி.. இந்த ஞானோ தயம் சில ஆண்டுகளுக்கு முன் வந்திருந்தால் கால் நூற்றாண்டுக்காலம் மேற்கு வங்க முதல் அமைச்சராக இருந்த ஆளுமை மிகுந்த ஜோதிபாசு பிரதமராக வந் திருக்க முடியுமே - அந்த முடிவை எடுக்கத் தவறியது ஏன் காம்ரேட் என்று ஒரு கேள்வி நறுக்கென்று தோன் றுகிறது. எதிலும் இவர்கள் லேட்தான்!

கேடு கேடுதான்

வாசிங்டனில் ஒருவர் 87 மணி நேரம் தொடர்ந்து டி.வி. பார்த்து கின்னஸ் சாதனை படைத்ததாக ஒரு செய்தி.

இந்தச் செய்தியால் என்ன பயன்? இது ஒரு சாதனை என்று விளம்பரப்படுத்துவ தால் நல்லதைவிட கெட்டது தான் அதிகம் நடக்கும். லண்டனில் ஒருவன் 87 மணி நேரம் தூங்கினான். ருசியா வில் ஒருவன் 87 மணி நேரம் சாப்பிட்டுக் கொண்டே இருந் தான்; டோக்கியோவில் ஒரு வன் 87 மணி நேரம் சிரித்துக் கொண்டே இருந்தான்; சிறீ ரங்கத்தில் ஒருவன் 87 மணி நேரம் சாமி கும்பிட்டுக் கொண்டே இருந்தான் என்றே வைத்துக் கொள்வோம் அவற் றால் ஏற்படும் பலன் என்ன? படிப்பவனுக்கு நேரக்கேடு - நம்புகிறவனுக்கு அறிவுக் கேடு - கடைப்பிடிக்கிறவ னுக்கு எல்லாமே கேடுதானே!

நீடோ சாகவில்லை

அருணாசலப்பிரதேச காங்கிரஸ் சட்டப் பேரவை உறுப்பினர் நீடோ பவித்ரா வின் மகன் நீடோ டானியா. டெல்லியில் பி.ஏ. படித்து வந்தார். கடந்த மாதம் 30ஆம் தேதி டெல்லி லஜ்பத் நகரில் தனது தோற்றத்தைக் கேலி செய்தவருடன் நடத்திய வாக்கு வாதத்தில் கொல்லப் பட்டார் என்பது எத்தகைய கொடுமை! கொல்லப்பட்ட நீடோவின் குடும்பத்தினர் பிரதமரைச் சந்தித்துத் தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைக்குப் பரிகாரம் கிடைக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

மனிதனுக்குப் பகுத்தறிவுச் சிந்தனை இல்லை என்றால், குரோதம், இன வெறுப்பு, துவேஷம், அடுத்தவரை சீண்டும் கீழ்க் குணம் என்னும் அருவருப் பான மிருகத்தின்மீது தான் சவாரி செய்வான். நீடோவின் தந்தையார் பிரதமரிடம் வைத்த வேண்டு கோள் நீடோவின் சிலை ஒன்றை நிறுவ வேண்டும் என்பது. அப்படி நிறுவப்படும் சிலையின் பீடத்தில் வரலாற் றுக் குறிப்பை பொறிக்க வேண்டும். அப்பொழுதாவது புதிய சிந்தனைகள் பூக்கின் றனவா என்று பார்க்கலாம். அதன் மூலம் அவன் சாக வில்லை. சகலருக்கும் பகுத் தறிவு - மனிதநேயத்தின் அவசியத்தை வலியுறுத்திக் கொண்டு இருப்பானே!

Read more: http://viduthalai.in/e-paper/75347.html#ixzz2tOYs77uC

தமிழ் ஓவியா said...


என்னாகும்?


சகுனம் பார்க்கிறோமே! சாப்பிடும்போது சகுனமோ, ராகு காலமோ பார்க்கிறோமா? நீதிமன்றத்தில் ராகு காலம் பார்த்தால் என்ன ஆகும்? - (விடுதலை, 21.12.1954)

Read more: http://viduthalai.in/page-2/75325.html#ixzz2tOZ7A3rE

தமிழ் ஓவியா said...


48 நாள் மண்டல ஆட்சி


ஜன் லோக்பால் மசோதாவை நிறைவேற்ற முடிய வில்லை என்ற காரணத்தைச் சொல்லி டில்லி முதல்வர் பதவியிலிருந்து விலகி உள்ளார் அர்விந்த் கெஜ்ரிவால். ஊழல் என்கிற ஒரு விஷயத்தை முன்னிறுத்தி அன்னா ஹசாரே துவக்கிய போராட்டத்தின் பயனை, கெஜ்ரிவால் அறுவடை செய்தார்.

ஆம் ஆத்மி கட்சியை துவக்கி, டில்லி ஆட்சியைக் கைப்பற்றினார். பதவி ஏற்ற நாள் முதல், கெஜ்ரிவாலும் அவரது அமைச்சர்களும் அரசாங் கத்தை நிர்வகிக்கும் முறை கடும் விமர்சனத்துக்குள்ளானது. டில்லி காவல்துறை அதிகாரிகளை நீக்கம் செய்திட வேண்டும் என வலியுறுத்தி, நாடாளுமன்றம் முன்பாக முதல்வர் கெஜ்ரிவால் மூன்று நாட்கள் மறியல் நடத்தி, சட்டம் ஒழுங்குப் பிரச்சினை ஏற்படக் காரணமானார்.

கட்சி நடத்த வேண்டிய போராட்டத்தை, மாநிலத் தின் முதல்வர் என்ற தகுதியில் நடத் தினார். கட்சியின் சட்ட மன்ற உறுப் பினர் வினோத் பின்னி, தனக்கு அமைச்சர் பதவி தரவில்லை எனக் கூறி போராட்டம் நடத்தினார்; அரவிந்த் கெஜ்ரிவால்மீது விமர்சனம் செய்து, இறுதியாக கட்சி நடவடிக்கைக்கு ஆளானார்.

சட்ட அமைச்சர் சோம்நாத் பார்தி, சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு, ஆப்பிரிக்க நாட்டிலிருந்து வந்த பெண் கள் மீது வன்முறைத் தாக்குதலில் ஈடு பட்டு, கடும் கண்டனத்திற்கு உள்ளா னார். மக்கள் தம் குறைகளை நேரில் அளித்திடலாம் எனக்கூறியதும், கட்டுக் கடங்காத கூட்டம் கூடியதால், அந்த மக்கள் குறைதீர்க்கும் நிகழ்ச்சியை முற்றாக ரத்து செய்தார் கெஜ்ரிவால். இந்த செயல் அர்விந்த் கெஜ்ரிவாலின் நிர்வாகத் திறமையின்மையை காட்டி யது. இறுதியாக, லோக்பால் சட்டத்தை சட்டமன்றத்தில் நிறைவேற்றுவேன் என சபதம் செய்தார்.

மத்திய அரசின் ஒப்புதலோடு தான் டில்லி சட்ட மன்றத்தில் லோக்பால் சட்டத்தை அறி முகப்படுத்த முடியும் என ஆளுநர், அரசியல் சட்ட விதிமுறைகளைக் கூறியும், அதனை சட்ட ரீதியாக சந்திக் காமல், சட்டமன்றத்தில் மசோதாவை அறிமுகப்படுத்த முயன்று, அதில் தோல்வி கண்டவுடன், முதல்வர் பதவியிலிருந்து விலகி உள்ளார்.

அரசாங்கம் நடத்துவதற்கு, ஊழல் எதிர்ப்பு எனும் ஒற்றை முழக்கம் மட்டுமே போதாது என்பதை 48 நாள்கள் மண்டல ஆட்சி நடத்திய கெஜ்ரிவாலும் அவரது கட்சியினரும் இப்போதாவது உணர்ந்தால் அவர் களுக்கும், நாட்டிற்கும் நல்லது.

- குடந்தையான்

Read more: http://viduthalai.in/page-2/75334.html#ixzz2tOaBnqHI

தமிழ் ஓவியா said...


தர்மத்தின் நிலை


நாட்டுக்கோட்டை நகரத்தாருள் முக்கியஸ்தரான ஸ்ரீமான் சர். அண்ணாமலை செட்டியார் அவர்கள் 20 லட்சம் ரூபாய் கல்விக்காக தர்மம் செய்திருப்பதாக அறிகின்றோம். ஆனால் அத்தருமம் எவ்வளவு தூரம் நாட்டிற்கோ அல்லது பார்ப்பனரல்லாத மக்களுக்கோ உபயோகப்படும் என்பது அறியக் கூடாததாகவே இருக்கின்றது.

தவிர பார்ப்பனர் எந்த ஒரு சிறிய தர்மம் செய்தாலும் அது தங்கள் இனத்தாரைத் தவிர வேறு யாருக்கும் உபயோகப் படாதபடியே செய்வது வழக்கம். ஆனால் பார்ப்பனரல்லாதாரில் பெரிதும் குறிப்பாய் நாட்டுக் கோட்டை நகரத்தார் செய்யும் தருமங்கள் ஒவ்வொன்றும் பார்ப்பனரைப் போல் தமது சமுகத்தாராகிய பார்ப்பனரல்லாதாருக்கே உபயோகப்படும்படி செய்யா விட்டாலும் முழுதும் பார்ப்பனர்களுக்கே உபயோகப் படும்படி செய்வதே வழக்கமாகி வருகிறது.

கோவில்கள், வேதபாடசாலைகள், சத்திரங்கள், அறுபதாம் கல்யாணங்கள் முதலியவைகளில் செலவிடும் பணங்கள் போகும் வழிகளை அறிந்தவர்கள் தான் உண்மையை உணரலாம். அதோடு கூடவே, இப்படிப் பார்ப்பனருக்கே பெரிதும் தருமஞ் செய்த பல நாட்டுக் கோட்டை நகரத்தார்கள் கோடீஸ்வரர்களாயிருந்து பாப்பராகிவிட்டதையும் அறியலாம். இப்படி இவர்கள் பாப்பர்களாவதில் யாரும் வருத்தப்பட நியாயமிருப்ப தாகவும் தெரியவில்லை. ஏனெனில் இவர்கள் எந்த சமூகத்தாரிடம் இருந்து நல்வழியிலேயோ, கெட்ட வழியிலேயோ இப்படி கோடிக் கணக்கான பணம் சம்பாதித்தார்களோ அந்த சமூகத் தாருக்குத் துரோகம் செய்து பார்ப்பனரல்லாத மக்களை வஞ்சித்துப் பிழைக்கும் ஒரு சமூகத்தாருக்கே அதைச் செலவு செய்வதானால் அப்படியவர்கள் தண்டனை அடைய வேண்டியது கிரமமா அல்லவா! ஆதலால் நமது சர். அண்ணாமலை செட்டியார் செய்திருக்கும் இந்த 20 லட்ச ரூபாய் தர்மமானது மேல்கண்ட குற்றத்திற்கு ஆளாகாமல் இருக்கத்தக்க மாதிரியில் தமது தர்மப் பணங்கள் முழுதும் உபயோகப்படும்படியாக தக்க ஏற்பாடும் செய்ய வேண்டும் என்று சர். அண்ணாமலை செட்டியார் நன்மையையும் பார்ப்பனரல்லாதார் நன்மையையும் நமது நாட்டின் நன்மையையும் உத்தேசித்து வேண்டிக் கொள்ளுகிறோம்.

- குடிஅரசு - துணைத்தலையங்கம் - 08.04.1928

Read more: http://viduthalai.in/page-7/75359.html#ixzz2tOaZs1TA

தமிழ் ஓவியா said...

இன்னுமா சந்தேகம்? இரகசியம் வெளியாய் விட்டது

பார்ப்பனர்கள் காங்கிரஸின் பேராலும் தேசியத்தின் பேராலும் ஸ்ரீ வரதராஜுலு போன்ற ஆசாமிகளைச் சுவாதீனம் செய்து கொண்டு பார்ப்பனரல்லாதாருக்குக் கெடுதி செய்து வருவதைப் பற்றியும் சென்ற சட்டசபைத் தேர்தல் முடிந்த வுடன் காங்கிரசுக்கும் தேசியத்திற்கும் விரோதமாய்ப் பொய்க் கால் மந்திரிகளைச் சிருஷ்டித்ததும், அவர்களை ஆதரித்ததும் பார்ப்பனரல்லாதார்களுக்குக் கெடுதி உண்டாகச் செய்யவே என்பதாகவும் பலமுறை எழுதிவந்திருக்கின்றோம். இதற்கு சரியான ருசு கொடுக்க சமீபத்தில் சென்னை சட்டசபையில் விலக்கப்பட்ட மந்திரியாகிய ஸ்ரீமான் ரங்கநாதமுதலியார் சொன்ன வாசகமே போதுமானதென்று நினைக்கின்றோம். அவர் சொன்னதாவது 1926-ல் நாங்கள் மந்திரி பதவிகளை ஏற்றுக் கொண்டவுடன் சில நிபந்தனைகளைப் பூர்த்தி செய்தால் எங்களை ஆதரிப்பதாக காங்கிரஸ் கட்சியாரிட மிருந்து ஒப்பந்தம் வெளியாயிற்று. அந்த ஒப்பந்த நிபந்தனை என்னவென்றால் ஸ்தல ஸ்தாபனங்களுக்கும், கமிட்டி களுக்கும் மற்ற நியமனங் களுக்கும் ஜஸ்டிஸ் கட்சியாரை நியமிக்காமல் இருக்க வேண்டும் என்பது தான், இந்த வாசகம் ஸ்ரீமான் எ. ரங்கநாத முதலியார் அவர்கள் சொன்னதாக 23.03.1928இல் சுதேச மித்திரனிலேயே இருக்கிறது.

இதைக் காங்கிரஸ் கட்சி சட்டசபைத் தலைவர்கள் ஸ்ரீமான்கள் சாமி வெங்கிடாசலமும், சத்தியமூர்த்தியும் சட்ட சபையில் மறுக்க வில்லை என்பதினாலேயே இது உண்மை என்பது ஒரு சிறிதும் சந்தேகமில்லை. இப்படி இருக்க ஜனாப் அமீத்கான் சாயபு காங்கிரஸ் கட்சியாருக்கு அம்மாதிரி நிபந்தனை செய்து கொள்ள யாரும் அதிகாரம் கொடுக்கவில்லை என்பதினா லேயே ஸ்ரீரங்க நாத முதலியார் சொல்வது பொய்யாகி விடுகிறதா? என்பதை வாசகர்களே யோசித்துப் பார்த்துத் தேசியமென்பதும், காங்கிரசென்பதும்பார்ப்பனரல்லாதாருக்கு ஆபத்தா இல்லையா என்பதை முடிவு செய்ய வேண்டுகிறேன்.

- குடிஅரசு - கட்டுரை - 25.03.1928

Read more: http://viduthalai.in/page-7/75360.html#ixzz2tOaqvG00

தமிழ் ஓவியா said...


லோகோபகாரியின் மயக்கம்


31-05-1928 தேதி லோகோபகாரியின் தலையங்கத்தில் மணவயது மசோதாவைப் பற்றி எழுதுகையில் குழந்தை களுக்கு மணம் செய்து வைக்கும் முறையைக் கண்டித்து சில ஆண்டுகளாகவே நாட்டில் கிளர்ச்சி ஏற்பட்டிருக் கின்றது. இது நன்று, ஆனால் இது விஷயத்தில் பொது ஜனங்களுக்கு அறிஞர்களின் பிரச்சாரத்தால் நல்லறிவு தோன்றுமாறு செய்தலே நல்வழியாகும். தற்காலத்தில் இதுமுடியாத காரியமாகத் தோன்றுகிறது. ஆயினும் இவ்விஷயத்தில் அரசாங்கத்தார் சட்டம் போடுதல் பொருத்தமுடைய செயலல்லவென்று நமக்குத் தோன்றுகிறது, என்று எழுதி விடு கின்றது. இப்படி எழுதி இருப்பதானது சீர்திருத்தக்காரருக்குத் தலையையும் அதன் விரோதிகளான பார்ப்பனர்களுக்கு வாலையும் காட்டுவது போல் இருக்கின்றது.

குடிகளால் சரி செய்து கொள்ள முடியவில்லை என்று தன்னாலேயே ஒப்புக் கொள்ளப்பட்டதும் உண்மையிலேயே மனித சமூகத்துக்குக் கேடு உண்டாக்குவதுமான விஷயம் சர்க்காரால் சரி செய்யப்பட நேருவதில் லோகோபாகாரிக்குக்கு உள்ள கஷ்டம் இன்னது என்பது நமக்கு விளங்கவில்லை.

கடைசியாக இந்தச் சட்டம் அமலுக்கு வரும் பொழுது வயது நிர்ணயம் முதலிய விஷயங்களில் பலவித தொல்லை விளையும் என்று எழுதுகின்றது. மனிதன் தன் சொத்தை அடையும் விஷயத்திலும், உத்தியோகம் பெறும் விஷயத் திலும் மற்றும் அனேக விஷயத்திலும் வயது நிர்ணயம் குறிக்கப் பட்டிருக்கின்றது. இவைகளில் என்ன தொல்லைகள் விளைந்து மக்களைக் கெடுத்துவிட்டது என்பது விளங்க வில்லை. வேறு மதஸ்தர்கள் என்பவர்களுக் காகிலும் வயது கண்டு பிடிக்கும் விஷயம் சற்று கஷ்டமாக இருக்கலாம்.

இந்துக்கள் என்போர்களுக்கு அதிலும் பார்ப்பனர்கள் என்போர்க்கு வயது கண்டுபிடிப்பதில் தொல்லை விளைய காரணமில்லை என்றே சொல்வோம். ஏனெனில், அவர்கள் ஜோசியம், ஜாதகம் என்னும் ஒரு வித மூடநம்பிக்கை யுள்ளவர்களானதால் கண்டிப்பாய்க் கணக்கு வைத்திருக்க முடியும். அதோடு சர்க்கார் பிறப்பு இறப்புகளைப் பதிவு செய்து வருவதால் ஜாதகத்தைப் புரட்டி விடுவார்கள் என்கின்ற பயமும் வேண்டியதில்லை.

எனவே இனியாவது லோகோபகாரிச் சீர்திருத்த விஷயங்களில் இம்மாதிரி வழவழப்பையும், இரண்டு பேருக்கும் நல்லவராகப் பார்க்கும் தன்மையையும் விட்டுத் தைரியமாய் ஒரு வழியில் நின்று மக்களுக்கு உதவ வேண்டுமாய் ஆசைப்படுகின்றோம்.

- குடிஅரசு - கட்டுரை - 10.06.1928

Read more: http://viduthalai.in/page-7/75361.html#ixzz2tOaxFC3l

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியார் பொன்மொழிகள்

உங்கள் (தாழ்த்தப்பட்டவர்கள்) தலைமேல் கால் வைத்து ஏறிப் போகிறவர்களுக்கு இடம் கொடுக்காமல் இருப்பீர்களானால் உங்கள் கொடுமை சீக்கிரத்தில் கவனிக்கப்படும். இல்லாவிட்டால் நீங்கள் படிக்கல்லாக விழுந்துகிடக்க வேண்டியதுதான்.

Read more: http://viduthalai.in/page-7/75361.html#ixzz2tOb4QJvR

தமிழ் ஓவியா said...


அருப்புக்கோட்டை சுயமரியாதை கேஸ் விடுதலை


அருப்புக்கோட்டையில் சுகாதார வாரக் கொண் டாட்டம் நடைபெற ஏற்பாடு செய்திருந்த ஒரு கூட்டத்தில் ஒரு பார்ப்பனர் தன்னைத்தானே அக்கிராசனாதிபதியாக தேர்ந்தெடுத்துக் கொண்டு ஆசனத்திலமர்ந்து நடவடிக்கை ஆரம்பிப் பதற்காக முதலில் ஒரு பார்ப்பனரல்லாத வாலிபர் பாட ஆரம்பித்தவுடன் அக்கிராசனத்திலிருந்த பார்ப்பனர் கோபம் கொண்டு முதல் முதல் சூத்திரன் பாடக் கூடாது; பிரா மணன் தான் பாட வேண்டும் என்று சொல்ல, உடனே அங்கி ருந்த கூட்டம் சூத்திரன் என்று சொன்னதற்காக அக்கிரா சனரை மன்னிப்புக் கேட்கும்படி கேட்கவே, அக்கிராசனர் மன்னிப்பு கேட்காததால் கூட்டத்தார் அத்தனை பேரும் சுய மரியாதைக்கு ஜே! ராமசாமி நாயக்கருக்கு ஜே! என்று சொல்லிக் கொண்டு கலைந்து போய்விட்டார்கள். பிறகு எவ்வளவு தூரம் மன்னிப்பு கேட்டுக் கொண்டும் கூட்டம் கூடவே இல்லை. இதனால் ஆத்திரம் கொண்ட ஒரு பார்ப்பன சுகாதார இன்ஸ்பெக்டர் பார்ப்பன போலீசின் உதவி பிடித்து, பல பார்ப்பனரல்லாத வாலிபர்களின் மேல் கேஸ் தொடுத்து, அதாவது அரசாங்க உத்தியோகஸ்தரின் வேலையை செய்ய வொட்டாமல் தடுத்ததாகவும் மற்றும் சிலகுற்றங்களும் சுமத்தி அரஸ்டு செய்து ஜாமினில் விடவும் மறுத்து சிறைச் சாலையில் இரவெல்லாம் அடைத்து வைத்து கேஸ் தொடர்ந்தார்கள். கேசுக்கு மதுரையிலிருந்து வக்கீல்கள் பீசில்லாமல் போய் பல வாய்தாக்கள் ஆஜராகி கேஸ் நடத்தினார்கள். கடைசியில் குற்றவாளிகள் இன்னார் என்று சரிவர அடையாளம் காட்டவே முடியாமல் போய் விட்டது. அப்படி இருந்தும் அதிகாரிகளின் மனப்பான்மையை அறிந்த மேற்படி வாலிபர்கள் கேஸை வேறு கோர்ட்டுக்கு மாற்ற ஆசைப்பட்டார்கள். கடைசியாய்க் கேசு தள்ளுபடியாகி விட்டதாக அருப்புக்கோட்டையிலிருந்து தந்தி வந்திருக்கின்றது.

அனாவசியமாய் ஒரு இரவு முழுவதும் அடைத்து வைத்திருந்ததற்காக போலீசு அதிகாரிகள் மீது நஷ்டத்திற்கு விவகாரம் தொடர வேண்டும் என்கின்ற எண்ணம் அவ்வூராருக்கு இருப்பதாகத் தெரிய வருகின்றது. அதற்காகப் பலர் பொருளுதவி செய்ய முன் வருவதாகவும் தெரிய வருகின்றது. என்றாலும் விடுதலை அடைந்த விஷயத்திற்காக வாலிபர்கள் பதினொரு வரையும் பாராட்டுவதுடன் இந்த கேசுக்குப் பொருள் கருதாது தங்கள் கஷ்ட நஷ்டத்தையும் கருதாது வந்து உதவி செய்த மதுரை வக்கீல்களுக்கு நமது நன்றியறிதலைத் தெரிவித்து கொள்ளுகின்றோம்.

- குடிஅரசு - கட்டுரை - 10.06.1928

Read more: http://viduthalai.in/page-7/75362.html#ixzz2tObCY3eK

தமிழ் ஓவியா said...


எது தமிழ்த் தேசியம்?



சாதியை வளர்க்கும் தேசிய மெதுவும்
தமிழ்த் தேசிய மில்லை - சங்கத்
தமிழ்த் தேசிய மில்லை - இந்து

சாதியைக் காக்கும் எந்தத் தேசியமும்
செந்தமிழ்த் தேசியமில்லை - அதைத்
தமிழர் நேசிப்பது மில்லை!

பாக்கித்தான் வங்கமுள்ளடக்கிய இந்தியா
பழைய தமிழ்மொழியின் வீடு - அதைத்
திராவிட மென்றது வேத ஏடு - அன்றைய

திராவிட மென்ற தனித் தமிழ்ப் பாண்பாட்டை
திரும்பவும் மலரச் செய்வோமே - அதைத் தமிழ்த்
தேசிய மெனவும் சொல்வோமே!

ஆரியர்க்கு முந்திய, ஆரியக் கலப்பற்ற, அதனினு முயர்ந்த நாகரிகம் - அதுவே
உலகத்தின் முதல் நாகரிகம்- என்று

வரலாற்றாளர்கள் வாயாரப் புகழ்ந்த
சிறப்பினையுடைய நாகரிகம் சிந்து வெளித்
தமிழர்கள் வளர்த்த நாகரிகம்!

தமிழை வடக்கே அழித்தபின் ஆரியர்
தென்னகம் நோக்கி வந்தார் - அவர்க்கு
மன்னர்கள் புகலிடம் தந்தார் - இங்கே

தெலுங்கு, கன்னடம், துளு, மலையாளம்
தமிழில் கிளைத்திடச் செய்தார் - தமிழர்மேல்
சாதிமத நஞ்சையும் பெய்தார்!

சாதிமதங்கள் தமிழர்கள் நம்மை
தனித்தனிக் குழுவாய் பிளக்கும் - தினமும்
சண்டை சச்சரவை வளர்க்கும் - அத்தீய

சாதி மதங்களைத் தேசியமெனில் அவை
தமிழரை அடிமையாக்கும் - தமிழ்
நாட்டையும் அழித்துத் தீர்க்கும்

திருத்தணி - குமரி சிறுநிலப் பகுதிக்குள்
தமிழகம் சுருங்கிய தெவரால்? - சாதி
மதங்களை வளர்த்தவர் தவறால்! - அதைத்

தேசிய மென்று கூறுவோர் இன்று
தமிழர்கள் ஒற்றுமை அழிப்போர் - தமிழர்
மொழியையும் பெயரையும் ஒழிப்போர்!



- வீ. இரத்தினம், பெங்களூரு

Read more: http://viduthalai.in/page3/75372.html#ixzz2tRC9gGD8

தமிழ் ஓவியா said...


குஜராத்தில் ரூ.11க்கு மேல் நாள் வருமானம் உள்ளவர்கள் பணக்காரர்களாம்


ஓர் இணையதளத்தில்...

குஜராத்தில் ரூ.11க்கு மேல் நாள் வருமானம் உள்ளவர்கள் பணக்காரர்களாம்


குஜராத்தில் மோடி அரசு சார்பில் கடந்த டிசம்பர் மாதம் அரசின் இணையத்தில் உணவுப் பொருட்களுக்கான மானியம் பெறுபவர்கள் வறுமைக் கோட் டுக்குக் கீழ் இருப்பவர்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது என் கிற அறிவிப்பில் நாள் ஒன்றுக்கு ரூபாய் 10.80க்குள் வருமானம் இருப்பவர்கள் மட்டுமே மான் யத்தில் உணவுப் பொருள் பெற தகுதி உள்ளவர்கள் என்கிற குஜராத் மாநில அரசின் அறிவிப்பு தெரிந் ததே. இந்த அறிவிப்பின்மூலம் குஜ ராத் மாநிலத்தில் உள்ள ஏழை மக்களின் ஏழ்மையைக் கேலி செய்வதாக காங்கிரசு செய்தி தொடர்பாளர் அஜய் மக்கான் கண்டித்துள்ளதும் அறிந்ததே.

இது தொடர்பாக தற்போது புதிதாக தொடங்கப்பட்டுள்ள www.rs11.in என்கிற இணைய தளத்தில் நரேந்திர மோடியின் படத்துடன் கேள்வி பதில் பாணி யில் கருத்துப்படம் வெளியாகி உள்ளது. எந்த அளவில் பணக் காரன் என்பதை கேட்டு, சிப்ஸ் பாக்கெட் ஒன்று வாங்க முடிந்தால் அவன் மிகப்பெரிய செலவாளி என்றும், மாதம் ஒரு முறைக்கு மேல் சிப்ஸ் தின்றால் அம்பானி யுடன் தொடர்பில்லாதவர் என்று சொல்லிவிட முடியுமா? என்று கேட்பதுடன், சிப்ஸ் தின்னும் போது குளிர்பானம் அருந்தினா லும், ஒரே நாளில் இரு வேளை உணவு உண்டாலும் குஜராத் திலேயே அவன்தான் பணக்காரன் என்றும் கூறுவதாக உள்ளது.

மேலும், அவ்விணையத்தில் குஜராத் மாநிலத்தில் உண்மையான வாழ்வாதார நிலை என்பது ரூ.11க்கு ஒரு பாக்கெட் நொறுக்குத் தீனி, ஒரு குவளை தேனீர், பெண்கள் தலையில் போடும் ரப்பர் பேண்ட் மட்டுமே வாங்க முடியும் என் றும், ரொட்டி குருமா, குளிருக்கு சால்வை, மருந்து மாத்திரைகள் என்று மற்ற அத்தி யாவசியப்பொருட்கள் எதுவும் வாங்க முடியாது என்றும் குறிப் பிடப்பட்டுள்ளது. குஜராத்தில் கடும் உழைப்பிற்குப் பிறகு என்னதான் பெற முடியும் என்றால் 250கிராம் சர்க்கரை, இரண்டு முட்டைகள், இரண்டு ரொட்டிகள், 3கி.மீ.தூரத்திற்கு பேருந்தில் பயணம் என்கிற அளவில்தான் முடியும். இணையத்தின் தகவல்.

Read more: http://viduthalai.in/page3/75371.html#ixzz2tRCKTd1z

தமிழ் ஓவியா said...


தேவை சிந்தனை


உலகம தோனறய பனபே மனதன காடுகளல பசசை மாமசம சாபபடடு வாழநது வநதுளளான எனபதை படிததுளளோம. சககமுககக கல மூலமாக நெருபபை உணடாகக சமைதது சாபபடடனா. சைகை மூலமாகவே கருததுப பாமாறறம செயது வநத மனதன சல நூறறாணடுகளுககுப பனனரே பேசவும எழுதது வடிவைக கணடுபடிததும அசசுகள செயது படிககவும கறறுளளான.

உலகம தோனற பல லடசம கோடி ஆணடு களுககுப பனபே மனதன படிபபறவு பெறறு மனதக கடவுளகளான சவன, கருஷணன, ராமன முதலய வை கறபககபபடடு உளளன. கடவுளதான உலகததை உணடாககனான எனபது பததலாடடம அலலவா?

கடவுளுககு இவனைப போலவே மனைவகள, வைபபாடடிகள, பளளைககுடடிகளை வைதது அவைகளுககுத தனததனயாக இடமும, குடடித தேவாகளை உணடாகக அவைகளடம இவன வைததருநத கதத, வேல, அமபு முதலயவைகளை நடடு மககளைப பயமுறுதத தொழவைததுப பழைபபைத தேடிக கொணடுளளான.

மேலும இவாகளைப போலவே நாமம போடும / போடாத, மாமசம சாபபடும / சாபபடாத கடவுள களைக கணடெடுததுளளான. அதனபடியே இனங களையும பததுளளான. மனதன கடவுளகள பறந தநாளைக கொணடாடுவதால மனதன தான கடவுளைக கறபததுளளான எனபது உறுதயாகறது. மனதன கறபனைக கடவுளகளைக கறபககும முனனா கடவுள எனபதே இலலை. கடவுள ஒருவன இருநதருநதால மனதால இததனை நறம உயரம பணபுகள வேறுபாடுகள இருநதருககுமா? அதே போல நோயநொடிகள கூன, குருடு, செவடு போனற ஊனஙகள வநதருககுமா?

மனதனால கணடுபடிதத மனசாரம, எலகட ரானகஸ, தொலைககாடச, கணன, வமானஙகளை கடவுள அளககவலலை ஏன? ஆண, பெண கலவ செயயாமலேயே குழநதை பறகக வைததுளளான. ஆகவே கடவுளை மனதன தான கறபததுளளான.

காடடில வேடன கருஷணனைக கொனறுளளான. ராமன - லடசுமணன சரயூ நதயல வழுநது தற கொலை செயது கொணடுளளனா. மனதன இவை களை எலலாம தொநது கொணடால தான வாழ முடியாது எனககருதயே 19-ஆம நூறறாணடுவரை மககளுககுக கலவயைக கொடுககவலலை. சுதந தரததுககுப பன பளளகளை மூடியும முதலமைசசா ராஜாஜ காலததல பாதநேரம படிபபும பாதநேரம அபபனன குலததொழலைச செயயச சொனனா. அதுவரை சரசுவத வரவலலை.

தநதைபொயா இலலை எனறால காமராஜா வநது பளளககூடஙகளை தறககவடடிருககமாடடாகள. தறபோதும பறபடுததபபடட தாழததபபடட மககள முனனேறககூடாது எனபதறகாக வேலைவாயபபல தடை. கடவுள சலையை செயதும கோயலகள கடடி யவனை சலையைத தொடடால தடடு, அசசனை செயய கூடாதென மனுநதககதையைச சொலல உசசநதமனறததல தடைபெறறு உளளாகள.

ஓராணடு கோயலுககுப போய கோககை வைதது எதுவும நடவாதபோது மணடும மணடும அஙகு செனறு வருவதால எனன பயன? பணமும நேரமும வரயம, உன வாழநாளல இழபபைததானே பெறுகறாய.

சநத! செயலபடு. -_

- வணங்காமுடி, தருமபுரி

Read more: http://viduthalai.in/page4/75373.html#ixzz2tRCWfGfo

தமிழ் ஓவியா said...


கடவுளை நம்புவோர் எத்தனை பேர்?

மக்கள் எந்த அளவுக்குக் கடவுள், மத நம்பிக்கை கொண்டுள்ளனர் என்பது பற்றிய ஒரு கருத்துக் கணிப்பு வெளி யானது. அதில், நீங்கள் எந்த அளவு மதப் பற்றாளராக இருக் கிறீர்கள்? என்ற கேள் விக்கு, ஓரளவு பற்று கொண்டுள்ளேன் என 49 சதவிகிதம் பேரும், எனக்கு மதப் பற்று இல்லை என 14 சதவிகிதம் பேரும், அதிக பற்று கொண்டுள்ளேன் என 45 சதவிகிதம் பேரும் பதிலளித்துள்ளனர்.

வழிபாட்டிடத்திற்கு அவ்வப்போது செல்வீர்களா? என்ற கேள்விக்கு, வாரத் தில் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை செல்வேன் என 31 சதவிகிதம் பேரும், வாரம் ஒரு முறை செல்வேன் என 38 சதவிகிதம் பேரும், மாதத்திற்கு ஒரு முறை செல்வேன் என 18 சதவிகிதம் பேரும் மாதம் ஒரு முறையாவது செல்வேன் என 9 சதவிகிதம் பேரும், இரு வாரத்திற்கு ஒரு முறை செல்வேன் என 4 சதவிகிதம் பேரும் கூறியுள்ளனர்.

இன்றைய நாள்களில் இளைஞர் களுக்கு கடவுள் நம்பிக்கை உள்ளதா? என்ற கேள்விக்கு, சிலருக்கு உள்ளது என 45 சதவிகிதம் பேரும், அதிக மானவர் களுக்கு உள்ளது என 34 சதவிகிதம் பேரும், மிகச் சிலருக்கே உள்ளது என 21 சதவிகிதம் பேரும் தெரிவித்துள்ளனர்.
18 வயது முதல் 45 வயது வரை யுள்ள இருபாலரையும் சேர்த்து 220 பேர்களிடம் கேட்கப்பட்ட கேள்வி களுக்கான பதில் இது.

- ஆதாரம்: தி இந்து, 16.9.2005

Read more: http://viduthalai.in/page5/75377.html#ixzz2tRDGiA4v

தமிழ் ஓவியா said...


கொய்யாசாப்பிடலாமே!


கொய்யாப்பழத்தில் ஊட்டச்சத்து அதிகம். ஆரஞ்சுப் பழத்திலிருக்கும் வைட்டமின் சி போல இதில் நான்கு மடங்கு அதிகம். இதைக் கடித்துச் சாப்பிடுவதால், பற்களும் ஈறுகளும் பலம் பெறுகின்றன. கொய்யாப் பழத்தால் குடல், வயிறு, ஜீரணப்பை, மண்ணீரல், கல்லீரல் ஆகியவை வலிமை பெறு கின்றன. உணவு ஜீரணமாவதற்கும் நல்லது.

இரவு உணவுக்குப் பின் நன்றாகக் கனிந்த கொய்யாப் பழங் களை சாப்பிட்டால் மலச்சிக்கலே இருக்காது. பல் முளைக்கும் குழந்தைகளுக்கு கொய்யாப் பழங்களை தினமும் கொடுத்தால் பற்கள், ஈறுகள் உறுதியாகும். கொய்யா மரத்தின் வேர்,இலைகள், பட்டை,களில் மருத்துவகுணங்கள் அடங்கி யுள்ளன. குடல், வயிறு பேதி போன்ற உபாதைகளுக்கு இவை பெரிதும் குணமளிக்கின்றது.

கொய்யா மரத்தின் இலைகளை அரைத்து காயத்தின் மேல் தடவினால் அவை விரைவில் ஆறிவிடும். கொய்யா இலைகள் அல்சர் மற்றும் பல் வலிக்கும் உதவுகின்றன. கொய்யாவுக்கு சர்க்கரையைக் குறைக்கும் தன்மையுண்டு. கொய்யாக் காய்களை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு பெருமளவு குறைய வாய்ப்புகள் இருப்பதாக கண்டறியப் பட்டுள்ளது. கொய்யா இலைகள் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் இருமல் தொண்டை மற்றும் இதய சம்பந்தமான நோய்களுக்கு தீர்வு தருகின்றன. கொய்யா மரத்தின் இளம் புதுக்கிளைகளின் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் காய்ச்சலைக் கட்டுப்படுத்தும். கொய்யா மரத்தின் கிளைகளிலிருந்து தயாரிக்கப் படும் மற்றொரு கஷாயம் குழந்தைகளுக்கு வரும் மாந்தம், இழுப்பு, காக்காய் வலிப்பு போன்ற வியாதிகளுக்கு கொடுக்கப்படுகிறது.

Read more: http://viduthalai.in/page5/75380.html#ixzz2tRDpQCfs

தமிழ் ஓவியா said...


புதிய பெயர் - பழைய கொடுங்கோல்

1935 வரை அகில இந்தியா என்று பேசி வந்த நான், வடநாட்டார் ஆதிக்கத்தை உணர ஆரம்பித்ததும் 1938-ல் திராவிட நாடு பிரிவினைக் கொள்கையை முக்கியக் கொள்கையாகக் கடைபிடிக்க ஆரம்பித்தேன். 1950 ஜனவரி 26ஆம் தேதிய பலம் 1947ஆகஸ்ட் 15ஆம் தேதியைப் போல் ஒரு விலாசம் மாற்றும் தினமேயாகும். அதே முதலாளிதான், அதே பணப் பெட்டிதான்; அதே தராசுதான்; அதே படிக்கல்தான், அதே சரக்குதான். அதே பித்தலாட்டம் தான். ஆனால், விலாசம் அதாவது டிரான்ஸ்ஃபர் செய்யப்பட்டது மட்டும் மாற்றம் அடைகிறது. குடிஅரசு ஆட்சி என்கிற புதுப்பெயரால் பழைய கொடுங்கோல் ஆட்சியே மேலும் அதிக பலத்துடனும், மேலும் அதிகப் பாதுகாப்புடனும் 26ஆம் தேதி முதற்கொண்டு நடைபெறப் போகிறது. இந்த உண்மையைத் தெளிவாக உணரும் நாம் இதை ஏன் புரட்டு என்று எடுத்துச் சொல்லக் கூடாது? உண்மையை எடுத்துச் சொல்ல நாம் ஏன் பயப்பட வேண்டும்? அக்கிரமத்தை எடுத்துச் சொல்ல நமக்கேன் அச்சம்?
- தந்தை பெரியார் விடுதலை 20.01.1950

Read more: http://viduthalai.in/page5/75381.html#ixzz2tRE6Lx6d

தமிழ் ஓவியா said...


தண்ணீர் ஒரு தகவல்

உண்ணத் தொடங்கியதுமே வயிற்றில் உணவை சீரணிக்கும் திரவம் சுரக்க ஆரம்பமாகி விடும். அத்தருணத்தில் நீர் அருந்தினால் அது சீரணத் திரவத்துடன் சேர்ந்து சீரணப் பணியைப் பாதிக்கச் செய்யும். சாப்பாட்டுக்கிடையே நீர் அருந்துவதைக் கூடுமான வரை தவிர்ப்பதே நல்லது.

Read more: http://viduthalai.in/page8/75385.html#ixzz2tRF0h4Wx

தமிழ் ஓவியா said...


மோடீயில் பாசிசம்


- குடந்தையான்

தேநீருடன் அரட்டை என்கிற முறையில் இந்தியா முழுவதும் ஆயிரம் இடங்களில் தேநீர் கடைகளின் வாயிலாக மோடி பிரச்சாரம் துவக்கினார். ஆனால், தமிழ் நாட்டில் அதற்கு எந்தவித வரவேற்பும் இல்லை என டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்க நாட்டில் குடி அரசுத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட் பாளர்கள் ஆங்காங்கே விவாதம் செய்வதைப்போல், இங்கேயும் அது போன்ற ஒன்றை தனியார் ஏஜென்சி மூலம் பாஜகவும் மோடியும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் செலவில் செய்யத் துவங்கி உள்ளனர். இதற்கு யாரிடமிருந்து பணம் வருகிறது என்ற தகவலை பாஜகவும் சொல்வதில்லை; மற்றதற்கு எல்லாம், கேள்வி கேட்கும் ஊடகங்கள், இதைப் பற்றி எந்த கேள்வியும் கேட்பதும் இல்லை.

இந்த தேநீர் அரட்டையில், மோடியிடம் காணொலி மூலம் கேள்வி கேட்கலாம் என்று சொன்னார்கள். ஆனால், எந்த மாதிரியான கேள்வி கேட்கப்பட வேண் டும் என்பதை, அந்த கடையில் உள்ள பாஜகவினர் தேர்வு செய்த பின்னர் தான், கேட்க முடியும்.

இது மட்டுமல்ல; ஊடக நிருபர்கள், மோடியை சங்கடப்படுத்தும் எந்த கேள்வியும் கேட்கக்கூடாது என்றும், மீறி கேட்பவர்கள் உரிய வகையில் கவனிக் கப்படுவர் என்றும், அத்தகையவர்களின் பெயர் களங்கப்படுத்தப்படும் என்றும் மிரட்டப்பட்டுள் ளார்கள் என மத்திய அமைச்சர் மனீஸ் திவாரி செய்தி வெளியிட்டுள்ளார்.

அண்மையில் வெண்டி டோனிகர் எழுதிய புத்தககம் இந்துக்கள்; ஒரு மாற்று வரலாறு எனும் ஆங்கில நூல் (Wendy doniger’s the hisdus an alternative history) பென்குவின் பதிப்பகத்தால் வெளியிடப்பட் டது. அந்த நூல் இந்துக்கள் மனதைப் புண்படுத்துவ தாக ஆர்ப்பாட்டம் செய்து, புத்தகத்தை திரும்பப் பெற வைத்துள்ளனர்.

மோடிக்கு எதிராக கட்டுரைகளை எழுதும் கட்டுரையாளர்கள், அந்த நிறுவனங்களிலிருந்து விலக்கப்பட்டு வருகின்றனர். வித்யா சுப்ரமணியன், சித்தார்த் வரதராஜன், சகரிகா கோஸ், நிகில்வாக்லே, ஹர்தோஸ் சிங் போல் என சிறந்த செய்தியாளர்கள், சிலர் நீக்கப்பட்டுள்ளனர்; சிலர் மிரட்டப்பட் டுள்ளனர்.

தங்களது கருத்துக்கு மாறான கருத்தை கூறுபவர் களுக்கு, பதில் கருத்து சொல்லாமல், அவர்களை தாக்குவது, கொல்வது என்பது ஆர்.எஸ்.எஸ். வழிமுறை. இந்த பாசிச முறையைத் தான் மோடியின் தேநீர் அரட்டையும் செய்து வருகிறது.

Read more: http://viduthalai.in/page-2/75437.html#ixzz2tXLuHYGf

தமிழ் ஓவியா said...


மோடியின் ராஜ்ஜியத்தில் காதலர்கள் பட்டபாடு பஜ்ரங்தள வெறியர்களின் அட்டூழியம்

அகமதாபாத்,பிப்.16- பஜ்ரங்தளம் மற்றும் விஸ்வ இந்து பரிஷத்(வி.எச்.பி) அமைப் பினர் கடந்த 14.2.2014 அன்று காதலர் தினத்தை கொண்டாடிய காதலர்கள் மீது அழுகிய தக்காளிகளை எறிந்தார்கள்.

குஜராத்தின் அகமதா பாத்தில் உள்ள சபர்மதி ஆற்றின் அருகே வெறியர் கள் இவ்வாறு செய்தனர். அப்போது காதலர்கள் தங் களைக் காப்பாற்றிக் கொள்ள தப்பி ஒடினர்.

அப்போது பெருமளவில் திரண்ட பஜ் ரங் தள அமைப்பினர் காத லர்களின் வாகனங்களைப் பறிக்க முயன்றனர். இந்த அட்டூழியம் குறித்து காவல் நிலையத்தில் ஏதும் புகார் செய்யப்படவில்லை. சபர் மதி ஆற்றில் நூற்றுக்கணக் கான காதலர்கள் குவிந்தி ருந்தனர். அவர்கள் காதலர் தினத்தை கொண்டாடுவதற் காக அங்கு வந்திருந்தனர்.

காதலர் தினத்தை எதிர்த்து பஜ்ரங்தளம் அமைப்பின ரும் வி.எச்.பி.யினரும் அக மதாபாத் நகரில் போராட் டம் நடத்தினர். நகர பஜ்ரங் தள தலைவரான ஜ்வாலித் மேத்தா காதலர்களைக் கடு மையாக வசை பாடினார். காதலர் தினத்தை பல மாண வர்கள் வரவேற்றனர்.

சில மாணவர்கள் மட்டும் பஜ் ரங்தள அட்டூழியத்திற்கு பயந்து அவர்களுடன் வந் திருந்தனர். இதுகுறித்து அந்த வெறி யர்கள் கூறுகையில், எங்களது போராட்டத் திற்குச் சில மாணவர்கள் ஆதரவு தந்தார்கள் என்று பெருமை பொங்க கூறிக் கொண்டனர்.

இந்த வெறியர்கள் தாக் குதல் நடத்தியபோதும் பல காதலர்கள் சபர்மதி ஆற்றில் குவிந்து தங்களது துணை யோடு பேசி மகிழ்ந்தனர். காதலர்களை தாக்கிய பஜ்ரங் தள வெறியர்களும், வி.எச். பி.யினரும் பின்னர் தங்களது வெறி அடங்காமல் காதலர் தின அட்டைகளை தாக்குதல் நடத்திய இடத்திலேயே எரித்தனர்.

காதலர்கள்மீது தாக்குதல்

அகமதாபாத் மட்டு மின்றி, ஜம்மு, அய்தராபாத் உள்பட நாட்டின் பல பகுதிகளிலும் பஜ்ரங்தளம் மற்றும் ஆர்.எஸ்.எஸ். பரி வார அமைப்பினர் காதலர் கள் மீது தாக்குதல்களை நடத்தினர்.

Read more: http://viduthalai.in/page-8/75424.html#ixzz2tXNc1Ssq