Search This Blog

28.5.10

பார்ப்பனரல்லாதாரில் அயோக்கியர்களைக் கண்டு பிடிக்கும் தர்மா மீட்டர் எது?


(தந்தை பெரியார் அவர்களால் எழுதப்பட்ட அதிகம் அறியப்படாத அரிய கட்டுரை இது. முதன் முதலாக இணையத்தில் பதிவு செய்கிறோம். படியுங்கள்! சிந்தியுங்கள்!! தெளிவடையுங்கள்!!! -------- தமிழ் ஓவியா )

வாசக்காரி :- தம்பியாரே, இன்னும் கேளுங்கள். எந்தப் பார்ப்பானாவது, பார்ப்பானை திட்டுகிறானா? பார்ப்பானைத் திட்டுகிற பத்திரிக்கையைப் படிக்கிறானா? இதைப் பார்த்தாவது நமக்குப் புத்தி வர வேண்டாமா?

சத்திமூர்த்தியாரிடம் என்ன குணம் இல்லை என்று யாராவது சொல்ல முடியுமா அவர் “தமிழ்நாட்டுத் தலைவர்” ஆனதினால் நான் ஒன்றும் சொல்லக்கூடாது என்றாலும் உதாரணத்துக்குத் தானே சொல்லுகிறேன். அவரைப்பற்றி அவர் முதல் முதல் சீமைக்குப் போனது முதல் நாளது வரை நடந்ததை எந்தப் பார்ப்பானாவது, எந்தப் பத்திரிக்கையாவது ஏதாவது ழூச்சுகாட்டி எழுதுகின்றனவா? பேசுகின்றார்களா? ஒரே அடியாய் விளம்பரம் செய்து ஆகாயத்தில் தூக்கி வைத்து அவரை “ஒரு நாளாவது மந்திரி ஆக்கிப் பார்க்காமல் இருப்பதில்லை”என்று விரதம் எடுத்துக் கொண்டு இருப்பதோடு, அநேக பார்ப்பன அம்மாமார்களும் அதுவரை தலை முடிவதில்லை என்று சபதம் கூறி இருக்கிறார்கள். அதுதான் கிடக்கட்டும் தோழர் சர் ஆர்.கே.சண்முகத்ததைப் பற்றி அநேக பார்ப்பனரல்லாத கூலிகளும், காலிகளும் குரைக்கின்றனவே. அவரிடம் சொந்த நடவடிக்கைகளில், தனிப்பட்ட ஒழுக்கங்களில், சழூக கவுரவங்களில் எவ்வித கெட்ட நடத்ததையும் இல்லை என்பதை நம்மிடம் ஒப்புக்கொண்டு, பார்ப்பனர்களிடம் போய் கூலிகள் பெற்று பல பார்ப்பனரல்லாத காலிகள் குரைக்கின்றனவே. ஆனால் தோழர் சர்.சி.பி.ராமசாமி அய்யர்வாள் அவர்களைப்பற்றி எந்தப் பார்ப்பானாவது எந்தப் பார்ப்பனப் பத்திரிக்கையாவது ழூச்சுப் பேச்சு காட்டுகின்றனவா? எவ்வளவு கீழான மாமா பார்ப்பானாவது பேசுகிறானா? அவரும் ஒரு சமஸ்தானத்துக்கு ஒரு வேலை இல்லாத உத்தியோகஸ்தர் ஆக மாதம் 4,000 5,000 சம்பாதித்தார். அதுவும் போறாது என்று இன்னும் பெரிய உத்தியோகம் பெறப்பார்க்கிறார்.

சர். சி.பி.யின் பூசாரி வேலை

“லார்டு வில்லிங்டன் துரை மகனாருக்கு ரொம்ப வேண்டியவர்” என்கின்ற சேதி அடிபடுகின்றது. லார்டு வில்லிங்டன் துரையிடம் ஆக வேண்டிய காரியங்களுக்கு இவரே பூசாரி என்கின்றார்கள். இன்னமும் சி.பி.அவர்களைப் பற்றி என்ன என்னமோ மார்க்கட்டு நாடகக் கொட்டகை எல்லாம் கத்திரிக்காய் கடை முதல் தப்பட்டை அடிக்கப்படுகிறது. அதைப்பற்றி படமோ கேலியோ………………………….. ஒன்றும் இல்லாமல் காப்பிக் கடையிலும், வக்கீல் குமாஸ்தா அறைகளிலும், “பிறந்தால் சர்.சி.பி.ராமசாமி அய்யர் அவர்களுக்க கை,கால்களாகவாவது பிறந்து சுகம் அனுபவிக்க வேண்டும்” என்றுதானே புகழ்ந்து கூறி மகிழ்ச்சி அடைகின்றார்கள்.

இதிலிருந்து யார் கெட்டிக்காரர்கள்? யார் புத்திசாலிகள்? யார் மடையர்கள்? யார் சமூகத்துரோகிகள்? யார் வயிற்றுப் பிழைப்புக் கூலிகள்? என்பதையாவது உணர்ந்து பாருங்கள்.

சரி, பொப்பிலி ராஜாவை எதற்காக ராட்சதர் என்று சொல்ல வேண்டும்? ராவணனாவது ராமர் பெண்டாட்டியை தூக்கிக் கொண்டு போய் என்ன என்னமோ செய்தான் என்பதாகச் சொல்லி அதனால் ராட்சதன் என்று சொன்னார்கள், பொப்பிலி ராஜா யார் பெண்டாட்டியை அடித்துக் கொண்டு போனார்? என்ன செய்தார்? ஏன் அவரை ராட்சதர் என்று சொல்ல வேண்டும்? இனிமேலாவது எந்தப் பார்ப்பானாவது பொப்பிலியை ராட்சதன் என்று சொன்னாலும் சரி, படம் போட்டாலும் சரி, உடனே நம்ம ஆள் ஒருத்தர் அந்தப் பார்ப்பான் வீட்டுக்கு ஓடிப்போய் பார்த்து அவன் பெண்டாட்டி வீட்டில் இருக்கிறார்களா? இல்லையா? என்று தெரிந்து விட்டு வந்து அந்தப் பார்ப்பானை “அட மடையா,, உன் பெண்டாட்டி உன் வீட்டில்தான் இருக்கிறார்கள். இப்பொழுதுதான் நான் பார்த்துவிட்டு வந்தேன். ஏவனோ ஒரு ஏகாலி பேச்சைக் கேட்டுக் கொண்டு பொப்பிலி மீது சந்தேகப்பட்டு அவரை ராட்சதன் என்று சொல்லுகிறாயே. உனக்குப் புத்தியில்லையா? என்று கேட்பதோடு அது போலவே எழுதுவதோ ஆகிய காரியம் வைத்துக் கொண்டால் இனி எவனும் அந்த மாதிரி காரியம் செய்யவே மாட்டான்.


நாயை விரட்ட வேண்டாமா?

தம்பி :- அப்படியெல்லாம் கேட்பது நல்லதா? நாய் கடித்ததால் நாமும் அதைக் கடிக்கலாமா?

வாசக்காரி:- கடிக்க வேண்டாம். தடி எடுத்து விரட்டியாவது துரத்த வேண்டாமா? “ நாய்ச்சாமிக்கு மலக் கொழுக்கட்டை ஆராதனை” என்பது போல் அதற்குத் தகுந்தபடி நடந்து கொள்ள வேண்டியது மனிதத் தன்மை மாத்திரமல்லாமல் அறிவாளியான வீரன் செயலுமாகும்.

நல்ல குதிரைக்கு சவுக்கை ஆட்டிப் போனால் போதும். தோல் மொத்தமாய் இருக்கிற மந்திக் குதிரை அல்லது எருமைக்கிடாவை மொத்தமான தொண்ணைக் கம்பால் இருக்கினால் தான் நகரும்.

அதுபோல் நம்ம தற்காப்பைப் பொறுத்தவரையாவது “ பதிலுக்குப் பதில் செய்யத் தயாராய் இருக்கிறோம் - எங்களால் முடியும்” என்றாவது காட்டிக் கொள்ளமல் கூட இருப்பதென்றால் நம்மை நாம் மனிதர் என்று சொல்லிக் கொள்ள வேண்டிய அவசியம் கூட இல்லை.

அன்றியும், அப்படி இருந்ததாலேயேதான் எச்சக்கலைப் பார்ப்பான் கூட நம்மை ராட்சதன் என்கிறான்.

தம்பி :- இந்தப்பபடியெல்லாம் நாம நடந்தால் பாமர மூட ஜனங்களுக்கு நம்மிடம் இன்னும் அதிக வெறுப்பு ஏற்படும்படியாக இந்தப் பார்ப்பனர்கள் செய்துவிட மாட்டார்களா?

வாசக்காரி :- செய்து விட்டுப் போகட்டுமே. ஆதனால் என்ன முழுகிப் போகும்?
மந்திரி வேலையால் பயனென்ன?

தம்பி :- நம்மவர்களுக்கு மந்திரி வேலை போய்விடாதா?

வாசக்காரி :- போய்த்தான் தொலையட்டுமே. பார்ப்பான் மந்திரியாய் வந்து விட்டால் உலகமே முழுகிப் போய் விடுமா?

“ ஒரு வண்டி செங்கல்லும் பிடாரி ஆனது” என்பதுபோல் எல்லாப் பார்ப்பானுமே மந்திரிகளாய் விடட்டுமே நம்மை இனி என்ன அசைத்துவிட முடியமா?

மந்திரி அதிகாரம் நம்மை விட்டுத் தொலைந்ததால் நமது நிலை என்னதான் ஆகிவிடும் என்பதைத் தெரிந்து கொள்ளுவதற்கு ஒரு சந்தர்ப்பம் ஏற்படவாவது மந்திரி உத்தியோகம் நம்மை விட்டுத்தான் ஒரு தடவையாவது தொலையட்டுமே. பாமர ஜனங்களுக்குப் புத்திவர ஒரு சந்தர்ப்பமாவது கொடுக்கலாமே?

இப்பொழுது “ பார்ப்பனர்கள் மந்திரிகளாய்விட்டால் பரிசம் இல்லாமல் பெண் கிடைக்கும்.ஆளுக்கு 2, 3 கூட கிடைக்கும்” என்று நினைத்துக் கொண்டிருக்கிற முட்டாள் பயல்களுக்கு அவனவன் வீட்டிலுள்ளதையாவது காப்பாற்ற முடிகின்றதா அல்லது மனுநீதி போல் நடக்க வேண்டி வருமா? என்பதையாவது தெரிந்து கொள்ளட்டுமே.

தம்பி :- அப்படியானால் இப்போது ஏன் “மந்திரி வேலை நம்ம கையை விட்டுப் போகக்கூடாது” என்று கருதுகின்றவர்களுடன் கூடிக் கொண்டு என்னையும் பாடுபடச் சொல்லுகிறாய்.

வாசக்காரி :- இது கூடவா தம்பி உங்களுக்குத் தெரியவில்லை.

தம்பி :- தெரியவில்லை

வாசக்காரி :- பார்ப்பான் சங்கதி வெளியாவதற்கு ஏதாவது ஒரு சாக்கு வேண்டாமா? அதற்காக வேண்டி நானும் கூட்டத்தில் கோவிந்தாப்போடுகின்றேன்.

நான் கூப்பாடு போடாவிட்டாலும் நீ கூப்பாடு போடாவிட்டாலும் மந்திரி வேலை நம்ம ஆளுகள் கையை விட்டு ஒரு நாளும் போய்விடப் போவதில்லை.

ஆனாலும் நம்ம பிரசார சங்கதி நடத்துவதற்கு ஒரு சந்தர்ப்பம் வேண்டாமா? அன்றியும், நம்ம ஆட்களை இந்தப் பார்ப்பனர்கள் இவ்வளவு அயோக்கியத்தனமாய் தாக்குவதை வேடிக்கை பார்த்துக் கொண்டா இருப்பது? அதற்காகத்தான்.

தம்பி :- சரி இன்னம் ஒரு நாளைக்கு சந்திக்கலாம். நான் போய் வருகிறேன்.

---------------8.9.1935 “குடிஅரசு” இதழில் ‘சித்திரபுத்திரன்’ என்ற புனைப் பெயரில் தந்தை பெரியார் அவர்கள் எழுதியது

3 comments:

அப்பாதுரை said...

எங்கே பிடித்தீர்கள்?
சுவையான கட்டுரை.

மதன்செந்தில் said...

பெரியாரை மக்களிடம் சேர்க்காமல் விட்டதும் பார்பணர்களின் சூதே..


www.narumugai.com

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தோழர்களே

அப்பாதுரை

VARO

மதன்செந்தில்