Search This Blog

15.12.13

பகுத்தறிவாளர் கழகம் என்றால் மனிதர்கள் கழகம் - பெரியார்

மனிதர்கள் கழகம்

மேன்மைக்குரிய தலைவர் அவர்களே, தாய்மார்களே, பெரியோர்களே!
இன்றைய தினம் இந்த செயங் கொண்டத்தில் பகுத்தறிவாளர் கழகத்தை துவக்கி வைக்கும் பேறு கிடைத்ததற்காக மகிழ்ச்சி அடைகிறேன்.

நான் கூறுகிற, கருதுகிற கருத்து களை நீங்கள் கேட்கத்தான் கடமைப் பட்டவர்களே தவிர, அப்படியே நம்பக் கடமைப்பட்டவர்களல்ல. கேட்பவற்றை எல்லாம் நம்ப வேண்டுமென்றால், இதுவரை இந்த நாட்டில் என்னைவிட அதிகமாகக் கூறப்பட்ட கருத்துகள் ஏராளம்! ஆகவே, எதையும் நம்பாமல் அறிவு கொண்டு சிந்திக்கக் கேட்டுக் கொள்கிறேன்.

பகுத்தறிவாளர் கழகம் என்றால் மனிதர்கள் கழகம் என்று பெயர் மனி தனுக்குத்தான் பகுத்தறிவு என்ற ஒன்று இருக்கிறது. உலகத்தில் எத்தனையோ கோடி ஜீவன்கள் இருக்கின்றன என் றாலும் அவைகளுக்கு எல்லாம் ஆறாவது அறிவாகிய பகுத்தறிவு கிடையாது. மனிதன் ஒருவனுக்குத்தான் பகுத்தறிவு உண்டு. அப்படி இருக்கும்போது நாம் ஏன் பகுத்தறிவாளர் கழகம் துவக்க வேண்டும்?

இந்தக் கூட்டத்திற்கு வராதவர்கள் எல்லாம் பகுத்தறிவு அற்றவர்களா? பகுத்தறிவாளர் கழகத்தைச் சேராத வர்கள் எல்லாம் பகுத்தறிவு அற்ற வர்களா? சிந்திக்க வேண்டும்.

நான் முன்பு ஒருமுறை ஒரு சுய மரியாதை மாநாட்டிற்கு குமாரசாமி ரெட்டியார் என்ற மந்திரியாரை அழைத்து இருந்தேன். அவர் வந்தும் பேசினார். அப்போது சொன்னார், "சுயமரியாதை மாநாடு என்று பெயர் வைத்து இருக் கிறார்கள். அப்படியானால், மற்றவர் களுக்கு சுயமரியாதை இல்லை என்று அர்த்தமா?" என்று கேட்டார்.

அதற்குப் பின்னால் நான் பேசும் போது, அவரைக் கேட்டேன். "நீங்கள் என்ன ஜாதி?" என்று. 'ரெட்டியார்' என்றார். கோவி லுக்குச் சென்றால் எந்த இடத்தில் நிற்கிறீர்கள்? ஓட்டலுக்குச் சென்றால் எங்கே உட்காருகிறீர்கள்? அதற்குக் காரணம் என்ன? நீங்கள் சூத்திரன் என்பதால் அல்லவா என்று கேட்டேன். அசட்டுச் சிரிப்பு சிரித்தார். கூடியிருந்த மக்கள் எல்லாம் கைதட்டி ஆரவாரம் செய்தார்கள்.

விளையாட்டுக்காக நான் சொல்ல வில்லை. இன்றைக்கும் நம் நிலைமை என்ன? சாஸ்திரப்படி மட்டுமல்ல - இன்றைய இந்தியாவின் அரசியல் சட்டப்படியும் நாம் சூத்திரர்கள்தான். எவன் கிறித்தவன் இல்லையோ, எவன் முஸ்லிம் இல்லையோ, அவனெல்லாம் பார்ப்பானைத் தவிர்த்து பகுத்தறிவுவாதி - நாத்திகன் உட்பட சூத்திரன் என்று இன்றைய சட்டத்திலும் இருக்கிறது.

இதற்கு ஒரு பரிகாரம் செய்ய வேண் டும் என்றுதான் தீவிரமாக இருக்கிறேன். நான் 50 ஆண்டுகளாக இந்த நாட்டில், பகுத்தறிவு சுயமரியாதை பிரச்சாரம் செய்தும் வருகிறேன்.

நம்முடைய இலட்சிய சொல்லாக 'கடவுள் இல்லை - கடவுள் இல்லை! கடவுள் இல்லவே இல்லை! கடவுளைக் கற்பித்தவன் முட்டாள் - பரப்பியவன் அயோக்கியன் - வணங்குகிறவன் காட்டுமிராண்டி' என்று கொண்டு இருக்கிறோம்.

உலகத்திலே இருக்கிற மற்ற நாட்டு பகுத்தறிவுவாதிகள் எல்லாம் புதிய புதிய கருவிகளை எல்லாம் கண்டுபிடித்து இருக்கிறார்கள். ஆணும், பெண்ணும் "படுக்காமலேயே" குழந்தை பெறக் கூடிய சாதனங்கள் எல்லாம் ஏற்படுத்தப் பட்டு இருக்கின்றன. கடுமையான வியாதிகளுக்கு எல்லாம் மருந்து வகைகள் எல்லாம் கண்டு பிடிக்கப்பட்டு விட்டன. இவை எல்லாம் பகுத்தறிவை பயன்படுத் தியதால் மற்ற நாட்டுக் காரன் செய்து காட்டிய சாதனை.

1952-இல் நம்முடைய சராசரி ஆயுள் 29. இன்றைக்கு நமது சராசரி ஆயுள் 52. இன்னும் நம் நாட்டு வைத்தியன் எல்லாம் செத்தான் என்றால் அது 75 ஆகி விடும். நம் நாட்டு வைத்தியன் செய்த புண்ணியமெல்லாம் நம் உயிரைக் கொன்று தீர்த்தது தான். வெள்ளைக்காரன் வைத்தியம் நாட்டில் வளர்ந்து விட்ட பிறகுதான் நம்முடைய ஆயுள் நீண்டு வருகிறது.

இன்றைக்குச் சொல்கிறேன், ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். கி.பி. 2,000 முடிவில் இந்திய மனிதனின் சராசரி வயது 75 ஆகவும், வெள்ளைக்காரன் வயது 110ஆகவும் ஆகப் போகிறது. நான் அப்போது இருக்க மாட்டேன். நீங்கள் அதை அனுபவிப்பீர்கள்.

எனக்கு பல ஆண்டுகளுக்கு முன்பு நாக்கில் புற்று வந்தது. அந்தத் தழும்புக் கூட இன்னும் இருக்கிறது. டாக்டர் ரத்தின வேலு சுப்பிரமணியமும், டாக்டர் ராயும் வைத்தியம் பார்த்தார்கள்.

டாக்டர் ராய் எலக்டிரிக் டிரீட்மெண்டு செய்து என்னைப் பிழைக்க வைத்தார். இப்படி எல்லாம் மனிதனின் பகுத்தறிவு விஞ்ஞானத் துறையில்; இன்னும் எவ்வளவோ வளர்ந்து வருகிறது.

நம் நாட்டைப் பொறுத்த வரையில் என்னுடைய கவலை எல்லாம் நம்முடைய பகுத்தறிவு, நமது மானத்தைக் காப்பாற் றப் பயன்பட வேண்டும் என்பது தான்.
மற்ற நாட்டுக்காரன் பகுத்தறிவு எல்லாம் வளர்ந்து சந்திர மண்டலத்தில் வீடு கட்டிக் கொண்டு இருக்கப் போகி றான். உணவு முறையிலும் மாறுதல் ஏற்படப் போகிறது.

நம்முடைய நாட்டு மக்களைப் பொறுத்த வரையில், பகுத்தறிவுவாதி களாக இருப்பதற்கு மான உணர்ச்சி வந்தாக வேண்டும். எவ்வளவு கேவலம்? இந்த நாட்டுக் குடிமக்களை நூற்றுக்கு மூன்று பேராக உள்ள ஒரு கூட்டம் தங் களுக்குத் தாசி மக்கள் என்று இன்றைக் கும் சொல்லி வருகிறது என்றால் இதைவிட ஒரு கேவலம் வேண்டுமா?

எனக்கு ஒருவனுக்கு மட்டும்தான் இந்த வேதனையா? 1925ஆம் வருடத்தி லிருந்தே இதற்காக நான்தானே பாடுபட்டு வருகிறேன். எந்த அரசியல் காரன் பாடுபட முன்வந்தான்? அரசியல் காரனுக்கு எல்லாம் என்னோட சேர்ந்து இருப்பதற்கே பயம். காரணம், இவனோடு சேர்ந்தால் ஓட்டுக் கிடைக்காதே என்ற பயம்தான்!

நான் இவ்வளவு பாடுபட்டும் இன்னும் முடிந்த பலனை அனுபவிக்க முடிய வில்லையே. நம்முடைய இயக்கத்தால் பார்ப்பானின் ஆதிக்கத்தை சகல துறைகளிலும் முறியடித்து விட்டோம். கல்வி, உத்தியோகத் துறைகளில் எல்லாம் நாம் தலையெடுத்து விட்டோம். இவ்வளவும் அமைதியான புரட்சியாக செய்து முடித்து இருக்கிறோம்.

ஒரு பார்ப்பானைக் கொல்லவில்லை, ஒரு பார்ப்பனத்தியைக் கெடுக்கவில்லை. எந்தவித பலாத்காரத்தையும் கையாளா மல் இந்த மாறுதல்களைச் செய்து இருக்கிறோம்.

ஒரு பார்ப்பான் கூட மந்திரியாக இல்லாத ஒரு மந்திரி சபையை தமிழ் நாட்டில் நிலை பெறச் செய்து விட்டோமே! இது ஒன்று போதாதா நம்முடைய வெற்றிக்கு? அதுவும் எப்படிப்பட்ட ஆட்சி! இராமனை செருப்பால் அடித்து வெற்றி பெற்று வந்த ஆட்சி! இது என்ன சாதாரண காரியமா?

வேறு மதக்காரர் ஆளும் நாட்டில் அந்தக் கடவுள்களை இப்படிச் செய்து ஓட்டு வாங்க முடியுமா? இங்கு இராமனை செருப்பால் அடித்து ஓட்டு வாங்கி விட்டோமே! இது என்ன சின்ன காரி யமா? கடவுளாவது - வெங்காயமாவது என்று கருதும் அளவுக்கு மக்களுக்கு உணர்ச்சி வந்து விட்டதே!

மனிதன் ஒவ்வொரு துறையிலும் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் வருகிறான். இப்படி எல்லாத் துறைகளி லும் மாற்றமும், முன்னேற்றமும் ஏற்பட்டு விட்ட பிறகு, நம்மை தேவடியாள் மக்கள் என்னும் சூத்திர இழிவு ஏன் ஒழிய வில்லை? இதில் மட்டும் மாற்றம் ஏற்படவில்லையே, ஏன்?
மானம் இல்லாததாலா? உணர்ச்சி இல்லாததாலா? அறிவு இல்லாததாலா? இல்லை - இல்லை. இவை எல்லாம் மனிதனுக்குத் தாராளமாக இருக்கிறது. இருந்தும் ஏன் பயன்படுத்தவில்லை?

மனிதன் பகுத்தறிவைக் கொண்டு எல்லாவற்றையும் சிந்திக்கலாம். ஆனால், கடவுள், மதம் விஷயங்களில் மட்டும் மனிதன் பகுத்தறிவைப் பிரயோகப்படுத் தக் கூடாது. அப்படி பயன்படுத்தினால் அவனைக் கொல்லலாம் என்று இருக் கிறது. இதை விட என்ன வேண்டும்?

இராமாயணத்திலே கூறப்பட்டு இருக்கிறது, பகுத்தறிவைப் பயன்படுத்தி கடவுள், மத விவகாரங்களில் எவன் தர்க்கம் செய்கிறானோ, அவனைக் கொன்றுவிட வேண்டும் என்று இராமன் கூறுவதாக ஒரு காட்சி வருகிறது. அந்த நிலைமைதான் இன்றைக்கும்.

காந்தியாரைத் தீர்த்துக் கட்டியதும் இதே கருத்துப்படிதான். சாஸ்திரத்தில் தீண்டாமை இருக்கிறது. அதில் கை வைக்க வேண்டும் என்று காந்தியார் முயற்சித்தபோது சாஸ்திரப்படி அவரைத் தீர்த்துக் கட்டி விட்டான்.

இன்றைய அரசியல் சட்டம் கூட அப்படித்தான். அரசியல் சட்டத்தில் எதைத் திருத்தினாலும் 'அடிப்படை சட்டங்கள்' என்ற பகுதியை மட்டும் திருத்தக் கூடாது என்று எழுதி வைத்திருக்கிறான். அரசியல் சட்டத்தில் தீண்டாமை ஒழிய வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது. அந்தத் 'தீண் டாமை' என்ற வார்த்தை இன்வர்ட்டடு கமாவுக்குள் போடப்பட்டுள்ளது. அப்படிப் போடப்பட்டு இருப்பதற்குக் காரணம், அதற்குத் தனி அர்த்தம் இருக்கிறது என்பதுதான்.
வருகிற டிசம்பர் 8, 9 தேதிகளில் சென்னையில் ஒரு பெரிய மாநாடு கூட்டப் போகிறேன். சட்டப்படி இருக்கிற நம்முடைய இழி நிலையை மாற்ற தீர்மானம் கொடுக்கப் போகிறேன். மாற்றினால் போச்சு, இல்லாவிட்டால் போராடத்தான் வேண்டும். போராடி னால் கடுமையாகத் தண்டிப்பான்.

ஏழாண்டு வரை கொடுப்பான். ஏற்கத் தான் வேண்டும். நீங்கள் எல்லாம் ஜெயிலுக்கு வரத் தான் வேண்டும். எதெல் லாமோ செய்து நம்மை ஒழித் துக்கட்டப் பார்ப்பார்கள்.  அதற்கெல்லாம் நாம் தயாராக இருக்க வேண்டும்.
இந்து இல்லை என்று எவன் ஒருவன் சொல் கிறானோ, அவனை விடுதலை செய்ய வேண்டும். அவனை அந்த இழிவுக்குள் புகுத்தக்கூடாது என்று கூறப்போகிறோம். அதற்கு இந்த ஆட்சி என்ன செய்யப் போகிறது என்று பார்ப்போம்.

இந்த ஆட்சியை ஒழித்து விட்டால் மறுநாளே தீர்ந்தது. நம்முடைய இழிவை ஒழிக்க மறுநாளே ஏற்பாடு செய்து விடலாம். அதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும்.

அதற்கான ஆயத்தமான மாநாடு தான் நடக்க இருக்கும் சென்னை மாநாடு. மாநாட்டிற்கு ஆண்களும் பெண்களுமாய் இதுவரை மாநாடுகளில் கூடாத அளவுக்கு வந்து கூடியாக வேண்டும். எந்தெந்த வகையில் உங்களது ஒத்துழைப்பு இருக்க முடியுமோ அவ்வளவும் இருக்க வேண்டும். பண வசதி உள்ளவர்கள் தாராளமாக உதவ லாம். ஜெயிலுக்கு வர வாய்ப்புள்ளவர்கள் ஏராளமாக வரவேண்டும்.

முதன்முதலில் வடநாட்டுக்காரன் கடையில் மறியல் செய்யலாம் என்று இருக்கிறேன். அவனுக்கு இங்கு என்ன வேலை என்று கேட்போம்.
பம்பாயில் சிவசேனைக்காரன் நம்மவர் களை அங்கு விரட்டவில்லையா?
அவன் அங்கு செய்யும்போது நாம் ஏன் இங்கு செய்யக்கூடாது?
துணியவேண்டும். பதவிக்குப் போகிற நாலுபேர்களை அதற்கென்று விட்டு விடுவோம். மற்றவர்கள் நம்முடைய இழிவை ஒழித்துக்கட்ட முயற்சிக்க வேண்டும்.

நமக்கு பதவி வந்தால் போதாது - நம்மில் பலர் இலட்சாதிபதியானால் போதாது. நமக்கு இன்றைக்கு தேவை எல்லாம் நமது மானம் மீட்கப்பட்டாக வேண்டும், நமது இழிவை ஒழித்தாக வேண்டும்.

இன்னும் எத்தனை நாளைக்கு நான் இருக்கப் போகிறேன். எத்தனை நாளைக்கு கத்தப்போகிறேன் நாளைக்கே பொசுக் கென்று போய்விடுகிறேன் என்று வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் கெதி என்ன? என் இடத்தில் உட்கார எவன் வரப்போகிறான். வர விரும்புகிறவன் இருந்தாலும் எவனை இந்த அளவுக்கு மதிக்கப் போகிறீர்கள்?

மக்களிடம் மதிப்பு பெறுவது என்பது சின்ன காரியமா? அந்த மதிப்பைப் பெற எவ்வளவு பட்டாக வேண்டும்.

ஆகவே தோழர்களே! நாளைக்கு எனக்கு ஏதாவது என்றால் நம் கெதி அவமானகரமானதாகப் போய்விடும்; தலை எடுக்க முடியாது.
எனவே, நீங்கள் எல்லாம் நமது இழிவை ஒழிக்கும் காரியத்தில் துணிந் தாக வேண்டும்.

உங்கள் பெயரை எல்லாம் பட்டியல் போட்டுக் கொடுங்கள். யார் யாரை எப்படி எப்படி எல்லாம் பயன்படுத்திக் கொள்ள முடியுமோ அப்படி எல்லாம் பயன்படுத்திக் கொள்கிறேன்.

எனக்காக, என் தயவுக்காக நீங்கள் போராட முன்வர வேண்டாம். உங்களுக் காக - உங்கள் பிள்ளைக் குட்டிகளுக்காக உங்கள் சந்ததிக்காக முன் வாருங்கள்.

-----------------------------10.11.1973 அன்று ஜெயங்கொண்ட சோழபுரத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய அறிவுரை - "விடுதலை" 12.11.1973

28 comments:

தமிழ் ஓவியா said...

தமிழக மீனவர்களின் பாதுகாப்புக்கு நிரந்தரத் தீர்வு எட்டப்படவில்லையானால் தொடர்போராட்டத்தில்ஈடுபடுவோம்! செய்தியாளர்களிடம் தமிழர் தலைவர் அறிவிப்பு

தஞ்சாவூர், டிச.15- தமிழக மீனவர்கள் தாக்கப் படுவது தொடர் கதையாக உள்ளது. இதற்கொரு நிரந்தரத் தீர்வு எட்டப்படவில்லையானால் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்.

தஞ்சாவூர் - வல்லத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது (14.12.2013).

தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வு காணப்பட வேண்டும். இது ஒரு தொடர் கதையாகவே ஆகிவிட்டது. கண்ணீரும் கம்பலை யுமாக அம்மக்கள் பேட்டி கொடுப்பதை பார்க்கும் பொழுது ரத்தக் கண்ணீர் வடிக்கிறோம்.

மாநில அரசு பிரதமருக்கு எழுதுவது - மத்திய அரசு ஏதோ சமாதானம் கூறுவது - கவலையளிக் கிறது என்று கூறுவது எல்லாம் கேட்டுக் கேட்டுப் புளித்து விட்டது. இதற்கு நிரந்தரமான தீர்வை மத்திய அரசு எடுக்காவிட்டால் தொடர் போராட் டத்தை நடத்துவோம் டெசோ தலைவரின் கருத்தினையும் அறிந்து அத்தகைப் போராட்டத்தை மேற்கொள்வோம். பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு. என்பதை மத்திய அரசுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

மதக் கலவரத் தடுப்பு சட்டம்

மத்திய அரசு கொண்டு வரவிருக்கும் மதக் கல வரத் தடுப்புச் சட்டம் வரவேற்கத்தக்கது.

தேவைப்படும் தருணத்தில் மாநில அரசுகளைக் கலந்து கொண்டு, அவற்றின் ஒப்புதலோடு மத்திய அரசு இந்தச் சட்டத்தைப் பயன்படுத்தி மதக் கலவரங்களைத் தடுக்க முனைவது அவசியமே!

தமிழ் ஓவியா said...

இதனைக் கூடாது என்று கூறுபவர்கள் கூக்குரல் போடுபவர்கள் யார்? நாடெங்கும் மதக் கலவ ரத்தைத் தூண்டுபவர்கள்; மோடியைத் தூக்கி நிறுத்துபவர்கள்தான்; அவர்கள் மடியில் கனம் இருப்பதால், இதனை எதிர்க்கிறார்கள்.

மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம்

இந்திய அரசமைப்புச் சடடத்தில் விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்க வேண்டும். சீர்திருத்த எண்ணம் உருவாக்கப்பட வேண்டும் என்றெல்லாம் கூறப்பட்டுள்ளது.(51A (h).

இதன் அடிப்படையில் மகாராட்டிர மாநிலத்தில் ஒரு சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கருநாடகா வில் கொண்டு வரவிருப்பதாக மாநில முதல் அமைச்சர் கூறியுள்ளார்.

தந்தை பெரியார் பிறந்த தமிழ்நாட்டிலும் இத்தகு சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று தமிழக அரசை நாங்கள் வலியுறுத்துகிறோம். மத்திய அரசே கூட இப்படியொரு சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என்று இந்த நேரத்தில் வலியுறுத் துகிறோம்.

நீதிபதி கங்குலி விவகாரம்

உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி கங்குலி மீது பாலியல் குற்றத் தொடர்பான புகாரின் அடிப் படையில் உச்சநீதிமன்றம் அமைத்த குழு குற்றச் சாற்றுக்குப் பூர்வாங்கமான தடயங்கள் இருக் கின்றன என்று கூறியுள்ளது. கங்குலி ஓய்வு பெற்ற தால் அவர்மீது நடவடிக்கை எடுக்க இயலாது என் கிற முறையில் உச்சநீதிமன்றம் கருத்துத் தெரி வித்துள்ளது.

உச்சநீதிமன்றம் நடவடிக்கை எடுக்காவிட்டால் சம்பந்தப்பட்ட மாநில அரசு சட்டப்படியான நடவடிக்கையைத் தொடர வேண்டும்.

மற்றவர்களைவிட நீதிபதியாக இருக்கக் கூடியவர்கள் நேர்மையான முறையில் ஒழுக்கமான முறையில் நடந்து காட்ட வேண்டும். வேலியே பயிரை மேயும் நிலையை அனுமதிக்கக் கூடாது.

மேற்கு வங்க மாநிலத்தில் மனித உரிமைக் குழு தலைவராக கங்குலி இருந்து வருகிறார். நேர்மை அவரிடம் இருக்குமானால் அந்தப் பதவியிலிருந்து அவர் விலகி இருக்க வேண்டும்; அவர் விலகாத நிலையில் அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்.

தமிழ் ஓவியா said...

கேரளாவில் தமிழர்கள் பிரச்சினை

கேரள மாநிலம் பாலக்கோடு மாவட்டத்தில் அட்டப்பாடி, சோலையூர், புதூர் போன்ற கிராமங் களில் 40 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்து வரும் தமிழர்களை வெளியேற்றும் நடவடிக்கைகளில் கேரள அரசு ஈடுபடுவது கண்டிக்கத்தக்கதாகும்.

40 ஆண்டுகளுக்கு மேலாக அந்தப் பகுதிகளில் வாழ்ந்து வருபவர்கள் அவர்கள்.

அந்தப் பகுதிகளை தமிழர்கள் ஒன்றும் ஆக்கிர மிக்கவில்லை; பணம் கொடுத்து வாங்கியுள்ளனர்; பத்திரவுப் பதிவுகள் எல்லாம் முறைப்படி இருக் கிறது. 12 ஆண்டுகள் குடியிருந்தாலே அவர்களுக்கு உரிமை கிடைத்து விடுகிறது.(Prescription Right)
இந்தப் பிரச்சினையில் தமிழக அரசு அவசரம் காட்ட வேண்டும் கேரள முதல் அமைச்சருடன் உடனே பேச வேண்டும், மத்திய அரசும் உடனடி யாகத் தலையிட வேண்டும்.

இந்தியாவில் எந்த ஒரு இடத்திலிருந்தும் இன் னொரு இடத்திற்கும் செல்லலாம். குடியேறலாம் என்று தான் இந்திய அரசமைப்புச் சட்டம் கூறு கிறது - இந்திய ஒருமைப்பாடுபற்றிப் பேசுபவர்கள் சிந்திக்க வேண்டும், செயல்பட வேண்டும்.

மதவாத சக்திகளை அனுமதிக்கக் கூடாது

மோடி அலை மோடி அலை என்று ஓர் அலையைக் கிளப்பி விடுகிறார்கள்.

மோடி அலை வீசுவது உண்மையென்றால், டில்லியில் அல்லவா அது செல்லுபடியாகி இருக்க வேண்டும். டில்லியில் தான் மோடி அதிகமாக அக்கறை செலுத்தினார் - பிரச்சாரம் செய்தார்; முடிவு வேறு விதமாகி விட்டதே!

மத்தியப் பிரதேசத்தில்கூட வெற்றி பெற்றதற்குக் காரணம் மோடி அல்ல. அம்மாநில முதல் அமைச் சர்தான் காரணம்; மோடி பேசிய பொதுக் கூட்டத் தில்கூட அம்மாநில முதல்அமைச்சர் சவுகான் படத்தைத்தான் பொது மக்கள் தூக்கிக் காட்டி னார்கள்.

புதிய புதிய யுக்திகளையெல்லாம் பயன்படுத்தி செயற்கையான பிரச்சாரங்களைக் கட்டவிழ்த்து விடுகிறார்கள். பன்னாட்டுப் பண முதலைகள் மோடியின் பின்னணியில் இருக்கின்றன. அவர்கள் பணத்தை வாரி இறைத்து நரேந்திர மோடியை பிரதமர் நாற்காலியில் உட்கார வைக்க முயற்சிக் கிறார்கள் என்பதை வாக்காளர்கள் புரிந்து கொள் வார்கள்.

உண்மை வெளிவரும் - ஒப்பனைகளும் அப்பொ ழுது கலையும்.

பெரியார் உலகம்

திருச்சியையடுத்த சிறுகனூரில் 95 அடி உயரத்தில் தந்தை பெரியார் பேருருவ வெண்கலச் சிலையை நிறுவும் முயற்சியில் இறங்கி இருக்கிறோம்.

பெரியார் வாழ்க்கைவரலாறு ஒலி, ஒளிக் காட்சிகள் நூலகம் என்று தந்தை பெரியார்பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ளும் வகையில் பெரியார் உலகம் உருவாக்கப்பட உள்ளது.

இதற்காக 1005 சவரன் தங்கத்தை கொடுத்துள் ளார்கள். கட்சி, ஜாதி, மதங்களைக் கடந்து மக்கள் நிதி உதவி செய்து வருகிறார்கள் என்பது மகிழ்ச்சிக் குரியது என்று குறிப்பிட்டார்.

மகளிர் மசோதா

நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் பெண் களுக்கான 33 சதவீத இடஒதுக்கீடு மசோதா 1996 முதல் நிலுவையில் உள்ளது. உடனடியாக இந்த சட்டம் உள் ஒதுக்கீடுடன் கூடியதாக நிறைவேற்றப்பட வேண்டும்.

பெண்களுடைய வாக்குகள் கிட்டதட்ட சரி பங்கு இருக்கின்றன என்பதை அரசியல் கட்சிகள் மறந்திட வேண்டாம்!

- செய்தியாளர்களிடம் தமிழர் தலைவர் 14.12.2013

Read more: http://viduthalai.in/e-paper/72079.html#ixzz2nay1nEgf

தமிழ் ஓவியா said...


சங்கராபுரம் ஆஞ்சநேயன் எங்கே போனான்?


சங்கராபுரம், டிச.15-சங்கரா புரத்தை அடுத்த காட்டு வண்ணஞ்சூ ரில் புதிதாக ஆஞ்சநேயர் கோவில் கட்டப்பட்டது. கடந்த சில நாட் களுக்கு முன்பு இந்த கோவில் குட முழுக்கு நடந்தது. நேற்று இரவு பூசாரி வெங்கடேசன் வழக்கம்போல் பூஜை கள் செய்தார். பிறகு கோவிலை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.

இரவில் அடையாள தெரியாத மனிதர்கள் அந்த கோவில் வளாக சுவர் ஏறி குதித்தனர். கோவிலுக்குள் புகுந்து அங்கிருந்த உண்டியலை உடைத்தனர். சில நாட்களுக்கு முன்பு குடமுழுக்கு நடந்திருந்ததால் உண்டியலில் பக்தர் கள் ஏராளமாக காணிக்கை செலுத்தி யிருந்தனர். அந்த பணத்தை கொள் ளையர்கள் அள்ளி மூட்டை போட்டு கொண்டு தப்பி சென்று விட்டனர்.

நேற்று (14.12.2013) காலையில் கோவிலை திறக்க பூஜாரி வெங்கடே சன் வந்தார். கோவிலை திறந்து உள்ளே சென்றபோது உண்டியலில் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருப் பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுபற்றி தகவல் அறிந்த அந்த பகுதி பொதுமக்கள் திரண்டு வந்து பார்த் தனர். இதனால் அந்த பகுதியில் பர பரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி சங்கராபுரம் காவல் துறையிடம் புகார் செய்யப்பட்டது. உடனே ஆய்வாளர் செல்வராஜ் மற்றும் காவல் நிலையத்தில் தடய வியல் நிபுணருடன் கோவிலுக்கு விரைந்து சென்றனர்.

ஆஞ்சநேயர் கோவிலில் பதிவாகி யிருந்த ரேகைகள் மற்றும் தடயங் களை சேகரித்தனர். துணிகர கொள்ளை குறித்து வழக்கு பதிவு செய்து கொள்ளை யர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Read more: http://viduthalai.in/e-paper/72080.html#ixzz2nayHMSjl

தமிழ் ஓவியா said...


பட்டை நாமக் கோயிலுக்கே பட்டை போட்ட பலே திருடன்!


ஆவடி, டிச.15- ஆவடியை அடுத்த சேக்காட்டில் உள்ள சீனிவாசப் பெருமாள் கோயி லில் இரண்டாவது முறை யாக உண்டியல் பணம் கொள் ளையடிக்கப்பட்டு உள்ளது.

ஆவடி அடுத்த சேக்காடு கிராமத்தில் சீனிவாச பெரு மாள் கோயில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு குருக்கள் கோவிந்தராஜ் பூஜையை முடித்துவிட்டு கோயிலை பூட்டி விட்டு சென்றார்.

நேற்று காலை அவர் கோயிலை திறக்க வந்தார். அப்போது கோயில் உண்டியல் உடைக்கப்பட்டு, சில்லறைக் காசுகள் சிதறிக்கிடந்தன. இதனால் குருக்கள் அதிர்ச்சி அடைந் தார். இதுபற்றி அறிந்ததும் கோயில் முன் பொதுமக்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அடிப்படையில், ஆவடி உதவி ஆய்வாளர் சேரன் காவல் துறையினருடன் சம்பவ இடத்துக்கு விரைந்தார். கைரேகை நிபுணர்கள் வந்து உண்டியல், கோயில் கதவுகளில் பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். இதுகுறித்து வழக்குப் பதிந்துள்ள காவல்துறையினர் கோயி லில் கொள்ளையடித்துச் சென்றவர் களை பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த கோயிலில், கடந்த 3 மாதத்துக்கு முன்பும் உண்டியல் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. தற்போது உண்டியலில் 10,000 ரூபாய் இருந்திருக்கலாம் என்று கோயில் குருக்கள் தெரிவித்தார்.

Read more: http://viduthalai.in/e-paper/72082.html#ixzz2nayQRPdB

தமிழ் ஓவியா said...


நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. பலமான அணியாக இருக்கும் நெஞ்சுக்கு நீதி புத்தகம் வெளியீட்டு விழாவில் கலைஞர்


சென்னை, டிச.15- நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. பலமான அணியாக இருக்கும் என்றும், கூட்டணி குறித்து பொதுக்குழுவில் விவாதிப்போம் என்றும் நெஞ்சுக்கு நீதி புத்தக வெளியீட்டு விழா வில் கலைஞர் உரையாற்றினார்.

தி.மு.க. தலைவர் கலைஞர் எழுதிய நெஞ்சுக்கு நீதி (6 ஆவது பாகம்) புத்தக வெளியீட்டு விழா சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் நேற்று மாலை நடந்தது. விழாவுக்கு, தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் தலைமை தாங்கினார்.

புத்தகத்தை சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பி.ஆர்.கோகுலகிருஷ்ணன் வெளி யிட, கவிஞர் வைரமுத்து பெற்றுக்கொண்டார். நிறைவாக தி.மு.க. தலைவர் கலைஞர் ஏற்புரையாற் றினார். அப்போது அவர் உரையாற்றியதாவது:-

நெஞ்சுக்கு நீதி புத்தக வெளியீட்டு விழாவில் பேராசிரியர் அன்பழகன் கலந்துகொண்டது சந் தோஷமாக உள்ளது. அவர் இந்த நிகழ்ச்சிக்கு வருவாரோ?, வரமாட்டாரோ? என்ற சந்தேகம் எனக்கு இருந்தது. தற்போது, சந்தோஷமாக இருக்கிறது.

துன்பங்கள் என்னையும், தி.மு.க.வையும் தொட்ட போது, கவிஞர் வைரமுத்து நம்மோடு இருப்பாரா? என்று பலரும் கேட்டதுண்டு. அவர்களிடம் நிச்சயம் இருப்பார் என்று கூறினேன். பொதுவாக இந்த இயக்கத்தில் இருந்து கவிஞர்கள் காணாமல் போய்விடுவதுண்டு. அப்படி போனவர்கள் திரும்பி வந்ததும் உண்டு.

நான் பிறந்த 1924 ஆம் ஆண்டு முதல் 1969 வரை நெஞ்சுக்கு நீதி முதல் பாகமும், 1969 முதல் 1976 ஆம் ஆண்டு வரை நடந்த நிகழ்வுகளை 2 ஆம் பாகமாகவும் தொகுத்துள்ளேன்.

1976 ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சி கலைக்கப் பட்டது. இலங்கை தமிழர்களுக்கு உறுதுணையாக இருந்தோம் என்று காரணம் காட்டி தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டது. அதேபோல், சந்திரசேகர் பிரத மராக இருந்தபோதும் விடுதலைப் புலிகளுக்கு தி.மு.க. அரசு உதவியதாக கூறி, தி.மு.க. ஆட்சி கலைக் கப்பட்டது.

அப்போது, தி.மு.க. அரசை கலைக்க வேண்டும் என்று தூண்டிவிட்டவர் யார் என்பதை நான் சொல்ல தேவையில்லை. ஆளுநரின் கருத்து கேட் காமலேயே ஆட்சி அப்போது கலைக்கப்பட்டது. இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால், இலங்கை தமிழர் பிரச்சினையில் நாங்கள் எதையும் செய்யவில்லை என்று இங்கே சில பேர் சொல் கிறார்களே, அவர்களுக்காகத்தான் இதை சொல் கிறேன்.

நெஞ்சுக்கு நீதி 6 ஆம் பாகமாக வந்துள்ளது. 7 ஆவது பாகம் உண்டா என்பது எனக்கு தெரியாது. இயற்கைக்குத்தான் தெரியும். இயற்கை வழி கொடுத்தால் 8, 9 ஆம் பாகம் கூட வெளிவரும்.

நான் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப் பட்டபோதெல்லாம் சட்டசபைக்குப் போய் வந்துள்ளேன். ஆனால், கடந்த ஓரிரு ஆண்டு காலமாகத்தான் நடக்க முடியாத காரணத்தால், சட்டசபையில் எனக்கு இடவசதி செய்து கொடுக் காததால் என்னால் சட்டசபைக்குச் செல்லமுடிய வில்லை.

இருப்பினும் மக்கள் தொண்டு ஆற்றிவருகிறேன். இந்தத் தொண்டு தொடரும். சட்டசபைக்குச் சென்று பேசினால் குண்டு கட்டாக தூக்கிப்போடக் கூடிய நிலைக்கு ஆளாகிவிடக்கூடாது என்பதற்காக மட்டுமல்ல, கழகத் தோழர்கள் இதன் மூலம் கொதிப்பும், வேதனையும் அடைந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான்.

தமிழகத்தில் அரசியல் நாகரிகம் எப்படி இருக்கிறது என்பதை கோபாலபுரம் வந்து பார்த்தால் உங்களுக்கு தெரியும். அங்குள்ள விளம்பரப் பதாகைகளை நீங்கள் பார்த்து அரசியல் நாகரிகத்தை தெரிந்துகொள்ளலாம்.

நாங்கள் மக்களைப் பற்றி கவலைப்படுகிறோம். ஆனால், நீ யார் கவலைப்பட என்று கேட்கிறார்கள். ஆனால், மக்கள் பணி ஆற்றுவதில் எங்களை பிரித்து விட முடியாது. ஒரு சமுதாய இயக்கமாக உருவாகி, அரசியல் இயக்கமாக தி.மு.க. திகழ்கிறது. அரசியல் இயக்கம் என்று சொல்லும் போதே நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி, யாருடன் சேர்வீர்கள் என்ற கேள்விகளும் கேட்கத் தோன்றும்.

யாருடன் சேர வேண்டும், யாருடன் சேரக் கூடாது என்பதை கடந்த கால நிகழ்வை சிந்தித்து பார்த்து பொதுக்குழுவில் விவாதிப்போம். பொதுக் குழுவில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை 21 ஆம் தேதி முதல் மாவட்டத் தலைநகரங்களில் கூட்டம் நடத்தி மக்கள் மத்தியில் விளக்கி பேச வேண்டும். யாருடன் கூட்டு என்று கேட்பவர்களுக்கு அணி உண்டு, எந்த அணி என்று இப்போது சொன்னால் பிணியாகிவிடும். ஆனால், தி.மு.க. பலமான அணியாக இருக்கும்.

- இவ்வாறு தி.மு.க. தலைவர் கலைஞர் உரையாற்றினார்.

Read more: http://viduthalai.in/page-5/72087.html#ixzz2naz09lQd

தமிழ் ஓவியா said...

ஈழத்தமிழர் பிரச்சினை- நிரந்தரத் தீர்வுக்கு ஈழத்தமிழர்களிடத்தில் பொது வாக்கெடுப்பு நடத்துக!
தமிழக மீனவர் பிரச்சினை, சேதுசமுத்திர திட்ட அமல் உள்ளிட்ட 23 தீர்மானங்கள் தி.மு.க. பொதுக்குழு நிறைவேற்றியது

சென்னை, டிச.15- ஈழத்தமிழர் பிரச் சினைக்கு நிரந்தரத் தீர்வு ஏற்பட ஈழத் தமிழர்களிடத்தில் பொது வாக்கெடுப்பு தேவை என்பது உள்பட தி.மு.க பொதுக்குழுவில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தி.மு.க தலைவர் கலைஞர் தலைமையில் இன்று (15.12.2013) சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற தி.மு.க. பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

மீனவர் பிரச்சினை

தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் 6.10.2013 அன்று, பிரதமர் திரு. மன்மோகன் சிங் அவர்களுக்கும், வெளியுறவுத்துறை அமைச்சர் திரு. சல்மான் குர்ஷித் அவர்களுக்கும், தமிழக மீனவர்கள் அன்றாடம் சிங்கள கடற்படை யினரால் தாக்கப்பட்டும், சிறைப்பிடிக்கப் பட்டும் அனுபவிக்கும், துன்ப துயரங்களை விளக்கியும், அதற்கு உடனடித் தீர்வு வேண்டும் என்பதை வலியுறுத்தியும், விரிவான கடிதம் ஒன்றை திராவிட முன்னேற்றக் கழக நாடாளு மன்ற மேலவை உறுப்பினர் திருமதி. க. கனி மொழி அவர்கள் மூலம் அனுப்பி வைத்துள் ளார்கள்.

அந்தக் கடிதத்தில் குறிப்பாக, 1983-ஆம் ஆண்டு முதல் இதுவரை 400 தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டும் கூட இலங்கை அரசின் இந்த காட்டுமிராண்டித்தனம் கண்டு, இந்திய நாடு மவுன சாட்சியாக இருந்திடலாமா? என்று வினா எழுப்பியுள்ளார்கள். இதுவரையில் தமிழக மீனவர்கள் பிரச்சினை தீர்வு ஏற்படாமல் தொடர்கதையாகவே இருக்கிறது. 11.12.2013 ஆம் தேதி 36-க்கும் மேற்பட்ட படகுகளில் மீன்பிடிக்கச் சென்றபொழுது, இலங்கை கடற்படையினர், அவர்களைச் சுற்றி வளைத்து, 250-க்கும் மேற்பட்டவர்களைக் கைது செய்து அவர்களை யாழ்ப்பாணத்திற்குக் கொண்டு சென்றுள்ளனர்.

இச்செய்தியறிந்து தலைவர் கலைஞர் அவர்கள், தமிழக மீனவர்களுக்கு தங்களின் மீன்பிடித் தொழிலை நடத்தும், வங்கக் கடலே திறந்த வெளிச் சிறைச்சாலையாக ஆக்கப்பட்டுவிட்டது என வேதனையோடு தெரிவித்துள்ளார்கள். இவ்வளவு வேதனையுடன் தமிழக மீனவர்களுக் காக குரல் கொடுத்தும், மத்திய அரசும், மாநில அரசும், இதுவரையிலும் உரிய நடவடிக்கை எதையும் மேற்கொள்ளவில்லை.

இரு நாட்டு மீனவப் பிரதிநிதிகளும் சந்தித்துப் பேசி, பிரச்சினைகளுக்குத் தீர்வு காண மத்திய அரசு தமிழக அரசோடு தொடர்பு கொண்டிருப் பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால் மாநில அரசு இந்த முக்கியப் பிரச்சினையில் காலதாமதம் செய்து வருகிறது.

எனவே நெருக்கடியான இந்தச் சூழ்நிலையில் இனியும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக இரு நாடுகளின் மீனவர் பிரதிநிதிகளை அழைத்து சமரசப் பேச்சுவார்த்தைக்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டுமென இப்பொதுக்குழு மத்திய, மாநில அரசுகளை வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

சேது சமுத்திரத் திட்டத்தை விரைவில் நிறைவேற்ற வேண்டும்!

தமிழ் ஓவியா said...

அறிஞர் அண்ணா அவர்களின் கனவுத் திட்டமான சேது சமுத்திரத் திட்டம், தலைவர் கலைஞர் அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்ததன் காரணமாக, மத்திய அரசால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, உச்சநீதி மன்றத்தின் உத்தரவால் நிறுத்தி வைக்கப்பட வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது.

உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள வழக்கில், மத்திய அரசு சேதுச் சமுத்திரத் திட்டப் பணிகள் ஏற்கெனவே முடிவு செய்யப்பட்ட வழியில் தொடரலாம் என பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்துள்ளது. தென் மாவட்ட மக்களின் முன்னேற்றத்திற்கான சேது சமுத்திரத் திட்டத்திலும் முன்னுக்குப் பின் முரணாக ஜெயலலிதா கருத்துக்களைச் சொல்லிக் கபட நாடகம் ஆடுகிறார்.

2001ஆம் ஆண்டு ஜெய லலிதா வெளியிட்ட அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையிலும், 2004ஆம் ஆண்டு ஜெயலலிதா வெளியிட்ட தேர்தல் அறிக்கையிலும் - வலியுறுத்திச் சொல்லிவிட்டு; தற்போது அந்த இடத்தை தேசியச் சின்னமாக அறிவிக்க வேண்டுமென்று ஜெயலலிதா சொல்வது, தென் மாவட்டங்களின் வளர்ச்சியிலும், முன்னேற்றத்திலும் ஜெயலலிதா எந்த அளவுக்கு அக்கறை யில்லாமல் நடந்து கொள்கிறார் என் பதையே காட்டு கிறது.

பிற் போக்குச் சக்திகளின் முயற்சி களை முறியடித்து, தாமதமாகி வரும் சேதுக் கால்வாய்த் திட்டத்தை விரைந்து செயல்படுத்தி முடித்திடத் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டுமென திராவிட முன்னேற்றக் கழகம் 1967ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

உச்சநீதி மன்றத்தில் மத்திய அரசின் சார்பாக, திட்டப் பணிகள் தொடங்குவதற்குச் சாதகமாக பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்யப் பட்டுள்ள நிலையில் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கினை விரைவுபடுத்தி முடித்து, சேது சமுத்திரத் திட்டப்பணிகளை மீண்டும் தொடங்கிட வேண்டுமென மத்திய-மாநில அரசுகளை இப்பொதுக்குழு வலியுறுத்திக் கேட்டுக்கொள் கிறது.

ஈழத் தமிழர் பிரச்சினையில் நிரந்தர அரசியல் தீர்வு

இலங்கையில் வடக்கு மாகாணத் தேர்தல் முடிந்து முதல்வர் விக்னேஸ்வரன் தலைமை யில் மாகாணக் கவுன்சில் அமைந்துள்ளது. இலங்கை அரசியல் அமைப்புச் சட்டத்தின் 13ஆவது திருத்தத்தின்படி பல அதிகாரங்கள் தமிழர்களுக்கு வழங்கப்படும் என்பது இலங்கையில் ஏட்டுச் சுரைக்காயாகவே இருந்து வருகிறது. 13ஆவது சட்டத் திருத்தத்தின்படி நில நிர்வாகம் (Land Administration), உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள காவல் துறை நிர்வாகம் அனைத்தும் இராஜ பக்சே அரசின் கையில் உள்ளது.

மாகாணக் கவுன்சிலைக் கூட்டுவதும், கலைப்பதும் இராஜபக்சே அரசின் மாகாண ஆளுநரின் கைகளில் உள்ளது. முதல்வர் விக்னேஸ்வரன் தலைமையில் உள்ள அமைச்சரவையின் பரிந்துரைகளை ஏற்பது அல்லது நிராகரிப்பதற்கான அதிகாரம் மாகாண ஆளுநருக்கும், இராஜபக்சேவுக்கும் தான் உள்ளது. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் முழுவதும் நீர்த்துப் போன அரசியல் அதிகாரப் பங்கீடுகளே அனுமதிக்கப்பட்டுள்ளன.

அங்குள்ள தமிழர்களின் விருப்பத்திற்கேற்ற வாறு நிரந்தரமான அரசியல் தீர்வு அமைய, வடக்கு, கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழர்கள் மற்றும் புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களிடையில் பொது வாக்கெடுப்பு நடத்தவும்;

தமிழினப் படுகொலை, போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் மீது நம்பகமானதும், சுதந்திரமானது மான சர்வதேச விசாரணை நடத்தவும் மத்திய அரசு அய்-நா. மனித உரிமைகள் ஆணையத்தில் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றிடவும் வலியுறுத்து வதோடு, இடைக்கால நிவாரண மாக முழுமையான அதிகாரங்கள் தமிழர் களுக்குக் கிடைத்திடும் வகையில், 13ஆவது சட்டத் திருத்தம் அமைந்திட இலங்கை அரசை வலியுறுத்தி தமிழர்களின் விருப்பத்தை நிறை வேற்றிட வாவது இந்திய அரசு முன்வர வேண் டும் என்று இப்பொதுக்குழு வலியுறுத்துகின்றது.

Read more: http://viduthalai.in/page-7/72061.html#ixzz2nazbMYXB

தமிழ் ஓவியா said...


பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் மூடநம்பிக்கை உச்சத்துக்குப் போகும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி எச்சரிக்கை


திருப்பூர், டிச.15- இந் துத்துவ மதவெறி அடிப் படையிலான பாரதீய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால் மூடநம்பிக்கை உச்சத்துக்குப் போகும் என்று திருப்பூரில் நடை பெற்ற மக்கள் கோரிக்கை மாநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மத் தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி கூறினார்.

திருப்பூர் அரிசிக் கடை வீதியில் நடை பெற்ற மாநாட்டில் உ.வாசுகி பேசியதாவது:

உலக வர்த்தக அமைப்பு ஒப்பந்தம் இந்திய நாட்டு மக்களுக்கு எதிரானது

உலக வர்த்தக அமைப்பு மாநாட்டில் இந்தியா உணவு மானி யத்தைக் குறைக்க வேண் டும் என்று அமெரிக்க ஏகாதிபத்தியம் நிர்ப்பந் தித்துள்ளது. அமெரிக் காவில் விவசாயிகளுக்கு 385 கிலோ மானியம் வழங்கும் அந்த நாட்டு அரசு இந்தியாவில் 60 கிலோ மானியம் வழங் குவதை அநியாயம் என்று அதை வெட்டச் சொல்கிறது.

இந்தியா போன்ற வளரும் நாடு கள் எதிர்ப்புத் தெரி வித்த அடிப்படையில் இந்த உத்தரவை நான் காண்டு காலத்திற்கு ஒத்தி வைத்துள்ளனர். உலக வர்த்தக அமைப்பு ஒப்பந்தம் உருவான போதே அது இந்திய நாட்டு மக்களுக்கு எதி ரானது என்று மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்த்தது.

நரேந்திர மோடி அலை என்ற தில்லுமுல்லு மோசடிகளை....

நாட்டில் நரேந்திர மோடி அலை வீசுவ தாகச் சொல்கிறார்கள். ஆனால் டில்லியில் அவ ரது அலையால் பாஜக ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை ஏன்? கடலில் அலை வரும் போகும், ஆனால் கரை பலமாக இருந்தால் எந்த அலையாலும் அதை உடைக்க முடியாது. நரேந்திர மோடி அலை என்ற தில்லுமுல்லு மோசடிகளை, மக்கள் ஒற்றுமை என்ற வலு வான கரையைக் கொண்டு தடுத்து நிறுத்த முடியும்.

நரேந்திர மோடி, காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சிக் கிறார். ஆனால் காங் கிரஸ் கட்சியின் கொள் கைகளை அவர் விமர் சிப்பது கிடையாது. டில்லியில் இளம்பெண் பாலியல் வன்கொடு மைக்கு ஆளான சம் பவம் நடந்தபோது, சம்பவத்தில் ஈடுபட்ட ஆண்களைப் பார்த்து சகோதரனே என்று கெஞ்சியிருந்தால், சரஸ்வதி மந்திரம் உச் சரித்திருந்தால் தப்பி யிருக்கலாம் என்று ஆசாராம் பாபு என்ற சாமியார் சொன்னார்.

சரஸ்வதி மந்திரம் பலிக்கவில்லை போலும்!

ஆனால் அவரது ஆசி ரமத்தில் வேலை செய்த இளம் பெண்களையே அவர் பாலியல் வன் கொடுமைக்கு ஆளாக்கி இப்போது சிறையில் இருக்கிறார். அங்கெல் லாம் சரஸ்வதி மந்திரம் பலிக்கவில்லை போலும். மேலும் இந்த சாமியா ருக்கு பாதுகாப்பாக குரல் கொடுத்தது யார் தெரியுமா? பாஜகவுக்கு நெருக்கமான இந்துத் துவ அமைப்பான விசுவ இந்து பரிஷத் தலை வர்கள் தான் ஆசாராம் பாபுக்கு ஆதரவாக இருந்தனர்.

எனவே பெண் களுக்கு எதிரானவர்கள் இவர்கள். மேலும் பாஜக ஆட்சிக்கு வந்தால் மூட நம்பிக்கை உச்சத்துக்குப் போகும். - இவ்வாறு உ. வாசுகி உரையாற்றினார்.

Read more: http://viduthalai.in/page-8/72084.html#ixzz2nb0EfJ9e

தமிழ் ஓவியா said...


மூடனே!


கடவுள் ஒருவர் உண்டு என்று சொல்லிச் சோம்பித் திரிந்துகொண்டு, தொட்டதற் கெல்லாம் கடவுள்மீது பழிபோட்டுத் திரிகின்றவன் ஒரு மூடனே!
(விடுதலை, 1.2.1969)

Read more: http://viduthalai.in/page-2/72144.html#ixzz2nekoIubu

தமிழ் ஓவியா said...


ஒற்றுமை ஓட்டமா?

நரேந்திரமோடி என்றாலே நம்பகத் தன்மை வாய்ந்த மனிதரல்ல - அவரின் ஒவ்வொரு நடவடிக் கையிலும் நயவஞ்சகமும், தந்திரமும் கைகோர்த் தாடும் என்பது மெல்ல மெல்ல மக்களுக்குப் புரிந்துதான் வருகிறது.

இரகசியமாய் இருந்த உண்மையை இந்தியாவின் தலைநகர மக்கள் மிகச் சரியாகவே உணர்ந்து கொண்டு விட்டனர். டில்லியில் நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தேர்தலில் அதனை நிரூபித்தும் காட்டி விட்டனர்.

மோடியின் மீது ஏற்கெனவே விழுந்துள்ள முத் திரைகள் எல்லாம் மத வெறியர் - சிறுபான்மை மக்களின் கொடும் எதிரி, கோத்ரா ரயில் எரிப்பு என்ற போர்வையில் ஆயிரக்கணக்கான முசுலிம் மக்களைக் கொன்று குவிக்கக் காரணமாக இருந்தவர்; அவர்களின் வீடுகளையும், வியாபார நிறுவனங் களையும் கொளுத்தியும், இடித்தும் வன்முறை வெறியாட்டத்தை நடத்திக் காட்டியவர் என்ற முத்திரைகள் எல்லாம் கணிசமான அளவுக்கு அவர்மீது உலக்கை இடிபோல் விழுந்திருக்கின்றன.

இதிலிருந்து அவர் கரை ஏறிட எந்தப் பொய்யை யாவது, புனை சுருட்டையாவது ஜோடித்து அவற்றின் மீது மோடியை சவாரி செய்ய வைக்க வேண்டும் என்ற நெருக்கடி அவர்களுக்கு!

மோடி பராக்! பராக்!! இந்தியாவிலேயே வளர்ச்சிப் பாதையில் குஜராத்தை முதல் மாநிலமாக்கிய மோடி பராக்! பாரக்!! - என்று பூமியே அதிரும் அளவுக்குப் பிரச்சார சத்தத்தைப் போட வைத்தனர்.

இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக வந்த ரகுராம் ராஜன் தலைமையிலான அறுவர் கொண்ட அறிக்கை - குஜராத் வளர்ச்சி அடைந்த மாநிலம் அல்ல; மாறாக தளர்ச்சி அடைந்து தள்ளாடும் மாநிலம் என்று தரைமட்டமாக அடித்துத் தூக்கி எறிந்து விட்டது.

இப்பொழுது அந்த வளர்ச்சிப் பல்லவியை கொஞ்சம் கொஞ்சமாகக் கைவிட்டு விட்டனர். திடீரென்று குஜராத் மாநிலத்தில், வல்லபாய் பட்டேலுக்கு 597 அடி உயரத்தில் மிகப் பெரிய சிலையை நிறுவப் போவதாகக் கூறி, இந்திய மக்களை எல்லாம் தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார்.

படேல் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பெரிய தலைவர் - அதனால் மண்ணின் மைந்தரைப் பெருமைப்படுத்துகிறார் என்று சொல்ல முடியாது - அப்படியானால், காந்தியாரும் அம்மாநில மண்ணின் மைந்தர் தானே? அவருக்கல்லவா 597 அடிக்கு மேலாக உயரமான சிலையை நிறுவியிருக்க வேண்டும்? ஏன் படேலைத் தேர்வு செய்தார்?

படேல்மீது கொஞ்சம் இந்துத்துவாவின் நிழல் உண்டு. பாகிஸ்தான் பிரிவினையின்போது டில்லியில் முசுலிம்கள்மீது தொடுக்கப்பட்ட தாக்குதல்கள் கொலைகள் இவற்றைக் கட்டுப்படுத்துவதில் அன்றைய உள்துறை அமைச்சராகவிருந்த படேல் போதிய ஆர்வம் - அக்கறை காட்டவில்லை என்ற குற்றச்சாற்று உண்டு. காந்தியாரும், நேருவும்கூட அப்பொழுது படேலிடம் அதிருப்தி அடைந்தனர் - இந்த அடிப்படையில் இந்துத்துவாவாதியான மோடி போன்றவர்கள் படேலின்மீது பற்றுதல் கொண்ட வர்களே!
ஆனாலும் காந்தியார் படுகொலை செய்யப்பட்ட போது அதற்குக் காரணமாகவிருந்த ஆர்.எஸ். எஸைத் தடை செய்து ஆணை பிறப்பித்தவர் அன்றைய உள்துறை அமைச்சர் படேல்தான்.

ஆர்.எஸ்.எஸ். முஸ்லிம்களைத் தாக்குகிறது. ஹிந்துக்களைத் தூண்டுவதற்காக விஷத்தைப் பரப்புவது என்ன நியாயமாம்? வகுப்புவாத உணர்வைத் தூண்டியதன் விளைவாக மகாத்மா காந்தியாரைப் பலி கொடுக்க நேர்ந்தது. ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் அதை இனிப்பு வழங்கிக் கொண்டாடினர். வன்முறையை வளர்த்த தாலும், அரசுக்குக் கட்டுப்பட மறுத்ததாலும் ஆர்.எஸ்.எஸ். தடை செய்யப்படுகிறது என்று உத்தரவு போட்டவர் படேல்.

இவற்றையெல்லாம் மறைத்துவிட்டு, படேலுக்கு 597 அடி உயரத்தில் சிலை என்று விளம்பரம் செய்து நாடெங்கும் ஒற்றுமை ஓட்டம் என்று கூத்தை அரங்கேற்றியுள்ளது. படேல் சிலைக்கு இரும்பு, மண் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களைச் சேகரிக்கிறது.

இதுபோன்ற செயல்கள்மூலம் மோடிமீது விழுந்திருக்கும் மோசமான முத்திரைகளிலிருந்து திசை திருப்பி விடலாம் என்ற உள் நோக்கம் இதற்குள் புதைந்து கிடக்கிறது என்பதைப் பொது மக்கள் அறியத் தவறக் கூடாது என்பதே நமது வேண்டு கோளாகும். ஒற்றுமை ஓட்டம் என்று பிஜேபி கூறிடத் தகுதி உண்டா? பிறப்பிலேயே ஜாதி பேதம் கற்பித்து மக்களை மத ரீதியாகப் பிளவுபடுத்தி மனித ஒற் றுமையைச் சீர்குலைக்கும் இந்துத்துவாவாதிகளின் ஒற்றுமை ஓட்டம் நகைப்பிற்குரியதாகும்.

Read more: http://viduthalai.in/page-2/72145.html#ixzz2nekwvn00

தமிழ் ஓவியா said...


வரும்... ஆனால் வராது...

கேள்வி: கடவுள் இருக்கிறாரா?

பதில்: இருக்கிறார் - ஆனால் முகவரி இல்லை. (குமுதம் 18.12.2013 பக்கம் 12).

ஒருவனைப் பார்த்து நீ முகவரி இல்லாத பேர்வழிதானே என்று கேட்டால் மூக்கைப் பொத் துக் கொண்டு கேட்கப்பட்டவனுக்குக் கோபம் பொத்துக் கொண்டு வரும்; கடவுளை அந்தப் பட்டியலில் வைத்துப் பதில் சொல்லுகிறது குமுதம். ஆனால் கடவுளுக்கே கோபம் வராது - காரணம் அப்படி ஒருவர் இருந்தால்தானே கோபம் வரும்? வரும்... ஆனால் வராது என்ற சினிமா நகைச்சுவை வசனக் காட்சி நினைவிற்கு வருகிறதா?

Read more: http://viduthalai.in/e-paper/72143.html#ixzz2nelE73d7

தமிழ் ஓவியா said...


நெருக்கடி நிலைக் காலத்தில் பெரும் இடர்ப்பாடுகளைச் சந்தித்த பெரியார் பெருந்தொண்டர் மானமிகு வ.சு.சம்பந்தம் மறைந்தாரே!

கடலூர் மண்டல திராவிடர் கழகத் தலைவர் புதுவை மானமிகு வ.சு.சம்பந்தம் அவர்கள் (வயது 79) இன்று திடீர் மறைவுற்றார் என்ற தகவலை அறிந்து அதிர்ச்சியுற்றேன். இளம் பருவத்திலேயிருந்து இயக்க ஈடுபாடு கொண்ட இலட்சிய வீரர் அவர்.

கூட்டுறவுத் துறையில் பணியாற்றியவர். நெருக்கடி நிலைக் காலத்தில் பெரும் இடர்ப்பாடு களைச் சந்தித்தவர். பொருள் நட்டத்திற்கெல்லாம் ஆளானவர் தோழர் சம்பந்தம் அவர்கள்.

தனக்கு இழைக்கப்பட்ட அநீதி, சட்ட விரோத செயல்களையெல்லாம் முகம் கொடுத்து, சந்தித்து, நீதிமன்றம் சென்று, கடைசியில் சிரிப்பவர் யார்? என்ற முறையில் வெற்றியும் கண்டவர்!

அவருக்குக் கழகத் தலைமை, பல வகைகளில் துணையாயும் நின்றது. தான் மட்டுமல்லாமல், தன் குடும்பத்தினர் அனைவரையும் கொள்கை வழியில் வார்த்தெடுத்த கொள்கை வீரர் அவர்! கழகக் கொள்கைகளை மேடைகளில் மணிக்கணக்கில் பேசும் ஆற்றல் படைத்தவர். கழகம் கல்தூண்போல் அசையாது நின்ற கருஞ்சட்டை வீரரை இழந்துவிட்டது.

அவரது குடும்பம் தம் தலைவரை இழந்துவிட்டது! குடும்பத்தினருக்கும், கழகத் தோழர்களுக்கும் இரங்கலையும், ஆறுதலையும் தெரிவிப்பதுடன், அவர்தம் அளப்பரிய அருந்தொண்டுக்கு கழகம் வீர வணக்கத்தைச் செலுத்துகிறது.

- கி.வீரமணி,
தலைவர், திராவிடர் கழகம்.

குறிப்பு: தலைமைக் கழகத்தின் சார்பில் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு, பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் ஆகியோர் இறுதி நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள்.

வா.சு.சம்பந்தம் அவர்களின் வாழ்விணையர் மானமிகு மீனாசம்பந்தம், மகன் மாறன் ஆகியோரிடம் கழகத் தலைவர் தொலைப்பேசியின்மூலம் தொடர்பு கொண்டு இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்தார்.

Read more: http://viduthalai.in/page-8/72119.html#ixzz2nemEf2lm

தமிழ் ஓவியா said...


இதயத்தைப் பாதுகாக்கும் விளாம்பழம்


அடிக்கடி நெஞ்சுவலி ஏற்படுபவர்கள், விளாம்பழம் சாப்பிட்டுவர குணமாகும். வெயில் காலத்தில் அடிக்கடி தாகம் எடுத்தால் கூட இதைச் சாப்பிடலாம் ஏனெனில் இதயத்துக்கும் பாதுகாப்பு, தாகமும் தீரும்.. இப்பழத்தி லிருந்து கல்லீரல் மற்றும் இதய கோளாறுக்கான டானிக்குகள் தயாரிக்கப்படுகின்றன. இது பழுக்காத போது துவர்ப்பாக இருக்கும். இது வயிற்றுபோக்கையும், வயிற்றுக்கடுப்பையும் நிறுத்தும் குணம் கொண்டது.

இதுவிக்கலுக்கு நல்ல மருந்தாக பயன்படுகிறது. தொண்டை புண்ணை இதனுடைய கோந்து சரி செய் கிறது. இதனுடைய சதை வீக்கத்திற்கு வைத்து கட்டு கிறார்கள்..

விஷப்பூச்சிகள் கடித்தால் பழ ஓட்டின் பவுடரை அரைத்து பூசுவதால் சரியாகிறது. பெரும் பயன் தரும் பழங்களில் இது ஒன்று. அடிக்கடி மார்பில் வலி ஏற்பட்டால், உங்கள் வயிற்றில் புளிப்பு தன்மையுடைய நீர் அதிகமாகி விட்டது என்று அர்த்தம். இதைப்போக்க இஞ்சியும், எலுமிச்சம்பழமும் உணவில் நிறைய சேர்த்துக் கொள்ளவும்.

அதன்பிறகு மார்பு வலி வராது. அடிக்கடி நெஞ்சுவலி ஏற்பட்டால், மாத்திரை மருந்து சாப்பிடுவதைவிட உளுந்து மாவைக் களியாகக்கிண்டி சாப்பிட்டு வந்தால் உடலுக்கும் பலம், நெஞ்சு வலியும் போகும். மாரடைப்பு, இதயநோய் வராமலிருக்க அடிக்கடி உணவில் வெங்காயம் சேர்த்துக் கொள்ளவும். கடலைப்பருப்பையும் அடிக்கடி உணவில் சேர்த்த்துக் கொள்ளவும்.

பூண்டைப் போட்டு காய்ச்சியும் பருகி வரலாம். மார்பில் நமநம என்று வலி ஏற்பட்டு தொந்தரவு வரும்போது செம்பரத்தம்பூ கஷாயம் மிகவும் நல்லது. பூக்களை சுத்தம்செய்து, சுண்டும்படியாக கஷாயம் வைத்து, பாலும் சர்க்கரையும் கலந்து சாப்பிட்டு வந்தால், மார்புவலி இருக்காது. இருந்த வலியும் நின்றுபோகும்.

குப்பைமேனி இலையை உலர்த்தி இடித்து மெல்லிய துணியில் சலித்துக் கொண்டு, சமமாகச் சர்க்கரை சேர்த்து, 200 மில்லி பசும்பாலில் கலந்து, காலையில் மட்டும் சாப்பிட்டு வரவும்.

இவ்வாறு 15 நாட்கள் சாப்பிட்டால், மார்பு வலி நீங்கி உடலுக்குக் குளிர்ச்சியைக் கொடுக்கும்.

Read more: http://viduthalai.in/page-7/72114.html#ixzz2nenWQ73g

தமிழ் ஓவியா said...


பனியிலிருந்து பாதுகாக்க வழிமுறைகள்

சுள்ளெனக் கொளுத்தும் வெயிலையும், சடசட மழை யையும் தாங்கி கொள்ளலாம். அதுவும் எலும்பை ஊடுருவும் கார்த்திகை, மார்கழிப் பனியைக் கண்டால் பயப்படுவோம். மழையும் குளிரும் வாட்டும் இந்த காலக்கட்டங்களில் காய்ச்சலும் சளித் தொந்தரவும் எளிதில் வந்துவிடும். உதடுகளில் வெடிப்பு, கை, கால்களில் வறட்சி ஏற்படும். இதற்காக நாம் கவலைப்பட வேண்டாம். நாம் கொஞ்சம் முன்னெச்சரிக்கையாக இருந்தால் பனியும் குளிரும் நம்மை எதுவும் செய்யாது.

ஒரே சீரான தட்ப வெப்பநிலை இல்லாமல் வெப்பமும் பனியும் கலந்து இருக்கும் நாட்களில் கிருமிகளின் தாக்கம் அதிகம் இருக்கும். பனிக்காலத்தில் ஏ டிபிக்கல் வகை வைரஸ் அதிகமாக தாக்கும். இந்த வைரஸ் கிருமிகள் தாக்கினால் 10 முதல் 13 நாட்கள் வரை வலி நீடிக்கும். சுற்றுச் சூழல் மற்றும் வாழ்வியல் மாற்றங்களால் நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியின் அளவு குறைந்து வருவதுதான் இதற்குக் காரணம். இந்த வைரஸ் குழந்தைகளையும், வயதானவர்களையும்தான் அதிகம் தாக்குகிறது.

இந்தக் காய்ச்சல் வந்தவர்கள் காரத்தைத் தவிர்த்துவிட வேண்டும். இட்லி, இடியாப்பம், கோதுமை ரவை உப்புமா, புழுங்கல் அரிசி கஞ்சி, பிரெட் ஆகியவற்றைச் சாப்பிடலாம். சப்போட்டா, மாதுளை, ஆப்பிள் ஆகிய பழங்களை சாப் பிடலாம். புளிப்புச் சுவை நிறைந்த பழங்களைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.வெயில் காலங்களில் நம் உடம்புக்கு ஒத்துக்கொள்ளும் இந்தப் பழங்கள், குளிர் காலங்களில் ஒத்துக்கொள்ளாது. காரணம், தட்பவெப்ப நிலைக்கு ஏற்றமாதிரி நம் உடல் செயல்பாடுகள் மாறுவதுதான்.

வெயில் காலங்களில் நமக்கு அதிகமாக வியர்க்கும். அப்போது வியர்வையுடன் சேர்ந்து அல்கலைன் சிட்ரேட் என்ற அமிலமும் நம் உடலில் இருந்து வெளியேறும். அதை ஈடு செய்வதற்காக அமிலச் சத்து நிறைந்த சிட்ரஸ் பழங்கள் மற்றும் மோர், பானகம் போன்ற புளிப்புச்சுவை நிறைந்த பானங்களைப் பருகுவோம். குளிர்காலத்தில் அதிகமாக வியர்க்காத நிலையில் இவற்றைக் குடிக்கும்போது, நம் உடலில் அதிக அளவில் அமிலச் சத்து சேர்ந்து, சளி, சைனஸ் போன்றவை ஏற்படலாம். முக்கியமாக பச்சை திராட்சையையும், பச்சை வாழைப்பழத்தையும் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

பனிக்காலத்தில் பொதுவாகவே தொண்டை வலி ஏற்படும். எப்போதும் வெதுவெதுப்பான தண்ணீரையே குடிக்க வேண்டும். குளிக்க வேண்டும். வெந்நீரில் கைப்பிடி அளவு துளசி, கிராம்பு, மிளகு, ஏலக்காய் போட்டு கொதிக்க வைத்து, அந்த தண்ணீரைக் குடித்தால் சளி பிடிக்காது, தொண்டை வலியும் வராது. துளசி கிடைக்கவில்லை என்றால் கற்பூர வல்லி, தூதுவளை கீரை ஆகியவற்றில் கஷாயம் வைத்தும் குடிக்கலாம். எந்தக் கீரையும் கிடைக்கவில்லையென்றால் இரண்டு வெற்றிலையை மென்று சாப்பிடலாம். கற்பூரவல்லி கஷாயம் குடிக்கப் பிடிக்கவில்லையென்றால் அதில் பஜ்ஜி, மோர்க் குழம்பு செய்து சாப்பிடலாம்.

குழந்தைகளுக்கு இரவில் தூங்குவதற்கு முன்பு காதுகளின் பின்புறங்களில் லேசாகத் தைலம் தேய்த்தால் சளி பிடிக்காது. எந்த உணவாக இருந்தாலும் சுடச்சுட சாப்பிடத் தர வேண்டும். கடுகுடன் பால் அல்லது தண்ணீர் சேர்த்து அரைத்து, தினமும் பூசி வர, சருமம் மென்மையாகி, பளபளக்கும். ஒரு கரண்டி ஆலிவ் ஆயிலை ஒரு பக்கெட் நீரில் கலந்து குளிக்கலாம். சருமம் மிகவும் வறண்டிருந்தால், ஆலிவ் ஆயிலை உடம்பில் பூசி, மசாஜ் செய்யவும். 15 நிமிடத்திற்கு பிறகு குளிக்கலாம். சிறிது பஞ்சை காதில் வைத்துக் கொண்டு சென்றாலும், குளிர் காற்றி லிருந்து தப்பிக்கலாம்.

குளிர்ச்சியான பானங்களை அருந்துவதை தவிர்க்கவும். சூப் அருந்தலாம். குழந்தைகளுக்கு குல்லா, ஸ்வெட்டர், சாக்ஸ் அணிவித்து, வெளியே அழைத்துச் செல் வதும் அவசியம். எண்ணெய் மற்றும் மசாலா வகைகள் அதிகம் சேர்த்த உணவுகளை தவிர்ப்பது நல்லது. தினமும் காலையில், துளசி இலை நான்கை தண்ணீரில் ஊற வைத்து அருந்துவது நல்லது.

Read more: http://viduthalai.in/page-7/72113.html#ixzz2nenfYM5U

தமிழ் ஓவியா said...


நடவடிக்கை

பார்ப்பனர்களுக்கு விரோதமாக எவர் நடக்க ஆரம்பித்தாலும் அவர்களை ஒழித்துக்கட்டவே பார்ப்பனர் சதி செய்வார்கள். புராண கால முதலே இதுதான் அவர்கள் நடவடிக்கையாக இருந்து வந்திருக்கிறது.

- (விடுதலை, 14.7.1961)

Read more: http://viduthalai.in/page-2/72165.html#ixzz2nk012Thc

தமிழ் ஓவியா said...


அய்யப்பன் கோயில் தரிசனச் சீட்டில் மோசடி!

திருவனந்தபுரம், டிச. 17- சபரிமலை அய்யப்பன் கோயிலில் தற்போது மண்டல கால பூஜைகள் நடந்து வருகின்றன. சபரிமலையில் பக்தர்கள் எளிதில் தரிசனம் செய்ய கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் ஆன்லைன் தரிசன முன்பதிவு தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் வெகு தொலைவில் இருந்து வரும் பக்தர்களால் எளிதில் தரிசனம் செய்ய முடிந்தது. இந்நிலையில் பக்தர்கள் போலி ஆன்லைன் டிக்கெட்களுடன் சபரிமலை வருவது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. ஒருவர் பயன்படுத்திய டிக்கெட்டில் புகைப்படத்தை மாற்றி ஒட்டியும், தேதியை திருத்தியும் பக்தர்கள் பயன் படுத்தி வருவது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து தென்மண்டல ஏடிஜிபி ஹேமச்சந்திரன் கூறுகையில், இவ்வருடம் பக்தர்கள் போலி ஆன்லைன் தரிசன டிக்கெட்டை கொண்டு வந்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. சில கணினி மய்யங் களில் இதுபோன்ற டிக்கெட்களை எடுத்து கொடுத்தது தெரியவந்துள்ளது. இவ்வாறு போலி ஆன்லைன் டிக்கெட் கொண்டு வரும் பக்தர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஆன்லைனில் பதிவு செய்வதற்கு எந்த கட்டணமும் கிடையாது. ஆனால் சில கணினி மய்யங் களில் இதற்கு கட்டணம் வசூலிக்கின்றனர். இவ்வாறு கட்டணம் வசூலிக்கும் கணினி மய்யங்கள் மீது நடவடிக்கை எடுக்கப் படும் என்றார்.

தமிழ் ஓவியா said...


தி.மு.க. பொதுக்குழுத் தீர்மானங்களுக்கு வரவேற்பும் பாராட்டும் - சுப. வீரபாண்டியன் அறிக்கை!

சென்னை, டிச.17- காங்கிரஸ், பா.ஜ.க., ஆகிய இரு கட்சிகளையும் விட்டு சம தூரத்தில் விலகி நிற்பது என தி.மு.க., பொதுக் குழுத் தீர்மானங்களை வரவேற்று திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப. வீரபாண்டியன் விடுத்துள்ள அறிக்கைவருமாறு:

15.12.2013 அன்று சென்னையில் கூடிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுக் குழு, தமிழக மக்களின் நலன் சார்ந்த பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது. இறுதியில், வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணி குறித்து, தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்களின் அறிவிப்பு பெரும் ஊக்கத்தையும் மகிழ்ச்சியையும் தருவதாக உள்ளது. காங்கிரஸ், பா.ஜ.க., ஆகிய இரு கட்சிகளையும் விட்டு சமதூரத்தில் விலகி நிற்பது என்னும் தி.மு.கழகத்தின் முடிவு மிகுந்த பாராட்டிற்கும், வரவேற்பிற்கும் உரியது. காங்கிரஸ் போன்ற கட்சிகளை கால காலமாக தூக்கிச் சுமந்ததும் போதும், மதவாதக் கட்சிகளோடு உறவும் ஒரு நாளும் வேண்டாம் என இரு திசைகளிலும் எடுக்கப்பட்டிருக்கும் நல்ல முடிவு இது. தி.மு. கழகத் தொண்டர்களிடம் புதியதோர் எழுச்சியை உருவாக்கியிருக்கும் இவ்வறிவிப்பு, பொது மக்களிடமும் ஏற்றதொரு வரவேற்பைக் கண்டிருக்கிறது. வழக்க மாகவே ஊக்கம் குறையாமல் தேர்தல் பணியாற்றும் தி.மு.கழகத் தொண் டர்கள் இம் முறை முழு மூச்சில் களத்தில் இறங்கிப் பணியாற்றுவார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. தி.மு.க. பொதுக்குழுவின் தீர்மானங்கள் அனைத்தையும் திராவிட இயக்கத் தமிழர் பேரவை மீண்டும் ஒரு முறை மகிழ்வுடன் வரவேற்கிறது.

தமிழ் ஓவியா said...


மதக் கலவரத் தடுப்புச் சட்டத்தை எதிர்ப்போர் யார்?


தஞ்சை வல்லத்தில், கடந்த14ஆம் தேதி கூடிய திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டத் தில், நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் ஒன்று - மதக் கலவரத் தடுப்புச் சட்டத்தை வரவேற்றதாகும். மத்திய அரசு கொண்டுவரும் மதக் கலவரம் மற்றும் குறி வைத்து மேற்கொள்ளப்படும் வன் முறைத் தடுப்பு (நீதி மற்றும் மறுவாழ்வு பெறுதல்) சட்ட வரைவு (Prevention of Communal Violence (Access to Justice and Repatriation) Bill) எனும் சட்டம் விரிவான பொருள்கொண்ட நியாயமான, தேவையான வரவேற்கப் படவேண்டிய சட்டம் ஆகும்.

அவசியம் கருதி இந்தச் சட்டத்தினைச் செயல் படுத்தும் போது மாநில அரசுகளின் உரிமைகளுக்குப் பங்கம் இல்லாமல், மாநில அரசுகளின் ஒப்புதலுடன் செயல்படுத் தும் வகையில், சட்டத்தில் சரத்துகளை இணைத்துக் கொள்ளுமாறு மத்திய அரசை இச்செயற்குழு வலியுறுத்துகிறது என்பதுதான் அந்தத் தீர்மானமாகும்.

மாநில உரிமைக்கு எதிரானது என்ற ஒரு கருத்து எழுந்துள்ளது - மாநில அரசின் அனுமதியையும், ஒத்துழைப்பையும் பெற்று இந்தச் சட்டத்தை செயல்படுத்தலாம் என்பது ஒரு நியாயமான கருத்தாகும். அதை விட்டு விட்டு, இந்தச் சட்டமே கூடாது என்று ஒரு அமைப்புக் கூறுகிறது என்றால் அதன் உட்பொருள் என்ன? அப்படியொரு சட்டம் செயல்பட்டால் தங்களுக்குப் பாதகமாக இருக்கும் என்று கருதுவது - குற்றமுள்ள நெஞ்சுடையாரின் குறுகுறுப்பேயாகும்.

காரணம் நாடு தழுவிய அளவில் மதக் கலவரங் களை உண்டாக்கிக் குளிர்காய்வதுதான் ஆர். எஸ்.எஸ். சங்பரிவார் உள்ளிட்ட (பி.ஜே.பி.யும்) குழுமத்தின் வழிமுறைகள்!

மக்களை இந்துக்கள் - சிறுபான்மையினர் என்று கூறு போட்டால் பெரும்பான்மையான இந்துக்களின் வாக்குகள் (Polarisation) தங்களுக்குக் கிடைக்கும் என்ற தந்திரமாகும்.

குஜராத்தில் மதக் கலவரத்தை உருவாக்கி அப்படியொரு சூழ்நிலையை ஏற்படுத்தவில்லையா? பாபர் மசூதியை இடித்தவர்கள் அல்லவா!

கோத்ராவில் ரயில் பெட்டி எரிந்து பலர் மாண்டனர் என்பது வேதனையான ஒன்றே! பொறுப்புள்ள முதல்வராக இருந்தால் நரேந்திரமோடி என்ன செய்திருக்க வேண்டும்?

இதனை வைத்து மக்களுக்குள் மோதல், கலவரம் வந்து விடக் கூடாது என்பதில் அல்லவா கவனம் செலுத்தி இருக்க வேண்டும்? அதற்கு மாறாக, அவரின் சிந்தனை யும், அணுகுமுறையும் இருந்தன உள்ளுக்குள்ளிருந்த இந்துத்துவா வெறியல்லவா அவரை உசுப்பி விட்டது!

பலியானவர்களை அடையாளம் கண்டு, உடல்களை அந்தந்த ஊருக்கு அனுப்புவது என்று தான், முதலில் முடிவு செய்யப்பட்டது. அந்தத் திட் டத்தை மாற்றி, பலியான அத்தனை உடல்களையும் ஒரே இடத்தில் ஊர்வலமாக எடுத்துச் செல்லுவது என்று முடிவு செய்தவர்தான் முதல் அமைச்சர் நரேந்திரமோடி.

அதன் விளைவு என்ன ஆகும் என்பது, கடுகளவு சிந்திப்பவர்கள்கூட உணர்ந்து கொள்வார்கள். பலியான பிணத்தைக் காட்டி பெரும்பான்மையான இந்துக்களை வெறியேற்றி சிறுபான்மை மக்கள்மீது வன்முறையை ஏவுவதுதான் மோடியின் திட்டம்; அதன்படியே நடந்தது.

அப்பொழுது குடியரசு தலைவராக இருந்த கே.ஆர். நாராயணன் அவர்கள் பிரதமர் வாஜ்பேயிடம் பல முறை தொடர்பு கொண்டு, இராணுவத்தை அனுப்பிக் கலவரத்தை அடக்க வேண்டும் என்று வலியுறுத் தியும் அதனைப் பிரதமர் வாஜ்பேயி செய்யவில்லையே! இவ்வளவும் நடந்த பிறகு எந்தமுகத்தை வைத் துக் கொண்டு நான் வெளிநாடு செல்லுவேன்? என்று நீலிக் கண்ணீர் வடித்தவர்தான் இந்த வாஜ்பேயி.

குஜராத்தில் ஓர்அரசே முன்னின்று கலவரத்தைத் தூண்டி, இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட சிறு பான்மை மக்கள் கொல்லப்பட்ட பிறகுகூட, இப்படி யொரு மதக் கலவரத் தடுப்புச் சட்டம் கூடாது என்று சொல்லுபவர்கள் யாராக இருக்க முடியும்?

இது, சிறுபான்மை மக்களைத் தாஜா செய்வ தற்குக் கொண்டு வரப்படும் சட்டம் என்று, இந்துத் துவாவாதிகள் சொல்லுகிறார்கள் என்றால் இதன் பொருள் எளிமையாக அறியப்படக் கூடியதே.

இந்தச் சட்டத்தைப் புரிந்து கொள்ளாமலோ அல்லது புரிந்து கொண்டு வேண்டுமென்றே விமர்சிக்கிறார்கள் என்று கருத வேண்டியுள்ளது.

இந்துக்கள், முஸ்லிம்கள் மட்டுமல்ல; காஷ்மீர், பஞ்சாப் மாநிலங்களில் இந்துக்களுக்கும் பயன் உடையதாக இருக்கும். கருநாடகம், மும்பை போன்ற மாநிலங்களில் தமிழர்கள் போன்ற வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கும், மகாராட்டிரத்தில் பீகாரிகளுக்கும் கூடப் பாதுகாப்பான சட்டம்தான்.

இந்தச் சட்டத்தை எதிர்ப்பவர்கள் யாராக இருந் தாலும் மதக் கலவரம் நாட்டில் நடைபெற வேண்டும் என்ற நஞ்சை கன்னத்தில் அடக்கி வைத்திருக்கக் கூடியவர்களே ஆவர்! எச்சரிக்கை!!

Read more: http://viduthalai.in/page-2/72198.html#ixzz2nk1r5a00

தமிழ் ஓவியா said...


வகுப்புக் கலவரத் தடுப்பு மசோதா மத்திய அமைச்சரவை ஒப்புதல்


புதுடில்லி, டிச.17- வகுப்புக் கலவரத் தடுப்பு மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை திங்கள் கிழமை ஒப்புதல் அளித் தது. இதையடுத்து, "இந்த மசோதா செவ்வாய்க் கிழமை நடைபெறும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்' என்று அமைச்சரவைக் கூட்டத் துக்கு பிறகு செய்தியா ளர்களிடம் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே தெரிவித்தார். அதே நேரத்தில் இந்த மசோதா நாட்டின் மத நல்லிணக்கத்துக்கு அச் சுறுத்தலாக உள்ளதால், நாடாளுமன்றத்தில் இதற்கு எதிர்ப்பு தெரிவி க்கப்படும் என்று பாஜக கூறியுள்ளது. வகுப்புக் கலவரத் தடுப்பு மசோதாவில் குறிப்பிடப்பட்டிருக்கும் அம்சங்கள் மாநில அர சுகளின் அதிகாரங் களைப் பறிக்கும் வகை யில் உள்ளது என்று தமிழக முதல்வர் ஜெய லலிதா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பாணர்ஜி ஆகியோர் ஏற்கெனவே எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், வகுப்புக் கலவ ரம் ஏற்பட்டால் அதற்கு பெரும்பான்மை சமுத யத்தினரே பொறுப் பேற்கும் வகையில் உள் ளதாக பாஜக உள் ளிட்ட சில கட்சிகள் குற்றம்சாட்டின. இதையடுத்து, அந்த அம்சத்தில் திருத்தம் செய்யப்பட்டு அனைத்து தரப்பினரும் பொது வாக கருதப்படுவார்கள் என்று திருத்தப்பட்டுள் ளதாக தெரிகிறது. "வகுப்புக் கலவரங்கள் ஏற்பட்டால் மாநில அர சுகளின் ஆலோசனை யைப் பெறாமல் மத்திய துணை ராணுவம் சம்பவ இடத்துக்கு செல்ல லாம்' என்று மத்திய அரசுக்கு அதிகாரமளிக் கும் வகையில் மசோதா வில் முன்பு குறிப்பிடப் பட்டிருந்தது. இது தற்போது, "மாநில அர சுகள் கேட்டுக்கொண் டால் தான் மத்திய அரசு பாதுகாப்புப் படை களை அனுப்பும்' என்று மாற்றம் செய்யப்பட் டுள்ளது.

தமிழ் ஓவியா said...


படிக்காத காமராசர் செய்த சமூக புரட்சியை படித்தவர்கள் எவரும் செய்யவில்லை!


காமராசர் பவுண்டேசன் ஆப் இந்தியா 37ஆவது தேசிய மாநாட்டில் தமிழர் தலைவர் உரை

திருச்சி, டிச. 17- காமராசர் பவுண் டேசன் ஆப் இந்தியா என்ற சமூக கலாச்சார அமைப்பு 1976 ஆம் ஆண்டு தொடங்கப்பட் டது. டாக்டர் நீலலோகித தாஸ் (நாடார்) நிறுவனத் தலைவராக கொண்டு செயல்பட்டு வரும் இந்த அமைப்பு காமராசரு டைய கொள்கைகளை பரப்பி வருகிறது.

இந்த அமைப்பின் 37 ஆவது தேசிய மாநாடு திருச்சி திரு வரங்கம் எஸ்.என். திருமண மண்டபத்தில் கடந்த 13ஆம் தேதி தொடங்கியது. நிறைவு நாளான (டிச.15) அன்று திரா விடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கலந்து கொண்டு உரையாற் றினார். இவ்விழாவிற்கு முன் னாள் சட்டமன்ற உறுப்பினர் முகமது இஸ்மாயில் தலைமை தாங்கினார். புரவலர் எஸ். நடராசன் முன்னிலைவகித்தார்.

தமிழர் தலைவர் உரை

காமராசர் பவுண்டேசன் ஆப் இந்தியா சார்பில் 37 ஆவது ஆண்டு தேசிய மாநாடு சிறப்பாக ஏற்பாடு செய்யப் பட்டு நடந்து வருகிறது. இவ் விழாவில் என்னை கலந்து கொள்ள வேண்டுமென எனது நீண்டகால நண்பர் நீலலோகி தாஸ் (நாடார்) கேட்டுக் கொண் டார். இவர் நல்ல தொண்டற செம்மலாக விளங்கி வருபவர். சமூக நீதி போர்க்களத்தில் பின்னால் நிற்பவர். அருமை நண்பர். காமராசர் தொண்டை யும், அவரது கொள்கையும் எடுத்துச் சொல்லக் கூடியவர். இவ்விழாவில் நான் கலந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி யடைகின்றேன். தந்தை பெரியார், காமராச ரும் சமூகத்திற்கு தொண்டாற் றியதை நன்கு அறிவீர்கள். தந்தை பெரியார் அவர்கள் யாருக்கும் சொல்லாததை காம ராசரைப் பார்த்து சொன்னார். பச்சைத் தமிழர் காமராசர் என்று. ஒடுக்கப்பட்டவர்களுக் காகவும், தாழ்த்தப்பட்டவர்க ளுக்காகவும் உழைத்தவர் காம ராசர். காமராசர் என்ற கலங் கரை வெளிச்சத்தை பார்த்தால் கண் பார்வையற்றவர்களுக்கும் நன்கு தெரியும். அரசியல் வாதி களுக்கும் வெளிச்சம் வேண்டு மென்றால், காமராசர் தேவை. காமராசரின் சாதனை

படிக்காத காமராசர் இந்த நாட்டுக்கு செய்ய முடிந்ததை, படித்தவர்கள் சாதிக்க முடிய வில்லை! தமிழ் நாட்டுக்கு மட்டுமல்ல, இந்திய நாட்டிற்கு வழிகாட்டியவர் காமராசர். குலக்கல்வி திட்டத்தை ராஜாஜி கொண்டு வந்து பள்ளிக் கூடங்களை மூடினார். மூடிய பள்ளிக் கூடங்களை அனைத் தையும் காமராசர் திறந்த தோடு அல்லாமல் கிராமங்கள் தோறும் பள்ளிச் சாலைகளை திறந்து வைத்தார்.

தமிழ்நாட்டின் இரட்சகர்

தமிழ்நாட்டில் மிகப் பெரிய கல்வி புரட்சியை ஏற்படுத்திய காமராசர். பொருளாதார புரட்சியையும் ஏற்படுத்தினார். அதனால் தான் தந்தை பெரி யார் அவர்கள் காமராசரை தமிழ்நாட்டின் இரட்சகர் என்று கூறினார். குப்பன் மகனும், சுப்பன் மகனும் அமெரிக்காவில் கணினி பொறியாளராக பணியாற்று கிறார்கள் என்றால் அதற்கு காமராசர் தான் காரணம். எனவே அவரது கொள்கையை, அவரது தொண்டினையும் அனைவரும் பின்பற்ற வேண் டும். அவர் எந்த தத்துவத்தை சொன்னாரோ, அதை நிறை வேற்ற வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன் என பேசினார்.

Read more: http://viduthalai.in/e-paper/72191.html#ixzz2nmrLMJxz

தமிழ் ஓவியா said...


பி.ஜே.பி.- காங்கிரசுடன் கூட்டணி இல்லை தி.மு.க. தலைவர் கலைஞர் பேட்டி

சென்னை, டிச.18- பி.ஜே.பி. மற்றும் காங் கிரசுடன் கூட்டணி கிடையாது என்று தி.மு.க. தலைவர் கலைஞர் செய்தியாளர் களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

பேட்டி விவரம் வருமாறு:

கலைஞர் அவர்கள் நேற்று (17.12.2013) காலை தமது இல்லத்திலிருந்து அண்ணா அறிவாலயத்திற்குப் புறப்பட்டபோது செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

செய்தியாளர்: லோக்பால் மசோதா இன்றையதினம் (17.12.2013) நாடாளுமன் றத்தில் விவாதிக்கப்படுகிறது. அந்த மசோதாவை தி.மு. கழகம் ஆதரிக்குமா? கலைஞர்: நாடாளுமன்ற தி.மு.கழகக் குழுவின் தலைவர் டி.ஆர்.பாலு, இந்த மசோதா விவாதத்திற்கு வருகின்ற நேரத் தில் எப்படி முடிவெடுக்க வேண்டு மென்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறார். அந்த முடிவு எடுத்த பிறகு உங்களுக்கும் தெரியும்.

செய்தியாளர்: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தமிழ் மாநிலத் தலைவர் பேராசிரியர் காதர் மொய்தீன் இன்று (17.12.2013) அளித்த பேட்டியில், தமிழகத்தில் உங்கள் தலைமையில் மூன்றாவது அணி உருவாகும் என்று சொல்லியிருக்கிறாரே?

கலைஞர்: மகிழ்ச்சி.

செய்தியாளர்: நேற்றையதினம் தமிழ் நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் ஞான தேசிகன் அளித்த பேட்டியின்போது, தி.மு.கழகம் அய்க்கிய முற்போக்குக் கூட் டணியிலே தற்போது இல்லை என்றும் ஏற்கெனவே விலகி விட்டதாகவும், வரு கின்ற நாடாளுமன்றத் தேர்தலுக்காக தி.மு.க.விற்கு ஆதரவு கேட்டு எந்தவித மான கடிதமும் தான் எழுதவில்லை என்றும் சொல்லியிருக்கிறாரே?

கலைஞர்: அதிலிருந்தே நீங்களே தெரிந்து கொண்டிருக்கலாம். காங்கிரசை விட்டு விலகியதற்கு வேறு காரணம் தேவையில்லை என்று ஞானதேசிகன் அவர்களே சொல்லிவிட்டதற்காக நன்றி.

செய்தியாளர்: தமிழகத்தில் காங் கிரஸ், பா.ஜ.க.வுடன் சேராது, தி.மு.கழகம் தனித்துப் போட்டியிடப் போகிறதா?

கலைஞர்: ஆமாம். ஏற்கெனவே எங் களுடன் உள்ள தோழமைக் கட்சி களுடன் சேர்ந்து போட்டியிடுவோம்.

செய்தியாளர்: பா.ஜ.க. சார்பில் நேற்றைய தினம் பேட்டியளித்த நிர்மலா சீத்தாராமன், தி.மு.கழகம் கூட்டணிக் காக அழைப்பு விடுத்தால் பரிசீலிப்போம் என்று சொல்லியிருக்கிறாரே?

கலைஞர்: பா.ஜ.க.வை நாங்கள் அழைப்பது என்று எதுவும் முடிவு செய்யவில்லை.

- இவ்வாறு தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் பேட்டியளித்துள்ளார்.

Read more: http://viduthalai.in/e-paper/72203.html#ixzz2nptN7FRt

தமிழ் ஓவியா said...


செய்தியும், சிந்தனையும்!


பற்றாக்குறை

இந்தியாவில் 9.55 இலட்சம் செவி லியர்கள் பற்றாக்குறை

(படித்துவிட்டு வேலையில்லாத செவிலியர்கள் ஏராளம் இருக்கும் போது, இந்தப் பற்றாக்குறையைக் கணக்கில் எடுத்துக்கொள்ளவேண் டாமா?).

குழந்தைகளுக்கு

மூளை வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு நிதி திரட்டிட ஜனவரி 5 ஆம் தேதி சென்னையில் மாரத்தான் போட்டிக்கு ஏற்பாடு.

(கர்ம பலன் என்று நினைக் காமல், இப்படி ஒரு முயற்சியை மேற்கொள்வோர்க்குப் பாராட்டுகள், வெற்றி பெற வாழ்த்துகள்!)

வெட்டு-குத்து

பேருந்தில் பயணம் செய்துகொண்டிருந்த மாநிலக் கல்லூரி மாணவர்களை வெட்டிய பச்சையப்பன் கல்லூரி மாண வர்கள் கைது.

(மாணவர்கள் படிக்கச் செல்கிறார் களா? அல்லது ரவுடிசத்தை அரங் கேற்றச் செல்கிறார்களா? நம் நாட்டின் கல்வி முறைகள் ரவுடிசத்தைத்தான் வளர்க்கிறதோ? சம்பந்தப்பட்டவர்கள் சிந்திக்கவேண்டும்!)

நீதிமன்ற அவமதிப்பு

ஆயுள் கைதி ஒருவரை விடுதலை செய்யக்கோரி உயர்நீதிமன்றம் உத்தர விட்டும், விடுதலை செய்யாததால், நீதிமன்ற அவமதிப்பு வழக்குக்கு ஆளாகி உள்துறை செயலாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் தாக்கீது (நோட்டீசு) அனுப்பியுள்ளது.

(வேலியே பயிரை மேய்கிறது என் பார்களே, அது இதுதானோ! அரசன் எவ்வழி, குடிகள் அவ்வழி!)

பார்வையற்றோர்

அண்ணா மேம்பாலச் சந்திப்பு அருகே நடைபாதையில் திடீர் என்று முளைத்த கட்-அவுட்டுகளால் பார்வையிழந்தோர் தடுக்கி விழுந்து காயமடைந்தனர்.

(ஆளும் கட்சி சார்பான கட்-அவுட்டு களுக்கு கெட்-அவுட் கிடையாது. அர சாங்கத்தின் கோழி முட்டை, குடிமக் களின் குழவிக் கல்லையும் உடைக்குமே!).

கொடி கட்டி

பண்ருட்டியையடுத்த ஆ.நத்தம் பகுதி யில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி யினர் கொடிக்கம்பம் அமைத்தபோது வன்னிய சமுதாயத்தினர் எதிர்த்தனர்.

(தாழ்த்தப்பட்டவரும், பிற்படுத்தப் பட்டவரும் ஒன்றிணைந்து போரா டினால்தான் சமூகநீதி பாதுகாக்கப் படும் என்ற அடிப்படையை, தலை வர்கள் போதிக்கவேண்டாமா? இங்கு எங்களுக்கு மட்டும்தான் கொடிகட்டிப் பறக்கிறது என்று எண்ணலாமா?).

யானைகள் முகாம்

புதுச்சேரி நாகூர் தர்கா யானை களும், யானைகள் சிறப்பு நல்வாழ்வு முகாமுக்கு அனுப்பப்படுகின்றன.

(பரவாயில்லை, இதிலாவது மதச் சார்பின்மை கடைப்பிடிக்கப்படுகிறதே! ஆனாலும், கஜேந்திரா பக்தி சமாச் சாரம் இதற்குள் புதைந்து கிடக்கிறது. ஆன்மீக தி.மு.க. ஆட்சியல்லவா!)

கும்பாபிஷேகம்

115 ஆண்டு வயதுள்ள சென்னை சட்டக் கல்லூரி கட்டடம் சேதமடைந்து நொறுங்கிக் கொண்டிருக்கிறது.

(அதனால் என்ன, குழவிக் கல்லு சாமி குடியிருக்கும் கோவில்களைப் புனரமைத்து க்ஷிரணத் தோரண பூர்ண கும்பாபிஷேகம்தானே முக்கி யம், அவசியம், அவசரம்!)

Read more: http://viduthalai.in/e-paper/72205.html#ixzz2nptZ7OEa

தமிழ் ஓவியா said...


சபாஷ், சரியான நடவடிக்கை!


உயர்நீதிமன்ற நுழைவாயிலில் உள்ள அம்மன் கோயிலை இடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு


சென்னை,டிச.18- உயர் நீதிமன்ற நுழைவாயிலில் உள்ள அம்மன் கோயிலை இடிக்க நீதிபதிகள் உத் தரவிட்டனர்.

சென்னையில் உள்ள சாலையோரக் கோயில் களை இடிக்கக் கோரி யும், உயர்நீதிமன்ற நுழை வாயிலில் சாலையோரம் உள்ள ஒரு மாரியம்மன் கோயிலை இடிக்கக் கோரியும் டிராபிக் ராம சாமி என்பவர் உயர்நீதி மன்றத்தில் பொதுநலன் வழக்கு தாக்கல் செய் தார். இந்த வழக்கை உயர் நீதிமன்றம் ஏற்கெனவே விசாரித்து, சாலையோ ரக் கோயில்களை இடிக்க உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து அம் மன் கோயிலை இடிக் கும்படி அதன் அறங் காவலர் காந்தா சீனிவா சனுக்கு மாநகராட்சி தாக்கீது அனுப்பியது. இதை ரத்து செய்யக் கோரி காந்தா சீனிவா சன் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அதில், முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். வெளிநாட்டில் சிகிச்சை பெற்று வரும்போது அவர் குணமடைய இந்த அம்மன் கோயில் கட் டப்பட்டது. அதன்பிறகு அவர் குணமடைந்து சென்னை வந்தார். அவர் நினைவாக இந்தக் கோயில் உள்ளது. இதை இடிக்கக் கூடாது. மாநக ராட்சி அனுப்பிய தாக் கீதை ரத்து செய்யவேண் டும் என்று கூறியிருந் தார்.

இந்த வழக்கை நீதி பதிகள் அக்னிகோத்ரே, சசிதரன் ஆகியோர் விசாரித்து அளித்த தீர்ப்பு வருமாறு:

சாலை யோரம் உள்ள அனைத்துக் கோயில் களை யும் இடிக்க உத் தரவிடப் பட்டுள்ளது. அதன் அடிப் படையில் தான் மனுதார ருக்கு மாநகராட்சி தாக் கீது அனுப்பியுள்ளது. இதில் எந்தத் தவறும் இல்லை. எனவே மனுவை தள்ளுபடி செய்கிறோம். இந்தக் கோயிலை மாநக ராட்சி இடிக்கலாம்.
இந்தக் கோயில் அனு மதியில்லாமல் கட்டப் பட்டுள்ளது என்று தெளிவாகத் தெரிகிறது. உயர்நீதிமன்ற வளாகத் தின் சுற்றுச்சுவரை யொட்டி கோயில் உள் ளது. கோயில், மசூதி, கிறிஸ்தவ கோவில் ஆகியவற்றை தனியார் இடத்தில் வைக்க உரி மையுள்ளது. பொதுமக் களை பாதிக்கும் வகை யில் வைக்கக் கூடாது என்று உயர்நீதிமன்றம் ஏற்கெனவே பல்வேறு தீர்ப்புகளில் கூறியுள் ளது. மதரீதியான கட்ட டங்களை பொது இடத் தில் கட்ட யாருக்கும் உரிமையில்லை. எனவே இந்த வழக்கை தள்ளு படி செய்கிறோம்.
- இவ்வாறு நீதிபதி கள் தீர்ப்பில் கூறியுள் ளனர்.

Read more: http://viduthalai.in/e-paper/72204.html#ixzz2nptlqmPB

தமிழ் ஓவியா said...


மலேசியாவில் தமிழர் தலைவரின் நிகழ்ச்சிகள்



கோலாலம்பூர், டிச.18- மலேசியத் திராவிடர் கழகத் தின் சார்பில் 67 ஆம் மூவாண்டு தேசியப் பேராளர் மாநாடு வரும் 21, 22 ஆகிய தேதிகளில், கோலாலம்பூர் கிராண்ட் பசிபிக் தங்கும் விடுதியில் மிகச் சிறப்பாக நடைபெற இருக்கிறது. இந்நிகழ்வில் திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று உரையாற்றுகிறார். டிசம்பர் 21 இல் தொடங்கும் மாநாட்டை, ம.இ.கா தேசியத் தலைவரும், இயற்கை வளம், சுற்றுச்சூழல் அமைச்சருமான டத்தோசிறீ ஜி.பழனிவேல் தொடங்கி வைக்கிறார். நிகழ்ச்சியின் தொடக்கமாக காலை 9 மணி அமர்வில், தமிழகத்திலிருந்து சிறப்பு வருகை புரியும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்ற உள்ளார். தொடர்ந்து ம.இ.கா தேசியத் உதவித் தலைவர் டத்தோசிறீ சி.பாலகிருஷ்ணன் உரையாற்றுகிறார்.

அதேநாளின் பிற்பகல் நிகழ்ச்சிகள் இரவு 7 மணி யளவில் டைனாஸ்டி தங்கும் விடுதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ம.இ.கா. தேசியத் துணைத் தலைவரும், சுகாதாரத் துறை அமைச்சருமான டத்தோ சிறீ டாக்டர் எஸ்.சுப்பிர மணியம் தொடங்கி வைக்கிறார். நிகழ்வில் மலேசிய இந்திய தெற்காசிய நாடு களுக்கான கட்டமைப்புச் சிறப்புத் தூதர் டத்தோசிறீ உத்தாமா ச.சாமிவேலு, மருத முத்து அவர்களின் படத்தைத் திறந்து வைத்து உரை நிகழ்த்துகிறார். மக்கள் ஓசை பத்திரிகையின் நிர்வாக இயக் குநரும், ம.இ.கா. மத்திய செய லவை உறுப்பினருமான சுந்தர் சுப்பிரமணியம் நிகழ்வுகளில் பங்கேற்கிறார்.

இந்த அமர்விலும் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்ற இருக்கின்றார். தொடர்ந்து மலேசியத் திராவிடர் கழகத்தின் வளர்ச்சிக்கும், மேன்மைக்கும் பெரும்பங்காற்றி, கழகத் தின் கட்டடம் உருவாக, உண்டியல் ஏந்தி நன்கொடை பெற்ற தோழர்களுக்குச் சிறப்பு செய்யும் நிகழ்ச்சியும் நடைபெற இருக்கிறது. டிசம்பர் 22 ஞாயிறன்று இரண்டாம் நாள் மாநாடு தொடங்குகிறது. இதில் முக்கியத் தீர்மானங்களும், பல்வேறு நிகழ்வுகளும் நடைபெற இருக்கின்றன. கழகத்தின் மாபெரும் சொத்தான செராஸ், தாமான் செமிலிங் பெர்காசாவில் உள்ள இயக்கக் கட்டடமான விஸ்மா மருதமுத்து கட்டடத்தை மீட்டுச் சாதனைப் புரிந்த மலேசியத் திராவிடர் கழகத் தலைவர் பி.எஸ். மணியம் அவர்கள் நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறார். அவருடன் இணைந்து கே.ஆர்.அன்பழகன், பிரகாஷ் உள்ளிட்ட தோழர்களும் பணியாற்றி வருகிறார்கள். இந்த இரண்டு நாள் நிகழ்ச்சிகளையும் மலேசியத் தமிழ்ப் பத்திரிகைகள் நல்ல வண்ணம் செய்திகள் வெளியிட்டு பரப்புரை செய்து வருகின்றன. தொடர்ந்து டிசம்பர் 23 ஆம் நாளன்று பேராக் மாநிலத்தில் நடைபெறும் பெரியார் நினைவு நாள் நிகழ்ச்சி, மாநிலத் தலைவர் கி.கூத்தரசன் தலைமையில் நடைபெறுகிறது. நிகழ்ச்சியில் தமிழர் தலைவர் பங்கேற்றுச் சிறப்புரையாற்றுகிறார். மலேசியத் திராவிடர் கழகத் தலைவர் பி.எஸ்.மணியம், கே.ஆர்.அன்பழகன், பிரகாஷ் உள்ளிட்ட தோழர்கள் பலர் இதில் பங்கேற்கின்றனர். டிசம்பர் 24 ஆம் நாளன்று பினாங் மாநிலத்தில் நடைபெறும் பெரியார் நினைவு நாள் நிகழ்ச்சி, மாநிலத் தலைவர் ச.தா.அண்ணாமலை தலைமையில் நடைபெறு கிறது. இந்நிகழ்ச்சியிலும் தமிழர் தலைவர் அவர்கள் பங்கேற்று உரையாற்ற இருக்கிறார்கள். இந்நிகழ்வில் பினாங் மாநிலத் துணை முதலமைச்சர் ப.இராமசாமி, டத்தோ புலவேந்திரன், பி.எஸ்.மணியம், கே.ஆர். அன்பழகன், பிரகாஷ் உள்ளிட்ட தோழர்கள் பங்கேற் கின்றனர்.

Read more: http://viduthalai.in/e-paper/72208.html#ixzz2nptwZ8VG

தமிழ் ஓவியா said...


பழங்குடியினர் பட்டியலில் நரிக்குறவர்கள்


புதுடில்லி, டிச.18- பழங் குடியினர் பட்டியலில் நரிக்குறவர் ஜாதியைச் சேர்க்க வகை செய்யும் அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதா மக்கள வையில் செவ்வாய்க் கிழமை தாக்கல் செய்யப் பட்டது. இந்த மசோ தாவை மத்திய பழங்குடி யினர் விவகாரத் துறை அமைச்சர் கிஷோர்சந் திர தேவ் அறிமுகம் செய்தார்.

இந்த சட்டத் திருத்த மசோதாவில், பழங்குடி யினர் பட்டியலில் தமி ழகத்தில் இருந்து நரிக் குறவர் ஜாதியும், சட் டீஸ்கரில் இருந்து தனு ஹர், தனுவார் ஆகிய இரு ஜாதிகளும் சேர்க் கப்பட்டுள்ளன.

இதையடுத்து, முறைப் படி இந்த மசோதா மக்களவையிலும், அதைத் தொடர்ந்து மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்ட பிறகு, குடியரசுத் தலை வர் அதற்கு ஒப்புதல் தெரிவிப்பார். அதன் பிறகு, மேற்கண்ட மூன்று ஜாதிகளும் பழங்குடியி னர் பட்டியலில் சேர்க் கப்படுவதற்கான ஆணை மத்திய அரசிதழில் வெளியாகும்.

தற்போது தமிழகத் தில் பழங்குடியினர் பட் டியலில் 36 ஜாதிகளும், சட்டீஸ்கர் மாநிலத்தில் பழங்குடியினர் பட்டி யலில் 42 ஜாதிகளும் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

Read more: http://viduthalai.in/e-paper/72207.html#ixzz2npu7bQ8X

தமிழ் ஓவியா said...

வள்ளுவரின் குறள் எனது வாழ்வை வளப்படுத்தியது! ஆசிரியர் தாத்தா பிறந்த நாள் 02.12.2013



மாணவப் பருவத்தில் ஆசிரியர் தாத்தா

எனது நான்காம் படிவம் முதல் ஆறாம் படிவம் வரை எனக்கு அரசு உதவித் தொகையில் சம்பளம் போக இரண்டு ரூபாய்கள் மிஞ்சும். ரூபாய் ஆறரை சம்பளம் போக ரூபாய் இரண்டரை மிஞ்சும். (10 ரூபாய் சம்பள ஸ்காலர்ஷிப்) எங்கள் பள்ளியின் கடைநிலை ஊழியர் தோழர் தனபால் அந்த மாத காசோலையை (செக்கினை) உதவித் தொகைக்காக வங்கியில் மாற்றி வருவார்.

அவருக்கும் ஒரு சிறு தொகை தவறாது அதில் கொடுப்பேன் -மனமுவந்து.- அவர் தொடக்கத்தில் மறுத்தாலும்கூட - இந்த உதவித்தொகை எனக்குக் கிடைக்க என்னுடைய ஆசிரியர், தலைமையாசிரியர் பரிந்துரை காரணம் என்றாலும், பலர் போட்டியிட இதனை ஒரேயொரு மாணவருக்குத் தந்ததற்கு ஒரு நிகழ்ச்சி காரணம் என்று சொல்ல வேண்டும்.

ஒரு நாள் (D.E.O) மாவட்டக் கல்வி அதிகாரி சோதனை (இன்ஸ்பெக்ஷன்); அவர் தமிழ் மொழி இனப்பற்றாளர் - திரு. முருகேச முதலியார் என்பது அவரது பெயர். சென்னையிலிருந்து வந்தவர். ஒவ்வொரு வகுப்புகளையும் சுற்றிப் பார்ப்பார்!

சில வகுப்புகளுக்குள்ளும் சென்று ஆசிரியர் பாடம் நடத்துவதைக் கண்காணிக்க சிறிது நேரம் தங்கி மாணவர்களையும், ஆசிரியரையும் கேள்வி கேட்டு வெளியேறும் கடமை வீரர் அவர். எல்லா ஆசிரியரின் வகுப்பறைகளும், துப்புரவாகவும், துடிதுடிப்புடனும், எச்சரிக்கையுடனும் அவரது வருகையை எதிர்நோக்கியிருந்தன.

இரண்டு நாள் தொடர் இன்ஸ்பெக்ஷன். இரண்டாவது நாள் அவர் எங்கள் வகுப்பிற்கு வந்தார்.- உள்ளூர் பிரமுகர் திரு. அழகானந்த முதலியார் கட்டித் தந்த அழகானந்த கூடம்.

அந்த வகுப்பறையில் எங்கள் தமிழாசிரியர் திரு. பழனியாண்டி (முதலியார்) தமிழ் வகுப்பு நடத்திக் கொண்டிருந்தார்.

(டர்பனுடன் இருப்பார் ஆசிரியர்) நுழைந்தார் கல்வி அதிகாரி. அமர்ந்தார் நாற்காலியில். வகுப்பு நடைபெறுவதைத் தொடரச் சொன்னார். முன்பே நடத்திய பாடத்தையே நடத்தினார் எங்கள் ஆசிரியர்; கேள்வி கேட்டாலும் மாணவர்கள் தெளிவாகப் பதில் சொல்ல வாய்ப்பு அதனால் சிறப்பாக ஏற்படுமென்பதால்!

கல்வி அதிகாரி திடீரென்று மாணவர்களாகிய எங்களை நோக்கி திருக்குறளில் எத்தனை குறள்கள் உங்களுக்குத் தெரியும்? தெரிந்த மாணவர்கள் யாரேனும் சொல்லுங்கள் என்றார். ஓர் நிமிடம் அமைதி. தமிழாசிரியரேகூட எதிர்பார்க்காத கேள்விக்கணை அது! ஆசிரியர் எங்களைப் பார்த்தார்; உடனே அச்சமின்றி, துணிவைத் துணைக்கு அழைத்துக் கொண்டு, சில குறள்பாக்களை மடமடவென்று உரத்த குரலில், மேடையில் பேசுவது போல சொல்லத் தொடங்கினேன்.

அப்போது எனக்கு எந்தத் திருக்குறள் அதிகாரமும் முறையாக 10 தொடர்ந்து தெரியாது என்றாலும், நான் நமது மேடைகளில் பல சொற்பொழிவாளர்கள் கூறுவதைக் கேட்டும் குடியரசு, திராவிட நாடு, விடுதலை போன்ற நமது கொள்கை ஏடுகளில் வரும் கட்டுரையின் மேற்கோள்களைப் படித்து மனத்தில் பதிய வைத்திருந்தவற்றையே ஒப்புவித்தேன்.

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் என்னும் குறள், எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் என்ற குறள்,

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் என்ற குறள்-, இப்படி சில குறள்களைக் கூறினேன்.

மகிழ்ந்தார்; பாராட்டினார்; போதுமென்றார்; என்னைக் காப்பாற்றினார் மாவட்டக் கல்வி அதிகாரி! வகுப்பிலுள்ள மற்ற மாணவர்கள் மவுனமாகிவிட்ட நிலையில், பளிச்சென்று எழுந்து நான் குறள்பாக்களைக் கூறியது பற்றி எங்கள் தமிழாசிரியர் அவர்களுக்கும் மெத்த மகிழ்ச்சி.

மாவட்டக் கல்வி அதிகாரி திரு. முருகேச முதலியார் உடனே உன் பெயர் என்னவென்று கேட்டார். பிறகு சென்றுவிட்டார். அவர் சென்ற நிலையில் அடுத்த நாள் எங்கள் பள்ளி மாணவர் உதவித்தொகை பற்றிய குறிப்புகள் கொண்ட கோப்புகளை அவர் காண நேர்ந்தது;

அவர் முடிவெடுக்க வேண்டிய அதிகாரி என்பதால் -எனது பெயரை அவர் மிக நன்றாக நினைவில் கொண்டதன் பேரிலும், எனக்கே அந்த உதவித்தொகையை (ஸ்காலர்ஷிப்) அளிக்க ஆணை பிறப்பித்தார்.

நான்காம் படிவத்திலிருந்து பள்ளியிறுதி வகுப்பான 6ஆ-வது படிவம் (S.S.L.C. Sixth form) வரை மூன்று ஆண்டுகளும்- அது தொடர்ந்து கிடைத்தது. காரணம், ஒவ்வொரு ஆண்டும் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்று வந்த மாணவன் என்ற கூடுதல் தகுதியும் அதற்குரியவனாக என்னை ஆக்கிற்று. வள்ளுவரின் குறள் எனது வாழ்வை வளப்படுத்தியது; அதற்கு மூல காரணம் திராவிட இயக்கச் சார்பே ஆகும்.

நூல்: அய்யாவின் அடிச்சுவட்டில் (பாகம்-1

தமிழ் ஓவியா said...

முதல் மதிப்பெண்ணுக்கு மோதாதீர்!

- சிகரம்

முதல் மதிப்பெண் மோகம், வேகம், தாகம், கிடைக்காவிடின் சோகம் என்பவை பெற்றோர், நிர்வாகம், மாணவர் என்ற முத்தரப்பிலும் முனைந்து நிற்கும் முதன்மை உணர்வு.

சில நிர்வாகமும், சில பெற்றோரும் இதற்காக மாணவர்களுக்குக் கொடுக்கும் நெருக்கடியும், நிம்மதிச் சிதைப்பும், உளைச்சலும், உதையும், வதையும் ஏராளம்!

100க்கு 97 மதிப்பெண் எடுத்த ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்டாள். காரணம், முதல் மதிப்பெண் பெற 1 மதிப்பெண் குறைந்துவிட்டதாம்! எவ்வளவு கொடுமையான முட்டாள்தனம்; மூளைச்சலவை; மூடநம்பிக்கை பாருங்கள்!

ஒரு மதிப்பெண்தான் வாழ்வா? 97 மதிப்பெண் பெற்றது என்ன சாதாரண சாதனையா? சாதாரண உழைப்பா? அதைவிட ஒரு மாணவர் என்ன சாதிக்க வேண்டும்?

இங்கு அவள் ஆயுளைப் பறித்தது எது? அறியாமையா? வறட்டுப் பெருமையா? மானப் பிரச்சனையா? பெற்றோர் கொடுத்த உளைச்சலா? விசாரித்தபோது பெற்றோர் திட்டியதுதான் காரணம் என்று தெரிந்தது. இப்படி ஒரு படிப்பாளிப் பெண்ணைப் பாராட்டுவார்களா? பழிப்பார்களா?

படிக்காத பெற்றோர் யாரும் இப்படிச் செய்வதில்லை; படித்த முட்டாள்கள் படுத்தும் பாடுதான் இது! முதல் மதிப்பெண்ணில்தான் தன் மானமும், மரியாதையும் அடங்கியிருப்பதாக அலையும் அவலம்.

40 மாணவர்களில் முதன்மை வந்தால், நாலு பள்ளிகளில் முதன்மை இல்லை; மாவட்டத்தில் முதன்மை வந்தால் மாநிலத்தில் முதன்மை இல்லை.

மாநிலத்தில் முதன்மை வந்தவர் மேற்படிப்பில் முதன்மை இல்லை! இதுதானே யதார்த்த நிலை? இதற்கா இத்தனைப் போட்டி? பொறாமை?

பகுத்தறிவின்பாற்பட்ட முயற்சி எது என்றால், நாம் எதிர்காலத்தில் என்னவாக விரும்புகிறோம் என்பதைத் திட்டமிட்டு, அதற்கேற்ற தகுதி மதிப்பெண்ணை அடைய உழைப்பதே! சரியான அணுகுமுறை அதுவே!

நமக்குத் தேவையான உணவை உண்பதுதானே உடல்நலம் காக்கும் அறிவுடைய செயல்? அடுத்தவனைவிட ஒரு உருண்டை கூடுதலாகச் சாப்பிட வேண்டும் என்று முனைவது முறையா? அதுதானே மதிப்பெண்ணுக்கும்!

பணிக்குப் போகும்போதும், படிக்கப் போகும்போதும், அவை கிடைக்க என்ன மதிப்பெண் தேவையோ அதைப் பெற திட்டமிட்டு முயலுவது என்ற செயல்திட்டமே சிறந்தது, உகந்தது; சமூக நல்லிணக்கம், மனிதநேயம், நட்பு இவற்றிற்கு ஏற்றது. மற்றபடி போட்டியிட்டு மோதுவது மூடத்தனம் என்பதை பெற்றோர் முதலில் கருத்தில் கொள்ள வேண்டும்.

கல்வி நிறுவனங்கள் வணிக நோக்கில் தன் பள்ளி முதலிடம் பெறவேண்டும் என்ற சுயநலத்தில், மாணவர்களை வாட்டி வதைப்பது கண்டிக்கத்தக்கது.

ஒரு மாணவனை முதல் மதிப்பெண் வாங்க வைக்க அலைவதைத் தவிர்த்து, 100 மாணவர்களைத் தரமாக உருவாக்க முயற்சிப்பதே உண்மையான கல்விச் சேவை. தன் பிள்ளைக்குத் தேவையான மதிப்பெண் கிடைக்க பிள்ளைக்கு வேண்டிய கடமைகளைச் செய்வதே பெற்றோரின் பொறுப்பு.

தன் எதிர்காலத் திட்டத்திற்கு - இலக்கிற்கு ஏற்ற மதிப்பெண்ணைப் பெறப் பாடுபடுவதே படிப்போர்க்குச் சிறப்பு. அதை விடுத்து முதல் மதிப்பெண்ணுக்காக மோதுவதும், சாவதும் முட்டாள்தனம்; மூடத்தனம்! எனவே, பெற்றோரும், நிர்வாகத்தினரும், மாணவரும் இந்த மூடத்தனத்திலிருந்து முதலில் விலக வேண்டும்.

முயற்சிக்கு ஓர் உந்துதல் வேண்டாமா? சிலர் கேட்பர். முதல் மதிப்பெண்தான் உந்துதலா?

அது போட்டிக்கும் பொறாமைக்குமே வழிவகுக்கும். தனக்குத் தேவையான மதிப்பெண் இவ்வளவு. அதைப் பெறவேண்டும் என்றால் உந்துதல் வராதா?

கல்வி என்பது விளையாட்டுப் போட்டியோ, பந்தயமோ அல்ல. அது அறிவுத் தெளிவு; ஆற்றல் வளர்ப்பு.

ஓட்டப் பந்தயத்தில்தான் முதல், இரண்டு, மூன்று என்பதெல்லாம். படிப்பில் மதிப்பெண்ணில் அல்ல.

விளையாட்டில் போட்டி ஆர்வம் தரும்; கல்வியில் போட்டி உளைச்சல் தரும்.

98% மதிப்பெண் பெற்றிருக்கிறோம் என்று உண்மையில் மகிழ்வதற்குப் பதில், 99% இன்னொருவன் பெற்று முதலிடம் வந்து விட்டானே! என்று ஏங்கிக் கவலைப்படுவது அறிவிற்கு அழகா?

98% பெறும் அளவிற்கு நாம் படிப்பாளி என்று பெருமை கொள்ளமுடியாமல் செய்வது முதல் மதிப்பெண் மோகம் என்றால், அது மூடத்தனம் அல்லவா?